தத்வ த்ரயம் – அசித் பிரகரணம்-சூர்ணிகை -129-140-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —

சூர்ணிகை -129-

பிருத்வ்யாதி சதுஷ்டத்யோ பாதி ஆகாசத்தையும்
பாவ ரூப பதார்த்தமாகக் கொள்ளாதே
ஆவரணாபாவ ரூபமாக கொள்ளுகிற பௌத்த மதத்தை
அருளிச் செய்கிறார் –

சிலர் ஆவரணாபாவம்
ஆகாசம் என்றார்கள் –

அதாவது –
ஆவரியதே அநேன-(இதனால் மறைக்கப்பட்டு உள்ளது ) -என்கிற
கரண வ்யுத்புத்தியாலே (செயப்படு பொருளாக )
ஆவரணங்கள் ஆவன ஸ்த்தூல பதார்த்தங்களான பிருத்வ் யாதிகளாய்
அவற்றினுடைய அபாவமே ஆகாச சப்த வாச்யம் அல்லது
இது ஆகாசம் என்று காட்டலாம் படி
பாவ ரூபமானதொரு பதார்த்தம் அன்று -என்கை –

(அதாவது ஆகாசம் என்ற சொல்லானது -எதுவும் இல்லாத வெற்றிடம் -என்னும்
பொருளைத் தருவதாக அவர்கள் கூறுகிறார்கள் )

நச பிருதிவ்யா தயபாவமா தரமாகாச கிதி வக்தும் சகயம் -என்று இறே
ஸ்ரீ பாஷ்ய காரரும் (2-2-23-)
(பூமி முதலானவற்றின் இல்லாமை என்பதே ஆகாசம் என்று கூற இயலாது ) என்று அருளிச் செய்தது –

——————————————————————————-

சூர்ணிகை -130-

அத்தை நிராகரிக்கிறார் –
(கீழே காட்டிய புத்த மதக் கருத்தை நிரசிக்கிறார் )

பாவ ரூபேண
தோற்றுகையாலே
அதுவும் சேராது –

அதாவது –
பாவ ரூபத்வேன அங்கீ கரிக்கப் பட்ட பிருதிவ்யாதிகளோ பாதி
அத்ர சயனே பத்தி அத்ர கருதர பத்தி
(இந்த ஆகாசத்தில் பறவை பறக்கின்றது -இந்த ஆகாசத்தில் கருடன் பறக்கின்றது போன்ற )என்று
சயேநாதிகளுடைய பந்தத்துக்கு தேசமாய்க் கொண்டு
ஆகாசமும் பாவ ரூபமாய்த் தோற்றுகையாலே
இத்தை ஆவரணா பாவ ரூபமாகச் சொல்லுகிற அது சேராது என்கை

அதவும் –
நிஷித்த சமுச்சயம்
(உம்மைத்தொகை -இந்தப்பொருளிலும் இவ்வாறு கூறுவது பொருந்தாது என்றபடி )

இது தன்னை-ஆகாசே சாவிசே ஷாத–2-2-33-என்கிற ஸூத்ரத்தில்
(ஆகாச விஷயத்திலும் புத்தர்களின் வாதம் பொருந்தாது )
ஆகாசே ச நிருபாக கய்தா ந யுக்தா பாவ ரூப தவே நாப யுபகத
பிருதிவ்யாதி வத ஆகாச சயா பய பாதிதா ப்ரதீதி சித்த வாவி சேஷாத
ப்ரதீயதே ஹயாகாசோதர சயேன பத்தய தய கருதர பத்தி இதி சயே நாதி பதந்தே சத வேன-என்று தொடங்கி
ஸ்ரீ பாஷ்ய காரர் விஸ்தரேண அருளிச் செய்தார்-

(பூமி முதலானவை போலே ஆகாசமும் இருக்கின்ற பொருளாக நீங்கள் ஒப்புக் கொள்வதால் பூமி போன்றவை
எவ்விதம் ப்ரத்யக்ஷத்தால் உணரப்படுவதின் காரணமாக வேறு எதனாலும் மறுக்கப்பட இயலாமல் உள்ளதோ
அதே போன்று எந்த வேறுபாடும் இன்றி ஆகாசமும் எதனாலும் மறுக்கப்படாமல் உள்ளது
அத்ர சயனே பத்தி அத்ர கருதர பத்தி
(இந்த ஆகாசத்தில் பறவை பறக்கின்றது -இந்த ஆகாசத்தில் கருடன் பறக்கின்றது போன்ற )என்று
கூறுவதற்கு ஏற்ப களுக்கு முதலானவை பறக்கும் இடமாக ஆகாசம் உள்ளது என்பது தொடக்கமாக
ஸ்ரீ பாஷ்யகாரர் விரிவாக அருளிச் செய்துள்ளார்

——————————————————————————-

சூர்ணிகை -131-

இனி ஆகாசத்துக்கு நித்யத்வ நிரவயவத்வ விபுத்வ அப்ரதயஷத்வங்கள்
கொள்ளுகிற
நையாயிக வைசேஷிக மதத்தை
அருளிச் செய்கிறார்

வேறே சிலர்
இது தன்னை
நித்யம்
நிரவயவம்
விபு
அப்ரத்யஷம்
என்றார்கள் –

———————————————————————

சூர்ணிகை -132-

இது தன்னை நிராகரிக்கிறார் –

பூதாதியிலே பிறக்கையாலும்
அஹங்காராதிகள் இல்லாமையாலும்
கண்ணுக்கு விஷயம் ஆகையாலும்
அவை நாலும் சேராது

அதாவது
பூதாதி சம்ஜ்ஞகமான தாமச அஹங்காரத்திலே உத்பன்னம் ஆகையாலும்
ஒன்றிலே நின்றும் உத்பன்னமான தொன்றுக்கு
சர்வயவத்வம் சித்திக்கையாலும்
நித்யம் நிரவவயம் என்கிற இரண்டும் சேராது

பூதாதியிலே பிறக்கையாலும் -என்றது
சப்த தன்மாத்ரையினுடைய ஸ்தூல அவஸ்தை ஆகையாலே
அதுக்கும் இதுக்கும் யுண்டான ஐக்யத்தைப் பற்ற –

இனி விபுவாகில்
சர்வ கதமாக வேணும் இறே

ஸ்வ காரணமான அஹங்காராதிகளில் இதுக்கு வ்யாப்தி இல்லாமையாலே
அதுவும் சேராது

பஞ்சீ கரண பிரயுக்தமான ரூபத்வத்தாலே கண்ணுக்கு விஷயம் ஆகையாலே
அப்ரத்யஷம் என்கைக்கும் சேராது
ஆகாசம் கறுத்துத் தோற்றுகிறதும் அத்தாலே (சூர்ணிகை -117-)-என்றார் இறே கீழே

இது தன்னை –
அண்டாந்தர வர்த்தி நச சாகாசச்ய த்ரிவ்ருத கரணோபதேச ப்ரதர்சித
பஞ்சீ கரனேன ரூபவதத வாச சஷூஷத் வேப்ய விரோத (2-2-23 )-என்று
ஸ்ரீ பாஷ்ய காரரும் அருளிச் செய்தார் –

———————————————————————-

சூர்ணிகை -133-

வாயுவும் பிரத்யஷம் அன்று
ஸ்பர்ச அனுமேயம் என்று இறே அவர்கள் சொல்லுவது
அத்தையும் நிராகரிக்கிறார் –

த்வக் இந்த்ரியத்தாலே
தோற்றுகையாலே
வாயு அப்ரத்யஷம் என்கிற
அதுவும் சேராது –

அதாவது
ஜ்ஞான இந்த்ரியங்களில் ஏதேனும் ஒன்றுக்கு
கோசரம் ஆன போதே பிரத்யஷம் சித்திக்கையாலே
த்வக் இந்த்ரியத்தாலே தோற்றுகிற வாயுவை
அபரதியஷம் என்ன ஒண்ணாது -என்கை –

———————————————————————

சூர்ணிகை-134-

இனி பரஸ்பர விலஷண ஸ்வ பாவங்களான பூத விசேஷங்களில்
ஜ்ஞாதவ்ய அம்சங்களை அருளிச் செய்கிறார் –

தேஜஸ்ஸூ
பௌமாதி பேதத்தாலே
பஹூ விதம் –

அதாவது –
பௌமம திவ்யம் ஔதார்யம் ஆக்ரஜம்-என்கிற
பேதத்தாலே அநேக விதமாய் இருக்கும் -என்கை

பார்த்திவ மாத்ரேந்தமான தேஜஸ்ஸூ பௌமம் –
அதாவது-
தீபாதி ஜல மாத்ரேந்தமான தேஜஸ்ஸூ திவ்யம்-
அதாவது
ஆதித்யாதி பார்த்திவ ஜலமாத்ரேந்தமான தேஜஸ் ஸூ ஔதார்யம்-
அதாவது
ஜாடாராக்னி நிரிநதமான தேஜஸ்ஸூ ஆக்ரஜம் –
அதாவது –
ஸூ வரணாதி-

———————————————————————-

சூர்ணிகை –135-

இதில் ஸ்த்திர அஸ்த்திர விபாகம் பண்ணுகிறார் –

அதில் ஆதித்யாதி
தேஜஸ்ஸூ ஸ்திரம்
தீபாதி தேஜஸ்ஸூ
அஸ்திரம் —

சிரகால வாததித்வத்தாலே ஆதித்யாதி தேஜஸ்ஸூ ஸ்திரம் என்கிறது
ஷிபர விநாசித்வத்தாலே தீபாதி தேஜஸ்ஸூ அஸ்தரம் -என்கிறது –

————————————————————–

சூர்ணிகை -136-

தேஜஸ்ஸூக்கு
நிறம்
சிவப்பு

ஸ்பர்சம்
ஔஷண்யம்-

தேஜஸ்ஸூ க்கு நிறம் சிவப்பு இத்தாலே-
தேஜ பதார்த்தங்களிலே வர்ண பேதம்
பதார்த்தாந்தர சமசாகஜம் என்கை

ஸ்பர்சம் – ஔஷண்யம்-இத்தாலே
உஷ்ண ஸ்பர்சம் சீத ஸ்பர்சம் அனுஷணாசீத ஸ்பர்சம் -என்கிற
த்ரிவித ஸ்பர்சத்தாலும் இதுக்கு ஸ்பர்சம் ஔஷண்யம் என்கை –

இது தான் தேஜ பதார்த்தங்களான ஸூவர்ணாதிகளில் பலவத சஜாதீய த்ரவ்யங்களாலே
அபிபூதம் ஆகையாலே தோன்றாது-

———————————————————————-

சூர்ணிகை -137-

ஜலத்துக்கு நிறம்-வெளுப்பு

ஸ்பர்சம் சைத்யம்

ரசம் மாதுர்யம்

ஜலத்துக்கு நிறம் வெளுப்பு -இதுக்கு ஸ்வாபாவிக வர்ணம் இது
வர்ண பேதம் வந்த விடம் ஔபாதிகம்

ஸ்பர்சம் சைத்யம் -இத்தால் த்ரிவித ஸ்பர்சத்திலும் இதுக்கு உள்ளது என்கை
ஆகையால் இதுக்கு ஸ்பர்ச பேதம் யுண்டாகிறதும் அந்யசமசாகத்தாலே

ரசம் மாதுர்யம் -இத்தால் இதுக்கு ஸ்வா பாவிக ரசம் இது
ரசநாதரபத்தி சமசர்கஜம் என்கை –

—————————————————————————

சூர்ணிகை -138-

பூமிக்கு
நிறமும்
ரசமும்
பஹூ விதம் –

அதாவது -லோகத்தில் காணப் படுகிற
நாநாவித வர்ண ரசங்களுக்கு எல்லாம்
உத்பத்தி ஸ்தானம் இது -என்கை –

—————————————————————————————-

சூர்ணிகை -139-

ஸ்பர்சம்
இதுக்கும்
வாயுவுக்கும்
அனுஷ்ணா சீதம்

அதாவது
திரிவித ஸ்பர்சத்திலும் வைத்துக் கொண்டு இவற்றுக்கு ஸ்பர்சம் இது என்கை
ஆகையால் இவற்றிலும் காதாசித்கமாக காணப் படுகிற ஸ்பர்ச பேதமும் ஔபாதிகம்-

——————————————————————————————–

சூர்ணிகை -140-

இப்படி
அசித்து
மூன்று படிப் பட்டு
இருக்கும் –

இப்படி என்று
சிம்ஹாவ லோகன ந்யாயத்தாலே
முன்பு அருளிச் செய்தவற்றை எல்லாம்
கடாஷித்து
அனுபாஷித்துக் கொண்டு
அசித் தத்வ உபன்யாசத்தை
நிகமித்தார் ஆயிற்று –

———–

ஆக
பிரதமத்திலே
அசித்து ஜ்ஞான ஸூன்யமாய் விகாராச பதமாய் இருக்கும் (சூர்ணிகை-77)-என்று
அசித்தின் யுடைய லஷணத்தைச் சொல்லி

அநந்தரம்
அது தான் சுத்த சத்வமாதி பேதன திரிவிதமாய் இருக்கும் படியைச் சொல்லி

உத்தேச க்ரமத்தில்
பிரதமம் சுத்த சத்வம் ஆகிற அசித்தினுடைய பிரகாரத்தைச் சொல்லி

தத் அநந்தரம்
மிச்ர சத்வம் ஆகிற அசித் விசேஷம் இன்னது என்றும்
அது தான் சதுர் விம்சதி தத்வமாய் இருக்கும் என்றும்
அதில் பிரதம தத்வம் இன்னது என்றும்
அந்த தத்தவத்தின் யுடைய அவஸ்தா விசேஷங்கள் இருக்கும் படியையும்
அதில் நின்றும் தத்வாநதரங்கள் உத்பன்னம் ஆகைக்கு ஹேது அதனுடைய குண வைஷம்யம் என்றும்
அந்த குணங்கள் தான் இன்னது என்றும்
அவை தான் அதுக்கு அவி நாபூதங்களாய
அதனுடைய அவஸ்தா பேதங்களால் அனுத் பூதங்களாயும்
உத் பூதங்களாயும் இருக்கும் என்றும் அவைதான் கார்யனுமேயங்கள் என்றும்
அவற்றின் யுடைய வைஷம்ய பிரயுக்தமான மஹதாதி தத்வ உத்பத்தி க்ரமத்தையும் சொல்லி

அநந்தரம்
இப்படி உத் பன்னங்களான தத்வங்களின் யுடைய சமுதாய கார்யமான அண்ட உத்பத்தியையும்
அந்த அண்டத்துக்கு உள்ளில் சமஷ்டி புருஷ சதுர் முக உத்பத்தியையும்
ஈஸ்வரன் சமஷ்டி வ்யஷ்டி பதார்த்தங்களை அத்வாரமாகவும் சத்வாரமாகவும் நின்று
சிருஷ்டிக்கும் படியையும் சொல்லி

அநந்தரம்
அண்டங்களின் யுடைய பஹூத்வத்தையும்
அவற்றின் யுடைய கட்டளையையும்
அவை தான் ஈஸ்வரனுக்கு லீலா உபகரணங்கள் என்னுமத்தையும்
அவற்றின் யுடைய உத்பத்தி பிரகாரத்தையும் சொல்லி

அநந்தரம்
ஆகாசாதி பூதங்களுக்கு தனித் தனியே யுண்டான விநியோகத்தையும்
ஜ்ஞான கர்ம இந்த்ரியங்களுக்கும் உபயாதமகமான
மனசுக்கும் யுண்டான வ்ருத்தி பேதத்தையும்
ஆகாசாதிகளுக்கு சப்தாதிகள் பிரதி நியத குணங்களாய் இருக்கும் படியையும்
அவற்றுக்கு குண விநிமயம் வருகைக்கு ஹேதுவையும்
குணாதிக்யத்துக்கு ஹேதுவையும் சொல்லி
இப்படி மிச்ர சத்வத்தின் யுடைய பிரகாரத்தை விஸ்தரேண உபபாதித்து

அநந்தரம்
இதனுடைய பரிமாணங்களுக்கு ஹேதுவாய் இருந்துள்ள
சத்வ ஸூன்யம் ஆகிற அசித் விசேஷத்தையும்
சங்க்ரஹேண சொல்லி

அநந்தரம்
ஏதத் பூர்வ உக்தமான அசித் த்வயத்தின் யுடைய பரிணாமங்களையும் சொல்லி
ஏதத் தர்ச நைகதேசிகள் யுடைய
கால விஷய பிரதிபத்தி பேதத்தையும் காட்டி

அநந்தரம்
கீழ்ச் சொல்லப் பட்ட வற்றில்
பாஹ்ய குத்ருஷ்டிகள் யுடைய விப்ரபத்தி பிரகாரங்களையும்
அவை தான் அயுக்தம் என்னும் இடத்தையும் சொலி

அநந்தரம்
பரஸ்பரம் விலஷணமான பூத விசேஷங்களில் ஜ்ஞாதவ்ய அம்சங்களையும் தர்சிப்பித்து
இப்படி அசித் த்ரயத்தின் யுடைய பிரகாரத்தையும்
அருளிச் செய்து தலைக் கட்டினார் –

———————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading