ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -38 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

அவன் தேசத்தை உகந்த படியைக் கண்டு
இவரும் அங்கு உள்ள பதார்த்தங்களை உகக்கப் புக்கார் –

ஒரு தேசம் ப்ராப்யம் என்று பிரதிபத்தி பிறந்த பின்னை
அங்கு உள்ளது எல்லாம் உத்தேச்யமாய் இருக்கக் கடவது இறே –
பரம பதத்தில் உள்ளார் அடைய உத்தேச்யர் ஆமா போலே-

———————————————–

ஊரும் வரியரவ மொண்  குறவர் மால் யானை
பேர வெறிந்த   பெரு மணியை காருடைய
மின்னென்று புற்றடையும் வேங்கடமே மேலசுரர்
எம்மென்னு மால திடம் –38-

பதவுரை

ஊரும்–திரிகின்ற
வரி அரவம்–(உடம்பில்) கோடுகளை யுடைய ஸர்ப்பமானது,
ஒண் குறவர்–அழகிய குறவர்கள்
மால் யானை பேர–(பட்டி மேய்கின்ற ) பெரிய யானைகள் (தங்களுடைய புனத்தில் நின்றும் ) அப்பால் போவதற்காக
எறிந்த–(அவ் யானைகளின் மேல்) வீசி யெறிந்த
பெரு மணியை–பெரியதொரு மாணிக்கத்தை (கண்டு)
கார் உடைய மின் என்று–மேகத்தினிடையே தோன்றுகிற மின்னலென்று பிரமித்து (இடிக்கு அஞ்சி)
புற்று அடையும் வேங்கடம்–புற்றினுள்ளே நுழையுமிடமான திருமலை,
மேல சுரர்–மேற்பட்டவர்களான நித்ய ஸூரிகள்
எம் என்னும் மாலது–‘எங்களுடையவன்’ என்று அபிமாநிக்கும் படியாக வுள்ள எம்பெருமானது
இடம்–திவ்ய தேசமாம்.

————————————-

வியாக்யானம் –

ஊரும் –
அங்குத்தை சர்ப்பங்கள் ஆனவை
ஸ்வரை சஞ்சாரம் பண்ணுமாய்த்து-
ஒரு கார்யப் பாடு அன்றியிலே ஊர்ந்து திரிகையே உத்தேச்யமாய் இருக்கை  –

ப்ராதரி கச்சதி -அயோத்யா -40-5–
குழந்தாய் பெருமாள் நடை அழகில் கண்  வைக்காதே -என்று போல் அன்றி
அவற்றின் உடைய சஞ்சாரம் இவர்க்கு உத்தேச்யமாய் இருக்கிறபடி –

வரி யரவம் –
வரிப்பட்ட உடம்பை உடைத்தாகையாலே தர்ச நீயமாய் இருக்கும் ஆய்த்து –
திருவேங்கட முடையான் திரு மேனியிலே ஓர் அவயவத்தோ பாதி உத்தேச்யம் ஆதல்
படுக்கையாய்க் கிடக்கும் அரவத்தோ பாதியாய் இருத்தல் –

ஒண்  குறவர் –
ஒள்ளிய குறவர்

அதாகிறது
திருமலையில் நின்றும் பூமியிலே இழியுமது
அவர் தங்களுக்குக் குடிப் பழியாய் இருக்கை
ஒருவன் பாட்டன் இழிந்தான்   என்று அவனுடைய பாட்டன் உடைய பாட்டன் இழிந்தான் என்று
பழியாய்ச் சொன்னான் ஆய்த்து
சம்சார ஸ்பர்சம் உண்டாய்ப் பின்னை அது கழிந்தவர்களைப் போலே யன்றிக்கே
நித்ய ஸூரிகளைப் போலே இருப்பார் சிலர் ஆய்த்து –

மால் யானை  பேர வெறிந்த   பெரு மணியை –
ஒரு மேரு போலே யாய்த்து
அங்குத்தை யானைகள் வந்து தோற்றும் படி
மத்த கஜங்கள் ஆனவை புனங்களிலே வந்து பட்டி மேயுமாய்த்து –

பேர எறிந்த –
அவை ஒளிக்குச் சலித்து மலை பேர்ந்தாப் போலே பேரும்படிக்கு ஈடாக எறிவர்கள் ஆய்த்து

பெரு மணியை –
ஒரு மலையின் மேலே ஒரு மணியை விட்டு எறிந்தாப் போலே யாய்த்து
மஹார்க்கமான மணிகளை விட்டு எறிகிறபடி-

இத்தை –
காருடைய மின்னென்று புற்றடையும் –
இம் மணிகள் சென்று தாக்கின வாறே
யானையின் கறுப்பும் அவற்றின் புகருமாகத் தம்மிலே விரவித் தோற்றுமே
அத்தை மேகத்தோடு கூடின மின்னாகக் கருதி
அதுக்கு அனந்தரமான இடிக்கு பயப்பட்டுத்
தனக்கு ரஷை யுள்ள பூமியிலே புக்கு ஒதுங்கா நின்றது
கார் உடைத்தான மின் என்னும் படி மேகத்தின் உடம்பிலே இறே மின் தோன்றுவது

திருமலையோடு
அங்கு ஊருகிற சர்ப்பத்தோடு
சஞ்சரிக்கிற யானையோடு
அத்தை எறிகிற குறவரோடு
அதுக்கு சாதனமான மணியோடு
இதுக்கு அஞ்சி அது போய்ப் புகுகிற் புற்றோடு
வாசி அற இவர்க்கு எல்லாம் உத்தேச்யமாய் இருக்கிறது ஆய்த்து-

மேலசுரர் எம்மென்னு மால திடம் –
மேலான சுரர் உண்டி -ஆக்கரான தேவர்கள் அன்றிக்கே நித்ய ஸூரிகள்
அவர்கள் அஹ மஹ மிகயா எங்களது எங்களது என்று கொண்டு
விரும்பி வர்த்திக்கும் தேசம் ஆய்த்து –

வரி  யரவங்கள் அடைய  மின்னென்று புற்றடையும் வேங்கடமே –

——————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading