ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -29 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இப்படி சர்வேஸ்வரனாய் இருந்தான்
என்று பிற்காலியாதே
நெஞ்சே அவன் ஆஸ்ரித பரதந்த்ரன் கிடாய்
இத்தை அழகிதாக புத்தி பண்ணு
என்கிறார்  –

——————————-

இறையும் நிலனும் இரு விசும்பும் காற்றும்
அறை புனலும் செந்தீயும் ஆவான் பிறை மருப்பின்
பைங்கண் மால் யானை படு துயரம் காத்தளித்த
செங்கண் மால் கண்டாய் தெளி -29-

பதவுரை

இறையும்–ஸ்ரீவைகுண்ட நாதனாயும்
நிலனும் இரு விசும்பும் காற்றும் அறை புனலும் செம்தீயும் ஆவான்–பூமியென்ன பரவிய ஆகாச மென்ன வாயு வென்ன
அலை யெறிகிற ஜல மென்ன சிவந்த நிறமுள்ள அக்நி யென்ன ஆகிய பஞ்ச பூதங்களினாலாகிய
லீலா விபூதியை யுடையவனாயு மிருக்கிற எம்பெருமான்,
பிறை மருப்பின்–பிறை போன்ற தந்தத்தை யுடையதும்
பைங்கண்–பசுமை தங்கிய கண்களை யுடையதுமான
மால் யானை–பெரிய கஜேந்திரனை
படு துயரம்–(முதலையின் வாயிலே அகப்பட்டுப்) பட்ட துக்கத்தில் நின்றும்
காத்து அளித்த–ரக்ஷித்தருளின
செம் கண் மால் கண்டாய்–புண்டரீகாக்ஷனான பெருமான் காண்;
தெளி–[நெஞ்சே!] நீ இதனைத் தெரிந்து கொள்.

———————————-

வியாக்யானம் –

இறையும் –
கரை கட்டாக் காவேரியைப் போலே இருக்கிற
ஸ்வரூபத்தை யுடையானாய்க் கொண்டு
ஸ்ரீ வைகுண்ட நாதனாய் இருக்கிறவனும் –

நிலனும் இரு விசும்பும் காற்றும் அறை புனலும் செந்தீயும் ஆவான் –
இத்தால்
பஞ்ச பூதங்களாலும் ஆரப்தமான அண்டத் தளவும் நினைக்கிறது –
அது தன்னாலே லீலா விபூதியைச் சொல்லிற்றாய்-
அவ் விரண்டாலும் ஜகதா காரனாய்
உபய விபூதி உக்தனாய் இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது –
இதுக்கு மேற்படதில்லை இறே ஐஸ்வர் யத்துக்கு  –

பிறை மருப்பின் பைங்கண் மால் யானை –
பிறை போலே இருந்துள்ள கொம்புகளை யுடைத்தாய்
ஜாத்யுசிதமான கண்ணில் பசுமையையும் யுடைத்தாய்
மதமுதிதமான யானையானது விழுக்காடு அறியாமையாலே
பொய்கையிலே போய்ப் புக்கு
முதலையின் கையிலே யகப்பட்ட அத்தை அதின்
வாயினின்றும் மீட்டுப் பின்னைத்
தன் திருவடிகளிலே பூவை இடுவித்துக் கொண்டு நோக்கின –

படு துயரம் –
ஆனைக்குப் போரும்படியான துயர் –

காத்தளித்த செங்கண் மால் கண்டாய் தெளி –
வாத்சல்ய அம்ருதத்தை வர்ஷியா நின்ற கண்

மால் –
அரை குலையத் தலை குலைய வந்து தோற்றின படி
ஆஸ்ரித ஸூலபனுமாய்
அவர்கள் ஆபத்தைப் போக்குவான் ஒருவனுமாய் கிடாய் இருப்பது
இத்தை புத்தி பண்ணு –

தெளி –
அவன் தம்மை மாஸூச  -என்னத்
தாம் தம் திரு உள்ளத்தை மாஸூச-என்கிறார்

வாசலைத் திறந்து வைப்பாரைப் போலே பெறுகைக்கு அங்குப் போக வேண்டா
இசைவே வேண்டுவது

அவனே வராவிடில்
சமாதிக தரித்ரானவனைப் பெற உபாயம் உண்டா
வாசனையாலே
அம்மே என்பாரைப் போலே அழைத்தது  இத்தனை  –

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading