ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -25 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

அவன் ஓவாதே அழுகிற படியைக் கண்டு
இவரும் அவ்விருப்பிலே ஈடுபடுகிறார்
ஓவாதே ஏத்தவும் தொடங்கினார்

அவனுக்கு நினைவும் பேச்சும்
வெண்ணெயிலே ஆனாப் போலே
ஆழ்வார்க்கும் நினைவும் பேச்சும் இவன் பக்கலிலே யான படி –

—————–

உரை மேல் கொண்டு என்னுள்ளம் ஓவாது எப்போதும்
வரை மேல் மரகதமே போலே திரை மேல்
கிடந்தானைக் கீண்டானைக் கேழலாய்ப் பூமி
இடந்தானை யேத்தி எழும்  —-25-

பதவுரை

வரை மேல்–ஒரு மலையின் மேலே
மரகதமே போல–மரகதப் பச்சை படிந்தாற்போல
திரை மேல்–திருப்பாற்கடலிலே
கிடந்தானை–சயனித்திருப்பவனும்
கீண்டானை–இரணியனுடலைப் பிளந்தவனும்
கேழல் ஆய்–வராஹ மூர்த்தியாகி
பூமி இடந்தானை–பூமியை உத்தரிப்பித்தவனுமான எம்பெருமானை.
என் உள்ளம்–எனது மனமானது
உரை மேற் கொண்டு–உரைப்பதில் ஊற்றங்கொண்டு
ஓவாது எப்போதும்–இடைவிடாமல் எப்போதும்
ஏத்தி–அப்பெருமானது சரிதைகளைப் (புகழ்ந்து)
எழும்–உஜ்ஜீவிக்கும்.

———————

வியாக்யானம் –

உரை மேல் கொண்டு –
மேலான உரையைக் கொண்டு
அதாவது வாக்குக்கு விஷயமானத்தைக் கொண்டு –

அன்றிக்கே
உரைக்கையிலே மேல் கொண்டு
அதாவது
சொல்லுகையிலே கிளர்ந்து –

என்னுள்ளம் ஓவாது எப்போதும் –
என்னுடைய ஹிருதயமானது உச்சி வீடு விடக் கடவது அன்றிக்கே –
ஸ்வரூபம் ஒரு காலாக அழியுமோ –

வரை மேல் மரகதமே போலே திரை மேல் –
ஒரு மலையிலே ஒரு மரகத கிரியானது பரப்பு மாறப் படிந்தால் போலே யாய்த்து
திருப் பாற் கடலில் கண் வளர்ந்து அருளின போது இருக்கும் படி –

கிடந்தானைக் கீண்டானைக் –
ஆர்த்தரைக் கண்டவாறே
படுக்கை அடிக் கொதித்த படி –

கீண்டானை –
ஹிரண்யனைக் கிழித்துப் பொகட்ட படியைச் சொல்லுதல்
அன்றிக்கே –

கேழலாய்ப் -கீண்டானை –பூமி இடந்தானை –
என்று இவ்விரண்டையும் இங்கே யாக்கிச் சொல்லவுமாம்
அதாகிறது
மகா வராஹமாய் புக்கு அண்ட பித்தியில் ஒட்டின இத்தைக் கீண்டு
பின்னை இடந்து எடுத்துக் கொண்டு ஏறின படியைச் சொன்ன படி –

யேத்தி எழும்  –
இவ் வபதாநத்தை ஸ்தோத்ரம் பண்ணி
உஜ்ஜீவியா நிற்கும் –

———————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading