ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -23 / பாசுரம் -24 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை
நாம் அஞ்சுகையாவது என்
நான் சிலருக்குக் கட்டுண்கை யாவது என்
அது பின் நாட்டார் அறிகை யாவது என்
என்று அத்தை மறைக்கப் புக்கான்

ஒரு தழும்பு ஆகில் அன்றோ உன்னால் மறைக்கலாவது
உன் உடம்பு அடங்கலும் ஆஸ்ரிதர்க்காகக் காரியம் செய்து அத்தால் வந்த தழும்பு அன்றோ என்கிறார் –

தழும்பு இருந்த சாரங்க நாண் தோய்ந்தவா மங்கை
தழும்பிருந்த தாள் சகடம் சாடி தழும்பிருந்த
பூங்கோதையாள் வெருவப் பொன் பெயரால் மார்பிடந்த
வீங்கோத வண்ணர் விரல் –23-

பதவுரை

வீங்கு ஓதம் வண்ணர்–பொங்கி அலை யெறியுங் கடல் போன்ற வடிவை யுடைய எம்பெருமானது
அம் கை–அழகிய திருக் கைகளில்
சார்ங்கம்–சார்ங்க வில்லினுடைய
நாண்–நாணி
தோய்ந்த–உராய்ந்த்தனாலுண்டான
தழும்பு–காய்ப்பானது
இருந்த ஆம்-இருக்கின்றது காண்;
தாள்–திருவடிகளிலே
சகடம் சாடி–சகடத்தை யுதைத்து (அதனாலுண்டான)
தழும்பு இருந்த–காய்ப்பு இருக்கின்றது;
பூங் கோதையாள்–அழகிய மயிர் முடியை யுடைய பிராட்டி
வெருவ–(என்ன நேரிடுமோ என்று) அஞ்சும்படியாக மிக்க சீற்றத்துடனே
பொன் பெயரோன்–இரணியாசுரனுடைய
மார்பு இடந்த தழும்பு–மார்பைக் கிழித்தெறிந்ததனா லுண்டான காய்ப்பு
விரல்–விரல்களிலே
இருந்த–இருக்கின்றது.

தழும்பு இருந்த சாரங்க நாண் தோய்ந்தவாம் அங்கை
அழகிய திருக்கையானது ஜ்யாகிண கர்க்கஸ மாய்க் கிடக்கும்
ஸ்ரீ சார்ங்கத்தைப் பிடிக்கையால் வந்த தழும்பைச் சுமந்த

தாள் சகடம் சாடி தழும்பிருந்த
பிராட்டிமாரும் ஸ்பர்சிக்க பயப்படும் படியான திருவடிகளானவை சகடாஸூர நிரஸனம் பண்ணி
அத்தால் வந்த தழும்பைச் சுமந்த

அவன் மூரி நிமிர்த்தான்
இவருக்குக் குவாலாய் இருக்கிற படி

இனி வீங்கோத வண்ணர் விரல் செய்தது என் என்றால்

பூங்கோதையாள் வெருவப் பொன் பெயரால் மார்பிடந்த
வீங்கோத வண்ணர் விரல்
கிளர்த்தியை யுடைத்தான ஓதம் போலே இருந்துள்ள வடிவை யுடையரானவருடைய திரு விரல்களானவை
பிராட்டிக்காக இறே சிறுக்கனுக்கு விரோதியான ஹிரண்யனைப் பிளந்து பொகடக் கடவது
அப்படிப் பட்டவளும் கூட விளைவது அறியாதே
இது என்னாகப் புகுகிறதோ என்று அஞ்சும் படியாக ஹிரண்யன் மார்வைப் பிளந்து பொகட்ட தழும்பு இருந்த

பூங்கோதையாள்
ஆஸ்ரித கார்யம் என்றால் உகக்குமவள்
வீர வாசி அறியுமவள்
ருஷி வேஷத்தோடே திரிய வேணும் என்னுமவள்

வீங்கு ஓத வண்ணர்
அடல் அரியாய்ப் பெருகினானை -பெரிய திருமொழி -2-5-8-
மஹா விஷ்ணும் —

விரல் தழும்பு
கால் தழும்பு
கைத் தழும்பு
எல்லா அவதாரங்களிலும்
எல்லா வியாபாரங்களிலும்
தழும்பு உண்டு –

———-

அவதாரிகை –

நமக்கு அவாப்த சமஸ்த காமனாய் யாய்த்து பிரசித்தி
இங்கனே இருக்கிற நாம்
ஒன்றை வேண்டி
அது பெறாமையாலே களவு காணப் புக்கு
கட்டுண்டோமாக வேணுமோ -என்ன
கட்டுண்டு இருக்கிறபடி அறியாயோ -என்கிறார் –

———————————————-

விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய்  கண்டு ஆய்ச்சி
உரலோடு உறப் பிணித்த நான்று -குரலோவா
தேங்கி நினைந்த அயலார் காண இருந்திலையே
ஒங்கோத வண்ணா வுரை —24–

பதவுரை

ஓங்கு ஓதம் வண்ணா–ஓங்கிக் கிளர்ந்த கடல் போன்ற வடிவை யுடையவனே!
(நீ வெண்ணெய் திருடி உண்ணும் போது)
விரலோடு வாய் தோய்ந்த–உன் விரலிலும் வாயிலும் படிந்திருந்த
வெண்ணெய்–வெண்ணெயை
ஆய்ச்சி–யசோதை யானவள்
கண்டு–பார்த்து
(உன்னைத் தண்டிக்க வேண்டி)
உரலோடு உற பிணித்த நான்று–உரலோடு சேர்த்துக் கட்டி வைத்த போது
குரல் ஓவாது–நீ கத்துகிற கத்தல் நீங்காமல்
ஏங்கி–ஏங்கிக் கொண்டு
நினைந்து–(அப்போதும் வெண்ணெய் திருடுவதையே) சிந்தித்துக் கொண்டு
அயலார் காண–அயலாரெல்லாரும் வேடிக்கை பார்க்கும்படி
இருந்திலையே–இருந்தாயல்லவோ?
உரை–உண்மையாகச் சொல்லு.

————————————–

வியாக்யானம் –

விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய்  கண்டு –
அபிமதமானத்திலே சிறிது மிடற்றுக்குக் கீழே இழிந்து கிட்டப் பெற்றதோ -என்கிறார் –

வெண்ணெயைச் சென்று கையாலே ஸ்பர்சித்து
திரு வதரத்திலே வைத்த வளவிலே அகப்பாட்டான் ஆயிற்று

ஓர் இடத்திலே தாரார் தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி -சிறிய திருமடல் -என்னா நின்றார்கள்
இங்கே விரலோடு வாய் தோய்ந்த -என்னா நின்றார்கள்
இவை இரண்டும் எங்கனே சேருகிற படி -என்று
ஜீயர் பட்டரைக் கேட்க

பெண் பிள்ளைகள் அளவிலே கை வைக்கும் தனையும் இவனுக்கு இதுவே யாத்ரை
அது ஒரு நாள் ஆகிறது
இது ஒரு நாள் ஆகிறது -என்று அருளிச் செய்தார்
களவு காணுமவன் ஒரு நாள் அளவிலே கை விடான் இறே

வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான் -திருவாய்மொழி -1-8-5-

களவு காணும் முகூர்த்தத்திலே பிறக்கையாலே –

ஆய்ச்சி உரலோடு உறப் பிணித்த நான்று –
இத்தைக் கண்ட யசோதை பிராட்டியானவள்
இவனுடைய திருமேனியிலே
குறிக்கும் படிக்கு ஈடாக அழுந்தக் கட்டினாள்-ஆய்த்து –

உரல் என்றும்
இவன் என்றும்
பிரித்துக் காணப் போகாதபடி கட்டின வன்று –

குரலோவா தேங்கி நினைந்த அயலார் காண இருந்திலையே –
இவள் கட்டினது தான் அவிழ்க்க மாட்டாதே
நின்று அழுதான் ஆயிற்று

அழப் புக்க வாறே –
இக் கோல் உண்டு பார் -என்ன
வாய் திறக்க பயப்பட்டு ஏங்கி நின்றான் –

நம்முடைய பந்தம் விடுகைக்காக -இறுக பந்தித்தவனே அவிழ்க்க வேண்டினாப் போலே
அவனுக்கும் கட்டின அவளே அவிழ்க்க வேணும்
ஸ்வ யத்னத்தாலே அவிழ்க்க ஒண்ணாதே
இவ் விஷயத்தில் பொய் செய்யில் நம்புவார் இல்லையே

மற்றொரு விஷயத்தில் பொய்யன் அன்றாகைக்காக
ஆஸ்ரிதர்க்குச் செய்கையாலே –
அவாப்த சமஸ்த காமனானவன் குறைவாளன் ஆவதே –
சர்வ சக்தி மிடுக்கு இன்றிக்கே ஒழிவதே
சர்வஞ்ஞன் நெஞ்சில் புரை யறுவதே
வேறு போது போக்க  ஒண்ணாது ஒழிவதே
அவ்வளவிலும் பாவியேன் வெண்ணெய் களவு காணப் பெற்றிலோம்
அவற்றைச் சேமிக்கிறார்கள் என்று கொண்டு அத்தையே நினைத்துக் கொண்டு இருக்கும் ஆய்த்து –

அயலார் காண இருந்திலையே –
அஞ்சு லஷம் குடிப் பெண்களில் காணாதார் உண்டோ

இவனாலே நெருக்குண்டு புண்பட்ட பெண்கள் எல்லாம்
இவனும் இப்படி ஒரு மிறுக்குப் பட்டு இருக்கக் காண வல்லோமே -என்று
இழவு  பட்டு இருப்பர்கள் ஆய்த்து

அத்யுத் கடை புண்ய பாபை இஹைவ பலம் அஸ்நுதே -என்று
தங்கள் இழவு எல்லாம் தீரக் காணப் பெற்றார்கள்

இவன் அழா நிற்க
அவர்கள் சிரித்துக் கொண்டு வந்து
அத்தனையும் வேணும் -என்பர்கள்-

இருந்திலையே –
ஸ்ரீ ராம் சரத்தை ராவணன் மறக்கில் அன்றோ
இது உனக்கு மறக்கலாவது –

ஒங்கோத வண்ணா வுரை –
கட்டுண்டு இருக்கிற போது ஓதம் கிளர்ந்த கடல் போலே வாய்த்து
வடிவழகு இருக்கிறபடி
ஒரு கடலைத் தேக்கி வைத்தாப் போலே இருக்கை –

உரை –
ந மே மோகம் வசோ பவேத் -என்னும் நீயே சொல்லிக் காண்
வடிவோடு கூடின வார்த்தையும் கேட்க வேணும் –

——————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading