அவதாரிகை —
நம்மை ஆஸ்ரித சம்ஸ்லேஷ ஏக ஸ்வ பாவனாகச் சொன்னீர்
அது நாம் அறிகிறிலோம்
நீர் அறிந்த படி என் -என்ன
நீ என் வாயைப் புதைத்தாலும் -நாட்டார் வாயைப் புதைக்கலாமோ -என்கிறார் –
——————————
அறியும் உலகு எல்லாம் யானேயும் அல்லேன்
பொறி கொள் சிறை யவண மூர்த்தாயை வெறி கமழும்
காம்பேய் மென் தோளி கடை வெண்ணெய் யுண்டாயைத்
தாம்பே கொண்டு ஆர்த்த தழும்பு —22-
பதவுரை
பொறி கொள் சிறை–பல நிறங்களையுங்கொண்ட சிறகுகளை யுடைய
உவணம்–கருடாழ்வானை
ஊர்ந்தாய்–ஏறி நடத்தும் பெருமானே!
காம்பு ஏய் மென் தோளி–மூங்கிலை யொத்த மெல்லிய தோள்களை யுடைய யசோதையினாலே
கடை–கடையப்பட்டு
வெறி கமழும்–பரிமளம் வீசப் பெற்ற
வெண்ணெய்–வெண்ணெயை
உண்டாயை–(களவிலே) அமுது செய்த வுன்னை
தாம்பே கொண்டு–(கையில் கிடைத்ததொரு) தாம்பைக் கொண்டு
ஆர்த்த–கட்டியதனாலுண்டான
தழும்ப–காய்ப்பை (அறிபவன்)
யானேயும் அல்லேன்–நானொருவனே யன்று;
உலகு எல்லாம் அறியும்–உலகத்திலுள்ளாரெல்லாரும் அறிவர்கள்.
———————————
அறியும் உலகு எல்லாம் யானேயும் அல்லேன் –
இது ஜகத் பிரசித்தம் அன்றோ
நான் சொல்லுகிறேன் என்று இருக்க வேண்டா
சிஸூ பாலனும் கூட அறியானோ –
பொறி கொள் சிறை யவண மூர்த்தாயை –
நாநா வர்ணமான சிறகை யுடையனான பெரிய திருவடியை நடத்தும்
ஸ்வ பாவனான யுன்னை –
நிரபேஷரை நியமிக்கப் பிறந்தவன் நீ யன்றோ –
வெறி கமழும் –
பிள்ளை சோம்பாமைக்காக எப்போதும் கந்த த்ரவ்யங்களாலே அலங்கரித்து இருக்கும் ஆய்த்து –
ஸ்வ பாவிகம் -என்னவுமாம் –
காம்பேய் மென் தோளி –
மூங்கில் போலே இருப்பதுமாய் அவ்வளவும் அன்றிக்கே
ம்ருது ஸ்வ பாவமான தோளை யுடைய
யசோதை பிராட்டி யானவள்
பசுமையும்
நீட்ச்சியும்
செவ்வியும்
மூங்கிலுக்கும் தோளுக்கும் ஒத்து இருக்கை –
சொல்லுகிறது –
கடை வெண்ணெய் யுண்டாயைத்-
தன்னுடைய சௌகுமார்யம் பாராதே
ஆய்ச்சி கடைந்து திரட்டின வெண்ணெயை
அமுது செய்த உன்னை –
இருவருக்கும் தாரகம் -இறே-
தாம்பே கொண்டு ஆர்த்த தழும்பு –
பெரிய திருவடி முதுகிலே இருக்கும்படியான சௌகுமார்யத்தை உடைய உன்னை –
தாம்பே கொண்டு ஆர்த்தாள் ஆயிற்று –
அதாகிறது
இவன் எட்டுப் பட்ட போதாக -கையிலே அகப்படுவது ஒரு அறு தாம்பாலே –
நல்லதொரு தாம்பு தேடும் காட்டில் இவன் தப்புமே –
அதுக்காக அதனைக் கொண்டு பந்தித்தாள் ஆயிற்று –
கயிற்றை நீட்ட ஒண்ணாது
உரலைச் சிறுக்க ஒண்ணாது
இவன் உடம்பிலே இடம் காணும் இத்தனை இறே –
கண்ணியார் குறும் கயிற்றால் -என்றும்
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் -என்றும்
ஆழ்வார்கள் அடைய அவனைக் கட்டின கயிற்றிலே ஈடுபட்டுக் கிடப்பது –
தாம் நா சைவ உதரே பத்வா பிரத்யபத் நாத் உலூகலே கிருஷ்ண மக்லிஷ்ட கர்மாண
மாஹசெத மாமார்ஷிதா -ஸ்ரீ விஷ்ணு புரா -5-6-14-
என்னும் படி இறே இருப்பது
தறியார்ந்த கரும் களிறே போலே நின்று -பெரிய திருமொழி -2-10-6-
ஒரு மத்த கஜமானத்தை கம்பத்தோடு கொடு வந்து சேர்த்தாப் போலே யாய்த்து
கட்டின கட்டிலே தடம் கண்கள் பனி மல்கும் தன்மையானை –
அது தன் மிடுக்கு அறியாதே
கட்டுண்டு நிற்குமா போலே யாய்த்து
இவனும் தன் பலம் அறியாதே கண்ண நீர் விழ விட்டுக் கொண்டு நின்றபடி –
———————————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply