எம்பெருமான்
தன்னருளும் ஆகமும் தாரானேல் தன்னை நான்
மின்னிடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும்——135
தன்னடியார் முன்பும் தரணி முழுதாளும்
கொன்னவிலும் வேல் வேந்தர் கூட்டகத்தும் நாட்டகத்தும்—–136
தன்னிலை எல்லாம் அறிவிப்பன் தான் முன நாள்
மின்னிடை யாய்ச்சியர் தம் சேரிக் களவின் கண்——-137
துன்னு படல் திறந்து புக்குத் தயிர் வெண்ணெய்
தன் வயிறார விழுங்கக் கொழும் கயற்கண்———138
மன்னு மடவோர்கள் பற்றியோர் வான் கையிற்றால்
பின்னு முரலோடு கட்டுண்ட பெற்றிமையும்——–139
அன்னதோர் பூதமாய் ஆயர் விழவின் கண்
துன்னு சகடத்தால் புக்க பெரும் சோற்றை——–140
முன்னிருந்து முற்றத் தான் துற்றிய தெற்றனவும்
மன்னர் பெரும் சவையுள் வாழ வேந்தர் தூதனாய்—–141
தன்னை இகழ்ந்துரைப்பத் தான் முன நாள் சென்றதுவும்
மன்னு பறை கறங்க மங்கையர் தம் கண் களிப்ப—-142
கொன்னவிலும் கூத்தனாய்ப் பேர்த்தும் குடமாடி
என்னிவன் என்னப் படுகின்ற ஈடறவும்————–143
தென்னிலங்கை யாட்டி யரக்கர் குலப்பாவை
மன்னன் இராவணன் தன நல் தங்கை வாள் எயிற்றுத்——144
துன்னு சுடு சினத்துச் சூர்பணகாச் சோர்வெய்திப்
பொன்னிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்—-145
தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கரிந்து
மன்னிய திண் எனவும் வாய்த்த மலை போலும்—–146
தன்னிகர் ஓன்று இல்லாத தாடகையை மா முனிக்காத்
தென்னுலகம் ஏற்றுவித்த திண் திறலும் மற்றிவை தான்—–147
உன்னி யுலவா யுலகறிய ஊர்வன் நான்
முன்னி முளைத்து எழுந்து ஓங்கி யொளி பரந்த—–148
மன்னிய பூம் பெண்ணை மடல் –
————————————————————————–
கம்பர்பாடல்
என்னிலைமை எல்லாம் அறிவித்தால் எம்பெருமான்
தன்னருளும் ஆகமும் தாரானேல் -பின்னைப் போய்
ஒண்டுறை நீர் வேலை யுலகறிய யூர்வன் நான்
வண்டறை பூம் பெண்ணை மடல்-
ஒண் துறை நீர் வேலை உலகு அறிய-ஒளி பொருந்திய துறைகளை உடைத்தாய்
நீர் நிரம்பியதுமான -கடல் சூழ்ந்த உலகினர் அறியும் படி
————————————————————————–
மண்ணில் பொடிப்பூசி வண்டிரைக்கும் பூச்சூடி-பெண்ணை மடல் பிடித்துப் பின்னே -அண்ணல்-திரு நறையூர் நின்ற பிரான் தேர் போகும் வீதி-பொரு மறையாச் செல்வம் பொலிந்து-
அறையாய் -கூப்பிடாய் -அவனுடைய சேஷ்டிதங்களை எல்லாரும் அறியும் படி கோஷிப்பாய்-
தேர் போகும் வீதி அறையாய்-
இன்றும் திருத் தேர் அன்று திருமடல் சாதிப்பது இப்பாசுரத்தை அடி ஒற்றியே
செல்வம் பொலிந்து பலன் கிட்டும்-அரை குலையத் தலை குலைய ஓடி வந்து
கைங்கர்ய செல்வத்தை அருளுவான் –
————————————————————————–
எம்பெருமான் தன்னருளும் –
தர்மத்துக்கு தண்ணீர் வார்க்கை -தன பேறாக அருளுதல்
ஆகமும் தாரானேல்-
நெஞ்சோடு கலந்த வன்று தேக தாரகமாம் அத்தனை –
தன்னை –
மெய் போலே பாவித்துப் பொரி புறம் தடவி இருக்கிற தன்னை
நான்-
அவை எல்லாம் வெளிவிடப் புகுகிற நான்-இருவர் ஸ்வரூபத்தை அழித்தாகிலும் அவனைப் பெற்று அல்லது விடேன் என்று இருக்கும் நான் –
மின்னிடையார் சேரியிலும் –
தான் ப்ரனயத்துக்குச் சமைந்து -உங்களிடை அல்லது அறியேன் -என்று இருக்கிறவிடம் -ரசிகத்வம் விலை செல்லுகிற இடம் -என்றுமாம் –
வேதியர்கள் வாழ்விடத்தும்-—
பிரமாண கோடிகளாலே தன்னை அறிந்து சமாராத நமான யாகாதிகள் பண்ணும் இடத்திலும் -ஆன்ரு சம்சயம் விலை செல்லும் இடம்
தன்னடியார் முன்பும் –
தன்னைப் பற்றாசாக நினைத்து இருக்கிற ஆஸ்ரிதர் முன்பும்
குணம் விலை செல்லும் இடம் -என்றுமாம்
தரணி முழுதாளும் கொன்னவிலும் வேல் வேந்தர் கூட்டகத்தும் –
தன் வீரப்பாடு பேசும் ராஜாக்கள் முன்பும்-ஆபிஜாத்யமும் ஜகத் ரஷணமும் விலை பெறும் இடம் என்றுமாம் –
நாட்டகத்தும்–—-
இப்படி நாலைந்து இடத்திலே சொல்லி விடா நின்றேனோ-சர்வேஸ்வரனாக பாவிக்கிற இடம் எங்கும் -தன் வீரப்பாடு பேசும் இடம் எங்கும் -தன்னிலை எல்லாம் அறிவிப்பன் –
என் உடம்பைக் காட்டுகிறேன் –
தான் முன நாள்-
அன்று தான் இடைச் சேரியிலே வெண்ணெய் திருடி-உரலோடு கட்டுண்டு விட்டுப் புறப்பட்டதும் –
மின்னிடை –
நீ களவு காண்கிறது பெண்களிடை காணக் கிடாய் –
யாய்ச்சியர் தம் சேரிக் களவின் கண்—
என்ன பட்டணத்தே புக்கான் -இடைச் சேரி அன்றோ
என்ன மகுடபங்கம் பண்ணினான் துன்னு படல் அன்றோ
என்ன பிரதிமை எடுத்தான் -வெண்ணெய் அன்றோ
என்ன திருப்பணி செய்தான் -தன் வயிறு வளர்த்தான் அத்தனை அன்றோ
சேரி -ஒழுகு ஒன்பதும் –
துன்னு படல் திறந்து புக்குத் தயிர் வெண்ணெய்-
மேலே படல் இருக்க கீழே நுழைந்ததும் களவு கை வந்ததும் அத்தனை அன்றி
அவள் கோலிட்டுத் திருகி வைக்கும் யந்த்ரம் அறியான்
பல்கால் புக்க வழக்கத்தாலே அறியும் -என் கை –
தன் வயிறார விழுங்கக்-திரு மங்கை ஆழ்வாரைப் போலே பரார்த்த மாக களவு காண்கிறது அன்று –
கொழும் கயற்கண் மன்னு மடவோர்கள் பற்றியோர்-எட்டாதே திரிந்தவன் பிடியுண்ட ப்ரீதி ஆய்ச்சியர் கண்ணிலே தோற்றி இருக்கை –
வன் கையிற்றால்-
எட்டிற்று ஒரு கயிறு -கண்ணி நுண் சிறுத் தாம்பு-கண்ணிக் குறும் கயிறு –
பின்னு முரலோடு கட்டுண்ட பெற்றிமையும்—
பெற்றிமை -பெருமை / அப்போதே உரலோடு இருக்கச் செய்தே கண்டேனாகிலோ -என்று கருத்து
அன்னதோர் பூதமாய் ஆயர் விழவின் கண் துன்னு சகடத்தால் புக்க பெரும் சோற்றை—-அன்னது -அம்மே அப்பூச்சி என்று முகத்தைத் திரிய வைக்கிறாள்
அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும் தயிர் வாவியும் நெய்யளரும் -பெரியாழ்வார் -3-5-1-
முன்னிருந்து முற்றத் தான் துற்றிய தெற்றனவும்-
ஒரு திரை வளைத்துக் கொண்டால் என் செய்யும் -வயிறு தாரித்தனம்
தெற்றனவும்–நிர் லஜ்ஜையும்
மன்னர் பெரும் சவையுள் வாழ வேந்தர் தூதனாய்—
நாழி யரிசி ஏற ஜீவித்தார்க்குத் தூது போம் வேண்டப்பாடு
தன்னை இகழ்ந்துரைப்பத் தான் முன நாள் சென்றதுவும்-
ஸ்ரீ விதுரரகத்தே உண்டது –
மன்னு பறை கறங்க மங்கையர் தம் கண் களிப்ப—
பறை கொட்டுகைக்கு ஓர் ஆள் இல்லாமே அரையிலே கட்டிக் கொண்டது –
மங்கையர் -இது கொண்டாட வல்லவர்கள் அன்றோ –
கொன்னவிலும் கூத்தனாய்ப் பேர்த்தும் குடமாடி-
கண்டார் பிழையாத படி இருக்கிற அழகு
என்னிவன் என்னப் படுகின்ற ஈடறவும்-—
என் செய்ய-இவன் இப்போது போகானோ-என்னும்படி படுகிற பாடு –
தென்னிலங்கை யாட்டி யரக்கர் குலப்பாவை மன்னன் இராவணன் தன நல் தங்கை வாள் எயிற்றுத்–
அவ் வைஸ்வர்யத்துக்கு இட்டுப் பிறந்தவள்
அரக்கர் -அவள் பிறந்தால் போல் பிறந்தார் இல்லை
நல் தங்கை -ராவணனுக்கு நேரே உடன் பிறந்தவள்
துன்னு சுடு சினத்துச் சூர்பணகாச்-
அவளை ஒப்பார் இல்லை-சௌந்தர்யத்தால் குறைவற்றவள் –
சோர்வெய்திப்-
அவசையாய் –
பொன்னிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்—தன்னை நயந்தாளைத்
உடம்பு வெளுத்து
துவண்டு
மிக்க ச்நேஹத்தால் தன்னை ஆசைப் பட்டவளை-
தான் முனிந்து மூக்கரிந்து-
வேண்டா என்பதும் அன்றிக்கே
மூக்கை அறுப்பதே -என்ன வீரமோ –
மன்னிய திண் எனவும் வாய்த்த மலை போலும்-—
தன்னிகர் ஓன்று இல்லாத தாடகையை மா முனிக்காத்
ஒரு பார்ப்பான் சொன்னான் இ றே-
தென்னுலகம் ஏற்றுவித்த திண் திறலும் மற்றிவை தான்—
தென் உலகம் -அவள் அங்கு இருக்கவும் பெற்றாளோ-
உன்னி யுலவா யுலகறிய ஊர்வன் நான்-
உலவா -ஆபத்துக்கு நான் தேடி வைத்ததுக்கு ஒரு முடிவு இல்லை
உலவு -முடிவு –உலவா -முடியா -என்றபடி
முன்னி முளைத்து எழுந்து ஓங்கி யொளி பரந்த-மன்னிய பூம் பெண்ணை மடல் –
முன்னி -மடல் எடுக்கக் கடவேன் -என்று முற்கொலி –
உயர்ந்து ஒளி மிக்கு அழகியதாய்
நிலை நின்றவை
மடலாய் இருக்கிறபடி
பிராட்டிக்கு விச்வாமித்ர பகவானைப் போலே
இவளுக்கும் இம்மடல்
பெண்ணை யாகிறது-பனை –
எம்பெருமான் தன்னருளும் ஆகமும் தாரானேல் -தன் பேறாக கிருபை பண்ணித்
தன் உடம்போடு வந்து என்னை அணையானாகில்-
தன்னை –
சர்வதா மடல் எடுத்தாகிலும் பெற வேண்டும்படியான
வைலஷ்ண்யத்தை உடைய தன்னை –
நான்-
ஏதேனும் செய்தாகிலும் அபேஷிதம் பெற்று அல்லது மீளுவது இல்லை
என்னும் துணிவை யுடைய நான் –
மின்னிடையார் சேரியிலும் –
அல்லாதவிடம் செய்தபடி செய்ய-என்னோட்டை சஜாதீயர்க்கு முந்துற அறிவிக்கத் தட்டில்லை இ றே
தான் ரசிகனாய் பிரணயித்வம் கொண்டாடி இருப்பது அவர்கள் பக்கலிலே இ றே
மின்னிடையார் என்று ஆண்டாள் போல்வார் கோஷ்டியிலும்
திருக் குரவை கோத்த பெண்கள் திறங்களிலும் –
இதுவே அன்றோ அவனுடைய ரசிகத்வம் இருந்தபடி -என்று
என் உடம்பைக் காட்டி ஸ்திரீ காதுகன் கிடிகோள் -என்கிறேன் –
வேதியர்கள் வாழ்விடத்தும் –
உபாசக அக்ரேசரான வ்யாசாதி கோஷ்டியிலும்
வேதியர் -என்று பெரியாழ்வார் வர்த்திக்கிற தேசங்களிலும் என்னவுமாம் –
தன்னடியார் முன்பும்-
குணைர் தாஸ்ய முபாகத -என்றார் போலே குண ஜ்ஞானத்தால் ஜீவித்துக் கிடப்பார் சிலர் உண்டு இ றே
நம் ஆழ்வார் போல்வார் -அவர்கள் சந்நிதியிலும்
அவர்கள் முன்பே இது கிடிகோள் அவன் குணம் இருந்தபடி என்று
என் வடிவைக் காட்டி -ந்ருசம்சன் -என்னக் கடவேன் –
தரணி முழுதாளும் கொன்னவிலும் வேல் வேந்தர் கூட்டகத்தும்-
ஒவ்வொரு நாடுகளுக்குக் கடவராய் இருப்பார் இவன் வீர வாசியை சொல்லி கொண்டாடி நிற்பார்கள் இ றே –
அவ்விடங்களிலே இது கிடிகோள் அவன் ரஷகனாய் இருக்கிறபடி என்று
அபலையான என் வடிவைக் காட்டுகிறேன் –
வேல் வேந்தர் -ஸ்ரீ குலசேகர பெருமாள் -தொண்டைமான் சக்கரவர்த்தி போல்வார் இ றே -இங்கனே பிரித்துச் சொல்லுகிறது என் –
நாட்டகத்தும்–—
லோகம் அடங்கத் திரண்ட இடங்களிலே சென்று-
சேஸ்வரம் ஜகத்து -என்று பிரமித்து இருக்கிறவர்களை
நிரீஸ்வரம் ஜகத்து -என்று இருக்கும்படி பண்ணுகிறேன்
நாட்டகத்தும் –
மற்றும் விலஷணர் வர்த்திக்கும் திவ்ய தேசங்களிலும் –
தன்னிலை எல்லாம் அறிவிப்பன் –
இவ்வடிவைக் காட்டி ஆற்றாமையை விளைத்து-மடல் எடுக்கும் படி பண்ணி
என்னுடைய உடம்பு கொடுப்பதில்லை -என்று இருக்கிற
தன் துணிவை எல்லாம் அறிவிப்பேன்
நான் ஆகாது என்று இருந்தான் அத்தனை -என்கிறாள்
இனி அதுக்கு உனக்கு என் -என்ன
லோகம் அடையக் கை விடும்படியாகப் பண்ணக் கடவேன்
பொரி புறம் தடவி
தன்னை ஈஸ்வரன் என்று இருப்பார் பக்கல்
அவன் இருக்கும் இருப்பை நாட்டிலே வெளியிடக் கடவேன் –
இப்படி பிரதிஞ்ஞை பின குண ஹானியை உபபாதிக்கிறார் மேல்
தான் -இது செய்தானாய் மேனாணித்து இருக்கிற தான் –
முன நாள்-
செய்த நாள் பழகிற்று என்று இருக்கிறானோ –
மின்னிடை யாய்ச்சியர் தம் சேரிக் களவின் கண்—
அகங்கள் தோறும் தனித்தனியே கண்ட களவு சேரிக் களவு என்று-தான் ஒரு சேரியாக வன்றோ களவு கண்டது
களவு கண்டு ஓடப் புக்கால் தொடருகிற பெண்கள் உடைய இடையினுடைய நுடங்குதல் காண்கைக்காக அன்றோ செய்தது –
துன்னு படல் திறந்து புக்குத் தயிர் வெண்ணெய்-
நெருங்கின படலை இட்டு வாசல்களை மரத்தை இட்டுத் திருகி வைப்பார்கள் யாயிற்று
அவற்றைத் திறந்து கொடு போய்ப் புக்கு –
திறந்து வைத்தார்கள் ஆகில் அடைத்துக் கொடு போய்ப் புக்கு களவு காண்பது
துச்சமான தயிரும் வெண்ணெயுமன்றோ –
பௌத்த பிரதிமையோ –
தன் வயிறார விழுங்கக் கொழும் கயற்கண்-—
ஏதேனும் ஒரு திரு மதில் செய்க்கைக்காகவோ-இவன் தீரா மாற்றுச் செய்து அகப்படாதே திரிந்த இழவு தீர-அகப்பட்ட போதே நல்ல தாம்பு என்று-நீளியது ஒரு கயிறு கொடு வந்து கொடுப்பார் இல்லை இ றே என்கிற-அஹங்காரம் தோற்றப் பார்க்கிற போதை
கண்ணில் புகரையும் ஆச்சர்யமாய் இருக்கிற வடிவையும் –
மன்னு மடவோர்கள் பற்றியோர் வன் கையிற்றால்-
இவன் அகப்பட்ட போதே ஒரு கைக்கு ஆயிரம் பெண்களாய் வந்து பிடித்து விடாதே நிற்பார்கள்
அப்போது கைக்கு எட்டிற்று ஒரு கயிறு
நல்ல தாம்பு அன்றே
கண்ணிக் குறும் கயிறு என்றும்
கண்ணியார் குறும் கயிறு -என்றும்
கண்ணி நுண் சிறுத் தாம்பு -என்றும்
இது தன்னை சிஷித்து வைத்தார்கள் இ றே –
பின்னு முரலோடு கட்டுண்ட பெற்றிமையும்—
கையாலே பிடித்து விட்டார்களோ –
தன்னுடைய பெருமை இது அன்றோ –
அதுக்கு மேலே செய்ததொரு செயல் அன்றோ இது –
அன்னதோர் பூதமாய் ஆயர் விழவின் கண்
நினைத்த வாறே துணுக என்னும் படியான வடிவை யன்றோ கொண்டது
பூத வேஷத்தையும் பரிக்ரஹிப்பார் உண்டோ
ஆரேனுமாக நாழி அரிசி ஜீவிப்பாரைத் தேடித் திரியுமாயிற்று -ஆயர் விழாவின் கண் –
அங்கெ புக்கு ஜீவிக்கைக்கு -இடையர் உடைய உத்சவத்திலே
துன்னு சகடத்தால் புக்க பெரும் சோற்றை–
நால்வர் இருவர் சுமந்து கொடு போன சோற்றை ஜீவித்தானோ
நெருங்கின சகடங்களாலே கொடு பொய் புக்கு
மலை போலே குவித்த சோற்றை அன்றோ ஜீவித்தது
அட்டுக் குவி சோறு இ றே இது –
முன்னிருந்து முற்றத் தான் துற்றிய தெற்றனவும்
ஒரு திரையை வளைத்துத் தான் ஜீவிக்கப் பெற்றதோ
அதிலே சிறிது சோறு வைக்கத் தான் பெற்றதோ
ஜீவிக்கும் இடத்தில் சில பந்துக்களோடே தான் ஜீவிக்கப் பெற்றதோ
இப்படிச் செய்தோம் என்று லஜ்ஜிக்கத் தான் பெற்றதோ –
மன்னர் பெரும் சவையுள் வாழ வேந்தர் தூதனாய்–
ராஜாக்கள் அடையத் திரண்டு கிடக்கிற பேர் ஒலக்கத்தின் நடுவே -தூதனாய்
தன்னை வாழ்வாகவும்
துணையாகவும்
தோழனாகவும்
தூதனாகவும்
உடையராய் இருக்கிற பாண்டவர்கள் உடைய தூதனாய்
தன்னை இகழ்ந்துரைப்பத் தான் முன நாள் சென்றதுவும்-
தன்னைக் கண்டார் அடைய அநாதர உக்தி-பண்ணும்படி அன்றோ செய்தது
இது செய்தோம் நாம் அன்றி -என்று இருக்கிறானோ
காலம் கடந்து போயிற்று என்று இருக்கிறானோ
நேற்று செய்தால் போலே யன்றோ இருக்கிறது –
மன்னு பறை கறங்க –
இவ்வசதச்ய பிரவ்ருத்திக்கு சஹ கரிப்பார் இல்லாமையாலே
தானே பறையை அறையிலே-கோத்தன்றோ அடிக்கிறது –
மங்கையர் தம் கண் களிப்ப——
இது செய்தான் என் என்றால்-கண்ட பெண்கள் களிக்கச் செய்தோம் -என்று இ றே இவன் சொல்லுவது –
கொன்னவிலும் கூத்தனாய்ப் பேர்த்தும் குடமாடி-
கண்டார்க்குப் பிழைக்க வரிதான கூத்தை யுடையனாயிற்று
அதுக்கு மேலே குடங்களை ஏந்திக் குடக் கூத்தாடி
என்னிவன் என்னப் படுகின்ற ஈடறவும்––
இவன் படுகிற பாடு என்-
நாழி யரிசி ஜீவிப்பார்க்கு இப்பாடு பட வேணுமோ -என்று சொல்லுகிற எளிவரவையும் –
தென்னிலங்கை யாட்டி யரக்கர் குலப்பாவை-
சொல்லீர் அவள் ஒருத்தியை
அவளைப் போலே பிறந்தாரும் உண்டோ
ராவணன் என்று ஓர் பேர் மாத்ரமாய்
அவள் அன்றோ அப்படை வீட்டுக்கு நிர்வாஹகையாய் போந்தாள்-
ஜனகச்ய குலே ஜாதா-என்னுமா போலே ராஷச குலத்துக்கு நிதி போலே யுள்ளாள்-
மன்னன் இராவணன் தன நல் தங்கை வாள் எயிற்றுத்-—
சொல்லாய் ராஜ ராஜனை -அவனைப் போலே வாழ்ந்தார் உண்டோ
அவனுக்கு நல்ல ஜீவன் போலே வேறே தங்கை
சொல்லீர் எயிற்றின் ஒளியை
ஸ்திரீ யாகில் அங்கன் இருக்க வேண்டாவோ தான்
துன்னு சுடு சினத்துச் சூர்பணகாச் சோர்வெய்திப்
எயிற்றின் ஒளி போலேயோ அகவையில் த்வேஷம் வெள்ளம் இருக்கிறபடி
சூர்ப்பம் போன்ற நகத்தை யுடையவள்
பெருமாளோடு தான் நினைத்து வந்த படி பரிமாறப் பெறாமையாலே சோர்ந்து பூமியிலே விழ –
பொன்னிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்-—
அபிமதம் பெறாமையாலே விவர்ணமான உடம்பை யுடையளாய் –
கிளர்ந்து எழுந்த காமத்தை யுடையளாய்
தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கரிந்து-
தன்னை ஆசைப்பட்ட இது அன்றோ அவள் செய்த த்ரோஹம்
தன்னை ஆசைப் பட்டாரை முனியக் கடவதோ
ஆசைப் பட்டாரை ஒக்க ஆசைப் படும் அது ஒழிய
அது செய்யா விட்டால் பின்னை முனியவும் வேணுமோ
முனிந்து விட்டு விடப் பெற்றதோ
அவளுக்கு வைரூப்யத்தையும் விளைத்து விட வேணுமோ
மன்னிய திண் எனவும் வாய்த்த மலை போலும்-—-
ஸ்த்ரீத்வம் பண்ணினால் அனுதாபமும் இன்றிக்கே
பெரிய ஆண் பிள்ளைத் தனம் செய்ததாக நினைத்து இருக்கிற நிலை நின்ற த்ருடத்வமும்
சொல்லீர் அவளுடைய வடிவின் பெருமையை –
சொல்லீர் அவளுடைய வடிவின் பெருமையை –
தன்னிகர் ஓன்று இல்லாத தாடகையை –
தனக்கு ஒப்பார் இன்றிக்கே பெரிய மலை போலே இருக்கிற வடிவை யுடைய தாடகையை-
நே ஸ்திரீ வதம் பண்ணிற்று -என்று மடியைக் கோத்துப் பிடித்து கேட்டால்
ஒரு பார்ப்பான் சொல்லச் செய்தேன் -என்று ஆயிற்றுச் சொல்லுவது
இது பட்டர் அருளிச் செய்யக் கேட்டேன் -என்று பிள்ளை அருளிச் செய்வர்
மா முனி
அவன் ஒருவன் படி இருந்த படி என்
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் உடைய
ஆற்றாமைக்கு உதவ
கடுகக் கொடு சென்றவன்
கையும் மடலுமாய் இருக்கிற என் ஆற்றாமைக்கு உதவக் கொடு வராது ஒழிவதே –
————————————————————————–
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply