தாமரை மேல்
மின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன்மலையைப்—-113
பொன்னி மணி கொழிக்கும் பூங்குடந்தைப் போர்விடையைத்
தென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை —–114
மன்னிய தண் சேறை வள்ளலை மா மலர் மேல்
அன்னம் துயிலும் அணி நீர் வயலாலி ——–115
என்னுடைய வின்னமுதை எவ்வுள் பெரு மலையைக்
கன்னி மதில் சூழ் கணமங்கைக் கற்பகத்தை ——116
மின்னை யிரு சுடரை வெள்ளறையுள் கல்லறை மேல்
பொன்னை மரகதத்தைப் புட்குழி எம் போரேற்றை ——117
மன்னு மரங்கத் தெம் மா மணியை வல்ல வாழ்
பின்னை மணாளனைப் பேரில் பிறப்பிலியைத் ——–118
தொன்னீர்க் கடல் கிடந்த தோளா மணிச் சுடரை
என் மனத்து மாலை யிடவெந்தை ஈசனை ——–119
மன்னும் கடன்மலை மாயவனை வானவர்தம்
சென்னி மணிச் சுடரைத் தண் கால் திறல் வலியைத் ——–120
தன்னைப் பிறர் அறியாத் தத்துவத்தை முத்தினை
அன்னத்தை மீனை யரியை யருமறையை——-121
முன்னிவ் வுலகுண்ட மூர்த்தியைக் கோவலூர்
மன்னு மிடை கழி எம்மாயவனைப் பேயலறப் ——-122
பின்னும் முலையுண்ட பிள்ளையை அள்ளல் வாய்
அன்னம் இரை தேரழுந்தூர் எழுஞ்சுடரைத்——-123
தென் தில்லைச் சித்திர கூடத்தென் செல்வனை
மின்னி மழை தவழும் வேங்கடத் தெம் வித்தகனை —–124
மன்னனை மாலிருஞ்சோலை மணாளனைக்
கொன்னவிலும் ஆழிப் படையானைக் கோட்டியூர் —-125
அன்ன வுருவில் அரியைத் திரு மெய்யத்து
இன்னமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை —-126
மன்னு மதிட் கச்சி வேளுக்கை யாளரியை
மன்னிய பாடகத் தெம் மைந்தனை -வெக்காவில்—127
உன்னிய யோகத் துறக்கத்தை ஊரகத்துள்
அன்னவனை அட்ட புயகரத் தெம் மானேற்றை ——128
என்னை மனம் கவர்ந்த வீசனை வானவர் தம்
முன்னவனை மூழிக் களத்து விளக்கினை ———-129
அன்னவனை யாதனூர் ஆண்டளக்கும் ஐயனை
நென்னலை இன்றினை நாளையை நீர்மலை மேல் ——130
மன்னு நான் மறை நான்கும் ஆனானைப் புல்லாணித்
தென்னன் தமிழை வடமொழியை நாங்கூரில் ———131
மன்னு மணி மாடக் கோயில் மணாளனை
நன்னீர்த் தலைச் சங்க நாண் மதியை நான் வணங்கும் ——–132
கண்ணனைக் கண்ணபுரத் தானைத் தென்னறையூர்
மன்னு மணிமாடக் கோயில் மணாளனைக் ——–133
கன்னவில் தோள் காளையைக் கண்டாங்குக் கைதொழுது
என்னிலைமை எல்லாம் அறிவித்தால் எம்பெருமான் ——–134
————————————————————————–
தாமரை மேல் மின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன்மலையைப்––
இதுக்கு எல்லாம் அடியான பிராட்டியோடே-திரு விண்ணகரிலே அவளோட்டை சம்ச்லேஷம் திரு மேனியிலே நிழலிட நிற்கிறவனை –
பொன்னி மணி கொழிக்கும் பூங்குடந்தைப் போர்விடையைத்–
அவதாரங்களைப் பண்ணி-பிரதிபஷ நிரசனம் பண்ணி
இளைப்பாறச் சாய்ந்தவனை -திசைவில் வீசும் செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை -திருவாய் மொழி -5-8-9-
தென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை –
வைத்த கண் வாங்க ஒண்ணாத அழகு –
மன்னிய தண் சேறை வள்ளலை-
ப்ரதிகூலர் நடுவே ஆஸ்ரிதர்க்குத் தன்னைக் கொடுத்துக் கொண்டு இருக்கிற -ஔதார்யம் –
மா மலர் மேல்-
ஊடல் தொடக்கமானவை கிட்டாமல்-அன்னம் துயிலும் அணி நீர் வயலாலி –
போகத்துக்கு ஏற்றவற்றை இட்டு உறங்கும் படுக்கை இ றே-
என்னுடைய வின்னமுதை –
இவள் பிறந்த விடமாய் -புக்க விடமுமாயிருக்கையாலே-மேல்வாரமும் குடிவாரமும் ஆகிற இரு தலை வாரமும் தம்முடையதாய் இருக்கிறபடி –
எவ்வுள் பெரு மலையைக்-
அனுபவித்து முடிக்க ஒண்ணாமை –
கன்னி மதில் சூழ் கணமங்கைக் கற்பகத்தை –
என்று காவலிட்டு நின்றார் -எனக்கே தன்னைத் தந்த கற்பகம் என்றும்
கண்கள் ஆரளவும் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் -பெரிய திருமொழி -7-10-9- என்றரர் இ றே
காவல் உண்டு என்று ஆஸ்வாசம் அடைகிறார் மடல் எடுக்கும் பொழுதும் மங்களா சாசன பரர ஆகையாலே –
மின்னை யிரு சுடரை –
மின்னல் போலவும் சந்திர சூர்யர்கள் போலவும் தன்மை யுடையவனை –
பிராட்டி உடனும் -சங்க சக்கரங்கள் உடன் நிற்கிற படி
கரு முகில் தாமரைக் காடு பூத்து நீடு இரு சுடர் இரு புறத்தேந்தி யெடவிழ் திருவோடும் பொலிய -கம்ப நாட்டு ஆழ்வார் –
வெள்ளறையுள் கல்லறை மேல் –
சீரிய வஸ்து என்று சேர்க்கிறார் -மாணிக்க அறை
பொன்னை மரகதத்தைப் –
பொன்னையும் மணிகளையும் கொண்டு ரத்னஆகாரம் தொடுப்பாரைப் போலே
அர்ச்சாவதார ஸ்தலங்களை சேர்க்கிறார்
மத்திய மணி நியாயம் முன்னும் பின்னும் அந்வயம் –
புட்குழி எம் போரேற்றை —–
பிரதி பஷத்துக்கு கணிசிக்க ஒண்ணாமை -ரிஷபம் போலே நிற்கிறவன் -அத்தாலே
என்னைத் தோற்பித்துக் கொண்டவன் –
அற்ற பற்றார் -சுற்றி வாழும் அந்தணீர் அரங்கம் -திருச்சந்த -52-என்றும்
நல்லார்கள் வாழும் நளிர் அரங்க நாகணையான் -நாச் திரு -11-5-என்றும்
ஸ்தாவர பிரதிஷ்டியாக மன்னி கண் வளரும் தேசம் –
கண்டார் விடாத தேசம் -என்றுமாம்
அரங்கத்தம்மா மணி –
அகில ஜகத் ஸ்வாமி அஸ்மின் ஸ்வாமி-
மா மணி -பெரிய மணி -கறுத்த மணி –
கோயில் மணியினார் -திருமாலை -21
தெண்ணீர்ப் பொன்னி திரைக் கையால் அடிவருடப் பள்ளி கொள்ளும் கருமணி -பெருமால்திருமொழி -1-1-
அணியார் பொழில்சூழ் அரங்க நகரப்பா –மணியே மாணிக்கமே -பெரிய திரு -11-8-8-
வல்ல வாழ் பின்னை மணாளனைப்-
நப்பின்னைப் பிராட்டியை திருமணம் புணர்ந்த செவ்வி தோற்ற நிற்கை –
பேரில் பிறப்பிலியைத் –—
இதுக்கு முன்பு பிறவாதே-பின்பு பிறக்க இருக்கிறவனை
தொல் நீர்க்கிடந்த தோளா மணிச் சுடரை -ச ஏகாகீ ந ரமேத -பரம பதத்தில் –
அவதாரம் செய்த பின் தொளை படாத மணியின் சுடர் போலே புகர் விஞ்சி நின்றான் –
தொல் நீர் -அவதாரத்துக்கு நாற்றங்கால்
தோளா மணிச் சுடர் -தோளைப் படாத மணியின் ஒளி தானானவன் –
என் மனத்து மாலை –
என் பக்கலிலே வ்யாமோஹத்தைப் பண்ணி என் ஹிருதயத்தில் நிற்கிறவனை
விச்வஸ் யாயதனம் மஹத் –
இளம் கோயில் கை விடேல் -இரண்டாம் திரு -54
நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே -திருவாய் மொழி -3-8-2-
யிடவெந்தை ஈசனை —-
சர்வேஸ்வரத்வம் நிழலிட நிற்கிறவனை –
மன்னும் கடன்மலை மாயவனை-
ஆஸ்ரிதர்க்காகத் தரையிலே கண் வளர்ந்து அருளுகிறவனை-
வானவர்தம் சென்னி மணிச் சுடரைத் –
அயர்வறும் அமரர்கள் சிரோ பூஷணம் -அமரர் சென்னிப்பூ -திருக் குறும் தாண்டகம்-6-
தண் கால் திறல் வலியைத் —–
எல்லாரையும் ஜெயிக்கும் மிடுக்கையுடையவனை –
தன்னைப் பிறர் அறியாத் தத்துவத்தை –
சௌலப்யத்தாலே தாழ நிற்க -சிசூபாலாதிகள் அறியாதே
வையும்படியாய் இருக்காய்-
பரம் பாவ மஜா நந்த அவஜா நந்தி மாம் மூடா -ஸ்ரீ கீதை -9-11-
முத்தினை-
ஸ்ரமஹரமாயிருக்கிறவனை –
அன்னத்தை மீனை யரியை -சர்வ வித்யைகளுக்கும் உபதேஷ்டாவாய் இருக்கிறவனை
யரி -குதிரை ஹயக்ரீவன் –
யருமறையை-—
அந்த வித்யைகள் தானாய் இருக்கை –
வேதைஸ்ஸ சர்வை ரஹமேவ வேத்ய -ஸ்ரீ கீதை -15-15-
முன்னிவ் வுலகுண்ட மூர்த்தியைக்-
முற்கோலி-இருந்ததே குடியாக தன வயிற்றிலே வைத்து நோக்குமவனை –
கோவலூர் மன்னு மிடை கழி எம்மாயவனைப் –
ஆஸ்ரிதர் அடிச் சுவடும் விடாதே நிற்கிறவனை –
இடை கழி மன்னும் -எம்மாயவன்
பேயலறப் பின்னும் முலையுண்ட பிள்ளையை –
யசோதை பிராட்டி யுடைய ஸ்துதி போலே பேயினுடைய கத்துகையையும் ஸ்துதி யாகக் கொண்டு-முலை யுண்ட மௌக்த்யத்தை யுடையவனை –
அள்ளல் வாய் அன்னம் இரை தேர்-
கலங்கின நீரில் இழியாத அன்னமும் கூட இழியும்படிக்கு ஈடான நல்ல சேறு –
அழுந்தூர் எழுஞ்சுடரைத்-—-
ஆஸ்ரிதர் கை தொடனாய் என்னையும் கண்டு உகந்து நிற்கிறவனை
அழுந்தூரிலே உதிக்கும் சூர்யன்
நீசனேன் நிறை ஒன்றும் இல்லாத என் மேலும் பாசம் வைத்த பரஞ்சுடர் -நிரவதிக தேஜோ ரூபன்
தென் தில்லைச் சித்திர கூடத்தென் செல்வனை-
அங்குத்தை அழகனை –
மின்னி மழை தவழும் வேங்கடத் தெம் வித்தகனை –—
மேகமானது மின்னாகிற கை விளக்கைக் கொண்டு
குச்சி வழியே புக்குத் திருவாராதனம் பண்ண இருக்கிற ஆச்சர்ய பூதனை –
வேங்கடத்துத் தன்னாகத் திருமங்கை தங்கிய சீர் மார்வற்கு -நாச் -8-4-
மின்னொத்த நுண் மருங்குல் மெல்லியலைத் திரு மாரவில் மன்னத்தான் வைத்துகந்தான் -பெரிய திருமொழி -6-9-6-
நீலமுண்ட மின்னன்ன திரு மேனி-
நீல தோயாத மத்யச்தையான
அலர்மேல் மங்கை உறை மார்வா -திருவேங்கடத்தானே -திருவாய் -6-10-10-
மன்னனை மாலிருஞ்சோலை மணாளனைக்-
நாட்டுக்கு ராஜா
தமக்கு மணாளன்
கொன்னவிலும் ஆழிப் படையானைக் –
நமுசி பிரப்ருதிகளை வாய் வாய் என்னப் பண்ணும் திரு வாழியை உடையவனை –
கோட்டியூர் அன்ன வுருவில் அரியைத் –
முரியும் வெண் திரை முது காயம் தீப்பட முழங்கழல் எரியம்பின் வரிகொள் வெஞ்சிலை வளைவித்த மைந்தனும் -பெரிய திரு மொழி -8-5-6-
முரியும் வெண் திரை பாடினவர்க்கு நிலம் அன்றியே இருக்கிறவனை
திருக்கோட்டியூர் நாதனை நரசிங்கனை -பெரியாழ்வார் -4-4-6-
திரு மெய்யத்து இன்னமுத வெள்ளத்தை-
நினைக்க விடாய் கெடும்படி இருக்கிறவனை –
இந்தளூர் அந்தணனை ——
அந்தணனை -ஆன்ரு சம்சயம் உடையவனை –
அழகிய தண்மை இரக்கம் உடையவனை
அந்தணர் என்பர் அறவோர் மற்று எவ் உயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலால் -திருக் குறள்-
மன்னு மதிட் கச்சி வேளுக்கை யாளரியை-
வீரம் தோற்றாதே-அழகே தோற்றி பயப்பட்டு மதிளிட வேண்டும்படி நிற்கிறவனை –
மன்னிய பாடகத் தெம் மைந்தனை –
அர்ஜுனனுக்கு சாரத்தியம் பண்ணின படி தோற்ற இருக்கிறவனை –
நித்ய யுவா-என்னுமாம்
-வெக்காவில் உன்னிய யோகத் துறக்கத்தை –
ஆஸ்ரிதர் இட்ட வழக்காய் இருக்கிறவனை -ஆஸ்ரித ரஷண சிந்தை உடன் விழி துயில் அமர்ந்து இருப்பவன் –
அதாவது-திரு மழிசைப் பிரான் -கிட -என்னக் -கிடந்து நிற்கிறபடி –
பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள் -விரித்துக் கொள் என்ன செய்தவன் –
ஊரகத்துள் அன்னவனை–
அட்ட புயகரத் தெம் மானேற்றை –
ஆஸ்ரிதர்க்காக தன்னை அழிய மாறுமவனை-
கஜேந்திர ஆழ்வானுக்கு அரை குலைய தலை குலைய ஓடி வந்து அருள் செய்தவனை –
என்னை மனம் கவர்ந்த வீசனை –
சர்வ ஸ்வாபகாரம் பண்ணிப் பூர்ணனாய் இருக்கிறவனை –
வானவர் தம் முன்னவனை –
நித்ய சூரிகளுக்கும் கூட அனுபவித்து முடிய ஒண்ணாத படி இருக்கிறவனை
எதோ வாசோ நிவர்த்தந்தே –பூர்வோ யோ தேவேப்ய –
மூழிக் களத்து விளக்கினை ––
உஜ்ஜ்வலனாய் இருக்கிறவனை
பல பிறப்பாய் ஒளி வரும் -திருவாய் -1-3-2-
ஸ்ரேயான் பவதி ஜாயமான –
அன்னவனை யாதனூர் ஆண்டளக்கும் ஐயனை-
காலத்ரயத்தை பரிச்சேதிக்குமவனை-
இவன் காலத்தை அளவு படுத்துவான் –
நென்னலை இன்றினை நாளையை-
பரிச்சேதித்த படியைப் பேசுகிறார் –
வரும் காலம் நிகழ் காலம் கழி காலமாய் உலகை ஒருங்காக அளிப்பாய் -திருவாய் -3-1-5
சென்று செல்லாதான முன்னிலாம் காலமே -திருவாய் -3-8-9-
நீர்மலை மேல் மன்னு நான் மறை நான்கும் ஆனானைப்
வேதத்தாலே அறியப்ப்படுமவனை –
புல்லாணித் தென்னன் தமிழை –
காவார் மடல் பெண்ணை -பெரிய திரு -9-4-
தன்னை நைவிக்கிலென் -பெரிய திருமொழி -9-3-
என்கிற திரு மொழிகள் தானேயாய் இருக்கிறவனை –
வடமொழியை –
ஸ்ரீ ராமாயணாதிகள் –
நாங்கூரில் மன்னு மணி மாடக் கோயில் மணாளனை –
என்னை மறுமுட்டுப் பெறாத படி பண்ணினவனை –
நன்னீர்த் தலைச் சங்க நாண் மதியை –
தர்ச நீயமாய் இருக்கிறவனை –
நான் வணங்கும் கண்ணனைக் கண்ணபுரத் தானைத்-
கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ–பெரிய திருமொழி -8-9-3-யென்னும்படியாய் இருக்கிறவனை –
தென்னறையூர் மன்னு மணிமாடக் கோயில் மணாளனைக்
மடல் எடுக்கப் பண்ணினவனை -ஆணை செல்லாத தேசம் –
கன்னவில் தோள் காளையைக் கண்டாங்குக் கைதொழுது-
பூண் கட்டின
கண்டு அன்றி விடேன்
தொழுது
அவனைக் கெடுத்த படி
ராஜ மகிஷி உஞ்ச வருத்தி பண்ணுமோ பாதி
இவனுக்கு அஞ்சலியும்
ஓதி நாமம் குளித்துச்சி தன்னால் ஒளி மலர்ப்பாதம் நாளும் பணிவோம் –
என்னிலைமை எல்லாம் அறிவித்தால் எம்பெருமான் –
மடலிலே துணிந்த படி –
————————————————————————–
தாமரை மேல் மின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன்மலையைப்—
ஆஸ்ரித விஷயத்தில் இப்படிப் பண்ணின அவ்வபதானத்துக்கு நிதானம் -பிராட்டியோட்டைச் சேர்த்தி இ றே –
பிரணயினி பக்கலிலே முகம் பெற்று மதிப்பானவனை –
பிராட்டியோட்டை சம்ச்லேஷத்தால் வந்த புகர் அடங்கலும் வடிவிலே தோற்றும்படி
திரு விண்ணகரிலே வந்து உஜ்ஜ்வலனாய் நிற்கிறவனை –
பொன்னி மணி கொழிக்கும் பூங்குடந்தைப்-போர்விடையைத்-
காவேரியானது பெரு விலையனாய் இருந்துள்ள ரத்னங்களைக் கொழித்துக் கொண்டு வந்து-ஏறிடா நின்றுள்ள அழகிய திருக் குடந்தையிலே –
பிரதிபஷ நிரசனம் பண்ணின மேணாபபு எல்லாம் தோற்ற சந்நிஹிதனானவனை –
தென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை –
அவசியம் மடல் எடுத்தாலும் பெற வேண்டும்படி ஸ்ப்ருஹணீயமான வடிவோடு கூட –
தென்னனனதான திருக் குறுங்குடியிலே வந்து நின்று அருளினவனை –
மன்னிய தண் சேறை வள்ளலை –
திருச் சேறையிலே நித்ய வாசம் பண்ணுகிற பரமோதாரனை-
மா மலர் மேல் அன்னம் துயிலும் அணி நீர் வயலாலி என்னுடைய வின்னமுதை –
அன்யோன்யம் ப்ரணய கோபத்தாலே ஊடினால் ஒருவர்க்கு ஒருவர் கடக்கக் கிடக்கலாம் படியான பரப்பை உடைத்தான பூவின் மேலே
ஒரு மஹா பாரதத்துக்கு வேண்டும்படியான பரப்பைப் பாரித்துக் கொண்டு இழிந்து படுக்கை வாய்ப்பாலே கிடந்து உறங்கி
விடிந்து எழுந்து இருக்கும் போதாக எழுப்பாதாரைக் கோபித்துக் கொண்டு எழுந்து இருக்கும் ஆயிற்று அன்னம் ஆனது –
இப்படி இருப்பதாய் அழகிய ஜல சம்ருத்தியை யுடைத்தான திரு வாலியிலே நிரதிசய போகய தமனாய்க் கொண்டு இருக்கிறவனை
திருப்பதியுமாய் -பிறந்த விடமும் ஆகையாலே
இருதலை வாரமும் தம்மதாய் இருக்கும் இ றே –
எவ்வுள் பெரு மலையைக்-
திரு வெவ்வுளிலே தன்னுடைய போக்யதையை ஒருவருக்கும் அனுபவிக்க ஒண்ணாத படியாக-போக்யதா பிரகர்ஷத்தை யுடையனாய்க் கொண்டு-கண் வளர்ந்து அருளினவனை –
கன்னி மதில் சூழ் கணமங்கைக் கற்பகத்தை —–
அரணாகப் பொருந்தி இருக்குமதாய்-புதுமை அழியாத திரு மதிளை உடைத்தான
திருக் கண்ணமங்கையிலே எழுந்தருளி நிற்கிற பரமோதாரனை –
கண்கள் ஆரளவும் -என்கிறபடியே தன்னைக் கண்ணாரக் கண்டு அனுபவிக்கலாம் படி
சர்வஸ்வதாநம் பண்ணிக் கொண்டு நிற்கிறவனை –
அங்கு நிற்கிறபடி எங்கனே என்னில் –
மின்னை யிரு சுடரை வெள்ளறையுள் கல்லறை மேல்-பொன்னை –
பெரிய பிராட்டியாரோடும்-இரண்டு அருகும் சேர்ந்த ஆழ்வார்களோடும் ஆயிற்று நிற்பது -அங்கே தோற்றுப் படப் புக்கவாறே அனுகூலர் இங்கே கொண்டு சேமித்து வைத்தார்கள் -திரு வெள்ளறையுள் கல்லறையினுள்ளே ஸ்லாக்யமானவனை-
கல்லறை -மாணிக்க அறை –
தென்னருகே அரங்கும் -வடவருகே அறையுமாய் இருக்குமாயிற்று –
மரகதத்தைப் புட்குழி எம் போரேற்றை —
அங்கு நிற்கிற படியே ஸ்ரமஹரமான வடிவோடே திருபுட் குழியிலே தோற்றி என்னைத்
தோற்பித்த மேணாணிப்போடேகூட நிற்கிறவனை –
மன்னு மரங்கத் தெம் மா மணியை –
திருநாள் சேவிக்க வென்று வந்து-பின்பழகும் பிறகு வாளியும் அழகும் -கொக்குவாயும் கடைப்பணிக் கூட்டமும் இருக்கிற படியைக் கண்டு ஷேத்ர சன்யாசம் பண்ணி -வர்த்திக்கும் படிக்கு ஈடாக-வாயிற்று கோயிலிலே கண் வளர்ந்து அருளும் படி –
பெரு விலையனான ரத்னங்களை முடிந்து ஆளலாய் இருக்குமா போலே
ஆஸ்ரிதர்க்கு அத்யந்த ஸூ லபனாய் யுள்ளவனை –
மன்னும் அரங்கம் –
திருநாடு -திருப் பாற் கடல் மற்றும் உள்ள தேசங்களில் விரும்பி இருக்கும் தேசம் -என்றுமாம் –
கோயில் மணியனார் -திருமாலை -21 -என்னக் கடவது இ றே –
மணியே மணி மாணிக்கமே -பெரிய திருமொழி -11-8-8–என்று ரத்ன ஸ்ரேஷ்டம் இ றே -பொன்னி அடி வருடப் பள்ளி கொள்ளும் கருமணி -பெருமாள் திருமொழி -1-1-என்றும்–மணி இரண்டு இ றே
மன்னும் அரங்கம் –
நல் சரக்கு படும் துறை –
வல்ல வாழ் பின்னை மணாளனைப் –
திரு வல்ல வாழிலே நப்பின்னை பிராட்டியோட்டை மணக் கோலம் எல்லாம் தோற்ற நின்று அருளுகிறவனை –
பேரில் பிறப்பிலியைத் –—-
ஆஸ்ரித அர்த்தமாக அநேக அவதாரங்களைப் பண்ணச் செய்தே பின்னையும் ஒன்றும் செய்யாதானாய்-பிறக்க ஒருப்பட்டு இருக்கிறவனை –
தொன்னீர்க் கடல் கிடந்த தோளா மணிச் சுடரை என் மனத்து மாலை-
பரமபதம் கலவிருக்கை யாய் இருக்க -அங்கு நின்றும் போந்து-திருப் பாற் கடலிலே வந்து என் பக்கலிலே வ்யாமோஹத்தைப் பண்ணி அத்தாலே அத்யுஜ்ஜ்வலன் ஆனவனை –
இதுக்கு திருஷ்டாந்தம் –
யிடவெந்தை ஈசனை ––
ஸ்ரீ பூமிப் பிராட்டி பக்கல் பண்ணின வ்யாமோஹத்தாலே அத்யுஜ்ஜ்வலனாய் இருக்கிறவனை –
மன்னும் கடன்மலை மாயவனை –
திருக் கடல் மல்லையிலே நித்ய வாஸம் பண்ணுகிற ஆச்சர்ய பூதனை –
ஆச்சர்யம் தான் என் என்னில் -திரு வநந்த ஆழ்வானை ஒழிய
ஆஸ்ரிதன் உகந்த இடம் -என்று தரையிலே கண் வளர்ந்து அருளுகை-
இப்படியில் அங்கு வந்து கண் வளர்ந்து அருளுகிறவன் தான் ஆர் என்னில்
வானவர்தம் சென்னி மணிச் சுடரைத்-
நித்ய சூரிகளுக்கு சிரோ பூஷணம் ஆனவனை-அமரர் சென்னிப் பூவாகையாலே வானவர்க்கு சென்னி மணிச் சுடர் -என்னக் குறை இல்லை இ றே-
தண் கால் திறல் வலியைத் ——
திருத் தண் காலிலே நின்று அருளி பிரதிபஷத்தை அடர்க்கிற பெரு மிடுக்கனை
வலியையும் மிடுக்கையும் காணும்படி கண்ணுக்குத் தோற்ற ஒரு வடிவு கொண்டு நின்று அருளினவனை –
தன்னைப் பிறர் அறியாத் தத்துவத்தை-
தானான தன்மையைத் தானே காட்டில் அறியலாய்
அல்லாதார்க்கு அறிய ஒண்ணாத அர்த்த தத்தவத்தை –
நின்னை யாவர் காண வல்லர்–திருச் சந்த விருத்தம் -8-என்றார் இ றே திரு மழிசைப் பிரானும் –
முத்தினை-
ஆஸ்ரிதர்கள் ஏறிட்டுக் கொள்ளலாம் படி குளிர்ந்த வடிவு அழகை யுடையனாய் இருக்கிறவனை –
அன்னத்தை மீனை யரியை –
அன்னமும் மீனுருவும் ஆளரியும்-பெரியாழ்வார் -1-6-11-என்று
வித்யாவ தாரங்களைச் சொல்ல்கிறது –
-யருமறையை—–
அத்தாலே பலித்த பலம் -தன்னைப் பெறிலும் பெற அரிதான வேதத்துக்கு பிரதிபாத்யன் ஆனவனை
முன்னிவ் வுலகுண்ட மூர்த்தியை-
பிரளய காலத்திலேயே பூமியை உண்டு அத்தாலே-விலஷண விக்ரஹ யுக்தன் ஆனவனை –
கோவலூர் மன்னு மிடை கழி எம்மாயவனைப் –
ஆஸ்ரிதர்க்கு போக்யமான இடமே தனக்குப் பரம போக்யம் -என்று
அங்கே நித்ய வாஸம் பண்ணுகிற சர்வ ஸூ லபன் ஆனவனை –
பேயலறப் பின்னும் முலையுண்ட பிள்ளையை-
கம்சனுடைய வ்ருத்தியாலே வந்த பேயின் உயிரை அவள் அலறும்படியாக
பிராண சஹிதம் பபௌ-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-5-9-என்கிறபடியே
பானம் பண்ணின பாலன் ஆனவனை-முன்னே உலகு உண்டு-பின்முலை உண்டபடி –
அள்ளல் வாய் அன்னம் இரை தேரழுந்தூர் எழுஞ்சுடரைத்—
சேறு கண்டு இறாய்க்கக் கடவ அன்னங்கள்-சேற்றைக் கண்டு இறாயாதே மேல் விழுந்து சஞ்சரிக்கும் படியான போக்யதை நித்ய வாஸம் பண்ணுகிற நிரவதிக தேஜோ ரூபனை
திரு வழுந்தூரிலே முளைத்த ஆதித்யனை -என்றுமாம் –
தென் தில்லைச் சித்திர கூடத்தென் செல்வனை-
அங்குத்தை சம்ருத்தி இருக்கும் படி வாசா மகோசரம்-
மின்னி மழை தவழும் வேங்கடத் தெம் வித்தகனை —
திருக் காப்பு கொண்டு போனாலும் குச்சி வழியே தன வடிவில் இருட்சிக்குக் கை விளக்காக-மின்னோடி புக்கு மேகம் சஞ்சரிக்கிற திருமலையிலே நின்று அருளினவனை-
தன்னாகத் திரு மங்கை தங்கிய -நாச் திரு மொழி -8-4- என்றும்
மின்னொத்த நுண் மருங்குல் மெல்லியலைத் திரு மார்பில் வைத்துகந்தான் –பெரிய திருமொழி -6-9-6- என்றும்
அலர் மேல் மங்கை உறை மார்வன் -திருவாய் -6-10-10- என்றும்சொன்ன இவற்றுக்கு
மின்னியும் மேகத்தையும் திருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார்
மின்னார் முகில் சேர் திரு வேங்கடம் -பெரிய திரு மொழி -1-10-6-
மின்னு மா முகில் மேவு தண் திரு வேங்கடம் -பெரிய திருமொழி -2-1-10-
மன்னனை மாலிருஞ்சோலை மணாளனைக்-
எனக்கு ராஜாவே-திருமலையிலே வந்து நின்று அருளி என் வல்லபன் ஆனவனை
மன்னனை -மன்னனாகவுமாம் –
கொன்னவிலும் ஆழிப் படையானைக் –
பிரதிபஷ நிரசனத்துக்கு ஈடான பரிகரத்தை உடையவனை –
கோட்டியூர் அன்ன வுருவில் அரியைத் –
திருக் கோட்டியூரிலே நரசிம்ஹ ரூபியாய் நின்று அருளின நிலை-தன்னுடைய பேச்சுக்கு நிலம் இன்றிக்கே இருக்கையாலே-அப்படிப் பட்ட உரு -என்னும் படியான வடிவு அழகை யுடையவனை –
திரு மெய்யத்து இன்னமுத வெள்ளத்தை –
நடு வழியிலே விடாய்த்தார்க்கு விடாய் கெட-ஒரு அம்ருத சாகரத்தைத் தேக்கினால் போலே இருக்கிறவனை
இந்தளூர் அந்தணனை –—
திரு இந்தளூரிலே நிற்கின்ற பரம பாவனனை-
மன்னு மதிட் கச்சி வேளுக்கை யாளரியை-
திரு வேளுக்கையிலே நித்ய வாஸம் பண்ணுகிற நரசிம்ஹ வேஷத்தை உடையவனை –
மன்னும் மதிள்-ப்ரளயத்திலும் அழியாத மதிள்
மன்னிய பாடகத் தெம் மைந்தனை –
திருப் பாடகத்திலே எழுந்து அருளி இருக்கிற நவ யௌவன ஸ்வ பாவனை –
-வெக்காவில் உன்னிய யோகத் துறக்கத்தை –
திரு வெக்காவிலே ஆஸ்ரித சம்ரஷணத்துக்கு பாங்கான அனுசந்தானத்தோடே
திரு மழிசைப் பிரானுக்காகப் படுக்கை மாறிப் படுத்தவனை –
ஊரகத்துள் அன்னவனை –
திரு ஊரகத்திலே திரு வுலகு அளந்து அருளின செவ்வி தோற்ற வந்து நிற்கிற நிலை
பேச்சுக்கு நிலம் அன்றிக்கே நிற்கிற நிலை அழகை யுடையவனை –
அட்ட புயகரத் தெம் மானேற்றை —-
திரு வட்ட புயகரத்திலே ஆனைக்கு அருள் செய்த வடிவைக் காட்டிக் கொண்டு
பெரிய மேணாணிப்பு தோற்ற நிற்கிறவனை –
என்னை மனம் கவர்ந்த வீசனை –
யஸ்ய சா ஜனகாத்மஜா -என்னுமா போலே என்னுடைய நெஞ்சை அபஹரித்து
அத்தாலே வந்த மேன்மை தோற்ற இருக்கிறவனை –
வானவர் தம் முன்னவனை –
அயர்வறும் அமரர்களுக்கு எல்லா வகையாலும் தன்னை அனுபவிப்பித்துக் கொண்டு நிற்கிறவனை –
மூழிக் களத்து விளக்கினை ––
திரு மூழிக் களத்திலே மிகவும் விளங்கா நின்று உள்ளவனை
வளத்தினை -என்று பாடமான போது-சம்பத் ஆனவனை -என்றுமாம் –
அன்னவனை யாதனூர் ஆண்டளக்கும் ஐயனை–
திரு வாதனூரிலே இப்படிப் பட்ட அழகை உடையனாய்-காலத்துக்கு நிர்வாஹகனாய்க் கொண்டு-நின்று அருளின சுவாமியை
நென்னலை இன்றினை நாளையை –
அக்காலம் தன்னை பூத பவிஷ்யத் வர்த்தமானமாகப் பரிச்சேதிக்க லாம்படி
அதுக்கு நிர்வாஹகனாய் நின்றவனை –
நீர்மலை மேல் மன்னு நான் மறை நான்கும் ஆனானைப்-
திரு நீர்மலையிலே வந்து சனிஹிதனாய்-நித்ய நிர் தோஷமான வேதங்களாலே பிரதிபாதிக்கப் பட்டு இருக்கிறவனை –
புல்லாணித் தென்னன் தமிழை வடமொழியை-
தென்னனதான திருப் புல்லாணியிலே
சம்ஸ்க்ருத ரூபமாயும் திராவிட ரூபமாயும் உள்ள வேதம் என்ன
வேத சாரமான திருவாய் மொழி -என்ன
இவற்றுக்கு நிர்வாஹகனாய்
இவற்றுக்கு பிரதிபாத்யனாய் யுள்ளவனை –
வடமொழி -என்று ஸ்ரீ ராமாயணத்துக்கு பிரதிபாத்யன் என்னவுமாம்
தென்னன் தமிழ் என்று அகஸ்த்யர் உடைய தமிழுக்கு பிரதிபாத்யன் -என்றுமாம் –
வடமொழியை நாங்கூரில் என்று மேலே கூட்டவுமாம் –
நாங்கூரில் மன்னு மணி மாடக் கோயில் மணாளனை-
திரு நாங்கூரில் திருமணி மாடக் கோயிலிலே விடாதே நின்று அருளி அடிமை கொண்டு அத்தாலே நாயகன் ஆனவனை –
நன்னீர்த் தலைச் சங்க நாண் மதியை –
நல்ல ஜல சம்ருத்தியையுடைத்தான தலைச் சங்காட்டிலே –
கடலிலே சந்தரன் உதித்தால் போலே பரி பூர்ணனாய்க் குளிர்ந்து நிற்கிறவனை –
நான் வணங்கும் கண்ணனைக் கண்ணபுரத் தானைத் –
கண்ணபுரம் ஒன்றுடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ -பெரிய திருமொழி -8-9-3-என்னும்படி
அனந்யார்ஹை யாக்கின வடிவைக் கொண்டு நின்று அருளினவனை –
தென்னறையூர்மன்னு மணிமாடக் கோயில் மணாளனைக் –
இவை எல்லா வற்றுக்கும் அடியாகத் திரு நறையூரிலேவந்து நின்று அருளின வடிவு அழகைக் காட்டி-என் கையிலே மடலைக் கொடுத்து-மணி மயமான கோயிலிலே நிரதிசய போக்யமான வடிவைக் காட்டி-என்னைத் தோற்பித்து
அத்தாலே -எனக்கு நிர்வாஹகனாய் நின்று அருளினவனை –
கன்னவில் தோள் காளையைக் –
ஓர் அபலையை வென்றோம் -என்று தோள் வலியைக் கொண்டாடி இருக்கிறான் -என்னுதல்-
அன்றியே
ஒரு ஸ்திரீயை மடல் எடுப்பித்துக் கொண்டோம் -என்று தன பருவத்தைக் கொண்டாடி இருக்கிறவனை -தோளையும் பருவத்தையும் கொண்டாடி இருக்கிறவனை –
கண்டு-
காண வேணும் என்னும் ஆசை கண்டு அல்லது நிற்க ஒட்டாது இ றே
என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் –என்று முதல் நோக்கிலே இ றே ஆசை கை வளர்ப்புண்டது -இன்னமும் இவ்வாசைக்கு ஈடாகக் கண்டு அல்லது மீளேன் –
ஆங்குக் கை தொழுது –
கண்ட விடத்தே அவர்க்குச் செய்யக் கடவது ஓன்று உண்டு -தம்மை யன்றோ வென்று தொழக் கடவேன் –
நம் கண்களால் கண்டு தலையில் வணங்கவு மாம் கொலோ -என்று உபாத்யாயன் அவன் இ றே
ஓதி நாமம் –பணிவோம் -பெரிய திருமொழி -9-3-9- என்ற இவ் வாழ்வார்
அடுத்த படியாக-அது அவனுடைய நெஞ்சுக்குத் தண்ணீர்த் துரும்பு போன்றது என்பதை
நமக்கே நலமாதலில் -பெரிய திருமொழி-9-3-9- என்று-ஏகாரத்தாலே உணர்த்தினார் –
தொழுது –என்னுமிது மிகையாதலின் -திருவாய் -9-3-9- என்றார் நம் ஆழ்வார்
கண்டு ஆங்கு கை தொழுது-மடல் எடுக்க துணிந்த நம் ஆழ்வாரும்
நம் கண்களால் கண்டு தலையில் வணங்கவும் ஆம் கொலோ தையலார் முன்பே -திருவாய் -5-3-7- என்று-பலர் முன்பே அவன் ஸ்வ ரூபத்தை அழிக்க ஆசைப் பட்டார்
பெருமாள் மேலே சீரிய பிராட்டியும்-தம் மமார்த்தே ஸூ கம் ப்ருச்ச சிரஸா சாபி வாதய-சுந்தர -39-55-என்றாள் –
என்னிலைமை எல்லாம் அறிவித்தால் –
என்னுடைய ஸ்த்ரீத்வத்தையும் குலைத்து மடலூருகை தவிரேன் என்கிற என்னுடைய துணிவை அறிவித்தால் –
உன்னைக் காண்பதோர் ஆசையினால் -1-9-1–என்று தாயே தந்தையே யில் ஆசைப் பட்ட படியும்
ஆகிலும் ஆசை விடாளால் -2-7-1–என்று பிறர் -தாயார் -சொல்லும்படி அவ்வாசை முடிய நடந்த படியும்
என் சிந்தனைக்கு இனியாய் -3-5-1- என்றும்
இனியையாம் படி புகுந்த உன்னைப் போகல ஒட்டேன் –3-5-6-என்றும்
கால் கட்டத் தாம் போய்த் திரு வாலியிலே தூது விட இருந்தபடியும் -3-6-
ஆயர் மாதர் கொங்கை புல்கு செண்டன்-4-8-3-என்று தம்முடைய பிரணயித்வத்தை அனுசந்தித்து சொல்ல வென்று
ஒருப்பட்டு மோகன்கதையாய்-கொல்லையானால் பரிசளிந்தாள்-4-8-4-என்று
பார்த்தன் பள்ளியிலே பரிசளிந்த படியும்
திரு இந்தளூரிலே அயலாரும் எச உம்மைக் காணும் ஆசை என்னும் கடலில் வீழ்ந்து -4-9-3-
அறிவித்த படியும்
வெருவாதாளிலே-5-5–
வாய் வெருவி வேங்கடமே வேங்கடமே என்றும்
அடியேனை வேண்டுதியோ வேண்டாயோ -என்றும்
தாதாடு வனமாலை தாரானோ -என்றும் வாய் வெருவிக்
கோயில் திரு வாசலலிலே முறை இட்ட படியும்
சினவில் செங்கணிலே-7-3-திரு நறையூரிலே கனாக் கண்ட படியும் –
தந்தை காலில் பெரு விலங்கிலே -7-5-திரு அழுந்தூரிலே
என் ஐம் புலனும் எழிலும் கொண்டு பொன்னம் கலைகள் மெலிவெய்திப் போன படியும்
தெள்ளியீர் தேவரிலே -8-2- கண்ணபுரம் என்று பேசி உருகி வாய் வெருவின படியும்
கரை எடுத்த -8-3- யிலே வளை இழந்த படியும்
தந்தை காலிலே -8-5- நெஞ்சு தாரின் ஆசையில் போகத் துணை யற்று
நாழிகை ஊழியில் பெரிதான படியும்
காவார் மடலிலே -9-4- திருப் புல்லாணியிலே பொய் சொல்லிப் போன படியும்
தவள இளம் பிறையிலே -9-5-தரை கிடந்த படியும்
மூவரில் முன் முதல்வனில் -9-9- திருமலையிலே கூட ஆசைப் பட்டுக் கிடையாமே
திருத் தாய் செம்போத்திலே -10-10-நிமித்தம் பார்த்து இருந்த படியும் -இப்போது மடல் எடுக்கைருக்கிற நிலையையும்-ஆக இந்த நிலைகள் எல்லா வற்றையும் சொல்லுகிறது -எம்பெருமான் —-
தன்னை அழிய மாறியும் பெற வேண்டும்படி யன்றோ அத்தலையில் வைலஷண்யம்
அவன் வரும் தனையும் பார்த்து இருக்கலாம் படியோ என் தசை -என்கிறாள் –
————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply