(ஸ்ரீ தாமோதர நாராயணப்பெருமாள் -பரத்வ ஸுவ்லப்யம் -வஸிஷ்டருக்காக சேவை
ஸ்ரவண தீர்த்தம் -கேட்டாலே பாவனத்வம் -தீர்த்தமாட வேண்டாம்
சில தரிசன தீர்த்தம் பார்த்தால்
உறங்கா புளி தோலாத வழக்கு காயாத பூ ஊறா கிணறு -நான்கும் சொல்வர் )
வங்க மா முந்நீர் -பிரவேசம் –
பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய் -என்று பாடின கவி தன்னை
நீரே மதிக்கும் படி கவி பாட வல்லீருமாய் இருந்தீர் –
தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி (திரு நெடும் தாண்டகம் )-என்கிறபடியே
எங்கும் புக்கு அனுபவிக்க வேணும் எண்ணம்
அபிநிவேசம் உண்டாய் இருந்தது –
இங்கு இருக்கும் நாள் தானே
வழு விலா யடிமை செய்ய வேண்டும் -என்று நீர்
மநோ ரதித்த படியே
கவி பாடி அடிமை செய்கின்றீர்-
பின்பு இத் தேக அவசானத்திலே அவ்வருகே கொடு போய்
அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்று நீர் பேசும் பேச்சு
தன்னையும் அங்கே கேட்கிறோம்-
ஆன பின்பு உமக்கு ஓர் இடத்திலும் ஒரு குறைகளும் இல்லை
நாம் உகந்த நிலங்கள் எங்கும் புக்கு கவி பாடும் -என்று
தான் திருக் கண்ணங்குடியில் நிற்கிற நிலையைக் காட்டிக் கொடுக்க
கண்டு-
வெள்ள நீர் வெள்ளத் தணைந்த வரவணை மேல் -என்கிறபடியே
நம்முடைய ரஷணத்திலே உத்யுக்தராய்க் கொண்டு
திருப் பாற் கடலிலே வந்து கண் வளர்ந்து அருளினவன் தானே
இங்கே
திருக் கண்ணங்குடியிலே வந்து சந்நிஹிதன் ஆனான் என்று
அங்கே கவி பாடி அனுபவித்து ஹ்ருஷ்டர் ஆகிறார் –
————————————————-
வங்க மா முந்நீர் வரி நிறப் பெரிய வாள் அரவின் அணை மேவிச்
சங்கமாரங்கைத் தடமலருந்திச் சாம மா மேனி என் தலைவன்
அங்கமாறைந்து வேள்வி நால் வேத மருங்கலை பயின்று எரி மூன்றும்
செங்கையால் வளர்க்கும் துளக்கமில் மனத்தோர் திருக் கண்ணங்குடியுள் நின்றானே —9-1-1-
சாம மா மேனிப்பெருமாள் -நீல மேக ஸ்யாமளன்
சிஷா இத்யாதி அங்கங்கள்
ஐந்து வேள்வி -பஞ்ச ப்ரஹ்ம தேவ பித்ரு மனுஷ பூத -ஐந்தும்
அரும் கலை -இதிஹாச புராணங்கள்
துளக்கமில் மனத்தோர்—அவனே ரக்ஷகன்-ப்ராப்யன் என்ற மஹா விஸ்வாஸம்
சங்கை இல்லா திரு உள்ளம் -இது வர அனுஷ்டானங்கள் கொண்டவர்
மனஸ்ஸூ சுத்தியும் அனுஷ்டானங்களும் -ஞானமும் -கற்க கசடு அறக் கற்று அதன் பின் அதன் படி நிற்பவர்கள் –
வங்க மா முந்நீர் –
மரக் கலங்களை உடைத்தான பெரிய கடலிலே –
கடலுக்கு சிறப்பாக இட்டுச் சொல்லக் கடவது இறே மரக் கலங்களை –
வரி நிறப் பெரிய வாள் அரவின் அணை மேவிச்
நாநா வான வரிகளையும்
அழகிய நிறத்தையும் உடையனாய் –
பிராட்டிமாருக்கும் தனக்கும் நினைத்த
பரிமாற்றங்களை எல்லாம்
பரிமாறுகைக்கு ஈடான பரப்பையும் உடையனாய்
மென்மை குளிர்ச்சி நாற்றம் தொடக்கமான வற்றையும் (வெண்மை பரப்பு )
உடையனான திரு வநந்த ஆழ்வான் மேல் படுக்கை வாய்ப்பாலே
பொருந்தி கண் வளர்ந்து அருளி –
சங்கமாரங்கைத் –
அழகிய திருக் கையிலே ஏந்தின
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை உடையனாய் –
தடமலருந்திச் –
ஜகத் காரண மான தாமரைப் பூவை
திரு நாபியிலே உடையனுமாய் –
சாம மா மேனி என் தலைவன் —
கண்டார் கண் குளிரும்படியாக ஸ்ரமஹரமான திரு மேனியை யுடைய என் சர்வாதிகன் –
அங்கமாறைந்து வேள்வி நால் வேத மருங்கலை பயின்று எரி மூன்றும் செங்கையால் வளர்க்கும் துளக்கமில் மனத்தோர்-
சீஷாதிகள்
பஞ்ச மகா யஞ்ஞம்
நாலு வகைப் பட்ட வேதம்
வேதார்த்தை விசதீகரிக்கக் கடவதான இதிஹாசாதிகள்
இவற்றிலே வாசனை உடையருமாய்
ஸ்த நந்த்ய பிரஜையை உணர்ந்து நோக்கும் தாயைப் போலே
அக்னி த்ரயத்தையும் ஆதானம் பண்ணி நோக்கும்
கையை உடையருமாய்
ஒரு கருமத்தை அனுஷ்டியா நின்றோம்
அது நமக்கு ரஷகம் அன்று
சர்வேஸ்வரனே ரஷகன் -என்று
இருக்கும் இருப்பில் குலைத்தலை உடைய நெஞ்சை
உடையார் அன்றிக்கே
இருப்பாருமானவர்கள் வர்த்திக்கிற –
திருக் கண்ணங்குடியுள் நின்றானே –
——————————————————-
ஸ்ரீ கஜேந்திர மோக்ஷ அனுபவம்
ஸூவ ரக்ஷணத்தில் இழிந்து பின்பு அன்றோ ஆதி மூலமே என்றது
கீழே துளக்கமில் மனத்தோரைப் பார்த்தோம் –
திருக் கையும் ஸ்ரீ பாஞ்ச சன்யமுமாய் பள்ளி கொண்டவன் அனுபவம் கீழ்-
ப்ராப்யத்திலே மட்டுமே புத்தி –
இதில் திருக் கையும் திரு ஆழியுமாக வந்து ரக்ஷித்து அருளியதை அனுபவிக்கிறார்
கவள மா கதத்த கரி உய்யப் பொய்கை காரம் கொளக் கலங்கி யுள் நினைந்து
துவள மேல் வந்து தோன்றி வன் முதலை துணி படச் சுடு படை துரந்தோன்
குவளை நீள் முளரிக் குமுத மொண் கழுநீர் கொய் மலர் நெய்தல் ஒண் கழனித்
திவளும் மாளிகை சூழ் செழு மணிப் புரிசைத் திரு கண்ணங்குடி யுள் நின்றானே —9-1-2-
கதத்த-சினத்த -மதம் பெருகும் –
முளரி–தாமரை
குமுதம் -ஆம்பல்
கவள மா கதத்த கரி உய்யப் பொய்கை காரம் கொளக் கலங்கி யுள் நினைந்து –
கவளம் கொண்டு இருப்பதாய்
மிக்க மதத்தை உடைத்தாய் இருக்கிற ஆனையானது
தன் செருக்காலே தன் நிலம் அல்லாத பொய்கையிலே புக்கு
தன் நிலம் ஆகையாலே நினைத்த படி வியாபாரிக்க வல்ல
முதலையின் வாயலிலே அகப்பட்டு –
காரம் -முதலை –
தன்னால் பரிஹரித்து கொள்ள ஒண்ணாமையாலே கலங்கி –
(பரமாபத ஆபன்ன ) மனஸா சிந்த யத்தரிம் – என்கிறபடியே நெஞ்சால் நினைக்க
துவள மேல் வந்து தோன்றி வன் முதலை துணி படச் சுடு படை துரந்தோன்-
ஆகாச அவகாசத்தை வெளி அடைத்துக் கொண்டு வந்து தோற்ற –
சாபத்தாலே திண்ணியதான நெஞ்சை உடைய முதலை
(பாகவதர் திருவடிகளையே பற்றி சாபம் போக்க வேண்டும் என்று உணர்ந்து திண்ணிய நெஞ்சை உடைய முதலை )
சின்னம் பின்னம் -என்கிறபடியே
துணி படும்படி பிரதி பஷத்தின் மேலே நெருப்பை உமிழா நின்றுள்ள
திரு ஆழியை ஏவினவன் –
குவளை நீள் முளரிக் குமுத மொண் கழுநீர் கொய் மலர் நெய்தல் ஒண் கழனித்
குவளை தாமரை ஆம்பல் செங்கழு நீர்
பறிக்கைக்கு யோக்யமான மலரை யுடைத்தான நெய்தல்
இவற்றாலே
தர்ச நீயமான வயலை உடைத்தாய் –
திவளும் மாளிகை சூழ் செழு மணிப் புரிசைத் –
ஒளி விடா நின்றுள்ள மாளிகைகள்
ரத்ன மயமான மதிள்கள்
இவற்றை உடைத்தான –
திரு கண்ணங்குடி யுள் நின்றானே –
—————————————————
ரக்ஷணத்துக்கு கூப்பிட்ட ஸ்ரீ கஜேந்திர ரக்ஷணம்
கீழே ரக்ஷணத்துக்கு கூப்பிடாத ஸமஸ்த லோகத்தையும் ரக்ஷித்தமை இதில்
ஒரு நீர்ப்புழுவால் வந்த ஆபத் ரக்ஷணம் கீழே
பிரளய ஆபத்தால் வந்த ஜகத்தையே ரஷித்த படியை அனுபவிக்கிறார் –
வாதை வந்து அடர வானமும் நிலனும் மலைகளும் அலை கடல் குளிப்ப
மீது கொண்டு உகளும் மீனுருவாகி விரி புனல் வரி யகட்டு ஒளித்தோன்
போதலர் புன்னை மல்லிகை மௌவல் புது விரை மது மலர் அணைந்து
சீத ஒண் தென்றல் திசை தொறும் கமழும் திருக் கண்ணங்குடியுள் நின்றானே —-9-1-3-
வாதை வந்து அடர வானமும் நிலனும் மலைகளும் அலை கடல் குளிப்ப
எங்கும் ஒக்க பிரளயமாய் நலிவானது மேலிட
ஆகாசமும்
பூமியும்
குல பர்வதங்களும்
கடலிலே புக்கு அகப்பட –
மீது கொண்டு உகளும் மீனுருவாகி விரி புனல் வரி யகட்டு ஒளித்தோன் –
இவற்றை அடைய தன் மேலே ஏறிட்டுக் கொண்டு
தரிக்க வற்றாய் –
பெரிய களிப்பை உடைய மத்ஸ்ய ரூபியாய்
பரந்த புனலை தன் செலுவிலெ-ஏக தேசத்திலே -அடக்கினவன் –
போதலர் புன்னை மல்லிகை மௌவல் புது விரை மது மலர் அணைந்து –
காலத்திலேயே அலருகிற
புன்னை
மல்லிகை
மௌவல்
இவற்றின் உடைய செவ்விப் பரிமளத்தையும்
தேனையும் உடைத்தான
மலரிலே புக்கு –
சீத ஒண் தென்றல் திசை தொறும் கமழும்
அதன் வெக்காயம் தன் மேல் படாதபடி போந்து -குளிர்ச்சியை உடைத்தாய்
மந்தரமாக சஞ்சரிக்கிற தென்றல் ஆனது
(மந்த மாருதம் -மந்த்ரம் மலை போல் என்றுமாம் )
திக்குகள் தோறும் கமழா நின்றுள்ள
திருக் கண்ணங்குடி யுள் நின்றானே –
————————————
ஒரு பிரளய ஆபத்து ரக்ஷணம் கீழே
அவ்வளவேயோ
அடி பட்டு உரு மாய்ந்த -ஹிரண்யனால் ஒளிக்கப் பட்ட பூமியை
உத்தாரணம் பண்ணியும்
பாரத்தை இறக்கியும்
ரஷித்தவன் என்று அனுபவிக்கிறார் –
(கீழ்க் குலம் புக்க வராஹ கோபாலர் போல் சேர்த்து அனுபவம் -பூமியும் வம்சமும் உத்தரிக்க
கோபாலன் -பூமி பாரம் தீர்த்த ஆபத்தான அனுபவம்
தேர் பாகன் -அர்ஜுனனுக்கு -மட்டுமே இருந்தாலும் இங்கு பஞ்ச பாகன் என்கிறார்
சரீரம் வாழ்க்கையே தேர் என்றுமாம் -மாயப் போர் தேர்ப்பாகன் )
வென்றி சேர் திண்மை விலங்கல் மா மேனி வெள் எயிற்று ஒள் எரித் தறு கண்
பன்றியாய் அன்று பார்மகள் பயலைத் தீர்த்தவன் பஞ்சவர் பாகன்
ஒன்றலா வுருவத் துலபபில் பல் காலத் துயர் கொடி யொளி வளர் மதியம்
சென்று சேர் சென்னிச் சிகர நன் மாடத் திருக் கண்ணங்குடியுள் நின்றானே—9-1-4-
வென்றி சேர் திண்மை விலங்கல் மா மேனி வெள் எயிற்று ஒள் எரித் தறு கண் –
வெற்றியை உடைத்தாய்
திண்ணியதாய்
மலை போலே பெரிய வடிவையும்
வெளுத்த எயிற்றையும் உடைத்தாய்
அக்னி கல்பமாய் ஜாதி உசிதமான வட்டணித்த கண்ணை உடைத்தான –
(நீல வரை இரண்டு பிறை கவ்வி -கோல வராஹம் )
பன்றியாய் அன்று பார்மகள் பயலைத் தீர்த்தவன் பஞ்சவர் பாகன் –
வராஹமாய்
பூமியை பிரளயம் கொண்டது என்று அத்தை எடுத்து
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு வந்த வை வர்ண்யத்தைப் போக்கினவன் –
பாண்டவர்களுக்கு சாரதி யானவன் –
ஒன்றலா வுருவத் துலபபில் பல் காலத் துயர் கொடி யொளி வளர் மதியம் –
நாநா வான வடிவை உடைத்தாய்
முடிவின்றிக்கே அநேக காலம் செல்லுவதாய்
உயர்ந்து இருந்துள்ள கொடிகள் ஆனவை
சந்தர மண்டலத்து அளவிலே –
சென்று சேர் சென்னிச் சிகர நன் மாடத் –
சென்று சேரும்படி
ஓங்கின சிகரங்களை உடைத்தாய்
அழகிய மாடங்களை உடைய
திருக் கண்ணங்குடி யுள் நின்றானே –
—————————————-
பூ பாரம் இறக்கிய மாத்திரம் அன்றிக்கே
அந்ய சேஷமாய் போன லோகங்களை அடிக்கீழ் கொண்ட வாமன திருவிக்ரமன் அனுபவம் இதில் –
மன்னவன் பெரிய வேள்வியில் குறளாய் மூவடி நீரொடும் கொண்டு
பின்னும் ஏழு உலகம் ஈரடியாகப் பெரும் திசை யடங்கிட நிமிர்ந்தோன்
அன்ன மென் கமலத் தணி மலர்ப் பீடத் தலை புனலிலைக் குடை நீழல்
செந்நெல் ஒண் கவரி யசைய வீற்று இருக்கும் திருக் கண்ணங்குடி யுள் நின்றானே —9-1-5-
மன்னவன் பெரிய வேள்வியில் குறளாய் மூவடி நீரொடும் கொண்டு
மகா பலி உடைய
அர்த்தித்தார் அர்த்தித்து எல்லாம் கொடுக்கிற யாகத்திலே
வாமன வேஷத்தை பரிஹரித்துக் கொண்டு போய் புக்கு
அவன் வார்த்த நீரோடு
மூன்றடியும் கொண்டு ஸ்வீகரித்து
(த்ரய சம்ப்ரதாயம் ஆகவே இங்கும் மூன்றடி
மாவலி மூவடி மண்தா -இதுவும் த்ரயம்
கோட்டங்கை வாமனனாய் செய்த கூத்துக்கள்
மான் தோல் போட்டு மூடி -அந்தப்புரத்திரை -கடாக்ஷம் லேசம் இருந்தால் கார்யகரம் ஆகாதே )
பின்னும் ஏழு உலகம் ஈரடியாகப் பெரும் திசை யடங்கிட நிமிர்ந்தோன் –
அநந்தரம்
பூமிப் பரப்பை அடைய
இரண்டடியாலே அளப்பதாக
பரந்த திக்குகள் அடங்கலும்
திருவடிகளுக்கு உள்ளே அடங்கும் படி வளர்ந்தவன் –
அன்ன மென் கமலத் தணி மலர்ப் பீடத் தலை புனலிலைக் குடை நீழல்
அன்னமானது தன் கால் பொருக்கும் படி
மிருதுவான கமலத்தில் உண்டான அழகிய பீடத்தில்
அலைகிற புனலிலே உண்டான இலை யாகிற
குடை நிழல் கீழே
செந்நெல் ஒண் கவரி யசைய வீற்று இருக்கும் திருக் கண்ணங்குடியுள் நின்றானே –
செந்நெல் யானது சாமரம் வீச
ஐஸ்வர்யத்தால் உண்டான வ்யாவர்த்தி அடைய தோற்றும்படி இரா நின்றதாயிற்று –
(சீரார் செந்நெல் கவரி வீசும் திருக்குடந்தை போல் இங்கும்
நாத யாமுனர் போல்வார் -அன்னம் -நாயனார் இப்பாடல் போன்றவற்றை திரு உள்ளம் கொண்டே சாதித்து அருளுகிறார் )
—————————————————-
(பஞ்ச கிருஷ்ண ஷேத்ரங்கள்
கீர்த்தி வீர நாராயண -பஞ்ச நாராயண ஷேத்ரங்கள் -மேல்கோட்டை அருகில்
பஞ்ச நரசிம்ம ஷேத்ரங்கள் திருவாலி
பஞ்ச கமல க்ஷேத்ரம் -திருக்கண்டியூர்
பஞ்ச சார க்ஷேத்ரம் -திருச்சேறை
திருக் கண்ணங்குடியுள் நின்றானே-திருக்கண்ணங்குடிக்கு இரண்டு அடிகளும் –
நின்ற தாமோதர நாராயணனுக்கு இரண்டு அடிகளில் விசேஷணங்கள் அமைத்து நான்கு அடிகள் )
(ஆழியூர் -அருகில் உள்ள திவ்ய தேசம்
தஸ்மிந் த்ருஷ்டே பர அவர – அறிவோம் -தத்வ டீகை -பரர்களாய் இருப்பவர்களையும் இவனைப் பார்த்து அவரம்
பரத்வத்துக்கும் அவரத்துக்கும் ஸீமா பூமி இவனே
தாமோதர நாராயணன் அன்றோ
நீள மேக ஸ்யாமளன் -சாம மா மேனி என் தலைவன்-
பக்தியால் வாங்கவும் பெருவானே
தாமத்தால் கட்ட வில்லை ப்ரேமத்தால் தான் –
யானைக்கும் இவனுக்கும் சாம்யம்
வசிஷ்டர் பரம கிருஷ்ண பக்தர் -முன் கலியுக -முக்காலம் உணர்ந்தவர் –
வெண்ணெயாலே விக்ரகம் -பக்தியால் உருகாமல் இருக்க தியானிக்க
கோபால பிள்ளை வந்து -கண்ணன் கண்ணனை உண்ண
பின்னால் துரத்தி வர
இங்கு -கர்ப்ப க்ரஹம் -வந்து –
மகிழ மரம் அடியில் ரிஷிகள் தவம் -போக ஒட்டாமல் திருவடிகளைப் பற்ற
இங்கேயே சேவிக்க வரம் கேட்டுப் பெற்றார்கள்
வசிஷ்டருக்கு தாமோதரன் -ரிஷிகளுக்கு நாராயணன்
லோக நாத பெருமாள்
நீல மேக வண்ணன்
லோக நாயகித் தாயார் தாயார்
தாமோதர நாராயணன்
அரவிந்த நாயகி தாயார்
ஸ்ரவண புஷ்காரனி
மகிழ மரம் தல வ்ருக்ஷம்
பஞ்ச நாராயண ஷேத்ரங்கள் இங்கும் அருகில்
ஆனந்த நாராயணர்
வரத நாராயணர்
தேவ நாராயணர்
யாதவ நாராயணர் -ஆக இந்த ஐந்தும்
புத்த விக்ரஹம் இங்கே -வைத்த வ்ருத்தாந்தம் –
உறங்கா புளி -தோலா வழக்கு – ஊறா கிணறு -காயா மகிழ் –
மள்ளூரிலும் அப்ரமேய ஸ்வாமியும் தவழ்ந்த கண்ணனும் சேவை )
(குண லேசம் உள்ள மாவலையைத் தலை அறுக்க மாட்டாமல்
தன்னையே இரப்பாளானாக்கி -தன் திருவடிக்கீழ் இட்டு
லோக ரக்ஷணம் பண்ணி அருளியதை கீழே
அப்படி குண லேசமும் தேடிக் காணாதே
துர்மானிகளாய் -அதிலும் தோற்றாரை -குண லேசம் காணாமல்
அழித்து ரக்ஷணம் செய்ததை இதில் )
மழுவினால் அவனி யரசை மூவெழு கால் மணி முடி பொடிபடுத்துதிர
குழுவு வார் புனலுள் குளித்து வெங்கோபம் தவிர்ந்தவன் குலை மலி கதலி
குழுவும் வார் கமுகும் குரவு நற்பலமும் குளிர் தரு சூத மாதவியும்
செழுமையார் பொழில்கள் தழுவு நன் மாடத் திருக் கண்ணங்குடியுள் நின்றானே–9-1-6-
உதிர குழுவு-ரத்த ஸமூஹம்
சூதம் -மாம் பழம்
மாதவியும்-குருக்கத்திப்பூ
மழுவினால் அவனி யரசை மூவெழு கால் மணி முடி பொடிபடுத்துதிர
மழுவைக் கொண்டு பூமியில்
ராஜாக்களை இருபத்தொரு படி கால் அறுத்து
குழுவு வார் புனலுள் குளித்து வெங்கோபம் தவிர்ந்தவன்
அவர்கள் உடைய ருதிர வெள்ளத்திலே குளித்து
உதகக் கிரியையும் பண்ணி
மிக்க கோபம் தவிர்ந்தவன் –
குலை மலி கதலி குழுவும் வார் கமுகும் குரவு நற்பலமும் குளிர் தரு சூத மாதவியும்
குலை மிக்க வாழைத் தோப்பும்
திரண்டு உயர்ந்த கமுகும்
குரவும்
நன்றான பலவும்
குளிர்ந்த நிழலைத் தரும் மாவும்
குருக்கத்தியும்
செழுமையார் பொழில்கள் தழுவு நன் மாடத் –
அழகு மிக்கு இருந்துள்ள பொழில்கள்
சூழ்ந்து இருப்பதாய்
அழகிய மாடங்களை உடைத்தான திருக் கண்ணங்குடியுள் நின்றானே –
———————————————–
ஆஸூர ப்ரக்ருதி நிரஸனம் கீழே
அவ்வளவும் அன்றியே
கை விஞ்சி பெரு மிடிக்கனாய் இருந்த ராக்ஷஸ நிரஸனம் இதில் –
வானுளாரவரை வலிமையால் நலியும் மறி கடல் இலங்கையார் கோனைப்
பானுநேர் சரத்தால் பனங்கனி போலப் பரு முடியுதிர வில் வளைத்தோன்
கானுலா மயிலின் கணங்கள் நின்றாடக் கண முகில் முரச நின்றதிரத்
தேனுலா வரி வண்டின் இன்னிசை முரலும் திருக் கண்ணங்குடியுள் நின்றானே—9-1-7-
வானுளாரவரை வலிமையால் நலியும் மறி கடல் இலங்கையார் கோனைப் –
தன் மிடுக்காலே காவலாக வைத்த
இந்த்ராதிகளையும் நலியா நிற்பானாய்
திரைக் கிளப்பத்தை உடைத்தான கடலை
அகழாக உடைத்தான
இலங்கைக்கு நிர்வாஹகனாய் இருக்கிற
ராவணனை –
பானுநேர் சரத்தால் பனங்கனி போலப் பரு முடியுதிர வில் வளைத்தோன்-
ஆதித்ய கிரணம் போலே கூரிய அம்புகளாலே
வர பலத்தாலே பூண் கட்டின முடிகள் ஆனவை
பனம் பழம் போலே உதிரும்படி
வில்லை வளைத்தவன் –
கானுலா மயிலின் கணங்கள் நின்றாடக் கண முகில் முரச நின்றதிரத்
காட்டிலே திரியக் கடவதான மயிலினங்கள் உடைய
திரள்கள் ஆனவை ஆட
திரண்ட மேகங்கள் வாத்தியம் போலே த்வனிக்க
தேனுலா வரி வண்டின் இன்னிசை முரலும் திருக் கண்ணங்குடியுள் நின்றானே-
மதுபான மத்தமான வண்டுகள்
இனிய இசை பாடா நின்றுள்ள
ராவணன் உடன் பொருத ஸ்ரமம் ஆறும் படி
ஆடல் பாடல் கேட்டுப் போது போக்கி இருக்கலான
தேசம் ஆயிற்று –
—————————————–
(வானுளார் அவரை நலிந்தது கீழே
இதிலும் பரம ஆகாச ஸ்ரீ வைகுண்ட நாதனான பராத்பரனான அவனையும் வஞ்சிக்க
நினைத்த மூடாத்மா -துஸ் ஸபா மதியத்தில்
அவ் வஞ்சனைக்கு அகப்படாதே வளர்ந்த கிருஷ்ண அவதார -பாண்ட தூத -அனுபவம் இதில்
நிமிர்ந்த -ஊரகம் பாடகம் அருகில் தானே -ஐந்தாம் எட்டாம் பாசுரம் –
உலகம் ஈரடியாகப் பெரும் திசை யடங்கிட நிமிர்ந்தோன்-9-1-5-
பெரிய மா மேனி அண்டமூடுருவப் பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்-9-1-8-
25- அடி உயரமாக இருந்த திருக்கோலம் -திருப்பாடகம் )
அரவு நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சிடாதே இட வதற்குப்
பெரிய மா மேனி அண்டமூடுருவப் பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்
வரையின் மா மணியும் மரகதத் திரளும் வயிரமும் வெதிருதிர் முத்தும்
திரை கொணர்ந்துந்தி வயல் தொறும் குவிக்கும் திருக் கண்ணங்குடி யுள் நின்றானே —9-1-8-
அரவு நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சிடாதே இட வதற்குப்
சர்ப்பத் த்வஜன்-என்னக் கடவது இறே துரியோதனனை –
(த்வஜத்தில் மட்டும் இல்லாமல் உள்ளத்திலும் சர்ப்ப – குணம் உள்ள துராத்மா
அர்ஜுனன் ஆஞ்சேனையரைக் கொடியில் கொண்டவன் )
அவன் தன ஓலகத்தினுள்ளே ஆசனத்தை
ஜகத்துக்கு வேர் பற்றானவனை அளிக்கப் புகா நின்றோம்
என்று கூசாதே இட்டு
பெரிய மா மேனி அண்டமூடுருவப் பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்
அதுவே ஹேதுவாக
பெரிய வடிவானது அண்ட அவகாசத்தை ஊடுருவ
திக்குகள் தன பக்கலிலே அடங்கும்படியாக வளர்ந்தவன் –
வரையின் மா மணியும் மரகதத் திரளும் வயிரமும் வெதிருதிர் முத்தும்
சஹ்ய பர்வதத்தில் இருக்கிற ரத்னங்கள்
மரகத திரள்
வயிரம் என்கிற ரத்ன விசேஷங்கள்
மூங்கில் உதிர்த்த முத்துக்கள் -இவற்றை –
திரை கொணர்ந்துந்தி வயல் தொறும் குவிக்கும் திருக் கண்ணங்குடியுள் நின்றானே
திரைகள் ஆனவை
தன்னில் அடங்காமையாலே கொடு வந்து தள்ளி
வயிலிலே குவியா நிற்கும் –
——————————————————-
தூது போகையில் உண்டான ஆச்சார்யம்
அதுக்கும் இசையாதவரை
தேர்க்காலாலே அழித்த ஆச்சார்ய சேஷ்டித அனுபவம் இதில் –
பன்னிய பாரம் பார் மகட்கு ஒழிய பாரத மா பெரும் போரிலே
மன்னர்கள் மடிய மணி நெடும் திண் தேர் மைத்துனர்க்கு உய்த்த மா மாயன்
துன்னு மாதவியும் சுர புனைப் பொழிலும் சூழ்ந்தெழு செண்பக மலர்வாய்
தென்ன வென்றளிகள் முரன்றிசை பாடும் திருக் கண்ணங்குடியுள் நின்றானே —9-1-9-
பன்னிய பாரம் பார் மகட்கு ஒழிய பாரத மா பெரும் போரிலே
எல்லாம் பொறுக்கத் தக்க பூமி தானே
என்னால் பொறுக்கப் போகாது என்று கூப்பிடும்படி
விஞ்சின பாரமானது
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு வாராத படி
மகா பாரதத்திலே
மன்னர்கள் மடிய மணி நெடும் திண் தேர் மைத்துனர்க்கு உய்த்த மா மாயன் –
ராஜாக்கள் ஆனவர்கள் மடியும் படியாக
அர்ஜுனன் முன்னே நின்று தேரை நடத்தினவன் –
மா மாயன்
ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை உடையவன் –
துன்னு மாதவியும் சுர புனைப் பொழிலும் சூழ்ந்தெழு செண்பக மலர்வாய்
நெருங்கின மாதவியும்
சுர புன்னை பொழிலும்
சுற்றிலே ஓங்கின செண்பங்களையும் உடைத்தாய் –
தென்ன வென்றளிகள் முரன்றிசை பாடும் –
அவற்றிலே படிந்த வண்டுகள் ஆனவை
முரன்று இசை பாடா நின்றுள்ள
திருக் கண்ணங்குடியுள் நின்றானே –
(செண்பகங்களில் வண்டுகள் படிந்தால் உயிர் இழக்கும் என்பர் கவிகள்
இங்கு தேனைக் குடித்து தென்னா தென்னா என்கிறது
திவ்ய தேசத்தில் பிரதிகூலர் இல்லையே
வானரங்கள் பூஞ்சுனை புக்கு -திவ்ய தேசம் முயலை இருக்காதே -போல் இங்கும் )
—————————————————–
கலை யுலா வல்குல் காரிகை திறத்துக் கடல் பெரும் படையொடும் சென்று
சிலையினால் இலங்கை தீ எழச் செற்ற திருக் கண்ணங்குடியுள் நின்றானை
மலை குலா மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
உலவு சொல் மாலை யொன்பதொடு ஒன்றும் வல்லவர்க்கு இல்லை நல்குரவே –9-1-10-
கடல் பெரும் படை-சமுத்திரத்தை விட பெரிய சேனை
மான வேல்-அபிமான ஜனகமான திவ்ய ஆயுதம்
உலவு சொல்-நிறைந்த ஸூ க்திகள்
இல்லை நல்குரவே- -பெருமாளை பிரிந்து இருக்கும் தாரித்ர்யம் வாராது
கலை யுலா வல்குல் காரிகை திறத்துக் கடல் பெரும் படையொடும் சென்று
பிராட்டி உடைய பரியட்டப் பண்பிலே தோற்று
பெரிய படை வெள்ளத்தோடு
முதலிகளோடு சென்று
சிலையினால் இலங்கை தீ எழச் செற்ற –
ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கும் அழியாத ஊரை
வில்லாலே அக்னி கிளரும்படியாக செற்ற
திருக் கண்ணங்குடி யுள் நின்றானை –
மலை குலா மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
மலை போலே இருந்துள்ள மாடங்களை உடைத்தான
திரு மங்கையில் உள்ளாருக்கு ப்ரதானர் ஆனவர்
பிடித்தார்க்கு தன் அபிமானத்தை பிறப்பித்தான வேலை உடைய ஆழ்வார்
ஒலியை உடைத்தாக அருளிச் செய்தவையாய்
உலவு சொல் மாலை யொன்பதொடு ஒன்றும் வல்லவர்க்கு இல்லை நல்குரவே
லஷணங்களில் குறை அற்று இருந்துள்ள
இப் பத்தையும் அப்யசிக்க வல்லார்க்களுக்கு
பகவத் தாரித்ர்யம் இல்லை –
என்கிறார் –
—
ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.
வங்கக் கடல் துயின்று இங்குப் பிறந்து தொண்டர் தாம்
பொங்காத் துயர் அகற்றி ஏதலரை மங்குவித்து
கண்ணங்குடியுள் நின்றான் புகலாய் என்னு நீலன்
பொன்னடியே நம் தமக்குப் பொன்-81-
பொங்க -நன்றாக வாழும்படி-
————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply