ஆழி எழ -திருவாய் மொழியில் அவதாரங்கள் அனுபவம்
அங்கு தனக்குக் காட்டிய அடைவில்
இங்கு மத்ஸ்ய அவதாரம் தொடங்கி க்ரமமாக அனுபவிக்கிறார்
தொண்டீர் உய்யும் வகை அறிந்தேன் -ப்ராபகம் -என்று உபதேசம் அநிஷ்டம் நிவ்ருத்தி பூர்வகமாக
கீழே அதுவே ப்ராப்யம் -மலி புகழ் கண்ணபுரம் என்று அனுசந்தித்தார்
அவ்வளவும் இல்லாமல் அவன் தானே உம்மைப் பெற வேணும் என்று திரியா நின்றான்
நீர் அவன் படிகளை இத்தேசத்தில் கண்டேன் என்று ஞானம் ஏற்பட இதுவே சாதனம் என்று அனுசந்திக்கிறார் –
என்று சங்கதி –
அநிஷ்ட நிவாரகத்வமும் அறிந்து
ப்ராப்யமும் அறிந்து
ஞான சாதனமும் அறிந்து
அவன் படிகளைக் காணீர் என்று உபதேசித்து அருளுகிறார் –
வானோர் பிரவேசம் –
திருக் கண்ண புரம் பிராப்யம் என்றார் கீழ் –
நமக்கு பிராப்யம் என்னும் அளவேயோ
அவன் அநாதி காலம் எதிர் சூழல் புக்கு
தட்டித் திரிய
நாம் அத்தை அறியாதே இருந்து
திரிந்த நாளிலே
இழவு எல்லாம் தீரும்படியான தேசம் அன்றோ –
என்கிறார் –
————————————————–
வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலி யுருவில்
மீனாய் வந்து வியந்துய்யக் கொண்ட தண் தாமரைக் கண்ணன்
ஆனா வுருவிலானா யவனை யம்மா விளை வயலுள்
கானார் புறவில் கண்ண புரத்தடியேன் கண்டு கொண்டேனே —8-8-1-
முது முந்நீர் -பழைய சாஹரம் -ஆற்று நீர் வேற்று நீர் ஊற்று நீர்
வளர்ந்த காலம் -பிரளய காலத்தில்
வலி யுருவில்-மிடுக்கான உருவில்
வியந்து -வேறுபட்ட -ஆச்சர்யப்படும் படி -காவலுக்கு வைத்த கடலே அழிக்கும் காலம் அன்றோ
உய்யக் கொண்ட -ஜகாத் ரக்ஷணம் பண்ணி அருளும்
ஆனா வுருவில் -அழியாத உருவில் –
ஆனாயவனை -இடையன் உருவில்
வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலி யுருவில் மீனாய் வந்து –
தேவர்கள் எல்லை அளவும் செல்லக் கடல் வெள்ளம்
பரந்த நாள்
அத்தை அடைய தன்னுடைய ஒரு செலுவிலே அடக்க வல்ல
மிடுக்கை உடைய மத்ஸ்யமாய் வந்து –
வியந்துய்யக் கொண்ட –
நாம் ரஷகமாக விட்ட கடல் தானே பாதகம் ஆவதே
இருந்த படி என் விஸ்மயப்பட்டு -என்னுதல் –
அன்றிக்கே
வேறுபட்டு ஜகத் காரண பூதனான தான்
ப்ரஹ்மாதி அளவிலே தன்னை அமைய விட்டால்
தான் நின்ற நிலைக்கு இது சேராதாய் இருக்கும் இறே –
(இணைவனாம் -ஸஜாதீயனாக -ஸூலபனாய்
சர்வ பிரகாரியாய் சர்வ சரீரீயாய் இருந்தும் எந்நின்ற யோனியுமாய் பிறந்து )
அங்கனும் அன்றிக்கே –
விஜா தீயமான வடிவை உடையவன் ஆகையாலே
வந்த நெடு வாசியைச் சொல்லிற்று ஆகவுமாம் –
தண் தாமரைக்கண்ணன் –
மத்ஸ்ய கமல லோசன -என்னக் கடவது இறே –
ஆனா வுருவிலானா யவனை யம்மா விளை வயலுள் –
சதா ஏக ரூபமான வடிவை
இதர சஜாதீயமாக்கிக் கொண்டு வந்து அவதரித்தவன் –
(சதைக ரூப ரூபாயா -ஸ்வரூபமும் உருவமும் மாறாதவை அன்று )
ஆனாத வுரு -கெடாத வுரு என்றபடி –
அழகியதாய்
பரந்து இருந்துள்ள வயலை உடைத்தாய் –
கானார் புறவில் கண்ண புரத்து
கானார்ந்து இருந்துள்ள பர்யந்தத்தை உடைத்தான
திருக் கண்ண புரத்திலே –
ஒரு புறம் காடாய் இருக்குமா போலே காணும் –
(கீழே-8-7-10- ஒரு புறம் கடலாய் இருக்குமா போலே காணும் என்று பார்த்தோம் )
அடியேன் கண்டு கொண்டேனே –
சேஷ பூதனான நான் காணப் பெற்றேன் –
(மத்ஸ்ய மூர்த்தி என்ன ஞானத்துக்கு சாதனமாக இத்திவ்ய தேசம் என்றதாயிற்று
வேத பிரதானம் )
—————————————————–
ஜகத் ரக்ஷணம் ஸ்ரீ கூர்மாவதாரம்
எதிர் சூழல் புக்கு -ஞானம் பிரதானத்துக்கு கீழே –
வேதம் பிரதானம் பண்ணி அருளிய மத்ஸ்ய அவதாரம் -அறிந்த படி
சகல பாரங்களை -ரஷா பாரம் -தாங்கி அருளிய அவதாரம் அறிந்த படி –
நமது ரக்ஷண பரம் ஸகல பாரங்களிலும் மேலானவை அன்றோ –
கடல் கடைந்து அமுதம் கொண்ட அன்று மந்த்ரம் மலை அழுந்தாமல் ரக்ஷித்து அருளிய அவதாரம்
மலங்கு விலங்கு நெடு வெள்ளம் மறுக அங்கோர் வரை நட்டு
இலங்கு சோதி யாரமுதம் எய்தும் அளவோர் ஆமையாய்
விலங்கல் திரியத் தடங்கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை
கலங்கல் முந்நீர்க் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே–8-8-2-
விலங்கல்-மந்த்ர பர்வதம் –
இலங்கு சோதி -பிரகாசிக்கும் -போகும் பிராணனையும் தக்க வைக்கும் ஜோதி உண்டே –
எய்தும் அளவும் -அமுதம் கிளர்ந்து வரும் வரை –
வித்தகனை-ஆச்சர்ய பூதனை –
கலங்கல் முந்நீர்-அமுதம் கிடைத்த திருப்பாற் கடலையும் -இங்குள்ள கடலையும் சொன்னவாறு –
ஆராவமுதம் இங்கே கிடைக்கப் பெற்றதே
மலங்கு விலங்கு நெடு வெள்ளம் மறுக அங்கோர் வரை நட்டு –
ஜல ப்ராசுர்யம் உள்ள இடத்திலே போலே காணும்
மலங்குகள் தான் வர்த்திப்பது –
உள்ளுக் கிடந்த பதார்த்தங்கள் அடங்கலும் அங்கே இங்கே தடுமாறும் படி கடல் குழம்ப
அங்கு ஆழத்துக்கு அவதி இல்லாத இடத்தில் மலையை கொடு புக்கு நிறுத்தி –
இலங்கு சோதி யாரமுதம் எய்தும் அளவோர் ஆமையாய்
போன பிராணங்களை மீட்க்கைக்கு ஈடான
தேஜஸ்சை உடைத்தான அம்ருதமானது தோற்றும் அளவும்
நீருக்கு இறாயாதாய வடிவை உடைய
ஆமையாய்-
விலங்கல் திரியத் தடங்கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை –
மலை திரிந்து வரும்படியாக பரப்பை உடைத்தான கடலிலே
அதுக்கு தாரக பூதனாய்க் கொண்டு
கிடந்த விஸ்மய நீயனை –
கலங்கல் முந்நீர்க் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே
கடல் ஒரு புறமாய் இருக்கும் போலே –
—————————————–
ஸ்ரீ வராஹ நாயனார் திரு அவதார அனுபவம் இதில்
பாரங்களை சுமக்கும் படியே அன்றிக்கே
சம்சார பிரளயத்தில் இருந்து எடுத்து அருளும் -ஏனத்துருவாய் கிடந்த
ஞானப்பிரானே நான் கண்ட நல்லதுவே –
கோல வராஹம் ஒன்றாய் கோட்டிடைக் கொண்ட அம்மான்
ஞான வேத பிரதானம் -பாரங்கள் சுமந்து -மட்டும் இல்லாத இதன் ஏற்றம்
பாராரளவும் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பில்
ஏரார் உருவத் தேனமாய் எடுத்த வாற்றல் அம்மானை
கூரார் ஆரல் இரை கருதிக் குருகு பாயக் கயல் இரியும்
காரார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-3-
பாராரளவும் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பில்-
பூமிப் பரப்பு அடைய
கடல் கொண்ட காலத்து
வளைந்த கொம்பை கொண்ட ஏனமாய் –
ஏரார் உருவத் தேனமாய் –
ஆயிரம் பண்ணை பிரளயம் கொண்டால் ஆகாதோ
இப்படி அழகு நிறைந்த வராஹ விக்ரஹத்தை
ஒரு கால் காணலாம் ஆகில் –
எடுத்த வாற்றல் அம்மானை-
அண்ட பித்தியிலே சென்று சேர்ந்த பூமியை
இடந்து எடுத்துக் கொண்டு ஏறுகைக்கு ஈடான
வலியை உடைய சர்வேஸ்வரனை –
கூரார் ஆரல் இரை கருதிக் குருகு பாயக் கயல் இரியும்-
கூறிய வாய் அகலை உடைத்தான குருகானது
ஆரலை ஆமிஷம் என்று புத்தி பண்ணிப் பாய
கயல்கள் ஆனவை இரியா நிற்கும் –
காரார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே-
மேகங்களின் உடைய
திருக் கண்ண புரத்திலே –
————————————————
சம்சார ப்ரளயத்தில்தம்மை எடுத்து அருளிய அளவு அன்றிக்கே –
சம்சார பீஜமான அஹங்காராதிகளை ஒழித்து பிறவிச் சூழலில் இருந்து மீட்டு அருள
ஹிரண்ய கசிபு தானே அகங்கார மமகார உருவம்
நகாக்ரத்தாலே போக்கி அருளிய ஸ்ரீ நரஸிம்ஹ அவதார அனுபவம் –
பாலும் சக்கரையும் சேர்ந்தால் போலே அழகியான் தானே அரி யுருவம் தானே –
உளைந்த வரியும் மானிடமும் உடனேத் தோற்ற ஒன்றுவித்து
விளைந்த சீற்றம் விண் வெதும்ப வேற்றொன் அகலம் வெஞ்சமத்து
பிளந்து வளைந்த வுகிரானைப் பெரும் தண் செந்நெல் குலை தடிந்து
களம் செய் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-4-
உளைந்த-உளையப் பண்ணின
அகலம் பிளந்து வளைந்த வுகிரானை –மார்பைப் பிளந்ததால் திரு உகிர் வளைந்ததா –
திரு உகிர் வளைந்து இருந்ததால் பிளந்தானா என்ன ஒண்ணாத படி
உளைந்த வரியும் மானிடமும் உடனேத் தோற்ற ஒன்றுவித்து
தன்னுடைய தோற்றரவிலே
சத்ரு பஷமானது குலைந்து ஓடும்படி இருக்கிற சிம்ஹமும்
உளை மயிருமாய்
மனுஷ்ய வேஷமும்
சேராத வடிவு இரண்டும் சேர்ந்து தோன்ற –
விளைந்த சீற்றம் விண் வெதும்ப –
அப்போது பிறந்த சீற்றத்தைக் கண்டு
ரஷ்ய கோடியிலே அந்வயித்த தேவ லோகம்
எவ்வளவாய்த் தலைக் காட்டுகிறதோ -என்று அஞ்ச –
வேற்றொன் அகலம் வெஞ்சமத்து -பிளந்து வளைந்த வுகிரானைப்-
வேற்றொன் உண்டு -சத்ருவான ஹிரண்யன்
அவனுடைய மார்வை யுத்தத்திலே பிளந்து வளைந்த
திரு வுகிரை உடையவனை –
பெரும் தண் செந்நெல் குலை தடிந்து களம் செய் புறவில் –
பெருத்து அழகியதாய் இருந்துள்ள
செந்நெல் குலைகளை
வயிரத்தை வெட்டுமா போலே வெட்டி
பரிமாற்றம் மாறாத பர்ய்யந்தத்தை உடைத்தான –
கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –
————————
தம்முடைய விரோதியை நகாக்கரத்தாலே போக்கி அருளின
அளவு அன்றிக்கே
திருவடிக்கீழ் கொள்ளும் அப்பன் -என்றபடி
ஸ்ரீ வாமன அவதார அனுபவம் இதில் –
தொழு நீர் வடிவில் குறள் உருவாய் வந்து தோன்றி மா வலி பால்
முழு நீர் வையம் முன் கொண்ட மூவா வுருவின் அம்மானை
உழு நீர் வயலுள் பொன் கிளைப்ப ஒரு பால் முல்லை முகையோடும்
கழு நீர் மலரும் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே —8-8-5-
தொழு நீர் வடிவில் குறள் உருவாய்-அனவைரும் தொழும் படியான நீர்மை உடைய வாமன வேஷம் –
மூவா வுருவின்-ஸதா ஏக ரூபம் உடையவன் அன்றோ –
பொன் கிளைப்ப-ஸ்வர்ணம் தானே விளையுமாம்
ஒரு பால் முல்லை முகையோடும் கழு நீர் மலரும்–ஒரு பக்கம் பூக்களும் விகசிக்கும் –
காலை மாலை மலர் சூட்ட வேண்டுமே -கைங்கர்ய உபகரணங்கள் ஸம்ருத்தமாய் இருக்கும் திவ்ய தேசம் –
தொழு நீர் வடிவில் குறள் உருவாய் வந்து தோன்றி மா வலி பால் முழு நீர் வையம் முன் கொண்ட-
அவசா பிரதி பேதிரே-(உத்யோக பர்வம் )என்கிறபடியே-
(எழலுற்று மீண்டும் இருந்தானே துரியோதனனும்
தங்கள் வசம் இழந்து தொழப் பண்ணுமே
ஊராக தீண்டியது அது உலகமாகத் தீண்டியது இது )
கண்டார்க்கு தொழுது அல்லாது நிற்க ஒண்ணாத
வடிவை உடைய வாமன வேஷத்தை உடையவனாய்
வந்து அவதரித்து
கடல் சூழ்ந்த ராஜ்ஜியம் மகா பலியதாய்
அவன் பக்கலிலே தான் இரந்து
பெற்றானாம் படி பெற்ற –
மூவா வுருவின் அம்மானை –
சதா ஏக ரூபமான விக்ரஹத்தை உடைய சர்வேஸ்வரனை –
தோன்றுகின்ற வாமன வேஷம் அன்று கிடீர் இவனுக்கு
நிலை நின்ற வடிவு -என்கிறார் –
உழு நீர் வயலுள் பொன் கிளைப்ப ஒரு பால் முல்லை முகையோடும் கழு நீர் மலரும்-
உழுகையே ஸ்வபாவமாக உடைத்தான வயலிலே
பொன்னானது வந்து தோற்றும் –
பொன் படு குட்டம் ஆயிற்று –
பொன் படாத இடம் அடைய
முல்லை -கருமுகை -செங்கழுநீர்
இவை எல்லாம் மலரா நிற்கும் ஆயிற்று –
கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –
—————————————————-
ஸாஸ்த்ர வாஸனை இல்லாமல் ப்ராப்ய ப்ராபக மாக இவனே என்று அறிந்தது
திவ்ய தேசம் மூலமே என்று அருளிச் செய்த பெருமை இவர் ஒருவருக்கே –
இச்சா க்ருஹீத அபிமத அவதாரங்களை அனுபவிக்கிறார் –
தனது அடிக்கீழ் கொள்ளுமவனே அன்றிக்கே
ப்ரக்ருதி ப்ராக்ருதங்களாய் உள்ள அனைத்து பிரதிபந்தங்களையும் போக்க வல்ல -சக்தன் –
ஷத்ரியர் முடித்தமைக்கு இதுக்கு உப லக்ஷணம் –
வடிவாய் மழுவே படையாக வந்து தோன்றி மூ வெழு கால்
படியார் அரசு களை கட்ட பாழியானை அம்மானை
குடியா வண்டு கொண்டு உண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும்
கடியார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே —8-8-6-
குடியா வண்டு-தாரா புத்ராதிகள் உடன் கூட்டமாக வண்டுகள் –
வடிவாய் மழுவே படையாக வந்து தோன்றி மூ வெழு கால் –
வடித்த வாயை உடைய மழுவே ஆயுதமாக வந்து தோன்றி
(வடித்த-மடித்த கூராக்கிய
இவருக்கு மழு -இருந்தாலும் வில் வித்யை கர்ணனுக்கு கற்றுக் கொடுத்தார்
பரசு ராமருக்கு கலப்பை
நரசிம்மருக்கு திரு உகிர்
ராமனுக்கு கோதண்டம்
கண்ணனுக்கு கொல்லா மாக்கோல் மட்டுமே கொண்டு -பசு மேய்க்க )
இருபத்தொரு படி கால் பூமி நெளியும்படியாக
வந்து தோன்றின –
படியார் அரசு களை கட்ட பாழியானை அம்மானை –
ஷத்ரிய குலத்தை அறுத்துப் பொகட்ட
வலியை உடைய சர்வேஸ்வரனை –
(பாழி அம் தோளுடை பத்ம நாபன் -பாழி -வல்லமை
அம்மான் -ஸர்வேஸ்வரன் ஆவேசித்து இருக்கும் கௌண அவதாரம்
பரசுராமர் உபாஸ்ய விஷயம் அல்ல-முக்ய அவதாரம் இல்லையே
போற்றும் புனிதன் -ஸ்தோத்ரம் பண்ணும் படி -)
குடியா வண்டு கொண்டு உண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும் –
பசல்களோடும்
குட்டிகளோடும்
வண்டுகள் வந்து புஜிக்க-
பின்னையும் தர்ச நீயமான நீலமானது
மதுவை பிரவஹியா நிற்கும் –
கடலிலே ஒரு சிறாங்கையை புஜிக்கும் காட்டில்
கடல் வற்றாது இறே-
கடியார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –
பரிமள பிரசுரமான பர்யந்தத்தை உடைய
திருக் கண்ண புரம் –
———————————————
முன் இராமன் -இங்கு தானாய் -பின்பு -பின்னும் ராமனாய் -சக்ரவர்த்தி திரு மகன் -பூர்ண அவதாரம் அன்றோ –
சகல பிரதிபந்தங்களையும் போக்கும் அளவு அன்றிக்கே
தன்னையே நாளும் வணங்கித் தொழும் படி சேஷித்வம் தோன்ற-நம் பரனை- அவதரித்து அருளிய
பரம் தத்வம் -பரஞ்சோதி -பரமாத்மா -பர ப்ரஹ்மம் -பராயணம் -பூர்ண சேஷி -வணங்கிலி ராமன்
உண்மையாக அனைவரையும் வணங்கி கிம் கர என்றும் சமுத்திர ராஜனையும் சரண் அடைந்தாராகிலும்
அது அவதாரத்துக்குத் தக்க நடிப்பு -சேஷித்வம் ஸ்புடம் அநேக இடங்களிலும் உண்டே –
ஆகவே வையம் எல்லாம் உடன் வணங்க வணங்கா மன்னனாய்த் தோன்றி-ஸஹஸ்ர நாம தத் துல்யம் —
ம்ருத ஸஞ்சீவனம் -சேவிக்காதவர் சேவித்தால் விசுவாமித்திரர் வசிஷ்டர் பெருமை அறியலாம் -ஆச்சார்யர் பெருமை காட்டவே –
தயரதற்கு மகன் அன்றி மற்று இல்லை தஞ்சம் -சக்ரவர்த்தி திரு மகன் என்றே உகக்குமவன்
ரஞ்சனீ அஸ்ய விக்ரமன் சத்ருக்களும் புகழும் படி –
நாம் வணங்கும் மன்னர்களாக -அடி சூடும் அரசு அல்லால் மற்று ஒன்றை எண்ணாமல் –
ந நமேயம் -என்று இருக்கக் கூடாதே
வையம் எல்லாம் உடன் வணங்க வணங்கா மன்னனாய்த் தோன்றி
வெய்ய சீற்றக் கடியிலங்கை குடி கொண்டோட வெஞ்சமத்து
செய்த வெம்போர் நம் பரனைச் செழும் தண் கானல் மண நாறும்
கைதை வேலிக் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-7-
வையம் எல்லாம் உடன் வணங்க வணங்கா மன்னனாய்த் தோன்றி –
உகந்தாருடன் உகவாதாருடன்
வாசி அற
தன்னை வணங்க
தான் ஒருவனையும் வணங்காத ராஜனாய்த் தோன்றி –
(இசைவித்து தனது தாள் இணைக் கீழ் இருத்தும் அம்மான் அன்றோ
தாரை மண்டோதரி சூர்ப்பணகை -இத்யாதிகளும் ஸ்தோத்ரம் பண்ணும் படி
தென் இலங்கை கோமானைச் செற்ற மனதுக்கு இனியான்
அழகு குணம் வீரம் சிஸ் ரூஷை -லோகங்களை ஸத்யத்தால்
வெல்லுமவன் )
வெய்ய சீற்றக் கடியிலங்கை குடி கொண்டோட வெஞ்சமத்து -செய்த வெம்போர் நம் பரனைச்-
வெவ்விய சீற்றத்தை உடைய
கடியிலங்கை குடி கொண்டோட
யுத்தத்திலே வெவ்விய போரை பண்ணின
நம்முடைய ஸ்வாமியை –
(ஒருவர் இருவர் மூவர் என்று உருவு கரந்து வெந்நரகம் சேரா வகையே சிலை குனித்த வீரன் )
செழும் தண் கானல் மண நாறும் கைதை வேலிக்
அழகிய குளிர்ந்த நெய்தல் நிலத்தையும்
பரிமளத்தையும் உடைத்தான தாழையையும்
வேலியாக உடைத்தான –
கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –
——————————————————–
அக்ரூர ஆழ்வான் பலராமன் ஆழ்வான் லஷ்மணன் ஆழ்வான் சொல்வது இல்லை -கைங்கர்ய பிரதானர்கள்
பரசுராம ஆழ்வான் சொல்கிறோம்
பலராம ஆழ்வான் -கௌண அவதாரம் இவரும்
பரதாழ்வான் சத்ருக்ந ஆழ்வான் பிரஹலாத ஆழ்வான் விதுர ஆழ்வான் சொல்வோம்
ஆதி சேஷன் அவதாரம் -லஷ்மணனும் பலராமனும் -ஆனால் தனது சக்தியையும் ஆவேசமாகக் கொண்டதால்
இவர் தசாவதாரத்தில் -கண்ணனுக்கு நம்பி மூத்த பிரானாகக் கொண்டார் –
ராஜா -இடுப்பில் சாவிக் கொத்தும் -ஒற்றைக் குழையும் -குண்டலம் உண்டே -ஒரு காதில் நீல மணியும் இருக்கும்
சவ்ரி ராஜர் -நாகை அழகியார் -ராஜ மன்னார் -காட்டு மன்னார் -சேவிக்கிறோமே
குழை -காது ஆபரணம்
கலப்பை மூடி இருப்பதால் ஒரு காது மட்டுமே பலராமன் இடம் சேவிக்கிறார் –
கையும் கலப்பையுமாகப் பிறந்த நம்பி மூத்த பிரான் விஜயத்தில்
தாம் தோற்று ஜிதந்தே என்னப் பண்ணிய அவதாரம் என்று மங்களா சாசனம் –
ஒற்றைக் குழையும் நாஞ்சிலும் ஒரு பால் தோன்றத் தான் தோன்றி
வெற்றித் தொழிலார் வேல் வேந்தர் விண் பால் செல்ல வெஞ்சமத்து
செற்ற கொற்றத் தொழிலானைச் செந்தீ மூன்றும் இல்லிருப்ப
கற்ற மறையோர் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-8-
ஒரு பால் ஒற்றைக் குழையும் ஒரு பால் நாஞ்சிலும் தோன்ற-என்றபடி –
ஒற்றைக் குழையும் நாஞ்சிலும் ஒரு பால் தோன்றத் தான் தோன்றி –
ஒரு காது குழையும்
கலப்பையும் ஒரு கால்
தோன்ற தான் வந்து –
( கரூர் அருகில் தான் தோன்றி மலையில் தான் தோன்றி பெருமாள் சேவை சாதிக்கிறார் )
வெற்றித் தொழிலார் வேல் வேந்தர் விண் பால் செல்ல வெஞ்சமத்து -செற்ற கொற்றத் தொழிலானைச்-
வெற்றியே தொழிலாக உடைய
வேலை உடைய ராஜாக்கள் விண்ணிலே செல்ல
யுத்தத்திலே செற்ற வெற்றியை
தொழிலாக உடையவனை –
செந்தீ மூன்றும் இல்லிருப்ப கற்ற மறையோர்-
த்ரேதாக்னிகள் தங்கள் கிருஹங்களிலே இருக்கை –
த்ரேதாக்னி முகத்தாலே பகவத் சமாராதானம் பண்ணுகையாலே
ஹவிஸ்ஸைக் கொள்ள தங்கள் கிருஹங்களுக்கு உள்ளே
சர்வேஸ்வரன் எழுந்து அருளி இருக்கும் படி
கற்ற பிராமணர் –
(குளித்து மூன்று அனலை ஓம்பும் -கற்ற மறையோர் -அனுஷ்டான பர்யந்தம் –
கற்றபடியே ஆராதனையும் செய்கிறார்கள் )
கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே-
——————————————
ப்ருந்தாரண்ய நிவேசன் -கோவர்த்தன தாரி -த்வாரகாதீசன் –
இருட்டிலே பிறந்து -இருள் அன்ன மா மேனி
தம்மை ஜிதம் என்னப் பண்ணின நம்பி மூத்த பிரான் அனுபவம் கீழே
தம்முடைய சகல பாரங்களை நீக்க –
மண்ணின் பாரம் நீக்கவே பிறந்த ஸ்ரீ கிருஷ்ணன் அனுபவம் இதில்
பஞ்ச கிருஷ்ண க்ஷேத்ரங்களில் ஓன்று அன்றோ இது –
துவரி-வாய் கூம்ப -பாரம் மிக்கு இருப்பதைப் போக்கி உஜ்ஜீவனம்
துவரிக் கனிவாய் நில மங்கை துயர் தீர்ந்து உய்யப் பாரதத்துள்
இவரித் தரசர் தடுமாற இருள் நாள் பிறந்த வம்மானை
உவரியோதம் முத்துந்த ஒரு பால் ஒரு பால் ஒண் செந்நெல்
கவரி வீசும் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே —8-8-9-
இவரித்த -எதிரிட்ட
துவரிக் கனி வாய் நிலமங்கை துயர் தீர்ந்து உய்யப் –
இலவந் துவரிகள் போலேயும்
கோவைக் கனி போலேயும்
இருக்கிற வாயை உடைய
நில மங்கை கிலேசம் கெட்டு உஜ்ஜீவிக்கைக்காக
பாரதத்துள் இவரித் தரசர் தடுமாற –
பாரத சமரத்திலே இவரித்தர்சர் -என்னுதல்-
அன்றியே
பாரதத்திலே அரசர் தடுமாற இவரித்து -என்னுதல்
இவர்தல் -ஏறுதல் –
இருள் நாள் பிறந்த வம்மானை –
அபர பஷத்திலே
அஷ்டமியிலே
நள் இருளிலே
பிறந்தவனை –
உவரியோதம் முத்துந்த ஒரு பால் ஒரு பால் ஒண் செந்நெல் கவரி வீசும் –
ஓர் அருகு கடல் திரையானது
முத்தைத் தள்ள
ஓர் அருகு அழகிய செந்நெல் ஆனது
கவரி எறட்டும்-( வீசும் )
கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –
————————————–
மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் ராமனாய்த்
தானாய் பின்னும் ராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும்
ஆனான் தன்னை கண்ண புரத் தடியன் கலியன் ஒலி செய்த
தேனார் இன் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாதே —8-8-10-
மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் ராமனாய்த்
தானாய் பின்னும் ராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும் ஆனான் தன்னை
மத்ஸ்யாதி தசாவதாரங்களையும் பண்ணி
ஜகத் ரஷணம் பண்ணின தன்னை –
(1-வேதம் கொடுத்து ரக்ஷணம் மத்ஸ்யாவதாரம்
2-அமுதம் கொடுத்து ரக்ஷணம் கூர்மாவதாரம்
3-பக்தர் – பூமா தேவியை -இடந்து -சம்சார பிரளயத்தில் இருந்து ரக்ஷணம் வராஹ அவதாரம்
4-பக்த விரோதிகளை அழித்து ரக்ஷணம் நரஸிம்ஹ அவதாரம்
5-சொத்தை -இரந்தும் -ரக்ஷணம் -ஸ்வ ஸ்வா தந்தர்யம் போக்கி ரக்ஷணம் வாமன அவதாரம்
6-ப்ரக்ருதி பிராகிருத பிரதிபந்தங்கள் போக்கி ரக்ஷணம் பரசுராம அவதாரம்
7-மரியாதை ஸ்தாபித்து தர்ம ரக்ஷணம் ராமாவதாரம்
8-துஷ்ட நிரஸனம் பண்ணி ரக்ஷணம் பலராம அவதாரம்
9-பூமி பாரம் போக்கி ரக்ஷணம் தாமோதர அவதாரம்
10-கலி போக்கி கிருத யுகம் நாட்டி ரக்ஷணம் கற்கி அவதாரம் )
கண்ண புரத் தடியன் –
திருக் கண்ண புரத்திலே கண்டு
அடிமை புக்க –
கலியன் ஒலி செய்த தேனார் இன் சொல் தமிழ் மாலை
ஆழ்வார் அருளிச் செய்த
தேனோடு ஒத்த நல்ல சொல்லை உடைய
தமிழ் மாலை சொல்ல
செப்பப் பாவம் நில்லாதே
பாவமானது போம் –
———–
ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.
வான் மண் உய்வான் தான் அவதாரம் பத்து செய்யும்
வானவனைக் கண்ணபுரத்துள் கலியன் கோனாகக்
கண்டு கொண்டேன் என்னும் சொல் உய்வார் கருத்தினில்
திண்ணமதாம் ஞானக்கை -78-
ஆழ்வாருடைய ஈரச் சொற்களே உய்ய நினைப்பார்க்கு நிச்சயமான ஞானக்கை –
————————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply