கீழே அவனுடைய பல படிகளையும் காட்டி ஞான பிரதானம் பண்ணி அருளிய திவ்ய தேசம் என்றார்
இனி ஞான கார்யமான -க்ருதார்த்தனாக -செய்வன செய்தவனாகப் பெற்றதை அனுசந்தித்து
இனி இருவருக்கும் சேஷம் அன்று என்றதை அனுசந்தித்து சங்கதி –
ஆழ்வாரைப் பெற்றதும் தாம் பிரயோஜனம் பெற்று மகிழ்ந்தவன் இவனே -கருவரை போல் நின்றான்
கண்ண புரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ –8-9-3-
கைம்மானம் -பிரவேசம் –
தாம் நெடும் காலம் இழந்த இழவுகள் எல்லாம் தீர
திருக் கண்ண புரத்திலே தம்மை அனுபவிப்பதாக
எழுந்து அருளி இருந்தான் -என்றார் -கீழ்த் திரு மொழியிலே –
இதில்
இப்படி என் இழவு எல்லாம் தீர்க்க வந்து அருளி நிற்கிற
திருக் கண்ண புரத்திலே -ஜ்ஞான பிரதான தேசம் —
கருவரை போல் நின்றானுக்கு அடியேன்
வேறு ஒருவர்க்கு உரியேன் அல்லேன்
என்கிறார் –
——————————————————-
கைம்மான மத யானை யிடர் தீர்த்த கரு முகிலை
மைம்மான மணியை யணி கொள் மரகதத்தை
எம்மானை யெம்பிரானை ஈசனை யென் மனத்துள்
அம்மானை அடியேன் அடைந்து உய்ந்து போனேனே—8-9-1-
கைம்மான-துதிக்கையால் மான -பெருமை -கொண்ட மதம் கொண்ட -பூவை ஸமர்ப்பிக்க இருந்த பெருமை
மைம்மான மணி-மை மிக்க -மதிப்புடைய மணி
தாமரை -அக்கமலத்து இலை போல் திரு மேனி -பச்சை மா மலை போல் மேனி
பிரான் -இவனே மணி மரகதம் என்று காட்டி அருளிய உபகாரம்
கீழே அடையுங்கோள் நமக்கு உபதேசம் -இதில் அடைந்து உய்ந்தேன் என்று காட்டி அருளுகிறார் –
கைம்மான மத யானை யிடர் தீர்த்த
முன்கை மிடுக்காலே
எல்லாவற்றையும் தூக்கி அடித்து பொகடுகிறோம்
என்று இருக்கிற
பெரும் தன்மையை உடைய
மத யானையை இடர் தீர்த்த –
கரு முகிலை
காள மேகம் போன்ற வடிவுடையவனை –
மைம்மான மணியை யணி கொள் மரகதத்தை –
மை போன்ற நிறத்தை உடைய
பெரு விலையனான மணி போன்றவனை –
அழகிய மரகதத்தை –
எம்மானை யெம்பிரானை ஈசனை –
அவ் வடிவு அழகாலே என்னை எழுதிக் கொண்டவனை –
எனக்கு உபகாரகனான
சர்வேஸ்வரனை –
(ஆஹ்லாதகரம் முகில் -இடர் தீர்த்த
மைமான மணி
அழகிய பச்சை மரகதம்
மூன்றையும் காட்டி சேஷபூதனாக்கி அருளிய உபகாரம்
ஆதரம் பெறுக வைத்த அழகன்
பிரானாக இருக்கும் சர்வேஸ்வரன் )
யென் மனத்துள் அம்மானை –
யென் நெஞ்சிலே இருக்கிற சர்வேஸ்வரனை –
அடியேன் அடைந்து உய்ந்து போனேனே –
அடைந்து உஜ்ஜீவிக்கப் போனேன் –
—————————————————————–
கூக்குரல் கேட்டு திருப்பாற் கடலை விட்டு வந்து ரக்ஷித்தமை கீழே
குரல் கேட்க வேணும் என்று அணித்தாக நித்ய வாஸம் செய்து அருளுகிறவன் என்கிறார்
தருமான மழை முகிலைப் பிரியாது தன்னடைந்தார்
வருமானம் தவிர்க்கும் மணியை யணி யுருவில்
திருமாலை யம்மானை யமுதத்தைக் கடல் கிடந்த பெருமானை –
அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே —8-9-2-
வருமானம் தவிர்க்கும்-யஸ்ய அனுக்ரஹம் -தருபவர்க்கு செல்வம் ஒழிப்பவன் –
இங்கு மானம் -அவமானம் ஒழிப்பவர்
உனக்கு ஆட்பட்டும் இன்னும் உழல்வேனோ என்பர்களே
உனக்கு வரும் ஏசுச் சொற்களை பொறுக்க மாட்டோமே
தருமான மழை முகிலைப் பிரியாது –
அபேஷித்தார்க்கு அபேஷிதங்களைக் கொடுக்கக் கடவதாய்
இருந்துள்ள கற்பகத் தரு போலவும்
(அர்ச்சித்தார்த்த பரிதாபம் தீக்ஷிதன் எனக்கே தன்னைத் தந்த கற்பகம் )
அபேஷா நிரபேஷமாக கொடுக்கக் கடவதான
பெரிய மேகம் போலேயும் ஆனவனை –
(தரும் -பிரார்தித்தவர்களுக்கு மட்டும்
வரும் முகில் -பிரார்த்திக்காமலே வர்ஷிக்கும் மேகம் போல்)
தன்னடைந்தார் வருமானம் தவிர்க்கும் மணியை –
தன்னைச் சேர்ந்தார்க்கு வரும்
அவமானங்களை போக்கும் மணியை –
மணியை -என்கிறது சிந்தா மணியை –
(சிந்தா மணி -சிந்தாமல் சிதறாமல் சிந்தித்தவற்றை கொடுக்கும் -சிந்தனைக்கு அழகியான் )
யணி யுருவில் -திருமாலை-
அழகிய வடிவை உடைய ஸ்ரீயபதியை –
யம்மானை-
சர்வ சேஷியை –
யமுதத்தைக் கடல் கிடந்த பெருமானை –
என்னை சாவாமை காத்தவனை –
என்னுடைய ரஷணத்தில் உத்யுக்தனாய்க் கொண்டு
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற சர்வாதிகனை –
ப்ரஹ்மாதிகளுக்காக கடலிலே வந்து
கண் வளர்ந்து அருளின பெரியவனை –
அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே –
அடியேன் அடைந்து உய்ந்து பிழைக்கப் பெற்றேன் –
(கூப்பீடு கேட்க்கும் இடம் போல் அன்றிக்கே வகுத்த இடம் அன்றோ )
—————————————————
அநந்யார்ஹத்வம் -திருமந்த்ரார்த்த ஞானம் அருளப் பெற்று அருளிச் செய்கிறார் இப்பதிகம் –
உயிரான பாசுரம்
திருக்கண்ண புரம் உள்ள பாசுரம் -இதிலும் 9 -10 -பாசுரங்களில் மட்டும் இப்படி உள்ளது
கீழேயும் இதே போல் ஒரே பாசுரம் இருப்பதையும் –
இரண்டு பாசுரங்களில் இல்லாத இரண்டு பதிகங்கள் பார்த்தோம் பார்த்தோம்
ஆக மூன்று பதிகங்களில் மட்டும் இப்படி உண்டு -100 பாசுரங்களில் 18 பாசுரங்களில் இல்லை –
இவரைப் பாடுவித்த முக்கோட்டை இது
கண்ண புரம் ஓன்று உடையானுக்கு -பரமாத்மா அகாரம்
அடியேன் -சேஷ பூதன் -மகார அர்த்தம்
உடையானுக்கு -ஆய -சேஷத்வ வாசகம் லுப்த சதுர்த்தி
ஒருவர்க்கு உரியேனோ-அநந்யார்ஹ சேஷத்வம் குறிக்கும் உகார அர்த்தம் –
மோக்ஷ பிரதன் -ஸ்ரஷ்டா -இவன் ஒருவனே
பிரதிபந்தங்களைப் போக்கி இசைவித்து தனது தாளிணைக் கீழ் தனது பேறாக இருத்தும் ஸ்வாமி
அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே – என்றார் கீழே
சங்கதி தன்னை பெரியவாச்சான் பிள்ளை தாமே அருளிச் செய்கிறார்
இது தான் உமக்கு எத்தனை குளிக்கு நிற்கும் -என்ன
நான் பிறர்க்கு உரியேன் அல்லேன் -என்கிறார் –
விடை ஏழு அன்று அடர்த்து வெகுண்டு விலங்கலுறப்
படையாலாழி தட்ட பரமன் பரஞ்சோதி
மடையார் நீலம் மல்கும் வயல் சூழ் கண்ண புரம் ஓன்று
உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ –8-9-3-
விலங்கலுற-திரிகூட மலை -அஸ்தமன கிரி -இரண்டு சரித்திரங்கள் வியாக்யானத்தில் உண்டே
விடை ஏழு அன்று அடர்த்து வெகுண்டு விலங்கலுறப் -படையாலாழி தட்ட-
சீறி ருஷபங்கள் ஏழையும்
நெரித்து
திரிகூட சிகரத்திலே சென்று கிட்டும்படியாக
கான வெண் குரங்கும் முசுவும் படையாகக் கொண்டு
கடலை அடைத்த –
அன்றிக்கே –
அஸ்தமய பர்வதத்திலே ஆதித்யன் அஸ்தமித்தான்
என்னும்படியாக
திரு ஆழியாலே ஆதித்யன் தேஜஸ்சை தடுத்து மறைத்த –
பரமன் –
சமாதிக தரித்திரன் –
பரஞ்சோதி-
பிராட்டிக்கு வந்த பிரதி பந்தகத்தைப் போக்கி
அத்தாலே வந்த
தேஜஸ்சை உடையனாய் இருக்கிறவன் –
மடையார் நீலம் மல்கும் வயல் சூழ் –
மடைகள் அடைய மிக்க நீலத்தை உடைத்தான
வயலாலே சூழப் பட்ட –
கண்ண புரம் ஓன்றுஉடையானுக்கு –
திருக் கண்ண புரத்தை தனக்கு
வாசஸ் ஸ்தானமாக உடையவனுக்கு –
ஸ்ரீ வைகுண்ட நாதனாய் இருக்கும் இருப்புக்கு
அவ்வருகே ஓன்று போலே காணும் இது –
அடியேன் ஒருவர்க்கு உரியேனோ-
சேஷ பூதனான நான் –
வேறு சிலர்க்கு உரியேன் அல்லேன் –
இத்தால்
தம் ஸ்வரூபம் சொல்லுகிறார் –
பிறர்க்கு உரியேன் அல்லேன் என்னும் இடம் சொல்லுகிறார் –
அசாதாராண விபூதி உக்தன் ஆனவனுக்கு
என்னும் இடம் சொல்லுகிறார் –
(நித்ய விபூதி லீலா விபூதி உக்தன் அன்றிக்கே கண்ண புரம் ஓன்று உடையானுக்கு –
ஓன்று பத சேர்க்கையால் – பகவத் ஸ்வரூபம் சொல்லிற்று )
—————————————-
இதுவும் அத்புத பாசுரம் –
சோழ ஸிம்ஹம் சாந்த யோக ரூபம் –
தக்கான் குளம்-பக்தர்களுக்கு உசிதனான -தக்க அவனுக்கு -தக்க குளம்
பாசுரம் முழுவதும் இரண்டாம் வேற்றுமை வைத்து பல பாசுரங்கள் அருளிச் செய்யும் நாலு கவி பெருமாள் அன்றோ
ஒருவருக்கு உரியேனோ என்றார் கீழ்
இதில் அவனுக்கு அசாதாரணமான பரம போக்யத்வம் அருளிச் செய்கிறார் –
அக்காரக்கனி -சக்கரை பழம்
எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னி அக்காரக்கனி -நம்மாழ்வார்
சக்கரை விதை இட்டு தேனை இட்டு வளர்ந்து வந்த செடி பூத்து காய்த்து கனிக்கும் மரத்தில் -அபூத உவமை –
மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானைப் புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையை
தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே–8-9-4-
மறையாய் விரிந்த விளக்கை-மறையாயும் பரவிய விளக்காகவும் -தன்னைத் தானே விளக்கி -மற்றவற்றையும் விளங்குபவர்
வேதத்தால் சொல்லப் படுபவரை தானே விளங்குபவர் என்னலாமோ என்னில்
ஸப்த பிரமாணம் பரிச்சேதிக்க ஒண்ணாதே -ஆகவே விரிந்த விளக்கே என்கிறார் –
எல்லை காண முடியாமல் இருப்பவன் என்று காட்டும் ப்ரமாணமே வேதம்
பொன் மலையை–1305 உள்ள மலைக்கு மேலே பொன் மலை
வாதூல ஸ்ரீ நிவாஸ குரு -தொட்டாச்சார்யார் அதீனம்
தாயார் நவராத்திரிக்கு கீழே எழுந்து அருளுவார்
சேஷ பீடத்தில் பக்தலோசன பெருமாள் -உத்சவர் மேலே எறியும் சேவை உண்டு
ஆஹ்வான ஹஸ்தம் –
கோயிலைப் பார்த்துக் கொண்டே எழுந்து அருளப் பண்ணுவார்கள்
தத்துவம் தகவு அன்று -தகவு என்பதே தக்கான் -கிருபை மிக்கவன்
கடிகை -அசலம் நாழிகை பொழுது இருக்கவே அசையாத பாப கூட்டங்கள் போகுமே
இத்தை விட்டு சலம் -சரீரத்தையே பார்த்து இழந்து போகிறோமே –
சக்ர தீர்த்தம் -திருவடி நரசிம்மன் திருவடி நோக்கி நித்தியமாக சேவித்துக் கொண்டே இருக்கும் சேவை –
மூலவர் யோக நரசிம்மர் நான்கு திருக்கரங்கள் -வீற்று இருந்த -பட்டயம் சாத்தி சேவை
உத்சவர் பக்த வத்சலன் -பக்தர்களுக்கு தக்க கிருபை பொழிபவன்
அம்ருத தீர்த்தம் பாண்டவ தீர்த்தம் தக்கான் குளம்
அம்ருத பல வல்லி மாய்ச்சியார் -லஷ்மீ தீர்த்த கரை
ஸிம்ஹ விமானம் -ஹேம கோடி விமானம்
சப்த ரிஷிகள் இங்கு இருந்து தபஸ்ஸூ
மலைக்கு ஏறும் பொழுது இவர்கள் நடுவில் சேவை உண்டு
அத்ரி கஸ்யபர் கௌதமர் பரத்வாஜர் வசிஷ்டர் ஜமதக்கினி
திருவடி சங்கு சக்கரம் ஏந்தி சேவை
ரிஷிகளுக்காக சாந்த ஸ்வரூபம் உடன் சேவை
தொட்டாச்சார்யார் 1543-1607-வாதூல வம்சம்
இங்கும் தில்லை திருச்சித்ர கூடம் ப்ரதிஷ்டை செய்து அருளினார்
நித்தியமாக திருச்சித்ர கூட பாசுரங்கள் திரு மலையிலும் கோவிந்தராஜன் சன்னதியிலும் நித்ய சேவை உண்டே
ராமர் அரங்கன் சந்நிதி திருவடிக்கு அருள் புரிந்தே சேவை
கார்த்திகை பரணி நக்ஷத்ரம் திருவடி இங்கு ஆவிர்பாவம்
1588 பங்குனி சுக்ல பக்ஷம் பஞ்சமி திதியில் பக்த லோசனனுக்கு கீழேயும் திருக்கோயில் நிர்மாணம்
தக்கான் குளம் -கயா போக வேண்டாம் -அதே மஹிமை -வரதராஜர் சந்நிதியும் உண்டே -கருட வாஹனத்துடன் இங்கே சேவை உண்டே
மிக்கானை –
சர்வாதிகனை –
மறையாய் விரிந்த விளக்கை-
வேறு ஒன்றால் காண வேண்டாதே
தனக்குத் தானே பிரகாசகமாய் இருப்பது –
பிரமாணங்களால் அறியப் பார்க்கும் அன்று
அவற்றாலே பிரகாசிக்கிற மேன்மைக்கு எல்லை அன்றிக்கே இருப்பது –
என்னுள் புக்கானைப்-
என் ஹிருதயத்திலே தானே புகுந்தவனை –
புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையை-
ஒரு சம்சாரி சேதனன் உடைய ஹிருதயத்திலே
அவனுக்கு அபேஷை இன்றிக்கே இருக்க
தானே போய் புகுவதே –
இது ஒரு நீர்மை இருக்கும்படியே -என்று
இருந்ததே குடியாக
எல்லாரும் ஒக்கச் சொல்லுகையாலே வந்த
மிக்க புகழை உடையனாய்க் கொண்டு
உஜ்ஜ்வலனாய் இருக்கிறவனை –
தக்கானைக்-
பரம தார்மிகனை –
(கிருபை -தகவு -ஆன்ரு ஸம்சயம் பரோ தர்மம் – கிருபையே தர்மம் -கிருபாவானே தார்மிகன் என்றபடி )
கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த அக்காரக் கனியை –
திருக் கடிகை யாகிற திருமலையின் மேலே
அக்காரம் போலேயும்
கனி போலேயும்
நிரதிசய போக்யனாய் இருக்கிறவனை –
அடைந்து உய்ந்து போனேனே –
—————————————————
(பர கத ஸ்வீ காரமே உத்தாரகம் –
வந்தாய் -வந்து புகுந்த பின்பே எந்தாய் என்ற ஞானம் அருளி -இதனாலே மீளாமல் மனத்திலே இருந்தாய் –
திருக்குடந்தை உடன் –சயனம் -கீழே திரு சோழ ஸிம்ஹ புரம் -வீற்று இருந்து –
இங்கு நின்று அருளி -எல்லாம் கைக் கொண்டு அருளவே
பாட்டுக்கு எல்லாம் தொகுத்து தாத்பர்யம் அருளுகிறார் வியாக்யானத்தில்
வந்ததுக்கு மேற்பட நீ பண்ணக் கடவதொரு உபகாரம் உண்டோ -இதுவே அருளிச் செயல்களுக்கு எல்லாம் தாத்பர்யம் -)
நாம் என்ன உபகாரம் பண்ணினோமாக
தான் இப்படி கிடந்து படுகிறது -என்ன –
வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை
எந்தாய் போய் அறியாய் யிதுவே யமையாதோ
கொந்தார் பைம் பொழில் சூழ் குடந்தைக் கிடந்துகந்த
மைந்தா வுன்னை என்றும் மறவாமை பெற்றேனே —8-9-5-
போய் அறியாய்–நித்ய ஸூரிகள் இடம் போவதற்கு நினைக்காமல் -போகாமல் என்னாமல் போக அறியாமல் –
அந்தாமத்து அன்பு செய்து பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தாய்
வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை-
இதுக்கு மேற்பட நீ பண்ணக் கடவதொரு
உபகாரம் உண்டோ –
வந்தாய் –
நான் இருந்த இடம் தேடி நீயே வந்தாய் –
இவன் வந்திடுவான் எனக்கு என்றும் இராத
என் ஹிருதயத்திலே நீயே வந்து புகுந்த பின்பு –
எந்தாய்-
என் ஸ்வாமி யானவனே –
ஸ்வாமி ஆனபடியால் சொத்தை விடமாட்டாமல் வந்து புகுந்தாய்
புகுந்த பின்பு அடியேனுக்கு நீயே எந்தாய் என்ற ஞானத்தையும் அளித்து அருளினாய்
போய் அறியாய் யிதுவே யமையாதோ-
நித்ய ஸூரிகள் பக்கலில்
போவதாகவும் நினைக்கிறது இல்லை –
இதுவே அமையாதோ –
இனி இதுக்கு மேற்பட ஒருவனுக்கு பேறு ஆகையாவது என் –
கொந்தார் பைம் பொழில் சூழ் குடந்தைக் கிடந்துகந்த-
கொத்துக்கள் மிக்கு
அழகியதாய் இருந்துள்ள பொழிலாலே சூழப்பட்ட
திருக் குடந்தையிலே கண் வளர்ந்து
நாம் ஆஸ்ரிதர்க்கு உறுப்பாகப் பெற்றோமே இறே-என்று
அத்தாலே உகந்து –
மைந்தா வுன்னை என்றும் மறவாமை பெற்றேனே –
இவர்களுக்கு விட ஒண்ணாத படி
நவீக்ருதமான யௌவனத்தை உடையனவாய் இருந்தவனே –
(ஆராவமுதம் -அப்பொழுதைக்கு அப்பொழுது நவீ க்ருதமான யௌவனம்
நவ களேபரம் உத்சவம் -திரு ஜெகந்நாத -திவ்ய மங்கள விக்ரஹம் –18-வருஷங்களுக்கு
திருக் குடந்தையில் க்ஷணம் தோறும் )
இப்படி உபகாரகனான உன்னை மறவாது ஒழியப் பெற்றேன் –
நீயோ தீரக் கழிய உபகரித்து நின்றாய் –
நான் அந்த உபகாரகத்தை மறவாது ஒழியப் பெற்றேன் –
இனி இதுக்கு மேற்பட பேறு உண்டோ –
————————————————-
எஞ்சா வென் நரகத்து அழுந்தி நடுங்குகின்றேற்கு
அஞ்சேல் என்று அடியேனை யாட் கொள்ள வல்லானை
நெஞ்சே நீ நினையாது இறைப் போதும் இருத்தி கண்டாய்
மஞ்சார் மாளிகை சூழ் வயலாலி மைந்தனையே –8-9-6-
அடியேனை யாட் கொள்ள வல்லானை-சேஷ பூதனான அடியேனை தாஸ பூதனாக்கிக் கொள்ள
சேஷ பூதன் இயற்க்கை -கைங்கர்யம் கொண்டால் தானே தாஸ பூதன் ஆவோம் –
அடியேன் என்ற சொல்- அர்த்தமாவதற்கு வல்லமை தேவரீருக்கே –
நெஞ்சைப் பார்த்து
அதினுடைய நினைவை காதாசித்கமாக்கி
அவன் நம்மை உபகரித்து நின்றான்
நீ தப்பச் செய்யா நின்றாய் –
என்கிறார் –
எஞ்சா வென் நரகத்து அழுந்தி நடுங்கின்றேற்கு அஞ்சேல் என்று –
யமன் தண்டலானால்
பண்ணின பாபத்தைக் கணக்கிட்டு
அதுக்குத் தக்க பலத்தை அனுபவிப்பித்து
பின்னை விட்டடிப்பார்கள் –
அங்கன் அன்றிக்கே –
சம்சாரத்துக்கே ஹேதுவான பாபத்துக்கு
ஓர் அவதி இல்லாமையாலே ஒரு காலும் குறைந்து
காட்டாதாயிற்று –
ஒரு காலும் குறையாத இருக்கிற சம்சாரத்திலே
(சம்சார சாகரம் கோரம் அனந்த கிலேச பாஜனமாய் இருக்குமே )
தரை காண ஒண்ணாத படி அழுந்தி
நடுங்குகிற என்னை
நான் உண்டே நீ அஞ்சாதே கொள் -என்று –
அடியேனை யாட் கொள்ள வல்லானை –
ஷத்ரிய புத்திரன் தலையிலே
முடியை வைத்தால் போலே –
(தாஸ்ய பூதன் ஆக்கினதே அடி சூடும் அரசனாக முடி சூட்டுவதே )
நெஞ்சே நீ நினையாது இறைப் போதும் இருத்தி கண்டாய் –
நெஞ்சே –
நீ ஜ்ஞான பிரசர த்வாரம் அன்றோ
நீ நினை என்று என்னை பிரேரிக்க வேண்டாவோ –
ஒரு ஷண காலமும் நீ நினையாதே இரா நின்றாய் –
(இது வன்றோ முன்னின்ற நிலை )
மஞ்சார் மாளிகை சூழ் வயலாலி மைந்தனையே –
நினைக்க அருமைப் பட வேண்டும்படி
அவன் தன்னை அரியனாகத் தான் நீ நினையாது இருக்கிறாயா –
மேக பதத் தளவும் ஓங்கின மாடங்கள் சூழ்ந்து இருப்பதாய்
வயலோடு கூடின திரு வாலியிலே வந்து
சந்நிஹிதன் ஆன மைந்தனையே –
(இப்படி அண்ணியனாக-போக்யமாக -எளிமையாக இருந்தும் நினையாது இழப்பதே )
——————————————————
கீழே அண்ணியனாக-போக்யமாக -எளிமையாக -இருப்பவன் என்று -நினைக்க வழி சொல்லி
இனி எத்தால் மறக்க முடியும் என்கிறார் இதில் –
உமக்கு இத்தனை அதி மாத்திர நிர்பந்தம் என் என்ன –
இவ்விஷயத்தை விட்டுப் போய்-பின்னை நீ ஆரை நினைக்க இருக்கிறாய் -என்
புறம்பு நினைக்க ஒருவரும் இல்லையோ என்னில்
இது வன்றோ புறம்பு உள்ளார் படி –
பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு
உற்றானாய் வளர்த்து என் உயிராகி நின்றானை
முற்றா மா மதி கோள் விடுத்தானை யெம்மானை
எத்தால் யான் மறக்கேன் இனி இது சொல் என் ஏழை நெஞ்சே—8-9-7-
உற்றானாய் வளர்த்து-ஸகல வித பந்துவாய் -பழகியதை சொல்லி பிதா நாராயணா-த்வம் மாதா –
சேலேய் கண்ணியரும் -மாதா தேவோ பவ -இவற்றைச் சொல்லி
பண்டைய நாளாலே-9-2- -எல்லா உறவும் -அடுத்து -9-3-சகல வித கைங்கர்ய பிராத்தனை போல்
எத்தால் யான் மறக்கேன் இனி- தென் குறுங்குடி நின்ற அச் செம் பொனே திகழும் திரு மூர்த்தியை உம்பர் வானவர்
ஆதி யம் சோதியை எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ –2-1-10- போல் இங்கு இவர்
பெற்றார் பெற்று ஒழிந்தார் –
பித்ராதிகள் ராகாந்தராய்
பிரஜைகளை உத்பாதித்து யௌவன விரோதி என்று
பொகட்டுப் போக நிற்பர்கள் ஆயிற்று –
பின்னையும் இவனுக்கு ஒரு உறவு முறை ஒழிய செல்லாது இறே –
பண்ணிப் போந்த வாசனையாலே
அவ்வளவில் அவர்கள் வழியாலே நின்று முகம் கொடுக்குமாயிற்று –
பின்னும் நின்று அடியேனுக்கு உற்றானாய் வளர்த்து
தன் கை பார்த்து இருக்க வேண்டும் படியான பருவத்தை உடைய எனக்கு
எல்லா உறவு முறையும் தானேயாய் நின்று நோக்கி –
என் உயிராகி நின்றானை –
தாய் தகப்பன் பொகட்ட அன்றும் நான் ஜீவிக்க வேணும்
என்று இருக்கும் இறே
இச் சேதனன் தான் –
அப்படி தனக்கு பரிவனான தானாயும் நோக்கினான் ஆயிற்று –
முற்றா மா மதி கோள் விடுத்தானை யெம்மானை
பருவம் நிரம்பாத
சந்த்ரனுக்கு வந்த ஷயத்தைப் போக்கி
தன்னுடைய ரஷகத்வத்தைக் காட்டி
என்னை எழுதிக் கொண்டவன்
எத்தால் யான் மறக்கேன்-
பண்ணின உபகாரம் அளவுபட்டு மறக்கவோ –
புறம்பேயும் ஒரு புகல் உண்டாய் மறக்கவோ –
இனி இது சொல் என் ஏழை நெஞ்சே
சம்சாரத்தே சில விடவுமாய்
பற்றவுமாய் இருக்கிற இருப்பைக் கொண்டு
பகவத் விஷயத்தை மறக்கலாம் என்று இருக்கிற நீ சொல்லு –
————————————————
கீழே பெற்றவர்களே பொகட்டு போனாலும் கண்ண நீர் பாய்ச்ச வேண்டாத
தாயும் தந்தையும் இவனே என்றும் உற்றானாய் வளர்த்தான் என்றார் –
உமக்கு உற்றானாய் நின்றவன்
பண்ணின உபகாரம் தான் என் என்ன
ஸ்வ அனுபவத்துக்கு விச்சேதம் வாராத படி பண்ணி
தந்தவன் அன்றோ -என்கிறார்
அதுக்கு உம்முடைய பக்கல் உள்ளது என் என்னில் –
(ஞானிகள் வேண்டாம் வேண்டாம் என்னும் இப்பிறவிச் சூழலிலே பிறந்தேன் -இதுவே நான் செய்தது )
கற்றார் பற்று அறுக்கும் பிறவிப் பெரும் கடலே
பற்றா வந்து அடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை
வற்றா நீர் வயல் சூழ் வயலாலி யம்மானைப்
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமைப் பெற்றேனே —8-9-8-
(மாய வன் சேற்று அள்ளல் அழுத்தாமல் பொய் நிலத்தில் இருந்து -பற்று அறுக்கும் –
பிறந்தாலும் சங்கம் இல்லாமல் -இருப்பவர்கள் அன்றோ நமது ஆச்சார்யாதிகள்
வைராக்யம் இருந்தால் சம்சாரத்தில் இருந்தாலும் பூ ஸூரர் ஆவோம்
அற்ற பத்தர் சுற்றி வாழும் அம் தண் நீர் அரங்கமே –
வைராக்ய சிகாமணிகள் அன்றோ கோயிலில் வாழும் வைஷ்ணவர்கள்
கர்மத்தால் பிறந்தாலும் பிறந்ததே தப்பு இல்லை -பற்று அறுக்க வேண்டும்
திருவாலி அம்மானைப் பற்றுவதற்கும் பிறக்க வேண்டுமே
பிறக்கவும் வைத்து தானும் அண்மையில் நித்ய வாஸம் இருந்து ஆச்சார்யர்களைக் கொண்டு உபதேசித்த பின்பும்
பற்று அறுக்காமல் இருக்கக் கூடாதே
புத்தி கொடுத்து யோக க்ஷேமம் வஹாம் அஹம் -நானே வகிக்கிறேன்
கிடைக்காதது கிடைக்கப் பெற்று பெற்றதுவும் நழுவாமல் இருக்கப் பண்ணுவதும் அவனே )
கற்றார் பற்று அறுக்கும் பிறவிப் பெரும் கடலே
அறிவுடையார்
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று கழித்து கொள்ளத் தேடும்
சம்சாரம், ஆகிற பெரும் கடலிலே —
பற்றா வந்து அடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை –
திரை மேலே திரையாக கொண்டு போந்து ஏறடுமா போலே
ஒரு ஜன்மம் ஒரு ஜன்மத்திலே தோள் மாற
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து போனேன் –
இப்படி பிறந்து போரா நிற்கச் செய்தே
நான் பிறந்த சம்சாரத்திலே அவன் வந்து சந்நிஹிதன் ஆகையாலே அவனைப் பெற்றுக் கொண்டு நின்றேன் –
(64 சதுர் யுகங்களுக்கு முன்பே அன்றோ நாம் பிறந்து உழல்கின்று உள்ளோம் -அநந்த கோடி சதுர் யுகங்கள் அன்றோ )
வற்றா நீர் வயல் சூழ் வயலாலி யம்மானைப் பெற்றேன் பெற்றதுவும் பிறவாமைப் பெற்றேனே
ஒரு நாளும் நீர் மாறாத வயல் சூழ்ந்த திருவாலியிலே
நிற்கிற சர்வேஸ்வரனைப் பெற்றேன்
பெற்றதுவும்
அந்த பெற்ற பேறு தானும் –
பிறவாமை பெற்றேன் –
இப் பேற்றுக்கு விச்சேதத்தை பண்ணக் கடவ ஜன்மம்
மறுவல் இடாதபடி பெற்றேன் -என்னுதல் –
அன்றிக்கே
இப் பேற்றுக்கு அடியாக
என் பக்கல் ஒரு நன்மை பிறவாது இருக்கச் செய்தே
பெற்றேன் -என்னுதல்
அங்கன் இன்றிக்கே
பெற்றேன் என்னும் உபகார ஸ்ம்ருதியும் வர்த்தியாத படி பெற்றேன் -என்னுதல்
(அடுத்த பிறவி பிறக்காமல் என்றும்
என்னிடம் நன்மை பிறவாமை என்றும்
நன்று உணர்வும் பிறவாமல் என்றும் மூன்று நிர்வாகங்கள்
ஒரு பிறவியும் வாராமல் என்றது ஸூ வ அனுபவ விச்சேதம்
இதுக்கு அடியாக எனது பக்கல் நன்மை ஓன்று இராமல் -ஸ ஹேதுகமாக -இல்லாமல் நிர்ஹேதுகமாக என்கிறது
நன்மையால் என்றால் வேண்டிய பொழுது கூடுவதும் இல்லை என்றால் விச்சேதம் வருமே
அதுக்கு நெஞ்சாறல் -பிரதியுபகாரம் பண்ண -இனி என்ன செய்வோம் -என்று தடுமாறினால் தடங்கல் வருமே
அது கூடவும் படாமலும் இருக்கும் படி அருளுகிறார் –
இதுவே என் பணி என்னாதே அதுவே ஆட்ச் செய்யுமீதே )
உபகார ஸ்ம்ருதி அனுவர்த்தித்த அன்று
பிரத்யுபகாரம் தேடி
நெஞ்சாறல் பட வேண்டும்படி இருக்கும் இறே
அது வேண்டாத படி
பிராப்தம் இது என்று இருக்கும் படி
உபகரித்தான் ஆயிற்று –
(முலைப்பால் குடித்த குழந்தை உபகார ஸ்ம்ருதி பண்ண வேண்டாவே –
இவனோ அநாதியாக தாயுமாய் தந்தையாய் உற்றானாய் அன்றோ உபகரிக்கிறான் )
——————————————————————-
(தலைச் சங்காடு -பூம் புகாரில் அருகில் -தலைச் சங்கு நாண் மதியம் முழு பெயர்
நாண் மதியப் பெருமாள்
ஆஹ்லாத கரம்
மதி -மனஸ்ஸூ அறிவு -சந்த்ரனுக்கும் மனஸ்ஸூக்கும் தொடர்பு
கண்களில் ஸூர்யன் தொடர்பு
தலைச் சங்காடு –
தலைக்காவேரி -தொடங்கும் இடம் இது -காவேரி உடைய தலை -கடலில் கலக்கும் இடம் -சங்குகள் கூடுமே –
தை நீராடல்
சீர்காழி வழியாகவும் மாயவரம் வழியாகவும்
முளைத்து எழுந்த திங்கள் தானாய்
கையில் உள்ளக பாஞ்ச ஜன்யம் -அநந்யார்ஹத்வம் காட்டும் சேவையாலேயே
வெஞ்சுடர் பெருமாள் உத்சவர்
செம்கமல தாயார்
சங்க காலப் பாடல்கள் -சிலப்பதிகாரம் –
இப்பாசுரம் ஒன்றே மங்களா சாசனம் இத்திவ்ய தேசத்துக்கு)
(நெஞ்சும் தாமுமாய் உசாவிக் கொண்டு அனுபவித்தார் கீழ்
இப்படி இருக்கும் பொழுது கண்கள் யுகபத் பரிபூர்ண திவ்ய தேசங்களைக் காணும் அவாவில்
அலை பாய்ந்ததை அருளிச் செய்கிறார்
பூமா -யஸ்ய நான்யத் பஸ்யதி –நான்யத்ர விஜானாதி -வேறு ஒன்றையும் அனுபவிக்காமல்
கண்களுக்கு பூர்ண விஷயங்கள் அன்றோ இவ்வர்ச்சா விசேஷங்கள் )
கண்ணார் கண்ண புரம் கடிகை கடி கமழும்
தண்ணார் தாமரை சூழ் தலைச் சங்க மேல் திசையுள்
விண்ணோர் நாண் மதியை விரிகின்ற வெஞ்சுடரை
கண்ணாரக் கண்டு கொண்டு களிக்கின்றது இங்கு என்று கொலோ —8-9-9-
இங்கு-இந்த சம்சார பாலைவனத்திலேயே
கண்ணார் கண்ண புரம்-
கண்டார்க்கு கண் மாறி வைக்க ஒண்ணாத படியான
திருக் கண்ண புரம் –
(தோள் கண்டார் தோளே கண்டார் போல் )
கடிகை –
திருக் கடிகை –
கடி கமழும் தண்ணார் தாமரை சூழ் தலைச் சங்க மேல் திசையுள் –
பரிமளத்தை புறப்படவிடா நிற்பதாய்
ஸ்ரமஹரமான தாமரைகளாலே சூழப் பட்ட
தலைச் சங்க காட்டில்
மேல் பார்ஸ்வத்தில் –
விண்ணோர் நாண் மதியை –
நித்ய ஸூரிகளுக்கு என்றும் ஒக்க அனுபாவ்யன் ஆனவன்
ஆயிற்று இங்கே வந்து ஸூலபன் ஆனான் –
விரிகின்ற வெஞ்சுடரை-
உதய காலத்திலே ஆதித்யனைப் போலே பிரதாபம்
விஞ்சி இருப்பது –
கண்ணாலே முகக்கலாம் படி இருப்பது –
கண்ணாரக் கண்டு கொண்டு களிக்கின்றது இங்கு என்று கொலோ-
ஒரு தேச விசேஷத்திலே போனால்
(போய் -இல்லாமல் போனால் -என்றார்
முயல் விட்டு காக்கை பின் போகாதவர் அன்றோ -ஆகவே போனால் என்கிறார் )
சதா தர்சநத்தாலே -அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்று களிக்குமத்தை
இங்கே
கண்ணாலே கண்டு களிக்கப் பெறுவது என்றோ -என்கிறார் –
இங்கே கண்களாலே காண்கை யாவது என் என்னில்
இவருடைய த்வரை இருக்கிற படி இறே-
(ஞான தர்சன பிராப்தி -மூன்று தசைகள் -அங்கு கிடைப்பதை இங்கு என்று த்வரிக்கிறார் –
நினைத்த போதே சென்று சேவிக்க ஆசைப்படுகிறார் –
இவருக்கு த்வரை -அவனோ சர்வ சக்தன் -பெறுவதற்கு தடை இல்லையே )
———————————————————–
செரு நீர் வேல் வலவன் கலிகன்றி மங்கையர் கோன்
கரு நீர் முகல் வண்ணன் கண்ண புரத்தானை
இரு நீரின் தமிழின் இன்னிசை மாலைகள் கொண்டு தொண்டீர்
வரு நீர் வையம் உய்ய விவை பாடி யாடுமினே —8-9-10-
(செரு நீர்-யுத்தம் செய்வதே ஸ்வ பாவம்
கை வந்த கலை -வேல் கையில் கொண்டவர்
தமிழின்-இனிய தமிழ்
வரு நீர் வையம்-கடல் சூழ்ந்த வையகம்
நீஞ்சல் உஜ்ஜீவனம் அடைய பாடி ஆடுங்கள்
நீங்கள் பாடி ஆட வையகம் உஜ்ஜீவிக்கும் என்றுமாம் )
செரு நீர் வேல் வலவன் கலிகன்றி மங்கையர் கோன்
செரு சேர் கையை
ஸ்வ பாவமாக உடைய வேல் கை வந்து இருக்குமவருமாய் –
பிரதி பஷ நிரசன ஸ்வ பாவ ருமாய்
திரு மங்கையில் உள்ளாருக்கு பிரதானரான ஆழ்வார் –
கரு நீர் முகல் வண்ணன் கண்ண புரத்தானை-
ஸ்ரமஹரமான வடிவை உடைய
சௌரிப் பெருமாளை யாயிற்று கவி பாடிற்று –
இரு நீரின் தமிழின் இன்னிசை மாலைகள் கொண்டு தொண்டீர்
விஷய வைலஷண்யத்தை ஒழியவே
மிக்க நன்மையை உடைத்தாய் இருக்கிற
இன் தமிழாகிற இசைத் தொடையைக் கொண்டு
கைங்கர்ய ருசியை உடையரான நீங்கள் –
(பாவின் இன்னிசைப் பாடித் திரிவேன் -இன்னிசையே போதும் -நாவினால் நவிற்று இன்பம் எய்த )
வரு நீர் வையம் உய்ய விவை பாடி யாடுமினே –
கடல் சூழ்ந்த பூமியிலே
இவற்றைப் பாடுவது ஆடுவதாய்
உஜ்ஜீவித்துப் போகப் பாருங்கோள் –
அன்றிக்கே –
மம சாதர்மம் ஆகதா சர்க்கேபி நோ பஜாயந்தே பிரளயே நவ்ய தந்திச (ஸ்ரீ கீதா ஸ்லோகம் ) -என்கிறபடியே
வரக் கடவதான பிரளயத்திலே புக்கு அழுந்தி
நோவு படாமே நீங்கள் இவற்றைக் கொண்டு பாடுவது ஆடுவதாக
உங்கள் சஞ்சாரத்தாலே ஜகத்தை
உஜ்ஜீவிப்பிக்கப் பாருங்கோள் என்னுதல் –
(பொலிக பொலிக பொலிக –கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல் மலியப் புகுந்து
இசை பாடி ஆடி யுழி தரக் கண்டோம் -5-2-1-போல் இவரும் இங்கு )
———-
ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.
கைம்முதல் இன்றித் தன்னுள்ளத்து உற்றானாய் நோக்கி
வெம் நரகை நீக்க மிக்கானாய்க் கணபுரம் நிற்பார்க்கு
அல்லால் பிறர்க்கு இன்மை தான் பகரும் சீர்க் கலியன்
சொல் தேன் பருகு வண்டாய் -79-
நிர்ஹேதுகமாக -உற்றானாய் வளர்த்து என்னுயிராகி நின்ற முதல்வன்
உற்றான் -ஒழிக்க ஒழியாத நவவித சம்பந்தம் உண்டே
கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ -அநந்யார்ஹத்வம் –
————————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply