ஸ்ரீ பெரிய திருமொழி-5-5—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

போக புஷ்ப தியாக ஞான மண்டபங்கள் கோயில் திருமலை பெருமாள் கோயில் திரு நாராயண புரம்
ஸந்நிஹிதனாக இருந்ததே – நம் போல்வாரைக் கைக் கொள்ளவே
குழந்தைகள் இல்லாத படுக்கையில் பள்ளி கொள்ள திரு உள்ளம் பொருந்துமோ –
நாயிகா பாவ பதிகங்கள் —
2-7- தாய் திரு விட வெந்தை
2-8-அஷ்ட புஜப் பெருமாள் மகள்
3-6-மகள் பாசுரம் திருவாலி
3-7-தாய் பாசுரம் திருவாலி
4-8-தாய் பாசுரம் பார்த்தன் பள்ளி பாடுவாள்
இது ஆறாவது -இதுவும் தாய் பாசுரம்

வெருவாதாள் பிரவேசம் –

தன்னைப் பேணாதே ரஷிக்குமவன்
(ஸ்ரீ யபதியாய் இருந்தும் வாமன -நரசிம்ம -மத்ஸ்ய -அன்னமாயும் -ராம கிருஷ்ணாதி அவதரித்து )
சந்நிஹிதனாய் இருக்க
அபேஷை உண்டாய் இருக்க
அபிமதமான கைங்கர்யம் பெறாமையாலே
தமக்குப் பிறந்த அவஸாத அதிசயத்தை

பகவத் விரஹத்தால் வந்த ஆற்றாமை யோடே இருக்கிறாள் ஒரு பிராட்டி
தசையை அனுசந்தித்து –
அவனை இவளோடு கூட்ட மாட்டு கிறிலேன்-
நோவு படாத படி பண்ண மாட்டு கிறிலேன் –
என்று நோவு படுகிறாள் ஒருத் திருத் தாயார் பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

(கீழ் பஹு பிரகாரமாக உபகரித்த அனுசந்தானம்
நினைத்தபடி முகம் காட்டப் பெறாமையால்
பார்த்தன் பள்ளி தொடங்கி -துன்பம்
பல திவ்ய தேசங்களில் புகுந்தும் பெறாமையால்
தருகிறேன் என்று முன் பதிகத்தில் சமாதானம் செய்தாலும்
பெறாமையால்
அபேக்ஷிதம் அனைத்தையும் அருளுபவர் எனக்கு உதவ வில்லையே என்று
நாயிகா பாவம்
அதுவும் திருத்தாயார் வார்த்தை யாக அருளிச் செய்கிறார்
என் மகளைச் செய்தனவை
கங்குலும் பகலும் நம்மாழ்வாருக்கு நாயிகா பாவம் திருத்தாயார்
திருவேங்கடம் – நாயிகா பாவம் இல்லை இருவருக்கும்
பேயாழ்வார் –69- நாயிகா பாவம் இருக்கும் சங்கை உண்டே
“முலையோ முழு முற்றும் போந்தில–பெருமான் மலையோ இவள் பரமே திருவேங்கடமென்று
கற்கின்ற வாசகமே” -திருவிருத்தம்,-60– தாய் பாசுரம்
பூர்வ உத்தர வாக்ய சரணாகதி நம்மாழ்வாரும் திரு மங்கை ஆழ்வாரும்
போக மண்டபம் அழகிய மணவாளன் இடம் தானே நாயகி பாவம் ஸ்பஷ்டமாகும் )

(பட்டர் -அனந்தாழ்வான் -தும்மிய ஸ்ரீ வைஷ்ணவர் வ்ருத்தாந்தம் உண்டே இங்கு
திருவரங்கத்தில் திரு வேங்கடம் சொல்ல -தாய் சொன்னதே –
மகள் திருவரங்கம் சொல்ல வயசான தாய் இப்படி சொன்னாள் என்றாரே
தர்மி ஐக்யம் உண்டே )

————————————————-

பெருமாள் உடைய இங்குத்தை வரவாறே பிடித்து
ஆற்றாமைக்கு உடலாம்படி காணும்
பிறந்த ப்ராவண்ய அதிசயம் –
திருப் பாண் ஆழ்வார் -அன்று நேர்ந்த நிசாசரரை -என்று ராவண வதம் தொடங்கி
பெருமாளை அடி ஒத்தினார் –
அது தெற்கு திரு வாசலாலே (நான்முகன் கோட்டை வாசல்)புகுந்து கிடந்தது –
மந்தி பாய் -என்று பரம பதமே தொடங்கி அடி ஒத்தினார் -(விண்ணவர் கோன் -நீதி வானவர் )
திரு மலையிலே புகுந்து கிடந்தது
அங்கே பார்த்த வாறே நின்ற படியைக் கண்டார் -(வானவர்கள் சந்தி செய்ய நின்றான் )
இன்னமும் போக்கிலே ஒருப்பாடு தோற்றி இருந்தது என்று
அவ்விடமே தொடங்கி
அடி ஒத்தினவாறே வடக்குத் திரு வாசலாலே புகுந்து
படுக்கை இங்கேயாய்  இருந்தது -என்று
பட்டர் அமலனாதி பிரான் அருளிச் செய்யா நிற்க
நான் கேட்டேன் என்று பிள்ளை(நம்பிள்ளை ) அருளிச் செய்தார் –
(அரையர் திருவேங்கட யாத்திரை செல்ல திரு உள்ளம் -பாசுரம் பாடச் சொல்லி –
போகாமல் ஒழிந்த ஐ திக்யம்
வட திரு வேங்கடம் -அரங்கம் -நின்றான் அணையான் )

(கீழே அரங்கத்தை
கோயிலை அன்றோ வாய் வெருவுவது
இஷுவாகு லப்தாய–விபீஷண -குலதனம் -உண்டே -அது தானே வரவாறு
இதற்கு திருப்பாண் ஆழ்வார் பாசுரம் பிரமாணம்
முதல் பாட்டில் -விண்ணவர் கோன் -விரையார் பொழில் வேங்கடவன் -அரங்கன் -நீதி வானவன் பரமபதம்
திரு உலகு அளந்து -காகுஸ்தன் இரண்டாம் பாட்டு
மந்தி பாய் -திரு வேங்கை அனுபவம்
அரி உருவையும்
ஆல பாலகனாய்
வெண்ணெய் உண்ட வாயனையும்
அனுபவித்து போந்து எல்லாம்
மற்று ஒன்றைக் காணாவே-என்று நிகமனம் –
இவரே அவராக இருந்து இங்கே வந்து சேர்ந்தவர் என்பதைக் காட்டியவாறே
இவரும் ஆலிலை மேய –ராம கிருஷ்ணாதிகளை -பெரிய பெருமாளாகவே அவதாரங்களைக்
கீழேயே அனுபவித்து
சேஷமாக திரு வேங்கடமும் சொல்ல வேண்டியதால் இங்கும் வேங்கடமே வேங்கடமே என்கிறாள்
அதிமாத்ர ப்ராவண்யத்துக்குச் சேர அடி ஒத்தின அவ்வளவு தான்
ப்ரேமம் இங்கேயே தான் என்றவாறு
ஆகவே பட்டர் திரு வாசல்களில் புகுந்து வந்தமை அருளிச் செய்கிறார் )

வெருவாதாள் வாய் வெருவி வேங்கடமே  வேங்கடமே என்கின்றாளால்
மருவாளால் என் குடங்கால் வாள் நெடுங்கண் துயில் மறந்தாள் வண்டார் கொண்டல்
உருவாளன் வானவர் தம் உயிராளன் ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட
திருவாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சிந்திக்கேனே—-5-5-1-

என்கின்றாளால்-என்கின்றாள் ஆல் -விஷாத ஸூசகம் –
மருவாள் என் குடங்கால் -குடங்கால் இருக்க கில்லாள் -திரு நெடும் தாண்டகத்திலும்-11- உண்டே
துயில் மறந்தாள்-பள்ளி கொள்ளாள்-திரு நெடும் தாண்டகத்திலும்-11- உண்டே

வெருவாதாள் –
அஞ்சாதாள் -என்றபடி
நெஞ்சில் களவு கலவாமையாலே
தனக்கு ஓடுகிறது சிலருக்கு அஞ்சி மறைத்தல்
சிலருக்கு வெளி இடுதல் செய்யும் பருவம் அல்லாதவள் –
அஞ்ச அறியாதவள் -என்கை –
தன்னால் மறைக்கல் ஆவது எல்லாம் மறைத்தாள் -மறைக்க முடியாமை

வாய் வெருவி வேங்கடமே  வேங்கடமே-
அவ்வளவேயோ
பரத்வத்தை விட்டு
வ்யூஹத்தை விட்டு
விபவங்களை விட்டு
உகந்து அருளின தேசத்தையே
வாய் வெருவி இருக்கும்படியாய் விழுந்தது
ஒரு கால் திருமலை -என்னா-பின்னையும் உள்ளுப் புக அறிகிறிலள்
(வேங்கடத்து அம்மா அப்பா என்றும் இல்லாமல் திவ்ய தேசத்திலே பிராவண்யம் இவளுக்கு )
காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா -9-6-7–என்கிறிலள்  –
(திருக் காட்கரை மருவிய மாயன் தன் மாயம் -9-6-1-என்பவர் போல் அன்றே இவர் )

என்கின்றாளால் –
அப்பேச்சு தனக்கு ஆகர்ஷகமாய் இருக்கிற படி –
சீதேதி மதுராம் வாணீம் -என்று சொல்லுகிறவர் தாம்
தீமதாம் -வரராய்
வார்த்தை தான் பிராட்டி விஷயமான பேச்சாய்
பிரிவால் வந்த மிடற்றில் துவட்சியாலே சொல்லுகிறது
சால மதுரமாய் இருக்கும் இறே
(அத்தலை இத்தலை யாயிற்று
இங்கு இவளோ அவனை நினைக்காமல் அவன் இருக்கும் இடம் )

பட்டர் -அழகிய மணவாள பெருமாள் -என்னும் போதும்
அனந்தாழ்வான் -திரு வேங்கடமுடையான் -என்னும் போதும்
பாவ பந்தம் அடையத் தோற்றி இருக்கும்படி காண்-என்று ஜீயர் –
(திரு மங்கை ஆழ்வார் கண்ணபுரம்
சோமாசி ஆண்டான் எம்பெருமானார்
நம்மாழ்வார் திருத் தொலை வில்லி மங்கலம் )

மருவாளால் என் குடங்கால்
மற்று ஒன்றை வாய் வெருவாள்
ஏதேனும் அளவிலும் முன்பு உன் மடியிலே வைத்து ஆற்றப் பார்க்கில் ஆறும் –
நீ அப்படி ஆஸ்வசிப்பித்தாலோ என்ன
பண்டு மருவிப் போந்தவள்
என் மடியிலே இப்போது மருவு கிறிலள்
அது தான் செய்யாமையும் இல்லை –
இவள் இசையாமையும் இல்லை –
அப்படி இவளால் செய்து தலைக் கட்டப் போகிறது இல்லை
தாய் மடி என்று மனிச்சடித்து -மனிச்சடித்து -முறையாலே சலிகை பண்ணி -செல்வாக்கு பண்ணி —
நெருப்பிலே இருக்கப் போகாது இறே –
தாய் மடியும் பொருந்தாத படி ஆர் மடி இவளை இப்படி
துஸ் சிஷை பண்ணி விட்டதோ
அறிகிறிலேன்
என் மடி அல்லது அறியாதவள்
என் மடியில் பொருந்து கிறிலள்  –

மடியில் இராள் ஆகில் படுக்கையிலே வளர்த்தி
உறங்குமாகில் பார்த்தாலோ என்ன –
வாள் நெடுங்கண் துயில் மறந்தாள் –
அது முதலிலே பிடித்து வ்யுத்புத்தி பண்ணுவிக்க வேணும் –

வாள் –
ஓர் ஆளும் ஓர் நோக்கும் நேராய் இருக்கை –

நெடுங்கண்-
போக்தாவால் புஜித்துக் கரை காண ஒண்ணாது காண் –
பெரிய ஊர் குடி வாங்கினாப் போலே
கண்ணில் பரப்பு இத்தனையும் நித்தரை குடி போன படி
ஆகையால் கண்ணில் பரப்பு இத்தனையும் தலைச் சுமை யாய்த்து –
(கரிய வாகி புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி –நீண்ட அப் பெரிய வாய –
இத்தனை விசேஷணங்கள் வேண்டாத படி நெடுங்கண் இவளுக்கு )

நோ பஜனம் ஸ்மரன்-என்னப் பண்ணினாரைச் சொல்லுகிறது மேல் –
வண்டார் கொண்டல் உருவாளன்
வடிவு அழகாலும்
சேஷ்டிதங்களாலும் ஆகவாய்த்து இப்படி பண்ணிற்று
அகவாயில் ஜலத்தின் உடைய ரஸ்யத்தையாலே
மேகத்தில் வண்டுகள் படிந்து இருக்கும் என்றுமாம் –

(கரை புரண்டு ஓடிடும் காவேரி –அரவம் சுமப்பதும் அஞ்சன மலையே –
அம்மலை பூத்தது அரவிந்த வனமே -அரவிந்த மலர் தோறும் அதிசயம் உளதே )

வண்டு –
செங்கட் கரு முகுலின் திரு உருப் போலே மலர் மேல் தொங்கிய வண்டினங்காள் -( நாச்சியார் திருமொழி )-என்று
வண்டி வடிவுக்கு போலியாச் சொல்லிற்று இறே –

வானவர் தம் உயிராளன் —
இவ்வடிவு தன்னை அரை ஷணம் கண்ணுக்கு இலக்காகாத  படி
மாற வைக்கில் ஒரு நாடாக ஜீவியாத படி பண்ணுமவன்

ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட திருவாளன்
கடலைக் கடைந்து பிராட்டியை லபித்தவன் —

என் மகளைச் செய்தனகள் –
அவளைப் பெறுகைக்கு செய்தது இத்தனையும்
போருமாய்த்து
இவளை நோவு படுத்துகைக்கு செய்ததுவும் –

எங்கனம் நான் சிந்திக்கேனே-
இவள் தன் சர்வ ஸ்வத்தையும் நேர்ந்து செய்தத்தை
என்னாலே நினைக்கப் போமோ

அவன் அகப்படுத்த
இவள் குமிழி நீர் உண்ணும் இத்தனை ஒழிய
கரையிலே நிற்கிற என்னால்
இன்னபடி -என்று நினைக்கப் போமோ –

——————————————-

மெய்ய மலையாளன்
மெய் மறந்தாரா மெய்யையே மறந்தாரா
கீழ் வட வேங்கடம்
தெற்கில் திரு மெய்யம்
பொய்ய மலை என்று எண்ணி
விரஹத்தால் இளைத்து வாய் வெருவுகிறாள்

கலையாளா வகலல்குல்  கன வளையும் கை யாளா என் செய்கேன்  நான்
விலையாளா வடியேனை வேண்டுதியோ  வேண்டாயோ என்னும் மெய்ய
மலையாளன் வானவர் தம் தலையாளன் மராமரம் ஏழு எய்த வென்றிச்
சிலையாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சிந்திக்கேனே –5-5-2-

கன-கனக -ககாரம் குறைந்து உள்ளது –
விலையாளா-கிரய விக்ரய அர்ஹதை – கைங்கர்யம் கொள்ள

கலையாளா வகலல்குல்  –
அடியில் அகன்று இருக்கும்  நிதம்ப பிரதேசம் ஆனது -அடியில் -விச்லேஷத்துக்கு  முன்பு –
இப்போது விரஹ க்ருசம் ஆகையாலே
பரியட்டத்தை ஆளுகிறது இல்லை

கன வளையும் கை யாளா –
ஸ்லாக்கியமான வளை கையிலே தங்குகிறது இல்லை –

என் செய்கேன்  நான்-
இவள் பர்யட்டப் பண்பும்
கையும் வளையுமே ஜீவனமாய் இருக்கக் கடவ
நான் எத்தைச் செய்வேன் –

1-பர்யட்டத்தையும் வளையும் தங்கும்படி பண்ணுவேனோ-
2-இவளை ஈடுபடாதபடி பண்ணுவேனோ-
3-அவனை ஆளாகக் கொள்ளும்படி பண்ணுவேனோ-
எத்தைச் செய்வேன் –

விலையாளா வடியேனை வேண்டுதியோ  வேண்டாயோ என்னும் –
இது இரண்டு படி –
விலையை ஆளாத அடியேனை
உன்னாலும் பிறர்க்கு ஆக்க ஒண்ணாத படி அனந்யார்ஹை யான என்னை

அன்றிக்கே
விலை யாளாக –
உனக்கு க்ரய விக்ர யர்ஹையாக
இஷ்ட விநியோஹ அர்ஹையாக
என்னை (ஜீவிக்கும் படி )கொள்வுதியோ (ஜீவிக்காதபடி )கொள்ளாயோ
நான் ஜீவியாது ஒழிய என்னும்
தாவத்த்யஹம்( ஸூந்தர –31)-இத்யாதிவத்  –
(ஸ்நேஹம் காட்டுவதில் எனக்கு சமமாக மேம்பட்டவர் இல்லை-அவர் முடிவு
அறியும் வரை உயிர் உடன் இருப்பேன் -தூதர் இடம் பிராட்டி )

மெய்ய மலையாளன் வானவர் தம் தலையாளன் –
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து –
தன் சௌலப்யத்தைக் காட்டி
விலையாளா யடியேனை வேண்டுதியோ -என்று
இவளை இட்டு சொல்லுவித்துக் கொள்ளுகைகாக
திரு மெய்யத்திலே வந்து சந்நிஹிதன்   ஆனான்

மெய்ய மலையாளன் வானவர் தம் தலையாளன்
இமையோர்க்கு என்னும் முன்னானாய் பின்னானார் வணங்கும் சோதியில் போலே –
யத்ர பூர்வே சாத்யாஸ் சந்தி தேவ -என்கிறபடியே
முற்பாடரான ஸூரிகளுக்கும் அவ்வருகாய் இருந்து வைத்து
இவ்வருகு உண்டான பிற்பாடருக்கும்
உதவுகைக்காக இறே இங்கு வந்ததும் –
(வைகுண்ட நாதன் அவனே மராமரம் எய்த ராமன்-ஸுவ்லப்யம் காட்டி )

மராமரம் ஏழு எய்த வென்றிச் சிலையாளன்
தன்னைக் கொண்டு கார்யம் கொள்ளாதார்க்கும்
மழு ஏந்திக் கொடுத்துக் கார்யம் செய்யுமவன் அன்றோ

என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சிந்திக்கேனே
மகா ராஜரை விஸ்வசிப்பைக்காக செய்தது இத்தனையும்
போரும் யாய்த்து
இவளை விஸ்வாசம் குலைக்குக்கு செய்ததுவும்
தானே ரஷகன் என்று இருக்கும் இவளை
வாய் விட்டுக் கூப்பிடும்படி பண்ணினானே
பெறுவிக்குமதைப் பார்த்தால் –
நமக்கு ஓன்று செய்யப் பிராப்தி உண்டோ -என்று இருக்கிறாள் இவள்
பெறுவது அவனை யானால் இருந்த இடத்தே இருக்கப் போமோ -என்று இருக்கிறாள் மகள் –

(வெறுத்து உள்ள திருத்தாயார்
விச்வாஸ ஹேது சொன்னது
அவ்வளவும் இவளை நோவு படுத்த
சுக்ரீவனுக்கு இஷ்ட அநிஷ்ட பிராப்தி பரிகர்த்வம் உபாயமாக கையில் வில் பிடித்து நிலை நாட்டிக் கொண்டவர்
இது எல்லாம் சத்ய பர்வதம் வந்து ப்ராப்ய வைலக்ஷண்யம் காட்டி -இவளது அத்யாவசியம் போக்கி
இங்கு இவள் தவிக்க
உறுதியை குலைத்து-ப்ராப்ய த்வரையால் கதற
வேண்டுதியோ வேண்டாதாயோ
இவள் புருஷார்த்தம் பெற துடிக்க
தாயார் உபாயம் என்று நினைப்பானோ என்ற கவலை
சுக்ரீவன் -உபாயம் அறியாமல் இருக்க -செய்தது அத்தனையும் இவளது விசுவாசம் குலைக்க வே
தானே ரக்ஷகன் -என்று இருப்பவள் வாய் விட்டு கூப்பிடும்படி பண்ணி
அவனைப் பார்த்தால் நமக்கு ஒன்றும் செய்ய வேண்டாம் தாய்
அடைவது அவன் ஆகில் இருக்கும் இடத்தில் இருக்க ஒட்டுமோ
உபாயம் என்று நினைப்பானோ அதி சங்கை தாயாருக்கு )

———————————————————

பதினாறாயிரம் பெண்களை உஜ்ஜீவிப்பித்தவன்
வாசி அறிந்து வருவான்
சொல்லி உறங்கப் பண்ணி இருக்கலாகாதோ என்று சொல்ல
அவர்களைக் குறித்து காடு வாழ் சாதியானவன் அன்றோ எவ்வாறு சொல்வேன் என்கிறார் –

மானாய மென்னோக்கி வாள் நெடுங்கண் கண்ணீர் மல்கும் வளையும் சோரும்
தேனாய நறுந்துழாய் அலங்கலின் திறம் பேசி  யுறங்காள் காண்மின்
கானாயன் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக நந்தன் பெற்ற
ஆனாயன் என் மகளைச் செய்தனகள் அம்மனைகீர் அறிகிலேனே–5-5-3-

பெற்ற-லபித்த -எடுத்த பேராளன் -புதையல் போல் அன்றோ லபித்தான் –

மானாய மென்னோக்கி –
முக்தமாய்
மிருதுவான நோக்கை உடையவள் –

வாள் நெடுங்கண் கண்ணீர் மல்கும் –
எதிர் தலையில் கண்ண நீரை உண்டாக்கக் கடவ
வாள் -என்று ஒளியாகவுமாம்
ஓர் ஆளும் ஓர் நோக்கும் நேரானது என்றுமாம்
நெடும் –
போக்தாவின் அளவில்லாத கண்
கண்ண நீரையும் தாங்கப் போகிறது இல்லை –

வளையும் சோரும்-
வளையையும் தாங்கப் போகிறது இல்லை –

நித்ரையாலே போது போக்கப் பார்த்தாலோ என்ன –
தேனாய நறுந்துழாய் அலங்கலின் திறம் பேசி  யுறங்காள் காண்மின்
ஒரு தேன் வெள்ளமே
ஒரு செவ்வியே
ஒரு தொடை அழகே
ஒரு குளிர்த்தியே
ஒரு மணமே
என்னா நின்றாள்  –

கானாயன் கடி மனையில்
தான் என்ன கார்யத்துக்காக வந்தான்
இப்போது செய்து திரிகிறது என்னம்புது என்று ஒன்றும் அறிகிலேன்
கானாயன் –
கானம் சேர்ந்து -என்னும்படி காட்டிலே தங்குமவன்
நாகரிகர் செயலிலே அன்வயிப்பதே
காட்டிலே மரங்களின் வாசி அறியக் கடவன்
பெண்களின் வாசி அறிவதே
கடி –
என்று அரண்
துன்னு படல்களை இட்டடைத்து சேமித்து  வைப்பார்கள் இறே

தயிர் உண்டு நெய் பருக நந்தன் பெற்ற –
நெய் உண்ணோம் பால் உண்ணோம் -கோபிமார் வார்த்தை
இது தாயார் வார்த்தை

மஹதா தபஸா சாபி தேவர்கள் அமிருதம் பெற்றால் போலே -என்று
சக்கரவர்த்தி நாடாள ஒரு பிள்ளை பெற வேணும் என்று
ஒரு நோன்பு நோற்று பெற்றால் போலே
கவ்யங்கள் பாழ் போக ஒண்ணாது
இவற்றை புஜிப்பான் ஒரு பிள்ளை வேணும்
என்று இதுக்கு அன்றோ இவனைப் பெற்றது –

ஆனாயன் என் மகளைச் செய்தனகள் அம்மனைகீர் அறிகிலேனே
பசுக்களை மேய்க்கும் அவனோ தான்
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹா-என்கிற
பகவத் உத்கர்ஷத்தை சிறிது அறியலாம்
ப்ரணய தாரையில் அவன் செய்து நிற்கிற இவை
என்னால் ஒன்றும் அறியப் போகிறன வில்லை   –
அறிகிறிலேனே-

கீழ் சொன்னவை ஒரு திங் மாத்ரம் இத்தனை
என்னால் அறியப் போகாது –
திங் மாத்ரம்-திக்கு ஏக தேசம் அல்பம் என்றபடி

——————————————————

அறிகிலேன் சொல்லக் கடவையோ
ஹித பரையான நீரும் பிரிய பரையான தோழிகளும் இருக்க வசப்படுத்தக் கூடாதோ -என்னில்
எங்கள் இருவரையும் த்யாஜ்ய கோடியில் ஆக்கி
வெண்ணெய் உண்ட வாயன் பள்ளி கொண்ட கோயிலையே பிதற்றுகிறாள் –

தாய் வாயில் சொல் கேளாள் தன் ஆயத்தோடு அணையாள்  தட மென் கொங்கை
யே யாரச் சாந்து அணியாள் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்
பேய் மாய முலை உண்டு இவ் வுலகுண்ட பெரு வயிற்றன் பேசில் நங்காய்
மா மாயன் என் மகளைச் செய்தனகள் மங்கைமீர் மதிக்கிலேனே —5-5-4

தாய் வாயில் சொல் கேளாள் –
ஏதேனும் தசையிலும் தாய் சொல்லிற்று செய்ய வேணும் இறே
ஜீவதோர் வாக்ய கரனாத்
(ப்ரத்யர்த்தம் பூரி போஜனாதி கயாயாம் பிண்ட தானாயா -இருக்கும் பொழுது சொன்ன சொல் படி கேட்கணும்)
தனக்கு ஓடுகிற பிரேமத்துக்கு அபிமதமாக
நான் வார்த்தை சொல்லினும்
தாய் வார்த்தை அன்றோ என்று இரா நின்றாள்
(தாய் வாயில் -விசேஷித்து சொன்னது தாய் என்பதே ஹேதுவாக
என் வாய் சொல்லாமல் தாய் வாய்
தாய் சொல் இல்லாமல் வாயில் அஹ்ருதயமாகப் பிரியமானத்தைச் சொன்னாலும் கேட்க மாட்டாள் )

கேளாள் –
அனுஷ்டியாது ஒழிய வமையாதோ
ஹிதம் சொல்லும் த்யாஜ்ய கோடியை விடுகிறாள்
பிரியம் சொல்லும் உபாதேயரை உபேஷிக்க வேணுமோ

தன் ஆயத்தோடு அணையாள்  –
தோழி மாறும் தாய்மாரோ பாதியாய் விட்டது
மாதரம் -என்றவோபாதி சகீன் இறே-( பிதரம் மாதரம் –ஸகீன் குரூன் -த்யஜ்ய )
இங்கே வந்தால் அன்னை பக்கல் அணை உண்டு
வார்த்தை கேளாது ஒழிகிறது இத்தனை
அவர்கள் பக்கல் அணைகையே பிடித்து செய்கிறிலள்
அவர்களை இட்டு வளைத்துக் கொள்ளலாம் என்னும் இடமும் போய்த்து –

தட மென் கொங்கையே யாரச் சாந்து அணியாள் –
தாய்மாரையும் தோழி மாரையும் விட்டால்
அவனை உபேஷிக்க வேணுமோ
அவன் வரக் கடவனே -ததர்த்தமாக பண்ணும் வியாபாரங்களை
தவிர்ந்தாள் என்றபடி –

போக்யதையாலும் பெருத்து
விரஹ சஹம் அல்லாத படி மிருதுவாயுமாய் இருக்கையாலே
அத்தையே பேணும் ஆய்த்து அல்லாத காலங்களில் –
கொங்கையே  ஆர-
அவன் வந்து இருந்தாலும் அவனை த்ருணீகரித்து
இத்தனையே பேணும் இத்தனை காண் –

கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழிய புகுந்து ஒரு நாள் தங்குமேல் – 
என்கிறபடியே விரஹ தசையிலும்
அவன் வருவான் என்று அலங்கரித்து இருப்பாள்

எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்-
தாயையும் அல்லாதாரையும் ஒக்க அபேஷிக்கும் படி
நிருபாதிக பந்துவான தன் பக்கலிலே பாவ பந்தத்தை
பிறப்பிக்கிறவன்
வர்த்திக்கிற தேசம் எங்கே -என்னா நின்றாள்
ஸ்வாமித்வம் இவை போலே ஔபாதிகம் அல்ல இறே
(இவை போலே-தாய் தோழி கர்மாதீனம் தானே
நிருபாதிக பந்து கிட்டிய பின் சோபாதிகம் விட்டேன்
திரு வரங்கம் போகாமல் இருப்பதால் கொங்கையில் சிறிதும் சாந்தி அணிய வில்லை )
எம்பெருமான் -என்னைத் தோற்பித்தவன் என்றே காணும் அவனை அறிவது
இது இறே நமஸ் சப்தார்த்தம் –

பேய் மாய முலை உண்டு -இவ்வுலகுண்ட பெரு வயிற்றன் பேசில் –
பேயினுடைய தாய் முலையாக வஞ்சித்து
கொடு வந்த முலை என்னுதல் –
பேய்  மாயும்படியாக என்னுதல் –
அனுகூல ரஷணத்தோடு
விரோதி நிரசனத்தோடு
வாசி இல்லை யாய்த்து அவனுக்கு ஊணாக –

நங்காய்-
மைத்ரேய -என்னுமா போலே

மா மாயன் என் மகளைச் செய்தனகள் –
பிரிவில் முடிய ஒண்ணாத ஆஸ்ரயங்களை உடையவன் –
ஒரு பால்யத்திலே பேய் முலை உண்பதாம்
செய்வது அறியாதே என் மகளைச் செய்தன

மங்கைமீர் –
நீங்களும் எல்லாம் ஒரு பருவம் ஸ்த்ரீத்வம்
உடையிகோளாய்  இருக்கிறிகோள் இறே –

மதிக்கிலேனே-
என்னால் இவ்வளவு என்று பரிச்சேதிக்கப் போகிறது இல்லை –

———————————————–

தாயும் தோழியும் த்யாஜ்யம் என்றால்
தானே ஆதரித்த லீலா உபகரணங்களைக் காட்டி ஆற்ற ஒண்ணாதோ என்ன
அதுவும் கார்யகரம் ஆகிறது இல்லை –

பூண் முலை மேல் சாந்தணியாள் பொரு கயல் கண் மை எழுதாள் பூவை பேணாள்
ஏண் அறியாள் எத்தனையும் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்
நாண் மலராள் நாயகனாய் நாம் அறிய வாய்ப்பாடி வளர்ந்த நம்பி
ஆண் மகனாய்  என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே —5-5-5-

எம்பெருமான்-கீழே ஸ்வாமித்வம் இங்கு அபகரித்த சர்வேஸ்வரன் –

பூண் முலை மேல் சாந்தணியாள் பொரு கயல் கண் மை எழுதாள் பூவை பேணாள்
பூண் முலை –
முத்தாரம் பூண்டு இருக்கிற -என்னுதல்
தானே ஆபரணமான முலை -என்னுதல் –
பொரு –
வேறு ஒன்றால் தன்னேற்றம் செய்ய ஒண்ணாத கண்களில்
மங்கள அர்த்தமாகவும் அஞ்சனம் எழுது கிறிலள்
பூவை –
தன்னது என்னத் தொடங்குவதுக்கு முன்னே
பேணிப் போரும் அவற்றையும் பேணு கிறிலள் –
(உன்னது என்னது என்று எம்பெருமான் இடம் சீறு பாறு சண்டை இப்பொழுது தானே –
அதுக்கு முன்பே பேணி இருக்கும் இவற்றையும் )

ஏண் அறியாள் –
அனுசந்தேய பதார்த்தம் இன்னது என்று
லோக யாத்ரையில் ஒன்றும் அனுசந்திக்கிறிலள்

எத்தனையும் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்
அதில் மனஸ் சஹகாரமும் வேண்டுகிறது இல்லை

(ஏக தேசமும் -பெருமானையும் லோக யாத்திரையும் எண்ண மாட்டாள்
ஆனால் திருவரங்கம் -மனஸ் ஸஹகாரம் வேண்டாதபடி வாயே கேட்க்கும்
மனோ பூர்வ வாக் உத்தரம் நிலை கடந்து மனாஸ் அவன் இடம் போனதே )

நாண் மலராள் நாயகனாய் நாம் அறிய வாய்ப்பாடி வளர்ந்த நம்பி
நாண் மலராள் –
ஸ்ரீ யபதி என்று ஒருத்தியை இட்டு அன்றோ
தம்மை வ்யபதேசிப்பது
(தன்னைப் படுத்தின -அவன் ஸ்ரீ யபதித்தவம் வெறுப்பாக தாத்பர்யம்
இப்படி படுத்தினால் அவள் முகம் கொடுப்பாளோ என்றபடி
இவனது ஸ்வரூப நிரூபகமே அவளாலே தான் )

நாம்  அறிய –
இது ஒரு பழங்கிணறு காண வர வேணுமோ
இவ்விசை இருந்தபடி எல்லாரும் அறியாமோ
(தூறு வார வேண்டுமோ
ஸ்ரீ பூமி நீளா தேவிமார் உடன் அமர் காதல் மகளிர்
ஆஷேபமே இல்லையே )

நம்பி-
பெண்களுக்கு கையாளாய்
அத்தாலே தன்னைப் பூர்ணனாக நினைத்து இருக்குமவன் அன்றோ

ஆண் மகனாய்
இவ்வளவில் வந்த வாறே -பதிம் விஸ்வஸ்ய -என்று
பிரபுத்வம் கொண்டாடா நின்றான் –
பெண் அடியான் முதன்மை கொண்டாடுவதே-

என் மகளைச் செய்தனகள் -அம்மனைமீர் அறிகிலேனே
இவள் ஒருத்தி அளவும் குறையும் காட்டில்
தம்முடைய முதன்மை ஒறுவாய்ப் போமோ  –

————————————————-

லீலா உபகரணங்களை உபேக்ஷிக்கும் படி கை கழிய விடலாமா
நா நா விதமாக ஹிதம் சொல்ல வேண்டாமோ என்ன
காதில் ஒன்றுமே ஏறாமல் திருவரங்கம் என்றே சொல்கிறாளே –

தாதாடு வன மாலை தாரானோ என்று என்று தளர்ந்தாள் காண்மின்
யாதானும் ஓன்று உரைக்கில் எம்பெருமான் திருவரங்கம் என்னும் பூ மேல்
மாதாளன் குடமாடி  மது சூதன் மன்னர்க்காய் முன்னம் சென்ற
தூதாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சொல்லுகேனே–5-5-6-

தாதாடு வனமாலை தாரானோ என்று என்று தளர்ந்தாள் காண்மின்
தாது மாறாத –
ஆடுகை யாவது -நடை யாடுகை
காட்டிலே தானும் தன்னேராயிரம் பிள்ளைகளும்
கூடப் பறித்து செவ்வி அழியாத மாலையை –
அது பரார்த்தம் என்று இருந்தோம் –

என்று என்று தளர்ந்தாள்-
அத்தை தாரானோ -என்று வெண்கலத் த்வநி போலே
ஒரு சொல்லுக்கு   ஒரு சொல்லு  ஓயா நின்றாள் –
இனி இந்த த்வனி தானும் கேளாது ஒழியப் புகுகிறேனோ –

யாதானும் ஓன்று உரைக்கில் எம்பெருமான் திருவரங்கம் என்னும்
இத்தனை அதி மாத்ர ப்ராவண்யம் ஆகாது காண்
இது குடிப் பிறப்புக்கு போராது காண்
இது தர்மி லோபத்தைப் பலிப்பிக்கும்  காண்
அவன் ஸ்த்ரரைணன் காண் ( பெண்கள் இடத்தில் காமுகன் காண்) -என்று ஒரு ஹித வசனம் பண்ணினால்
அதுக்கு உத்தரமாக என்னை அனந்யார்ஹை ஆக்கினவன் வர்த்திக்கிற தேசம் என்னா நின்றாள் –

பூ மேல் மாதாளன் –
ஒருத்தியை அநபாயினி யாம்படி பண்ணுவிக்கிறவன் அன்றோ –
பிரிவு என்று அறியாதபடி பண்ணுவிக்கிறவன் அன்றோ   –
(அபாயம் பிரிவி -அநபாயம் -பிரிவு இல்லாதபடி )

குடமாடி  –
பெண்களுக்காக மன்றிலே
தன்னை ஸ்வ ஸ்தானம் பண்ணினவன் அன்றோ
மங்கையர் தன் கண் களிப்ப கொன்னவிலும் கூத்தனாய் -பெரிய திரு மடல்
(கொன்னவிலும்–கொல்லுகையை நவிலும் கூத்தன் ஆட்டம் பார்க்கும் பர கால நாயகியை )
அவன் கையில் படுமது நன்று ஆய்த்து –

மது சூதன் –
ஆஸ்ரித விரோதி நிரசனமே என்றும் ஒக்க
யாத்ரையாய் போருமவன் –

மன்னர்க்காய் முன்னம் சென்ற தூதாளன் –
உகந்தாருக்கு தன்னை அழிவுக்கு இடுமவன் –

என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சொல்லுகேனே
இப்போது இவளை அழிவுக்கு இட்டு
தன்னைக் கொண்டு எழ நிற்கிற படியை
என்ன பாசுரம் இட்டுச் சொல்லுவேன் –

——————————————-

ஹித வசனம் பலியாத படி
மெய் மறந்தாளோ
நாங்களும் பெண்ணைப் பெற்றுள்ளோம் என்ன
இவளைப் போல் அன்றே உமது பெண்கள் –

வாராளும் இளம் கொங்கை வண்ணம் வேறாயின  வாறு  எண்ணாள் எண்ணில்
பேராளன் பேரல்லால் பேசாள் இப் பெண் பெற்றேன் என் செய்கேன் நான்
தாராளன் தண் குடந்தை நகராளன் ஐவர்க்காய் அமரில் உய்த்த
தேராளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் செப்புகேனே—5-5-7-

இப் பெண் -உள்ளே சந்தோஜம் தோன்ற சொல்கிறாள் –

வாராளும் இளம் கொங்கை வண்ணம் வேறாயின  வாறு  எண்ணாள் –
போக யோக்யமாய் -இலக்கைக் காட்டு காட்டு -என்று கிளர்ந்து வருகிற
சொல் கேளாப் பருவமான முலையானது-
வாராலே தாங்க வேண்டும்படியாய்
காட்டு காட்டு என்று வளருகிற முலை யானது
அபேஷிதம் பெறாமையாலே
தன்னிறம் மாறி விவரணம் ஆகிறபடி ஒன்றும் எண்ணு கிறிலள் –

ஸ்வ விஷயத்தில் ஞானம் ஒன்றும் இல்லை
விஸஸ்மார ததாத்மானம் -தன் தசையை எண்ணாதவள்
வேறு ஒன்றை எண்ணுகை இல்லை இறே-

எண்ணில்-பேராளன் பேரல்லால் பேசாள் –
எண்ணாது இருக்கும் போதாய்த்து பெரிது
அர்த்தாத் ஒன்றை எண்ணில்
சர்வாதிகனான சர்வேஸ்வரன் திரு நாமம் அல்லது சொல்லாள் –
அவாப பரமாம் காஷ்ட்டாம் மனசாஸ் சாபி சமயமே -இறே
ஆகையால் எண்ணுவதும் இல்லை
மன பூர்வகமாகச் சொல்லுவதும் இல்லை –

இப் பெண் பெற்றேன் என் செய்கேன் நான்    –
புறம்பு ஒன்றை நினையாமையும்
பகவத் விஷயத்தில் நினைவும் சொலவும் மாறாது இருக்கிற படியையும்
அனுசந்தித்து
பிறருக்கு  வெறுக்கிறாளாய்
தன் களிப்பு தோற்ற வார்த்தை சொல்லுகிறாள் –

ஸ்வ விஷயத்திலும் இதர விஷயத்திலும் விரக்தியும்
பகவத் விஷயத்தில் ப்ரீதியும் மாறாதே
செல்லும்படியாய் இருப்பாள் ஒரு பெண் பிள்ளையை
என்னைப் போலே புறம்பு பெற்றார் உண்டோ –
என்கிறாள் –

தாராளன் –
ரஷணத்துக்கு தனி மாலை இட்டு இருக்கிறவன் கிடீர்
ஸ்திரீ வதம் பண்ணுகிறான்

தண் குடந்தை நகராளன் –
குறைவற்றாரான நித்ய ஸூரிகளுக்காக அன்றிக்கே
குறைவாளர் உடைய ரஷணத்துக்காக கிட்டப்
படை வீடு செய்து கொடு கிடக்கிறவன் கிடீர் –

ஐவர்க்காய் அமரில் உய்த்த தேராளன் –
அத்தை அனுஷ்டான பர்யந்தம் ஆக்கி
உகந்தார்க்கு தன் மார்வில் அம்பு ஏற்குமவன் கிடீர்
தேசம் அறிய ஓர் சாரதியாய் திருவாய் மொழி -என்று
எல்லாரும் காண தன்னை சாரதி யாக்கி
ஆஸ்ரிதர்க்காக தன்னை அழிய மாறுமவன் இறே
(தேசம் அறிய ஓர் சாரதியாய்-ஆத்மாநாம் சாரதிம் பார்த்தன் ரதிம் சர்வ லோக
சாக்ஷியாக சகார- ராமானுஜர் இத்தையே வடமொழியாக்கி )

என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் செப்புகேனே
அப்போது பீஷ்மாதிகள் அம்புக்கு தன்னை இலக்கு ஆக்கினால் போலே
இப்போது தனக்காக இவளை காம ரசத்துக்கு இலக்கு ஆக்குகிறான்
இப்போது இவளை அழிவுக்கு இட்ட படி
என்னாலே பேசப் போமோ -என்கிறாள் –

———————————————————–

இப்பெண் பெற்றேன் பூட பாவமாக உகப்பு உள்ளிருக்க
அவர்கள் பாவஞ்ஞாராய் -பாவம் அறியாமல் –
உன்னையே நாட்டார் பழி சொல்லாரோ நீ உபேக்ஷிக்கலாமோ என்ன
பழி ஊர் பேச்சையே எருவாக காதல் பெருகிற்றே என்கிறாள்

உறவு ஆதும் இலள் என்று என்று ஒழியாது பலர் ஏசும் அலர் ஆயிற்று ஆல்
மறவாதே எப்பொழுதும் மாயவனே மாதவனே என்கின்றாளால்
பிறவாத பேராளன் பெண்ணாளன் மண்ணாளன் விண்ணோர் தங்கள்
அறவாளன் என் மகளைச்   செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே—-5-5-8-

பிறவாத-பிறப்பிலி என்றும் நம் ஜென்மம் போக்குபவனாயும் –

உறவு ஆதும் இலள் என்று என்று ஒழியாது பலர் ஏசும் அலர் ஆயிற்று ஆல்-
பெற்றாரோடு தோழி மாரோடு வாசி அற இவள் இப்படி
கண்ணுருவதே என்பார்கள் –
பழைமைகள் பார்த்து ஒன்றும் உறவுடையாளாய் இருக்கிறிலள்

பிதா நாம மூர்த்தஸ் சிரோரோக -என்றாய்த்து இருக்கிறது –
(தலை வேதனையின் உருவமே அப்பா )
த்ருஷ்ட்வா ஸ்த்தித்வா பஹிர் குரும்-(சிந்தயந்தி பற்றியது )-இதுக்கு பட்டர்
இவள் கிருஷ்ண விஷய பிரேமத்தில் புதியது உண்டிலள் காண்-என்று
அருளிச் செய்தார் -சிலரைக் கண்ணுக்கு தோற்றிற்று
இறே என்று
காசித் -ஒருத்தி புறப்பட்டு கிருஷ்ணன் பாடேறப் போனாள்
வழி காட்டினார் ஆர் என்ன
ப்ரேமாந்தா -பிரேமத்தால் இருண்டது
அவ்விருட்சி வழி காட்டப் போனாள்
இத்தையே சொல்லி விடாதே
பலர் ஏசும்படி
பழியாய் விழுந்தது –

மறவாதே எப்பொழுதும் –
ஸ்மாரகர் உண்டாக மறுப்பு வாராதே இறே
இவளையும் அவனையும் சொல்லி அடுத்து இறே பழி சொல்லுவது –
(நினைவு படுத்துகிறார்கள் அன்றோ இவர்கள் )

இப்படி பழி சொல்லுகிற போது
அவள் செய்கிறது என் எண்ணில் –

மாயவனே-
ஆசர்ய குண சேஷ்டிதங்களை உடையவனே

மாதவனே –
பிரணய தாரையிலே அவளுக்கு
ஆனைக்கு குதிரை வைக்கையாலே
பரம ரசிகன் ஆனவனே

என்கின்றாளால் –
என்னா நிற்கும்
அதாவது
கலக்கிற இடத்தில் தாழ நின்று பரிமாறின  படியையும்
அதுக்கடியான சீலத்தையும்
கலந்த போதை பரிமாற்றத்தின் வகைகளையும் –
இதில் ஸ்ரோத்ரியன் ஆகைக்கு வ்யுத்புத்தி பண்ணின இடத்தையும்
சொல்லா நிற்கும் –

பிறவாத பேராளன்-
ஆஸ்ரித அர்த்தமாக நூறாயிரம் படி
பிறவா நிற்கச் செய்தேயும்
ஒன்றும் செய்திலனாய்
ருணம் பிரவர்த்தமிவ -என்னும்படியான
ஆஸ்ரித விஷயத்தில் வ்யாமோஹாதிசயத்தை உடையவன்
பெரியோன் என்றபடி –

அன்றிக்கே
பிறவியை அறுப்பதான திரு நாமத்தை உடையவன்
துக்க நிவர்தகமான திரு நாமங்கள் கிடீர்
இவளுக்கு துக்கத்தை பண்ணுகிறது –

பெண்ணாளன் –
பெண் பிறந்தார் அடைய இப்படி பண்ணுமவன்
நங்கைமீர் -இத்யாதி –

மண்ணாளன் –
ரஷிதா ஜீவ லோகஸ்ய -ஸ்ரீ இராமாயண ஸ்லோகம் –

விண்ணோர் தங்கள் அறவாளன்-
நித்ய ஸூரிகள் தன் ஆன்ரு சம்சயத்தைக் கொண்டாட
அவர்களுக்கு ஓலக்கம் கொடுக்குமவன் –

என் மகளைச்   செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே –
இவள் அளவில் அவன் பண்ணின ஆன்ரு சம்சய பிரவ்ருத்திகள்
எனனால் பேசி முடிக்கப் போகாது  –

ஆன்ரு சம்சய பிரவ்ருத்திகள்-விபரீத லக்ஷணையால்
இவள் தீர்க்க சிந்தயந்தி அன்றோ

————————————————–

வேதங்கள் எல்லாம் சொல்லப்படுபவர்
வேத வித் -வேதங்களை அறிந்தவனுக்கு அவனே
பெண் பிள்ளை பழியே ஹேதுவாக
யார் குற்றம்
வெறுப்பது எதற்கு
குற்றம் பெண்ணது தானே ஆறி இருக்க வேண்டாமோ
சர்வஞ்ஞன் அறியானோ
வெட்கம் விட்டு பேச வைக்கும் படி காலம் தாழ்த்துவானோ
உபேக்ஷித்தவன்-ஆதலால் குற்றம் கூறினேன் என்கிறாள்

பந்தோடு கழல் மருவாள் பைங்கிளியும் பாலூட்டாள் பாவை பேணாள்
வந்தானோ திருவரங்கன் வாரானோ  என்று என்றே வளையும் சோரும்
சந்தோகன் பவுழியன் ஐந்து அழல் ஓம்பு தைத்ரியன் சாம வேதி
அந்தோ என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே —5-5-9-

வந்தானோ-வாரானோ-இரண்டு ஓ சந்தோஷத்தாலும் வருத்தத்தாலும் –
சந்தோகன்-சாம விசேஷ சாந்தோக்யம் – சந்தஸ்-பொதுவான வேதத்தைச் சொன்னதாகவும்

பந்தோடு கழல் மருவாள்
நித்ரா சமயத்திலும்
ஓன்று அல்லா ஓன்று கை விடாதவள்
இரண்டையும் விட்டாள் –

பைங்கிளியும் பாலூட்டாள் –
பெற்றோரை உபேஷிக்கை அன்றிக்கே
பிறந்தாரையும் உபேஷியா நின்றாள் –

பாவை பேணாள்  –
முன்பு இவளுக்கு சிலர் அநபிமதம் செய்கை யாவது
பாவை பேணாது ஒழிகை யாய்த்து
அத்தை தானே செய்யா நின்றாள் –
தஸ்மாத் பால்யே விவேகாத்மா யதேத ஸ்ரேயசே நர -ஆனபடியைச் சொல்லிற்று ஆய்த்து
ஆக பழைய யாத்ரையை அடையக் கை விட்டாள் -என்றபடி
பரித்யக்தா மயா லங்கா -பிராபக விஷயத்தில் தன்னையே உபாயமாகப் பற்றினால்
இதர உபாயங்களோபாதி
பிராப்ய விஷயத்திலும் அல்லாதவை பிராப்ய ஆபாசமாய்
த்யாஜ்யமாய் இருக்கும் இறே  –

(உறவு யாதும் இலள் கீழேயே பார்த்தோம் -அனைத்தையும் ஆகவே பைங்கிளியும் உம்மைத் தொகை
மரப்பாவையை ஆதரிக்காமல்
பந்து கழல் பாவை
ஸ்வா பதேசம் -பால்யத்தில் க்ரீடன -விளையாட்டு புத்தி யவ்வனம் விஷய சுகம் –
அஞ்ஞானம் அசக்தி வயசு ஆனதும் -தவிர்த்து –
ஸ்ரேயஸ்ஸுக்காக பகுத்தாத்மா -ப்ரஹ்ம விஷயத்திலே இருக்க வேண்டுமே
ப்ரஹ்லாதன் அசுரர் சிறுவர்களுக்கு சொல்லிக் கொடுத்தானே இத்தையே )

(பரித்யக்தா மயா லங்கா-பிராபக விஷயத்தில் தன்னையே உபாயமாகப் பற்றினால்
இதர உபாயங்களோபாதி
பிராப்ய விஷயத்திலும் அல்லாதவை பிராப்ய ஆபாசமாய்
த்யாஜ்யமாய் இருக்கும் இறே  –ரஹஸ்யரார்த்தம்
லங்கா -ப்ராப்யம் -ஆபாசம்
தனம்-உபாயம் -சிலருக்கு ப்ராப்யம் -ஆபாசம்
இவற்றை விட்டு வந்து
உபாயாந்தரங்களையும் ப்ரயோஜனாந்தரங்களையும் விட வேண்டுமே
யாவையும் திருமால் திரு நாமமே கூவும் நம்மாழ்வார் )

புறம்பு உள்ளவற்றை அடையக் கை விட்டாள்
அவன் வரவு நிச்சிதம் என்று இருந்தாள்-தன் தசையே செப்பேடாக

வந்தானோ திருவரங்கன் –
புறம்பு உள்ள பற்று அறுக்க வந்து இருக்கிறவன்
பற்று அற்றாலும் வந்து முகம் காட்டானோ என்னும் ஆய்த்து –
(சர்வ தர்மான் பரித்யஜ்ய விட்டே பற்ற வேண்டும் கீதாச்சார்யனை
திருவரங்கனோ பற்று அறுக்க அன்றோ இங்கே நித்ய சந்நிதி பண்ணி அருளுகிறது )

வாரானோ –
நான் இத் தசையோடே முடியும் இத்தனையோ
குணாதிகர் அல்லாத விஷயத்தில் பற்றோபாதியாய் விழுந்ததே
நமக்கு இவ்விஷயத்தில் பற்றும் -என்னும் –

என்று என்றே வளையும் சோரும்
பந்து கழல்கள் பாவையோ பாதியாய்
விழுந்தது வளையும்
சைதில்யம் உபயாந்த்யாசு –
(அநு ராகம் -உள்ளே காதல் – கண்ணன் சற்றே நகர்ந்ததும் உடல் இளைத்து
வளையல்கள் கழன்றனவே கோபிமார்களுக்கு )

இத்தை ஒரு அஞ்ஞன் செய்தாகில்
பொறுக்கல் யாய்த்து இறே
வேத விதேவசாஹம் -என்றவன் கிடீர் இத்தைச் செய்கிறான் –

சந்தோகன் –
சந்தோக சாமத்தை பிரித்துச் சொல்லுகிறதாகவுமாம் –
அன்றிக்கே
இத்தால் -வேதைக சமதி கம்யன் என்ற படியாய் –

பவுழியன் ஐந்து அழல் ஓம்பு தைத்ரியன் சாம வேதி
மேல் வேதாந்த வித்தமன் என்றதாகவுமாம் –

அந்தோ என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே
ஒரு சர்வஞ்ஞன் அஞ்ஞன் செய்வதைச் செய்தால்
இதுக்கு மேல் என்னால்
போக்கடி தேடப் போமோ

வந்து –
இவள் தன் திறத்து படாது இருக்க
தானே வந்து
இப்படி பண்ணி
தானே உபேஷிப்பதே
முன் தீமை செய்வானும் தானேயாய்
உபேஷிப்பானும் தானே யாவதே –
(பரம பக்தியை அன்றோ தீமை என்கிறாள் இத்தசை இருப்பதால் )

என் பொன் மகள் என்ற பாடம் ஆன போது
ஸ்லாக்யையான பெண் பிள்ளை என்ற படி –

—————————————————-

சேலுகளும் வயல் புடை சூழ் திருவரங்கத்து அம்மானைச் சிந்தை செய்த
நீல மலர்க் கண் மடவாள் நிறைவழிவைத் தாய் மொழிந்த வதனை நேரார்
கால வேல் பரகாலன் கலி கன்றி ஒலி மாலை கற்று வல்லார்
மாலை சேர் வெண் குடைக் கீழ் மன்னவராய்ப் பொன் உலகில் வாழ்வர் தாமே–5-5-10-

சேலுகளும் வயல் புடை சூழ் திருவரங்கத்து அம்மானைச் சிந்தை செய்த
திர்யக்குகளும் கூட களித்து வர்த்திக்கும் படியான
வயல் சூழ்ந்த கோயிலிலே
வர்த்திக்கிற சர்வேஸ்வரனை
சிந்தை செய்த படி யாய்த்து –

நீல மலர்க் கண் மடவாள் –
எதிர்த்தலை சிந்திக்கும்படியான
வடிவு அழகை உடையவள் –

நிறைவழிவைத் –
ஸ்த்ரீத்வம் அழிந்த படியை –

தாய் மொழிந்த வதனை –
அவள் தான் அறிவு நிறைவுகள் அழிந்து கிடக்க
திருத் தாயார்
அவள் தசையை சொன்ன பாசுரம் யாய்த்து

நேரார் கால வேல் பரகாலன் கலி கன்றி ஒலி -மாலை கற்று வல்லார்-
நான் எதிரி -என்று மார் தட்டி
நேரே நிற்கும் எதிரிகளுக்கு
ம்ருத்யுவான வேலை யுடையராகையாலே
பர காலன் என்று பேர் பெற்ற ஆழ்வார் அருளிச் செய்த
சொல் தொடையைக் கற்று வல்லார்கள் –
(இவரைப் போல் )
கைப்பறி பறிக்கை அன்றிக்கே
இதன் பொருளை ஆசார்யர்களோடே கற்று அறியுமவர்கள்

மாலை சேர் வெண் குடைக் கீழ் மன்னவராய்ப் பொன் உலகில் வாழ்வர் தாமே –
தனி முத்துக் குடைக் கீழே
இதில் அபேஷை உண்டாகில் ஐஸ்வர்யத்தை அனுபவித்து
பரம பதத்திலே நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள்-
(இங்கே-நாடு பரிபாலனம் – கடமை நிறைவேற்றி அங்கு ஸூக அனுபவம் )

———–

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

வெருவித் தான் தன்னது தன்பால் அரங்கன் அன்பை
இருத்த ஆட் செய்யா கூடாத்தன்னின் வருத்தம் போம்
ஆறு அறியாது ஆற்றாமைத் தாய்க் கூற்றாய் நீலனுரை
கூறல் வாய்க்குற்ற வகை -45-

அரங்கன் அன்பைத் தன்பால் இருத்த ஆறு அறியாமலும்
தன்னின் ஆட் செய்யா வருத்தம் போம் ஆறு அறியாமலும்
தன்னின் கூடா வருத்தம் போம் ஆறு அறியாமலும் -என்று அன்வயம் –

—————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading