திருவரங்கம் பெரிய கோயில் –
காவேரி விராஜா –பூ லோக ஸ்ரீ வைகுண்டம் -ஸப்த பிரகார மத்யே –
ஆதி சேஷ பீடம் -பிராணாவாகார விமானம்
பெரிய பிராட்டியார் -ஸ்ரீ ரெங்க தாமநி மோததே
பெரிய திரு மண்டபம் பெரிய அவசரம் பெரிய திரு நாள்
பெரிய கோயில் பெரிய பெருமாள் பெரிய ஜீயர் -அத்விதீயம் –50 பாசுரங்கள் இவருக்கே
அரங்கன் என்னில் மயலே பெருகும் ஸ்ரீ ராமானுஜன்
ஆலி நாடன் அமர்ந்து உறையும் வீதியும் உண்டே
பாடிய வாளன் படித்துறை
247 அருளிச் செயல்கள் மங்களா சாசனம்
பதின்மர் பாடும் பெருமாள் –
அருள் மாரி இவர்
இன்ப மாரி -இராப்பத்து தொடங்கி வைத்த பெருமை இவருக்கே –
——–
உந்தி மேல் பிரவேசம் –
நின் குரை கழல் தொழுவதோர் வகை எனக்கு அருள் புரியே
என்றார் கீழில் திரு மொழியிலே
அருள் புரியே என்று நீர் இங்கன் இழவாளராய் பிரார்த்திக்கிறது என்
நாமும் உமக்கு என்றும் உபகரித்திலோமோ
( அப்படியே மேலும் )
உபகரிக்க வன்றோ நாம்
கோயிலிலே வந்து
சந்நிஹிதர் யாய்த்து -என்று
இங்கனே சந்நிஹிதன் ஆன படியைக் காட்டிக் கொடுத்தான் –
அத்தை அனுசந்தித்து
ஹிருஷ்டராய்
இனித் தான் அறிவுடையார் அடங்கலும் பிராப்ய புத்தி பண்ணி
விடாதே வர்த்திக்கிற தேசம் என்று
அது தன்னைப் பேசி இனியர் ஆகிறார் –
( பரமனை அறிவிக்கும் அதுவே அறிவு வித்யை
பிராப்யம் கைங்கர்யம் போக்யம் அனைத்தும் தென்னரங்கமே )
கீழே எனக்கு அருள் புரியே-ஒரு கால் போல் ஒன்பதில் கால் சொல்லியும்
இன்னொரு தேசத்தில் முகம் கொடுப்பார் நசையால் வர
சித்த சமாதானம் பண்ண
ஹ்ருஷ்டரானார்
——————————————
உந்தி மேல் நான் முகனைப் படைத்தான் உலகுண்டவன்
எந்தை பெம்மான் இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால்
சந்தினொடு மணியும் கொழிக்கும் புனல் காவிரி
அந்தி போலும் நிறத்தார் வயல் சூழ் தென்னரங்கமே –5-4-1-
காவேரி ராஜன் மகள் -கா பொழில் விரிக்கும் காவிரி -பொன்னி -ஹேமா பதா –
தென் -அழகு என்றும் தெற்கு என்றும்
பெரிய பெருமாள் திரு நாபியில் பிரமதேவன் இங்கு இல்லை –
சதுர்முகன் அர்ச்சித்த பெரிய பெருமாள்
உந்தி மேல் நான் முகனைப் படைத்தான் –
பிரம்மா ஸ்ருஷ்டிக்கு அவ்வருகு உள்ளது அடங்கலும்
தானே கை தொட்டு ஆக்கி -பின்னை
இவ் வருகு உண்டான கார்ய வர்க்கத்தை
இவன் வழியாலே உண்டாக்க வேணும் -என்று
தன்னுடைய திரு நாபீ கமலத்திலே
சதுர் முகனை சிருஷ்டித்தவன் –
(கரண களேபர பிரதானம் பண்ணி அருளினதே கைங்கர்யம் கொள்ளவே தானே
கொடுக்காமல் போவேனோ என்ன சமாதானம் அடைந்து ஹ்ருஷ்டரானார் )
உலகுண்டவன் –
அப்படி கார்யம் கொள்ளுமவர்களை
பிரளயம் கொண்டவாறே
பூமியை எடுத்து வயிற்றிலே வைத்து நோக்கினவன்
(அப்படி கார்யம் கொள்ளுபவர்களை -என்றது கைங்கர்யம் செய்பவர்களை என்றவாறு )
எந்தை பெம்மான்-
சர்வ ஸ்ரஷ்டாவாய்
ஆபத் சகனுமாய் இருக்கும் இருப்பைக் காட்டி
என் குலத்துக்கு நாதன் ஆனவன் –
இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால்
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூரிகளுக்கு
நாதன் ஆனவன் வர்த்திக்கிற தேசம் என்னா நிற்பார்கள் –
அடியார்களை குழாங்களை– உடன் கூடுவது என்று கொலோ -என்று
சொல்லும் நித்ய ஸூரிகளும் இவ்விடத்தை விரும்பி
இங்கே படுகாடு கிடப்பார்கள் ஆய்த்து –
( அளப்பரிய ஆரமுதே அரங்கம் மேயும் அந்தணன்
ஏதேனுமாக ஜனிக்க பாரிப்பார்களே )
இவர்களைக் கொண்டு கைங்கர்யம் கொள்ளுமா போலே ருசி உடைய
தம்மையும் கொண்டு கைங்கர்யம் கொள்ளுவர் என்று ஹ்ருஷ்டர் ஆகிறார் –
சந்தினொடு மணியும் கொழிக்கும் புனல் காவிரி
சந்தனத்தோடே கூட மணிகளையும்
கொழித்து எறடா நின்றுள்ள புனலை உடைத்தான காவிரி
அந்தி போலும் நிறத்தார் வயல் சூழ் தென்னரங்கமே
அந்தி உண்டு சந்த்யை
அது போலே இருண்ட நிறத்தை உடைத்தான வயல்
இவற்றாலே சூழப் பட்ட தென்னரங்கமே
கரு நெல் சூழ் கண்ண மங்கை -என்னுமா போலே
கரு வடைந்த பயிர் ஆகையாலே
எங்கும் ஒக்க இருண்டு தோற்றுமாய்த்து –
சந்த்யை சிவந்து அன்றோ இருப்பது என்னும் நிர்பந்தம் உண்டாகில்
நுனி நெல் பழுத்த வயலாலே சூழப் பட்ட -என்கிறது –
————————————————–
இமையோர் தாதை சேஷ சாயி தானே
உலகு உண்டவன் ஆபத் சகன் அனுசந்தித்து
வ்யூஹ மூர்த்தி தானே இங்கே -வியூஹ ஸுவ்ஹார்த்தம் காட்டி அருளுகிறார் –
வையம் உண்டு ஆலிலை மேல் மேவு மாயன் மணி நீண் முடிப்
பை கொள் நாகத் தணையான் பயிலும் இடம் என்பரால்
தைய நல்லார் குழல் மாலையும் மற்றவர் தட முலைச்
செய்ய சாந்தும் கலந்து இழி புனல் சூழ் தென்னரங்கமே —5-4-2-
வையம் உண்டு ஆலிலை மேல் மேவு மாயன்
பிரளயத்திலே பூமிப் பரப்பு அடங்க எடுத்து
வயிற்றிலே வைத்து
ஒரு பவனான ஆலந்தளிரிலே
கண் வளர்ந்து அருளின
ஆச்சர்ய சக்தி உக்தன் –
மணி நீண் முடி –
ஆதி ராஜ்ய பிரகாசகமான
திரு அபிஷேகத்தை உடையனாய் -(ஆதி ராஜ்ய ஜல்பிதா )
பை கொள் நாகத் தணையான் பயிலும் இடம் என்பரால் –
கண் வளர்ந்து அருளுகைக்கு ஈடான
பரப்பை உடையனாய் இருக்கிற திரு வநந்த ஆழ்வான் மேலே
கண் வளர்ந்து அருளுகிறவன்
விடாதே வர்த்திக்கிற தேசம் என்று
சொல்லா நிற்பர்கள் –
(கங்குலும் பகலும் பதிகம் முழுவதும் சேஷ சாயித்தவம் இல்லையே
திரு விருத்தம் தான் முகில் வண்ணன் சேஷ சாயி என்று உண்டு )
தைய நல்லார் குழல் மாலையும் மற்றவர் தட முலைச் செய்ய சாந்தும் கலந்து இழி புனல் சூழ் தென்னரங்கமே –
குழலிலே பூக்களை வைத்து
முலையை குங்குமத்தால் அலங்கரித்து
இருந்துள்ளவர்கள்
படுக்கையை விட்டு ப்ரஹ்ம முகூர்த்தத்தில்
ஸ்நாநார்த்தமாக இழிவார்கள்
குழலிலே மாலையும் குங்குமுமாய்க் கலங்கி
ஓடா நிற்கும் யாய்த்து –
நல்லார் -என்கையாலே
வெள்வரைப் பதன் முன்னம் துறை படிந்து -என்கிறபடியே
சாத்விக காலத்திலே துறை படிந்தமை நன்மை –
————————————————–
கரண களேபரங்கள் பிரதானம்
வயிற்றில் வைத்து ரஷித்த
எந்தை பெம்மான் என்று என்னைத் தனக்காக்கிக் கொண்டதுக்கு
த்ருஷ்டாந்தம் இந்த பாசுரம்
திருக் குறளப்பன் சந்நிதி இன்றும் சேவிக்கலாம் இங்கு –
பண்டு இவ் வையம் அளப்பான் சென்று மாவலி கையில் நீர்
கொண்ட வாழித் தடக் கை குறளன் இடம் என்பாரால்
வண்டு பாடும் மதுவார் புனல் வந்திழி காவிரி
அண்ட நாறும் பொழில் சூழ்ந்து அழகார் தென்னரங்கமே —5-4-3-
பண்டு இவ் வையம் அளப்பான் சென்று மாவலி கையில் நீர் கொண்ட வாழித் தடக் கை குறளன் இடம் என்பாரால்
மகா பலியாலே அபஹ்ருதமான பூமியை
மீட்டுக் கொள்ளுகைக்காக
அவனுடைய யஞ்ஞ வாடத்திலே சென்று
திரு ஆழியைப் பிடிக்கக் கடவ கையாலே
நீரை ஏற்ற ஸ்ரீ வாமனன்
வர்த்திக்கிற தேசம் என்னா நிற்பார்கள் –
வண்டு பாடும் மதுவார் புனல் வந்திழி காவிரி அண்ட நாறும் பொழில் சூழ்ந்து அழகார் தென்னரங்கமே
ஜலத்தில் உண்டான ரஸ்யதையாலே
வண்டுகள் ஆனவை மொய்த்துக் கிடக்கும் யாய்த்து –
வண்டுகள் ஆனவை மது பான மத்தமாய்க் கொண்டு
பாடுகைக்கு ஈடான
மது ஒழுகா நின்றுள்ள புனல் ஆனது வந்திழி காவிரியாலும்
அண்ட அவகாசம் அடைய காந்தியா நின்றுள்ள பொழிலாலும்
சூழப் பட்டு
தர்ச நீயமான தென்னரங்கமே
அண்ட நாறும் என்று –
நாவி கஸ்தூரி துடக்கமானவற்றைச் சொல்லவுமாம் –
(அண்டம் – ஆகாச வாசகம் இல்லாமல் கஸ்தூரி வாசனைத் த்ரவ்யங்கள் என்றபடி )
———————————————————-
நம் பெருமாளே நானே ராமன் உடையவர் இடம் சோதி வாய் திறந்து அருளிச் செய்தார்
ஒன்பது இடங்களில் ராமர் கிருஷ்ணர் சந்நதிகள் உண்டே இங்கு –
என்னை தனக்காகக் கொண்டு
த்ருஷ்டாந்தம் இலங்கை பெற்றது
சம்சார சமுத்திர மத்யகதனான
மனோ ரஜனீயன் அந்நாள் நீ தந்த ஆக்கை வழி உழன்ற என்னை மாற்றி
இவ்வளவும் செய்தவன் கைங்கர்யம் கொடுக்காமல் போவேனோ
ஸஹ பத்நயா விசாலாஷ்யா -பெருமாளுக்கு உபாஸ்யரான பெரிய பெருமாளை
அவராகவே சொன்னவர் திரு மாலையிலும் உண்டே
விளைத்த வெம்போர் விறல் வாளரக்கன் நகர் பாழ் பட
வளைத்த வல் வில் தடக்கை யவனுக்கு இடம் என்பரால்
துளைக்கை யானை மருப்பும் அகிலும் கொணர்ந்து உந்தி முன்
திளைக்கும் செல்வப் புனல் காவிரி சூழ் தென்னரங்கமே –5-4-4-
காவேரிக்கு லீலா ரசமாகிய ஐஸ்வர்யம் –
விளைத்த வெம்போர் விறல் வாளரக்கன் நகர் பாழ் பட
வெம்போரை விளைப்பானாய்
பெரு மிடுக்கனாய்
அத்தாலே வழி கெட வர்த்திப்பானாய்
சாயுதனாய் உருக்கிற
ராஷசன் உடைய நகரமானது
ஸ்மசான சத்ருசியாக வேணும்( ஸூந்தர –26-24)-என்கிறபடியே
பாழ் பட்டுப் போம் படி யாக
வளைத்த வல் வில் தடக்கை யவனுக்கு இடம் என்பரால் –
வளைத்த பெரும் மிடுக்கை உடைத்தான வில்லையும்
அதுக்கு ஆஸ்ரயமாக போரும்படியான கையையும்
உடைய சக்கரவர்த்தி திருமகன்
சாய்ந்து அருளுகிற தேசம் என்னா நிற்பார்கள்
செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார் மருவிய பெரிய கோயில் -என்பர்கள் இறே –
துளைக்கை யானை மருப்பும் அகிலும் கொணர்ந்து உந்தி முன்
துளையை உடைத்தான கையை உடைத்தான ஆனைக் கொம்பும்
அகிலும்
துடக்கமான வற்றைக் கொடு வந்து
கொள்வார் உண்டோ என்று கொடுப்பாரைப் போலே தள்ளி –
திளைக்கும் செல்வப் புனல் காவிரி சூழ் தென்னரங்கமே
தன் செருக்காலே லீலா ரசம்
அனுபவியா நின்றுள்ள புனலை உடைத்தான –
சக்கரவர்த்தி திருமகன் படி உண்டாய்த்து காவிரிக்கும் –
————————————————————
என்னை தீ மனம் கெடுத்தாய் என்பதுக்கு திருஷ்டாந்தம்
மனோ ரஜனீசியன்
உபகாரம் எந்தை பெம்மான்
தசேந்த்ரியன் கோரம்-த்ருஷ்டாந்தம் –
வம்புலாம் கூந்தல் மண்டோதரி காதலன் வான் புக
அம்பு தன்னால் முனிந்த வழகன் இடம் என்பரால்
உம்பர் கோனும் உலகு ஏழும் வந்து ஈண்டி வணங்கும் நற்
செம்பொனாரும் மதிள் சூழ்ந்து அழகார் தென்னரங்கமே —5-4-5-
மண்டோதரி காதலன்-பேர் அழகி – நல்லவள் – இவளை விட்டு வந்த ராவணன் –
வழகன்-வீர ஸ்ரீ யைச் சொன்னவாறு –
வம்புலாம் கூந்தல் மண்டோதரி காதலன் வான் புக
பிராட்டியோடு சக்கரவர்த்தி திருமகன் அனுபவிக்க
தானும் மண்டோதரி கூட அனுபவிக்கை அன்றிக்கே
வழி கெட
அனுபவிப்பதாகப் பாரித்த ராவணன் ஆனவன்
சித்ர வதத்தாலே வீர ஸ்வர்க்கத்தை பிராபிக்க
அம்பு தன்னால் முனிந்த வழகன் இடம் என்பரால்
அவர்களைப் போலே வழி கெட அன்றிக்கே
நேர் கொடு நேரே அம்பாலே
அழியச் செய்த வீர ஸ்ரீ யால்
குறை வற்ற சக்கரவர்த்தி திரு மகன் வர்த்திக்கிற தேசம்
என்னா நிற்பர்கள்
எதிரிகளும் ரஜ்ஞ நீயச்ய விக்ரமை -என்னா நிற்பார்கள் இறே –
உம்பர் கோனும் உலகு ஏழும் வந்து ஈண்டி வணங்கும் –
தேவர்களுக்கு நிர்வாஹகனான ப்ரஹ்மாவும்
அவனாலே ஸ்ருஷ்டமான ஜகத்தில் உள்ளாரும்
திரண்டு ஆஸ்ரயிக்கும் படியாய் –
நற் செம்பொனாரும் மதிள் சூழ்ந்து அழகார் தென்னரங்கமே
ஸ்ப்ருஹநீயமாய்
உள்ளுச் சாய்ந்த வஸ்துவுக்கு அரணாக போரும்படியான
மதிளாலே
சூழப் பட்டு
தர்ச நீயமான தென்னரங்கமே –
——————————————————
கள்ளத்தே –தொண்டுக்கே கோலம் பூண்ட கள்ளன்
தாயைப் போலே வேஷம்
அத்தையும் தவிர்ந்து
மருவித் தொழும் மனமே தந்ததுக்கு த்ருஷ்டாந்தம் இது
கலை யுடுத்த வகலல்குல் வன் பேய் மகள் தாயென
முலை கொடுத்தாள் உயிர் உண்டவன் வாழும் இடம் என்பரால்
குலை எடுத்த கதலிப் பொழிலூடும் வந்துந்தி முன்
அலை எடுக்கும் புனல் காவிரி சூழ் தென்னரங்கமே—5-4-6-
கலை யுடுத்த வகலல்குல் வன் பேய் மகள் தாயென
யசோதை பிராட்டியைப் போலே
அலங்கரித்துக் கொண்டு
கலையை உடுத்து
அகன்ற நிதம்ப பிரதேசத்தை உடைய
வன் பேய் மகள் –
யசோதை பிராட்டியில் இவளுக்கு ஓர் ஏற்றம் -வன்மை யாய்த்து
தாய் என –
யசோதை பிராட்டியைப் போலே
பரிவு எல்லாம் தோற்ற
ஒசழக்காக தூக்கி எடுத்து –
முலை கொடுத்தாள் உயிர் உண்டவன் வாழும் இடம் என்பரால்
இவனும் முலை உண்ணா விடில் தரியாதானாய்
அவள் உயிரை முடித்தவன்
இன்னும் இங்கன் ஒத்த விரோதிகளைப் போக்குகைகாக
அணித்தாக வந்து வர்த்திக்கிற தேசம்
என்னா நிற்பர்கள் –
குலை எடுத்த கதலிப் பொழிலூடும் வந்துந்தி முன்
ஓங்கின குலைகளை உடைத்தாய் இருந்துள்ள
வாழைச் சோலைக்கு உள்ளே வந்து புகுந்து
அவற்றை அடையப் பறித்து கொடு போந்து
சுமை தள்ளுவாரைப் போலே தள்ளா நின்றுள்ள
அலை எடுக்கும் புனல் காவிரி சூழ் தென்னரங்கமே
புனலை உடைத்தான காவிரி சூழ் தென்னரங்கமே
கிருஷ்ணன் விரோதிகளை போக்குமா போலே
நேரே நின்ற மரங்களை
பறித்துக் கொடு வந்து
பொகடா நிற்கும் ஆய்த்து –
———————————————
திருவடி பலத்தால்
திருக்கால் ஆண்ட பிரகாரங்கள் மூன்றும்
சகடாசுரனும் கஞ்சனையும் மல்\லர்களையும்
கைங்கர்ய விரோதியையும் போக்கி அருளுவான் –
இவர்களுக்கு எல்லாம் திருவடி சம்பந்தம் கொடுத்தவன் உமக்கு தர மாட்டேனோ –
கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும் சகடமும் காலினால்
துஞ்ச வென்ற சுடர் ஆழியான் வாழும் இடம் என்பரால்
மஞ்சு சேர் மாளிகை நீடு அகில் புகையும் மறையோர்
செஞ் சொல் வேள்விப் புகையும் கமழும் தென்னரங்கமே –5-4-7-
நெஞ்சும்-மனசில் உள்ள குரூரம் –
கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும் சகடமும் –
கஞ்சன் உடைய திண்ணிய நெஞ்சும்
அவன் தன் கார்யத்தில் அவன் தன்னிலும் பரிவர் ஆகையாலே
கடியராய் இருக்கிற மல்லரும்
கடுமை தோன்றாதபடி மறைய நின்ற சகடமும் –
காலினால் துஞ்ச வென்ற சுடர் ஆழியான் வாழும் இடம் என்பரால்
திரு ஆழியும் கையிலே உண்டாய் இருக்கச் செய்தே
அது கொண்டு வ்யாபாரிக்கப் பற்றாமையாலே
திருக் காலாண்ட பெருமான் -என்கிறபடியே
திருவடிகளாலே அழியச் செய்தவன்
வர்த்திக்கிற தேசம் -என்பர்கள்
தலை மயிரைப் பிடித்து கீழே விழ விட்டு
முதுகிலே திருவடிகளாலே பாய்ந்ததும்
மல்ல வர்க்கத்தைத் தானே திருவடிகளாலே நெருக்கியும்
முலை வரவு தாழ்த்து நீட்டின வ்யாஜத்தாலே உதைத்தும்
திருவடிகளாலே இறே நிரசித்தது –
மஞ்சு சேர் மாளிகை நீடு அகில் புகையும் –
மேக பதத்து அளவும் செல்ல ஓங்கின
மாளிகைகளிலே அகில்களாலே
ப்ரவர்த்திப்பித்த ஓங்கின புகையும் –
மறையோர்-செஞ்சொல் வேள்விப் புகையும் கமழும் தென்னரங்கமே
வேத விஹிதமான படியே
அங்குத்தை ப்ராஹ்மணர் யாகாதிகளிலே உண்டாக்கின
ஹோம தூமமும்
இவை தன்னிலே விரவிக் கொண்டு
கமழா நின்றுள்ள தென்னரங்கமே –
———————————————
பஹு வித உபகாரங்கள் கீழே
அதுவும் போராது என்று பல அவதாரங்கள் இவருக்கு உபகரிக்கவே
அநேக அவதாரங்களைப் பண்ணிக் கொண்டு வந்து
ரஷகன் ஆனவன்
அவ்வவதார காலங்களிலே பிற் பாடர்க்கும் இழக்க
வேண்டாத படி
வந்து சந்நிஹிதனான தேசம் கோயில் -என்கிறார்-
(நரசிங்கம் ரெங்கேந்திர சிங்கம்
அமலன் -ஒரே தூண் இல்லை ஒருவனுக்கா இல்லை )
ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய்த்
தானுமாய தரணித் தலைவன் இடம் என்பரால்
வானும் மண்ணும் நிறையப் புகுந்து ஈண்டி வணங்கும் நல்
தேனும் பாலும் கலந்து அன்னவர் சேர் தென்னரங்கமே —5-4-8-
கலந்து அன்னவர் -ஏக ரசம் -பஞ்சாம்ருதம் பக்த ஜனங்கள்
அவதாரங்கள் ஐந்தைச் சொல்லி தானுமாய் போல் இங்கும்
ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய்த்
பிரளயம் கொண்ட ஜகத்தை எடுத்துக் கொண்டு ஏறுகைக்காக
வராஹ வேஷத்தை பரிக்ரஹித்தும்
அப்படிப் பட்ட பிரளயம் தன்னை தன் செலுவிலே அடக்க வற்றான மத்ஸ்யமாயும்
மந்தரம் கீழ் விழாதபடி தரிக்க வல்ல ஆமையாயும்
இப்படி ஒரு வடிவு கொண்டு உதவுகை அன்றிக்கே
சேராத வடிவைச் சேர்த்துக் கொடு வந்து தோற்றின நரசிம்ஹமாயும்
நாட்டில் வாமனர்கள் அடங்கலும் வளர்ந்து அருளின இடம்
என்னும்படி குறள் வடிவைக் கொண்டும் –
தானுமாய தரணித் தலைவன் இடம் என்பரால் –
முன்னும் இராமனாய் தானாய் பின்னும் இராமனாய் -என்னக் கடவது இறே –
அல்லாத இடங்கள் சக்தி ஏக தேசம்
அவன் தானே வந்தான் என்னக் கடவது இறே ராமாவதாரத்தை
(பூர்ணனாய் சகல கல்யாண பூர்ணன்
சக்தி அவதாரம் என்றது கல்யாண குணங்கள் எல்லாம் ஸ்பஷ்டம் இங்கேயே என்றவாறு )
அப்படியே பூமிப் பரப்பு அடங்கலும் நிர்வாஹகனான
சக்கரவர்த்தி திருமகன் வர்த்திக்கிற தேசம் என்பர்கள் –
வானும் மண்ணும் நிறையப் புகுந்து ஈண்டி வணங்கும் –
பரம பதத்தில் நித்ய ஸூரிகளும்
பூமியில் உள்ள சம்சாரிகளும்
நிறையப் புகுந்து திரண்டு ஆஸ்ரயிக்க-
நல் தேனும் பாலும் கலந்து அன்னவர் சேர் தென்னரங்கமே
நன்றான தேனும் பாலும் கலந்தால் போலே யாய்த்து
இங்கு உள்ளார் எல்லாரும் தங்களிலே
ஒரு மிடறாக இனியராய் இருக்கும் படி –
விஜாதீய த்ரவ்யம் கலந்தால் போல் அன்றியே
சஜாதீயம் கலந்தால் போலே யாய்த்து –
நித்ய ஸூரிகள் சம்சாரிகள் என்கிற வாசி தெரியாதே
ஒரு நீராய்ப் பரிமாறா நிற்பர்கள் –
தேசாந்தரங்களில் முன்பு கண்டு அறியாதார்
வந்து போகப் புக்கால்
பிரிந்துபோகா நின்றோம் -என்று
கண்ணும் கண்ண நீருமாய் இறே இருப்பது –
(தேசாந்தர நித்யர்கள் கண்ணநீராய் செல்வார்கள் என்றதாயிற்று )
—————————————————–
சர்வ வியாப்தி ஆனதும் உமக்காகவே என்கிறார் இத்தால் –
சேயன் என்றும் மிகப் பெரியன் நுண் நேர்மையினாய விம்
மாயையை யாரும் யறியா வகையான் இடம் என்பரால்
வேயின் முத்தும் மணியும் கொணர்ந்தார் புனல் காவிரி
ஆய பொன் மா மதிள் சூழ்ந்த அழகார் தென்னரங்கமே—5-4-9-
சேயன் என்றும் மிகப் பெரியன் நுண் நேர்மையினாய விம் மாயையை –
தூரஸ்தனாய்
சர்வேஸ்வரனாய்
இருக்கும் இருப்பு
ஸூஷ்மத்வத்தில் அதி ஸூஷ்மமான பதார்த்தங்கள் எங்கும் புக்கு
வியாபித்து தரித்துக் கொடு நிற்கை யாகிற
இந்த ஆச்சர்ய சக்தி யோகம் –
யாரும் யறியா வகையான் இடம் என்பரால் –
எத்தனை ஏலும் அளவுடையராலும் ஒரு நாளும் அறிய ஒண்ணாத படி
இருக்கிறவன் வர்த்திக்கிற தேசம் –
வேயின் முத்தும் மணியும் கொணர்ந்தார் புனல் காவிரி
சஹ்ய பர்வதத்தில் உண்டான வேய்கள் உதிர்த்த முத்தும்
அதில் உண்டான மணிகளையும் கொண்டு வந்து
எறடா நின்றுள்ள
மிக்க புனலை உடைத்தான காவிரி –
ஆய பொன் மா மதிள் சூழ்ந்த அழகார் தென்னரங்கமே –
உள்ளுச் சாய்ந்த வஸ்துவுக்கு
அரணாகப் போரும்படியான
ஸ்ப்ருஹநீயமாய் இருந்துள்ள
மதிள்களாலே சூழப்பட்ட
தர்ஸ நீயமான கோயில் –
——————————–
அல்லி மாதர் அமரும் திரு மார்வன் அரங்கத்தைக்
கல்லின் மன்னு மதிள் மங்கையர் கோன் கலி கன்றி சொல்
நல்லிசை மாலைகள் நாலிரண்டும் இரண்டும் உடன்
வல்லவர் தாம் உலகாண்டு பின் வானுலகு ஆள்வரே –5-4-10-
அல்லி மாதர் அமரும் திரு மார்வன் அரங்கத்தைக்
அல்லி மாதர் அமரும் திரு மார்வன் அரங்கத்தை
யாய்த்துக் கவி பாடிற்று
இம் மார்வை விட்டு பழைய தாமரைப் பூவிலே
போய் இருக்க வேண்டில் செய்வது என்
என்று அஞ்சும்படியான மார்வைப் படைத்தவன் –
அகலகில்லேன் -என்று இறே வார்த்தை –
கல்லின் மன்னு மதிள் மங்கையர் கோன் கலி கன்றி சொல்
அரணாகப் போரும்படியான
மதிளாலே சூழப் பட்ட
திரு மங்கையில் உள்ளாருக்கு
நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்த
நல்லிசை மாலைகள் நாலிரண்டும் இரண்டும் உடன்
நன்றான இசையோடு கூடின
தொடை நாலிரண்டு இரண்டினையும் –
இதில் உண்டான ஆதரத்தாலே சேர்த்து அனுபவிக்கிறார்
உந்தி – வையம் -இரண்டும் உலகுண்ட வடதள சாயி விஷயம்
விளைத்த -வம்பு -ராமன் விஷயம்
கலை -கஞ்சன் -கிருஷ்ண விஷயம்
சேயன் -அல்லி -ஸ்ரீ யபதி விஷயம்
இப்படி நாலு இரண்டும்
இப்படி இவற்றில் ஒரு ப்ரேமமும் ஆசையும்
பண்டு -திருக் குறளன் விஷயம்
ஏனம் -சகல அவதார சமுதாய விஷயம்
இப்படி இரண்டும்-
இப்படி இவற்றில் ஒரு ப்ரேமமும் ஆசையும்
வல்லவர் தாம் உலகாண்டு பின் வானுலகு ஆள்வரே
இவற்றை சாபிப்ராயமாக அப்யசிக்க வல்லார்கள்
கோயிலிலே இருந்து அனுபவித்து
(உலகாண்டு-அரங்கத்து திரு முற்றத்து அடியாராகி உலகு என்றாலே அரங்கம் தானே )
பின்னை சரீர சமனந்தரம்
பரம பதம் தாங்கள் இட்ட வழக்காக பெறுவர்கள் –
————–
ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.
உந்தி அயன் ஓங்குவித்து வையமாக்கிக் காத்து அழித்து
எங்கும் கரந்து உறையும் மாயமுடை எந்தை தன்மை
தன் நன்மைக்கு என்று எண்ணித் தென்னரங்கம் பாடு நீலன்
சொல் மறவாமல் வாய் வெருவு -44-
மாயம் -ஆச்சர்யம் -மித்யை பொய் அன்று –
எந்தை தன்மை -எம்பெருமானுக்கு நமக்கும் உள்ள ஒழிக்க ஒழியாத சம்பந்தம் அறிவதற்கு மேல் ஒரு ஸூஹ்ருதம் உண்டோ
பெருமாள் அடியார்க்கு அருள் செய்தமை தனது நன்மைக்கு என்று யார் ஒருவன் எண்ணுகிறானோ
அவனே உண்மையான உத்தம ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம் உடையவன் –
——————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply