வையம் காத்த பெருமாள்
ஜகத் ரக்ஷகன்
அம்பரீஷ வரதன்
காவேரி வெள்ளம் வந்து
வேறே இடத்தில் மறைந்து
ராணி மங்கம்பாள் ஸ்வப்னம் சேவை
ஸ்ரீ வராகப் பெருமாள் இடந்து ஸ்ரீ முஷ்ணம் வழியாக வந்ததாகச் சொல்வர்
புகுந்தானூர் இங்கு உண்டே
நந்தகர் மகரிஷியை முன்னிட்டு தேவர்கள் கூடி
ஆதி வராஹ அவதாரம் இங்கே
மடியில் பூமா தேவி
பிரயோக சக்கரம்
வையம் காத்த பெருமாள்
உய்ய வந்தார் உத்சவர்
அம்பரீஷன் -கை சக்கரம் -கொடுத்து -துர்வாசர் -அம்பரீஷ வரதன்
நின்ற திருக்கோலம்
பத்மாசினி தாயார்
நெல்லிக்காய் பலா மரம்
சுத்த சத்வ விமானம்
நர்த்தன ஆஞ்சநேயர் இங்கே சேவை
ராணி மங்கம்மாள் பெரிய விக்ரஹம் இங்கே உண்டே
—–
தாந்தம் – பிரவேசம் –
வெள்ளியார் வணங்க விரைந்து அருள் செய்வான் -என்றார் கீழில் திரு மொழியில்
பிறர் ஆஸ்ரயிக்க விரைந்து அருள் செய்வான் -என்று
இது ஒரு பழம் கதை சொல்ல வேணுமோ
தானே வந்து
என் ஹிருதயத்தில் புகுந்து
விரைந்து அருள் செய்தவன் -அன்றோ -என்று
அவன் படிகளை அனுசந்தித்து
இப்படிப் பட்டவன் தான் திருக் கூடலூரிலே
வந்து சன்னிஹிதன் ஆனான் –
அவன் ஆகிறான்
சர்வாதிகனாய் இருந்து வைத்து
தன் மேன்மை பாராதே
ஆஸ்ரிதர்க்காக தாழ நின்று கார்யம் செய்யும் ஸ்வ பாவன்
அவன் வர்த்திக்கிற தேசம் தான் நிரதிசய போக்கியம் என்று
அத்தை பேசி அனுபவிக்கிறார் –
(அறிவது அரியான் -இதுக்கும் கீழ்
யாராலும் தங்கள் ப்ரயத்னத்தால் அடைய முடியாமல்
என்னை ஆளுடையான் -ஸ்வாமித்வத்தை நிர்ஹேதுகமாக காட்டி அருளினான்
இத்தை அனுசந்தித்து முதல் பாட்டில் பிரமேயத்தை இங்கு அருளிச் செய்கிறார்
ஆடுதுறை பெருமாள் இவர்
மதுரை கூடலூர் வேறே )
———————————————————
தாந்தம் பெருமை அறியார் தூது
வேந்தர்க்காய வேந்தரூர் போல்
காந்தள் விரல் மென்கலை நன் மடவார்
கூந்தல் கமழும் கூடலூரே –5-2-1-
வேந்தரூர்-ராஜாதி ராஜன் -அரசருக்குத் தூது போன சர்வேஸ்வரன் –
தாம் –
ஸ்வதஸ் சர்வஞ்ஞராய் இருந்தாரே யாகிலும்
யஸ் சர்வஞ்ஞஸ் சர்வவித் -( முண்டகம் ஸ்வரூபம் ஸ்வ பாவங்களை அறிந்தவர் -)
பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்வாபாவி கீ ஜ்ஞான பல கிரியா ச -( ஸ்வேதாஸ்வரம் )-என்று
ஸ்ருதி ஸ்ம்ருதிகள் ஓதா நின்றனவே யாகிலும்
தம் பெருமை அறியார் –
ஆஸ்ரிதராய் இருப்பவர் தம்மை அனுபவித்து
ஆஸ்ரிதர்க்காக தாழ நிற்கும் இதுவும் ஒரு நீர்மையே
என்று ஆழங்கால்
படுமது ஒழிய தம்மால் அறியப் போகாது –
தூது வேந்தர்க்காய –
இன்னார் தூதன் என நின்றான் -2-2–என்றும்
நாடுடை மன்னர்க்குத் தூது செல் நம்பி -திருவாய்-என்றும் சொல்லுகிற படியே
பிறருக்காக தன்னை தாழ விட்டு
தூது போகா நிற்கும் யாய்த்து –
எத்தனையேனும் தாழ்ந்தாரும் பிறருக்காக
தாங்கள் தூது போக இசையார்கள் இறே –
அங்கன் இன்றியே
இவன் அறிவித்து திரிகிற ராஜாக்களுக்காக
தூது போகா நிற்கும் ஆய்த்து –
(கிருஷ்ண ஆஸ்ரய கிருஷ்ணனே பலம் கிருஷ்ணனே நாதனாக கொண்டவர்கள்
மெய்யானாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம்
சமோஹம் சர்வ பூதேஷு -ஆஸ்ரிதர்களுக்குள் பக்ஷ பாதம் இல்லாதவன்
ந த்வேஷம்)
(விஸ்வ ரூபம் பார்த்தும் திருந்தாதவர்கள் அன்றோ அவர்கள்
சமமாக இருப்பார்களுக்குள் சமம்
தான் தம் பெருமை அறியார் -பிராமண கதன பூர்வகம்
பெருமை உண்டு என்று அறிந்தவர் யார்
ஆஸ்ரிதர்
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் பரத்வம் கரை கண்டு
ஸுலப்யம் கரை காண முடியாமல் எத்திறம் மோஹித்தாரே
அவன் பெருமை அறிவார் உண்டே
அங்கன் அன்றியே
தாழ்மை இல்லாமை மட்டும் இல்லாமல்
ரிஷிகள் வாக்யங்களாலும் அறிந்தவர் பாண்டவர்கள்
அதி மானுஷ சேஷ்டிதங்களை அறிந்து அறிவித்து திரிகிறார்கள்
பகவானே சதுர்புஜத் வாதிகளால் அறிவித்தமையும் உண்டே
சஹஸ்ர பாஹோ -தேனைவ ரூபேண சதுர் புஜேன என்றானே அர்ஜுனன் )
வேந்தரூர் போல் –
இவன் இப்படியே தன்னை தாழ விட்டாலும்
இவனைத் தாழ நினைத்து இருப்பாரைக் கிடையாதே
ராஜாதி ராஜன் என்கிற பெருமையாலும் மிக்குத் தோன்றுகிறது –
காந்தள் விரல் மென்கலை நன் மடவார்
செங்காந்தள் போல் இருந்துள்ள விரலை உடையருமாய்
மிருதுவான பரியட்டத்தையும் உடையராய்
சர்வ பிரகாரத்தாலும் விலஷணைகளான ஸ்திரீகள் உடைய –
கூந்தல் கமழும் கூடலூரே –
சர்வ கந்த என்கிற வஸ்து நித்ய வாஸம்
பண்ணுகிற தேசமாய் இருக்கச் செய்தேயும்
அத்தை யமுக்கி
இவர்கள் உடைய குழலில் பரிமளமே விஞ்சி
வாரா நிற்கும் யாய்த்து –
——————————————-
தூது போனது முன்
நப்பின்னைக்காக செய்தமை இதில் –
செறும் திண் திமில் ஏறு உடைய பின்னை
பெறும் தண் கோலம் பெற்றாரூர் போல்
நறும் தண் தீன் தேனுண்ட வண்டு
குறிஞ்சி பாடும் கூடலூரே—-5-2-2-
செறும் திண் திமில் ஏறு உடைய
எதிரிகள் மேலே செறா நிற்பனவாய்
திண்ணியதான ககுத்துக்களை உடைய
ருஷபங்கள் உடைய –
(ககுஸ்தன் -காளை உருவில் வந்து உதவினவன் )
பின்னை பெறும் தண் கோலம் பெற்றாரூர் போல் –
நப்பின்னை பிராட்டி ஒருத்திக்குமேயாய்
வேறு ஒரு ஆஸ்ரயத்தில் கிடவாத படியான அழகை லபித்து
பெறாப் பேறு பெற்றானாய்
அவன் வர்த்திக்கிற தேசம் போலே –
நறும் தண் தீன் தேனுண்ட வண்டு குறிஞ்சி பாடும் கூடலூரே
நறுவியதாய்
குளிர்ந்து
இனிதாய்
இருந்துள்ள
தேனைப் பானம் பண்ணின வண்டுகள்
உள்ளுப் புக்க த்ரவ்யம் இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலே
கால நியதி பாராதே
எப்போதும் ஒக்க குறிஞ்சி என்கிற பண்ணைப்
பாடா நிற்கும் ஆய்த்து –
————————————
வெண்ணையும்
அடியார் உள்ளங்களையும்
கோபிகள் மனங்களையும் கொண்டவன் –
புகுந்த -ஒன்பதாம் பாட்டில் இது தான் உயிர் பாசுரம் அங்கு அருளிச் செய்வார் –
பிள்ளை உருவாய்த் தயிர் உண்டு அடியேன்
உள்ளம் புகுந்த ஒருவரூர் போல்
கள்ள நாரை வயலுள் கயல் மீன்
கொள்ளை கொள்ளும் கூடலூரே —5-2-3-
கொள்ளை கொள்ளும்-நாரைக்கும் நாரணன் கள்ளத்தனம் உண்டே –
பிள்ளை உருவாய்த் தயிர் உண்டு –
சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து
வெண்ணெய் அமுது செய்யப் பார்த்தல் இசைவார் இல்லை –
அதுக்காக
பிள்ளை வடிவு கொண்டு
தயிர் அமுது செய்து –
அடியேன் உள்ளம் புகுந்த ஒருவரூர் போல் –
இப்படி ஆஸ்ரித ஸ்பர்சம் உடைய த்ரவ்யத்தால் அல்லது
செல்லாத நீர்மையைக் காட்டி
அனந்யார்ஹன் ஆக்கி
விலக்காத ஓர் அவகாசம் பெற்றவாறே
ஹிருதயத்திலே வந்து
அவன் வர்த்திக்கிற தேசம் போலே
கள்ள நாரை வயலுள் கயல் மீன் கொள்ளை கொள்ளும் கூடலூரே –
அங்குத்தை நாரைகள் ஆனவை
காலிலே மத்ஸ்யங்கள் குத்தா நிற்கச் செய்தேயும்
அவற்றில் ஓர் அபேஷை இல்லாதாப் போலே
அநாதரித்து இருந்து
தான் கணிசித்த ஆமிஷம் வந்து கிட்டினவாறே
மேல் விழுந்து கொள்ளை கொள்ளும் ஆய்த்து
யசோதை பிராட்டி தயிரையும் வெண்ணையையும் சேமிக்கும் போது
ஒராதவன் போல் உறங்கி
அவள் பேர நின்றவாறே
(அறிவுற்று தாரார் தடம் கைகள் உள்ள அளவும் கை நீட்டி )
தான் கண்டபடி கொள்ளை கொள்ளுமா போலே
யாய்த்து இவற்றின் உடைய ஸ்வபாவமும் –
அவன் நகர சோபத்தை விளைக்குமா போலே யாய்த்து இவையும் –
———————————————
இரவாளனாக-ஆக்கி -தம் பெருமை அறியாமல் –
அறிந்தவராக இருந்தால் வெண்ணெய் திருடுவாரா
தனது சொத்து இவை என்று அறியாதவர்
கூறு ஏர் உருவில் குறளாய் நில நீர்
ஏற்றான் எந்தை பெருமானூர் போல்
சேறு ஏர் உழவர் கோதைப் போதூண்
கோல் தேன் முரலும் கூடலூரே –5-2-4-
கூறு ஏர் உருவில் குறளாய் –
மமேதம் என்னும் அபேஷை உடைய வாமன வேஷத்தை பரிகிரஹித்து என்னுதல்-
(மாவலி மூவடி மண் கொடு -கேட்க்கைக்குத் தகுதியான உருவம் )
அன்றிக்கே –
கண்டார் அடங்கலும் -இது ஓர் குறள் வடிவு இருக்கும் படியே
என்று கூறப் பட்ட வடிவை உடையவன் -என்னுதல் –
நில நீர் ஏற்றான் எந்தை பெருமானூர் போல்
தன்னது அல்லாதது ஒன்றை பெற்றால் போலே இருக்கிற
பூமிப் பரப்படைய நீர் ஏற்று
அச் செயலாலே
என்னை எழுதிக் கொண்ட
என் குல நாதன் ஆனவன்
வர்த்திக்கிற தேசம் போலே இருந்தது –
சேறு ஏர் உழவர் கோதைப் போதூண் கோல் தேன் முரலும் கூடலூரே –
மிக்க சேறுகளிலே ஏரை நடத்த வல்லராய் இருந்துள்ள
உழவர் உடைய
மயிர் முடியிலே வைத்த மாலையில் பூக்களில் உண்டான
மதுவைப் பானம் பண்ணின வண்டுகள் ஆனவை
மரத்தில் நின்று அலர்ந்த போதைச் செவ்வியிலே
மது பானம் பண்ணினதில் காட்டிலும்
இவர்கள் குழலில் போதைச் செவ்வியிலே
மது பானம் பண்ணி ஆலத்தி வையா நிற்கும் –
கோல் தேன் –
சோலையிலே படிந்த வண்டு -என்றபடி –
——————————————–
வாமனன் கீழ்
திரி விக்ரமம் இதில்
கையில் நீர் விழுந்த உடன் அல்பம் பெற்றது அறியாமல் பெறாதது பெற்றதாக
ஹர்ஷத்தால் வளர்ந்தது -ஏக ரூபனாய் இருப்பவன் -குறுகியும் வளர்ந்தும் –
இதுவும் தனது பெருமை அறியாததும் ஸூசகம்
தொண்டர் பரவச் சுடர் சென்று அணவ
அண்டத்து அமரும் அடிகளூர் போல்
வண்டல் அலையுள் கெண்டை மிளிரக்
கொண்டல் அதிரும் கூடலூரே —5-2-5-
சுடரை திரு மேனி சென்று
அடிகளூர்-ஸ்வாமியான கிருஷ்ணனுடைய
ஊராகத் தீண்டியவன் இவன் உலகமாகத் தீண்டியவன்
தொண்டர் பரவ–தேவர்கள் கூடி நின்ற ஊர் கூடலூர்
தொண்டர் பரவச் சுடர் சென்று அணவ-அண்டத்து அமரும் அடிகளூர் போல்
சங்கைஸ் ஸூராணாம்-என்கிறபடியே
ஆஸ்ரிதர் ஆனவர்கள் திரண்டு ஏத்த
திரு மேனியில் ஏக தேசமானது ( திருவடி கதிரவனைத் தாண்டி ஓடிற்றே )
ஆதித்ய பத்தைத் தளவில் சென்று ஸ்பர்சிக்க
ஆகாச அவகாசம் உள்ள இடமடையத்
தன் திரு மேனியாலே
பாரித்த ஸ்வாமிகள் வர்த்திக்கிற ஊர் போலே –
(விபு வேறே
இங்கு பாரித்து வளர்ந்தது )
அண்டத்து அமரும் -அண்ட பித்தியிலே செல்ல வளர்ந்த -என்னுதல் –
வண்டல் அலையுள் கெண்டை மிளிரக் –
வண்டலை மிக்கு இருந்துள்ள
நீர் நிலங்களிலே கெண்டை யானது
செருக்காலே மிளிர –
கொண்டல் அதிரும் கூடலூரே –
உடம்பிலே புகரைக் கண்ட மேகமானது
தன் உடம்பின் மின்னாகக் கொண்டு
அதுக்கு அனந்தரமான முழக்கத்தை
முழங்கா நிற்கும் ஆய்த்து-
நீர் விழுகிற போது இங்கே கண்டு
கார்ய காலத்தில் அங்கே கண்ட
ஸ்ரீ வாமனைப் போலே யாய்த்து இவையும் –
—————————-
பெருமை அறியாத இந்திரனுக்காக இரப்பாளனாகி
தக்ஷ பிரஜாபதி யாகம் -பார்வதி போக -அவமரியாதை
நெருப்பில் விழ
ருத்ர தாண்டவம்
யஜ்ஜ விக்னம்
சாபம் தீர்த்தும் -இதனாலும் தம் பெருமை அறியாதது ஸூ சகம்
அவன் தன்னை ஈஸ்வரோஹம் என்று இருந்தாலும் துக்கமே ஹேதுவாக
ஈஸ்வரத்வ பிடாராலே நிக்ரஹிக்காமல் ஆபத்தே செப்பேடாக உதவும் ஸ்வபாவன் அன்றோ
தக்கன் வேள்வித் தகர்த்த தலைவன்
துக்கந்துடைத்த துணைவரூர் போல்
எக்கலிடு நுண் மணல் மேல் எங்கும்
கொக்கின் பழம் வீழ் கூடலூரே–5-2-6-
தக்கன் வேள்வித் தகர்த்த தலைவன் துக்கந்துடைத்த துணைவரூர் போல் –
தஷாத்வர த்வம்சன் -என்னக் கடவது இறே-ருத்ரனை –
எல்லாரையும் கீழ் ஆக்கி தானே மேலாக வேணும் -என்று
அபிமானித்து இருக்கிறவன் உடைய
துக்கத்தைப் போக்கின ஆபத் சகன் ஆனவன்
வர்த்திக்கிற ஊர் போலே இருந்தது –
எக்கலிடு நுண் மணல் மேல் எங்கும் கொக்கின் பழம் வீழ் கூடலூரே –
வண்டலிட்ட நுண்ணிய மணல்களிலே
மாம்பழங்கள் விழுந்து சேரக் கிடக்கிற போது
(மாம் பழம் நுண் மணல் வரிசையாக ஒன்றின் மேல் ஓன்று )
பழுக்கைக்கு சேரப் பதித்து வைத்தால் போலே
இருந்தது ஆய்த்து –
—————————————
துர் அபிமானி துக்கம் போக்கினது கீழ்
மண்ணும் கல்லுமான லோகத்தை திரு வயிற்றிலே வைத்து ரஷித்தமை
ஸுவ்குமார்யம் அறியாதவன்
கரும் தண் கடலும் மலையும் உலகும்
அருந்தும் அடிகள் அமருமூர் போல்
பெரும் தண் முல்லைப் பிள்ளையோடிக்
குருந்தம் தழுவும் கூடலூரே —5-2-7-
கரும் தண் கடலும் மலையும் உலகும் அருந்தும் அடிகள் அமருமூர் போல் –
கறுத்து
ஸ்ரமஹரமாய் இருந்துள்ள கடலும்
பூமிக்கு ஆணி அடித்தால் போலே நிற்கிற பர்வதங்களும்
மற்றும் உண்டான லோகங்களும்
இவற்றை அடையக்
கட்டளை குலையாதபடி
புஜித்த ஸ்வாமி யானவன் –
(கடலும் மலையும் சொல்வான் என்
அடைமொழி சொல்வான் என்
கலங்காமல் கட்டளை அமைப்பு குலையாதபடி புஜித்தமை
சாமர்த்தியம் சொன்னபடி )
இன்னும் இங்கனம் ஒத்த ஆபத்துக்களைப் போக்கி
ரஷிப்பதாக பொருந்தி வர்த்திக்கிற
தேசம் போலே இருந்தது –
பெரும் தண் முல்லைப் பிள்ளை யோடிக் குருந்தம் தழுவும் கூடலூரே
பெருத்து
ஸ்ரமஹரமாய் இருந்துள்ள
முல்லைக் கொடியானது ஓடிக் குருந்தை
முட்டாக்கிடப் படரா நின்றுள்ள தேசம் –
———————————————-
நந்தகர் மகரிஷியை முன்னிட்டு தேவர்கள் கூடி
ஆதி வராஹ அவதாரம் இங்கே
மடியில் பூமா தேவி
பிரயோக சக்கரம்
வையம் காத்த பெருமாள்
உய்ய வந்தார் உத்சவர்
அம்பரீஷன் -கை சக்கரம் -கொடுத்து -துர்வாசர் -அம்பரீஷ வரதன்
நின்ற திருக்கோலம்
பத்மாசினி தாயார்
நெல்லிக்காய் பலா மரம்
சுத்த சத்வ விமானம்
நர்த்தன ஆஞ்சநேயர் இங்கே சேவை
ராணி மங்கம்மாள் பெரிய விக்ரஹம் இங்கே உண்டே
இந்த பிராகிருத பூமி உண்டது மட்டும் இல்லாமல்
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் -செய்து ஆகர்ஷிப்பவன்
இவற்றால் ஈடுபாடு வளர்க்க
அதுவும் போதாது என்று இங்கும் நித்ய சந்நிதி
கலை வாழ் பிணை யோடு அணையும் திரு நீர்
மலை வாழ் எந்தை மருவுமூர் போல்
இலை தாழ் தெங்கின் மேல் நின்று இளநீர்
குலை தாழ் கிடங்கின் கூடலூரே—-5-2-8-
கலை வாழ் பிணை யோடு அணையும் திரு நீர்மலை வாழ் எந்தை மருவுமூர் போல்
கலைகளானவை
பிணை யோடு -மானோடே அணைந்து வாழா நின்றுள்ள
திரு நீர் மலையைத் தனக்கு
வாசஸ் ஸ்தானமாகக் கொண்டு வர்த்திக்கிற என் ஸ்வாமி யானவன்
அத் தேசமும் தனக்கு உண்டாய் இருக்க
பொருந்தி வர்த்திக்கிற தேசம் போலே இருந்தது –
(புருஷோத்தமன் தான் இந்தப் பெண்கள் உடன் ஸம்ஸ்லேஷிக்க குருகுல வாசம் திரு நீர்மலை
மான் இடம் கற்றுக் கொண்டானாம் )
இலை தாழ் தெங்கின் மேல் நின்று இள நீர் குலை தாழ் கிடங்கின் கூடலூரே—
படர்ந்த இலைகளை உடைத்தான
அவற்றில் உண்டான இள நீர்க் குலைகள் ஆனவை
தாழ்ந்து நிற்கிற போது
கிடங்கை (வெத்தலை தோட்டத்தை )இள நீராலே நிறைத்து இலையாலே
மறைத்து வைத்தால் போலே இருக்கும் யாய்த்து –
———————————-
பெருமை பாராமல் அடியேன் உள்ளம் புகுந்தமை மூன்றாம்பாட்டில்
அது உயிர் பாசுரம்
உள்ளம் ஈடுபட்டு மீண்டும் இங்கே அருளிச் செய்கிறார்
பெருகு காதல் அடியேன் உள்ளம்
உருவப் புகுந்து ஒருவரூர் போல்
அருகு கைதை மலரக் கெண்டை
குருகு என்றும் அஞ்சும் கூடலூரே–5-2-9-
பெருகு காதல் அடியேன் உள்ளம் உருவப் புகுந்து ஒருவரூர் போல் –
நாள் செல்ல நாள் செல்ல
ஆற்றுப் பெருக்கு போலே பெருகா நின்றுள்ள
காதலை உடைய அடியேனுடைய
ஹிருதயமானது உருகும்படி யாகப் புகுந்த
அத்விதீயனானவன் வர்த்திக்கிற தேசம் போலே இருந்தது –
( உருக்கவே புகுந்தார் )
அருகு கைதை மலரக் கெண்டை குருகு என்றும் அஞ்சும் கூடலூரே-
அருகே தாழை யானது மலர –
கெண்டைகள் ஆனவை அத்தைக் கண்டு
குருகு என்று அஞ்சா நிற்கும் ஆய்த்து –
இரண்டும் நித்தியமாய் இருக்கச் செய்தே
பயமும் நித்தியமாய் செல்லா நிற்கும் ஆய்த்து –
(அஞ்சா நிற்கும்
ஒரு கால் அஞ்சினால் மறுநாள் அஞ்ச வேண்டாமே என்னில்
சம தர்மத்தால் பாதித அனுவர்த்தி தொடருமே
கானல் நீர் போல் ஜகம் மித்யை அத்வைதம்
ஓன்று அறிந்தாலும் வாசனையால் தொடரும் என்பர்
தெரிந்தாலும் தீர்த்தம் சாப்பிட போக மாட்டானே -இப்படி அத்வைத கண்டனம் )
———————————————
காவிப் பெரு நீர் வண்ணன் கண்ணன்
மேவித் திகழும் கூடலூர் மேல்
கோவைத் தமிழால் கலியன் சொன்ன
பாவைப் பாடப் பாவம் போமே –5-2-10-
கோவை-கோக்கப்பட்ட வரிசையாக -லக்ஷண க்ரமம் –
மேவித் திகழும்–ஆழ்வார் திரு உள்ளத்திலும் திவ்ய தேசத்திலும் பொருந்தி -அத்தாலே உஜ்ஜவலமாய் –
காவிப் பெரு நீர் வண்ணன் கண்ணன் மேவித் திகழும் கூடலூர் மேல் –
காவி போலேயும்
பெரும் கடல் போலேயும்
இருந்துள்ள வடிவை உடைய கிருஷ்ணன்
திரு உள்ளத்தோடு பொருந்தி
உஜ்ஜ்வலனாய் வர்த்திக்கிற திருக் கூடலூர் மேல் –
கோவைத் தமிழால் கலியன் சொன்ன
அடைவே ஆழ்வார் அருளிச் செய்த
பாவைப் பாடப் பாவம் போமே –
பால் குடிக்க நோவு போம் -என்பாரைப் போலே –
———–
ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.
தாம் அறியாத் தன்னுள் புகுமவன் தன் பெருமை
தான் அறியான் தொண்டர்க்கு அறியுமாறு தான் அருளும்
கூடலூரான் ஊர் எழிலுடன் சொல் கலியனைக்
கூடி வானில் விளங்கும் வென்று -42
யாதோ வாசோ நிவர்த்தந்தே என்ற வேதம் போல் அன்றிக்கே-எம்பெருமானுடைய கல்யாண குணங்களை
அருளிச் செய்வதில் விளாக்குலை கொள்வதால்
தன் பெருமை தான் அறியா விடிலும் தன் அடியார் அறியும்படி அருளுபவன் அன்றோ –
வானில் சென்று விளங்கும் -என்றும் வானை விட வாழ்ச்சி இங்கு என்றும் கொள்ளலாம் –
———————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply