ஸ்ரீ பெரிய திருமொழி-5-1—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

ஆபதாம் –ஸ்ரீ ராம சந்த்ரன்
பரத்வம் பரம ஸ்பஷ்டமாக -ஜடாயு மோக்ஷம்
ஆரோக்யம் பாஸ்கரன் செல்வம் அக்னி சங்கரன் ஞானம்
வல் வில் ராமன் புஜங்க சயனம் இரண்டு திருக்கரங்கள்
கர்ப்ப க்ருஹத்திலே ஜடாயு
பூமி தேவி திருவடி வருட
பொன் தாமரையாள்
வில் -ரக்ஷணம் -அழகு -அடையாளம்
சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன்
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
வில்லாண்டான் -அடக்குவதை
ஜடாயுவை வைகுந்தத்து ஏற்றி
அவ் வல் வில் ராமன் என்பான் -கம்பர் சூர்ப்பணகை வார்த்தையால்
முறிந்த வில் -ஜனக் புரியிலும் தனுஷ்கோடியிலும் விழுந்தவை என்பார்

அறிவது அரியான் பிரவேசம் –

(இந்த வண்ணம் காட்டீர் கிலாய்த்தார்
திரு வெள்ளியங்குடியில் அனுபவம் பெற போனவர் -அங்கும் அர்ச்சா சமாதி குலையாமல் இருக்க
கிட்டாதாகில் மறக்க முடியாமல்
கை விட மாட்டாதே தொடர்ந்து அதுக்கு ஹேதுவை அருளிச் செய்கிறார் )

ஒரு கால் ஓர் இடத்தே நசை பண்ணிப் பெறா விட்டால்
கிடைத்தது அல்லை என்று மீளலாம் படி அன்று இறே
இவர் நசை இருப்பது –
நசை பண்ணாமல் இருக்க ஒண்ணாத படி இருக்கும் இறே
விஷய ஸவபாவத்தை பார்த்தாலும்  –
இனித் தான்
உகந்து அருளின நிலங்களில் வந்து நிற்கிறது
தன் பக்கலில் ருசி உடையாரோடே நினைத்த படிகளில் எல்லாம் பரிமாற விறே
ராஜாக்கள் தோப்புக்கள் பல சமைத்தால்
இன்ன தோப்பிலே இன்னானுக்கு முகம் கொடுக்கக் கடவோம்
என்று அறுதி இட்டு இருக்குமா போலே
உகந்து அருளின நிலங்களில் பல இடங்களிலும் நிற்கிறது –
ஓன்று அல்லா ஓர் இடத்திலே ஓர் ஒருத்தருக்கு முகம் கொடுக்கைகாக –
ஆன பின்பு நமக்கு இவ்விடத்திலே  முகம் தர நினைத்திலன் ஆகில்
மற்று ஓர் இடத்திலே யாகிறது என்று
உகந்து அருளின நிலங்கள் தோறும் புக்குத் திரிவர்
இன்ன இடத்திலே முகம் தரும் என்று அறியார் இறே –

ஆகையால்
திரு புள்ளம் பூதங்குடியிலே சந்நிஹிதன் ஆனான்
அங்கு நிற்கிறவன் தான் ஆஸ்ரிதருக்கு தானே அர்த்தியாய்க் கொண்டு
கார்யம் செய்யும் ஸ்வபாவன் ஆவான் -(மாண்  உருவாகிய கூத்தன் மன்னி யமரும் இடம்- பாசுரம் -)
ஆஸ்ரிதரோடு பிராட்டியோடு வாசி அற முகம் கொடுப்பான் ஒருத்தன் -(வெற்பால் மாரி  -பாசுரம் -)
தன்னை அறிக்கைக்கு ஈடான ஸூஹ்ருதம் பிறக்கைக்கும் தான் பிரவர்தகன் ஆவான்  –
(அன்னமாகி அருமறைகள் அருளிச் செய்த அமலன் பாசுரம் )
அதுக்கு மேலே
நிரதிசய போக்யனும் ஆவான் என்று -(கூத்தன் -நேமி யங்கை மாயன் -பாசுரங்கள் -)
அவன் படிகளைப் பேசி அனுபவிக்கிறார் –

—————————————————————-

வல் வில் ராமன்- த்ருட தன்வீ -முன்பு கோல வில் ராமன் பார்த்தோம் –
புள்–ஜடாயு
அம் -அழகிய
திரு புட் குழி சாகேத் -நாசிக் அருகில் -நடந்தாலும் ரிஷிகளுக்கு சேவை சாதித்த இடங்கள் –

கிலாய்த்து பின்பு செய்வான் என்று எண்ணி திரு வெள்ளியங்குடி புக அங்கும் செய்யாமல்
இருந்ததால் அறிவது அரியான் என்கிறார்

அறிவது அரியான் அனைத்து உலகும் உடையான் என்னை யாளுடையான்
குறிய மாண் உருவாகிய கூத்தன் மன்னி யமரும் இடம்
நறிய மலர் மேல் சுரும்பார்க்க எழிலார்  மஞ்ஞை நடமாடப்
பொறி கொள் சிறை வண்டிசை பாடும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-1-

அறிவது அரியான் –
ஸ்வ யத்னத்தாலே அறியப் பார்ப்பாருக்கு அப்பால் பட்டவன்
என்றும் ஒக்க அறிய அரியதாம் படி இருக்கும் ஸ்வ பாவன்
அகில ஜகத் ஸ்வாமி அஸ்மின் ஸ்வாமி -உடையான் வேறே ஆளுடையான் வேறே
அடியேன் இடம் கைங்கர்யம் பெற்றுக் கொண்டவன் –

மன்னி யமரும்-
மன்னி உறையும் -அமர்ந்து வர்த்திக்கும்

அனைத்து உலகும் உடையான் –
அறிகையும் அறியாது ஒழிகையும் ஆகிற இவ்வர்த்தம் கிடக்க
சர்வ லோகேஸ்வரனாக
சர்வருக்கும் சம்பிரதி பன்னன்

என்னை யாளுடையான் –
விசேஷித்து என்னை அடிமை கொண்டவன்
அஸ்மத் ஸ்வாமின் –
(தத் தவம் அஸி -அனைத்து உலகும் உடையான் தத் -என்னை ஆளுடையான் -த்வம்
அறிய முடியா விடில் விடலாகாதோ
இங்கும் தொடர்வான் என் என்ன அருளிச் செய்கிறார்
அனைத்து உலகில் தானும் இருந்தாலும் அகில ஜகத் ஸ்வாமின் அஸ்மத் ஸ்வாமின் )

குறிய மாண் உருவாகிய கூத்தன் மன்னி யமரும் இடம்
இப்படி சர்வாதிகன் ஆனவன்
வாமன வேஷத்தை பரிக்ரஹித்து
இரப்பிலே தகண் ஏறின வடிவோடே கூட
மகா பலி யஞ்ஞ வாடத்திலே புக்கு
மநோ ஹாரியான சேஷ்டிதத்தை உடையவன்
மன்னி–நித்ய வாஸம் பண்ணி
யமரும்-விடேன் -என்று வர்த்திக்கிற தேசம் –
யஞ்ஞ வாடத்திலே நடந்த போது
கூத்தன்-வல்லார் ஆடினால் போலே யாய்த்து இருந்தது –

நறிய மலர் மேல் சுரும்பார்க்க எழிலார்  மஞ்ஞை நடமாடப்
பரிமளத்தை உடைத்தான மலரின் மேலே
சுரும்பு -என்று வண்டிலே ஒரு அவாந்தர ஜாதி
அவை ஆரவாரத்தைப் பண்ண
அழகு மிக்கு இருந்துள்ள மயில்கள் ஆட
பூதங்குடி தானே
வரியையும் சிறகையும் உடைத்தான வண்டுகள் ஆனவை
அவற்றின் காலுக்கு ஈடாகப்
பாடா நிற்கும் ஆயத்து –

———————————————————-

தேவர்களுக்காக தன்னை இரப்பாளானாக்கிய விருத்தாந்தத்தில்
நப்பாசையால் மீளவும் சொல்லி
திர்யக்குக்காக -அர்த்திக்க உதவியமை இதில்-

கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்துப்
பொள்ளைக் கரைத்த போதகத்தின்  துன்பம் தவிர்ந்த புனிதன் இடம்
பள்ளச் செறுவில் கயல் உகள பழனக் கழனி யதனுள் போய்
புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடும் புள்ளம் பூதங்குடி தானே–5-1-2-

கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்துப்
இவன் சர்வேஸ்வரன்
தேவர்கள் ஹிதம் செய்ய வந்தான்
அகப்படாதே கிடாய் -என்று சுக்ராதிகள் சொன்ன வார்த்தை
அவன் நெஞ்சில் படாத படியான
வாமன வேஷத்தைப் பரிக்ரஹித்து
தன்னது அல்லாததை தன்னது என்று இருந்தவன் பக்கல் நின்றும்
தன்னதாக்கிக் கொண்டான் ஆய்த்து -( இதனாலே புனிதன் )

பொள்ளைக் கரைத்த போதகத்தின்  துன்பம் தவிர்ந்த புனிதன் இடம்
துளைக்கை யை உடையனான
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உடைய துக்கத்தை போக்கித்
தன் துக்கம் தீர்ந்தானாய் இருக்கிறவன் வர்த்திக்கும் தேசம்  –

பள்ளச் செறுவில் கயல் உகள பழனக் கழனி யதனுள் போய்
தாழ்ந்த செய்களிலே கயல்கள் ஆனவை
செருக்கு போக்கு வீடு விட்டு உகள
நீர் நிலையை உடைத்தான கழனிகளின்
உள்ளிட்டுப் போய்

புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடும் புள்ளம் பூதங்குடி தானே
ஆலவாய் உடையான் கேட்க பட்டர் அருளிச் செய்தார்
என்று நாம் பிரசித்தமாக சொல்லிப் போருமது  இறே
கயல் உகளா நின்றதாகில்
புள்ளுக்குத் தேடித் போக வேண்டுகிறது என் -என்ன
பிள்ளை -அவ்விடம் அறிந்தது இல்லையோ
பிள்ளைக்கு அன்றோ தேடுகிறது
நில மிதியாலே அவை தான்
தூணும் துலாமும் ( உத்தரமும் ) போலே வளர்ந்து இருக்கும்
அதில் இதுக்கு சாத்மிக்கும் அவை தேடித் போகா நிற்கும் –

————————————————————————-

நீர் புழுவுக்கும் யானைக்கும் -பரிகரித்து புனிதனான அளவு அன்றிக்கே
பத்து தலை நிரசித்த
பருவம் நிறைந்த எதிர்த்த ராவணனை வெற்றி கொண்டது இருக்கட்டும்
திரியக்காயும்
ஸ்தாவரமாயும்
எதிரி தோன்றாமல்
பிள்ளைத்தனத்தில் கையாலும் காலாலும் நிரசித்த
இது விஞ்சினாதாகையால் சேர்த்து அனுபவிக்கிறார்

மேவா வரக்கர் தென்னிலங்கை வேந்தன் வீயச் சரந்துரந்து
மாவாய் பிளந்து மல்லடர்த்து மருதம் சாய்த்த மாலதிடம்
காவார் தெங்கின் பழம் வீழக் கயல்கள் பாயக் குருகிரியும்
பூவார் கழனி எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-3-

மேவா வரக்கர் தென்னிலங்கை வேந்தன் வீயச் சரந்துரந்து
ஒரு உபாதியால் அன்றிக்கே
த்வேஷமே பிரக்ருதியாக இருக்கிற ராஷசர்
வர்த்திக்கிற இலங்கைக்கு
நிர்வாஹகனான ராவணன் முடியும் படியாக
அம்பை யோட்டி –

மாவாய் பிளந்து மல்லடர்த்து மருதம் சாய்த்த
கேசி வாயைக் கிழித்து
மல்ல வர்க்கத்தை அடர்த்து
ஒன்றோடு ஓன்று சேர்ந்து நின்ற மருதுகளை முறித்து அருளின -மருதம்- ஏக வசனத்துக்கு அர்த்தம்

மாலதிடம் –
பிராட்டி பக்கலிலும் ஆஸ்ரிதர் பக்கலிலும் ஒக்க வ்யாமோஹம்
பண்ணுகிறவன் வர்த்திக்கிற தேசம்  –

காவார் தெங்கின் பழம் வீழக் கயல்கள் பாயக் குருகிரியும்
செறிந்த சோலையிலே தெங்கின் பழம் விழ
அது தன்னை உத்தேசித்து விழுவதாகக் கொண்டு
கயல்கள் ஆனவை பாய
அக் கயல் தன்னை உத்தேசித்து பாய்கிறதாகக் கொண்டு
குருகுகள் நாரைகள் -சிதறி ஓடா நிற்கும் ஆய்த்து –
இரண்டுக்கும் ஒக்குமாய்த்து கலக்கம்

தன்னைக் குறித்து அன்றிக்கே  இருக்கச் செய்தே
அஞ்சா நிற்கும் யாய்த்து கயல் –

குருகு-அது தனக்கு ஆமிஷமாய்
தான் அதுக்கு பாதகமாகா நிற்கச் செய்தேயும்
அஞ்சி ஓடா நிற்கும் யாய்த்து –

பூவார் கழனி எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே   –

———————————————————–

கிருஷ்ண அவதாரம் திர்யக் ஸ்தாவரம்
தேவன் இந்திரன் -அநுகூலன் -விரோதம் -மலையை சுமந்து ஆகிலும் கை ஓங்கி நிற்கும் வரை
காத்து அருளிய விருத்தாந்தத்தையும்
ராமாவதாரத்தில் -கை விஞ்சி சர வர்ஷம் பொழிந்தவனை ஒரே அம்பால் முடிக்காமல் –
அனுகூலிக்குமோ என்ற நசையால் எதிர்பார்த்து
அவதார த்வயத்தையும் அனுபவிக்கிறார்

வெற்பால் மாரி பழுதாக்கி விறல் வாள் அரக்கர் தலைவன் தன்
வற்பார் திரள் தோள் ஐ நான்கும் துணித்த வல் வில் ராமனிடம்
கற்பார் புரிசை  செய் குன்றம் கவினார் கூடம் மாளிகைகள்
பொற்பார் மாடம் எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே —5-1-4-

வெற்பால் மாரி பழுதாக்கி
மலையால் இந்த்ரன் அபிசந்தி பூர்வகமாக
வர்ஷித்த வர்ஷத்தை வ்யர்த்தமாம் படி பண்ணி –

விறல் வாள் அரக்கர் தலைவன் தன்-
பெரும் மிடுக்கராய்
சாயுதருமாய்
இருந்துள்ள
ராஷசர்க்கு எல்லாம் வழி யடித்துப் புக்கு
ஒதுங்கலாம் படி
அஞ்சினான் புகலிடமாய் இருந்துள்ள வனுடைய
(பயந்தவர்களுக்கு அபய பிரதானம் பண்ணுபவன் )

வற்பார் திரள் தோள் ஐ நான்கும் துணித்த வல்வில் ராமனிடம்
வன்மை மிக்கு திரண்டு இருந்துள்ள
தோள்கள் இருபதையும் துணித்த
மிடுக்கை உடைத்தான வில்லை உடைய
சக்கரவர்த்தி திரு மகன் வர்த்திக்கிற தேசம் –

கற்பார் புரிசை  செய் குன்றம் கவினார் கூடம் மாளிகைகள் பொற்பார் மாடம் எழிலாரும்
தொழில் மிக்கு இருந்துள்ள-( அழகான வேலைப்பாடு )
மதிள் செய் குன்றங்கள்
அழகு மிக்கு இருந்துள்ள கூடங்கள்
மாளிகைகள்
அழகு மிக்கு இருந்துள்ள மாடம்
இவற்றின் உடைய எழில் மிக்கு இருந்துள்ள

புள்ளம் பூதங்குடி தானே –

ஆபதாம் –ஸ்ரீ ராம சந்த்ரன்
பரத்வம் பரம ஸ்பஷ்டமாக -ஜடாயு மோக்ஷம்
ஆரோக்யம் பாஸ்கரன் செல்வம் அக்னி சங்கரன் ஞானம்
வல் வில் ராமன் புஜங்க சயனம் இரண்டு திருக்கரங்கள்
கர்ப்ப க்ருஹத்திலே ஜடாயு
பூமி தேவி திருவடி வருட
பொன் தாமரையாள்
வில் -ரக்ஷணம் -அழகு -அடையாளம்
சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன்
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
வில்லாண்டான் -அடக்குவதை
ஜடாயுவை வைகுந்தத்து ஏற்றி
அவ் வல் வில் ராமன் என்பான் -கம்பர் சூர்ப்பணகை வார்த்தையால்
முறிந்த வில் -ஜனக் புரியிலும் தனுஷ்கோடியிலும் விழுந்தவை என்பார்

———————————————————

ஆஸ்ரிதர் கர ஸ்பர்ச த்ரவ்யம் தேவதாந்த்ரருக்கு கூடாது கீழே
ஆஸ்ரித கர ஸ்பர்ச வெண்ணெய் உண்டமை இதில் –

மையார் தடங்கண் கருங்கூந்தல்  யாய்ச்சி மறைய வைத்த தயிர்
நெய்யார் பாலோடு அமுது செய்த நேமி யங்கை மாயனிடம்
செய்யார் ஆரல் இரை கருதிச் செங்கால் நாரை சென்று அணையும்
பொய்யா நாவில் மறை யாளர் புள்ளம் பூதங்குடி தானே –5-1-5-

மையார் தடங்கண் –
பிள்ளை பக்கல் உள்ள வாத்சல்யத்தாலே
அவன் அனுங்காமைக்கா ( வேற்று உரு கண்டு பிள்ளை அஞ்சாமைக்காக )
எப்போதும் ஒக்க அஞ்சனம் கொண்டு
கண்களை அலங்கரித்தும்

கருங்கூந்தல்  –
மயிர் முடியைப் பேணியும்
போரும் ஆய்த்து

யாய்ச்சி மறைய வைத்த தயிர் –
இவன் அறியாத தோர்
இடம்
தேடி வைக்கும் யாய்த்து
சாந்துப் பரணியிலே தயிரை வைக்கும் யாய்த்து –

(தன்னிலே தான் மறைத்து வைத்ததாக இவள் நினைத்து இருக்க )
நேமி யம் கையனான நாராயணனுக்கு ஒளிக்கப் போமோ
பூசும் சாந்து என் நெஞ்சமே -என்னும்படி
நெஞ்சுக்கு ஆஸ்ரயமான தம் உடம்பிலே
சிநேகத்தையும் போக்யதா புத்தியையும்  பண்ணினாலும்
அவன் விடாதே
தனக்கு ஆக்கிக் கொள்வன் என்னுமது ஸ்புரிக்க -சாந்துப் பரணியிலே -என்கிறார் –

நெய்யார் பாலோடு அமுது செய்த –
நெய்யும் பாலும் அமுது செய்த

நேமி யங்கை மாயனிடம் –
யசோதை பிராட்டியைப் பேணியும் போரும் யாய்த்து –
கையும் திரு ஆழியுமாய் அவள் முன்னே கூத்தாடி உகப்பிப்பான் –
(பேணியும் -மறைய வைத்ததையும் கண்டு கொள்ளாமல் பேணி )

செய்யார் ஆரல் இரை கருதிச் செங்கால் நாரை சென்று அணையும்
செய்கள் நிறைந்து இருந்துள்ள
ஆரல் ஆகிற மத்ஸ்ய விசேஷத்தை
கலியர் -கல வரிசிச்  சோறு உண்ண வேணும் -என்னுமா போலே
ஆமிஷம் என்று புத்தி பண்ணி
சிவந்த காலை உடைத்தான
நாரைகள் சென்று கிட்டா நிற்கும் யாய்த்து –

பொய்யா நாவில் மறை யாளர்
யதாபூத வாதிகளான பிராமணர் வர்த்திக்கிற

புள்ளம் பூதங்குடி தானே –

————————————————–

வெண்ணெய் அமுது உண்டமை கீழ்
பெண் அமுதை உண்டமை இதில்

மின்னின் அன்ன நுண் மருங்குல் வேயேய் தடந்தோள்   மெல்லியற்காய்
மன்னு சினத்த மழம்  விடைகள் ஏழு அன்று அடர்த்த மாலதிடம்
மன்னு முதுநீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட
புன்னை பொன்னேய் தாது உதிர்க்கும் புள்ளம் பூதங்குடி தானே —5-1-6-

பொன்னேய் தாது உதிர்க்கும்-இசை பாடுவார்க்கு பொன் பொடி சம்பாவனை

மின்னின் அன்ன நுண் மருங்குல் வேயேய் தடந்தோள்  மெல்லியற்காய்
மின்னொடு ஒத்த நேரிய விடையையும்
வேய் போல் இருந்துள்ள பெரிய தோளையும்
உடையவளான
நப்பின்னை பிராட்டிக்காக
கரு மாரி பாய்ந்தும் -குளத்தில் இரண்டு குச்சுகள் நடுவே குதிக்கை -அணைய வேணும் யாய்த்து
வடிவு அழகு –

மன்னு சினத்த மழம்  விடைகள் ஏழு அன்று அடர்த்த மாலதிடம்
மாறாத சினத்தை உடைத்தாய்
காட்டு காட்டு என்று வருகிற இளைமையை உடைத்தான
ருஷபங்கள் ஏழையும்
ஊட்டியாக நெரித்த  பரம பிரணயி யானவன் வர்த்திக்கிற தேசம் –

மன்னு முதுநீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட
மாறாத முது நீரில்
தாமரைப் பூவின் மேலே
வரியை உடைத்தான வண்டு
மது பான மத்தமாய்க் கொண்டு
இசை பாட –

புன்னை பொன்னேய் தாது உதிர்க்கும்
புன்னை யானது பொன்னை ஒத்த தாதுக்களை
உதிரா நிற்கும் ஆய்த்து
பொன் பொடிகளைக் கொண்டு
தூவுவாரைப் போலே பாடுவார்க்கு –

புள்ளம் பூதங்குடி தானே –

—————————————————-

இடைச்சிக்காக விடை கொண்டபடி
இடைச்சாதிக்காக குடை பிடித்ததும்
விடையோன் அபிமானம் கொண்டவனை கடகாகக் கொண்ட வாணன் கர வனம் முறித்த விருத்தாந்தங்கள்

குடையா விலங்கல் கொண்டு ஏந்தி மாரி பழுதா நிரை காத்து
சடையானோடே  வடல் வாணன் தடந்தோள் துணித்த தலைவனிடம்
குடையா வண்டுகள் உண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும்
புடையார் கழனி எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-7-

குடையா விலங்கல் கொண்டு
கல் வர்ஷத்துக்கு பரிஹாரமாக
கல்லைக் குடையாகத் தரித்து –

ஏந்தி
ஏந்தி -பரார்தமான வியாபாரம் ஆகையாலே
வருத்தம் அற்று இருந்தபடி –

மாரி பழுதா நிரை காத்து –
பிரதானனான இந்த்ரன் வியாபாரம் வ்யர்த்த மாம்படி –
பண்ணின உபகாரம் அறியாத பசுக்களை  ரஷித்து –

சடையானோடே  வடல் வாணன் தடந்தோள் துணித்த தலைவனிடம் –
ஈஸ்வர அபிமானி யானவன் முதுகு காட்டி ஓட
யுத்த கண்டூதியை உடைய பாணன் உடைய தோள்களைத் துணித்த

ரஷகனும் பொகட்டுப் போனான்
நாம் இவனைத் தலை அறுக்கல் ஆகாது -என்று இரங்கி
தோள்களைக் கழித்து விட்டான் ஆய்த்து
அவன் விட்டுப் போனதாய்த்து
இவனுக்கு இரக்கத்துக்கு அடி –
(நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் புன்மையாக கருதுவர் ஆதலால் –
அதனாலே கைக்கொண்டார் போல் இங்கும் )

முண்டன் நீறன் இத்யாதி
பஸ்மத்தாலே உடம்பு அடங்கலும்
அலங்கரித்துக் கொண்டு வந்து தோற்றின ருத்ரன்
அவனுடைய மக்கள்
ஜ்வரம்
பிடாரி
அக்னி
இவை அடங்க மடங்க கண்டு
நாணி -எதிரியைக் கண்டவாறே ஓடுகிறவர்களைப்பற்றி
வந்தவனையோ நாம் அழியச் செய்யப் பார்ப்பது
என்று லஜ்ஜித்து
பாணனுக்கு இரங்கினான்
பர்த்ரு ஹீநையான ஸ்திரீயைக் கண்டு இரங்குவாரைப் போலே    –

தலைவன் இடம் –
மாறாத இவ் வாதிக்யத்தை உடையவன்
வர்த்திக்கிற தேசம் –

குடையா வண்டுகள் உண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும்
புத்ர பௌத்ராதிகள் உடனும்
பார்யாதிகள் உடனும்
வண்டுகள் ஆனவை மது பானத்தைப் பண்ண
ஒரு கொசுகு கடலிலே இழிந்தது என்னா
அதிலே ஒரு மூலை சுவராது இறே
தர்ச நீயமான நீலமானது
மது வெள்ளம் இடா நின்றுள்ள –

புடையார் கழனி எழிலாரும்
பரந்த கழனியில் உண்டான
எழில் மிக்கு இருந்த –

புள்ளம் பூதங்குடி தானே  –

————————————–

இந்திரன் எதிர் இடவும்
அவனில் விஞ்சின ருத்ரனை ஆஸ்ரயித்த வாணன்
இதில் இந்திரன் சிறுவனுக்கு உதவியதும்
சடையான் உடன் கையில் கபாலம் போக்கிய விருத்தாந்தங்கள் –

கறையார் நெடுவேல் மற மன்னர் வீய விசயன் தேர் கடவி
இறையான் கையில் நிறையாத முண்டம் நிறைந்த வெந்தை விடம்
மறையால் முத் தீயை வளர்க்கும் மன்னு புகழால் வண்மையால்
பொறையால் மிக்க வந்தணர் வாழ் புள்ளம் பூதங்குடி தானே—5-1-8-

கறையார் நெடுவேல் மற மன்னர் வீய விசயன் தேர் கடவி
சத்ரு நிரசனத்தால்  வந்த கறை கழுவ
அவசரம் இல்லாமையாலே
மாறாத கறையை உடைய நெடிய வேலையும்
மறத்தையும் உடையரான ராஜாக்கள் அடைய முடியும்படி –
அர்ஜுனனுக்கு சாரத்தியம் பண்ணி

இறையான் கையில் நிறையாத முண்டம் நிறைந்த வெந்தை விடம்
ஈஸ்வர அபிமானியான ருத்ரன் கையில்
ப்ரஹ்மா வினுடைய சாபத்தாலே
ஒரு காலும் நிறையாது இருக்கிற தலை யோட்டையைத்
தன் திரு மேனியில்
ஜல பிந்துவாலே நிறைத்த
என் ஸ்வாமி வர்த்திக்கிற தேசம் –

மறையால் முத்தீயை வளர்க்கும் மன்னு புகழால் வண்மையால் பொறையால் மிக்க வந்தணர் வாழ்-
வேதத்தால் அக்னி த்ரயத்தையும் வளர்க்கும் மாறாத
புகழால்
ஔதார்யத்தால்
ஷமையால்
இவை எல்லா வற்றாலும் மிக்கு இருந்துள்ள பிராமணர்
வர்த்திக்கிற தேசம் –

புள்ளம் பூதங்குடி தானே  –

——————————————————

இறையான் குரு பாதக விமோசனம் கீழே
இதில் அவனுக்கும் கூட ஜனகனான நான்முகனுக்கு வேத பிரதானம்

துன்னி மண்ணும் விண்ணாடும் தோன்றாது இருளாய் மூடிய நாள்
அன்னமாகி அருமறைகள் அருளிச் செய்த அமலன் இடம்
மின்னு சோதி நவ மணியும் வேயின் முத்தும் சாமரையும்
பொன்னும் பொன்னி கொணர்ந்து அலைக்கும் புள்ளம் பூதங்குடி தானே—5-1-9-

துன்னி மண்ணும் விண்ணாடும் தோன்றாது இருளாய் மூடிய நாள்
மண்ணும் விண்ணும் தோன்றாது துன்னி –
இருள் தானே மூடின நாள் –

அன்னமாகி அருமறைகள் அருளிச் செய்த –
ஆச்சார்ய அனுவர்த்தனம் பண்ணிக்
கேட்கைக்கு அநாதிகாரிகளாய் இருக்கவும் கூடும் -என்று
திர்யக் வேஷ பரிக்ரஹம் பண்ணினான் ஆய்த்து –
(தேவ சஜாதீயனாய் வராமல் ஹம்சமாய் வந்தமைக்கு ஹேது
ஈஸ்வரோஹம் என்று இருப்பாரில் தலைவன்
ஆச்சார்ய அனுவர்த்தனம் பண்ணான் அன்றோ
இப்படி தாழ்ந்து ஆகிலும் உபதேசித்த இடம் வேறே உண்டோ எண்ணில்
திர்யக்காய் மத்ஸயமாய் வராமல்
அசுரர்களால் ஸ்பர்சம் -பிரிக்க ஹம்சம் வேண்டுமே
ஸூரம் =மாற்றும் அ ஸூரர்கள்
வேதம் அபகரிப்பது அபிமானி தேவதையை கொண்டு போக
அசுரர் சகவாசத்தால் வேத புருஷன் கலங்கி இருக்க
பலாத்காரத்தால் உரு மாய
அபிமானியை மீட்டு வரிசையை மீட்டுக் கொடுத்தார் )

சாரதியாய் நின்று உபதேசித்தால் போலே –
அசூரர்களோடே கலந்து உரு மாய்ந்து போனத்தை பிரிக்கைக்காக
நீரையும் பாலையும் பிரிக்கும் பதார்த்தத்தின் வடிவைக் கொண்டான் ஆய்த்து –

அமலன் இடம்-
பிரத்யுபகார நிரபேஷமாகவும்
உபகரித்த சுத்தியும்
ஒரு சுத்தியே –
சிலர் அபேஷிக்க அன்றிக்கே தன் பேறாக உபகரித்தான் ஆய்த்து –

மின்னு சோதி நவ மணியும் வேயின் முத்தும் சாமரையும் பொன்னும் பொன்னி கொணர்ந்து அலைக்கும்
பிரத்யுபகார நிரபேஷமாக உப்கரிக்குமவன் படி
உண்டாய்த்து காவேரிக்கும்
புகரை உடைத்தாய் உள்ளு மண் பற்று அன்றிக்கே இருக்கும்
நவ ரத்னங்களும் –

புறம்பே புகரூட்டி
உள்ளு மண் பற்றாய் இருக்கை யன்றிக்கே
எங்கும் ஒக்க ஒளியாய் இருக்கும் –
ஞாதாவும் ஜ்ஞானமும் போலே
இரண்டும் ஸ்வயம் பிரகாசமாய் இறே இருப்பது –

வேய்கள் உதிர்க்கிற முத்தையும்
சாமரத்தையும்
பொன்னையும்
பொன்னி
கொணர்ந்து அலைக்கும்
இவற்றைக் கொள்ளு கொள்ளு என்று கொடு வந்து
தள்ளா நிற்கும் –

புள்ளம் பூதங்குடி தானே

——————————————

தாயார் திரு நாமமும் இதில்

கற்றா மறித்துக் காளியன் தன் சென்னி நடுங்க நடம் பயின்ற
பொற்றாமரையாள் தன் கேள்வன் புள்ளம் பூதங்குடி தன் மேல்
கற்றார் பரவும் மங்கையர் கோன் காரார் புயல் கைக் கலிகன்றி
சொல் தான் ஈரைந்து இவை பாடச் சோரா நில்லா துயர் தானே –5-1-10-

கற்றா மறித்து-ஆ கன்று -கற்றா -மேய்த்து

கற்றா மறித்துக் காளியன் தன் சென்னி நடுங்க நடம் பயின்ற –
பசு மேய்க்கை-நித்ய ஸூரிகளுக்கு ஓலக்கம்
கொடுத்தவோ பாதியாய் –
கன்றுகளை மேய்க்கிற விடத்திலே –
நல்லதோர் பொய்கை காளியனால் தூஷிதமாகக் கிடக்க –
அவனை அங்கு நின்றும்  ஓட்ட வேணும் -என்று
அவன் தலை நடுங்கும் படி கூத்துக்களை யாடின –

பொற்றாமரையாள் தன் கேள்வன் –
தன்னைப் பாராதே யாய்த்து
அழிவுக்கு இட்டது
ஸ்ரீ யபதியான தன் சௌகுமார்யத்துக்குச் சேராது இறே
இஸ் சாஹசம் –

புள்ளம் பூதங்குடி தன் மேல் –

கற்றார் பரவும் மங்கையர் கோன் காரார் புயல் கைக் கலிகன்றி
ராமோ ராமோ ராம -என்கிற படியே
இரண்டு அஷரம் பிணைக்க வல்லார் எங்கும் உண்டு –
(ராம பக்தர் நாமம் சொல்ல வல்லவர் ஆழ்வார் ஒருவரே )
ஆழ்வாரும் ஒருவரே -என்னா நிற்கும் அத்தனை யாய்த்து –
நீர் கொண்டு எழுந்த காள மேகம் போலே
யாய்த்து கொடை இருப்பது –
இத் திரு மொழியை உபகரித்தவர் இறே –

சொல் தான் ஈரைந்து இவை பாடச் –
இதுக்கு மேற்பட்டது இல்லை இறே ரஸ்யதைக்கு-

சோரா நில்லா துயர் தானே
இவ்வாத்ம வஸ்துவை சோரக் கொடுக்கும் வினை நில்லாது –

———–

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

அறிவது அரியான் அடியார் தேவிமார் உய்யத்தான்
கிறி செய்வான் தேர்வார்க்கு அமுதில் அறிவினியன்
புள்ளம் பூதங்குடியான் என்னும் பரகாலன்
உள்ளூர் உம்பர் தாம் -41-

கோலா வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்டதும்
அழகைக் காட்டி தன்பால் ஆழ்வாராதிகளின் ஆதரம் பெறுக வைப்பதும் போன்ற கிறிகள்
அறிவினியன்-அறிவதற்கே இனியவன் -அறிந்த பின்பு கண்டு அனுபவிக்க இனியவன் –
அவனைப் பற்றிய அறிவே இனிக்குமே
உம்பர் -நித்ய ஸூரி கள் என்றவாறு-

—————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading