ப்ரணய ரோஷம் -மட்டை அடி உத்சவம் -ஊடல்-ப்ரேமம் விஞ்சி
நாயகி நிலையில் பலர்
இங்கு தானான ஆணான தன்மையில் -இதுவே இதன் வைலக்ஷண்யம்
கண்ணன் இடத்தில் நம்மாழ்வார்
குலசேகரப் பெருமாள் வாஸூதேவன் இடத்தில்
காதில் கடிப்பிட்டு நாயகி பாவத்தில் கண்ணன் இடத்தில்
இங்கு அர்ச்சாவதாரத்தில்
ஸ்ரீ ரெங்க பட்டினம் ஆதி ரெங்கம்
மத்ய ரெங்கம் ஸ்ரீ ரெங்கம்
அப்பால ரெங்கம்
பரிமள ரெங்கன்
ஸூகந்த வன நாயகன்
ஸூகந்த வன நாயகி –
இந்து புஷ்கரணி
நமக்காகவே இங்கு -பின்னானார் வணங்கும் சோதி அன்றோ –
இந்து சந்த்ர சாப விமோசனி தாயார்
பரிமள ரெங்க தாயார்
இந்து புஷ்காரணி
நான்கு திருக்கைகள்
கங்கை காவேரி சூர்ய சந்திரன் கர்ப்ப க்ருஹம்
வீர சயனம்
நாபியில் நான்முகன்
வேத அபகாரம் மது கைடபர்
துர் நாற்றம் வேதங்களுக்கும் போக்கி உபதசம் ஆமோத விமானம் வாசனை கொடுத்ததால்
அகண்ட கர்ப்ப க்ருஹம்
நும்மைத் தொழுதோம் பிரவேசம் –
(ப்ராப்யத்தைப்) பெற வேணும் என்னும் அபேஷையிலே கண் அழிவு இல்லாமை சொல்லிற்று இறே
கீழில் திரு மொழியிலே-( பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யமே பேறு )
பார்த்தன் பள்ளி பாடுவாள் -என்று உகந்து அருளின நிலங்களைச் சொல்லி
வாய் வெருகைக்கு மேற்பட இல்லை இறே அபேஷைக்கு
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் என்னும் திருவாய் -என்றும்
கண்ணன் விண்ணூர் தொழவே சரிகின்றன சங்கம் -திரு விருத்தம் 47–என்றும்
சொல்லுகிற இவை அடைய
இவருக்கு உகந்து அருளின நிலங்களிலே யாய்த்து
ஆகையால்
பரம பதம் கலவிருக்கையாக இருக்க
(ஸ்ரீ வைகுண்ட விரக்த்தாயா ரமயா ரம மாணாயா )
அவ் விடத்தை விட்டு ஆஸ்ரிதர்க்கு
சர்வ அபேஷித ப்ரதன் ஆகைகாக
திருவிந்தளூரிலே வந்து சந்நிஹிதன் ஆனான்
நாம் அங்கே போகப் புகவே நினைத்தவைகள் எல்லாம் பெறலாம் -என்று
பெரிய பாரிப்போடே போய்ப் புக்க விடத்து
ஒரு ஸ்ரீ புண்டரீகன் அக்ரூரன் என்றால் போலே சொல்லுகிற இவர்கள் பக்கலில் பண்ணின
விசேஷ கடாஷத்தை
தம் பக்கலிலேயும் பண்ணி
திருக் கண்களாலே குளிர நோக்குதல்
அணைத்தல்
வினவுதல்
இவர் -வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் -என்று
பாரித்து கொடு புக்க படியே
அடிமையில் ஏவுதல் –
பண்டை நாளால் திரு வாய் மொழி போலே
நம்மை ஒருகால் காட்டி நடந்தால்
சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் -போன்ற பரிமாற்றங்கள் –
செய்யக் கண்டிலர்
அத்தாலே
மிகவும் அவசந்னராய்
ஒரு மின்னிடை மடவார்-6-2-
காதில் கடிப்பில்
பிராட்டிமார் தசை பிறந்தால்
பிரணய கலஹத்தாலே கிலாய்த்துச் சொல்லும் பாசுரம் அடைய
ஆழ்வார் தாமான தன்மையிலே சொல்லலாம் படி யான பாவம் பிறந்து
சந்நிதியும் உண்டாய்
எனக்கு அபேஷையிலும் கண் அழிவு அற்று
பிராப்தனுமாய் இருக்க (சகலவித பந்து அன்றோ )
என்னை அடிமை கொள்ளாது ஒழிவதே -என்னும் இன்னாப்புடனே
சிவட்கு பிறந்து வார்த்தை சொல்லுகிறார்
கீழே காவளம் பாடியில் -4-6-சரணம் புக்கு
இடரை நீக்கு பிரகிருதி சம்பந்தம் போக்க-4-7 பிரார்த்தித்து ப்ராப்யத்தில்
ஆசை உட்கடமான அபேக்ஷை கீழே -4-8-கைங்கர்ய பிரார்த்தனை
செய்த அளவிலும்
வந்த உடன் -அடைவே செய்த அனைத்தும் வீணா என்று கோபம் விஞ்சி
உகந் து அருளின நிலங்களில் பிராவண்யம் பிறந்து
இவர் அபேக்ஷித்தபடி கொடுக்கக் கடவனாய்
சரீர முடிவில் -அந்தத்தில் -பிரகிருதி சம்பந்தம் நிவர்த்திப்பிக்க நினைத்து
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
திவ்ய தேச நிலையைக் காட்டிக் கொடுக்க
இவரோ அர்ச்சா அவஸ்தையில் சமாதி குலைய மாட்டாமையால் இருக்க
அத்தை இவர் -சர்வ அபேக்ஷிதா ப்ரதன் அன்றோ -என்று நினைத்து –
எனது அபேக்ஷித்தையும் தலைக்கட்டிக் கொடுக்கக் கூடாதோ
கர்மம் தொலைந்து அங்கு தானே என்னில்
நம்மாழ்வாருக்கு -மாக வைகுந்தம்
பண்டை நாளில் -நடந்து காட்டக் கூடாதோ
நம்மாழ்வார்
காண வாராய் -நடந்து காட்ட வேண்டும் –
அடியேனும் பிடிக்க கூவுதல் வருதல் செய்யாயே பிரார்தித்தாரே கிருஷ்ண
த்ருஷ்ணா தத்துவமும்
உன் தாமரைக் கண்களால் நோக்காய்
இத்யாதி பரிமாற்றத்தில் ஆசை அங்கமான இவருக்கும் உண்டே
ஏவுதல் -என்றது -சட்டு என்று கைங்கர்யம் கொடுக்க வேண்டும் -கடிதாக் கருமம் அருளி-
கலக்கத்தில் மிகுதி யாக -தலைக்கு மேல் பிறந்த இச்சையால் வந்த கலக்கம்
ஆண் தனிமையிலே ஊடி அருளிச் செய்கிறார்
————————————————————–
நும்மைத் தொழுதோம் நுந்தம் பணி செய்து இருக்கும் நும் அடியோம்
இம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் இந்தளூரீரே
எம்மைக் கடிதாக் கருமம் அருளி யாவா வென்று இரங்கி
நம்மை ஒரு கால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே —-4-9-1-
நுந்தம் பணி செய்து இருக்கும் நும் அடியோம்–கைங்கர்யம் செய்து இருக்கும் சேஷ பூதன் –
இன்பம்-ஞான லாபம்
கருமம்-பரம பிரயோஜனமாக கைங்கர்யம் –
நும்மைத் தொழுதோம் –
இதர தேவதைகளுக்கு அந்தர்யாமியாய்
இருக்கிற நிலையைப் புத்தி பண்ணித் தொழுதோமோ
ஆறி இருக்கைக்கு-
யோயோ யாம் யாம் தநும் பக்த -இத்யாதி
இந்த்ராதி தேவர்கள் அவனுக்கு அனுபூதர்
(பரன் திறம் அன்றி தெய்வம் மற்று இல்லை -சரீர பூதர்
அவரவர் இறையவர் இத்யாதி )
அவர்களுக்கு இவன் அந்தர்யாமி -என்று ஆஸ்ரயித்தால்
அவ்வவருடைய அதிகாரத்து அளவிலே பலம் ஆகையாலே
விளம்பம் பிறந்து இருக்கவுமாம் இறே
(நும்மை
ப்ராபகத்வ விவஷை -உபாயமாக ஆஸ்ரயித்தோம்
தொழுகையே சரணாகதி
இங்கே வந்து ஸந்நிஹிதனான நும்மையே தொழுதோம்
தேவதாந்த்ர -சாதாரண அந்தர்யாமி –
ஸ்வரூப வியாப்தி -எங்கும்
உபாசகனுக்கும் விக்ரஹத்துடன்
அசாதாரண விக்ரஹ விசிஷ்டதை -ஆசை
தேவதை அந்தர்யாமி -விளம்பம் -ஸ்ரத்தை ஏற்பட்டு
கர்மயோக நிஷ்டன் அக்னி இந்திரன் -இவனுக்கு சரீரம்
கர்மயோகம் செய்து பக்தி பிறந்து -இவை பக்திக்கு அங்கங்கள்
முதல் ஆறு அத்தியாயங்கள்
பின்பு பக்தியில் மூட்டும்
உபாசனம் பண்ணுபவனுக்கு -விளம்பம் சித்தம்
எந்தாய்
சேஷத்வ நிபந்தம்
நேராகத் தான் தொழுதோம் )
அன்றிக்கே
நும்மைத் தொழுதோம்
படுகுலைப் பட்டோம் -என்னவுமாம்
அதாவது பிரிந்தாலும் ஒரு சூது சதுரங்கத்திலே போது போக்கி
தரிக்கலாவது ஒரு விஷயத்தை ஆஸ்ரயிக்கப் பெற்றிலோமே –
தொழுதோம்
முன்பு எல்லாம் ஈரசு என்று இருந்து (ஸ்வ தந்த்ரன் என்ற நினைவுடன் தொழுது )
கார்ய காலத்திலே கைங்கர்யமே அமையும் என்று
இருப்பார்க்கு அன்றோ தாழ்த்து இருக்கலாவது –
(பூத நிர்த்தேசம் தொழுதோம் -அடியேன் அடைந்தேன் முதல் முன்னம் –
அநாதியாக தொழுதோம் என்று தோற்றுகையால்
இருவரையும் ஸேஷி என்று புத்தி பண்ணி ஸ்வார்த்தமாக கைங்கர்யம்
கைங்கர்யம் பண்ணி தான் ஆனந்தம் படுதல் முன்பு எல்லாம்
ஸ்வ அதிசயத்தை தான் பெற்று
இப்பொழுது ஆஸ்ரயிக்கும் விதம் வியாவ்ருத்திக்கிறார் )
நுந்தம் பணி செய்து இருக்கும் நும் அடியோம்
கைங்கர்யத்தை ஒழியச் செல்லுவது ஆதல்
கைங்கர்யம் பண்ணுகைக்கு ஈடான பிராப்தி இன்றிக்கே ஒழிதல்
செய்யில் அன்றோ தரித்து இருக்கல் ஆவது
தேவரீர் திருவடிகளில் உண்டான கைங்கர்யத்தைப் பண்ணி
அது பெறில் ஜீவித்தல்
இல்லை யாகில் முடிதல்
செய்யும்படி தேவர்க்கு அனன்யார்ஹர்
(மயர்வு அற்றார் ஆகையால் பரார்த்தமாக -ஸ்வா தந்தர்ய லே சமும் இல்லை
நம்மையே ப்ராப்யமாகவும் ப்ராபகம் ஆகவும் எண்ணி இராசு தவிர்ந்தீர் ஆகில்
எதற்கு கோபம் என்ன
நும் தம் பணி செய்து இருக்கும் நும் அடியோம் என்கிறார்
கைங்கர்ய சித்தி பெற வேணுமே
அநந்யார்ஹ சேஷ பூதன் கர்தவ்யம்
கைங்கர்யம் ஒழிய செல்லுதல் ஆதல்
கைங்கர்யம் பண்ணுகைக்கு ஈடான பிராப்தி இன்றிக்கே ஒழிதல் செய்யில் அன்றோ தரித்து இருக்கலாவது
இரண்டுமே இருக்க தரிக்க முடியாமல்
கைங்கர்யம் இல்லை என்றால் முடியும் படி அநந்யார்ஹன் ஆகி இருக்கிறோமே
நும் தம் பணி செய்து இருக்கும் நும் அடியோம்)
ந ச சீதேத்யாதி -தேவரை ஒழிந்த அன்று பிராட்டியும் உளள் ஆகாள்
அடியேனும் உளன் ஆகேன்
தேவரை ஒழிந்த அன்று முதலில் ஜீவிக்கும் அது தான் இல்லை
அபி ஜீ வாவ –எதி ஜீ வாவ -முஹூர்த்தம் ஒரு ஷண காலம்
ஜலான் மத்ஸ்யா விவ
ஜலத்தை பிரிந்த மத்ஸ்யம் ஜீவிப்பது
அந்நீர் நசை அறும் அளவு இறே
அப்படியே நில் என்று சொன்ன வார்த்தை உம்முடைய திரு உள்ளத்திலேயும் உண்டு என்று
என்று அறியும் அளவும் காணும் நாங்கள் ஜீவித்து இருப்பது
இவருடைய சத்தை உண்டு உண்மை
அது நிலா தென்றல் சந்தனம் தண்ணீர் போலே
பரார்த்தமாய் யாய்த்து இருப்பது
சேஷிக்கு அதிசயத்தை பண்ணி யாய்த்து இவருக்கு ஸ்வரூப சித்தி-
அடியோம்
அத் தலைக்கு அதிசயத்தை பண்ணுகையே
ஸ்வரூபமாம் படி யாய்த்து ப்ராப்தி இருப்பது –
(பர கத அதிசய ஆதேயானே இச்சையா -அதிசயம் பண்ணி நியமிக்கப்பட்டு இருப்பதே சேஷ லக்ஷணம்
கைங்கர்ய அலாபத்தால் கிலாய்க்கிறார்
பணி செய்தால் தரிப்பதும் இல்லை என்றால் இல்லாமல் இருப்பதோ ஸ்வரூபம்
மணம் புஷபம் ஒளி மணி சேஷத்வம் ஆத்ம
அஹம் அபி -ச அர்த்தம்
சீதாபிராட்டி போல் நானும் இல்லை
ஆழ்வார் ஸ்வரூபமும் பரார்த்தம்
ஏன் என்றால் தண்ணீர் தென்றல் சந்திரன் போல் )
இம்மைக்கு இன்பம் பெற்றோம் –
அடிமையாலே ஸ்வரூப லாபமாம் படி இருக்கும் எங்களுக்கு
அழகிதாக விடாய்த்த விடத்தே தண்ணீர் வார்த்தீர்
(இவர் தாகமே கைங்கர்யம் தானே விபரீத லக்ஷணை
அனுகூல ரூப ஞானம் இன்பம் )
அன்றிக்கே
ஞான லாபத்தால் வந்த தரிப்பைச் சொல்லிற்று ஆகவுமாம்-
அலாபத்தையே சொல்லா நிற்க
இப்போது இந்த திருப்தி கூடுமோ என்னில்
இந்த ஞான லாபம் தான் இறே கிலாய்க்கப் பண்ணுகிறது
இல்லையாகில்
அல்லாதாரோபாதி உண்டு உடுத்து போது போக்கித் திரியலாமே
எந்தாய் இந்தளூரீரே
அதுக்கடியாக ஸ்ரீ வைகுண்டத்தை விட்டு
திரு இந்தளூரிலே வந்து சந்நிதி பண்ணின ஸ்வாமி-
எந்தாய்-
இவ் வஸ்து உனக்கு சேஷம் -என்னும் இம் முறையை அறிவித்தவனே
இன்று இப்படி ஆறி இருக்கிற நீ
முன் தீம்பு செய்து
சம்பந்த ஞானத்தை எனக்கு பிறப்பிப்பான் என்
சம்பந்த ஞானத்தை பிறப்பித்தோம் என்றீர்
பெற்றது இவ்வம்சம் ஆகில் நீர் பெறாததாகச் சொல்லுகிற அம்சம் என்ன-
எம்மைக் கடிதாக் கருமம் அருளி –
சேஷத்வ ஞானத்தை பிறப்பித்து அருளிற்று
அந்த சேஷத்வ அனுரூபமான வ்ருத்தியை
என்னைக் கொண்டு அருள வேணும் –
எம்மை –
க்ரமத்திலே
ஒரு தேச விசேஷத்தே கொடு போய் கார்யம் செய்கிறோம் என்று
ஆறி இருக்கலாம் படியோ என் தசை
ஷிப்ரம் நிவேதயத மாம் விபீஷணஸ்ய உபஸ்திதம் -என்னுமா போலே
ராவண பவனத்திலே பொருந்தாமையும்
(சர்வ லோக சரண்யன் ராகவன் மஹாத்மா -)ராம கோஷ்டியிலே புகுரப் பெறாமையும்
இரண்டாலும் நோவு பட்ட ஸ்ரீ விபீஷண ஆழ்வானைப் போலே
ஞான லாபத்தாலே சம்சாரத்திலே பொருந்தாமை உண்டாகப் பெறுவது
ப்ராப்தி பலமான கைங்கர்யத்தில் அந்வயிக்கப் பெறாது ஒழிவதாய்
நோவு படுகிற படி
கடிதாக் கருமம் அருளி –
சர்வஞ்ஞன் ஆனவனுக்கும் அறிவிக்க வேண்டும்படி இருக்கிறது காணும்
க்ரம ப்ராப்தி பற்றாத படியான இவருடைய சௌகுமார்யம்-
அது செய்யும் இடத்திலும்
யாவா வென்று இரங்கி
அடிமை பெறாமை யாலே உறாவின அகிஞ்சனன் அநந்ய கதி -என்று
என்னுடைய தய நீய தசையை புத்தி பண்ணி
ஐயோ ஐயோ என்று கிருபை பண்ணி அருளி
தொழுதோம் -என்று வளைப்பிட ஒண்ணாது காணும்
அபிமதம் பெரும் போது அவனுடைய இரக்கமே வேணும் –
(இரக்கமே உபாயம் – இனிமையே ப்ராப்யம் – இச்சையே அதிகாரி ஸ்வரூபம் )
நம்மை –
உம்மை நீர் கண்ணாடிப் புறத்திலே கண்டு அறியாமை இல்லையே
நம்மைப் பிரிந்தார் பிழையார்கள்-என்று இருக்க வேண்டாவோ
ஒரு கால் காட்டி நடந்தால் –
ஒரு கால் காட்டினால் பின்னை இவன்
வளைப்பு இடுகிறான் என்று இருக்க வேண்டா
ஜ்வர சன்னி பதிதர்-ஒரு கால் நாக்கு நனைக்க அமையும் -என்னுமா போலே
(எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று எக்காலத்திலும் யாது ஒன்றும் வேண்டேன் –
உள்ளத்தில் இருப்பதைத் தவிர வேறு ஒன்றும் வேண்டேன் )
காட்டி –
ஏஷ சர்வஸ்வ பூதஸ்து பரிஷ்வங்கோ ஹநுமதோ -என்கிற படி
நாம் இருந்த படி கண்டாயே -என்று வடிவைக் காட்டி
(இரண்டு உயிர் காத்ததுக்கு ஆலிங்கனம் ஒன்றே இப்பொழுது என்னால் முடியும் –
என்னையே பரிசாகக் காட்டிக் கொடுக்கிறேன்)
நடந்தால் -என்கிறது
போனால் என்கிறது அல்ல
என் முன்பே நாலடி இட்டு நடந்து காட்டினால்
அக்ரத ப்ரயயௌ ராம சீதா மத்யே ஸூ மத்மமா -என்கிறபடியே
பிராட்டிக்கு இட்ட விருந்து இட வேணும் காணும் இவருக்கு
(லஷ்மணனை நடை அழகைப் பார்க்காதே கைங்கர்யம் இழப்பாய் சுமந்தரை
பிரணவமே நடந்து சம்பந்தம் அறிவித்து நும் அடியோம் அறிந்தோம்
நாராயணாயா கைங்கர்யம் பிரார்த்தித்து நிற்கிறேன் கொடுத்து அருள வேண்டாமோ
உன் கோயில் நின்று இங்கனே போந்து அருளி -போதருமா போலே
நீ பூவைப் பூ வண்ணா –யாம் பெரும் சம்மானம் நாடு புகழும் பரிசு )
இப்படி நடந்தால் பெரும் பேறு என் என்னில்
நாங்கள் உய்யோமே
போன உயிர் மீளும்
உறாவின பயிரிலே ஒரு பாட்டம் மழை விழுந்தால்
அது ஜீவிக்கச் சொல்ல வேணுமோ –
————————————————-
நும் அடியோம் –
நடந்து காட்ட விடில் முடியோம் என்கைக்கு அடி
கர்மாதி உபாயாந்தரங்கள் மூலம் அடைய வேண்டியது என்ன
நிரதிசய போக்யனாய் இருப்பை நீ காட்டிய பின்பு
நான் செய்வது ஏதாவது உண்டோ
குறையும் நீயே செய்து அருள வேணும் என்கிறார் –
சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே மருவினிய
மைந்தா அம் தண் ஆலி மாலே சோலை மழ களிறே
நந்தா விளக்கின் சுடரே நறையூர் நின்ற நம்பீ என்
எந்தாய் இந்தளூராய் அடியேற்கு இறையும் இரங்காயே—4-9-2-
சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே –
அகவாயில் பிரகாசிக்கிற இதுக்கு நான் ஏதேனும்
கிருஷி பண்ணிற்று உண்டாகில் அன்றோ
பிராப்திக்கு என்னால் கிருஷி பண்ணலாவது-
ஹிருதயத்தில் எப்போதும் ஒக்க பிரகாசியா நின்றான் ஆய்த்து-
திருவே –
இவருடைய சம்பத்து அவன் ஆயிற்று
திருவுக்கும் திருவாகிய திரு இறே
மருவினிய –
அவ்விருப்பு தான் இவருக்கு இனிதாகிற படி
மருவ மருவ விட்டு பற்ற வேண்டும்படி இருக்கை அன்றிக்கே
நிரதிசய போக்கினாய் நின்றான் ஆய்த்து
மைந்தா –
நித்தியமான யௌவனத்தை உடையவனே
யுவா குமாரன் அன்றோ –
அம் தண் ஆலி மாலே சோலை மழ களிறே
தர்ச நீயமான ஸ்ரமஹரமான
திரு வாலியிலே நித்ய வாஸம் பண்ணி
வ்யாமோஹத்தை தெரிவித்தவனே –
கள்வன் கொல் என்னும் படி கைப்பிடித்து வ்யாமோஹத்தை அறிவிப்பித்தவனே
சோலை மழ களிறே-
சோலைக்கு உள்ளே வளர்ந்த தொரு
இள வானைக் கன்று போலே யாய்த்து -செய்தது அடைய இனியதாய் இருக்கிறபடி –
நந்தா விளக்கின் சுடரே –
ஒரு விச்சேதம் இல்லாத தீபத்தில்
திரியும் எண்ணையும்
புகையுமான அழுக்கு இன்றிக்கே
புகர் தானே ஒரு வடிவு கொண்டால் போலே
இருக்கிற ஸ்வரூபத்தை உடையவனே –
நறையூர் நின்ற நம்பீ –
திரு நறையூரில் வந்து சந்நிஹிதனாய்
ஆஸ்ரயநீய வஸ்துவுக்கு இன்னம் ஓன்று கூட்டுப் பெற்றது இல்லை
என்னும் குறை தீரும்படி இருக்கிற பூரணன் ஆனவனே
என் எந்தாய் இந்தளூராய் –
திரு இந்தளூரிலே வந்து சந்நிதி பண்ணி
எனக்கு சம்பந்த ஞானத்தைப் பிறப்பித்தவனே
திருவாலி யானைக் கைப்பிடித்து
திரு நறையூர் நம்பியானை உபாய பூதனாகவும் -நண்ணு நறையூர் நான் தொழுதும் எழு நெஞ்சமே
திரு இந்தளூரானை சேஷித்வ சம்பந்த ஞானம் அறிவிப்பித்தவன்
அடியேற்கு இறையும் இரங்காயே –
சம்பந்த ஞானத்தை பிறப்பித்த உனக்கு
என்னுடைய ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தி விசேஷத்தை
கொள்கை யாகிற
இம் மாத்ரம் இத்தனையும் செய்கை பெரிய பணியோ –
(சங்கு சக்கரம் பிடித்த சயன திருக்கோலம் காட்டி அருளினான் )
——————————————————
அந்தர்யாமி விபுத்வம் ஜெகதாகாரம் அர்ச்சா திரு மேனி சேவை இவை மட்டும் போதாது
நடந்து வீற்று இருந்து பேசிக் காட்டி அருள வேணும்
நிர்பந்திக்க –
விருப்பம் கொழுந்து விட்டு இருக்கும் தனியேன்-
இறையும் இரங்காயே –
ஸ்வரூபம் காட்டி அடியோம் புரிய வைத்தீர்
ஸ்வரூப அனுரூப விருத்தி கைங்கர்யம் வேண்டும் என்றார் கீழே
சம்பந்த ஞானம் கொடுத்து
உபாய உபேயங்களும் நானேயாய் என்னும் அத்தையும் அறிவித்து
சிந்தை தன்னில் நீங்காது இருக்கிறேன் என்றும் சொன்னீர்
இவ்வளவும் செய்த பின்பும் இறையும் இரங்காதே
உம்மைக் கண்டு பரமபதத்தில் போல் இங்கே அனுபவிக்கக் கூடுமோ
லீலா விபூதியில் கொடுத்தால் வேறுபாடு இல்லாமல் போகுமே
அப்பால் அப்ராக்ருத ம் இப்பால் லீலா விபூதி
சேது -அவன் -அணை -இரண்டும் கலக்காமல் காக்கும் அதே போல் அவன்
இங்கேயே கொடுத்தால் நமக்கு அவத்யம் ஆகுமே என்ன
உமக்கு வரும் அவத்யம் பரிகரிக்கவே இரங்கச் சொல்கிறேன் என்கிறார் இதில்
பேசுகின்றது இதுவே வையம் ஈரடியால் அளந்த
மூசி வண்டு முரலும் கண்ணி முடியீர் உம்மைக் காணும்
ஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் அயலாரும்
ஏசுகின்றது இதுவே காணும் இந்தளூரீரே—-4-9-3-
பேசுகின்றது இதுவே –
உமக்கு வரும் அவத்யத்தை
பரிஹரிக்க வேணும் என்னும் இதுவே நாங்கள் சொல்லுகிறது
வையம் ஈரடியால் அளந்த மூசி வண்டு முரலும் கண்ணி முடியீர்-
நீர் குணார்ஜ்ஜனம் பண்ணுகைக்கு பட்ட பாடு எல்லாம் அறிவீரே
இப்போது ஒரு வ்யக்தியிலே அல்பம் நெகிழ நின்று
அப் பெரிய குணம் எல்லாம் இழக்க அன்றோ புகுகிறீர்-
(நல்கித்தான் காத்து அளிக்கும் பொழில் ஏழும் -நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
கௌசல்யா லோக பார்த்தாராம் -லோக பார்த்தாவாக இருக்கவே பெற்றாள் -)
வரையாதே நோக்கின உமக்கு
இப்போது ஒருவனை நெகிழ நின்றீர் என்றால்
குண ஹானி விளையாதோ
பூமிப் பரப்பை ஈரடியால் அளந்து கொண்ட உமக்கு
மூசுகையாவது -மொய்க்கை
வண்டுகள் ஆனவை மது பானம் பண்ணி அத்தாலே
ஆளத்தி வையா நின்றுள்ள மாலையை
உடைய திரு அபிஷேகத்தை உடையீர்
உம்முடைய வடிவு பரார்த்தம் என்று அன்றோ பிரசித்தம்
நீர் சர்வ ரஷகராய் அன்றோ முடி சூடிற்று-
(நதே ரூபம் நதே ஆயுதம் பக்தானாம் த்வாம் பிரகாசத )
அது எல்லாம் அப்படியே
அதுக்கு இப்போது வந்தது என் என்ன
அதுக்கு வந்தது அன்றோ இது –
உம்மைக் காணும் ஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் –
உம்மைக் காண வேண்டும் என்று ஆசைப் பட்டு
பெறாமையாலே சிலர் முடிந்தார்கள் என்றால்
உமக்கு இது போக்கி அவத்யம் உண்டோ
உம்மைக் காண வேணும் என்கிற ஆசை ஆகிற
பெரும் கடலிலே புக்கு அகப்பட்டு அறிவு கெட்டோம்
இத்தால் நமக்கு வருவதோர் அவத்யம் உண்டோ என்ன –
அயலாரும் ஏசுகின்றது இதுவே காணும் இந்தளூரீரே-
புறம்புள்ளார் அழகியதாக ஆசை பட்டான்
ஆசைப் பட்டவனுக்கு அழகிதாக முகம் கொடுத்தார்
இதுவோ தான் சிலர் ஆசைப் பட்டால் பலிக்கும் படி என்று
உம்மைப் பழி சொல்லா நின்றார்
அயலாரும் ஏசு கின்றது இதுவே
நான் பேசுகின்றதுவும் இதுவே –
இந்தளூரீரே–
உகவாதார் சொல்லும் பழியை பரிஹரிகைக்கும்
உகப்பார் நினைத்த வகைகள் எல்லாம் பரிமாறுகைக்கும் அன்றோ
திரு இந்தளூரிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறது –
———————————————————-
கீழ் பாட்டோடு சங்கதி இதுக்கு –
நமக்கு அவத்யம் வரும் என்று இறே நீர் தாம் இப்படிப் படுகிறது
நாம் அத்தைப் பொறுக்கிறோம் என்ன
உமக்கு பொறுக்க ஒண்ணாததும் ஓன்று உண்டு
எங்களுக்கும் அவத்யம் என்கிறார்
நதே நுரூபே-ஜிதந்தே -என்னக் கடவது இறே-
ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காயாய்த்து அடியோர்க்குத்
தேசம் அறிய வுமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்குக்
காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர் எம்பெருமான்
வாசி வல்லீர் இந்தளூரீர் வாழ்ந்தே போம் நீரே —4-9-4-
காசின் ஒளியில்-உருக்கி வார்த்த தங்கத்தின் ஒளியை விட உயர்ந்த தேஜஸ்ஸூ –
சுட்டு உரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது –
வாசி வல்லீர்-தார தம்யம் அறிந்தவர் அன்றோ –
ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காயாய்த்து
நாள் செல்ல செல்ல அஹன் யஹநி வர்த்ததே -என்கிறபடியே
ஆசையானது கரை புரண்டு
ஏத்துகையே ஸ்வபாவம் ஆம் படியான
மகா பாபத்தைப் பண்ணின
எங்களுக்கு இழுக்கு ஆய்த்து
அடியோர்க்குத் தேசம் அறிய வுமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்குக்
சேஷ பூதன் சேஷியை ஆசைப் பட்டு ஏத்துகை முறை அன்றோ என்று இருக்கை அன்றிக்கே
இது தன்னை அவத்யமாய் உப பாதிக்கும் படியாக வந்து விழுந்தது
எமக்கு –
உமக்கு வருமதில் வேணுமாகில் ஆறி இருக்கிறீர்
எங்களுக்கு வருமதில் உமக்கு ஆறி இருக்கப் போமோ-
தேசம் அறிய வுமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்குக்-
பாவியோம் விழுக்காடு அறியப் பெற்றிலோம்
இப்படி விளைவது அறிந்தோம் ஆகில்
நீரும் நாங்களும் அறிந்தது அறிவாக ஸ்நேஹித்து விடலாய்த்தே
லோகம் அடங்க இருந்ததே குடியாக அறியும் படி
வுமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்குக்-
இன்னமும் வேறு ஒரு ரஷகன் உண்டாய் அவன் வாசலிலே சென்று தான்
தன் கார்யம் குறையும் தலைக் கட்டிக் கொள்கிறான் என்று தான்
ஆறி இருக்கிறீரோ
(அகாரத்துக்கே மகாரம் அநந்யார்ஹன் என்று உகாரத்தால் சொல்லிக் கொடுத்தீரே )
காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர் –
உமக்கே அனந்யார்ஹராய் இருக்கிற எங்களுக்கு
சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது -என்கிறபடியே
பொன் ஒளியில் காட்டிலும் விளங்கா நின்றுள்ள
வடிவழகைக் காட்டு கிறிலீர்-
எம்பெருமான் வாசி வல்லீர் –
உன்னுடைய வடிவில் வீறும்
ஆசைப் பட்ட எங்கள் சிறுமையும்
நேராகக் கணக்கிட வல்லீர்
(அறிந்த பின்பு இரக்கம் பீறிட்டு வர வேண்டாவோ )
இந்தளூரீர் –
நித்ய ஸூரிகளுக்கு படி விடும் வடிவை
சம்சாரிகளுக்கும் ஒக்க படி விடுகைக்கு அன்றோ
திரு இந்தளூரிலே வந்து நிற்கிறது
வாசி யற முகம் கொடுக்க வந்து நிற்கிற இடத்தே
வாசி வையா நின்றீர்
வாழ்ந்தே போம் நீரே –
உம்முடைய உடம்பு உம்மை ஆசைப் பட்டாருக்காக கண்டது என்று இருந்தோம்
அங்கன் அன்றாகில்
அத்தை நீரே கட்டிக் கொண்டு வாழும் –
————————————————-
விராட் ஸ்வரூபம் த்யானம் -ஸூ கர் சொல்ல பரிக்ஷித் -முடியாமல் –
சங்கு சக்ர கதாதர பெருமாளைத் த்யானம் சொல்ல முடிந்தது
அது முடியாது என்று அறிந்தபின்பே இதன் அருமை தெரிய வரும் என்றால் போல் இங்கும் –
இவரை பஹு முகமாக சமாதானம் பண்ண வர
எம்பெருமான் அபிப்ராயம் வெளிப்படா நின்று கொண்டு சங்கதி
இங்கே சந்நிஹிதர் ஆனோமாகில்
ஜகதாகாரனாய் இருக்கிற இருப்பைக் காட்டித் தந்தோம் ஆகில்
நாம் உம்முடைய விஷயத்தில் ஒன்றும் செய்யாதோமாக
நீர் இங்கனே கிடந்து படா நிற்கிறது என் என்ன –
கண்ணாலே குளிர நோக்கி
வாயாலே வினவி
அடிமை கொள்ள வேணும் என்று ஆசைப் பட்ட
எனக்கு
இத்தால் என் செய்தது யாய்த்து
என்கிறார் –
தீ எம்பெருமான் நீர் எம்பெருமான் திசையும் இரு நிலனுமாய்
எம்பெருமானாகி நின்றால் அடியோம் காணோமால்
தாய் எம்பெருமான் தந்தை தந்தையாவீர் அடியோமுக்கே
எம்பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே —4-9-5-
இவற்றுக்கு அந்தர்யாமியாய் -நிர்வகிப்பவனாய் –
நீராய் நிலனாய் –இத்யாதி -கூரார் ஆழி வெண் சங்கு ஏந்தி –ஒரு நாள்
மண்ணும் விண்ணும் மகிழவே -நம்மாழ்வார்
தீ எம்பெருமான் நீர் எம்பெருமான்-
இவை இரண்டும் ஐந்துக்கும் உப லஷணமாய்
இத்தாலே காரண வர்க்கத்தை அடைய நினைத்து
காரண பூதனாய் இருக்கும் இருப்பை சொல்லுகிறது –
திசையும் இரு நிலனுமாய் எம்பெருமானாகி நின்றால்
இத்தால் கார்ய வர்க்கத்தை நினைக்கிறது
இப்படி காரண பூதனாயும்
கார்ய பூதனாயும்
இருக்கிற இவ் வாகாரததாலே
நீ உன்னுடைய ஸ்வாம்யத்தை-( சொத்தை -) நிர்வஹிப்பதாக ஒருப் பட்டால்
(சத்தாகவே ஒன்றாகவே இரண்டாவது இல்லாமல்
சதேவ சோம்ய ஏகமேவ அத்விதீயம்
வியாபநாத் தாரணாத் ஸ்வாம்யாத் அந்நிய -புருஷோத்தமன் -15 அத்யாய சுருக்கம் )
அடியோம் காணோமால்-
தேவரோடு கலந்து அனுபவிக்க வேணும்
என்று ஆசைப் பட்ட அடியோங்கள்
என் பெற்றோம் ஆவுதோம் –
தாய் எம்பெருமான் –
தேவர் நெகிழ இருந்தால்
புறம்பு போகைக்கு ஓரிடம் உண்டோ –
(தரு துயரம் –அவள் நினைந்தே அழும் குளவி )
தந்தை தந்தையாவீர் –
இது தான் என் அளவிலேயுமாய் இருந்ததோ –
(எந்தை தந்தை தந்தைக்கும் முந்தை அன்றோ )
அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே –
அநந்ய கதிகளாய் இருக்கிற எங்களுக்கு
ருசி பிறந்த போதே
நினைத்த படிகள் எல்லாம்
அனுபவிக்கைக்கு அன்றோ
தேவரீர் திரு இந்தளூரிலே வந்து கிட்டி நிற்கிறது –
பூ அலறும் போதை செவ்வி பார்த்து பறித்து கொடு வாரா நிற்பாரைப் போலே
ருசி பிறந்த போதே அடிமை கொள்ளுகைக்கு ஈடாக
காலம் பார்த்து அன்றோ தேவரீர் இங்கே வந்து நிற்கிறது –
பரத்வம் நித்ய ஸூரிகளுக்கு அனுபாவ்யமாய் இருக்கும்
வ்யூஹம் ப்ரஹ்மாதிகள் உடைய கூக்குரல் கேட்கைக்கு ஈடாக இருக்கும்
ராம கிருஷ்ணாதி அவதாரம் தசரத வசுதேவாதிகள் உடைய பாக்ய பலமாய் இருக்கும்
உகந்து அருளின நிலங்கள் –
தங்களுக்கு ஹிதம் இன்னது என்று அறியாதே
சம்சாரம் த்யாஜ்யம் என்று அறியாதே
சர்வேஸ்வரன் பிராப்யன் என்று அறியாதே
இருக்கிற சம்சாரிகளுக்கே முகம் கொடுக்கைகாகவாய் இருக்கும் இறே
குருடருக்கு வைத்த இறையிலியில்
விழித்தாருக்கு பிராப்தி இல்லை இறே
பின்னானார் வணங்கும் சோதி -என்னக் கடவது இறே
———————————————
நீரே வாழ்ந்தே போம்
அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ என்று எல்லாம்
இப்படி ஸ்வரூபத்துக்கு சேராதவற்றைச் சொல்லக் கடவீரோ என்ன
அருளிச் செய்கிறார் இதில் –
சொல்லாது ஒழிய கில்லேன் அறிந்த சொல்லில் நும் அடியார்
எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கு இவ் உலகத்து
எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூரீரே —4-9-6-
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர்
விரஹ அஸஹிஷணத்வம் உடைய நன்மை ஸஹிஷணத்வம் உடைய தீமை அறிவீர்
நமக்கு-விரஹ அஸஹிஷணத்வம் உடைய மென்மை மார்த்வம்
சொல்லாது ஒழிய கில்லேன் –
சேஷி சந்நிதியில் சேஷ பூதன் பரிமாறும் முறையில்
பரிமாற ஷமன் ஆகிறிலேன்
சேஷி செய்த படி கண்டு இருக்கைக்கு மேற்பட
சேஷ பூதன் நிர்பந்திக்கக் கடவன் அன்று இறே
இப்படி இருக்க மாட்டு கிறிலேன்
அறிந்த சொல்லில்-
அறிந்தவற்றைச் சொல்லில்
முறை செய்யக் கடவது அல்லாதாகப் பார்த்த பின்பு
இனி அதுக்கு ஈடாக பிரதிபன்னங்களைச் சொல்லில்
நும் அடியார் எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை
உம்மை பிரிந்து
பின்னையும் காணலாம் என்னும் நசையாலே
பத்து மாசம் தரித்து இருக்கைக்கு ஈடான
எலும்பு முற்றின பிராட்டியோ பாதியாக நினைத்து இரா நின்றீர்
அவள் ஏகோந சேஷி யாகையாலே அவன் வரும் வரை காத்து இருக்க வேணும்
உம்மை அரை ஷணமும் காணாவிடில் ஜீவிக்க மாட்டாத அடியேனையும்
அவள் முன்னாகப் பற்றினார்க்கு இத்தனை வாசி உண்டு போலே காணும்
(ஸூ கந்த வன நாயகியைப் பற்றி அன்றோ பரிமள ரெங்கனைப் பற்றினார் இவர்
அவன் ஸ்வா தந்தர்யம் அறிந்து வேறே கடகர் இல்லாமையால் அவன் வரும் வரை ஆறியே இருக்க வேண்டும் )
ஜீவிக்கிலும் சில நாள் தரித்து இருக்கும்படி ஜீவித்து
பட்டினி விடிலும் சில நாள் பொறுக்க வல்லாரைப் போலே
யாய்த்து நம் ஆழ்வார் போல்வார் ப்ரக்ருதி-
(மலையாள ஊட்டு போல் உடைய நங்கை திரு மகன் அன்றோ )
உண்ணவும் பொறாது
பட்டினி விடவும் பொறாது
என்னும் சுகுமாரரைப் போலே யாய்த்து
இவருடைய சௌகுமார்யம்-
தூது விடப் புக்கு
தூது அத்தலைப் பட்டு மீளுவதற்கு முன்பே
பற்றாமை தாம் கிடந்து கூப்பிடுகிறார் இறே
தூ விரிய மலருழக்கியிலே –
நல்லார் அறிவீர் –
தேவரை ஒழியச் செல்லாதார் பிரகிருதியும் அறிவீர்
தீயார் அறிவீர் –
தேவரை ஒழியவும் ஜீவித்து இருப்பார் பிரகிருதியும் அறிவீர்
இங்கன் தனித் தனி பிரித்து சொல்லுகிறது என்
நமக்கு இவ் உலகத்து எல்லாம் அறிவீர் –
அஞ்ஞாதன் நாஸ்தி தே கிஞ்சித் த்ரிஷூ லோகேஷூ ராகவ -(ஸூக்ரீவன் வார்த்தை அபய பிரதான கட்டம் )
இந்த லோகத்தில் உம்முடைய ஞானத்துக்கு அவிஷயமாய்
இருப்பது ஓன்று இல்லை –
ஈதே அறியீர் –
சர்வஞ்ஞனையும் அஞ்ஞன் ஆக்க வேண்டும்படி காணும்
இவருடைய பிரகிருதி மார்த்தவம்
இந்தளூரீரே –
தம்மை ஆசைப் பட்டார் பருவம் அறிந்து
முகம் காட்டிற்றிலர் என்னும்
அவத்யத்தை பரிஹரிகைக்கு அன்றோ
நீர் திரு இந்தளூரிலே வந்து நிற்கிறது
போந்த கார்யத்தை மறக்கிறது என் –
—————————————————–
கீழ்ப் பாட்டோடு இதுக்கு சங்கதி
கீழே ஞானத்தில் குறைவு இதில் சக்தியில் குறைவு –
நமக்கு ஒரு குற்றம் இல்லையாக வன்றோ
யஸ் சர்வஞ்ஞஸ் சர்வ வித் -முண்டக -இத்யாதி பிரமாணங்கள் சொல்லுகிறது
நம்மை சர்வஞ்ஞன் சர்வ சக்தன் என்று பிரமாணங்கள் சொல்லா நிற்க
நீர் நமக்கு ஞான சக்திகளில் வைகல்யம் சொல்லுகிறது
என் கொண்டு என்னில்
அது ஒரு வ்யக்தியிலே பலிக்கக் கண்டேன் என்கிறார்
பருவம் அறிந்து வந்து முகம் காட்டாமையைக் கொண்டு
சர்வஞ்ஞனை அஞ்ஞனாக உப பாதித்தார்
தம் தசைக்கு ஈடாக உதவாமையைக் கொண்டு
சர்வ சக்தனை அசக்தனாக உபபாதிக்கிறார்-
மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள வெம்மைப் பணி யறியா
வீட்டீர் இதனை வேறே சொன்னோம் இந்தளூரீரே
காட்டீர் ஆனீர் நுந்தம் அடிக்கள் காட்டில் உமக்கு இந்த
நாட்டே வந்து தொண்டரான நாங்கள் உய்யோமே —4-9-7-
பணி யறியா வீட்டீர்-கைங்கர்ய ரசம் தெரிவித்து கை விட்டீர் –
இந்த நாட்டே-சேஷத்வம் அறியாத லீலா விபூதியில் –
மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள –
சேஷத்வத்தை இப்போது உம்மாலே உண்டாக்குதல்
ஒழித்தல் செய்ய ஒண்ணாதே
(திருமாலே நானும் உமக்கு பழ அடியேன் )
இதனுடைய ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தி விசேஷத்தை
பண்ணுவித்துக் கொள்ள மாட்டீர் ஆனீர் –
வெம்மைப் பணி யறியா வீட்டீர் –
உம்மை ஒழியச் செல்லாத ஸ்வபாவத்தை உடைய எங்களை
உம்முடைய திருவடிகளில் அடிமைச் சுவட்டை அறிவித்து
பொகட்டீர் –
இதனை வேறே சொன்னோம் –
இத்தை அல்லாதவை போல் அன்றியே
வ்யாவ்ருத்தமாகச் சொன்னோம்-
(கீழே அறியீர் மாட்டீர் இங்கு வீட்டீர் -பெரும் குற்றம் அன்றோ )
இதனை வேறே சொன்னோம் –
நம் ஆற்றாமைக்கு வேண்டும் அளவு அன்றியே
கண்ணாஞ்சுழலை இட்டு இனி இவ்வஸ்துவை
பிறர் நம்பாதபடி சொன்னோம்-
இந்தளூரீரே-
பரம பதம் கலவிருக்கையாய் இருக்க
அடிமை கொள்ளுகைக்கு ஈடாக
திரு இந்தளூரிலே வந்து சந்நிதி பண்ணின உம்மை அன்றோ
நான் இவ்வார்த்தை சொல்லுகிறது –
இவ் உபகார ஸ்ம்ருதியும் அனுவர்த்தியா நின்றதாகில்
பின்னை நீர் இப்படி சொல்லுவான் என் என்னில்
அதுக்கு ஹேது உண்டு
காட்டீர் ஆனீர் நுந்தம் அடிக்கள்-
பரார்த்தமான வஸ்துவை
உமக்கு என்று இரா நின்றீர்
உம்முடைய திருவடிகளை காட்டாமையே ஸ்வபாவமாம் படி யானீர் –
(சகலமேதது சம்ஸ்ரயார்த்தம்
அரங்கனும் தன் சரண் தந்திலன் தான் அது தந்து உடையவர் )
அவ் வபிசந்தியைக் குலைத்து அத்தை அப்படி செய்யப் பெறில்
இந்த நாட்டே வந்து தொண்டரான நாங்கள் உய்யோமே –
நான் உபேஷித்தால் தான் இவற்றுக்கு அவ்வருகு போக்குண்டோ
ஆன பின்பு நான் நினைத்த போது கார்யம் செய்கிறோம் -என்று
ஆறி இருக்கைக்கு உம்முடைய பரம பதத்தில் நித்ய ஸூரிகளோ
மரு பூமியிலே தண்ணீர் போலே
உம்மை ஒழிய உண்டு உடுத்துப் போது போக்குகிற
இஸ் சம்சாரத்தில்
உம்மால் அல்லது செல்லாத படி இருக்கிற நாங்கள்
உஜ்ஜீவீயாமோ-
நீர் அவாக்ய அநாதர என்று இங்கு இருந்தால்
நாங்கள் ஸ்வரூப ஞானத்தால் அதிலே துவக்குண்டு
கண்டு கொண்டு இருக்க மாட்டோமே
வாய் திறந்து சொல்லி கார்யம் கொண்டால் தான் உஜ்ஜீவிப்போம் –
————————————————-
இங்கே வந்ததே காட்டத் தானே
வேறே அபேக்ஷிதம் உண்டோ என்ன
இது அன்றிக்கே வேறே ஏது என்று அருளிச் செய்கிறார்
சேதனர் உகந்ததையே நிறமாகக் கொள்ளும் ஸ்வ பாவரான
நம் பக்கல்
உம்முடைய அபேஷிதம் பெற்று போகையிலே குறை உண்டோ –
உம்முடைய அபேஷிதம் தன்னைச் சொல்லீர் என்ன –
நீ உகந்தார் உகந்த வடிவுகளைக் கொண்டு வந்து
அவர்களுக்கு காட்டிக் கொடுத்தாயே யாகிலும்
உன்னுடைய இச்சா க்ருஹீதமான அசாதாரண விக்ரஹத்தை
இது காண் இருக்கும் படி -என்று கொடு வந்து
எனக்குக் காட்ட வேணும் -என்கிறார் –
முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலை நின்ற
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணும் கால்
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி
இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே —-4-9-8-
முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலை நின்ற பின்னை வண்ணம்
கொண்டல் வண்ணம் பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும்
க்ருத யுகத்தில் புருஷர்கள்
சத்வ பிரசுரர் ஆகையால்
வெளுத்த நிறத்தை உகப்பவர்கள் என்று
அதுக்காக வெளுத்த நிறத்தை கொண்டான் ஆய்த்து-
அவர்கள் உகந்ததை நாம் செய்யவே
நாம் உகந்ததை இவன் செய்தான்
நாமும் இவன் தன்னை உகப்போம் -என்று
ஆதரிப்பார்கள் என்று பார்த்து –
அவ் வழியாலே
அனந்தரத்தில் உள்ளாருக்கு ரஜோ குணம் அளாவி இருக்கையாலே
அவர்கள் உகந்த சிவந்த நிறத்தை உடையவன் ஆனான்
அதுக்கு அனந்தரம்
மணியின் வண்ணத்தை உடையவன் ஆனான்-
வண்ணம் எண்ணும் கால்
இவனுடைய வடிவை ஆராயப் புக்கால்
நித்தியமான அசாதாராண விக்ரஹம்
நீர் கொண்டு எழுந்த காள மேகம் போலே யாய்த்து இருப்பது –
திருமேனி இன்ன வண்ணம் என்று காட்டீர்
இவன் யுகங்கள் தோறும் அவ்வவர் உகந்த
வடிவுகளைக் கொள்ளும்
இவனுடைய அசாதராண விக்ரஹம் காள மேகம் போலே இருக்கும்
என்று சாஸ்த்ரங்களிலே கேட்டுப் போகை அன்றிக்கே
நீ இப்படி சாஸ்த்ரங்களில் கேட்டுப் போந்த வடிவு தான்
இருக்கும்படி இது காண்
என்று ஒரு வார்த்தை அருளிச் செய்து
அவ் வடிவைக் காட்ட வேண்டும்
இந்தளூரீரே –
நீர் கொள்ளும் வடிவுகளுக்கு எல்லாம் சாஸ்திரங்கள் இல்லையோ
பிரமாணங்களால் கேட்டுப் போக ஒண்ணாது
நம்முடையாருக்கு இவ் வடிவு தான் இது காணும் கோள்
என்று காட்ட வேணும்
என்று அதுக்காக அன்றோ நீர்
திரு இந்தளூரிலே வந்து நிற்கிறது –
————————————-
அவ்வவ காலம் அனுகுணமாக உருவம் கொண்டும்
உம்முடைய பேராசை ஒருவரால் திருப்தி செய்ய முடியாது
உமக்காக அர்ச்சாவதாரம் காட்டவும் திருப்தி இல்லை
நீ பிரயோஜனாந்தர பரர்களுக்காக மீனாய் இத்யாதி செய்தீர்
குடி குடி வந்து ஆட் செய்யும் எங்களுக்குத் தொட்டுகாட்டாமல்
நெஞ்சில் பிரகாசித்து ஆசையை எதற்க்காக வளர்த்தீர்
சிறிதும் காட்டாமல் உள்ளீர் என்கிறார்
எந்தை தந்தை தம்மான் என்று எமர் ஏழு அளவும்
வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால்
சிந்தை தன்னுள் முந்தி நிற்றீர் சிறிதும் திருமேனி
இந்த வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே —4-9-9-
எந்தை தந்தை தம்மான் என்று எமர் ஏழு அளவும் வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால்
என்னுடைய் குலகுரு என்று ஏழு படி கால் தேவரீர் திருவடிகளில்
கைங்கர்யத்தை பேதித்துச் செல்லாதே வந்து நிற்கிற எங்களுக்கே
நேராக கணக்கிட வல்லீராகா நின்றீர்
சிந்தை தன்னுள் முந்தி நிற்றீர் சிறிதும் திருமேனி இந்த வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே –
அணைக்கைக்கு ஈடாக கைக்கு எட்டாதே இருக்கிற நீர்
இத்தைப் போர
வளர்க்கிறது என் -என்று பிள்ளான்
நாம் என்ன வாசி வைத்தோமாக தான் இப்படி சொல்லுகிறது என் என்ன
இவருக்கு ஹிருதய பிரகாசமே அமையும் என்று ஆறி இராதே
நெஞ்சிலே பிரகாசிக்கிறவோபாதி அணைக்குக்கும் எட்டுதல்
அணைக்கு எட்டாதா போலே
ஹிருதயத்தில் பிரகாசியா இருத்தல் செய்யப் பெற்றிலோம் –
அரவத்தமளிப் படியே ச விக்ரஹனாய் விளங்குகை-
சிறிதும் –
நெஞ்சுக்கு குறைவற காட்டுகிறாப் போலே யாய்த்து
கண்ணுக்கு ஓன்று காட்டாது ஒழிகிறபடி-
பண்டு ஒரு ராஜா விஷய பிரவணனாய்
நாட்டாருக்கு காட்சி கொடாது ஒழிய
இவனுடைய சத் பாவத்திலே அதி சங்கை பண்ணின ராஜ லோகத்தைக் கண்ட
மந்த்ரிகள் வாசலில் வந்து கூப்பிட
ஜாலக த்வாரத்தாலே காலை நீட்டி விட்டான் இறே-
இந்தளூரீரே —
நெஞ்சில் பிரகாசத்தை ஒழியவே
நித்ய ஸூரிகளுக்கு காட்சி கொடுக்கும் வடிவை
அங்கு உள்ளாரோபாதி முழுக்க காட்சி கொடுக்கைக்கு அன்றோ
இங்கு வந்து நிற்கிறது –
——————————————————-
இந்து சந்த்ர சாப விமோசனி தாயார்
பரிமள ரெங்க தாயார்
இந்து புஷ்காரணி
நான்கு திருக்கைகள்
கங்கை காவேரி சூர்ய சந்திரன் கர்ப்ப க்ருஹம்
வீர சயனம்
நாபியில் நான்முகன்
வேத அபகாரம் மது கைடபர்
துர் நாற்றம் வேதங்களுக்கும் போக்கி உபதசம் ஆமோத விமானம் வாசனை கொடுத்ததால்
அகண்ட கர்ப்ப க்ருஹம்
ஏரார் பொழில் சூழ் இந்தளூரில் எந்தை பெருமானைக்
காரார் புறவில் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த
சீரார் இன் சொல் மாலை கற்றுத் திரிவார் உலகத்து
ஆராரவரே யமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே —4-9-10-
ஏரார் பொழில் சூழ் இந்தளூரில் எந்தை பெருமானைக்
அழகு மிக்கு இருந்துள்ள
பொழிலாலே சூழப் பட்ட
திரு இந்தளூரிலே வந்து சந்நிஹிதனாய்
எனக்கு ஸ்வாமி யான சர்வேஸ்வரனை கவி பாடிற்று –
காரார் புறவில் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த
நிரந்தர மேக சஞ்சாரத்தை உடையான
பர்யந்தத்தோடே கூடின திரு மங்கைக்கு
நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்தார் –
கவி தானோ என்றால் –
சீரார் இன் சொல் மாலை கற்றுத் திரிவார் உலகத்து
பகவத் குணங்களை நிறையத் தொடுத்த தொடை
அஹம் வக்தா பவான் ஸ்ரோதா வாச்யோ யோகோ விமுக்த்தித – -ஸ்ரீ விஷ்ணு தர்மம்
ரகுவர சரிதம்-
ரகு குலத்தில் ரஷகரான பெருமாள் உடைய விருத்தாந்தம் சொல்லிற்று –
முனி ப்ரனீதம்-
ஆப்த தமன் ஆனவன் ஆய்த்துச் சொன்னான் –
தச சிரசஸ்ச வதம் –
நாட்டுக்குக் களை அறுத்துக் கொடுத்த படி யாய்த்து சொல்லிற்று –
கற்றுத் திரிவார் –
இவற்றை அப்யசித்து
அந்த கர்வத்தாலே யமாதிகள் தலைமேலே அடி இட்டுத் திரியுமவர்கள்
(நாவலிட்டு உழி தருகின்றோம் நமன் தமர் )
ஆரார்-
இவற்றை அப்யசிக்கும் அத்தனையே வேண்டுவது
அவர்களுக்கு ஜன்ம வ்ருத்தாதிகள் ஏதேனும் ஆகவுமாம்-
அவரே யமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே –
அந்த ஜன்மத்திலே
அந்த வ்ருத்தத்திலே
அந்த ஞானத்திலே
அந்த ஜன்மாதிகளால் வரும் உத் கர்ஷம் வேண்டாதே
ஸ்வத உத் கர்ஷத்தை உடையரான
நித்ய ஸூரிககளால் சிரஸா வஹிக்கப் பெறுவர் –
———
ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.
நும்மடியோமுக்கு நும்மைக் காட்டாது அடியேனை
நும்மடியாரோடொப்ப எண்ணுதிரென் – நம்கலியன்
இந்தளூரானுக்கு இயம்பினான் தன் இன்னாமையைத்
தந்நிலை மாறாத வனாய் (39)
தன்னிலை மாறாதவனாய் –தானான தன்மையில் ஊடுகிறார் –
பக்தானாம் தவம் ப்ரகாஸஸே-என்றதின் எதிர்த்தட்டாய் இருந்தமையால் –
தம்முடைய மார்த்தவத்தையும் வெளியிட்டு அருளுகிறார் இந்த பதிகத்தில்
எம்பெருமானைப் போல் அல்லாமல் நமக்காக எப்பொழுதும் சேவை என்பதால் நம் கலியன்
தூது விடுவதும் அணுகரிப்பதும் ஊடுவதும் அர்ச்சாவதார பெருமாள் இடம் தானே நம் கலியனுக்கு –
———————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply