ஸ்ரீ பெரிய திருமொழி-4-8- –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

நாராயணன் நரன் -திருமந்திரம்
கண்ணன் அர்ஜுனன் சரம ஸ்லோகம் -ஸ்ரீ கீதா உபதேசம்
விஜயன் வேதாந்தம் -சொன்னாலும்
விஜய சஹன் -பார்த்த சாரதி பெயர் பெறவே –
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம் -குரு க்ஷேத்ரம் ஸ்ரீ கீதா -இன்றும் அந்த இடங்களை சேவிக்கலாம்
கீதை அறியாவிடில் ஏதிலராம் மெய் ஞானம் இல்லாமல் -திருமழிசைப் பிரான்
பின்னானார் சேவிக்கவே அர்ச்சாரூபம் -திருவல்லிக் கேணி பார்த்தன் பள்ளி பாண்டவ தூதன்
வர்ண பகவான் பிரார்தனைப்படி இங்கு சேவை –

சாரதி -தானே ஆச்சார்யர்
பிரகாரத்தில் சேர்ந்தே சேவை -அர்ஜுனனும் கண்ணனும்
லஷ்மீ நாதன் தேர் தட்டு கீதாச்சார்யர்
அடியவன் பெயராலே திவ்ய தேசம்
யாத்ர யோகேஸ்வர கிருஷ்ண –விஜய ஸ்ரீ
வருணன் ஆசைப்பட சேவை சாதிக்கிறார்
பாத்ம புராணம் இத் திவ்ய தேசம் பற்றி உண்டே
அர்ஜுனன் வர -தாக்கம் எடுக்க அகஸ்தியர் இடம் தீர்த்தம் கேட்க
கமண்டலத்தில் தீர்த்தம் இல்லை
கண்ணனை கேட்கத் தோன்றி
இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூற்றி யவன்
மோழை எழுதுவித்தவன்
தனது வாளைக் கொடுத்து -அர்ஜுனன் கீற -கட்க புஷ்கரணி
மேற்கு நோக்கி திருக்கோலம்
செங் கமல வல்லித் தாயார்
தாமரையாள் கேள்வன் மூலவர்
திருவடி பாடகத்துடன் சேவை
உத்சவர் பார்த்தசாரதி
தாயார் தாமரையாள்
கண்ணனுக்கு பக்கம் கோல வில்லி ராமன் தனி ஆசனத்தில் சேவை
நாராயண விமானம்

நாயிகா பாவம் -தாய் பாசுரம் இங்கு
2-7-3-7 தாய் பாசுரம் கீழே பார்த்தோம்
2-8- 3-6- மகள் பாசுரம் கீழே பார்த்தோம்
5-5- திருவரங்கம் பதிகம் தாய் பாசுரம் அப்புறம் வரும்

சரம ஸ்லோக முன் பின் வாக்கியம் கீழே இரண்டு திரு மொழிகளில் பார்த்தோம்
அத்தை அருளிய -பிரமாணம் முன் பிரமேயம் இதில்

கவள யானை பிரவேசம் –

திருவடிகளிலே விழுந்து சரணம் புக்கு
அடியேன் இடரைக் களையாய் -என்று
தேவரோட்டை அனுபவத்துக்கு விரோதியைப் போக்கித் தர வேணும்
என்று அபேஷித்தார்
அவனும் அப்படியே செய்வானாக ஒருப்பட
அது பற்றாமல்
ப்ராப்தியால் உண்டான த்வரையாலே
தாமான தன்மை போய்
பிரிந்து
பிரிவாற்றாமையாலே நோவு பட்டு

மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏக எண்ணும் போல்
நம்மாழ்வார் க்ருஷ்ண த்ருஷ்ணா தத்துவமாக இருந்தாலும் அதிலே ஆசை -உத்கட இச்சை -போல்
இவருக்கு உகந்து அருளினை தேசங்களில்
இவருக்கும் ஸ்ரீ பரமபத உத்கட இச்சை பிறப்பிக்க ஓருப்பட
ப்ராப்ய த்வரையால் ஆணான தன்மை போய்
இயற்கையில் கலந்து பிரிந்து பிரிவாற்றாமையால் நோவு பட்டு
அவன் படிகளை பேசி வாய் புலற்றும் ஒரு பிராட்டி
அப்படி புலம்பும் பாசுரங்களை திருத் தாயார் கண்டு அருளிச் செய்யும் பாசுரங்கள்

———————————————-

கவள யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் காமரு சீர்க்
குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும்
தவள மாட நீடு நாங்கைத் தாமரையாள்  கேள்வன் என்றும்
பவள வாயாள் என் மடந்தை   பார்த்தன் பள்ளி பாடுவாளே –4-8-1-

பவள வாயாள் என் மடந்தை-
கவள யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் -அதிகமாக பஷிக்க வல்ல குவலயா பீடம்
காமரு சீர்க் குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும்-கறு நெய்தல் மேகம் போல்
திவ்ய மங்கள விக்ரஹம்-ஸ்வாமி -மத்தகஜம் போல் -கதிர் பொருக்கி புரிய வைக்கப் பார்க்கிறார்
தவள மாட நீடு நாங்கைத் தாமரையாள்  கேள்வன் என்றும்-வெண்மையான மாடங்கள்
இது நாலாவது நாங்கை திவ்ய தேசம்
பார்த்தன் பள்ளி பாடுவாளே -இதுக்கும் மேல் திவ்ய தேசம் பெயரைச் சொல்லி பாடுகிறாள்
கீழ் சொன்ன மூன்றும் ஒரு தட்டு -இது ஒரு தட்டு
லோக உஜ்ஜீவன அர்த்தமாக அவதரித்து மாஸூச அருளி
அது எனது விஷயத்தில் பொய்யாகலாமோ என்றவாறு

பவள வாயாள் என் மடந்தை
அவள் வாய் புலத்தும் படி அவயவ சோபை –
இவள் உகப்பு மிகுந்த படி
அவன் இடம் ஆசை முதல் படி -திவ்ய தேச திரு நாமம் சொல்லி அதிலே இழிவது சரம பர்வம் –

கவள யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்றும்
கண்டார் மேல் விழும்படி ஆசை
மத முதிதமாய்
குவலயபீடம் -அனாயாசன அநாயாசேன நிரசித்தவன்

காமரு சீர்க்-
விரோதியை போக்கா விட்டாலும் விட ஒண்ணாத வடிவு அழகு

குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும்
கண்டாருக்கு பெரு விருப்பம் கொள்ளும் படி
குவளை மேகம் போன்றவற்றை இன்னும் இப்புடைகளில் –
கடல் மணி போன்ற -வடிவை பரிக்ரஹித்த ஸ்வாமி
வடிவு அழகுக்கு ஓன்று உவமானம் போகாமல் அங்கும் இங்கும் கதிர் பொறுக்குகிறார்

என் ஆனை
எனக்கு எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருக்கும் படி வியாபாரம்

தவள மாட நீடு நாங்கைத் தாமரையாள்  கேள்வன் என்றும்-
மாடங்கள் எப்பொழுதும் ஓக்க சாந்து பூசியே
தளம், வெண்மை
ஓக்கமான மாடங்கள்
நித்ய ஸந்நிஹிதனான ஸ்ரீ யபதி

பார்த்தன் பள்ளி பாடுவாளே
தனது வாயை பழுப்பு கண்டு அவன் வாய் புலற்றும் படி
கோவை வாயாள்-
சாரு – பெருமாள் சீதாபிராட்டியை நினைத்து புலம்பியது -இவை எல்லாம் இருக்க
இவளோ அவனது ஊரைச் சொல்லி வாய் புலாற்றுகிறாள்

————————————————-

மதுரையில் பெண்களுக்கு உதவினமை மீண்டும்
இடைச் சேரியில் பூதனை கொன்றபடியை சொன்னபடியே தாயார் சொல்கிறாள்

கஞ்சன் விட்ட வெஞ்சினத்த களிறு  அடர்த்த காளை என்றும்
வஞ்சி மேவி வந்த பேயின் உயிரை யுண்ட மாயன் என்றும்
செஞ்சொல் ஆளர் நீடு நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதி
பஞ்சி யன்ன மெல்லடியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே —4-8-2-

நித்ய ஸூரிகள் பரிய இருக்கிறவன் தன்னைப் பேணாதே விரோதிகளை நிரசித்த படி
மார்த்வத்தை உடைய என் பெண் அவன் இருந்த ஊரைச் சொல்லா நின்றாள்

பஞ்சி யன்ன மெல்லடியாள்
பஞ்சோடு ஒத்த மெதுவான பாதங்கள்
கஞ்சன் விட்ட வெஞ்சினத்த களிறு  அடர்த்த காளை என்றும்-குரூரமான குவலயாபீடத்தை நிரசித்த
வஞ்சி மேவி வந்த பேயின் உயிரை யுண்ட மாயன் என்றும்-கபட புத்தி -பொருந்திய மனம் -ஆச்சர்ய பூதன்
செஞ்சொல் -அழகான சொல் -உண்மையான சொல் இரண்டும்
ஆளர் நீடு நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதி-விஸ்வ ரூபம் காட்டி உத்தம புருஷோத்தமன் -பல காலும் சொல்லி
பார்த்தன் பள்ளி பாடுவாளே

கஞ்சன் விட்ட வெஞ்சினத்த களிறு  அடர்த்த காளை என்றும்-உபகார ஸ்ம்ருதி
பின்பும் கிருஷ்ணாவதாரத்தில் மூட்டி
சிறு வயசில் சேஷ்டிதங்கள்
துஷ் ப்ரக்ருதி ஏவி
ஒருவன் ஏவ வேண்டாதபடி வெவ்விய சினம் உள்ள குவலயாபீடம் வந்து மேல் விழுகிறது
இரண்டாலும் தப்ப விரகு இல்லை

பருவம் நிரம்பாத சிறு சேவகங்கள் மேல் –
வஞ்சி மேவி வந்த பேயின் உயிரை யுண்ட மாயன் என்றும்
வஞ்சனை ஒழியவே பிறப்பால் பேய் -பிரகிருத்தியே பேய் –
அதுக்கும் மேல் வஞ்சனை உடன் பொருந்தி
உயிரை முடித்த ஆச்சர்ய பூதன்
தனக்கே என்று எத்தைக் கொடுத்தாலும்
கண்டாகர்ணன் போல்
அவள் கோலி வந்த காரியத்தை அவள் தன்னுடன் போக்கிய
ஆச்சர்ய குண -மாயம் -சேஷ்டிதங்கள் பெயின் உயிரை முடித்தான்

செஞ்சொல் ஆளர் நீடு நாங்கைத் தேவ தேவன் என்று ஓதி
செவ்விய சொற்கள்
சத்யம் -பிரியம் -பேசுபவர்கள் பூத ஹிதம்
ஊரில் உள்ளார் படியும் இவனுக்கும் வேண்டுமே
பிரியேன் என்று சொல்லி பிரியாதவர்கள்
நம்பி அத்தையே பற்றாசாக பாடுகிறாள்
நேர்மையான அந்தணர்

தேவ தேவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி தேவதேவன்
மனிசர்க்குத் தேவர் போல் தேவர்க்கும் தேவன்

பார்த்தன் பள்ளி பாடுவாளே
தனது காலில் மார்த்வம் பற்றி அவன் வாய் புலத்த வேண்டி இருக்க எனது மகள்
படும் பாடு பார்த்தீர்களே

————————————————-

நித்ய ஸூரிகளுக்கு அவ் வருகு உள்ள தேவதேவன் என்று பரத்வம் சொல்லி
ப்ரஹ்மாதிகள் ஸ்தோத்ரம் பண்ண
செண்டும் கையுமாக இடைப் பெண்களுடன் ஸம்ஸ்லேஷிக்க
சாபல்யத்தால் அத்தை வாய் புலற்றி -அந்த இடைப் பெண்களில் ஒருத்தியாகக் கொள்ள மாட்டீரோ –

அண்டர் கோன் என் ஆனை என்றும் ஆயர் மாதர் கொங்கை புல்கு
செண்டன் என்றும் நான் மறைகள் தேடி யோடும் செல்வன் என்றும்
வண்டு உலவு பொழில் கொள் நாங்கை மன்னு மாயன் என்று என்று ஓதி
பண்டு போல் அன்று என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே –4-8-3-

நான் மறைகள் தேடி யோடும் செல்வன் என்றும்-விசாரித்து ஓடும் ஐஸ்வர்யம் யதோ வாசோ நிவர்த்தந்தே மீளும் படி
வண்டு உலவு பொழில் கொள் நாங்கை மன்னு மாயன் என்று என்று ஓதி-நித்ய வாசம் -செய்து அருளுபவர்
ஸ்வரூப ரூபம் குணம் விபூதி ஆச்சர்யம்
பண்டு போல் அன்று என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே-சிறிய வயசு போல் இல்லாமல் பருவம்

அண்டர் கோன் என் ஆனை என்றும்
நியாமகன் என்றும்
தர்சனீயமான -ஆனை -வியாபாரம் உடையவன்

ஆயர் மாதர் கொங்கை புல்கு செண்டன் என்றும் -லீலா பரிகாரம் காட்டி தன்னோடு ஒத்த வசீகரிக்கும்

நான் மறைகள் தேடி யோடும் செல்வன் என்றும்-இடைப் பெண்களுக்கு கையாளாக இருப்பவன்
பண்ணலார் பயிலும் பவித்ரனே பரமனே
ஊற்றம் உடையாய் பெரியாய்
எட்ட ஒண்ணாத ஐஸ்வர்யம்

வண்டு உலவு பொழில் கொள் நாங்கை மன்னு மாயன் என்று என்று ஓதி-வண்டுகள் சஞ்சரிக்கும்
அவதாரங்கள் போல் தீர்த்தம் பிரசாதியாதே நித்ய ஸந்நிஹிதனாய் அருளுபவன் அன்றோ

பண்டு போல் அன்று என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே
பால்யத்தில் ஓர் ஓர் வூர்களை சொல்லிப் பாடுவார்கள்
இவள் ஓர் இடத்தில் அடி உடமை -நாயகன் வர்த்திக்குமூர் என்று தோற்றப் பாடுகிறாள்

———————————————————–

நீ ஒருவனுக்கும் மெய்யன் அல்லன் –
ஒருத்தி தன்பால் மருவி மனம் வைத்து -அவளுக்கும் மெய்யன் இல்லை –
(வளைத்து வைத்தேன் இனி  போகல் ஒட்டேன் உன் தன் இந்திர ஞாலங்களால்
ஒளித்திடில் நின் திருவாணை கண்டாய்  நீ ஒருவருக்கும் மெய்யன் அல்லை
அளித்து எங்கும் நாடும் நகரமும் தம்முடை தீவினை தீர்க்கலுற்றுத்
தெளித்து வலம் செய்யும் தீர்த்தமுடை திரு மால் இரும் சோலை எந்தாய் -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி- 5-3 2- )
என்னும்படி ஏசு வாங்கும் பட்டி மேய்க்கும் அவன் படிகளை அனுசந்திக்கை தவிர்ந்து
உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடறுத்த மனத்துக்கு இனியானை -பாடத் தொடக்கி
இவள் வரம்பு அழிந்தாள் என்கிறாள்

கொல்லை யானாள் பரிசு அழிந்தாள் கோல் வளையார் தம் முகப்பே
மல்லை முந்நீர் தட்டிலங்கை  கட்டழித்த மாயன் என்றும்
செல்வ மல்கு மறையோர் நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதி
பல்வளையாள் என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே–4-8-4-

பரிசு அழிந்தாள் -ஸ்த்ரீத்வம் அழிந்தாள்
கோல் வளையார் — ஸூந்தரமான வளையல்கள்

கொல்லை யானாள்
வரம்பு மீறி

பரிசு அழிந்தாள்
ஸ்த்ரீத்வமே பிரகாரமாய் இருந்த இவள் மரியாதை -மடம் அச்சம் நாணம் இத்யாதி -அழிந்தாள்

கோல் வளையார் தம் முகப்பே
தனது பருவத்துக்கு ஒத்த பெண்கள் நடுவில்

மல்லை முந்நீர் தட்டிலங்கை  கட்டழித்த மாயன் என்றும்
சம்ருத்தமான மிக பழைமையான கடலை அடைத்து
ஒருவர் கூறை எழுவர் உடுக்கும் படி பண்ணின பரம பிரணயினி –
நாயகி இடத்தில் பிச்சேறிய பெருமாள்

செல்வ மல்கு மறையோர் நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதி
ஐஸ்வர்யம் கரை புரண்டு வாரா நின்றுள்ள –
வேதம் ஞானம் பக்தியாதிகள்

பல் வளையாள் என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே
கையில் ஒரு வளை கொண்டு அவனை இப்பாடு படுத்த வல்லவள்
எல்லா வற்றையும் பூண்டு தான் வாய் புலம்பா நின்றாள்
(பல் வளையாள் முன் பரிசு அழிந்தேன் -நம்மாழ்வார் )

——————————————————–

இலங்கை கட்டளித்த பிரகாரமே இவளுடைய நெஞ்சில் ஊற்று இருந்து அது தன்னையே இங்கும்
கோல வில்லி ராமனும் இங்கே
திரு வெள்ளியங்குடியிலும் இங்கு
ராம கிருஷ்ண சேவை இங்கேயே

அரக்கராவி மாள வன்று  ஆழ்  கடல் சூழ் இலங்கை செற்ற
குரக்கரசன் என்றும் கோல வில்லி என்றும் மா மதியை
நெருக்கு மாட நீடு நாங்கை  நின்மலன் என்று என்று ஓதி
பரக்கு அழிந்தாள் என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே —4-8-5-

குரக்கரசன் என்றும் -சுக்ரீவன் -பெருமாளையே இங்கு சொன்னபடி -வானரங்களுக்கு ஸ்வாமி –
நின்மலன் -குற்றம் அற்றவர் -ப்ரயோஜன நிரபேஷனான –குற்றம் இல்லாதவன் -அவாப்த ஸமஸ்த காமன்-
அநந்ய பிரயோஜனம் ஸூ த்த ஸ்வ பாவன் –
மா மதியை நெருக்கு மாட நீடு -சந்திரன் போக வழி இல்லாமல் ஓங்கிய மாடங்கள்

அரக்கராவி மாள வன்று  ஆழ்  கடல் சூழ் இலங்கை செற்ற குரக்கரசன் என்றும்
பிரித்த பையல் ஒருவனை அழித்த மாத்ரம் இல்லாமல்
ராக்ஷஸ ஜாதி அடங்க மாளும் படி
ராவணன் எதிர்த்த அன்று
அகாதமான கடலால் -இதுவே அரண் -அத்தை அழியச் செய்த வானவர் ஜாதிக்கு நிர்வாகன் –
வானர ஜாதியைக் கொண்டு வென்றவன் –
அரசன் -நிர்வாககன்
ப்ரஹ்மாதிகள் குடி இருப்பை அழித்த ராவணன் குடி இருப்பை அழித்து
இடக்கை வலக்கை அறியாத வானர ஜாதிகளை பரிகரமாகக் கொண்டு ஆய்த்து

கோல வில்லி என்றும்
ஆண் பிள்ளைத் தனத்துக்கு அபிமானிகளாய் இருப்பர் அடங்கலும் தோற்று மதிக்கும் படி
தர்ச நீயமான வில்லைக் கையில் உடையவன் –
கோதண்ட ராமன்
சார்ங்க பாணி
தோற்றோம் மட நெஞ்சம்

மா மதியை நெருக்கு மாட நீடு நாங்கை  நின்மலன் என்று என்று ஓதி
இத ஸ்வதா சஞ்சரியா நின்றுள்ள -இங்கும் அங்கும் சஞ்சரிப்பதை ஸ்வபாவமாக கொண்டுள்ள
சந்திரனை சஞ்சரிக்க ஒட்டாத மாடங்கள் ஓக்கம்

நின்மலன்
பிரயோஜன நிரபேஷனாய் உதவும் ஸ்வ பாவம் உடையவன்
உபாசனத்துக்கு முகம் காட்டுதல் இல்லாமல்
அர்த்தித்தவ நிரபேஷமாக -பிரார்த்தனையும் கூட வேண்டாத படி உதவுபவன்

பரக்கு அழிந்தாள் என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே
கெட்டேன்
என் கொண்டு அறிந்தேன் என்னில் –
நானும் கேட்க்கும்படி அவன் இருக்கும் தேசத்தை சொல்லும்படி வாய் விட்டு பாடா நின்றாள்
அவன் வடிவை அழகைக் கண்ணால் கண்டு கவிழ்ந்து நின்று இருக்கும் -கண்ண நீரை வெளியிடுமவள் –
ஒன்றுமே பேச முடியாத ராஜ புத்ரி
சுமந்திரன் -சக்கரவர்த்திக்கு சொல்லும் வார்த்தை –
அதிருஷ்ட பூர்வ வியசனம் -ராஜ புத்ரி-யசஸ்வினீ கர்ப்ப சம்பந்தம் இல்லாதவள் –
துக்கத்தால் -ஒரு வார்த்தையும் சொல்லாமல் மலங்க மலங்க
இவளோ இப்பொழுது எனக்குக் கேட்க்கும் படி வெட்கம் விட்டு பாடா நிற்கிறாள்

———————————————————–

சாரதி -தானே ஆச்சார்யர்
பிரகாரத்தில் சேர்ந்தே சேவை -அர்ஜுனனும் கண்ணனும்
லஷ்மீ நாதன்- தேர் தட்டு கீதாச்சார்யர்
ஈஸ்வரன் தானும் ஆச்சார்ய ஸ்தானம் விரும்பி இருப்பானே –
அடியவன் பெயராலே திவ்ய தேசம்
யாத்ர யோகேஸ்வர கிருஷ்ண –விஜய ஸ்ரீ
வருணன் ஆசைப்பட சேவை சாதிக்கிறார்
பாத்ம புராணம் இத் திவ்ய தேசம் பற்றி உண்டே
பாரத போர் முடிந்த பின்பு அர்ஜுனன் வர -தாகம் எடுக்க அகஸ்தியர் இடம் தீர்த்தம் கேட்க
கமண்டலத்தில் தீர்த்தம் இல்லை
கண்ணனை கேட்கத் தோன்றி
இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூற்றி யவன்
மோழை எழுதுவித்தவன் மலை –
தனது வாளைக் கொடுத்து -அர்ஜுனன் கீற -கட்க புஷ்கரணி
மேற்கு நோக்கி திருக்கோலம்
செங் கமல வல்லித் தாயார்
தாமரையாள் கேள்வன் மூலவர்
திருவடி பாடகத்துடன் சேவை
உத்சவர் பார்த்தசாரதி
தாயார் தாமரையாள்
கண்ணனுக்கு பக்கம் கோல வில்லி ராமன் தனி ஆசனத்தில் சேவை
நாராயண விமானம்

ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளுக்கு ஸூஜனங்கள் கூட இல்லாமல் இருக்க உதவினான்
உனக்கு நாங்கள் இருக்கிறோமே வாய் புலத்துவது எதற்கு என்ன
ஜகத்துக்கு வந்த பிரளய ஆபத்து போல் அல்லாமல் மிக்க விரஹதாபம் உள்ள –
கோல மேனி காணாத எனக்கு –
அவனே ரக்ஷகன் -ஆபத் ஸகத்வம் தோன்ற அருளிச் செய்கிறார்

ஞாலம் உற்றும் உண்டு உமிழ்ந்த நாதன் என்றும் நானிலம் சூழ்
வேலை யன்ன கோல மேனி வண்ணன் என்றும் மேல் எழுந்து
சேல் உகளும் வயல் கொள் நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதி
பாலின்  நல்ல மென் மொழியாள் பார்த்தான் பள்ளி பாடுவாளே —4-8-6-

பாலின்  நல்ல மென் மொழியாள் -பால் போல் மிருதுவான என்றும் -பாலை விட மதுரம் என்றும்
ஞாலம் உற்றும் உண்டு உமிழ்ந்த நாதன் என்றும் –
சொத்தை ஸ்வாமி தானே ரஷிக்க வேண்டும்
நானிலம் சூழ்-முல்லை மருதம் குறிஞ்சி நெய்தல்
வேலை யன்ன கோல மேனி வண்ணன் என்றும்
கடலைப் போன்ற வண்ணம்
சேல் மேல் எழுந்து உகளும் –
துள்ளி மேலே எழுந்து வர்த்திக்குமாம் –
ஜலத்தை விட தேசம் குளிர்ந்து இருக்கும் தேசம்

ஞாலம் உற்றும் உண்டு உமிழ்ந்த நாதன் என்றும்
ஆபத்து உடையவராக இருப்பதுவே வேண்டுவது
ரக்ஷிக்க சாதனாந்தரம் ஒன்றும் செய்பவராக இல்லாமல்
வரையாதே சர்வ வித ரக்ஷணம் பிரார்த்திக்காமலே இருக்க செய்யும் ஸ்வாமி
ஆபத்துக்கு மேற்பட்ட இவற்றின் பக்கல் ஒன்றும் வேண்டாமே
பிரளய ஆபத்தில் லோகம் பிரார்த்தித்ததோ –
ரஷிக்கைக்கு அடி நிருபாதிக சேஷியாய் இருப்பதால்
உடையவன் தானே உடைமையைத் தேடுவான்
சேஷித்வமே ஹேது

நானிலம் சூழ் வேலை யன்ன கோல மேனி வண்ணன் என்றும் –
முல்லை மருதம் குறிஞ்சி நெய்தல் -சூழ் சமுத்திர– படியை -தர்ச நீயமான நிறம் வடிவு

மேல் எழுந்து சேல் உகளும் வயல் கொள் நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதி
ஜலத்துடன் ஸ்பர்சம் இன்றிக்கே மேலே துள்ளி வர்த்திக்கும் மீன்கள்
ஜல சர ஜந்துக்களும் கூட களித்து இருக்கும் திவ்ய தேசம்
மேல் எழுந்து –
தண்ணீர் சுடும் என்னும்படி நிலம் குளிர்ந்து
உங்கள் உடன் இருப்பு அடிக் கொதிப்பாம் படியாய் இருப்பதுக்கு இது த்ருஷ்டாந்தம்
அவன் வர்த்திக்கும் தேசமே ஸ்ரமஹரமாய் இருக்கும் இவளுக்கு
மீன் தாவுவது போல் நானும் திவ்ய தேசம் நாமம் சொல்லி தரிக்கிறேன் என்கிறாள்

பாலின்  நல்ல மென் மொழியாள் பார்த்தான் பள்ளி பாடுவாளே
அவன் வாய் வெருவ வேண்டி இருக்க
மதுரா மதுரா லாபா என்று இவள் பேச்சு கேட்டு வாய் புலத்துபவன் அன்றோ

———————————————————–

வேதமே சொல்ல முடியாமல் மீள
ஜகத்துக்கு வந்த ஆபத்தை அவனே வந்து ரஷித்தான்
ஆறி இருக்க ஒண்ணாதோ
வாய் புலற்ற வேண்டுமோ
அப்படி இருக்க ஒட்டாமல் நெஞ்சைக் கைக் கொண்டான்

நாடி என் தன் உள்ளம் கொண்ட நாதன் என்றும் நான் மறைகள்
தேடி என்றும் காண மாட்டாச் செல்வன் என்றும் சிறை கொள் வண்டு
சேடுலவு பொழில் கொள் நாங்கைத் தேவ தேவன் என்று  என்று ஓதிப்
பாடகம் சேர் மெல்லடியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே —4-8-7-

நாடி என் தன் உள்ளம் கொண்ட நாதன் என்றும்
உள்ளம் பறிக்கவே எதிர் சூழல் புக்கு வளைத்து வந்தான்
சிறை கொள் வண்டு சேடுலவு-வந்து கூட்டங்கள் உலவும்

நாடி என் தன் உள்ளம் கொண்ட நாதன் என்றும் –
எதிர் சூழல் புக்கு
என்னைத் தேடி
என் நெஞ்சைத் தனக்கு ஆக்கிக் கொண்ட சேஷி என்றும் –

நான் மறைகள் தேடி என்றும் காண மாட்டாச் செல்வன் என்றும் –
என்னைத் தேடி வருந்தித் தனக்கு ஆக்குகிறவன்
தன்னை வேதங்கள் தேடி காணப் போகாத
ஸ்ரீயை  உடையவன் என்றும்

சிறை கொள் வண்டு சேடுலவு பொழில் கொள் நாங்கைத்
சிறகை உடைத்தாய் இருந்துள்ள
வண்டுகள்
சோலைத் தலையிலே உலவா நின்ற
திரு நாங்கையிலே வர்த்திக்கிற –
சேடு -திரட்சி யானது-

தேவ தேவன் என்று  என்று ஓதிப்

பாடகம் சேர் மெல்லடியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே
காலும் பாடகமும் பொருந்தின படியை
அவன் பாடா இருக்குமவள்
அவனூரைப் பாடா  நின்றாள்

———————————————-

நாண் எனக்கும் இல்லை நிகரில் முகில் வண்ணன் அன்றோ அவன் நம்மாழ்வார்
ஊரவர் கவ்வை எரு இட்டு போல் இங்கும்
உள்ளம் கொண்டான் என்று நீ புலம்பினால் உலகோர் ஏச மாட்டார்களோ என்ன
நான் ஒருத்தியோ அவனைப் பாடுகிறேன்
ப்ரஹ்மாதிகளால் கிட்ட ஒண்ணாத ஆழியான்
பிரிந்து இருக்கக் கூடுமோ
பலரும் ஏசுதலே பாடுக்கைக்கு உடல்

உலகம் ஏத்தும் ஒருவன் என்றும் ஒண் சுடரோடு உம்பர் எய்தா
நிலவும் ஆழிப் படையான் என்றும் நேசன் என்றும் தென் திசைக்குத்
திலதம் அன்ன மறையோர் நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதிப்
பலரும் ஏச என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே—4-8-8-

உலகம் ஏத்தும் ஒருவன் என்றும்
லோகமாக ஆஸ்ரயிக்கைக்கு அத்விதீயனான
சர்வ சமஸ்ரயநீயன் என்றும்

ஒண் சுடரோடு உம்பர் எய்தா நிலவும் ஆழிப் படையான் என்றும் –
சந்திர ஆதித்யர்களோடு கூடின
தேவர்களால் கிட்டப் போகாதே இருக்கிற்
திரு ஆழியை
எப்போதும் கை கழலா நேமியான்-பெரிய திருவந்தாதி -என்னும்படி
உடையவனாய் இருகிறவன் என்றும்

நேசன் என்றும் –
ஆஸ்ரிதர் பக்கல் ஸ்நேஹம் ஒரு வடிவு கொண்டவன் என்றும்

தென் திசைக்குத் திலதம் அன்ன மறையோர் நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதிப்
தெற்குத் திக்குக்கு திலக பூதரான
பிராமணர் வர்த்திக்கிற திரு நாங்கையிலே நின்று அருளின
தேவ தேவன் என்று என்று ஓதி

பலரும் ஏச என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே
பலரும் தன்னைப் பழிக்க
அவர்களை தனக்கு கூட்டு என்று
அவனூரைப் பாடுவாள் ஆனாள்
ஊரவர் கவ்வை எரு விட்டு -ஏசுவதே பாடுகைக்கு உடல்

———————————————————–

இவன் நேசன் என்று நீ கண்டது எங்கே
உலகோர் ஆஸ்ரயித்தார்களோ -என்று கேட்க
பெண் பித்தனான கண்ணன் தன்னையே
தமது துறையான கிருஷ்ண அவதாரத்தில் மண்டி
இவனே ஸ்ருஷ்ட்டி யாதிகளுக்கு காரணம்

கண்ணன் என்றும் வானவர்கள் காதலித்து மலர்கள் தூவும்
எண்ணன் என்றும் இன்பன் என்றும் ஏழு உலகுக்கு ஆதி என்றும்
திண்ண மாடு நீடு நாங்கைத்  தேவ தேவன் என்று என்று ஓதிப்
பண்ணின் அன்ன மென் மொழியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே—4-8-9-

எண்ணன்-எண்ணத்தில் -மநோ ரதத்தில் -இருப்பவன் –

கண்ணன் என்றும் வானவர்கள் காதலித்து மலர்கள் தூவும் எண்ணன் என்றும்
கிருஷ்ணன் என்றும்
ப்ரஹ்மாதிகள் ஸ்நேஹத்தைப் பண்ணி
புஷ்பாதி உபகரணங்களைக்  கொண்டு
ஆஸ்ரயிக்கும் படியாக
அவர்கள் மநோ ரதத்தே நிற்கிறவன் என்றும்

இன்பன் என்றும் –
ஆனந்தாவஹன் என்றும்-

ஏழு உலகுக்கு ஆதி என்றும் –
ஜகத் காரண பூதன் என்றும்-
கிருஷ்ண ஏவஹி லோகாநாம் இத்யாதி

திண்ண மாடு நீடு நாங்கைத்  தேவ தேவன் என்று என்று ஓதிப்
திண்ணமான மாடங்கள் நீடின
நாங்கை யிலே வர்த்திக்கிற தேவ தேவன் என்றும் ஓதி

பண்ணின் அன்ன மென் மொழியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே

————————————————–

பாருள் நல்ல மறையோர் நாங்கைப் பார்த்தன் பள்ளி செங்கண் மாலை
வார் கொள் நல்ல முலை மடவாள் பாடலைத் தாய் மொழிந்த மாற்றம்
கூர் கொள் நல்ல வேல் கலியன் கூறு தமிழ் பத்தும் வல்லார்
ஏர் கொள் நல்ல வைகுந்தத்துள் இன்பம் நாளும் எய்துவாரே—-4-8-10-

நல்ல-அவிஸ்லேஷம் ஆகிய நன்மை –

பாருள் நல்ல மறையோர் நாங்கைப் பார்த்தன் பள்ளி செங்கண் மாலை
பூமியில் நல்ல விலஷணமான பிராமணர் எல்லாம் திரண்ட
திரு நாங்கை யிலே பார்த்தன் பள்ளியிலே வர்த்திக்கிற
வாத்சல்யத்தையும் -வ்யாமோஹத்தையும் உடையவன் ஆனவனை

செங்கண் -என்றதால் வாத்சல்யம்
மாலை–என்றதால் வ்யாமோஹத்தையும்
உடையவன் ஆனவனை

வார் கொள் நல்ல முலை மடவாள் பாடலைத் தாய் மொழிந்த மாற்றம்
ப்ராப்த யௌவனை  யானவள் பாடலைத்
தாயார் சொன்ன மாற்றத்தை

கூர் கொள் நல்ல வேல் கலியன் கூறு தமிழ் பத்தும் வல்லார்
அப் பிராட்டி
தசை வந்து
ஆழ்வார் அருளிச் செய்த இப் பத்தும் வல்லார்

ஏர் கொள் நல்ல வைகுந்தத்துள் இன்பம் நாளும் எய்துவாரே —
ஒருத்தி வாய் வெருவ
ஒருத்தி கூப்பிட்ட எளிவரவு தீர
ஒரு நாளும் பிரிய வேண்டாதே இருக்கிற
தேசத்திலே இருக்கப் பெறுவார்-

———-

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

கவளக் களிறு அரக்கர் பேய் தம் உயிரைக்
கவர்ந்தான் மறை நால் தொடர் பவன் பார்த்தன்
பள்ளி காயா வண்ணனைக் கூடாமை கூறு நீலன்
நள்ள நலம் நல்கும் நுமக்கு –38-

மறை நால் -நான்மறை என்று மாற்றிப் பொருள் –
நான் மறைகள் தேடியோடும் செல்வன் -நான்மறைகள் தேடி என்றும் காண மாட்டாச் செல்வன் –
வேத பாராயண கோஷ்ட்டி பின் தொடருவதையும் -வேதங்கள் அவனை சொல்லி முடிக்காமையும் குறிக்கும்
காயா வண்ணன் -காமரு சீர் குவளை மேகமென்ன மேனி -வேலையன்ன கோல மேனி வண்ணன்
பார்த்தன் பள்ளிப் பெருமாளைக் கூடாமையால் வந்த துன்பத்தை கூறும் ஆழ்வாரை –
நள்ளி -அணுகி -வாழ்பவர் நல் வாழ்வைப் பெறுவர் என்றபடி–

———————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading