ஸ்ரீ பெரிய திருமொழி-4-3—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

க்ஷேத்ரம் -ஸ்ரீ ராமனுக்கு ப்ரஹ்ம ஹத்தி தோஷம் போக்க
தங்க பசு செய்து உள்ளே அமர்ந்து நான்கு நாள்கள் தபஸ்
அத்தாலே செய்யப்பட கோயில்
கஸ்யபர் –அஷ்டாக்ஷரம் –32000 ஜபித்து பெற்ற ஐஸ்வர்யம்
செம் பொன் அரங்கன் மூலவர் நின்ற திருக்கோலம்-ஹேம அரங்கன்-

பேரணிந்து பிரவேசம்

ஞானானந்த ஸ்வரூபனாய் -(பேதியா-விகாரம் அற்ற – இன்ப வெள்ளத்தை)
நிரதிசய போக்யனாய்-(ஏழ் இசையின் சுவை தன்னை – உள்ளத்துள் ஊறிய தேனை)
என்றும் ஒக்க உளனாய் இருக்கிற -(இறப்பு எதிர் காலக் கழிவும் ஆனானை)
சர்வேஸ்வரன்
தன்னை ஆஸ்ரயிக்கும் இடத்தில் புருஷகாரமாம் பிராட்டிமாரோடு கூட வந்து -(மலர் மகளோடு மண் மகளும் உடன் நிற்ப )
நித்ய வாசம் பண்ணுகிற
செம்பொன் செய் கோயிலின் உள்ளே நான் காணப் பெற்றேன் என்று
தாம் பெற்ற பேற்றை அனுபவித்து இனியர் ஆகிறார்

ஹர்ஷ பிரகர்ஷம் -பெரிய ஆனந்தத்துடன் அருளிச் செய்கிறார் –
(உணர் முழு நலம் –முழு உணர்வு முழு நலம் -கட்டடங்க ஞானம் கட்டடங்க ஆனந்தம் )

————————————————————

கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே/ வாழ்ந்து ஒழிந்தேனே /அல்லல் தீர்ந்தேனே —
பாசுரங்கள் தோறும் உண்டே -கண்களால் தரிசித்து -காதால் மட்டும் கேட்டுப் போகாமல் க்ருதார்த்தன் ஆனேன் –

நாங்கையில் நடுவில் உள்ள திவ்ய தேசம் –4–நாங்கூர் 7-முன்பே பார்த்தோம் –
ஹேம ரேங்கர் -செம் பொன் கோவில் -பேர் அருளாளன் -ஸ்ரீ காஞ்சி தேவ ராஜனே இங்கு –

பேரணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேரருளாளன் எம்பிரானை
வாரணி முலையாள் மலர் மகளோடு மண் மகளும் உடன் நிற்ப
சீரணி மாட நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
காரணி மேகம் நின்றது ஒப்பானைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே–4-3-1-

மலர் மகளோடு மண் மகளும்-மகளோடும் உம்மைத் தொகை இல்லாதது மண் மகளின் சிறப்பை சொன்னவாறு
யுவா குமாரா -யுவதிஸ்ய குமாரிணி -நித்ய யவ்வனம்

பேரணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேரருளாளன் எம்பிரானை
லௌகிகர் அடங்கலும் திரண்டு
என்றும் அவன் திருவடிகளில் விழுந்து திரு நாமத்தைச் சொல்லி
ஸ்தோத்ரத்தை சொல்லி ஆஸ்ரயிக்க
அவர்கள் ஆஸ்ரயித்த அளவு அல்லாதபடி பிரசாதத்தை அவர்கள் பக்கலிலே பண்ணி
அப்படியே எனக்கு உபகாரகன் ஆனவனை
(புருஷோத்தமன் -வார்த்தை -ஆஸ்ரிதர் என்னிடம் மிகப்ரியம்-அவர் அளவு என்னால் பண்ண முடியவில்லை
தூய்மையோடு -வேறு பலன் இன்றி எதுவும் விசேஷணம் இல்லை ஏத்துதத்துக்கு
அவனது அருளோ பேர் அருள் )

வாரணி முலையாள் மலர் மகளோடு
நித்தியமான யவனத்தை உடையவளாய்
அத்தாலே சர்வேஸ்வரன் திரு உள்ளத்தை தன் பக்கலிலே துவக்கி
ஆஸ்ரிதர் உடைய குற்றத்தை ந கச்சின் ந அபராத்யதி -என்னும் பெரிய பிராட்டியார் உடன் கூட

மண் மகளும் உடன் நிற்ப
முதல் தன்னிலே குற்றத்தை காண்கிறது என்
பொறுத்தோம் என்று தலை துலுக்குகிறது என் -என்று
இவ் வழியாலே அவன் தனக்கும் கூடப் பொறைக்கு உவாத்தாய் -உசாத் துணையாக இருக்கும்
ஸ்ரீ பூமிப் பிராட்டியாரும் கூட நிற்க-மண் மகளும் -உம்மைத் தொகை காட்டும் பிரதான்ய அர்த்தம் –

சீரணி மாட நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
முதல் தன்னில் லோகத்தில் காட்டிலும் ஐஸ்வர்யம் விஞ்சி இருக்கும் ஆய்த்து அவ் ஊரில் –
அது அடைய தோற்றும்படி தர்ச நீயமான மாடங்களை உடைய
திரு நாங்கூரில்
நன்றான நடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே

காரணி மேகம் நின்றது ஒப்பானைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே
கார் காலத்திலே வர்ஷ உந்முகமாய்க் கொண்டு
அழகிய வடிவை உடைத்ததாய் இருப்பதொரு மேகம் போலே
இருககிறவனைக்
கண்ணாலே கண்டு அனுபவிக்கப் பெற்று
அசந்நேவ-என்னும் நிலை தீர்ந்து
சந்தமேனம் -என்கிறபடியே உஜ்ஜீவித்து
க்ருதார்த்தன் ஆனேன் -என்கிறார்

————————————————-

முதல் பாட்டில் திவ்ய மங்கள விக்ரஹம் -ரூபம்
இதில் ஸ்வரூபம்
சாஸ்திரம் ஸ்வரூபம் நிறையச் சொல்லும்
ஆழ்வாராதிகளோ ரூபத்தையும் குணத்தையும் நிறைய அருளிச் செய்வார்கள் –

பிறப்பொடு மூப்பு ஓன்று இல்லவன் தன்னைப் பேதியா இன்ப வெள்ளத்தை
இறப்பு எதிர் காலக் கழிவும் ஆனானை ஏழு இசையின் சுவை தன்னைச்
சிறப்புடை மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
மறைப் பெரும் பொருளை வானவர் கோனைக் கண்டு நான் வாழ்ந்து ஒழிந்தேனே—4-3-2-

பேதியா-குறைவோ நிறையா வேறுபாடு இல்லாத எப்பொழுதும் ஒரே மாதிரி –
இன்ப வெள்ளத்தை–ஆனந்த சாகரம் –
மறைப் பெரும் பொருளை-வேத ப்ரதிபாத்யன் -பெரும் பொருள் என்றது
வேதம் சொல்லும் சேதன அசேதனங்களில் உயர்வு உண்டே பரமாத்மாவுக்கு -பிரதான அர்த்தம் இவனே

பிறப்பொடு மூப்பு ஓன்று இல்லவன் தன்னைப்
பிறப்பது மூப்பது ஆகைக்கு ஹேது இல்லாமையாலே
ஜன்ம ஜராதிகள் ஆகிற பிரசங்கமும் இன்றிக்கே இருக்கிறவனை
பிறப்பது மூப்பது ஆகா நிற்கச் செய்தே ஒரு ப்ரஹ்ம கல்பம் மாத்ரம்
இருந்து முடிகிறத்தைக் கொண்டு
பிறப்பும் மூப்பும் இல்லை என்று சொல்லா நின்றது இறே ப்ரஹ்மாதிகளை-
முதலிலே அவ் விடையாட்டமும் சொல்ல ஒண்ணாது இருக்கிறவனை
(இந்திரன் -நான்முகன் போல்-கர்ம வஸ்யன்-இல்லையே -பிறப்பு மூப்பு ஒன்றுமே இல்லையே இவனுக்கு
பிறப்பொடு மூப்பு ஓன்று இல்லவன் தன்னை-துளியும் இல்லை என்று காட்ட ஓன்று பத பிரயோகம் )

பேதியா இன்ப வெள்ளத்தை –
பேதியாத ஆனந்த சமுத்ரத்தை-
ஆனந்த மய -என்னக் கடவது இறே
ஆனந்த ப்ராசுர்யத்தைச் சொல்லுகிறது
உணர் முழு நலம் –முழு உணர்வு முழு நலம் –

ஜீவாத்மாவின் உடைய ஸ்வரூபமும் நித்தியமாய்
தர்ம பூத ஞானமும் நித்யமுமாய்
இருக்கச் செய்தேயும்
ஞான ப்ரசர த்வாரத்தின் உடைய சங்கோச விகாசத்தைப் பற்ற
ஞானத்துக்கு உதய அஸ்தமய வ்யவஹாரம் பண்ணா நின்றது இறே

அவ்வோபாதி ஸ்வரூபமும் நித்தியமாய் இருந்ததே யாகிலும்
கர்ம நிபந்தனமாக உண்டான அசித் சம்சர்க்க வியோகங்களால்
பிறந்தான் முடிந்தான் என்கிற வ்யபதேசத்துக்கு அர்ஹமாகா நின்றது இறே
அப்படி இருப்பதொரு கர்மம் இல்லாமையாலே
ஒரு நாளும் பேதிக்கக் கடவது அன்றிக்கே
என்றும் ஒக்க ஏக ரூபமான ஸ்வரூபத்தை உடையவனை –

இறப்பு எதிர் காலக் கழிவும் ஆனானை
இப்படி இருக்கையாலே காலத் த்ரயத்திலும் உள்ளவனை
இறந்த என்கிற இது பூத காலத்தை
எதிர் -பவிஷ்யமான காலத்தை
கழிவு -வர்த்தமான காலத்தை
கால த்ரயத்திலும் உளன் ஆனவனை

ஜன்ம ஜராதிகளை உடையவன் அன்றிக்கே
என்றும் ஒக்க ஏக ரூபமான ஸ்வரூபத்தை உடையனாய்க் கொண்டு
காலத் த்ரயத்திலும் உளன் ஆனவனை

ஏழு இசையின் சுவை தன்னைச்
சப்த ஸ்வரங்களிலும் உண்டான
ரச வஸ்து தான் ஒரு வடிவு கொண்டாப் போலே
நிரதிசய போகய பூதனாய் இருந்துள்ளவனை

பேதியா இன்ப வெள்ளம் -என்ற இடம் ஸ்வரூபத்தின் போக்யதை சொல்லிற்று
இங்கு-ஏழு இசையின் சுவை தன்னை- குண யோகத்தினால் வந்த போக்யதை சொல்லுகிறது

சிறப்புடை மறையோர்
சிறப்பால் மிகுதியைச் சொல்லுகிறது
ஆக ப்ராஹ்மண்யத்தால் வந்த ஆதிக்யத்தை உடைய
ப்ராஹ்மணர் உடைய

நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
திரு நாங்கூரில் நன்றான நடுவுள்
பரம பதத்தில் போய் அன்றிக்கே
செம் பொன் செய் கோயிலின் உள்ளேயே

மறைப் பெரும் பொருளை –
மறைக்கு பொருளாய் இருப்பவர்கள் இறே
ஜீவாத்மாக்களும் -ப்ரஹ்மாதிகளும்
அவர்களைப் போல் அன்றிக்கே
ஸ்வ இதர சமஸ்த வஸ்துக்களும் தனக்கு பிரகாரமாய்
தான் பிரகாரியாய் இருக்கையாலே
வேதத்துக்கு பிரதான தயா வாஸ்ய பூதனாய் உள்ளவனை –
வேதைஸ்ஸ சர்வைர் அஹமேவ வேத்ய
சர்வே வேதா யத் பதம் ஆமநந்தி

வானவர் கோனைக்
இப்படி இருக்கிறவன் தான்
அயர்வறும் அமரர்கள் அதிபதி ஆய்த்து
இனி வேதம் தானும்
தத் விப்ராசோ விபந்யவோ ஜாக்ருவாகம் சஸ் சமிந்ததே -என்று இறே ஓதுவது
இப்படி இருக்கிறவனை

கண்டு நான் வாழ்ந்து ஒழிந்தேனே
வேதைக சமாதி கம்யனாக கேட்கை அன்றிக்கே
கண்ணாலே காணப் பெற்று
இனி வாழுகைக்கு ஒரு தேச விசேஷம் தேடித்
பொதி சோறு கட்டி
அறுகாத பயணம் போக வேண்டாதே
க்ருதார்த்தனாய் பெற்றேன் என்கிறார்

கீழ் திரு மேனி திவ்ய மங்கள விக்ரஹத்தை அனுபவித்து
இதில் திவ்ய ஆத்ம ஸ்வரூபம் திவ்ய குண ஸ்வரூபம் அனுபவிக்கிறார்
மூப்பு இல்லை என்னாமல் மூப்பு ஓன்று இல்லை -பிறப்பது மூப்பது ஆகா நிற்க

—————————————————-

கீழே ரூபம்
ஸ்வரூபம் குணம்
இதில் சர்வ வியாபகத்வம் அருளிச் செய்கிறார் –

திட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும் செழு நிலத்து உயிர்களும் மற்றும்
படர் பொருள்களுமாய் நின்றவன் தன்னைப் பங்கயத்தயன் அவன் அனைய
திட மொழி மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
கடல் நிற வண்ணன் தன்னை நான் அடியேன் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –4-3-3-

ஆய் நின்றவன்-அந்தராத் மாவாய் -சரீரியாய் -அனைத்தும் சரீரம் பிரகாரம் -இவன் பிரகாரி
திட மொழி-அவி சால்யமான -அசைக்க முடியாத ப்ரஹ்மா வரம் பொய்யாகாத படி நரஸிம்ஹ —
இவர்கள் அவனே உபாயம் உபேயம் என்கிற அழகிய கொழ்கையில் அசைக்க முடியாத வர்கள்

திட விசும்பு -எரி நீர்
லோகாயதிகன் -முதலிலே ஆகாசம் என்று ஒரு தத்வம் இல்லை -என்றான்
அவனுடைய மதத்தை நிரசிக்கைகாக
வைதிக பிரக்ரியையின் படியே -ஆகாசாத் வாயு -என்கிற
கிரமத்திலே
அல்லாதவை எல்லாம் உண்டாவதுக்கு முன்னே உண்டாவதுமாய்
அவை அழிந்தாலும் சில நாள் நின்று அழியுமதுவுமாய் இருக்கையாலும்
திட விசும்பு -என்கிறார் -ஆகவுமாம் –

அன்றிக்கே
பதார்த்தங்களுக்கு எல்லாம் ஒரோ ஸ்வபாவம் நியதமாய் இருக்கையாலே
வ்யவஸ்தித ஸ்வபாவமான பூத பஞ்சகத்தை சொல்லுதல்
திட விசேஷணம் ஒவ் ஒன்றுக்கும் கொள்ள வேண்டும் என்றபடி
இம் மூன்றும் ஐந்துக்கும் உப லஷணமாய்
இது தன்னில் ஒன்றில் சொன்ன ஸ்வபாவம் மற்றை நாலில் ஏறக் கடவதுமாய் இருக்கும் ஆய்த்து

திங்களும்-சுடரும் –
கார்ய வர்க்கத்து எல்லாம் உப லஷணம்
கார்ய கோடியில் சந்திர சூர்யர்களும்

செழு நிலத்து உயிர்களும்
பூமியில் மனுஷ்யர்களும்

மற்றும் -படர் பொருள்களுமாய் நின்றவன் தன்னைப்
மற்றும் அனுக்தமான தேவ திர்யக் ஸ்தாவரங்களுமாய்க் கொண்டு
விஸ்த்ருதனாய் நின்றவனை

தத் த்ருஷ்ட்வா ததேவ அநு பிராவிசத் -இத்யாதிப் படியே இவற்றை அடைய உண்டாக்கி
இவற்றின் உள்ளே தான் அனுபிரவேசித்து
அத்தாலே இவை எல்லாம் தான் என்னலாம் படி நிற்கிறவனை
தத்வமஸி ஸ்வேதகேதோ –
அயமாத்மா ப்ரஹ்ம
ப்ரஹ்ம தாஸா
என்றும் சொல்லுகிறபடியே ( அப்ருத் சித்த விசேஷணமாய் )

பங்கயத்தயன் அவன் அனைய
திரு நாபி கமலத்தை பிறப்பிடமாக உடைய ப்ரஹ்மாவைப் போலே

திட மொழி மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே-
பழுது போகாத வார்த்தையை உடையராய் இருப்பவர்கள்

தான் ஒன்றைச் சொன்னால்
தன்னாலும் அது பேதிக்க போகாதே -ராவணாதிகளுக்கு வரம் கொடுக்கை
வேறு அதுக்கு ஒரு போக்கடி தேட வேணும் இறே
நீ சொன்னது பழுது போகாமையாலே
நாங்கள் மிறுக்குப் படா நின்றோம் இறே என்றார்கள் தேவர்கள்

கடல் நிற வண்ணன் தன்னை நான் அடியேன் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே
காணவே தாபத் த்ரயம் ஆறும்படி ஸ்ரமஹரமான
வடிவை உடையவனை
கண்டு அனுபவித்து
நான் உஜ்ஜீவிக்கப் பெற்றேன் -என்கிறார்

——————————————————

கீழ்ப் பாட்டில் அந்தராத்மாவை அனுபவித்தவர் இதில்
விபவத்தையும்
அதுக்கடியான வ்யூஹத்தையும் அனுசந்தித்து உகக்கிறார்

வசையறு குறளாய் மாவலி வேள்வியில் மண் அளவிட்டவன் தன்னை
அசைவறும் அமரர் அடி இணை வணங்க வலை கடல் துயின்ற வம்மானைத்
திசை முகனனை யோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
உயர் மணி மகுடம் சூடி நின்றானைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே—4-3-4-

ப்ரஹ்மாதிகள் கூப்பிடுவார்கள் -உதவிக்கு
கைங்கர்யம் நித்யர்களே பண்ணுவார்கள் திருப் பாற் கடலிலும் –

வசையறு குறளாய் மாவலி வேள்வியில் மண் அளவிட்டவன் தன்னை
வாமன வேஷத்தை
பரிக்கிரஹிக்கிற இடத்தில் ஒரு குறை சொல்ல ஒண்ணாத படியான
குறள் வடிவை உடையனாய்
மகா பலியின் உடைய யஞ்ஞ வாடத்திலே
பூமிப் பரப்படைய அளந்தவன் தன்னை –
(ஸ்ரீ யபதியாக இருந்தும் -பிச்சை எடுக்க -அழகிய மாண் உருவாக-
அழகைக் கண்டவர் குறை சொல்ல முடியாதபடி அன்றோ கோலம் )

அசைவறும் அமரர் அடி இணை வணங்க வலைகடல் துயின்ற வம்மானைத்
ப்ரஹ்மாதிகள் திருப் பாற் கடலிலே சென்று கூப்பிட்டால்
இக்கரையில் நின்று கூப்பிடுகை ஒழிய
உள்ளுப் புக்கு ஒரு பரிசர்யை பண்ண ஒண்ணாதபடி இருக்கையாலே
அஸ்ப்ருஷ்ட தோஷ கந்தரான நித்ய ஸூரிகள் வந்து அடிமை செய்யும்படி
அலை எறியா நின்றுள்ள திருப் பாற் கடலிலே
கண் வளர்ந்து அருளினவனை

அசை வறுகை யாவது –
ஒரு நாள் உத்க்ருஷ்டராகா
ஒரு நாளாகத் தாழ்ச்சி செய்யுமது
அன்றிக்கே இருக்கை-( நீதி வானவர் அன்றோ )

திசை முகனனை யோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
தனித் தனியே சிருஷ்டி ஷமராய் இருக்கிற
ப்ராஹ்மணர் வர்த்திக்கிற

உயர் மணி மகுடம் சூடி நின்றானைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே
பசுக்களையும் இடையரையும் நோக்குகைக்காக
கோவிந்த அபிஷேகம் பண்ணி நின்றாப் போலே
சம்சாரிகள் உடைய ரஷணத்துக்காக
முடி சூடி நிற்கிறவனை

—————————————————————–

ஸ்ரீ விபவத்தில் நெஞ்சு சென்று
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண அவதாரங்களைப் பேசி அனுபவிக்கிறார்
இரண்டு பாசுரங்கள் ஸ்ரீ ராமாவதாரம்
அடுத்த மூன்றும் ஸ்ரீ கிருஷ்ண அவதார அனுபவம்

தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே என்று சென்று அடைந்தவர் தமக்குத்
தாய் மனத்து இரங்கி யருளினைக் கொடுக்கும் தயரதன் மதலையைச் சயமே
தே மலர்ப் பொழில் சூழ் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலினுள்ளே
காமனைப் பயந்தான் தன்னை நான் அடியேன் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே —4-3-5-

அடைந்தவர் தமக்கு-அடைந்தவர் க்கு எண்ணாமல் -உபாயம் உபேயம் அவனே என்று இருக்கும் அதிகாரி ஸ்வரூபம்
ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்வம் உள்ளவர்கள் –
சயமே–ஸ்வயம் -ஜெயம் -சயம் கூட்டமாக மூன்று அர்த்தங்கள்

தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே என்று
தண்ணிய நெஞ்சை உடைய
ராஷசர் உடைய
ஜனனி என்று வாசி வைத்து பிரதிபத்தி பண்ண மாட்டாத
பொல்லாத நெஞ்சை உடைய
ராஷசர் மிடுக்கைப் போக்கினவனே-என்று

சென்று அடைந்தவர் தமக்குத் –
அப்படியே எங்கள் பிரதிபந்தங்களைப் போக்கி ரஷிக்க வேணும் –
என்று கிட்டினவர்களுக்கு

தாய் மனத்து இரங்கி யருளினைக் கொடுக்கும் தயரதன் மதலையைச்
தாயினுடைய நெஞ்சின் படியே இரங்கி
புறம்பு ஒரு புகல் இன்றிக்கே நம் பக்கலில் வந்து கிட்டினவர்கள் இறே
என்று பிரசாதத்தைப் பண்ணி அருளும்
சக்கரவர்த்தி திரு மகனை

சயமே -ஸ்வயம் என்ற படியாய்
அவன் தானே வந்து வர்த்திக்கிற -என்னுதல்
அன்றிக்கே
ஜய சப்தமாய் சொன்ன சொன்ன விஜயங்கள் எல்லாம்
பொறுக்கும் படி இருக்கிற
திரு நாங்கூர் -என்னுதல்

சயமே தேமலர்ப் பொழில்-
சமூஹமான தே மலர்ப் பொழிலை உடைய என்னுதல்

சூழ் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலினுள்ளே
காமனைப் பயந்தான் தன்னை நான் அடியேன் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே
நாட்டில் அழகுக்குத் தன்னை மதிக்கும்படி திரிவான் காமன் இறே
அவனுக்கும் கூட உத்பாதகன் ஆனவனை
சேஷ பூதனான நான்
கண்டு கொண்டு உஜ்ஜீவிக்கப் பெற்றேன்

———————————————

மல்லை மா முந்நீர் அதர்பட மலையால் அணை செய்து மகிழ்ந்தவன் தன்னை
கல்லின் மீது இயன்ற கடி மதிள் இலங்கை கலங்க ஓர் வாளி தொட்டானைச்
செல்வ நான் மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
அல்லி மா மலராள் தன்னோடும் அடியேன் கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே–4-3-6

கல்லின் மீது இயன்ற திரிகூடம் என்கிற மலையால் கட்டப் பட்ட ரஷை

நிரவதிகமான சம்பத்தை உடையதாய்
பரந்து இருந்துள்ள முந்நீர் உண்டு -கடல்
அது வழிபடும்படியாக
ரத்னாதிகளாலே குறைவற்று இருக்கும் இறே

நீரிலே ஆழக் கடவ மலையாலே
மல்லை மா முந்நீர் அதர்பட அணை செய்து
லீலா ரசம் அனுபவித்து ஹிருஷ்டன் ஆனவனை

திரிகூட சிகரத்திலே இறே இலங்கை
அதுக்கு மேலே அரணாகப் போரும்படி மதிளை உடைத்தான இலங்கை
ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படி
கைக்கு எட்டிற்று ஓர் அம்பை விட்டவனை

நிரவதிக சம்பத்தை உடைய பிராமணர் உடைய
அவர்கள் ஐஸ்வர்யத்துக்கு நிதான பூதையான
பெரிய பிராட்டியார் உடன் கூடக் காணப் பெற்று
சாம்சாரிக சகல துரிதங்களும் தீரப் பெற்றேன் –

——————————————–

இதுவும் அடுத்த இரண்டும் ஸ்ரீ கிருஷ்ண அனுபவம்
பாலும் சக்கரை போல் திருவேங்கடமும் கண்ணனும் அடுத்த பாடல்

வெஞ்சினக் களிறும் வில்லோடு மல்லும் வெகுண்டு இருத்து அடர்த்தவன் தன்னைக்
கஞ்சனைக் காய்ந்த காளை யம்மானைக் கரு முகில் நிறத்தவனைச்
செஞ்சொல் நான் மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
அஞ்சனக் குன்றம் நின்றது ஒப்பானைக் கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே–4-3-7

வெவ்விய சினத்தை உடைத்தாய் இருக்கிற குவலயா பீடத்தையும்
அதுக்கு அவ்வருகே இட்டு வைத்த வில்லையும்
அதுக்கு உள்ளே நிறுத்தின மல்ல வர்க்கத்தையும்
குவலயா பீடத்தைச் சீறி
வில்லை முறித்து

மல்லை அடர்த்தவன் -தன்னை
அதுக்கு உள்ளே நின்ற கம்சனை நிரசித்த காளை
பருவம் நிரம்பாத அளவிலே ஆய்த்து ஈஸ்வரன் செய்ததைச் செய்தது
கம்சனை நிரசித்து -ஆஸ்ரித விரோதி போகப் பெற்றோம் -என்று
ஸ்ரமஹரமான என்ற வடிவோடு நின்றவனை

செவ்விய சொல்லை உடையராய் ஆய்த்து அவ் ஊரில் பிராமணர் இருப்பது
கண்டபடி சொல்லக் கடவராய்
பூத ஹிதமே சொல்லக் கடவரான பிராமணர்

அஞ்சனம்
கண்டார் கண் குளிரும்படியாக
ஓர் அஞ்சன கிரி நின்றாப் போலே நிற்கிறவனை

—————————————————–

அரங்கத்து வந்தவன் -மந்தி பாய் வட வேங்கட மா மலையில் இருந்து தானே வந்தவன்-

அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை
மின் திகழ் குடுமி வேங்கடமலை மேல் மேவிய நல் வேத விளக்கைத்
தென் திசை திலதம் அனையவர் நாங்கைச் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
மன்றது பொலிய மகிழ்ந்து நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே–4-3-8-

அன்றிய -கோபித்த
மன்றது -பாகவத கோஷ்டியானது

அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை-
தன் பேரனோடு பகைத்த பாணனுடைய ஆயிரம் தோள்களும் கழியும்படி
அன்று திரு வாழியை ஸ்பர்சித்தவனை

மின் திகழ் குடுமி வேங்கடமலை மேல் மேவிய நல் வேத விளக்கைத்
இன்னமும் பாணன் போல்வார் விரோதிகள் வந்து முளைக்கில் செய்வது என் என்று
மின் விளங்கா நின்றுள்ள சிகரத்தை உடைத்தான திருமலையில் நித்ய வாசம் பண்ணுகிற
வேதைக சமதி கம்யனாய்
ஸ்வயம் பிரகாசமான ஸ்வரூபத்தை உடையனாய் உள்ளவனை

தென் திசை திலதம் அனையவர் நாங்கைச் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
தெற்குத் திக்குக்கு திலகம் போல் இருக்கிறவர்கள் உடைய

மன்றது பொலிய மகிழ்ந்து நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே
எல்லாரும் திரளும் இடத்திலே
அவ்விடம் சம்ருதமாம்படி
பரமபத விபூதியில் போலே
நிரவதிக ப்ரீதி உக்தனாய் உள்ளவனை

பாலோடு சக்கரை சேர்த்து பருகுவாரைப் போலே
கிருஷ்ண அவதாரத்துடன் திருவேம்கடமுடையானை சேர்த்து அனுபவிக்கிறார்

——————————————————-

பாலும் சக்கரையும் அனுபவித்து
தமக்கு இனித்தாகையாலே எல்லாருக்கும் ரசித்தவன் என்று கொண்டு அருளிச் செய்கிறார்

களம் கனி வண்ணா கண்ணனே என்தன் கார் முகிலே என நினைந்திட்டு
உளம் கனிந்து இருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்து ஊறிய தேனைத்
தெளிந்த நான்மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
வளம் கொள் பேரின்பம் மன்னி நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே–4-3-9-

களம் கனி வண்ணா கண்ணனே -என் தன் கார் முகிலே-
சிவந்து இருத்தல்
வெளுத்து இருத்தல்
செய்கை அன்றிக்கே
கண்ணுக்கு குளிர்ந்து
களாப் பழம் போலே இருக்கிற வடிவை உடையவனே
கிருஷ்ணனே

என நினைந்திட்டு உளம் கனிந்து இருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்து ஊறிய தேனைத்
ஸ்ரமஹரமான வடிவை எனக்கு
முற்றூட்டாக்கினவனே -என்று நினைத்து
ஹிருதயமானது பக்வமாய் இருக்கும்
சேஷ பூதர் இடைய ஹிருதயத்தில்
ஊறிய தேன் போலே நிரதிசய போக்யன் ஆனவனை

தெளிந்த நான் மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
ஒரு கால் சர்வேஸ்வரன் ரஷகன் -என்று இரா
மற்று ஒரு போது-வேறு ஓன்று ரஷகம் -என்று இருக்கை அன்றிக்கே
என்றும் ஒக்க சர்வேஸ்வரனே நமக்கு ரஷகன் -என்று தெளிந்து இருக்கிற பிராமணர்

வளம் கொள் பேரின்பம் மன்னி நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே
அழகியதாய்
நிரவதிகமான ஆனந்தத்தை
உடையவனாய் நிற்கிறவனை

———————————————————-

தேனமர் சோலை நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலினுள்ளே
வானவர் கோனைக் கண்டமை சொல்லும் மங்கையார் வாள் கலிகன்றி
ஊனமில் பாடல் ஒன்பதோடு ஒன்றும் ஒழிவின்றிக் கற்று வல்லார்கள்
மான வெண் குடைக் கீழ் வையகம் ஆண்டு வானவர் ஆகுவர் மகிழ்ந்தே–4-3-10-

தேனமர் சோலை நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலினுள்ளே
வண்டுகள் நெருங்கி இருந்துள்ள சோலையை உடைத்தான
திரு நாங்கூரில் செம் பொன் செய் கோயிலின் உள்ளே

வானவர் கோனைக் கண்டமை சொல்லும் –
அயர்வறும் அமரர்கள் அதிபதியை
கண்டமை யாய்த்து சொல்லிற்று

மங்கையார் வாள் கலிகன்றி-
திரு மங்கையில் உள்ளாருக்கு மிடுக்கான வாளை உடையரான ஆழ்வார்

ஊனமில் பாடல் ஒன்பதோடு ஒன்றும் ஒழிவின்றிக் கற்று வல்லார்கள்
லக்ஷணங்களில் குறை அறச் சொன்ன பத்தும்
ஒன்றும் வழுவ விடாதே
அப்யசிக்க வல்லார்கள்

மான வெண் குடைக் கீழ் வையகம் ஆண்டு வானவர் ஆகுவர் மகிழ்ந்தே
பரப்பை உடைத்தான
வெண் கொற்றக் குடைக் கீழே
பூமியை அடைய பாகவத சேஷம் ஆக்குகைகாக நிர்வஹித்து
அநந்தரம்
நிரவதிக ப்ரீதி உக்தராய்
நித்ய ஸூரிகளோடு ஒரு கோவையாகப் பெறுவர்

பேரருளாளன் எம்பிரான் -என்று உபக்ரமித்து
வானவர் கோனை -என்று உபசம்ஹரிக்கிறார்
தேவ ராஜா பிதாமகர் தனம் -அயர்வறும் அமரர்கள் அதிபதி
அவரையே இங்கே கண்டார்
நலமுடையவன் –கோயில்
அருளினன் திருமலை
அயர்வறும் அமரர்கள் அதிபதி – பெருமாள் கோயில்
கோயில் திருமலை பெருமாள் கோயில்-அனுபவம் என்றதாயிற்று

இப்படி அல்லையாகில் கண்டமையை சொல்லிற்று என்ன ஒண்ணாதே
தொழுது என்னவும் ஒண்ணாதே
உய்ந்து ஒழிந்தேன் வாழ்ந்து ஒழிந்தேன் அல்லல் தீர்ந்தேன் -ஒன்பது பாட்டும் ஒரு தட்டு
இந்த பல சுருதி ஒரு தட்டு -ஒன்பதோடு ஒன்றும்

————

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

பேரணி சீர் பால் கார் அமுதம் தேன் பான்மையான்
பேர் அறிவன் இன்பன் மாறில் மாலை -சீர் மறையோர்
செம்பொன் செய் கோயிலுள் மாவோடு கண்டுய்ந்த நீலன்
நம் பிறவியாம் வினைக்கு மாற்று -33-

நாங்கை நன்னடுவுள் உள்ள திவ்ய தேசம்
பேர் அணி சீர் -அணி அணியாகத் திரண்ட கல்யாண குணங்கள்
அவை தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதமுமாய் தித்திக்கும் பான்மை -தன்மை அன்றோ
பேர் அறிவன்-சர்வஞ்ஞன்
மாறில் மால் -அவிகாராய ஸூத்தாய-சதைக ரூப ரூபாய
மாறில் ஒப்பில்லாத அத்விதீயன் என்றுமாம்
கண்டு உய்ந்தமை ஒவ் ஒரு பாட்டிலும் இறுதியில் உண்டே –

—————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading