வண் புருஷோத்தம்–வள்ளன்மை -புருஷர்களில் உத்தமன்
வியாபித்து தாங்கி ஸ்வாமியாக –
புருஷோத்தம வித்யை –15 -அவதார ரஹஸ்ய ஞானம் –4 -இரண்டாலும்
அதே பிறவியிலே பேறு -உபாசகனுக்கு
புருஷோத்தம தாயார் உடன் சேவை இங்கு
கிழக்கு நோக்கி சேவை
ராமனே இங்கு சேவை
புருஷோத்தம நாயகி தாயார்
சஞ்சீவ விக்ரஹ விமானம்
பாற் கடல் தீர்த்தம்
உதங்க முனிவர் ப்ரச்னம் உத்தரம் இல்லையே
துவாரகா தீசன் இங்கு பிள்ளைப் பெருமாள் ஐ யங்கார்
கம்ப மா கடல் பிரவேசம்
ப்ரஹ்மாதிகளுக்கும் உத்பாதகனுமாய் -இந்துவார் சடை பாசுரம் -4-2-9–
அவர்கள் தங்கள் தங்களுக்கு அனர்த்தத்தை சூழ்த்துக் கொள்ளும் அன்று
அவற்றைப் போக்கி ரஷிக்கும் ஸ்வ பாவனுமாய் -வாளையார் பாசுரம் -4-2-8-
அவர்கள் தாங்கள் அசுரர்கள் உடன் வரும் அன்றும்
அவர்களை ஜெயித்து-ஈசன் தன் பாசுரம்
ஜகத்தை ரஷிக்குமவன் –
வந்து எழுந்து அருளி இருக்கிற தேசம்
வண் புருஷோத்தம் என்று
அத்தேசத்தின் உடைய வைலஷண்யத்தை
அனுசந்தித்து அத்தைப் பேசி அனுபவிக்கிறார்
———————————————————
கம்பா மா கடல் அடைத்து இலங்கைக்கு மன் கதிர் முடி யவை பத்தும்
அம்பினால் அறுத்து அரசு அவன் தம்பிக்கு அளித்தவன் உறை கோயில்
செம்பலா நிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள் சூழ்
வம்புலாங்கமுகு ஓங்கிய நாங்கூர் வண் புருடோத்தமே—4-2-1-
கம்பா மா கடல் அடைத்து -இட்ட தடையைக் கரைந்து போம்படி-(அகம்பனன் -நடுக்கம் இல்லாதவன் )
அலை எறியா நின்றுள்ள பெரிய கடலை அணை செய்து-
இக் கரையிலே அரசு அளித்து பரத்வம் பீரிட்டு
மர்யாதா புருஷோத்தமன் —
மாதவி -குருக்கத்தி மரம்
சூதகம்-மாம் பழ மரம்
இதுவும் இப்படிப்பட்ட திவ்ய தேசம்
முதல் மூன்று பதிகங்கள் நெஞ்சுக்கு –
இலங்கைக்கு மன்-
அரண் உடைத்தான இலங்கைக்கு நான் நிர்வாஹகன் அல்லனோ
என்று அத்தாலே துர்மானத்தை பண்ணி இருக்கிற ராவணன் உடைய
(அஹங்காரம் தொலைக்கவே கடலில் அணை காட்டினார் )
கதிர் முடி யவை பத்தும் –
திக் விஜயம் பண்ணிச் சூடின
முடியை உடைத்தான
தலை பத்தையும்
(அவை என்று இவற்றைக் காட்ட )
அம்பினால் அறுத்து –
ப்ரஹ்மாஸ்த்ராதிகளுக்கும் கேளாத படி
வர பலத்தாலே பூண் கட்டி இருக்கிற தலைகளை
ஷத்ரியத்துவத்துக்கு ஏகாந்தமான அம்பாலே அழியச் செய்து
(சத்யமே -கொண்டு வென்றான் -)
அரசு அவன் தம்பிக்கு அளித்தவன் உறை கோயில்
ராஷசர் உடைய ஐஸ்வர்யத்தை
நம்முடையான் ஒருவன் கடவனாகப் பெற்றோம் இறே என்று
அந்த ஐஸ்வர்யத்தை அவன் தம்பியான விபீஷணனுக்கு
கொடுத்து அருளினவன் வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்
(கிருதக்ருத்யா ததா ராம விஜ்வர -ஜுரம் நீங்கப்பெற்றார் பெருமாள் )
செம்பலா நிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள் சூழ்
பலாக்கள் உடைய செவ்விய நிரை
செண்பகம்
குருக்கத்தி
தேமா
வாழைகள்
இவை சூழ்ந்து இருக்கும் ஆய்த்து புறச் சோலைகள் –
உள் சோலைகள் இருக்கும்படி
வம்புலாங்கமுகு ஓங்கிய நாங்கூர் வண்
உடைத்தான திரு நாங்கூரிலே
——————————————————-
ரண அரங்கத்தில் கீழே
அதில் இருந்து இதில் பண அரங்கம் -காளியன் உச்சியில் நட்டம் ஆடி
பல்லவம் திகழ் பூங்கடம்பு ஏறி அக் காளியன் பணம் அரங்கில்
ஒல்லை வந்து உறப் பாய்ந்து அரு நடம் செய்த உம்பர் கோன் உறை கோயில்
நல்ல வெந்தழல் மூன்று நால் வேதம் ஐ வேள்வியோடு ஆறங்கம்
வல்ல வந்தணர் மல்கிய நாங்கூர் வண் புருடோத்தமமே—4-2-2-
நல்ல-கர்ம அனுஷ்டான யோக்கியமான
பல்லவம் திகழ் பூங்கடம்பு ஏறி அக்காளியன் பணம் அரங்கில் ஒல்லை வந்து உறப் பாய்ந்து
காளியன் உடைய விஷத்தாலே
தக்தமாய்க் கிடந்து
திருவடிகளின் ஸ்பர்சத்தாலே
தளிரும் பூவுமாய் தழைத்தது ஆய்த்து –
தளிர் விளங்கா நிற்பதாய்
பூத்த கடம்பின் மேலே ஏறி காளியன் உடைய
பணங்கள் ஆகிற ரெங்கத்தின் மேலே
அவன் தப்பாதபடியாக நினைவு இன்றிக்கே
இருக்கச் செய்தே வந்து கடுகப் பாய்ந்து
அரு நடம் செய்த –
அந்த நிருத்தத்திலே
வன்மைக் கூத்து என்றும்
மென்மைக் கூத்து என்றும்
சில உண்டு -அவற்றை அடையப் பண்ணின
உம்பர் கோன் உறை கோயில்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் வந்து
வர்த்திக்கிற கோயில்
நல்ல வெந்தழல் மூன்று நால் வேதம் ஐ வேள்வியோடு ஆறங்கம் வல்ல
அக்னி த்ரயம்
நாலு வகைப் பட்ட தேவம்
பஞ்ச மகா யஞ்ஞம்
அங்கங்கள் ஆறும்
இவற்றை தாங்கள் வருந்தி அநுஷ்டித்தார்கள் ஆகை அன்றிக்கே
வந்தணர் மல்கிய நாங்கூர் வண் புருடோத்தமமே
பிறரையும் அனுஷ்டிப்பைக்குக்கு
ஷமரான ப்ராஹ்மணர் வர்த்திக்கிற தேசம்
ஆச்சார்யர் -தாங்களும் ஆசரித்து சிஷ்யர்களை ஆச்ரயிக்கச் செய்பவர் போல் ஆறு தொழில் அந்தணர்
————————————————————–
திர்யக்-காளியன் நிரசனம் கீழ்
தேவ ஜாதிக்கு கடவன் -கை ஓயும் படி செய்த கோவர்த்தன உத்தாரணம் இதில்
அண்டரானவர் வானவர் கோனுக்கு என்று அமைத்த சோறது எல்லாம்
உண்டு கோனிரை மேய்த்தவை காத்தவன் உகந்து இனிது உறை கோயில்
கொண்டலார் முழவில் குளிர் வார் பொழில் குல மயில் நடமாட
வண்டு தான் இசை பாடிடு நாங்கூர் வண் புருடோத்தமமே—4-2-3-
அண்டரானவர் வானவர் கோனுக்கு என்று அமைத்த சோறது எல்லாம்
பசுக்களுக்கும் நமக்கும் முகம் தோற்ற நின்று
வர்த்திக்கிற இவனுக்கு மேல்பட ஒரு தேவதை உண்டோ என்று
கண்டத்துக்கு அவ்வருகு அறியாதபடி
செவ்வியராய் இருக்கிற இடையர் ஆனவர்கள்
தேவ ஜாதிக்கு எல்லாம் நியாமகனாய்ப் போந்தவனான
இந்தரனுக்கு என்று
சமைத்த சோற்றை எல்லாம்
உண்டு –
(அஹம் கோவர்த்தனோஸ்மி -என்று )தான் அமுது செய்து
கோனிரை மேய்த்தவை காத்தவன்-
அனந்தரம் அவற்றின் உடைய
ரஷணமும் தனக்கே பரம் ஆகையாலே
அவற்றை மேய்த்து அவற்றின் உடைய ஆபத்தை
போக்கி ரஷிக்கிறவன்
(திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி எங்கள் செங்கனிவாய் ஆயர் கோவே )
உகந்து இனிது உறை கோயில்
இன்னமும் இப்படி ரஷிக்கைக்கு பாங்கான தேசம் என்று
அவன் உகந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்
கொண்டலார் முழவில் குளிர் வார் பொழில் குல மயில் நடமாட
மேகங்களின் உடைய மிக கோஷமான அதுவே வாத்தியமாக
ஸ்ரமஹரமாய் பரந்து இருந்து உள்ள
பொழிலின் நடுவே மயிலின் உடைய சங்கமானது ஆட
வண்டு தான் இசை பாடிடு நாங்கூர் வண் புருடோத்தமமே
அங்கே மது பானம் பண்ணுகிற வண்டுகள் ஆனவை
இவற்றின் இடைய காலுக்கு ஈடாக
இசை பாடா நின்றுள்ள திவ்ய தேசம்
————————————————————
பசி கோபத்தால் வந்தவனை கை ஓயும் படி செய்தது கீழ்
கை விஞ்சின கைம்மாவையும் எதிரிட்ட முருடரையும்
ஜென்ம சத்ருவான கம்சனையும் கை ஓயும் படி செய்தது-
கீழே அண்டர் அ காரம்
ஏழாம் பாசுரம் உ காரம்
பத்தாம் பாசுரம் மகாரம்
பருங்கை யானையின் கொம்பினைப் பறித்து அதன் பாகனைச் சாடி புக்கு
ஒருங்க மல்லரைக் கொன்று பின் கஞ்சனை உதைத்தவன் உறை கோயில்
கரும்பினூடு உயர் சாலிகள் விளை தரு கழனியில் மலி வாவி
மருங்கு எலாம் பொழில் ஓங்கிய நாங்கூர் வண் புருடோத்தமமே-4-2-4-
மலி வாவி-பெரிய கிணறுகள் மலிந்த -கழனியில்-வயலுக்குள் –
பருங்கை யானையின் கொம்பினைப் பறித்து –
பெரிய துதிக்கை உடைத்தான குவலயா பீடத்தின் உடைய
கொம்பை முறித்து
அதன் பாகனைச் சாடி புக்கு
அது முடிந்தாலும் நடத்த வல்ல சக்தியை உடைத்தான
பாகனை அழியச் செய்து
ஒருங்க மல்லரைக் கொன்று –
அநந்தரம் சாணூர முஷ்டிகாதி மல்ல வர்க்கத்தை
அழியச் செய்து
பின் கஞ்சனை உதைத்தவன் உறை கோயில்
உள்ளே போய் புக்கு
கம்சன் தலை மயிரைப் பிடித்து
முகம் கீழ் பட வலித்து
திருவடிகளாலே யுதைத்து முடித்தவன்
இன்னும் இப்படிப் பட்ட விரோதி அம்சத்தை
போக்குகைக்காக நித்ய வாசம் பண்ணுகிற தேசம்
கரும்பினூடு உயர் சாலிகள் விளை தரு கழனியில் மலி வாவி
மருங்கு எலாம் பொழில் ஓங்கிய நாங்கூர் வண் புருடோத்தமமே
கரும்பின் உள்ளே அத்தோடு ஒத்து இசலி வளரா நின்றுள்ள
செந்நெல்லை உடைத்தான வயலிலே மிக்க பொய்கைகளிலே
பரிசரம் எல்லாம் ஆகாச அவகாசம் வெளி யடையும் படி
ஓங்கின பொழிலாய் கிடக்கும் ஆய்த்து
—————————————————-
விரோதி நிரசன சீலத்தவம் அடி தொடங்கி சித்தம்
ஈஸ்வர அபிமானிகளில் தலைவன் ருத்ரன் – கை விஞ்சின துரபிமானி பாணாசுரன் கூடி எதிர்த்து வர
கெட்டு ஓடவும் -கை கழியவும் பண்ணி அருளிய விருத்தாந்தம் இதில்
சாடு போய் விழத் தாழ் நிமிர்த்து ஈசன் தன் படை யோடும் கிளையோடும்
ஓட வாணனை யாயிரம் தோள்களும் துணித்தவன் உறை கோயில்
ஆடு வான் கொடி யகல் விசும்பு அணைவிப் போய் பகலவன் ஒளி மறைக்கும்
மாட மாளிகை சூழ் தரு திரு நாங்கூர் வண் புருடோத்தமமே-4-2-5-
சாடு போய் விழத் தாழ் நிமிர்த்து –
முலை வரவு தாழ்த்த சமயத்திலே
சகடாசுரன் வந்து கிட்ட
அவன் முடியும்படியாக திருவடிகளை நிமிர்த்த
ஈசன் தன் படை யோடும் கிளையோடும் ஓட –
ஈஸ்வர அபிமானியான ருத்ரன்
முண்ட நீறன் -திருச்சந்த விருத்தம் -71-தொடக்கமான பரிகரத்தோடே வந்து எதிரிட்டு
பின்னை அவற்றை அடையைக் கொண்டு கெட்டோட
வாணனை யாயிரம் தோள்களும் துணித்தவன் உறை கோயில்
இதர சமாஸ்ரயணம் பண்ணின பாணன் உடைய ஆயிரம் தோளையும் தரித்தவன்
இன்னும் ஆஸ்ரித விரோதிகளை போக்குகைக்கு ஈடாக
வந்து வர்த்திக்கிற தேசம்
ஆடு வான் கொடி யகல் விசும்பு அணைவிப் போய் பகலவன் ஒளி மறைக்கும்
அசையா நின்று உள்ள பெரிய கொடிகள் ஆனவை
பரப்புடைய ஆகாசத்தை தழுவிக் கொண்டு போய்
ஆதித்ய கிரணங்களை மறையா நின்று உள்ள
மாட மாளிகை சூழ் தரு திரு நாங்கூர் வண் புருடோத்தமமே
மாடங்களாலும் மாளிகைகளாலும் சூழப் பட்ட தேசம்
—————————————————————–
ஈஸ்வர அபிமானி தேவதாந்த்ர ஸமாச்ரயணம் பண்ணின –
அவனுக்கும் ஜனகனான நான்முகன் அபிமானம் தொலைந்து
எல்லாரையும் அடிக்கீழ் இட்டு அளந்ததை அனுசந்தித்து
சகடாசுரன் -தாள் நிமிர்த்த படி -அத்தையும் அனுபவிக்கிறார் இதில்
அங்கையால் அடி மூன்று நீர் ஏற்று அயன் அலர் கொடு தொழுது ஏத்த
கங்கை போதரக் கால் நிமிர்த்து அருளிய கண்ணன் வந்து உறை கோயில்
கொங்கை கொங்கு அவை காட்ட வாய் குமுதங்கள் காட்ட மா பதுமங்கள்
மங்கைமார் முகம் காட்டிடு நாங்கூர் வண் புருடோத்தமமே-4-2-6
அங்கையால் அடி மூன்று நீர் ஏற்று அயன் அலர் கொடு தொழுது ஏத்த
கோ சகஸ்ர ப்ரதாதாரம் -யுத்த -21-7-என்கிறபடியே
கொடுத்து வளர்ந்த அழகிய கையைக் கொண்டு
மூவடியை நீர் ஏற்று
திருக் கையிலே நீர் விழுந்த அநந்தரம் வளர்ந்து அருளுகிற போது
ப்ரஹ்ம பதத்து அளவும் சென்று
அவன் கையிலே திருவடிகள் இருக்க
அவன் புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்கும்படி யாகவும்
கங்கை போதரக் கால் நிமிர்த்து அருளிய கண்ணன் வந்து உறை கோயில்
கங்கை புறப் படும் படியாகவும் திருவடிகளை நிமிர்த்து அருளின
சர்வேஸ்வரன் -(ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக )வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்
கொங்கை கொங்கு அவை காட்ட வாய் குமுதங்கள் காட்ட மா பதுமங்கள் மங்கைமார் முகம் காட்டிடு
அங்குத்தை கோங்குகளின் உடைய அரும்புகள் ஆனவை
அவ் ஊரில் ஸ்திரீகளின் உடைய ஸ்தனங்களைக் காட்ட
அங்கே அலர்ந்து நிற்கிற அரக்காம்பல் ஆனவை அவர்கள் உடைய அதரத்தைக் காட்ட
செவ்வி பெற அலர்ந்த செந்தாமரைப் பூக்கள் முகங்களைக் காட்டா நிற்கும் ஆய்த்து
இத்தால் சொல்லிற்று ஆய்த்து என் என்னில்
ஊருக்கும் வயலுக்கும் வாசி தெரிந்து பிரதிபத்தி
பண்ணுகை அரிதாய் இருக்கும் என்றபடி
(மங்கைக்கும் மரங்களுக்கும் வாசி இல்லையே -ஸூகர் போல் -அனைத்தும் பகவத் விபூதி )
நாங்கூர் வண் புருடோத்தமமே
இத்தால் இவருக்கு திவ்ய தேச மரங்களும் ஸ்திரீகளும் வாசி இல்லாமல் உத்தேச்யம் என்றது ஆய்த்து
————————————————————————-
திரிவிக்ரமன் அனுபவம் கீழ்
எங்கும் உளன் கண்ணன் -வியாபகத்வம்
உளைய-உகாரம் இதில்
உளைய ஒண் திறல் பொன் பெயரோன் தனது உரம் பிளந்து உதிரத்தை
யளையும் வெஞ்சினத் தரி பரி கீறிய அப்பன் வந்து உறை கோயில்
இளைய மங்கையர் இணை அடிச் சிலம்பினோடு எழில் கொள் பந்தடிப்போர் கை
வளையில் நின்றொலி மல்கிய வண் புருடோத்தமமே–4-2-7-
உளைய ஒண் திறல் பொன் பெயரோன் தனது உரம் பிளந்து
ஒரு நாளும் அச்சம் இருக்கும்படி
புதியது உண்டு அறியாதானாய்
மிக்க மிடுக்கை உடையானாய் இருக்கிற ஹிரண்யன் ஆனவன்
நெஞ்சு உளையும்படியாக
அவன் மார்வை இரு கூறாம் படியாக பிளந்து
உதிரத்தை யளையும் வெஞ்சினத் தரி-
அவன் முடிந்து போகச் செய்தேயும்
சிறுக்கன் பக்கல் உண்டான வாத்சல்யத்தாலே சீற்றம் மாறாதே
ருதிர வெள்ளத்தை வெண்ணெய் போலே அளந்த நர சிம்ஹம்
பரி கீறிய அப்பன் வந்து உறை கோயில்
எல்லாரும் ஒக்க அஞ்சும் படி வந்து தோற்றின கேசி வாயை
கிழித்து தன்னைத் தந்த
மகா உபகாரகன் வந்து வர்த்திக்கிற தேசம்
இளைய மங்கையர் இணை அடிச் சிலம்பினோடு எழில் கொள் பந்தடிப்போர் கை
அவ் ஊரில் பாலைகள் ஆன ஸ்திரீகள் ஆடுகிற காலில்
சிலம்பின் உடைய த்வநியோடே கூட
அழகிய பந்துக்களை அடியா நின்றுள்ளார் கைகளில்
வளையில் நின்றொலி மல்கிய வண் புருடோத்தமமே
ஆபரணங்கள் உடைய த்வநியானது மிக்கு
மற்றும் உண்டான நகர கோஷத்தை அபிபவித்துத்
தான் மேற்பட நிற்கும் ஆய்த்து
—————————————————
ஹிரண்யம் இரத்தத்தை அலைந்தது கீழ்
பரமசிவனுக்கு -தனது இரத்தத்தை கொடுத்து கபாலம் போக்கி அருளிய விருத்தாந்தம் இதில்
ஹர சாப நிவர்த்தகன் –
மேகம் போன்ற ஸ்வ பாவம் காட்டி நமக்கு உபகாரம் –
வாளையார் தடம் கண் உமை பங்கன் வன் சாபம் மற்றது நீங்க
மூளையார் சிரத்து ஐயம் முன் அளித்த எம் முகில் வண்ணன் உறை கோயில்
பாளை வான் கமுகு ஊடு உயர் தெங்கின் வன் பழம் விழ வெருவிப் போய்
வாளை பாய் தடம் சூழ் தரு நாங்கூர் வண் புருடோத்தமமே—4-2-8-
மூளை-எலும்பு –
உமா -அப்படி செய்யாதே -பட்டினி இருக்காதே ஹிமாவான் சொல்லி இந்த பெயர் –
வாளையார் தடம் கண் உமை பங்கன் வன் சாபம் மற்றது நீங்க
மிக்க ஒளியை உடைத்தாய்
பரந்து இருந்துள்ள கண்களை உடைய தேவிக்கு தன் உடம்பில்
ஒரு பார்ஸ்வத்தைக் கொடுத்துக் கொண்டு இருக்கிற
தேவன் உடைய வலிய சாபம் நீங்க
மூளையார் சிரத்து ஐயம் முன் அளித்த எம் முகில் வண்ணன் உறை கோயில்
லோக குருவுமாய்
பிதாவுமாய் இருக்கிற வனுடைய தலையை
ஒரு ஹேது இன்றிக்கே இருக்க அறுக்கையாலே
ஒன்றால் பரிகரிக்க அரிதாம் படியான பாதகமானது
அவனை விட்டுப் போம் படியாக
ரக்த ஸ்பர்சம் ஒன்றும் இன்றிக்கே
வெறும் அஸ்தியேயாய் இருக்கிற தலை ஓட்டிலே -மூளை ஆர் எலும்பானது பூரணமாய் இருக்கும் படியாக –
பிஷையை முன்பு அருளின
மகா உதாரனானவன் வர்த்திக்கிற தேசம்
பாளை வான் கமுகு ஊடு உயர் தெங்கின் வன் பழம் விழ
பாளையாய் உடைத்தாய்
ஆகாச அவகாசம் இடம் அடையும் படியாக ஓங்கின கமுகின் நடுவே
உண்டான தெங்குகளின் உடைய பெரிய பழங்கள்
ஆனவை
பொய்கைக்கும் தெங்குக்கும் உண்டான அண்மையாலே
பொய்கையிலே வந்து விழ
(கரண்ட மாடு பொய்கை -திருக்குறுங்குடி கோயிலுக்கு உள்ளே )
வெருவிப் போய் வாளை பாய் தடம் சூழ் தரு நாங்கூர் வண் புருடோத்தமமே
தன்னை உத்தேசித்து விழுகிறதாகக் கொண்டு
வாளையானது அவ்விடத்தை விட்டுத் தனக்கு அரண்
உடைத்தாய்
இருப்பதொரு பிரதேசத்தை அடையா நிற்கும் ஆய்த்து –
—————————————————————-
பேரனுக்கு உதவின விருத்தாந்தம்
நான்முகனை நாராயணன் படைத்தான் –சங்கரனைப் படைத்தான்
கிழக்கு நோக்கி சேவை
ராமனே இங்கு சேவை
புருஷோத்தம நாயகி தாயார்
சஞ்சீவ விக்ரஹ விமானம்
பாற் கடல் தீர்த்தம்
உதங்க முனிவர் ப்ரச்னம் உத்தரம் இல்லையே
துவாரகா தீசன் இங்கு பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
இந்துவார் சடை ஈசனைப் பயந்த நான்முகனைத் தன் எழிலாரும்
உந்தி மா மலர் மீ மிசைப் படைத்தவன் உகந்து இனிது உறை கோயில்
குந்தி வாழையின் கொழும் கனி நுகர்ந்து தன் குருளையைத் தழுவிப் போய்
மந்தி மாம்பணை மேல் வைகு நாங்கூர் வண் புருடோத்தமமே–4-2-9-
இந்துவார் சடை ஈசனைப் பயந்த நான்முகனைத் தன் எழிலாரும் உந்தி மா மலர் மீ மிசைப் படைத்தவன்
சந்த்ரனை உடைத்தான சடையை உடைய ருத்ரனை
சிருஷ்டித்த சதுர் முகனை
தன்னுடைய அழகு மிக்கு இருந்துள்ள திரு உந்தியிலே
பெரிய மலரின் மேல் சிருஷ்டித்தவன்
உகந்து இனிது உறை கோயில்
தன்னாலே ஸ்ருஷ்டனான
சதுர்முகனாலே ஸ்ருஷ்டமான ஜகத் என்று
அதன் உடைய ரஷணத்துக்கு உறுப்பாக
அவன் விரும்பி வர்த்திக்கிற தேசம்
குந்தி வாழையின் கொழும் கனி நுகர்ந்து தன் குருளையைத் தழுவிப் போய்
மந்தி மாம்பணை மேல் வைகு நாங்கூர் வண் புருடோத்தமமே
அங்கு உண்டான வாழைகள் ஆனவை தரையிலே தட்ட
பழுத்துக் கிடந்த படியாலே
அங்கு உண்டான மந்திகள் உண்டு -பெண் குரங்கு
இது அணித்து இறே என்னா
வாராக் கிட்டத் துடங்கும்
அது தான் பின்னையும் தனக்கு எட்டாதே ஓங்கி நிற்கையாலே-தாழ்ந்து இருக்கையாலே –
காலைக் குந்தி அதன் உடைய அழகிய பழங்களை புஜித்து
அநந்தரம்
தன் குட்டியை அணைத்துக் கொண்டு போய்
மாம்பழங்களை புஜிப்பதாக
உத்யோகித்த இது
அந்தக் குட்டியின் உடைய ஸ்பர்சத்தாலும்
புக்க த்ரவ்யம் சாத்மிக்கைகாகவும்
மாம்பணைகளிலே உறங்கா நின்று உள்ள தேசம் –
———————————————————————
மண்ணுளார்-ம காரம் இதில்
தத்வம் –வண் புருடோத்தமன்-
ஹிதம் -அண்ணல் சேவடிக் கீழ் அடைந்து-
புருஷார்த்தம் -அடைந்து உய்ந்தவன்-
ஸங்க்ரஹம் இதில்
மண்ணுளார் புகழ் வேதியர் நாங்கூர் வண் புருடோத்தமத்துள்
அண்ணல் சேவடிக் கீழ் அடைந்து உய்ந்தவன் ஆலிமன் அருள் மாரி
பண்ணுளார் தரப் பாடிய பாடல் இப்பத்தும் வல்லார் உலகில்
எண்ணிலாத பேரின்பம் உற்று இமையவரோடும் கூடுவரே–4-2-10-
சேவடி-ஸூ ந்தரமான திருவடி
அருள் மாரி இவர்
இன்ப மாரி -நம்மாழ்வார்
மண்ணுளார் புகழ் வேதியர் நாங்கூர் வண் புருடோத்தமத்துள்
மண்ணுள் ஆர் புகழ் வேதியர் என்னுதல்
மண்ணுளார் புகழ் வேதியர் என்னுதல்
பூமியிலே மிக்க புகழை உடையராய் இருக்கிற ப்ராஹ்ணர் என்னுதல்
பூமியில் உள்ளவரால் புகழப் பட்டவர் என்னுதல்
அண்ணல் சேவடிக் கீழ் அடைந்து உய்ந்தவன்
சர்வேஸ்வரன் திருவடிகளிலே கிட்டி
அசந்நேவ–ச பவதி -என்னும் நிலை தவிர்ந்து
உஜ்ஜீவிக்கப் பெற்றவர்
ஆலிமன் -திருவாலியில் உள்ளவருக்கு பிரதானரான ஆழ்வார்
அருள் மாரி-ஆஸ்ரிதருக்கு பிரசாதம் பண்ணும் இடத்தில்
மேகம் போலே உதாரரான ஆழ்வார்
பண்ணுளார் தரப் பாடிய பாடல் இப் பத்தும் வல்லார் உலகில்
பண்ணிலே ஆரும்படியாக பாடிய இப் பாடல் இப் பத்தையும் வல்லவர்கள் லோகத்திலே
எண்ணிலாத பேரின்பம் உற்று இமையவரோடும் கூடுவரே
நிரவதிகமான ஆனந்தத்தை உடையராய்
அநந்தரம்
நிரவதிக ப்ரீதி உக்தரான நித்ய ஸூரிகளோடு
ஒரு கோவையாக பெறுவர்
————–
ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.
கம்பத்தின் தோன்றல் அயன் அரனைத் தோற்றுவித்து
உம்பர் இடர் நீக்க அவர் எதிர் அம்பு கோக்க
வென்று அளிக்கும் வண் புருடோத்தமனைக் கூறு நீலன்
பன்னு தமிழ் நம் பேரணி -32-
பேரணி -ஆழ்வார் ஸ்ரீ ஸூக் திகளே நமக்கு சிறந்த ஆபரணம் –
———————————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply