ஸ்ரீ பெரிய திருமொழி-4-4- –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

திருவுக்கு அரங்கம் -போல் -ஸ்ரீ லஷ்மீ அரங்கம் -பள்ளி கொண்ட பெருமாள் என்றே பிரசித்தம்
அம்பலம் -கோயில்
தெற்றி -உயர்ந்த ஸ்தலம்
திரு -பெரிய பிராட்டிக்கு
அங்கு இரண்டு காவேரி கொள்ளிடம் நடுவில் திடல் உயர்ந்து
அதே போல் இங்கும் –
சூர்யன் இங்கே வந்து சாப விமோசனம்
செங்கமல வல்லித் தாயார்
கிழக்கு நோக்கி சயனம்
வேத விமானம்

மாற்றரசர் பிரவேசம்

ஆஸ்ரித விரோதி நிரசன சீலனாய்
சர்வ ரஷகனாய் இருக்கிற
சர்வேஸ்வரன்
திருத் தெற்றி அம்பலத்திலே
நம்முடைய விரோதியைப் போக்கி-( அஹங்காராதி காமாதி விரோதிகள் )
நம்மை அடிமை கொள்ளுகைக்காக
வந்து நின்றான் என்று ஹ்ருஷ்டர் ஆகிறார் –

திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண்மால் -என்று பாட்டு தோறும் அருளுகிறார்
கடாக்ஷம் பெற்ற ஹர்ஷம் –

———————————————-

மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும் மற்றவர் தம் காதலிமார் குழையும் தந்தை
கால் தளையும் உடன் கழல வந்து தோன்றிக் கத நாகம் காத்தளித்த கண்ணர் கண்டீர்
நூற்று இதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து இளம் கமுகின் முது பாளை பகுவாய் நண்டின்
சேற்றளையில் வெண் முத்தம் சிந்து நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண்மாலே–4-4-1-

நாகம்-நாக பூரி -நாங்கூர் -நாங்கை -ஸ்ரீ கஜேந்திர ரக்ஷணம் –
உடன் கழல –அது பிறந்ததும் -இது பின்பு -சடக்கென -பிறந்ததால் தானே இதுவும் –
எங்கள் ஓராமாநுசன் வந்து தோன்றிய அப்பொழுதே நாரணனுக்கு ஆயினரே போல் இங்கும்

மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும்
த்விஷத் அன்னம் ந போக்தவ்யம் த்விஷந்தம் நைவ போஜயேத்-என்று
பாண்டவர்களுக்கு சத்ருக்களான துர்யோ நாதிகளை
நீங்கள் என் சத்ருக்கள்
உங்கள் சோறும் எனக்கு உண்ணல் ஆகாது
உங்களுக்கு என்னை புஜிப்பிக்கலும் ஆகாது -என்று
அருளிச் செய்த படி

தனக்கு மாற்றாரான துர்யோ நாதிகள் உடைய
ரத்னங்களாலே சமைக்கப் பட்ட முடியும்
மிடுக்கும்
திக் விஜயம் பண்ணிப் பெற்ற மதிப்பும்

மற்றவர் தம் காதலிமார் குழையும் –
சந்தமல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப- என்னும்படி
அவர்கள் ஸ்திரீகள் உடைய மங்கள ஸூத்ரமும்

தந்தை கால் தளையும் உடன் கழல –
ஸ்ரீ வசுதேவர் காலில் தளையும்
இவை எல்லாம் போம் படியாக

வந்து தோன்றிக் –
வந்து அவதரித்து

கத நாகம் காத்தளித்த கண்ணர் கண்டீர் –
சீற்றத்தை உடைய ஆனையை ரஷித்த கண்ணர் கிடீர்

சீற்றம் ஆவது -முதலையாலே இடர் பட்ட அளவிலே
வந்து உதவிற்று இலன் என்று
எனக்கு நான் கடவேனாய் இடர் பட்டேனோ
ஒருவர் இல்லாதாப் போலே -இடர் படுவதே -என்று
(உனக்கு ஆட்பட்டும் இன்னம் உழல்வேனோ நம் ஆழ்வார் போல் )

நூற்று இதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து இளம் கமுகின் முது பாளை பகுவாய் நண்டின்
பள்ளத்திலே அநேகம் இதழ்கள் உடைத்தாய் இருந்துள்ள
தாமரையிலே நுழைந்த பகு வாய் நண்டின் உடைய

சேற்றளையில் வெண் முத்தம் சிந்து நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண்மாலே
சேற்றளையிலே-இளம் கமுகின் உடைய
முது பாளையானது
வெண் முத்தைச் சிந்தா நின்றுள்ள திரு நாங்கூர்

பகவத் சரணார விந்தங்களிலே புக்க ஜந்துவின் சம்பந்திகள் இடத்தில்
பஞ்ச விம்சதி வார்ஷிகரான ஸூரிகள் பிரசாதத்தை பண்ணுவர் -ஸ்வாபதேசம்

பகவத் சரணார விந்தங்களிலே புக்க ஜந்து-நண்டு தாமரைக்குள் போவது
ஜந்துவின் சம்பந்திகள் பிரசாதம் -அங்கே முத்து சிந்தா நின்றுள்ள
இளைய கமுகு -25 வயசு
மிகப் பழமையானவர் முது பாளை

அன்றிக்கே
பகுவாய் இளம் கமுகின் முது பாளை
பக்வமான வாயை உடைத்தாய் இருந்துள்ள இளம் கமுகின் உடைய முது பாளை -என்று
கமுகுக்கு விசேஷணமாய்
நண்டின் உடைய சேற்றளையிலே -என்னவுமாம்

இதுக்கும் முந்திய ஸ்வாபதேசம் –

அன்றிக்கே
பள்ளத்திலே உண்டாய் இருந்துள்ள நூற்று இதழ் கொள் அரவிந்தம் ஆனது
நுழைந்த பகுவாய் நண்டின் சேற்றளையிலே
தாமரை யானது நண்டின் உடைய சேற்றளையிலே நுழைந்து
அலர்ந்து தன் பரிமளத்தைக் கொடுக்க
இளம் கமுகின் முது பாளை வெண் முத்தத்தைச்
சிந்துகிற திரு நாங்கூர் -என்னவுமாம்

பகவத் சரணாரவிந்த திவ்ய பரிமளம் யாதொரு ஜந்துவின் இடத்தில் உண்டாகிறதோ
அங்கு ஸூரிகள் பிரசாதமும் குறைவற உண்டாம்-ஸ்வாபதேசம்

—————————————————————–

பூ பார நிரசன அர்த்தமாக அவதரித்து -கீழ்
இதில் பூதனா மோக்ஷம்

பொற்றொடித் தோள் மட மகள் தன் வடிவு கொண்ட பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கிப்
பெற்றெடுத்த தாய் போல் மடுப்ப யாரும் பேணா நஞ்சுண்டு உகந்த பிள்ளை கண்டீர்
நெற்றோடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல் இரும் சிறைய வண்டொலியும் நெடும் கணார் தம்
சிற்றடி மேல் சிலம்பொலியும் மிழற்று நாங்கூர் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-2-

மடமகள் வடிவு கொண்ட -என்னாமல் மடமகள் தன் வடிவு கொண்ட -அசாதாரணமான வேஷம்
நிறைந்த சூழல் -புஷ்பங்கள் நிறைந்த பர்யந்தங்களில்
மிழற்று-அவ்யக்தமாக கலந்து-

பொற்றொடித் தோள் -பொன்னாலே பண்ணப் பட்ட முன் கையில் வளையை உடைய
தோளை உடையளாய்

மட மகள் தன் வடிவு கொண்ட பொல்லாத வன் பேய்ச்சி
ஆத்ம குணோ பேதையாய் இருந்துள்ள யசோதை பிராட்டி
பிள்ளை மனசு வாடும் என்று
மாறாதே ஒப்பித்த ஒப்பனையை அநுகரித்த

வடிவு கொண்ட பொல்லாத வன் பேய்ச்சி -எவ் வடிவை எவ் வடிவுடையவள் அனுகரிக்கிறாள்
பொல்லாத வன் பேய்ச்சி தான்
அவள் பொற்றொடித் தோள் மட மகள்

கொங்கை வாங்கிப் பெற்றெடுத்த தாய் போல் மடுப்ப
தன் முலையைப் பிடித்து
பெற்றெடுத்த தாய் போல் கொடுக்க

யாரும் பேணா நஞ்சுண்டு உகந்த பிள்ளை கண்டீர்
ஒருத்தரும் விரும்பாத நஞ்சை
யுண்டு அறிவு குடி புகுராமையாலே
உகந்த பிள்ளை கண்டீர்
அறிவு நடையாடில் செய்யுமது அன்று இறே

நெற்றோடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல் இரும் சிறைய வண்டொலியும் நெடும் கணார் தம் சிற்றடிமேல் சிலம்பொலியும்
நெல்லின் மேல் தொடுத்த பூக்களை உடைத்தான குவளையானது
நிறைந்த சூழலிலே
அழகிய சிறகை உடைத்தான வண்டின் உடைய ஒலியும்
விலஷணமான கண்ணை உடையரான
ஸ்திரீகள் உடைய சிற்றடிமேல் சிலம்பு ஒலியும்

மிழற்று நாங்கூர் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே
இரண்டும்
எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாத நிரம்பா மென் சொற்கள் ஆகையாலே
சிலம்பு ஒலிக்கும் வண்டின் உடைய ஒலிக்கும் வாசி தெரிக்கப் போகிறது இல்லை-

————————————————————

நஞ்சுண்டது கீழ்
வெண்ணெய் உண்டது இதில்
இரண்டுக்கும் அவனுக்கு வாசி இல்லையே –

படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்குப் பசு வெண்ணெய் பதமாரப் பண்ணை முற்றும்
அடல் அடர்த்த வேற்கணார் தோக்கை பற்றி அலந்தலைமை செய்து உழலும் ஐயன் கண்டீர்
மடலெடுத்த நெடும் தெங்கின் பழங்கள் வீழ மாங்கனிகள் திரட்டு உருட்டா வரு நீர்ப் பொன்னி
திடலெடுத்து மலர் சுமந்து அங்கு இழியும் நாங்கூர் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே–4-4-3

பசு வெண்ணெய்-அப்போது கடைந்த வெண்ணெய்
தோக்கை– முந்தானை
அடல் அடர்த்த –யுத்த உந்முகமான
அலந்தலைமை –அலமாப்பை
பண்ணை முற்றும் –இடைச் சேரி எங்கும்
திடலெடுத்து-மேடுகளை எடுத்து விட்டு -தெற்றி அம்பலம் இதனாலே
மாடக்கோயில் -திரு வாட்டாறு போல் –
சிறு -விபரீத லஷனை

படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்குப்
இடைச்சிகள் சிறு குடில்களின் வாசலிலே
படலைத் திருக்கி வைத்துப் போனால்
படலை திறந்து நுழைந்து புக்கு
இவனுக்கு நுழைந்து புகுகை யாகை இறே குடிலின் உடைய பெருமை
(துன்னு படல் திறந்து புக்கு –பெரிய திரு மடல் )

பசு வெண்ணெய் பதமாரப் –
அன்று கடைந்த வெண்ணெய் செவ்வி அழியாமல்
அமுது செய்கைக்காக

பண்ணை முற்றும்
இடைச் சேரி எங்கும்

அடல் அடர்த்த வேற்கணார் தோக்கை பற்றி
யுத்த உந்முகமான
வேல் போன்ற கண்ணை உடையவர்கள்
ஓர் ஆளும் ஓர் நோக்கும் நேரான கண்ணை உடையவர்கள் உடைய
பண்ணை முற்றும் -திரள் அடங்கலும்

தோக்கை பற்றி -அவர்கள் கண்ணாலே யொடி எறிவர்கள்
முந்தானையைப் பற்றி

அலந்தலைமை செய்து உழலும் ஐயன் கண்டீர்
ஓர் ஊராக ஒருவர் கூறை எழுவர் உடுக்க பண்ணு மவன் கிடீர்

மடலெடுத்த நெடும் தெங்கின் பழங்கள் வீழ மாங்கனிகள் திரட்டு உருட்டா வரு நீர்ப் பொன்னி
ஓங்கின மடல்களை உடைத்தான நெடிய தெங்கின் உடைய பழம் மாவிலே விழ
மாம் பழங்கள் எல்லாம் உதிர
அவற்றை வாரித் திரள விட்டு
உருட்டிக் கொண்டு வருகிற நீரை உடைத்தான பொன்னி யானது

திடலெடுத்து மலர் சுமந்து அங்கு இழியும் நாங்கூர் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே—
திடர்களை எடுத்து பொகட்டு-திடர்களை -மேடுகளை –
பூக்களைப் பரப்பா நின்றுள்ள
திரு நாங்கூர்

—————————————————

வேல் கண்ணார் ஒரு தட்டு
நப்பின்னைப் பிராட்டி ஒரு தட்டு
விடை கொண்டது -காளைகளை -பக்கத்தில் உள்ளார் இடம் விடை கொன்று சென்றானாம் –

வாராரும் முலை மடவாள் பின்னைக்காகி வளை மருப்பில் கடுஞ்சினத்து வன் தாள் ஆர்ந்த
காரார் திண் விடை யடர்த்து வதுவை யாண்ட கருமுகில் போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர்
ஏராரும் மலர்ப் பொழில்கள் தழுவி எங்கும் எழில் மதியைக் கால் தொடர விளங்கு சோதிச்
சீராரு மணி மாடம் திகழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே–4-4-4-

வாராரும் முலை மடவாள் பின்னைக்காகி வளை மருப்பில் கடுஞ்சினத்து வன் தாள் ஆர்ந்த
பிராப்த யௌவநை யாகையாலே
வாராலே தாங்கப் பட்ட முலையை உடைய நப்பின்னை பிராட்டிகாக
வளைந்த கொம்புகளை உடைத்தாய்
கடிய சினத்தை உடையதாய்
வலிய தாள்களை உடைத்தாய்

காரார் திண் விடை யடர்த்து வதுவை யாண்ட கருமுகில் போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர்
கறுப்பு ஆர்ந்த
திண்ணியதான
ருஷபங்களை அடர்த்து
விவாஹ மங்களத்தை
நிர்வஹித்த கரு முகில் போல்
திரு நிறத்து என் கண்ணர்

ஏராரும் மலர்ப் பொழில்கள் தழுவி எங்கும் எழில் மதியைக் கால் தொடர விளங்கு சோதிச்
அழகார்ந்து இருந்துள்ள பூக்களை உடைத்தான
பொழில் எங்கும் தழுவி
பரிமளத்தை ஏறிட்டுக் கொண்டு
காற்று சந்த்ரனைக் கால் கட்ட –
கால் கட்ட -பரிமளத்தில் நச்சிப் போக மாட்டாமல் கிடக்கும்படி பண்ண -அத்தால்
விளங்கா நின்றுள்ள ஜ்யோதீஸ்ஸை உடைத்தாய் –

சீராரு மணி மாடம் திகழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே
சம்பத்து ஆர்ந்து
மாணிக்கங்களால் அலங்கரிக்கப் பட்ட
மாடங்கள் திகழுகிற திரு நாங்கூர்

———————————————————-

இடைக்குல தேவி கீழ்
யதுகுல ருக்மிணி பிராட்டி இதில்
இருவருடன் ஸம்ஸலேஷித்து -எல்லாம் இரண்டு
இரண்டு ஜென்மம் மாதாக்கள் பிதாக்கள் குலம் ஊரும் சொல் உட்பட இரண்டு -ஏலாப் பொய்கள் உரைப்பான் –

கலை இலங்கும் அகல் அல்குல் கமலப் பாவை கதிர் முத்த வெண்ணகையாள் கரும் கண் ஆய்ச்சி
முலை இலங்கும் ஒளி மணிப் பூண் வடமும் தேய்ப்ப மூவாத வரை நெடும் தோள் மூர்த்தி கண்டீர்
மலை இலங்கு நிரைச் சந்தி மாட வீதி யாடவரை மட மொழியார் முகத்திரண்டு
சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே—4-4-5-

கலை-மேகலை வத்ஸரம்
மட மொழி-இனிய அவ்யக்த மொழி –
மூவாதே-செவ்வி அழியாத –

கலை இலங்கும் அகல் அல்குல் –
கலைகள் இலங்கா நின்றுள்ள
அகன்ற
நிதம்ப பிரதேசத்தை யுடையளாய்

கமலப் பாவை கதிர் முத்த வெண்ணகையாள்
ஒளியை உடைய முத்துப் போலே
வெளுத்த தந்த பங்க்தியை உடைய பெரிய பிராட்டியார்-
நகை -தந்த பங்க்தி –

கரும் கண் ஆய்ச்சி –
அவன் திருமேனியைப் பார்த்த படியே இருக்கையாலே
திருமேனியிலே கறுப்பு கண்ணிலே ஊறின
நப்பின்னைப் பிராட்டி
(யமுனை -கிருஷ்ண துளசி பிராட்டி திருக்கண் -இவனைப்பார்த்து மூன்றும் –
அவற்றால் இவனும் கறுத்து இருக்கிறான் -தேசிகன் )

முலை இலங்கும் ஒளி மணிப் பூண் வடமும் தேய்ப்ப மூவாத வரை நெடும் தோள் மூர்த்தி கண்டீர்
இருவருடைய முலைகளிலும் விளங்கா நின்றுள்ள
ஒளியை உடைத்தான
மாணிக்கங்களாலே சமைக்கப் பட்ட ஹாரமானதுவும்
திரிசரம் பஞ்ச சரமான முத்து வடமும் உரச
அத்தால்
மூவாதே இருக்கிற மலை போன்ற
நெடும் தோள் மூர்த்தி கண்டீர்

நீளா குலேன சத்ருசீ தவ ருக்மிணி ச -சுந்தர பாஹுஸ்தவம்-107-ருக்மிணி நப்பின்னை இருவர் உடன்
சம்ஸ்லேஷித படியை அனுசந்திக்கிறார்

மூவாதே –
முற்றிப் போகாமல் இளகிப் பதித்த படி

மலை இலங்கு நிரைச் சந்தி மாட வீதி யாடவரை மட மொழியார் முகத்திரண்டு சிலை
மலை போலே இலங்கா நின்ற
நிரையாய் ஒன்றோடு ஓன்று சந்தித்து
செறிந்து இருந்துள்ள மாடங்களை உடைத்தாய் இருந்துள்ள வீதியிலே
மட மொழியார் முகத்திலே நின்ற சிலைகள்-புருவங்கள் –

சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே
ஆடவரை -காந்தரை
விலங்கி
மனஸ்ஸை சிறை இட்டு வைக்கிற திரு நாங்கூர் என்னவுமாம்

சிலை விலங்கி -என்றது -புருவம் வளைகை

—————————————————————-

சீதாபிராட்டி ரஷித்த அனுபவம் இதில் –

தான் போலும் என்று எழுந்தான் தரணியாளன் அது கண்டு தரித்து இருப்பான் அரக்கர் தங்கள்
கோன் போலும் என்று எழுந்தான் குன்றம் அன்ன இருபது தோளுடன் துணித்த ஒருவன் கண்டீர்
மான் போலும் மென்னோக்கில் செய்ய வாயார் மரகதம் போலே மடக்கிளியைக் கை மேல் கொண்டு
தேன் போலும் மென் மழலை பயிற்று நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-6-

தரணியாளன்-பூ பதி –

தான் போலும் என்று எழுந்தான் தரணியாளன் அது கண்டு தரித்து இருப்பான் அரக்கர் தங்கள்
ஆப்பான் திருவழுந்தூர் அரையரும்
மற்றும் உள்ள முதலிகளுமாக
இப் பாட்டில் சொல்லுகிறது என் -என்று பட்டருக்கு விண்ணப்பம் செய்ய
ஒரு கால் இயலைக் கேளா
ராவணன் வார்த்தை காண்-என்று அருளிச் செய்தார்

(ராஜா தான் போலே வந்தான் -ராஜா இல்லையா -சங்கை வருமே
எம்பெருமான் பக்கல் தாழ்மை
ராவணன் பக்கம் பெருமையும்
ஸ்வரத்தால் -தான் பதத்தாலும் தாழ்ச்சி தோன்றும்
கோன் பதத்தால் உத்கர்ஷம் தோன்றும்
இருக்க எப்படி பொருந்தும்
துணித்த ஒருவன் -என்று இருப்பதால் இப்படியே பொறுத்த வேண்டும்
துர்மானத்தால் சொன்ன வார்த்தை )

தான் போலும் -ஷத்ரியன் போலே எதிரி என்று வந்தான்
அது கண்டு தரித்து இருப்பான்
ராஷசராஜானாம் -என்று கிளர்ந்து எழுந்த ராவணன் உடைய

கோன் போலும் என்று எழுந்தான் குன்றம் அன்ன இருபது தோளுடன் துணித்த ஒருவன் கண்டீர்
மலை போல் இருக்கிற இருபது தோளையும்
துணித்த தனி வீரன் கிடீர்

மான் போலும் மென்னோக்கில் செய்ய வாயார் மரகதம் போலே மடக்கிளியைக் கை மேல் கொண்டு
ஒரு கிளியை ஒரு கிளி கற்பித்தால் போலே இருக்கிறது
கற்ற கிளியினுடைய பேச்சில் காட்டில்
கற்ப்பிக்கிறவள பேச்சு இனிது என்கை-

தேன் போலும் மென் மழலை பயிற்று நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே
மான் போலே மிருதுவான நோக்கையும்
சிவந்த அதரத்தையும் உடையவர்கள்
மரகதம் போன்று மடப்பத்தை யுடைத்தான கிளியை
கை மேல் கொண்டு
தேன் போலே இனியதாய்
மிருதுவான பேச்சை
பயிற்றுகிற திரு நாங்கூர்

————————————————-

பிராட்டியையும் மறைத்து வாமனனாய் -கிருஷ்ணாஜினம் -வைத்து -ப்ரஹ்மாச்சார்யம் -பிரதம ஆஸ்ரம -அனுபவம் –

பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழப் பொல்லாத குறள் உருவாய் பொருந்தா வாணன்
மங்கலம் சேர் மறை வேள்வி யதனுள் புக்கு மண்ணகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர்
கொங்கு அலர்ந்த மலர்க் குழலார் கொங்கை தோய்ந்த குங்குமத்தின் குழம்பு அளைந்த கோலம் தன்னால்
செம் கலங்கல் வெண் மணல் மேல் தவழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே-4-4-7-

தோலும் -மான் தோலும்
பொல்லா -ஸூந்தர -விபரீத லஷணை-

பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழப் –
மிக்கு இலங்கா நின்றுள்ள
ஒளி விடா நின்ற திரு யஞ்ஞோ  பவீதமும்
கிருஷ்ணா ஜிநமும் தாழ

பொல்லாத குறள் உருவாய் –
அழகிது என்றால் நாட்டார் கண் எச்சில் படுவர்  என்று
விபரீத லஷணையால் சொல்லிற்று  ஆகவுமாம்

பொருந்தா வாணன்-
ஆஸூரம் பாவம் ஆஸ்ரித என்று
ஹிருதயம் தண்ணியதாகை அன்றிக்கே
ஜன்மமே தண்ணிதானவன்

மங்கலம் சேர் மறை வேள்வி யதனுள் புக்கு
சர்வேஸ்வரன் செல்லும்படியான யாகம் இறே
மங்கலங்கள் சேரத் தட்டு இல்லை இறே

மண்ணகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர்
மகா பலி உடையனாய்
தான் குறைவாளனாய் இரந்த
என்ன பிள்ளை தான்

கொங்கு அலர்ந்த மலர்க் குழலார் கொங்கை தோய்ந்த குங்குமத்தின் குழம்பு அளைந்த கோலம் தன்னால்
பரிமளம் மாறாதே இருந்துள்ள
மலரை உடைத்தான குழலை உடைய ஸ்திரீகள் உடைய
கொங்கை தோய்ந்த கும்குமத்தின் உடைய
குழம்பை அளைந்த
கோலம் தன்னாலே

செம் கலங்கல் வெண் மணல் மேல் தவழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே–
செங்கலங்கள்
வெண் மணலிலே தவழும் நாங்கூர்
தாரை ஸ்க்கலித்து நடந்தால் போலே ச ப்ரசக் கலந்தீ-என்னும்படியே
(தேற்றமாய் வந்து திற -தாரையைப் போல் வராமல் )

————————————————–

மண் அளந்தது கீழ்
மண் கிடந்தது இங்கு
ஸ்ரீ தேவி கீழ்
பூமா தேவி இங்கு

சிலம்பினிடைச் சிறு பரல் போல் பெரிய மேரு திருக் குளம்பில் கண கணப்பத் திருவாகாரம்
குலுங்க நில மடந்தை தனை இடந்து  புல்கிக் கோட்டிடை வைத்து அருளிய என் கோமான் கண்டீர்
இலங்கிய நான் மறையனைத்தும் அங்கம் ஆறும் ஏழு இசையும் கேள்விகளும் எண் திக்கும் எங்கும்
சிலம்பிய நல் பெரும்  செல்வம் திகழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-8

சிலம்பினிடைச் சிறு பரல் போல் பெரிய மேரு திருக் குளம்பில் கண கணப்பத்
சிலம்பினிடை இட்ட சிறு பரல் போலே
பெரிய மகா மேருவானது
திருக் குளம்பிலே-மேரு கணா கணாயதே-என்னும்படியே கண கணப்ப
(பெரும் கேழலார்
மஹா வராஹ ஸ்புட பத்ம விலோசன )

திருவாகாரம் குலுங்க -அகலகில்லேன் இறையும் என்று பிராட்டி
இருக்கும் இருப்பு குலுங்கும்படிக்கு ஈடாக

நில மடந்தை தனை இடந்து  புல்கிக் கோட்டிடை வைத்து அருளிய என் கோமான் கண்டீர்
பூமியை இடந்து அதுக்கு அபிமானியான
ஸ்ரீ பூமிப் பிராட்டியை புல்கி
கோட்டிடையிலே நீல மணி அழுத்தினால் போலே
வைத்த செயலாலே என்னை அடிமை கொண்டவன் கிடீர்

இலங்கிய நான் மறையனைத்தும் அங்கம் ஆறும் ஏழு இசையும் கேள்விகளும் எண் திக்கும் எங்கும்
பிரமாணிய பலத்தாலே ஒளி விடா நின்றுள்ள வேதங்கள் நாலும்
ஆறு அங்கமும்
சப்த ஸ்வரங்களும்
இதிஹாச புராணங்களும்
எட்டுத் திக்குகளும்

சிலம்பிய நல் பெரும்  செல்வம் திகழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே
சப்திக்கக் கடவதாய்
நன்றாய்ப்
பெரிய செல்வம்
(ப்ராஹ்மணானாம் தனம் வேதா -அந்தணர் மாடு )

—————————————————————

ஏழு உலகும் தாள் வரையும் எங்குமூடி எண் திசையும் மண்டலமும் மண்டி அண்டம்
மோழை எழுந்து ஆழி மிகு மூழி வெள்ளம் முன் அகட்டில் ஒடுக்கிய எம் மூர்த்தி கண்டீர்
ஊழி தொறும் ஊழி தொறும் உயர்ந்த செல்வத்து ஓங்கிய நான்மறை யனைத்தும் தாங்கு நாவர்
சேழுயர்ந்த மணி மாடம்  திகழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து எண் செங்கண் மாலே -4-4-9-

அகட்டில் ஒடுக்கிய- திரு உதரத்தில் அடக்கிய
சேழுயர்ந்த-மிகவும் உயர்ந்த –

ஏழு உலகும் தாள்வரையும் எங்குமூடி எண் திசையும் மண்டலமும்   மண்டி அண்டம்
சப்த த்வீபங்களும்
தாள்களை உடைத்தான மலைகளும் எங்கும் ஏறி
எட்டுத் திக்குகளும்
மண்டலமும் அண்டமும் மிக்கு

மோழை எழுந்து ஆழி மிகு மூழி வெள்ளம் முன் அகட்டில் ஒடுக்கிய எம் மூர்த்தி கண்டீர்
மோழை எழுந்து
ஆழியானது மிக்கு இருந்துள்ள
ஊழி வெள்ளத்தைப் பண்டு
திருமேனியிலே ஏக தேசத்தில்
அடக்கின சர்வேஸ்வரன் கிடீர்

ஊழி தொறும் ஊழி தொறும் உயர்ந்த செல்வத்து ஓங்கிய நான்மறை யனைத்தும் தாங்கு நாவர்
காலம் செல்லச் செல்ல
குறைந்து காட்டாதே
கலௌ க்ருத யுகம் தஸ்ய (ஸ்ரீ விஷ்ணு தர்மம் -இருதயத்தில் அவனை வைத்தால்
கிருத யுகமாக இருந்தாலும் கலி யுகம் இருதயத்தில் அவனை வைக்காமல் இருந்தால் )-என்னும்படியே
உயர்ந்த செல்வத்தை உடையராய்

சேழுயர்ந்த மணி மாடம்  திகழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து எண் செங்கண் மாலே
ஓங்கி இருந்துள்ள நான்மறையை நாவாலே
தாங்க வல்ல பிராமணரை உடைத்தாய்
ஆகாசத்திலே தட்ட உயர்ந்த மணி மாடங்களை உடைத்தான
திரு நாங்கூர்

சூர்யன் இங்கே வந்து சாப விமோசனம்
செங்கமல வல்லித் தாயார்
கிழக்கு நோக்கி சயனம்
வேத விமானம்

————————————————————-

சீரணிந்த மணி மாடம் திகழு திரு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து எண் செங்கண் மாலைக்
கூரணிந்த வேல் வலவன் ஆலி நாடன்  கொடி மாட மங்கையர் கோன் குறையல் ஆளி
பாரணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
சீரணிந்து உலகத்து மன்னராகிச் சேண்  விசும்பில் வானவராய்த் திகழ்வர் தாமே  –4-4-10-

சீரணிந்த மணி மாடம் திகழு திரு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து எண் செங்கண் மாலைக்
ஐஸ்வர்யம் அணிந்த மணிமயமான மாடத்தை
உடைய திரு நாங்கூர்த்
திருத் தெற்றி அம்பலத்தில் நிற்கிற
புண்டரீகாஷனான சர்வேஸ்வரனை

கூரணிந்த வேல் வலவன் ஆலி நாடன்  கொடி மாட மங்கையர் கோன் குறையல் ஆளி
வேலில் கூர்மை போலே இருக்கும் கவி பாட்டில் கூர்மை -என்கை
திரு வாலிக்கு நிர்வாஹகர் ஆனவர்
கொடிகளை உடைத்தான
மாடங்களை உடைய திரு மங்கைக்கு ராஜா வானவர்
குறையல் ஆளி

பாரணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
இட்டளத்தில் வெள்ளம் போலே-இட்டளம் -நெருங்கின இடம்
பூமி எல்லாம் நெருங்கின
புகழை உடைய ஆழ்வார் அருளிச் செய்த

பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார் –
கிருஷ்ண அவதாரம் அபதானங்கள் ஐந்தும்
அது கலசாத ஐந்தும்

சீரணிந்து உலகத்து மன்னராகிச் சேண்  விசும்பில் வானவராய்த் திகழ்வர் தாமே
ஐஹிகத்தில் ஐஸ்வர்யமும்
குறைவற புஜித்து
பரம பதத்தில் நித்ய ஸூரிகளோடு
ஒரு கோவையாக விளங்குவர்

———–

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

மாற்றில் இடர் மாற்றி அடியர்க்கு மாகம் மா நிலம்
போற்ற அளித்துத் தடையாவும் பற்றி ஆட்கொள்
வான் தெற்றி யம்பலத்தான் என்றுரை மங்கையர் கோன்
தான் போக்கும் நம் பவத்தூறு -34-

மாகம் -பரமாகாசம் / மா நிலம் -வையம் //இட ஆகுபெயர் -அங்குள்ளாரை சொன்னபடி -/

————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading