திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-9-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

பரமபதத்தில் சென்று திரு வாசலில்
முதலிகளால் உபசரிக்கப் பட்டவர்களாக
அங்குள்ள நித்ய சூரிகள்
பரம பதத்தில் வருவதே –
இது என்ன புண்ணியத்தின் பலம் –
என்று ஈடுபட்டார்கள் -என்கிறார் –

—————————————————————————————————————————————–

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே

—————————————————————————————————————————————-

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர் –
பரம பதத்தை சென்று கிட்டின அளவில்
திரு வாசல் காக்கும் முனிவர்கள் –

வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று –
ஸ்ரீ வைகுண்ட நாதன் உடையார் எங்கள் உடைய ஸ்வாமிகள்-
எங்கள் பதத்தினைக் கைக் கொள்ள வேண்டும் -என்று ஆயிற்று அவர்கள் பாசுரம் –
பயிலும் திரு உடையீர் எவரேலும் அவர் எம்மை ஆளும் பரமர் -2-7-1- என்ற இவரைப் போலே ஆயிற்று -அங்கு உள்ளாறும் இருப்பது -என்றது
திருவாசலில் முதலிகள் எதிரே வந்து உபசரித்து கையைக் கொடுத்து
கொண்டு புக்கு தங்கள் கைப் புடைகளிலே இருத்தி
திருக் கையில் பிரம்பையும் கொடுப்பார்கள் -ஆயிற்று -என்றபடி –
சென்று புகுகிற வர்களுக்கும் அடிமை வேலையே உத்தேச்யம்
அங்கு இருக்கிற வர்களுக்கும் அடிமை வேலை செய்தலே தொழில் ஆகையாலே
இவர்கள் கொள்ளுவதும் அது –
புகுத -என்றது -புகுதுக -என்றபடி –

வைகுந்தத்து அமரரும் முனிவரும் –
ஸ்ரீ பரத ஆழ்வானையும் இளைய பெருமாளையும் போலே
குணநிஷ்டரும் கைங்கர்ய நிஷ்டரும் –

வியந்தனர்-
ஈடுபட்டார்கள் –

வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே –
கடலிலே உள்ள நீர் மலையிலே ஏறக் கோத்தால் போன்று
இப்பிறவியிலே உழன்று திரிகின்றவர்கள்
பரம பதத்தில் புகுரும்படிக்கு ஈடாக
புண்ணியத்தை பண்ணுவதே -என்று ஆழம் கால் பட்டார்கள் –

திருவாசல் முதலிகளால்
பரமபதம் புகுவது தங்கள் பாக்கியம்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே
தலை விதியே சாமான்ய அர்த்தம்
விதி பாக்கியம்
அதுக்கும்
அது நமது விதி வகையே
பாக்ய அனுகுணமாக
விதி வகை புகுந்தனர்
மண்ணவர் ஆகி வைத்து விண்ணவர் ஆவதே
வைகுந்தம் புகுதலும்
கோபுர வாசல் தாண்டி உள்ளே புக
ஸ்ரீ வைகுண்ட நாதன் அடியார்கள் எங்களுக்கு நாதன்
பரமபதம் அவர்களுக்கு ஒப்படைத்து
எங்கள் பதம் நீங்கள் கை கொள்ள வேண்டும்
பயிலும் திரு உடையார் எவரேலும் என்னை ஆளும் பரமரே
ஆழ்வார் போலே
இவரை தங்களக்கு சுவாமி
கை கொடுத்து கொண்டு புக்கு
திருக் கையிலே பிரம்பு அதிகார ஸ்தானம் லத்தி
கைங்கர்யமே கொடுத்து கொள்ளுகிறார்கள்
இருவருக்கும் அதுஎ பிரதானம்
புகுதலும் -எமர் இடம் புகுதுக என்னலும்
அமரரும் முனிவரும்
குணா நிஷ்டர் கைங்கர்ய நிஷ்டர்
பரத ஆழ்வான் நினைத்து பிரிந்து இருந்து குண நிஷ்டர் முனிவர்
இளைய பெருமாள் கூடவே இருந்து கைங்கர்யம்
இருவரும் வியந்தனர்
பிணங்கி வானவர் பிதற்றும்
துஷ்யந்தி ரமயத
இரு வகை  கோஷ்டி உண்டே
கதை பேசி பேசும் கேட்கும் சந்தோஷம் இருவகை உண்டே

வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே
கடலில் நீர் சக்யத்தில் ஏறுவது போலே
பாக்கியம் நாம் செய்து இருக்கிறோம்
நீர் தானே மேலே போகாதே
மழை தான் கீழே பொழியும்
சம்சாரிகள் பரமபதம் புகுவது
இது என்ன பாக்ய பலம்
மண்ணவர் விதியே -மண்ணவர் பாக்கியம்
அதை விட உசந்தது தங்கள் பாக்கியம்

நாம் பாக்கியம் செய்தோமே என்று வியந்தார்கள்
விதி -பாக்கியம் அமர கோஷம்
ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதே
நாங்கள் அங்கே புக பாரித்து இருக்க
நீங்கள் இங்கே புகுவதே
இச்சுவை தவிர -அச்சுவை வேண்டேன்
என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே
நாங்கள் அங்கே போக நினைத்து பறித்து இருக்க
நீங்கள் இங்கே வந்தது என்கல்பரம பாக்கியம் கொண்டாடி
காஞ்சி சுவாமி காட்டி அருளி
6000 படியில் இந்த அர்த்தம் காட்டி

சப்தாதி விஷயங்களில் பழகி போந்தவர்கள் இங்கே வருவதே
புண்ணிய பலம்
நாம் என்ன பாக்கியம் பண்ணினோமே என்று விஸ்மயப் பட்டார்கள் 6000 படி

———————————————————————————————————————————————

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading