திரு மோகூரிலே நின்று அருளினவனான
ஆண் பிள்ளையான
சக்கரவர்த்தி திருமகனை அடைய
நம்முடைய துக்கம் எல்லாம் போம் –
என்கிறார்
————————————————————————————————————————————————-
துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின்
உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே
——————————————————————————————————————————–
துயர் கெடும் கடிது –
துயர் கடிது கெடும்
விரும்பாது இருக்கச் செய்தே
நம்முடைய துக்கங்கள் தம்மடையே
சடக்கென போகும் –
அடைந்து வந்து –
வந்து அடைந்து
வந்து கிட்டி –
அடியவர் தொழுமின் –
வழித் துணை இல்லை -என்று வருந்துகிற நீங்கள்
அடைந்து வணங்குமின் –
உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்
உயர்ந்த சோலைகளாலும்
அழகிய தடாகங்களாலும்
அலங்கரிக்கப் பட்ட
ஒளியை உடைய
திரு மோகூர்
சோலையைக் கண்டால் -அவன் வடிவினை நினைப்பூட்டுவதாக இருக்கும்
தடாகங்களைக் கண்டால் சிரமத்தை போக்குகின்ற அவன் வடிவினை நினைப்பூட்டுவதாக இருக்கும்
வாசத் தடம் போல் வருவான் அன்றோ அவன் தானே –
பெயர்கள் ஆயிரம் உடைய-
சர்வேஸ்வரன் அளித்துப் படைத்த
பெயர்களோபாதி போரும் ஆயிற்று
இவர்கள் பிறர்களை துன்புறுத்தி பெற்ற பெயர்கள்
யஞ்ஞ சத்ரு ப்ரஹ்ம சத்ரு -என்பன போன்றவனவே அன்றோ இவர்கள் பெயர்கள் –
வல்லரக்கர் புக்கு அழுந்த –
பெரு மிடுக்கரான அசுரர்கள் புக்கு
அழுந்தும்படி –
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே –
சக்கரவர்த்தி பெற்ற
நீல மணி போலே இருக்கிற
தடாகத்தை
அடைந்து வந்து அடியவர் தொழுமின்
பதி தரு மரு வாபீ வாரிவத் சர்வ போக்கியம் -பிரமாணம்
மரு பூமி -நீரும் நிழலும் இல்லாத இடம்
வழியில் உள்ள மரம் என்ன
மரு பூமியில் உள்ள தண்ணீர் என்ன
இவற்றைப் போன்று எல்லாருக்கும் இனியனை -என்கிறபடியே
அடியவர்கட்கு பாதுகாவலனாய்
சம்ஹாரிணா ராகவ சாகரேன ப்ரச்சாத்யமானா தாச பவத்பி
யுக்தஸ்து அயம் தாரயிதம் சமேத்ய காகுஸ்த பாதாளமுகே பதான் ச -யுத்த -14-20-
இராமபிரான் ஆகிற வடவாமுகாக்னியில் விழுகின்றவனான
அந்த இராவணன் -என்கிறபடியே
விரும்பாத பகைவர்க்கு அழிவினைத் தரத் தக்கவனாய்
அன்றோ இருப்பது
மயா த்வம் சம் அநுஜ்ஞாத கச்ச லோகன் அநுத்தமான்-ஆரண்ய -68-30-
என்னால் நீவிர் அனுமதிக்கப் பட்டவராய் மேலான உலகத்தை அடைவீராக
என்கிறபடியே -பறவையையும் -ஜடாயுவையும் –
வழி நடத்துமவன் அன்றோ –
ஆண் பிள்ளை தசரதாத் மஜனை ஆஸ்ரயிக்க துக்கங்கள் போகும்
துயர் கடித்து கெடும்
அபெஷியாதெ இருக்க தன்ன்னடையெ சடக்கு என போகும்
வந்து கிட்டி அடியவர்களே நீங்கள் ஆஸ்ரயிக்க வாரும்
சோலைகள் தடாகங்கள் உள்ள திவ்ய தேசம்
சோலை வடிவுக்கு ச்மாகரமாக
தடாகம் ஸ்ரமஹரமான
ஒளி
உயர் கொள் சோலை கம்பீரம்
வாசத் தடம் போல்
மரகத மணித் தடாகம்
பெயர்கள் ஆயிரம் உடைய மரகத மணித் தடாகம்
வியாக்யானம் பெயர்கள் ஆயிரம் உடைய வல் அரக்கர்
பர ஹிம்சை பண்ணி சம்பாதித்த பெயர்கள்
ராவ இதி ராவணன்
பெயர் வைக்கவே துயரம் விளைவிக்க
துஷ் சப்தம் -வந்தாலே அரக்கர்
ஈஸ்வரன் ரஷத்து படைத்த பெயர்கள்
பிரம சத்ரு யஞ்ஞா சத்ரு போலே இவர்கள் பெயர்கள்
வல் -பெரும் மிடுக்கர்
சக்கரவர்த்தி பெற்ற நீல மணி பெருமாள்
தடாகம் -தீர்த்தம் ஆட பருக –
வல் அரக்கர் கழுத்தில் கல்லை கட்டி விழ –
அழுந்த –
பதி தரு மறு வாபி –பதி தரு போகிற வழியில் உள்ள மரம் இளைப்பாற –
மறு வாபி மருகாந்தாரம் பாலை வனத்தில் கிணறு போலே
கிணறில் ஜலம் சர்வ போக்கியம் அனைவருக்கும்
பிரகஸ்தன் இடம் விபீஷணன் சொல்லிய வார்த்தை
காகுஸ்த -உகவாதார்களுக்கு -பாதாள -பாதகம்
அடியவர் வந்து தொழுமின்
வழி காட்டிய பெருமாள் –
நல்லவர்களுக்கு -கச்ய லோகாம் ஜடாயு மோஷம்
என்னால் அனுமதிக்கப் பட்டாய் அநுத்தமான் லோகன் கச்ச –
பரம பதம் -மேல் பட்ட பதம் இல்லாததாய் இருக்குமே
அவனே சரண் -மற்று இலம்
மனுஷ்ய பாவத்தில் மோஷ பிரத்வம் அருளியது
பரத்வம் வெளிப்பட்டது
சத்தியத்தால் லோகங்கள் வென்றவன்
சத்யம் தவிர பேசாமல் இருந்தால் சொல்வது எல்லாம் சத்யம் ஆகும்
நடுவில் திரு வீதிப் பிள்ளை -கொண்டாடி நம்பிள்ளை அருளிச் செய்த அர்த்தம்
———————————————————————————————————————————————-
Leave a Reply