திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-1-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

மூன்று உலகங்களையும் காப்பாற்றுகின்ற இறைவன்
எழுந்து அருளி இருக்கின்ற திரு மோகூரை
நம்முடைய எல்லா துக்கங்களும்  கெடச் சென்று அடைவோம்
என்கிறார் –

—————————————————————————————————————————–

அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி
நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட
வென்றி இம் மூ வுலகளித்து உழல்வான் திரு மோகூர்
நன்று நாம் இனி நணுகுதும் நமது இடர் கெடவே

———————————————————————————————————————————-

அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி
பிரயோஜநாந்த பரர்களும்
அநந்ய பிரயோஜனர் கூறுகின்ற பாசுரத்தை சொல்லுவார்கள்
ஆயிற்று அவன் முகம் காட்டுகைக்காக –
தேவரை ஒழிய நாங்கள் ஒரு புகல் உடையோம் அல்லோம்
என்று எப்பொழுதும் அடைவு கெட சொல்லிக் கூப்பிட்டு நின்று
அநந்ய பிரயோஜனர்களைப் போலே
தங்கள் பிரயோஜனம் கை புகுரும் அளவும்

நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட –
பிரமன் சிவன் இவர்களோடு கூட தேவ சாதி முழுவதும் வந்து அடைய

வென்றி இம் மூ வுலகளித்து உழல்வான் திரு மோகூர் –
அவர்களுடைய பகைவர்களை வென்று
அவர்களுக்கு இடமான மூன்று உலகங்களையும் காப்பாற்றி
அதுவே தொழிலாக இருக்குமவன் வந்து வசிக்கிற நகரம் ஆயிற்று —

நன்று நாம் இனி நணுகுதும் –
அவன் எல்லாரையும் காப்பாற்றுவான் ஒருவன் ஆனபின்பு
காப்பாற்ற வேண்டும் என்னும் விருப்பத்தை உடைய நாம்
நன்றாகக் கிட்டுவோம்
ஸ்ரீ மதுரையிலே -காலயாவனன் ஜராசந்தன் – முதலியோர்கள் கிட்டினால் போலே அன்றிக்கே
நீள் நகர் நீள் எரி வைத்தருளாய் – திரு விருத்தம் -92-என்று
பிரமன் சிவன் முதலியோர்கள் கிட்டினால் போலே அன்றிக்கே
அநந்ய பிரயோஜனர்களாய் கிட்டுவோம்

நமது இடர் கெடவே –
ஆவார் ஆர் துணை -திருவாய் மொழி -5-1-9-என்று
இருக்கிற நம்முடைய துன்பம் கெடும்படியாக

சர்வ ரஷகன்
துக்கங்கள் போக அவனை ஆஸ்ரயித்து
நன்று நாம் இனி நாம் நணுகுதும் இடர் கெட
மூ உலகும் காப்பவன்
ஆபத்து  வரும் காலம் அன்று யாம் ஒரு புகல் இடம் என்று என்று அலற்றி –நாட
அசுரர்களை வென்று
பிரயொஜனாந்தார பரரும் அநந்ய பிரயோஜனர் பாசுரம் கார்யம் ஆக  -வேஷம் போட்டு –
வார்த்தை சொல்லி முகம் காட்டப் பெற
வேறு புகல் இடம் இல்லை
நின்று -பிரயோஜனம் கை புகுரும் அளவும் நின்று
எழுவார் விடை கொள்வார் போலே
நான்முகன் அரண் தேவர்கள் ஜாதி அடைய ஆஸ்ரயிக்க
வென்று -பிரதி பாஷம்
த்ரை லோக்யம் ரஷித்து
உழல்வான் வர்த்திக்கிறான்
இனி நாம் ரசிக்க அபெஷை உடைய நாம்
நன்றாக கிட்டுவொம்
காலயவனன்  கிட்டினான் ஜராசந்தன் போல்வாரை போலே இல்லை
நாம் நன்று அநந்ய பிரயொஜனராக
இடர் கெட
ஆரார துணை கிலேசம் போக

———————————————————————————————————————————————

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading