அவதாரிகை –
நம் ஆழ்வார் -வைகல் பூம் கழிவாயில்-(6-1-விபவ -ராமாவதாரத்தில் தூது ) -தூத ப்ரேஷணம் பண்ணி
அநந்தரம்
அவன் முகம் காட்டக் காணாமையாலே
(மின்னிடை மடவார்களில்–6-2-)பிரணய ரோஷம் தலை எடுத்து ஊடினால் போலே
இவளும் தூது விட்டு
இதிலே ஊடுகிறாள் –
தூத ப்ரேஷணம் பண்ணும்படியான ஆற்றாமைக்கு அவ்வருகே
ஒரு தசா விசேஷம் இறே பிரணய ரோஷம் ஆகிறது –
(பிரிவாற்றாமை ஏற்பட்டு -அதுவே வளர -தூது விட்டும் பிரிவாற்றாமை ஏற்பட்டு –
அதுவே வளர -தூது விட்டும் -வராமல் கோபம் -மடல் எடுத்து -ஊடல் -போன்ற தசைகள் )
அப்படியே அத் தசையிலே வெள்ளிடி விழுந்தால் போலே
மன பிரசாதம் பிறந்து தெளிந்து –
நம் ஆற்றாமை இருந்தபடியாலும்
தூத ப்ரேஷணம் பண்ணுகையாலும் –
ஸூப நிமித்தங்கள் செய்கையாலும் –
அவன் வரவு தப்பாது என்று நிர்ணயித்து –
அவன் வந்தால் முகம் கொடுக்கக் கடவோம் அல்லோம் –
என்று அத்யவசித்தாள்-
அதுக்கு ஹேது என் என்னில் –
அவனுடைய சம்ஸ்லேஷம் விஸ்லேஷாந்தமாய் இல்லாது இராமையாலே
இன்னும் ஒரு விஸ்லேஷத்துக்கு இலக்காய் இருந்து கிலேசப்படுமதில் காட்டில்
அவன் வந்தால் முகம் கொடாதே
அவன் சந்நிதியிலே முடிந்து பிழைக்க கடவோம் -என்று பார்த்தாள் –
(உள்ளே வராமல் தடுப்பது -ஸ்வரூப நாசம் -இதனால் உயிர் விட்டு -பிரிவுத் துன்பத்தில் இருந்து நீங்கலாம்)
தாம் தாம் முடிய நினைப்பார்
வெற்றிலை தின்பது பூ சூடுவது சிரிப்பதாமா போலே
அகவாய் அழியா நிற்கச் செய்தே -இவள் தெளிந்து இருக்க
அத்தைக் கண்ட தோழி யானவள் –
பிரணய ரோஷம் தலை எடுக்கும் படியான ஆற்றாமை செல்லா நிற்கச் செய்தே
நிஸ் சங்ககமாக இவள் தெளிந்து இருந்தாள் –
இதுக்கு ஹேது என் என்று பார்த்து –
நெஞ்சில் ஓடுகிறது என் என்று கேட்க –
அவன் வந்தால் பண்டு போலே முகம் கொடுக்கக் கடவேன் அல்லேன் –
அவன் சந்நிதியிலே முடியக் கடவதாக அத்யவசித்தேன் -என்ன
கெடுவாய் -மலையோடு (வரை வுருவின் மா களிற்றை)பொரும் மல்லர் உண்டோ –
உபய விபூதி நாயகனாய்
சர்வ சக்தியாய் இருக்கிறவர் உடன்
அபலையான நீ எதிர் இடுகை யாவது என் என்று –
தோழிக்கு இவள் தன்னிலும் காட்டில் ரோஷம் கனத்து இருக்கையாலே
பிரணயிநிகள் உடன் செய்யும் அத்தை பிரபுக்களோடு செய்யக் கடவையோ -என்ன
(“நல்ல வென் தோழி! நாகணை மிசை நம் பரர் செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வதென்?“ என்று
சொன்னவர்களைக் கேட்டதில்லையோ?
ப்ரணயிகளிடத்துச் செய்யத் தக்கதை ப்ரபுக்களிடத்துச் செய்யலாகுமோ?” என்று சொல்ல:)
அவர் பிரபுத்வமும் நாடாளும்படியும் என் கையில் படும் பாடு பாராய் –என்ன
இவள் அத்வாசாயம் இருந்தபடியால் முடியும் போல் இருந்தது –
பிரணய ரோஷத்தின் அளவிலேயாவது முடியாதபடி நோக்க வேணும் என்று பார்த்து
ஆஸ்ரிதர்க்கு அவன் முகம் கொடுக்கும் படி இது காண் என்று சொல்ல அமையும் -என்ன-
அவை எல்லாம் -அவனது அன்பு எல்லாம் -பகட்டு காண் –
நான் முடிகை தவிரேன் -என்கிறாள் –
பிரணியிநியான இவளை ஒழிய தோழிக்கு ரோஷம் தலை எடுக்கக் கூடுமோ என்னில்
வீத ராகனாய் சருகு இல்லை தின்று போந்த ஸ்ரீ வால்மீகி பகவான் பிராட்டியைக் கண்டு
ஹீநோ யாத நயா பிரபு -என்று (துஷ்க்ருதம் க்ருதவாந் ராமம் ஹீநோ யத3நயா ப்ரபு-செயற்கு அரிய கார்யம் அன்றோ உயிர் தரித்து இருக்கிறான் )
பெருமாள் நாடாளவும் ஆனை குதிரை கட்டவும் கற்றார் இத்தனை போக்கி
பிரணயித்வத்தில் புதியதுண்டிலர் ஆகாதே -என்றான் இறே –
முற்படத் தோழி-அவன் ஆஸ்ரிதர்க்கு முகம் கொடுத்த பிரகாரத்தைச் சொல்ல
அத்தை அனுபாஷித்து அவை எல்லாம் பகட்டுக் காண் என்கிறாள்
—————————————————-
தென்னிலங்கை யரண் சிதறி அவுணன் மாளச்
சென்றுலகம் மூன்றினையும் திரிந்தோர் தேரால்
மன்னிலங்கு பாரதத்தை மாள வூர்ந்த
வரை வுருவின் மா களிற்றைத் தோழீ எந்தன்
பொன்னிலங்கு முலைக் குவட்டில் பூட்டிக் கொண்டு
போகாமை வல்லேனாய்ப் புலவி எய்தி
என்னில் அங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த
எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே–28–
பதவுரை
தோழீ–வாராய் தோழியே!,
தென் இலங்கை-தென்னிலங்கையிலுள்ள
அரண்–கோட்டைகள்
சிதறி–அழிந்து
அவுணன் மாள–இராவணனும் முடியும்படியாக
சென்று–(ஆங்கு) எழுந்தருளி (வெற்றி பெற்றவரும்)
உலகம் மூன்றினையும் திரிந்து-(த்ரி விக்கிரமாவதார காலத்தில்) மூவுலகங்களையும் வியாபித்தவரும்
மன் இலங்கு–அரசர்கள் விளங்கா நின்ற
பாரதத்தை மாள–பாரத யுத்தம் முடியும்படியாக
ஓர் தேரால் ஊர்ந்த–ஒரு தேரைக் கொண்டு நடத்தின
வரை உருவின் மா களிற்றை–மலை போன்ற உருவங்கொண்ட பெரிய யானை போன்ற பெருமானை,
என் தன்–என்னுடைய
பொன் இலங்கு முலை குவட்டில்–பசலை நிறம் படர்ந்த முலைகளாகிற கம்பத்திலே
பூட்டிக் கொண்டு-அணைத்துக் கொண்டு
போகாமை வல்லேன் ஆய்-அப்பால் போக வொண்ணாதபடி தடுத்து வளைக்க வல்லவளாகி
புலலி எய்தி–அவரைப் பிரிந்து பட்ட வருத்தமெல்லாம் அவரெதிரே பட்டு-முகம் காணப் பெறாமையாலே அவனையும் என் எதிரே பட வைத்து
என்னில் அங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த-என்னுடைய எல்லா அவயவங்களும் என்னிடத்தே வந்து சேர்ந்து ஆனந்த மடையும் படியாக
எப்பொழுதும்-எல்லாக் காலத்திலும்
நான்-நான்
நினைந்து-அவரையே சிந்தித்து
உருகி இருப்பேன்-முடிந்து பிழைப்பேன்.
என் உயிர்ப் பாங்கியே
லங்கா நகரத்திலே தர்ச நீயமான கோட்டையை அழித்து
ராவணாசூரன் ,முடியும் படியாக
அந்நகரத்திலே பிரவேசித்து மூன்று லோகங்களையும் சஞ்சரித்து திருவடிகளாலே அளந்து
அரசர்கள் விளங்கா நின்றுள்ள பாரத சமரம் முடியும்படி
ஒரு தேரை சாரதியாய் நின்று நடத்தின மலை போலெ இருந்துள்ள திண்மையை யுடைய
பெரிய யானை போலே இருந்துள்ளவனை சமர்த்தையாய்க் கொண்டு என்னுடைய வை வர்ண்யத்தை யுடைத்தான
ஸ்தநங்கள் ஆகிற ஸ்தம்பத்திலே அவன் புறம்பு போகாதபடி சேர்த்துக் கொண்டு
அவனைப் பிரிந்து படும் கிலேசத்தை அவன் ஸந்நிதியிலே அடைந்து-முகம் காணப் பெறாமையாலே அவனையும் என் எதிரே பட வைத்து –
என்னுடைய சர்வ அவயவங்களும் என்னிடத்தே வந்து ஆனந்தத்தை அடையும்படியாக
சர்வ காலத்திலும் விஸ்லேஷ அசஹையான நான் அவரை நினைந்து அழிந்து விடுவேன் –
——————————————————
தென்னிலங்கை யரண் சிதறி –
மேல் வரை வுருவின் மா களிற்றை-என்கையாலே
யானையினுடைய வியாபாரமாக பேசுகிறாள்
இவ் வபதானங்களை எல்லாம் –
இலங்கையில் தர்ச நீயமான அரணைச் சிதறி –
அரணின் வலி இறே வீரர்களுக்கு தர்ச நீயமாக இருப்பது –
திருவடி பிராட்டியைத் தேடி இலங்கையில் சென்ற போது
இலங்கையின் அரணையும் ராவணனுடைய பலத்தையும் பார்த்து –
இவ் வரண் இருந்தபடியால் நான் புகுதல் என் தமப்பனாரான வாயு புகுதல்
செய்யும் இத்தனை ஒழிய வேறு ஒருவரால் புகுர ஒண்ணாது –
அது தன்னிலும் ராத்திரி புகுமது ஒழிய பகலிலே புகுர ஒண்ணாது ஆய்த்து-
இப்படிப் பட்ட தேசத்திலே ஸூகுமாரான ராஜ குமாரர்களைக் கொண்டு வரத் தேடா நின்றோம் என்று
திருவடி நெஞ்சு உளுக்கும் படி இறே அரண் இருந்தபடி –
இதுக்கு அத்யஷனானவன் தன்னுடைய பலம் இருந்தபடி என் என்னில்
வெளி நிலத்திலே எதிரிகளைத் தனியே ஜெயிக்க வல்லவனாய் இருந்தது –
சிதறி
ஓர் அரணை மணல் கொட்டகத்தை சிதறினால் போலே அநாயாசேன அழித்து –
ஒரு கல்லும் மரமும் ஆகில் இறே இடறி என்பது –
பெருமாள் உடைய வீரத்தை கேட்டிருந்த மாத்ரத்தை கொண்டு
யதாஸை கதமம் பஸி – என்று(பலவந்தச்ச சூரர் — யதா ஸைகதமம் பஸி-மணல் வீடு அழிவது போல் )
ஓர் அரணை மணல் கொட்டகத்தை அழிக்குமா போலே காண்
பெருமாள் கையில் நீயும் உன் பரிகரமும் அழி உண்ணப் போகிற படி என்றார்
என்று இறே ஸ்ரீ விபீஷண ஆழ்வான்
(வேலை சூழ் வெற்பெடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டழித்த நீ –திருச்சந்த விருத்தம் –39-
கடலை அழகாக உடைத்தாய் -த்ரிகூட பர்வதத்திலே விஸ்வகர்மாவாலே சமைக்கப்
பட்டதாய் -கடக்க வரிதான மதிளாலே சூழப்பட்ட லங்கையின் அரணை –
யதாஸை கதமம் பஸி -என்கிறபடியே தார்மிகனை நிர்வாஹகனாக்கி தர்மமே
சஞ்சரிக்கும் படியைச் சொல்லிற்று –பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான் -)
அவுணன் மாளச் சென்று –
ராவணன் முடியும்படி சென்று –
சென்ற செலவிலே ம்ருத்தன் ஆனான்
பின்னைப் பிணம் வெட்டி வாள் முறித்த இத்தனை யாய்த்து –
அதாகிறது –
ஒரு மத ஹஸ்தி வழி போகா நின்றால்-முன் கண்டவற்றைக் கையாலும் காலாலும்
அழித்துக் கொண்டு போமா போலே
கர தூஷண ப்ரப்ருதிகளை நிரசித்து –
தன்னை வாலிலே கட்டிக் கொண்டு திரிந்த வாலியை நிரசித்து –
கடல்கரையிலே சென்றுவிட்டு -இலங்கைக்கு அரணான கடலை அரண் செய்து
இலங்கையைச் சென்று அடை மதிள் படுதினபடியைக் கண்ட போதே -ம்ருத்னன் ஆனான் என்கை –
ஒரு பிரணயிநிக்காக அவன் பண்ணின வியாபாரம் இது வன்றோ -என்ன –
அவன் பரம பிரணயி அன்றோ –
அபலைகளாய் இருப்பார் அகப்படுக்கைக்காச் செய்தது ஒன்றாகையாலே
அதுவும் பகட்டு காண் -என்கிறாள்
உலகம் மூன்றினையும் திரிந்து –
சதுர தச புவனத்தையும் அளந்து –
ஒரு மத ஹஸ்தி ஸ்வைர சஞ்சாரம் பண்ணுமா போலே
எல்லார் தலைகளிலும் ஸ்வரைமாக திருவடிகளை வைத்த படியாலே –
திரிந்து -என்கிறது –
பிரணயிநிக்கு முகம் கொடுக்கை அன்றிக்கே
அந்ய சேஷத்வத்தாலும்
ஸ்வ ஸ்வாதந்த்ர்யத்தாலும்
விமுகராய் இருப்பார் தலைகளிலும் அகப்படத் திருவடிகளை வைக்கும் ஸ்வபாவன் அன்றோ -என்ன –
அவன் விசேஷஞ்ஞன் காண்
விமுகர் தலையில் திருவடிகளை வைக்குமது ஒழிய
எம்பெருமான் திருவடிக் கீழ் அணைய-என்று
இருப்பார்க்கு முகம் கொடுப்பவன் அன்று காண் -என்கிறாள்-
(“அடிச்சியோந் தலைமிசை நீயணி யாய் ஆழியங்கண்ணா வுன் கோலப் பாதம்“ என்று
பல் பன்னிரண்டும் காட்டி இரப்பவர் கட்கு முகங்கொடுக்கும் தயாளு அல்லர் காண் என்று சொல்லிக் காட்டுகிறபடி.)
ஒர் தேரால் மன்னிலங்கு பாரதத்தை மாள வூர்ந்த –
ஓர் தேரால்
எதிரிகள் கிருஷ்ணன் ஆயுதம் எடுக்க வேண்டா -என்ற இத்தனை ஒழிய
தூது போதல்
சாரத்தியம் பண்ணுதல் -செய்ய வேண்டா என்றிலர்களே –
ஆகையால் சாரதியாய் நின்று
ஒரு தேராலே அழியச் செய்தான் –
இன்னத்தைக் கொண்டு இன்ன கார்யம் செய்யக் கடவோம் என்கிற நியதி இல்லை இறே –
கொல்லா மாக்கோல் கொலை செய்து -என்னக் கடவது இறே –
(கொல்லா மாக்கோல்* கொலை செய்து பாரதப் போர்,*
எல்லாச் சேனையும்* இரு நிலத்து அவித்த எந்தாய்,*
பொல்லா ஆக்கையின்* புணர் வினை அறுக்கல் அறா,*
சொல்லாய் யான் உன்னைச்* சார்வது ஓர் சூழ்ச்சியே.)
மன்னிலங்கு பாரதத்தை –
அதிரதி மகா ரதரான பீஷ்மாதி ராஜ லோகங்கள்
முன் தூசியிலே சஞ்சரிக்கும் படியான பாரதத்தை –
மாள ஊர்ந்த
பிணமும் கண் காணாத படியாக தேரை நடத்தின
ஆடிய மா நெடும் தேர் படை நீர் எழச் செற்ற பிரான் -என்கிறபடியே
தேர் காலிலே துகை உண்டு
தூளியாய் போம்படி யாய்த்து தேரை நடத்தின படி –
(ஓடிவந்து என் குழல்மேல் ஒளி மா மலர் ஊதீரோ
கூடிய வண்டினங்காள் குருநாடு உடை ஐவர்கட்கு ஆய்
ஆடிய மா நெடும் தேர்ப்படை நீறு எழச் செற்ற பிரான்
சூடிய தண் துளவம் உண்ட தூ மது வாய்கள் கொண்டே)
தன்னை ஒழியச் செல்லாது இருப்பாள் ஒருத்தி உடைய குழல் முடிப்பிக்கைக்காக –
தன்னை அழியா மாறி வ்யாபரிப்பதே -என்று
நாட்டாரை பகட்டுக்கைக்காக செய்தான் இத்தனை
தன்னை ஒழியச் செல்லாதார் குழலை விரிப்பிக்குமவன் காண் -என்கிறாள்-
(“பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்துக், கந்தார் களிற்றுக் கழன்மன்னர் கலங்கச்
சங்கம் வாய்வைத்தான்“ என்கிறபடியே த்ரௌபதியின் குழலை முடிப்பிக்கைக்காக அவர் பண்ணின வியாபாரமன்றோ வென்று தோழி சொல்ல;
ஒருத்திக்காக இப்படி காரியஞ் செய்கிறவனென்று நாட்டாரைப் பகட்டுகைக்காகச் செய்தாரித்தனை;
தம்மையே புகலாக நம்பியிருப்பாருடைய கூந்தலை விரிப்பிக்குமவர் காண் என்று சொல்லுதல் இங்கு உள்ளுறை.)
வரை வுருவின் மா களிற்றைத் –
மலை போலே இருந்துள்ள திண்மையையும்
செருக்கையும் உடைத்தான -ஆனை போலே இருந்துள்ளவனை –
ஆஸ்ரித விரோதி நிரசனத்தில் திண்ணியனாய் இருக்கையும்
ஆஸ்ரிதர் கார்யம் செய்த ப்ரீதியாலே வந்த செருக்கையும் -உடையவனை –
தோழி -என்கையாலே
அவன் படும்பாடு காண விறே புகுகிறாய் –
அங்கன் இன்றியே
ஏகம் துக்கம் ஸூகம் ஜனௌ-என்று இருக்கிறவள் ஆகையாலே
நீ விலக்காயாகில்-அவன் படும் பாடு பாராய் -எண்ணுதல் –
தோழீ –
நீ விலக்காது ஒழிய வேணும் –
எந்தன் பொன்னிலங்கு முலைக் குவட்டில் பூட்டிக் கொண்டு –
என் கையில் பிரஹ்மாஸ்திரம் இருக்க
ஜெயிக்க ஒண்ணாத நிலம் உண்டோ –
எந்தன் பொன்னிலங்கு முலைக் குவட்டில்-
நாட்டார் முலை எழுந்தால் போலேயோ -என் முலை எழுந்த படி –
அவன் முலை எழுந்தால் போலேயோ என் முலை எழுந்தபடி –
பொன்னிலங்கு முலை –
அவனுடைய பும்ஸ்த்வம் போலேயோ என்னுடைய ஸ்த்ரீத்வம் இருப்பது –
வ்யதிரேகத்தில் விவர்ணமாம் படி யன்றோ என்னுடைய ஸ்த்ரீத்வம் –
மின்னிலங்கு திருவுரு என்று -வ்யதிரேகத்தில் வடிவு ஏக ரூபமாய் இருக்கும்படி அன்றோ
அவருடைய பும்ஸ்த்வம் இருப்பது –
சதைக ரூப ரூபமான வடிவை உடையானுக்கு வாய் உண்டோ –
(அவிகாராய ஸூத்தாய நித்யாய பரமாத்மநே ஸதைக ரூப ரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே.)
முலைக் குவட்டில் பூட்டிக் கொண்டு –
முலையாகிற ஸ்தம்பத்தோடு சேர்த்துக் கொண்டு –
ஸ்தம்பத்தோடே சேர்க்கை யாவது -தன் ஆற்றாமையை ஆவிஷ்கரிக்கை –
போகாமல் -பூட்டிக் கொண்டு –
என் பக்கல் முகம் பெறாமையாலே போகத் தேடும் போது
என் ஆற்றாமையை அடங்க ஆவிஷ்கரிகக் கடவேன் –
முலைக் குவட்டில் பூட்டிக் கொண்டு –
வரை வுருவின் மா களிறு ஆகையாலே
ஒரு முலையிலே சேர்க்க வேணும் – இறே –
(என்றன் பொன்னிலங்கு முலைக் குவட்டில் பூட்டிக்கொ்ணடு =
என் கையில் ப்ரஹ்மாஸ்த்ரமிருக்க எனக்கு வெல்ல வொண்ணாத நிலமுண்டோ?
எம்பெருமானாகிற அந்த மத யானை என்னுடைய முலையாகிற ஸ்தம்பத்தோடே சேர்த்துக் கொண்டு இறுக்கிக் கட்டிவிடுவேன்;
முகங்கொடுத்துப் பேச மாட்டேன், வெண்ணெய் திருடின கண்ண பிரானை யசோதை உரலிலே கட்டிப் போட்டு வைத்தாப் போலே,
என்னைப் படு கொலை யடித்த பெருமானை முலைக் குவட்டிலே கட்டிப் போடடு வைப்பேன்;
இதுவாயிற்று அவனுக்கு நான் செய்யும் பெரிய சிக்ஷ. என்னிடத்திலே முகம் பெறாமையாலே அவன் ஓடிப் போகத் தேடுவேன்;
(போகாமை முலைக் குவட்டில் பூட்டிக் கொண்டு)
“குற்றமற்ற முலை தன்னைக் குமரன் கோலப் பணைத் தோளோடு, அற்றகுற்ற மவை தீர அணைய வமுக்கிக் கட்டீரே“
என்கிறபடியே அவனாலும் நெகிழ வொண்ணாதபடி கட்டிப் போட்டு வைப்பேன்.)
வல்லேனாய்-
இது ஒன்றுமே குறை -என்கிறாள் –
என் மனஸ்ஸூ சஹகரிக்கப் பெற்றில்
அவன் வந்து முகம் காட்டினால் -நெஞ்சு மேல் விழாது ஒழியப் பெறில் –
நீயும் நிஷேதியாதே சஹகரிக்கப் பெறில் –
நெஞ்சிலும் காட்டில் அந்தரங்கை இறே தோழி-
புலவி எய்தி –
அவனைப் பிரிந்து படும் கிலேசத்தை எல்லாம்
அவன் சந்நிதியிலே படக் கடவேன் -என்கிறாள் –
அதவா
புலவி எய்தி –
அவனைப் பிரிந்து நாம் பட்ட பாடு இத்தனையும்
அவன் தான் என் சந்நிதியில் படும்படி பண்ணக் கடவேன் –
என்கிறாள்-ஆகவுமாம் –
என்னிலங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த –
இன்னும் ஒரு விஸ்லேஷத்துக்கு இலக்கு ஆயிராதபடி –
என்னிலங்கம் எல்லாம் –
இது ஒரு கண் இருந்தபடி -என்
இது ஒரு முறுவல் இருந்தபடி -என்
இது ஒரு முலை இருந்த படி -என்
என்றால் போலே (ஞான பக்தி வைராக்யங்கள் எல்லாம் )அவன் கொண்டாடும்படி
அவனுக்கு ஆதரணீயமான -என்னுடைய சர்வ அவயவங்களும் –
இன்பம் எய்த –
ஷாம காலத்தில் குடும்பியாய் இருக்குமவன்
குடும்பத்தின் உடைய பசியும் தன்னுடைய பசியும்
பொறுக்க மாட்டாமையாலே
ச குடும்பமாய் ஆற்றிலே புக்கு முடியும் என்னுமா போலே
என் அவயவங்களுடன் முடியக் கடவேன்-
வந்து
கன்று வேறு -தாய் வேறாக்கும் விஷயம் இறே –
ஸ்ரீ பரத ஆழ்வானையும் கைகேயியையும் போலே ஆகையாலே
தனித் தனியே சேதன சமாதியாலே அவ் விஷயத்திலே
பிரவணமாய் இறே இருப்பது –
அவை அங்கும் நின்றும் மீண்டு ஆஸ்ரய பூதையான என்னோடு கூட முடிக்கையிலே உத்யோகிக்கை
இன்பம் எய்த
முடியக் கடவேன் என்னுமத்தை –இன்பம் எய்த -என்கிறாள் –
முடிகை தான் பரமபத ஸ்தாநீயமாம் படியான
ஆற்றாமையாலே
எப்பொழுதும் –
எவ் வஸ்தையிலும் –
அவன் வாராத படியாலே சொல்லுகிறாய் –
வந்து முகம் காட்டினவாறே
மை வண்ணம் -இத்யாதியில் சொல்லுகிறபடி
அவன் சௌந்த்ர்யத்தைக் கண்டவாறே மேல் விழுகிறாய் என்ன
அத் தசையிலும் முடியக் கடவேன்—அவன் சந்நிதியிலே முடிந்து பிழைக்கக் கடவேன்
எப்பொழுதும்
சேஷித்வத்தால் வந்த பிராப்தியைக் காட்டிலும்
முடியக் கடவேன்-
நினைந்து உருகி இருப்பன் நானே
நினைத்த மாத்ரத்திலே அழிந்து இருப்பன் –
அவன் வந்து சந்நிஹிதனாய்
தன் செல்லாமையைக் காட்டினால்
அழிகை அன்றியே
மநோ ரதித்த மாத்ரத்திலே அழியும்படி ஆய்த்து இவளுடைய
சௌந்தர்யமும் சௌகுமார்யமும் இருப்பது –
நம் ஆழ்வாருக்கு பிரணய ரோஷம் தலை எடுத்த போது
அவன் வந்து முகம் காட்டின அளவிலும்
தோழியும் தானுமாக அவனுக்கு புகுர ஒண்ணாத படி
க்ரமத்தாலே தன் செல்லாமையைக் காட்டி
பிரணய ரோஷத்தை அழித்து கிட்ட வேண்டிற்று –
இவர் நினைப்பதுக்கு முன்னே அழிந்தார் –
நானே –
புறம்பு கண்டறியோமே -என்ன
என் பிரகிருதி இருக்கும்படி இது என்கிறாள் –
அல்லாதார் ஒன்றை சங்கல்ப்பித்தால்
அத்தை முடிய நடத்தவும் வல்லர்களாய் இருப்பார்கள் –
சங்கல்ப்பித்த போதே அழியும்படி ஆய்த்து நான் இருப்பது –
(இப் பாட்டில் எல்லை கடந்த ப்ரணய ரோஷத்தை வெளியிடும் முகத்தால் தன்னுடைய ஆற்றாமையின் கனத்தை வெளியிட்டவாறு.
இனிப் பெற்றல்லது தரிக்க வொண்ணாத படியான ‘முடிந்த வவா‘ என்கிற பரம பக்தி முதிர்ந்தமை சொன்னபடி.)
———————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply