நெடுமாற்கு அடிமை -பிரவேசம்
மேலிரண்டு திருவாய் மொழியிலுமாக
ஆத்மாவினுடைய அனன்யார்ஹ சேஷத்வம் சொல்லிற்று –
அதனால் அது பிறர்க்கும் உரித்து அன்று -உணர்வைப் பெற ஊர்ந்து இற ஏறி -என்று
தனக்கும் உரித்து அன்று -அருமாயன் பேரன்றி பேச்சு இலள்-
என்று ஆயிற்று சொல்லிற்று –
பிரணவத்தில் நடுப்பததாலும்
நமஸ் சப்தத்தாலும் சொன்ன அர்த்தமாயிற்று சொல்லி நின்றது –
அனன்யார்ஹ செஷத்வத்துக்கு எல்லை
அவன் அடியார்க்கு அடிமை ஆதல் அளவும் அன்றோ
அதனைச் சொல்லுகிறது இத் திருவாய் மொழியில் –
அவன் அடியாருக்கு கிரய விக்ரயங்கட்கு தகுதியான
அன்று தான்
அவனுக்கு அடிமைப் பட்ட நிலை நின்றதாவது –
எந்தம்மை விற்கவும் பெறுவார்கள் -பெரியாழ்வார் திருமொழி -4-4-10-என்று இ றே
அன்றோ இருப்பது
தத் பக்தி நிக்ன மனஸாம் க்ரய விக்ர யார்ஹா -பிரமாணம்
இறைவன் மாட்டு அன்புடைய மனஸ் உடையவர்களுக்கு
விற்றற்கு உரியவன் -என்னக் கடவது இ றே –
அம்முணி ஆழ்வான் போசல ராஜ்யத்தின் நின்று வந்த நாளிலே
பட்டர் கண்டருளி
நீ ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு போர அடிமை செய்து போந்தாய் –
என்று கேட்டோம் .
உன் தன்மைக்கு சேர -நெடுமாற்கு அடிமை -என்னும் திருவாய் மொழியைக் கேள் -என்று
அருளிச் செய்தாராம் –
ஈஸ்வரனுக்கு அடிமை என்று அறிந்த அன்று மயங்கி மீளவுமாம் –
அவன் அடியார்க்கு அடிமை ஆதல் அளவும் உணர்ந்தால் மீள வேண்டா அன்றோ –
செல்வமே புருஷார்த்தம் -என்று இருப்பார் –செல்வமே -என்றும் -வியன் மூ உலகு –
ஆத்மலாபம் புருஷார்த்தம் என்று இருப்பார் -தானே தானே யானாலும் –
பகவானுக்கு அடிமைப் பட்டு இருத்தல் புருஷார்த்தம் -உறுமோ பாவியேனுக்கு –
ஈச்வரனாய் ஆனந்த மயஎன்று இருக்கும் இருப்பு புருஷார்த்தம் -மூ உலகின் வீடு பேறு –
என்று இருப்பராய் அன்றோ இருக்கிறார்கள் –
இப்படிப் பட்ட புருஷார்த்தங்கள்
தனித் தனியும் -திரளவும் நான் பற்றின பாகவதர்களுக்கு
அடிமைப் பட்டு இருத்தல் ஆகிற புருஷார்ததோடு ஒவ்வாது
என்று எடுத்துக் கழிக்கவும் போராது –
இப்படி இருக்கிற இதுவே காலம் என்னும் ஒரு பொருள் உள்ளவரையிலும்
எனக்கும் என்னோடு சம்பந்தம் உடையாருக்கும் வாய்க்க வேண்டும்
என்று வேண்டிக் கொண்டு தலைக் கட்டுகிறார் –
பயிலும் சுடர் ஒளி-என்னும் திருவாய் மொழியைக் காட்டிலும்
இத் திருவாய் மொழி க்கு வாசி என்-என்னில்
பாகவதர்கள் இறையவர்கள் -என்றது அங்கு -எம்மை ஆளும் பரமர்களே –
பாகவதர்கள் இனியர் -என்கிறது இங்கு -வீடுமாறு எனபது என் வியன் மூ உலகு பெறினுமே –
கச்சதா மாதுல குலம் பரதேன ததா அநக
சத்ருக்னோ நித்ய சத்ருக்னோ நீத ப்ரீதி புரச்க்ருத-அயோத்யா -1-1-
-ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வானுக்கு ஆதல்
இவ் வாழ்வாருக்கு ஆதல் அன்றோ இவ் வர்த்தங்களில் ருசி உள்ளது –
நித்ய சத்ருக்ன -எப்பொழுதும் உட்பகைவர்களாய் உள்ள இந்திரியங்களை வென்றவர் -என்பதால்
பெருமாள் இனியர் -என்று அவன் பக்கல் கண் வையான்
என்று கூறப் பட்டது அன்றோ –
ஜீவாத்மா ஸ்வரூபம் காட்டிக் கொடுத்து
இருத்தும் வியந்து -சிறியேன் சிந்தையுள் -சொல்ல
நைச்சியம் செய்வாரோ
கண்கள் சிவந்து திருவாய்மொழி அருளி –
அந்த ஜீவாத்மா அனன்யார்கம் காட்டிக் கொடுத்தார்
அவனுக்கே -என்றால்
அவனால் அபிமானிக்கப் பட்ட பாகவதர்களுக்கு
அடிமை கிரஹணிக்கே -கடி மா மலர் பாவையோடு சாம்ய ஷட்கம் –
ஒருவனை ஒருவன் உகந்தான் ஆவது அவன் உகந்தாரை உகக்கை யாவது தானே
உற்றது உன் அடியார்க்கு அடிமை -நாம பதார்த்தம்
ஜீவாத்மா ஸ்வரூபம் -பயிலும் சுடர் ஒளி சொல்லி
நெடுமாற்கு அடிமை பல புருஷார்த்தம் -பிரகரணம்
பிறருக்கும் உரித்து அல்ல தனக்கும் உருத்து இல்லை
பிரணவத்தில் -உகாரம் -திரு மந்தரத்தில் நமஸ் -மத்யம பதங்களால் -சொல்லிற்றே
ததீய சேஷத்வம் எல்லை நிலம்
ததீயருக்கு கிரய விக்ரய அர்கமாகும் -நிலை கோல வேண்டும் –
பூர்ண உரிமை –
அனுபவ பாத்யை மட்டும் விற்கும் உரிமை இல்லை
அடியார்கள் என் தம்மை விற்கவும் பெறுவார் -பெரியாழ்வார்
அம்மணி ஆழ்வான்-கோய்சல ராஜ்ஜியம் கர்நாடகம் -மேல் நாடு தொண்டனூர் நம்பி
பாகவத சேஷத்வம் நிறைய
ஸ்ரீ வைஷ்ணவர் போர அனுபவித்து –
கோஷ்டியில் ஸ்ரீ பாத தீர்த்தம் -ஆத்மாவுக்கு விஷயம்
ஆழ்வார் ஆச்சார்யர் நினைத்து சேர்ப்பார்கள் –
குழந்தைக்கு கூட
உபநயனம் மட்டும் ஆகி இருக்க வேண்டும்
கரும்பு குடம் கொண்டு கோஷ்டி வட்டில் திருவாராதனம்
பெருமாள் போலே
உபதேச ரத்னா மாலை பொழுது சேர்ப்பார்கள் இன்றும்
தளிகை
ஸ்ரீ பாத வட்டில்லுக்கும் திருவாராதானம் உண்டே
ஈஸ்வர சேஷம் என்று அறிந்த அன்று பிரமம் ஏற்பட்டு மீளவுமாம்
ததீய சேஷத்வம் மீளுவது கஷ்டம்
லோகம் ஐஸ்வர்யம் கைவல்யம் பகவத் சேஷத்வம்
தனித் தனியாகவும் திரளவும் இதுக்கு எடுத்து களிக்கவும் ஈடாக இல்லை என்கிறார்
இதுவே கால தத்வம் உள்ள அளவ்வும்
தமக்கும் தம் உடைய சம்பந்திகளுக்கும்
நடக்க வேண்டும்
பாகவதர் சேஷி இறை என்றார் பயிலும் சுடர் ஒளி
இதில் இனியர்
சத்ருகன ஆழ்வான் போலே
இதில் ருசி -வருவது அருமை
தாழ்ந்தது காட்டி அவனை பற்ற சொல்லலாம்
அவன் உயர்ந்தாதாய் இருக்க அவனை விட்டு வருவது அரிதே
ஸ்வ தந்த்ரன்
கையைப் படித்து கார்யம் கொள்ளுமோபாதி
காலைப் பற்றி கார்யம் கொள்ளுகை
அனனகா -பாபம் இல்லாதவன் -பயிலும் சுடர் ஒளி
போக்யதையில் கை வையான் இதில் -நித்ய சத்ருகன -அவன் போக்யதை விட்டு அதை விட இனிமை இதில் –
—————————————————————————————————————————————————————————————————-
நெடுமாற்கு அடிமை செய்வன் போல்
அவனைக் கருத வஞ்சித்து
தடுமாற்றற்ற தீக் கதிகள்
முற்றும் தவிர்ந்த சதிர் நினைந்தால்
கொடுமா வினையேன் அவன் அடியார் அடியே
கூடும் இது வல்லால்
விடுமாறு எனபது என்னந்தோ
வியன் மூ வுலகு பெறினுமே-
————————————————————————————————————————————————
உலகத்தார் விரும்புகிற செல்வம் ஆகிய புருஷார்த்தமும்
நான் பற்றின புருஷார்த்ததோடு ஒவ்வாது -என்று
எடுத்துக் கழிக்கவும் போராது –
என்கிறார் –
நெடுமாற்கு –
நெடுமாலுக்கு -என்றபடி
மால் -என்றது பெரியோன் -என்றவாறு –
நெடுமையால் நினைக்கிறது அதில் பெருமையை –
அறப் பெரியோன் -என்றபடி
தாம் அடிமைத் தன்மையின் எல்லையைக் கணிசிக்கிறவர் ஆகையாலே
அவனுடைய இறைமைத் தன்மையின் எல்லையைப் பிடிக்கிறார் –
அன்றிக்கே
மால் -எனபது வ்யாமோகமாய்
மிக்க வ்யாமோகத்தை உடையவன் -என்னுதல் –
நெடுமையால் மிகுதியை நினைக்கிறது -என்றது
தன் அளவில் இன்றியே தன்னடியார் அளவிலே நிறுத்தும்படியான வியாமோகம் -என்றபடி –
அடியார்க்கு என்னை ஆட படுத்த விமலன் -என்னக் கடவது அன்றோ –
அடிமை செய்வன் போல் அவனைக் கருத –
அவனுக்கு அடிமை செய்வாரைப் போலே அவனை நினைக்க –
அன்புள்ளவர்களைப் போன்ற பாவனை யேயாய்
ஆராய்ந்தால் அது தானும் போட்கேன் -பொய்யன் –
வஞ்சித்து தடுமாற்றற்ற தீக் கதிகள் முற்றும் தவிர்ந்த-
தடுமாற்று அற்ற தீக்கதிகள் -முற்றும் -விஞ்சித்து -தவிர்ந்த –
ஒரு நல்ல கார்யத்தைச் செய்து
அது நின்று தடுக்குமது இல்லாமையாலே
தடுமாற்றம் அற்று வசிக்கிற அறிவின்மை
முதலானவைகள் முழுதும் வஞ்சித்துத் தவிர்ந்தன –
பகல் முழுதும் ஒரு சேர வசிக்க கடவோம் -என்று சொல்லி வைத்து
இரவு வந்தவாறே ஒரு காலத்திலே உண்டு வைத்து ஒக்க கிடந்தது
விளக்கை எரிய வைத்துப் போனது அறியாமே வஞ்சித்துப் போவாரைப் போலே
இனி அடிமை செய்ய வேண்டில் அவனை வஞ்சித்துக் கருத –
எனக் கூட்டி வஞ்சித்தலை
தமக்கு அடைமொழி ஆக்கலுமாம் –
முற்றும் தவிர்ந்த –
நாம் போக்கிக் கொள்ளும் அன்றே அன்றோ க்ரமத்தால் போக்க வேண்டுவது –
பக்திமானுடைய புண்ய பாபங்கள் அனைத்தும் அழிகின்றன –
ஏவம் ஹாஸ்ய சர்வே பாப்மான ப்ரதூ யந்தே
ய ஏதத் ஏவம் வித்வான் அக்னிஹோத்ரம் ஜூஹோதி -சாந்தோக்யம் -5-24-3-
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மாசுசா -ஸ்ரீ கீதை -18-66-
என்கிறபடி அன்றோ அவன் போக்கும் போது இருப்பது –
சதிர் நினைந்தால் –
அவன் திருவடிகளிலே குனிந்த அளவிலே
தீவினைகள் அடங்கலும் போன படியை நினைந்தால்
பேற்றுக்கு எல்லை யானாரை அன்றோ பற்ற அடுப்பது –
உறுவது பார்க்கில் அவன் அடியாரை அன்றோ பற்ற அடுப்பது –
கொடுமா வினையேன் –
ப்ரீதி தலை மண்டை இட்டுச் சொல்கிறார்
பாட்டுக் கேட்பார்
பாட்டு ஈடு படுதினவாறே -பாவியேன் -என்னுமாறு போலே –
அன்றிக்கே
முதன் முதலிலேயே -பொய் நின்ற ஞானமும் -தொடங்கி-
அவன் அடியாரைப் பெற்ற பெற்றிலேன் -என்பார்
பாவியேன் -என்கிறார் என்னலுமாம்
–
அவன் அடியார் அடியே கூடும் இது வல்லால் –
தன் திருவடிகளைப் பற்றினார் திறத்திலே அவன் மிக்க வ்யாமோகத்தைப்
பண்ணுவானே ஆனால் -அவன் விரும்பினாரை அன்றோ நமக்கும் பற்ற அடுப்பது -என்றபடி
அவ்வடியார்கள் கூட்டத்தில் அவர்களோடு ஒத்தவராய் இருப்பவர் அல்லர்
அவன் இறைவனாம்தன்மையில் முடிந்த நிலையில் நிற்குமா போலே
இவர் அடிமையின் தன்மையில் முடிந்த எல்லையில் நிற்கிறவர் ஆதலின்
அடியே -எனத் தேற்ற ஏகாரம் கொடுத்து ஓதுகிறார்
பிரிநிலை ஏகாரம் ஆகவுமாம் -என்றது
அவர்களோடு ஒப்பூண் உண்ண இருக்குமவர் அல்லர் –
அவர்கள் காலைப் பற்றுமவர் -என்றபடி –
வீடுமாறு -எனபது என் –
புறம்பு உண்டான விஷயத்திலே விடுவது பற்றுவது ஆனா செயலை
இவ்விஷயத்திலும் செய்யவோ –
அந்தோ -நான் பற்றின பேற்றுக்கு -நாலு மூன்று படி-ஐஸ்வர்யார்த்தி -கைவல்யார்த்தி -பகவத் லாபார்த்தி -மூவரையும் -கழித்து – கீழே நிற்கும் செல்வம் -இத்தோடு ஒவ்வாது
என்ன வேண்டுவதே -என்று -அந்தோ -என்கிறார் –
வியன் மூன்று உலகு பெறினும்
காடும் மலையுமான பாகங்களைத் திருத்தி
அனுபவ போக்யமாம் படி செய்து
மூன்று உலகங்களையும் எனக்கு கை யாதப்பு ஆக்கினாலும்
விடுமாறு எனபது என் அந்தோ
செல்வத்துக்கு உலகத்தாரால் விரும்பி போற்றப் பட்டு
ஏற்றுக் கொள்ளப் படுகின்ற தன்மை
உண்டாகையினால் அன்றோ உவமையாக எடுத்துச் சொல்வதற்கு
ஒண்ணததாய் இருக்கும்
இது நான் பற்றின பாகவதர்களுக்கு அடிமை என்பதனோடு ஒவ்வாது -என்ன வேண்டுகிறது-
எடுத்துக் களிக்கவும் ஒவ்வாதே
தகரம் -வைரம் போலே
கொடு மா வினையேன் –
பாகவத செஷத்வமும் -ஐஸ்வர் யமும் ஒப்பிட்டு சொல்ல வேண்டிய பாபம்
அந்தோ –
சொல்லியா தெரிய வேண்டும்
முன்னடியில் பகவான் பெருமை சொல்லி
அப்படிப் பட்டவன் அடியார்
அடிமை செய்வன் போல் அவனை கருதி வஞ்சித்து
தீக்கதிகள் தடுமாற வைக்கும் படி உள்ளவை போனதே
இந்த சதிர் -சாமர்த்தியம் நினைந்தால்
பாகவதர் -சொல்ல வேண்டாமே
நெடு மால் -பெரியான் -அகப் பெரியோன் -சேஷித்வத்தின் எல்லை பிடிக்கிறார்
இவர் செஷத்வத்தின் எல்லையில் நின்று
வியாமோகம் அன்பு
அடியார் அளவும் நிறுத்தும்படி
அடியார்க்கு என்னை ஆட்படுத்தும் விமலன் -இது தானே பெரிய உபகாரம்
மித்ரா பாவமேயாய்
போலியாய் –
பாவலா -பாவனை -போட்கன்
எல்லாம் போயின –
அவித்யாதிகள் அடங்க -தவிர்ந்தன
தவிர்ந்த படி என் என்னில்
வஞ்சித்து தவிர்ந்தன –
இரவில் கலந்து பிரிந்தவன் போலே போயின
அடிமை செய்பவன் போலே அவனை வஞ்சித்து
அவனே ஏமாறும் படி செய்து -வஞ்சித்து கருத
அவனே போக்கி மொத்தமாக போக்க
மொத்தம் தவிர்ந்தன
சர்வபாபேப்யோ மோஷ இஷ்யாமி
வேதமும் வேத வேத்யனும் சொல்லி
அவன் திரு வடிக்கே இதுவானால்
அவன் அடியார் பெருமை சொல்லி
கொடு மா வினையேன் -ஆனந்தத்தில்
பாட்டு கேட்டு பாவி கொன்றான் சொல்வது போலே
பாவி எனக்கு இந்த பாக்யமா
பிரதம அவதியில் இத்தை பற்ற வில்லை பாவி நிந்திதிதது கொள்கிறார் –
அவன் விரும்பிநாரை அன்றோ நாம் விரும்ப அடுப்பது
ஆஸ்ரித வ்யாமுக்தன்
அடியே -கூடும்
ஒப்பூண் உன்ன ஆசை கொள்ள வில்லை
அடியார்க்கு என்னை ஆட்படுத்த -சமமாக இல்லை
அடியே -அது ஒன்றே வேணும்
காலை பற்றுகிறார்
விடுமாறு எனபது என்
புறம்பு உண்டான சப்தாதி விஷயம் போலே இல்லை
அந்தோ –
ஐஸ்வர் யம் தகரம்
இது தங்கம்
ஒவ்வாது சொல்ல வேண்டி இருக்கிறதே அந்தோ
த்ரை லோக்யம் -காடு மேடு திருத்தி கொடுத்தாலும்
லோகம் பரிகிரகித்த காரணம் இவர் சொல்ல வேண்டி உள்ளதே –
—————————————————————————————————————————————————————-
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply