ஆசாரமே போருமோ
செய்கின்ற தொழிலை அறிவிக்கிற நூலைப் பார்த்து
அனுஷ்டானத்துக்கு வேண்டுவது
அறிந்து இருக்க ஒண்ணாதே –
எல்லா நூல்களையும் ஆராய்ந்தவரும்
எல்லா வேதங்களையும் ஆராய்ந்தவரும்
ஆன ஜனகர் -எனபது அன்றோ
இக்குடியில் உள்ளார் படி
மிதிலாதிபதிம் சூரம் ஜனகம் சத்ய விக்ரமம்
நிஷ்டிதம் சர்வ சாஸ்த்ரேஷூ சர்வ வேதேஷூ நிஷ்டிதம் -பால -13-21-
இதற்க்கு தக்க வேதார்த்த தத்வ ஞானம் உண்டாக வேணுமே என்ன –
அதற்கும் ஒரு குறை இல்லை -என்கிறாள் –
————————————————————————————————————————————————————–
பரவாள் இவள் நின்று இராப்பகல்
பனி நீர் நிறக் கண்ணபிரான்
விரவாரிசை மறை வேதியரொலி
வேலையின் நின்று ஒலிப்ப
கரவார் தடந்தொறும்தாமரைக்கயம்
தீவிகை நின்றலரும்
புரவார் கழனிகள் சூழ்
திருப் புலியூர்ப் புகழ் அன்றி மற்றே
———————————————————————————————————————————————–
பரவாள் இவள் நின்று இராப்பகல்
இவள் அடைவு கெட பேசா நின்றாள் –
இராப் பகல் பேசா நின்றாள் –
இவள் கலவிக்கு வேறு பிரமாணம் தேட வேண்டுமா –
இவள் வார்த்தையே அன்றோ பிரமாணம் –
பனி நீர் நிறக் கண்ணபிரான் –
குளிர்ந்த வடிவையும்
அப்படியே இருக்கும்சீலத்தையும்
உடையவள் –
விரவாரிசை மறை –
விரவு ஆர் இசை மறை –
எங்கும் ஒக்க பரம்பி மிக்கு இருந்துள்ள ஒலியை உடைத்தான வேதம் –
அன்றிக்கே
விரைவார் -எனபது பாடம் ஆயின்
விரை என்று இனிமையாய்
வார் -என்று அதில் மிகுதியாய்
இசைமறை என்று சாம வேதத்தை குறிக்கிறாள் -என்னுதல் –
வேதியரொலி-
வேத ஒளியும்
வேதார்த்தத்தை விசாரம் செய்கின்றவர்களின் ஒலியும்-
வேலையின் நின்று ஒலிப்ப –
கடல் ஒலியைக் காட்டிலும் நின்று ஒலிப்ப –
கரவார் தடந்தொறும் –
முதலை மிக்கு இருந்துள்ள பொய்கை தோறும் –
தாமரைக்கயம் தீவிகை நின்றலரும் –
தாமரையின் திரள் நிலை
விளக்குப் போலே அலர்ந்து நிற்கும் –
கயம் -பெருமை -அல்லது -திரள் –
புரவார் கழனிகள் சூழ் –
தலைத் தரப் பெருக்காய் -இருக்கிற வயல்கள் சூழ்ந்த –
பட்டர் -அவ் ஊரில் பிராமணர்கள் இறுத்து மாய்கிறார்கள் –
இவர் உஊருக்கு சிறப்பு சொல்லுகிறார் அன்றோ –
என்று அருளிச் செய்வர்
திருப் புலியூர்ப் புகழ் அன்றி மற்றே பரவாள் இவள் நின்று இராப்பகல்
அவ் ஊரில் உள்ளார் உடைய வேத ஒலியும்
வேத விசாரம் செய்கின்ற ஆரவாரமும்
அவ் ஊரில் இனிமையுமே அன்றோ இவள்
அடைவு கெடச் சொல்லா நிற்பது-
பிரயோக வ்ருத்தி பார்த்து அனுஷ்டானம் மட்டும் போராதே
வேதார்த்த ஞானம் உண்டோ என்ன
சர்வ சாஸ்த்ரேஷூ நிஸ்திதம்-
அதுக்கும் குறை இல்லை என்கிறாள்
திருப் புலியூர் புகழே பேசி
இவளுக்தியே அன்றோ பிரமாணம்
வேத ஒலி எங்கும்பரவி
விரைவார் இனிமை சாம வேத ஒலி
வேத ஒலியும் வேதார்த்த விசார ஒலியும்
சமுத்ரம் ஒலி மிக்கு
குளம் -தாமரை பூத்தது
நெருப்பு போலே
கரவார் தடம் முதலைகள் மிக்கு உள்ள தாமரை கயம்
கயம் பெருமை திரள்
கழனிகள் சூழ்ந்து
பிராமணர் யாக யஞ்ஞம்
கடன் தீர்க்க –
தேவ கடன் அடைக்க யஞ்ஞம்
அத்யாயனம் ரிஷி கடன் அடைத்து
கஷ்டம் பட்டு செய்வதை ஊருக்கு அழகாக ஆழ்வார் சொல்லி பட்டர் அருளுவார்
போக்யதையே வாய் புலற்றிக் கொண்டு இருக்கிறாள் இவள் –
—————————————————————————————————————————————————————————-
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply