வண்ண மருள்கொள் அணிமேக வண்ணா! மாய அம்மானே!
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே! இமையோர் அதிபதியே!
தெண்ணல் அருவி மணிபொன்முத் தலைக்கும் திருவேங் கடத்தானே!
அண்ணலே! உன் னடிசேர அடியேற்கு ஆஆ என்னாயே.
பொ-ரை :- கண்டார் மனம் மயக்கத்தைக் கொள்ளுதற்குக் காரணமான வடிவையுடைய அழகிய மேகவண்ணா! ஆச்சரியத்தையுடைய அம்மானே! மனத்திலே புகுந்து இனிக்கின்ற அமுதே! நித்திய சூரிகளுக்குத் தலைவனே! தெளிந்த நல்ல அருவிகளானவை மணிகளையும் பொன்னையும் முத்துக்களையும் கொழித்துக்கொண்டு வருகின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவனே! அண்ணலே! உன் திருவடிகளைச் சேர்வதற்கு, உனக்கு அடிமைப்பட்ட எனக்கு ஐயோ! ஐயோ!! என்று திருவுள்ளம் இரங்கியருள்வாய்.
வி-கு :- மருள்கொள் வண்ணம் என்க. “ஆஆ” என்பது, இரக்கக் குறிப்பு. என்னாய் என்பது, விதிவினை; இரங்கி யருளவேண்டும்.
ஈடு :- மூன்றாம்பாட்டு. 3“அருளாய்” என்றீர்; இங்ஙனே நினைத்தபோதாக அருளப்போமோ? என்ன : வேறுபட்ட சிற்றின்பங்களில் போகாதபடியான ஞாரலாபத்தைப்பண்ணித் தந்த உனக்கு, பேற்றினைத் தருதல் பெரிய பணியோ? என்கிறார். என்றது, என்னால் வந்த குறை அறுத்த உனக்கு, உன்னால் வரும் குறை அறுத்தல் பெரிய பணியோ என்றபடி.
1வண்ணம் அருள்கொள் அணி மேகவண்ணா – வண்ணமானது – பிரகாரமானது, அருள்கொண்டிருப்பதாய், காண்பதற்கு இனிய மேகம்போன்ற வடிவையுடையவனே! அன்றிக்கே, வண்ணமானது – வடிவமானது, கண்டார் நெஞ்சினை இருளப் பண்ணக் கூடியதாயிருக்கை என்றுமாம். 2“மைப்படி மேனி” திருவிருத்தம், 94.-அன்றோ. அங்ஙனம் அன்றிக்கே, 3மேகத்தினுடைய அகவாய் கல் என்னும் படியாயிற்றுத் திருமேனியில் உண்டான திருவருளின் மிகுதி இருக்கிறபடி என்னலுமாம். மாய அம்மானே – வெறும் வடிவழகே அன்றிக்கே, ஆச்சரியமான குணங்களாலும் செயல்களாலும் பெரியன் ஆனவனே! எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே – 4தெய்வப்பிறவியிலே பிறந்து ஒரு சாதனத்தைச்செய்து அதனாலே பெற்றுப் புஜிக்கும்போது இனிதாகை அன்றிக்கே, 5இன்னார்க்குஎன்று அன்றிக்கே நினைத்த மாத்திரத்தாலே தானே வந்து புகுந்து இனிதாகை. 1உள்ளுந்தொறும் தித்திக்கும் அமுது அன்றோ.
இமையோர் அதிபதியே – 2மதுவிரதம் போலே, இந்த அமிருதமே ஜீவனமாக இருக்குமவர்கள். தெள் 3நல் அருவி மணிபொன் முத்து அலைக்கும் திருவேங்கடத்தானே – தெளிந்து நன்றான அருவிகளானவை விலக்ஷணமான மாணிக்கங்களையும் பொன்களையும் முத்துக்களையும் கொழித்து ஏறட்டுகிற திருமலையிலே நின்றருளுகிற சர்வேசுவரனே! அண்ணலே – திருமலையிலே வந்து நின்று எனக்கு உன் சேஷித்வத்தை 4உதறிப்படுத்தவனே! 5இமையோர் அதிபதியாயிருந்து வைத்து வண்ணமருள்கொள் அணிமேக வண்ணனாய் மாய அம்மானாய்த் தெள் நல் அருவி மணி பொன் முத்து அலைக்கும் திருவேங்கடத்தானாய் அண்ணலாய்க்கொண்டு, எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே என்கிறார். உன் அடிசேர அடியேற்கு ஆஆ என்னாய் – 6கிட்டி நின்று முறையை அறிவித்த நீ, பேற்றினையும் செய்து தாராய்! உன் திருவடிகளை அடையும்படி வேறுகதி இல்லாத எனக்கு ஐயோ ஐயோ என்று திருவருளைச் செய்தருளவேண்டும். உன்னடி அன்றோ? 7உபாயமுமாய் உபேயமுமாய்ப் போக்கியமுமான திருவடிகளைச் சேரும்படி கிருபை செய்தருளாய்.
அருளப் போமோ கேட்டானாம்
காலம் உண்டே -சொன்ன போது அருள முடியுமா
வ்யதிரிக்த விஷயம் -உள்ளம் தேறி அடியை அடைந்து
ஞான லாபம் பண்ணி அருளி -மானச அனுபவம் காட்டிய பின்பு
சாஷாத்காரமாக காட்டுவது எளியது தானே
என்னால் வந்த குறையையே முடித்தாய்
உன்னால் வந்த குறை தீர்ப்பது கஷ்டமா
மேக வண்ணா -நிறமும் ஸ்வா பம் –
மாய அம்மானே
எண்ணம் புகுந்து தித்திக்கும்
இமையோர் அதிபதி
தெளிந்த அருவிகள் பொன்னையும் முத்தையும் சேர்க்கும்
அண்ணலே
அடியேற்கு ஆ ஆ யென்று அருளாயே
ஆவா யென்று ஆராய்ந்து அருள்
நான் வர வேண்டி இருக்க நீர் வரலாமா
மேக வண்ணா –
அருளே வடிவமான மேகம் போலே
கண்டார் நெஞ்சை இருளைப் பண்ணும்படி மைப்படி மேனி
மயக்கும் படி இருள் அன்ன மா மேக வண்ணா
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்து
உள்ளம் அவனை போல் இருக்க முடியாதே
கிருபை உன்னாலும் ஏறிட்டு கொள்ள முடியாதே
நாச்சியார் விழி விழிக்க ஒண்ணாதே பட்டர்
ஸ்வா தந்த்ர்யம் கலசி இருக்கும் காருண்யம்
நிக்ரஹமே அறியாத நாச்சியார் போலே ஆக முடியாதே
கண் காட்டினால் கதவு திறக்கும் இன்றும் ரேகை எல்லாம் மாறிப் போனதே
மாய அம்மானே குண செஷ்டிதங்களால்-அழகு மட்டும் இல்லை -ஆசார்யம்
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே
மனோ ரதம் –
இனிமையான வஸ்து அனுபவிக்க சாதனா அனுஷ்டானம் செய்ய வேண்டுமே
ஊர்வசி போகம் ஜ்யோதிஷ்ட ஹோமம்
அசுவ மேத யாகம் -வதம் செய்து குதிரை கட்டி படுத்து போன்ற கஷ்டங்கள் உண்டே
எண்ணம் புகுந்து தித்திக்கும் -யார் எண்ணம் சொல்லாமல் -இன்னார்க்கு யென்று இல்லாமல்
எல்லார் எண்ணத்திலும்
மனோ ரதம் நினைக்கும் காலத்திலேயே இனிக்கும்
சுசுகம் கர்த்தும் த்யாநிப்பதே ஆனந்தம்
அபிமத விஷயத்தை நெஞ்சில் வைப்பவன் போலே
உள்ளும் தோறும் தித்திக்கும் அமுது -கூப்பிடுவாருக்கு காத்து இருப்பவன் இல்லை
இமையோர் அதிபதி -நாடாக உடையவன் அப்படி உள்ளுவாரை
இன்று வந்த அடியாருக்கும்
மது வரதம் போலே இவ்வமுதமே ஜீவனமாக இருக்கும் நித்யர்
கோதில் அடியார் -சாதகப் பறவை போலே
தெளிந்த அருவி –
மாணிக்கம் -பொன் -முத்தகளை
செழு மா மணிகள் சேரும்
அனந்தாழ்வான் மா முனிகள் போல்வார் வந்து சேர்ந்த திருமலை
அண்ணலே -சேஷித்வம் உறுதிப் படுத்தி
பரம பத நிலை விட கைக்கு எட்டும் இடத்தில் அனைவருக்கும் காட்டி அருளி
ஸ்பஷ்டமாக காட்டி
உன் அடி சேர் வண்ணம் அடியேற்கு ஆவா என்னையே
கிட்டி நின்று உறவையும் காட்டி அருளி
முறை சேஷி சேஷ பாவம்
பிராப்தி கைங்கர்யம் வேண்டுமே
ஆவா என்னாயே- தயை செய்து அருளி
ஐயோ ஐயோ யென்று தயை செய்து அருளுவாய்
இரங்கி
தேவாதி தேவனை நாம் சேவித்தல் ஆ வா யென்று ஆராய்ந்து
மாறி பாசுரத்திலும் ஆ வா
தயை செய்து அருளுவாய்
உன் அடி அன்றோ பிராபகம் பிராபகம் போக்கியம்
சேரும்படி
நீயே ஆராய்ந்து
அடி சேர் வண்ணம்
வார்த்தைகளும் போக்கியம் காட்டி அருளி
24000 படி –
ஐயோ
வடிவு அது
குண செஷ்டிதங்கள் அவை
ரச்யத்தை அது
மேன்மை அது
சௌலப்யம் அது
இவ்வளவையும் காட்டி அருளிய பின்பு
அனுபவம் கொடுத்து அருள வேண்டாமா –
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply