ஸ்ரீ பெரிய திருமொழி-2–6-9-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

பிணங்கள் இடு காடதனுள்  நடமாடு பிஞ்ஞகனோடு
இணங்கு திருச் சக்கரத்து எம்பெருமானார்க்கிடம் விசும்பில்
கணங்கள் இயங்கும் மல்லைக் கடல் தல  சயனம்
வணங்கும் மனத்தாரவரை வணங்கு என் தன் மட நெஞ்சே-2-6-9-

மல்லை -பெருமை உள்ள

——————————

வியாக்யானம் –

பிணங்களடு காடதனுள்  நடமாடு பிஞ்ஞகனோடு இணங்கு திருச் சக்கரத்து எம்பெருமானார்க்கிடம் –
மனிச்சு கலவாத நெஞ்சை உடைய
ருத்ரனோடு கூட –
ஸ்மசாந பூமியிலே ஆடா நின்றுள்ள
ருத்ரனோடே கூட –
அபிமான உபஹதரானவர்களுக்கும்
நித்ய ஸூரிகளுக்கும் ஒக்க
திருமேனியில் இடம் கொடுத்து இருக்கும் நீர்மையைச் சொல்லுகிறது –
திரு வாழி ஆழ்வானைச் சொல்லுகிற இடம்
நித்ய ஸூரிகளுக்கும் உப லஷணம்-

விசும்பில் கணங்களி யங்கும் மல்லைக் கடல் தல  சயனம் –
இங்கே வந்து சாய்ந்து அருளின நீர்மையை
அனுசந்தித்து நித்ய ஸூரிகள் சஞ்சரிக்கிற படியை
சொல்லிற்றாகவுமாம் –

அன்றிக்கே
ஆகாசத்தில் போக பிரதானரான
யஷ கந்தர்வர்கள் சஞ்சரியா நின்றுள்ள
பெருமையை உடைய திருக் கடல் மல்லையை –

வணங்கும் மனத்தாரவரை –
தொழும் நெஞ்சு உடையாரை –

வணங்கு என் தன் மட நெஞ்சே –
அவர்கள் தொழும் விஷயத்தை தேடி இராதே
உனக்குத் தொழுகைக்கு விஷயம்
அவர்கள் தாங்கள் கிடாய்-

—————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading