ஸ்ரீ பெரிய திருமொழி-2-6-3-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

(வலமங்கை பெருமாள் -ராஜாக்காக -இங்கே சேவை -ஹரி கேசன் -பக்தி -கிழவராக வந்து பசி தீர்க்க –
வரண கலாபம் –
புண்டரீக ரிஷிக்காக –தலைமாடு
புஜங்க சயனம்
சித்திரை விசாகம்
நில மங்கைத் தாயார்
பூதத்தாழ்வார் திரு அவதாரம்
மல்லபுரீசாய கமலால வஷஸே ஞானப் பிரபா ஸ்வரூபாயா -ஞான ஒளி )

ஏனத்தின் உருவாகி நிலமங்கை எழில் கொண்டான்
வானத்திலவர் முறையால் மகிழ்ந்தேத்தி வலம் கொள்ள
கானத்தின் கடல் மல்லைத் தல சயனத்துறை கின்ற
ஞானத்தின் ஒளி யுருவை நினைவார் என் நாயகரே -2-6-3-

வலம் கொள்ள–அனுகூல கைங்கர்யம் கொள்ள

—————————————————————-

ஏனத்தின் உருவாகி நிலமங்கை எழில் கொண்டான்
அப்போது ஏறிட்டுக் கொண்ட வடிவை காட்டி
பழைய வடிவை அழித்தான்-
அபிமத விஷயத்தோடே கலக்கைக்காக
அவர்கள் உகக்கும் படியே ஒப்பிப்பாரைப் போலே –
படுக்கைப் பற்றை நோக்கி பிரதான மகிஷிகள் பக்கல் முகம் பெறுவாரைப் போலே
மஹா வராஹமான  வடிவில் எழிலைக்  காட்டி
இவள் எழிலைக் கொண்டான் –
(கோல வராஹம் ஒன்றாய் -பெரும் கேழலார் -புண்டரீகம் )

பூமிப் பிராட்டி உடைய விபூதியை பிரளயம் கொள்ள
அத்தை எடுக்கைகாக
நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு வந்து எடுத்து நோக்கி
நித்ய ஸூரிகள் நடுவே ஓலக்கம் இருக்கக் கடவன்
இவ் வடிவைக் கொண்டது நமக்காக விறே என்று
அந் நீர்மையிலே தோற்று எழில் இழந்தாள் ஆயிற்று –

வானத்திலவர் –
பரமபதத்தில் நித்ய ஸூரிகள் –

முறையால் மகிழ்ந்தேத்தி வலம் கொள்ள –
இது நமக்கு நன்று என்னும் புத்தியாலே இறே இங்குள்ளார் ஏத்துவது
ப்ரீதி பூர்வகமாக ஏத்துவார் அவர்கள் இறே

முறையால் –
எங்கேனும் புகுரில் முறை தப்பாமல் ஏத்துவர்கள் இறே அவர்கள் –
பரம பதத்தில் அடிமை செய்யும் க்ரமத்தில் ஏத்தி
அநு கூல வ்ருத்தி பண்ண –
(அவன் எப்படி அவதாரம் பண்ணினாலும் -ஜென்ம கர்ம மே திவ்யம் -அவதார ரஹஸ்யம் அறிந்தவர்கள்)

கானத்து இத்யாதி –
ஸ்ரீ பூமிப் பிராட்டி எழில் இழக்க
நித்ய ஸூரிகள் ஏத்தா நிற்க –
இவற்றை அடைய காற்க்கடைக் கொண்டு
தன் ஜாதிக்கு அநு ரூபமாக காட்டை விரும்பினான் ஆயிற்று –
ஏனம் ஆனதுக்கு அநு ரூபமாக காட்டை விரும்பினான் –
(மேற்கு காடு கிழக்கு கடல் அன்றோ இங்கு )

கடல் மல்லைத் தல சயனத்து –
பிரளயம் வந்தால் உதவப் பார்த்து இருக்க ஒண்ணாது
என்று ஏற்கவே இவற்றை ரஷிக்கும்படியை அனுசந்தித்துக் கொண்டு இருக்கிறவனை –

ஞானத்தின் ஒளியுருவை –
ஞான ஸ்வரூபனாய்  உள்ளவனை – (உரு -ஸ்வம் ரூபம் -ஸ்வரூபம் )

நினைவார் என் நாயகரே –
ஒருதலைக் காமமாய் போகாமே
இவன் வந்து கிடக்கிறது நமக்காக என்று தாங்களும்
நினைக்குமவர்கள் எனக்கு ஸ்வாமிகள் –
அவர்கள் ஆளாத போது
வேறு சிலருக்கு சேஷ பூதர் அல்லோம் –
(ஏவ காரம் -இதில்
கீழே ஆள்வார் -கைங்கர்யம் கொள்வார்
கொள்ளா விட்டாலும் இவர்களே நாயகர் )

—————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading