திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-9-1-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

ஒன்பதாந் திருவாய்மொழி – “நீராய்”

முன்னுரை

    ஈடு :- 1“எங்குச் சென்றாகிலும் கண்டு” என்றும், “வானவர் கோனைக் கண்டு” என்றும் தூதுபோகச்சொன்னார்; அவை போக மாட்டாதபடி தம்முடைய துயர ஒலியாலே அழித்தார்; 2“மரங்களும் இரங்கும்வகை” திருவாய். 6. 5 : 9.-என்று அறிவில் பொருள்கள் இரங்காநின்றால், சிறிது அறிவையுடைய பறவைகள் அழியக் கேட்க வேண்டா அன்றே, 3“ஊற்றின்கண் நுண்மணல்போல் உருகா நிற்பர் நீராய்” திருவாய்.
6. 8 : 11.
-என்றது, தூதரை ஒழிய அல்லவே. ஆகையாலே, தம் பக்கத்திலே கால் நடை தந்து போவார் இல்லையே. 4“அறிவில் பொருள்களுங்கூட அழிகிற இடத்தில், பரம சேதனனானவனுக்குச் சொல்லவேணுமோ?” என்று பார்த்து, தம் மிடற்று ஓசையை இட்டு அழைத்துக் கொள்ளப் பார்க்கிறார். 5தம்முடைய துயரத்தைக் காட்டுகின்ற ஓசை கிடக்க, வேறு ஒருவர் போகவேண்டும்படியாய் இருந்ததோ? கலங்காப் பெருநகரமான ஸ்ரீ வைகுண்டத்திலும் தரிக்க ஒண்ணாத படி, கால்குலைந்து வரும்படி பெருமிடறுசெய்து கூப்பிடுகிறார். 7இனித்தான், தூதுபோவார்க்குக் காலாலேயாதல் சிறகாலேயாதல்போகவேண்டுகையாலே தடை உண்டு; இவர் மிடற்று ஓசைக்குத் தடை இல்லை அன்றோ. 1இவர் படுகிற வியசனத்துக்குக் காரணம் சொல்லப்போகாது, பிராட்டி சிறை இருந்தமைக்குக் காரணம் சொல்லப்போகாதவாறு போலே. 2அவள் இருப்பு பிறர்மேல் வைத்த திருவருளாலே ஆனாற்போலே, இவருடைய வியசனமும் பிறர்மேல் வைத்த திருவருளுக்குக் காரணமாய் இருக்கிறபடி. 3அவள் சிறையிருந்தபடியை ஸ்ரீ வால்மீகி பகவான் எழுதிவைக்க இன்று நாடு எல்லாம் வாழுமாறு போலே, அன்று இவர்தாம் வியசனப் பட்டாரேயாகிலும் இவர் அருளிச்செய்த பிரபந்தங்கள் உலகத்திற்குத் தண்ணீர்ப்பந்தலாயிற்றது. 4திருக்குழல் ஓசையாலே திருவாய்ப் பாடியில் பெண்கள் எல்லாம் பட்டனவற்றைத் தம்மிடற்று ஓசையாலே அவன் படும்படி பண்ணுகிறார்.

5“வாரீர்! நீர் நம்மை இருந்த இடத்தே இருக்க ஒட்டாமல் இங்ஙன் படுத்துகிறது என்? நாம் உம்மை விட்டுத் தூரப்போனோமோ? ஏதேனும் ஒன்றைப் பற்றினாலும் அது நம்மைப் பற்றிற்று என்று சொல்லலாம்படி இருக்கிற உலகமே உருவமாக இருக்கும்தன்மையைக் காட்டினோமே” என்று அவன் திருவுள்ளமாக; அதில் குறை என்? நீ உலகமே உருவமாய்க் கொண்டிருக்கிற இந்த ஞானம் எனக்கு இல்லையோ? இந்த ஞானந்தானே அன்றோ “அசாதாரண ஆகாரத்தையும் காணவேணும்” என்னப் பண்ணுகிறது; ஆதலால், எனக்குப் பேறானது கிடக்க, அல்லாதனவற்றைக் காட்டினால் பிரயோஜனம் இல்லை என்கிறார். 1அதுவும் உன் ஐசுவரியத்திற்குப் புறம்பு அல்லாமையாலே வேணுமாகில் அறிதல் செய்கிறேன்; அதனால் வந்தது உன்னதானவற்றை ‘என்னது’ என்று இருக்கிற மயக்கம் நீங்குகிறது. 2அருச்சுனனும் ஸ்ரீ விசுவரூபம் கண்ட உடனே “உம்மைக் கிரீடத்தையுடையவராயும் பார்ப்பதற்கு நான் விரும்புகிறேன்; பல கைகளையுடையவரே, விசுவரூபத்தையுடையவரே, நான்கு கைகளுடன் கூடின அந்த உருவமாக ஆகக்கடவீர்”“கிரீடினம் கதினம் சக்ரஹஸ்தம் இச்சாமி த்வாம் த்ருஷ்டும் அஹம்ததைவ
தேநைவ ரூபேண சதுர்புஜேந ஸஹஸ்ரபாஹோ பவ விஸ்வமூர்த்தே”-என்பது, ஸ்ரீ கீதை, 11 : 46.

என்கிறபடியே, அசாதாரணமான வடிவை எனக்குக் காட்டவேணும் என்றான் அன்றோ. 3என்னுடைய துயர ஒலியைக் கேட்டு இரங்கி வந்திலையாகிலும், உன்னுடைய விபூதி அழியாமல் நோக்கவேணுமாகில் வா என்கிறார் என்றுமாம். 4இவருடைய துயர ஒலிதான் அவனுக்கு உபய விபூதியிலும் குடி இருப்பு அரிதாய்க்காணும் இருக்கிறது.-

நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்
கூரார் ஆழி வெண்சங் கேந்திக் கொடியேன்பால்
வாராய்! ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே.

பொ-ரை :- தண்ணீராகிப் பூமியாகி நெருப்பாகிக் காற்றாகி நீண்ட ஆகாசமாகிச் சிறப்புப் பொருந்திய சூரிய சந்திரர்களாகிச் சிவனாகிப் பிரமன் ஆனாய்; மண்ணுலகத்தாரும் விண்ணுலகத்தாரும் மகிழும்படியாகக் கொடியேனாகிய அடியேனிடத்து, கூர்மைபொருந்திய சக்கரத்தையும் வெண்மை பொருந்திய சங்கையும் கைகளிலே ஏந்திக்கொண்டு ஒருநாள் வரவேண்டும்.

வி-கு :- உலகமே உருவமாக இருக்கும் தன்மை, முதல் இரண்டு அடிகளில் கூறப்பட்டது. மகிழ ஏந்தி வாராய் என்க. வாராய் – வர வேண்டும்; விதிவினை. இத் திருவாய்மொழி, கலிநிலைத்துறை.

ஈடு :- முதற்பாட்டு 1“உலகமே உருவமாயிருக்கும் தன்மையைக் காட்டித் தந்தோம் அன்றோ” என்ன, அது போராது; அசாதாரணமான வடிவைக் காணவேண்டும் என்கிறார்.

நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய் சீர் ஆர் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயன் ஆனாய் – 2“இது அறியாமல் அவ் வருகே ஆசைப்படுகிறார் என்று கொள்ள ஒண்ணாதபடி, தாம் அறிந்தமை தோற்ற விண்ணப்பம் செய்கிறார். நீராய் – 3நாராயணன் ஆவது பண்டே அறிவன் என்கிறார். “நீர்தோறும்பரந்துளன்” –திருவாய். 1. 1 : 10. “ஆபோ நாரா
இதிப்ரோக்தா:, நீர்கள் நாரம் என்று சொல்லப்பட்டன” என்பது ஈண்டுஅநுசந்தேயம்.

 என்றாரே யன்றோ மேல். 1“அந்தப் பரமாத்மா முதலில் தண்ணீரையே படைத்தார்” என்கிறபடியே, முதல் முதல் தண்ணீரைப் படைத்துப் பின்னர் மண் முதலான பூதங்களை உண்டாக்கி, 2இவற்றைக்கொண்டு காரியம் கொள்ளுமிடத்தில் ஒன்றில் ஒன்று அதிகமாக வேண்டி இருக்குமன்றோ; 3“ஐம்பெரும் பூதங்களும் ஒன்றில் ஒன்று கலத்தல் பெற்றன; ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் பெற்றுள்ளன” என்றே அன்றோ படைக்கும் முறைதான் இருப்பது;ஒன்றில் ஒன்று அதிகமாக’ என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார்
‘ஐம்பெரும் பூதங்களும்’ என்று தொடங்கி.-“ஸமேத்ய அந்யோந்ய ஸம்யோகம் பரஸ்பர ஸமாஸ்ரய:”-  என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 1. 2 : 54.

    இந்தச் சுலோகத்தில் “பரஸ்பர ஸமாஸ்ரய:” என்றதனால், ஆஸ்ரய
ஆஸ்ரயி பாவத்தாலும், ஆதார ஆதேய பாவத்தாலும் ஒன்றில் ஒன்று
அதிகமாக இருக்கவேண்டும் என்பது போதரும்.

இவைதாம் ஒருபொருளும் அன்றே; பல பொருள்களாக இருக்கச் செய்தே ஒரே பொருளாக்கி ஒரு காரியம் கொள்ளவேணும் அன்றோ: 2அது செய்யும்போது, குலாலனானவன் மண்ணும் நீரும் செதுகும் கூட்டிச் சேரத் துகைத்துக் குடம் முதலான பொருள்களாய்க்கொண்டு தோற்றுவிக்குமாறுபோலே, தண்ணீரை உண்டாக்கி, 3அது நீர்ப்பண்டமாகையாலே அதனோடு கடினமான பொருளைக் கூட்டி, பின்னையும் நெகிழ்ந்திருக்கையாலே அதனைச் சிறிது வலிக்கைக்காக ஒளிப்பொருளை உண்டாக்கி, அதுதான் மிகைத்துத் தீயுமளவானவாறே அதனை ஆற்றுகைக்குக் காற்றினை உண்டாக்கி, அது தனக்குச் சஞ்சரிக்கைக்காக இடத்தைக்கொடுக்கின்ற ஆகாசத்தை உண்டாக்கி. இவ்வளவும் முதலில் சங்கல்பந்தன்னையே கொண்டு அண்டசிருஷ்டியைப் பண்ணி நின்றது. 4இனி, பெரியதொரு மாளிகையைச் சமைத்து இருள் உறைய விட்டுவைக்க ஒண்ணாதே அன்றோ; அதற்கு இரண்டு விளக்குகள் இட்டாற்போலே சந்திர சூரியர்களை உண்டாக்கி. 5நீர்க்களிப்பு அறுகைக்கும் வளர்ச்சி பெறுகைக்குமாக இருவரையும் உண்டாக்கினபடி. அண்டங்களுக்குள்ளே வாழ்கின்றவர்களாய்க்கொண்டு நின்று, ஒருவன் மனைந்து கொண்டுவர ஒருவன் அழித்துக்கொடு வரும்படி பிரம ருத்திரர்களை உண்டாக்கி. ஆயின், சிவனை முறைபடச்சொல்லுவான் என்? என்னில், அழித்தலை முன்னாகக் கொண்டேயன்றோ படைத்தல்தான் இருப்பது. 1‘நீராய் நிலனாய்’ என்றதனோடு ஒக்க, சீரார் சுடர்கள் இரண்டாய்’ என்கையாலே, 2“யாதொருவனுக்கு ஆத்மாக்கள் எல்லாம் சரீரமோ, யாதொருவனுக்கு மண் முதலியவை சரீரமோ” என்கிறபடியே, சேதன அசேதனங்கள் இரண்டும் அவனுக்குச் சரீரத்தைப் போன்று பரதந்திரப்பட்டவை என்னுமிடம் சொல்லுகிறது. ‘சீரார் சுடர்கள் இரண்டாய்’ என்றும், ‘சிவனாய் அயனானாய்’ என்றும் ஒற்றுமைப்படுத்திச் சொல்லுகையாலே, 3நியமிக்கப்படுகின்ற பொருளோடு நியமிக்கின்றவர்களாக அபிமானித்திருக்கிறவர்களோடு வாசி அற அவனுக்குப் பரதந்திரப்பட்டவர்கள் என்னுமிடம் சொல்லிற்று. 4உலகத்தைப் படைத்தது உன்னை அடைவதற்காக அன்றோ? உன்னை அடைதலைப் பண்ணித் தந்தால் அன்றோ நீ ஒரு காரியம் செய்தாயாவது? படைப்புக்குப் பிரயோஜனமாவது, எப்பொழுதும் துக்கத்தை அடைந்துகொண்டிருக்கிற ஒருவனை அந்தமில் பேரின்பத்தே கொடுபோய் வைக்கை அன்றோ. அது கிடக்க, இதனை உண்டாக்கியதற்குப் பிரயோஜனத்தை நீ பெறவேண்டாவோ? 5‘நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்ச் சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயன் ஆனாய்’என்று, இவர் தமக்கு ஈசுவர வியாபாரம் அடங்கலும் மனை அடைவே எண்ணுவாரைப்போலே மிக்க பிரகாசமாய் இருக்கிறபடி.

கூர் ஆர் ஆழி வெண் சங்கு ஏந்தி – 1ஸ்ரீ பாஞ்சஜன்யத்தில் வெண்மைபோன்று திருவாழியில் கூர்மையும் இவர்க்குக் கவர்ச்சியாயிருக்கிறபடி 2பகைவர்களைத் துணிக்கத் துணிக்கச் சாணையில் ஏறிட்டாற்போலே கூர்மை மிக்கிருத்தலின் ‘கூர்ஆர் ஆழி’ என்கிறது. 3அசாதாரண விக்கிரஹத்துக்கு லக்ஷணமோ தான் கையும் திருவாழியுமாயிருக்கை. கொடியேன்பால் – 4எனக்கு இங்ஙனே ஒரு நிர்ப்பந்தம் உண்டாவதே! என் சொரூபத்திற்கு விரோதங்காண் நான் பண்ணுகிறது. 5ஸ்ரீ பரதாழ்வானைப்போலே பொகட்ட இடத்தே கிடக்க வல்ல தன்மையனாகப் பெற்றிலேன்; இளையபெருமாளைப்போலே, ‘நில்’ என்ன, “என்னை அடியவனாகக் கொள்” “குருஷ்வமாம்” என்பது, ஸ்ரீராமா. அயோத். 31 : 22.– என்று நிர்பந்திக்கும் தன்மையனாவதே! வாராய் – 6ஆசைப்பட்டாலும் நடக்கவல்லார் வருமித்தனை அன்றோ. ‘வாராய்’ என்ற அளவிலே வந்து கொடு திரியப்போமோ? என்னில், ஒருநாள்-விடாயர் ‘ஒரு கால் நாக்கு நனைக்கத் துளி தண்ணீர்’ என்னுமாறு போலே ‘ஒருநாள்’ என்கிறார். மண்ணும் விண்ணும் மகிழவே –7எனக்காக வந்திலையாகிலும் உன் விபூதி அழியாமைக்கு வா என்கிறார். 8‘மானாவிச்சோலைபோலே ஆவது-மானாவிச்சோலை – மஹா நவமியில் செய்யும் அலங்காரம்.-அழிவதான இதுபோனால் என்செய்யவேணும்?’ என்று இருக்கிறாயாகில், அவ்விபூதியும் அழியுங்காண்; இது அழியவே 1அதுவும் அழிந்ததாமன்றோ. அதுவும் இருக்கச்செய்தே அன்றோ, இது அழிய 2“அந்தப் பரமாத்மா தனித்து இருக்கும்போது சந்தோஷத்தை அடைய இல்லை” என்றது. 3இனித்தான், பிரளயத்துக்கு அழியாது என்ற அளவில், துன்பத்துக்கும் அழியாது என்றதாகாதே! மகிழவே -அழிகை தவிர்ந்து தரிக்கைக்காக.

கதறுகிறார் ஆழ்வார்
பெரும் மிடறு -பரம பதம் வரை கேட்கும் படி
அவை போக முடியாதபடி
பதிகம் கேட்பார் நீராய் உருகுவார் நிகமத்தில்
பறவைகளும் நீர் பண்டமாக உருக
ஆர்த்த்க த்வனியால்
மரங்களும் இரங்கும் வகை மணி வண்ணவோ கூவுமால் –
பரிசரத்தில் கால் நடை தந்து போவார் யாரும் இல்லையே
அசேதனமே உருக பரம சேதனன் கூப்பிட  -ஆற்ற த்வனி கிடக்க
வேறு தூது வேண்டுமோ –
ஸ்ரீ வைகுண்டத்திலும் தரிக்க ஒண்ணாத படி
தெளி விசும்பு திரு நாடு
கலக்குவார் இல்லை
கால் பொருந்தி இருக்க முடியாதபடி
காலால் நடக்க காலோ சிறகோ நன்றாக இருக்க வேண்டுமே
மிடற்று ஓசைக்கு தடை இல்லையே
பிராட்டி சிறை இருந்த ஹேது சொல்ல முடியாதது போலே
இவள் விசனமும்
அவள் விசனம் பிறர் துக்கம் தீர்க்க
சிறை இருந்தவள் ஏற்றம் அது
இவளும் அதே போலே
துக்க துக்க பட பாசுரம் வந்து உலகம் திருந்த
பரன் அனுக்ரகதுக்கும் இலக்கா ஆகுமே –
வால்மீகி ஸ்ரீ ராமாயணம் கொண்டு நாடு எல்லாம் வாழ்வது போலே
மதுர கவி ஆழ்வார் பட்டோலை கொண்டது தண்ணீர் பந்தல் ஆயிற்று –
இவர் துக்கம் கேட்டு அவனும் துக்கம்
குழல் ஓசை கேட்டு கோபிகள் துக்கம் பட்டது போலே
குழலின் மலிய சொன்ன ஆயிரம்  கேட்டு அவனும் வருந்துவானே
வாரீர் நீர் நம்மை இருந்த இடத்தில் இருக்க ஒட்டாது படுத்துகிறீர்
நாம் உம்மை விட்டு தூரப் போனோமோ
ஜகதாகாரம் காட்டினேன் என்றான்
அதில் குறை என்
இந்த ஞானம் எனக்கு உண்டு
அந்த ஞானமே அசாதாரண ஆகாரம் காண -தனிப்பட்ட திவ்ய மங்கள விக்ரக சேவை
இதுவே எனக்கு பிராப்யம்
இதை காட்டாமல் –
அல்லாதவை காட்டுவது அப்ரயோஜனம்
என்னுடைய வஸ்து ஒன்றும் இல்லை என்கிற ஞானம் ஏற்படுகிறது
எல்லாம் உனது ஐஸ்வர்யம் நினைக்க இவை உதவும்
நீராக சேவிக்க ஆசடை உண்டே
பெரிய பணக்காரர் குடும்பத்தார்
அவரை நேராக பார்த்து கலக்க ஆசைப்பட்டது போலே –
அசாதாராண தனிப்பட்ட திவ்ய மங்கள விக்ரஹ சேவை வேண்டும்
கோயிலிலே சென்று இதனால் தான் சேவிக்கிறோம்-
சிந்தனை ஒருங்கி அனுபவிக்க –
பரார்ச்சை -திருக் கோயிலில்
சுயார்ச்சை கிரகத்தில் –
ஆழ்வார்கள் அர்ச்சாவதார சேவை ஈடுபட்டு
அத்யாந்த கிரந்த  நிர்மாணம் -அவபோதனம்
அவபோதனம் பிறர்க்கு சொல்லி
அர்ச்சாவதார சேவை பலன்
இருக்கும் நாள் உகந்து அருளின நிலங்களில் குண அனுபவம் கைங்கர்யத்தில் ஈடு பட்டு போக்குவதே –
உன் அனுபவம் திருப்தி அடைய  நேராக வர வேண்டும் –
விஸ்வரூபம் சேவித்த அர்ஜுனன்
தேனைய ரூபேண-சதுர புஜம் சங்கு சக்கரம் உடன் காட்ட பிரார்த்தித்தான் -சக்ர ஹஸ்தம் கிரீடம் உடன் சேவை –

கொடியேன் பால் வாராய்
வருகிறது இல்லை
வா வர வேண்டும்
இரண்டையும்
சொல்லி –
ஆற்ற த்வனி கேட்டு உன்னுடைய விபூதி அழியாமல் அறுக்க வா
ஆற்ற த்வனியால் உன்னுடைய உபய விபூதியும் அழிக்க
போகிறது
இதற்காகவாவது வர வேண்டும்
குடி இருப்பு அரியதாக இருக்குமே த்வனி
பெரு மிடறு செய்து கூப்பிடுகிறார்
நீராய்
நிலமாய்
தீயாய்
காலாய்
நெடு வானாய்
சிவனாய்
அயனாய்
பிரகாரியாய் இருக்கும் தன்மை காட்டி
கூரார் ஆழி வெண் சங்கு ஏந்தி
இது அறியாமல் அவ்வருகு ஆசைப்பட வில்லை
அறிந்தது எல்லாம் தெரிவிக்கிறார்
நீராய் -நாராயணன் ஆவது பண்டே அறிந்தேன்
நீர்-ஜலம் -ஆபோ-நரத்தில் உள்ளவன் நாராயணன்
நீர் தோறும் பரந்துளன் மயர்வற மதி நலம் அருளி அறிந்து வைத்தாரே
பஞ்ச பூதங்கள்
முதலில் நீர் பிரத்வ்யாதி -ஓன்று ஓன்று அதிகமாக கலசி
பஞ்சீகரணம் பண்ணி –
சிருஷ்டி க்ரமம்-ஒன்றுக்கு ஓன்று தொடர்பு படுத்து –
ஏக த்ரவ்யம் இல்லை இவை
அநேக த்ரவ்யமாக இருந்தும் –
அனந்த பட்டாச்சார்யர் -உரலில் காகிதம் அரைத்து கூழாக்கி வாகனம் செய்வாராம் –
செருகு மண் நீர் சேர துகத்தி கடாகாதிகள் கொண்டு
ஆற்ற காற்றை உண்டாக்கி
சஞ்சரிக்க ஆகாசம் உண்டாக்கி
தத்வம் சிருஷ்டிக்க இந்த க்ரமம்
ஞான வேளை க்ரமம் வேற அனுஷ்டான வேளை க்ரமம் வேற போலே –
அண்ட சிருஷ்டியை பண்ணா நின்றது
மாளிகை சமைத்து இரண்டு விளக்கு போலே சந்திர சூர்யர்களை உண்டாக்கி
நீர்க்கடுக்கை அறுக்க -தேஜோ கார்யம் வேண்டுமே
சிவனாய் அயனாய்

அழித்தும் படைத்தும்
ருத்ரனை முற்பட சொல்லி
அழிந்த வஸ்து அப்புறம் உண்டாகிறது –
ஏற்கனவே இருந்து அழிந்தது –
சிருஷ்டியில் ஆரம்பித்தால் முதல் சிருஷ்டி தப்பான அர்த்தம் உண்டாக்கலாமே
புரம் ஒரு மூன்று எரித்து -முதலில் சொல்லி
இவனுக்கு சமம் இல்லை
நீராய் -என்றதுடன் ஒக்க –
சேதன அசேதனங்கள் எல்லாம் சரீரம்
சுடர்கள் இரண்டாய் நியமிக்கப்படுபவர்கள் -அவர்கள் போலே சிவனும் பிரமனும்
ஈசிதவ்யங்கள் ஈஸ்வர அபிமானிகளும் -வேறு பாடி இன்றி பரர்தந்த்ரம்
சாமான அதிகாரம் –
ஜகத் சிருஷ்டி -ஸு ப்ராப்தி
பிரயோஜனம் -நித்ய துக்கிகளை அந்தமில் பேர் இன்பம் பெற வைக்க தானே –

பிராட்டி ஜீவாத்மா -தப்பாக சொல்லி
பிரளய காலத்தில் அழிய மாட்டாள் –
அடிப்படை அறியாமல்
ஜீவாத்மாவும் நித்யம்
ஸ்வரூபம்  ஸ்வாபம் விகாரம் அறியாமல்
நித்ய விபூதி அறியாமல் வேதாந்த விசாரம் செய்து –
ஒன்றும் யாதும் இல்லாத அன்று ஒன்றி இருக்க
அங்கெ அசித் அவிசிஷேதம்
அதிலே அவனுக்கு பிரீதி இல்லை
கைங்கர்யமே உகந்த அடிமையே புருஷார்த்தம்
ஞானம் பெற்று வர வேண்டும்
கோமா உடன் கூடி இருக்குமா போலே கூடாதே
ஈஸ்வர வியாபாரம் எல்லாம் மனை அடைவே எண்ணிக் காட்டுக் காட்டுகிறார் –
பிரத்யஷ ஞானம்
திரு ஆழிக்கு கூர்மையும்
சங்குக்கு வெண்மையும் இவருக்கு ஆகர்ஷம்
பிரதி பஷம் துணிக்க துணிக்க சாணை ஏறிட்டால் போலே கூர்மை மிகுந்து
கொடியேன் -வாராய் கூப்பிடுவதே பாவம்
அவனே வர இருக்க பரதனை போலே பொகட்ட இடத்தில் இல்லாமல்
ஆசை பட்டாலும் என்னால் நடக்க முடியாது
நீ வரலாமே -சக்தி உண்டே
வந்து கொடு திரியப் போமோ என்றானாம்
ஒரு நாள் -ஒழியாமல் என்ன கார்யம்
உளன் ஆக
விடாயார் சொட்டு நீர் கேட்பது போலே
எனக்காக வந்திலை என்றாலும் உபய விபூதி அழியாமல் இருக்க வா
மண்ணும் விண்ணும் மகிழ –
அழியாமல்
லீலா விபூதி அழியட்டுமே
மாநாவிச் சோலை மகா நவமி கொண்டாட்டம்
நவராத்திரி போலே ஆக்கி அழித்து-
அலங்காரம் போலே லீலா விபூதி
மண்ணும் மட்டும் இல்லை
விண்ணும் நித்ய விபூதியும் அழியும்

அதுவும் இருக்க செய்தே -இது அழிந்தால்
ச ஏகாகி ந நமீதா சந்தோஷம் இன்றி இருப்பையே
அது தரிக்க நீ வர வேண்டும்-

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading