திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-2-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

வல்லிசேர் நுண்ணிடை ஆய்ச்சியர் தம்மொடும்
கொல்லைமை செய்து குரவை பிணைந்தவர்
நல்லடி மேல்அணி நாறு துழாய்என்றே
சொல்லுமால் சூழ்வினை யாட்டியேன் பாவையே.

    பொ-ரை : செய்த தீவினையையுடையேனாகிய என்னுடைய பாவை போன்ற பெண்ணானவள், ‘கொடிபோன்ற நுண்ணிய இடையையுடைய ஆயர் பெண்களோடும் வரம்பு அழிந்த செயல்களைச் செய்து குரவைக்கூத்தைக் கோத்து ஆடிய கண்ணபிரானுடைய சிறந்த திருவடிகளின்மேலே அணிந்த வாசனை வீசுகின்ற திருத்துழாய்,’ என்றே சொல்லாநின்றாள்.

    வி-கு : ‘பாவை சொல்லும்’ என மாறுக. பிறவிப்பிணிக்கு மருந்தாகலின், ‘நல்லடி’ என்கிறாள். ‘வாலறிவன் நற்றாள் என்றார் திருவள்ளுவனாரும்.

    ஈடு : இரண்டாம் பாட்டு. 2‘எல்லாப் பொருள்களையும் காப்பாற்றுகின்றவனான சர்வேசுவரன் பிரளய ஆபத்திலே உடைமையாகிற தன் உலகத்தைக் காப்பாற்றினானாகில், அதுவும் பேற்றுக்கு உடலாமோ?’ என்ன, ‘அது உடல் அன்றாகில் தவிருகிறேன்; என் பருவத்தினையுடைய பெண்களுக்கு உதவின இடத்திலே எனக்கு உதவத் தட்டு என்?’ என்னாநின்றாள் என்கிறாள்.வல்லி சேர் நுண் இடை – 1‘வள்ளி மருங்குல்’-பெரிய திருமொழி, 3. 7 : 1.– என்றாற்போலே, வள்ளிக்கொடி போலே இருக்கிற இடையையுடையவர்கள் என்னுதல்; நுண்ணிய இடையையுடைய வல்லி போன்ற வடிவினையுடையவர்கள் என்னுதல். இடைக்கு உபமானம் இல்லாமையாலே, ‘நுண்ணிடை’ என்கிறது. ஆய்ச்சியர்தம்மொடும் – திருவாய்ப்பாடியில் இவள் பருவத்தையுடைய பெண்கள் பலரோடும். 2கொல்லைமை செய்து – வரம்பு அழிந்த செயல்களைச் செய்து. அன்றிக்கே, ‘தன் அழகு முதலியவைகளாலே அவர்கள் மரியாதையை அழித்து’ என்னலுமாம். குரவை பிணைந்தவர் – அவர்களோடு தன்னைத் தொடுத்தபடி. இதனால், ‘என் பருவத்தினையுடைய பெண்கள் பலர்க்கும் உதவினவர், அவர்கள் எல்லார் விடாயையுமுடைய எனக்கு உதவத் தட்டு என்?’ என்னாநின்றாள் என்றபடி.

    நல் அடிமேல் அணி – 4பெண்களும் தானுமாய் மாறி மாறித் துகைத்த திருத்துழாய் பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். பிரஹ்மசாரி எம்பெருமான் திருவடிகளில் திருத்துழாய் ஆசைப்படுபவள் அன்றே இவள்? நாறு தூழாய் – 5அவர்களும் அவனுமாகத் துகைத்ததுஎன்று அறியுங்காணும் இவள் வாசனையாலே; 1‘கலம்பகன் நாறுமே அன்றோ?’ என்றே சொல்லுமால் – 2நினைத்தது வாய்விடமாட்டாத பெண்மை எல்லாம் எங்கே போயிற்று? சூழ்வினையாட்டியேன் – தப்பாதபடி அகப்படுத்திக் கொள்ளும்படியான பாபத்தைப் பண்ணினேன். 3‘பிராட்டி துக்கத்தால் அழுதுகொண்டு என்னைப் பார்த்து வார்த்தை ஒன்றும் சொல்லவில்லை,’ என்பது போன்று இருக்குமவள் வார்த்தை சொல்லுகிறது என் பாபமே அன்றோ என்பாள், தன்னைச் ‘சூழ்வினையாட்டியேன்’ என்கிறாள். பாவையே – 4‘எல்லா நிலைகளிலும் தன் அகவாயில் ஓடுகிறது பிறர் அறியாதபடி இருக்கக்கூடிய இயல்பாகவே அமைந்த பெண்மையையுடைய இவள் தன் பேற்றுக்குத் தான் வார்த்தை சொல்லும்படி ஆவதே!

பருவ பெண்களை ரஷித்தவன்
முன்பு சர்வ ரஷகன் -அது உன் பேற்றுக்கு உடலாகுமா
எல்லா பாசுரங்களிலும் திருத் துழாய்
பறிக்கும் நாள் விதி உண்டே ஏகாதசி பறிக கூடாதே
விலை கொடுத்து வாங்க கூடாது
இந்த பதிகம் சேவித்தால் திருத்துழாய் சமர்ப்பித்து போலே
இடை -வள்ளிக் கோடி போலே
குரவை கூத்து
நல்லடி மேல் அணிந்த
வள்ளி மருங்குல் போலே
இடைக்கு உபமானம் இன்றி நுண் இடை
பலருக்கும் உதவி
அவர்கள் எலாரும் விடாய் இவள் ஒருத்திக்கு
கொல்லமை -வரம்பு அழிய
மரியாதை கட்டுப்பாடு அழித்து
இது ஒரு அற்புதம் கேளீர் -காவல் கடந்து -கயிற்றை மாலையாக்கி
சௌந்தர் யாதிகளால்
நல்லடி மேலடி -பெண்களும் இவனும் மிதித்து
பிரமச்சாரி அடி திருத் துழாய் வேண்டாம்
பரிமளம் கொண்டே அறி வாள் -இருவரும் துகைத்த
கலம்பகம்
என்றே சொல்லுவாள்
வாயைத் திறந்து
ஸ்த்ரீத்வம் குடி போயிற்றே
பெண்மை என் -எங்கே போனது உண்மை உரைக்கின்றாள் பெரிய திருமொழி பாசுரம்
சூழ் வினை யாட்டியேன்
சூழ்ந்து அகப்படுத்திக் கொண்ட பாபம்
வார்த்தை சொல்கிறது என் பாபம்
சுமந்த்ரன் -பிராட்டி வார்த்தை சொல்லாமல்
துக்கத்திலும் வார்த்தை சொல்லாமல் –
ஸ்ரீராமா. அயோத். 58 : 85. இது, பெருமாளையும் இளைய
பெருமாளையும் பிராட்டியையும் கங்கையின் கரையிலே விட்டு மீண்டு
அயோத்தியா நகரத்திற்கு வந்த சுமந்திரன் கூறுவது.
இங்கே வாயைத் திறந்து வார்த்தை சொன்னது தான் செய்த
பாபம்
பாவையே -இவள் மனசில் உள்ளதை அறிய முடியாமல்
தனது பேற்றுக்கு தானே பேசும்படி

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading