ஒன்பதாந்திருவாய்மொழி – ‘சொன்னால் விரோதம்’
முன்னுரை
ஈடு : 1இப்படித் தம் இழவுக்குக் கூப்பிடுகிற இது தவிர்ந்து தங்கள் இழவுக்குக் கூப்பிடும்படி செய்தார்கள் சமுசாரிகள். தாமும் தம்முடைய இந்திரியங்களின் கூட்டமுமாய்க் கேட்டார் எல்லாம் நீராகும்படி கூப்பிட்டார் மேல் திருவாய்மொழியில்; 2‘பருகிக் களித்தேனே!’ என்கிறபடியே, பகவானை அனுபவித்து அதனால் களித்துப் பின்பு ஒருவர்க்கு ஒருவர் உணர்த்திக்கொள்வதற்கு 3‘அடியார்கள் குழாங்களை உடன்கூடுவது என்றுகொலோ!’ என்று நித்தியசூரிகள் திரளிலே புகத்தேடியது போன்று, இவர் இழவாலே கூப்பிட்ட பின்னர் ‘இந்த இழவுக்குக் கூட்டு ஆவார்கள் அன்றோ?’ என்று சமுசாரிகளைப் பார்த்தார்; அவர்கள் பேற்றுக்குக் கூட்டு இல்லாததைப் போன்று இழவுக்கும் கூட்டு இன்றிக்கே இருந்தார்கள்; 4‘அறியார் சமணர்; அயர்த்தார் பவுத்தர்;சிறியார் சிவப்பட்டார்,’ என்கிறபடியே, பொருத்தம் இல்லாதவைகளைச் சொல்லுவாரும், பிரத்யபிஜ்ஞ அர்ஹமாம்படி ஒரு சேதனனைக் கொள்ளாமல் ஞான சந்தானத்தைக் கொள்ளுவாரும், தன்னைப் போன்று ஒரு க்ஷேத்ரஞ்சனையே ‘ஈசுவரன்’ என்று இருப்பாரும், வேறு தெய்வங்களைப் பற்றியிருப்பாரும், 1‘அவர்கள் தாங்கள் முற்றறிவினர்’ என்னும்படி ஐம்புல இன்பங்களைப் பற்றி அவற்றைப் பெறுகைக்காகப் பிறரைக் கவி பாடித் திரிகின்றவர்களுமாய் இருந்தார்கள்.
2அவர்களைக் கண்டவாறே, 3வாளேறு படத்தேள் ஏறு மாயுமாறு போன்று தம் இழவை மறந்தார்; 4பிறர் கேட்டினைக் கண்டால் அதனை நீக்கிப் பின்பு தம் இழவை நீக்க நினைப்பார் ஒருவர் ஆகையாலே, ‘இவர்கள் கேட்டினை நீக்கி இவர்களையும் கூட்டிக் கொண்டு போவோம்’ என்று அவர்களுக்குப் பரமஹிதமான 5நல்வார்த்தை அருளிச்செய்ய, அவர்கள் அது கேளாமல் பழைய படியே நிற்க, அவர்களை விட்டுத் தம் நிலையிலே போருகிற இவர், அவர்களில் 6தமக்கு உண்டான வேறுபட்ட சிறப்பினைப் பேசிக் கொண்டு போருகிறார்.
7அவர்கள் தாம், மங்களம் பொருந்திய எல்லா நற்குணங்களையும் 1உடையனாய், திருமகள் கேள்வனாய், பேரழகன் ஆகையாலே கவி பாடுகிறது பொய் சொல்லிற்று ஆகாதே கவிக்கு விஷயம் போரும்படியாய், இவன் பாடின கவியைக் கேட்பித்துக் கொண்டாடுகைக்கு ஈடாகக் 2‘கேட்டு ஆரார் வானவர்கள்’ என்றும், 3‘தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள்’ என்றும் சொல்லுகிற பரிஜனங்களையுடையவனாய், கவி பாடினார்க்கு வழங்குகைக்கு 4‘வேண்டிற்று எல்லாம் தரும் கோது இல் என் வள்ளல்’ என்கிறபடியே, பரம வள்ளலாய், அவர்களுக்குக் கொடுக்கைக்கு 5உபய விபூதி ஐஸ்வர்யத்தை உடையனாய், 6‘வல்லது ஓர் வண்ணம் சொன்னால், அதுவே உனக்கு ஆம் வண்ணம்’ என்கிறபடியே, இவன் யாதேனும் ஒன்றைச் சொன்னாலும் தன்னையே சொல்லியதாம்படி எல்லாச் சொற்களாலும் குறிக்கப்படுகின்ற பொருள் தானேயானவனாய், பாடின கவி கேட்பிக்க இருந்த இடம் தேடிப்போய் அருமைப்பட வேண்டாதே, 7‘எங்கும் உளன் கண்ணன்’ என்கிறபடியே, எல்லா வகையாலும் அண்மையில் இருப்பவனாய், 8சுலபனுமாய், கவி பாடினார்க்குப் போகம் மோக்ஷம் முதலிய எல்லாப் பேறுகளையும் கொடுக்கின்றவனாய், அவை கொடாவிடிலும் தன்னைக் கவி பாடுகைதானே பிரயோஜனம் போரும்படி இருக்கிற சர்வேசுவரனாய் உள்ள இறைவன் நிற்க அவனை விட்டு; கவி பாடுகைக்கு ஈடான 1நன்மைகள் ஒன்றும் இன்றியே தலையில் மயிர் இல்லாதான் ஒருவனைப் ‘பனிஇருங்குழலன்’ என்றும், இளிகண்ணனைத் ‘தாமரைக்கண்ணன்’ என்றும் இப்புடைகளிலே ஆயிற்றுக் கவி பாடுவது; கவி பாடினால் தான் தருவது ஒன்று இல்லாமையாலே 2நூறு கற்றையாதல் ஒரு பொய்த்தரவாதல் ஆயிற்று எழுதுவது; இவன்தான் பலநாள் கூடி நெஞ்சுகன்றக் கவிபாடித் துணையாய் உள்ளவர்களையும் கூட்டிக்கொண்டு செல்லுவதற்குள் 3‘அவரே மாண்டார்’ என்று எதிரே வரும்படி நிலை நில்லாதாருமாய், ஆக, இருந்தும் இழவாய்ப் போயும் இழவாய் இப்படி அவனுக்கு இழவோடே தலைக்கட்டும்படியாய்; கவி பாடி ஒரு பயன் பெறாது ஒழிகை அன்றிக்கே, கவி பாட்டுண்கிறவனுக்கு இல்லாத நன்மைகளையிட்டு, 4இருமருங்கும் துய்யான்’ என்னுமாறு போன்றே அன்றோ கவி பாடுவது? ‘ஆனால், வருவது என்?’ என்னில், பிறப்பிலே சில குறைகள் உண்டாய் இருக்குமேஇவன்தனக்கு? மறந்தவற்றை அன்றோ இது கேட்ட உலகத்தார் நினைப்பது? அவனுடைய தோஷங்களை வெளியிட்டு அவ்வழியாலே தாழ்வினை விளைவிக்கின்றவர்களாய், பாடத் தகாதாரைக் கவி பாடுகையாலே மேல் நரகமாய், ‘இன்னானைக் கவி பாடினவன் அன்றோ இவன்?’ என்று, ‘தீண்டாதே கடக்கப்போ’ என்னும்படியாய் இருக்கிற புல்லர்களைக் கவி பாடித் திரிகிற படியைக் கண்டு;
‘ஆத்துமா இறைவனுக்கு அடிமையாய் இருக்க, அவனுக்கே உரியனவான உங்களுடைய உறுப்புகளைக்கொண்டு பிறரைத் துதித்தல் ஈடு அன்று’ என்று நலத்தை அருளிச்செய்ய, இராவணனுக்கு விபீடணன் முதலியோர் சொன்ன நலம் போலே அது பலியாது ஒழிய, ‘நலம் சொல்லவும் செவி தாழாத இவர்களோடு ஒத்த சம்பந்தம் அன்றோ நமக்கு உள்ளது?’ என்று பார்த்து, ‘இவர்கள் நடுவே இத்தேசத்தில் இச்சரீரத்தோடே வாசிக்கிற நாம் முந்துற முன்னம் பகவானுக்குத் தக்கனவான உறுப்புகளையுடையோமாகப் பெற்றோம் அன்றே!’ என்று, வழி பறிக்குமிடத்துத் தம் கையிற் பொருள் கொண்டு தப்பிப் போனார் மகிழுமாறு போன்று 1தமக்கு உண்டான வேறுபாட்டினை நினைந்து தம் இலாபத்தைப் பேசிப் பிரீதியோடே தலைக்கட்டுகிறார்.
ஆயிர மாமறைக் கும்அலங் காரம், அருந்தமிழ்க்குப்
பாயிரம், நாற்கவிக் குப்படிச் சந்தம், பனுவற்கெல்லாம்
தாய்,இரு நாற்றிசைக் குத்தனித் தீபம்,தண் ணங்குருகூர்ச்
சேய்இரு மாமர பும்செவ்வி யான்செய்த செய்யுள்களே.’
என்பது சடகோபரந்தாதி.
‘திங்களின் இளங்குழவிச் செம்மல்இவன் என்றும்
செய்யபரி திக்குழவி ஐயன்இவன் என்றும்
தங்களின் மகிழ்ந்திரு குலத்தரசர் தாமும்
தனித்தனி உவப்பதொர் தவப்பயனு மொத்தே.’
என்றார் சயங்கொண்டார்.
(கலிங்கத்துப் பர. 238.)
1. ‘உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு’ என்றதனைத் திருவுள்ளம் பற்றித்
‘தமக்கு உண்டான வேறுபாட்டினை அநுசந்தித்து’ என்கிறார்.
சொன்னால் விரோதம்இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ!
என்நாவில் இன்கவி யான்ஒரு வர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனாஎன்று வண்டு முரல்திரு வேங்கடத்து
என்ஆனை என்அப்பன், எம்பெரு மான்உள னாகவே.
பொ-ரை : ‘நான் இந்த நலத்தைச் சொன்னால் உங்களுக்கு விரோதமாகவே இருக்கும்; ஆயினும் சொல்லுவன் கேளுங்கள்: வண்டுகள் தென்னா தென்னா என்று ஒலிக்கின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்ற என் யானையும் என் அப்பனும் ஆய எம்பெருமான் உளனாய் இருக்க, என் நாவினின்றும் வருகின்ற இனிய கவிகளை யான் ஒருவர்க்கும் கொடேன்,’ என்கிறார்.
வி-கு : ‘இது சொன்னால் விரோதம்’ என மாறுக. என் ஆனை – எனக்கு யானை போன்றவன். ‘உளனாக யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்’ எனக் கூட்டுக.
ஈடு : முதற்பாட்டில், 1மனிதர்களைக் கவி பாடுகை உங்களுக்கு நன்மை அன்று என்று உபதேசம் செய்யப் புகுந்தவர், அவர்களுக்கு ருசி பிறக்கைக்காக, ‘நான் இருக்கிறபடி பார்த்தீர்கள் அன்றோ?’ என்று தம்முடைய மதத்தை அருளிச்செய்கிறார்.
2இது சொன்னால் விரோதம் ஆகிலும் சொல்லுவன் – வேறு ஒரு பிரயோஜனத்தைக் கருதினவர்களாய்க் கவி பாடுகிற உங்களைக் ‘கவி பாடாதே கொள்ளுங்கோள்’ என்று கூறுதல், உம்தம் பிரயோஜனத்தைத் தவிர்த்தலேயன்றோ? ‘நம் பிரயோஜனத்துக்கு இழவாக வார்த்தை சொல்லுகின்றானே!’ என்று விரோதமாய்த்தலைக்கட்டும் அன்றே உங்களுக்கு? ஆயிருக்கவும் சொல்லுகிறேன்,’ என்கிறார்.
அன்றிக்கே, 1‘காலையிலும் நடுப்பகலிலும் மாலையிலும் தேவா என்றும், கோவிந்தா என்றும் சொல்லுகின்றவர்கட்கு ஏதேனும் குறை உண்டோ? இருந்தால் சொல்லப்படட்டும்,’ என்கிறபடியே, திருநாமத்தைச் சொன்னால் உடனே இடிவிழும் என்று வரும் கேட்டினைச் சொல்லுங்கோள்; இன்றேல் திருநாமத்தைச் சொல்லுதல் செய்யுங்கோள்,’ என்றான் அன்றோ ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான் அசுரர் குழந்தைகளை? அப்படியே, இது உங்களுக்குக் ‘கேட்டினைத் தருவது’ என்று அறியப்பட்டதாய் இருந்ததேயாகிலும் சொல்லுகிறேன்,’ என்னுதல்.
அன்றிக்கே, 2‘காதுகளின் மூலத்தில்’ என்கிறபடியே, ‘அரசனுடைய மனைவியின்மேல் வைக்கும் விருப்பம் விலக்கத்தக்கது,’ என்பது போன்று, ஓலக்கத்திற்சொல்லும் வார்த்தையன்று இது. சேவிக்கத் தகாதாரைச் சேவித்தல் விலக்கத்தக்கது என்பதாகவும் என் வாயாற்சொல்ல ஒண்ணாது; ஆகையாலே, நான் சொன்னால் அது எனக்கு விரோதமாம் அன்றோ? இங்ஙனம்இருக்கவும், சொல்லும்படி அன்றோ இருக்கின்றது நீங்கள் நிற்கிற தீய நெறியின் தன்மை?’ என்னுதல்.
ஆகிலும் சொல்லுவன் – ஆயிருக்கவும் சொல்லுகிறேன். ‘நன்று; இப்படி இருக்கவும் சொல்லுகிறது என்?’ என்னில், நீங்கள் 1சமம் தமம் முதலிய குணங்களோடு கூடினவர்களாய்ச் சமிதை தரித்த கைகளையுடையவர்களாய் வரச்சொல்லுகிறேன் அன்றே? உங்கள் கேட்டினைப் பொறுக்க மாட்டாமையாலே சொல்லுகிறேன்; ஆகையால் அதற்குப் பரிகாரம் பிறக்குமளவும் சொல்லுகை தவிரேன். என்றது, நீங்கள் உங்களுக்கு விருப்பமானவற்றினின்றும் மீளமாட்டாதது போன்று, நானும் உங்களுக்கு உரிய நன்மையைச் சொல்லுவதினின்றும் மீளமாட்டாதபடி என்கிறார் என்றபடி. கேண்மினோ – ‘இது கேட்ட பின்னர் நடைமுறை அளவும் வரவேண்டும் அன்றோ?’ என்று அஞ்ச வேண்டா; செவி தாழ்க்க அமையும்; அதனைச் செய்ய வேண்டா.
‘அது என்?’ நலத்தை விரும்பியே அன்றோ சொல்லுகிறது?’ என்னில், கேட்கவே, மக்கள் ஆகையாலே மேல் விழுவர்கள் அன்றோ? ஆசையோடு அடையத் தக்கவாய் வருமவற்றுக்கு நாம் சொல்லவேண்டா; ஆகையால், நாம் அதனை விதித்தோம் ஆகிறது என்? என்று? ‘கேண்மின்’ என்கிறார். ‘கடலோசைக்குச் செவி புதையாதே கேட்கின்றமை உண்டன்றே? 2அவ்வோபாதியாகிலும் கேண்மின்,’ என்பார், ‘கேண்மினோ’ என்கிறார். கேடு எல்லார்க்கும் ஒத்திருக்கையால், எல்லார்க்கும் சொல்லுகிறார் ஆதலின், ‘கேண்மின்’ எனப் பன்மை வாய்பாட்டால் அருளிச்செய்கின்றார். பால் குடிக்கக் கால் பிடிப்பாரைப் போன்று பகவத் விஷயத்தைக் கேட்பதற்குக் கால் பிடிக்கிறார் இவருடைய செல்லாமையாலேஎன் நா – 1இவர்கள் யாருக்கு உரிமைப்பட்டவர்களோ, இவர்களுடைய செல்வமும் அவருடையது,’ என்கிறபடியே, நான் அவனுக்கு அடிமை ஆகையாலே, எனக்குக் காரணமாய் அவனுக்கு அடிமை ஆன என் நா. 2‘வஞ்சனே என்னும் எப்போதும் என் வாசகமே’ என்னும்படியான நா ஆதலின், ‘என் நா’ என அதனோடு ஒரு சம்பந்தத்தைக் கொண்டாடுகிறார். ‘என்னைப் போலே நாவால் காரியம் கொண்டார் உளரோ?’ என்கிறார் என்றபடி. இன் கவி – 3இவர் கவியை ஈசுவரன் கேட்டு மகிழ்ந்தவனாய் இனியனாக, அவ்வழியாலே தமக்கு இனியதாய் இருக்கிறபடி. தலைவனுக்கு இனியதான வழியாலே அன்றோ அடிமையாக உள்ளவனுக்கு இனியதாவது? ‘ஆயின், தொண்டு செய்கிற அடியவனுக்கு இனிமைக்குக் காரணம் உண்டோ?’ எனின், ஆண் பெண் இருவர் கலவாநின்றால், இரண்டு தலைக்கும் உள்ள இன்பம், சேஷ சேஷிகள் பரிமாற்றத்திலும் உண்டே அன்றோ? அன்றிக்கே, அவனுக்கு இனியதாய் அவ்வழியாலே தனக்கு இனியதாகை அன்றோ அடியவனாக உள்ளவனுக்கு வாசி என்னுதல்?
யான் – அவனுக்கே உரிய அடியவனாய் இருக்கிற யான். 4இதனை நினைத்தே அன்றோ மேல் ‘யஸ்யை தே – இவர்கள் யாருக்கு உரிமைப்பட்டவர்களோ’ என்றது? ஒருவர்க்கும் கொடுக்கிலேன் – ‘ஒருவர்க்கும் கொடுக்கிலேன்’ என்னும் இது, மேலே கூறிய அத்தியந்த பாரதந்திரியத்தோடு சேர்ந்ததாய் இல்லையே? ‘புறம்பு ஒருவர்க்கும் கொடேன்’ என்கையாலே, ‘இறைவன் விஷயத்தில் கொடுப்பேன்,’ என்கிறார் ஆவர்;தனக்கு என்று ஒன்று உண்டாய்க் கொடுப்பது கொள்ளுவது ஆதல் சேருமோ சொரூபத்துக்கு?’ என்னில், 1அடியிலே இறைவன், நினைந்து அறியும் ஆற்றலையும் தொழில் செய்தல் செய்யாமைக்குரிய சத்தியையும் கொடுத்து வைத்தால், பின்னர் ‘நான் கொடுத்தேன்’ என்னலாம் அன்றோ? 2இறைவனுடைய பொருளை ‘நான் என் பொருளைக் கொடுத்தேன்’ என்னலாம்படி அன்றோ சம்பந்தம் இருப்பது? கோதானத்திலே பிதா புத்திரன் கையில் நீர் வார்த்துக் கொடுத்து, மீளவும் அவன் கொடுக்க, அவன் கையிலே தான் பெற்றானாய் இருக்குமாறு போன்று, இவனும் தனக்கே உரித்தான செல்வத்தைத் தந்தானாய், இவன் சர்வஸ்வதானம் பண்ணத் தான் பெற்றானாக நினைத்திருக்கும் இறைவனுடைய அபிப்பிராயத்தாலே சொல்லுகிறார்.
3‘என்னால் தன்னை இன் தமிழ் பாடிய’ என்கிறபடியே, தான் இவரையிட்டுப் பாடுவித்து, இவர் தன்னைப் பாடினாராக நினைத்திருக்குமவன் அன்றோ இறைவன்? ‘நன்று; ‘யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்’ என்கைக்குக் காரணந்தான் என்?’ என்னில், ‘அல்லாதார் புறம்பு உள்ளார்க்குத் தங்கள் கவியைக் கொடுத்து வைக்கையாலே, யான் ஒருவர்க்கும் கொடுக்க மாட்டேன்,’ என்கிறார். ஆக, ‘இதனால், வழி கெடப் போகிற நீங்கள், ஒருவன் வழியே போகாநின்றால் ‘நாமும் அப்படியே போகவேண்டும்’ என்று இருக்க வேண்டாவோ மக்கட் பண்பு இருந்தால்? நான் இருக்கிறபடி கண்டீர்களே அன்றோ? அப்படியே அன்றோ உங்களுக்கும் இருக்க அடுப்பது?’ என்கிறார் என்றபடி.தென்னா தெனா என்று வண்டு முரல் – 1இதுகாணும் இவர் கவி பாடினபடி. என்றது, ‘வண்டுகள் மதுவைக் குடித்த மயக்கத்தாலே பிரீதிக்குப் போக்கு விட்டு முரன்றது இசையாய் விழுந்தாற்போலே ஆயிற்று, இவரும் பகவானை அனுபவித்தலால் உண்டாகும் உவகைக்குப் போக்கு விட்டது கவி ஆயிற்று,’ என்றபடி. பறவைகளோடு முமுக்ஷீக்களோடு அவன்தன்னோடு வாசி அறத் தென்னா தெனா’ என்னுமித்தனை. 2பகவானுடைய அண்மையில் இருப்பார் எல்லார்க்கும் இதுவே பாசுரமானால், அவன் தனக்குச் சொல்ல வேண்டாவே அன்றோ? ‘தென்னா என்னும் என் அம்மான்’ அன்றோ அவன்?
திருவேங்கடத்து என் ஆனை – வேதத்தைக்காட்டிலும் ஸ்ரீராமாயணத்துக்கு உண்டான ஏற்றம் போலே, ஸ்ரீ வால்மீகி பகவான் கவி பாடின விஷயத்தைக்காட்டிலும் தாம் கவிபாடின விஷயத்திற்கு உண்டான 3ஏற்றம் சொல்லுகிறார். எப்பொழுதும் துதிக்கலாம்படி இருப்பவன். 4யானை பெறக் கவி பாடுமவர்காணும் இவர்; இவர் கவி பாடிக் கட்டின யானை ஆயிற்று அவன்; கவி பாடினவர்கட்குத் தன்னை ஒழிய வேறு ஒரு யானையைக் கொடுத்து விடுமவன் அல்லன் ஆதலின், ‘என்ஆனை’ என்கிறார். ஆக, 1‘வண்டுகளானவை மதுபானப் பிரீதியாலே தென்னா தெனா என்று ஆளத்தி வைப்பாரைப்போலே ஒலிக்கிற திருமலையிலே அண்மையில் இருப்பவனாய் எனக்கு யானை போலே அனுபவிக்கத் தக்க பொருளாய் உள்ளவனை’ என்றபடி. அவ்வண்டுகளோடே சகோத்திரிகளாய் அனுபவிக்கிறார்.
என் அப்பன் – நாட்டார் பிறரைக் கவி பாடித் திரியாநிற்க, அவர்களுக்கும் நன்மை சொல்ல வல்லேன் ஆம்படி பண்ணின மஹோபகாரகன். எம்பெருமான் – தீமையே செய்யினும் விட ஒண்ணாத சம்பந்தம். உளன் ஆகவே – 2‘ஆஸயா யதிவா ராம: – ஸ்ரீ ராமபிரான் மீண்டும் என்னைக் கூப்பிடுவாரோ என்னும் ஆசையால் அங்கே இருந்தேன்,’ என்பது போன்று பிரார்த்திக்கப்படுமவன் என் வாயாலே ஒரு சொற்கேட்டுத் தான் உளன் ஆகாநிற்க, நான் வேறு ஒருவரைக் கவி பாடுவேனோ? அன்றிக்கே, ‘அஸந்நேவ – இல்லாதவன் ஆகிறான்’ என்கிறபடியே, ‘தன்னைக் கிட்டாத அன்று சமுசாரி சேதநருடைய இருப்பு இல்லாதது போன்று, தான் என்னைக் கிட்டாத அன்று தன் இருப்பு இல்லையாம்படி அவன் வந்து நிற்க நான் வேறு ஒருவரைக் கவி பாடுவேனோ?’ என்னுதல். அன்றிக்கே, ‘அவன் என்னைக் கொண்டு கவி பாடுவித்துக்கொள்ளுகைக்காக இங்கே வந்து நிற்கிற நிலை என்னாவது, நான் புறம்பே போய் ஒருவரைக் கவி பாடினால்?’ என்னுதல். 1‘ஆன பின்னர், என்னைப் போலே இருக்கை காணுங்கோள் உங்களுக்கும் அடுத்திருப்பது’ என்கிறார் என்றபடி.
சுற்றி இருப்பாரை பார்த்தாராம் –
துக்கம் பார்த்து –
சொன்னால் விரோதம்
ஆகிலும் சொல்வேன் -என்கிறார் –
என் நாவில் இன் கவி யாருக்கும் சொல்லேன்
என்கிறார்
பர உபதேசம் –
வீடு முன் முற்றவும் -அடுத்த விரோதி ஸ்வரூப பதிகம் இது –
தம்முடைய இழவுக்கு கூப்பிட்டார் கேட்டார் கண்கள் நீராகும் படி
அடியார்கள் குழாம் -பருகி களித்த பின் கூட்டுத் தேட ஆழ்வார் –
போதயந்த பரஸ்பரம் நித்ய சூரிகளை தேடி
அது போலே துக்கம் ஏற்பட -அதுக்கும் துக்கத்துடன் இருக்கும் சம்சாரிகளை நோக்க
சம்சாரிகள் கூட்டு என்று பார்த்தால் –
அவர்கள் பேற்றுக்கு கூட்டு அல்லாது போலே இழவுக்கும் கூட்டு இல்லை
கூட்டின்றிக்கே இருந்தமைக்குக் காரணம் என்?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘அறியார் சமணர்’ என்றது முதல், ‘திரிகின்றவர்களுமாய்
இருந்தார்கள்’ என்றது முடிய. ‘அறியார் சமணர்’ – இது, நான்முகன்
திருவந். 6. மேற்கோள் பாசுரத்துக்குப் பொருள் அருளிச்செய்கிறார்.
‘பொருத்தமில்லாதவைகளை’ என்று தொடங்கி. ‘பொருத்தமில்லாதவைகளைச்
சொல்லுவாரும்’ என்றது, தத்துவத்தின் உண்மையை அறியாமல்
சொல்லுகின்றவர்களை; என்றது, சமணரை. ‘ஞானசந்தானத்தைக் கொள்ளுவார்’
என்றது, பௌத்தர்களை. ஞானசந்தானம் – ஞானபரம்பரை. ‘பிரத்யபிஜ்ஞ
அர்ஹமாம்படி’ என்றது, ‘அனுபவித்ததை மீண்டும் நினைப்பதற்குத்
தகுதியாம்படி’ என்றவாறு. ‘தன்னைப் போன்றான் ஒரு க்ஷேத்ரஜ்ஞனை
‘ஈசுவரன்’ என்று இருப்பாரும்’ என்றது, சைவர்களை. க்ஷேத்ரஜ்ஞன் –
ஆத்துமா. இங்குக் கூறப்படுவனவற்றை முதற்பத்து அவதாரிகை ‘திருமகள்
கேள்வன் ஒன்று’ பக். 9-13 இல் காணலாம்.
திருத்தி தம்முடன் சேர்த்து கொள்ள அருளுகிறார் –
ஞான சந்தானம் பௌத்தர் -ஷணம் தூறும் அழியும் வஸ்து
விளக்கு திரி எண்ணெய் –
தொ டர்ந்து வருவதால் இருப்பது போலே தோன்றுமே
ஷேதரரஞ்-வேற சில்லறை தெய்வம் சேர்த்து –
– அவர்களே தேவலை போலே சப த்தாதிகள் ஆசைப் பட்டு கவி பாடி திரியும்
சம்சாரிகள் –
வாளேறு காண தேளேறு மறந்தது போலே –
பெரிய துக்கம் கண்டு தமது துக்கம் மறந்து –
பிறர் அநர்த்தம் கண்டால் அதை பரிகரித்து
கூட்டிப் போக ஹிதம் அருளிச் செய்கிறார் த் பேசி –
கூடாதவனாய் இருக்கும் இருப்பை பேசுகிறார் –
ஏற்கும் பெரும் புகழ் புகழ்
கவிக்கு விஷயம் போகும்படியாய் இருக்கும் ஒருவன் அவன்
கொண்டாட ஈடாக வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்
கேட்டு வானவர் ஆரார
தொண்டர்க்கு அமுது உண்ண
வேண்டிற்று எல்லாம் தரும் என் வள்ளல் –
கொடுக் கைக்கு விபூதி உள்ளவன்
பாடின கவி -எங்கும் உளன் கண்ணன்
சுலபன்
மோஷாதி சகல மும் கொடுப்பவனாய்
பாடு கையே பிரயோஜனம்
மொட்டைத் தலையன் -கதை
இழி கண்ணன் புண்டரீகாட்ஷன் சொல்லி –
இல்லாமையால் நூறு கத்தை
நூறு கற்றையாதல்’ என்னும் இவ்விடத்தில்,
‘வார்த்தை பதின்கலம் வழியில்ஓர் எண்கலம்
கூட்டில் அறுகலம் கொடுப்பது முக்கலம்
ஆள்கலம் போக்கிப் பதர்கலம் போக்கி
நான்கலம் பெற்றேன் பிள்ளைகாங் கேயர்க்கே.’
என்ற செய்யுளை நினைத்தல் தகும். பொய்த்தரவு – பொய்யோலை.
இப்படி பொய்த்தரவு இருக்குமே லோகத்தில் –
இருந்தும் இழவாய -நிலை இன்றி போயும் இழவாய –
இரு மருங்கும் துய்யான்
ராவணன் மால்யமான் மாரீசன் விபீஷணன் சொல்லியும் கேட்க்காமல் இருப்பது போலே இருக்க –
தமது நிலை பார்த்து -விசேஷ கடாஷம்
வழி பறிக்கும் இடத்தில்தனது கைப் பொருளைக் கொண்டு தப்பிப் போவது போலே –
ஸு லாபத்தை பேசித் தலைக்கட்டுகிறார் –
அவர்களுக்கு ருசி பிறக்க தமது நிலையை முதலில் அருளுகிறார் –
இந்த முதல் பாசுரத்தில் பிறர் கவி பாடும் இழி செயலை அருள வில்லையே
வண்டு முரலும் திருவேங்கடத்து
ஆனை அப்பன் இருக்க –
சொன்னால் விரோதம் –
கவி பாடாதே இரும் என்றால் பிரயோஜனம் பெற்று போவீர்களே –
விரோதம் ஆனாலும் சொல்லுவேன் என்கிறார் –
அன்றிக்கே –
திருநாமம் சொன்னால் அநர்த்தம் வரும் -இடி விழும் -என்று அனர்த்தம் இல்லை
அவசாதம் -துக்கம் இருந்தால் திருநாமம் துயர் வரின் சொல்லுமின்
துக்கம் இல்லாத பொழுது சொன்னாலும் இடி விழாது –
ஆசுர பிரக்ருதிகளுக்கு பிரகலாதன் -சொல்லிய வார்த்தை –
விபரீதம் உண்டானாலும் -இரண்டாவது அர்த்தம்
அன்றிக்கே
ராஜ பத்னி -ர்ண மூல மது சூதன -யமன் தூதர்களுக்கு காதோடு சொல்லிய வார்த்தை –
நமனும் தமது தூதுவரைக் கூவி செவிக்கு -உரக்க சொல்லாமல் –
ராஜ தார ப்ராவண்யம் நிஷேதம் உபதேசிக்க –
மூன்றாவது அர்த்தம் -எனக்கே விரோதம் ஆகலாம் ஆகிலும் சொல்லுவேன்
அசேவ்ய சேவை கூடாதே –
சமம் தமம் சமித் பாணியாய் -வர வேண்டாம்
லஷ்யம் பன்னாவிடிலும் சொல்லுவேன்
பரிகாரம் வரும் வரை சொல்லுவேன்
அபிமதம் மீளாமல் நீங்கள் இருக்க
சொல்லுவதே உபதேசம்
தேள் கொட்ட ரஷிக்க ஸ்வாபம் ரிஷி கதை போலே
கேண்மினோ –
அனுஷ்டானம் வேண்டாம்
காது கொடுத்தால் போதும்
கேட்டால் மேல் விழுவார் இவர் நினைவு
கடலோசை கேட்க செவி உண்டே அது போலே கேண்மின் என்கிறார்
கேண்மின் -பன்மை
அநர்த்தம் எல்லாருக்கும்
பால் குடிக்க கால் பிடிக்கிறார் –
நானும் அவ்வழியே போக -வழி தெரியாமல் இருக்க -பின் பற்றலாமே
இருக்கும்படியை கண்டு இருப்பது அடுப்பது
எச்ய -நான் அவனுக்கு சேஷம் -எனக்கு கரணம் நா வும் அவனுக்கு சேஷம் –
பார்யா -தாஸ்யா -சுதாகா -பிள்ளை -பணத்துக்கு கிடையாது எஜமானுக்கு உரியவர்கள்
என்னுடைய இந்திரியங்கள் -என் நா -அவனுக்கு சேஷமாய் உள்ள
இன் கவி -ஈஸ்வரன் கேட்டு பிரசன்னனாய் இருக்க
அவ்வழியால் இன் கவி
சேஷிக்கு இனியதான வழியே செஷபூதனுக்கு
மிதுனமாய் கலவா நின்றால் -தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே
யான் –
அவனுக்கு அனன்யார்க செஷபூதன் அறிந்த நான்
புறம்பு ஒருவனுக்கு கொடுக்கிலேன் –
தனது வஸ்து ஒன்றுமே இல்லையே
அத்யந்த பாரதந்த்ர்யம் -இப்படி சொலலாமா
சரீரம் இந்திரியம் அவன் கொடுத்தது
கார்யம் இவர் பண்ணிக் கொடுப்பது
அவனுடைய வஸ்துவை அவனுக்கே கொடுத்து என்னது சோழ உரிமை உண்டே
கோ தானம் பிதா பித்ரு கையில் கொடுத்து -வாங்கிக் கொள்வது போலே
தமப்பனுடைய செல்வத்தை புத்திரன் ‘என்னது’ என்று
கூறலாம்,’ என்பது கருத்து.
உரிமை சொல்லப் பண்ணுகிறது -பிராப்தி இருக்கும் நிலை –
மகா பலி தானம் கொடுப்பது போலே -தன்னது
இவனும் புதிசாக கொண்டது போலே
என்னால் -இவர் தன்னைப் பாடினதாக அவன் நினைத்து இருக்கிறான் –
தென்னா தெனா -வண்டு
இது தானும் இவர் கவி பாடின படி
வண்டுகள் முரலுவது ப்ரீதிக்கு போக்குவீடாக்கி
இசையாய் போனது போலே –
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
Leave a Reply