திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -1-10-7–ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

எந்தையே என்றும் எம்பெரு மான்என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
எந்தை எம்பெரு மான் என்று வானவர்
சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனையே.

பொ-ரை : 
‘எந்தையே! எம்பெருமானே!’ என்று நித்தியசூரிகள் தங்கள் மனத்திலே வைத்துத் துதிக்கும்படியான செல்வனை, மிக்க தீயவினைகளையுடைய யானும் ‘எந்தையே!’ என்றும், ‘எம்பெருமானே!’ என்றும் மனத்திலே வைத்துத் தியானிப்பேன், வாயாலும் சொல்லுவேன்; இஃது என்னே!’ என்பதாம்.

வி-கு : எந்தை என்பது, என் தந்தை என்றதன் மரூஉ என்பர். வானவர் என்றது – நித்தியசூரியகளை.

ஈடு : ஏழாம் பாட்டு. 1மேல் இவர் அஞ்சியது போன்றே முடிந்தது; ‘தாழ்ந்தவன்’ என்று அகலுகிறார்.

எந்தையே என்றும் – என்னிடத்தில் அன்புடையவனே என்றும். எம்பெருமான் என்றும் – எனக்கு வகுத்த சுவாமியே என்றும். சிந்தையுள் வைப்பன் – எத்தனை விஷயங்களை நினைத்துப் போந்தநெஞ்சிலே வைத்தேன். சொல்லுவன்-நான் அறிந்ததாக நெஞ்சிலே வைத்துத் தூஷித்த அளவேயோ? பிறர் அறியும்படி வைத்தேன். பாவியேன் – 1விலக்ஷண போக்கியமான இப்பொருளை அழிக்கைக்கு நான் ஒரு பாவி உண்டாவதே! சத்துவ குணத்தையுடைய ஒருவன் தமோ குணத்தால் மேலிடப்பட்டவனாய் ஒரு வீட்டில் நெருப்பை வைத்து, சத்துவம் தலை எடுத்தவாறே வருந்துமாறு போன்று ‘பாவியேன்’ என்கிறார். ‘ஆயின், பகவானை நினைக்கையும் சொல்லுகையும் பாவத்தின் பயனோ?’ என்னில், 2புரோடாசத்தை நாய் தீண்டினாற்போன்று நித்தியசூரிகள் அநுபவிக்கும் பொருளை அழிக்கை பாவத்தின் பலம் அன்றோ? எந்தை எம்பெருமான் என்று வானவர் சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனை-நினையாவிடில் அரைக்கணம் தரிக்கமாட்டாத நித்தியசூரிகள் நினைத்து அநுபவித்து அவ்வநுபவம் வழிந்து ‘எங்களுக்குப் பரிவன் ஆனவனே! சுவாமியானவனே!’ என்று தங்கள் நெஞ்சிலே வைத்துச் சொல்லும்படியான செல்வத்தையுடையவனை நானும் சொன்னேன்; ஆதலால், இப்பொருளை ஒருவர் நம்பாதபடி அழித்தேன்,’ என்கிறார். ‘

1. ‘மேல் இவர் அஞ்சியது போன்றே முடிந்தது’ என்றது, ‘துஞ்சும்போதும்
விடாது தொடர்கண்டாய்’ என்றதனை நோக்கி.

அஞ்சினது போல் விடிந்தது
அயோக்ய அனுசந்தானம் செய்து அகல ஆரம்பித்தார்
பாவியேன் -சொல்ல
எந்தையே பரிவன்
எம்பெருமான் வகுத்த ஸ்வாமி
சிதையுள் வைப்பன் ஏதோ ஏதோ வைத்த இடத்தில்
நான் அறிந்ததாக நெஞ்சில் வைத்து தூஷித்த அளவில் இன்றி
பிறர் அறியும் படி தூஷித்தேன் -சொல்லுவேன் –
புகழ்வோம் பழிப்போம் -போல்
ராவடி வந்து இவர் எனக்கு தெரிந்த பெரியவர்
பாவியேன் விளஷனரின் போக்யத்தை அளிக்க நான் ஒரு பாவி
சாத்விகன் -தமோ பூதரே கிரகத்தில் நெருப்பை வைத்து
ஐயோ நான் வைத்தேன் சத்வ குணம் வந்த பின்பு சொல்லி கொள்வது போல் பாவியேன்
பகவத் விஷயம் நினைக்கையும் சொல்வதும் பாப பலமா
புரோடாசத்தை நாய் தீண்டினது போல் சொன்னனே
கானிடை திரிந்த நரி புகுந்து மோப்பதும் -ஆண்டாள் போல் –
நெஞ்சில் நினைத்தும் வாயால் சொல்லியும் அளித்தேன்
எந்தை நித்ய சூரிகள் அனுபவித்த பின்பு -வானவர்கள் தங்கள் சிந்தையில் வைத்து சொல்லும் கார்யத்தை
அரை சனம் தரிக்காத நித்யர் -அனுபவம் வாய் வழிய வர -அதே
எந்தை தகப்பன் போல் பரிவன்
எம்பெருமான் வகுத்த ஸ்வாமி என்று எல்லாம் அவர்கள் சிந்தையுள் வைத்து சொல்வது போலே
செல்வன் ஐஸ்வர்யம் உடையவன் –
என் சொன்னேன் -இவ்வச்துவை ஒருவர் நம்பாத படி கிட்டாதபடி
பிராமணருக்கு வைத்த தண்ணீர் பந்தலில் தீண்டியது போல்

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading