ஸ்ரீ திரு விருத்தம் -50-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள்-வியாக்யானம் –

(நம் தேர் மா மலைக்கே வேகமாக ஒட்டு
மண் முதல் -தாழ்வரையில் ஆழ்வார் இருக்க
கிளைவித் தலைமக்கள்
காவிய நாயகன் நம்மாழ்வார்
மநோ ரதம் வேகமாக செல்ல
பரமத பங்கம் -திவ்ய தேச கைங்கர்யம் -பாகவத உபதேசம் பண்ணப் பிரிய
ஆழ்வார் வியசனம் அதிகரிக்க
பழிச் சொல் வரும் முன் வேகமாகச் செல்லு
அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -தாளிணைக் கீழே தானே வாழ்ச்சி
கங்குலும் பகலும் தென் திருவரங்கம் கோயில் கொண்டானே என்று அங்கேயே இருந்து
அசையாமல் அருளிச் செய்கிறார் அன்றோ –
குளிர் அருவி வேங்கடம் -ஸ்ரீ வைகுண்ட விரக்தாய -முத்து ஒழுகு வரிசை போல் அருவி பாயும் வேங்கடம்
குறிஞ்சி –
பிரிந்தவர் கூடும் இடம் மலையும் மலை சார்ந்த இடம்
குளிர் அருவிக்கு த்ருஷ்டாந்தம்- தேன் நவின்ற -விண் முதல் நாயகன் – ஸ்ரீ வைகுண்டநாதனின் நீண்ட கிரீடத்தில் சாத்தின முத்து வாசிகை -போல் அருவி
கீழ் பட்ட இடம் தானே ஆழ்வார்
கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம் செல்ல அங்கே உபதேசம் -இதன் விவரணம் அது
அங்கு செல்வதே கர்தவ்யம் -மலையே புகுவது பொருளே –
பாகவத உத்தமர்கள் பாசுரம் இது )

அவதாரிகை –
இதுக்கு முன்பு இங்கன் இருப்பதொரு ராத்ரி வ்யசனம் அனுபவித்து அறியோம் என்னும்படி-
அவசாதம் மிக்கவாறே –
போத யந்த பரஸ்பரம் -பண்ணி  இவரை ஆஸ்வசிப்பிக்கைக்காக தலை மகன் வருகிறான் –
வினை முற்றி மீண்ட தலைமகன் –
(ராவண வதம் செய்து முடித்து சீக்கிரம் மீண்ட பெருமாள் போல் )
பதினாலாம் ஆண்டு போன வழியை ஸ்ரீ பரதாழ்வான் ப்ரக்ருதியை அறிகையாலே –
பெருமாள் ஒரு பகலே மீண்டால் போல்
த்வரித்து வருகிறானாய் இருக்கிறது –
தலைமகன் சாரதியைப் பார்த்துச் சொல்லுகிறான் –
(தீர்ப்பாரை –தேர்ப்பாகனார்க்கு இவள் சிந்தை போல் இங்கும் )

ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை விரைந்து நன் தேர்
நண்ணுதல் வேண்டும் வலவ  கடா கின்று தேன் நவின்ற
விண் முதல் நாயகன் நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய்
மண் முதல் சேர்வுற்று அருவி செய்யா நிற்கும் மா மலைக்கே – 50-

பாசுரம் -50-ஒள் நுதல் மாமை ஒளி பயவாமை –
தலைவன் மீண்டு வருகையைத் தேர் பாகனிடம் கூறல் –
கிளரொளி இளைமை -2-10-

பதவுரை

வலவ–பாகனே!
ஒண் நுதல்–அழகிய நெற்றியையுடையவளான நாயகியின்
மாமை ஒளி–மேனி நல் நிறத்தின் விளக்கம்
பயவாமை–பசப்பு அடையாதபடி (அதற்கு முன்னமே!)
நம் தேர்–நமது தேர்
விரைந்து நண்ணுதல் வேண்டும்–துரிதமாகச் சென்று சேர வேண்டும்;
(எவ்விடத்திற்கு? என்றால்)
தேன் நவின்ற–வண்டுகள் பாடப் பெற்ற
விண் முதல் நாயகன் நீள் முடி–பரமபதநாதனான பெருமானது நீண்ட திருமடியில் தரித்த
வெள் முத்தம் வாசிகைத்து ஆய்–வெண்ணிறமான முத்துமாலையின் தன்மையதாய்
மண் முதல் சேர்வுற்ற–(முடிதொடங்கி) அடிவாரத்து நிலத்திலே சேரும்படியான
அருவி–நீர்ப்பெருக்கை
செய்யா நிற்கும்–செய்து நிற்கிற
மா மலைக்கு–பெரிய திருமலைக்கு
இன்று கடாக–இப்பொழுது (தேரை)நடத்துவாயாக

வியாக்யானம் –
ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை –
ஒள்ளிய நுதலை உடைய இவளுடைய மாமை –
ஒளி உண்டு -நிறத்தில் புகர்-
அது பயப்பதற்க்கு முன்பே -அது விவர்ணம் ஆவதற்கு முன்பே –

(பிரிவாற்றாமையால் துடித்து இருக்க
ஓள் நுதல் உண்டோ என்னில்
தலைமகன் இருக்கும் பொழுது கண்ட இருப்புக்குச் சொல்லலாமே )

ஒண்ணுதல் மாமை –
பத்து மாசம் பெருமாளும் பிராட்டியும் பிரிந்தவோபாதி  இறே இவர்கள் பிரிவும் –
பிரிந்த போன நாளைக்கு பாதேயம் இருக்கிறபடி –
சந்த்ர காந்தாந நாம் ஸூப்ரூம-என்றார் இறே பெருமாள் –
இவ்வழகு இழந்தால் ஆறி இருக்க ஒண்ணாது என்கையும்-(பலிதம்)

விரைந்து நன் தேர் நண்ணுதல் வேண்டும் –
த்வரித்துக் கொண்டு நம்முடைய தேரானது கிட்ட வேண்டும் –
அவள் தன் வை வர்ண்யத்தாலே நமக்கு பழி இடுவதற்கு முன்பே -நீ த்வரையாலே
அப் பழியைத் துடைத்து தர வேணும் –
(பகவத் த்வராயா நம போல் ஆக வேண்டுமே )

வலவ –
இங்கும் சாரதி கையது போலே காணும் கார்யம்
(அங்கும் பார்த்த சாரதி கையதுவே தானே )

கடா நின்று நண்ணுதல் வேண்டும் –
நடத்தா நின்று கொண்டு நம் தேர் கிட்ட வேணும் –

தேன்  நவின்ற இத்யாதி –
நடத்துகிற உனக்கும் அங்கே போகப் புக்கால்
பிரயோஜனம் உண்டாம்படி காண்-தேசம் இருப்பது -என்கிறான்

தேன் நவின்ற மா மலைக்கே -என்னுதல்-
தேனுண்டு —
வண்டுகள் மது பான மத்தமாய்க் கொண்டு பாடுகிற அவற்றின் உடைய
பாட்டேயாய் இருக்கிற-திருமலை என்னுதல்-

அன்றிக்கே –
தேன் நவின்ற விண் முதல் நாயகன்-என்னுதல்-
விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ஸ-என்கிறபடியே தேனாக சொல்லப்பட்ட –
விண் முதல் நாயகன் -என்னுதல் –
(நித்ய விபூதி தொடக்கமான அனைத்துக்கும் நாயகன் )

நீண் முடி இத்யாதி –
பிரிந்த நாளில் ஸ்ரமம் எல்லாம் ஆறும்படியாய் காண் தேசம் இருப்பது –
ஸ்ரீ வைகுண்ட நாதனுடைய நீண் முடி உண்டு –
திரு அபிஷேகம் –
அதில் வெண் முத்து வாசிகை உண்டு-
வெளுத்த முத்து ஒழுங்கு –
அத்தன்மையதாய்-
அதின் படியை உடைத்தாய் –

திருமலை வ்ருத்தாந்தத்துக்கு ஸ்ரீ வைகுண்ட படியை திருஷ்டாந்தமாக சொல்லாம் படி யாய் ஆயிற்று –
இவருக்கு கண்ணால் காண்கிற இடத்திலும் அவ்விடம் விசதமாய் இருக்கிறபடி –
பர்வதத்துக்கு அக்நி  மத்தையை சாதியா நின்றால்-
மகாஸநதிகள் வ்யாப்தி க்ரகன பூமியாய்-
(பக்ஷம் பர்வதம் – சாத்யம் அக்னி -ஹேது புகை
மடப்பள்ளி த்ருஷ்டாந்தம்) இருக்குமா போலே –
இங்குற்ற சீலம் தரை காண ஒண்ணாதோ பாதி யாய் இருக்கையாலே
இவ்விடம் நிலம் அன்று இறே –

சத்கார்ய வாதம் ஆகையாலே -இச் சீலம் அங்கேயும் உண்டு என்று பிரமாணங்கள் சொல்ல-
விச்வசிக்கும் இத்தனை இறே –
கண்ணால் கண்டு அனுபவிகலாவது இங்கே இறே –

மண் முதல் சேர்வுற்று –
பூமி அளவு வந்து கிட்டி-அருவி செய்யா நிற்கும்

மா மலைக்கே –
வழியில் ஸ்ரமம் அடங்கலும் தீருகிறது இறே அங்கே புக்கவாறே –
குளிர் அருவி வேம்கடம் -இறே –

விண் முதல் நாயகன் நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய்
மண் முதல் சேர் வுற்ற அருவிகள் ப்ரவஹியா நின்றுள்ள
மாமலைக்கே விரைந்து நம் தேர் நண்ணுதல் வேண்டும் –

ஸ்வாபதேசம்-
இத்தால் ஆழ்வாருடைய ஆற்றாமையை கண்ட பாகவதர்கள் இவரை
ஆஸ்வசிப்பிக்கைக்காக வருகிறபடியை சொல்லுகிறது –
திரு மலையிலே -நிற்கிறவன் சீலத்திலே அகப்பட்டு –
திரு அருவிகளின் நடுவே
இருப்பதைக் கண்டு
பெருமாளை கை பிடித்த பின் -பிராட்டி மிதிலையை நினையாதால் போலே –
திரு நகரியையும் மறந்து
ஆழ்வார் எழுந்து அருளி இருந்த இருப்பை அனுபவிக்க வேணும் என்று
அனுகூலர் அடைய த்வரித்துக் கொண்டு வருகிற படியைச் சொல்லுகிறது –

(ஆழ்வார் தீர்த்தம் இன்றும் ஆழ்வார் நித்ய வாசம் சாதித்து அருளுகிறார் அன்றோ )

தாத்பர்யம்

இருளின் நீட்சியால் தளர்ந்த ஆழ்வாரை
ஆஸ்வசிப்பிக்கைக்காக பாகவதர்கள் விரைந்து மநோ ரதம் செலுத்திய படியை
நாயகியைப் பிரிந்து சத்ரு நிரசனம் பண்ணி திரும்பிய
நாயகன் சாரதி இடம் விரைந்து செல்ல
ஓ சாரதியே நான் நாயகியைப் பிரிந்து பல ஆண்டுகள்
(சீதாப் பிராட்டியைப் பிரிந்து பத்து மாதங்கள் –
பரதாழ்வானைப் பிரிந்து பதினான்கு ஆண்டுகள் –
தேவகிப் பிராட்டியைப் பிரிந்து பத்து ஆண்டுகள் பிரிவு உண்டே )
நெற்றி அழகி கொண்ட நாயகி பிரிவால் மேனி பசலை – விவரணம் அடைந்து உள்ளதே
உன்னாலே தான் இது என்று அனைவரும் பழி சொல்லுவார் -லோக அபவாதம் வாராத படி
ஆதி ராஜ்ய ஸூசகமாக திரு அபிஷேகத்தில் இழைத்த முத்து மாலை போல்
தெளிந்த மலை அருவிகள் பாயும் திரு வேங்கடத்தில் –
அவள் இருக்கும் திவ்ய தேசம் குறித்து தேரை விரைந்து நடத்த வேண்டும் என்று கூறும் பாசுரம் –

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading