ஸ்ரீ திரு விருத்தம் -49-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள்-வியாக்யானம் –

(மண்ணுக்கு பிருத்வி போன்ற சிறந்த நெற்றி யுடைய
தலை மகள் தோழியைக் கூறுவதாகவும்
தோழி தலை மகளைக் கூறுவதாகவும் கொள்ளலாம்
ஒண் நுதலே -உடையவளே –
இந்த இரவு போல் -விரிந்து கொண்டே போகும் இருள் -முன்பு கேட்டதும் கண்டதும் அறிந்ததும் இல்லையே
ஒன நுதலாள் -என்று கொண்டு
பூமி கரையாமல் இருந்தது போல் பிருத்விக்கு நிகரான தோழி என்றும்
பின்னை கொல் இத்யாதியால் தலை மகள்
ப்ரீதி அபிமானம் ரக்ஷணம் -இவற்றை அவளைப்போலவே இவளுக்கும் உண்டே
பாய் இருள் -பாய்ந்த இருள் -பாய்கின்ற இருள் – பாயும் இருள் –
கடாயா -தாண்டுதல் -அளந்த -நடத்தின- – ரஷித்த

ஊரெல்லாம் துஞ்சி-5-4- -ஆவி காப்பார் இனி யார் -இரவு வியசனம் இதுக்கு
மடலூர்த ஒருமிக்க இரவு வந்ததால் -ஓர் நீள் இரவு போல் இங்கு பாய் இருள் –
சங்கீதம் கூட்டி அங்கு இதே
இருளுக்கு ஆற்றாமைக்கு சொல்லிக் கொள்ளும் துறை )

அவதாரிகை –
சர்வேஸ்வரன் நம்மை விசேஷ கடாஷம் பண்ணிற்று  இலனோ -என்று
(நம் மேலொருங்கே பிறழ வைத்தார் என்றும் என்னைக் கொண்டு தன்னைத் தான் பாடி )
ஆறி இருந்தார் முன்பு –
காதாசித்கமாய் அனுபவ விச்சேதத்தை பண்ணுமதான சம்சாரத்திலே நம்மை வைப்பதே-என்னும்
ஆற்றாமை ஒரு பிராட்டி திசையை விளைத்தது –
கலந்து பிரிந்து பிரிவாற்றாத தலை மகள் தான் ராத்திரி வ்யசனத்தாலே
நோவு படுகிறபடியை தானே சொல்லுகிறாள் ஆதல் –
அன்றிக்கே
தோழி வார்த்தை ஆதல் –

பண்டும் பல பல வீங்கிருள் காண்டும் இப்பாயிருள் போல்
கண்டும் அறிவதும் கேட்பதும் யாமிலம் காள வண்ண
வண்டுந்துழாய் பெருமான் மதுசூதனன் தாமோதரன்
உண்டும் உமிழ்ந்தும் கடாய  மண்ணேர் அன்ன  ஒண்ணுதலே -49 –

பாசுரம் -49-பண்டும் பல பல வீங்கு இருள் காண்டும் –
தலைவி இருளுக்கு ஆற்றாது தோழியிடம் பேசல் –
ஊரெல்லாம் துஞ்சி -5-4-

பதவுரை

காள வண்ணம்–கறுத்த திருநிறத்தையும்
வண்டு உண் துழாய்–வண்டுகள் தேனுண்ணப்பெற்ற திருத்துழாய் மாலையைமுடைய
பெருமான்–ஸர்வேச்வரனும்
மதுசூதனன் தாமோதரன்–மதுஸூதநனென்றும் தாமோதரனென்றும் திருநாமங்களை யுடையவனுமான திருமால்
தாமோதரன் -ஸர்வேஸ்வரன் -ஆமோ தரம் அறிய என்பதால்
உண்டும்–(பிரளயகாலத்திலே) வயிற்றினுட்கொண்டும்
உமிழ்ந்தும்–(பிரளயம் நீங்கின வளவிலே) வெளிப்படுத்தியும்
கடாய–பாதுகாக்கப் பெற்ற-நடத்தின-அளந்த – ரஷித்த
மண்–பூமியினுடைய
ஏர்–அழகை
அன்ன–ஒத்த
ஒள் நுதலே–ஒளிபொருந்திய நெற்றியை யுடையவளே!
பண்டும்–முன்பும்
பலபல–மிகப்பலவான
வீங்கு இருள்–பெரிய இருட்பொழுதுகளை
காண்டும்–பார்த்திருக்கிறோம்;
இ பாய் இருள்போல்–இந்தப் பரந்த இருட்பொழுது போல
கண்டும் அறிவதும் கேட்பதும் யாம் இலம்–யாம் (வேறொரு பொருளைக்) கண்டறியவதும் கேட்டறிவதும் இல்லோம்.

வியாக்யானம் –

பண்டும் பல பல வீங்கிருள் காண்டும்-
இதுக்கு முன்பு எல்லாம் ராத்திரி வியசனத்தாலே அலைந்து போந்தாள்  ஒருத்தி காணும் இவள் தான் –
ஸ்ரீ மார்கண்டேய பகவான் அநேகம் பிரளயங்களை நீஞ்சி கரை கண்டால் போல் –
இதுக்கு முன்பு அநேக ராத்திரி -வியசனங்களும் அனுபவித்து –
அவற்றுக்கு ஒரு அவசானமும் (முடிவும் )கண்டு போந்தோம் இறே-

வீங்கிருள் காண்டும் –
முன்பு அநேகம் வளர்ந்த இருள் கண்டு போந்தோம் –

இப்பாயிருள் இத்யாதி –
அவ்வளர்த்தியோடே இப்படி பரந்த  இருள் போலே இருப்பதொன்று

கண்டு அறியோம் –
இவ்விருளை தப்பி ஒதுங்க ஒரு நிழல் இல்லாதபடி பிரளயம் வந்தால் போல் –
கண்ட இடம் எங்கும் தானே போந்தது –
இவ்விருள் போலே இருப்பது ஒன்றும் நாம் இதுக்கு முன்பு கண்டு அறியோம் –

நம்மோடு சஹோதரிகளாய் ராத்திரி வியசனதுக்கு உடல் கொடுத்து போந்த –
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் போலே இருப்பார் தான் இப்படி இருப்பது ஓன்று அனுபவித்து
போந்ததாக கேட்டு அறிவதும் இல்லை –

முன்பு சம்சாரயாய் நின்ற நிலையில் கண்டு அனுபவித்ததும் அநேகம் போந்தது –
இவ்விசேஷ கடாஷம் பண்ணின பின்புற்றை பாதகத்வம் முன்பு இல்லை இறே

(மூன்று வித ராத்திரி
சம்சாரி யாய் இருந்த நிலையில்
மதிநலம் அருளினை பின்பு
விசேஷ கடாக்ஷம் பண்ணின பின்பு
கண்டதும் இல்லை
கேட்டதும் இல்லை
அறிவதும் இல்லை
பகவத் அனுபவ அலாப-இருள் அன்ன மேனியைக் கொண்டு பண்ணினான் )

காள வண்ணன் –
இவ்விருள் பாதகமாம்படி பண்ணிற்று ஓர் இருளை இட்டு காணும் –
இருளன்ன மா மேனியைக் காட்டி யாயிற்று
போக யோக்யமான காலத்தில் -அவ்விருளோடு போலியான வடிவைக் கொண்டு –
வந்து அணையாமை ஆயிற்று இது பாதகமாம் ஆகைக்கு  அடி –

வண்டுந்துழாய் –
ஒப்பனையால் வந்த அழகைச் சொல்லுகிறது –

மது சூதனன் –
இவற்றால் வந்த போக்யதையை அனுபவிப்பார்க்கு வரும் விரோதியை
அம்மதுவை போக்கினால் போல் போக்குமவன் –

தாமோதரன் –
உகப்பார்க்கு கட்டி வைக்கலாம்படி பவ்யனாய் இருக்கும் அவன் –

உண்டும் இத்யாதி –
உண்பது
உமிழ்வதாய் கொண்டு நடத்துகிற –
அவனுக்கு ரஷ்யமாம் இடத்து
பூமியோடு நேர் ஒத்த –

இது தலைமகள் வார்த்தை ஆன போது –
பூமி பிரளயத்தில் கரைந்து போகாதே கிடந்தவோபாதி –
இந்த ராத்திரி வியசனத்தை தப்பி என் சத்தை கிடந்தது உன் சந்நிதி ஆகை இறே –

தோழி வார்த்தை யான போது-
தன் உடைமையை அழியக் கொடுப்பான் ஒருவன் அன்று காண்  அவன் –
தான் படாதது பட்டு நோக்கும் அவன் காண்
பிரளயத்தில் பூமியை அழிய விட்டு இராதோபாதி உன்னை ராத்திரி வியசனத்திலே
விட்டு இரான் காண்-

ஒண் நுதலே –
அவன் உடைமை என்கைக்கு ஒரு திருஷ்டாந்தம் சொன்னோம் இத்தனை அன்றோ –
உனக்கு ஒப்போ அம் மண் –
அவனுக்காகர்ஷமான வடிவு அழகு உள்ளது உனக்கு அன்றோ –

தாத்பர்யம்

சர்வேஸ்வரன் தன் இடத்தில் விசேஷ கடாக்ஷம் அருளின வற்றை அனுசந்தித்த பின்பும்
சம்சாரத்தில் இருப்பு அத்யந்த அஸஹ்யமாய்
பிரிய விரஹ சின்னையானவள்
பிராட்டி நிலையை அடைந்து தோழியிடம்
நாயகன் பிரிந்த பின்பு
பாய் இருளாய்
அநேகம் வடிவு கொண்டு அநேக ராத்திரி முன்பு பார்ததது போல் இல்லாமல்
இங்கே இவ்விபூதி அடங்கிலும் பரவி
இது போல் முன்பு பார்த்தும் கேட்டும் அறிந்தும் இல்லையாய்
இப்படி அதி மாத்ர சங்கட சமயத்திலும்
மது பானம் பண்ணித் திரியும் வண்டுகள் மொய்த்த திருத்துழாய் சூடிய பரம போக்யனாய்
விரோதி நிரசன சீலனாய்
ஆஸ்ரித ஸுலப்ய சீலனாய்
அத்யந்த ஸூலபனாய்
சர்வேஸ்வரன் பிரளயம் முதலிய ஆபத்துகளிலும்
அளந்த -மஹாபலி அபிமானத்தில் இருந்து ரக்ஷித்து அருளியும்
உண்டும் உமிழ்ந்தும் அளந்தும் கடாவி ரக்ஷித்து அருளியவன் வாராமல் இருக்க
தோழி உன்னுடைய சந்நிதான பலத்தால் ஜீவித்து இருந்தேன்
அழகிய நுதலை உடைய தோழீ உன்னைக் காணாமல் இருந்தால்
ஜீவித்ததே இருக்க மாட்டேனே -என்கிறாள்

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading