ஸ்ரீ திரு விருத்தம் -29-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள்-வியாக்யானம் –

(முதல் நான்கு தூது பாசுரங்கள்
அன்னமோடு அழுதல் துறை
தூது போகாத அன்னம்
பரத்வ அந்தர்யாமி வ்யூஹ விபவ அர்ச்சை -இவையே தூது நாலுக்கும் விஷயம்
இது பரத்வ த்வயம் பொன்னுலகு ஆளீரோ
இதிலும் ஸ்ரீ வைகுந்தத்துக்கு தூது

பொன்னுல காளீரோ? புவனி முழு தாளீரோ?
நன்னலப் புள்ளினங்காள்! வினையாட்டியேன் நான் இரந்தேன்
முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன்
என்னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே.-6-8-1-

குடியாலே வந்த சீர்மை யுடைய அன்னங்கள் என்றும் -இல்லாத -அன்னங்கள் என்றும்
வேறே ஆள் இல்லாமல் இவற்றை இரந்தாலும்
பெருமாள் உலகம் -ஸ்ரீ வைகுண்டம் –
நீல தோயதம் -மின்னன்ன மேனி
பெண் தூது போக மாட்டார் போல்
வினையாட்டியேன் நான் இரந்தேன் -பொன்னுலகு ஆளீரிலும்
வந்து இருந்து உம்முடைய பெடையோடும் -அலர்மேல் அசையும் அன்னங்கள் -அங்கும் உண்டே
என் நலம் கொண்ட பிரானுக்கு உரையீர் -அங்கும் உண்டே –
சேர்ப்பார்களை பக்ஷிகள் -ஞான அனுஷ்டானம் சிறகு )

(நம்பிள்ளை ஈட்டில்
அசோகா மரம் -உனது பேரைப் போல் என்ன ஆக்கு
ஒரு மரத்துடன் சாம்யா பத்தி அபேக்ஷிக்கிறார் பெருமாள்
சோக உபஹத சேத்னன் நான்
நீயோ சோகம் இல்லா மரம் )

அவதாரிகை-

பொரு நீர் திரு அரங்கா வருவாய் என்ற இடத்தில் ,
அருளுகிறேன் என்னுதல் –
அருளேன் என்னுதல் சொல்லாதே
பேசாதே இருந்த படியால் –
வார்த்தை சொல்லும் இடத்தில் சில அன்னங்களைத் தூது விடுகிறாள் –

இன்னன்ன தூதெம்மை ஆள் அற்ற பட்டு இரந்தாள் இவள் என்று
அன்னன்ன சொல்லாப் பெடையொடும் போய் வரும் நீலம் உண்ட
மின்னன்ன மேனி பெருமான் உலகில் பெண் தூது செல்லா
அன்னன்ன நீர்மை கொலோ? குடிச் சீர்மையில் அன்னங்களே –29-

பாசுரம் -29-இன்னன்ன தூது எம்மை ஆள் அற்றப்பட்டு –
தலைமகள் அன்னப் பறைவையை வெறுத்து உரைத்தல் –
பொன்னுலகு ஆளீரோ -6-8-

பதவுரை

குடிசீர்மை இல்–உயர்குடிப் பிறப்பால் வரும் சிறப்பு இல்லாத
அன்னங்கள்–இவ்வண்ணப் பறவைகள்
(எனன் செய்கின்றனவென்றால்)
இவள்–‘இப்பராங்குச நாயகியானவள்
ஆள் அற்றம் பட்டு–(வேறு தனக்கு) ஆளில்லாமையால்
இன்னன்ன தூது–இப்படிப்பட்ட தூதராக
எம்மை–நம்மை
இரந்தாள் என்று–குறை கூறி வணக்கத்தோடு வேண்டிக் கொண்டாள்’ என்றெண்ணி
அன்னன்ன சொல்லா–அப்படிப்பட்ட தூதுமொழிகளை (த் தலைவனிடஞ் சென்று) சொல்லாமல்
பேடையொடும் போய்வரும்–(தமக்கு இனிய) பெண் பறவைகளுடனே (மந்தகதியாக மகிழ்ச்சியோடு) உலாவித் திரிகின்றன;
(இதற்குக் காரணம்)
நீலம் உண்ட–நீல நிறத்தை யுட் கொண்ட
மின் அன்ன–மின்னல் போன்ற
மேனி–திருமேனியை யுடைய
பெருமான்–எம்பெருமானுடையதான
உலகில்–உலகத்தில்
பெண் தூது செல்லா–பெண்களுக்காகத் தூது செல்வதில்லாத
அன்னன்ன நீர்மை கொலோ–அப்படிப்பட்ட தன்மையை யுடைமையோ?

வியாக்யானம்-

இன்னன்ன தூது-
இப்படி பட்ட தூது ,
தரித்து இருந்து விடுகிறது அன்று —
போகத்துக்கு விடுகிறது அன்று ..
சத்தா தாரகமாக விடுகின்ற தூது –

(இளைய பெருமாள் சுக்ரீவன் கூட இருக்க தரித்து இருந்து தூது விட்ட பெருமாள் போல் அல்ல
கிம் கார்யம் சீதயா மம போல் அல்லவே
அஞ்சிறைய மட நாராய் -தழுவ தூது -போகத்துக்குத் தூது -அலற்றுவன் தழுவுவன் என்றாரே அங்கு )

கதேஹி  ஹரிசார்தூல புனராகமநாயது பிராணா நாமபி-சந்தேஹோ மாமாச்யாநாத்ரா சம்சய  -சுந்தர காண்டம் 39-22—என்று
பிராட்டி திரு அடிக்கு தன் தசையை அருளி செய்தது போலே

எம்மை-
நான் இருக்கிற படியே அமைந்து கிடீர் இருக்கிறது
தூது போவார்க்கு
ஒரு ஐந்தர வியாகரண பண்டிதனை-தூது போக விடும் இடத்தை
உங்களைப் போக விடும்படியான தசை கிடீர்

ஆள் அற்ற பட்டு-
ஆள் அறுதி பட்டு ..
உபய விபூதி நாதனும் கூட ஆள் விட இருக்கும் அவள் இறே-

மிதிலா மண்டலும்
ஸ்ரீ கோசல வள நாடும் குறை வறுத்தாலும்
பின்னையும் குறை கிடந்ததற்கு ஒரு மூலையிலே பத்து கோடி பேர் பிணை உண்ணும் படிக்கு ஈடாக
பரிகரம் உடையவள் இறே
இப்போது ஆள் அறுதி பட்டேன் என்கிறாள்

இரந்தாள்-
அவன் தான் செய்யக் கடவத்தை இவள் செய்த படி ..
அத்தலை இட்டு விடக் கடவது  இது இறே இவள் தான் விடுகிறது-

இவள்-
அப்ரேமேயம் ஹி தத் தேஜ -ஆரண்ய காண்டம் -37-18-என்னும்
இவள் கிடீர்

அன்னன்ன சொல்லா –
அப்படி பட்டவை சொல்லா
நான் சொல்ல விட்ட வற்றை சொல்லி ,
தானும் வேண்டும் வார்த்தை இட்டுக் கொண்டு சொல்லுகிறதும் இல்லை-
ஓலை பாதி தூது பாதி என்று சொல்லும் அது பொய்யாய் இருந்தபடி
நிரபேஷராய் இருப்பவர் சாபேஷர் கார்யம் செய்து-
தாங்கள் நிரபேஷராய் இருக்க வேண்டாவோ

பெடையோடும் போய் வரும் –
போம் போது -அனுபாவ்ய குணங்களை அனுசந்தித்து கொடு போம்
வரும் போது-அனுபூத குணங்களை அனுசந்தித்து கொடு போம் —
அடிமை செய்வார் மிதுனமாய் இருந்து இறே அடிமை செய்வது-
ஸ்ரீ சேனாதி பதி ஆழ்வார் ஸ்ரீ ஸூத்ரவதி யாரோடே
பெரிய திரு அடி ஸ்ரீ கீர்த்தியோடே
அத்ரி பகவான் அனுசூயையோடே-
பாதேயம் புண்டரீகாஷம் நாம சங்கீர்த்தன அமிர்தம்

(ஸ்ரீ சேனாதி பதி ஆழ்வார் ஸ்ரீ ஸூத்ரவதி யாரோடே திருமால் இருஞ்சோலை சேவை உண்டே )

நீலம் உண்ட இத்யாதி —
அங்கு உள்ளார்க்கு சர்வ ஸ்வகாகம் பண்ணும் வடிவு –
நீலதோ யத் மத்யஸ்தா வித்யுல்லே கேவ பாஸ்கரா  –நீளா ஸூக்தம்
பிரிந்த போது மின் இலங்கு திரு உருவு -திருநெடும் தாண்டகம் -25-என்னும் படியாய்-
கலந்த போது கரு முகில் ஒப்பார் -திருநெடும் தாண்டகம் -24-என்னும்படியாய்  இறே இருப்பது

(நீலம் உண்ட மேனி – ஒளி படைத்த மேனி -மின்னல் கறுப்பை விழுங்கி –
கறுமைக்கு முக்யத்வம் -மின்னலுக்கு முக்யத்வம் இரண்டும் உண்டே
இரண்டுக்கும் பிரமாணம் )

பெண் தூது செல்லா -அங்கு ஆண் தூதோ செல்லுவது —
அபலைகள் தூது செல்லாதோ ?–
அபலைகள் தூது அங்கு செல்லாது என்று இருந்தீர்களோ ?–
அபலையாய் இருந்து வைத்து தூது விடுவாள் என்று இருந்தீர்களோ ?–
உங்கள் பாடும் அவன் பாடும் குற்றம் என் ?
என் குற்றத்தாலே இறே
(மத் பாபமே -நானே தான் ஆயிடுக )

அன்னன்ன நீர்மை கொலோ –
அப்படி பட்ட ஸ்வபாவங்களோ ?

குடி சீர்மை இல் அன்னங்களே —
உங்கள் பாடு குற்றம் உண்டோ ?
அவன் ஒரு குடியில் பிறவாதவன் ஆகையாலே கேட்டிலன்-

நீலம் உண்ட மின்னன்ன மேனி பெருமான் –
பிறர்க்காக உடம்பு படைத்தவன் அன்றோ —
நீங்கள் குடி பிறவாதவர் ஆகையாலே சொல்லிற்று இலி  கோள் என்றும்-

ஸ்வாபதேசம்-
பகவத் விஸ்லேஷத்தில் இவர் உடைய ஆற்றாமை இருந்தபடி
பிராப்திக்கு ஸஹ காரிகளாய் இருந்தவர்களையும் கூட இன்னாதாக வேண்டும் படியான
தசையைச் சொல்லுகிறது –

தாத்பர்யம்
கீழ் நாயகியின் தசையை
திருத்தாயார்
திருவரங்கன் பதில் கிடைக்காமல்
அர்ச்சையில் பேசாரே
பரமபத நாதனுக்கு அங்கு கண்ட பக்ஷிகளைத் தூது விட
அவைகள் சொல்லாமல் தங்கள் கார்யமே பார்த்து இருக்க
ஓ ஹம்ஸங்களே
உங்களை விட வேறு ஒருவரும் இல்லாமல் தூது விட
அவன் இருதயத்தில் படும்படி
நீங்கள் முன்னமே அவன் சேவையைப் பெறுவீர்
எனது காரியமும் பார்க்காமல்
சொன்ன பின்பும் கூடப் போகாமல்
கூட சென்று அறிவியாமையால் ஸ்த்ரீகள் உடன் திரிகின்றிர்களே
திரு ஆபாரணங்கள் -அத் உஜ்ஜவலமான
நீல மேக ஸ்யாமளன்
ஸ்வயம் பிரயோஜனமாக போக வேண்டி இருக்க
போகாமைக்கு -வெறுத்து
ஒரு பென்னுக்குத் தூது போக்கத் தகாது
பெரும் குலத்தில் பிறக்காமல் இது செய்தீர்

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading