ஆழ்வார்கள் அனுபவித்த திரு வேங்கடம் உடையான்- ஸ்ரீ பொய்கையார்- -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

ஸ்ரீ திரு மலை மேல்  206 பாசுரங்கள்- /202 சொல்வார்–திவ்ய தேசம் பாசுரமா- நினைவு-
ஸ்ரீநிவாசன்- உறை மார்பன் போன்ற பல உண்டு-எங்கும் ஸ்ரீநிவாசன்- இருக்காது அலர்மேல் மங்கை உறை மார்பன் –
திவ்ய தேசம் வைத்தே பாசுரங்கள் உண்டு -ஒன்றும் விடாமல் விரிவாக ஆழமாக பார்ப்போம்—
அவதாரங்கள் நேராக உண்டு–விபவ அனுபவம்-திரு கண்ண மங்கை- பக்தராவி- -அரங்க மா நகர் அமர்ந்தானே –அர்ச்சை –
கோல வில்லி ராமன்–வீர ராகவன்–திவ்ய தேசம் மூலமே அனுபவிக்கிறோம் விபவங்களையும் –
-பசு போல அர்ச்சை– பால் போல விபவம்- காட்டி கொடுத்த நன்றி என்பதால் திவ்ய தேசம்–அதனால் ஏற்றம்–
இதை பகவான் கண்ணோட்டம் பார்த்தாலும்-நம்மை கை கொள்ள தானே இவன் வந்தான்- அவதாரம் பொழுது சிலரை கை கொண்டான்- இழவு தான் அதிகம்-
கீதை கேட்ட அர்ஜுனனே சரண் அடைய வில்லை -கரிஷ்யே வசனம் தவ -சந்தேகம் போனதுஎன்றான்  -சண்டை போட தான்  ஒத்து கொண்டான் —
அர்ச்சையில் இருந்து தவம் இருக்கிறான் நம்மை சேர்த்து கொள்ள –ஆதாரம் அவுனுக்கும் நமக்கும்–ஈர சொல்-

ஈர் இருபதாம்=40 சோழம்  ஈர் ஒன்பது =18  பாண்டிய /22 தொண்டை/ 13 மலையாளம் 2 நடு நாடு திரு பதிகள் 12 வட நாடு தெளி விசும்பு திரு நாடு –
அரங்க நகரே பூலோக ஸ்ரீ வைகுண்டம் –அடியார்கள் வாழ -அரங்க நகர் வாழ –மணவாள மா முனிகள் வாழ -ஆச்சார்யர்கள் வாழ்வதே இதற்க்கு பலன்–
அடியார்கள் வாழ அரங்க நகர் வாழனும் -கொண்டு கூட்டு பொருள்–வேருக்கு தண்ணீர் போல அரங்க நகர் வாழனும் –வேர் பற்றான திவ்ய தேசம்–
எல்லா திவ்ய தேசங்களும் -கோழியும் கூடலும் – ஒரே சொல் இருந்தாலும் –அதே ஏற்றம் தான்–அவர்பெருமை அளவு பட்டது இல்லை-
வாசாம் அகோசரம் -மொழியை கடக்கும் பெரும் புகழ்-பாட முடியாமல் உருக வைத்தான் —
கண்டவர் விண்டிலை விண்டவர் கண்டிலர்-காவேரி போல கண்ண நீர் இட்டு -பாசுர அர்த்தம் பெற்றால்–நின்றவனே கிடந்தான்-அரையர் ஐதீகம்–
ஒழிவில் காலம் -உத்தர வாக்கியம் -அகலகில்லேன் -பூர்வ வாக்கியம்-துவயம் -அகலகில்லேன்-இதற்க்கு நிகர் வேற ஒன்றும் இல்லை–
ஆழ்வார் 48/52 பாசுரங்கள்–பொய்கை ஆழ்வார் பாசுரங்கள் 10 பாசுரங்கள்-

எழுவார் விடை கொள்வார்  ஈன் துழாயானை
வழு வா வகை நினைந்து வைகல் தொழுவார்
வினை சுடரை நந்துவிக்கும் வேம்கடமே வானோர்
மனச் சுடரை தூண்டும் மலை————-26-

ஐஸ்வர்ய அனுபவம் கைவல்ய அனுபவம் பகவத் அனுபவம்–சுத்த சத்வ மயம் பெருமாளின் பிரசாதம்–
கண்ணார் கடல் போல் -திரு வெள்ள குளத்துள் அண்ணா -ஸ்வேத புரம்-அண்ணன் பெருமாள் -திரு வேங்கடம் உடையானுக்கு —
ஆத்மா -சித் -அசித் -ஈஸ்வர  மூன்று தத்வம்கள்–தனி கோல் செலுத்தும் -இலன் அலது உடையனது நிலன் இடை விசும்பிடை உண்டு-
உம் உயிர் வீடு உடையானை- வீட்டையும் உயரையும் வுடையவன்– ஜீவாத்மாவும் சரீரமும் உடையவன்–
அசித் உயரந்தது என்று கொண்டால் அசித் அனுபவம்- புலன்கள் அனுபவம்-ஐஸ்வர்ய அனுபவம்–
ஜீவாத்மா தான் உயர்ந்தது என்பவன்-கைவல்ய அனுபவம்–ஈச்வரனே உயர்ந்தவன் என்று தெரிந்தவன் பகவத் அனுபவம் பெறுவான்–
மூன்றையும் வேண்டுபவர் அவன் இடமே போகுவார்- போற்றி என்று எழுவர் பொருள் பெற்றதும்-மந்தி பாய் வேம்கட மா மலை போல-நாமும் வேவ் வேற
பொருளுக்கு திரு மலைக்கு போகவது போல்–உடல் இன்பம் வேண்டும் உன் இன்பம் வேண்டாம் என் இன்பம் வேண்டும் அதை நீயே கொடுக்க வேண்டும் -என்பவர்
விடை கொள்வார்-கைவல்யார்திகள்–வழுவது-நழுவுதல் இன்றி -பக்தி மார்க்கம்-வைகல்- நித்யம் -அவனையே அவன் இடம் கேட்பது–
நான்கு வகை-கீதை ஆர்தன் அர்த்தார்த்தி பிரித்து -இருந்த ஐஸ்வர்யம் இழந்து கேட்பவன் புதிதாக -அல்லது இந்த சொர்க்க லோகம் இரண்டும் கேட்பவர்/
ஞானி தான் நித்ய யுக்தன்-பிரிவது இல்லை-கூடவே இருப்பவன்-வழுவா வகை நினைந்து வைகல்  தொழுவான்–
வினை சுடரை-நந்து விக்கும் -அழிக்கும்–வேம்=எரிக்க படும் கடன்கள் -=எரிக்க படும் -இதே அர்த்தம் சமஸ்க்ருதத்திலும்–
வானோர் மனச் சுடரை தூண்டும்-நித்யரின்-சாம கானம்-பட்டர்-திரு நெடும் தாண்டகம் அருளியதும்-ஸ்ரீ வைகுண்டம் அருள-
இதே திரு கோலம் இல்லையில் கிழித்து கொண்டு வருவேன்–வைத்த அஞ்சேல் என்ற திரு கைகளும் கவித்த முடியும் ஆசன பத்மத்தில்
அழுந்திய திருவடிகளும்-வானவர் வானவர் கோன் உடன்சிந்து பூ மகிழும் -வானவர் சாந்தி செய்ய நின்றான் – -மனச் சுடரை தூண்டினான் திரு வேம்கடத்தில் – 
அங்கு பகல் விளக்கு போல் இருந்தது -தெளி விசும்பு திரு நாடு விட்டு வந்ததும் -சௌலப்யம் தயை எல்லாம் அனுபவிக்க–தூண்டி விடுகிறான்-
அவன் இடன் அவனையே கேட்டு -வினைகள் அனைத்தையும் தொலைத்து நித்யர் அனுபவம் மேல் கொடுப்பான் தயா சதகம்-தயை-பாட்டு உடை தலைவன்-
கிருபை-அருள் கருணை-இரக்கம்-பிரபத்யே வணங்கிகிறேன் மலையை–ஸ்ரீனிவாச அநுகம்பா–கம்பனம் -நடுக்கம்-நம் கஷ்டம் பார்த்து நடுங்குகிறான்  –
அவிகாராய தத்வம் –ஒரு மலை ஏழு நாள் கையில் நின்றது கோவர்த்தன மலை -இங்கு ஏழு மலை என்றும் -குன்றம் ஏந்தி குளிர் மலை காத்தவன்–
இங்கு மலைகள் அவனை தூக்கிக் கொண்டு -பரன் சென்று சேர் திரு வேங்கட மா மலை -ஒன்றுமே தொழ-வினைகள் -கொழுத்த படும் –
சத்யம் சத்யம் -கடிகாசலம்-கடிகை தடம் -அக்கார கனி-மிக்கார் வேத விமலர் விழுங்கும்- மிக்கானை -கடிகை–நாழிகை
அசலம்-அசையாதது -ஊழி கால பாபம் தொலையும் ஒரு நாழிகை அசையாமல் அங்கு இருந்தால் –
கேசவா என்ன கெடும் இடர் ஆயின எல்லாம்-அது போல் வேம்கடம் -விளக்க ஸ்ரீநிவாசன்-அவள் இருப்பதால்-
இச்சு சார -கரும்பு போல அவன்-கண்ணு போல கண்ணன்-பிறந்தவாறும் வளர்ந்தவாரும் கீதை அருளியதும் ஒவ் ஒரு கண் –
பிழிந்து சாறு போல தயை–அதை கட்டி  ஆக்கி -கல்கண்டு-திரு மலை-என்றும் அனுபவிக்க-ஊழி தோறும் அப் பொழுதைக்கு அப் பொழுது ஆரா அமுதம் —

37-40 பாசுரங்களும்-வரிசையாக-

வகை அறு நுண் கேள்வி வாய்வார்கள் நாளும்
புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி திண் திசையின்
வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேம் கடமே வெண் சங்கம்
ஊதிய வாய் மால் உகந்த ஊர்–37

வெண் சங்கம் ஊதிய வாய்-மால்-உகந்த ஊர்- ஆஸ்ரயிக்கும் இடம்–உபாயாந்தரங்கள்-வகை-விட்டு விட்டு-அவனை கொண்டே அவனை அடைய
ஞான யோகம்-அவிச்சினமாக இடை விடாமல் இருத்தி-சொரூபத்துக்கும் ஏற்காது யோக்யதையும் இல்லை–அ
வன் திருவடிகளே வழி என்ற ஞானம் உடையவர்கள்- யானை மேல் ஏற யானையே தூக்கி கொள்ள வைக்க சொல்வது போல–
வகை–சாதனா அந்தரம் விட்டவர்கள் –பிரயோஜனான்தரம் துரந்தவர்கள் என்றும்  –அவனாலே அவனை அடைதல்–
மற்றவர்களால் அவனையோ அவன் இடம் வேற ஒன்றையும் அடையாமல்—திசை திசையின்-எல்லா திக்குகள் இருந்தும் —
நித்யம் பாரித்து இருக்க வேண்டும்–பெரிய திரு நாளுக்கு வந்து அடையுமா போல வந்து -சேர்ந்து –
அக்ரூர ஞானம் திரு வேம்கட யாத்ரை அர்ச்சிராதி மார்க்கம் -ஞான தரிசன பிராப்தி போலே இம் மூன்றும் – பாரித்து கொண்டு இருக்க வேண்டும்–
நலம் அந்தமில் நாடு புகுவீர்–அழகார் விரசை தன்னில் குளித்து அமானவனால் ஒளி கொண்ட சோதி பெற்று –
இதன் உயர்வு நினைந்து இங்கு உள்ள குற்றம் நீங்க -பாரித்து கொண்டே இருக்க வேண்டும் -விபவத்துக்கு பிரதி நிதி தானே அர்ச்சை-
தோடு இட்ட காது போல தழும்பு தெரியும் -சகடம் உதைத்த திருவடி–சார்ங்கம் வில் பட்ட சொர சொரப்பு–சங்கம் ஒலி கேட்டதுமே மாய்ந்தார்கள்–
கழுத்தில் ஓலை கட்டி தூது நடந்தானே திரௌபதி விரித்த குழலை காண சகியாமல்–பாண்டவ தூதன் பெரிய திருமேனி–
கழல் மன்னர் சூழ -எழல் உற்று -சேவித்த உடனே எழுந்தானே-மீண்டே இருந்து-திச்சோததனை அழல விளித்தானே அச்சோ அச்சோ —
நிமித்த மாத்ரமே அர்ஜுனா நீ சண்டை போட்டால் போதும்-வெண் சங்கம் ஊதிய மால்–பித்து -ஆஸ்ரித வியாமோகம் -கொண்டவன்
ஆத்மாநாம் சாரதிம்-சர்வ லோக சாஷி-அர்ஜுனன் ரதியாக வைத்து இவன் சாரதியாக அனைவரும் பார்க்கும் படியாக-அவன் கால் தான் மேல் படும் படியாக  இருந்தானே

ஊரும் வரியரவம் ஒண் குறவர் மால் யானை
பேர் வெறிந்த பெரு மணியை கார் உடைய
மின் என்று புற்றடையும் வேம்கடமே மேல் அசுரர்
எம் என்னும்  மாலது  இடம்–38–

இடந்தது பூமி எடுத்தது குன்றம்
கடந்தது கஞ்சனை முன் அஞ்ச  கிடந்ததுவும்
நீரோத மா  கடலே நின்றதுவும் வேம்கடமே
பேரோத வண்ணர் பெரிது–39

பெருவில் பகழி குறவர் கை செந்தீ
வெருவி புனம் துறந்த வேழம் இரு விசும்பில்
மீன் வீழ கண்டு அஞ்சும்  வேம்கடமே மேல் அசுரர்
கோன் வீழ கண்டு உகந்தான் குன்று–40

ஸ்ரீ ரெங்க   மங்கள நிதிம்  கருணா நிவாசம் -அனைத்து மங்களங்களுக்கும் இருப்பிடம் ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காள மேகம்–
நீர் உண்ட மேகம்–ஈர்க்கும் பார்க்கும் பொழுதே–மேக வண்ணன் முகில் வண்ணன் ஸ்வாபம் -வாரி கொடுப்பவன் —
மேகம் படியும் மலை குகடு–திரு மால் இரும்சோலை திரு கடிகை  மலை திரு வேங்கடம் -அழகு ஒவ்தார்யம்–மலை சம்பந்தத்தால் ஏற்றம்–
சகல ஜலதீ பான -சீதள காள மேகம்-ஆதிசேஷன் மலை மேல் சயனித்தான்–பட்டர்–அச்சோ ஒருவர் அழகிய வா —
ஸ்ரீ ஹஸ்தி சைல சிகரோஜ்வல பாரி ஜாதம்-யானை மலை-வேழ  மலை-அத் திகிரி–ஆறு வார்த்தை கொடுத்தானே —
அஹம் ஏவ பரம் தத்வம்–நெஞ்சை தட்டி –கண்ட வாற்றால் தனதே உலகு என்று நின்றான்–
ஸ்ரிசம் நமாமி   சிரசா யது சைல தீபம் – யது சைலத்தில் ஏற்றி வைத்த தீபம்—

உணர்வார் யார் உன் பெருமை ஊழி தோறு ஊழி 
உணர்வார் ஆர் உன்  உருவம் தன்னை உணர்வார் யார்
விண்ணகத்தாய்! மண்ணகத் தாய் ! வேம்கடத்தாய்! நால் வேதம்
பண்ணகத்தாய்! நீ கிடந்த பால்–68

ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு-முன் பாசுரத்தில் சொல்லி –
தாமரை பூ சூர்யன்-நதி-போல- கடல்-ஞான விகாசம் ஏற்பட அவன் அருளையே நோக்கும்—அறிந்து முடிக்க முடியாது என்கிறார் இதில்–
தனக்கும் தான் தன்மை அறிவு அரியான்– -அறிய முடியாது என்றே அறிய முடியும் —
திரு மேனியே அறிய முடியாது –அஹம் வேத்மி ராமம் சத்ய பராக்கிரமம் -விஸ்வாமித்ரர் –

வழி நின்று நின்னை தொழுவார் வழுவா
மொழி நின்ற மூர்தியரே யாவர் பழுது ஒன்றும்
வாராத வண்ணம் விண் கொடுக்கும் மண்ணளந்த
சீரான் திரு வேங்கடமே–76

அவிச்சின்னம் -இடை யூறு இன்றி நினைவு -சினேகா பூர்வ அணு த்யானம்-பக்தி-சரவணம் மனனம் இடைவீடு இன்று நினைந்து தர்சன சமானாகாரம்-
அங்கு தான் கண்ணை திறந்து சேவை- வழி நின்று -நின்னை தொழுவார்–மூர்த்தி ஆகி விடுவார்–இயல்பு தன்னை அடைவார் -ஸ்வேன ரூபேண அபிநிஷ்பதையே  –சொரூப ஆவிர்பாவம் அடைகிறான்- மூர்த்தியர்- அபகத பாப்மா-பாபம் தீண்டாமல்- விஜரக–மூப்பு  இன்றி–விமிருத்யு -அழிவு இன்றி
விசோக – -அபி பாதக  -தண்ணீர் தாகம் இன்றி -விஜிசித்தாக –பசி இல்லை சத்ய காம  -சத்ய சங்கல்ப போன்ற எட்டு கல்யாண குணங்களும் எப் பொழுதும் உண்டு-
கௌஸ்துபம்-போல ஜீவாத்மா-ரத்னம் சேரை நீக்கி தானே ஒளி விடுமா போல -அணை திறந்தால் தண்ணீர் தானே ஓடி வருவது போல —
வழுவா வழி- வேதம் சொன்ன படி–திரு வேங்கடம் மலையே விண் கொடுக்கும்-
எம்பார்-திரு வேங்கடத்தானே கொடுப்பான் திருவேங்கடம் கொடுக்கும் சொல்லவும் வேண்டுமோ–கைமுதிக நியாயம் –
பக்தி நேராக கொடுக்காது இது அசித் –இதனால் அவன் திரு உள்ளம் உகந்து கொடுக்கிறான்-அது போல திரு மலையில் இருந்தால் அவன் உகந்து கொடுக்கிறான் —

வேம்கடமும் விண்ணகரும்  வெக்காவும் அக்காத
பூம் கிடங்கின் நீள் கோவல் பொன்னகரும் -நான் கிடத்தும்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே
என்றால் கெடுமாம் இடர்–77

இடர்கள் எல்லாம் தொலையும்–அவன் நின்றான் இருந்தான் கிடந்தான் என்று நினைத்தால் நாம் கிடந்தது இருந்து பண்ணும் பாபங்கள் விலகும் /
வேங்கடத்தில் – நின்றான் விண்ணகரத்தில் -ஒப்பிலி அப்பன்-ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயன்–மிகு நரும் இலனே-இங்கும் நிற்கிறானே
பரம பதம் சொல்கிறார்–நடுவாக வீற்று இருக்கும் நாரணன்–
ஐந்து விண்ணகரம் காழி சீராம  விண்ணகரம் நந்தி புர விண்ணகரம்  அரிமேயவிண்ணகரம்  பரமேஸ்வர விண்ணகரம்-இருந்தானே-
வெக்காவில் கிடக்கிறான் பூம் கோவலூரில்  நடந்தான் -என்றால் -சுலபமாக சொல்ல மாட்டோம்-நெடு மர கலம் கரை சேர்ந்தால் போல-
நிதி கிடைத்தால் போல–மன சகாயம் இன்றி வாயாலே சொன்னாலே போதும் –இடர் கெடும்-
நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே – நாவினால் நவிற்று-திரு மால் இரும் சோலை என்றேன் என்ன –
பரப்பு மாறாத பூம் கிடங்கு-தனி விசேஷணம்- ஆழ்வாரை ஈடு படுத்திய திவ்ய தேசம் என்று –

படியாரும் வாழ் கண்ணார் பாரசி நால் பைம் பூம்
தொடையலோடு ஏந்திய தூபம் இடை இடையில்
மீன் மாய மாசூணும் வேம்கடமே மேல் ஒரு நாள்
மான் மாய வெய்தான் வரை—82-

உளன் கண்டாய் நல நெஞ்சே! உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தின் உள்ளானும் வேம்கடத்து மேயானும்
உள்ளத்தின் உள்ளான் என்று ஊர்–99-

————————————

26-37–38-39-40-68-76–77–82-99-ஆக -10-பாசுரங்கள்

ஸ்ரீ கண்ணனே இவன் -என்று இரண்டு பாசுரங்கள்
வெண் சங்கம் ஊதிய வாய் மால் உகந்த ஊர்–37-/
எடுத்தது குன்றம் கடந்தது கஞ்சனை முன் அஞ்ச  கிடந்ததுவும் நீரோத மா  கடலே நின்றதுவும் வேம்கடமே-39-

ஸ்ரீ உலகு அளந்த உத்தமனே இவன் -ஒரு பாசுரம்
மண்ணளந்த சீரான் திரு வேங்கடமே–76

ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் இவன் ஒரு பாசுரம் –
வேம்கடமே மேல் ஒரு நாள் மான் மாய வெய்தான் வரை—82-

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பொய்கை ஆழ்வார்  திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading