திரு விருத்தம் -எட்டாவது பாசுரம் –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

(தலைவி தோழியையைப் பார்த்தும் தலை மகனைப் பார்த்துச் சொல்வதாகவும் –
முன்னிலை படர்க்கை சொல்லும் இடங்கள் -தமேவ சரணம் அந்த பரமாத்மாவை சரணம் -தன்னை சொன்னது போலே
தோழி தலைமகனைப் பார்த்து சொல்வதாகவும்
மூன்றும் கொள்ளலாம்

பொருள் (வரின்) வயில் பிரிதல் துறை
திரை கடல் ஓடியும் திரவியம் தேட போகும் தலைவன்

ஆழ்வாரை விட்டு பகவான் பிரிகிறான் -எந்தப் பொருளைத் தேடிப் யோவான்
கிளவித் தலைமகன் -பாகவத உத்தமர்கள் ஆழ்வாரை விட்டுப் பிரிவதைச் சொன்ன படி
ஆழ்வாரைப் புகழ்ந்து பேசுவதைப் பார்த்தால் பிரிவு ஸூசகம்
திருவேங்கடமுடையானைப் பாடினீரே
அவனே தானே இவர்களுக்கு பெரிய நிதி –
திருவேங்கட முடையானே பிரிக்க நினைத்தாலும் பாகவதர்களைப் பிரியக் கூடாதே
சம்சார விஷ வருஷத்துக்கு இரண்டு அம்ருதம் கதாசித் கேசவ பக்தியும் பக்த பக்தியும் -பக்த சமாஹம்
வா -விகற்பம் -இதுவோ அதுவோ -துல்ய விகற்பம் -எதுவும் சமம்
வியவஸ்தித விகற்பம் -பாகவத பக்தி தான் உத்தேச்யம் – இல்லை என்றால் கேசவ பக்தி கொள்ளலாம் என்பர் உடையவர்
சிலர் போகப் பார்க்க சிலர் சொல்வதாக கொள்ள வேண்டும்
நம்மாழ்வார் திருமலையில் எழுந்து அருளி உள்ளாரா –
திருவேங்கடமுடையான் எதிர் சூழ் புக்கு திக்கு தோறும் ஸந்நிதி கொண்டு அருளுகிறார் அன்றோ )

(குன்றம் எடுத்த கண்ணனே இங்கு -அது தான் பற்றிய மலை -இது தன்னைப்பற்றிய மலை –
ஆதாரமும் ஆதேயமும் அவனே
குன்றம் ஏந்தி வினையாகக் கொண்டால் -ஸ்ரமம் தீர்க்க வந்தான் –
பெயர்ச் சொல்லாக் கொண்டு இதுவே திரு நாமம்
கண்ணாவான் விண்ணோர்க்கும் மண்ணோர்க்கும் இவனே -உம்பர் நம்பி வந்து அடைகிறார்கள்
எம்பெருமான் பொன் மலையிலே ஏதேனும் ஆவேனே –
பேசுவது நீர்மை ஸ்வபாவிக்கமாக இல்லாமல் அப்பியாசம் பண்ணி வரவழைத்த வலிமை –
அனுகூலமாக பேசுவது போல் பாவனை செய்து பிரிவை ஸூசகம் -அதனால் வலிமை -கற்றது திண் எனவே
கண்ணால் காண்பது காதால் கேட்பது எல்லாம் மாறி உள்ளன
பராங்குச நாயகியேயே சொத்து என்று இருந்த இவர்கள் வேறே பொருளை சம்பாதிக்க அன்றோ போகிறார்கள்
தனம் மதீயம் என்று சொன்ன வார்த்தையையும் பொய்ப்பித்து
தேவு மற்று அறியேன் என்று இருக்க மாட்டாமல் பிரிகிறார்கள் -)

—–

அப்பிள்ளை உரை

தன்னோடே கலந்த தசையில் தனது பக்கலிலே வ்யாமோஹ அதிசயத்தாலே
நீசமாகப் பண்ணும் யுக்தி சேஷ்டிதங்கள்
கண்டு அத்தாலேயே பிரியக் கடவ என்று
அறிந்த தலைமகள் சொல்லுகிறாள்

காண்கின்றனகளும் கேட்கின்றகளும் காணில் இந்நாள்
செயல்களும் சொற்களும் அனுசந்திக்கில்
நினைப்பது தலைமகள் தானே
காணில் நெஞ்சால் காணில் என்ற அர்த்தம் -ஆகவே மானஸ வியாபாரம்

இந்நாளில் பாண் குன்ற நாடர்
வண்டுகள் குறிஞ்சி ஓசை ரீங்காரம்

பயில்கின்றன இதெல்லாம் அறிந்தோம்
மிக்க பிருவ்ருத்திகள் அறிந்தோம்

பாண்மை மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்தும்பர் நம்பும்
சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே –
மநோ ஹராமாய கோவர்த்தனம் ஏந்திய
ஸ்ரம ஹரமாய் மிக உயர்த்தியான
அயர்வறும் அமரர்கள் விரும்புவதும் செய்த
சுமந்து –வானவர் கோனுடன் –தடம் குன்றமே
ஸ்லாக்யமான -உயர்ந்த சிகரத்து – சென்று பொருள் சம்பாதிக்க
நீ பேசும் வஞ்சனைப் பேச்சுக்கள் செயல்கள்

ஸ்வா பதேசம்
ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய சம்ச்லேஷம் இருந்தாலும்
பிரிவை அதி சங்கை பண்ணி
அத்தனை உயர்ந்த செல்வம் இழப்போமோ என்று இருக்குமே
அகலகில்லேன் இறையும் -தண்ணீர் தண்ணீர் என்னும்படி அபிநிவேசம் இருக்குமே
இப் பாட்டிலும் மேலில் பாட்டிலும் இத்தையே சொல்லிற்று ஆயிற்று
பாகவத சகவாசம் சமாஹம் இருக்க -அவ்விருப்பு ஒழிய -எம்பெருமான் உள்ள திவ்ய தேசத்துக்கும் போகக்கூடாது என்று
பாகவத ஸஹவாஸ ஸ்லாக்யதையைச் சொன்னபடி
அடியார் அடியார் கூடும் –இது வல்லால் மூவுலகு பெறினும் வேண்டாவே -வேறே இடம் போவது தப்பு –

——-

அவதாரிகை –

இப்படி தோழி இவளை தர்ப்பித்த அளவிலே
நாயகன் வந்து இவளோட்டை அதிமாத்ரமாக சம்ச்லேஷம் பண்ணின படியைக் கண்டு
யதா பூர்வமான பரிமாற்றம் அன்றியே
கலவியிலே குவால் வகைகள் உண்டாய் இருந்தது
இப்படி செய்கைக்கு அடி
பிரிய நினைத்தானாக வேணும் என்று
அதி சங்கை பண்ணுகிறாள் –

காண்கின்றனகளும் கேட்கின்றகளும் காணில் இந்நாள்
பாண் குன்ற நாடர் பயில்கின்றன இதெல்லாம் அறிந்தோம்
மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்தும்பர் நம்பும்
சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே —8-

பாசுரம் -8-காண்கின்றனகளும் கேட்கின்றனகளும் -தலைவன் பொருள் வயிற் பிரிதல்
குறிப்பால் அறிந்த தலைவி தோழிக்கு கூறல் -கையார் சக்கரம் -5-1-

பதவுரை

குன்றம் நாடர்–மலைகளை யுடைத்தான நாட்டுக்குத் தலைவரான நாயகர்
இ நாள்–இன்றை தினத்தில்
பயில்கின்றன–பலவாறாக நடத்துகின்றவையான
காண்கின்றனகளும்–காணப்படுகிற செய்கைகளும்
கேட்கின்றனகளும்–கேட்கப்படுகின்ற சொற்களும்
காணில்–ஆராய்ந்து பார்க்குமிடத்து
பாண்–வெளியுபசார மாத்திரமாம்;
இது எல்லாம்–இந்த மிக்க உபசாரமெல்லாம்
மாண் குன்றம் ஏந்தி–மாட்சிமை தங்கிய கோவர்த்ததன கிரியை நினைப்பின்றி யெடுத்த கண்ணபிரானது
தண் மா மலை வேங்கடத்து–குளிர்ந்த சிறந்த திருவேங்கடமலையின்
உம்பர் நம்பும்–மேலுலகத்தாரால் விரும்பப்படுகிற உயர்ந்த சிகரத்தை
சென்று–போய் அடைந்து
பொருள் படைப்பான்–(அங்கும்) பொருளீட்டும் பொருட்டு
கற்ற–(புதிதாக) அப்யஸித்த
திண்ணளவு–வலிமையின் செயல் (என்று)
அறிந்தோம்–தெரிந்து கொண்டோம்.

வியாக்யானம் –

காண்கின்றனகளும் –
நின்றால் போலே நில்லா
காலை எடுத்து தலையிலே வைப்பது
கும்பிடுவது -ஆகிறபடி –

(இது அன்றோ எழில் வாலி என்றார் தாமே -காலைத் தொட்டு
இதுவே என்று காட்டினான் வயலாலி மணாளன் )

கேட்கின்றகளும் –
அடியேன் -என்பது
வாயது விரல் மார்பத்து எழுத்து என்று
சொல்லுகிற சாடு சதங்கள்-

காணில் –
நிரூபிக்கில்
நெஞ்சு என்னும் உட் கண்ணால் காணும் உணர்ந்து –

இந்நாள் –
இன்று –

பாண் குன்ற நாடர் –
பாண் -புலமையை இரா நின்றது
வண்டுகள் பாடா நின்றுள்ள திருமலையைத் தேசமாக உடையவர்
குறிஞ்சி நிலத்து தலைமகன் -என்றபடி

(இந்நாள் பாண்-ஸ்தோத்ரம் புலமை அர்த்தவாதம் புகழ்ச்சி
பாண் -வண்டுகள் என்றுமாம் )

பயில்கின்றன இதெல்லாம் அறிந்தோம் –
தன் உடைமைக்கு தான் செய்யும் அளவன்றிக்கே
பெறாப் பேறு பெற்றால் போலே செய்கிற
இவற்றின் ஹேது அறிந்தோம் –

பயில்கின்றன
சம்ஸ்லேஷம் உச்சி வீடு விடாதே இருக்கிறபடி
மகா ராஜர் பெருமாளை மின்னுக்கும் இடிக்கும் இரையாக விட்டு வைத்துப் போய்
உதித்ததும் அஸ்தமித்ததும் அறியாதே இருந்தால் போலே –

(பயில்கின்றன வர்த்தமானம்
தலைமகன் பிரிந்த பின்பும் இன்னும் அனுசந்தானம் நெஞ்சில் சொல்லுகிறபடி )

மாண் குன்றம் ஏந்தி –
ஒன்றை ஆதாரமாக கொண்டும்
ஒன்றை ஆதேயமாகக் கொண்டும் ரஷித்த படி
மாட்சி -அழகு
ஏந்தி -அநாயாசேன-இருந்தபடி –

(அன்று குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவனே
இன்று பரன் சென்று சேர் வேங்கடம் )

தண் மா மலை வேங்கடத்து –
குளிரருவி வேங்கடம் -என்னும்படி ஸ்ரமஹரமான திருமலை

உம்பர் நம்பும் –
மந்தி பாய் வட வேங்கட மா மலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான் -என்னும்படியே
நித்ய ஸூரிகள் சமாராதானம் பண்ணுகிற இடம்

(ப்ரம்மா திருவாராதனம் தேவப்பெருமாள் இன்றும் ஆற்றுக்கு நடுவில் எழுந்து அருளி
அவனது ஆராதனை ஏற்றுக்கொண்டு அருளுகிறார் )

ஒக்கச் சந்திப்பர் வேங்கடத் தத்தனை -என்னும்படி நித்ய ஸூரிகள் விரும்பும் படி
தாங்கள் அனுசந்தித்த மேன்மை அன்றிக்கே
நீர்மை மிக்க இடமானவாறே விரும்புவார்கள் –
(இங்குள்ளார் உடன் ஓக்க ஸூ சீலன் -அத்தைச் சேவிக்க அங்குள்ளார் இங்கு வருகிறார்கள் )

சேண் குன்றம்-
உயர்த்தியான சிகரங்கள் -என்றுமாம் –

சென்று பொருள் –
நீயே பொருள் என்று இருந்த படி கண்டோம் –
(இப்பொழுது என்னை விட்டுப் பொருள் தேடிப் போகிறாயே )

படைப்பான் –
சாத்தியங்கள் இல்லை
எல்லாம் சித்தம் என்றபடி கண்டோம் –

கற்ற –
இவை பண்டு இல்லை
இப்போது எங்கே குருகுல வாசம் பண்ணினீர் –

திண்ணனவே –
அம் மேன்மை எல்லாம் போய்
திண்மை எங்கே உண்டாயிற்று-

தாத்பர்யம்

இப்பாசுரத்தில் இந்நாள் வரை ஸஹவஸித்த பாகவதர்கள்
திருவேங்கடமலை யாத்திரை உத்தேச்யமாக
அத்தை ஆழ்வார் இடம் விண்ணப்பம் செய்ய
அவர்களது அபூர்வமான நைச்ய யுக்திகளையும் சாத்ருச சேஷ்ஷ்டிதங்களையும் கண்டு
இவர்கள் பிரிய நினைக்கிறார்கள் என்று அறிந்து அருளிச் செய்யும் பாசுரத்தை

நாயகன் பிரிய நினைக்கும் பொழுது செய்யும் செயல்களையும் சொற்களையும் நாயகயின் பாசுரத்தால் அருளிச் செய்கிறார்
உம்மிடத்தில் இப்பொழுது இவை போன்ற
உம்முடைய செயல்கள் சொற்களும் நிரூபிக்கில்
பிரிய நினைப்பது போல் அன்றோ இருந்தது
நித்ய ஸூரிகளும் விரும்பத்தக்க்க
ஸ்ரமஹரமாய் மநோ ஹரமாய்
முன்பு கோவர்த்தன ஏந்தி ரஷித்தவன்
இப்பொழுது சர்வ சுலபனாய்
அது ஊருக்காக இங்கு உலகுக்காக
அப்போது 125 வருஷங்கள்
இப்பொழுது நித்தியமாக
அங்கு சேவிக்கப் போக நினைத்தீர்கள்
அந்யாபதேசத்தில் -பேசும் பொழுது -அம் மலையைக் கிட்டித் தனம் ஆர்ஜனம் பண்ணிப்போக நினைத்தீர்கள்
உம்முடைய மநோ ரதம் நாம் ஸூ வியக்தமாக அறிந்தோம்
இவ்வாறு என்னை விட்டுப் பிரிந்து செல்வது உங்களுக்குத் தகாது காணும் என்று ஆழ்வார் அருளிச் செய்கிறார்

—————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading