ஸ்ரீ சடகோப திவ்ய சரித்திரம்-பகுதி-3-

திராவிட வேத மருளிய படலம்‌

ஐயரிமைக்‌ கண்ணுறுந்தன்‌ றேவியார் சென்‌ றாரி யன்றே வியினொடு மோரமுத கூபத்‌
தெய்தியந்நீர்‌ மொண்டிடும் போழ்‌ தவள்‌ பொன்‌ றோண்டி யிடித்தது
துய்யவனச்‌ செயலறிந்தம்‌ மனைவி நீத்துத்‌ துரிய நிலை பெற்றெதிக டோன்ற லானோன்‌
செய்ய மலர்ச்‌ சேவடி நஞ்‌ சென்னி சேர்த்துத்‌ திரவிட வேதப் பட லஞ்‌ செப்புவாமே –1-

இன்ன வாறு நூற்‌ றெண் பதி மாயனு மன்னி யேபுளி நீழலில்‌ வைகுற
வன்னவர்க ளடி பணிந்‌ தாய் மலர்க்‌ கன்னி யந்தொடைக்‌ காரி குலப் பிரான்‌ –2-

வார ணம் முனம்‌ வாவியின்‌ கண் பரனார ணனென்‌ றதை வெளி நல்கல்போ
லாரணத்தி னரும்‌ பொரு ளாய்ந்துல கோர ணத் தமி ழோதலுற்‌ றானரோ–3-

முற்றிலுந் துறத்‌ தற்குள முன்னினோர்‌ சுற்ற மற்றுந்‌ துறப்பதை மானவே
வெற்றி மாலருள்‌ மேவ விரோதியாம்‌ பற்ற றற்குளம்‌ பற்றின னாகியே–4-

அருத்தி மீக்கொண்‌ டடி முடி யொன்றிலா விருக்கு வேதத்‌ தியைந்த பொருளெலாஞ்‌
சுருக்கி யின்றமிட்‌ டூக்கிலன்‌ பாய்த்திரு விருத்த நூறு விளம்பினன்‌ மாதரோ–5-

மாசில்‌ சோதி மணி வண்ண னென்பவ நாச னாதன்‌ குணாநு பவந் தருஞ்‌
தேசு லாமெசு சைத்தமிழேழ்‌ திருவாசி ரீஇயத்‌ தறைந்தன னன்புற–6-

இக்‌கி னின்புற்‌ றினிக்கக் கொண்‌ டாடிய வக் குணாநு பவத்தெழு மார்வமே
மிக்க தர்வண வேத மந்தாதியாத்‌ தொக்கி யெண்பத்தி னேழ் தொடை சொற்றனன்‌–7-

அந்த வார்வத்‌ தழுந்தி யணி நலமந்த மற்ற வளம்பதிக்‌ கேகுவான்‌
சிந்தை யுட்கொடு சிர்கொள்‌ சரம ப்ரபந்த மொன்று பகர்ந்திட வுன்னியே–8-

மாயி ருங்கடன்‌ மானிலத்‌ தோங்கிய தூய சாமப்‌ பொருளைச்‌ சுருக்கியோ
ராயி ரத்தொரு நாற்றிரண்‌ டாய பா வேய தாந் திரு வாய்மொழி யென்றரோ–9-

பேரு றும்பிர பந்த மதிற் பிரான்‌ நார ணனென்ற தும்முயிர்‌ நாடிடுஞ்‌
சீரு மன்னவன்‌ செய்கு முபாயமுமேர் கொணாடினை யீதலு மோதினான்‌–10-

இத்தகுந்‌ திரு வாய்மொழி யீரைந்து பத்தி லொன்றிரண்‌ டும் பரன்‌ பாரினின்‌
மத்த ளைக் குறி வாய் வைத்த மாயனீர்‌ நத்தி சையுமென்‌றே நிலை நாட்டினன்‌–11-

விரிக்கு மூன்றுடன்‌ மேவிய நான்கினின்‌ முருக்க விழன மொய்ம்பனைப்‌ பாருளீர்‌
பெருக்கு நும்முளப்‌ பேதைமை நீக்கியின்‌ றருத்‌தி செய்யுமென்‌றே யறி வித்தனன்‌–12-

மற்று மைந்துட னாறிலம்‌ மாயனாங்‌ கற்றை வார் குழற்‌ கன்னி கொண்‌ மார்பனை
வுற்றி டற்குள்‌ ளுபாய முரைத்தனன்‌ சிற்றிலைப் புளி வாழ் தரு செம்மலே—13–

கேடி லேழுட னெட்டிற்‌ கிளர் தரு வீடு சேர விரோதிக ளாமவை
நாடி வென்று நசைவில்‌ லவனடி கூட வேணுமென்‌றே தமிழ்க்‌ கூறினான்‌–14-

ஒன்பதோடு முயரொரு பத்தின லன்பர்‌ சேரவ்‌ வணிந கருய்த்திடு
நன்பி னோடு பலனையு நானிலக்‌ தின்ப மாக விசைத்தன னன்றரோ-15–

அத்த குந் திரு வாய்மொழி யை யிரு பத்து ளொவ்வொரு பத்தின்‌ ப்ரபாவம
குத்து வந்தனைக்‌ கூறுவங் கேட்டவை பித்த ரேஞ் சொற்‌ பெரியோர்‌ பொறுப்பரே –16–

பண்ண மைந்தவப்‌ பா முதற்‌ பத்தினிற்‌ கண்ணனே பர னென்று கழறி மற்‌ றெண்ணு மோரிரண்‌ டெவ்வுயிர்‌ கட்கு மவ்‌ வண்ணலே யினி யானென்‌ றறைந்தனன்‌—17-

பின்னு மூன்றினிற்‌ பேரரு ளான் குணந்‌ தன்னையே யுயிர்‌ சாற்றிடு மென்றதும்‌
உன்னு நான்கு ளுயிரவன்‌ றன்னையே மன்னு மென்றும்‌ வாய்ப்ப விளம்பினான்‌-18-

ஏயு மைந்தினி லெம் பெரு மானே யுபாய மாமுயிர்க்‌ கென்று பகர்ந்த பின்‌
னாயு மாறினி லாருயி ருய்குவான்‌ மாய வன் செய்‌ யுபாயம்‌ வழங்கினான்‌-19-

மற்று மேழினில்‌ மாயனைச்‌ சேருதற்‌ குற்றிடும் பல்‌ விரோத முரைத்து நற்‌
சொற்றி கழ்ந்தடெட்‌ டிற் சொல்‌ விரோதிக ளற்றிடும் மென்‌ றறைந்தன னன்றரோ–20-

பாகு நேரொன்‌ பதிற் றிரு வாளனா லாகு லாப மறைந்தொரு பத்திறான்‌
சோக மோகந்‌ தொலைத்தவர்‌ வாழ் திரு மாக மானிலம்‌ வைகிய தோதினான்‌ –21–

புத்தமுதின்‌ சுவை மறையின்‌ பொருள் கொள் சர ம ப்ரபந்தம்‌ பொலியு மொவ்வோர்‌
பத்துறு மொவ் வொரு திருவாய்மொழி யெனும்பேர்‌ கொளு மினிய
வத்தமதெம்‌ மறிவளவில்‌ வினவியமாத் திரந் தொகுத்திங் கறிவித்‌தோமால்‌
முத்தர்களுக்‌ கிடக்கை வலக்‌ கை தெரியா மூடனெறி மொழியுமாறே–32-

உயர்வறவென்‌ தெடுத்த திலச்‌ சாமமுத லக்கர முனொளிரக்‌ காட்டி
யயர்வறுமால்‌ கல்யாண குணமனைத்தும்‌ பாகதர்க ளறியச் செய்து
மயர்வறுமா னில வுயிர் நா யகமிதுவோ வதுவோ வென மயங்கு நெஞ்சத்‌
துயரற மா மருதிடை போங்‌ கண்ணனையே பரத்வமெனத்‌ துலக்கி னானால்‌–33-

வீடுமின்முற் றமென வெடுத்‌ கருடிருவாய்‌ மொழியிலரும்‌ விமலனாமக்
கேடில்பர மன் றனை மா னில வுயிர்காள்‌ ப்ரபத்தி பண்ணிக்‌ கிட்டி மேலை
நாடடைமி னென்றுடன் பத்‌ துடை யடியென்‌ றெடுத் தினிய நயநக்‌ கஞ்சக்‌
காடுடைய னளை திருடிப்‌ பிணிப் புணலெத்‌ திறமெனமோ கத் தாழ்ந்‌ தானால்‌–34–

மாதமிரு மூன்‌றவன் செள லப்ய குண வாரிதியின்‌ மடிந்து பின்னச்‌
சீதரனுள்‌ ளுகந்தருளத்‌ தெளித்து முளத்‌ தாராது செப்பி யம் பொற்‌
போது றுமின்‌ னவள் கொழுநன்‌ றன்னடியா ரெவை செயினும்‌
கோதறு செள லப்ய குண னெனவு மச் சேடக் கவியிற்‌ கூறினானால்‌–35-

அஞ்சிறையென்‌ றருடிருவாய்‌ மொழியதனில்‌ பிராட்டியின தவத்தை பூண்டாங்‌
கெஞ்சலில் விண்‌ ணாடுடைய னபராத சகத்துவமே யேதுவாக
நெஞ்சுறக் கொண்‌ டவனடியிற்‌ றனாதுறு கண்‌ முழுமை யும் போய்‌ நிகழ்த்தமின்‌று குஞ்சினுக் கென்றுழ விறலைக் கடை யொதுக்குங் குருகினங்காள்‌ கூறீ ரென்றான்‌ –36-

வளவேளென்‌ ஐருடிருவாய்‌ மொழி யதனின்‌ மாறனை முன்‌ மருவி நீக்குந் தளவாயொன்‌ றமையா துண்‌ மம்மர் கொளச்‌ குருகினஞ்சந் தனுப்ப மாயோன் இளவேய்மென்‌ றோளிணையா ளூடலறச் சூடுவமென்‌ றிசைந்‌தீண்‌டேகிக் களப நறுங்‌ குய மருவும்‌ மவனருளே யுலகறியக்‌ கழறினானால்‌ —37-

பரிவதிலீ சனையெனுமோர்‌ பதிகமதி லார் கலி சூழ் பாரிலுள்ளீ
ரரிகுணமீ தென்றறியா துள மயங்‌கிக்‌ கொடிய பவத்‌ தழ றாழ்கின்றீர்‌
சரியலவப்‌ பரமனுந்து ராராத்திய னன்‌ றவனைச்‌ சார்ந்து வாழ்த்தி
யிரு விசும்பிற்‌ பிறப்பிலரா யுச்‌சீவியுங்களென விசைத்தா னன்றே–38-

பிறவியெனும்‌ பதிகமதி லெம்பெருமான்‌ ஸ்வாராத்யனாம்‌ பேணித் தூய
நறவுகுபன்‌ மலர்கொடு பூசியுமவனா ராதனையு நனிசுகந்தகந்
தற நெறியே வுருவமதா யொளிருமெனப்‌ பாரறிய வறிவித்‌ தானால்‌
மறலியை வென்‌ றடுவெளிக ளுடைய நங்கை திரு வயிறு வாய்த்தோ னம்மா–39-

ஓடும்புள்‌ ளேறி யெனும்‌ பதிகமதி லக் குணங்க ளுந்தி பூத்த
மோடம் பொன்‌ வரை நகலத்‌ திரு மணவாளன் கரண மூன்‌றுமொன்‌றாய்க்‌ கோடின்றிப்‌ பரிசுத்த மா மடியார்‌ தமை யுகந்து கூடு மென்றாங்‌
காடும்புற்‌ கொடி பரித்த வழுதி குலத்‌ தரசுசுத னறிவித்‌ தானால்‌–40-

இவையு மவையு மென வருளுந்‌ திருவாய்‌ மொழியி னிசைத்த வண்ண
நவையறுமெய்ய டியனெனத்தம்‌ மிடத்‌ தெம்பெருமா னனியுகந் தாங்‌
கவையவங் கண் முழுமை யினாற்‌ சாத்மிக்க சாத்மிக்க வணைத்த தான சுவையினை முந்‌ நில மறியச்‌ சொற்றனனிக்‌ கலி கெட வந்துதித்தானன்றே–41-

பொருமானீள்‌ படை யெனும பதிகமதி லெம்‌ பெ ருமான் நற்‌ புலவி நீங்கி நிருகேதுக கடாட்சமருள்‌ வைபவ மிம்‌ மானிலத்தி னிகழ்த்தினானா
லொரு கோடி கயல் புரளுந்‌ திரை கொள் பொரு நற்றுறைவோ னொளிரு மாடக்‌
குருகூரன்‌ சட வாயு வணுகாது நிரசித்த குழகன்‌ றானே–32-

இரண்டாம்பத்து

மன்னுமவ்‌ விரண்டாம்‌ பத்தில்‌ வரு முதற்‌ பதிகத்‌ தெம்மான்‌
பின்னு மூடியதிலார்த்தி பெருகி நாயகியாய்‌ நின்று
தன்னை நேர்‌ சேதந அசேதனங்களை நினைத்து நீவி
ரென்னின் மாறனை வேட்டீர் கொலென்ன வருந்தி யதுரைத்தான்–33-

திண்ணெனும்‌ பதிகத்‌ தார்த்தி தீர் தரக்‌ கூட்டலாலப்‌
பண்ணவன்‌ குண சமர்த்திக்‌ கேதுவாம்‌ பரத்வ முன்னீர்‌
மண்ணிடை யவதாரத்தில்‌ மலர் தரு நலங்க ளெல்லாம்‌
நண்ணுமென்‌ றவன் பரோப தேசமு நவின்றான்‌ மாதோ–34–

ஊனில் வாழ்‌ பதிகத்தந்த வுரகமெல்‌ லணையான்‌ றன் கு
ணானுபவ விரோதஞ் செய்‌ நவை கொள்‌ சம்சார நீத்‌து
வானுளோர்‌ பரவு நித்ய சூரிக ளோடு வாழ்வன்‌
யானெனும்‌ குறிப்பை வையத்‌ தியாவரு மறியச்‌ சொன்னான்‌–35-

ஆடி ஆடி யெனுந் தூய பதிகத்தக்‌ குறிப்பண்‌ ணாது
ணாடி நெஞ்‌ சுழன்று மாற னாயகி யவத்தைக் கொண்டு
வாடி மோகித்திருக்கும்‌ வண்ணம தறிந்து தாய் பார்‌
தோடவிழ்‌ துளவினான் முன்‌ சொல்ல ரங் கருளினாரால்‌–36-

அந் தாமத்‌ தன்பெனுஞ் சொற்‌ பதிகத்த வவத்தை போக
வந்துடன்‌ சம்சிலேடித்த மாயவன்‌ ஸெளந்தர்யத்து
நந்தலி னித்யமுத்தர்‌ நல்கிய சேவை யுள்ளுஞ்‌
சிந்தை சென்‌றனுபவித்த செவ்வியை விளம்பினானால்‌–37-

வைகுந்தா வென நின்‌ றோதும்‌ பதிகமான்‌ மாறனீங்கல்‌
செய்குமோ நமை விட்‌ டென்று திகைத்ததின்‌ சங்கை பண்ணப்‌
பெய்குமா முகிலே யென்றும்‌ பிரிகலே னுனையா னென்றும்‌
மொய் குழல்‌ நங்கை பாலன்‌ மொழியமான்‌ மழ்ச்சி சொன்னான்‌ –38-

மேதகு கேசவன் றன்‌ பதிகமவ்‌ விபுத னாந் துவாதச நாம னான மாதவ னருளி னானம்
தீதில் சம்‌ பந்தா சம்பந்திகளு முச்‌சீ வித்தாரென்‌ றோதினான்‌ கலிகெடற்கிவ்‌ வுலகிடை யுதித்த நம்பி -39-

அணைவெனும்‌ பதிகத்‌ தெம்மா னருளிய செவ்வி யோர்ந்து
தணிவில் பற்‌ பலசம்சாரி தயங்கு முன்‌ மருள்கெடத் தன்‌
ணிணையில்சம்‌ பந்தியாக விசைய மோக்கப் பரத்தைப்‌
பணித்தனன்‌ றிருந்த வின் சொற்‌ பாவலர்க்‌ கரசரேறே -40-

பண்ணமைந் திலகுமெம்மா வீடெனும்‌ பதிகந் தன்னி
லண்ணறன்‌ சம்பந்திக்கு மழிவில் விண்‌ ணடளிப்பா
னெண்ண நின்‌ ப்ரீதிக்கன்றி யென் பொருட்‌ டளிக்க வேண்டாம்‌
கண்ணநீ யெனக் கைங்கர்ய நிச்சயம்‌ கழறினானால் –41–

கிளெரொளி யிளமை யென்று கிளத்திய பதிகத்‌ திம்மெய்‌
தளர்முன முயிர்களன்று சாற்‌ று கைங்‌ கர்ய சித்திக்‌
கிளமதி தவழும்‌ பொன் கோட்‌ டெழில் கொள் மா லிரும் பூஞ்‌ சோலை
வளர் திரு மலையைச்‌ சென்று மருவுமென்‌ றருளிச்‌ செய்தான்‌–42-

மூன்றாம் பத்து-

முத்தமிழின்‌ சுவைக் கடலைக்‌ கடைந்து கொள்ள முதவினிய தாந் திரு வாய்‌ மொழியின்‌ மூன்றாம்‌
பத்தின் முடிச்‌ சோதி யெனும்‌ பதிகந் தன்னிற்‌ பனி மலர்க்கார்‌ மரு விடபப்‌ பருப் பதத்தார்‌
மைத்தகரு மாமுகினேர்‌ வண்ண னெம்மான்‌ மாலழகன்‌ செளந்தர்ய வலையுட்‌ பட்டுச்‌
சித்தமிவண்‌ டிரும் பாதங்‌ கீடுபட்ட செய்தி யுல கோரறியத்‌ தெரிவித்தானால்‌–43-

முன்னீரென்‌ றருடிவாய்‌ மொழியின்‌ மாறன்‌ முனமழக ரெழிற்‌ கடலின்‌ மூழ்கிக்‌ கங்கு
றன்னை யறி யாதுழன்ற னுபவித்தற்‌ கசக்தி வருவது காண்‌ சங்கோ சம்மென்‌
றுன்னியதில்‌ வ்யாமோகித்‌ திருக்க மாயோ னுற்றி தற்கென்‌ னீயழுங்‌க லுலக மேத்‌தும்‌
பொன்னி வரும் வடமலை சென்றணை யடைந்து புல்லுவா யெனுமருளைச்‌ சொல்லினானால்‌–44-

ஒழிவில் காலமென வருள் பதிகந் தன்னில் உலா மகிழ்ந்து ஆதரத்துடன் நம் உயிர்காள் இன்றே
யழிவிறிரு வேங்கடவெற்‌ புடையான்‌ றன்பா லடைந்தவன் காற் றுணை யினை வாக் கக மெய்ம்‌ முன்றாற்‌
றழுவியிடம்‌ பொருளே வல்‌ கொண்டு யாமுஞ்‌ சகல வித கைங்கர்யஞ்‌ சமர்த்தியாக
வழுவறு மெய்த்‌ தொழும்பு புரிந்திடுவா மென்ன வழுதியர் கோன்‌ காரி சுதன்‌ வழங்கினானால்‌–45-

புகழநல்லொ ருவனென்னும்‌ பதிகந் தன்னில்‌ பூமகள் கோன்‌ சர்வமு மாய்ப்‌ பொலியும்‌ தன்மை
யகமகிழ்ந்தின்‌ புற வளிக்கு மணங்கி யானவ்‌ வண்ணறனை யெக்‌ குணங் கொண்‌ டழைப்பே னென்ன
மிக மலைந்து தேர்ந்தவன் சேவடியிற்றாழ்ந்து விருப்பொடு வாசிக வடிமை வியப்பதாக
விகல் கெட முப்‌ பொழுது மடைந்தியற்றி வாழு மிறுமாப்பை, யுல கறிய விசைத்தானன்றே –46-

மொய்ம்மாம்பூம்‌ பொழிலெனுஞ் சொற் பதிகத்‌ தாழ்ந்த முன்னீரிற்‌ றிருவணை செய்‌ முகுந்தன்‌ வெய்ய
கைம்மாவுக்‌ கருள் புரி நங்‌ கண்ணற்‌ கன்பாய்க்‌ கைங்கர்யம்‌ புரியுமவர்‌களைக் கொண்‌ டாடி
யெம்மானைப்‌ பரவாது பணியுஞ்‌ செய்யா திருக்குமவர்‌ தமை யிகழ்ந்‌ தங்‌ கியம்பினானால்‌
அம்மானைக்‌ காளையரை யளித்த பெம்மான்‌ ௮பராவதாரமிவ ணடைந்‌ தகோவே–47-

செய்ய தா மரைக் கண்ணெனும்‌ பதிகந்‌ தன்னிற்‌ றேசுறுமானில வுயிர் செய்‌ திருப்பணிக்கு
மெய்ய பர வ்யூகமொடு விபவாந்தர்யாமிய துகளையஅபவிக்கன்மிகவும்‌
துய்ய பரா தீனமுறு மர்ச்சை யென்னிற்‌ சுலபமதா மென வுலகிற்‌ றுலக்கினானான்‌ மைய வரி வண்டு பொடி யாடு நிம்ப மாலை யுறுங் காரி சுத மாறன் றானே–48-

பயிலுஞ்‌ சுடரொளியெனும்‌ பதிகம் தன்னிற்‌ பல கோடி யண்ட ரண்டப்‌ பரப்பை யீன்ற
வெயிலந்‌ திகிரிகொடிர வாக்குமெந்தை மெய்யடியிற்‌ கைங்கர்யம்‌ விரும்பி நாளுஞ்‌
செயுமன்பர்‌ தன்னடியார்க்‌ கடிய ரெற்கா சிரியரேனப்‌ பாகவத சேடத்வத்தை
யுய வென்றார்‌ கலிப்புவியு ளறிவித்தானா லுயர் புளிக்கா வணத்துறை யு மொருவன்றானோ-49-

முடியானென்‌ நினிதருளும்‌ பதிகந்‌ தன்னின்‌ முன்னுரைத்த சேடத்வ முறைமை யாலோர்‌
பிடியின்றிப்‌ போதமுறா தவன் குணத்தின்‌ பீடுடைய ஸ்மாரகமாய்ப் பேர்ந் தாட்‌ செய்ய
வடிவுறுமோ ரிந்த்ரியம் பஞ்‌ சேந்த்ரியத்தின்‌ மருவுதலை வேட்ட தென வழங்கினானால்‌
குடிகுடியாட்‌ செயுமடி யார்க்‌ கழிவினாடு கொடுத்தருளும்‌ வரையாது கொடுக்கும்‌ கொண்டல்–50-

சொன்னால்வி ரோதமெனும்‌ பதிகன் தன்னிற்‌ சொற்றெரி நாவலிற்‌ பிறரைத்‌ துதித்துப்பாடி
லென்னாகு மப்பொருள்வந்‌துமதுகால மெதுவரைப்போமது வெழிலி யெழுமின்னென்று
தன்னோடு மிணைந்‌து பிறப்‌ பிலியாய்‌ நிற்குஞ்‌ சார்ங்கனிருந்‌ தாளிணையிற்‌ சாற்றுவீரேற்‌
றென்னா வென்‌ றளி முரலுந்‌ துளவத் தண்ணல்‌ சேணுலுகி னித்தியராய்த்‌ திரிவீரென்றான்‌–51-

சன்மம்‌ பலபலவெனும்‌ பதிகத்தின் முன்‌ சாற்றிய லெளகீகவி தங்களுள்ளம்‌
வன்மீனுக்‌ கிடருறுத்தி யானை காத்த மாயவன் பால்‌ மருவுதலின்‌ மாறக்‌ கண்டாற்‌
கன்போடப்‌ பரமனடித்‌ துணையிற்‌ செய்யு ளாக்கெதிற்‌ ருமடையு மபீட்ட முற்று
மென்போடுள்‌ ளுருகியவ ரறிவான்‌ வேண்டி யிசைத்தனன்றென்‌ குருகூர் வந்திருந்த கோவே–52-

நாலாம்‌ பத்து
ஒருநான்கு பத்திலுறு மினிய தீஞ்சொல்‌ லுகளொரு நாயகப்பதிகத்‌ துலகு ளோர்கா
ளிருமாநி லம் பரவு நிதி படைத்திவ்‌ வெறி கடற்பா ரொரு குடைக்‌கீ
மருவாரைந்‌ தரு நிழலிந்த்‌ ராணி கூடும்‌ வாழ்வுறினும்‌ நச்வரமா மறையும்‌ காணாத்‌
திருமாது கேள்வனது பவமே நித்யஞ்‌ சேருவீ ரவனடியிற்‌ றிருகாதென்றான்‌.–53-

பாலனா யெனுந்திருவாய்‌ மொழியின்‌ முன்னம்‌ பகருபதே சம்பலி யாப்‌ பரமன்‌ றன்பாநற்
சாலபினி வேசமடைந் துள மயங்‌கித்‌ தண்ணளியாய்‌ முனஞ்செயவ தாரத்‌துள்ள
சீல முழுவது முகந்தெற்‌ கருள வேண்டுந் தென்னிலங்கை யீடழித்த திறத்தோ யென்றான்‌
காலனகர்‌ பாழ்பட வண்‌ புளிக்குட்‌ டென்பாற்‌ கருணை முகம்‌ வைத்‌தமர்ந்த கழகனம்மா–54-

கோவைவா யாளெனுஞ்சொற்‌ பதிகந் தன்னிற்‌ கொன்றை முடி.யோனிரப்பைத்‌ தொலைத்தாங்‌ கின்னும்‌
மேவாது குருதியருள்‌ பரமன்‌ முன்னம்‌ மேவு திரு வவதார விதங்கள் காட்ட
நாவாய் கொண்‌ டவன் குணம் பற்‌ பலவுஞ்‌ சொல்லி நாடுமதி ப்ரீதியினை நவின்றா னெங்குந்
தேவாகு மவனே யிவ்‌ வுலகு முய்யச்‌ சென்று மகிழ்‌ மாறனெனச்‌ செனித்தோ னன்றே–55-

மண்ணையிருந் தென்றருளும்‌ பதிகத்‌ தந்த மால வதாரங்களெலாம்‌ வழங்கி யேகத்‌
துண்ணென மா றனுமணங்கி னவத்தை கொண்டுட்‌ சோகித்தங்‌கெவை யவன்‌ றன்‌ சோதி யுள்ள
கண்ணுறுமோ வவை திருமாற்‌குரிய வென்‌று கதறி யுளம்‌ புலர்ந்து மிகக்‌ காதல்‌ கொள்ளும்‌
வண்ணமறிந் தீன்றவளுஞ்‌ சேடிமார் முன்‌ வழங்கலென வுரைத்தனனுண்‌ மயர்வற்றோனே –56-

வீற்றிருந்தே ழுலகமெனும்‌ பதிகத்‌ தந்த வெய்யமய றீர் தரவே விமலன்‌ முன்னா
ணூற்றுவர்பாற்‌ சந்துபட நடந்தோன்‌ மாதர்‌ நுண்டுகிலைக்‌ கவர்ந்து தரு நுதியில்‌ வைத்தோன்‌
மாற்றறு மெய்த்‌ தவ வாய்மை நித்யமுத்தர்‌ மாடடரத்‌ திருவினோடு மருங்கி லீண்டப்‌
போற்றியுள மதிழுமதி ப்ரீதி தன்னைப்‌ புங்கவ னானில மறியப்‌ புகன்றான்‌ மாதோ–57-

தீ ர்ப்பாரென்‌ றினிதருளும்‌ பதிகத்‌ தெந்தை சேவை யளித்‌ துடன்‌ மறையத்‌ தீரா மையல்‌
போர்ப்பாளாய்ச்‌ சோகமுறத்‌ தாயரீது புன் சமயத்‌ தேவர் செயல்‌ போக்க வென்று
பார்ப்பாரா கிற பொழுதத்‌ தலைவி தோழி பாகவத கீர்த்தனையும்‌ பாதத்‌ தூளுஞ்
சேர்ப்பீரே லிவள்பிணிக்கு மருந்தா மென்னச்‌ சேர்க்கவது தீர்ந்த தெனத்‌ தெரிவித்‌தானால்‌ –58-

சீல மிலா வெனுந் திருவாய்‌ மொழியிற்‌ சோகந் தீர்ந்துடனெம்‌ பெரு மானுந் திவ்யரூபஞ்‌
சாலவெனக்‌ களித்தருளுள்‌ ளிரங்கி யார்க்குந் நாயகனெ பகற்‌ றடங் கண்‌டுஞ்சா
தோல மோடங்‌ கவன் குணம் பற்‌ பலவுஞ்‌ சொல்லி யுலை மெழுதிற்‌ கரைந்தழைத்த துறழச்‌ சொற்றா
னீலமணித்‌ திரளனைய கூந்தற்‌ செவ்வாய்‌ நேரிழை கொ ணங்கைசுதனிமலன்‌ றானே –59-

ஏறாள மிறையெனுஞ்சொற்‌ பதிகத்‌ தெந்தை யிரவு பகல்‌ விழி பொருந்தா திரங்‌கக் கூவ
மாறாதங்‌ கொளித்தமையா லவலுகந்‌து மருவ வுரித்‌ தாதிய வாத்‌ மாத்மியங்க
டேறாதெற்‌ குலகவர் போல்‌ வேண்டாமென்று திரஸ்கரித்த மாற் மிவண்‌ டெரிவித்‌ தானால்‌
வீறாரு மதகரிவாண்‌ மருப்பொசித்த வேந்தனடி யே பரவும்‌ விமலன்‌ றானே–60–

நண்ணாதா ரென்றருளும்‌ பதிகத்‌ துன்க ணண்ணியவெவ்‌ வூடலையு நனிபொறுப்பேன்‌
கண்ணானின்‌ னிடத்திலதி விமுகரான காமர் கொள்‌ சீவரைப்பார்க்‌க க்‌ கருத்திற்‌ சற்று
மெண்ணேனிவ்‌ வுடற்பொறைவிட்‌ டகலச்‌ செய்வா யேழுலகுங்‌ கண்டிடவா யிடைநின்‌ றாம் பற்‌
பண்ணாளா வென்றவன் சே வடியை வாழ்த்திப்‌ பற்றியவா றினிய சமிழ்ப்‌ பகர்ந்தான்‌ மாதோ–61-

ஒன்றுந்தே வென்றருளும்‌ பதிகத்‌ இந்த வுலகிலுள சேகனர்பா லுகந்து பின்னு
நன்றல நீர்‌ பிறதெய்வ நயக்கும்‌ வாய்மை காரணனே பரமனென நால் வேதங்க
ணின்றுமுறை யிடலறியா துழன்று கெட்டீர்‌ நீக்யெதை யினி யேனு நிமலன்‌ செம்பொன்‌
குன்றநிகர்‌ மணிகொணெடு மாட மோங்குங்‌ குருகையர்க்காட்‌ செய்யுமெனக்‌ கூறினானால்‌-62-

இத் திருவாய்‌ மொழியினை மாறனு முகந்தங்‌ கியம்பலுமச்‌ சுவை செவியா லினிது மாந்தி
வித்தகன் நம்‌ பொலிந்து நின்ற பரமனெஞ்சம்‌ வியந்ததற்கோர்‌ கைமாறு விருதீவான்றன்‌
சித்தமதி லுன்னியனத் துவசம்‌ வண்டார்‌ செய்ய மடழ்த்‌ தொடையலுமச்‌ செவ்வி யோன்பான்‌
மத்தகசத்‌ துறுகணறச்‌ செய்தோ னீந்து வகுள பூடணனெனப்‌ பேர்‌ வழங்கப்‌ பெற்றான்‌–63-

ஜந்தாம்‌ பத்து

கையார் சக்‌ கரத்தனெனும்‌ பதிகத்‌தி யானுட்‌ கருத்துறு மெய்ப்‌ பத்தியிலாக்‌ கபட னாக
மெய்யாய தொழும்பரினு மவன்‌ றன்‌ னாமம்‌ விளம்பியொரைம்‌ பொறிப்பாக்ய விடய மாக்கும்‌
பொய்யேனுக்‌ குகந்தவன்‌ ஸ்வா பவந் தன்னைப்‌ போரவளித்‌ தனனென்‌ று புகழ்ந்து தன்பாற்‌
செய்யாளுக்‌ குகந்தவரை மார்ப னெங்கோன்‌ செய்யுபகார ச்ம்ருதி யைச்‌ செப்பினானால்‌–64-

பொலிக பொலிகவென வருள் பதிகத்‌ திற்றாம்‌ போர வுகந்‌ தருளிய மெய்ப்‌ போதத்தாலே
பலவிதங்கொ ளுளமொருக்கிற்‌ றிருந்தி வாழும்‌ பாகவத ரோடு தம்‌ ப்ரபாவ நோக்க
மலிவுடனிங்‌ கெழு நித்ய முக்தர்‌ தம்மை மங்களா சாசனம்‌ புரிந்த வகையுஞ்‌ சொல்லிக்‌
கலிகெடுமென்‌ றுரைத்துடன்‌ காடாய முக்கோல்‌ கைக் கொளெதிபதி வடிவுங்‌ காட்டினானால்‌–65–

மாச றுசோ தியென வருள்‌ பதிகத்‌ தெந்தை மாதவன் விச்‌ லேடமதை மனத்துட்‌ கொண்டு
பாசிழை கொ ணாயகி தன்‌ மைத்தாயீண்டிப்‌ பாரிலலர்‌ தூற்றிய வெம்‌ பழிக்கென்‌ செய்வேன்‌
பேசவரி தாய கொடுந் தொழில தான பெண்ணை மட லூர்வனெனப்‌ பிதற்றினனா
லாசறு பெண்‌ பேதை முத லன்பரியாரு மறிதர லாம்படி புளிக் கீழமரும்‌ வேந்தே–66-

ஊரெல்லா மெனவருளும்‌ பதிகத்‌ தன்முன்‌ னுன்னு மட லூர்வதற்கு மொண்ணா தாகி) காரெல்லா மொருபடிகொண் டிருந்த தென்னக்‌ கங்குலிடை தனித்‌ திரவு யங்‌ கழியா தின்று
பாரெல்லா முண்டுமிழ் நங்‌ கண்ண னான பண்ணவன் வா ராமையிற்‌ பலுகிற்‌றென்றச்‌
சீரெல்லா முரைத்துரைத்து வருந்தா நின்ற செயலெனப் பா ரவரறியத்‌ தெரித்தான்‌ மன்னோ—67-

எங்கனேயோ வெனுந்திருவாய்‌ மொழியிலந்த விரவுகழிந் துதய னும் வந் தெழுந்த தற்பின்‌
மங்குறவழ்‌ மணி மாடக்‌ குறுங்கை நம்பி வழங்கிய சே வையிலழுங்கு
கொங்குலவோ தியை யனைமார்‌ புலம்ப லென்னீ கோற்றொடி யென்‌றே முனியக்‌ குணத்தின்‌ மிக்கா
ளங்க வன்பா லென் மனமுங்‌ கண்ணு மோடி யடைந்த முனியீரெனுமா றறிவித்தானால்‌–68-

கடன்ஞால மெனவருளும்‌ பதிகத்‌ தெம்மான்‌ காட்சி யளித்‌ துடன்‌ மறையக்‌ காதல்‌ கொண்டு
குடமனைய நகிலமரி மைக்கட்செவ்வாய்க்‌ கோபியர் கண்‌ ணனில் லீலை கொண்டா லன்ன
மடவரலா யப் பரமன்‌ லீலை முற்றும்‌ மனமகழ்ந்தங்‌ கனுகரித்த வகைய தாகப்‌ படவரவத்‌ தரசவனே யவதரித்த பனிமலர் சூழ் புளி நிழலோன்‌ பணித்தா னன்றே,–69-

நோற்றநோன்‌ பெனவருளும்‌ பதிகத்தின் முன்‌ னுவலுமநு கார மென்ற நொய்மை தீர்ந்து
மாற்றரிய திருநாடு ததி பாண்டற்கு வழங்கருளா யுனைப் பிரிந்தோர்‌ மாத்திரைப் போழ்‌
தாற்றேனுன்‌ திருவடியே யுபாய மென்‌றுள்‌ ளன்பொழுகச்‌ செஞ்‌சாலி யரியினூடு
சேற்றுறு தாமரை மலர் சீவரமங்கைக்குட்‌ சீதரன் றாள்‌ பற்றியதைச்‌ செப்பினானால்‌–70-

ஆராவ முதமெனுஞ் சொற்‌ பதிகத்தங்கு மடைந்து பல சித்தியிலா ததினானொந்து தீராத வாசையொடு செழு நீர்ப்‌ பண்ணைத்‌ திருக் குடந்தை யெம்‌ பெருமான்‌ திருப் பாதத்தி
னீராயலைந்து கரைந் துருகித்‌ தன்னுண்‌ ணின்றிடுமாக்‌ ருந்தநத்தை நிகழ்த்தி மாயன்‌
காராருந் திருமேனி யம்மான்‌ கண்ணன்‌ கழலிணை பற்‌ றிய வாய்மை கழறினானால்‌–71–

மானேய் நோக்‌ கெனுந் திருவாய்‌ மொழியிலந்த மாதவனும்‌ பல சித்தி வழங்கா துள்ளந்
தேனார் பூஞ்‌ சோலைகள்‌ சூழ்ந் தணி கொண் மாடத்‌ திருவல்ல வாழ்‌ புகப் போய்த்‌ திகைத்து வீழ்ந்தக்‌
கோனார்செம்‌ பதும மல ரடியை வாழ்த்திக்‌ கூடியது பவிப்பதென்று கொல்லோ வென்று
கானாரும்‌ பிடி நடைகொ ளீ குளைமார் முன்‌ கழறியவா றுரைத்தனன்‌ வெங் கலி வென்றோனே–72–

பிறந்தவாறு மெனவருள்‌ பதிகத் தென்‌ றும்‌ பேணியவா சையிற்‌ பலனைப்‌ பெறற்கில்லென்‌ று
சிறந்தவவ தாரங்க டோறுஞ் சென்‌று சீர் கெழு குணானுபவஞ்‌ செய்ய வுள்ளம்‌
மறந்து மலைந்‌ தலையாத பக்தி நாளும்‌ மாறாமற்‌ றருக வென மறிகடற்‌ கண்‌
ணிறந்த குரு மகனைத் தக்‌ கணைக்கன்‌ றீந்த வெம்பெருமான்‌ றனக்குரைத்த இசைத்தான்‌ மாதோ–73-

ஆறாம்‌ பத்து

வைகலெனும்‌ பதிகமவ தாரமதில்‌ இட்ட சித்தி வராமை பின்னு
முய்வர்தொழு மர்ச்சாவ தாரமதி லுளமனைத்து மூன்றி வண்டார்‌
கொய் மலர்க்கா வின மருவு திருவண்வண்‌ டூருறையும்‌ கோவலன் பாற்‌
செய் மருவு புள்ளினஞ்சந்‌ தனுப்பிபவாறு லகறியத்‌ தெரிவித்தானால்‌–74-

மின்னிடையென்‌ றருள்பதிகத்‌ தத்தூதி லெம்பெருமான்‌ மிகவொ ளித்துத்‌
தன்னுழையி லினிதுவர லறிந் துமக்குப்‌ பலவாய சலவேன்‌ மைக்‌கட்‌
கன்னியரங்‌ குளரவர்நீத்‌ திவணேக லென ப்‌ரணய கலகத்தாலே
பன்னகமீ நடித்தவனைத்‌ திரஸ்காரம்‌ பண்ணினதைப்‌ பகர்ந்தான்‌ மாதோ–75-

நல்குமவப்‌ பதிகம ப்ரணயகலக விருத்தமதா நலிவி றம்மைப்‌
பல்கதிரு மதியுமினி மினியெனவாஞ்‌ சேணுலகப்‌ பரம னண்ணார்‌
வெல்லு முயர் விருத்த விபூதிகளு மெனைக் கைக் கொள்ள மேவினானென்‌
றெல்ல வரு மறிவுறவே யுடைய நங்கை யீன்ற சுத னிசைத்தானம்மா–76-

குரவையெனும்‌ பதிகமதி லவ்வாறு கூடிய நங்‌ கொண்டல்‌ வண்ணன்‌
பரவையிற்க ணைவர் கொடி பாஞ்சாலிக்‌ களவில் கலை பல்கச் செய்தோ
னரவணையான்‌ குரவை முத லாடிய பல்‌ லீலைகளு மநு சந்தித்தாங்‌
கிரவு பக லகமகழ்ந்து ப்ரீதி யடைந்‌ததை யறிய வியம்பினானே—-77-

துவளிலெனும்‌ பதிகமதவ்‌ வதுபவத்தோர்‌ விச்லேடர்‌ தோன்றி மாதாய்ச்‌
சலிகெட மோகங் கொடு தண்‌ தொலை வில்லி மங்கல மால்‌ சரணைப்‌ பற்று
மவை யறியா தனை முனிய வதைமறுக்கப்‌ போகாதங்‌ கவளவாவை
யிவஎளவுமெண்‌ ணாது வீடு மென் றிகுளை சொல்வதென விசைத்தான்‌ மாதோ–78–

மாலுக்கென்‌ றருள்பதிகத்‌ திவ்வாறு வருந்தியுமான்‌ மருவானாகக்‌
கோலுகக்கத்‌ தரிவைவிர கார்த்தியின லுடலசந்து குறையச்‌ செம்‌பொன்‌
னீலக்கல்‌ லிழைதரள வடமொடு சங்‌ கெழில்‌ பலவு நில்லா தாகிக்‌
காலக்கண்‌ டனை வருந்திச் சொல்லுஞ்‌ சொல்லாக முனங்‌ கழறினானால்‌–79–

உண்ணுஞ்சோ நென்றருளும்‌ பதிகமதிற்‌ றாய்சோக முறவன்னா டன்‌
பெண்ணுஞ்‌ சோகந் தெளிந்து தாரக போஷக போக்யம்‌ பின்னு மெல்லாங்‌
கண்ணன் றா னென்றனக்கென்‌றே திருக்கோளூர் செலத்தாய்‌ கலக்‌கந்‌ தீர்ந்து
திண்ணங் கொண்டென் மகளவ் வூரடைந்தா ளெனுமாறு செப்பினானால்‌–80-

பொன்னுலகாளீ ரெனுஞ் சொற்‌ பதிகமதவ்‌ வணி நகர்க்குப்‌ போவே னென்று
மன்னிய காற்‌ பலகானி யாறுபோக மாளாது மலைந்தாங்‌ குற்ற
வன்னமொடங்க குருகினங்கா ளுமக்கிரு விபூதியு நானளிப்பன்‌ றுத்திப்‌
பன்னகமீத்‌ துயில் பரம பத நாதற் குரையுமெனப்‌ பகர்ந்தான் மாதோ–81–

நீராயென்‌ றிடு திருவாய்‌ மொழியினிற்‌ சந்தனுப்பியுமா னிகழானாக
வாராயென்‌ றழைத்திடு தங்‌ குரலறிவா ருள முருகு மாறு மெய்ய
பேராயிரங் கொளு மெம்‌ பெருமாற்கு முத்தருறை பெரு நாட்டிற்குந்
தாராள மாயடைய வோல மிட்டங்‌ கழைப்பதெனச்‌ சாற்‌ றினானால்‌–82–

உலகெனுஞ்சொற்‌ பதிகமதிற்‌ றாமுறுமா க்ருந்த நத்தி லுண்மை சொல்ல
நிலையொடுறும்‌ பொருட்டுயர் விண்‌ ணாடகன்றித்‌ திருமலையந் நெடு நாடாக
நலமுறநிற்‌ றனமென வின்‌ னோனு மலர்‌ மேலுறையு நங்கை தன்னை
யலைவறு மெய்க்‌ காரணமாய்க்‌ கொண்டவன்றா ளடைந்த மென வறிவித்தானால்‌-83

எழாம்‌ பத்து

உண்ணிலா விய பதிகத்‌ தோத நீர்‌ வண்ணனரு
ணண்ணிலா தார்த்தி கொடுன்‌ னளினமலர்ச்‌ சேவடியை
யண்ணிலா திந்த்ரியத் தெக்‌ காலமளவும்‌ மழுங்கப்‌
பண்ணினா யென்று மனப்‌ பாதையறி வித்தனனால்–84-

கங்குல்லெ னும்பதிகத்‌ திவ்வாறு காதல்‌ கொள
வங்கவடாய்‌ செம்பொன்‌ னரங்கன்‌ றனைக் குறித்திம்‌
மங்கை யுய்யற்‌ கெவ் வண்ணம்‌ வைத்தீர் சங் கற்பமெனப்‌
பங்கமறக்‌ கேட்டுருகும்‌ பான்மை யறிவித்தனனால்‌–85-

வெள்ளை யெனும் பதிக மெய்த்தா யிவை யுரைக்கக்‌
கள்ளவிழ் பூங்‌ கோதை கொளுங்‌ காதறெளிந் தருகாம்‌
பிள்ளைக் குழாங் கொடிருப்‌ பேரை செல்லு வேனெனத்தாய்‌
தள்ள நிராகரித்துச்‌ சாருவதாகப் பகர்ந்தான்‌–86–

ஆழிப்‌ பதிகத்‌ தவன் பிரிவிற்‌ றுன்பமுறப்‌
பாழியந்தோண் மாயன்‌ பண்டை யவதார மெல்லாம்‌
வாழியின மாறனுக்கு வந்துதவச்‌ சிந்தித்துச்‌
சூழக்‌ குணத்தியல்பு சொல்வதென வோதினனால்‌–87–

கற்பாரெனும் பதிகங்‌ காண் விஜயோபா தாநக்‌
சிப்பாலி ராம க்ருஷ்ண ரென்னு மவதார நிற்கத்‌
தப்பாக வே பிறரைத்‌ தாழ்வதிலென்‌ னென்றுடன்றான்‌
முப்போது மால் குணத்தின்‌ மூழ்கியவா றிங்குரைத்தான்‌–88-

பாமரு வென்றோதும்‌ பதிகத்‌ தவன் குணமுண்‌
ணா மருவி யும் மெதிரி னண்ணா ததினாலுன்‌
றே மலர்த்தா ளெப்போது சேர்வே னென வுருகா
ஏமுறுமாக்ருந்தன மியற்றியதையே பணித்தான்‌ –89–

ஏழையெனும்‌ பதிகத்‌ திவ் வணமாக்ருந்‌த நங்கேட்‌
பாழியான்‌ றன்ன வுரு பாக்ய சம்சிலேட மின்‌றித்‌
தாழ மனமுருகித்‌ தன்னுள்‌ வருத்த மெலாந்‌
தோழியர்க்கு மன்னையர்க்கும் சொல்லுவதாகப்‌ பணித்தான்‌ –90-

மாயா வெனும் பதிகத்‌ திவ்வாறுளம் வருந்து
நாயேனை யிவ் வுலக நண்ண வைத்த தென்னெனப்பார்‌
தாயோன் விசித்திர விபூதி தனைக் காட்டச்‌
சேயோன்‌ மகிழ் மாறன்‌ சிந்தை மகிழ்‌ வைப் பகர்ந்தான்‌ –91-

என்றை தனி லென்னை யிவ ணேன் வைத்தா யென்ன வெற்கு
மொன்றடியார்க்‌ குந் தமிழ் நீ யோத வைத்‌த தென்னலுமக்‌
கன்‌று குணிலா யெறியுங்‌ கண்ணனுரைக்‌ குப் பதிலெந்
நன்றி புரி வேனென வுண்‌ ணலியும் வகை யுரைத்தான் -92–

இன்பமென்லும் பதிகப்‌ திவ்வா றுபகரித்த
மின்பொலியு மார்பனுறை மெய்த் திருவாறன் விளைக்கு
ளன்புடன் சென்‌ நின் றமிழை யரங்கேற்ற வேணுமென
வென்புருகு மார்த்தியினை யீங்கருளிச்‌ செய்தனனே–93–

எட்டாம் பத்து-

தேவிமா ரெனும்பதிகத்‌ தப்பதிக்குச்‌ செல முடியா திடை தருகித்‌ திருமா துண்மை
மேவு புரு டாகார பூதை யாக மெய் யுறு மாச்ருத பார தந்த்ரிய முற்றும்‌
பாவுதலிற்‌ றமக்கினிய பலனில்லென்று பன்னு குண மேற் சங்கை பண்ண மாயோ
னாவலிற் றன்‌ கல்யாண குணங்கள்‌ காட்ட வதி சங்கை தீர்ந்துகந்த தருளினானே –94-

நங்களெனும்‌ பதிகத் தெம்‌ பெருமான்‌ றன்முனளின முகங்‌ காட்‌ டாது நலியச்‌ செயய
லெங்கனமற்‌ றவனறியச்‌ சஞ்சா ரத்தி னியற்கை யுள தோ வென்‌ றிரங்கி மிக்கச்‌
சங்கை கொடெற்‌ கவை மிகவும்‌ தியாச்சய மென்று தாயருயிர்த்‌ தோழி பல தாதி மார்முன்‌
னுங்களோ டெமக்கனிப் பற்‌ றில்லை யென்றாங்‌ கோதியதாய்க்‌ காரி சுதனுரை செய்‌ தானால்‌–95–

௮ங்கெனுஞ் சொற்‌ பதிகமதிற்‌ பற்றில்‌ லென்றாங்‌ கறைந்திடமா லவனுளத் துற்‌ றருளே செய்யச்‌
சுங்கையிலன்‌ னோனெழி லெவ் வநமுங் கண்டு தானழுங்குந் துயர் மறந்து தனை யல்லாதிம்‌
மங்கை மண வாளனதி ரூபத்துக்கு மங்களா சாசன பரரில்‌ லென வருந்தப்‌ புங்கவ நித்திய முத்தர்‌ முழூட்சு வுண்டுட்‌ புலரலென மகிழ்ந்த வகை புகன்றானம்மா-96-

வார்கடா வியென வருட்‌ பதிகத்‌ தெந்தை மாறனுமக்‌ இன்ன முள மலையுமென்‌று
சீர் கெழுதன்‌ வீர்ய சக்தி குணங்கள்‌ யாவுஞ்‌ சேவை பர சமர்த்தியை யுந்‌ தெளியக்‌ காட்டி
யேர் கொள் பொழிற்‌ றிருச் செங்குன்‌றூரில் வாழு மெம்பெருமான்‌ பயமறச் செய்‌ யியற்கை சொன்னான்‌
கார்கொளுமைம்‌ பாலுடைய நங்கை யீன்ற கண் மணி நாற் கவிப்‌ புலவர்‌ களிக்கும் வேந்தே–97-

மாயக் கூத்‌ தா வெனுஞ் சொற்‌ பதிகத் திந்த வாறு பயம்‌ போக்கியது மான சத்தி
னாயவநு பவமாத லாற் பாக்யத்தி னநுபவமே வேண்டு மென வதி சங்‌கித்து
தாயவனெம்‌ பெருமானை வணங்க மிக்கச்‌ சாக்ஷாத்‌ கரிக்க வெனத்‌ தாமுந் தன்பான்‌
மேயபுல னுங் கரைந்தங்‌ கழைத்த வாறிம்‌ மேதினியோ ரறிதரவே விரித்தான்‌ மன்னே–98–

எல்லியுங் கா லென வருளும்‌ பதிக மாற னிவ்வாறு கூப்பிட மாலிவ னின்‌ மிக்க வல்லல் கொளுந் திருஷ்ணையதாய்‌ வருந்தி யன்னோன்‌ ஆக்ரோசம்‌ பண்ணு முன மடைந் தோமில்லை
வல்லை யதற்‌ கிதமாகப்‌ போனான்‌ மாறன்‌ மாலுறுவ னென்று திருக்‌ கடித்தானம் போய்ச்‌
சொல்லுவமால்‌ சாத்மித்த பின்பென்றேகுஞ்‌ சூட்சி யறிந்‌தக மகிழச்‌ சொற்றான்‌ மாதோ–99-

இருந்தெனுஞ்சொற் பதிகமதி லுகந்து மாறனேர் கொடிருக்‌ கடித்‌ தானத்‌ திருடி கேசன்‌
பொருந்தியுள மகிழ்ந்‌து தம தூடனீங்கப்‌ புல்லியது சொப்பனமோ பொய் மாலோ வென்
றருந் துயருற்‌ றிவை சொப்ன மோகமன்றென்‌ றதி சங்கை தீர்ந்துடனங்‌ கதிமால் கொள்ளத்‌
திருந்தியவன்‌ றனை யடைந்த தருளிச் செய்தான்‌ றென் குருகூ ரவதரித்த செவ்வியோனே–100–

கண்கள்‌ சிவந்தெனும் பதிகத்‌ ததிமாலுற்ற கண்ணனவ யவங்களிலுங்‌ கலன்களூள்ளும்‌
வண்ணமதி லும் மனமுங்‌ கண்ணு மாழ்ந்து மாதமிரு மூன்றளவும்‌ வாரா நிற்கத்‌
தண்ணளியோ னருள்‌ கொடு பின்‌ மீண்டம்‌ மாறன்‌ சர்வ ஸ்வா மித்வமதைச்‌ சாற்றினானாற்‌
பண் கொளுமென்‌ மொழி யுடைய நங்கை யீன்ற ப்ரபந்ந ஜன கூடனருட்‌ பரமன் றானே–101–

கருமாணிக்‌ கமலை யெனும்‌ பதிகத்‌ திந்தக்‌ கண்ணனடி சேடத் வக்‌ கனிவினாலள்‌ ளூருகாநின்‌ றெப்பொழுதுந் தனை மறந்தோ ரொண்டொடி யினவத்தை கொடவ்‌ வுததி வண்ணன்‌
றிருமாலின்‌ குணங்களிலீ டுபடா நின்ற செயலை யுயிர்த்‌ தோழியர்க டெரிந்து தாய்க்குன்‌
னருமாது படு துயர மறிதி யென்றங்‌ கறைவதெனப்‌ பாரறிய வறிவித்தானால்‌–102-

நெடுமாலுக்‌ கடிமை யெனும்‌ பதிகத்‌ தெந்தை நித்திய சூரிகள் பரவு நிமல னேழ்ப
கடுமாயத்‌ தொலைத்தணங்கை மணந்த வென்றிக்‌ கண்ணனுடைக்‌ கல்யாண குணத்திலீடு
படுமாயத்‌ தடியருக்கு மடியர்‌ செய்ய பதமலரென்‌ னுயிர் நிலையாய்ப்‌ பரித்தே னென்றான்‌
சுடுமாதித்‌ தனுக்க விழா விதய கஞ்சந் தோடவிழ வுதித் தருளுஞ்‌ சுடரோனன்றே.-103-

ஒன்பதாம்‌ பத்து-

கொண்ட பெண்டிர்‌ மக்க ளென்னுங்‌ கோதறு பதிகத் திந்த
மண்டலத் துள்ளீ ருங்கண்‌ மனை யுற முறையார்‌ வாழ்வுங்‌
கண்ட மாத்‌ திர மல்‌ லாது கடிப்பதிங் கிறையு மின்னந்
தண்டயி ருலகுண்‌ டோன்ற ன்றாட்டுணை யல தென்றானே–104-

பண்டைநா ளென்னு மின்சொற்‌ பதிகமம்‌ புளிங்குடிக் கண்‌
விண்டுவைப்‌ பரமனாகுங்‌ காசினி வேந்தை மாறன்‌
கண்டு நின்‌ னுறவின்‌ மெய்ய காரிய மனைத்துந் தந்‌துன்‌
னண்டையி லிருத்தி நல்வாழ்‌ வருடி யென்‌ றறிவித்தானால்‌–105–

ஓராய பதிகத்‌ தந்த வொண் சுட ராழி மாய
னேராய் நீ வேண்டும்‌ யாவு நின்னுளப்‌ படியே செய்வம்‌
நாராயணனு நானென்று நல்லுற வதனைக்‌ காட்ட
வாராத சீலத்‌ தற்கா றாழ்ந்ததா யருளினானால்‌–106–

மையாரும்‌ பதிக மென்னும்‌ வண்டமிழ்த்‌ தொடையி லந்தக்
கையாழிள்‌ சங்கு வேந்தைக்‌ காண வென்‌ றதிமால்‌ கொண்டு
நையாநின் றினித ழைத்தந் நாரணன்‌ றனைக் காண்‌ குற்றங்‌
குய்யா நின்‌றுகந்த தாய வுண்மையை யறிவித்தானால்‌–107–

இன்னுயிர்ச் சேவல் என்று அங்கு இனிதருள் பதிகத் தெந்தை
பொன்னவள்‌ கொழுநன்‌ கூடிப்‌ போயபி னதிமாலுற்று
மன்னிய குருகீ ரென்றன்‌ மாதவன்‌ வருக வென்‌றுங்‌
கன்னியம்‌ பேடை யோடு கரைமினென்‌ தறிவித்தானால்‌-108-

உருகுமா னெஞ்சு மென்றங்‌ கோதிய பதிகத்‌ தென்னுட்
டிருகுமாய்த்‌ திடுபுள்‌ ளூருந்‌ தேவனின்‌ செயல்களெண்ணிப்‌
பெருகுமால்‌ வேட்கை கொண்டு பேசிய தழீஇய தன்மை
முருகுமா மகிழலங்கன்‌ மொய்ம் பனீண்‌ டறிவித்தானால்‌–109-

எங்கானற்‌ பதிக மாற னேந்திழை யவத்தை கொண்டெற்‌
கங்காய காதன்‌ மாற னழகென வவை பற்‌றா சாய்ச்‌
செங்கானன்‌ னாரையீர் தென்‌ றிரு மூழிக்‌ களத்துள்‌ ளோன் பா
னங்காத லுரைமி னென்று நவின்றவா றறிவித்தானால்‌–110–

அறுக்குமப்‌ பதிகத்‌ தின்முன்‌ னனுப்புந் தூதரியைத்‌ தன் முன்‌
குறுக்குமுன்‌ மிக விளைத்‌தக்‌ கோவலன்‌ நிரு நாவாய
னுறற்கு நாளுள தோமாயற்குரிய தொண்டி யற்‌றுவேனோ
மறுப்பனோ வன்னோ னென்றுண்‌ மனோ ரத மறிவித்தானால்‌–111–

மல்லிகைப்‌ பதிக மாறன்‌ மடவர லாகி யந்தி
புல்லிய வாடை தங்கள்‌ பூவணை யன்றில்‌ வேயின்‌
சொல்லியல்‌ கடல்வே டாயர்‌ தோழிசாந் தணி வெறுத்தாங்‌
கல்லிருந் தரியைக் கூவி யழுங்கலாய்ப்‌ பகர்ந்தான்‌ மாதோ–112-

மாலை நண்‌ ணி யெனுந்‌ தூய வண்ட மிழ்ப்‌ பதிக மாற
னோலையார்‌ கலிசூழங்க ணுல குளீர்‌ கண புரத்து
நீலமா மலை போ னின்ற நிமலனை வணங்கீர்‌ துஞ்சுங்‌
காலை விண்‌ ணாடளிக்குங் கருதுமென்‌ றருளினானால்‌-113–

பத்தாம்‌ பத்து–

தாள தாமரை யாம்பதி கந்தனில
வாளை பாய்தட மல்குதிரு மோகூர்க்‌
காள மேகங்‌ கழல்பணிந் தால்வழிக்‌
காளு நற்றுணை யாமென்‌ றறைந்தனன்‌–114–

கெடுமி டர்ப் பதிகங் கிளர்‌ மாட மார்ந்‌
தடர னந்த புரத்தது கூலரை
மடம றும்பன்‌ மயக்கு மறச்செயு
நடலை தீர்ந்தவ ணாடு மென்‌ றோதினன்‌–115–

வேய்மரும்பதி கத்தவன்‌ மேனகர்‌
தாமடைதற்‌ கிலாததிற்‌ றம்மையிப்‌
பூமி வைக்குமோ வென்று புலர்ந்துபின்‌
மாம ணாற்ற மகிழ்ந்ததை யோதினான்‌–116–

சார்வெ னும்பதி கத்துமுன்‌ சாற்றிய ‘
சீர்கொள்‌ பக்தி பலத்துடன்‌ சேர்ந்ததாற்‌
சோர்வி லததைத்‌ தொல்லுல கத்தினுக்‌
கார்வ மோடிங்‌ கறைந்தன னன்றரோ—117–

கண்ண னாம்பதி கந்தனிற்‌ காரினேர்‌ வண்ண மேனிகொண்‌ மாயனை வாழ்த்துறுந்‌
திண்ணமேவுநர்‌ சீர்த்தி தனைப் புவிக்‌ குண்ணெ கிழ்ந்திங்‌ குரைத்தனன்‌ மாறனே–118-

அருளெ னும்பதி கத்தவ னன்பினு
லிருள் செ றிந்த தம்‌ மென்புட றன்னொடு
மருவு பொன் மதில்‌ வாட்டா றடைவமென்‌
றுருகி நெஞ்சொ டுரைப்பன வோதினான்‌–119–

செஞ்சொ லாம்பதி கத்திறன்‌ சிர் கொண் மெய்‌ வஞ்ச மோடரி வாஞ்சை வைத்‌ தாளமால்‌ விஞ்சியே கலக்‌ தாய்ந்து பின்‌ விட்டதை யெஞ்சிலாதிங்‌ இசைத்தனன்‌ மாறனே.–120-

மன்றிருப்பேர்‌ நகருறை மாறனக்‌
கின்று மாற னிசைத்திலன்‌ பாவெனச்‌
சென்‌ று ழன்றவன்‌ சிந்தை நிறைவுற
வொன்ற வெந்தை யுகந்துபி னோதுவான்‌.–121-

திருவெனும் பதி கந்தனிற்‌ செந்திரு
மருவு மார்பன்‌ மகிழ்ந்து வியத்தல் கண்‌
டுருவி னோய் முன்‌ னொழித்தின்று சேறுத
லருமை யோ வென்‌ றழுங்கிய தோதினான்‌-122-

சூழ்ந்தெ னும்பதி கத்தரி சூரிகள்‌ வாழ்ந்தி டும்பதி யின் வழி காட்ட வாங்‌ காழ்ந்து முற்று மனுபவித்‌ தண்ணறா டாழ்ந்த வாறிவண்‌ சாற்றினன்‌ மாதரோ.–123-

முனிய தாம்பதி கத்துமுன்‌ னின்பு போய்த்‌
தனிய தாகத்‌ தளர்ந்து தெளிந்து பின்‌
னனிய தாம்பர மபக்தி யானைந்தப்‌
பனி கொண்‌ மாயனைப்‌ பற்றிய தோதினன்‌–124–

இந்த வாறெழு தா முறை யின் பொரு
டந்த போழ்து மதுர கவித்தவன்‌
சிந்தை கூர்ந்தவன்‌ சேவடி யுன்னுபு
நந்த லின்றி நனிவரைந்‌ தானர–125-

திராவிட வேத மருளிய படலம் முற்றும்‌-

திரு வர்ச்சைப்‌ படலம்‌

தீதறு மெய்ஞ்‌ ஞான நிறை யாள வந்தார்‌ திருவுளத்து முன்னியவை செய்யு முன்பே
மாதவன்றன்‌ னுலகருளச்‌ சரம பிம்ப மலர்க்‌ கையிடை விரன் மூன்று மடித்துக்‌ காட்டிப்‌
போதர மெய்ச்‌ சிச்சர் மனம்‌ வருந்த வெல்லை போந்து விர னிமிர்த் தருணம்‌ புநிதனாக
வாதவனிற்‌ றோன்று மெதி பதி தாள்‌ வாழ்த்த யர்ச்சை யெனும்‌ படலமதை யறிவிப்‌ பாமால்‌–1-

எம்மாற னைத் தடிந் தின்‌ றிணை யடிக்காட்‌ கொண்டருளு மெழில்‌ கொள்‌ சோதி
யம் மாறன்‌ றனைப்பணிவோர்க்‌ கின்னமுதச்‌ சடகோப னருள் சேர்‌ கொண்ட
றெம்மாறுஞ்‌ செந்தமிழோ ராயிரமுஞ்‌ செய்துகந்த செயற்குத் தூய
கைம்மாறு செய்தருள்வா னெனப் பரம வானாட்டிற்‌ கருணை பூத்தோன்‌–2-

தெள்ளமுதத்‌ திருமகளம்‌ புவிமாது மிருமருங்குந்‌ திகழத்‌ தூய
வள்ளயில்சே ரைம்படையு முறை முறைநின்‌ றருளி செய்ய மருவுந் தீய
பள்ளவினைச்‌ தொடரறுத்த நித்யர் குழாம்‌ புடை பரந்து பல்லாண்‌ டேத்தப்‌
புள்ளரசன்‌ மீத் தோன்றி முன்போல விண்ணகத்திற்‌ பொலிந்தான்‌ மாதோ–3–

விண்ணகத்திற்‌ றோன்றி யிவ்வா றடல் வாண னயிரந்தோள்‌ வீட்ட நாதன்‌
பண்ணமைந்த பைங்கமலத்‌ தாளேறு வரையகலப்‌ பரமன்‌ சேவை
தண்ணளியோ டீந்தருளப்‌ பாந்தண்முடி மீக்கிடந்து தயங்கு ஞாலத்‌
துண்ணயந்த வெவ்வினை தீர்த்‌ தருண் ஞான தேசிகனு முவந்து கண்டே–4–

மருவாருந் துளவமுகி லைக்கனிவாய்‌ முடியார வணங்கி வாழ்த்தி
வுருகாநின்‌ றிடவரிதன்‌ சேவை யளித்‌ தணி நகர்செல்‌ லுழியந்‌தோ நின்‌
றிருவாணை நின்னாணை கண்டாய் போ கேலுனது திருநா டெற்குத்‌
தருவாயென்‌ றாரணமுந் தேடறியா வடி பரவிச்‌ சாற்‌றுவானால்–5–

குருதிவெளென்‌ பசை நரம்பு செறி தசை சர்‌ மங்கொளுடற்‌ குரம்பை யின் கண்‌ ணரைபிணி கொண் டது குறிக்‌ காறளர்க்து கோலூன்றி நனி வருந்தி
மருள்‌ கொளுமிப்‌ பிறப்பிலினு முழன்‌ றிடிலயா னுய்வதற்கென்‌ வழி யுண்டோதாய்‌
சுருதியொடோ திமமுயர்த்தோ னரனமரர்‌ தேடறியாத்‌ தூய்மை யோனே–6-

என்ன லுமா லுமதருளிம்‌ மெய்யடியர்ம. துர கவிக்‌ இசைய வீண்டு
முன்னுளமூ வர்களுடன் மற்‌ றவருரைசெய்‌ செந்தமிழின்‌ மொழியு நீவிர்‌
சொன்ன மறை நான்னெரும்‌ பொருளுடன் பின்‌ னவருரைக்குந் தொடையு மோதி
மன்னுமிவ ணெனவுமலைந் தடியனுள மருவாதிவ்‌ வளநா டென்றான்‌–7-

இவ்வணமா லுடன்வகுள பூடணன்றன்‌ ஸனுளவிருப்‌ப மினிது கூற வவ்வியினின்‌ மதுரகவி யும் மெனைக் கைக்‌ கொண்ட கன்றாலடியே னுய்வன்‌
பவ்வ நெடு வரி விழி கொ ணங்கைகுமா ராவெனுமுன்‌ படியுளோர்க்குச்‌
செவ்வியினான்‌ மறைத் தமிழை நீயலதிங் கெவரிருந்து தெரிவிப்‌பாரால்‌–8-

என்‌ றிடவுள்‌ ளுழன்‌ று தெளிந் தடி பரவிக்‌ குடி மறவா திளமையான
கன்றை மறந்‌ தனை பிரிதலுலகியல் போ தம் மகவைக்‌ களைந்தின்‌ போகந்
துன்றிய நற்‌ கனியமுதா ரடிசிறனை யுண்கிலதிற்‌ சுவை யேதெனு
மொன்றிடுமோ தந்தையருக்‌ கவைசிவண வெனைப் பிரித லொவ்வா தென்றான்‌–9–

மத்தளைவாய்‌ வைத்த கரு முகில் புரையுந்‌ திருமேனி மாயன்‌ றுய்ய
புத்தமுதிற்‌ றெளிதமிழா யிரமருணன்‌ னாவீறு போத நும்மை
நத்திய மெய்‌ யடிம துர கவியுழுலா திவணிருநா நவின்ற வண்ண
நித்தியமா கப்பொலிந்திங் குமதுதிரு முன்னரிலே நிற்போமென்றான்‌–10-

அம்புவியிற்‌ கலிகெடுமென்‌றுரைசெய் மகி ழலங்கலுறு மஞ்ச வூர்‌தி
யெம்பெருமான்‌ றிருவுளத்தின்‌ படி திருந்தி மதுரகவி யிடையா வண்ண
மூம்பருல கோடு புவிக்‌கா முதல்வ னீயே யென்‌ றுரை த்துகந்து
தம்பது மக்‌ கட்கடையாற்‌ குளிர விழித்‌தவன் கனியச்‌ சாற்‌றினானால் –11-

தென்றிசைமார்த்‌ தாண்டனுரு வாயுதயஞ்‌ செய்ததுவுந் திருப்‌ புளிக் கீழ்
ஓன்றியொரு பதினாரூண்‌ டளவின மக்‌ கோர் மறுசொல்‌ வுரைத்த வாறும்‌
பொன்றிலரு நான்மறையின்‌ பொருளினைச் செந் தமிழ்த் தொடை யிற்‌ புகன்ற வாறு
மின்று திரு மாலினுட னேகலந்திங்‌ கவனருளுக்‌ கிசைந்த வாறும்‌–12–

எண்ணி நெடு மாலிலிவனே பரமென்று றுதகொடுள்ளி னினிய பக்தி
பண்ணியவன்‌ றாளிணையி லாரியனே தெய்வமென்றிப்‌ படியோர்‌ காணக்‌
கண்ணிநுணென்‌ றொருப திக நாவீற னம் மதுர கவியோ வென்னத்
தண்ணமுதைக்‌ கடைந்தெடு வெண்‌ சுதையிலுமின்‌ சுவை யொழுகச்‌ சாற்றினானால்–13-

இன்னணஞ்சின்‌ னாள்வரை முப்‌ போதுமவன்‌ தாளிணையை யிறைஞ்‌ ச மாற
னன்னவற்கோர்‌ நாடனிலிக்‌ கலி விபவத்‌ தியாமிருப்ப தழக தல்ல
பொன்னி வருந் தென்மலை நின்‌ றகிலுரிஞ்சிப்‌ புனல் பரக்கும்‌ பொருந லாய
நன்ன தி நீர்‌ கொடுவெனினே ரர்ச்சையியற்‌ றிடுவை யென நவின்‌ றான்‌ மாதோ –14–

அம்மொழி கேட்‌ டெவ் வகையந் நீரை யெடுத்‌ தமைத்திடுத லருடி யென்ன
மைம்முகிலூ ரும்புளிக்கா வண மகிழ் மா றனுமிவனை மகிழ்ந்து நோக்கி
யிம்மணனா றும்புனற டாவினிறைத்‌ தடிலெருவை யினிதுண்‌டாகுஞ்‌
செம்மலுளோ யதை யெடுத்தந் நீரில் விட நம்முருவிற்‌ றிகழு மென்றே –15–

ஓத வுள்லி லுவகையம்‌ பேரலை மோத மாறன்‌ மொழிந்த மொழிப்படி
வேத நாவர்‌ மிடைந்து செலத் திரைச்‌ சீத நீர்ப் பொரு நாநதி சென்றரோ–16-

பொற் கு டத்திற்‌ புனல் கொடு நான் மறை விற்ப னர்கள்‌ விளம்பிட மும்மத
வெற் பொ ருங்களி றின் பிடர்‌ வைத்துல கற்பு தங்கொள வார்த்தெழப்‌ பல்லியம்‌–17-

காவி யொண் கண்‌ கணிகைய ராட விண்‌ மேவு வோர்கள்‌ வியந்து நறு மலர்‌
தூவ மாடங்கொ டோரண வீதி வாய்‌ மாவ லங்கொடு மாறளி மேவியே–18-

சந்த கிற்றேவ தாரமெனுந்தறும்‌ மிந்த னம் மிட்‌ டெரிவளர்த்‌ தப்புனற்‌
பைந்த மனியப்‌ பாத்திரத்‌ திட்டுயர்‌ சிந்தெழுங் கதிர்ச்‌ சென்னிறச்‌ செம்புற–19-

அட்ட பின்மற்‌ றமுது கொள்‌ பொன்றடா விட்ட நீர் குளிர மேயபி னோக்கலு
மட்டு லாமரை மாமலர்க்‌ கை குவிந்‌திட்ட தோருரு வெய்திடக்‌ கண்டனன்‌–20-

காண்ட லும் முட்‌ கலங்கிப்‌ பதறியங்‌ காண்ட கை முன்‌ னடைந்தடி சென்னியிற்‌
பூண்டென்‌ குற்றம்‌ பொறுத்திடு வாயென வேண்டிப்‌ பின்னும்‌ விளம்பினன்‌ மெய்த்தவன்‌–21-

சொன்ன சொற்படி சோர்வணு வின்றியா னின்ன காலை யியற்றின னின்னுருத்‌
தன்னை யன்றிச்‌ சமைந்தது வேறுரு வென்ன காரண மென் பிழை யென்னவும்‌–22-

கார்கொள்‌ வெங்கலி யுங்கெடுங்‌ காணுமென்‌ றேர்கொள்‌ பா முன்‌னிசைத்து நான்‌ காட்டிய
பார்கொள்‌ மாக்கள்‌ பராவும்‌ பவிஷ்யதா சார்ய னாமிவ னென்றுபு சாற்றியே–23-

மண்ட லத் துண்‌ மருள் கொள்‌ பிறமத கண்ட னஞ் செய வுங் கலி காயவு
மண்டர்‌ நாத னருளில்‌ வருந்திரிதண்ட மாருந்‌ தவத்திறை யென்றனன்‌–24-

அன்ன மாறனை வாழ்த்தி யணி மகிழ்‌ மன்ன னின்னுரு வாய்ப்ப வமைத்திடற்‌
இன்னருள்புரி வாயென வேந்தலு முன்னி யன்பனை நோக்கி மொழிகுவான்‌–25-

முன்னி னப்புனன்‌ மொண்டுவந் தட்டிடிலென்னி னேருரு வெய்துமென்‌ றோதலு
மன்ன மாறனை வாழ்த்தி யணிநல மன்னு மாதவ ரோடு மகிழ்ந்தரோ–26-

கங்‌கிரும ருங்குமடர்‌ சங்கின முழன்று கக்கிய மணித்திர ளுகுத்து நில மெங்கும்‌ [ பொங்கு கதிர்‌ தங்கு முயர்‌ திங்களி னிலங்கும்‌ பொற்புறுதி ருப்‌ பொருந ந ற்புனல் கொணர்ந்தாங்‌
கிங்கிதமோ டங்கரிய மங்கள மு கூர்த்தத்‌ திப்புனலை யட்டுமுனி னப்பினில்‌ விடுக்கத்‌
துங்கவனெ ருங்குகுழ னங்கையருள்‌ பாலன்‌ சோதி வடி வாகியது மாதவ னறிந்தான்‌–27-

விண்டலநி ரைந்த பல வண்டமு முகாந்த மேவு பெரு வாரியினி னோவுமென நாடி
யுண்டுமிழ்‌ தருங் கருணை மண்டு திரு மாலே யுற்றடைய நங்கை வயி னற்ற நயனாகிக்‌
கொண்டறவழ்‌ திந்‌திரிணி யண்டி மறை யோ தெங்‌ குருவினுரு மன்னவொளி ரெருவையை யளித்த
வண்டலுறு தண் பொருநல்‌ கொண்ட புக ழாரும்‌ வளத்தினை யறிந்‌து பு கிளத்தலரி தம்மா -28-

பொன்னிமு தலாய பல தன்னதியி லாடிற்‌ புலப்படுமு டற்குறும லத்தினை யறுத்‌து மன்னுமிக நல்லறிவு மிந்நதியி லாடில்‌ வழுத்துமு னழுக்கறு மொழுக்கமுட னுள்ளம்‌
பன்னு கலை யாதுமுறு மின்னருளி னாற்புட்‌ பகத்தனெனவே பொருலி கத்தினி லடைந்தே
துன்னுமக வாழ்வுறுவர்‌ பின்னுயிர் கழன்றாற்‌ சொற்றெரி யணைக்‌ கடவுள்‌ பற்றுவ னுகந்தே -29-

உப்பய முடுத்திலகு வைப்புயி ரனைத்தும்‌ முய்ய வென வேதமுள செய்ய பொரு ளெல்லாம்‌
துப்பமை தமிழ்ப்பட வுரைப்பபென நாடிச்‌ சூழரவ தாயபுளி நீழலி லுறும் மெம்‌
மப்பனுரு விற் பொருந றுப்பெருவை தந்த வந்நிலைமை யாற்றாம் ப்ர வன்னியென நாம
மிப்பொரு விலாறுறு மெனப் பிறவி யாய வேதமறு மாதவனு மோதின னுகந்தே –30-

இப்பெய ருறும் பொருந லப்பினி தளித்த வென்று நிகர்‌ நின்றோ ளிரு மன்றன் மகிழ்‌ மாலைத்‌
துப்பனுரு வைவிழிக ளிப்ப மிக நோக்கித்‌ துய்யவடி வாயதென மெய்யனு மகிழ்ந்தவ்‌
வொப்பரி யதாய வடி வைப்பணிகொ ளும்மா லூர்சினைய டர்ந்து மலரார் புளி நிழற்‌ கீழ்ச்‌
சிற்பரம னங்கை யருள்‌ கற்பக மிணைந்த சேவடி வணங்கு பு வம்மா வடிவை வைத்தான்‌ –31-

எந்தையேநீ யுந் தருளி லந்தமோட மைந்த திக்கரண முற்றொளிரும்‌ விக்கிரக மென்று
வந்தனை புரிந்தினிதின்‌ சிந்தை யரு ணந்தா மாறவென வோதலுநா வீறனு முணர்ந்தச்‌
சுந்தரமி குந்தவடி வந்தனை யணைந்தே சுப்பிரம தென்றதில நுப்‌ பிரவேசிக்க
முந்தவிப வந்தரை படிந்த வுயர் வந்தோர்‌ மொய் தரு மலர் மழைகள்‌ பெய்தனர்க ளம்மா –32-

இன்னண நிலம் படியு முன்னை விபவத்தை யெல்லை யறு ஞான முனி வல்லை யி லடக்கிக்‌
கன்னவில் புயன் வழுதி மன்னர் மர புற்றோன் காரி மக ராசனருண்‌ மாரி சொரி கொண்டல்‌
பொன்னணி நெடும் புரிசை மின்னிய விமானம்‌ போதவு மமைத்த ருணி கேதந மதற்குண்‌
மன்னுறவ மைத்தன னெற்‌ றன்னை நிகர்‌ மாறன்‌ வண்மை யு று தானான தன்மையினை யன்றே –33

வீசுதிரை சூழ் புண ரி தூசென வுடுத்த மேதினியி னங்கவியை யோதுபு சிறந்தாம்‌
காசிலுயிர்‌ பாலிருகை பாசம தெடுத்தே யந்தக வரேலடையி னந் துவை நீ யென்ற
வாசிமுக மாகவொளி வீசுபரி யங்க மத்தியி லெழுந் தருள வித்‌தரை யிலங்கத்‌
தேசிக முறுங்கலை பன்‌ மாசறு கலன்க டிவ்விய மகிழ்த் தெரியல்‌ செவ் வியி னணிந்தே —34-

அன்றுமுதன்‌ மன்றன் மகிழ்‌ துன்று நற விண்டை யண்ணலுறு மர்ச்சையினை நண்ணுபு வணங்கி
நின்று தின மொன்று மதி குன்றில் வருடத்து நிச்சலம தாயபல வுச்‌சவ நடாத்திக்‌
கன்று குனி லென் றெறியு மின்றிகழு மார்பன்‌ காணி பொரு ளீன்றவர்கள்‌ பேணு மனை வாழ்வா
மென்றிவை னைத்து மறை யின் றமிழு ரைத்தோ னிணைப்பத மெனத்துதி பணித்தவ ணிருந்தான்‌ —

திரு வர்ச்சைப்‌ படலம்‌ முற்றும்‌-

பரவாத கண்டனப்‌ படலம்‌–

தாரிலுயர்‌ யாதவ ப்ர காசிக்‌ கெண்ணை தாக்கொருகா ளவன் கப்யா சமெனும்‌ வாக்ய
நீர்மைகெடப்‌ பொருள்‌ சொலவின்‌ னவனோ ராக்கண்‌ ணீரனலிற்‌ குறங்கு குப்ப நீச னோர்ந்திச்‌
சீரவனனஞ்‌ சமயமடு மென்‌று கொல்வான்‌ சேணத செல்‌ லுழி யெம்‌பார்‌ தெரிக்க நீங்கி
யேருறுமத்‌ திகிரியன் வந் தழைக்கச்‌ சென்ற விளையாழ்வா னடித்‌ துணையை யிறைஞ்சு வாமால்‌ –1–

இம் மா மது ரக வித்தவ விறையோனுற வவனி
னம் மாமலர்ச்‌ சரணைப் பணி யடியானொரு மறையோன்‌
கைம்மாவிடர்‌ கெடு சக்கிரி கருதும் பதி தொறும் போய்ப்‌
பைம்மாமுகி லுருவத்தனைப்‌ பணி வானவண்‌ சென்றே –2–

செந்தாமரை மகள் மேவிய திருமாலினி தமரு
மிந்தாரணி மணி மேடை யின்‌ னெழிலார் பதி தொறுமே
வந்தாழி கொ ளளியோனடி மருவாவரு வழியிற்‌
கொந்தாரலர்‌ செறி சோலை கொள்‌ கூடற்பதி யுற்றான்‌ –3–

விண்டோயுத யனை நேர் கதிர்‌ விடு மாமணி கனகங்‌
கொண்டாரண மென வெல்லையில்‌ குலவு மெயிற்‌ சிகரி
மண்டேர்‌சன கரமே வுபு மதுவார்கடி பெருகுந்‌
தண்டாமரை மகணாயகன்‌ றனையே துதி புரிவான்‌ –4–

கருமாமுகி லுருவா பொழி கருணைப் பெரு மழையாய்‌
திருமாமகள கணவா வென வேதந் தமிழ்‌ செய்யும்‌
பெருமான் பர வடியாயொளிர்‌ பேராயிர முறு மெம்‌
மொரு மா மணி முதலே யென வுருகும் வயி னவணே–5–

வாதம்புரி சங்கத்தொரு வல்லோனதை வினவா
வேதந்தமிழ்‌ செய்தோனென விருதோதனை யவனா
லோதங்கவி சங்கத்தின மொவ்வாவகை யறியா
தேதிங்கன முரையாடினை யினி நீ விடுகென்றான்‌–6–

அப்பத்தனின்‌ செவிவாய்சுடு மழனேரது படியச்‌
செப்பற்கவ னடல் வெந்துயர்‌ செறிவாரிதி முழுகி
வைப்பிற்றிக ழணி பற்பல வளமாநிதி நிறைவுற்‌
றொப்பற்றொளிர்‌ குருகாபுரி யொல்லைப் பொழுதற்றே –7–

செங்கட்பிடி நடைநுண்டுடி சிவணும்மிடை யுடைய
நங்கைக் கரு மகனாகிய நாவீ றனை யடையா
வெங்கட்கரு முதலீரிரு வெழுதா முறை முழுது
மங்கட்படி யறியத் தமிழ தனிற்றரு மழகா -8-

தெதிபாண்டனுக்‌ கருள்‌ வானவன்‌ சிறு கூறையி லுறைமால்‌
பதி தோறம டியன்மேவுபு பரிவாலடி தொழுதேர்‌
மதுராபுரி யடையாவவண்‌ மாலைத் தமிழ்‌ மறையாற்‌
றுதி செய்யுளி யக மேவிய தூர்த்தன் பிற வாதி –9–

உன்னாலுரை கவி யென்றிறை யுன்னாததை யிழிவு
சொன்னானென வவணிற்றிடு துயர் சேர் மொழி யுரையா
மன்னாவினி யவனெவ்வீடும்‌ வகையே யரு ளிலையே
லென்னாவிகொ ளென மாறனி னெதிரிற் படுத்‌ தனனால்‌ –10-

உண்ணலோ டுறக்க மற்றாங்‌ கொருவன் ப்ரா யோபவேசம்‌
பண்ணின வசை யுளோர்ந்‌து பராங்குச னுவகை பூத்துத்‌
துண்ணெனச்‌ சிச்சனாம மதுரகவி யழைத்த வ்வன்ப
னெண்ணம தனை த்து மோதி யெழுதினன்‌ னிருபமம்மா–11-

கரைந்துள முருகுங்‌ கண்ணன்‌ கழலிணை யெனுமோர்‌ பாவை
வரைந்தொரு முடங்க லாக்கி மதுரை போ யிஃதைச்‌ சங்கத்
தரங்க நீர்ப்‌ பலகை வைக்கிற்‌ றாழுவ ரன்னோ ரென்றிவ்‌
வுரங்கொணெஞ்‌ சவன்பா னீபோ யுணர்த்தென வளித்து ரைத்தான்‌ -12–

செல்லடர்‌ புளிகொண்‌ மாறன்‌ றிருமுக முனி கொண்‌ டந்த
நல்லறி வாள னோக்கி நனி மகழ்ந் தெழுப்பி மாறன்‌
சொல்லிய தனைத்து மோதித்‌ துதித்திட வவனும்‌ போற்றி
வல்லையின்‌ மதுரை சென்றான்‌ மலி கதிர்‌ கடலுட்‌ சென்றான்‌–13–

தோட்டடர்ந் தளிமுரன்‌று துன்னுதார்‌ மகிழ் கொண்‌ மார்பன்‌
பாட்டுறு நிருபங்‌ கொண்ட பாகத னறிய வெய்ய
கோட்டமார்‌ மனத்துச்‌ சங்கக்‌ குழுஉக்களின்‌ கருத்தீ தென்று
காட்டுவா னெழுந்த தன்ன காரிருட்‌ படர்ந்த தன்றே –14–

அன்றிர வவணோ ரில்லத்‌ தந்தணன்‌ றுயின்று நீங்கத்‌
துன்று சங்‌ கத்தோர்‌ நெஞ்சஞ்‌ சூறிருட்‌ பிழம்பிப்‌ பாவா
மென்றினா லறுமென்‌ றே முன்‌ னியம்புவா னெழுந்த தன்ன
குன்றிலாக்‌ கதிரோன்‌ றுய்ய குண புலத்‌ தெழுந்தானன்றே–15–

கொங்கலர்‌ நறவு காலும்‌ குளிர் மலர்‌ வாவி யாய
வங்கடைந் தெமது பெம்மா னாரணந்‌ தமிழாய்ச்‌ செய்தோன்‌
பொங்குபா மகிமை காண்பான்‌ புலவரீர்‌ நீங்கள்‌ வைகுஞ்‌
சங்கமாம்‌ பலகை தன்னிற்‌ சற்றிடங்‌ கொடுப்பீ ரென்றான்‌–16–

அன்னதை வினவா வன்னோ ரந்தணன்‌ சிறுசுருட்கு
மின்னுமப்‌ பலகை யிற்றாம்‌ விலகிச்சற்‌ றிடங் கொடுக்க
மன்னுவ்‌ வேத நாவன்‌ வகுள பூ டணனை நெஞ்ச
முன்னியம்‌ முடங்க றன்னை முடியினின்‌ றிருகை யேந்தி–17–

ஆங்குறு புலவ ராய ரஜோ குணத்‌ தவர்க ணோக்கப்‌
பாங்குட னிருத்தச்‌ சங்கப்‌ பலகையு மூவகை பூத்துத்‌
தாங்கி மீ தரும மும்மைத்‌ தமிழுறு குழூஉக்கண்‌ முற்றும்‌
வீங்குநீ ரதனுள்‌ வல்லை விழும்படி. சுருங்கிற்‌ றன்றே –18–

புடத்தில் வைத்‌ தெடுக்கக்‌ கட்டைப்‌ பொன்னு மாற்‌ றதிக மா போற்‌
றடத்து வீழ்த்‌ தோலை தன்னாற்‌ றம்முள மலமு நீங்க
விடக்கரு தாமுன்‌ புன்மை விளம்புநா வூமை யாதி
யிடக் கரற்‌ றறிவு மீக் கொண்‌ டெய்தினர்‌ கடைமீதன்றே –19–

வந்தனர்‌ வகுள மார்பன்‌ வரைந்திடு நிருபஞ்‌ சென்னி
நந்துத லின்றிச்‌ சூடி நாமெனு மகங்கா ரத்தின்‌
பந்தன முண்டு நாயேம்‌ பரிபவப்‌ பட்டோ மின்றியா
முய்ந்தன மென்று தம்முள்‌ ஞன்னுபு வணங்கிப்‌ பின்னர்‌–20-

மைப்படி மேனி செந்தா மரை விழி மாலே வந்தே
ரிப்படி தன்னின்‌ மாற னெனவவ தரித்த நங்க
ளப்பன தடியிற்‌ றாஞ்செய்‌ ய பாரத க்ஷமை செய்‌ வான் சங்‌
கப்புல வோர் கண்‌ முற்றுங்‌ கருத்துற முன்னி மன்னோ –21-

சிந்துகு ழுலகிற் காரி சிறுவனால்‌ விடுக்க வந்த
வந்தண்‌ னுபய பாத மன்பொடு பராவி யன்னோன்‌
முந்துற நடக்கப்‌ பின்னே முடுகியவ்‌ வூமை யானோர்‌
சந்தனப்‌ பொதும்பர்‌ சூழ்தென்‌ குருகையிற்‌ சார்ந்தா ரன்றே–22-

சிற்றிழை நுசுப்பு நங்கை திரு வயி றுதித்த செல்வன்‌
பொற்றளி வலம தாகப்‌ போந் தவன்‌ முன்னே சென்று
கற்றிலே நீ சொல்‌ வேதக்‌ கவியினிற்‌ பரம பக்தி
யுற்றிலே நாயே மென்றுள்‌ ளுன்ன வூமையு மகன்ற–23-

கண்ணினுண்‌ சிறுத்தாம்‌ போதுங்‌ கவி வலர்‌ பணி பாதத்தை
யுண்ணெகிழ்‌ வுடனே பல்கா னாத்தழும்‌ பெழவே வாழ்த்தி
நண்ணினா ரடிமை பூண்டார்‌ நைச்யாநு சந்தா னத்தைப்‌
பண்ணினா ரவன் கழற்கோர்‌ பாமல ரருச்சித்‌ தாரால்‌ –24–

ஈ யாடுவதோ கருடற்‌ கெதிரே யிரவிக் கெதிர் மின்‌ மினியா டுவதோ
நாயாடுவதோ விறு வெம்‌ புலிமுன்‌ நரி யாடுவதோ நர கே சரிமுன்‌
பேயாடுவதோ வழகூர்‌ வசி முன்‌ பெருமான்‌ வகுளா பரண ருள்‌ கூர்ந்‌
தோவா துரையா யிரமா மறையின்‌ ஒரு சொற் பெறுமோ உலகிற்‌ கவியே–25-

என்றேய்‌ சுடர் கொள்‌ வகுளா பரணன்‌ னிரு தாமரை நே ருறு தா ளிணையிற்‌
பொன்றா தவர் தம்‌ மவரில்‌ லொருவர்க்‌ கொருவர் தெரியாப்‌ புகலின்‌ கவிதா
னொன்றாகிய தீ தவனின்‌ னருளென்‌ றுவவைக்‌ கடலுற்‌ றவருள்‌ ளறிய
முன்றா மிழை தீ மையினைப்‌ பல்கான்‌ முன்னிப்‌ புகலா மன்னுங்‌ கவியோர்‌ –26–

இந் நாள்‌ வரையிவ்‌ வகை சென்‌ றெவரும்‌ மெதிரா நமையின்‌ றெழிலார்‌ வகுள
மென்றா ரணியோ னொருவாய்‌ மொழியால்‌ வென்றா னதனால்‌ விரிநீ
மன்னா கு பராங்கு சனா மெனவே வழுவா தொரு பே ரழியா துரையா
வன்னோ ரிவனின்‌ கழலே பரவா வணிமா மதரைப்‌ பதயே கினரால்‌–27–

சங்கத்‌ தவரிற்‌ பதினெண்‌ மதருந்‌ தாமென்‌ றுறு மித்‌ தனியே தனிவந்
திங்குற்‌ றிடமா மகிழம்‌ புயனின்‌ னேவல்‌ கொடுவம்‌ முனியும்‌ மவரைப்‌
பங்கப்‌ படவென்‌ றவனின்‌ கழலே பரவும்‌ படி. செய்‌ திவணிப்‌ படியே
துங்கத்‌ தவனென்‌ றிடவே வதியாச்‌ சோதித்‌ திருநா டேகுற்‌ றனனே –28-

பரவாத கண்டனப்‌ படலம் முற்றும்‌-

திரு நாத முனிப்‌ படலம்‌

தென் புதுவா புரி மடக் கோ தைப் பிராட்டி செந்தமிழிற்‌ காட்டு வணஞ்‌ சேவெற்‌ போர்க்கு
ளன்பினோட மக்கார வடிசினூறு கடாரஞ் செய்‌ தருளி யெழுந் தவ்வூரேகப்‌
பின்னவளு நல் கோயி லண்ணனென்றோர்‌ பேர் வழங்கக்‌ கொண்‌ டருளெம்‌ பெருமா னார் தம்‌
நன்கமல மாமலர்‌ த்தாள்‌ சென்னி கொண்டு நாதமுனிப்‌ படலமதை நவில்குவாமால்‌–1–

முருகு விண்ட மா மகிழணி நின்மல முதல்வ
னருளி னல்வழி நின்றவம்‌ முனிவர னழிவி
றிரு மடந்தையுள்‌ ளுகந்துறை திரு மரு மார்பன்‌
பெரு விசும்படைந் தநேக நாட்‌ சென்றதன்‌ பின்னர்‌ -2–

அந்த மாமுனி வரன்றன தடிபணிந்‌ தன்னான்‌
சிந்தையே மகிழ்‌ தரப் பணி விடை பல செய்து
வந்த நான்மறைச்‌ சீடனின்‌ மரபுழித்‌ தோன்றும்‌
விந்தை சேர் பராங்‌ குச நம்பி யென்னுமோர்‌ விமலன்‌–3–

பையராமுடி மிசை யுறக்‌ கிடந்த பா ரதனிற்‌
றுய்ய மாவிசை தாங்கிய மது மகிழ்த்‌ தொடை சூழ்‌
செய்ய மார்புடைப்‌ பரன்றனக்‌ கம் முனி செய்த
பொய்யிலா வகை தானு நன்‌ கியற்றினன்‌ போந்தான்‌ –4–

ந்த வாறு பராங்குச நம்பியு மியற்றி
வந்த நாண்மதுரச் செயுண்‌ மாமுனி வரன் போ
மந்த நாண் முத லாக முற்‌றோன்‌றிய மகிழ் கொ
ணந்த மாறனை முதலிய நின்மலர்‌ நவின்ற–5–

இனிய செந்தமிழ்‌ மறை யெலா மிருநில வரைப்பி
னனியு மோதுவித்‌ திடுவர்க ளின்மையி னாலுங்‌
கனிவி னவ்வண மோதுவித்‌ திடினுநி கரிலாப்‌
புனித ராகியிங்‌ குற்றவவ்‌ விமலர்கள்‌ பொருந்தி –6–

மன்னும்‌ விந்தையை யோர்ந்தியா முணர்ந்தடின்‌ மடிவா
மென்னவே மனத் தெண்ணம தெழுந்ததினாலும்‌
உன்னவே பர கதியினை யுகந்தினி துதவு
மன்ன செந்தமிழ்‌ மறை யெலா மழிந்தன வன்றே –7–

இருநிலந்தனி லிவ்வணந்‌ தமிழ்மறை யெல்லா
மருவலின்‌ நியே மலினமா யழி தருஞ்‌ செயலைத்‌
திருமலிந்தணி சிறந்தொளி மிகுந்துபு திகழும்‌
பருமை தங்கு வைகுந்தமா நகரெனும் பதியில்‌–8–

அண்ட கோளம தழிதரு முடிவினு மழிவி றோண்டர் தங்குழா மிருமருங்‌ கினு மிகச்‌ சூழ்ந்தே
வண்டலர்க்கர முகிழ்த்தன ரிறைஞ்சியே வாழ்த்த வெண்டரும்‌ பணா முடியரா வணைய தன்‌ மிசையே —9-

அஞ்சநந் திகழ்‌ தரு முகிற்‌ குலமளி யலம்புங்‌
கஞ்ச நாண் மலர்‌ பூத்தலர்ந் தென வுருக்‌ கலந்த
விஞ்சு வாணிதம்‌ பெருகு பைந்‌ துளவணி விமல
னெஞ்சி னானில வலயமுன்‌ னிகழ்ந்ததை நினைவான்‌ –10-

அறிவி லாதுயி ரடங்கலும்‌ பவக்கட லாழ்ந்து
சிறிது மோரிடம்‌ தங்குறு துறமுறுஞ்‌ செயலை
நெறியி னோர்ந்தது தவிர்ந்து நற்‌ பரகதி நேர்வா
னறிய வாரணந்‌ தனைத் தமிழதனினா னவின்றும்–11-

உணர்கிலாது பின்‌ னும் கொடும்‌ பவந்தனி லுழன்று
புணரு நந்தமை யறிகிலா வகைய பொருவில்‌
குணமு றுந் தமி ழோதூவித்‌ திடுவர்கள்‌ குரைநீ
ரணவு பாரிடத்‌ தின்மையி னென்றுளி யருள்வான்‌–12-

மூல மென்றொரு காலழைத்‌ திடுவதன்‌ முன்னர்‌
நீல மாமுகி லென்ன வக்‌ கரிமுன ணிமலன்‌
றாலம்‌ வாழுயிர்‌ தமைப்பினுந் திருத்து வான்‌ றகைசேர்‌
சீல மாய வித்தகையன செய்குவன்‌ நேர்ந்தே–13–

கான மாமல ராடன திணையடி கருதுஞ்‌
சேனை நாயகன்‌ றனதருள்‌ வழியுறச்‌ செல்லு
மூன மேதுமி லமைச்சராங்‌ கஜாநநர்‌ தம்மை
யான நாதனு நோக்கியின்‌ னுரை செய்வா னன்றே–14–

ஈர நீர்புடை சூழ்தரு முலகுயி ரெல்லாம்‌
பார மாய பழவினை பற்றறுத்‌ துய்வான்‌
சீர தாகுமுன்‌ னிகழ்த்திய மறைத் தமிழ்‌ தெரிப்பா
ராரு மின்மையி னாலவ ணெழுந்தினி தடைந்தே–15–

அரிய செந்தமிழ்‌ மறை யெலா மினிதெடுத்‌ தருளி
வருதி யென்றுரை செய்யலு மாமலர்‌ மடந்தை
பொருது மார்புடைப்‌ புங்கவ னடியிணை போற்றிக்‌
கரியி னாநநமுடை யருங் கழறுவ ரன்றே-16-

உறழ்வி னின்னுரை மறுத்திட வல்லவ ருளர்கொ
லிறைவ வவ்வண முலகிடை யுதித்தலு மெமக்காங்‌
கறிவு தீர்ந்திடு மாதலி னத் தமி ழனைத்து
நெறியி னோர்ந்திடும்‌ வண்ணம தியாதென நிமலன்‌–17–

நினக்கெ னன்னது நந்தமக்‌ கன்று கொ னிகழு
மனத்தி னுற்றவக்‌ கவலை யற்‌ றேகுதி மருவுங்‌
கனத்த பாரிடத்‌ ததற்கு நல்‌ வழியினைச்‌ காட்டா
வுனக்கு நல்லரு ளாங்குமீ குவமென மொழிந்தான்‌–18-

மறைக ளாலுநன்‌ களப்பதற்‌ கரியமா மருமா
னறழைவிளங்கிய மலரடி வாழ்த்தினர்‌ நவையிற்‌
கறைவிளங்கிய பையயராத்‌ தாங்கிய கடல்சூழ்‌
தறையிடத்தினிற்‌ றோன்றுவா னெழுந்தனர்‌ தாமே–19-

குட கிழிந்த கரு முருகு சந்தினொடு கொண்டு வெண்டிரை எறிந்து நீள்‌
தடமு றுந்‌ கரைகட கர வண்டல் படு தண்ணரும் புனல்‌ பரந்து சேர்
புடவி யின் மகிமை பெருகு மொன்‌ றிணையில்‌ பொன்னி நல்வளஞ்‌ சுரந்திடுந்
திடமிகுந்த புய லணவு பைம் பொழில்‌ சிறந் துயர்ந்திடு மரும்பதி–20–

எண்ணிறந்தவள மேவு தண் கழனி யேடலர்ந்தமரை மீதிலே
நண்ணி வெண்பணில மீனு மொண்டரள நாறு நுண்ணிலவு வீசவே
பண்ண மைந்தகளி வண்டினங்கள் படர்‌ பாவு செங்குமுதம்‌ வாய் விளும்
விண்ணி வந்து பல மேடை நின்றொளிரும்‌ வீர நாரண புரமரோ –21-

வச்சிரத்தினி லிழைத்த பற் பல வரைக் குலங்கணிகர்‌ மாடமு
முச்சிவிட்புல முகட்டினிற் படியு மொப்பருஞ்சின கரங்களுங்‌
கச்சறுக்கு நகிலத்‌து மங்கையர்‌ களிப்புடன்பயிலு சாலையும்‌
நச்சி யந்தணர்க ணிச்சலும் மரிய நற்றவம் புரி யிடங்களும்‌ –22-

வண்டினம் பல மருங்கணைந்து முரன்‌ மா மலர்ப் பொழிலு விண்ணு லாங்
கொண்டல் வெண்டிரையி னுள்ளி வந்து புனல்‌ கொள்ளுறுந் தகைய கன்றவாம்‌
விண்டு புண்டரீ க மங்கைமார் முகம்‌ விளங்கு மெண்ணறு தடங்களும்‌
தண்டருந் நறை தயங்கு தண்டுளப நந்தனங்கள்பல கோடியும்‌ –23–

சக்ரவாள கிரி யொத்‌துயர்ந்திலகு சதுர மா மதி லினங்களும்‌
புக்கு மா மலரி னட்டலக்குமி பொருந்தி மட்டில் பல வாவண
மிக்க வீ திகள னந்தமுங்கனக வீறு கொண்ட விரதங்களு
மிக்கணிப்பரு வளத்தின் மிக்குய ரெழின் மிகுத் தவ நகர்க்கணே–24–

நச்சியுற்றினிது வைகுமந்தணர்‌ த நற்பருங்குல மத ற்குளே
வெச்சடுத்திடு பவக் கடற்றனில்‌ வீழுந்து நொந்துற வழிந்திடு
மிச்சகத்‌ தயி ரனைத்து நற் கதி யெழக் கடுக்கலி யுகத்தினின்‌
முச்சகத்திரமு மிருசதத்தொடிரு பத்திரண்டினி லிரண்டுமே –25–

ஒன்றுமிந்தவரு டங்கள்‌ சென்ற பின்‌ முறுவதானசுப கிருது யாண்‌
டன்றி நன்மிதுந மென்னு மாதமுட னணிய பூரணையு மென்றுமே
பொன்றிறன்மையபு தன்‌ றன் வாரமு மிணைந்த தானவ றுடந்தனி லென்றெனும்படி யுகந்துதித்தன ரெம்‌ மிருள் களைந்தருள வென்பரால்‌–26-

௮நகனின்னருளில்‌ வந்‌ துதித்தருள்‌ கஜாந நத்தவரு மிம்பரா
லினிய தன்மையஸ்ரீ ரெங்க நாதமுனி யென்று நாமமது பெற்றனர்‌
முனிவில்‌ சிந்தை யுடை நிபுணராகி மறை முற்‌று நன்கினி துணர்ந்து மே
தினி முதன்மை திரி லோக மெங்குமிசை சென்றுலாவுற வளர்ந்தனர்‌.–27–

இக்கணிப்பினிலை யுற்றடுத் துவள ரெட்டருந் தகைய வப்பரர்‌
முக்குணத்தினு முதற் குணத்துடை முதற் பரத்த வரி பத்தியே
மிக்கெழிற் படரு மத் திருப்பதியில்‌ விட் புலத்தெழு முகிற் குலம்‌
புக்கெனத்தளி யிடத்தினிற் பொலி பொருப்புயர்ந்த புய மன்னனார்‌–28-

போத னைம்முகன் மு தற் படுங் கடவுள்‌ போற்றருந் தகைய பாதமே
மாத னம்மென மனத்‌தி னுட்கொடு வணங்‌கி நன்குற வழுத்தியே
வேத நன்மறை வழாத வவ்விறை விருப்புடனக மகிழ்ந்திட
வேத நைந்த பல வாய தொண்டுகளிழைத்‌து வந்தனரு ளன்பினால்‌.–29–

இன்ன வாறனைய ரெங்க நாதமுனி யென்னு மந்த மறை யாளரு மா
மன்ன னார் தமது தொண்டி னல்வழியில்‌ வந்த நாளிலொரு வைகன்‌
றுன்னு மா நகர் தொ றும் பணிந்து வர மன துளித்தமது தெய்வமா
மன்ன மாயனை வணங்‌கி நின்றெதிரி லறிய வின்ன மொழி யுரை செய்வார் –30-

கிட்டு வார்வினை யறுத்து வாழ்வருள்‌ கிடைப்பிலா மணி நிறத்தனே
வட்டவாரித யுடுத்த மானில வரைப்பினிற் கொடு நடத்தை சேர்‌
துட்டரானவர்‌ துடிப்ப நூறிவெகு சிட்டர் பாலன மியற்றுவா
னிட்டமாக முன்‌ னுதித்‌து வந்தெழின்‌ மிகுத்து யர்ந்த மது ராபுரி–31–

கோவருந்‌ தகைய கோகுலம் பொருவில்‌ கோவருத்தன முடன் விருந்
தாவனம் பிரிதி துவாரகை பதரி தாரு மிக்க திரு வேங்கட
மே வயோத்‌தி யணி நைமிசாரணியம்‌ விந்தை யின்னமுத லான சீர்‌
பாவுறும் வட புலத்தினின்‌ றிசை பரந்த நற் பதி தொறுஞ்செலா –32–

அங்கி லங்குன்வடி வங்கள் கண்டினி தகங் குளிர்ந்‌திட வணங்கியே
யிங்கெழுந்‌து வர வரமுகந்தருள்‌ செ யென்‌ றிறைஞ்சியய னின்றிடச்‌
சங்குடன்றி விரி தண்டு வாள்‌ வரிவில்‌ தங்கு செங்கமல மன்னனார்‌
புங்க வன்னவரை நன்‌கினவ்வகை புரிந்தி வன் கடிது செல்கெனா–33–

முன்னு மர்ச்சக முகேந வின்னண மொழிந்திடக்‌ கடிதெழுந்து போய்‌
மன்னு முத்தர திசைக்கணின்‌ றிசை மலர்ந்திலங்குறு வதானவா
மன்ன திவ்ய பல தேச மெங்கிலு மடைந்திறைஞ்சி விரை வாகியே
பின்னெழுந்‌து தம நாடு செல்லுழி பிறங்கு மன்ன மறையாளரே –34–

ஓடு தெண்டிரை யரும் பொ னொண்மணி யொதுக்கு பொன்னி வளம்‌ மன்னு சோ
ணாடி லங்குறு மரங்கமே முதல நற்றலந்‌ தொறும்‌ வணங்கியே
மாடணிந்தபுனன்‌ மானிலந்தனின்‌ மலிந்த வெவ் வினை யறுத்தருள்‌
கோடில்‌ சிந்தையரும்‌ வந்த ணைந்தனர்‌ குடந்தை யென்றுரை யரும்ப தி –35–

அயனெ னுந் தகைய வேள்வி யந்தணர்க ளாரணத்‌ தொலியு மணி யறா
வியனி டந்தழுவு மாவ ணத்தொலியு மேவரும்‌ பல வளங்கள் சேர்‌
புயலி ணைர்தமணி மாட நன்மறுகு பொங்கு மங்கல விழாவெழு
மயர்வில்‌ சும்லையு மளாவி வெண்டி ரைய வம்பினோடி கலி யார்க்குமால்‌–36–

அருமறைக்குரிய புனிதர்‌ நித்தமு மமைக்கும்‌ வேள்வி யெழு மாவியும்‌
இரு தனப்பொறையி னொசி யிடைச்சிய ரெழிற் றருங் குழலருத்து நீன்‌
முருகடுத்தொளிரு மகரு நற் புகை யுண்‌ முற்று மொன்றி விணகத்‌தெழ
வரு முகிற் குலமி தென வுறக் கருதி மஞ்ஞை நின்‌ றசை தரும் பொழில்‌–37–

அணிபெருகுதிரைக ளொன்றுமா லலவிர்மணி யுகுபொனி தன்னிலுந்
திணிபெரு முயர்திரு மாளிகை செறிதரு மறுகிலு மின் புனல்‌
பணிமதி யணிசடை யோன்நலம்‌ பற்று பரன்‌ றளி மீதிலும்‌
தணிவரு கலியென மைம் முகி றடமுளிறங்‌கி மடுக்குமால்‌–38-

பானல மருவிடு மீர்தன பாரம தொசியு மருங்குலார்‌
கானலர்‌ குழலிய ரின்சொலுங்‌ கடிமலர்‌ நிறை தரு வாவியும்‌
வானக முகிறவழ்‌ சோலையு மா மறை வேதிய ருள்ளமுந்
தூநகை மாடமு மினமுறத்‌ துளி மலர்க்‌ கண்ணனை நாடுமால்‌ –39-

இளையன பெருவள மிடையுமவ்‌ வெழினக ரிடை நவ மாமணி
புநை புரி சையுமெண்‌ விமானமும்‌ பொன்னகர்‌ மிசை யுறு சிகரியும்‌
வனையுமி னொளிமிகு தூபியு மலிந்து சிறந்தடு கோயிலை
யனைய நின்‌ மலருமடைந்தன ரகமெழு மோகையோ டென்பரால்–40-

அன்னவிருந்தளி தன்னிலோ ரஞ்சன வெற்புக்‌ கிடந்ததை
யென்ன மலர்க்கண்‌ வளர்ந்தரு ளெந்தமை யாளுடை நின்மலன்‌
கொன்னவிலுமயி னேர்விழிக்‌ கோமள வல்லி புணர்ந்தவன்‌
முன்னரடைந்தடி தாழ்ந்தனர்‌ மூவுலகும் மிசை கொண்டனர்‌ –41–

அண்டமடங்கலு நின்றரு ளன்ன பரன்றன மாமணி
கொண்டொளி வீசபி டேகமொண்‌ கோடிய செஞ்சிலை யின்னுதல்‌
கண்டவர்‌ சிந்தை கவர்ந்திடும்‌ கருணை மிகப் பொழி யுந்தகை
புண்டரிகம் புரை கண் குளிர்‌ பூரண சந்திர வானனம்‌ –42–

குடந்தை கிடந்தருள்‌ கொள்கை யென்‌ கோல வெனும்‌ மழிசைப் பிரா
னிடந்தனி லின்னுரை யாடவே யெழுந்த வெழிற் கனி வாய் வரைத்‌
தடந்தனி யம்புய மைம்படை தாங்கிய செங்கர மா மலர்‌
மடந்தை வதிந்தருண்‌ மார் பொளிர்‌ மாடுடை மேவிய சீரரை –43–

புண்டரி கன்வதி நாபியே போந்தடை வார் பிற விப் பிணி
கண்டி மருந்தென வாகுமீர்ங்‌ கமல மலர்ப்பத மின்னவை
மண்டி மனத்தி லெழக்களி கண்டு கணுற்று வணங்கியே
யண்டரு மா மறை முற்றையு மறிந்தரு ளன்னவர்‌ நின்றனர்‌ –44-

நம்பர மாரிய ராயவந் நவையில்‌ பெருங் குண ரிவ்வண
மம்பர மன்றனை யேத்தியே வங்கய னின்‌ றிடும்‌ வேலையோர்‌
வம்பறு வந்தி இனம் வரு மாறுபோலன்று மடைந்தன
ளெம் பெரு மானிரு தாமரை யென்னு மடித்துணை போற்றியே–45–

ஏவன கண்டிரு நண்பனவ்‌ வெம்பெரு மான்றன மீதிலே
மாவமு தத்து மினித்ததாய்‌ மா மகிழ்‌ மாறனுரைத்தவாம்‌
மேவரு நற்றகை யாயிர மென்றமிழ்‌ மாமறை தன்னுளா
ராவமு தென்னு மரும் பதி கந்தனை யார நவின்றரோ –46–

முன்னுற நின்றிட வன்னவர்‌ முன்னு முணர்ந்தவை தம்முளே
மன்னும ரும்பொரு டன்னையே வழாம லுணர்ந்தன ராசியே
பன்னிவை யாயிர முள்ளிவை பத்தெனு மஞ்சட கோபனே
சொன்ன தெனுமிவை தம்முளே தோன்றலினன் கறி வேனெனா–47–

அன்னவ டன்னை யடுத்திவை யாயிர முட்குறை வாகலா
லின்னவை சொற்றனர்‌ யார் கொலோ விப் பிர பந்த மனைத்துமே
நின்னிட முண்டு கொ லன்றி நீ நெறியி னுணர்ந்தனை யோவயன்‌
மன்னிய புத்தக மேலுமுண்‌ டோவென வின்சொல்‌ வழங்கினார்–48-

சொற்ற சொலைச் செவி யோர்ந்தனார்‌ துணை யடி யைத் தொழு துரை
ணற்றவ தென்குரு கூரெனு நகரத னுட் சட கோபனென்‌ செய்வா
றற்றை யுதித்து மறைப் பொரு ளனைத்து மருந் தமிழான் முனா
ளுற்று விரித்தன ரென்று முன்‌ னோருரை செய்குவ ராதலால்‌ –49–

அத்தமி ழாயிர முள்ளிவை யன்‌ றடி யேனறி யேனயற்‌
புத்தக மும்மிலை முற்றுணர்‌ புனிதரு மிங்கிலை யென்றனள்‌
அத்தன்‌ மறைத்தளி வாழுமா ராவமுதன்‌ பதமாமலர்‌
சித்தமுகந்து வழுத்துறாச்‌ சிறியர்‌ முகத்து விழித்திடாள்‌ –50-

அன்ன வின்சொ லறிந்தன ராகியே
யின்ன செந்தமிழ்‌ மாமறை யாவுமே
மன்னி வைகும்‌ வளநகர்‌ யாதென
வுன்னி யுன்னி யுருகினர்‌ நின்றோ–51-

தேறி யுள்ளமிச்‌ செந்தமிழ்‌ தம்மைமுற்‌
கூறு மச்சட கோப னுதித்தருண்‌
மாறி லாவள வண்குரு கூரெனும்‌
வீறு கொண்டு விளங்கு பதிக்கணே –52–

அன்றி யெங்கு மிருப்பரி தாகுமா
லின்று சென்றறி வேனென வேமன
மொன்றி வேக முடனெழுர்‌ தோகையிற்‌
றென்றி சாமுகஞ்‌ சென்றனர்‌ நோக்கியே–53-

பாட்டு வண்டு படும்பல பூம்பொழிற்
கூட்ட மன்னக்‌ குருகை யடைந்தனர்‌
வாட்ட மின்மகிழ்‌ மாற னருள்வடப்‌
பூட்டி. முக்கப்‌ பொருவில்‌ குணத்தரே–54-

மெலிந்து சென்றருண்‌ மேதகு சிந்தையோ
ரலிந்து சேரு மகன்மணி யாலய
மலிந்து செங்கம லங்கள்‌ வருமுகிற்‌
பொலிந்து நின்ற பிரானடி போற்றியே–55-

வேலை சூழ்தரு மேதிநி மீமிசை
சால வேயரு டந்த கடிமழ்‌
மாலை கூடிய மாறனை யுந் தொழாச்‌
சீல மோடுட்‌ செழித்துமு னின்றரோ–56-

தூநகும்மணி துன்றபி டேகமும்‌
வான வாவு மதியைப்‌ பழீசெயு
மோன மாய முகமும்‌ கருணை சேர்‌
தேன வாவுந் திருமலர்க்‌ கண்களும்‌-57-

வாம விற்புரு வங்களு மாசிலாத்‌ து மறைத்தமிழ்‌ சொற்ற செழுந்துவர்க்‌
காம ரொண்கடி கைக்கிணை வாயுமுள்‌ ளாம ணித் திரு வார முறுவலும்‌–58-

துய்ய மாமகழ்‌ துன்றிய மார்பமுஞ்‌
செய்ய சின்முத்‌ திரைக்கர முந்தொழு
மெய்ய ருக்குயர்‌ வீட்புல மீதலால்‌
வய்ய கம்புகழ்‌ மாமலர்ப்‌ பாதமும்‌–59-

விண்ட லத்தெழு வெஞ்சுடர்‌ வானவன்‌
மண்ட லத்திடை வந்தன னென்னவே
யொண்டு லங்கு மொளித்திரு மேனியுங்‌
கண்டு கண்டு களிக்கட லாழ்ந்தனர்‌–60-

யோக நன்னிலை யோரவர்‌ மாறனை த்‌
தாக மோடித்‌ தகையின்‌ வழுத்தியே
மேக மீச்செல்‌ விமானந்‌ தனைவல
மாக வந்து மகிழ்ந்த னராகியே–61-

பந்த மாய பழைய வினையறுக்‌
தெந்த மக்கரு ளின் வகு ளப்பிராற்‌
கந்த மற்ற வணி பெருந் தொண்டுகள்‌
புந்தி யோடு புரிந்தனன்‌ வந்திடும்‌–62-

அப்ப ராங்குச நம்பி யடுத்தனா
னைப்ப ராவி யினைய நவில்வரா
லிப்ப ராவு மண்ணேழிலு நின்ற சீர்த்‌
துப்ப ராயவத்‌ தூ நெறி யாளரே–63-

வாச மன்மகிழ்‌ மாறன்‌ முதலியோர்‌
பேசு செந்தமிழ்‌ யாவுமிப்‌ பேர் நக
ராசி லோங்குவ துண்டுகொ லன்‌ றுஸ்ரீ
கோச முண்டுகொல்‌ கூறுதி ரென்றனர்‌–64-

சொற்ற சொற்ச டுளைச்செவி யேறு முன்‌
மற்ற னானும்‌ வழங்குவன்‌ சிற்பக
லுற்ற தாண்டுபி னோய்ந்து மலினமா
யிற்றை நாளிவ ணே து மிலையெனா–65–

பின்னு மோதுவன்‌ பெய்மது மாமதிழ்‌
துன்னும்‌ மார்புடைத்‌ தோன்ற லடிபணிந்
தன்ன வன்ற னருளிற்‌ பர கதி
மன்னி வைகும்‌ மதுர கவியெனும்‌–66-

எங்க ளாரிய னிங்கு விபவமாய்த்‌
தங்கு நாளிற்‌ றரணி யெலாமிசை
பொங்கு மாறப்‌ புனிதன்‌ விடயமாய்ப்‌
பங்க மின்றிப்‌ பரிவி னவின்றவாம்‌–67-

கண்ணி நுண் சிறுத்‌ தாம்பெனுங்‌ கானறை
யுண்ண யப்புறு மோர்பதி கம்மனான்‌
விண்ணி னிற்செலும்‌ வேலையிற்‌ சீடராய்‌
நண்ணினர்க்கு நவின்தன னன்பினால்‌–68-

அன்ன சீடர்‌ மரபின னாகலா
லென்னி டத்தது வன்றிமற்‌ நின்றெனாப்‌
பின்னுங்‌ கேட்டி யென்றாங்குப்‌ பிதற்றுவா
னின்ன வந்தமி ழின்குண மியாவுமே–69-

இப்பதிகத்‌ து று மகிமை யெனையோ வென்னி லின்றதையு முரைத ருவனிசைந்துகேட்டீ
யொப்பற விட்‌ புலமுகடுங்‌ கிழிய வப்பா லோங்கு புளிக்‌ காவணத்து ளூறையுஞ்‌ சீதத்‌
துப்புறுபாட்‌ டளிமுரலத்‌ துளிக்குந் தண்டேன்‌ றூங்கு மகிழ்த்‌ தொடையகலஞ்‌ சூடுமெம்மா
னப்பறுவா ட்கமலமுகத்‌ தெதீரே நந்தண்‌ ணரிய குசத்‌ திழைதவிசட்‌டதன் மேல்‌ வைக–70-

புல்லியவைம்‌ பொறி வழியிற்‌ போக்கா தேக புந்தியுடன்‌ புண்ணியராய்ப்‌ பொருந்தி யன்ன
சில்லியறற்‌ குழலுடைய நங்கை மாது திரு வயிறு வாய்த்தோனைச் சிந்தை செய்யா
யெல்லியினும்‌ பகலினுமோ ரணுவு நீங்கா திருந்தனரா யோகியர்கட்‌ கிணையாய்‌ மன்னிச்‌
சொல்லருபே ரானந்தக்‌ கடலுட்‌ டாழ்ந்து சோர்விலரும்‌ தகைமை யவப்‌ பதிகந்‌ தன்னை–71-

பன்னரிய நற்றேவ கானத்‌ தோடும்‌ பன்னீராயிர முருவே பகர்வராகினாங் கன்‌னோர் தம்‌
லன்ன செயற்‌ கதி யோகை கொண்டானாகி யணி கிளரச்‌ சடகோப
முன்னரெழுந்த தருள் புரிவா னெனவே முன்னோர்‌ மொழிந்தனரா லிங்‌கிது தான்‌ முறையோ வென்ன
மன்னு பராங்‌ குச நம்பி வழங்கினானான்‌ மாமறையின்‌ பொருளுணரம்‌ மதி வல்‌ லோர்க்கே–72-

சொற்றமொழி யிரு செவியு ளேறா முன்னர்த்‌ தூய மனத்‌ ததியோ கை தூங்கத்‌ தூங்கப்‌
பற்றறு பராங்குசனைப் பற்றற்‌ கன்ன பதிகமே பணி புருட கார மென்னாப்
புற்றளரு நெஞ்சுடைய புனித ரன்னோன்‌ பூங்கமலத்‌ தாளிணையைப்‌ போற்றா நின்றே
மிற்றை யுகந்‌ தன்னதை நுந்‌ தாசனேற்கின்‌ றீந் தருள்வீ ரெனவின–73-

மிக வணக்கத்‌ தடி வணங்கி நிற்குமன்ன விமலர்‌ தமை யன்னோனும்‌ வியந்து நோக்கி
நிகரறு மப்‌ பதிகமதற்‌ நின்மலர்க்கு நிகழ்த்துவனென்‌ றுபதேச நெறியா னாங்குப்‌
புகரறு தன்‌ னாரியனை நெஞ்சுட்‌ கொண்டு போதனை செய்‌ தருளின னாற்‌ புலம்போ மார்க்கத்‌
தகமதனைச்‌ செலுத்தலிலா வளவில்‌ யோக வருநிலை தேர்ந்தினி துணர்ந்த வன்னோர்க்‌ கன்றே–74-

துன்னு றுந்தகை யன்ன நற்‌ பாவைத் தூய னாமப்‌ பராங்குச நம்பி
தன்னி டந்தனி லின்னன மாகத்‌ தகையி னோர்ந்‌து தெளிந் தன ராதி
யன்ன வன்றன தின்னரு டன்னா லந்த ரங்க முகந்தனர்‌ சென்றார்‌
மன்னு மாமல ரன்ன மணந்த மன்ன னாரடி நன்குற வுன்னி–75-

தேவ கானங்‌ கடிதினிற்‌ சென்று தேர்ந்து ணர்ந்திவ ணார்ந்தன ரகிச்‌
சேவி யார்மன மேவரி தாகுஞ்‌ செய்ய மாமகி ழையனின்‌ முன்ன
ரோவில்‌ சிந்தையத்‌ தூயனுகந்தன்‌ றுரை செய்‌ வண்ணம்‌ புரை செகு மன்ன
பாவி னங்களை யாவருங்‌ கேட்பப்‌ பாட லுற்றனர்‌ பீடுடன்‌ மன்னோ–76–

மாட லர்ந்த பணாடவி தாங்கும்‌ வாரி சூழ்தரு பாரிட மெங்கும்‌
வீட லர்விசை நாடிய நன்னா வீற னென்ற வம்‌ மாறனின்‌ முன்னர்ப்‌
பீடி, லர்மனக்‌ கோடறுறந்த பேரருட்டழை சீருறு மன்னோர்‌
பாடு மின்னிசை யீடிலமுதம்‌ பரிந்து ஈன்கு சொரிந்தன ரன்றே–77-

வான்பயி லமரர்‌ யாரு மறுவிலா ரிசைக்குந் துய்ய
தேன் பயி லினிய கானஞ்‌ செவியிடை யடையா முன்ன
ரூன்பயில்‌ குலிசப்‌ புத்தே ளோங்கவை யிடத்தி யாழ்‌ வல்லோன்‌
றான் படர்ந்‌ தனனோ வென்னச்‌ சாற்றினர்‌ விரையச்‌ செல்வார்‌ –78–

வாரிசூ ழுலக முய்ய வந்தரு ணிமலர்‌ செய்யுஞ்‌
சீரிய கான மோர்ந்து சிறிது நீங்‌ கரிய வாதி
யேரி மிரசுண மெல்லா மிருஞ்சிறைப்‌ பந்தர்‌ வீசிக்‌
காரிரு விசும்பி னூடே கவிந்தன சுழலு மாதோ–79-

முல்லைய நிலத்தின்‌ மாயோன்‌ முற்குழற்‌ கானஞ்‌ செய்யு
மெல்லையன்‌ னேனைச்‌ சூழ்ந்த வியல்பென நிரைக ளெல்லா
நல்லிசை செலியி னோரா நாற்றிசை மருங்குந் தீட்டுஞ்‌
சொல்லிலோ வியமே யென்னத்‌ துன்னின மலியுமாதோ –80–

மைப்புய லூர்தி செய்ய மலர் புரை விழிகளே போற்‌
செப்பறு முடல மெல்லாஞ்‌ செலியிலே னென்பான் சேடன்‌
ஒப்பிலாச்‌ செலிய நேக முற்றமை பலித்த தென்னாத்‌
துப்புறுங்‌ களியி னழ்வான்‌ றூய வவ்‌ விசை கேட்‌ டம்மா -81–

மானினங் கரடி வேழம்‌ வரிப்புலி யரிமா னின்ன
வான்பல விலங்‌ யாவு மறிவிழந் திரையுந்‌ தேடா
தூனமி லெழுவை மான வுற்ற வவ்‌ விடத்தே நிற்கு
மீனரை யணுகா வன்னோ ரிசையமு தருந்தி மாதோ –82-

தண்ணளி சுரக்கு மன்ன தகையினா ரிசைக்குங்‌ கானம்‌
விண்ணக முழுது மேவி விரவி நிற்‌றலினாற்‌ றுய்ய
பண்ணமை துளவத்‌ தெம்மான்‌ பண்டிட மெங்குந் தாய
வண்ணமுற்‌ றொளிருஞ்‌ செய்ய மலர்ப்பத மொக்கு மம்மா –83–

காரணத்‌ துதித்த வன்னோர்‌ கழறிசை யொன்றே யெல்லாப்‌
பாரண வுயிர்க டம்மைத்‌ தன் வசப்‌ படுத்த லாலே
சீரணம்‌ கயனும்‌ வீயச்‌ செறிதரு முடிவிற்‌ றன்பா
னாரண னனைத்துங்‌ கொள்ளு நவை யிலாத்‌ தகைமை யொக்கும்–84-

அவ் விம லன் செய்‌ கான மணிந்தன ராகி மண்ணோ
ரெவ் விடந் தனிலீ தென்னா விரங்கினர்‌ செவிசெய்‌ நோன்மை
யொவ்வவிவ்‌ விசை வலானை யுற்று நோக்‌ குறவே கண்கள்‌
செவ்விதிற்‌ புரிய கில்லாச்‌ செய்கையி னயர்வ ரன்றே–85-

பாதவஞ்‌ சலியா வாங்குப்‌ பறவைகள்‌ சிறிதுங்‌ கூவா
வாதவ னிவனே குங்கா லன்றென விரையச்‌ செல்லான்‌
போதவந் தணர்க ணாவும்‌ புரிகில வேத வோதை
தீதவம்‌ படுத்‌துங்‌ கானச்‌ சிறை வலை யகட்ட வம்மா–86-

மாரத மொழுக வன்னோர்‌ வழங்கிசை செவியி னாரா
நாரதன்‌ முதலா யாழின்‌ நல் வளந்‌ தெரியும்‌ வல்லோர்‌
போர வுள்‌ ளுடைந்து நாணம்‌ பூண்டி னி திருப்பரென்றா
லாரதன்‌ மகிமை தேர்ந்திங்‌ கறைய வல்‌ லவர்க ளம்மா—-87-

இவ்வகைத்‌ தாய கானத்‌ தெண்ணருந் தகமை சேரத்‌
திவ்லிய மதரப்‌ பாவைத்‌ தீஞ்சுவை யொழுக வன்னோ
ரொவ்வ நாற்‌ பத்தைந் தென்றங்‌ கோதுநா ளளவாய்ச்‌ சொன்ன
வவ்வண மாகப்‌ பன்னீ ராயிர முருச் செபித்தார்‌–88–

இணையிலா ரிசைத்த தேவ வின்னிசைக்‌ குகந்தா னாகிக்‌
கணையென மிளிர்ந்து நீண்ட கண்ணுடை நங்கை பால
னணை வரு மதிர்ச ன யகல்விசும்‌ பகட்டிற்‌ றோன்றுங்‌
குணமுறுந்‌ தொனியி னின்று குளிர்ந்தன னுரை சொய்‌ வானால்‌–89–

என்னகொல்‌ வெகுவாய்‌ நீரில்‌ கெந்தமைக்‌ குறித்தி யாரும்‌
பன்னுதற்‌ கருமரேகம்‌ பகலிமைப்‌ பொழுது நீங்காத்‌
துன்னியே யருமை யான தொழிலினைப்‌ புரிந்தீ ரென்ன
வன்னவர் செவியுட்‌ கேட்ப வறைந்தன னினிதி னம்மா—90-

அவ்வுரை செவியிற்‌ கேட்டவ்‌ வநகருங்‌ களிதுலங்கிச்‌
செவ்வியின்‌ வணங்கி நாயேன்‌ செந்தமிழ்‌ மறைகணான்கு
மெவ்வமின்‌ றுணர வென்‌ றிங்‌ கியைந்தன னடிய னேன் செய்‌
வெவ்வினை கழற வோத வேண்டு நாவீ ற வென்ன–91–

மாமகிழ்‌ மாறனுள்ள மகிழ்ந்துரை செய்வ னன்பா
நாமுனக்‌ கெதிரி னின்று நவிலுத லறமன்‌ றர்ச்சை
தூ மலர்‌ வாய் திறந்து சொல்லுவந் திரையி னப்பால்‌
நீ மனங்‌ களிப்பக்‌ கேட்டு வரைந்திடு நிமல வென்றான்–92–

என்ன லு மாடிப்‌ பாடி யிரு நிதி கிடைத்த தென்ன
மன்னு மா நந்த மென்னும்‌ வாரிதி படிந்து மாறன்‌
சந்நிதி யருகிற்‌ சென்று சரண் பணிந் தருடி யென்னக்‌
கன்னலு மமிழ்ந்து மேய்ப்பக்‌ கழறினன்‌ மறை நான்‌ கன்றே—93-

தூயமா தவத்து வைகும்‌ பதின்மர் சொற் றமிழு மாநா
லாயிர முரைத்துத்‌ தேவ கானமிங் கமுதி னேய்ப்ப
நீயிவ ணிசைத்த தாலே நிற்கு நாதமுனி யென்றே
ரேயு நா மமுமளித்தங்‌ கின்புற விருந்த பின்னர்‌–94-

நாதமா முனியுஞ்‌ சொன்ன நான் மறைப்‌ பொருளு மோர்ந்து
போதமுற்‌ றமலன்‌ செய்ய பொன்னடி பணிந்து நாயேன்‌
மாதவ மிழைத்த தாலிம்‌ மாறனுள்‌ ளுகந்து நாவா
லோதின னம்போற்‌ பாரி லொருவரில்‌ லெனவுங் கொண்டான்‌–95–

கருத்தி னிற்கடிய வன்பு கொண்டிலகு கண்ணகத்‌ துயிர்கள்‌ யாவையுந்
திருத்தி நம் ஸமய நிலை நிறுத்‌து பு திகைப் புறும் பல மதம் செகுத்‌
தருத்தி யொன்றபய மறை நிறுத்தி யு மநேக வைகலி வண்‌ வைகுவா
ருரைத்த விப் பெருந் தகை தனக்குரிய யோகி யாகுமிவ ரென்றனன்‌–96–

மறுவளரு மறுகால் வண்‌ டினங்கள்‌ பாட மடை திறந்தின்‌ மது வொழு கும்‌ வகுள மார்பத்‌
திருவளரு மெங்கோனிவ்‌ வண்ண மாகத்‌ திரிதண்ட மேந்துமெதி சேகரன் றன்‌
னருவள மெல்‌ லா மொழியா தன்னோர்க் கோதி யதிரிசனா மாறன் மவு னமதாங்‌ காலை
பொருவரு நன்‌ னிலை பிறழா திலகு மன்ன புனிதரங்க நாதமுனிப்‌ புகழ்சேர்‌ தூயர்‌–97–

தாயிழந்த சேய் போலு மெழிலி நீங்குஞ்‌ சாயலுறு மயில் போலுற்‌ தயங்கி வாடிச்‌
சேயிதழ் நன்‌ மரை மலர்க்கண்‌ பனிப்பத்‌ துய்ய திரை யுடுமா னில வலையஞ்‌ செழிப்புற்‌ றோங்க
வேயிருந்தோ ணங்கை திரு வயிற்று ணின்றே விண் சுடரோ னென வெழுந்து விளங்குஞ்‌ ஜோதி
மாயமறு மெய்யறிவின்‌ றளித்த கோவே மதியிலியேன்‌ மனம் புகுந்து வளருந் தேவே–98-

கருணை பொழி விழி முதலே நடு வீறில்லாய்‌ கலி வைரி புன் சமயக்‌ கலகர்‌ தீய
வருமொளியே வழுதி குல வாழ்வே துய்ய வண்டுளவப்‌ புயலாதி வழங்கு மஞ்சத்‌
திருவளருக்‌ துவசத்தா யரிய நான்கு செழு மறையைச்‌ செந்தமிழ்‌ செய்‌த தேவே
யுருகுமன வன்பர்களுக்‌ கன்றி யெட்டா வுத்தமமே யென்று பல வுரையா வேத்தி–99-

அடங்கரு மெம்ஞ்‌ ஞான முறு மனைய கோவா மமலனுக்கே பற்பல வுத்‌ தவங்கள்‌ செய்வான்‌
றொடங்கி யுயர்‌ குறுங்குடி வாழ்‌ நம்பி வந்தான்‌ தொன்னிலங்க ளுய்ய வந்த தோன்றல்‌ வந்தான்‌
மடந்தையர் தந்‌ திலக நங்கை மைந்தன்‌ வந்தான்‌ வழுதி குலத்‌ தொரு முதல்வன்‌ வந்தான் வந்தான்‌
ஓடுங்கலறுஞ்‌ சடவைரி வந்தா னோங்கு மாறனெனும்‌ திருப்பெயர்‌ கொளொருவன்‌ வந்தான்‌—100-

அனை முலையை யுண்ணாது கடந்தா னவ் விண்ணவிர் புளிக்கா வணத்தி லினி தமர்ந்தான் வந்தான்‌
வனையிசை மதுரகவிதம்‌ பெருமான்‌ வந்தான்‌ வண்மை கொள்‌ பராங்குசனே வந்தான்‌ வந்தான்‌
புனையுமது மலி வகுளா பரணன்‌ வந்தான்‌ பொரு விலருஞ்‌ சடகோபன்‌ போந்தான்‌ போந்தான்‌
நினை வரு மெய்ஞ்‌ ஞாந நநம்‌ மாழ்வார்‌ வந்தார்‌ நீசமுறும்‌ பரமதம்‌ வென்‌ னிமலன்‌ வந்தான்‌–101–

குயினினனால்‌ பொழிற் குருகூர்‌ நம்பி வந்தான்‌ கோதறு நா வீறனெ னுங்‌ கோமான்‌ வந்தான்‌
செயிர் மறுகுங்‌ கலி வைரி வந்தான்‌ வந்தான்‌ செழும் வேதற்‌ தமிழ்‌ செய்த செல்வன்‌ வந்தான்‌
எயிலெழு கொண்‌ டொளிரரங்கத்‌ தீசன்‌ கொங்க மீர்ங்கமலத்‌ தடி யாரு மிறைவன்‌ வந்தான்‌
மயர்வறு நம்‌ பொய்கை முத லாழ்வார்‌ தம்மை மகிழ்ந்த வய வங்‌ கொண்ட மன்னன்‌ வந்தான்‌ –102–

வண்டலம்பும்‌ பொழில் வழுதி நாடன்‌ வந்தான்‌ மறையவர் தம்‌ மனத்‌திருந்து வளர்வான்‌ வந்தான்‌
குண்டுபடு பேரகழி வளருங்‌ கோமான்‌ குளிர் மதமோங்‌ குறவந்த குமரன்‌ வந்தான்‌
விண்ட புனற்‌ றண் பொருநைத்‌ துறைவன்‌ வந்தான்‌ வேட்டவர் தம்‌ வினை யறுத்தாள்‌ விமலன்‌ வந்தான்‌
பண்டு நன்னாத முனியென்ப ரர்க் குகந்து பண்டைய நாலாயிரமும்‌ பகர்ந்தான்‌ வந்தான்‌–103–

என்றுபல சின்னங்க ளியம்பி யார்ப்ப வெழிலியென மங்கல பல்‌ லியமு மேங்க
பொன்ற யுவா னவருகந்து மலர் மந்‌ தாரம்‌ பொழிதர மண்‌ ணோர் குழுமிப்‌ புகழ்ந்து போற்ற
மன்றறரு மணி மாட மோங்கித்‌ தோன்று மணிநகர முழுதுமரு வளங் கொண் டோங்க நடாத்தி வந்தார்‌–
நன்று மன திடை மிகவா னந்தங்‌ கொண்டு நாடோறும்‌ பற்பல் விழா நடாத்தி வந்தார்–104-

இங்குள மகிழ்ந்திவணம்‌ ரங்க முனி யெந்த மிறைவனெனு மந்தண்‌ மகிழ்‌ நற வொழுகு மார்பற்‌
கங்கமல மொன்று முக நங்கை யணி பாலற்‌ களப்பறு ப லுச்சவ நடத்தி யருள்‌ மாறன்‌
பொக்கணி மி குந்தினி திலங்குறு மடிக்கே பொற் புறுப றொண்டு களை யற்புடனி யற்றாத்‌
தங்கி யவ ளந்திகழு மிங்குதிரமாகத்‌ தரித்திடுவ மென்றுத மனத்தி லெணி யுற்றார்‌–105-

ஆர்வமொடு மிவ்வணம னோர் வருகு நாளி லட்ட திசை பொங்கிசை தம்‌ மிட்டதெய்வ மாகுங்‌
கார்வளரு மோதிமினை நேர்வுறு மருங்குற்‌ கற்புமிகு பொற்றிருவி னற்புடைய மன்ன
னார்வளரு மன்பினொடு மோர் பகல்‌ கனாவி னத்‌து திகிரிப் படை கொள்‌ சுத்த வுரு வோடு
நீர்வளரு மப்பரர்மு னேர் பெறவ டைந்தே நின்‌ நினைய பற்பல சொல்‌ சொற்றிடுவரம்மா–106-

திரைக் கட லரைக்குடு தரைக்குளிசை கொண்டோய்‌ சிறு பர வாதி யர்கள்‌ வீறினை யடக்கும்‌
விரைத்தனி மிழ்த் தொடையு ரத்தணியு நந்நா வீறனென நாம முறு மாறனை யடுத்தே
மரைத்‌ துணையை நேரடி சிரத்திடை புனைந்தே வணங்‌ மிக வேண்‌டிட விணங்கியவன்‌ வந்தங்‌
குரைத்‌திட மறைத் தமிழ்‌ சிரத்தையொடு கேட்டு ளுகந்திட விருப்‌ புள தவந்தனை யொழுக்கும்‌-107–

நந்தம்வள நன்னக ரடைந்திடுதி யென்றே நவின்றிடவு மொப்பரு கவின்றழையுமாற
னந்தமிழ்‌ மறைப்பொரு ளுகந்தினி துரைத்தா னடிக்கினிய வன்பவர்‌ திடுக்கென விழித்தே
சிந்தை தனி லுன்னியுட னிந்தநகர்‌ செல்வான்‌ சிதைவறு கதிர்க்‌ கடவு ளுதயமு னெழுந்தே
நிந்தையறு தண் பொருநல்‌ வந்து புன லாடி நித்திய கடன்களை முடித்துட னெழுந்தே.–108–

செந்தழ னிறத்த பல சந்த மணி மேவித்‌ தினகரனை யொத்திலகு சினகர மடைந்தே
நந்திறைவ னுக்கருள்‌ புரிந்துதவு மாதி நாதனை யிறைஞ்சி வலமேத மிலடைந்தே
யிந்து தவழ்திந்திரிணி மேவலு முகந்தே விருந்தருளு நங்கையி னருந்தவ மெழுந்த வந்தமறு மெந்தைமு னடைந்தனையர்‌ தாமு மப்பரம னொப்பறு மலர்ப் பத மிறைஞ்சா–109–

மாவல நிறத்திலணி கோவலாம்‌ மாதி மாலினை வழுத்து றவே கோலிமுன மொன்றுந்‌
தேவென வுரைத்த பதி கந்தனை வினாவிச்‌ செப்பமோ டளித்தபரி சர்ச்சையிலு மாறன்‌
மேவிய நன்‌ னித்திய வி பூதியொடு லீலா விபூதியிலு முள்ள பல சேதநர்‌ களுய்யக்‌
கோவென விருந்து நனி போதக மெனுஞ் செங்‌ கோலினை நடாத்தி வருகின்றன னுகந்தே–110–

வானவர்கள்‌ சித்தர் பல தானவர்க ணித்தம்‌ வந்தடி பணிந்‌ து மலர்‌ சிந்தியே வழுத்த
நானில மதற்குளுள மானிடர்களெல்லா நாடொறு மெழுந்தபு பலாண்டிசை பயின்றே
தேனுகு மலர்ப் பத முறத் தொழுது நிற்கத்‌ தேவ ரடி யார் நடன கீதமு முழங்கக்‌
கோனென விருந்து தமி ழாரணம்‌ விளங்கக்‌ கொண்டிரு விபூதி புரிகின்றன னுகந்தே–111–

திரு நாதமுனிப் படலம் முற்றும்‌

ஸ்ரீ சடகோப திவ்ய சரித்திரம்‌ முற்றும்‌-


——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading