ஸ்ரீ கலியனுக்கும்‌ ஸ்ரீ கண்ணனுக்கும்‌ 12 வகைகளால் ஓற்றுமை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்–

1-[ஸூர்யத்வாத்‌] ஸ்ரீ விஷ்ணு புராணத்தில்‌ கண்ணபிரானுடைய திருவவதாரத்தைக்‌ கூறுகின்ற பராசரமஹரிஷி கண்ணனவதரித்தானென்று சொல்லவில்லை ; *ததோகிலஜஐக த்பத்மபோதாய அச்யுதபாநுநா, தேவகீபூர்வஸந்த்யாயாம்‌ ஆவிர்ப்பூதம்‌ மஹா த்மநா* என்கிற ச்லோகம்‌ க்ருஷ்ணாவதாரத்தைக்‌ கூறுமது. இதில்‌, தேவகியாகிற பூர்வஸந்தியையிலே க்ருஷ்ணஸூரியன்‌ ஆவிர்ப்பவித்தான்‌ என்றது. இதனால்‌ க்ருஷ்ணன்‌ ஸுூர்யனென்னுமிடம்‌ ஸித்தித்தது. 
கலியனும்‌ ஸூர்யனாகவே பேசப்பட்டிருப்பதை “கலயாமி கலித்‌வம்ஸம்‌ கவிம்‌ லோக திவாகரம்‌” என்கிற அவருடைய ஸ்துதிபத்யத்‌தினால்‌ உணரலாம்‌, ஆக இருவரும்‌ ஸூர்யர்களென்னு மத்தாலே ஸாம்யம்‌.

2-[ஸூசிதத்வாத்‌] ஸூசிப்பிக்கப்பட்டபடியாலே என்பது இதன்‌ பொருள்‌. கண்ணனுடைய அவதாரமும்‌ கலியனுடைய அவதாரமும்‌: இவர்கள்‌ அவதரிப்பதற்கு வெகுநாள்‌ முன்னமே ஸசஃசிப்பிக்கப்‌' பட்டிருந்தது. எங்ஙனே யென்னில்‌ ; கண்ணனுடைய திருத்தாயாரான தேவகிப்பிராட்டி கம்ஸனுக்கு உடன்பிறந்தவள்‌ அக்கம்ஸன்‌- தேவகிக்கு. மிகச்‌ சிறப்பாக விவாஹமஹோத்ஸவத்தை நடத்தி வத்துப்‌ பரமப்ரீதியுடன்‌ தம்பதிகளை ரதத்தில்‌ வீற்றிருக்கச்‌ செய்து அதனைத்‌ தானே ஓட்டிக்கொண்டு போகையில்‌ ஆகாசவாணி யொன்று செவிப்பட்டது! “இத்‌ தேவகியின்‌ எட்டாவது குழந்தையினால்‌ உனக்கு ம்ருத்யு விளையும்‌' என்று, அந்த வாக்கு அப்படியே பலித்தது. இதனால்‌ ஸ்ரீ கிருஷ்ணபகவானுடைய திருவவதாரம்‌
முன்னமே ஸுசிதமாயிற்றென்பது விளங்கிற்று. இது போலவே திருமங்கை யாழ்வாருடைய திருவவதாரமும்‌ முன்னமே ஸூசிதமாகி யுள்ளது. திருவாய்மொழியில்‌ (5-௨-1) “'கலியுங்‌ கெடும்‌ கண்டு கொண்மின்‌” என்கிற பாசுரத்தை ஆகாசவாணி யென்றே கொள்க. -தவறாமல்‌ பலிப்பது ஆகாசவாணி. இந்தப்‌ பாசுரமும்‌ தவறாமல்‌
பலித்திருக்கின்‌றது. ஆசார்யஹ்ருதயத்தில்‌ “கலியுங்‌ கெடும்‌ போலே ஸுசிதம்‌'” என்றவிடத்து வியாக்கியானத்தில்‌ மணவாளமாமுனிகள்‌ -“இவர்‌ தாம்‌ மயர்வற மதிநலம்‌ பெற்றவராகையாலே “கலியுங்‌ கெடும்‌' என்று-திருமங்கையாழ்வார்‌, உடையவர் போல்வார்‌ அவதரித்துக்‌ கலியுக ஸ்வபாவமும்‌ கழியுமென்று மேல்‌ வரும்‌ அம்சத்தை தர்சித்து அருளிச் செய்தாப் போலே” என்று திருவாய்மலர்ந்தருளியுள்ள திவ்ய உக்தி இங்கே அநுஸந்தேயம்‌, கண்ணன்‌ கம்ஸ வதம்‌ செய்தவன்‌ ;இவ் வாழ்வார்‌ கலி புருஷவதம்‌ செய்தவர்‌.

3-[அபஹ்ருதிகரணாத்‌] கண்ணன்‌ கள்வனென்று ப்ரஸித்தி பெற்றதுபோல இவ்வாழ்வாரும்‌ கள்ளரென்று ப்ரஸித்திபெற்றவர்‌. “வெண்ணெய்‌ களவுசெய்தான்‌, பெண்களைக்‌ களவுசெய்தான்‌! என்று ஸ்ரீ க்ருஷ்ண சரித்திரங்களிலே வாசிக்கிறோம்‌. இவருடைய சரித்திரத்‌திலும்‌ திருவரங்கம்‌ பெரியகோயிலில்‌ கோபுர ப்ராகார மண்டபாதி நிர்மாணத்திற்காகப்‌ பலபல களவுகள்‌ செய்த செய்திகளை வாசிக்‌கின்றோம்‌. ஆக இத்தகைய கள்வத்தினாலும்‌ ஸாம்யம்‌.

4-[கோகுலோத்தாரகத்வாத்‌] *ஆயர்பாடிக்கணிவிளக்கே' என்‌றும்‌, “'ஆயர்குலத்தினில்‌ தோன்று மணிவிளக்கை” ' என்றும்‌ சொல்லுகிறபடியே கண்ணன்‌ திருவாய்ப்பாடியில்‌ திருவவதரித்துக்‌ கோகுலத்தை உத்தரிப்பித்தமை பிரஸித்தம்‌, இவ்வாழ்வாரும்‌
கோகுலோத்தாரணம்‌ செய்ததுண்டு; எங்ஙனே யென்னில்‌; *ந்ருபசு;” என்று ஆளவந்தாரும்‌, “வ்ருத்த்யா பசுர்‌ ஈரவபு:” என்று மணவாள மாமுனிகளும்‌ அருளிச்செய்தபடி நாமெல்லாரும்‌ பசுக்களேயன்றோ.
“ஜ்ஞாநறேற ஹீந : பசுபிஸ்‌ ஸமா௩ :”” என்றும்‌ ப்ரஸித்தமாகவுள்ளது.
ஞானமும்‌ நன்னடத்தையும்‌ ஒன்றுமின்றிக்கே யிருப்பதனால்‌ கோக்களா யிருக்கின்ற நம்முடைய குலத்திலே ஆழ்வார்‌ வந்து அவதரித்து உத்தாரகராயினர்‌.

5-[பத்தத்வாத்‌] கண்ணன்‌ “மத்துறு கடை வெண்ணெய்‌ களவினிலுரவிடையாப்‌ புண்டு” என்றும்‌ “கண்ணிக்‌ குறுங்கயிற்றால்‌ கட்டுண்டான்‌?' என்றும்‌ சொல்லுகிறபடியே கட்டுண்டமை ப்ரஸித்‌தம்‌, இவ்வாழ்வாரும்‌, பகவதாராதனத்திற் காட்டிலும்‌ பரமபாவனமான பாகவதாராதனத்தில்‌ ஊன்‌றியிருந்த காலத்தில்‌ தாம்‌ அரசுக்‌குச்‌ செலுத்தவேண்டிய பகுதிப்பொருளுமுட்படச்‌ செல்வம்‌ முழுதையும்‌ செலவிட்டுவர, அச்செய்தியைச்‌ சிலர்‌ சொல்லக்கேட்ட கொற்றவன்‌ கோபங்‌ கொண்டு। இவரை ஒரு தேவாலயத்தில்‌ சிறைவைக்கச்‌ செய்தனனென்பது இவ்வாழ்வாருடைய சரித்திரத்தில்‌ பிரஸித்தம்‌. -ஆக, கட்டுண்டமையினால்‌ இருவர்க்கும்‌ ஸாம்யம்‌.

6-[சாஸ்த்ரதத்வாத்‌] சேதநர்களுக்கு உஜ்ஜீவநோபாயமான சரஸ்‌திரத்தைக்‌ கொடுத்ததனாலே என்று பொருள்‌. கண்ணபிரான்‌ “அறிவினால்‌ குறைவில்லா அகல்ஞாலத்தவரறிய, நெறியெல்லா மெடுத்துரைத்த நிறைஞானத்‌ தொருமுர்‌த்தி என்கிறபடியே-ஸகலார்த்தப்ரகாசகமாய்‌ ஸகலசேதரோஜ்ஜீவரஸாதனமான கீதா சாஸ்த்‌ரத்தை யருளிச்செய்தான்‌. திருமங்கையாழ்வாரும்‌ “நெஞ்சுக்கிருள்‌ கடி திபம்‌ அடங்கா நெடும் பிறவி நஞ்சுக்கு நல்லவமுதம்‌, தமிழ நன்னூல்‌ துறைகளஞ்சுக் கிலக்கிய மாரண சாரம்‌, பர சமயப் பஞ்சுக்‌ கனலின்‌ பொறி பரகாலன்‌ பனுவல்களே! என்கிறபடியே கீதா சாஸ்த்ரத்திற்காட்டிலும்‌ பரமோத்க்ருஷ்டமான திவ்யப்ரபந்த மஹா
சாஸ்த்ரத்தை யுபகரித்தருளினார்‌. கண்ணன்‌ தந்த சாஸ்திரத்தை *கீதோப நிஷத்து” என்னுமாபோலே இதையும்‌ “பொங்கு புகழ்‌ மங்கையர்கோனிந்த மறையாயிரம்‌” என்பர்கள்‌. : ஆக, சாஸ்த்ர ப்ரதாநத்தாலே இருவர்க்கும்‌ ஸாம்யம்‌ பொருந்தும்‌.

7-படுஜநஸஹயோகாத்‌ -கண்ணபிரான்‌ “ தன்னேராயிரம்‌ பிள்ளைகளோடு தளர்நடையிட்டுவருவான்‌?” என்கிறபடியே 'கொந்தளமாக்கிப்‌ பரக்கழித்துக்‌ குறும்பு செய்வானோர்மகனான தான்‌ செய்யும்‌ திமைகளுக்குத்‌ துணைவராகப்‌ பல சதுரர்களை உடன்‌ கொண்டிருக்‌தான்‌. திருமங்கையாழ்வாரும்‌, நீர்மேல்‌ நடப்பான்‌, நிழலிலொதுங்குவான்‌, தாளூதுவான்‌, தோலாவழக்கன்‌ முதலான சதுரர்களைத்‌
தமது செய்கைகளுக்குத்‌ துணைவராகக்‌ கொண்டிருந்தார்‌.

8-லக்ஷ்மீபதித்வாத்‌ -கண்ணபிரான்‌ ஸாக்ஷாத்‌ நாராயணமூர்த்தி யாதலால்‌ லக்ஷ்மீபதியாவன்‌. திருமங்கையாழ்வாரும்‌ லக்ஷமீபதி யாவர்‌. எங்ஙனே யென்னில்‌ : இவர்‌ வளர்ந்து வருகையில்‌ அற்‌மாட்டில்‌ அண்ணன்கோயில்‌ என்று வழங்குகின்‌ற திருவெள்ளக்குளமென்னும்‌ திருப்பதியில்‌ மிகச்‌ சிறர்ததொரு தாமரைப்‌ பொய்கையில்‌
ீதவலோகத்து அப்ஸர ஸ்த்ரீகள்‌ பலர்‌ வந்து ஜலக்ரிடைசெய்து செல்ல, அவர்களுள்‌ திருமாமகளென்பாள்‌ தன்‌ இச்சையால்‌ தெய்வ வடிவத்தைவிட்டுமானுடவடிவங்கொண்டு தனியே குழுதமலர்‌ கொய்து நின்றாளாக, அங்கு அநுஷ்டாஈத்திற்காக வந்த ஒரு
வைஷ்ணவ வைத்யன்‌ அவளைக்‌ கண்டு செய்தி விசாரிக்க, அவள்‌ என்னோடு கூடவந்த மாதர்கள்‌ என்னைவிட்டுப்‌ போய்விட்டார்கள்‌, தனியிருந்து அலைகின்ற என்னை நீர்‌ பாதுகாத்தருளவேணும்‌” என்று வேண்டிக்கொள்ள, மலடனான அம்மருத்துவன்‌ மகிழ்ச்சியோடு அதற்கு உடன்பட்டு அம்மகளைத்‌ தன்‌ மாளிகைக்கு அழைத்துப்‌ போய்‌ மனையாள்‌ வசம்‌. ஒப்பித்து, குமுதமலர்‌ கொண்டு நின்றது
காரணமாகக்‌ குமுதவல்லியென்று அப்பெண்ணுக்கு நாமமிட்டு வளர்த்து வருகையில்‌ அக்கன்னிகைக்கு விவாஹத்துக்குரிய, பிராயம்‌ வந்தவளவிலே அவளை வளர்க்கிற அந்த வைத்தியனுக்கு “மஹா குணவதியான இப்‌ பெண்ணுக்கு ஏற்ற கணவன்‌ உலகத்திலுளனோ' என்ற கவலையுண்டாக, அப்பொழுது அவளுடைய ரூப
லாவண்ய ஸெளந்தரியங்களையும்‌ குணாதிசயங்களையும்‌ சாரர்கள்‌ திருமங்கை மன்னனிடம்‌ கொண்டாடிக்‌ கூற, உடனே அவர்‌ அங்கு வந்து அந்த வைத்தியனிருக்கும்‌ வீட்டிலே புக்கு அவனோடு ஸம்பாஷை செய்து அப்பெண்ணின்‌ வரலாற்றை வினாவி அதைத்‌ தந்தையார்வாயில்‌ அறிந்த வளவில்‌ “இவளை எனக்குத்‌ தாரைவார்த்துக்‌
கொடுக்கவேணும்‌” என்று அவரை வணங்கிக்கேட்டார்‌, அப்போது குமுதவல்லி குறுக்கிட்டு **திருவிலச்சினை திருமண்காப்பு முதலிய பஞ்ச ஸம்ஸ்காரமுடைய ஒரு ஸ்ரீ வைஷ்ணவர்க்கேயன்றிப்‌ பிறர்க்கு வாழ்க்கைப்பட மாட்டேன்‌” என்று தன்‌ உறுதியைத்‌ தெரிவித்தாள்‌. -அதுகேட்ட திருமங்கை மன்னன்‌ உடன்‌ திருநறையூர்க்குச்‌ சென்று அங்கு எழுந்தருளியுள்ள நம்பி என்னு மெம்பெருமானுடைய திருமுன்‌
பேஙின்று பிரார்த்தித்து அப்பிரானிடத்தில்‌ திருவிலச்சினை பெற்றுப்‌ பன்னிரண்டு திருமண்‌ காப்புகளும்‌ சாத்திக்‌ கொண்டு விவாஹார்த்தமாக விரைவில்‌ வந்துசேரக்‌ கண்டு மீண்டும்‌ குமுதவல்லி “நீர்‌ ஓராண்டளவும்‌ நித்தியமாக ஆயிரத்தெட்டு ஸ்ரீ வைஷ்ணவர்களை அமுது செய்வித்து அவர்களுடைய ஸ்ரீ பாத தீர்த்தத்தையும்‌ போனகஞ்‌ செய்த சேஷத்தையும்‌ உட்கொண்டாலன்றி உம்மை நான்‌பாணிக்கிரஹணஞ்‌ செய்து கொள்ளமாட்டேன்‌”! என்ன, அவளிடத்‌தில்‌ கொண்ட ஆசையின்‌ கனத்தால்‌ அவர்‌ இவ்வரிய விரதத்தைச்‌ செய்து முடிப்பதற்கும்‌ உடன்பட்டு அங்ஙனமேசெய்வதாகச்‌ சபதஞ்‌ செய்து கொடுக்க, அதன்பின்‌ இருவர்க்கும்‌ திருமணம்‌ நடை பெற்றது. லக்ஷ்மீபதித்வமானது பகவானுக்கு அஸாதாரணமாயிருந்தாலும்‌ லக்ஷ்மியின்‌ பெயரைத்‌ தரித்திருந்த குமுதவல்லித்‌ தாயாருக்குப்‌ பதியென்னுங்‌ காரணத்தினால்‌ ஆழ்வாரும்‌ லக்ஷ்மீபதி யாயினர்‌. ஸ்ரீ வைஷ்ணவலக்ஷ்மிக்குப்‌ பதியென்றுங்‌ கொள்ளலாம்‌.

9-நீலத்வாத்‌ -கண்ணபிரான்‌ “கண்ணனென்னுங்‌ கருந்தெய்வம்‌” என்றும்‌ “கானகமெல்லாக்‌ திரிந்து உன்‌ கரிய திருமேனிவாட” என்றும்‌ சொல்லுகிறபடியே நீலநிறத்தழகார்ந்தவன்‌. திருமங்கை யாழ்வாரோவென்னில்‌ நீலனென்னுக்‌ திருநாமமுடையவர்‌. இராமானுச நூற்றந்தாதியில்‌ “தண்டமிழ்‌ செய்த நீலன்‌ தனக்கு” என்னுமிடத்தில்‌ நீலனென்ற சொல்லால்‌ திருமங்கையாழ்வாரே விவக்ஷிதரென்பதறிக. குருபரம்பராப்ரபாவத்திலு முள்ளதேயிது.

10-நீதிமார்க்கச்யுதிமதிபஜநாத்‌ -கண்ணபிரானுடைய சரித்திரங்‌களை நோக்குமிடத்து “மச்சொடுமாளிகையேறி மாதர்கள்‌ தம்மிடம்‌ புக்குக்‌ கச்சொடுபட்டைக்‌ கிழித்துக்‌ காம்பு துகிலவை கீறி நிச்சலுற்‌ தீமைகள்‌ செய்வாய்‌” என்றும்‌ “பிறர்‌ மக்களை மையன்மை செய்து தோளாலிட்டவரோடு திளைத்து. நீ சொல்லப்படாதன செய்தாய்‌” என்றுமுள்ள பாசுரங்களின்படி கொடிய கடிய சேஷ்டி தங்களைச்‌ செய்த விவன்‌ நீதிநெறியில்‌ நின்றும்‌ நழுவினவனல்லவா என்று நினைப்பதற்கு இலக்காயிருப்பன்‌ கண்ணபிரான்‌. திருமங்கையாழ்‌வாரும்‌ அப்படியேயன்றோ. இத்‌ தன்மையினால்‌ ஒரு ஸாம்யம்‌. நீதி
நெறியில்‌ ஈழுவின தாக நினைக்கலாமத்தனையன்‌றி உண்மையில்‌ இருவரும்‌ நீதிநெறிவழுவாதவர்களே, மது: ச்லோகத்தில்‌ “நீதி மார்க்கச்யுதிமதிபஜநாத்‌” என்றது ச்யுதிமதிவிஷயத்வாத்‌' என்றபடி கண்ணபிரானுடைய நீதிநெறிவழுவாமையை வேதாந்த தேசிகன்‌ யாதவாப்யுதயத்தில்‌ (4-64) “விமோஹரே வல்லவகேஹிநீநாம்‌
நப்ரஹ்மசர்யம்‌ பிபிதே ததீயம்‌, ஸம்பத்ஸ்யதே பரலகஜீவரம்‌ தத்‌ ஸத்யேக யேறைவ ஸதாம்‌. ஸமக்ஷம்‌?
என்னும்‌ ச்லோகத்தினால்‌ தெளிவித்தார்‌. அதாவது,பாரதப்போரில்‌ அச்வத்தாமா பிரயோகித்த அபாண்டவாஸ்த்ரத்தினால்‌ உத்தரையின்‌ கருப்பிண்டம்‌ கரிக்கட்டையாக, அப்போது கண்ணபிரான்‌ “யதி மே ப்ரஹ்மசர்யம்‌ ஸ்யாத்‌ ஸத்‌
யஞ்ச மயி திஷ்டதி, அவ்யாஹதம்‌ மமைச்வர்மம்‌ த ஜீவது பாலக!
” (நான்‌ ப்ரஹ்மசர்யமும்‌ ஸத்யமும்‌ வழுவா தவனாயிருந்தேனாகில்‌ இது உயிர்பெற்றெழுக) என்று பலருமறிய ப்ரதிஜ்ஞை செய்து நிறைவேற்றப்பெற்ற கதையினால்‌ கண்ணன்‌ நீதிநெறிவமுவாதவனென்‌பது விளங்கிற்று, திருமங்கையாழ்வார்‌ நீதிறெறிவமுவா தவரென்‌பதை பட்டர்‌ ஸ்ரீ ரங்கராஜஸ்‌தவதத்தில்‌ “ஜிதபாஹ்யஜிநா தி மணிப்ரதிமா அபி வைதிகயந்நிவ ரங்கபுரே, மணிமண்டபவப்ரகணாக்‌ வித்தே பரகாலகவி: ப்ரணமேமஹி தாக்‌” என்னும்‌ ச்லோக ரத்நத்தினால்‌ வெளியிட்டருளினர்‌.

11-[அந்ததச்ச அவதாராத்‌] பகவானது விபவாவதாரங்களில்‌ க்ருஷ்ணாவதாரமே முடிவானது. கல்கியவதாரம்‌ பவிஷ்யத்தென்‌கிறார்கள்‌. அது வந்தபோது பார்த்துக் கொள்வோம்‌. இதுகாறும்‌ முடிந்துள்ள அவதாரம்‌ க்‌ருஷ்ணாவதாரமே. திருமங்கையாழ்வாரும்‌ ஆழ்வார்களுக்குள்‌ கடைப்பட்டவர்‌. “பொய்கையார்‌ பூதத்தார்‌
பேயார்‌ புகழ்‌ மழிசையையனருள் மாறன்‌ சேரலர்கோன்‌, துய்யபட்ட நாதன்‌ அன்பர்தாள்தூளி நற்பாணன்‌ *நன்கலியன்‌', ஈதிவர்தோற்‌ றத்து அடைவாமிங்கு”
என்ற உபதேசரத்தினமாலைப்‌ பாசுரமுங்‌ காண்க. ஆக இருவரும்‌ சரமாவதாரபூதர்‌ என்பதனால்‌ ஸாம்யம்‌ பெற்றனர்‌.

12-சத்ருத்வம்ஸோத்படத்வாத்‌ -கண்ணபிரான்‌ '*தேனுகன்‌ பிலம்‌பன்‌ காளியனென்னும்‌ தீப்பப்பூடுகளடங்கவுழக்கி” என்றும்‌ “மலை புரைதோள்‌ மன்னவரும்‌ மாரதரும்‌ மற்றும்‌ பலர்‌ குலைய, நூற்றுவரும்‌ பட்டழிய” என்றும்‌ சொல்லுகிறபடியே பகைவர்களை யெல்லாம்‌ வேரோடு களைந்கொழிப்பதில்‌ பேர்‌ பெற்றவன்‌. ஆழ்வாரும்‌ “அருள்‌ மாரி அரட்டமுக்கி அடையார்‌ சீயம்‌” என்றும்‌ '*ஒற்றலர்‌ தங்களை வெல்லு மாடல்மாவலவன்‌ கலிகன்றி” என்றும்‌ தாமே யருளிச்‌ செய்தபடியே புறமதத்தவர்களாகிற பகைவர்களைக்‌ களைக்தொழித்து இதனாலேயே பரகாலனென்று பேர்பெற்றவர்‌.

ஆக இப்பன்னிரண்டு படிகளாலே கண்ணனுக்கும்‌ கலியனுக்கும்‌ ஒற்றுமை நிர்வஹிக்கப்‌ பட்ட தாயிற்று. இந்த 12 அர்த்தங்களைக்‌ காட்டுவதொரு சுலோகம்‌--
ஸூர்யத்வாத்‌ ஸூசிதத்வாத்‌ அபஹ்ருதிகரணாத்‌ கோகுலோத்தாரகத்வாத்‌
பத்தத்வாத்‌ சாஸ்த்ரதத்வாத்படுஜஸஹயோகாச்ச லக்ஷ்மீபதித்வாத்‌
நீலத்வாத்‌ நீதிமார்க்கச்யுதி மதிபஜநாத்‌ அந்ததச்சாவதாராத்‌
சத்ருத்வம்ஸோத்படத்வாத்‌ கலிரிபுமுநிராட்‌ க்ருஷ்ணதுல்யோ விபாதி.


———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading