ஸ்ரீ க்ருஷ்ணாய பரப்ரம்ஹணே நமஹ–
ப்ரமாணம் லக்ஷ்மண முநி: ப்ரதிக்ருஹ்யாத மாமகம்
ப்ரஸாதயதி யத்ஸூக்தி: ஸ்வாதீந பதிகாம் ஸ்ருதிம்
ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேஸரி
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹரி:
ஸ்ரீ கவிதார்க்கிக ஸிம்ஹஸ்ய ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரஸ்ய
ஸ்ரீமத் வேங்கடநாயகஸ்ய வேதாந்தாசார்யஸ்ய யாதவாப்யுதய காவ்ய க்ருதிஷு
———–
காவ்ய ரத்னம் -என்று தேசிகனே -கவி தார்க்கிக்க ஸிம்ஹம்
கிருஷ்ணனுக்கு ப்ரீதி ஏற்படும் -ஷேம பலன் அளிக்கும் இந்த காவ்யத்தின் இறுதி ஸ்லோகம்
———————————–
யாதவாப்யுதயம் (எட்டாவது ஸகம்)
வஸந்தருது வர்ணநம், வேணுகான வர்ணநம், ராஸக் க்ரீடை : (712 – 832)
1. அத ப்ரஸூநாயுத4 பா4கேத4யாநி ஆரப்3த4 மந்தா3நில சவ்திகாநி மது4ப்ரஸங்கா3ந்
மது4ராணி யூநாம் அநுஷ்ண சீதாந்யப4வந் தி3நாநி(ஸ்ரீ மத் பாகவதம் (10/29/1)
அலமலரை ஆயுதங்கொள் அநங்கனும் தான் களித்திடவே மெல்லெனவே மந்தம் எனும் மாருதமும் வீசிடவே
இளையவரும் மது தன்னை இனிதருந்தி மகிழ்ந்திடவே வெம்மையில் பனியுமிலா வசந்த காலம் வந்ததுவே !
சில காலம் சென்ற பிறகு புஷ்பங்கைள ஆயுதமாக உடைய மன்மதனுக்கு களிப்பைத் தருவதும் மந்த மாருதத்தையும்
நடுத் தரமான காற்றையுமே தருகின்றதும் யுவதிகள் களிக்கும் மதுவை அருந்தி மகிழ்ந்திடவும் இனியனவும்,
உஷ்ணம் குளி இரண்டுமற்ற நாட்கள் ஏற்பட்டது. அதாவது இனிய வசந்த ருது பிறந்தது.
2. அநேக ரூபை : ஸ்வயம் ஏகரூப: காலாத்மகம் ரூபம் அகாலகால்ய: ருதுப்ரேப4ைத அநுபூ4யே ரேம ராமாஸேகா ராமம் அநுப்ரயாத:
ஓர் உருவத்தை தானே யதன் உயர் நலமாய்க் கண்டவனை மாறுகின்ற காலத்தால் மாற்றிடவே இயலாத
ஆரிளைமக் கோபியரின் அன்பனாகும் கண்ணன் தான் மாறுகின்ற பருவங்கைள மகிழ்வுற்றுத் துய்த்தாேனே !
காலத்தால் விரட்டப்படாத, மாறுதல் இல்லாத கண்ணன் கோப ஸ்த்ரீ களைச் சேர்த்துக் கொண்டு பலராமனுக்கும் பணிந்தவனாய்
ஒரே விதமாய் மாறுபாடின்றியே இருந்து கொண்டு மாறி மாறிப் பலவகை யான ருதுக்களாலே காலெமன்கிற தன் உடலையும் அனுபவித்து இனியனான்.
3. ஹேமந்த பூவ: சிஷிராந்திமச்ச சரச்ச ஸம்பூ4ய வஸந்தவ்ருத்யா சைந: சைந:
சாந்திம் உபே யிவாம்ஸ: தத்வைப4வாத் தந்மயதாம் இவாபு:
பனிதனையும் குளிரினையும் படைக்கின்ற பருவமுமே தணியாத மழை பொழியும் சரதமெனும் காலமுமே
தனித் தனியாம் தம் தன்மை தவித்திட்டு மெதுவாக இனிதான வசந்தருது எனவாக ஆயினவே !
ஹேமந்தமும்(பனியும்) சிசிரமும் (குளிரும்) அவற்றைப் போல முன்னும் பின்னும் ஆனவைகளும் சரத் காலமும்
தங்களிடமுள்ள கொடிய பனி, மழை , பனி முதலிய வாதைதளைச் சிறிது சிறிதாக விட்டு வஸந்த ருதுவின்
வகையிலே நின்று வஸந்தம் என்று சொல்லக் கூடியதாகி எல்லா ருதுக்களுமே இனியவை யாகின.
4. ப்ராேயண பஞ்சாயுத4 பஞ்சவக்த்ர: பலாச கோசாக்ருதிம் ஆத3தா3ைந: மனஸ்விந6ம்
ஆநகேஜந்த்3ர பே4தாத் ஸேஷாணிதை : பாணிருஹை : சகாேச
முருக்கமர செம் மலர் கள் முகிழ்த்தனவே எங்கிலுமே பெரிதான ஊடலினால் பிரிவுற்ற கன்னியரின்
செருக்கென்னும் களிறினையே செறுத்திட்ட குருதியுடன் திறல் மிகுந்த மதன் எனும் அரியுகிரை ஒத்தனவே !
முருக்க மரங்களில் எங்கும் சிவந்த மொட்டுக்கைளக் காணும் போது ப்ரணய கலஹம் செய்து விலகி யிருக்கும்
பெண் மணிகளின் அஹங்காரம் என்னும் களிறுகளைக் கிழித்து வரும் மன்மதனாகிற சிங்கத்தின் நகங்களே
அந்த ரத்தத்தால் சிவந்திருக்கின்றனேவா எனும்படியாக இருந்தது.
5. ஜக3ந்தி புண்ட்ரேக்ஷு: சராஸேநந ப்ரஸூந பாணே அபி ஜேதுமிச்சோ :
அஸூசயந் ஆத்மபு4வ: ஸ்வை நாத: அவ்யாஹதாம் ஆசிஷம் அந்யபுஷ்டா:
கரும்பான வில்லோடும் கடிமலராம் கணை யோடும் பெரியவையாம் உலகங்கைள வென்றியாேல
கொண்டிடவே விரும்புகின்ற காமந்தனை வாழ்த்திடவே உற்றனவே கருங்குயில்கள் தம்முைடய கனிவான குரலாேல!
புண்ட்ரம் என்ற கரும்பை வில்லாகவும் பஞ்சபுஷ்பங்கைள (மல்லிகை , அசோகம், தாமரை , நீலோத் பலம் ,மா) அம்புகளாகவும் கொண்டு
உலகங்களை வெல்ல விரும்பிய மன்மதனுக்குக் குயில்கள் தங்களுடைய பஞ்சம ஸ்வரத்தினாலே தடை யின்றி ஆசியளித்து வந்தன.
6. வராங்க3நா வக்த்ர பதா3ம்பு3ஜாநாம் ஸ்வாபா4விகீம் சவ்ரப4 ராக3லக்ஷ்மீம் ப்ரபித்ஸமாெநௗ
ப்ரஸைவஸ் தத3ஹம் த்3வேதா4 த்3ருமவ் தோ3ஹத3ம் அந்வபூ4தாம்
மகளிர் தம் முக மலரும் அடி மலரும் விரும்பிட்ட வகுள தருவும் அசோகமும் வனிதைகள் தாமாக உகுக்கின்ற எச்சிலையும்அடிமலரின் வைப்புகளையும் மிகுந்ததான விருப்பத்துடன் பெற்றிடவே ஆயினவே !
அசோக மரம் மற்றும் மகிழ மரம்
மகிழம், அசோகம் என்ற இருவகையான மரங்களும் சிறந்த மங்கைகளின் முக மலருடையவும் அடித் தாமரையினுைடயவும்
வாசனையையும் செந்நிறத்தையையும் தம் புஷ்பங்களிலே பெறுதற்காக அவைகளுடைய உமிழ் நீரையும் அடிவைப்பையும் பெறுகின்றனவாயின.
(மகிழ மரம் மங்கைகளின் வாய் நீர் பட்டு மணம் மிக்க பூக்கைளப் பெறும்.
அசோகம் அவர்கள் காலடி பட்டு நிறமான பூக்களைப் பூக்கும்.)
(காளிதாசன் தன் மேக தூதத்திலே யக்ஷன் தன் காதலியைப் பார்த்து கூறும் போது
“உன்னுடைய தாம்பூல எச்சிலை இந்த மகிழமரத்தில் உமிழ்ந்தால் மட்டுமே இது பூக்கும்.
உன் காலால் எட்டி உதைத்தால் தான் இந்த அசோகம் துளிக்கும்” என்று குறிப்பிடுகிறார் .)
7. தீக்ஷ்ணா ருணாக்3ராண்ய சிரப்ரேராஹாத் சகோசிர சம்பக குட்மலாநி த3த்தாநி
காேமாத்ஸவ மங்க3லாதம் தீபாங்குராண தீவ வஸந்த லக்ஷ்ம்யா
அம்பு போலும் கூர் முனைகள் அளவறவே பெற்றனவாம் சம்பகப்பூ மொக்குகளும் சட்டெனவே முகிழ்த்தனவே
மன்மதனின் விழாவிலே வசந்தம் எனும் ருதுவே தான் அன்போடு ஏற்றிட்ட அணிவிளக்குகள் ஆயினவே!
அப்போதே உண்டாகிறபடியால் கூர்மையாய் சிவந்த முனைகளை யுடையனவான செண்பக மொட்டுக்கள்
வஸந்த லக்ஷ்மியினாலே காமனின் மேஹாத்ஸவத்திற்கு ஏற்றப் பெற்ற தீபங்கைளப் போல் ப்ரகாசித்தன.
8. முக்தாபகா3 மக்3ந ஸமுத்திதாத்மா பூ4யோ ப4ஜந் புஷ்பரேஜாபிஷேகம் சசார மந்த3ம்
மலயாத்திர வாத: சேதா பு4ேவா த்3ருப்த இவெளே பவாஹ்ய:
பொதிகையிலே பிறந்திட்ட புத்தாமிர பரணி யெனும் நதியினிலே குளித்து எழுந்த தென்றல் எனும் மாருதமும்
புதுமலரின் பொடிகளாலே பரவலுறப் பெற்றிட்டு மதக்களிறு அதனைப் போலே மெள்ள மெள்ள உலவிடுமே !
முத்தாறு எனப்படும் தாமிரபரணி நதியினிலே மூழ்கி எழுந்த மலய மலையின் மந்த மாருதமானது மீண்டும்
தம் உருவில் எங்கும் பூத்தூள்கள் இறைக்கப் பெற்றதாய் மன்மதனின் மதம் உந்தும் யானையைப் போலே
மெள்ளத் திரியலாயிற்று.
9. புஷ்பேஷு ஸம்யோக3 வியோக3வ்ருத்த்யா க்ரமாத் ப4ஜந்த6 நதிம் உந்நதீம் ச
வநாந்தேர ஷட்பத பங்க்தி ஆஸீத் மஞ்ஜுஸ்வநா மந்மதசா பவ்ம
மன்மதனின் வில்லிலுடைய நாணைப் போல் விளங்குகின்ற வண்டினத்தின் வரிசைகளும்
வனத்தினிலே திரிந்தனவாய் இன்னிசையை முரல்வனவாய் எழில் மலரில் அமர்ந்திடலும் உந்திடலும்
காமம்தான் உறுகின்ற மாற்றங்களே !
மன்மதனின் வில்லுக்கு நாண் கயிறு போலிருக்கும் வண்டுகளின் வரிசையானது காட்டினுள் அழகாக
ரீங்காரம் செய்து கொண்டு புஷ்பங்களில் அமர்ந்த போது வணக்கத்தையும் வெளிக் கிளம்பும் போது நிமிர் தலையும்
பெற்று காமவிகாரத்திற்கு காரணமாயிற்று,
10. வஸந்த க்லுப்தாந் மத3நஸ்ய பா3ணாந் ஆந்தோ 3லயந் நூநம் அநோ கேஹஷு தி3ேநதி3ேந
த3க்ஷிண மாதரிஷ்வா க3தாக3தாப்4யாம் க3ணயாம் சகார
தினந்தினமே வசந்தம் தான் தோற்றிடவே செய்கின்ற வனமலரின் கணைகளையே வருடுதலால் அசைத்திட்டு
அண்மையிலேயே வீசிட்டு ஆற்றுகின்ற தென்றல் தான் கணக்கிட்டே எண்ணுகின்ற கருத்தினையே உடையதுவோ ?
அல்லது மதனனுடைக் கணைகள் எனும் மலர்கள் தாமே வசந்தமுமே நிதம் நிதமே மரங்களிலே சிருட்டித்து வைத்திடுமே!
பொதிகையிலே பிறந்திட்ட தென்றலுமே அவற்றை எல்லாம் அசைத்து ஆட்டி எண்ணிட்டு அளவிடுமாப் போன்றுளதே !
தென்றலானது ஒவ்வொரு நாளும் வஸந்த ருதுவினால் மன்மதன் மரங்களிலே படைத்து வைக்கப்படும்
வஸந்த அம்புகளை (மொட்டுக்கைள) அசைகின்ற தாக்கி இங்குமங்கும் வீசுகின்றதாய் சரிவர அவற்றை எண்ணி வருவது போலிருந்தது.
11. ஆகூ 4ண்யமாநை : அபி4 தோ நப4ஸ்வாந் காந்தை : ப்ரதீபை இவ கணிகாரை :
வந ஸ்ரியோ யா மாத4வ ஸங்க3மாஹம் மங்க3ல்ய நீராஜநம் ஆசசார!
வசந்த கால மணமகனும் வனமங்கை திரு தனக்கும் இசைந்ததொரு திருமணமாம்
இனிதான விழாவினிலே கணிகையாம் பூக்களையே கவின் மிகுந்த தீபமாக்கி ஆரத்தியை இட்டிடுமே அங்குற்ற தென்றலுமே !
மணம் மிகுந்த தென்றலானது வனத்தில் நான்கு பக்கங்களிலும் பூத்துக் குலுங்குகின்ற கணிகாரப் பூக்களை (கொன்றை மலர்கள்)
அசைக்கின்றதாக்கி வஸந்த ருதுவுக்கும் வன லக்ஷ்மிக்கும் திருமணத்திகு ஏற்ப மங்கள ஹாரத்தி செய்வது போலிருந்தது.
12. ப்ரஸூந ஹாஸாத4ர பல்லவாநாம் கிஞ்ஜல்க ரோமாஞ்ச ஜுஷாம் அபு4ங்க்த
மந்தா3நிலை ஆஹிதேவபதூ2நாம் காந்திம் வஸந்தோ வந வல்லரணாம்
அலர்ந்திட்ட மலர்கள் எலாம் அழகூட்டும் புன்னகையே தளிர்கள் எலாம் அதரங்களாம் நறுந்தாதுப் பொடிகளே தாம்
புளகமாகத் தோன்றிடவே மாருதேம தழுவுகின்ற மலர்க் கொடிகள் தமை எல்லாம் வசந்தம் தான் களித்திடுமே !
பூத்த பூக்களே புன்முறுவல்! பூந்தளிர்கள் அதரங்கள்! பூந்தாதுக்களாகிய மகரந்தம் மயிர்க் கூச்செறிதல்.
இவ்வாறு காட்டுக் கொடிகளின் அழகை வசந்த ருதுவாகிய புருஷன் அனுபவிப்பதாயிற்று.
13. விஹார யோக்3யாம் அத வீக்ஷ்ய வந்யாம் ரமாபதிம் ராமஸக2ம் விசந்தம் நப4ஸ்சைர:
ஸாகம் அநோக ஹாஸ்தம் நாதம் ப்ரஸூேநாமிப4 அப்4யஷிஞ்சந்!
விளையாடும் இடமென்றே வனங்களையே கண்டவராய் பலராமன் உடனோடு புகுந்திட்ட
எம்பிரான் மேல் மலர் மழையைப் பொழிந்தனவே
மரங்களுமே அங்கு எல்லாம் தெளி வானில் தேவர்களும் சேர்ந்தனரே அவ்வாறே !
காடுகள் விளையாடுவதற்குரிய இடமென்றுணர்ந்த எம்பெருமான் கண்ணபிரான் பலராமேனாடு அங்கு
புகும் போது மரங்கள் எல்லாம் மேலிருந்து புஷ்ப வர்ஷம் செய்தன.
வானத்தினின்று தேவர்களும் அதையே செய்தனர் .
14. புஷ்பாகேரண ப்ரதிபந்ந சே (ஷோ )ப4ம் ப்3ருந்தா3வநம் நந்தி3த கோ3ப ப்3ருந்த3ம்
ப்ரத3ஷயந் ப்ராபித சேத4நுவத்ஸம் ராமநுஜோ ராமம் இத3ம் ப3பா4ஷே
பூக்களினால் பொலிவுற்ற விருந்தாவனம் தனை நன்கே பார்க்கவுமே களித்தவராய் பாலகராம்
கோவலரே காட்டிடையே செலுத்திடவே கறவைகளை கன்றுகளை மாதவேன உரைத்தனனே ராமனிடம் இவ்வாறே !
வஸந்த ருதுவினால் எங்கும் பூத்து அழகாய் இடையர்களின் கூட்டத்திற்குக் களிப்பை அளிக்கின்ற
ப்ருந்தா வனத்தை பசுக்களையும் கன்றுகளையும் உள்ளே புகுவித்து காண்பித்து கண்ணபிரான் பலராமனுடன்
பின் வருமாறு பகர்ந்தருளினான். (இது முதல் 42வது ஸ்லோகம் வரை கண்ணன் ப்ருந்தாவனத்தின் அழகை விளக்குதல்)
15. மேநாபு4வோ மூத இவாவலேபம் மாந்யம் மநஸ்காரம் இவ த்வதீயம் சிரம்
த்வயா ஸேவ்யம் இஹாய மந்யே சித்ரம் வநம் சைத்ரரதாபி4 நந்த்4யம்
மதனன் தன் இறுமாப்பே வடிவெடுத்தே , உம்முடைய இதயங்கொள் களிப்பின் தன் உருவாகி,
திகழ்கின்ற அதிசயமாம் வனமிதுவோ அளகையினும் சிறந்ததுவே வெகு நாட்கள் போகம்
எல்லாம் விளைத்திடுமே உந்தனுக்கே !
அண்ணா! மன்மதனுடைய கர்வமே உருவெடுத்தாற்போலவும்,
உமது மதிப்பிற்குரிய மனப்போக்கு போலவும் ஆச்சர்யமாய் சைத்ரரதம் என்ற குபேரனின் உத்யானவனத்தினும் மேம்பட்டதான
இந்த வனமானது உமக்கு வெகுநாள் போகத்திற்குரியதாகுமென நினைனக்கிறேன்.
16. அமாநுஷ ப்ராப்யம் அரண்யம் ஏதத் ப்ராப்தஸ்ய தே பாத3ரஜ: ப்ரபா4வாத்
ஸத்த்வோ பபந்நா ந ப4ஜந்தி ஸ்த்த்வா: சா(ஷா)ந்தாசயா: சாஷ்வதிகம் விரோத4ம்
மானிடரே புகுந்திடவே முடியாத வனமிதிலே தேனூறும் உம்முடைய திருவடியின் வைப்பு தன்னால்
கானுள்ள விலங்குகளே கொடியதாம் பகை எல்லாம் போனதுவாய் குளிர்ந்திட்ட மனந்தன்னை உற்றிடுமே !
இதுவரையில் மனிதர்கள் உட்புகவாகாத இக் கானகத்திலே வந்துள்ள உமது பாததூளியின் பெருமை யினாலே
விசேஷ பலமுள்ள துஷ்ட ப்ராணிகளும் மனதில் காம குரோதங்கைள விட்டு இயற்கையான ஜாதிப் பகையையும் விட்டிருக்கின்றன.
17. அசிந்த்யபூ4ம்ந: தவ ஸந்நிதா4நாத் அந்யோந்ய ஜாத6ய த3சாம் த3தா4நா:
ஸிம்ஹ6 வசாஸ்தந்ய விதோ 3 ப4ஜந்தே ஸுப்4ராத்ருதாம் கேஸரி த3ந்தி போதா:
அரிதாகும் நினைத்திடவே உம்முடைய மேன்மை தானே அரியினுடைக் குழவிக்கே ஆனை தானே பால் தருமே அரியிடமே
பால் குடிக்கும் ஆனை யுடை மகவே தான் உரிமை யுறும் அவை தாமே உடன்பிறப்பே உற்றவே போல்!
எண்ணமாளா மேன்மை யுடைய உமது சன்னிதானத்திலே ஒவ்வொரு ப்ராணியும் மற்ற ஓரு ப்ராணியின் இனம் போல் ஆகின்றபடியால்
யானைக் குட்டிகள் சிங்கக்குட்டிகள் எல்லாம் பெண் சிங்கம், யானை போன்ற எல்லாவற்றிடமும்
பாலைக் குடிக்கின்றனவாய் ஒன்றுக்கொன்று ஸஹோதரங்களாகின்றன.
18. த்வத3பித ஸ்வாது த்ருணாதி3ந6நாம் த்வத் வம்ச நாதா3ம்ருத பாயிநி நாம் மந்யே
க3வாம் வத்ஸ க3ணாவ்ருதாநாம் விஷ்வக்3வநம் விச்ரம யோக்3யம் ஏதத்
நீ தந்திடும் இன் புல்லே தின்றடுமே உன் குழலின் கீதத்தின் அமுதத்தினைக் களிப்புடனே பருகிடுமே
ஆநிரைகள் கன்றுகளுடன் அண்டிேய தான் களைப்பறவே ஏதுவாக இவ் வனமே ஏற்றதாகும் உந்தனுக்கே !
உம்மால் அளிக்கப்படுகின்ற இனிய புற்களை உண்ணுகின்றனவும் உமது புல்லாங்குழல் இசை யமுதத்தினைப் பருகுகின்றனவும்
கன்றுகேளாடு கூடியனவுமான பசுக்களுக்கு இவ் வனமானது எங்கும் தங்கிக் களைப்பாற பாங்காக அமைந்துள்ளது.
ஆகை யாலே இது உனக்கும் இஷ்டமானதாகும்.
19. வஸந்த லக்ஷ்ம்யா இவ வாஸபூ4மிம் ஸங்கல்பபேயநோ இவ சில்பசாலாம் ரதே
இவாராம விபூ4திம் அந்யாம் வந்யாம் இமாம் வேத்மி தேவாபகாயாம்
வசந்தத்தின் எழிலுடைய வாசத்தலம் போன்றதுவும் மதனன் தன் மலர்க் கணைகள் வடிவாக்கும் ஆலை போலும்
ரதியினுடை சேலை தனைப் போன்றதுவும் இவ் வனமே ரசித்து நீரே களித்தாடும் இடம் என்றே எண்ணுவேனே !
வசந்த ருதுவின் அழகான வாசஸ்தலம் போன்றதுவும் மன்மதனுடைய மலர்க் கணைகளை உருவாக்கும்
தொழிற் சாலையைப் போலவும் அவன் மனைவியான ரதி தேவியின் சேலையைப் போலவும் திகழும்
இவ் வனமானது நீ ரசித்து விளையாடும் ராஜக்ருஹம் என்றே நினைக்கிறேன்.
20. வநஸ்த2lயம் மகரந்த3 வைஷ: அதோய கமாந்திகம் ஆத்தஸேகா ப்ரஸ் தவ்தி
பயாப்த பராக3ஜாலா ஸமீஹிதம் ஸஞ்சரேணாத்ஸவம் தே
தண்ணீரைப் பாய்ச்சிடற்குச் சேவகனாய் ஒருவனையும் நண்ணிடவே வேண்டாத நந்தவனம்
இவ்விடமே அந் தேனைப் பெருக்குகின்ற எழில் மலரின் தூளாலே உன்றனுடை மனம் போல உலவிடவே தகுந்ததுவே
இங்குள்ள மரங்களுக்கு நீர் பாய்ச்சும் சேவகன் தேவைப் படாதபடி தேன் பெருக்கினாலேயே
நன்கு நனைக்கப் பெற்ற இந்த வனமானது எங்கும் பூத் தூள்கள் பரவுகிறபடியால்
நீர் விரும்பும் சஞ்சார மேஹாத்ஸவத்தைத் தொடங்க அனுகூலமாகிறது.
ப்ரயுஞ்ஜேத ஸ்வாக3தம் அஞ்ஜஸா ஸோத ப்ராய: சு(ஷு)பா4லாபஜுஷ: சகுந்தா:
வான் தொடும் இம் மரங்கள் உள கூடுகள் தம் இல்லிருந்து போந்திடும் பல் புட்களுடைப் பேச்சு ஓலியே
பேர் இனிமை சேர்ந்திடவே கேட்டிடுமே செவிகளுக்கு பெரு விருந்தாய் நேர்ந்திடுமே
உந்தனுக்கோ நல் வரவாய் அமைந்திடுமே!
வானமளாவிய மரங்களில் கூடுகளில் உள்ள விநோதமாக வெளி வரும் பக்ஷிகள் அழகிய பேச்சுக்கைள
உடையனவாகி ஒழுங்காக உமக்கு நல்வரவு அளிக்கின்றன.
22. வாதாவதூ4தா: தரவ: ஸ்வமூத்4நா ஸந்தாந ஸாந்தாநிக ஸம்பத3ஸ்தே
ப்ராஜ்யை அமீ புஷ்பஃபைலச்ச நூநம் விதந்வேத வந்த3நம் அஹணாம் ச
கற்பகமாம் தருக்களுடைக் குலத் தோன்றல் மரங்கள் எல்லாம் உற்றிடும் இக் காற்றுதனால் ஊசலாடி ஊசலாடி
பற்பலவாம் மலர்களையும் பழங்கைளயும் சொரிந்தனவாய் இட்டிடுமே பூசனையே இனிதாக உந்தனுக்கே !
கற்பக விருட்சத்தின் பரம்பைரையச் சேர்ந்த பெருமையை யுடைய மரங்கள் காற்றினால் தலை அசைக்கப் பட்டிருப்பதால்
புஷ்பங்கைளயும் பழங்கைளயும் சொரிகின்றனவாகி உமக்கு நமஸ்காரத்தையும் ஆராதனத்தையும் செய்கின்றனவாம்.
23. ஆஸ்வாத்4ய சூதாங்குரம் அந்யபுஷ்டா: ப்ராய: ஸ்வைந: பஞ்சமம் உத்3கி3ரந்த:
ஆகாரயந்த6வ வநம் க3தம் த்வாம் தி3வ்யாநமீ த3சயிதும் ப்ரேத3ஷாந்
குயிலினமும் மாமரத்தின் தளிர் களையே களிப்புடனே புசித்திட்ட தன் பின்ன பஞ்சமத்தின் சுரம்
எழுப்பும் வியப்புமிகு வனத்தினிலே வருகின்ற உந்தனுக்கே ஒயிலாக வரவினையே ஓதிடுதல் போன்றதுேவ!
இந்தக் குயில்கள் மாந்தளிரை இனிப்புடன் புசித்து பஞ்சம ஸ்வரமிட்டுக் கூவுகின்றனவாகி வனத்தில் புகுந்த
உம்மைச் சிறந்த இடங்களுக்கு வரும்படி அழைக்கின்றன போலும்.
24. த்வத் பாத3 விந்யாஸ விசேஷ த4ந்யாம் ஆபாத3யிஷ்யந்த இவாத்மதா4த்rம்
ஏநாம் ஸ்வ சாகாக்3ர கரப்ரயுக்தை : ப்ரசிந்வேத பூ4மிருஹா: ப்ரஸூைந:
உமதடிப் பூ வைப்புகளால் உத்தமமாம் பேற்றினையே தமதிடத்தே பெற்றதுவே தருக்கள் தாம்
களித்திட்டே தம்கிளைகள் நுனிகளிலே திரட்சி யுற்ற மலர் களையே சமர்ப்பித்து எங்கிலுமே சீர்ப் பாதை அமைத்திடுமே !
மரங்கள் தங்கள் தாயான பூமிக்கு உமது திருவடி வைப்பினால் விசேஷ பாக்கியத்தை விளைவிப்பதற்காக,
தமது கிளைகளின் முனைகளில் இருந்து சொரியப் பெற்ற பூக்கைள பூமியில் பரவும்படி சேர்க்கின்றன.
25. நிஷாமயந்த்யோ வநதே 3வதாஸ் த்வாம் சேகார ஸம்மோஹந சாருதீப்திம் ப்rதிம் ப்ரபூ4தாம்
பrவாஹ்ய கீ3தை : சீதாச்ருணா சேஷம் இவோத்3வமந்தி (உத்வமந்தி)
அதிசயமாம் உமதுடலின் அழகுதனைக் கண்டதனால் மதி ஒளியே எனவெண்ணி மயங்கிடுமே
சகோரங்கள் அதிகமாகப் பெருக்கெடுத்த அகமகிழ்ச்சி தன்னாலே உதிப்பாேர கண்ண நீரே வனம் வாழும் தேவுகளே !
வனத்தின் தேவதைகள், “சகோரப் பக்ஷிகளுக்கு மோஹம் அளிக்க வல்ல சந்திரனின் நிலவிது” என்று உமது திருமேனியின்
அழகிய ஒளியினைக் கண்டு பரமானந்தமுற்று அதற்குப் போக்குவீடாக பாடல்கைளப் பாடுகின்றனவராய் மிகுந்த ஆனந்தத்தில்
ஓரே அளவாகத் தங்களுடைய ஆனந்தக் கண்ண நீரை வெளியிடுகின்றன.
26. ரஸால ரம்பா4திப4வை : இஹைதா: ப2லத்3ரவை பிஞ்சிலபாச்வ பா4கா3 :
வத்ஸாவகா3ஹ்யா வநராஜிமத்4யே பூணா: ஸுதா4யா இவ பா4ந்தி குல்யா:
கனிந்த நல்ல மா ரஸமும் கதலிகளின் சாறுகளும் நனைத்திட்ட கரையை யுடைய நீர் நிறைந்த ஓடைகளும்
இனிதான அமுதோ டும் ஆறுகளைப் போன்றிடவே கன்றுகள் தாம் எளிதிறங்கிக் களித்திடவே காண்பீரே !
மா, வாழை முதலிய மரங்களில் உண்டான கனிகளின் சாற்றின் பெருக்கால் பிசுக்குற்ற இரண்டு
பக்கங்களையுடைய ஆழமற்ற வாய்க்கால்கள் கன்றுகள் இறங்கப் பாங்காய் உள்ளன.
இவை இந்த வனத்தில் அமுதம் நிறைந்த நீர் நிலைகள் போல உள்ளன.
27. கல்ஹார பத்3மோத்பல காந்திபி4ஸ்தே கடாக்ஷ விஷேப கு3ணம் ப4ஜந்த்ய:
அரண்ய பா4கா3ந் அபி4த: ப்ரவாைஹ: ஆப்யாயயத்யாப இமா: ப்ரஸந்நா:
செங்கழு நீர் வெண்முளை கருங்குவளை மலர்களாலே அங்கங்கு நிறமாறும் ஒளியையுடைய தீர்த்தங்கள்
உங்களுடைய கடை நோக்கின் ஒளி நிறத்தை உற்றனபோல் இங்குள்ள வனத்திற்கு இனிதளிக்கும் வளம் தானே !
இங்குத் தெளிவான தீர்த்தங்கள் செங்கழுநீர் , வெண் தாமரை , கரு நெய்தல் ேபான்ற புஷ்பங்களின் நிறவொளிகளால்
உமது கடாக்ஷத்தின் ஒளிையப் பெற்றது போல் தம் வெள்ளத்தைக் கொண்டு காட்டின் பிரேதசங்களுக்கு வளமளிக்கின்றன.
(பலராமனின் நிறமோ வெண்மை . இந்த வெண்மையான மலர்கள் நிறைறந்திருப்பதால் தெளிவான தீர்த்தங்களும்
வெண்மை நிறம் பெற்றது போல் காட்சியளிக்கின்றன.
பலராமனின் கடாக்ஷத்தைப் பெற்றதால் வெண்மை நிறத்தைப் பெற்றது போல் அவை காட்சி யளிக்கின்றனவாம்)
28. த்வத் வக்த்ர பத்ம ப்ரதிமா ஸஹஸ்ரை : ஸம்ஸ்ருஜ்யமாநவ் ஸபுஷ்கராசவ்
ப்ரபா4வத: க்யாபித புஷ்கரஸ்ரீ: புண்யோத3கா புஷ்கரண தீ விபா4தி
கண்களுக்கு விருந்தாகும் கமலங்கள் நிறைவுற்ற இக் குளமே உம்முடைய இன்முகத் திருத் தாமரையின்
மிக்கவையாம் சாயைகளைப் பெற்றதுவாய்
மேன்மையை யுடைய புட்கரணி எனும் குளத்தின் பெருமை தனைக் கொண்டதுவே !
புனிதமான தீர்த்தம் உடைய இந்த புஷ்கரணியானது ஆயிரக் கணக்கான செந்தாமைரை களை உடையதாய் ,
உமது திருமுகத்தின் நிழல்களை ஆயிரக் கணக்காக பெற்றது போலாகி அதனால் உண்டான பெருமையில்
புஷ்கரம் என்ற ப்ரஸித்தமான திவ்ய தீர்த்தத்தின் மேன்மையைத் தான் பெற்றதாகத் தெரிவிப்பது போலிருக்கிறது.
29. ஸஞ்சாரஜாதை : ச்ரமவாரி வேலைஷ: ஆலக்ஷ்ய முக்தா கு3ணமண்டநம் த்வாம்
வ்யக்தம் நதீ 3 வ 6ஜயதீ6யம் ஆராத் அம்போ4ருஹை ஆஸ்ரித வ 6சி ஹஸ்தை :
காட்டில் எங்கும் உலவுவதன் களைப்பதனால் உம் முகத்தில் நீர்த்துளிகள் முத்தணியாய் விளங்குகின்ற எழில் கண்டு
வாட்டமற அலைக் கரத்தால் தண்டாமரைப் பூ எடுத்தே ஆட்டியபடி உபசரிக்கும் யமுனை யெனும் நதி தானே !
காட்டில் உலாவுகின்ற காரணத்தால் களைப்பினால் வியர்வைத் துளிகள் உண்டாகவே அதன் காரணமாக
முத்து மாலைகளால் அலங்ரிக்கப்பட்டவது போலான உமக்கு இங்கு யமுனை யானது தன் அலைக் கரங்களால்
தாமரைப் பூக்களை எடுத்து நன்கு வீசி உபசாரம் செய்கின்றது.
(காரத் தண் கமலக் கண் என்னும் நெடுங்கயிறு படுத்து என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே
போர்த்த முத்தின் குப்பாயப் புகர் மால் யானைக் கன்றே போல்
வேர்த்து நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே – – நாச்சியார் திருெமாழி–14-4-)
30. ஸஹந்தி வாதா(சீதா) தபவஷ வாதாம் ஸ்தாேயேஷு திஷ்டந்தி ரவி ப்ரதீக்ஷா:
தபஸ்ய தஸ்த்வந் முக காந்தி லோபா4த் பத்மாந் இமாந் பஸ்சிம ராம மந்யே
இரு ராமரைத் தொடரும் இம் மூன்றாம் ராமன் உன்றன் திருமுகத்தின் சுடர் ஓளியைத் தாமும் பெற்ற ஆசையினால்
பெருந் தவமே இயற்றுவன போலும் இந்தத் தாமரைகள் உறும் காற்றும் வெயில் மழையும் உறுதியுடன் பொறுத்திடுமே !
பரசுராமனும் சக்ரவர்த்தி திருமகனுமாக முன் அவதரித்து மூன்றாவது ராமனாகத் தோன்றிய உமது திரு முகத்தின் ஒளிையத்
தாங்களும் பெறவேண்டும் என்று ஆசை கொண்டு இங்குத் தாமைரகள் காற்று, வெயில், மழைச்சாரல், இவற்றைப்
பொறுத்துக் கொண்டு நடு நீரில் நின்று கொண்டு தவம் புரிகின்றன என நினைக்கிறேன்.
31. தரங்கி3ண தீ பி4 : பrரப்4ய முக்த: ஸம்லாபவாந் ப்4ருங்க3ரவை அதீ 4ரை :
ஆப்ருச்சேத நூநம் அத: ப்ரயாந்தம் மந்த6 தீபவந் குந்த3 ஸமீரணஸ் த்வாம்
குந்தமரப் பூ தழுவும் காற்றிங்கே நதி தன்னின் பந்த முறும் அணைப்பினிலே பற்று விட்டு, தீ6ரமில்லா வண்டுகளின் மென் குரல் போல் மெள்ள வீ6சி உங்களிடம் சென்று வர விடை கேட்டு நிற்பதுபோல் தோன்றுதுவே
இங்கே குருக்கத்தி பூவில் பட்டு வீசும் காற்றானது ஆறுகளாலே அணைந்து விடப் பட்டதாகி
தீர மற்ற மெதுவான வண்டுகளின் ஒலிகளால் பேசுவது போலாகி, மெதுவாக வீசி, இங்கிருந்து புறப்படும் உம்மைக் கண்டு கௌரவிப்பது போலிருக்கிறது.
குருக்கத்திக் காற்றானது வசந்தம் வந்ததால் இனி இங்கிருந்து புறப்படுகின்றதாய் இங்குள்ள ஆறுகளால்
அணைந்து “போய் வா” என்று சொல்லி விடப்பட்டதாய் வண்டுகளின் பேச்சைக் கொண்டு உம்மிடம் விடை பெற்றுக் கொள்வது போலிருக்கிறது.
32. மந: ப்ரஸாத3ம் தவ த3சயந்தீ ப்ராேலய ஸங்கா4தநிைப4:
பேயாபி4: சுத்4தா3 நவேந்த தீவர நீல வாஸா சாேயவ தே சைவலிநீ 6 விபா4தி
வெண் பனியின் கூலம் போல் வெள்ளமிடும் தண்ணீரோ வெண்ணிறமாம் உம் மனத்தின் தெளிவுதனைப் பெற்றதுடன்
நன்னீ 6லப் புது மலரை தங்களுடை ஆடை போலத் தன்னிடத்தே பெற்றதாலும் நதி யுங்கள் வடிவுடைத்தே !
பனியின் குவியல் போலுள்ள தண்ணீரில் உமது மனத்தின் தெளிவைப் பிறர் காணும்படி பெற்றும் வெளுப்பாய் புதிய
கரு நெய்தல் பூக்களை நீல வஸ்த்ரம் போல் பெற்றும் இந்த நதியானது உமது உருவம் போல் விளங்குகின்றது.
33. ஸஹ ப்ரயச்சந்தி தவ ப்ரயாபி4: சஞ்சூயமாணா இஹ சக்ரவாகா:
ஆஹூய தா3தார இவாதிதே 2யா: காேலாசிதாம் கஸ்த்வம் இதீ6வ வாசம்
சக்ரவாகப் புட்களும் தம் துணைகளுடன் கூடி நின்று தக்க தொரு விருந்தளிக்கும் சத்துவகள் போல் விளித்தே
இக் காலத்து உகந்தபடி இன் குரலால் அன்புடனே இக் காட்டில் புகும் நீவர் ஆர் எனவே கேட்பனேவா?
சக்ரவாகப் பக்ஷிகள் தங்கள் பேடைகளோடு இங்கு நடமாடுகின்றனவாகி, விருந்தாளி விஷயத்திலே
நல்லோர்களாய் அழைத்து அளிக்கின்றவைகள் போல் காலத்திற்கேற்ப, “தாங்கள் யார் “ என்று
ப்ரியமாகக் கூடி கேட்கின்றன போலிருக்கின்றன.
34. விதூ4தபா3ல வ்யஜநா: ஸ்வபகஷை : சாருஸ்வநாபாதி3த சாடுவாதா3:
அபி3ந்நவணா: ப்ரதியந்த்யமீ த்வாம் ராேஜாபசாைர இவ ராஜஹம்ஸா:
உம்மோடு நிறம் ஓத்த வெண் நாரைக் கூட்டங்கள் தம் சிறகே சாமரமாய் தண்மை யுடன் அசைத் தாட்டி
அங்குரலின் ஒலி யெழுப்பி அன்புரைகள் பேசி நின்று தங்களுக்கோ அரசைனப் போல் தந்திடுமே உபசரிப்பே !
உம்மோடு வணப் பொருத்தம் உடையனவான ராஜ ஹம்ஸங்கள் என்ற அன்னங்கள் தம் சிறகுகளாம்
விசிறியைக் கொண்டு வீசுகின்றனவாய் அழகிய த்வனியினாலே இனிய சமத்காரமான பேச்சும் பேசுகின்றதாகி
உமக்கு ராஜ உபசாரம் செய்கின்றன போலும்.
35. தி3வாபி கோ3வத4ந நிஜராணாம் ஸஞ்சா2தி3தே வ்யோம்நி துஷாரஜாைல:
இஹாதபஸ் சாந்த்3ரமேஸந தா4ம்நா விகல்ப்யேத போ3தி4த பங்கேஜாபி
வானளாவும் கோவர்த்தன வரை யிருந்து விழுகின்ற தேனருவிப் பலவற்றின் திவைலகளால் பகல் தனிலும்
வானம் எலாம் மறைந்ததனால் வெய்யிலுமே கமலங்களை தான் அலர்த்தச் செய்தாலும் நிலவு என்றே மயக்கிடுமே !
கோவர்த்தன மலையின் அருவிகளிலிருந்து கிளந்த நீர்த் திவைலகள் திரண்டு வானத்தைப் பகலிலும்
மறைத்திருப்பதால் இங்கு வெய்யிலானது தாமைரப் பூக்களை மலர்த்துகின்றதாயினும்
சந்திர ஒளியோ என்று ப்ரமிக்க வைக்கிறது.
36. அதகித ப்ராப்தம் அவேக்ஷ்ய காந்த்யா மேக4ங்கரம் மேசகம் அம்ப3ரம்
தே நிநாத3 நிஷ்பாதி3த ஷட்ஜ கீ3தா ந்ருத்யந்த்யமீ ஸாநுஷு நீல கண்டா:
துகிலுமதே தன்னொளியால் நீல நிறம் காட்டுதலால் முகிலன்றோ வந்தது என மயக்கமுறும் மயில்கள் தாம்
திகைப்புடனே கேகாெவன ஷட்ஜமத்தின் ஒலியெழுப்பி மகிழ்ச்சியினால் நடமாடும் மலை தன்னின் தாழ்விடத்தே
உமது நீல ஆடையானது தன்னொளியினாலே முகிலுருவைக் காண்பிக்கின்றபடியால் மேகமே தாம் எதிர் பாராமல் வந்துள்ளெதனக் கண்டு
மயில்கள் கேகா என்று தம் இயற்கையான ஷட்ஜ ஸ்வரத்துடன் தாழ்வரை களிலே ஆடுகின்றன.
37. நதீ 3பி4: ஆரப்3த4 தரங்க3 லாஸ்யம் நாைத3யுதம் நிஜர து3ந்து3பீ4நாம்
கா3யத்3த்விேரப2ம் கி3ரணா த்வத3த்த2ம் ப்ராேயண ஸங்கீ3தம் இஹ ப்ரயுக்தம்
நதிகளிலே அலைகளுமே நர்த்தனத்தைப் புரிதிந்திடவே ததும்பிவிழும் அருவி ஓலி துந்துபியின் கோஷமிட
மதுவருந்தி வண்டுகளே மெல்லிசையைப் பாடிவர புதுக்கலையாம் விருந்துமக்கே படைத்திடுமே மலைதானே !
இம் மலையானது உமக்காக நதிகளின் அலை களைக் கொண்டு ஆட்டத்தையும் மலை யருவிகளின் ஒலியைக் கொண்டு
துந்துபி வாத்யகோஷத்தையும் வண்டுகள் மூலம் பாட்டையும் நடத்தி ஸங்கீர்தநத்தை அமைத்திருக்கிறது என்னலாம்.
38. கலிந்த3ஜாகச்சபு4வாம் ஸகீ2பி4:ப்ரச்சாய வந்யாபி4: அதி4த்யகாபி4: ஸூேத கி3ரி :
ஸூசி(தி)தநந்த3ேநாஸவ் (ஸூசித நந்தன அஸவ்வ) ஸ்வகௌ3கஸாம் ஸ்வைர விஹார வாஞ்சாம்
களிந்தை நதி தன் மருங்கின் கரைகளிலும் தோழிகள் போல் குளிச்சி தரும் சோலையுடனே கோவர்த்தன வரையிடமே
களிப்பு தரும் நந்தனமாய்க் காட்சி தர விண்ணவர்க்கே விளையாடும் விருப்பத்தை விளைவிக்கும் இம்மலையே !
யமுைனயின் கரை ஓரங்கேளாடு தோழைமை கொண்ட (அவற்றின் அருகிலே உள்ள) குளிர்ந்த வனங்களையும் உடைய மலையின்
மேற் ப்ரதேசங்கள் நந்தனவனத்தின் தோற்றமளிப்பன வாகிறபடியால் ஸுவர்க்கத்தில்
இருப்பவர்களுக்கு இங்கே விளையாட விருப்பத்தை இம்மலை விளைவிக்கிறது.
ஸுதா4ரஸ ஸ்வாது3தமாநி ப4க்த்யா ஸ்வயம் ப்ரயச்சந்தி ப2லாநி த4ந்யா:
இங்குமது வருகை கண்டே இனிது வந்த மரங்கள் எல்லாம் தங்களுடைப் பேறு எனவே நினைத்தனவாய் உம்மருகே
தங்களுடைக் கிளை தாழ்த்தி தேன் வடியும் சுவை மிக்க தீங் கனிகள் தனைத் தாமே அன்பளித்துக் களிப்புறுமே !
புதிதாக எழுந்தருளின உம்மைக் கண்டு இம்மரங்கள் பாக்யமுற்றனவாகி உமக்கு அருகில் கிளைகளைத் தாழ்த்தி
அமுதச் சுவை யுள்ள மிக இனிய பழங்களைத் தாமே ஸமர்ப்பிக்கின்றன.
40. பாத்ர ப4வந்தஸ் தவ வீ 6க்ஷணாநாம் பத்3மாலயா வாஸ விகல்பிதாநாம் சராசரா:
காநி கியந்தி வைதே தபாம்ஸ்யதப்யந்த ப4வாந்தரே ஷு
மலர் மகளின் உறை விடமாம் கமலங்கள் தமை ஓத்துத் துலங்குகின்ற உம்முைடய திருக்கண்கள் நோக்குற்ற
மலை தன்னின் தாழ்வரையில் மன்னி யுள்ள சராசரங்கள் பல சன்மங்களில் தாமே புரிந்தனவே எத்தவமோ ?
அலர் மேல்மங்கையின் உறை விடமான தாமரை களோ எனும்படியான உமது கண்களின் கடாக்ஷத்திற்கு
இலக்கான இங்குள்ள சராசரங்கள் போன ெஜன்மங்களில் என்ன தவம் செய்தனவோ ?
(அநிமேஷ நிஷே வணீய மஷனோ அஜஹத் யவ்வன மாவி ரஸ்து சித்தே
கல ஹாயிதே குந்தளம் கலாபை கரணோன் மாதக விப்ரமம் மஹோ மே -கோபால விம்சதி-10-)
கண்களால் இமை கொட்டாமல் அனுபவிக்க ஏற்றவனும் -நித்ய யுவா குமாரன் ஆனவனும் –
இமைக்கும் பொழுது உண்டாகும் இழவு பொறுக்க ஒண்ணாதே
மயில்தோகைகளோடு போட்டியிடும் திருக் குழல் கற்றையை உடையவனும் இந்திரியங்களை
பித்துக் கொள்ளச் செய்யும் ஆச்சர்யமான சேஷ்டிதங்களை உடையவனுமான கண்ணனின் தேஜஸ் ஸூ –
பும்ஸாம் திருஷ்ட்டி சித்த அபஹாரிணாம் -கண்டவர் தம் மணம் வழங்கும் கண்ணன் அன்றோ
இப்படி அழகு வெள்ளமிடும் ஜோதிஸ்ஸூ – திரு வடிவம் என் உள்ளத்தில் என்றுமே அகலாமல் தோன்ற வேண்டும்
(கோவர்த்தனோ கிரிவரோ யமுனா நதீ சா பிருந்தாவனம் ச மதுரா புரீ புராணீ
அத்யாபி ஹந்த ஸூலபாஸ் க்ருதிநாம் ஜனாநாம் ஏதே பவச் சரண சாரஜூஷஸ் பிரதேசா– 49¬) .
கோவர்த்தனோ கிரிவரோ –பர்வத ஸ்ரேஷ்டமான கோவர்த்தனமும்
யமுனா நதீ சா –அந்த யமுனா ஆறும்
பிருந்தாவனம் ச –ப்ருந்தாவனமும்
மதுரா புரீ புராணீ –புராதனமான மதுரா நகரையும் -ஆகிய
பவச் சரண சாரஜூஷஸ் ஏதே பிரதேசா–உன்னுடைய பாத சஞ்சாரம் பெற்ற இந்த ஸ்தலங்கள்
க்ருதிநாம் ஜனாநாம் –ஸூஹ்ருதிகளுக்கு
அத்யாபி ஸூலபாஸ் –இன்றைக்கும் ஸூல பமாய் உள்ளன –
41–விஜாநதாம் ஸத்புருஷ ப்ரபா4வம் பும்ஸாம் அமீ புண்யதமீ ப4வந்த:
ப்ராயஸ் த்வத் அங்கீ3கரணாத்ப்ரயாஸ்யந்தி ஆராத்4யதாம் அத்3ரிவநாவகாஷா:
அருந்தவத்தின் மேன்மையினை ஆழ்ந்தறிந்த பெரியாரால் பெரும் பக்திப் பரவசத்தால் பூசையிடப் போகிறவே !
நீ நடமாட இசைந்திருப்பதாலே புனிதமடைந்த இம் மலைக்காட்டு ப்ரதேசங்கள் நல்லோர்களின் மேன்மையை
அறிந்த புருஷகள் பூஜிக்கும் படியாகப் போகின்றன.
42. ஸம்ஸ்காரபூதாபி4: இதீ6வ வாக்பி4: ஸம்மோத3யந் அக்3ரஜம் ஆதிதே3வ: விஜாதl
லோலா விஜஹார ஹ்ருஷ்யந் வந்த்4ய: ஸதாம் வத்ஸக3ணாநுயாயீ
என்னுமிந்த பொருட் சுவையும் இனிமையுமாம் சொற்களினால் முன்னோனைக் களிப்பூட்டி முதல் தேவன் கண்ணனும்
தன் கன்றுகைளப் பின் தொடர்ந்து விளையாடி மகிழ்ந்தவனாய் நன் மனத்தோடு தொழுதிடவே சஞ்சாரம் செய்தானே ! (14-42)
ஆதி தேவனான கண்ணன் சொல்லின் இனிமையும் பொருட் சுவையுமுள்ள இத்தகைய சொற்களாலே
அண்ணனுக்கு ஆனந்தம் விளைவிப்பவனாய் கன்றுகளின் கூட்டத்திற்கு பின்னே சந்தோஷமாய் விளையாடிக் கொண்டே
நல்லோர்களால் வணங்கிப் புகழப்படும்படி ஸஞ்சாரம் செய்து வந்தான்.
43. ஸ்வயம் வ்ருத: ஸ்வைர விஹார லக்ஷ்ம்யா முஹு விதே நே விபிநே முகுந்த3:
ஸ்தாநாந்தர ப்ராப்தி விபா4விதாநி ஸ்திேதரபி4ந்நாநி க3தாக3தாநி
விளையாட்டு எனும் கன்னி தன்னால் வரித்தவனாய் கண்ணபிரான் பலவிடத்தும் மீண்டும் போய் வந்தே இருந்தாலும் களைப்பின்றி
ஓரிடத்தில் இருப்பவன் போல் பரந்து எங்கும் நிலை கொண்டே செல்லுைகயை நினைவினாலே செய்தானே !
தன்னுைடய விளையாடல் என்னும் லக்ஷ்மியால் அணையப் பெற்ற பிரான் அங்கே வனத்திலுள்ள
பலவிடத்திற்கு அடிக்கடி போவதும் வருவதுமாய் இருந்தாலும் களைப்பு சிறிதுமின்றி வேற
இடத்தைக் கண்டதும் அதன் மேல் தன் நட மாட்டத்தை செலுத்துபவன் ஆனான்.
44. ப்ரபூ4தயா புஷ்பப2ல ப்ரஸூத்யா வதா3ந்ய வ்ருத்தி6நி வநாநி த்3ருஷ்ட்வா ஸஸ்மார
சிந்தாவசவத்திநி 6நாம் வ்ரஜஸ்திதாநாம் வரவணிநி6நாம்
வண்ண மிகுப் பூங்கனிகள் வரையற்றுத் தரும் வனத்தைக் கண்ணுற்ற கண்ணபிரான் கருத்தெல்லாம்
தன்னிடத்தே கொண்டவராய் ஆய்ப்பாடி தனிலிருக்கும் எழில் வடிவுக் கன்னியரைத் தன் மனத்தே கண நேரம் எண்ணினனே !
புஷ்பங்களையும் பழங்களையும் அளவற்று அளித்து வரும் வனங்களின் தன்மையைக் கண்டு கண்ணன் தன் சிந்தைக்கு
வசப்பட்டு இடைச் சேரியிலிருந்து வரும் பெண்மணிகளை நினைக்கலானான்.
45. ப்ராயஸ் ததா3ஹ்வாந விதவ்4 நியோக்தும் ப்ரக்3ருஹ்ய வேணும் ப்ரதிபந்ந தூ3த்யம்
ந்யேவஷயத் குட்மலிதே ஸரிலம் பி3ம்பா3த4ேர ஸூசித சித்தராக
தூது செய்யும் திறங்கொண்ட தன் குழலைக் கை யெடுத்துக் காதலரை அழைத்து வரும் காரியத்தில் விடுக்கத்
தன் காதலினை வெளிப் படுத்தும் கருத்துடனே செம் பவள அதரத்தை அழகுடனே அக் குழலில் வைத்தனனே !
தூது செய்யும் தன் புல்லாங்குழலை எடுத்து அவர் களை அழைக்கும் நோக்குைடையவனாகி தன் சித்தத்திலே உள்ள
ராகத்தை (காதலை ) தெரிவிப்பது போல் ராகமுள்ளதான ( சிவந்ததான) திருப்பவளத்தை மூடிக் கொண்டு அதில் அப்புல்லாங்குழலை அமத்தினான்.
கோபீ ஜநாய கதிதம் நியமா வசாநே
மாரோத் சவம் த்வமத சாதியிதும் ப்ரவ்ருத்த
சாந்த்ரேண ஸாந்த்ர மஹஸா சிசி ரீக்ருதாஸே
ப்ரா பூரயோ முரலிகாம் யமுனா வநாந்தே –நாராயணீயம் 65/11-
காத்யாயினி பூஜை முடிவில் தாங்கள் முன்பே கோபியர் இடம் கூறிய படியே
நில ஒளியில் யமுனைக் கரையில் குழலூதினீர்கள் –
46. ஸாேமாபபந்நாந் க்ரமச: ஸ்வரந்த்4ைர: ஸப்த ஸ்வராந் ஸப்தபி4
உத்3வமந்தம் ப்ரசக்ரேம வாத3யிதும் வநாந்தே வம்சம் ப்ரியோ வல்லவ வம்சஜாநாம்
துளை ஏழின் வழியாக சாமம் என்னும் மறை தன்னின் ஒலி ஏழும் முறையாக ஓதிடும் அக் குழல் தன்னைக் குலவாய சீரியராம்
கன்னிகளின் அன்புருவாய் விளங்குகின்ற கண்ணன்தான் வனத்திருந்து ஊதினனனே !
இடைக் குலத்தில் தோன்றிய பெண் மணிகளுக்கு ப்ரியனான கண்ணன் தன்னுடைய குழலின் ஏழு துளைகள் வழியாக
ஸ்வரங்கள் ஏழையும் க்ரமமாக வெளியிடுகின்ற வேணுவை அங்கு வனத்தின் இடை யிலே இருந்து வாசிக்கத் தொடங்கினான்.
47. முகுந்த3 வக்த்ராநில வாத்4யமாந: வேணு: ப3ெபௗ4 ேவத3 இவ த்3வீ திய:
ராகா3வதீ 4நாம் ரஹஸாம் யேத3கம் கீ3தாத்மநாம் தஸ்ய நிதா3நம் ஆஸீ த்
திரு முகத்தின் காற்று தன்னால் தீங்குழலில் எழும் ஓசை மறை தன்னை ஒத்திடவே முகுந்தன் தான் வாசித்தான்
உருவான ராகங்கள் ஊடுருவும் கீதங்கள் மருமமான செய்திகைள மடவார்க்குச் சேர்த்தனவே !
கண்ணனால் வாசிக்கப்படுகின்ற குழலில் செலுத்தப் படும் காற்றானது இரண்டாவது வேதம் போலிருந்தது.
இந்த ஸ்லோகத்தில் அக் குழல் ஓசையை வேதத்தோடு ஒப்பிடுகிறார் .
எவ்வாறு எனில் வேதங்களானைவ பலவித ராகங்களுக்கு மூலமான கீதங்களாகிற ரஹஸ்யங்களுக்கு காரணமாயிருத்தல்.
( வதம் விஷயப் பற்றாகிற ராகத்தைப் போக்கும் கர்ம யோக
நிலையை விளக்குகின்ற கீதை யாகிற உபநிஷத்திற்கு காரணமாயிற்று.)
குழலானது கோபிகைகள் ஆகிற காதலிகளிடத்தில் வைத்த காதெல் என்ற ராகத்தாலே உருவான கீத த்வனியாகிற ரஹஸ்ய வார்த்தைக்கு காரணமாயிற்று.
( அந்தந்த கோபிகளின் பேர் குணம் எல்லாம் ஒருவருக்கும் தெரியாதபடி சொல்லி அழைக்கும்படியான ரஹஸ்ய வார்த்தை ).
(ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான் அது மொழிந்து இடை இடைத் தன் செய் கோலம்
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித் தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கிப்
பேதுறு முகம் செய்து நொந்து நொந்து பேதை நெஞ்சு அறவு அறப் பாடும் பாட்டை
யாதும் ஒன்றும் அறிகிலம் அம்ம அம்ம மாலையும் வந்தது மாயன் வாரான்–-திருவாய்ெமாழி 9.9.9)
48. தத்3 வம்சநாத3 : ஸுப3கோ 3நுக3ச்சந் (அநுகச்சந்) அக்3ரேஸரம்
சவ்ரப4ம் ஆக3மாநாம் அயத்ந நிஷ்பந்ந மநஸ் ஸமாதீ4ந் ஆப்3ரம்ஹகாந் ஆதநுதேவ ஜந்தூந்
முன் செல்லும் அவன் மூச்சு மறை தன்னின் மணமாக பின் செல்லும் அவனூதும் புல்லாங்குழல் இன்னிசையே
அன்னத் தான் முதலாக அனைத்துயிரின் மனம் எல்லாம் மன்னிடுமே யோகு தன்னில் முயலுதலே துளியற்றே !
வேதங்களின் மணமாகிற அவனது ப்ராணவாயு முன் செல்லப் பின்னே தொடரும்
அவன் குழல் ஓசையானது பிரமன் முதல் எல்லாப் ப்ராணிகைளயும் வசப்படுத்தி
வேறிடத்தில் மனம் செல்லாதபடி செய்கின்ற யோக நிலையை அநாயாசமாக பெறச் செய்தது எனலாம்.
49. ச்ருண்வத்பி4 உத்3வாந்த மது4ப்ரவாஹம் வம்சஸ்வநம் தஸ்ய சுதை 4கவம்சம்
ஸயூத்2யதாம் நூநம் அவாப்ய ஸைவ: ஸத்வை : ஸ்திதம் ஸாமி நிமீலிதாைக்ஷ:
அமுதத்தின் உடன் பிறப்பாய் அத் தேனின் வெள்ளம் என வமிசத்தில் அவனூதும் விந்தை மிகு இசை கேட்டு
இமை பாதி மூடினவாய் இன்பத்தால் விலங்கெல்லாம் தமதினத்தின் பதமற்றுத் தாம் கூடி நின்றனவே !
அமுதத்தோடு ஒரே குலத்தில் உண்டானது போன்ற தேன் வெள்ளம் ததும்பும் அக் குழல் ஓசையக் கேட்டு எல்லா மிருகங்களும்
ஆனந்த பரவசமாய் அரைக் கண் மூடினவையாய் எவ்வித பேதமுமின்றி ஒரே இனமாகிக் கூடியிருந்தன.
(தேப்யஸ் க்ருதீ ந கில கச்சித் இஹ அஸ்தி யே வை ராசோத்சவ உத் ஸூக தியஸ் தவ காநநாந்தே
வேணு ஸ்வந ஸ்ருத ரஸவ்க பரிப்லு தாந்தே ஸ்வே ஸ்ருக்வணீ ரஸநயா லிலிஹுர் புஜங்கா –அதிமானுஷஸ்தவம் – 47)-
யே புஜங்கா –எந்த சர்ப்பங்கள்
காநநாந்தே –பிருந்தாவனத்தில்
ராசோத்சவ உத் ஸூக தியஸ் தவ -ராஸக்ரீடையில் உத் கண்டிதமான புத்தி யுடையவனான உன்னுடைய
வேணு ஸ்வந ஸ்ருத ரஸவ்க பரிப்லு தாந்தே-வேணு நாதத்தாலே பெருகின ரஸ ப்ரவாஹத்தாலே நனைக்கப்பட்ட
பிராந்தி பிரதேசத்தை யுடைய
ஸ்வே ஸ்ருக்வணீ–தமது கடைவாய்களை
ரஸநயா–நாக்கினாலே
லிலிஹுர் –ஆஸ்வாதனம் செய்தனவோ
தேப்யஸ் –அந்த சர்ப்பங்களில் காட்டில்
க்ருதீ –ஸூ க்ருதியான
கச்சித் இஹ ந அஸ்தி கில –ஒருவனும் இந்த லோகத்தில் இல்லை இறே
பசுர் வேத்தி -சிசுர் வேத்தி வேத்தி காந ரஸம் பணீ–இத்யாதி
சர்ப்பங்களினுடைய விஷமும் அம்ருதமாக பரிணமித்தது அத்புதம் அன்றோ
50. மது4த்3ரைவ உல்ப3ண ஸம்மதாச்ரூணி ஆலேக்ய நிஸ்ஸ்பந்த ம்ருக3 த்3விஜாநி
உதக்3ரே காேசாத்புலகாநி க்ருஷ்ண: வம்சீ நிநாேத3ந வநாந்யகாஷீ6த்
குழல் கீதம் இசை கண்ணன் கால் நடையும் பறப்பனவும் எழுதிய சித்திரம் போல் அசை வறவே செய்திட்டான்
ஒழுகும் தேன் வெள்ளத்தை வடித்தனவே மகிழ் வனங்கள் எழில் பூக்கள் மலர்ந்தனவே மெய் சிலிர்ப்பை ஒத்தனவே !
குழல் ஓசையைக் கொண்டு கண்ணன் மிருகங்களையும் பக்ஷிகளையும் சித்திரத்திலுள்ள
பதுமை களைப் போல் அசையாததாக்கி அவ்வனங்கள் ஆனந்தக் கண்ணீர்
பெருக்குவது போல் தேன் வெள்ளத்தை விசேஷமாகப் பெருக்குகின்றனவாகவும் எங்கும் பூ மொட்டுக்கள்
கிளர்ந்ததாலே மயிர் சிலிர்த்தன போலவும் செய்தான்.
வேணு க்வண பிரணயி நீ த்வயி லோக நாத
பிருந்தாவனம் சரண சஞ்சரணை சதி புநாநே
பாவாஸ் ததா வந புவ கில கீத்ருஸஸ் தே
த்வத் கீத சிக்த சிக தாஸூ வஸூந்தராஸூ –அதிமாநுஷஸ்தவம் – 45 )-
லோக நாத த்வயி –சகல ஜகத் பதியே நீ
வேணு க்வண பிரணயி –வேணு காநப் பிரியனாய்க் கொண்டு
சரண சஞ்சரணை –பாத சஞ்சாரத்தால்
பிருந்தாவனம் புநாநே சதி –பிருந்தாவனத்தை பவித்ரம் ஆக்கின அளவிலே
ததா -அப்போது
த்வத் கீத சிக்த சிக தாஸூ—உன்னுடைய வேணு காண அம்ருதத்தாலே நனைக்கப்பட்ட மணல்களை யுடைய
வஸூந்தராஸூ –பூமிகளில்
வந புவ தே பாவாஸ் –ஆரண்ய பதார்த்தங்கள்
கீத்ருஸஸ் -எப்படிப்பட்டவையாய் இருந்தன
கானகம் படி உலாவி உலாவி கறுச் கிறுக்கன் –ஆடல் பாடல் மாறினார் தாமே
இடவணரை இடத்தோளோடு சாய்த்து இரு கை கூடப் புருவம் நெறிந்து என்ற குட வயிறு பட வாய் கடை கூடக்
கோவிந்தன் குழல் கொடூதின போது
மரங்கள் நின்று மது தாரைகள் பாயும்
மான் கணங்கள் மேய்கை மறந்து –எழுது சித்ரங்கள் போல் நின்றனவே
இது ஓர் அற்புதம் கேளீர்
அந்த கானத்தாலே குளிர்ந்த அவ்வரண்ய பூமியில் உண்டான சகல சராசரங்களும் பட்டபாடு என்னோ பிரானே
கீத்ருஸஸ்–நாவலம் பெரிய தீவினில் பெரியாழ்வார் அருளிச் செய்த பாசுரங்களைத் திரு உள்ளத்தில் கொண்டு
அந்த பிரகாரங்களைத் தம் வாயாலே பேச மாட்டாமே –
கீத்ருஸஸ்–என்று அவன் தன்னையே கேட்கிறார் ஆய்த்து
சைலோக் நிச்ச ஜலாம் பபூவ முநயோ மூடாம் பபூவுர் ஜடா ப்ராஞ்ஜாம் ஆஸூ –என்று தொடங்கி
த்வம் தேஷ்வந்ய தமாம் பபூவித பவத் வேணு க்வண உந் மாதநே –என்று ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவத்தில்
ஸ்ரீ பட்டர் அவனை கேளாதே தரித்து நின்று பேச வல்லரானார் –
ஸ்ரீ ஆழ்வான் அவ்வளவு உரம் உடையவர் அல்லாமையாலே —
கீத்ருச -என்ற ப்ரஸ்னத்தோடே தலைக் கட்டுகிறார்
ஹே நந்த நந்தன ஸூ ஸூந்தர ஸூந்தரஹ்வ
பிருந்தா வநே விஹரதஸ் தவ வல்லவீ பி
வேணு த்வனி சரவண தஸ் தருபிஸ் ததா வை
சக்ரா வபிர் ஜதுவிலாயமஹோ விலில் யே –ஸுந்தரபாஹு ஸ்தவம் – 113) –
வேணு கானத்தில் மலைகளும் மரங்களும் கூட உருகின படியைப் பேசி அனுபவிக்கிறார் இதில்
ஹே நந்த நந்தன ஸூ ஸூந்தர ஸூந்தரஹ்வ–நந்த கோப ஸூநு வாகத் திரு வவதரித்த அழகரே —
அழகரே என்ற திரு நாமம் படைத்தவரே
தத் பிருந்தா வநே வல்லவீ பிஸ் ஸஹ விஹரதஸ் தவ -முன்பு பிருந்தாவனத்தில் ஆயர் மங்கைகளோடே
லீலா ரசம் அனுபவியா நின்ற தேவரீருடைய
வேணு த்வனி சரவண தஸ் –குழலூதும் இசையைக் கேட்டதனாலே
ததா வை சக்ரா வபிர்-தருபிஸ்- ஜதுவிலாயம் –விலில் யே — அஹோ –மலைகளும் மரங்களும்
தீயோடு உடன் சேர் மெழுகு உருகுமா போலே உருகின படி என்னே
நாவலம் பெரிய தீவினில் –மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர
இரண்டு பாடும் துலுங்கா புடை பெயரா எழுத்து சித்ரங்கள் போல நின்றனவே -என்றும்
மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் மலர்கள் வீழும் வளர் கொம்புகள் தாழும் இரங்கும் கூம்பும்
திருமால் நின்ற நின்ற பக்கம் நோக்கி அவை செய்யும் குணமே -பாசுரங்கள் இங்கே அனுசந்தேயங்கள்
சைல உக் நிச்ச ஜலாம் பபூவ—தொடங்கி உள்ள ஸ்லோகம் -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -அனுசந்தேயம்
51. ஆஸ்வாத்4ய தத்வம்ச நிநாத3 மாத்வ 6ம் ஆக்4ராய தத் ஸஞ்சர சவ்ரப4ம் ச பு4க்த்தாம்ருதாநாம்
பு4வி சவ்ரேப4ப்ய: க்ஷிப்தேதராம் ஷீ ப3த3ஷாம் அவாபு:
சுரபி குல கறவைகளும் தீங்குழலின் இசையோடு பரவி வந்த மணம் நுகந்து புவி தன்னில் அமுதத்தினை
அருந்தியதால் மதியிழந்து கள்ளுண்ட வரைப் போலே பெரு மயக்கம் உற்றனவாய் புதுநிலையைப் பெற்றனவே !
காமதேனு வம்சத்தின் பசுக்களானது அக் குழல் ஓசையச் செவியினாலும் அதில் வந்த மணத்தை மூக்கினாலும் உணர்ந்து
கள் குடிப்பவை போல் அமுது உண்பாரின் நிலையை புவியில் பெற்றிருந்தன.
52.வம்ச ஸ்வநாஸ்வாத3 வசீக்ருதாநாம் வ்யக்தோத3யாநாம் வநதே3வதாநாம் ஸ கபு3ர:
ஸ்நிக்3த4தைம: கடாைக்ஷ: ேஸந்த்3ராயுதோ4 மகே 4 இவாப3பாஸே
குழலூதும் கண்ணன் தன் கீதத்தின் சுவை தன்னால் இழுபட்டு வந்து நின்ற அவ் வனத்துத் தேவுகளின் கழி காதல்
சேவண்ண கண் நோக்கே வான வில்லாய், எழில் மிக்க கரு முகிலாய் அக் கண்ணன் விளங்கினனே !
குழல் ஓசையின் சுவைக்கு வசப்பட்டு நேரில் தோன்றி நின்ற வன தேவதைகளின் நேசம் நிறைந்த நிலையான
பார்வை களுக்கு இடமான தாலே கண்ணன், பல நிறமான அவர்களின் கடைக்கண் பார்வைகள் வானவில் போலிருந்ததால்,
அவ்வில்லுடன் கூடிய முகில் போல் பொலிவுற்றான்.
53. ஆத்4மாபயாமாஸ ஸ ஸ்ருங்க3ம் அக்3யம் ச(ஷ)ங்கம் ததாபூ4தம் இவாத்மேயாகா3த் ஜெகௗ
ச கே3யாநி ப3ஹூநி யேஷாம் கா3ந்த4வ வேதா3பி ந பாரத்3ருஷ்வா
எம் பிரானின் கைச் சங்கே ஏற்ற மிகு யோகு தன்னால் கொம்பினாலோ குழலாக கண்ணன் வாய் வைத்தூதி
அம் பாடல் பல பலவே இசைத்திட்டான்!அதன் எல்லை தம்மாலும் கண்டறியா காந்தர்வ வேதங்களே !
நித்ய ஸூரியான பாஞ்சசன்யம் என்ற சங்கமே தன் ப்ரபாவத்தாலே முக வாத்யமாய் வடிவு கொண்டேதா
என்று எண்ணும்படியான சிறந்த புல்லாங்குழலை அவன் ஊதினான்.
பல பாடல்களை இசைத்தான். அவற்றின் கரை காண்பது என்பது காந்தர்வ வேதத்திற்கும் இயலாது.
54. த்ரிஸ்தா2ந யுக்த ஸ்வர பூ4ஷிதம் தத் த்ரிதா4 ஸ்திதம் க்3ராம விசேஷ யோகா3த்
அரஞ்ஜயத் ஸப்த ஜக3ந்த்ய யத்நாத் கீ3தம் ஹேர ஆஹ்ருத கிந்நெரௗக4ம்
முத்தான சுரம் சேர்ந்த மூவகையாம் இன்னிசையே (முத்தான –மூன்று ஸ்தாயி) கொத்தாக எழுச்சி யுற
கண்ணன் தான் குழலூத ஒத்தானார் இல்லாத இசைகார கிந்நரரும் பித்தமுற, ஏழுலகும் பேர் இன்பம் எய்தினவே !
ஹ்ருதயம், கண்டம், தலை என்ற மூன்று ஸ்தானங்களினின்றும் உண்டாகும் மந்த்ரம்,
மத்தி, தாரம் என்ற மூன்று வகை ஸ்வரங்கள் இணைந்த ஷட்ஜம், மத்யமம், காந்தாரம் என்ற மூன்றின்
சேர்க்கையால் மூன்றான கண்ணனின் கீதமானது கிந்நரத் திரளையும் பரவசப்படுத்தி இழுக்கின்றதாகி
ஏழுலகங்களையும் அநாயாஸமாக ஆனந்திக்கச் செய்தது.
55 – 67 ( கோபியர்கள் கண்ணனைக் காண விரையும் நிலை ) (ஸ்ரீமத் பாகவதம் 10/29/4-7)
55. விலாஸ வாக்யை இவ வேணுநாைத3: தி3வ்யேந கீ3ேதந ச தைத்3த்யஹந்து:
நிவேதி3தாத்தா: ஸுத்3ருச: ஸ்வவாஸாத் ஆஜக்3மு: ஆகஷண மந்த்ர தீக்ஷ்ணை :(ஸ்ரீமத் பாகவதம் (10/29/4)
சேய்த்தோரை வசமிழுக்கும் சக்தி மிகு மந்திரத்தின் (சேய்த்தோர் தூரத்தில் இருப்போர் )மேற் பட்ட குழல் ஓலியின் மர்ம சேதியாலும்
பாய்கின்ற தெய்வீக பாட்டினுடைய கருத்தாலும் ஆய்ச்சியரே தங்கள் தம் இல் விட்டே போந்தனரே !
வெகு தூரத்தில் இருப்பாரை விசையுடன் இழுக்கும் மந்திரங்களுக்கு மேலான சக்தி பொருந்திய அவனுடைய
குழல் ஓசைகள் விநோதமாகப் பேசும் பேச்சுக்கள் போல ஆனதாலும் அவனது திவ்யமான பாட்டின் இனிைமயாலும்
கருத்து அறிவிக்கப்பட்டவைகளாய் ஆய்ச்சிகள் தங்கள் இல்லங்களில் இருந்து வரலாரானார்கள்.
(ஸம்மூசநாபிருதித – நாராயணீயம் 65/2)
56. அநிஷ்ட சப்தை 3 வலைய அபோடா4: காஞ்ச்யாபி அவக்ஞாத பேதா3பக3த்யா குணாவக்ருஷ்டா:
ப்ரியம் ஆப்துமீஷு: காேமாபதி3ஷ்டேந மஹாபேதந
கண்ணனுடை அருங்குணமாம் கயிற்றாலே கட்டுண்டு எண்ணம் கெடு ஒலி வளையும் இடை யணியும் விட்டு ஓழித்து
மன்மதனின் போதைனயால் மாண்பு மிகு வழி கொண்டு கண்ணன் எனும் காதலனைக் கிட்டிடவே ஏகினரே !
பிறருக்குத் தெரியும்படி ஒலிக்கும் வளை களையும் தன் இடத்திலிருந்து கழன்று விழும் ஒட்டியாணங்களையும்
விட்டு ஓழித்து கயிறு கட்டி இழுக்கப் பட்டாற் போல் அவனது குணங்களால் இழுக்கப்பட்டு மன்மதன் உபதேசித்த ஒரு மகத்தான
மார்க்கத்தாலே தன் காதலனான கண்ணனை அணுக வந்தன.
57. ஆதி3ஷ்யமாநாம் ப்ரிய வம்சநாைத3: ஆசாம் நிஜாசாம் இவ நிவிகா4தாம் ததா3ஸ்திதாம்
ப்ராஸ்திஷதாஷு த4ந்யாம் ஆஸந்ந ஸந்த்4யாதி4க ராக4 பா4ஜ:
அந்தியினால் கிளர்ந்து எழுந்த ஆசையுடன் ஆய்ச்சியரும் வந்திடும் அக் குழல் இசையால் வாசிக்கும்
கண்ணனுள்ள அந்திசையே பேறு உற்றென அறிந்தவராய் தடையிலாது உந்துகின்ற காதலினால் ஓடியோடி வந்தனரே !
அப்போது நேர்ந்த மாலைக் காலச் சேர்க்கையாலே மேலான ராகம் உடையவராய் அவன் குழல் ஓசை யாலே
அவன் இருக்கின்ற திக்காகிற ஆசையை , தங்களுைடய தடையற்ற ஆசை போன்றது அவனாலே பாக்கியம் உற்ற
அந்த இடம் என்று கண்டு அதைச் சேரப் புறப்பட்டு விரைந்தன.
58. மது4வ்ரதாதி4ஜ்ய சராஸேநந புஷ்பாத்மகம் ஸந்த3த4தா ப்ருஷத்கம்
அநுப்லேவந வ்ரஜதா பபூ4ேவ தாஸாம் அநங்கே3ந தேதா3த்4யதாநாம்
தேனுண்ட வண்டினத்தின் திரள் வரிசை தனையே
நல் நாணாக்கித் தன் வில்லில் நறு மலரைச் சரமாக்கி
மாேனாக்கை வெல் கண்ணா மங்கையர்க்குத் துணையாகும் சேனை போல அவர் பின்னே சென்றனனே மன்மதனே !
அப்போது புறப்பட்ட அப் பெண் மணிகளுக்கு வண்டுகளின் வrரிசையை நாண் கயிறாக்கி வில்லிலே ஏற்றிப் பூவாகிற
அம்பைத் தொடுத்துப் பின்னே துணையாக மன்மதன் செல்பவனானான்.
59. ஆதே 3ச சை யாக3 அத தத்ர கோ3ப்ய: நிவாயமாணா அபி து3நிவாரா:
ஆநிந்யிேர ராக3மைய மெஹௗைக4: க்லேசாபஹம் க்ருஷ்ண ஸுதா4 பேயாதி4ம்
குலப் பெரியோர் கலக்கமுற்று பலபடியாய் ஆணையிட்ட தளை எல்லாம் உடைத்து எறிந்து தடுக்கலாகா
வேகத்துடன் கிளர்ந்து எழுந்த காதலினால் கபியரும், கவலை யெல்லாம் அலைத்தழிக்கும் கண்ணன் எனும் அமுதக்கடல் அண்டினரே !
அந்த கோபிகள் பெரியோர்கள் பலபடி உத்தரவிட்டுத் தடுக்கப்பட்ட போதிலும் தடை மீறினர்களாய்
ராக வெள்ளப் புரட்சியாலே அடங்காமல் தள்ளப்பட்டு க்லேசங்களை எல்லாம் சுழலச் செய்யும் கண்ணன் என்ற அமுதக் கடலை அண்டின.
தா கேஹ க்ருத்ய நிரதாஸ் தனய ப்ரஸக்தா
காந்தோப சேவந பராஸ் ச ஸரோரு ஹாஷ்யா
சர்வம் விஸ்ருஜ்ய முரளீ ரவ மோஹி தாஸ்தே
காந்தார தேச மயி காந்த த நோ சமேதா –ஸ்ரீ நாராயணீயம் -65-3-
வீட்டு வேளையில் ஈடு பட்டுக் கொண்டும் குழந்தைகளை கவனித்துக் கொண்டும்
கணவனுக்கு பணிவிடை செய்து கொண்டும் இருந்த கோபிமார்கள்
தங்கள் குழலோசையைக் கேட்டதும் மனம் மயங்கி எல்லாவற்றையும் விட்டு விட்டு உம்மைத் தேடி ஓடி வந்தார்கள் –
60. த்வரா ஸகீநாம் புரத: ப்ரேசேல தரஸ்விநா நி:ஸ்வஸிேதந தாஸாம் ஸதா3க3தி
ப்ராத்தநயா ஸேமதம் தூ3ரஸ்திதம் க்ருஷ்ணம் இவோ பேநதும்
விரைந்தேகும் ஆய்ப்பாடி வனிதை கட்கும் முன்பாக விரைந்தேகும் அவர்கள் தாம் விடுக்கின்ற பெரு மூச்சே !.
வருமவர்க்கு நலம் கோரும் வெகு தொலைவுக் கண்ணனையே நெருங்கிடவே வாயுவுமே நல்லுதவி செய்கிறதோ ?
விரைவாக செல்லும் ஆய்ச்சிகளுக்கு மூச்சுக் காற்று விரைந்து சென்றது.
அதை நோக்கும் போது ஸதாகதி ப்ரார்த்தனை செய்யும் கண்ணன் தூரத்தில் இருப்பதால் அவனை நெருங்கச் செய்வதற்காக
இது என்று தோன்றும்.
(ஸதாகதி ப்ரார்த்தனை –தேவர்களின் வேண்டுகோள் .
ஸதாகதி என்றால் தேவர்கள் – அவர்களின் ப்ராத்தனைக்கு இணங்கி அவதரித்தவன் கண்ணன்.
அவனை அருகில் அழைத்து வர வேணும். கோபிகள் வருந்துகிறார்களே என்று மூச்சுக்காற்று முன்னே போவது போல் இருந்ததாம்.)
இது தவிர வேறு இரு பொருளும் ஸ்வாமி சாதிக்கிறார் . ஸதாகதி ப்ரார்த்தனை என்றால் நல் வரவின் ப்ரார்த்தனை
அதாவது கோபிகள் நன்றாக வர வேண்டும் என்று கண்ணன் செய்யும் ப்ரார்த்தனை .
`ஸ்வாகதம் செய்தல் என்றும் கொள்ளலாம். ஸதாகதி என்பது வாயுவின் பெயர்களில் ஒன்று.
ஆகவே வாயுவின் ப்ரார்த்தனை என்றும் கொள்ளலாம்.
கண்ணன் ஸதாகதி ப்ரார்த்தனை செய்வதைக் கண்டு வாயுவானவன் தன்னை அவன் ப்ரார்த்திப்பதாக நினைத்து
மூச்சுக் காற்றாகி கோபிகள் முன்னே தோன்றி விரைவாக அவர் களை அவனிடம் கொண்டு போவது போல இருந்தது.
இங்கு இவ உபேநதும் என்பதற்கு கொண்டு வர என்பதை விட வெகு சமீபத்தில் கொண்டு செல்ல என்ற பொருள் பொருந்தும்.
61. ப்ராேயண வேகா3த் ஸுத்3ருசாம் விபி4ந்ந: ப்ரகீண முக்தாப2லபுஷ்ப ஜால:
ப்ரஸ்தாவயந் காமவிஹார நாட்யம் ஹார: ஸமாலக்ஷ்யத ஸூத்ரதா4ர:
விரைகின்ற ஆய்ச்சியரின் வடத்திருந்து முத்துக்கள் இறைந்து எங்கும் உதிர்ந்தனவே
எழில் மலர்கள் தமைப் போல நிறைவான வேட்கை தனின் நடனத்தின் தொடக்கத்தை அறிவிக்கும் சூத்திரதா அரங்கில்
பூத் தூவுதல் போல அந்த ஆய்ச்சியர்கள் விரைந்து போகும் போது அவர்கள் அணிந்திருந்த முத்து மாலையினின்று
முத்துக்கள் புஷ்பங்கள் உதிர்வது போல் இறைந்தன.
அதனால் அவகள் வேட்கையின் விளையாட்டு நடமாடுதல் அறியப் பெற்றது.
இதனைக் கண்ட போது நாட்யம் ஆடுவதற்கு முன்னே நாட்டியத்தின் ஸூத்ர தாரியானவன் புஷ்பங்களைக் கொணர்ந்து
அந்த அரங்கத்தில் தூவி நாட்டியம் தொடங்க இருப்பதைத் தெரிவிப்பது போல் இந்த ஹாரமானது முத்துக்கைள இறைத்து
இந்த நாட்யம் தொடங்கப்படுவதை அறிவிக்கிறதோ என்று தோன்றலாயிற்று.
62. அவஸ்திதம் க்வாபி கத3ம்ப3மூலே வல்கு3ஸ்மிதம் வாதி3த மஞ்சுவேணும்
ஸாசீக்ருதாக்ஷம் தத்3ருஷுஸ் தருண்ய: ஸ்வாத்4யம் ஸதாம் ஸ்வஸ்திக சாருஜங்க4ம்
கடம்ப மரம் ஒன்றின் கீழ் கால் ஒன்றை அழகாக மடித்தவனாய், முகம் சாய்த்து மலர்க் கண்ணின் கடை நோக்கும்
படர்ந்த எழில் புன் சிரிப்பும் புரிந்தவனாய், நல்லோரால் விடலாகா கண்ணன் தான் குழலூதக் கண்டனரே !
ஒரு கடம்ப மரத்தின் கீழே அழகாக ஒரு முழங்காலைக் குறுக்கிட்டுக் கொண்டு மஹான்களுக்கு மிக போக்யமாய்
மூங்கில் குழலின் துளைகளைக் காண அரைக் கண் பார்வையாக முகத்தைச் சாய்த்து அழகிய புன்சிரிப்புடன்
புல்லாங்குழல் ஊதிக் கொண்டு நிற்கும் கண்ணனை கோபிகள் கண்டன.
63. தத் அங்க3சபோ 4ம் அவேலாக்ய தி3வ்யாம் விஸ்ரே பா4வம் வ்ரஜேதவ தூ3ராத்
அமோஹயத் யவ்வதம் ஆதி3தூ4த: ஸந்தோஷ திக்3த நே 4 ஸமீக்ஷணேந
ஆய்ச்சியர்கள் திரள் மீதே அக் கள்வன் கண்ணன் தான் பாய்ச்சிட்ட தொலை நோக்கு படுதலாலே அவர்கள்
தம் தூய்மையான அங்கங்களின் திரு எழிலால் வியப்புற்றான்
ஆய்ச்சிகளின் ஆசை தானும் அவன்மீதே பெருகியதே !
முதல்வனான வஞ்சகனாம் கண்ணன் வெகு தூரத்தில் நின்றே
வெகு திருப்தியோடு கலந்த கடாக்ஷத்தை அப் பெண்களின் திரளின் மேல் வைத்தான்.
அது அவர்களின் திவ்யமான அவயவங்களின் அழகைக் கண்டு அவன் வியந்ததால் உண்டானது போல் நின்றான்.
அதன் மேல் அவர்களுக்கு அவன் மேல் மோஹம் விஞ்சிற்று.
64. த்3ருதாக3தி வ்யாகுல பூ4ஷணாஸ்தா: கிஞ்சித் ஸமுச்வாஸித நீவிப3ந்தா4:
பயாகுலாக்ஷ்ய: பrவாய தஸ்து2: க்ருஷ்ணம் க்ருபாத64ந த்3ருஷம் க்ருசாங்க்3ய:
கடிது ஏகி வந்ததனால் கன்னியரின் அணி கலன்கள் இடம் நழுவி சரிந்தனவாய் இடையாடை முடியவிழ்ந்து
தடக் கண்கள் கலங்கினவாய் தளந்தனராய் தயை புரியும் கடை நோக்குத் தந்தருளும் கண்ணனையே சூழ்ந்தனரே !
இளம் பெண்கள் வெகு விரைவாக வந்ததால் அணிந்த அணிகள் எல்லாம் கலைந்து, உடுத்த உடையும் முடியும் தளர்ந்து,
கண்கள் கலங்கி சோர்ந்தவராகி தங்களிடம் தயை புரிந்த கடாக்ஷம் செய்யும் கண்களைச் சூழ்ந்து நின்றன.
காஸ் சிந்நி ஜாங்க பரி பூஷண மாத தா நா
வேணு ப்ரணாத முப கர்ண்ய க்ருதார்த்த பூஷா
த்வாம் ஆகதா நநு ததைவ விபூஷி தாப்ய
ஸ்தா ஏவ ஸம் ருரு சிரே தவ லோச நாய–(ஸ்ரீ நாராயணீயம் -65–4-)
சில கோபியர் பாதி நகைகளைப் போட்டுக் கொண்டும் பாதி அலங்கரித்துக் கொண்டும் ஓடி வந்தார்கள் –
நன்கு அலங்கரித்துக் கொண்டவர்களை விட பாதி அலங்கரித்துக் கொண்டு வந்தவர்களே
தங்களுக்கு மிக அழகாக த் தெரிந்தனர் –
65. ஸ வல்லப4: ஸம்ஸதி3 வல்லவீ நாம் ப3ஹஸ்ரஜா த3சித தா3நராஜி:
உதக்3ர ச்ருங்க3த்4வநி: ஆப3பா4ஸே த்3ருப்தோ வசாநாம் இவ வாரேணந்த்3ர:
ஆயகுலக் கன்னியரின் அணி நடுவே மயில் தோகை ஆய மாலை யுடன் கண்ணன் ஆரவார குழலூதி பாயுமத நீர்
பெருக பேடைகளின் திரள் நடுவே வோர் ஓசை பிளிறிடுமோ வாரணம் போல் விளங்கினனே !
இடைப் பெண்களின் நடுவிலே அவர்களுக்கு பிரியமான கண்ணன் மயில் பீலி மாலை யணிந்து உரத்த குழல் ஓசை யுடன்
மத ஜலம் தாரையாகப் பெருக உரத்த த்வனியுடன் பேடைகளோடே கூடிய கொழுத்த கஜம் போல் விளங்கினான்.
(மயில் தோகை மாலை யானது மத ஜலம் போல் விளங்கிற்று)
66. அவ்ருத்4தி3 ஸங்கோசம் இவேந்து3ம் அந்யம் அகாமுகம் காமம் இவாஸ் அத்தவேணும்
தமத்பு4தாநாம் இவ ராசிம் ஏகம் கோ3ப்யஸ் ததா3த்மாந இவாந்வபூ4வந்
தேய்தலிலா வளர்தலிலா தணிவறா மதி போலும் நேயம் வள வில் விடுத்து குழல் ஏந்தும்
மதன் போலும் மாயங்களின் உரு போலும் மாதவனைக் கண்டனரே!
ஆய்ச்சியரும் அவனும் ஒரே ஆன்மா என ஒன்றினரே !
கோபிகள் அவனை , வளர்தலும் குறைதலுமின்றி விளங்கும் வேறே சந்திரைனப் போலவும்,
வில்லை விட்டுக் குழலைக் கையில் கொண்ட காமதேவன் போலவும், வியப்புகுள் எல்லாம் ஆனதொரு குவியல் போலவும்
அவன் தங்களுக்குப் பதி என்ற பாவனை யாலே அவனும் தாமும் ஒரே ஆத்மா என்னும்படி அனுபவித்தனர் .
67. ஸுராங்க3நாபி4: ஸமேய த்4ருதாயாம் ஸ்வேனைவ கோ3பாக்ருதி
பூ4மிகாயாம் அகமவச்யஸ்ய விபோ : ததா3sத் அச்சா ப2லஸ்பசந மாத்ரlலா
வினை சேரா நாயகனும் வேஷமிட்டான் இடையனாக முனம் செய்த சூழ்ச்சியினால் தேவிகளும் ஆய்ச்சியராம்
முனம் செய்த பூசையினால் முற்றியதோ பலனிதுவாம் எனுமல்லால் மானிடரின் எள்ளும் நிலை
அலவிதுவே பிற ஸ்த்ரிகளோடு புணர்ந்திருக்கை இவனுக்கு குற்றமாகாது. -அவர்களுக்கும் குற்றமில்லை .
ஏன் எனில் வினைகளுக்கு வசப்படாத ஸர்வேஸ்வரன் தன் இச்சையாலே இடையன் போல் வேஷம் பூண்டான். அவர்களும் தேவ ஸ்த்ரிகள்.
பழைய ஏற்பாட்டின் மேல் அவன் சங்கல்பத்தாலே இடைச்சிகளாக மாற்றப்பட்டன.
அவர்கள் முன் செய்த அர்ச்சனைக்குப் பலனளிப்பே இது.
தான் அவர்களோடு காம சுகம் அனுபவிக்க வேண்டும் என்ற விருப்பத்தோடு செய்ததன்று இது.
பக்தர்களிடம் தனது சவ்சீல்யத்தைக் காட்டும் விதமாகவே செய்தது.
அதுவும் புண்யம், பாபம் என்பது அந்தந்த ஜாதிகளுக்குத் தகுந்த விதமாயிருக்கும்.
தேவர்களுக்கும் மனிதர் களுக்கும் ஒரே விதமாகா. ஆகையால் இதில் அவர்களுக்கு எவ்வித குற்றமுமில்லை .
(தனது சவ்சீல்யத்தைக் காண்பிப்பதற்காகவே அவன் இடைச்சிகேளாடு ஊடாடி மகிழ்ந்தான்.
அவன் ஒருவனே புருஷ ஸ்வரூபம். மற்ற அனைவருமே ஸ்த்ரீ ரூபங்கள் தான் என்பதை நாம் மறந்து விடக் கூடாது)
68. ந கல்வமுஷ்ய ப்ரமதா3ம் அதா3ந்த்4யம் ந குத்ஸநம் தத்தத் அபீ4ஷ்டதா3து:
ந த4ம ஸம்ஸ்தாபந பா3த4க3ந்த4: சுத்4தா3நு சிந்த்யா ஹி சுப4ஸ்ய lலா
முழு நலமாம் பரமனுக்கே மோஹத்திற் கிடமுண்டோ ?
வழங்குதலால் வரம் எல்லாம் வெறுப்புண்டோ ஆய்ச்சியர்பால்!
இழிவுறுமோ அறம் நாட்டும் உயர் நோக்கும் ஆடலிதன் ஒழிவிலாத சிந்தையினால் உயர் வடைவா ஞானிகளே !
பரி பூர்ணனான பகவானுக்கு ஸ்த்ரீ களோடு சேர்ந்து சிற்றின்பத்தில் இழிகிற மோஹத்திற்கு இடமேது?
இன்பப் பற்றின்றி அவர் களோடு கலந்தானாகிலும் அவன் அவர் களை வெறுக்கிறான் என்பதுமில்லை .
அவர்கள் வேண்டின வரங்களுக்குப் பலன் அளிக்கின்றான்.
ஆக இது எல்லோருக்கும் பொதுவன்றாதலின் தர்ம ஸ்தாபனத்திற்கு இதனால் பங்கம் விளையாது.
பரைமகாந்திகள் இதனை தியானம் செய்து சுத்தி பெறுகின்றாகள். ஆகையால் இது தர்ம ஸ்தாபனமே யாகும்.
69. அநாக3ம ப்ரத்யய ஸம்ப4வாநாம் கு3ருத்யஜாம் கோ3பகுமாரி காணாம் அநந்யஸங்கா3த் ஸ
த3யாளு ஆஸீத் அஸங்க3 க4ண்டாபத ஸாத்த2வாஹீ (ஸ்ரீமத் பாகவதம் 10/33/25-37)
உற்றவரை விடேல் என்னும் உயர் நெறியை விட்டு ஓழித்து பற்றறவே வேறிடத்தே , பிரானையே
நாடுதலில் உற்றவராம் ஆய்ச்சியரை பற்றிலாரை வழி நடத்தும் நற்றவனாம் கண்ணன் எனும் நல்லருளால் பொறுத்தனனே .
பற்றற்றவர்கள் போகின்ற ராஜ மார்க்கத்திலே திரள் திரளாக ஜீவர்களை நடத்துகின்ற பிரான்,
கோப கன்னிகளிடத்திலே கிருபை யுள்ளவனானான்.
அவர்கள் பர்த்தாவைக் கடக்கலாகாது என்ற சாஸ்திரத்திலே நம்பிக்கை இழந்தவர்கள் ஆனார் களே ,
முன்னோர்களின் ஆஜ்ஜையை மீறி அவர்களுக்குத் தொண்டு செய்யாமல் வந்தார்களே ,
சிஷை பண்ண வேண்டியிருக்க அன்பு கொள்ளலாமா எனில், வேறே ஓன்றிலும் பற்றின்றி எம்பெருமானிடமே
அன்பு வைக்க வேண்டும் என்கிற சாஸ்திரம் எல்லாவற்றையும் விட முக்கியமானது.
அதை அவர்கள் பின்பற்றினார்கள் என்று அவர்களிடம் அன்பு கொண்டு மற்ற குற்றங்களை தயையினால் பொறுத்தான்.
பிறரிடம் பற்றின்மை வளர்ப்பதே அவன் செயல்.
அவர்கள் செயலானது தன் விஷயமின்றி வேறு ஜீவன் விஷயமாகில் குற்றமாகும். இது பகவானுைடய செயல். -ஆகையால் ஏற்றமே .
இவ் விடத்தில் ஸ்ரீமத்பகவத்கீைதயின் சரம ஸ்லோகம் ஒப்பு நோக்கற்காவது.
“ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸூச:”
ஒவ்வொரு ஜீவனுக்கும் யோக சrரம், போக சrரம் என்று இரண்டு உண்டு. இது ஜீவர்களுக்குத் தெரியாது.
இங்கு கோபிகைகளின் போகசrரம் வீட்டில் இருக்க யோகசrரம் மட்டும் பகவானிடத்தில் வந்தது.
அவ்வாறு பகவானுடைய மாயையால் மோஹ மடைந்த கோபர்கள் தங்கள் மனைவிமார்கள் தங்கள் அருகிலேயே இருப்பதாக எண்ணினார்கள்.
இக்கருத்தை ஸ்ரீமத் பாகவதத்திலும் காணலாம். “
நாஸூயந் கலு க்ருஷ்ணாய மோஹிதாஸ்தஸ்ய மாயயா மந்யமாநா: ஸ்வபாஸ்வஸ்தாந் ஸ்வாந் ஸ்வாந் தாராந் வ்ரெஜௗகஸ:” (10/33/38)
70.–புஷ்பாவசாய ப்ரவேணந கோ3ப்ய: ப்ரஸாதி4தாஸ்தேந ஸ ச ப்ரயாபி4:
அபி4ந்ந பா3ஹ்யாந்தரம் ஐகரஸ்யாத் ஆமோ த3ம் அந்யோந்ய ஸக3ந்த4ம் ஆபு:
மலர் பறித்தே ஆய்ப்பாடி மங்கையரும் கண்ணனுமே அலங்கரித்த பரஸ்பரமான அன்பினாலே பிணைந்தவராய்
நலமான ஆனந்தமும் நறுமணமும் உள்ளத்திலும் வெளிப் புறமும் சூழ்ந்தவராய் விகற்பின்றி திளைத்தனரே !
புஷ்பங்கைளப் பறித்த கண்ணனாலே கோபியர்கள் அலங்கரிக்கப்பட்டனர் . அவர்களாலும் அவன் அலங்கரிக்கப்பட்டான்.
அதனால் ஒருவருக்கொருவர் சமமாக உள்ளும் புறமும் ஆமோதத்தை அனுபவித்தனர் .
உள் ஆமோதமாவது ஆனந்தம். புற ஆமோதமாவது புஷ்பத்தினாலே ஏற்பட்ட மணம்.
71. ஸ்வலால நாதா3பதிதம் ஸ தாஸாம் சவ்பா4க்3ய து3மாநமத3ம் விநேஷ்யந்
புஷ்பாவசாயவ்ய பேத3சே சவ்ல்யாத் ஆஸீத் த3வ 6யாந் அப3ஹி: ஸ்திேதாபி
கண்ணன் தனின் அருட்பேறு கிட்டியதே தனக்கு எனவே எண்ணினரே கன்னியரே இறுமாப்பு மிகுந்தவராய்
கண்ணனுமே இதைப் போக்கும் கருத்தாலே அருகிருந்தும் அன்னியனாய் மறைவுற்றான்
அல தன்னைக் காணாதவன் போல்.
உடனே கோபிகள் இவன் தங்கைளப் பாராட்டும்படி சிறப்பெல்லாம் பெற்றிருக்கிறோம் என்று மதம் கொண்டனர் .
இதனைப் போக்க வேண்டும் என்று எண்ணினான்.
உங்களுக்குப் பூப் பறிக்கிறேன் என்று சொல்லிச் செல்பவனாகி அருகில் இருப்பதைப் போல் வெகு தூரத்திலிருப்பவனான்.
கக நகதம் முனி நிவஹம் ஸ்ரா வயிதும் ஐகித குல வதூ தர்மம்
தர்ம்யம் கலு தே வசனம் கர்ம து நோ நிர்மலஸ்ய விஸ் வாஸ் யம் –(நாராயணீயம் 66/2)-
வானத்தில் கூடி இருக்கும் முனிவர்களும் -உலக மக்களும் கேட்பதற்காக குடும்பப் பெண்களின்
தர்மத்தைப் பற்றி அப்பெண்களுக்கு எடுத்துக் கூறினீர்கள் –
தர்மம் நிறைந்த அச் சொற்களைக் கடைப்பிடிக்க வேண்டும் –
உம்முடைய செய்கைகளை எடுத்துக் கொள்ளக் கூடாது –
72. அவிப்ரகேஷபி திரஸ்கரண்யா க்லுப்தாவ்ருதிம் க்ருஷ்ணம் அநீ க்ஷமாணா:
பீ4ைம அதூ3யந்த ப்4ருஷம் தருண்ய: க்ஷைண: ஸ்வநி:ச்வாஸ ஸமீரதீ 3கை 4:
திரை போலும் மாயையினால் தன்னைத் தான் அருகிருந்தும் மறைத்திட்டான் ஆய்ப்பாடி மங்கை யர்க்குக்
கண்ணன் இலா அரைக் கணமும் ஊழிகளாய் ஆனதுவே
பயங்கரமாய் வருந்தியவராய் பெரு மூச்சை விரகத்தால் விடுத்தாரோ !
மாயை என்கிற திரையினால் மறைக்கப்பட்டான் ஆகையால் அவன் அருகிருந்தும் காண இயலாதவன் ஆனான்.
அதனால் அவகளுக்கு ஒவ்வொரு நொடிப் பொழுதும் மிக பயங்கரமாய் அவர் களுடைய பெரு மூச்சுக்கு மேலாக நீண்ட ஊழிகளான
படியாலே வருந்தி ஓழிந்தன. முழுப் பொழுதும் மூச்சுவிட்டு வருந்தின.((நாராயணீயம் 67/ 4-7)
திரோ ஹிதே அத த்வயி ஜாத தாபா சமம் சமேதா கமலாய தாஷ்ய
வநே வநே த்வாம் பரி மார்க யந்த்யோ விஷாத மாபுர் பக வன்ன பாரம் –4-
தாங்கள் மறைந்ததால் கோபியர் மிகவும் துயரம் அடைந்தனர் -அனைவரும் ஓன்று கூடி
கானகம் முழுவதும் தங்களைத் தேடினார்கள் –
தாங்கள் கிடைக்காததால் வருத்தம் அடைந்தனர் –
ஹா சூத ஹா சம்பக கர்ணி கார ஹா மல்லிகே மாலதி பால வல்ய
கிம் வீஷீ தோ நோ ஹ்ருதயைக சோர இத்யாதி தாஸ் த்வத் பிரவணா வி லேபு –5-
மா மரமே -செண்பக மரமே -கர்ணி கார மரமே – மல்லிகைக் கொடியே -மாலதியே –
எங்கள் கண்ணனைக் கண்டீர்களா என்று மரங்களையும் கொடிகளையும் கேட்டு
கவலையுடன் புலம்பினார்கள் –
நிரீ ஷிதோ அயம் சகி பங்க ஜாஷ புரோ மமேத்யா குல மால பந்தீ
த்வாம் பாவ நாச ஷு ஷி வீஷ்ய காசித் தாபம் ஸகீ நாம் த்வி குணீ சகார –6-
கோபிகை ஒருத்தி கற்பனையில் தங்களைக் கண்டு மற்ற கோபியர் இடம் கண்ணனை
நான் எதிரில் பார்த்தேன் என்று கூற
அத்தைக் கேட்ட மற்ற கோபியர்கள் அதிகம் துன்பம் அடைந்தார்கள் –
த்வதாத் மிகாஸ்தா யமுனா தடாந்தே தவானு சக்ரு கில சேஷ்டிதாநி
வி சித்ய பூயோ அபி ததைவ மாநாத் த்வயா விமுக்தாம் தத்ரு ஸூஸ் ச ராதாம் –7-
அவர்கள் எல்லாரும் எப்பொழுதும் தங்களையே நினைத்து தங்கள் சேஷ்டிதங்களைப்
பற்றியே பேசி வந்தார்கள் –
அப்போது ராதையைத் தனியே கண்டனர் – அவளும் கர்வம் கொண்டதால்
அவளையும் விட்டு மாயையால் மறைந்தீர்கள் –
73. புஷ்பாவகீணேஷு வநத்3ருமாணாம் மூலே ஷு மோஹாலஸேசதஸஸ்தா: க்ருதாஸிகா:
க்ருஷ்ண வியோக கதோத் காமாஸ்த்ர பயங்க க3தா இவாஸந் (ஸ்ரீ மத் பாகவதம் 10/30 அத்யாயம் )
வனத் தருக்கள் சொரிந்திட்ட மலர் இதழ்கள் இறைந்தனவாய் வனம் எங்கும் பரவிடவே மாதவனைப் பிரிந்ததனால்
மன மயக்கம் உற்றவராய் மதன் விடுத்த அம்புகளே அணையாக ஆனது போல் ஆய்ச்சியரே கிடந்தனரே !
காட்டில் எங்கும் மரங்கள் புஷ்பங்களைச் சொரிந்திருந்தன.
அங்கே மரங்களின் கீழே மோகத்தினால் இன்னது செய்யவேண்டும் என்பதை அறியாமல் கோபிகள் உட்கார்ந்து
கண்ணனின் பிரிவிலான துயரத்தினால் கிடப்பதைக் கண்டபோது இவர்கள் காமனின் அம்புகளைப் பள்ளியாக்கி படுத்தனரோ என்பது போலாயிற்று.
அந்த அம்புகளினால் அடிபட்டு ஒழியலாம் என்று நினைத்தனேரா?.
அல்லது போரில் தோற்று சர தல்ப்பத்தில் படுப்பது உண்டு.
அது போல் நாமும் சர தல்பத்தில் கிடக்கலாம் என நினைத்தார்களோ என்று எண்ணலாம் படியாயிற்று.
74. விlநசித்தா விஷமாஸ்த்ர தாபாத் விலாபயந்த்யா வஸுதா4ம் விலாைப:
அத்3ருஷ்ய ரூபஸ்ய ஹேர: அகா3யந் கு3ணாம்ஸ் சrத்ராணி ச கோ3பகந்யா:
காதலனைப் பிரிவுற்ற கடுந்துயரத் தாபத்தால் பேதுற்ற கன்னியர்கள் புவியுருக புலம்பினரே
பூதுருவை ஒளித்திட்ட பெருமானின் குணச் செயலாம்
கோபிகள் மன்மத தாபத்தாேல மனமுருகி அழுகின்றார்களாகி
ஊரும் நாடுமான உலகத்தையே உருக்குகின்றவர்களாகி தன் திருமேனியை மறைத்திருக்கும்
திருமாலின் குணங்களையும் செயல்களையும் சொல்லிப் பாடத்துவங்கினர் .
தத சமம் தா விபநே சமந்தாத்தமோ வாதாரவதி மார்க யந்த்ய
புனர் விமிஸ்ரா யமுனா தடாந்தே ப்ருசம் விலே புஸ் ச ஜகுர் குணாம்ஸ் தே –(நாராயணீயம் – 67/8) –
அனைவரும் ராதையுடன் கூட இருட்டும் வரை கானகத்தில் தேடிமார்கள் –
மனம் கலங்கி மீண்டும் யமுனைக் கரைக்கு வந்து புலம்பினார்கள்
தங்களுடைய கல்யாண குணங்களை பாடினார்கள் –
75. முகுந்த3 விஸ்லேஷ விமோஹிதாநாம் ஸம்ச்ரூயமாணாநி முஹு வநாந்தே
சமப்ரதா3ந்யாத்ம விதா3ம் அபூ4வந் ஸ்த்ரயந்த க3ந்த64நி வசாம்ஸி தாஸாம்
முகுந்தன் தனைப் பிrவுற்ற மோகத்தால் ஆய்ச்சியர்கள் உகுத்திட்ட இசைச் சொற்கள் வனம் பரவி
வேதாந்த சுகந்தத்தை வீசியதால் திருமாலின் சிந்தயையே அகங் கொண்ட தவத்தோர்க்கு ஆனந்தமே பெருகியதே
ேமாக்ஷமளிக்கும் பகவானின் பிரிவினால் மோகம் பெறுவிக்கப்பட்ட அவர்களுடைய அந்த கீதச் சொற்கள் காட்டில் எங்கும் மென்மேலும் கேட்கப்பட்டனவாகி-அவைகள் வேதாந்தங்களின் மணத்தை வீசுகின்றனவாகையால் எம்பெருமாைன உபாஸிக்கும்
யோகிகள் போன்றோருக்கு சாந்தி முதலிய குணங்களை அளிப்பவையாயின.
76. ஸ மாயயாஸ் ஆத்மாநம் அஸவ் பேரஷாம் ப்ரச்சாத்4ய ஸந்த3சயதி ப்ரஸாதா3த் இதீம்
அமத2ம் ப்ரத2யந் ப்rயாணாம் த்3ருஷ்டிம் சுபா4ம் தா3தும் இயேஷ தாஸாம் (ஸ்ரீமத் பாகவதம் 10/32)
பிறர் களுக்கு மாயையினால் மறைத்திடுவான் தன்னைத் தான் அருள் கொண்டே அவர் காண அமைந்திடுவான்
என்கின்ற பிரமாண நெறி வழி தன் பிரியைகளும் காணும்படி அருளிடவே இசைந்திட்டான் அன்புடனே கண்ணனுமே !
சர்வேஸ்வரேஸ்வரன் பிறக்குத் தன்னை மாயை யினால் மறைக்கின்றானாய் அனுக்ரஹம் உண்டாகும் போது காட்சி அளிக்கின்றவனாய்
உள்ள பிரமாணத்தை , அந்த பிரமாண சித்தாந்தத்தின் அர்ததத்தைத் தெரிவிப்பவன் போல் தனக்கு இஷ்டமான
கோப ஸ்த்ரீ களுக்கு அவன் ஷேமகரமான தன் காட்சியை யளிக்க இசைந்தான்.
77.தாஸாம் அத ஸ்மேர முகா2ம்பு3ஜநே ச்யாேமந பீதாம்ப3ர சித்ரதநே ஆவி ப3பூ4ேவ
ஸஹஸா புரஸ்தாத் மது4த்3விஷா மன்மத மன்மேநே ( ஸ்ரீமத் பாகவதம் 10/32/2)
அன்றலர்ந்த தாமரை போல் அப்போதே அவர் எதிரே புன்முறுவல் முகம் பூத்தும் பீதாம்பர ஆடை யோடும்
நன் நீல மேனியோடும் நல் எழிலோன் மதனுக்கே எண்ணரிய மதன் போல எம்பிரானே தோன்றினனே .
உடனே அவர் களுக்கு எதிரிலே கண்ணன் மலர்ந்த தாமரை போன்ற புன்சிரிப்புடன் கூடிய முகமுடையவனாய்
பீதாம்பரம் அணிவதால் விசித்ரமான நீல நிறமுடையவனாய் மன்மதனுக்கும் மன்மதனாம்
திருமேனியோடு தோன்றினான்.
(அமலனாதிபிரான் – கோல மா மணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோர் எழில் நீல மேனி)
ததா வ்யதா சங்குல மானஸா நாம் வ்ரஜாங்க நாநாம் கருணைக ஸிந்தோ
ஜகத் த்ரயீ மோஹன மோஹ நாத்மா த்வம் ப்ராது ராஸீ ரயி மந்த ஹாஸீ –(நாராயணீயம் 67/ 9)
கருணைக் கடலே துன்பம் அடைந்த மனத்தை உடைய கோபியரின் முன் மன்மதனையும்
மயங்கச் செய்யும் அழகுடன் மூ உலகங்களையும் மயக்கும் மந்த ஹாஸத்துடனும் தங்கள் தோன்றினீர்கள் –
78. தம் ஏகசித்தா: ப்ரதி ஸந்நிவ்ருத்தம் யாேதந ந்ருத்யந்தம் இவாத்புத நே கோ3ப்ய: புநஜாதம்
இவாத்மைநவ ப்ைரக்ஷந்த ஸம்மோத3 பேயாதிமக்3நா: (ஸ்ரீமத் பாகவதம் 10/32/3-10)
கண்ணனிடம் ஒரு மனத்தைக் கொண்டவராம் கன்னியரின் முன் மீண்டும் தோன்றிட்டான்
மறு பிறவி எடுத்தாற் போல் நன்னடையால் நாட்டியமே நிகழ்த்திடுவன் போன்றவனைக் கண்டவர்கள் ஆனந்தக் கடல்தனிலே மூழ்கினரே !
அவனிடமே தன் மனதை வைத்து விட்ட ஆய்ச்சியர்கள் மீண்டும் தோன்றியவனும் அற்புதமான நடையினால் நாட்டியமாடுகின்றவன்
போலிருப்பவனுமான அந்தக் கண்ணனை அதே உருவில் புனர் ஜன்மம் எடுத்தவனைப் போல் கண்டு ஆனந்தக் கடலில் மூழ்கி வந்தனர் .
79. நேவந்துரகோ க்ருஷபாண்டுராங்கீ3: தாபாச்ரு ஸந்தசித வஹ்நிதோயா:
த3த3ச கோ3பீ அவதார கோ3ப: ச்வாைஸ: த்ரீ லோகீம் இவ சோஷயந்தீ : (ஸ்ரீமத் பாகவதம்(10/32/3)
புதுப் பிறவியைப் போலே உடல் வெளுத்து பெருந்தவமே புரிந்தார் போல் வெதுவெதுக்கும் உடல் தன்னில்
வடித்திடும் கண்ண நீரே கொதித்து நெருப்பாம் மூச்சாலே கொளுத்திடுவார் மூவுலகை
யது குலத்தில் அவதரித்த எம்பிரானே கண்டனனே !
அவனை விட்டுப் பிரிந்த கோபிகள் அந்த ஓர் இரவிலேயே தவம் புரிகின்றவர்கள் போலாகி விட்டனர் .
எப்படி எனில் புதிய சந்திரனின் பிறை போல வெளுத்து சிறுத்திருந்தது அவர்கள் உடல்.
உடலில் தாபமும் கண்ண நீரும் காணப்பட்ட போது நெருப்பும் நீரும் அருகில் வைத்திருப்பவர் போலிருந்தன. தங்கள் மூச்சுக் காற்றினாலே மூவுலங்கைளயும் உலர்த்திடவே போலிருந்தன. -இந் நிலைமையிலே அவர்களை அந்த யதுநந்தனன் கண்டான்.
80. அவித்4யைதக: ப்ரணயாபராத64 யோகை 3 அலக்ஷ்யோ யுக3பத் ப்ரயுக்தை :
ஆவஜித ப்4ரூத4நுஷாம் அமோகை 4: ஏணீ த்3ருஷாம் ஈக்ஷண சித்ரபுங்கை :
அன்பினாலே குற்றமுள்ளான் யோகியானாலும் காணவாகா கண்ணன் தனைக் கண்டவராய்
கரும் புருவ வில் வளைத்து கண்ணோக்காம் கணை தொடுத்து கன்னியர்கள் ஒருசேர கண்ணன் மேல்
விடுத்தாரே குறி ஓன்றும் தப்பாமே !
அன்புடனிருந்தும் தங்கைள விட்டுப் பிரிந்ததாலே குற்றம் செய்திருக்கும் கண்ணனை , சாஸ்திரங்களில் ஓதின
யோகங்களுக்கும் காணவாகாதனவனை இந்த இளமான் கண்ணிகள் புருவ வில்லை வளைத்து விடப்பட்ட
வீணாகாத கடாக்ஷங்களாகிற கணைகளாலே எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரே சமயத்தில் அடிப்பவராயின.
விலாஸ சாடூக்தி விலோகநாத்4ைய: ஆநந்த3யந் ஸாந்த்வநம் ஆசசார (ஸ்ரீமத் பாகவதம் (10/32/17-22)
ஆனந்தமே தருவானாய் ஆய்ச்சியரின் தெளிவான மனத்திற்கோர் மருந்தாயும் ஆறுதலை மிகுந்தளித்தான் கிருட்டினனே !
அப் பெண்மணிகளின் மனத் தெளிவுக்கு உயிரளிக்கும் மருந்தாயும், ஒருத்திக்குச் செய்வது மற்ற ஓருத்திக்குத் தெரியாதபடியுமான விலாஸம்,
சமத்காரமான பேச்சு, பார்வை முதலியவற்றால் ஆனந்தப் படுத்து கின்றவனாய் ஸமாதானம் செய்பவனானான்.
அயி குமாரிகா(ராதே) நைவ ஶங்க்யதாம்
கடிநதா மயி(ராதே) ப்ரேமகாதரே |
மயி து சேதஸோ(ராதே) வோ(அ)நுவ்ருத்தயே
க்ருதமிதம் மயா(க்ருஷ்ணா)இத்யூசிவாந் பவாந் || (நாராயணீயம் 68/8,)||
பெண்களே! கல்நெஞ்சம் படைத்தவன் என்று என்னை சந்தேகப்படாதீர்கள். உங்கள் அதிக அன்பினால் பயந்து,
உங்களுடைய மனம் என்னையே நாடவேண்டும் என்று நான் மறைந்து சென்றேன் என்று அவர்களிடம் கூறினீர்கள்.
அயி நிஶம்யதாம்(ராதே) ஜீவவல்லபா:
ப்ரியதமோ ஜன: (ராதே) நேத்ருஶோ மம |
ததிஹ ரம்யதாம்(ராதே) ரம்யயாமிநீஷு
அநுபரோதமிதி(க்ருஷ்ணா)ஆலபோ விபோ || (நாராயணீயம் 68/9)||
உயிரினும் மேலான கோபியர்களே! உங்களைவிட என்னிடம் அன்பு கொண்டவர் எவரும் கிடையாது.
ஆகையால், நிலவொளி வீசும் இந்த இரவில், என்னுடன் தடையின்றி விளையாடுங்கள் என்று கூறினீர்.
82. தாஸாம் தத3ங்க3 வ்யதிஷங்க3 லோபா4த் ஸரைந்த்4ரிகா வ்ருத்திம் உபே யுஷ6ணாம் விரக்த
நித்4யயே பத3: ஸ ராகீ3 ராகா3தி4காம் ப்ராஸ்துத ராஸ லீ லாம் (ஸ்ரீமத் பாகவதம்(10/33/2-25)
பற்றற்றா மனனம் செய் பாதத்தான் ஆய்ச்சியர் மேல் பற்றுடையான் தன்னை யணி பண்ணிடவே
தன்னுடலைப் பற்றிடவே நெருங்குகின்ற பெண்களிடம் காதல்தீ பற்றிடவே குரவை எனும் பெருமாட்டம் தொடங்கினனே !
வைராக்யம் உடையவர்களாலே த்யானம் பண்ணப்படும் திருவடி யுடைய அவன் அவர்களிடம் காதலை யுடையவனாய்
தன்னுடைய திருமேனியின் சேர்த்தியிலுள்ள நகை யாலே தனக்குப் பல அலங்காரங்களைப் பண்ணுகிறாப் போல நெருங்கும்
அப் பெண்மணிகளுக்கு மேன் மேலும் காதல் கிளறும்படியான குரவை யாட்டம் ஆடத் தொடங்கினான்.
83. தத3க்3ர ஹஸ்த க்3ரஹணாத்திந6நாம் ஸ ஸவ்யேதா த3க்ஷிணதஸ்ச திஷ்டந் ப3பா4ர
வித்4யுத் வ்யவதா4ந பா4ஜாம் வாத்யாஜுஷாம் வாரிமுசாம் அபி4க்2யாம்
திருக் கரத்தின் முனை பற்றிச் சீர் நடனம் புrந்திடவே விருப்பமுடை ஆய்ச்சியரை வலம் வந்தான்
அவர்களது இரு மருங்கும் உருவம் பல எடுத்தனனே
கண்ணன் தான் கரு முகில்கள் மின்னல்களுக் கிடைப்படுதல் ஒத்ததுவே !
தன்னுைடய திருக் கை முனையைப் பிடித்து ஆட ஆசைப்பட்ட அந்த ஸ்த்ரீகளுக்கு இரு பக்கத்திலும் தான்
பல ரூபமாய் நின்று மண்டலாகாரமாக அவர் களோடு சுற்றுகின்றானாய், இடையிடை
மின்னல்கள் பொருந்தி சுழல் காற்றில் அகப்பட்ட மேகங்கள் போல் விளங்கினான்.
தாவ தேவ க்ருத மண்டநே கலித கஞ்சு லீக குச மண்டலே
கண்ட லோல மணி குண்டலே யுவதி மண்டலே அதி பரி மண்டலே
அந்தரா ஸகல ஸூ ந்தரீ யுகல மிந்திரா ரமண சஞ்சரன்
மஞ் ஜுலாம் தத நு ராஸ கேலி மயி கஞ்ஜ நாப சமு பாததா –-(நாராயணீயம் 69.2)
அப்போதே மார்புக் கச்சையை இறுக்கிக் கட்டிக் கொண்டு தங்களை அணிகலன்களால்
அலங்கரித்துக் கொண்டு கோபியர் உங்களைச் சுற்றி வட்டமாய் நின்றார்கள்
தாங்களும் அப் பெண்களின் இடையே -இரு கோபியர்களுக்கு நடுவில் ஒரு கிருஷ்ணன் –
இரு கிருஷ்ணருக்கு நடுவில் ஒரு கோபிகை -என்னும் படி நின்று கொண்டு
நர்த்தனம் செய்து கொண்டு ராஸ க்ரீடை செய்ய ஆரம்பித்தீர்கள் –
ஜயதி லளித வ்ருத்திம் சிஷிதோ வல்லவீநாம் –
சிதில வலய சிஞ்ஞா சீதளைர் ஹஸ்த தாளை
அகில புவன ரஷா கோப வேஷஸ்ய விஷ்ணோ —
அதர மணி ஸூதாயா மம்சவான் வம்ச நால–(கோபால விம்சதி 16)
கோபிமார்களின் கை வளையல்கள் த்வனியோடு-குளிர்ந்த கையால் போடும் தாளங்களால்-லளிதம்-என்ற நடனம் கற்பிக்கப் பட்டதும்
ஒரு கோபி ஒரு கண்ணன் -ஒரு கோபி என்று குரவைக் கூத்து ராஸக்ரீடை ஆடி –
ஸமஸ்த லோக ரக்ஷணார்த்தமாக ஆயர் குலத்தினில்-கோவலனாய் கோவலரரோடு – வந்து பிறந்த
ஸ்ரீ மஹா விஷ்ணுவுடைய திருப் பவள அதர ரசத்தில் ஆழ்ந்து அனுபவிக்கும் திருப் புல்லாங்குழல்
மிக பெருமை பெற்று விளங்க -அதற்கு மங்களா சாசனம் -இந்த சேர்த்தி பல்லாண்டு வாழியே -என்றபடி –
கண்ணனும் இடைப் பெண்களும் ராசக் க்ரீடையில் ஈடுபடுகின்றனர் .
அத்தனை கோபிகளுக்கும் ஒவ்வொருத்திக்கு ஒவ்வொரு திருமேனிகளை படைத்துக் கொள்கிறான் கண்ணன்.
ஒரு கோபியும் ஒரு கண்ணனுமாக நின்று ராசக்கிரீடை புரிகின்றனர் .
இடைப் பெண்கள் தங்கள் கைகளில் வளை குலுங்க தாளம் போடுகின்றனர்
அப்போது வளைகள் ஒலிக்கின்றன. இந்த ஒலி அவர்கள் போடும் தாள ஓலி யோடு கலந்து மிக இனியதாகின்றது.
இவர்கள் போடும் கைத் தாளங்கள் புல்லாங்குழலுக்கு அபிநய சாஸ்திரத்தில் உள்ள லளிதம் என்னும் முறையைக் கற்பிக்கின்றது. …)
84. த்3வேயா த்3வேயா ஏகதயா ஸ தாஸாம் மத்4ேய ஸ்த்திேதா மண்டல ராஸ ந்ருத்தே கரத்3வய ஸ்பச
ரேஸந காந்தா: ப்ரத்யேகம் ஆநந்த்4ய ப்4ருசம் நநந்த3 (நாராயணீயம் 69/9) (ஸ்ரீ மத்பாகவதம் 10/33/3)
குரவையிலே வட்டமிட்டுக் கூத்திட்டான் கண்ணனுமே ஒரு வொருத்தி நடுவினிலே ஓருருவாம் உரு வெடுத்து
இரு கரமும் ஓரொருத்தி இணை பிடித்து நடமாடி பெரு மகிழ்வு அடைந்திடவே பெருங்களிப்பு எய்திட்டான்!
வட்டமாய்க் குரவை கோத்துச் செய்யும் ஆட்டத்தில் இருவருக்கு இடை யிலே தான் ஓருவன், ஒவ்வொருத்தியும்
தன்னிடை யிலே என்ற கணக்கிலே நிற்கின்றானாய் ஒவ்வொருத்தியும் தன் இரு கைகளையும் பற்றிக்
களித்திருக்கும்படி செய்து எல்லோருடைய கைகளையும் தான் ஒருவனே பிடிப்பதில் ஆனந்தம் கொண்டவனானான்.
85. அபாரம் ஆவத்தயதா ரஸாப்3தி4ம் ராமாநுஜோ ராஸஜவேந த63வ்யந்
பதா3ச்ரிதாநாம் ப்4ரமஷாந்தி ஹேது: ப்ரியா ஸஹஸ்ரம் ப்4ரமயாஞ்சகார
மலரடியை அண்டுவரை மயக்கமுறச் செய்வனவன் பலராம இளவலவன் முடிவற்ற
ரஸக்கடலே கலக்கமுறும் குரவை யிலே கடிதாடி திளைத்தவனாய் பலநூறு ஆய்ச்சியரும் மயக்கமுறச் செய்தனேன!
தன் திருவடிகளை அண்டினவனுக்கு இந்த சம்ஸார பந்தம் எனும் சக்கரத்தை போக்குகின்றவனும்
பலராமனின் தம்பியான கண்ணன் கரை யற்ற ரஸக்கடலைக் கலக்கும் குரவை யாட்ட சுற்றிலே
விளையாடுகின்றவனாய் ஆயிரம் காதலிகளையும் சக்கரமாகச் சுற்ற வைத்தான்.
(பிரமத்தைப் போக்குபவன் அவர்களை பிரமம் பெற வைத்தான்)
86. ஸ்வமாயயா கூ4ணயேதா மஹத்யா விச்வாநி பூ4தாநி விபோ 4 அஜஸ்ரம்
ராமாஜநம் ராஸவசம் விதா4ய ஸ்வஸ்ய ஸ்வயம் ப்ராப நித3சனத்வம்
மகத்தான தன்னுடைய மாயை யினால் உயிர் அனைத்தும் சகடமாம் துய வாழ்வில் சுழல்விக்கும் எம்பிரானே
அகப்படுத்தி ஆய்ச்சியரை ஆட்டத்தில் சுழல்வித்து நிகரானான் தான் தனக்கே நினைப்பrய செயலுக்கே !
பெரிய ப்ரக்ருதி என்கின்ற தன் மாயையினாலே எல்லா ப்ராணிகளையும் எப்போதும் ஆட்டுவிக்கின்ற எம்பெருமான்
ஆயிரம் பெண் மணிகைள ஆட்டத்திற்கு வசப்படுத்தும் கண்ணனாகி அதை நடத்தும் தனக்கு இதை நடத்தும் தானே உதாரணமானான்.
87. ஸ்வபாத3 பாம்ஸு ஸ்நபிதாக்ருதீ நாம் ஸ்வித்4யந்முகீநாம் வ்ரஜ ஸுந்த3ரி நாம்
லம்பா3லகாநாம் லலிதஸ்மிதாநாம் லாபா4த் ஸ்வயம் லப்த4 மநோ ரதோ 2பூ4த்
திருவடியின் துகள்களாலே தழுவலுற்ற உடல்களாலும் அரும்பலுறும் வியர்வை யினால் எழில் முகங்கள்
விளங்கிடவே திருமுடிகள் முன் தொங்க நகைப்பும் சேர் ஆய்ச்சியரின் உருவினையே கண்டான் தன் உளக் கருத்தும் நிறை வுறவே !
கண்ணன் ஆடும் போது விரைவில் விழுந்த தன் திருவடித் தூள்கள் உடல் முழுவதும் பரவப் பெற்று முகம் வியர்வை யுற்று,
முன் மயிர்கள் முகத்திலே தொங்க அழகிய சிரிப்புடன் இருக்கும் இடைப் பெண் மணிகளுடன் கூடி அவர்களுடைய
அந்த நிலமையைக் கண்டதால் தன் மநோ ரத பூர்த்தியைப் பெற்றான்.
88. ஸ ந்ருத்த கீ3தநே விஹாரயூநா கோ3பீஜைந அந்தரி தநே ப3த்4த3ம்
தத் அத்3பு4த ப்ரஸ்திதி ராஸசக்ரம் ஜவாத் அலக்ஷ்யாந்தரம் ஆப3பா4ேஸ
கட்டிளமைக் கண்ணனுமே கன்னியர்கள் இடை யிடையே நட்டமிட்டும் பாட்டு இசைத்தும் நடத்திட்ட குரவை தன்னின்
வட்டத்தின் அதி சுழலால் இடைவெளியே தெரியாமல் அற்புதமோ சக்கரமே அவ்விடத்தே தோன்றியதே !
இடை யிடை கோபஸ்தரீ களோடு கலந்து பல உருவம் எடுத்து பாட்டும் ஆட்டமுமாய் விளையாடும் கண்ணனாலே ஏற்படுத்தப்பட்ட
அற்புதமான சஞ்சாரம் பொருந்திய குரவை வட்டமானது அதிக விரைவினாலே இடை வெளி தெரியாமல் ஒரே சக்கரமாய்த் தோன்றிற்று.
(ஆடி யசைந்து ஆய் மடவாரோடு நீ போய் கூடிக் குரவை பிணைந்த கோமளப் பிள்ளாய்! –பெரிய திருமொழி 10/8/9))
89. ஜகு3: ஸஹஷம் தி3வி ேத3வகந்யா: தி3வ்யாஸ்ததா3 து3ந்து3ப4ய ப்ரேணது3:
பபாத கல்பத்3ரும புஷ்பவ்ருஷ்டி: ஸதச்சிேத ஸம்ச்rத ராஸlேல (நாராயணீ யம் 69/3)
விண்ணுலக வனிதைகள் மகிழ்ச்சியுடன் இசைத்திடவே விண்ணுலக துந்துபிகள் வெகுவாக கோஷமிட
மண்ணுலகத் தேவர்கள் மா குரவைக் கண்டு ஏத்தும் கண்ணன் மேல் கற்பகப்பூ கனமழையை ய பொழிந்ததுவே ! (ஸ்ரீமத்பாகவதம் 10/33/18)
அப்போது வானத்தில் தெய்வப் பெண்கள் தோன்றி சந்தோஷத்துடன் ஆடலுக்கேற்ப பாடினாகள்.
மேலுகத்திய பேரி வாத்யங்கள் கோஷித்தன.
குரவை யாட்டத்தில் ஈடுபட்டு நல்லோர்களாலே ஆராதிக்கப்படும் கண்ணன் மேல்
கற்பக விருட்சத்தின் பூக்கள் சொரியப் பெற்றன.
வாஸூ தேவ தவ பாஸமாநமிஹ ராஸ கேலி ரஸ ஸுவ்ரபம்
தூரதோ அபி கலு நாரதா கதி தமா கலய்ய குது காகுலா
வேஷ பூஷண விலாஸ பேசலே விலாஸி நீச தச மாவ்ருதா
நாகதோ யுக பதா கதா வியதி வேகதோ அத ஸூர மண்டல –(நாராயணீ யம் 69/3) –
வாஸூ தேவரின் புத்ரனே -நாரதர் தங்கள் ராஸக்ரீடையின் அழகை கூறினார் –
அதைக்கேட்டு ஸந்தோஷம் அடைந்த தேவர்கள்
அழகு ஆபரணம் இவற்றால் சிறந்த தேவ மங்கையர் உடன் வேகமாய் வந்து ஆகாசத்தில் சூழ்ந்து நின்றனர் –
90. க்3ருஹீத ஹஸ்த த்3விதயா: ஸlலம் மித்யாபு4ஜங்ேகந ம்ருகீத்3ருசஸ்த்தா:
பrப்4ரமந்த்யோ விபரீத வ்ருத்த்யா ப்ரக்ராந்த ராஸாம் பு4வம் அப்4யஜாநந்
மாமாலால் பேதுற்று மாற்றானின் மனை விரும்பும் காமுகன் போல் வேடமிடும் கண்ணன் தன்
இரு கரமும் தாமுகந்தே பற்றியுள்ள நங்கை களே சுழன்றாலும் பூமியே தான் மறு புறமாய்ச் சுற்றுவதாய் எண்ணினரே !
பிற ஸ்த்ரீ களிடம் பற்றுள்ள புருஷைனப் போல் தன்னைக் காண்பிக்கும் கண்ணனால் இரு கைகளிலும் விநோதமாக பிடிக்கப்பட்டிருக்கும் ஸ்த்ரீகள் உண்மையிலே தாங்களே சுற்றினாலும் பூமி தன்னைச் சுற்றுவதாக கருதினர்
91. மேநாஜ்ஞ மல்l ஹஸிேதந தாஸாம் ரம்யேண க்ருஷ்ணோ ரஜநீ முகேந
அந்யாத்3ருசீம் ப்ரதிம் அநந்ய யோகா3த் ஆபாத3யிஷ்யந் விரராம ராஸாத்
பற்றற்றே வேறு எதிலும் பெண்களவர் தன்னிடமே பற்றுளராய் இருந்ததனால் மல்லிைகப்பூ மணங்கமழ
உற்றவெழில் மாலை வர உணர்ந்தவனாய் அவர் தமக்கு மற்றவொரு களிப்பளிக்க விலக்கிட்டான் குரவை தானே !
அந்த கோபஸ்த்ரீகள் தன்னிடேம பற்று உடையவராய் இருந்ததனால் கண்ணன் மநோ கரமான மல்லி மலர்கள் விளங்கவான
அழகிய மாலைக் காலத்தைக் கண்டு அவர்களுக்கு வேறு வகையான ஆனந்தத்தை விளைவிப்பவனாய் குரவை யாட்டத்தினின்று ஓய்ந்தான்.
கான மீச விரதம் க்ரமேண கில வாத்ய மேலநமு பாரதம்
ப்ரஹ்ம சம்மத ரஸா குலா ஸதஸி கேவலம் நன்ருது ரங்க நா
நாவிதந் நபி ச நீவி காம் கிமபி குந்தலீ மபி ச கஞ்சு லீம்
ஜ்யோதிஷாம் அபி கதம்பகம் திவி விலம்பிதம் கிம பரம் ப்ருவே –(நாராயணீயம் 69/8) –
பாட்டு நின்றது -வாத்தியங்களும் ஓய்ந்தன -ப்ரஹ்மானந்த ரஸத்தில் மூழ்கிய கோபிகள்
மட்டும் ஆடிக் கொண்டு இருந்தனர் -அவர்கள் மேலாடை கலைந்ததையோ ரவிக்கை அவிழ்வதையோ
கச்சத்தின் முடிச்சு அவிழ்வதையோ அறிய வில்லை –
வானில் நக்ஷத்ர கூட்டங்களும் நின்று விட்டன-என்ன சொல்வேன் –
92. உத்பி4ந்ந க4மாம்பு3கணம் விஹாராத் தாஸாம் கரஸ்பச ரஸேந ஸைநம்
லதாக்3ருேஹ நந்த3ந க3ப4ேஷோபி4நி ஆஸீ நம் அந்வாஸத கோ3பகந்யா:
ஆய்ச்சியரோ டாட்டமிட்டும் அவர் தமது கரம் பிடித்தும் ஓய்விலாத களைப்பதனால் உடலெல்லாம் வியர் த்திடவே
வாய்த்த எழில் கொடிகள் சூழ் மண்டபத்தில் கண்ணனே தான் சாய்ந்திருக்கக் கண்டவனைச் சூழ்ந்தனரே ஆய்ச்சியரே !
கோப கன்னிகள் தங்களோடு வெகுநேரம் விளையாடியதாலும் தங்கள் கைகளைத் தொட்டு வந்ததாலும்
வியர்வைப் பொட்டுகள் நிறைந்து, திவ்ய நந்தவனம் போல அழகிய ஒரு கொடி மண்டபத்தில் அமர்ந்திருக்கும் கண்ணனைச் சூழ்ந்து உட்கார்ந்தனர் .
93. ஸ்வலம்பி4ைதச் சித்ர பலாச புஷ்பை : ஸம்வவீஜ்யமாநோ விடைப:
ப்ரியாபி4: நித3சயாமாஸ வநாந்தராலோ நீலாத்3ரிம் உத்ப்4ராந்த மயூரப்3ருந்த3ம்
தான்தானே அளித்திட்ட தளிர்ப்பூக்கள் அடர்ந்தவையாம் நீண்ட தான் கிளைகள் தாம் நேர்த்தியான விசிறியாக
கான் நடுவில் கண்ணனுக்கே காதலியவர் வீசிடவே கான் மயில்கள் சூழ்ந்தெவாரு கருமலை போல் விளங்கினனே !
கண்ணன் தான் பறித்து அளித்த இலைகளும் பூக்களும் அடர்ந்த கிளைகளாகிய விசிறிகளைக் கொண்டு தன் காதலிகளாலே விசிறப்பட்டவனாய்,
அவ் வனத்தின் இடையில் மயில்கள் கூட்டமாக மேலே பறந்து அமர்ந்த நீலமலை போல் பொலிந்தான்.
94. விசித்ர லீலாஹித வேபதூ2நாம் தாஸாம் அநாஸாதித விச்ரமாணாம்
தாேபாபசாந்த்யை தபநாத்மஜாயாம் ஆஹ்லாத3நீம் அத்3பி4: இயேஷ லீலாம்
பலவகையாம் ஆட்டங்களால் பெண்கள் எல்லாம் உடல் நடுங்கி களைப்புற்ற நிலை கண்டு கண்ணன் அவர் தாபம் எல்லாம்
களைந்திடவே எண்ணியனாய் காளிந்தி நதியினிலே திளைத்தாடி ஜலக்ரீடை செய்திடவே விரும்பினனே !
பலவகையான விளையாட்டுக்களால் உடல் நடுக்கம் உற்று களைப்பாறாமல் இருக்கும் அந்த ஆய்ச்சிகளின்
தாபத்தைப் போக்குவதற்காக யமுைன யாற்றிலே ஆனந்தமாக ஜலக்ரீடை செய்ய விரும்பினான்.
95. முகே2ந தஸ்ய த்3விஜராஜ பா4ஸா தாராபி4ராேமண தேமாபேஹந ப்ரமோதே 3தி4ம்
வத4யதா ப்ரியாணாம் ஸம்சிக்ஷிேப தத்ர ஸேராஜகாந்தி:
காதலியரை ஆனந்தக் கடல் மூழ்க வைப்பதுமாய் பேதமையாம் இருளகற்றி பேரறிவு ஊட்டுவதாய்
நாதனவன் முக ஒளியே திங்கள் போல் விளங்குவதாய் போதலர்ந்த தாமரைகள் பொலிவிழக்கச் செய்ததுவே !
கண்ணன் யமுனையில் இறங்கிய போது, காதலிகளுக்கு ஆனந்தக் கடலை பொங்க வைப்பதும் அஞ்ஞான இருளை போக்குவதும்,
கருவிழியினால் அழகியதுமான அவனது திருமுகத்தைக் கண்டதும் ஆற்றில் இருந்த தாமரைகள் எல்லாம் மூடிக் கொண்டன.
கண்ணனின் திருமுகத்தை சந்திரனுக்கு ஒப்பிடுகிறார் .
சந்திரனானவன் கடலைப் பொங்க வைப்பவன். கண்ணனும் காதலிகளின் உள்ளத்தில் ஆனந்தக் கடைலப் பொங்கச் செய்கிறார் .
உலகத்தில் இருளை நீக்குபவன் சந்திரன். அஞ்ஞான இருளை நீக்குபவன் கிருஷ்ண சந்திரன்.
தாராபிராமா என்ற சொல் முகத்துக்கு அடை மொழியாகிற போது கரு விழிகளால் அழகான என்ற பொருளைத் தரும்.
அதனால் அழகான கரு விழிகைள உடைய கண்ணன்.
சந்திரனுக்கு வரும் போது நக்ஷத்திரங்களால் சூழப்பட்டவன் என்று பொருள்.
மாலை நேரத்தில் தாமரைகள் மூடிக் கொள்ளும். ஆகவே சந்திரன் வரும் போது தாமைரகள் மூடிக் கொள்வது இயல்பே .
ஆகவே இந்த கிருஷ்ண சந்திரனின் அழகினைக் கண்டதும் யமுனையில் இருந்த தாமரைகள் அவன் முக ஒளியாலே
தங்கள் ஒளி குறைந்து மூடிக் கொண்டனவாம்.
96. ஸந்த்4யாக4நாப4: ஸ ததா3 ப்ரியாணாம் மத்யே ப3ெபௗ4 வாரஜ ரேணுதாம்ரை :
ச்ருங்கா3ர திக்3ைத4 இவ த்3ருஷ்டிபாைத: ச்ருங்ேகா3த3ைக: ஆப்லுத சித்ரேத3ஹ:
பங்கயப்பூத் தாதுபோல படுஞ்சிவப்பு நிறைந்ததுவாய் சிங்கார ரசம் சேர்ந்த காதலியர் நோக்குபோலும்
அங்கவரால் பீச்சிட்ட அணிநீரால் நனைந்தவனே மங்களமாம் அந்திவேளை முகில் போல விளங்கினனே !
ஜலக்க்ரீடையில் கண்ணன் தாமரை பூந்தாதுக்கள் சேர்ந்து சிவந்ததும், சிங்கார ரஸம் கலந்த காதலிகளின்
கண் பார்வைகள் போன்றதுமான பீச்சுக் குழல் ஜலத்தினால் திரு மேனி முழுவதிலும் நனைக்கப் பட்டவனாய்
மாலைக் காலத்திய மேகம் போல் விளங்கினான்.
கேலி பேத பரி லோலிதாபி ரதி லாலிதாபி ரபலாலிபி
ஸ்வைர மீச நநு ஸூரஜா பயஸி சாரு நாம விஹ்ருதம் வியதா
காநநே அபி நிஷா விஸாரி சீதல கிசோர மாருத மநோ ஹரே
ஸூந ஸுவ்ரப மயே விலே சித விலாஸ நீ சத வி மோஹ நம் –( நாராயணீயம் தசகம் 69/10) (ஜலக்ரீடை )–
மிகவும் அழகான சரீரம் உள்ளவர்களும் சோர்வை அடைந்தவர்களான
அப்பெண்களுடன் தங்கள் விளையாடினீர்கள் –
அக்காட்டில் மந்த மாருதம் வீசும் போது வந்த பூக்களின் வாசனையால்
அப்பெண்களை மயக்கினீர்கள் –
பிரத்யா லீட ஸ்திதி மதிகதாம் ப்ராப்த காடாங்க பாலிம்-
பஸ்ஸா தீஷன் மிலித நயனாம் ப்ரேயஸீம் ப்ரேஷமாணா
பஸ்திரா யந்த்ர ப்ரணிஹித கரோ பக்த ஜீவாது ரவ்யாத்-
வாரி கிரீடா நிபிட வசநோ வல்லவீ வல்லபோ ந-(கோபால விம்சதி `19)-
பின்பக்கம் கண்ணனது இறுகிய ஆலிங்கனத்தைப் பெற்றவளும் -இந்த ஆனந்த சாகரத்தில் மூழ்கி
முழு நோக்காக அன்றி கடைக் கண்ணால்
கண்ணனது கடாக்ஷம் பெற்றவளுமான கோபியையே பார்த்துக் கொண்டே
நீர் பீச்சும் குழலை திருக் கையிலே வைத்து ஜல க்ரீடை செய்ய இறுக்கிய திரு ஆடை அணிந்தவனும்
திருக் கால்களை வசதியான நிலையில்-ஒரு திருக் காலை முன்னும் மற்றொரு திருக் காலை பின்னும் வைத்து –
பிரத்யா லீடமாக -வைத்து அருளும் -பிரணயியான கண்ணன் –
ஆஸ்ரிதர்களை உஜ்ஜீவனம் செய்யும் பேஷஜம் -நம்மை ரக்ஷிக்கட்டும்
97. ஸ பத்மிநீ நாம் ஸலிலஸ்திதாநாம் சகார ஸம்மீலநம் ஆஷு தாஸாம் துஷாரஜாைல:
துஹிநாம்சு சவ்ம்ய: காேமாபேநதா கரயந்த்ர முக்தை :
உந்துவிக்க வேட்கை தனை ஒண் கரத்தால் பீச்சிட்ட செந் நிறத்து நீராலே நங்கையர் கண் முடுவித்தான்
சந்திரன் தன் தண்மையான கதிர் களினால் நீரை யோட செந்தாமைர இதழ்மூடச் செய்வதினை ஒத்ததுவே !
அவன் அப்பொழுது வேட்க்கையை விளைப்பானாய் தன் கையிலிருந்து பீச்சப்பட்ட நீரைக் கொண்டே
நீரில் நிற்கும் பத்மினி ஜாதி ஸ்த்ரீகளான கோபிகளை சந்திரன் தன்னுைடய
கிரணங்களிலிருந்து விடப்பட்ட பனிகளைக் கண்ட தாமரைகளைப் போல் கண் மூடச் செய்தான். (கோபால விம்சதி 19)
98. படீ அபங்கை : ப்ரதிபந்ந க3ங்கா3ம் சோணாந்விதாம் குங்கும ஸங்க3மணே கஸ்தூரி காபி4:
ப்ரசிதாத்ம வணாம் க்ருஷ்ணப்ரியா: க்ருஷ்ண நதீ3ம் விதேநு:
நந்தன் மகன் கண்ணன் தனை நேசிக்கும் நங்கையரின் சந்தனத்தால் கங்கையுடன் சேர்ந்ததுவோ யமுனை யுமே ?
குங்குமத்தால் சோணை யுடன் கலந்ததுவோ அதுதானே ? தன்னியல்பாம் நிறமுற்றோ கஸ்தூரி கலப்பாலா ?
கண்ணனின் காதலிகள் கறுப்பான யமுனை யாற்றை , தாங்கள் அணிந்த சந்தனக் குழம்பின் கலப்பாலா கங்கையோடு சேர்ந்ததாகவும்
குங்குமத்தின் சேர்க்கையினாலே சோணம் ஆற்றோடு சேர்ந்ததாகவும் கஸ்தூரிகளின் கலப்பாலே
தன் இயற்கை நிறத்தை மிகப் பெற்றதுமாகவும் செய்தார்கள். (சோணை தற்போது சோன் என்ற பெயரோடு பீகாரில் ஓடுகிறது)
99. அகாலஜாத ப்ரதிமே ந்து3 ஜாலாந் ஆகீண மித்2யாச பராம்ஸ் தரங்கா3ந்
வக்த்ராக்ஷி வேக்ஷாருஹ பி3ம்ப3ேயாகா3த் அகல்பயந் கல்பித சக்ரவாகாந்
ஆய்ச்சியர் தம் முகங்களினால் அங்கண்களால் தனங்களினால் பாயும் நதி அலைகளிலே பல மதிகள் தோன்றினவோ ?
பாய்ந்தூடிச் செல்கின்ற மீன்கள் தாம் தோன்றினவோ ? வாய்த்தனவோ நல் சக்கிர வாகப் புள் பல பலவே ?
அவர்கள் தங்கள் முகம், கண்கள், ஸ்தனங்கள் இவை களுடைய சேர்க்கை யினாலே ஆற்றின் அலைகளை
அகாலத்தில் எழுந்த பல சந்திர பிம்பங்கைளயும், பலவிடங்களில் பரவிய மீன்களையும்,
சக்ரவாக பக்ஷிகளையும் உடை யன போல் ஆக்கின.
100. ஸவிப்4ரமா சாருபேயாத4ராபா4 தாபி4 : ஸமம் ஸூயஸுதா ப்ரேபேத3
அலப்3த4 பூவம் தத3நந்ய லப்4யம் க்ருஷ்ணோப போகேநே க்ருதாத்த பா4வம்
கண்ணனுடைச் சேர்க்கையினால் கண்டறியாப் பேர் இன்பமும் இன்னொருவர் எய்திடாத ஏற்றமும் தாம் பெற்றனரே
கண்ணுக்கு விருந்தாகும் கரை காணா எழிலுடைத்த வண்ண மிகு ஆய்ச்சியரும் யமுனை யுமே ஒருமித்தே !
கண்ணனோடு புணர்ந்து அந்தக் காதலிகள் இதற்கு முன் பெறப்படாததும், வேறே ஓருவரால் அடையவாகாததுமான
புருஷார்த்தத்தை அடைந்தது போல், யமுனையும் அதைப் பெற்றாள்.
இங்கே காதலிகளையும் யமுனையையும் ஒப்பிடுகிறார் ஸ்வாமி.
ஸவிப்ரமா – அழகிய விலாசம் உடையவர்கள்
சாருபயோதராபா – அழகிய ஸ்தனங்கைள உடையவர்கள்
யமுனையை ஒப்பிடும்போது
ஸவிப்ரமா – நீர்ச் சுழிகளை உடையது, பக்ஷிகளைக் கொண்டது.
சாருபயோதராபா – இருண்ட மேகம் போன்ற நீரைக் கொண்டது
101. நிதம்ப3 வேக்ஷாஜ நிரூடவ்ருத்4தி3: மத்யே க்ருஷா ஸம்ச்ரித நிம்நநாபி4:
விலோல பத்மாக்3ர தரங்க3 ஹஸ்தா தாஸாம் அபூ4த் அந்யதமேவ ஸாபி
ஸ்தனங்கள் போல் பெருக் கெடுத்தும் நிதம்பம் போல் அகல்வாயும் வனக் கொடி போல் மெலிவான மத்தியிலே குறுகியுமாய்
நினைப்பrய ஆழமான நாபியைப் போல் சுழல்களுமாய் எனப் பலவாய் விளங்கினளே ஆய்ச்சியர் போல் யமுனை யுமே !
மீண்டும் யமுனை யானது அந்த ஸ்த்ரீ களில் ஒருத்திபோல் ஆயிற்று. எதனால் எனில்,
அவர்கள் ஸ்தனங்களாலும், நிதம்பங்களாலும் (ப்ருஷ்டங்கள்) உடல் வ்ருத்தியை யடைந்தவர்கள் .
மெல்லிய இடை உடையவர்கள். ஆழமான நாபியை உடையவர்கள்.
தாமரை போன்ற முன் கையை உடையவர்கள்.
யமுனையும் அவர்களுடடைய ஸ்தனங்கள் சேர்ந்த விடத்திலே வ்ருத்தியை அடைந்தும்,
ஸ்தனங்களும் நிதம்பங்களும் படாத இடத்தில் நடுவிலே குறைந்தும்,
(அவர்கள் உள்ள இடத்திலே பெருகியும், நடு நடுவிலே குறைந்தும்)
ஆழமான நாவியில் புகுந்தும், தாமரைகள் கலந்த அலைகளால் கைகளை உடையது போலவும் விளங்கிற்று.
102–அஸூயேயவ ப்ரமதா3 ஜநாநாம் லாக்ஷாஞ்ச நாத நேவிலாபயந்தி
நிஸக3 ஷோபா4திசய ப்ரகாசாத் க்ருதோ பகாரேவ நத ப3பூ4வ
வஞ்சியரைப் பெறாததினால் யமுனையும் அப் பாவையரின் அஞ்சனமும் பாதவணி அஞ்செம்மைப் பூச்சினையும்
நெஞ்சணிந்த சந்தனமும் நீக்கியதும் நலம்தானே சிந்தைகவர் இயலழகின் சீர் ஓளியால் திகழ்ந்தனரே !
யமுனையானது அந்த ஸ்த்ரீகளின் அலங்காரத்தில் பொறாமை கொண்டு அவர்கள் காலில் பூசின செம் பருத்திப் பூச்சுக்களையும்
கண்ணில் உள்ள மைகளையும் மேனியில் உள்ள சந்தனாதிகைளயும் அலம்பித் தள்ளி அபகாரம் செய்வது
போல் இருந்தாலும் அப்படிச் செய்வதாலே அவர்களுக்கு இயற்கையில் உள்ள அழகு அதிகமான ப்ரகாசம் பெற்றதால்
அவர்களுக்கு உபகாரம் செய்தது போலே ஆயிற்று.
103. சிரப்ரவ்ருத்4த3ம் தயிதே அநுராக3ம் சித்தே துராேஸத4ம் இவோத்3வமந்த6
ப்ராேயண தத்காந்தி மதூ4ப போ4கா3த் த்3ருஷ்டிஸ்ததா ராக3ம் உவாஹ தாஸாம்
கண்ணனது காந்தி எனும் கள்ளுண்ட விளேவேயா?
எண்ணிலாத காலெமலாம் இதயம் வள காதல் தான் உள் நிலாது வெளிப்பட்டு உலகறிய வந்ததுவோ ?
கன்னியரின் கண்களிலே கூட்டெழுந்த செந்நிறமே !
அந்த ஸ்த்ரீ களுடைய கண்களில் ஜலக் க்ரீடையால் செந் நிறம் ஏற்பட்டது.
அது கண்ணனுடைய காந்தியாகிற கள்ளைக் குடித்ததனால் உண்டானது போலும்,
வெகு காலமாகத் தங்கள் மனத்தில் வளர்த்த காதலை உள்ளே அடக்க மாட்டாமல் வெளிப்படுத்தியது போலவும் காட்சி யளித்தது.
104. அநங்க3ராேகா3ஜ்ஜ்வல சித்தேத3ஹா விச்வாதி4கம் விவ்யது3: ஆயதாக்ஷ்ய:
கல்ஹார ஸோபா4ரசிைத: கடாைக்ஷ: காமஸ்ய பாணை இவ தாபதப்தை :
செங்கமல நெடுங்கண்ணா நீள் காதல் ஒளி வீசும் அங்கமுடை மேனியுடன் ஆராத அன்பு வெள்ளம்
பொங்குகின்ற உளங்கொண்டு காமனது பாணமன்ன செங்கண்கள் பார்வை வெனும் தூண்டிலிட்டார் கண்ணனையே !
எல்லாவற்றிற்கும் மேம்பட்ட பெருமானையும் நெடுங்கண்ணிகளான கோபிகள் உடலையும் உள்ளத்தையும் அநங்க ராேகாஜ் ஜவலமாகப்
பெற்று செங்கழுநீர் பூக்களின் ஒளிகளை வீசுவனவும் காய்ச்சி ஒளி பெறுவித்த காம பாணங்கள்
போன்றனவுமான தங்கள் கடைக் கண் பார்வை களாலே அடித்து வசப்படுத்தின.
அநங்கராேகாஜ்வலம் – உள்ளம் காமராக ப்ரகாசத்தை உடையது. – தேகம் சந்தனாதி பூச்சுக்களை உடையது `
105. விகா3ஹநாத் கோ 3பநிதம்பி3ந6நாம் ஸம்வத4மாேந ஸஹஸாம்பு3பூேர (அம்புபூரே ) தத்வக்த்ர
ஸோபா4விஜிைத: ஸேராைஜ: அந்தஹிதம் நூநம் அவாப்த லஜ்ஜை :
யமுனையிலே விளையாடும் மெல்லிைடையான ஆய்ச்சியர்கள் அமிழ்ந்திடவே அனைவருமே அங்கெழுந்த
வெள்ளத்திலே கமலம் எல்லாம் மறைந்தனவே
கன்னியர்கள் முகவொளியால் தமை யிகழ்ந்து நாணத்தினால் தாழ்வுற்றன போன்றனேவ!
எண்ணற்ற கோபிகள் நீரில் அமிழ்ந்ததால் யமுனை வெள்ளம் விரைவில் ஏறிற்று.
அதனால் அங்கே எழுந்திருந்த தாமரைப் பூக்கள் எல்லாம் நீரில் மறைந்தன .
அவர் களுடைய முகெவாளியிைனக் கண்டதால் வெட்கப் பட்டு மறைந்தன போலாயிற்று.
106. க்ருஷ்ணாம்பு3த3: கல்பித ஹஸ்தயந்த்ர: சகார கோ3பீ நயேநாத்பேலஷு
தா4ராம்புஸேகாத் உபஸம்ப4வந்த்யா ராக3ச்ரியா ரக்தஸிlந்த்4ர ஸோபா4ம்
கண்ணெனனும் காேமகம் கரங்களையே குழலாக்கித் தண்ணீரைக் கவர்ந்தெடுத்து
தாமரை போல் ஆய்ச்சியரின் கண்களிலே இறைத்திடவே கன்னியைகள் கண்களுமே செந்நிறமே கொண்டனவே
கதலிப்பூ அன்னவையாய் காேமகம் போன்ற கண்ணன் கைகளால் தண்ணீரைப் பீய்ச்சும் குழல் போலாக்கி
கரு நெய்தல் போன்ற கோபியரின் கண்களிலே இறைக்க, அதனால் கண்கள் சிவந்து செந்நிற நாய்க்குடைகள் போலாயின.
107. முஹு: ப்ரயுக்தாம் முக புண்டரீகே கத3த்த2யந்த்யா கரயந்த்ர தா4ராம் காந்தே கயாசித்
த3தி4ேர கராப்4யாம் க3தாக3தாந்(நி) யு(உ)த்பல காநநாநாம்
புண்டரீக முகத்தின் மேல் புனல் வாரி இறைக்கின்ற கொண்டல் நிறக் கண்ணன் தன் காரியத்தை
வீணாக்கும் எண்ணத்தால் ஒருநங்கை எழில் கரத்தால் மறைப்பதனால் தண் தாமரை காெடான்றைத் தோன்றி
ஓளியச் செய்தனளே தன் கைகளைக் கொண்டு, தன் தாமரை முகத்தில் மேல் நீரை இறைக்கும் கண்ணனின் செயைலக் கண்ட ஒரு கோபி அவனின் செயலை வீணாக்குகிறாற் போல அவன் நீரை இறைக்கும் போது தன் கைகளால் முகத்தை மறைத்துக் கொண்டும்,
பின் கைகளை கீழிறக்குவதாக இருந்தது.-கரு நெய்தல் காடு ஒன்று தோன்றி மறைவது போல் ஒத்திருந்தது.
108. ப்ரயாபிதே கோ3பிகயா கயாசித் க்ருஷ்ணாநம் கீசகயந்த்ரேதாேய
நிமீலேநாந்மீலநதஸ் ததயாத் நக்தம் தி3வம் தத்க்ஷண த்3ருஷ்யம் ஆஸத்
ஒருகோபி வேய்ங்குழலால் உறிஞ்சி நீரைக் கண்ணன் மேல் இறைத்திட்ட போதெல்லாம் இரு கண்ணும் மூடுவதும் திறப்பதுமாய்
அவன் செய்யும் தருணத்திலே மாறி மாறி இரவுபகல் காலங்கள் இவ்வுலகில் தோன்றினவனே !
கோபி ஒருத்தி மூங்கில் குழாயால் கண்ணனின் முகத்தில் வாரி வாரி நீரை இறைக்கும் போது
அவன் தன் கண்களையும் முகத்தையும் மூடுவதும் திறப்பதுமாய் இருக்கின்றான்.
அப்படிச் செய்யும் போதெல்லாம் அவன் இரவும் பகலுமான காலங்களை அந்த க்ஷணத்தில் காண்பித்து வந்தான்.
முகவொளி பரவும் போது அது பகல் போன்றும், பரவாத போது இரவும் தோன்றச் செய்தான்.
அவனுடைய கடாக்ஷ காலம் இவர் களுக்குப் பகலாகவும் கடாக்ஷிக்காத போது இரவாகவும் தோன்றுகின்றதாம்.
(அவன் விழித்திருக்கும் போது உலகம் விழிக்கும். அவன்
உறங்கும் போது உலகம் உறங்கும். என்ற
ப்ரமாணத்தைக் கொண்டு இவ்வாறு கூறப்பட்டுள்ளது என்றும் உரைப்ப. )
109.தம் ஆத்3ரபா4வாத் நிபி3டாந்தrயம் லம்பா3லகம் ராசிம் இவாத்3பு4தாநாம் பஸ்சாத்
உபேதா பrரப்4ய தஸ்தவ் காசித் ப்ரயா காமவதூ4: இவாந்யா (கோபால விம்சதி 19)
ஈரமான மேனியிலே ஒட்டியுள்ள ஆடை யுடன் நேரே அவிழ்ந்து தொங்குகின்ற நெடு முடியும்
வியப்பெல்லாம் சேருமாறு திரெளனவே நிற்பவனைப் பின்னிருந்து அரவணைத் திட்டனளே ரதி போன்றோர் காதலியை நினைத்து இருப்பது போலே மேனியில் பதிந்து
மறைந்த ஆடையுடன் மயிர்கள் தொங்க ஆச்சர்யங்களின் திரள் போல விளங்கும் அவனை , ரதி தேவியைப் போன்ற ஒரு காதலி பின்னே சென்று அணைந்து நின்றாள்.
(ஸ்விந்ந ஸந்நதநு வல்லr ததநு காபி நாம பசுபாங்கநா) காந்தமம்ஸம் அவலம்பேத ஸ்ம தவ தாந்திபா4ர முகுலேக்ஷணா)
கொடி போன்ற உடலுடைய ஒரு கோபிகையை வியத்துச் சேர்ந்து களைத்துப் போய் கண்களை மூடிய வண்ணம் தங்கள் மேல் சாய்ந்தாள் – நாராயணீயம் 69/6)
பிரத்யா லீட ஸ்திதி மதிகதாம் ப்ராப்த காடாங்க பாலிம்-
பஸ்ஸா தீஷன் மிலித நயனாம் ப்ரேயஸீம் ப்ரேஷமாணா
பஸ்திரா யந்த்ர ப்ரணிஹித கரோ பக்த ஜீவாது ரவ்யாத்-
வாரி கிரீடா நிபிட வசநோ வல்லவீ வல்லபோ ந-19-
பின்பக்கம் கண்ணனது இறுகிய ஆலிங்கனத்தைப் பெற்றவளும் -இந்த ஆனந்த சாகரத்தில் மூழ்கி
முழு நோக்காக அன்றி கடைக் கண்ணால் கண்ணனது கடாக்ஷம் பெற்றவளுமான கோபியையே பார்த்துக் கொண்டே
நீர் பீச்சும் குழலை திருக் கையிலே வைத்து ஜல க்ரீடை செய்ய இறுக்கிய திரு ஆடை அணிந்தவனும்
திருக் கால்களை வசதியான நிலையில்-ஒரு திருக் காலை முன்னும் மற்றொரு திருக் காலை பின்னும் வைத்து –
பிரத்யா லீடமாக -வைத்து அருளும் -பிரணயியான கண்ணன் –
ஆஸ்ரிதர்களை உஜ்ஜீவனம் செய்யும் பேஷஜம் -நம்மை ரக்ஷிக்கட்டும்
110. அப4ங்கு3ர ப்ரேம ப3ேலந தஸ்யா ப3த்4த3ம் ப்ரியம் பா3ஹு லதாத்3வேயந
ஸமீக்ஷ்ய காமாபித பாச(ஷ)ம் அந்யா: ஸம்ப்லாவயாம் ஆஸு அபேதசங்கா:
குலைத்தலாகா பெருங்காதல் கொண்டு கரங்களாலே வளைத்தவளால் அணைத்தவனை மன்மதனின் பாசத்தால்
வலுவாகக் கட்டுண்டவனாய்க் கண்ட ஆய்ச்சியகள் விலக்கிடுமோ என்ற ஐயமின்றி வார்நரை இறைத்தனரே !
அழிக்க இயலாத பிரேமையினால் இரு கைகளாலும் அணைத்து அந்த கோபிகையால் கட்டி நிறுத்தப்பட்ட அவனை
மன்மதனின் பாசத்தினால் கட்டுண்டவனாகக் கண்ட மற்ற கோபிகைகள் தடைக்கு இடமில்லை யாகையால் நரை வாரியை யிறத்தன.
111. யத3ங்க்4ர் யோகா3த் ஜக3தாம் த்ரயாணாம் மந்தா3கிநி மாந்யதமா ப3பூ4வ தயாபி
ஸம்பா4வ்யதமா ததா3அஸ்த் க்ருஷ்ணே ந ஸாதேனே க்ருதாவகா3ஹா
யாருடைய திருவடியில் இழிந்ததனால் கங்கையுமே பார் மூன்றின் போற்றுதலாம் பெருமையினை அடைந்ததுவோ ,
யாரவன் உடல் மூழ்கி நீர் 6கலக்கி ஆடியதால் ஆறிதுவாம் யமுனை யுறும் அதனின்மிகு ஏற்றமையே !
ஆகாச கங்கை தீர்த்தத்தால் யமுனையில் தன் திருமேனி நனைய திருவடியை ஆராதித்தல்
நீர் விளையாட்டு எவனுடைய திருவடிச் சேர்க்கையால் கங்கை என்ற நதி மூவுலகும் மதிப்பாக நினைனக்க வாயிற்றோ ,
அவன் முழுத் திருமேனியும் கொண்டு மூழ்கி விளையாடியதாலே யமுனையும் அதனின் மிக்க ஏற்றம் பெற்றதாயிற்று.
வஸூ தேவர் க்ருஷ்ணனை ன ஆயர் பாடிக்கு கொண்டு வரும் போது அவன் திருவடி தர்சனத்திற்காக யமுனை அவர் தலைக்கு மேல் உயர்ந்ததாம்.
அப்போது அவன் தன் திருவடியால் யமுனையைத் தொட யமுனை சரசரவென்று சரிந்ததாம்.
ஆனால் பிற்காலத்தில் அந்த யமுனை பெற்ற ஏற்றம் தான் என்னே !.
(தடம்படு தாமரைப்பொய்கை கலக்கி விடம்படு நாகத்தை வால்பற்றி யீர்த்து -பெரியாழ்வார் திரு மொழி )
( குன்றெமடுத்து மழை தடுத்து இளையாெராடும் மன்றில் குரவை பிணைந்த மால் – பெரிய திரு மொழி )
112.–வேதா2பசாராந் உபபாத3யந்த6 தி3வ்யேந தேஹேந தி3நேந்த்3ரகந்யா (தேநச?) ஆநச பாதா3ப்பித
ரத்நபுஷ்பா கோ3பீஸக2ம் கோ3பகுமாரம் ஆத்4யம்
தன்னிடத்தே நீராடி திளைத்ததன் பின் கோபிகளே கண்ணனையே உபசரிக்க காளிந்தி
தேவ வுருக் கொண்டவளாய் ரத்தினமும் கொழு மலரும் கையேந்தி கண்ணன் தன் திருவடியில் களிப்புடன் அர்ச்சித்தாளே !
கண்ணன் தன்னிடம் கோபிகேளாடு சேர்ந்து நீராடி ஓய்ந்த பிறகு, யமுனை நதியானவள், தேவசrரத்துடன் வந்து
உபசாரங்களை நடத்துகின்றவளாய் கோபிகளோடு கூடிய கோப ராஜனின் திருவடிகளில் ரத்தினங்கைளயும் புஷ்பங்கைளயும் அர்ப்பணம் செய்து அர்ச்சித்தனள்.
113. ஸrத்3பி4 அந்யாபி4: அபி ப்ரபா4வாத் ப்ராேயண கோ3பீதநும் ஆசர்தாபி4: ேதாஷாத்
உத3ந்வத்ஸுதேயாப போ4க்ய: தாேயாபசாேரண விபு4: ஸேஷேவ
கடல்மகளாம் திருமகளே கணங்கணமும் பிரியாது உடன்நின்று அனுபவிக்கும் ஒப்பற்ற கண்ணனையே
உடன் சேர்ந்து நீராடி உகப்பிக்க உளங்கொண்டு இடைச்சியர் உருக் கொளுமே இவ்வுலக ஆறுளே !
திருமகளுக்கு எப் போதுமே போக்யமான கண்ணனை , மற்ற நதிகளும் தங்கள் மஹிைமையால் கோபிகளாக மாறி
ஜலக் க்ரீடையால் ஆனந்தமாக உபசரித்திருக்கின்றன போலும்.
114. தம் உத்தரந்தம் ஸrத: ப்ரவாஹாத் உத்தாரகம் பங்கமயாத் பேயாேத4:
மருத் ப்ரயுக்தா வஸநாங்க3ராைக3: ஆகல்பயந் அப்ஸரஸ: ததைஹ:
(பொல்லா அருவினை மாய வன் சேற்றள்ளல்… திருவாய்மொழி)
வினைகள் என்னும் சேற்று அள்ளல் வலிய பெரும் கடலிருந்து அனைவரையும் கரையேற்றும்
அருங்குணத்தோன் யமுனை தனின் புனல் வெள்ளம் தனை விடுத்து எழுகையிலே
விண்மகளிர் அணி யோட பூச்சுக்களால் அலங்கரித்தார் கண்ணனையே !
சம்சாரக் கடலிலிருந்து ஜவீர்களைக் கரை ஏற்றுகின்ற கண்ண பிரான், யமுனையின் வெள்ளத்தினின்று கரை ஏறின போது
தேவதைகளால் ஏவப்பட்டு அப்ஸரஸ்ஸூகள் வந்து அவனுக்கு ஏற்ற ஆடை , அணிகலன்கள், வாசனாதி பூச்சுக்கள் கொண்டு அலங்காரம் செய்தனர் .
ஸம்ஸாரக் கடலில் தன்னை ஆஸ்ரயித்தாரைக் கரை ஏற்றும் ஆசார்யனாயிருப்பவன்
விரஜையின் வெள்ளத்தைக் கடந்து சென்ற போது விஷ்வக் சேனாதி நித்ய ஸூரிகளால் ஏவப்பட்டு பரமபதத்திலுள்ள
திவ்ய அப்ஸரஸ்ஸுக்கள் ஐநூறு பேர்
வஸ்த்ரம் மணம் முதலியன கொண்டு அப்ராக்ருத உருவை வுடைய அவரை அலங்கரிக்கிறாகள் என்ற பொருளும் இங்கே தோன்றும்.
இது மோக்ஷம் பெறும் எல்லோருக்கும் பொருந்தும்.
115. வ்ரஜாங்க3நாச்ச த்rத3சாங்க3நாபி4: ப்ரஸாத்4யமாநா ப3ஹுமாந பூவம் ரமாஸஹாய
ப்ரணயாநுரூபாம் ஸமாநநாம் ஸாது4ஜேநஷ்வ விந்த3ந் (அவிந்தந்)
விண்ணுலக மடந்தையரால் வெகுவாக அலங்காரம் பண்ணியராய் ஆய்ச்சியகள் புதுத் தோற்றப் பொலிவுற்றார் !
கண்ணனிடம் அவர்கள் காதலுக்கு ஈடாக மண்ணுலக நல்லோரால் மிகப் பெருமை உற்றனரே !
கோப ஸ்த்ரீகளும் தேவ ஸ்த்ரீகளாலே வெகுவாக அலங்காரம் பண்ணப்பட்டவர்களாய்
ஸாது ஜனங்களிடத்திலும் திருமாலிடம் வைத்திருக்கும் அன்புக்கீடான வெகுமதியைப் பெற்றனர் . (ஸ்ரீமத் பாகவதம் (10/33/39)
அrஷ்ட வதம்:
116-சக்ரம் க3வாம் ைசல வநாத் நிவ்ருத்தம் உபாத்3ரவத் கஸ்சித் அரிஷ்டநாமா கலாஸ பயாயதநு: ககுத்மாந் (ஸ்ரீமத் பாகவதம் 10/36/1)
அரிவையரும் கண்ணனும் ஆய்ப்பாடி மீளுகையில் பெருமலையின் வனத்திருந்து புகலிடமே
புக்கலுறத் திரும்பிட்ட ஆநிரையே திருக்கயிலே உருவொத்த அரிட்டெனனும் ஓர் எருது
ஆர்த்தெழுந்து துரத்தியதே ! (நாராயணீயம் 70/6)
இவ்வாறு விஹாரம் செய்து விட்டு கண்ணனும் ஆய்ச்சியர்களும் கோபச் சேரிக்குத் திரும்புகையிலே
மலையில் காட்டிலிருந்து வீடு திரும்பிய ஆநிரைகளை அரிஷ்டெனனும் பேர் கொண்ட அசுரன்
விருஷப உருவில் கைலாஸமலை போன்ற பெரிய உருவில் துரத்தியது.
117. கு2ராக்3ர வஜ்ரேண விதா3ரயந் க்ஷ்மாம் விஷாண நிபி4ந்ந விமாநமூல: து3வாரேவேகா3
த3த்3ருேஷ ஸ தூ3ராத் ம்ருத்யோ : உபக்ராந்தமேஹா மேஹாக்ஷ:
தன்னுைடய குளம்புகளால் தரணி தனைனப் பெயர்த்திட்டும் விண்தனிலே தேவதைகளின்
ஊதிகளைக் கொம்புகளால் பின்னமிட்டும் விரைவுடனே வ நமனுக்கே பெரும் இழவைப் பண்ணுவதாய்
அவ்வெருது வெருவுதலேவே ெவகுெதாைலேவ காண்புறுமே ! (நாராயணீயம் 70/7)
அப் பெரிய எருது வஜ்ராயுதம் போன்ற குளம்பின் முனைகளாலே புவியைப் பெயர்த்துக் கொண்டும்
கொம்புகளாேல வானத்தில் சஞ்சரிக்கும் தேவ விமானங்களின் அடிப்பாகத்தை பிளந்து கொண்டும்
அடக்க முடியாத விரைவுடன் நமனுக்கு மேஹாத்ஸவம் நடத்துகின்றவனாகி வெகு தூரத்திலே காணலானான்.
118. ச்ருங்கா3வருக்3ைண: சகைட: ப்ரகீணம் வ்ருஷாந்தைர: ஆஷு விமுக்த மாக3ம் வ்ரஜம்
ததா3 விப்லுத கோ3பவக3ம் த்ய்க்த்வா ஸ க்ருஷ்ணாபி4 முக2ம் ஜகாம
ஆய்ப்பாடி வண்டிகளை அடித்தெறிந்து தூளாக்கி ஆய்ப்பாடி எருதுகளும் அங்கிருந்து வழிவிலக
ஆய்ப்பாடி மக்களையும் அதி விரைவாக விரட்டியதாய் காய்ச்சினத்தால் கண்ணனையே குலைத்திடவே வந்ததுவே !
இடைச்சேரி வண்டிகைளக் கொம்பால் தூக்கி யெறிந்து எங்கும் சிதறி விழச் செய்து அதைக் கண்ட
ஆய்ப்பாடி எருதுகள் அஞ்சியபடி வழிவிட்டு விலகவே ஆயர் களையும் குலையச் செய்து கண்ணனை எதிர்க்க அப் பேர் ஏறு சோயை விட்டுச் சென்றது.
119. தம் ஆபதந்தம் ப்ரதிஸஞ்ஜிஹாேநா நிஹ்ராத3 வித்ராஸித தநேத4நும்
விஷாணயுக்3ம க்3ரஹேணந சவுரி சக்ரே விநிஷ்பீடித பீந கண்டம்
முழக்கமிட்டுப் பசுக்கள் தமை விரைந்தோட கொடுமை செய்து இழிந்து வரும் அவ் வெருதின் இரு கொம்பும் பற்றி
அதன் கழுத்து தனை நொடி யளவில் கண்ணபிரான் முறித்தனனே –
அழிந்தனனே எருதுருவில் அரக்கன் என வந்தவனே! அரிஷ்டவதம் – (ஸ்ரீமத்பாகவதம் 10/36/1-15)
தன் கர்ஜனையினாலும் உறுமலாலும் விரைந்து ஓடும்படி பசுக் கூட்டங்களை நலிந்து கொண்டு வரும்
அவ் வெருதை இரு கொம்புகளிலும் பிடித்துக் கண்ணபிரான்
பருத்த கழுத்தை பலமாக பிடித்து மடக்கி பீடித்து அழித்து அருளினான்.
அம்பரம் ஏழும் அதிரும் இடிகுரல் அங்கனற் செங்கண் உடை
வம்பவிழ் கானத்து மால் விடையோடு பிணங்கி நீ வந்தாய் போலும் -பெரிய திருமொழி –10-7-13-
120. அபஹத்ய து3ஜயம் அரிஷ்டதா3நவம் ஜக3தாம் அரிஷ்டம் இவ ஜாதவிக்3ரஹம் வ்ரஜஸத்3பி4
அத்3பு4த விஹாரேதாஷிைத: ஸுரஸத்தைம அபி ஸமம் ஸந்துஷ்டேவே
உலகுகளின் கேடே என உருக் கொண்ட அரிட்டெனனும் வலியரக்கன் தனை யழிக்கும் விளயாட்டை நடத்திட்டு
நலம் செய்த கண்ணன் தனை நல்லாயர் தம்மோடு பல தேவ கணங்களும் போற்றினரே
ஒருமிதத்தே! உலகங்களின் கேடே உருவெடுத்தாற் போபலிருந்த அரிஷ்டைன அழித்து
ஆயப் பாடியில் உள்ளவைகளாலும் அவகளைப் போல் அற்புதமான விளையாட்டுக்களால் ஆனந்திக்கப் பெற்ற
தேவ ஸ்ரேரஷ்டர் களாலும் ஒரே சமயத்தில் கண்ணன் புகழப்பட்டான்.
121. அந்யை அப்ய ஸுர மலிம்லுைச: அநைக: ஆதங்காந் ஸ்திரசர ஸூதிபி4: ப்ரஸூதாந்
கோ 3பாநாம் ப்ரதிவித3தே 4 க3வாம் ச காேல ராேமண ஸ்துதசதோ ரதாங்க3பாணி:
பலவான நிலையான தேய வுரு அரக்ககளால் நலிவான ஆநிரைகள் நலியலுறும் போதெல்லாம்
விலக்கலாகா வலுவுடேன விரைந்தழித்த கண்ணன்
தனை பலராமன் முன்னிட்ட பெரியோர்கள் புகழ்ந்தார்கள் !
வத்ஸாசுரவதம் பகாசுரவதம் அகாசுரவதம் (புள்ளின் வாய் பிளந்து)
(வத்ஸாசுரவதம் – காய்த்த நீள் விளங்கனி யுதித்து எதிந்த பூங்குருந்து சாய்த்து)
(பகாசுரவதம் – புள்ளின் வாய் பிளந்து –திருச்சந்தவிருத்தம்)
மற்றும் பல ஜங்கமங்களும் தாவரங்களுமாக ஜந்துக்களாக மாறி வந்த கள்ள அசுரகள்
கோபர் களுக்கும் கோக்களுக்கும் (பசுக்களுக்கும்) அந்தந்த காலங்களிேலே விளைவிக்கப்பட்ட பல கேடுகளை
பலராமேனாடு சேர்ந்த திருவாழியான் -பல ராமனும் பிறரோடு சேர்ந்து புகழும்படியான செயல்களை யுடையவனாய் அருளி வந்தான்.
இதி ஸ்ரீ கவிதார்க்கிக ஸிம்ஹஸ்ய ஸவதந்த்ர ஸ்வதந்த்ரஸ்ய ஸ்ரீமத் வேதாந்தாசார் யஸ்ய க்ருதேஷு யாதவாப்யுதய காவ்யம் அஷ்டம ஸர்க: (712 – 832 = 121)
வஸந்தருது வர்ணநத்தில் ஆரம்பித்து ராஸ லீலை கொண்டாடி அரிஷ்டாசுர வதத்தில் நிறை வுற்றது.
சுபம்
————
ஸ்ரீ கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்தகுரவே நம:
—————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply