ஸ்ரீ திருப்பாவையின் ஏற்றம் –ஸ்ரீ மாங்கள்ய வ்ருத்தி ஸ்தவ ஸ்தோத்ரம் -ஸ்ரீ தால்ப்யர் ஸ்ரீ புலஸ்ய மஹ ரிஷி ஸம்வாதம்–ஸ்ரீ விஷ்ணு தர்மம்–

தேறா ஒருவன் தெங்கின நீர் செவ்வே நிறைந்த தீங்காயைச் செங்கை வருந்த அசைத்து அசைத்து
மாறாம் இது நீர் இலை என்று மருண்டு மாந்த முயலாது வெறிதே யிகத்து விட்டு ஆங்கு வைய முழுதும் நிறைந்த எவர்க்கும்
பேறா அருளுக்கு உருவான பெருமான் ஊனப் பேய் விழிக்குப் பிறங்கா வகையால் இலை என்று பேணாது இருந்த பெரும் பிழையால்
நீறாய் நிலத்து விளிவேனை நெடுமாற்கே நீ அடிமை என்று நினைவித்து எடுத்து ஆண்டது ஞான நிதி போல் கோதை நெறித் தமிழே

விவாகம் அற்றவனான ஒருவன்-மூடன் – விடாய் மிகு இருக்க
தார்மிகன் ஒருவன் இளநீர் நிறைந்த தேங்காயைத் தர
அவனோ இளநீர் பருகினவன் இல்லை -அதனுள் நீர் இருப்பதையும் அறியான் –
கை நோவ அசைத்து அசைத்துப் பார்த்தானாம்
அதனுள் இளநீர் நிறைந்து இருப்பதால் தளும்ப வில்லை -ஆகவே அதனுள் ஒன்றும் இல்லையென்று வீசி எரிந்து விட்டானாம் –

தேறா ஒருவன் தெங்கின நீர் செவ்வே நிறைந்த தீங்காயைச் செங்கை வருந்த அசைத்து அசைத்து
மாறாம இது நீர் இலை என்று மருண்டு மாந்த முயலாது வெறிதே யிகத்து விட்டு

இந்த உவமைக்கு உப மேயம் மேலே சொல்லுகிறது
எம்பெருமான் உலகம் எங்கும் வியாபித்து -நிறைந்துள்ளன
இளநீரின் படியைக் காட்டிலும் விசேஷம் உண்டே
அந்தர் பஹிஸ்ஸ தத் சர்வம் வியாப்ய நாராயண ஸ்தித
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன்
பரந்த அண்டம் இது என நில விசும்பு ஒழிவறக்
கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் –

பாக்கியசாலிகள் அனுபவிக்கஞான ஹீனர்களோ நிரீஸ்வர வாதம் செய்து படு குழியில் வீழ்ந்து அவதிப்படுகிறார்கள்

ஆங்கு வையமுழுதும்நிறைந்த எவர்க்கும்
பேறா அருளுக்கு உருவான பெருமான் ஊனப் பேய் விழிக்குப் பிறங்கா வகையால் இலை என்று பேணாது இருந்த பெரும் பிழையால்
நீறாய் நிலத்து விளிவேனை

நெடுமாற்கே நீ அடிமை என்று நினைவித்து எடுத்து ஆண்டது ஞான நிதி போல் கோதை நெறித் தமிழே
இவர்களுக்கும் ஆண்டாளுடைய திருப்பாவையை தஞ்சமாகிறது
சர்வேஸ்வரன் உளன்
நீ அவனுக்கு அடிமை
நாராயணனே நமக்கே பறை தருவான்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா
உன் தன்னோடு உறவேல் இங்கே ஒழிக்க ஒழியாது
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
சீறி அருளாதே -இறைவா நீ தாராய் பறை –
போன்றவற்றை அருளிச் செய்து
நம்மை எடுத்து ஆண்ட ஞான நிதி அன்றோ

யமோ வைவஸவதோ ராஜா யஸ தவைஷ ஹ்ருதி சதிதஸ் தேந சேத விவாதஸ தே மாகங்காம மா குரூந கம -மநு ஸ்ம்ருதி -8-92-

சர்வ நியாமகன் -தண்டதரன் -ஸூர்ய வம்ச -ஆதித்ய மண்டலா வாசி -அனைவருக்கும் இனியவன் -உனது உள்ளத்தில் உள்ளவனாய் இருந்தும் நெடுநாளவனுடன் விவாதம் அனுவர்த்தித்து -த்வம் மே -அஹம் மே -தொடருகிறதே-இது தொலைந்தால் கங்கா முதலிய புண்ய நதி தீர்த்தங்கள் ஆட வேண்டா =புண்ய க்ஷேத்ரம் சேவிக்கப் போக வேண்டா-விவாதம் நீங்கும் அளவே வேண்டுவது –

ஸாவதகா வீராதீன ஸூதே சாகர மேகலா மருத சஞ்சீவநீ யதா மருதய மாண தசாம கதா -அசாரங்கள் மலிந்து சாரங்கள் மெலிந்து இருப்பதே இவ்வுலக இயற்க்கை

உன் தன்னோடு உறவு நமக்கு இங்கு ஒழியாது

திருமாலே நானும் உனக்கு பழ வடியேன்

தோண்டத் தோண்ட சுரக்கும் உபநிஷத் அர்த்தங்கள் பொதிந்து அன்றோ உள்ளன
பாதங்கள் தீர்க்கும் -பரமன் அடி காட்டும் -வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ்

 

————-

ஸ்ரீ மாங்கள்ய வ்ருத்தி ஸ்தவ ஸ்தோத்ரம் -ஸ்ரீ விஷ்ணு தர்மம்

ஸ்ரீ தால்ப்யர் ஸ்ரீ புலஸ்ய மஹ ரிஷி ஸம்வாதம்

ஸ்ரீ தால்ப்ய உவாஸ
கார்ய ஆரம்பேஷு ஸர்வேஷு ஸூஸ் ஸ்வப்னேஷு ச சத்தம
அமங்கல்யேஷு ஜூஷ்டேஷு யஜ் ஜப்தவ்யம் ததுஸ்யதாம்

யே நாரம்பாஸ் ச ஸித்த்யந்தி துஸ் ஸ்வப்னஸ் ஸோப சாம்யதி
அமங்கல நாம் த்ருஷ்டா நாம் பரிகாதஸ் ச ஜாயதே–1-2-

பூஜ நீயரான ஸ்ரீ புலஸ்ய மஹ ரிஷியே
ஏதாவது நற் கார்யங்கள் தொடங்கும் போதும்
தீய கனாக்கள் கண்ட போதும்
அமங்கல வஸ்துக்களைப் பார்க்க நேர்ந்த போதும்
எதை ஜபித்தால் தொடங்கின கார்யங்கள் எல்லாம் ஸித்தி பெறுமோ
தீய கனாக்கள் கெட்ட பலன்களைத் தராமல் தொலையுமோ
கண்ட அமலங்கள் கெடுதல் விளைக்காமல் நிற்குமோ
அத்தைச் சொல்ல வேணும் என்று கேட்க

———-

புலஸ்யர் சொல்கிறார் –

புலஸ்த்ய உவாஸ
ஜ நர்த்தனம் பூத பதிம் ஜகத் குரும் ஸ்மரன் மனுஷ்யஸ் ஸததம் மஹா முநே
துஷ்டான் அசேஷாண் யப ஹந்தி ஸாதயத் யசேஷ கார்யாணி ச யான்யபீப்ஸதி –3-

வாரீர் மஹ ரிஷியே
ஸகல பிராணிகளுக்கும் சேஷியாய்
ஸகல ஜகத்துக்களுக்கும் அஞ்ஞான அந்தகாரத்தைப் போக்குமவராய்
ஜனார்த்தன என்ற பேர் பெற்ற பெருமாளை
இடைவிடாது சிந்தனை செய்யும் மனிதன் எந்த வித கெடுதல்களை தவிர்த்துக் கொள்வான்
சாதித்துக் கொள்ளும் ஸகல காரியங்களையும் நிறைவேற்றிக் கொள்வான்

ஸ்ருணுஷ்வ ச அந்யத் கததோ மாம் அகிலம் வாதாமி யத் நே த்விஜ வர்ய மங்களம்
ஸர்வார்த்த சித்திம் ப்ரததாதி யத் ஸதா நிஹந்த்ய சேஷாணி ச பாதகாநி –4-

இன்னும் யான் உரைக்கக் கேளீர் மஹா முனிவரே
ஸர்வார்த்த சித்தியைத் தரவல்லதும்
ஸகல பாதகங்களையும் தொலைக்க வல்லதுமான
மங்கள ஸ்தவம் யாது ஓன்று உண்டோ அத்தைச் சொல்கிறேன்

————-

ப்ரதிஷ்டிதம் யத்ர ஜகத் சராசரம் ஜகத் த்ரயே யோ ஜகதஸ் ச ஹேது
ஜகத் ச பாத் யத்தி ச யஸ் ச ஸர்வதா மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி –5-

ப்ரதிஷ்டிதம் யத்ர ஜகத் சராசரம்
கிருஷ்ணே திஷ்டதி ஸர்வ மேதத் அகிலம் -என்ற படி ஸர்வ சராசன்களும் யாவன் ஒருவன் இடம் பிரதிஷடை பெற்று இருக்கின்றனவோ

ஜகத் த்ரயே யோ
நல்ல கோட்ப்பாட்டுலகங்கள் மூன்றினுள்ளும் தான் நிறைந்த அல்லிக் கமலக்கண்ணன் -என்கிறபடியே
யாவன் ஒருவன் மூன்றின் உள்ளும் ப்ரதிஷ்டிதனாய் இரா நிற்கிறானோ

தத் புருஷ ஸமாஸமும் பஹு வரீஹீ ஸமாஸமும் உண்டே

யஸ் ஜகதஸ் ச ஹேது
ஸகல ஜகத் காரண பூதனும் யாவன் ஒருவனோ
தான் ஓர் உருவே தனி வித்தாய்
வேர் முதல் வித்தாய்
உபாதான நிமித்த ஸஹ காரியாய்
சேதன அசேதன விஸிஷ்ட வேஷத்தால் உபாதான காரணமாய்
ஞான சக்த்யாதி விஸிஷ்ட வேஷத்தால் ஸஹ காரியாய்
ஸங்கல்ப விஸிஷ்ட வேஷத்தால் நிமித்த காரியாய்
ஹேது -என்கிற பதமே த்ரிவித காரணமாய் இருப்பதைக்க காட்டும்

ஜகத் ச பாத் யத்தி ச யஸ் ச
காரண பூதன் ஒருவனாய் ரக்ஷண பூதன் வேறே ஒருவனாய் ஸம்ஹார கர்த்தா மற்று வேறு ஒருவனாய் இருக்கை அன்றிக்கே
ஸ்திதி ஸம்ஹார கரனும் அவனே
ஸம்ஹரதி என்னாதே அத்தி என்றது ஸ்ருதி ஸூத்ர சாயையாலே

ஸர்வதா மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி —
ஆக ஸகல ஜகத்துக்கும் ஆதார பூதனாயும் ஆதேய பூதனாயும்
ஸ்ருஷ்ட்டி ஸ்திதி ஸம்ஹார காரகனாயும் இரா நின்ற
ஸர்வேஸ்வரன் எனக்கு மங்கள்ய வ்ருத்தி பிரதானன் ஆக வேணும் என்றதாயிற்று

ஸர்வதா -மூன்றாம் பாதத்திலும் நான்காம் பாதத்திலும் அந்வயம்

————-

வ்யோம அம்பு வாய் வக்னி மஹீ ஸ்வரூபைர் விஸ்தார வான் யோ அணுதரோணு பாவாத்
அஸ்தூல ஸூஷ்மஸ் சததம் பரேஸ்வரோ மமாஸ்து மாங்கல்ய வ்ருத்தயே ஹரி –6-

நீராய் நிலனாய் தீயாய்க் காலாய் நெடு வானாய் -என்கிறபடி விரிந்தும்
அணோர் அணீ யான் -என்கிறபடி சுருங்கியும்
ஸ்தூல வஸ்துவாயும் ஸ்தூல இதர வஸ்துவாயும்
ஸூஷ்ம வஸ்துவாயும் ஸூஷ்ம இதர வஸ்துவாயும் இருக்கும் பரம புருஷன் எனக்கு மங்கள்ய விருத்தியைத் தர வேணும் –

சுருக்குவாரை இன்றியே சுருங்கினாய் பெருக்குவாராய் இன்றியே பெருக்கம் எய்த பெற்றியோய் -திரு மழிசைப்பிரான்

பாவ ஸப்தம் பதார்த்த வாசகம்-

————

யஸ்மாத் பரஸ்மாத் புருஷாத் அநந்தாத் அநாதி மத்யா ததிகம் ந கிஞ்சித்
ஸ ஹேது ஹேதுஸ் பரமேஸ்வரேஸ்வரோ மமாஸ்து மாங்கல்ய வ்ருத்தயே ஹரி –7-

அநந்தாத்-அந்நதத்வமாவது பரிச்சேத ரஹிதத்வம் -த்ரிவித பரிச்சேத ராஹித்யத்தைச் சொல்கிறது -தேச வஸ்து கால பரிச்சேதம்
எப்பொருளும் தானாய் -இருக்கையாலே வஸ்து பரிச்சேத ரஹிதன்

அநாதி மத்யாத் -ஆதியும் அந்தமும் இல்லாதபோது மத்யமும் இல்லை என்பது அர்த்தாத் ஸித்தம்

ஸ ஹேது -கார்ய பதார்த்தங்களை சொல்லும்

————-

ஹிரண்ய கர்ப்ப அச்யுத ருத்ர ரூபீ ஸ்ருஜத்ய சேஷம் பரிபாதி ஹந்தி ச
குணாக் ரணீர் யோ பகவான் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கல்ய வ்ருத்தயே ஹரே –8-

நான்முகனை ஆவேசித்து ஸ்ருஷ்ட்டியையும்
ஸ்வேந ரூபேண ஸ்திதியையும் பூர்வார்த்தம் சொல்கிறது
இரண்டாம் பாதத்தில் உள்ள மூன்று கிரியா பதங்களையும் முதல் பாதத்தில் உள்ள மூன்று வியக்திகளோடே அடைவே யோஜிக்க வேணும்
ஹிரண்ய கர்ப்ப ரூபீ சந் அசேஷம் ஹந்தி ச -என்று யோஜனை

குணா க்ரணீ -இங்கு குண ஸப்தம் குணவான்களை சொல்லுகிறது -குணவான்களுக்குள்ளே தலைவன் என்றவாறு
ஸமஸ்த கல்யாண குண அம்ருதமாய் இருப்பவனே எனக்கு மங்கள்ய வ்ருத்தி பிரதன் –

——————-

பரஸ் ஸூராணாம் பரமோஸ் ஸூராணாம் பரோ யதிநாம் பரமோ முனீ நாம்
பரஸ் தமஸ் தஸ்ய ச யஸ் ச ஸர்வதா மமாஸ்து மாங்கல்ய வ்ருத்தயே ஹரே –9-

—————–

இந்த ஸ்தோத்ரம் ஸ்ரீ விஷ்ணு தர்மோத்தரத்தில் உள்ளது—-50 ச்லோகங்கள்

இந்த ஸ்தோத்ரம் ஸ்ரீ தால்ப்யர் என்கிற மஹரிஷி கேட்க,

ஸ்ரீ புலஸ்த்ய மஹரிஷி சொல்வதாக, விஷ்ணு தர்மோத்தரத்தில் உள்ளது.

இது, ஸ்ரீமந் நாராயணின் பரத்வத்தையும், அவனே ஜகத் காரணன் என்பதையும்,

அனைத்துப் பாபங்களையும் ,த்வம்சம் செய்யும் திவ்ய மங்கள தேவதை அவன் என்றும்

இவ்வுலகத்தில் மட்டுமல்லாமல், கலங்காப் பெருநகரான வைகுண்டத்திலும்

ஸகல ஸௌபாக்கியங்களையும் அளிப்பவன் என்றும், உபதேசிக்கிறது—-

பகவானின்

ஸ்ரீ வராஹாவதாரம்,

ஸ்ரீ ந்ருஸிம்ஹாவதாரம்

ஸ்ரீ வாமனாவதாரம்

ஸ்ரீ மத்ஸ்யாவதாரம்

ஸ்ரீ பரசுராமாவதாரம்

ஸ்ரீ ராமாவதாரம்

ஸ்ரீ க்ருஷ்ணாவதாரம்

இவற்றை

ஓரிரு ச்லோகங்களில் சொல்லி, அப்படிப்பட்ட ”ஹரி ”

மங்களங்களை அருள்வாராக என்று வேண்டப்படுகிறது—

பல ச்ருதி –கடைசி 7 ச்லோகங்கள்

இந்த ஸ்ரீ மாங்கள்ய ஸ்தவம் என்கிற ஸ்தோத்ரம் ,

ஆண் ,பெண் , குழந்தைகள் என்கிற வித்தியாசமின்றி , தினமும் பாராயணம் செய்து,

அன்றாட வாழ்க்கையில் அல்லல் தவிர்த்து

,அனைத்து ஸௌபாக்கியங்களையும் பெற்றிட , அருமையான ஸ்தோத்ரம்

ஸ்ரீ மாங்கள்ய ஸ்தவம்
—————————————–

ஸ்ரீ தால்ப்ய :——-

1 மற்றும் 2. கார்யாரம்பேஷு ஸர்வேஷு து : ஸ்வப்னேஷு ச ஸத்தம |

அமங்கள்யேஷு த்ருஷ்டேஷு யஜ்ஜ்ப்தவ்யம் ததுச்யதாம் ||

யே நாரம்பாச்ச ஸித்த்யந்தி து :ஸ்வப்நச்சோப சாந்தயே |

அமங்களாநாம் த்ருஷ்டாநாம் பரிஹாரச்ச ஜாயதே || –

தால்ப்யர் சொல்கிறார் ———

ப்ரஹ்மத்தை உணர்ந்தவருள் மிகப் பெரியவரே —-
கார்யங்களைத் தொடங்கும்போதும், துஸ்வப்னம் மற்றும் அமங்களம் நேரும்போது
எதை ஜபிக்க வேண்டும் ? தொடங்கும் கார்யங்கள், எதனால் இனிமையாக
நிறைவேறுகின்றன ? கெட்ட கனவுகள் எதனால் பலனற்றுப் போகின்றன ?
யாம் காணுகின்ற அசுபங்களுக்குப் பரிஹாரம் எதனால் உண்டாகிறது ?

ஸ்ரீ புலஸ்த்ய :——

3. ஜநார்தநம் பூதபதிம் ஜகத்குரும் ஸ்மரந் மநுஷ்யஸ் ஸததம் மஹாமுநே |

துஷ்டாந்யசேஷாண்ய பஹந்தி ஸாதயதி அசேஷ கார்யாணி ச யாந்யபீப்ஸதி ||—-2

ஸ்ரீ புலஸ்த்யர் பதில் :—

மஹாமுனிவரே ——பிறவிச் சங்கிலியை அறுக்க வல்லவரும், எல்லா உலகங்களிமுள்ள
எல்லாப் பொருள்களுக்கும் சொந்தக்காரரும் ,மிக உயர்ந்தவரும் ஆன எம்பெருமானை
த்யானித்துக்கொண்டிருக்கும் மனுஷ்யன் , தீயவற்றை யெல்லாம் போக்கி, தான் விரும்பிச் செய்யும்
எல்லாச் செயல்களும் நற்பயன் அளிக்கும்படி , எம்பெருமானால் ,அருளப்படுகிறான்

4. ச்ருணுஷ்வ சாந்யத் கததோ மமாகிலம் வதாமியத்தே த்விஜவர்ய மங்களம் |

ஸர்வார்த்த ஸித்திம் ப்ரததாதி யத் ஸதா நிஹந்த்யசேஷாணி ச பாதகாநி ||

ஹே –ப்ராஹ்மண ச்ரேஷ்டரே —-எது உமக்கு சுபமளிக்க வல்லதோ , எது
வேண்டிய பலன்களை யாவும் கொடுக்க வல்லதோ, எது தீவினைகள் எல்லாவற்றையும்
அழிக்க வல்லதோ, அத்தகைய ஸ்தோத்ரத்தை உமக்குச் சொல்கிறேன் —
அதை முழுவதுமாகக் கேட்பீராக

5. ப்ரதிஷ்டிதம் யத்ர ஜகத் சராசரம் ஜகத்த்ரயே யோ ஜகதச்ச ஹேது ; |
ஜகத் ச பாத்யத்தி ச யஸ்ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி : ||

மூன்று உலகங்களிலும் , எவர் ஜங்கம ,ஸ்தாவர ரூபங்களுக்குக் காரணமோ ,
எவரிடத்தில், இவை கீழே விழாது நிலைத்துத் தாங்கப்படுகிறதோ,
எவர் இவற்றையெல்லாம் ரக்ஷிக்கிறாரோ, ப்ரளய சமயத்தில் , எவர் இவற்றையெல்லாம்
உணவைப்போலத் தனக்குள் ஒடுங்கும்படி செய்கிறாரோ அனைத்துப் பாபங்களையும்
போக்கும் அந்த ஹரி , மங்களங்கள் பொங்கிப் பெருக ,எனக்கு அருள்வாராக

6.வ்யோமாம்பு வாய்வக்நி மஹீஸ்வரூபை : விஸ்தாரவாந் யோணுதரோணு பாவாத் |
அஸ்தூல ஸூக்ஷ்மஸ் ஸததம் பரேச்வரோ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி : ||

நீர், நிலம், காற்று, நெருப்பு , ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களால் , தம்மைப்
பெருக்கிக்கொண்டவரும் , சிறிய பொருட்களிலெல்லாம் மிகச் சிறிய நுட்பமானவரும் ,
சிறிய, பெரிய என்று உள்ள அளவில்லாப் பொருட்களில் இருந்து வேறுபட்டு , தனித்
தன்மை உள்ளவருமான ஹரி எல்லாக்காலத்திலும் எனக்கு மங்களங்கள் பெருக
அருள்வாராக

7. யஸ்மாத் பரஸ்மாத் புருஷா தநந்தாத் அநாதிமத்யா ததிகம் ந கிஞ்சித் |
ஸ ஹேது ஹேது : பரமேச்வரேச்வரோ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி : ||
||

காலம்,இடம், குணம், இவற்றாலெல்லாம் அளவிட முடியாதவரும், பிறப்பு இல்லாதவரும் ,
முடிவு இல்லாதவரும், தம்மிலும் உயர்ந்தவர் ஒருவரும் இல்லாதவரும் படைத்தல் தொழில்
செய்பவரையும் படைப்பவரும், தேவர்களுக்கு எல்லாம் தேவரான ஹரி
எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக

8. ஹிரண்ய கர்ப்பாச்யுத ருத்ர ரூபி ஸ்ருஜத்யசேஷம் பரிபாதி ஹந்தி |
குணாக்ரணீர் யோ பகவான் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி : ||

ப்ரஹ்மாவுக்கு அந்தராத்மாவாக இருந்து, உலகங்களைப் படைத்தும்,
தானே அச்யுதனாக இருந்து அவற்றையெல்லாம் காத்தும், ருத்ரனுக்கு ஆத்மாவாக
இருந்து, எல்லாவற்றையும் அழித்தும், முதல் குணசாலியாகவும் , அளப்பரிய ஞானம்,
படைக்கும் பொருளாக ஆகும் ஆற்றல், எல்ல உலகங்களையும் தளர்ச்சி இல்லாமல்
தாங்கும் வலிமை ,எல்லோரையும் தன இஷ்டப்படி இயக்கும் மிடுக்கு, பிற பொருள்கள் எல்லாவற்றையும்,
ஸூர்ய ஒளியில் விளக்கு பிரகாசிப்பது போல, பேரொளி உடையவரும்
குற்றம் என்பதே இல்லாதவருமான ஹரி எனக்கு எப்போதும் சுபங்கள் பெருக அருள்வாராக

9. பரஸ் ஸுராணாம் பரமோஸுராணாம் பரோ யதீநாம் பரமோ முநீநாம் |
பரஸ் ஸமஸ்தஸ்ய ச யஸ் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி : ||

தேவர்கள், அஸுரர்கள் , துறவிகள், முனிவர்கள் இப்படி எல்லாருக்குமே மிகமிக
உயர்ந்தவரான ஹரி எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக

10. த்யாதோ முநீநா மபகல்மஷைர் யோ ததாதி முக்திம் பரமேச்வரேச்வர : |
மனோபிராம :புருஷஸ் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி : ||

எல்லாக் காலங்களிலும் தன்னையே நினைத்து குற்றமில்லா உள்ளத்தால்
சதா சிந்தனை செய்து இருப்பவர்களுக்கு மோக்ஷ ஸாம்ராஜ்யத்தை அளிப்பவரும்,
உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் வனப்புள்ளவரும் எல்லாப் பலன்களையும்
தர வல்லவருமான ஹரி எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

 

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading