ஸ்ரீ திரு விருத்தம் – -பாசுரங்கள் -61-70–ஸ்ரீ நம்பிள்ளை ஈடு –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -வியாக்யானம் –

அவதாரிகை

இப்படி இவளுடைய பிராப்தி த்வரையைக் கண்ட ஸூஹ்ருத்துக்கள்
உபய விபூதிக்கும் நாயகனான மேன்மையை யுடைய ஸர்வேஸ்வரன்
ஆஸ்ரித ஸூலபனாகைக்காக கிருஷ்ணனாய் வந்து அவதரித்த பிரகாரம்
வாஸா மகோசரம் ( மொழியைக் கடக்கும் பெரும் புகழான்) அன்றோ என்று
அவனுடைய ஸுலப்ய அதிசயத்தைச் சொல்லி ஆஸ்வஸிப்பித்த பிரகாரத்தை

வரைந்து தோளிலிலே விரைந்த தலைமகனைக் குறித்து
அவன் பெரியவனே யாகிலும் நமக்கு எளியனாய் வரும் காண் என்று
தோழி நாயகனுடைய சீலம் புகழ்ந்த பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

வாசகம் செய்வது நம் பரமே தொல்லை வானவர் தம்
நாயகன் நாயகர் எல்லாம் தொழுமவன் ஞால முற்றும்
வேயகமாயினும் சோராவகை இரண்டே யடியால்
தாயவன் ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று நம்மிறையே – -61 –

பாசுரம் -61-வாசகம் செய்வது நம் பரமே –
தோழி தலைவன் நீர்மையைத் தலைவிக்கு கூறுதல் –
பிறந்தவாறும் -5-10-

பதவுரை

தொல்லை வானவர் தம் நாயகன்–பழமையான நித்ய ஸூரிகளுக்குத் தலைவனும்
நாயகர் எல்லாம் தொழுமவன்–ஈஸ்வரத்வம் பாராட்டுகிற (பிரமன் முதலியோர்) எல்லோரும்
(தம் தம் தலைமைபெறும் பொருட்டு) வணங்கும்படியானவனும்
ஞாலம் முற்றும்–உலகம் முழுவதையும்
வேய் அகம் ஆயினும் சோரா வகை–ஒரு கோற்குத்து நிலமாயினும் தவறாதபடி (துளியிடமும் மிச்சமாகாதபடி)
இரண்டே அடியால் தாயவன்–(தனது இரண்டு அடிகளாலே அளந்து கொண்டவனுமாகிய
நம்மிறையே–நமது தலைவன்
ஆய் குலம் ஆய் வந்து தோன்றிற்று–இடையர் குலத்தை யுடையவனாய்க் கொண்டு அக்குலத்தில் வந்து வளர்ந்த எளிமையை
வாசகம் செய்வது–எடுத்துப் புகழ்ந்து கூறுவது
நம் பரமே–நம்மாலாகக் கடவதோ? (ஆகாது)

வியாக்யானம்

வாசகம் செய்வது நம் பரமே
அவன் மேன்மைக்கு வேதங்களும் அகப்படப் பாசுரம் இட்டுச் சொல்ல மாட்டாமல் மீளா நிற்க
அவன் நீர்மைக்குப் பாசுரம் இட்டுச் சொல்லுகை நம் தலையிலே கிடப்பது ஒன்றோ

தொல்லை வானவர் தம் நாயகன்
நீர்மைக்கு ஊற்றான மேன்மையைச் சொல்லுகிறது
யத்ர பூர்வே ஸாத்யா சந்தி தேவா -புருஷ ஸூக்தம் -என்று
பழையவரான நித்ய ஸூரிகளுக்கு அசாதாரண சேஷி யானவன் என்று
நித்ய விபூதி யோகம் சொல்லிற்று

மேல் லீலா விபூதி யோகம் சொல்லுகிறது

நாயகர் எல்லாம் தொழுமவன்
ஈஸ்வர அபிமானிகளான ப்ரஹ்ம ருத்ராதிகளோடே
இந்த்ராதிகளான லோக பாலாதிகளோடே வாசியற
ஸ்வ அதிபத்ய ஸித்யர்த்தமாகத் தொழப்படுமவன்

ஞால முற்றும் வேயகமாயினும் சோராவகை
ரக்ஷணீயமான விபூதி எல்லாவற்றையும்
குழற் குத்தும் சோராத படி

இரண்டே யடியால் தாயவன்
அந்நிய சேஷத்வ
ஸ்வ ஸ்வா தந்தர்யங்கள் இரண்டும்
இரண்டு திருவடிகளாலும் போம்படி அளந்து கொண்டவன்

இப்படி
1-ஸூரி போக்யனுமாய்
2-ப்ரஹ்ம ருத்ராதி ஸேவ்யனுமாய்
3-நிருபாதிக பந்துவுமானவன்
4-ஆஸ்ரிதற்கு பவ்யனாகைக்காக

ஆய்க் குலமாய் வந்து தோன்றிற்று
இடைக் குலத்தை யுடையனாய்க் கொண்டு
ஆவிர் பவித்தது

நம்மிறையே
நமக்கு ஸ்வாமி யானவன்

நம் இறை வந்து தோன்றிற்று
வாசகம் செய்வது நம் பரமே
என்று அந்வயம்

இத்தால்
பிராப்தி த்வரையாலே கலங்கின இவரை
ஸூஹ்ருத்துக்கள்
ஸுலப்ய அதிசயத்தைச் சொல்லி
ஆஸ்வஸிப்பித்த தாயிற்று –

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
பெருமாள் மலையோ திருவேங்கடம் -என்று
இவள் சொன்ன பாசுரமாகத் திருத்தாயார்
அநு பாஷித்த இத்தைக் கொண்டு
பிராட்டியான தசை போய் தாமான நிலையானாம் படி தரித்தார்
இவர் தம்மைத் தாம் உணர்ந்தால்
பின்னை இவர் இழியும் துறை ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் இறே
அங்கு புக்கு
எத்திறம் -என்கிறார்

வியாக்யானம்
வாசகம் செய்வது நம் பரமே
எத்திறம் -திருவாய் -1-3-1- என்று
மோஹித்திக் கிடக்குமத்தனை போக்கி
பாசுரம் இட்டுச் சொல்ல ஒண்ணாது

என் தான்
பாசுரம் இட்டுச் சொல்லப் போகாமை என் என்ன

தொல்லை வானவர்
நித்ய ஸூரிகள் உண்டு
யத்ர ர்ஷய பிரதமஜா யே புராணா -(அச்சித்ரம் -92-)என்கிறவர்கள்

தம் நாயகன்
அவர்களுக்கு நிர்வாஹகனானவன்

ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று வாசகம் சேருவது நம் பரமே -என்கிறார்

வேதங்களோடு
வைதிக புருஷர்களோடு
வாசியில்லை யாயிற்று பாசுரம் இட்டுச் சொல்ல மாட்டாமைக்கு
வேதங்களும் ஆனந்தாதி குணங்களைப் பேசப்புக்க மாத்திரத்திலே இறே
ய தோ வாஸோ நிவர்த்தந்தே -(தைத்ரியம் ஆனந்த வல்லி )என்றது

தஸ்ய தீரா பரிஜாநந்தி யோநிம் -(புருஷ ஸூக்தம் )

அகர்ம வஸ்யனானவன்
பிறக்கைக்கு ஹேதுவான கர்மம் இன்றிக்கே இருக்க வந்து பிறந்த நீர்மையை
தீமதாம் அக்ரேசரராய் இருக்குமவர்கள்
அது தன்னிலும் இழியப் போகாமையாலே
அத்தைச் சுற்றும் வந்து ஆழங்கால் படுகிறார்கள்

ஸர்வஞ்ஞனான தான் சொல்லும் போதும்
ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத:
த்யக்த்வா தேஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோऽர்ஜுந-ஸ்ரீ கீதை -4-9-

அர்ஜுந!-அர்ஜுனா!
மே ஜந்ம கர்ம ச திவ்யம்-எனது பிறப்பும் செய்கையும் தெய்வத்தன்மை கொண்டது,
ஏவம் ய: தத்த்வத: வேத்தி-இங்ஙனமென்பதை உள்ளபடி யுணர்வோன்,
ஸ: தேஹம் த்யக்த்வா-உடலைத் துறந்த பின்னர்,
புநர்ஜந்ம ந ஏதி-மறுபிறப்பு எய்துவதில்லை,
மாம் ஏதி-என்னை எய்துகிறான்.

எனது தெய்வத்தன்மை கொண்ட பிறப்பும் செய்கையும் இங்ஙனமென்பதை உள்ளபடி யுணர்வோன்
உடலைத் துறந்த பின்னர் மறுபிறப்பு எய்துவதில்லை. அர்ஜுனா! அவன் என்னை எய்துகிறான்.

அவ்யக்தம் வ்யக்திமாபந்நம் மந்யந்தே மாமபுத்தய:
பரம் பாவமஜாநந்தோ மமாவ்யயமநுத்தமம்-ஸ்ரீ கீதை -7-24-

அபுத்தய: மம அநுத்தமம்-அறிவற்றவர்கள் என்னுடைய இணையற்றதும்,
அவ்யயம் பரம் பாவம்-அழிவற்றதும் உத்தமமும் ஆகிய பர நிலையை,
அஜாநந்த:-அறிந்து கொள்ளாமல்,
அவ்யக்தம் மாம்-புலன்களுக்கு அப்பாற்பட்டவனான என்னை,
வ்யக்திம் ஆபந்நம்-கண்களால் காணக் கூடிய தோற்றத்தை அடைந்தவன் என்று (மனிதனைப் போல பிறப்புள்ளவனாக),
மந்யந்தே-கருதுகின்றனர்.

என்றும் சொல்லும் அத்தனை

இவருக்குத் தான் எத்திறம் என்று மோஹித்துக் கிடக்கை ப்ரக்ருதி இறே

தொல்லை வானவர் தம் நாயகன்
நித்ய ஸூரிகளுக்கும் அவ்வருகு வானவன்

நாயகர் எல்லாம் தொழுமவன்
இவ்வருகு ஆக்கரான நாயக்கர் உண்டு -ப்ரஹ்மாதிகள்
சதுர்தச புவனங்களுக்கும் கடவோம் என்கிற அபிமானத்தைப் பொகட்டு வந்து தொழா நிற்பர்கள்
பிறவாதாய் இருக்கிறவர்கள் இறே
பிறக்கிறவனை வந்து ஸ்தோத்ரம் பண்ணுகிறார்கள்
மனுஷ்யர் கண்ணுக்கும் கூடத் தோற்றாதவர்கள்
ராவண வத அநந்தரத்திலே வந்து ஸ்தோத்ரம் பண்ணினார்கள் இறே

ஞால முற்றும் வேயகமாயினும் சோராவகை
பூமிப் பரப்பு அடங்க ஒரு கோல் குத்து நிலம் விடேன் என்று அபிமானித்தால் போலே யாயிற்று
இவனும் இந்திரனுக்காக மஹா பலிக்கு ஒரு கோல் குத்தும் விட்டேன் என்றபடி

இரண்டே யடியால் தாயவன்
மூன்று அடியை இரந்து
இரண்டு அடிக்காக்கி
ஓரடிக்காக அவனைச் சிறை யிடுகைக்காக
இரண்டு அடியாலே யாயிற்று அளந்து கொண்டது

ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று
இப்படிப் பூமிப் பரப்பு அடங்கலும் தன் காலின் கீழே இட்டுக் கொண்டவன்
காலின் கீழே துகையுண்ட பதார்த்தத்துக்குத் தான் புத்ரனாய் வந்தவன்
இது நம்மாலே பாசுரம் இட்டுச் சொல்லலாவது ஓன்று அன்று இறே

ஆய்க்குலமாய்
ஸம்ஸாரிகளிலே ஒருவன் அல்ப விவேகம் யுண்டானால்
பால்யேந திஷ்டா ஸேத் -(ப்ருஹதாரண்யம் -5-4-) என்று
அபிஜன வித்யா விருத்தங்களால் வந்த அபிமானத்தைப் பொகடா நின்றான் இறே
அல்பம் விவேகியாய் இருக்கிறவன் உட்பட பொகடா நிற்க
ஸர்வஞ்ஞனான தான் அபஹத பாப்மத்வாதிகளைக் காற் கடை கொண்டு
இக்குல அபிமானத்துக்கு அவ்வருகு ஓன்று அறியாதானாய் வந்து பிறந்தான்

ஜஜ்ஜே விஷ்ணு ஸநாதந -அயோத்யா -1-7-என்றபடியே
தன்னைப் பற்றினாரும்
பழையாரும்
பிறவாதாருமாம் படி இருக்கிறவன்
வந்து பிறக்குமதுக்குப் பாசுரம் இடப்போமோ

வந்து தோன்றிற்று நம்மிறையே
ஆவிறர் பூதம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-2-2-என்னக் கடவது இறே

இரண்டே அடியால் தாயவனான நம்மிறை
ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று வாசகம் செய்வது நம் பரமே

————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
அவதாரிகை
இப்படியாகத் தன் தாய்க்குச் சொன்ன தோழிமார்களை
ஒன்றும் அறியாச் சிறுமியனாய் நம்மிறை வெறும் பரனேயோ
வெறும் ஸூலபனேயோ
அதுகள் தான் அவனுக்கு எவ்வளவு என்று கேட்டவனான தனக்கு
நம்மிறையோடீ
அவர் வாக் கோசரத்துபய ஸ்வ பார்
அதுகள் எங்களால் தான் அளவிட்டுப் பேசத் தகுமோ – என்று
அவர்களாய்த் தாம் அருளிச் செய்கிறார் இதில்

வியாக்யானம்
வாசகம் செய்வது நம் பரமே
வாய் அவனை விட்டுச் சொல்லுவது நம்மால் தகுமோ
அவன் பர ஸானத்தைக் கேளாய்

தொல்லை வானவர் தம் நாயகன் நாயகர் எல்லாம் தொழுமவன்
யத்ர பூர்வே -என்னப்பட்ட விண்ணவர்க்கு எல்லாம்
நித்ய நிர்வாஹக சேஷி யானவன்
சில ஒவ்பாதிக சேஷியான விதி சிவ இந்த்ராதிகளால் தொழப்படுமவன்

இப்படிப்
பரனே
ஸூஸீலனுமானவனே -என்கிறார்கள்

ஞால முற்றும் வேயகமாயினும் சோராவகை இரண்டே யடியால் தாயவன்
பூ லோக
உபரித லோகங்களில்
ஒரு கோல் குத்து நிலமும் விடாதபடி
க்ருத்ஸ்நத்தையும் இரண்டு அடியாள் அளந்து கொண்டவன்

இப்படியான நம்மிறையே

அவனே
ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று –
இடைக்குலத்திலும் ஆவிர் பவித்தான்

இவனுடைய
1- பரத்வ
2-ஸுசீல்ய
3-ஸுலப்யங்கள்
வாசா -இவ்வளவு என்று நம்மால் சொல்லப் போமோ

———————

அவதாரிகை

இப்படி ஆஸ்ரித ஸூலபனாய் வந்து அவதரித்தது
தமக்குச் சடக்கென லபிக்கைக்கு உறுப்பாகக் காணாமையாலே
(கீழே நமக்கு இறை என்றாரே ஸ்வாமித்வம் தானே
ஆய்க் குலத்துக்குத் தான் எளியவன் )
ஆர்த்தரான இவருக்கு
ஸம்ஸார சாகர கோலாஹல தர்சனத்தால் பிறந்த ஸைதில்யத்தைக் கண்ட
ஸூஹ்ருத்துக்கள் வெறுத்து யுரைத்த பாசுரத்தை
கடவோதத்துக்கு ஆற்றாத தலைவி யுடைய தளர்த்தி கண்டா தோழி
புலம்பி யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது
அறையோ என நின்றதிரும் கருங்கடல் ஈங்கிவள் தன்
நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே – 62-

பாசுரம் -62-இறையோ இரக்கினும் ஈங்கு ஓர் பெண் பால் –
தலைவியின் ஆற்றாமையைத் தோழி தலைவனுக்குக் கூறுதல் –
தேவிமார் ஆவார் -8-1-

பதவுரை

இரக்கினும்–எவ்வளவு வேண்டிக் கொண்டாலும்
ஓர் பெண்பால் எனவும் ஈங்கு இறை இரங்காது–இவள் ஒரு பெண் மகளென்று கருதியும்
இவளிடத்திற் சிறிதும் இரக்கம் கொள்ளாமல்
கருங் கடல்–கரியகடலானது
அறையோ என நின்று அதிரும்–(இவளெதிரில்) அறை கூவுகிறதோ வென்று சொல்லும்
நிலை நின்று (ஒரே விதமாக) கோஷஞ் செய்கின்றது;
ஓ–இஃது ஒரு கொடுமையே
அரவு அணைமேல்–சேஷ சயனத்தின் மீது
பள்ளி கொண்ட–சயனித்தருளா நின்ற
முகில் வண்ணனே–காளமேகம் போன்ற வடிவுடையவனே!
ஈங்கு–இவ்விடத்தில்
இவள்தன்–இவருளுடைய
நிறையோ–நிறைக் குணமோவென்னில்,
இனி–இனிமேல்
உன் திருஅருளால்–உனது கிருபையினாலல்லது (வேறொன்றாலும்)
அன்றி–பாதுகாத்து வைக்க முடியாது;காப்பு அரிது–
முறையோ–(இவளை நீ இங்ஙனம் உபேஷித்தல்) முறைமையோ?

வியாக்யானம்

இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது
சக்ரவர்த்தி பரசுராமனை இரந்து
பிள்ளைகள் பால்யத்தை முன்னிட்டால் போலே
நான் ப்ரார்த்தனா ரூபமான பிரபதனத்தைப் பண்ணிலும்
அவள் ஒரு பெண் அன்றோ
இன்று பல ஹானியை முன்னிடிலும் இவ்விடத்தில் இறையும் இரக்கம் இன்றியே இருந்தது
ஓ ஒரு கொடுமையே

இரக்கம் இல்லாமை கண்டபடி என் என்னில்

அறையோ என நின்றதிரும்
இவள் எதிராக அறை கூவுகிறதோ -என்னலாம் படி
நிலை நின்று கோஷியா நிற்கும்

கருங்கடல்
இவள் அளவில் கடலுக்கு யுண்டான நெஞ்சில்
கருகுதல் வடிவிலும் தோன்றா நின்றது

ஈங்கிவள் தன் நிறையோ
இவ்விடத்தில் ஸ்வ ரக்ஷணத்தில் அசக்தையான இவளுடைய
ஸ்த்ரீத்வ பூர்த்தி யானது

வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
பிரபல விரோதி யுண்டாய்
ஸ்வ சக்தியும் இல்லாத பின்பு
ப்ராப்தனான உன்னுடைய நிருபாதிகையான கிருபையால் அன்றி
ரஷிக்கை சக்யம் அன்று

முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே-
அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே முறையோ
நீ படுக்கை வாய்ப்பு அறிந்து கிடக்க
இவள் பாடாற்ற மாட்டாத இது கிரமமோ

முறையோ என்று
க்ரம ஹானியை ஸூசிப்பித்துக் கூப்பிட்ட படி

1-ஸ்ரம ஹரமாய்
2-தர்ச நீயமாய்
3-உதாரமான வடிவை யுடைய நீ
இவள் ஆர்த்தி தீர உபகரியாதது முறையோ என்று
தோழியானவள் தன் ஆற்றாமையாலே தலைவனை யுட் கொண்டு
விளித்து யுரைத்தாள் யாயிற்று

இது செவிலி இரங்கல் யாகவுமாம் –
(தமிழர் அகத்துறைப்படி தோழி பாசுரம் கொள்ளத் தகும் என்பர் )

இத்தால்
அநந்த க்லேச பாஜனமாய்
கோரமான ஸம்ஸார ஸாஹரத்தினுடைய
கோலாஹலத்தைக் கண்டு ஆழ்வார் ஈடுபாட்டுக்கு அஞ்சின ஸூஹ்ருத்துக்களால்
இது பரிஹரிக்க அரிது என்று நினைத்து
ஆழ்வாருடைய ஸ்வரூபம்
ஈஸ்வரனுடைய கிருபா ஏக ரஷ்யம் ஆகையால்
ரக்ஷகரான பெரிய பெருமாளைக் குறித்துத்
தங்கள் ஆர்த்தி தோற்ற விண்ணப்பம் செய்த பாசுரமாய் இருக்கிறது —

—————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

கீழ் ஸ்ரீ கிருஷ்ண அவதார ஸுலப்யத்தை அனுசந்தித்து
அவதார சமகாலத்திலே தாமாகப் பெறாமையாலே வந்த ஆற்றாமையாலே
கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி தசையை ப்ராப்தரானார்
அந்த பிரிந்த ஆற்றாமைக்கு மேலே கடலோசையும் வந்து பாதகமாகா நின்றது என்று சொல்லா நின்றாள்
என்று திருத்தாயார் சொல்லுகிறாளாய் இருக்கிறது –

வியாக்யானம்

இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது
காலிலே விழுந்து சரணம் புகச் செய்தேயும்
சரணம் புகுகை தான் மிகை என்னும்படிக்கு ஈடாய் இருக்கிறவளுடைய
தசையைக் காட்டாச் செய்தேயும்
புறம்பு ஒரு புகல் இல்லாதாள் ஒரு அபலை கிடாய் என்னச் செய்தேயும்
ஏக தேசமும் இரங்குகிறது இல்லை
பாதகர்க்கு இத்தலையிலே அருமை காற்றுமது அன்று இறே

அறையோ என நின்றதிரும்
இங்கனே வெளியில் புறப்படாயோ என்று
அறையோ என்று அலற கூவுகிறால் போலே இரா நின்றது –

கருங்கடல் ஈங்கிவள் தன்
நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்
அவதாரிகை

வியாக்யானம்
இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது அறையோ என
நின்றதிரும் கருங்கடல் ஈங்கிவள் தன் நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
ரக்ஷகன் அநாதரித்தால் சத்ருக்கள் எதிர்ப்பட்டு நின்று ஒருபடிப்பட அறை கூவுவர்கள் இறே
அவர்களை போலே இக்கடல் தன ஸ்வரூபத்தால் உம்மை ஸ்மரிப்பக்கவும்
ஒருபடிப்பட நின்று அறை கூவுவுமாய்
இவள் பக்நைர்யையாம் படி அதிரா நின்றது
இவ்வவஸ்தையில் இவள் நிறை
அடக்கமானதது ஓ -என்னாலும் துர் பேத்யமே
இனி அது அழித்து உன்னையே கூப்பிடுமதான பின்பு
உன்னருளால் அன்றி இல்லையே
அத்தால் அவ்வவஸ்தை யானானாள்

முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே –

——————-

அவதாரிகை

இப்படித் தாங்களும் ஆர்த்தராய்க் கூப்பிடும்படி இவருக்கு
ஆர்த்தியை ஈஸ்வரன் ஜநிப்பித்து
கடுக முகம் காட்டாமையாலே
ஈஸ்வரன் பக்கலிலே க்ரூர்ய சங்கையைப் பண்ணின
ஸூஹ்ருத்துக்களைக் குறித்து

அவனுடைய பூர்ண கடாக்ஷம் நடத்தாத தம்முடைய திரு உள்ளத்தில் ப்ரதிஷ்டிதமாம் படி
ப்ரகாசிப்பித்த பிரகாரத்தை அவர்களுக்கு அறிவித்து
சமாதானம் பண்ணின பாசுரத்தை

தலைவன் கொடுமையைச் சொல்லி இயல்பு அழித்த தோழிக்கு
இயற்பட மொழிந்த தலைவி பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

வண்ணம் சிவந்துள வானாடமரும் குளிர் விழிய
தண் மென் கமலத்தடம் போல் பொலிந்தன தாமிவையோ
கண்ணன் திருமால் திரு முகம் தன்னோடும் காதல் செய்தேற்கு
எண்ணம் புகுந்து அடியேனோடு இக்காலம் இருக்கின்றதே — 63-

பாசுரம் -63-வண்ணம் சிவந்துள வான் நாடு அமரும் –
தலைவி தோழியிடம் தலைவன் இயல்பை எடுத்துக் கூறுதல் –
இவையும் அவையும் -1-9-

பதவுரை

வண்ணம் சிவந்துள–திருநிறம் சிவந்துள்ளவையும்
வான் நாடு அமரும் குளிர் விழிய–பரமபதம் ஆனந்த மடையும் படியான குளிர்ந்த பார்வையை யுடைவையும்
தண் மெல் கமலம் தடம் போல் பொலிந்தன–குளிர்ந்த மென்மையான தாமரைத் தடாகம் போல விளங்குகின்றவையுமாகிய
இவையோ தம்–இத்திருக்கண்களோ
கண்ணன்–கிருஷ்ணாவதாரஞ் செய்தவனும்
திருமால்–திருமகள் கணவனுமான பெருமானுடைய
திருமுகம் தன்னொடும்–திருமுக மண்டலத்திலே
காதல் செய்தேற்கு–வேட்கை கெண்டிருக்கிற என்னுடைய
எண்ணம்–மனத்திலே
புகுந்து–பிரவேசித்து
இ காலம்–இப்பொழுதும்
அடியேனோடு இருக்கின்ற–(விட்டு நீங்காமல்) என்னோடு இருக்கின்றன.

வியாக்யானம்

வண்ணம் சிவந்துள
தம் பக்கல் இவருக்கு யுண்டான ராகம்
இக் கண்களினுடைய நிறத்தில் சிவப்பிலே காணலாம்

அது சீற்றத்தாலோ என்னில்

வானாடமரும் குளிர் விழிய
நித்ய விபூதியிலே இருந்து
நித்ய அனுபவம் பண்ணி
நிரதிசய ஆனந்தத்தாலே குளிர்ந்த பார்வையை யுடைத்தாய் இரா நின்றன

இவர் திரு உள்ளத்தில் பிரகாசிக்கிற தசையிலும்
குளிர்த்தி மாறாது இருக்கை –

தண் மென் கமலத்தடம் போல் பொலிந்தன
இக் கண் அழகுக்கு சீதளமாய் மிருதுவான தாமரைத் தடாகத்தைப் போலி யாக்கினால்
மிகுத்துத் தோன்றா நின்றன –

தாமிவையோ
இவை ஸ்ம்ருதி மாத்ரமும் இன்றியே
உரு வெளிப்பாடாம் படி பிரகாஸியா நின்றன

(ஸ்ம்ருதி -நினைவு மட்டும்
அத்தையும் தாண்டி உருவ வெளிப்பாடு -முழுவதாக அறிவது
அத்தையும் தாண்டி பிரத்யக்ஷம் நேராக் காண்பது )

கண்ணன்
பெண் பிறந்ததற்கு பவ்யனானவன்
(சுவையன் திருவின் மணாளன் )

திருமால்
நாரீணாம் உத்தமையான பிராட்டிக்குப் பிச்சனாவான்

திருமுகம் தன்னோடும் காதல் செய்தேற்கு
கண்ணன் கோள் இழை வாண் முகம் -திருவாய் -7-7-8-என்கிறபடியே
சகல ஸுந்தர்ய ஸாம்ராஜ்ய ஸ்த்தலமான திரு முகத்திலே
ஸாமான்ய ஸ்நேஹம் பண்ணின எனக்கு

எண்ணம் புகுந்து
தடாகத்தின் சுழி போலே கொண்டு முழுகும் படியான கண்கள் தானே
என் நெஞ்சிலே புகுந்து

அடியேனோடு
தனக்கே சேஷமான என்னோடே கூட
(ஏவகாரம்-அநந்யார்ஹ சேஷத்வம் )

இக்காலம் இருக்கின்றதே
க்லேசிக்கிற இக்காலத்திலும் விடாதே இரா நின்றன

ஆதலால் அவன் நம்மை அநாதரித்தான் என்று
இயல் பழிக்கப் படாது காண் என்று
தோழிக்கு
இயற் பட மொழிந்ததாயிற்று

இத்தால்
வண்ணம் சிவந்துள என்கையாலே
ஆழ்வார் பக்கலிலே ஈஸ்வரனுக்குப் பிறந்த
ராகம் ஸூசிதமாயிற்று

வானாடு இத்யாதியாலே
அந்த விபூதியில் அனுபவத்தாலே யுண்டான செவ்வியும்
இவர் பக்கல் செறிவாலே உண்டானமை தோற்றிற்று ஆயிற்று

(அந்தா மத்து அன்பு செய்து –என்னாவி சேர் அம்மான்
சேர்ந்த பின்பு தானே அவையும் சித்தி பெற்றது
என் உச்சி உள்ளே நிற்கும் -தேவதேவன் -நின்றபடியாலே தேவ தேவன் ஆனான் )

—————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

முறையோ என்று கூப்பிட்டால் ஆறி இரான் இறே
வந்து குளிர நோக்கினான்

வியாக்யானம்

வண்ணம் சிவந்துள
திருக்கண்களுக்குச் சிவப்புப் பிறப்பே பிடித்து
ஸ்வ பாவமாய் இருக்கும் இறே
இப்போது வண்ணம் சிவந்துள -என்கிற இத்தால்
பூர்வ அவஸ்தையில் வை வர்ண்யம் அத்தலையில் என்னும் இடம் தோற்றுகிறது

ந ஜீவேயம் க்ஷணம் அபி -ஸூந்தர –66010-என்னும்படி இறே
அத்தலையில் ஆற்றாமை
ஆகையால் கண் உறங்காமையாலே வந்த சிவப்பும்
வை வர்ண்யமும் தீர்ந்தது இப்போது என்னும்படி இருக்கை

வானாடமரும் குளிர் விழிய
ஒரு த்ரிபாத் விபூதியாக ஒரு கண்ணில் குமிழில் கீழே யாயிற்று ஜீவித்துக் கிடப்பது
வானாடு அமரும்படியான குளிர்ந்த கடாக்ஷத்தை யுடையவன்

அமருகையாவது
இத்தாலே உண்டு உடுத்து வர்த்திக்கை
தாரகமும் போஷகமும் போக்யமும் எல்லாம் இவையே என்று இருக்கை

தண் மென் கமலத்தடம் போல் பொலிந்தன
குளிர்ந்து
மிருதுவாய் இருபத்தொரு தாமரைப் பொய்கை பரப்பு மாற
அலர்ந்தால் போலே யாயிற்று
திருக்கண்கள் இருப்பது

தாமிவையோ
தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ -(சாந்தோக்யம் -1-6-7-)என்று
கேட்டார் வாய் கேட்டு இருந்தோம்
அவை தான் இருக்கும் படி இதுவோ

கண்ணன் திருமால்
திருமால் கண்ணன்
ஸ்ரீ யபதி யாகையாலே
ஆஸ்ரிதற்குக் கையாள் யானவன்

திருமுகம் தன்னோடும் காதல் செய்தேற்கு
அழகிய திரு முகத்தோடு வந்து
குளிர நோக்க வேணும் என்று ஆசைப்பட்ட எனக்கு

எண்ணம் புகுந்து
மநோ ரதித்த படியே கை புகுந்தது என்னுதல்
அன்றிக்கே
எண்ணம் புகுந்து என்றாய்
என்னுடைய மநோ ரதத்தைத் தானே ஏறிட்டுக் கொண்டு

அடியேனோடு
ஜிதம் -ஜிந்ததே ஸ்தோத்ரம் என்கிறார்
அஹம் அர்த்தத்தினுடைய ஸ்வரூபம் தான் அடியேன் என்று போலே காணும் இருப்பது
ஜீவா ஸ்வரூப பரமான வாக்கியத்தில் அப்படியே இறே சொல்லுகிறது
அது ஜீவா ஸ்வரூப பரமோ என்னில்
ஓம் இத்யாத் மாநம் யூஞ்ஜீத -தைத்ரியம் -என்றும் யுண்டு
ஓங்காரே பகவான் விஷ்ணு என்றும் சொல்லா நின்றது இறே

இக்காலம்
இப்பேற்றுக்கு வரவாறு முன்நாள் அறிந்திலேன் கிடீர்

இருக்கின்றதே
நச புநரா வர்த்ததே -சாந்தோக்யம் -8-15- என்னும்
பேற்றைப் பெற்றோம் ஆகாதே என்று தோற்றி இரா நின்றது
ஒரு நாளும் இனிப் பிரிகைக்கு சம்பாவனை இல்லை என்று தோற்றி இரா நின்றது
ப்ரத்யக்ஷ ஸமாநா காரமாகிலும் இவர்க்கு
சமாநாசா காரம் என்று தோற்றாதே
ப்ரத்யக்ஷம் என்றே தோற்றுகிறது –

————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

இது உசிதமோ என்று நொந்து சொன்னால் ஆறி இரான் இறே
வந்து குளிர நோக்கினான்
அந்நோக்குக்கு இலக்கான தலைமகள்
ஹ்ருஷ்டையாய்
தன் தாய்க்கும் தோழிக்கும் சொல்லுகிறாளாய்
அருளிச் செய்கிறார் இதில்

வியாக்யானம்

வண்ணம் சிவந்துள
என்னில் அநு ராக உத்தரமான கண்ணில் சிவப்பு இப்போது யுண்டாயிற்று

அதுக்கும் மேலே

வானாடமரும் குளிர் விழிய தண் மென் கமலத்தடம் போல் பொலிந்தன தாமிவையோ
இவை திருக்கண் மலர்கள்
வான் நாட்டில் உள்ளாரில் காட்டிலும் என்னிவ் வக்நமாய்
ஸூ சீதளமான பார்வையை யுடைத்தாய் குளிர்த்தியும் மார்த்தவமும் யுள்ள
கமலங்களேயான தடாகத்தைப் போன்றதாய்
அது தான் இவைக்கு சரியோ என்னலாய் இரா நின்றது


இது ஹாவு ஹாவு -தைத்ரியம் என்றபடி

கண்ணன் திருமால் திருமுகம் தன்னோடும் காதல் செய்தேற்கு எண்ணம் புகுந்து அடியேனோடு யக்காலம் இருக்கின்றதே
என்பது இங்கே கூடும்
திருமால் வ்யாமோஹம் செய்யும் கண்ணனுடைய திரு முகத்தோடே
கோள் இழைத்த தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோள் இழையா வுடைய கொழுஞ்சோதி வட்டம் கொல் கண்ணன்
கோள் இழை வாண் முகமாய்க் கொள்கின்ற –திருவாய் –7-7-8-
ஸகல ஆனந்த ஸுந்தர்ய ஸாம்ராஜ்ய ஸ்த்தலமான திரு முகத்தில்
அதீப் தீயா நித்ய உபாயான சீலர்க்கு த்யான ரூடமாய் இருக்குமே அது

அடியேனோடு இக்காலம் இருக்கின்றதே
தனக்குப் பூவின் மீசை நங்கை போல் அடிமை செய்ய வேண்டின என்னோடே இப்போது
அநு பாவ்யமாய் இருக்கிறது
ப்ரத்யக்ஷமாய்த் தானே
இங்கும் ஓ என்பது அன்விதம்

—————

அவதாரிகை

இப்படி அனுபாவியனான ஸர்வேஸ்வரனுடைய திருக்கண்கள் உம்முடைய திரு உள்ளத்திலே
அபரோக்ஷ சித்தமாம் படி அனுபவித்து
இதுக்குப் பாசுரம் இட்டுச் சொல்லுவதும் செய்யா நின்றீர்
இனி வேண்டுவது என் என்ன

விலக்ஷணமான புருஷர்கள் ச க்ரமமாக ஆஸ்ரயித்து அனுபவிக்கிறாப் போலே
பூர்ண அனுபவம் பண்ணப் பெறாமையாலே
தரித்து இருக்கைக்காக அவன் திரு நாமத்தைச் சொல்லப் பெற்றேன்
இத்தனை யன்றோ என்கிறார் –

இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகளந்த
திருத் தாளிணை நிலத் தேவர் வணங்குவர் யாமுமவா
ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து கனியின்மையின்
கருக்காய் கடிப்பவர் போல் திருநாமம் சொல் கற்றனமே – -64 –

பாசுரம் -64-இருக்கு ஆர் மொழியால் நெறி இழுக்காமை –
தலைவன் பேர் கூறி தரித்து இருத்தலைத் தலைவி தோழிக்குக் கூறி இரங்கல் –
பாமுரு மூவுலகும் -7-6-

பதவுரை

நிலத் தேவர் –பூமி தேவர்களாகிய பிராமணர்கள்
இருக்கு ஆர் மொழியால்–வேதங்களிற் பொருந்தின மந்திரங்களைக் கொண்டு
நெறி இழக்காமை–முறைமை தவறாமல்
உலகு அளந்த திருதால் துணை வணங்குவர்–உலகங்களை அளவிட்ட (எம் பெருமானது)
திருவடிகளை வணங்கி அனுபவிப்பார்கள்:
யாமும்–நாமும்
அவா ஒருக்கா–(எமது) ஆசையை அடக்க மாட்டாமல்
வினையொடும் எம்மொடும் நொந்து–(அப்படி அநுபவிப்பதற்கு விரோதியான எமது) பாவத்தையும்
(அப் பாவத்திற்கு இடமான) எம்மையும் வெறுத்துக் கொண்டு
கனி இன்மையின் கருக்காய் கடிப்பவர்கள் போல–பழம் கிடைக்காமையாற் பிஞ்சைத் தின்பவர் போல
திருநாமம் சொல் கற்றனம்–(பூர்ணாநுபவம் கிடைக்காமையால் அதுவரையில் தரித்திருப்பதற்காக அவனது)
திருநாமங்களாகிய சொற்களைச் சொல்லுதல் செய்கிறோம்.

வியாக்யானம்

இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகளந்த
திருத் தாளிணை நிலத் தேவர் வணங்குவர்
வேதங்கள் எல்லாம் தனக்குள்ளே யாகும்படியான மூல மந்திரமான மொழியாலே
(ஓம் என்னும் படி உள்ளத்துக்கு எல்லாம் சுருக்காய் இருக்குமே )
ஆஸ்ரயண பிரகாரத்தில் ஒன்றும் வழுவாதபடி அந்த மந்த்ரார்த்த ப்ரகாசமாய்க் கொண்டு
ஸகல லோகங்களையும் தனக்குள்ளே யாக்கின திருவடிகளை
பூமிக்கு தேவர்களான ப்ராஹ்மண உத்தமர் ஆஸ்ரயித்து அனுபவியா நிற்பர்கள்

யாமுமவா
யாமும் அவா
அந்த அதிகாரம் இல்லாத நாமும் அப்படியோ
அல்ல என்றபடி

ஆனால் உம்முடைய அளவு என் என்னில்
ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து
அனுபவ விரோதியான பாபத்தை ஒருங்க விடாமையையும்
பிரதிபந்தகம் யுண்டானால் ஆறி இருக்க ஒண்ணாதபடி சபலமான ஸ்வரூபத்தையும்
பார்த்து ஈடுபட்டு (துன்பப்பட்டு )-

கனியின்மையின் கருக்காய் கடிப்பவர் போல்
பழம் கிடையாமையாலே பசுங்காயைத் தின்பாரைப் போலே

திருநாமம் சொல் கற்றனமே
பூர்ண அனுபவம் பெறாமையாலே சத்தை கிடைக்கைக்காக
அவன் திரு நாமத்தைச் சொல்லுகையை அப்யஸித்தோம் (இத்தனை ) என்றபடி

இப்பாட்டு
கலந்து பிரிந்த நாயகி
கலவி கிட்டாமையாலே நாயகனான ஈஸ்வரனுடைய குண நாமங்களைத் தான்
தரித்து இருக்கைக்காக உரைத்தேன் என்று
பாங்கியிடம் உரைத்தலாகவுமாம்

சொல் எடுத்துத் தன் கிளியைச் சொல்லே –திரு நெடும் -13-

திருமாலைப் பாடக் கேட்டு வளர்த்ததனால் பயன் பெற்றேன் -திரு நெடும் -14-

என்றதாய்க் கொண்டு
திரு நாமத்தால் நாயகி தரித்த இடங்களும் உண்டு இறே

கல்லெடுத்து கன்மாரி காத்தாய் என்னும்
காமரு பூம் கச்சி ஊரகத்தாய் என்னும்
வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும்
வெக்காவில் துயில் அமர்ந்த வேந்தே என்னும்
மல்லடர்த்து மல்லரையன் அட்டாய் என்னும்
மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா என்னும்
சொல்லெடுத்து தன் கிளியைச் சொல்லே என்று
துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே-13

முளைக் கதிரைக் குறும் குடியுள் முகிலை
மூவா மூ வுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற
அளப்பரிய ஆராமுதை யரங்கமேய யந்தணனை
யந்தணர் தம் சிந்தையானை
விளக்கொளியை மரகதத்தைத் திருத் தண் காவில்
வெக்காவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக வென்று
மடக்கிளியைக் கை கூப்பி வணங்கினாளே –14-

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

இவரைத் திருக்கண்களால் கடாக்ஷித்தான் என்று இறே கீழ் நின்றது
அல்லாதார் மேல் வையாதே நம் மேலே இவ்விசேஷ கடாக்ஷம் பண்ணுகைக்கு
நிபந்தம் என் என்று ஆராய்ந்தார்
அஹ்ருதயமாகத் திரு நாமத்தைச் சொன்னேன்
அத்தாலே அன்றோ என்கிறார் –

வியாக்யானம்

இருக்கார் மொழியால்
இருக்கில் ஆர்ந்த மொழியாலே
பிரதிபத்தாக்களுடைய புத்தி விசேஷங்களாலே அரை வயிறாகவும் பதராகவும்
பார்க்கலாய் இருக்கும் இடங்கள் உண்டாய் இருக்குமாயிற்று வேதங்களிலே
அவன் விபூதியைப் பரக்கச் சொல்லா நின்றால் –
அதில் ஏகதேச பூதரானவர்கள் பக்கலிலே பரத்வ பிரதிபத்தியைப் பண்ணியும்
ப்ரஸம்ஸா பரம் என்றும் சொல்லா நிற்பர்கள் இறே

அவன் ஸ்வரூப ரூபா குண விபூதிகளைப் பேசுகிற இடத்தில்
ஸ்வரூப ரூப குண விபூதிகளில் பிரமிப்பாரும் பிரமிக்க அவகாசம் இல்லாதபடி பேசுகிற
அநந்ய பரமான நாராயண அநு வாகாதிகளை யாயிற்று
இதில் ஆர்ந்த மொழியாகச் சொல்லுகிறது

ஸர்வே வேதா யத்ரைகம் பவந்தி -(யஜுஸ் ஆர ப்ரச்னம் -3)இத்யாதியால்
எல்லா வாக்யங்களுக்கும் அவனே வாஸ்யனாகை இறே யுக்தம்
உத்க்ருஷ்ட பதார்த்தங்களுக்கு வாசகமான ஸப்தங்கள்
இவ்வநுவாகத்திலே நின்று அவன் பக்கலிலே ப்ரயோகிக்கையாலே
எல்லாம் அவனையே சொல்லிற்று ஆக வேணும் இறே

நெறி இழுக்காமை
பகவத் ஸமாராதநம் ஆகிற வைதிக மர்யாதையைத் தப்பாமே

உலகளந்த திருத் தாளிணை
இவை அறியவுமாம்
அறியாது ஒழியவுமாம்
என்னுடைமையை நான் விடேன் -என்று ஸ்வீ கரிக்கும் ஸ்வ பாவனாய் யுள்ளவனை
இவை அறியாதே இருக்கச் செய்தேயும்
தானே எல்லை நடந்து மீட்டுக் கொண்டான் இறே

நிலத் தேவர் வணங்குவர்
ஸம்ஸாரத்திலே வர்த்தியா நிற்கச் செய்தேயும்
விண்ணுளாரிலும் சீரியர் –திரு விருத்தம் –79- என்னும்படியே
பூ ஸூரர் ஆனவர்கள் உலகு அளந்த திருத்தாளிணை நெறி இழுக்காமை வணங்குவர்

யாமும்
அவர்களுடைய பரிகரம் இன்றிக்கே இருக்கிற நானும்

அவா ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து கனியின்மையின்
கருக்காய் கடிப்பவர் போல் திருநாமம் சொல் கற்றனமே

———————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

வியாக்யானம்

இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகளந்த
திருத் தாளிணை நிலத் தேவர் வணங்குவர் யாமுமவா
ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து

கனியின்மையின் கருக்காய் கடிப்பவர் போல்
கனிந்த பழம் இல்லாத போது
காய்ப்பழத்தைப் புஜிப்பாரைப்
உபாயத்தில் ஸூ விசத ஞானமும் அனுஷ்டான சக்தியும் உண்மைக்கு கனி நிதர்சனமும்
மந்த ஞான சக்திகளுக்குக் கருக்காயும்

திருநாமம் சொல் கற்றனமே
அவன் அறியப் பரி பூர்ண உபாய கர்ப்பமாய் அவன் திரு நாமத்தை உட் கொண்ட சொல்
நமோ நாராயணாய என்பது
அத்தை உச்சரித்தேன்
அத்தால் கடாக்ஷத்தைப் பெற்றேன் என்றதாயிற்று –

—————

அவதாரிகை

இப்படி இவ்வாழ்வாருக்கு பகவத் விஷயத்திலே
எண்ணம் புகுந்து –திரு விருத்தம் -63-என்கிறபடியே
மானஸ அனுபவம் நடக்கிற படியும்
கருக்காய் கடிப்பவர் போல் –திரு விருத்தம் -64-என்று
பூர்ண அனுபவம் பெறாமையால் யுண்டான அதிருப்தி நடக்கிற படியையும் கண்டு

(உற்றும் -எண்ணம் புகுந்தது படி -மானஸ அனுபவம்
உறாததும் -கனி இருக்க காய் -உண்ட பூர்ண பாஹ்ய அனுபவம் கிடைக்காமல் )

இந்த உபய ஆகார விசிஷ்டமான இவருடைய ஞானத்திலே (கண்ணிலே )
அன்பர் அகப்பட்டு உரைத்த பாசுரத்தை

தலைவி நோக்கின் வாசி கண்டு
தலைவன் குறித்து ( விரித்து )யுரைத்த பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று ஒரோ கரும
முற்றுப் பயின்று செவியொடு உசாவி உலகமெல்லாம்
முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்
உற்றமுறாதும் மிளிர்ந்த கண்ணா யெம்மை உண்கின்றவே –65 –

பாசுரம் -65-கற்றுப் பிணை மலர்க் கண்ணின் குலம் வென்று –
தலைவியின் கண்கள் கவர்ந்ததைத் தலைவன் கூறல் –
நோற்ற நோன்பு -5-7-

பதவுரை

கன்று பிணை–இளமையான பெண்மான்களுடைய
மலர் கண்ணின்–பரந்த கண்களின்
குலம்–சாதியை
வென்று–ஜயித்து
ஒரே கருமம் உற்று–ஒரு காரியத்திலே பொருந்தி
பயின்று–அக்காரியத்திலே பழகி
செவியோடு உசாவி–(அக்காரியத்தைக் ) காதுகளோடு வினாவி ஆலோசித்து,
உற்றும் உறாதும் மிளிர்ந்த–(எனக்கு) அனுகூலமாயும் பிரதிகூலமாயும் தடுமாறுகிற
கண் ஆய்–கண்களாய் (இவை)
உலகம் எல்லாம் முற்றும் விழுங்கி உமிழ்ந்த பிரானார் திரு அடி கீழ்–எல்லா வுலகங்களையும் மிச்சமில்லாதபடி
(பிரளய காலத்தில்) வயிற்றினுட்கொண்டு (பின்பு) வெளியிட்ட எம்பெருமானது திருவடிகளின் கீழே (இவ்வுலகத்திலே)
எம்மை உணர்கின்ற–எம்மை (த் தமக்கு உள்ளாம்படி) கவர்ந்து கொள்கின்றன.

வியாக்யானம்

கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று
இளைய மான் பேடைகளுடைய மலர்ந்த கண்ணின் ஜாதியை வென்று

ஒரோ கரும முற்றுப் பயின்று
தன்னில் தான் பலகாலும் கிட்டுகையாலே
பர்யாயம் தோறும் ஒரு கார்யத்தைக் கிட்டி அறுதியிடுகிறது என்னலாய்

செவியொடு உசாவி
மாண்டு கர்ணத்து அளவும் செல்லுகையாலே அறுதியிட்ட காரியத்தை
ஸ்ரவண இந்த்ரியத்தோடே விசாரியா நின்றது என்னலாய்

உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்
லோகம் அடைய பிரளய ஆபத்தில் ஈடுபடாமல் திரு வயிற்றிலே வைத்து நோக்கியும்
நெருக்குப் படாமல் வெளிநாடு காட்டியும் ரஷித்த
ஈஸ்வரனுடைய திருவடிகளிலே

உற்றமுறாதும்
உற்றும் உறாதும்
கிட்டினார் கண் போலேயும்
கிட்டாதார் கண் போலேயும்

அதாவது
உகப்பும்
செல்லாமையும்
தோற்றி இருக்கை

நாயகனைக் கண்ட உகப்பும்
இவனை ஒழியச் செல்லாமையும்
தோற்றும்படி
பார்வையிலே அறியலாய் இருக்கை

மிளிர்ந்த கண்ணாய்
உகப்பும் செல்லாமையும் மிளிர்தலிலே காணலாம் படி
கண் என்று பேராய்

எம்மை உண்கின்றவே
நம்மைத் தனக்குள்ளே யாம் படி க்ரஹியா (க்ரஸியா) நின்றன என்று தன்னை இவள்
கண்களுக்கு ஆக்கிக் கொண்டமை சொன்னான் ஆயிற்று

இத்தால்

கற்றுப் பிணை -இத்யாதியாலே
இவ்வாழ்வாருடைய ஞானம்
ஸம்ஸாரம் ஆகிற காட்டிலே திரிகிற முக்தமான ம்ருக பிராயருடைய
ஸப்தாதி விஷயங்களிலே விகஸிதமான ஞான ஜாதியை
வென்று இருக்கும் என்றபடி

ஒரோ கரும முற்றுப் பயின்று -என்கையாலே
ஞாதவ்யமான பகவத் ஸ்வரூபாதிகளிலும்
ஸ்வரூப விரோதிகளிலும்
புருஷார்த்த விரோதிகளிலும்
சாதனா விரோதிகளிலும்
வ்யவசிதமாய்க் கொண்டு சீலித்த படி

செவியொடு உசாவி -என்கையாலே
இவ் வர்த்த நிஷ் கர்ஷங்கள் இதுக்கு
நிர்ணாயக ப்ரமாணமான ஸ்ருதியோடே
சம்வதித்து இருக்கும் என்றபடி
(ஸ்ருதி சொல்வதை ஸ்ராவ்ய காது இடம் தானே கேட்க வேண்டும் )

உலகம் இத்யாதியாலே
ஸர்வ ரக்ஷகனான ஸர்வேஸ்வரன் திருவடிகளிலே மானஸ அனுபவத்தால் வந்த உறுதலையும்
பாஹ்ய அனுபவத்தால் வந்த உறாமையையும் சொல்லுகிறது

மிளிர்ந்த கண்ணாய் -என்கையாலே
ஸர்வ அவஸ்தைகளிலும் ஞானத்தினுடைய விகாஸம் சொல்லிற்று

எம்மை யுண்கின்றனவே -என்கையாலே
இந்த பிரகாரத்தாலே இவருடைய ஞானம் ஆஸ்ரிதரை
வஸீ கரித்த படி சொல்லிற்று ஆயிற்று

————–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

தலைமகள் நோக்கிலே ஈடுபட்ட தலைமகன்
ஆக்கங்கள் தனக்கு பாதகம் ஆகிறபடியைப்
பாங்கனுக்குச் சொல்லுகிறான்

வியாக்யானம் –

கற்றுப் பிணை
கன்றான மான்
முக்தமான மானினுடைய

மலர் கண்ணின்
மலர் போலே இருக்கிற கண் என்னுதல்
விகஸிதமான கண் என்னுதல்

குலம் வென்று
அஜ்ஜாதியாக வென்றதாயிற்று

ஒரோ கரும முற்றுப் பயின்று செவியொடு உசாவி
ஒரோ கார்யத்திலே யுற்று
அதிலே நெருங்கி
அத்தைச் செவியோடே உசாவி
ஸர்வ விஷயமாய் ஓர் இடத்திலும் பற்று இன்றியிலே இராதே
ஒன்றிலே துணிந்து
அதிலே நெருங்கி
அத்தை தேசிகாரோடே போதயந்த பரஸ்பரம் –ஸ்ரீ கீதை –10-9-பண்ணுவாரைப் போலே
இவனையே ச விசேஷமாகக் கடாக்ஷிப்பது
இவன் பார்த்தவாறே
கண்ணை மாற வைப்பதான போது இருந்தபடி

உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்
ஸர்வ ரக்ஷகரானவர் திருவடிகளிலே இருந்து
அவர் எல்லைக்குள்ளே இருந்தாயிற்று இவை பாதகம் ஆகிறது

உற்றமுறாதும் மிளிர்ந்த கண்ணாய்
மாறுபாடு யுருவும்படி இவனை நோக்குவது
அந்நோக்கிலே பரவசனாய்
இவன் பார்த்தவாறே அந்நோக்கை மாற வைப்பதாய்
மிளிரா நின்றுள்ள கண்ணாய்

எம்மை உண்கின்றவே
கண் என்கிற வியபதேசத்தாலே ஒரு பாதக பதார்த்தம் என்னை நலியா நின்றது

இத்தால்
ஆழ்வார் படியைக் கண்டவர்களுக்கு இருக்கிற படி இறே இது
கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று -என்கிற இத்தால்
கார்ய புத்தி இல்லாத முக்யத்தை நினைக்கிறது

ஒரோ கரும முற்றுப் பயின்று -என்கிற இத்தால்
ப்ரபத்தியைச் சொன்னபடி இறே இது
பின்னை ஞான கார்யம் அன்றோ
கீழ்ச் சொன்ன மௌக்த்யம் இதுக்குச் சேர்ந்த படி எங்கனே என்னில்
அதில் கர்தவ்யதா புத்தி இன்றிக்கே இருக்கையை நினைக்கிறது
இது தன்னைச் செய்யா நிற்கச் செய்தே சாதனத்தில் அந்வயியாதே
ஸ்வரூபத்திலே அந்தர்பவித்து இருக்கும் இறே

செவியொடு உசாவி உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்
உற்றமுறாதும் மிளிர்ந்த கண்ணா யெம்மை உண்கின்றவே
சொன்னபடியே யுடையராய் இருக்கிற இருப்புத் தான் கண்டாரை ஈடுபடுத்தும் படியைச் சொல்லுகிறது

———

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

வண்ணம் சிவத்தில்
அவள் நோக்கில் அவனுக்கு அகப்பட்ட தலைமகன்
அவன் நோக்கின் வாசியை
செங்கண் சிறுச் சிறிதே -திருப்பாவை -22-
என் மேல் செய்த படியைக் கண்டு நாயகன் கருத்து அறிந்த
தாயாருக்கும் தோழிமார்க்கும் உரைத்த பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் இதில்

வியாக்யானம்

கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று
இள மான் பேடைகளுடைய மலர்க்கண்களை எல்லாம் ஜயித்தாய்

ஒரோ கரும முற்றுப் பயின்று
பரஸ்பர ஸ்ப்ர்த்தை யுள்ளதாய்
தன்னில் தான் பர்யாயத சலிக்குமதாய்
ஓர் காரியத்தை எண்ணி அறுதியிடுகிறது என்னவாய்

செவியொடு உசாவி
அறுதியிட்டு கார்யத்தைச் செவியோடே உற்றுப் பேசுகிறது என்னலாய்

உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்
லோகங்களை பிரளயம் வர திருவயிற்றிலே வைத்து ரஷித்தும்
அது போக வெளிப்படுத்தி ரஷித்தும்
உபகரித்த அவன் திருவடிகளுக்கு அடிமை செய்ய

உற்றமுறாதும்
கிட்டின அவளாயும்
கிட்டாத அவளாயும்

மிளிர்ந்த கண்ணாய்
கடாஷமுள்ள திருக்கண் மலர்களாய்

எம்மை
என்பது -ஸ்வீ யரைக் கூட்டிக் கொண்டு

உண்கின்றவே
எம்மை அனுபவிப்பதாய் ப்ரதிமையைப் பண்ணுமவையாய்
இரா நின்றதுகன் –

—————-

அவதாரிகை

இப்படி இவருடைய ஞான வைலக்ஷண்யத்தைக் கண்ட அன்பர்
நம்முடைய அளவிலேயே இவருடைய ஞானம் விஷயீ கரித்தது
விலக்ஷண ஞானரான பரம யோகிகளுக்கும் நித்ய அனுபாவ்யமாய் யன்றோ இருப்பது என்று
தங்கள் ஸூஹ்ருத்துக்களுக்குச் சொன்ன பாசுரத்தை

தலை மகளை இயற்கையில் கலந்து பிரிந்த தலைவன்
தன்னுறாவுதல் கண்டு வினாவின பாங்கனைக் குறித்து
உற்றது யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

உண்ணாது உறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும்
எண்ணாய் மிளிரும் இயல்வினவாம் எரி நீர் வளி வான்
மண்ணாகிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாள்
கண்ணாய் அருவினையேன் உயிராயின காவிகளே – -66 –

பாசுரம் -66-உண்ணாது உறங்காது உணர்வுறும் எத்தனை –
தலைவன் தோழன் பேச்சை மறுத்தல் –
ஆராவமுதே -5-8-

பதவுரை

எரி–அக்நியும்
நீர்–ஜலமும்
வளி–வாயுவும்
வான்–ஆகாசமும்
மண்–பூமியும்
ஆகிய–என்னும் பஞ்ச பூதங்களின் வடிவமான
எம்பெருமான் தனது எம்பெருமானுடைய
காவிகள்–செங்கழுநீர்ப் பூக்காளனவை
உண்ணாது–உண்ணாமலும்
உறங்காது–தூங்காமலும்
உணர்வு உறும்–(எப்பொழுதும் த்யாக ரூபமான) ஞானத்திற் பொருந்தின
வைகுந்தம் அன்னான்–ஸ்ரீவைகுண்டத்தை யொத்து எப்பொழுதும் அநபவிக்கத் தக்கவளான தலைமகளினுடைய
கண் ஆய்–கண்களென்று பேராய்
அரு வினையேன் உயிர் ஆயின–தீர முடியாத தீவினைகளையுடைய எனக்கு உயிர் நிலையான
எத்தனை யோகியர்க்கும்–மிக்க யோக நிலையை யுடைய முனிவர்க ளெல்லோர்க்கும்
எண் ஆய்–(அந்த யோகத்தை விட்டு எப்பொழுதும்) நினைக்கத் தக்கவையாய்
மிளிரும்–பிறழ்ந்து தோன்றுகிற
இயல்வின் ஆம்–தன்மையை யுடையவையாம்.

வியாக்யானம்

உண்ணாது உறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும் எண்ணாய் மிளிரும் இயல்வினவாம்
அத்யசனமும்
அதி நித்தரையும்
யோக விரோதியாம் என்று துறந்து
யுக்தாஹார விஹாரராய்
யுக்த ஸ்வப்ந அவ போதராய்க் கொண்டு
நிரந்தர த்யான தத் பரரான
ஸநகாதி பரம யோகிகளுக்கும் ஹ்ருதயமாய்க் -(எண்ணாய் )கொண்டு
நிரந்தர அனுபாவ்யமாய்
மிளிர்ந்து தோற்றும் ஸ்வ பாவத்தை யுடையனவாகா நிற்கும்
(ஆழ்வாரது கண்கள் )

எரி நீர் வளி வான் மண்ணாகிய வெம்பெருமான்
பிராணிகளுக்கு சீதோஷ்ண பரிஹார ரூபமாயும் (எரியும் நீரும் )
ஆஸ் வாஸ கரமாயும் (காற்று)
அவகாஸ ப்ரதமாயும்
தாரகமாயும் யுள்ள பஞ்ச பூதங்களுக்கும் அந்தராத்மாவாய்
அக் கணக்கிலே நமக்கு ஸ்வாமியான ஸர்வேஸ்வரனுடைய

தனது வைகுந்த மன்னாள் கண்ணாய்
அசாதாரணமாய்
அழிவற்ற தேசம் போலே
நித்ய அநுபாவ்யை யானவளுடைய கண் என்ற பேராய்

அருவினையேன் உயிராயின
நிரந்தர அனுபவம் பண்ணப் பெறாமல் பிரிகைக்கு
அடி முடி காண ஒண்ணாத (அநாதியான -அந்தமும் இல்லாத ) பாபத்தை யுடையேனான
எனக்கு முடிய ஒண்ணாத படி பிராணனாய்ப் புக்கு நில்லா நிற்பன வாயின

காவிகளே
ராக உத்தரதையாலே செங்கழுநீர்த் தடாகம் போலே இருக்கையாலே
காவி என்னாலானவை

கண்ணாய் அருவினையேனு யிராயின காவிகள் எண்ணாய் மிளிரும் இயல்வினவாம்
என்று அந்வயம்

இத்தால்
ஆஸ்ரிதரான அன்பருக்கு தாரகமாய்
ராகோத்தரமான ஆழ்வாருடைய ஞானமானது
அசநாத்ய தீதராய் அசங்குசித ஸ்வ பாவராய் நிரந்தர அனுபவ தத் பரரான
நித்ய யோகத்தை யுடைய ஸூரிகளுக்கும் நித்ய அனுபாவ்யமாய்க் கொண்டு
விளங்கித் தோற்றும் ஸ்வ பாவத்தை யுடைத்தாகா நிற்கும் என்றதாயிற்று –

—————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

தலைமகள் கண் அழகிலே ஈடுபட்ட தலைமகன் வார்த்தையாய் இருக்கிறது கீழ் போலே

வியாக்யானம்

உண்ணாது உறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும்
பிராகிருத போகங்களால் தரியாதாராய்
ப்ரக்ருதி ப்ராக்ருதங்கள் த்யாஜ்யம் என்கிற புத்தியே யன்றியே
உபாதேயமான ஆத்மவஸ்து உத்தேச்யம் என்னும் புத்தியை யுடையராய்
அவ்வாத்ம வஸ்து தான் ஸ்வ தந்திரம் என்று இருக்கை அன்றிக்கே
ஆத்ம யாதாத்ம்ய ஞான பூர்வகமாக ஈஸ்வர ஞானத்தை யுடையராய்
இது அவனுக்கு பிரகாரம் என்று இருக்கும் படி பரம யோகம் கை வந்து இருக்குமவர்களுக்கும்

எண்ணாய் மிளிரும் இயல்வினவாம்
அவர்களும் இக்கண்ணுக்கு இலக்கானார்கள் ஆகில்
தங்களுக்கு ஸூபாஸ்ரயமான பரதத்வம் தன்னையும்
காற்கடைக் கொண்டு
இத்தையே அது அது என்னும்படி பிரகாசிக்கையே ஸ்வ பாவமாக யுடையனவாய் யுள்ளன

எரி நீர் வளி வான் மண்ணாகிய
காரணமான பூத பஞ்சகங்களும் கார்ய ஜாதத்துக்கு எல்லாம் உப லக்ஷணம்
அக்னி நீர் காற்று ஆகாசம் பூமி இவை யடையத் தனக்கு விபூதியாக யுடையவன்

வெம்பெருமான்
அவனுடைய விபூதி யோகம் தனக்குப் பேறாய் இருக்கிற படி

தனது வைகுந்த மன்னாள்
மானாவிச்சோலை போலே ஆவது அழிவதாம் இவ்விபூதி போல் அன்றிக்கே
ஒரு நாளும் அழியாததாய்
அவனுக்கு அஸாதரணமாய்
அந்தரங்கமான நித்ய விபூதியோடே ஒத்து இருந்தவள்
அவனோடே அழியாத விபூதியோடே ஒத்து இருந்துள்ளவள்

கண்ணாய் அருவினையேன் உயிராயின காவிகளே
அப்படிப்பட்டவன் பக்கலிலே வந்தவாறே
பிரதான அவயவமாய்
என் பக்கலிலே வந்தவாறே அச்சேத்யமாய் அதாஹ்யமாய் அழியாததாய் இருந்துள்ள ஆத்ம வஸ்துவாய்
பாதகமாம் இடத்தில் ஸ்வ தந்திரமாய் நின்று பாதகமாகா நின்றன

ஆறு வினையேன்
ரக்ஷகமானவை தானே பாதகமாம் படி பாபத்தைப் பண்ணினேன் –

—————

அவதாரிகை

இப்படி அனுபாவ்யமான ஆழ்வாருடைய ஞான வைலக்ஷண்யத்தை
போக்தாக்கள் உகந்து யுரைத்த பாசுரத்தை
தலைமகள் கண்ணழகு கண்டு தலைமகன் வியந்து யுரைத்த பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு அசுரைச் செற்ற
மாவியம்புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர்
தூவியம் பேடை யன்னாள் கண்களாய துணை மலரே – 67-

பாசுரம் -67-காவியும் நீலமும் வேலும் கயலும் பல பல –
தலைவன் தன் வலி யழிவு உரைத்தல் –
உலகமுண்ட பெரு வாயா -6-10-

பதவுரை

அசுரை–அசுரர்களை
செற்ற–அழித்த
மா விய புள் வல்ல–பெரிய ஆச்சர்ய கரமான கருடப் பறவையை ஏறி நடத்துகிற
மாதவன்–திருமகள் கணவனும்
துணை மலர்–ஒன்றொடொன்று ஒத்த இரண்டு தாமரை மலர்கள்
காவியும்–செங்கழுநீர்ப் பூவையும்
நீலமும்–கருநெய்தற் பூவையும்
வேலும்–வேற்படையையும்
பலபல–(மற்றம் கண்ணுக்கு ஒப்பாகின்ற மான்விழி முதலிய) மிகப்பல பொருள்களையும்
கோவிந்தன்–பசுக்களைக் காப்பவனுமான பெருமானுடைய
வேங்கடம்–திருவேங்கடமாமலையிலே பொருந்தி வாழ்கிற
தூவி அம்பேடை அன்னாள்–சிறகழகையுடைய அன்னப் பேடை போன்றவளது
கண்கள் ஆய்–கண்களாகிய
வென்று–தமக்கு ஒப்பாகாதபடி ஜயித்து
பாரிப்பு–என்னை வருத்துவதற்கு அடி கோலிய பரப்பு
ஆவியின் அல்ல–(எனது) உயிரின் தன்மைக்கு
அளவு அல்ல–ஏற்ற அளவல்ல.

வியாக்யானம்

காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
சிவப்பாலே செங்கழு நீரையும்
நைல்யத்தாலே நெய்தலையும்
கூர்மையாலும் ஒளியாலும் வேலையும்
குளிர்த்தியாலும் மிளிர்த்தியாலும் கயலையும்

மற்றும்
கண்ணுக்கு ஒப்பான
வாள்
அம்பு
வடி
மான் விழி
முதலான பலவற்றையும் வென்று

அன்றியே
கீழ்ச் சொன்னவற்றைத் தனித்தனியே
பலவற்றையும் வென்று என்னவுமாம்

ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு
நம்முடைய பிராணனின் ஸ்வரூபத்துக்குத் தக்கதல்ல
இவற்றினுடைய கோலுதலின் பரப்பு

அசுரைச் செற்ற மாவியம்புள் வல்ல மாதவன்
விரோதி நிரசன ஸமர்த்தனாய்
பெரிய ஆச்சர்யத்தை யுடையவனான பெரிய திருவடியை நடத்த வல்லவனாய்

பொரு சிறைப் புள்ளுவந்து ஏறும் பூ மகளார் தனிக் கேள்வன் –திருவாய் -1-9-3- என்கிற படியே
இந்த கருட வாஹனத்வத்துக்குத் தகுதியான ஸ்ரீயபதித் வத்தை யுடையவன்

கோவிந்தன்
வெறும் பரத்வத்தால் வந்த மேன்மையோ
பசுக்களின் பின்ன போகலாம்பாடி பவ்யனானவன்

வேங்கடம் சேர் தூவியம் பேடை யன்னாள்
இந்த பரத்வ ஸுலப்யங்கள் இரண்டும் ப்ரகாசிப்பதான திருமலையில்
பொருந்தி வர்த்திக்கிற
அழகிய சிறகுகளை யுடைய அன்னப் பேடை போலே இருக்கிற இவளுடைய

(ஸ்ரீ வைகுண்ட விரக்தாயா வேங்கடேசாயா ரமயா ராமமாணாயா ஸ்வாமி புஷ்காரணீ தடே
ஸ்லோகத்தில் -இவை அனைத்துமே உண்டே )

கண்களாய துணை மலரே
கண் என்று பேராய் இருக்கிற
தன்னில் தான் சேர்ந்த இரண்டு கண்களானவை

இவற்றுக்கு -என்று
அத்யாஹரித்து
ஆவியின் தன்மை அளவுள்ள பாரிப்பு -என்று
அவயம்

இத்தால்

காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு -என்கையாலே
ஆழ்வாருடைய ஞானமானது
ராக ஹேதுவான ரஜஸ்ஸையும்
கார்ஷ்ண்ய ரூபமான தமஸ்ஸையும்
லகுவாய் ப்ரகாசகமான சத்வத்தையும் கடந்து
(மிஸ்ர ஸத்வம் தாண்டி ஸூத்த ஸத்வம் வேண்டுமே
முக்குணம் தாண்டி நித்ய ஸத்வம் வேண்டுமே )

இப்படி குண த்ரய உத்தீர்ணம் ஆகையால்
ஜட ப்ரக்ருதியான பதார்த்தங்களில் சேர்த்தி அற்ற படி
பஹு பிரகாரமான வ்யாவ்ருத்தியை யுடைத்தாய்க் கொண்டு
நம்முடைய ஸ்வரூபத்தின் அளவன்று இதினுடைய பாரிப்பு என்றபடி

தூவியம் பேடை யன்னாள் -என்கையாலே
இவருடைய ஸூத்த ஸ்வபாவத்தையும்
(வேல் வெளுப்பு மிஸ்ர ஸத்வம் )
ஞான அனுஷ்டான ரூப பஷ த்வய அந்வயமும்
பாரதந்தர்யமும் (பேடை)
ஸூசிதமாயிற்று

அசுரைச் செற்ற மாவியம்புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர் தூவியம் பேடை -என்று
அலர் மேல் மங்கையைச் சொல்லி
அவளோடே இவருடைய ரூபத்துக்கு ஒப்புச் சொல்லிற்று ஆகவுமாம்
(கடி மா மலர்ப்பாவையுடன் ஷாம்ய ஷட்கம் உண்டே )

கண்களாய துணை மலரே -என்றவிடம்
இவருக்கும் துணையாய்
ஆஸ்ரிதற்கும் துணையான
விகாஸத்தை உடைத்து என்று தோற்றுகிறது

————–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

இப்பாட்டாலும் கண்ணழகு தன்னையே சொல்லுகிறான்
தலைமகன்

வியாக்யானம் –

காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
கண்ணுக்கு ஒப்பு தேடப் புக்கால்
விஷ்ணுநா சத்ருஸோ வீர்யே –ஸ்ரீ பாலா -1-18-என்கிறபடியே
ஒரோ ஆகாரங்களாலே ஒப்பாகப் பலவற்றையும் பிடித்தால்
எல்லாம் கூட ஒப்பாகவற்றோ
மாட்டாது என்னும்படி இறே இவை தான் இருப்பது

விஷ்ணுநா சத்ருஸோ வீர்யே
பரத்வமும் வீர்ய குணம் ஒன்றுக்கும் ஒப்பாம் அத்தனை

இப்படி சீலாதி குணங்கள் கண்டு அனுபவிக்கப் போகாதே இறே அங்கு

சிவப்பாலே செங்கழுநீரை வென்று
கருமையாலே நெய்தலை வென்று
ஓராளும் ஓர் நோக்குமாய் இருக்கும்படி இருக்கையாலே வேலை வென்று
மவ்க்யத்தாலே கயலை வென்று
மற்றும் ஒப்பாகச் சொல்லும் அவற்றை அடையப் புக்கவிடம் புக்கு வென்று

ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு
தன்னடையே அழியுமவற்றை வெல்லுகை வெற்றிக்கு உடலோ என்று
அழியாத ஆத்ம வஸ்துவையும் அழிப்பதாகக் கோலா நின்றன

ஆவியின் தன்மை அளவுள்ள
இவ்வாத்ம வாஸ்துவின் அளவன்றியே
இதனுடைய சத்தா ஹேதுவான பதார்த்தத்து அளவும் செல்வன போலே இரா நின்றன
இவளுடைய அவயவங்கள் அவனையும் கூட மயக்க வல்ல போலே காணும்

அசுரைச் செற்றமாவியம்புள் வல்ல மாதவன்
அசுரர் வர்க்கத்தை யடைய அழியச் செய்து
மஹானாய்
அவன் தன்னோ பாதியும் பெரியனாய்
விஸ்மய நியாமான வியாபாரங்களை யுடையனாய்
இருந்துள்ள பெரிய திருவடியைக் கருத்து அறிந்து நடத்த வல்லவன்

மாதவன்
கருட வாஹனனான ஏற்றத்துக்கு மேலே
ஸ்ரீ லஷ்மீ பதியான ஏற்றத்தை யுடையவன்

கோவிந்தன்
அவளோட்டைக் கண் கலவியாலே ஆஸ்ரித ஸூலபனானவன்

வேங்கடம் சேர்
அந்த ஸுலப்யமும் மேன்மை என்னும்படி
திருமலையிலே வந்து ஸூலபனானவன்

தூவியம் பேடை யன்னாள்
கோவிந்தனதான வேங்கடத்தைச் சேருமதாய்
புறம்பு ஓர் இடத்திலும் பொருந்தாததான
தூவியம் பேடை யுண்டு
அழகிய சிறகை யுடைய அன்னப்பேடை
அத்தோடு ஒத்து உள்ளவள்

அன்றிக்கே
தூவியம் பேடை -என்று
பெரிய பிராட்டியாரைச் சொல்லிற்றாய்
அவளோடே ஒத்து உள்ளவள் என்றுமாம்

கருட வாஹனன்
ஸ்ரீ லஷ்மீ பதி
என்கிற இவை இப்போது சொல்லுகிறது என் என்னில்
ஸுலப்யத்தைச் சொல்ல நினைத்து
அது குணம் ஆகைக்கு அடியான பரத்வத்தைச் சொல்லி
பின்பு அந்த ஸுலப்யத்தின் எல்லையில் வந்து ஆறுகை

கண்களாய துணை மலரே
கண் என்கிற வியபதேசத்தாலே
ஒன்றுக்கு ஓன்று ஒப்பாய் இருப்பன இரண்டு பூக்களாயிற்று

கண்களாய துணை மலரின் பாரிப்பு
காவியும் என்று தொடங்கி
ஆவியின் அளவுள்ள பாரிப்பு
என்று அந்வயம்

இத்தால்
திருமலையிலே வந்து நிற்கிறவனுடைய சீல குணத்திலே வித்தராய் இருக்கிற
ஆழ்வார் படி போக்த்தாக்கள் அளவல்ல என்று
ஸ்ரீ வைஷ்ணவர்கள் சொல்லுகிற பாசுரத்தை
பார்ஸ்வஸ்த்தர் பாசுரத்தாலே அனுபவிக்கிறார் தாம்

————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

இப்படி பகவானுடைய உக்த வித கடாக்ஷத்தாலே
தாம் இங்குள்ள இருப்பில் உயரப் பெற்றமையை அருளிச் செய்து
நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின் கோயில் சீய்த்து –திருவாய் -9-2-1- என்று
அருளிச் செய்த படியே
இவ்வாழ்வார் அவ்விருவராலும் ஒரு நினைவால் நீயதராய்
இந்த திவ்ய பிரபந்த கரணத்தில்
அதிக்ருதரானது கொண்டு அவன் கடாக்ஷத்தைக் கடாஷித்தவராய்
இங்கான வெந்நிலத்தில் உள்ள பங்கயத்தாள் பாரிப்பு என்னாத்ம ஸ்வரூபம் மட்டுல்ல என்று
அவளுடைய இப்போதான் விசேஷ கடாக்ஷத்தில் தாமான தன்மையில் ஈடுபடுகிறார் இதில்

வியாக்யானம்

காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
சிவப்பாலே செங்கழு நீரையும்
கறுப்பாலே நெய்தலையும்
தன் படியை ஸ்வ வசமாக்கிக் கொள்ளுமத்தால் வேலையும்
ஒளியோடு கூடின ஆகார ஸுந்தரியத்தாலே கயலையும்
மற்றும் கண்ணுக்கு ஒப்பாகச் சொல்லப்பட்ட அம்பு மான் விழி என்று
பல பல வானவைகளையும் வென்ற கண் படைத்தவள்

அசுரைச் செற்ற மாவியம்புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர் தூவியம் பேடை யன்னாள்
அதி விஸ் மய நீய விரோதி நிரசனமுள்ள ககேந்த்ரனை நடத்த வல்ல
ஸ்ரீ லஷ்மீ வல்லபன் கிடீர்
கோவிந்தனாய் வந்து அவதரித்தவனும்
திருவேங்கடம் சேர்ந்தவனும்
அவனுடையதாய் அமைந்த ஸர்வ ஸரீரியாய்
தத் கத தத் ப்ரயுக்த தோஷ அஸ்பர் ஸித்வம் உள்ளது கொண்டு
அவனுக்கு அழகியளான பேடை யானப்பட்டவளுடைய

கண்களாய துணை மலரே
ஒன்றுக்கு ஒன்றே ஸுந்தர்ய சாத்ருஸ்யம் கொண்டதான திருக்கண் மலர்களே

என் ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு
என்னாத்மாவுக்கு யுள்ள ஸ்வ பாவ ஸித்த ஞான சக்த்யாதிகளின் மாட்டு இல்லாத
பலவிதரண உத்ஸாஹம் உள்ளது

ஐஸ்வர்யம் அக்ஷர கதிம் –ஸ்ரீ குணரத்ன கோசம் -68- என்று அருளிச் செய்த
ஸுந்தர்யத்தின் மாட்டு அல்லவாய் இரா நின்றது என்னில்
கடாக்ஷத்தால் அறியப்பட்ட ஸுந்தர்யம் என்றபடி –

————–

அவதாரிகை

இப்படி நிரதிசய வைலக்ஷண்யத்தை யுடைத்தான தம்முடைய ஞானத்தால்
பகவத் பாகவத விஷயங்களை நிறைந்த அனுபவம் பண்ணப் ப்ராப்தமாய் இருக்க
யோக்ய காலங்களில் அனுபவிக்கப் பெறாமையாலே பிறந்த ஸைதில்யத்தை
ஸூஹ்ருத்துக்கள் ஆற்றினை பாசுரத்தை
காலம் கண்டு இரங்கின தலைவியைக் காலம் இளையது என்று ஆற்றினை
தோழி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

மலர்ந்தே யொழிந்தில மாலையும் மாலைப் பொன் வாசிகையும்
புலந்தோய் தழைப் பந்தர் தண்டுற நாற்றி பொரு கடல் சூழ்
நிலந்தாவிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய்
கலந்தார் வர வெதிர் கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவே – 68-

பாசுரம் -68-மலர்ந்தே ஒழிந்தில மாலையும் –
கால மயக்கு காலம் இளையது என்றல் –
கொண்ட பெண்டிர் -9-1-

பதவுரை

பொரு கடல் சூழ்–அலை மோதுகிற கடலால் சூழப்பட்ட
நிலம்–பூலோகத்தை
தாவிய–அளந்தருளின
எம்பெருமான் தனது–எம்பெருமானுடைய
வைகுந்தம்–ஸ்ரீவைகுண்டத்தை
அன்னாய்–ஒத்து விளங்குகிறவளே!
கலந்தார் வரவு எதிர் கொண்டு–(உன்னோடு) கலந்து பிரிந்து சென்றவருடைய வருகையை முந்தி எதிர்பார்த்து
வல் கொன்றைகள்–வலிய கொன்றை மரங்கள்
கார்த்தனவே–கருவடைந்து அரும்பின; (அதுவே தவிர)
மாலையும்–மாலைகளையும்
மாலை பொன் வாசிகையும்–பொன்னாலாகிய சுருள்மாலை வட்டத்தையும்
புலம் தோய் தழை பந்தர்–மநோஹரமான தழைகளார் சிறு பந்தலிலே
தண்டு–கொம்புகளிலே
உற–நெருங்க
நாற்றி–தொங்க விட்டுக் கொண்டு
மலர்ந்தே ஒழிந்தில–முற்றும் மலர்ந்து விட்டனவில்லை

வியாக்யானம்

மலர்ந்தே யொழிந்தில மாலையும் மாலைப் பொன் வாசிகையும் புலந்தோய் தழைப் பந்தர் தண்டுற நாற்றி
கொன்றைகளானவை மாலையாகவும்
மாலையாலே சமைந்த பொன்னின் வாசிகையாயும் இருக்கிற பூக்களை
கண் வைத்தால் வாங்க ஒண்ணாத படி செறிந்த தழைப் பந்தலிலே
கொம்புகள் சிக்கனைத் தூக்கி
மலர்ந்தே வியானவில்லை

பொரு கடல் சூழ் நிலந்தாவிய வெம்பெருமான்
அலைகள் தன்னில் தான் பொருகிற கடலாலே
சூழப்பட்ட பூமியை அளந்து கொண்ட நம்முடைய
ஸ்வாமியானவனுடைய

பொருகடல்
செறிந்த கடல் என்னவுமாம்

தனது வைகுந்த மன்னாய்
அவனுக்கு அசாதாரணமான பரமபதம் போலே
அந்நிய அபிமான பிரசங்கம் யுண்டாய்க் கழிக்க வேண்டாதபடியான
ஸ்வ பாவத்தை யுடையவளே

(உலகு அளந்த பொன்னடி -சாத்ய பூமி அது
பற்றுவது இங்கே -திருவிக்ரமனது திருவடி பற்றி
அங்கு சென்று அந்த ஸ்ரீ வைகுண்டம் போல் இனியவளே
நித்யம் நிரதிசய போக்யம் -கீழ்
அந்நிய அபிமான பிரசங்கம் இல்லாத ஆழ்வார் –
நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றத் தெய்வம் நாடுதிரே என்று இகழல்பவர் அன்றோ )

கலந்தார் வர வெதிர் கொண்டு
தம்மோடு முன்பு ஸம்ஸ்லேஷித்த அன்புடையாருடைய வரவை முற்கோலி

வன் கொன்றைகள்
நாம் மலர்ந்தால் இவள் ஈடுபடும் என்னும் இரக்கம் இல்லாத
வன்மையை யுடைய கொன்றைகள்

கார்த்தனவே –
கருவடைந்து அரும்பின இத்தனை
மலர்ந்தன வில்லை என்றதாயிற்று

வன் கொன்றை என்று
அரும்பின சிக்கனவைச் சொல்லி
மலர விளையது என்றதாகவுமாம்
(வன் -செறிந்து அடர்ந்து என்றபடி இதில் )

இத்தால்
விஸ்லேஷித்த நண்பரான பாகவதருடைய ஆகமநத்தை
ஸாம்ஸாரிக போக தர்சனத்தாலே
(கொன்றைப்பூக்கள் பூக்க ஆரம்பிப்பது ) வந்த ஆர்த்தி சமிக்கைக்கு
உஸாத் துணையாக ஆசைப்பட்டவர்
விளம்ப அஷமதையாலே சிதிலராக
ஸூஹ்ருத்துக்கள் ஆற்றின பாசுரமாய் இருக்கிறது

இதில்
வன் கொன்றை -என்கையாலே
ஸ்த்தாவர பிராயராய்
அஞ்ஞரான சரீரிகளுடைய
தேவதாந்த்ர அபிமானத்தை சிக்கனவை ஸூசிப்பிக்கிறது
(கொன்றைப்பூ சிவனது )

புலந்தோய் தழைப் பந்தர் -என்கையாலே
இந்திரியங்கள் படியும்படியான விஷய பிரவணர் ஒதுங்க நிழல் என்றபடி

மாலையும் மாலைப் பொன் வாசிகையும்-என்கையாலே
ருஜு வாயும் (நேர்மையாயும் -சாத்விக ஆகாரம் அளவு விஞ்சி போல் )
வக்ரமாயும் (வளைந்தும் ராஜஸ தாமஸ ஆகாரங்கள் தள்ளுபடி தானே )
யுண்டான போக்ய வஸ்துக்களை
ஸூசித்தப்படி

தண்டுற நாற்றி -என்கையாலே
(கிளையில் பொருந்தி )
இவ்விஷயங்களினுடைய அநு பந்தம் ஆஸ்ரய பர்யந்தமாய் இருக்கும் என்றபடி
(கிளையும் தள்ளுபடி -விஷயாந்தரம் போல் விஷயாந்தர பரரும் த்யாஜ்யம் )

மலர்ந்தே ஒழிந்தில -என்கையாலே
கிலேச கரமான வைஷயிக போக விகாஸம் உம்முடைய ஸந்நிதியில்
அதிசயித்தது இல்லை என்றபடி
அப்போது இறே உஸாத் துணை வேண்டுவது

பொரு கடல் சூழ்
நிலந்தாவிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய்
கலந்தார் வர வெதிர் கொண்டு -என்று
உஸாத் துணையான நண்பருடைய ஆகமநம் மேல் அபேக்ஷிதம் என்றபடி

கார்த்தனவே -என்கையாலே
ஆகாமியான விகாஸத்துக்கு ஸூசகம் யுண்டு இத்தனை என்றதாயிற்று

———-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

ஸ்வாபதேசம்
இத்தால்
அவனுடைய குண ஞானத்தாலும்
இக்கலையை அவகாஹித்த படியாலும்
போக யோக்கியமான காலத்தில் வாராது ஒழியான் என்று
பார்ஸ்வஸ்த்தர் ஆஸ்வஸிப்பிக்கிற படியைச் சொல்லுகிறது

——

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

கலந்து பிரிந்த தலைமகள்
கொன்றை பூக்கிற காலத்திலே வருகிறேன் என்று போனானாய்
அக்காலமும் வந்து
அவையும் பூக்கவும்
அவன் வரக் காணாமையாலே
தலை மகள் தளர
அத்தைக் கண்ட தோழி
அவை இப்போது பூக்க உத்யோகிக்கிற அத்தனை –
காலம் தாமும் இளையது என்று ஆற்றினை தோழி பாசுரத்தாலே
தம்மில் தாமே ஸமாஹிதராகிறார்
இதில்

வியாக்யானம்

மலர்ந்தே யொழிந்தில மாலையும் மாலைப் பொன் வாசிகையும் புலந்தோய் தழைப் பந்தர் தண்டுற நாற்றி
கொன்றைகளானவை மாலையாயும்
மாலைகளால் கட்டப்பட்ட பொன் வாசிகையாயும் யுள்ள பூக்களை
வைத்த கண் வாங்காதபடி அழகுள்ள பசும் தழைப் பந்தலில் யுள்ள கொம்புகளிலே
தூக்கின அளவே காண்

மலர்ந்தே ஒழிந்தில
மலர உபக்ரமித்தனை
இன்னும் மலர்ந்தது இல்லை
அவன் வரும் அளவில் அல்லது மலராது காண்
மலரும் காலத்தில் அவன் வருவது நிச்சிதம்

பொரு கடல் சூழ் நிலந்தாவிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய் கலந்தார்
வர வெதிர் கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவே
அலைகள் தன்னில் தாம் பொருகிற கடலாலே சூழப்பட்ட பூமியை அளந்து கொண்டு
நம் ஸ்வாமியால் நம் விபூதகி எல்லாம் ஒரு தட்டு
இவள் ஒரு தட்டு என்று அபிமானிக்கப் பட்டவளே
உன்னோடு கலந்தவருடைய வரவுக்கு எதிர்கொண்டு அவரைக் கண்டு அல்லது அலரலாகாது
என்கிற புத்தி சக்தி பலமுள்ள கொன்றைகள்
கார்த்திக் கொண்டே நின்றன காண்

கலந்து பிரிந்தவர்கள் ஆராரோ
அவர்களை எல்லாம் எதிர்கொண்டு என்றுமாம்

—————–

அவதாரிகை

இப்படி ஆஸ்வாஸ கறாரான பாகவதருடைய ஆகமநமும் இன்றியே
அனுபவ யோக்ய காலத்தில் பகவத் அனுபவமும் ஸித்தியாமையாலே
சிதிலரான இவரை ஸூஹ்ருத்துக்கள் ஆனவர்கள்
இவ்வவஸ்தையில் பகவத் அங்கீ காரத்துக்குக் குறையில்லை என்று
ஆஸ்வஸிப்பித்த பிரகாரத்தை
மாலைக்கு ஆற்றாத் தலை மகளை ஆற்றி யுரைத்த
தோழி வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

காரேற் றிருள் செகிலேற்றின சுடருக்கு உளைந்து வெல்வான்
போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை புவனி எல்லாம்
நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே
வாரேற்றி இள முலையாய் வருந்தேல் உன்வளைத் திறமே – -69 –

பாசுரம் -69-கார் ஏற்று இருள் செகில் ஏற்றின் சுடருக்கு
மாலைப் பொழுது கண்டு மயங்கிய தலைவியைத் தோழி ஆற்றுதல் –
கற்பார் இராம பிரானை -7-5-

பதவுரை

கார்–கருத்த
இருள்–இருளாகிய
ஏறு–எருதானது
செகில்–சிவந்த
சுடர்–ஸூர்யனாகிய
ஏற்றிற்கு–எருதுக்கு எதிரில்
உளைந்து–இளைத்து
வெல்வான்–(மீள) வெல்லும் பொருட்டு
போர் ஏற்று–போர் செய்வதை ஏற்றிக் கொண்டு
எதிர்த்தது–வந்து எதிரிட்டது.
நீர் ஏற்று–(மாவலி கையால் தாரை வார்த்துத் தத்தஞ்செய்த) நீரை (க் கையில்) ஏற்று
புவனி எல்லாம்–எல்லா வுலகங்களையும்
அளந்த–அளந்து கொண்ட
நெடிய–நீண்ட வடிவமுடைய
பிரான்–தலைவன்
புன்தலை மாலை–அற்புதமான தன்மையையுடைய மாலைப் பொழுதிலே
அருளாவிடுமே–(உனக்கு) அருள் செய்யாதொழிவனோ? (ஒழியான்.)
வார் ஏற்றும் இன முலையாம்–கச்சை மேலேறுவிக்கும்படி வளர்ந்த இளமை மாறாத தனங்களை யுடையவனே!
உன் வளை திறம்–உனது கைவளையின் நிமித்தமாக
வருந்தேன்–வருத்தப்படாதே.

வியாக்யானம்

காரேற் றிருள் செகிலேற்றின சுடருக்கு உளைந்து
கறுத்த ஏறு போலே மேல் எழுச்சியை யுடைத்தான இருளானது
சிவந்த ஏற்றினை ஒத்த ஆதித்யன் சுடருக்கு முன்பு இடைந்து

வெல்வான் போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை
வெல்லுகைக்காக யுத்தத்தை ஏன்று கொண்டு எதிர
புல்லிய தலைப்பாட்டை யுடைத்தான மாலையிலே

இதுக்கு வன்மையாவது
பிரிந்தாரை நலிகை

புவனி எல்லாம் நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே
பூமி முதலான ஸர்வ லோகத்தையும் பிறர் மேலிடாதபடி இரந்து
தன் கைப்படுத்தி எல்லை நடந்து காற் கீழே யிட்டுக் கொண்ட
சர்வாதிகனான மஹா உபகாரகன்
பூமியோ பாதி அநந்யார்ஹை யான உனக்கு அருளாது ஒழியுமோ

வாரேற்றி இள முலையாய்
வாரை ஏற்றுவிக்கும் படி வளருகின்ற இளமையே வடிவான
முலையை யுடையவளே

ஏற்றுகை -முடிகை
(
வருந்தேல் உன்வளைத் திறமே
உன் முகப்படம் கிழிந்து இருக்க வளை கழலுகிறதே என்று
கிலேசிக்க வேண்டுவது இல்லை
அவன் அருளும் என்றதாயிற்று –

இத்தால்

காரேற் றிருள் -என்று
(மயர்வற மதிநலம் அருளுவதுக்கு முன்பு )
பூர்வகமான அஞ்ஞானத்தை ஸூசிப்பித்து

செகிலேற்றின சுடருக்கு உளைந்து -என்று
அது ராகோத்தரமான விவேகம் ஆகிற பக்தி ரூபாபன்ன ஞானத்தாலே
கழிந்தமை சொல்லி

வெல்வான் போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை புவனி எல்லாம் நீரேற்று
அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே-என்று
யோக்ய காலத்தில் அனுபவ அலாபத்தாலே இருந்த விவேகமும் அழியும்படி
மோஹ அந்தகாரம் மேலிடும் அவஸ்தையை ஸூசிப்பித்ததாயிற்று

வாரேற்றி இள முலையாய் –என்கையாலே
இவளுடைய பக்தி அபி விருத்திக்குத் திரோதாயகர் இல்லை என்றபடி

வருந்தேல் உன் வளைத் திறமே -என்று
இப்படி பக்தி ப்ரபாவத்தை யுடைய உம்முடைய கையில்
பாரதந்தர்ய ஸூசகமான மினுக்கம் கழலுகிறது என்று கிலேஸிக்க வேண்டா

சம்பந்தம் உள்ளாரைத் தானே இரந்து வந்து
அநந்யார்ஹர் ஆக்கிக் கொள்ளும்
சர்வாதிக ஸ்வாமி யானவன் அருளாது ஒழியுமோ என்று
ஆஸ்வஸிப்பித்தார் ஆயிற்று –

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

அதுக்கு மேலே ஸந்த்யையும் வந்து நலிய
போக யோக்கியமான காலமாய் இருக்க அவன் வந்து தோற்றாமையாலே
தலைமகள் நோவு பட
இத்தைக் கண்ட தோழியானவள்
ஸந்த்யை அல்ல -இரண்டு வ்ருஷபங்கள் தன்னிலே பொருகிறன காண் என்று
இங்கனே சொல்லி ஆஸ்வஸிப்பிக்கிறாள்

வியாக்யானம்

காரேற் றிருள்
இருளான கார் ஏறானது
கறுத்த வ்ருஷபமானது

செகிலேற்றின சுடருக்கு உளைந்து
ஆதித்யன் ஆகிற சிவந்த வ்ருஷபத்துக்குத் தோற்றுப் போய் சுரமடைந்தது

வெல்வான் போரேற்று எதிர்ந்தது
நாம் முடிய இங்கனே தோற்றுக் கிடைக்கும் இத்தனையோ
நாமும் ஒரு கால் மேலிட வேணும் என்று பார்த்து
போரிலே வந்தேன் என்று கொண்டு எதிர் இட்டது

புன் தலைமாலை
புல்லிதான தலையை யுடைத்தான ஸந்த்யையானது
ஜசுகைசான இருள் கொழுந்துகளை உடைத்தான ஸந்த்யையானது

நக நிர் லுஞ்ச நீயா தமோ வல்லய
(இந்த ஸ்லோகத்தின் அக்ஷரங்கள் சரியாகாது தெரியவில்லை என்று
பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்யானத்தில் குறிப்பு உள்ளது )
ஸந்த்யையினுடைய உபக்ரமம் அத்தனை
ஸந்த்யை தான் அல்லது காண் இது

————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

வியாக்யானம்

காரேற் றிருள் செகிலேற்றின சுடருக்கு உளைந்து வெல்வான் போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை
இருளாகிற கறுத்த ருஷபமானது முன்
செகிலேறு சிவந்த வ்ருஷபமான ஆதித்யனுடைய கிரணங்களால் பஃனமாய் ஓடிப்போனது
இப்போது அந்த சிவந்த வ்ருஷபத்தை ஜெயிக்கவே பொரும் விருஷபமாய் எதிர்த்தது

மேகத்தின் செக்கரைத் தான் ஏறிட்டுக் கொண்டு
பொன்னிறம் போன்ற மாலைகள் அசைய அசைய

புவனி எல்லாம் நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே வாரேற்றி இள முலையாய் வருந்தேல் உன்வளைத் திறமே
பூமி முதலான ஸர்வ லோகத்தையும் தன் பொற் கையில் நீர் ஏற்றவனாய்
தன் திருவடிகளால் அளைந்து கொண்டு
ஸர்வத்திலும் நெடு மாளாய் உபகரித்தவன் தான் கடுக வாராமல் அருளிச் செய்த மாத்ரமாய் விடுமோ
கண் எச்சில் வாராதபடியும் வெளிறு மேல் இடாதபடியும்
கச்சை காட்டும் படி இள முலைகள் அழகியளானவளே
உன் வளைகள் கழலுமதாய் மநோ விசாரப்பட்டு ஆயாசப்படாதே கொள்ளாய்

உன்வளைத் திறமே
வளை விஷயத்தில் உன்னோடு வரும் காலம் குறித்தவன் அக்காலம் வரவே
வாராமல் தப்பான் காண் என்கிறாள் –

——————–

அவதாரிகை
இப்படி பார்ஸ்வஸ்தர் ஆஸ்வஸிப்பித்த இடத்திலும்
விளம்ப அஷ மத்வத்தாலே கால தைர்க்யம் பொறாமையாலே
வந்த ஆர்த்தியை
இரவின் நெடுமைக்கு இரங்கின
தலைவி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

வளைவாய்த் திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல்
தளைவாய் நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை
விளைவான் மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க எம்மை
உளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே — 70-

பாசுரம் -70-வளை வாய்த் திருச் சக்கரத்து எங்கள் –
தலைவி இரவின் நெடுமைக்கு இரங்குதல் –
பிறவித் துயரற -1-7-

பதவுரை

வளை வாய் திரு சக்கரத்து–வட்டமான நுனியையுடைய அழகிய சக்கராயுதத்தையுடைய
எங்கள் வானவனார்–எமக்குத் தலைவரும் பரமபதத்திலிருப்பவருமான பெருமானுடைய
முடிமேல்–திருமுடியிற் சாத்தியுள்ள
தளைவாய்–கட்டு வாய்ந்த
நறு–பரிமளமுள்ள
கண்ணி–மாலை வடிவமான
தண் அம்–குளிர்ந்து அழகிய
துழாய்க்கு–திருக்குழாய்க்கு (ஆசைப்பட்டு)
உண்ணம் பயலை விளைவான்–(எமது) மாயை நிறம் மாறிப் பாலை நிறம் விஞ்சம்.
மிக வந்து–அடாவந்து
நான் திங்கள் ஆண்டு வழி நிற்க–நாளாயும் மாதமாயும் வருடமாயும் கற்பமாயும் தோன்றினது தவிர
எம்மை உளைவான் புகுந்து–எம்மை முற்று மழிக்க நெருங்கி
இது ஓர் கங்குல்–இந்த ஒரு ராத்ரிதானே
ஆயிரம் ஊழிகளே-ஆயிரம் கற்பமாகா நின்றது.

வியாக்யானம்

வளைவாய்த் திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல்
வளைந்த வாயை யுடைத்தான திருவாழியை யுடையனாய்
எங்கள் பக்கலிலே பரமபதத்திலே பண்ணின அபிமானத்தை பண்ணும்
ஸர்வேஸ்வரனுடைய திரு முடியில் சாத்தின

தளைவாய் நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு
கட்டு வாய்ந்து பரிமளத்தை யுடைத்தான
மாலா ரூபமான குளிர்ந்த திருத்துழாய்க்கு

வண்ணம் பயலை விளைவான்
ஸ்வ பாவிகமான நிறம் ஒழிந்து
வெளுப்பு நிறம் விஞ்சி வருகைக்காக

மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க
ஒரு ராத்ரி மிக்கு நாளாயும்
மாஸமாயும்
ஆண்டாயும்
ஊழியாயும்
வந்து ஒழிய

எம்மைஉளைவான் புகுந்து
எம்மை ஈடுபடுத்துகைக்காகக் கிட்டி

இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே
இந்த ஒரு ராத்ரியானது
ஆயிரம் கல்பம் ஆகா நின்றன

ஆயிரம் என்றது
அநந்தம் என்றதாகவுமாம் –

இத்தால்
வளைவாய்த்  திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல் தளைவாய் நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு

ஈஸ்வரத்வ சிஹ்னமான பரிகரத்தையும்
விபூதியையும்
பூஷணத்தையும்
ஒப்பனையையும் யுடைய
ஸர்வேஸ்வரனுடைய போக்யதையை

வண்ணம் பயலை
அனுபவிக்கப் பெறாமையாலே
ஸ்வரூப விபர்யாசம் பிறக்கும் படி நம்மை கிலேசிப்பதாகக்

விளைவான் மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க எம்மை உளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே — 70-

காலமானது
அவச்சேதகங்களால் பரிச்சின்னமாகை யன்றியே பிரகாச பிரஸங்கம் இல்லாதபடி
அபரிச்சின்னம் ஆகா நின்றது என்று தளர்ந்து அருளிச் செய்தார் ஆயிற்று

————

ஸ்ரீ நம்பிள்ளை –ஈடு –

அவதாரிகை –

ஸ்ரீ வைகுண்ட நாதன் சாத்தின திருத்துழாய் மாலையைப் பெற வேணும்
என்னும் அபேக்ஷையால் உண்டான
த்வரையாலே காலம் செலுத்த உள்ள அருமை சொல்லுகிறது

வியாக்யானம்

வளைவாய்த் திருச் சக்கரத்து
வளைந்த வாயை யுடைய திருச்சக்கரம் என்னுதல்
அன்றிக்கே
வளையையும்–ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும்
வாயையும் யுடைய -திருச்சக்கரத்தையும் என்னுதல்
தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதா தர -யுத்த –114-15-என்னக் கடவது இறே

எங்கள் வானவனார் முடிமேல்
த்ரிபாத் விபூதியை யுடையராய்
திவ்ய ஆயுதங்களும்
சாத்தின மாலைகளுமான
அழகேயாய் இருக்கிறவர்
ஸ்ரீ வைகுண்ட நாதனுடைய திரு அபிஷேகத்தில் யுண்டான

தளைவாய்
தொடை வாய்ப்புள்ள
அநந்த வைநதேயாதிகள் தொடுக்கிறது இறே

நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு
செவ்வியை யுடைய மாலைத் திருத்துழாய்க்கு

வண்ணம் பயலை விளைவான்
அம்மாலையை ஆசைப்பட்டுப் பெறாமையாலே நிறமானது பயலை விளையும்படியாக
விவரணமாம் படியாக

மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க
முந்துற வந்ததொரு ராத்ரி ஒரு நாளாய்ப் பெருகிற்று
அது போய் ஓர் ஆண்டாய்ப் பெருகிற்று
அது போய் ஒரு கல்பமாய்ப் பெருகிற்று

அது நிற்க
அத்தைக் கடக்க நிறுத்தி
இது ஒரு ராத்ரி இருந்தபடி என்
அவை போலே இன்றிக்கே இது வேறு ஒன்றாய் இரா நின்றது

எம்மைஉளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே
இவை யடைய நமக்கு அனுகூலம் என்னும்படி என்னை நலிகைக்காக வந்து புகுந்தது
அநேகம் ஊழிகளாய் இரா நின்றன

மிக வந்து
ஒன்றுக்கு ஓன்று மிகும் படி வந்து என்னுதல்
அநேக ராத்ரிகள் எல்லாம் வந்தது இறே
இது ஒரு ராத்ரி இருந்தபடி என்

ஸ்வா பதேசம்
இத்தால்
பதி ஸம்மாநிதா ஸீதா –அயோத்யா -16-21-
அவதாரத்தில் பிராட்டி பெற்ற பேற்றை ஸ்ரீ வைகுண்ட நாதன் பக்கலிலே பெற வேணும்
என ஆசைப்பட்டுப் பெறாமையாலே காலம் செல்ல அரிதான படியைச் சொல்லுகிறது

———-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

இதுக்கு மேல் வந்த நெடுகைக்கு இரங்கின
தலைமகன் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் ஸ்வயம் விளம்ப அஷமராய்
இப்பாசுரத்தில்

வியாக்யானம்

வளைவாய்த் திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல் தளைவாய் நறுங்கண்ணித்
தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை விளைவான்
வளையவும் பர பேத நத்துக்கான தீக்ஷணமாகிய வாயுள்ள திருவாழியை யுடையவராய்
எங்கள் பக்கல் வானில் பண்ணும் ப்ரீதியைப் பண்ணுமவருடைய
திரு அபிஷேகத்தில் சாத்தின திருத்துழாயாதான
மரு கானத்தில் எங்கும் வாய்ந்த நறு நாற்றமுள்ள திருமாலையான திருத்துழாய்க்கு ஆசைப்பட்டு
என்னில் பசுமையான வர்ணத்தை உண்டாக்கி விளைப்பதுக்காக

மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க
ஒரு நாழிகையே வந்து
நாளாயும்
திங்களாயும்
ஆண்டையும்
ஊழியாயும்
மிகவும் வளர்ந்து நிற்குமே

எம்மை உளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே
ஒரு ராத்ரியானது பதினாயிரம் ஊழி களாய்க் கொண்டு
நம்மை வளைத்துக் கொண்டு கொள்ளப் புக்கது
எங்கனே நான் தரிக்கும் படி –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading