சந்தியும் சந்திப்பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலு கிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை அறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுது ஆட் செய்யும் தேவரையே
நாத முனிக்கு அன்று நாலாயிரமும் உணர்த்தி
போதம் அருள் குருகூர் வித்தகனார் -கோதில்
திருவாய் மொழி வாசக மாலைத் தேனைத்
தரவே எனக்கு அருள் செய்தார் –
———-——-
தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர்
நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்
காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே-10-1-1-
தாள தாமரையில்
நிருபாதிகமாக பரம பதத்துக்கு ஏறக் கொண்டு போய் விடக்கடவ பரம ஆப்தன்
காளமேகன் என்று நிச்சயித்துக் காளமேகத்தை வழித்துணையாகப் பற்றுகிறார்
உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது-எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் அர்ச்சிராதி கதிக்கு
உசாத்துணை யாவார் யுண்டோ என்று பார்த்த இடத்து
ஸ்வர்க்காதி லோகங்களுக்குப் போவார் ஒழிய இதுக்கான துணை அற்று இருந்தது
உயர்நலமுடையவனாய் இருக்கிறவன் யாவன் ஒருவன் மரணமான மஹா பயத்துக்கு
விரோதி நிரசன சீலனான காளமேகம் அல்லது துணையில்லை என்று
அவனை வழித்துணையாகப் பற்றுகிறார்
தாள தாமரை
மலையைச் சுமக்குமா போலே பூவின் பெருமை பொறுக்க வல்ல தாளை யுடைத்தான தாமரை
சேற்றின் நன்மையாலே உயர்ந்த தாளையுடைய தாமரை என்கை
இப்படி ஸம்ஸாரமாகிற வன் சேற்று அள்ளலிலே ஹ்ருத் புண்டரீகம் மலருகை அவன் பிரஸாதத்தாலே
தடமணி
தயரதன் பெற்ற மரகத மணித் தடாகத்திலே உபய விபூதிக்கும் ஏக ஸூர்யனானவன்
கருணையாகிற கிரணம் பட்டு அலறுவது ஹ்ருதய கமலம் இறே
தடத்துக்கு அவயவங்கள் ஆகிற பூக்களாலே அலங்கரித்தால் போல் இருக்குமாய்த்து தடம்
உரம் பெற்ற மலர்க்கமலம் உலகளந்த செவ்வடி போல் உயர்ந்து காட்டின ப்ரகாசத்தாலே மயர்வு அற
ஹ்ருதயக் கமலமானது வன் சேற்று அள்ளலில் நின்றும் மயர்வற மதிநலம் அருளுகையாலே
மனன் அகம் மலம் அற மலர் மிசை எழு தரும்
யதா ஸூர்யஸ் ததா ஞானம் -என்றும்
மதியாகிற ஞானத்தாலே திரு உலகளந்த திருவடிகள் போலே அதுக்குப் போலியாக உயர்ந்து காட்ட
வரம்புற்ற கதிர்ச் செந்நெல்
தடமணி வயலிலே கதிர்ச் செந்நெலானது வரம்புற்றுத் தாள் சாய்த்து தலை வணங்கும்
திரு வுலகு அளக்கிற போது -லங்கைஸ் ஸூராணாம் என்கிறபடியே தேவர்கள் திரண்டு
காலை நீட்டித் தலையை வணங்கக் கை கூப்பித் தெண்டன் இட்டால் போலே
இரா நின்றதாய்த்து செந்நெல்கள் ஆனவை விழுந்து தலை சாய்ந்து கிடக்கிற போது
இப்படிப்பட்ட தடங்களையும் வயலையும் யுடைத்தான திரு மோகூர் –
ஊரில் போக்யதை அடைய வயலில் காணும் அத்தனை
நாளும் மேவி
நாள் தோறும் அத்யாதரத்தைப் பண்ணி
அவ் ஊரில் விடிந்த விடிவுகள் எல்லாம் இவனுக்கு ஸூப்ரபாதா ச மே நிசா -என்னும்படி யாய்த்து இருப்பது
அவ்வூரில் வாஸம் ஒழிய வேறே ப்ரயோஜனத்தைக் கணிசியாதே இது தானே ப்ரயோஜனமாய் நின்று
அசூரர் இத்யாதி
ஆஸூர சங்கத்தைத் துணித்து அடக்கி விரோதியைப் போக்கி கொடு போக வல்லன் என்று தோன்றும் படி –
தோள் இத்யாதி
இவர் இப்போது அறிந்த படி என் என்னில்
விடு காதானாலும் தோடிட்டு வளர்ந்த காது என்று தெரியும் இறே
அப்படியே உயர்வற உயர்நலம் யுடையவன் எவன் அவன் மயர்வற மதிநலம் அருளினவன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன் -ஞான ஆனந்த ஏக ஸ்வரூபனாய் -ஞான குணகனாய் –
ஞான ப்ரதனாய் -நித்ய முக்த அநுபாவ்யனாய் -சதுர் புஜனாய் -சங்கு சக்ர கதா தரனாய்
கேசவ கிலேச நாசன என்கிறபடியே மை வண்ண நறும் குஞ்சியை யுடையவனாய் -புண்டரீகாக்ஷனாய் –
சிவந்த கனிந்த வாயை யுடையனாய் -திவ்ய ஸுந்தர்ய உபேதனாய் -மேக ஸ்யாமளமான நிறத்தை யுடையவனாய்
இருக்குமவன் துயர் அறு சுடர் ஆதி தொழுது எழும்படி நாளும் மேவிற்று என்கிறார் –
சுரி குழல் கமலக் கண் கனி வாய்
நெடு நாள் சம்சாரத்தில் பட்ட ஸகல தானங்களும் ஆறும்படி இருக்குமாய்த்து
பின்னே போகிறவனுக்கு முன்னே போகிறவன் ஒருக்கால் திருக்குழலைக் குலைத்து -நொழுந்த -நுழுந்த –
கேசவ கிலேச நாசகனாய் இறே இருப்பது –
கமலம் இத்யாதி
ஷூத்ர விஷயங்களினுடைய பொய்யான நோக்கிலும் பொய்யான முறுவலிலும் அகப்பட்ட நெஞ்சாரல் தீரும்படி
மெய்யான நோக்கும் மெய்யான முறுவலும் இருக்கும்படி சொல்லுகிறது –
காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே-
ராஜாக்கள் போம்போது முன்னே மகம் நீர் விடுமா போலே முன்னே காளமேகம் ஸுந்தர்ய ஸுகந்த்ய
கல்யாண அம்ருத வ்ருஷ்டி வர்ஷித்துக் கொண்டு போக
பின்னே குளிர்ந்த வாசத்தை அனுபவித்துக் கொண்டு போகலாய் இருக்குமாய்த்து
அவன் அடி நிழல் தடம் ஒழிய -யன்றி மற்று ஓன்று இலம் கதியே-
காள மேகத்தை ஒழிய வேறே வழித்துணை மனமே யுடையோம் அல்லோம் என்கிறார் –
————
கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்த புரநகர் புகுதும் இன்றே-10-2-1-
கெடும் இடரிலே
ப்ராப்ய பூமியான பரமபதத்திலே போனால் செய்யும் அடிமையைத்
திருவனந்த புர வ்யாஜத்தாலே மநோ ரதித்தார் –
———–——–
புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப்பு அறுக்கும் அப்பால்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்த புரத்து
அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரர் ஆவார்–10-2-5-
உயர்வற -என்கிற பாட்டை விவரிக்கிறது எங்கனே என்னில்
உயர்வற -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் ஒருவருக்கு ஒருவர்
சேஷ வ்ருத்தி பண்ணி அப்ராப்த விஷயத்தை ஆஸ்ரயித்து அத பதித்துப் போக
அங்கன் அன்றிக்கே
ப்ராப்த விஷயமான உயர்நலம் யுடையவன் எவன் அவன் திருவனந்த புரத்திலே ஸந்நிஹிதனானான்
அங்கே ஆஸ்ரயிக்குமவர்கள் நித்ய ஸூரிகளாவார்கள் -அங்கே நீங்களும் ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்
உயர்நலம் யுடையவன் யாவன் ஒருவன் அவன் பராத்பரன் இங்கே சன்னிஹிதனாகப்
புண்ணியம் செய்து
ஸ்நேஹம் ஆகிற புண்யத்தைப் பண்ணி
புண்ணியம்
வர்ணாஸ்ரம தர்மங்களை இதி கர்த்தவ்யதையாக உடைத்தாய் இருக்கும் இறே
ஆக ஸத் கர்ம பலமான பக்தி ரூபா பன்ன ஞானத்தை நினைக்கிறது -மயர்வற மதிநலம் அருளப் பெற்ற படி
மத் பக்தோ மன் மநா பவ -என்னக் கடவது இறே
மயர்வற
அவித்யாதிகளைப் போக்கி மதிநலமான பக்தி ரூபா பன்ன ஞானத்தை அருளினவன் எவன் அவனுக்கு
நல்ல புனலொடு மலர்கள் தூவி
நல்ல புனலோடே கூடின மலர்களை ப்ரேம பரவசராய்க் கொண்டு பரிமாறி
இத்தால் அர்ச்சனாதிகளைச் சொல்கிறது
மத் யாஜீ மாம் நமஸ்குரு -என்னக் கடவது இறே
எண்ணுமின் எந்தை நாமம்
தியானித்து -ஸததம் கீர்த்த யந்த -என்னா நின்றது இறே
எந்தை நாமம்
இடறினவன் அம்மே என்னுமா போலே திரு நாமம் சொல்லும் போது அதிகாரி சம்பத்து தேட வேண்டா என்ன
ஜீயர் பட்டரைத் திரு நாமம் சொல்லும் போது ப்ரயதனாய்க் கொண்டு சொல்ல வேணுமோ என்ன
கங்கையிலே முழுகப் போனவனுக்கு வேறொரு உவர்க்குழியிலே முழுகிப் போக வேணுமோ
மேலுண்டான நன்மையைத் தருமது அதிகாரி சம்பத்தியைத் தர மாட்டாதோ என்று அருளிச் செய்தார்
தகிரு நாமம் சொல்லுகைக்கு ருசியே யாய்த்து வேண்டுவது -ருசித்தவர்களே அதிகாரிகள்
இப்பிறப்பு அறுக்கும்
கண்டது இறே இத்தினுடைய இழை ஈடு
கவிழ்ந்து பார்க்க இதினிடைய அக்வாயைக் கண்டால் தன்னடையே விரக்தி பிறக்கும் இறே
இப்படி ப்ரத்யஷிக்கச் செய்தேயும் கார்யகரம் ஆகாது இருக்கிறது இறே வாசனையின் கனம்
மம மாயா துரத்யயா -என்னும்
மாயான் தரந்தி தே -என்னும் சொல்கிறபடியே
பாக்யவான்களுக்கே இதனுடைய தோஷ தர்சனத்தைப் பண்ணிக் கழற்றிக் கொள்ளுகைக்கும்
பாக்ய ஹீனருக்கு இதிலே போக்யதா புத்தி பண்ணி அநர்த்தப் படலாம் படி
கர்ம அனுகுணமாக இத்தை இடை எடுத்துக் காணும் ஈஸ்வரன் பண்ணிற்று –
அந்த ஈஸ்வரன் மயர்வற மதிநலம் அருளுகையாலே அதின் அல்ப அஸ்திரத்வாதிகள்
இதுக்கு நிலை நின்ற ஸ்வ பாவம்
இப்பிறப்பு அறுக்கும்
இப்படி ஹேயதயா ஞாதவ்யமான இத்தேஹ ஸம்பந்தத்தை அறுக்கும்
என் செய்தால் என்னில்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்த புரத்து அண்ணலார் கமலபாதம் அணுகுவார்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன் நித்ய விபூதியிலும் போந்து
செறி பொழில் அனந்த புரத்திலே நித்ய வாஸம் பண்ணி அருளுகிற அண்ணல்
செறிந்த சோலையை யுடைத்தான திருவனந்த புரத்திலே வந்து கண் வளர்ந்து அருளுகிற
ஸ்வாமியுடைய கமல பாதம் அணுகித் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
கமல பாதம் என்றது
போக்யமான திருவடிகளைக் கிட்டுமவர்களுக்குத் துயர் அறுக்கும் -பிறவி அறுக்கும் என்றபடி –
சுடர் அடியானது அப்பால் அமரருக்கும் அமரர் ஆனவர்களுக்கும் இப்பிறப்பு அறுக்கும் என்ன வேண்டாதே
தேஹத்தைப் பரிகரித்து அடிமை செய்கிறவர்களுக்கும்
திருவனந்த புரத்திலே நித்யர் முக்தர் முதலானோரும் அடிமை செய்யக் கண் வளர்ந்து அருளுகிறவன்
துயர் அறு சுடர் அடிகளை அணுகுவார் –
ஆஸ்ரயித்தவர்கள்
அமரர் ஆவார்–
அமருக்கும் அமரர் ஆவார்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம்
அவனாலே மயர்வற மதிநலம் அருளப் பெற்ற நாம்
தேஹாத்ம அபிமானிகளாகிற நீங்களும் அறியும்படி உங்கள் அநர்த்தத்தைத் பார்த்துச் சொன்னோம்
அண்ணலார் கமலபாதம் அணுகுமவர் அமரர் ஆவார்
——–——–
வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ
மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்காக்
காமரு குயில்களும் கூவும் ஆலோ
கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு
ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ
தகவிலை தகவிலையே நீ கண்ணா–10-3-1-
வேய் மரு தோளிணையிலே
மநோ ரதித்த போதே ப்ராப்ய தேசத்திலே புகப் பெறாமையாலே இன்னமும் இச் சரீரத்திலே
வைக்கில் செய்வது என் என்று அதி சங்கை பண்ண
ஸர்வேஸ்வரன் தெளிவிக்க அதி சங்கை தீர்ந்தார் –
——–————–
பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்
பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா
பிணியவிழ்மல்லிகை வாடை தூவப்
பெரு மத மாலையும் வந்தன்றாலோ
மணி மிகு மார்வினின் முல்லைப் போது
என் வன முலை கமழ்வித் துன் வாயமுதம் தந்து
அணி மிகு தாமரைக் கையை யந்தோ
அடிச்சியோம் தலை மிசை யணியாய்-10-3-5-
உயர்வற என்கிற பாட்டை இப்பாட்டு விவரிக்கிறது -எங்கனே என்னில்
உயர்வற -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் அர்த்த காம உபேதராய்
அத பதித்தார்கள்
அதிலே தமக்கு பகவத் கடாக்ஷத்தாலே பகவத் அனுபவம் மிகுந்தது –
பணி மொழி
ப்ரமாணங்களோ ஆஸ்ரித பரதந்த்ரர் என்னா நின்றது
இதுக்கு விஸ்லேஷம் வரில் செய்வது என் என்று தன் விஸ்லேஷ பீருத்வத்தை
அவன் தனக்கே அருளிச் செய்கிறார் –
உயர்நலம் யுடையவன் எவன் அவன் ஸுலப்யாதி குண பூர்ணனானவன் ஸந்நிஹிதனாய் இருக்க
இப்படிப்படுகிறது என் என்ன
நீ பசு மேய்க்கக் கடவையான பின்பு நீயும் போனாயே
நீ போனால் நலியக்கடவ ஸந்த்யாதி பதார்த்தங்களாலே நலிவு படுகிற என்னை
ஆஸ்வசிப்பித்து அருள வேணும் என்கிறாள் –
உயர்வற உயர்நலம் யுடையவனான நீ –
பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்
நீ பிரிவை நினைத்து பிரியேன் என்று சொல்லுகிற உன் வார்த்தை போலே
உன்னைப் பிரியாமைக்காகச் சொல்லும் வார்த்தை அல்ல
உன்னது கள்வப் பணி மொழி யாகையாலே பொய்
இது அனுபவத்துக்குப் பாசுரம் இட்டுச் சொல்லுகிறதாகையாலே மெய் என்ன
நான் போனேனோ -என்ன
பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா
பகல் எல்லாம் பசு மேய்க்கப் போனாய்
கண்ணா
என்று சம்போதித்து வைத்து -அவன் தனக்கே நீ போனாய் என்கிறாள் இறே
மேய்க்கிய -மேய்க்கப் போனாய்
நீர் இது அறிந்த படி என் என்ன
நீ மயர்வற மதி நலம் அருளினாயே -அத்தாலே அவித்யாதிகள் நசித்தது
ஸ ஹேதுகம் அல்லாமையாலே அந்த அருள் பக்தி புரஸ் சரமான ஸம்சயத்தைத்
தீர்க்க வேண்டாவோ
என்னைப்
பிணியவிழ்மல்லிகை வாடை தூவப்
நீ போனால் பாதகமாகக் கடவ மல்லிகை கமழ் தென்றல் தொடக்கமானவை மறுவலிடுகையாலே
நீ போனது அநுசிதம் என்கிறாள்
கட்டவிழ்கிற மல்லிகையினுடைய மணத்தை வாடையானது தூவா நின்றது
ராவணன் ஸந்யாஸி வேஷத்தைக் கொண்டு வந்து தோற்றினால் போலே வாடையானது
குளிர்க் காற்றாய் வந்து நலியா நின்றது –
பத்ம கேஸர ஸம் ஸ்ருஷ்ட
மத்தகஜமானது முன்னே தலைப்பறை கொட்ட வருமா போலே வாடையை முன் நடக்கவிட்டுக்
கொண்டாயித்து மாலை வருவது
இவளை மதிப்பதால் கூட்டுப்படையாய் வாரா நின்றதாய்த்து
வந்தின்றாலோ
வந்தது கிடாய் -உடம்பிலே பட்டு ஒழிந்தது கிடாய்
பகதத்தன் விட்ட அஸ்த்ரத்துக்கு அர்ஜுனனைப் பின்னே இட்டு உன் மார்பிலே ஏற்றால் போலே
நடுவே புகுந்து வந்து கட்டிக்கொள் என்கிறார் –
பெரிய கிளர்த்தியுடைய மலையானது வரும் என்று அஞ்சுகிறதில்லை -வந்தது
ஆனால் செய்ய அடுப்பது என் என்ன
நீ அயர்வறும் அமரர்கள் அதிபதி -அயர்வற்று அனுபவிப்பார்க்கு அபர்யாப்த்த அம்ருதனான
நீ தான் யாவன் ஒருவன் ஸ்ருதி ப்ரஸித்தனான
யுன்
மணி மிகு மார்பினில்
ஸ்ரீ கௌஸ்துபம் மணி நிறம் பெறும்படியான மார்பு என்னுதல்
திரு மார்பு அடங்க ஸ்ரீ கௌஸ்துபத்திலே புகரேயாம் படி இருக்கும் என்னுதல்
கலவியில் கழற்ற வேண்டாதபடி இரே ஸ்ரீ கௌஸ்துபம் இருப்பது
நிரதிசய ஸூக ஸ்பர்சன் என்னக் கடவது இறே
இவளுடைய ஸ்த்ரீத்வத்துக்கு ஸ்தனம் போலே யாய்த்து அவனுடைய மார்பில் கௌஸ்துபம் –
புருஷோத்தமத்வ லக்ஷணம் இறே
அம்மார்பில் முல்லை மாலையால் என்னுடைய அழகிய முலையை பரிமளிதமாக்கி –
ஸ்ரீ கௌஸ்துபத்தோடே தோளில் மாலையோடே வாசி இன்றிக்கே போக உபகரணமாய்த்து
தோளில் முல்லை மாலையின் பரிமளத்தை என் முலைக்கு ஆக்க வேணும் என்கையாலே
அக்ராம்யமாகக் கலவியைச் சொன்ன படி
குளித்துப் பூச்சூட இருப்பாரைப் போலே யாய்த்து இம்முலைகள்
இவை பிரம்மச்சாரி முலையாகாமே அம்மாலையிலே பரிமளத்தாலே இவற்றை வாசிதமாக்காய் –
அம்மலையில் பரிமளம் இங்கு உற்று ஓங்குவதாகப் பண்ண வேணும்
அம்மாலையின் பரிமளம் முலையிலே யாம்போது கலவியை ஒழிக்கக் கூடாது இறே
கிம் ஸூகம் வனமாலா ஸம் மஹ்ய -என்றால் போலே
உன் வாய் அமுதம் தந்து
சம்ஸ்லேஷ ரஸம் உன்மஸ்தகமாக மிக்க வாறே தாரண அர்த்தமாகச் சில பேச்சு உண்டு இறே
பேசுவது -அப்பேச்சாதல்
அன்றிக்கே வாக் அம்ருதத்தைச் சொல்லவுமாம்
பேச்சு என்று நிர்வகித்துப் போருவது
அணி மிகு தாமரைக் கையை யந்தோ
உன் போக்கை நினைந்து நா நீர் வருகிறது இல்லை
அதுக்குப் பரிஹாரமாகவும் -நான் துயர் அறு சுடர் அடி தொழுது எழும் படியும்
என் நெஞ்சுக்கு இனிமை பிறக்கும் படிக்கும்
ஹேய ப்ரத்ய நீகமாய் நிரவதிக தேஜோ ரூபமான திருவடிகளையே தொழுது வர்த்தி என்று
உன் பயஹஸ்தமான
அணி மிகு தாமரைக் கையை யாய்
திவ்ய பூஷண அலங்க்ருதமாய் நிரதிசய போக்யமாய் இருந்துள்ள திருக்கைகளை
என் தலையிலே வைக்க வல்லையே
நா நீர் வருகைக்கும் இவர்களுடைய முந்தி கைப்பழம் இருக்கிற படி –
அணி மிகு தாமரைக் கை
ஆபரணம் மிகையாம்படி
சர்வ பூஷண பூஷார்ஹா என்கிறபடியே தனக்குத் தானே ஆபரணமாக கை
பசு மேய்க்கப் போன நீ வரும் அளவும் எனக்குத் தாரகமாக யுன் கையில் ஆபரணத்தைத் தர வேணும்
என்றவர்களுக்காய்த்து வாங்கி இட்டு வைக்கும் இறே
பசு மேய்க்கப் போகைக்குத் தான் ஒப்பித்த படியைச் சொன்னாள் ஆகவுமாம்
அத்தைச் செய்து அவன் போகப் புக்கவாறே சிதிலை யாகிறாள் இறே
தாமரைக் கையை யந்தோ-அடிச்சியோம் தலை மிசை யணியாய்-
குளிர்ந்த தண்ணீர் விடாய்த்தாருக்கு வாராய் என்று சொல்ல வேண்டுவதே யுனக்கு
அடிச்சியோம்
உன் துயர் அறு சுடர் அடி தொழுகையே நிரூபகமான அடியோம்
உன் அழகுக்குத் தோற்ற தோல்வி சொல்லுகிறாள்
தலை மிசை நீ அணியாய்
ஆபரணத்துக்கு ஆபரணம் போலே யாய்த்து இவள் தலைக்கும்
பாத பங்கயமே தலைக்கு அணியாய் என்பது
தாமரைக் கையை அந்தோ அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய்
என்பதாய்க் காலைக் கையைப் பிடித்துக் கார்யம் கொள்ளப் பார்க்கிறார் –
மதீய மூர்த்நாம் அலங்க்ரிஷ்யதி -என்று இறே இவர்கள் இருப்பது
இந் நிர்பந்தங்கள் எல்லாம் ஆர் அறிவார் -வேனுமாகில் எடுத்து வைத்துக் கொள்ளாய் என்ன
காலன் கொண்டு மோதிரம் இடுவாரைப் போலே என் பேற்றுக்கு நான் யத்னம் பண்ணுமவளோ
நீயே மேல் விழுந்ததாகக் கொள்ளுமவள் அன்றோ
நான் என்றும் அத்தலையால் பெறும் இருக்குமவள் இறே இவள் தான் –
அணியாய்
ஆற்றாமை மிக்கது என்னா அல் வழக்குச் செய்யோம் என்ன
நீ அஞ்சல் என்ற கையாலே நிர்ப்பயனாக்கிச் சுடர் அடி தொழுது எழப் பண்ணி அருள வேணும் என்கிறார் –
———-——–
சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்
கார்மேக வண்ணன் கமல நயனத்தன்
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான்
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே–10-4-1-
பத்துடை அடியவரில் சொன்ன பக்தி ஸ்வ ஸாத்யத்தோடே பொருந்தின படியை அருளிச் செய்கிறார்
உயர்வற -என்கிற பாட்டை இப்பாட்டு விவரிக்கிறது
உயர்வற -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக -சாதனாந்தரங்களாலே
ப்ருஹ்மாதிகள் ப்ரயோஜனாந்தரங்களாலே உயர்வு தாழ்வுமாய் அற்றார்கள் –
அவர்களிலும் தாழ்வான இவர் -ப்ராப்ய பிராபகங்கள் -உயர்வற உயர்நலமுடைய
ஸர்வ ஸ்மாத் பரனே என்று இருக்கிற இவர்
உயர் நலமுடையவனைப் பற்றிப் பிரிய நினைவு இன்றிக்கே இருக்கப் பிரிந்தானாக அதி சங்கை பண்ணி
உம்மை ஒரு நாளும் பிரியோம் காணும் என்றவன் ஆஸ்வசிப்பிக்க -அத்தாலே தரித்து ப்ரீதரானார் –
உபய விபூதி யுக்தனாய் இருந்து வைத்து ஆஸ்ரித ஸூலபனானவன் திருவடிகள் பக்தி யோக லப்யன் என்கிறார் –
உயர்வற உயர்நலம் யுடையவன் எவன் அவன்
சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்
உயர்நலம் –ஞான ஆனந்த ஸ்வரூபனாய் -ஞான குணகனாய் -ஸ்ருதி ப்ரஸித்தனானவன் –
சார்வே தவநெறி என்றும்
பத்துடை அடியவருக்கு எளியவன் என்றும்
எளிவரும் இயல்வினன் என்றும் சொன்னவன் திருவடிகளே சார்வு என்கிறார்
சார்வு -ப்ராப்யம்
அங்கு அவன் சார்வு என்கிறார்
இங்கே சார்வே என்று அவதாரணத்துடன் அருளிச் செய்கிறார்
தவ நெறிக்கு -பக்தி மார்க்கத்துக்கு -தபோ மார்க்கம் -என்றபடி –
வணக்குடைத் தவ நெறி என்றாரே அங்கே -அத்தைச் சொல்கிறார்
நமஸ் யந்தச்ச மாம் -என்று நமஸ்ஸைக் கரண சரீரமாக யுடைத்தாய் இருக்கும் இறே பக்தி
தவ நெறி என்னும் காட்டில் பக்தியைச் சொல்லித்தாமோ என்னில்
யஸ்ய ஞான மயந்தப -என்றும் ஞான விசேஷமான பக்தியைத் தபஸ் என்றும் சொல்கிறது –
அன்றிக்கே
இவன் ஒரு ப்ரணாமத்தைப் பண்ணினால் -இவன் நம்மை நோக்காக குவாலாக வருந்தினான்
என்று இது தன்னைப் பெரிய காயக் கிலேசமாக
நினைத்து இருக்கும் அவன் கருத்தால் சொல்லிற்று ஆகவுமாம்
தாமோதரன் தாள்கள்
உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே -என்றதைச் சொல்லுகிறார் இங்கு
யசோதாதிகள் கையிலே கட்டுண்டு தழும்பு சுமந்ததுவே திரு நாமமாய் இருக்குமவன் இறே
யசோதாதிகள் கட்டுண்பான் ஒருவனான பின்பு அவனை யுகப்பார் அவன் காலைக் கட்டிக் கொள்ளும் அத்தனை
அப்படிப்பட்டவன் ஸூ லபனாகிறான் எவன் அவன் என்னில் மயர்வற மதி நலம் அருளினவன் எவன் அவன்
கார்மேக வண்ணன் கமல நயனத்தன்
தன்னுடைய மேக ஸ்யாமமான குளிர்ந்த வடிவையும் கடாக்ஷ அம்ருத வ்ருஷ்டியை வர்ஷிக்கிற
விகஸிதமான திருக்கண்களையும் பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே விசதமாகக் காட்டின படி
விலக்ஷண விக்ரஹ யுக்தனாய் உபய விபூதி நாதன் என்கிறார்
கார்மேக வண்ணன்
இந்த பக்தி விளையும் படி கிருஷி பண்ணியும் வர்ஷித்து ருசிக்கு உத்பாதகனாய் இன்பத்தை வளர்த்து
அது பக்குவமானால் பர ஞானத்துக்கு ப்ராப்யமுமான வடிவை யுடையவன்
காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி இறே
கார் காலத்து மேகம் என்னுதல்
கறுத்த மேகம் என்னுதல்
புயல் கறுத்த நிறத்தனன் என்றத்தைச் சொல்லுகிறார்
கமல நயனத்தன்
அவ்வடிவுக்குப் பரபாகமாய் அகவாயில் வாத்சல்ய ப்ரகாசகமான குணங்களுக்கு ப்ரகாசகம் இறே திருக்கண்கள்
அனுக்ரஹம் அடையத் தோற்றுவது கண் வழியே இறே
வாத்சல்ய ப்ரகாசகமான வடிவு அழகு அன்றிக்கே மேன்மை கண்டு மேல் விழ வேண்டுமவனாய்த்து
அயர்வறும் அமரர்கள் அதிபதி -தத் வியதிரிக்தங்களிலே வாசனையும் இல்லாத நித்ய முக்தர்களை சந்த
அனுவ்ருத்தி கொள்ளுகிறவன் எவன் அவன்
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான்
விக்ரஹ வை லக்ஷண்யமே அன்றிக்கே ஸ்வரூப வை லக்ஷண்யத்தைச் சொல்லுகிறது
யாவையும் யாவரும் தானாம் அமைவுடை நாரணன் என்றத்தைச் சொல்லுகிறது என்று நிகமிக்கிறார் –
பிருதிவ்யாதி பஞ்ச பூதங்களையும் சொன்ன இத்தாலே
அவற்றின் கார்யமான தேவாதி விசேஷங்களையும் நினைக்கிறது
இத்தால் லீலா விபூதியைச் சொல்கிறது
நேமியான்
கையும் திருவாழியுமாய் நித்ய விபூதியில் இருக்கும் இருப்பை அயர்வறும் அமரர்கள்
அபர்யாப்த்த அம்ருத தாசிகளுக்குப் போக்யமான வனுக்கு அடையாளமும் -அதுவே நிரூபகமும் –
இப்படி உபய விபூதி யுக்தனுடைய துயர் அறு சுடர் அடி தொழுது
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே–
இவ்வருகில் ஆக்கனான தேவாதிகள் அன்றிக்கே அவ்வருகில் பெருமக்கள் ஏத்தும்படியான
பெருமையை யுடையவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
எனக்கு கரணமான நெஞ்சே -வானவர்கள் பேர் பிதற்றும் பெருமையனைத் தொழுது எழு
இங்கும் ருசியுடையாரும் பிதற்றும் அத்தனை
கார் மேக வண்ணனாய் கமல நயனத்தனாய் -நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியனாய்
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையை யுடையனாய் இருந்து வைத்துத்
தாமோதரனானவன் திருவடிகள் தவநெறிக்குச் சார்வே
இது நிச்சிதம் –
—————–
கண்ணன் கழலிணை-நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம்-திண்ணம் நாரணமே–10-5-1-
கண்ணன் கழலிணையில்
வீடுமின் முற்றத்திலே
வண் புகழ் நாரணன் திண் கழல் சேர் என்று தொடங்கின படியை
அருளிச் செய்து தலைக்கட்டி
பக்தியினுடைய பிரகாரம் இருக்கும் படியை அருளிச் செய்து
பர உபதேசத்தைத் தலைக்கட்டு அருளுகிறார் –
—————–———
மாதவன் என்று என்று ஓத வல்லீரேல்
தீது ஒன்றும் அடையா ஏதம் சாரவே-10-5-7-
உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது -எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி பிரம்மா ஆனந்தத்து அளவும் மோக்ஷ சாதனங்களாக
கர்ம ஞானாதிகளை அனுஷ்ட்டிப்பாரும் பக்தி பிரபக்திகளை அனுஷ்ட்டிப்பாருமாகையாலே
கால விளம்பமாய் அதில் எவ்வளவு குறையிலும் பழிப்பது இல்லை
தமக்கு பக்தி ஆர்ஜித்த பக்தியும் அன்றிக்கே -அர்த்தித்துப் பெற்ற பக்தியும் அன்றிக்கே
அருளின பக்தி யாகையாலே
உயர் நலமுடையவன் எவன் அவன் -ஆனந்தாதி குணங்களாலே பரிபூர்ணனான ஸர்வேஸ்வரன்
நாளேல் அறியேன் எனக்குள்ளன நாள் என்ற இவருக்கு மரணமானால் என்று இறே
நாளிட்டுக் கொடுத்தது
அத்தனை க்ரமம் பொறுக்க மாட்டாதே ஈஸ்வரன் தன்னைக் கொண்டு போகையிலே
த்வரிக்கிற படியைக் கண்டு
மரணமானால் என்ற அளவும் பொறுக்கிறிலன் –
நெடுநாளாய்த் தோற்றி ஈஸ்வரன் செய்கிறபடி தமக்குத் தவிராததாய் இருந்தது
இனி இவர்கள் இந்த பிரபத்தி மார்க்கத்தை இழக்க ஒண்ணாது -இத்தை உபதேசிப்போம் என்று
தமக்கு ஒன்றும் பிறருக்கும் ஒன்றும் ஆகாதே த்வயத்தை உபதேசிக்கிறார் –
உயர்வற உயர்நலமுடையவன் எவன் அவன்
மாதவன் என்று என்று ஓத வல்லீரேல்
உயர்நலமுடையவன் எவன் அவன் -மாதவன் -ஸ்ரீ யபதியானவனை ப்ரீதி பிரேரிதரராய் ஆஸ்ரயிக்கவும்
இனிமையோடு திரு நாமம் சொல்லவும் மாட்டாதார்
அந்தப்புர பரிகரமான வார்த்தையைச் சொல்லவே பூர்ண உபாசனத்தில் பலம் ஸித்திக்கும் என்கிறார்
ஞான ஆனந்த ஸ்வரூபனாய் -ஞான குணகனாய் இருந்துள்ள ஸ்ரீ யபதியானவனை
மாதவன் என்று த்வயமாக்கி
நாராயண சப்தத்தோடு இத்தைச் சேர்த்துச் சொல்லப் பாருங்கோள்
நாரணம் என்றாரே கீழே
தமக்கு ஈஸ்வரன் மயர்வற மதிநலம் அருளினவன் எவன் அவன் மாதவன் -ஸ்ரீ யபதியான நாராயணன்
தமக்கு பக்தி ரூபா பன்ன ஞானத்தை அருளி சரணாகதி வழியிலே நிறுத்தினான்
ஓத வல்லீரேல்
உங்களுக்கு ருசி இல்லையாகிலும் பர பிரேரிதரராய்க் கொண்டு ஓதி நிரந்தரமாகச் சொல்ல வல்லீராகில்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன் யாவன் ஒருவன் அவன் அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தர் பரிசர்யை பண்ண
ஒண் டொடியாள் திரு மகளும் நீயும் நிலா நிற்பக் கண்ட சதிர்
மாதவன் என்று என்றே ஓதுகையே மா சதிர்
தீது ஒன்றும் அடையா
உத்தர ஆகத்துக்கு நெஞ்சு செல்லாது
துயர் அறு சுடர் அடி தொழுகையாலே பூர்வாகம் அற்றது
ஏதம் சாராது
என்கையாலே உத்தர ஆகத்துக்கு அஸ்லேஷமே யாம்
ஏதம் சாராவே
பூர்வ ஆகத்தை விஸ்மரிக்கும்
உத்தர ஆகத்துக்கு நெஞ்சு செல்லாது
தொழுது எழு என் மனனே
கீழ்ச் சொன்ன திருமந்திரமும்
இப்பாட்டில் சொன்ன ஸ்ரீமத் பதமும்
தனித்தனியே பக்தி பிரதிபத்திகளுக்கு வாசகம் ஆகையாலே
பேற்றுக்கு அபர்யாப்த்த அர்த்தமாய் நிரதிசய போக்யமான பின்பு
இரண்டையும் சேர்த்துச் சொன்னவர்களுக்குப் பேறு சொல்ல வேண்டா இறே என்று
தன் திரு உள்ளம் போல்வாருக்கு உபதேசித்து அனுபவிக்கிறார் –
——–———–
அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-
அருள் பெறுவாரிலே
தம்மை விக்ரஹத்தோடே திருநாட்டிலே கொண்டு போகைக்காக அவன் வந்து த்வரித்து
அவஸர ப்ரதீஷனாய் இருக்கிறபடியை அருளிச் செய்கிறார்
உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது எங்கனே என்னில்
உயர்வற என்று மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
தேவதாந்த்ர சாத்தனாந்தர ப்ரயோஜனாந்தரங்களிலே போயிற்று
இவர்களிலும் தண்ணியரான இவர் பெற்ற பேறு சொல்கிறது –
உயர்வற உயர்நலம் யுடையவன் யாவன் ஒருவன் இவருக்குப் பொய் நின்ற ஞானம் தொடங்கி
இவ்வளவும் வர -ஈஸ்வரனை ஆழ்வார் பின் தொடர்ந்தபடி சொல்லிற்று
இது தொடங்கி ஆழ்வாரை ஸர்வேஸ்வரன் பின் தொடருகிற படி சொல்கிறது
உயர் நலம் யுடையவனுடைய அருள் பெறுவார் அடியார்
ஈஸ்வரன் நம்மை விஷயீ கரிக்கையிலே ஒருப்படா நின்றான்
அது தானும் தாம் விதித்தபடி செய்வதாக இரா நின்றான்
உயர்நலம் யுடையவன் -அருள் பெறுவார் அடியார் தம் அடியனேற்கு
ஹேது தான் இருக்கிற படி
ஸர்வேஸ்வரன் பண்ணும் ப்ரஸாத அதிசயத்துக்கு விஷய பூதராய் இருப்பார் சிலர் உண்டு –
அவர்கள் நமக்கு ஸ்வாமிகள்
அவர்கள் பக்கல் அவன் பண்ணின அருள் நம்மளவும் வர வெள்ளம் கோத்தது காண் என்கிறார் –
எல்லாரும் அடியார் அன்றோ என்னில்
தான ஹந் த்விஷத -என்று பிரஜை தீம்பிலே கை வைத்தால் மாற்றைக் கொண்டு
வாய் வாய் என்பாரைப் போலே அவன் தானே சீற வேண்டும்படி இருப்பார் சிலர் உண்டு –
அவர்களைப் போல் அன்றியே -ததாமி -என்று அவனுடைய அருளுக்கு விஷய பூதராய் இருப்பார் சிலர் உண்டு –
அவர்கள் பண்ணும் அருளை -அவர்கள் பக்கல் பண்ணும் அருளை நம் பக்கலிலே மயர்வற மதிநலம் அருளினன்
அவித்யாதிகள் சவாசனமாகப் போயிற்று தன் நிர்ஹேதுக கிருபையாலே
அடியனேற்கு ஆழியான் அருள் தருவான் அமைகின்றான்
ராஜாவுக்குப் புறம்பே நாடு முறையில் செல்லா நிற்கத் தன்னையும் தன் ஐஸ்வர்யத்தையும் கொடுக்கும் இறே
மஹிஷி விஷயத்தில்
அப்படியே அவன் தன்னை முற்றூட்டாகக் கொடுத்து அனுபவிப்பித்தான் –
பாரதந்த்ர ஏக பரராய் இருப்பார் சிலர் உண்டு -அவர்கள் பக்கல் பண்ணும் அருளை என் பக்கலிலே பண்ணினான்
அவர்கள் யார் என்னில்
மந்த்ர ரத்னத்தில் மத்யமபத நிஷ்டர்கள்
அருள் பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான்
இருவருக்கும் நிரூபகமாய் இருக்கிற படி
இவர் அருள் பெறுவார் அடியார் தம் அடியார்
அவன் ஆழியான்
இருவருக்கும் நிரூபகம் ததீயரே
காணும்
நீக்கமிலா அடியார் தம் அடியார் அடியார் அடியார் எம் கோக்கள் -என்றும்
தமர்கள் தமர்கள் தமர்களாம் சதிரே வாய்க்க-என்றும் சொன்ன வார்த்தையை நினைத்து இருந்தான் –
ஸர்வேஸ்வரன் நம் பக்கலில் முழு நோக்காக ப்ரஸாதத்தைப் பண்ணினான்
திருவாழியை ஒரு கண்ணாலும் இவரை ஒரு கண்ணாலும் பார்ப்பதாகா நின்றான்
விடலில் இத்யாதி
கையில் திருவாழியை விடில் அன்றோ உம்மை விடுவது என்னா நின்றான்
ஆழியான் என்றே நிரூபகம்
அஸ்மாபிஸ் துல்யோ பவது -என்று அவர்கள் பக்கல் பண்ணும் அருளை என் ஒருவன்
பக்கலிலேயும் பண்ணா நின்றான்
அவர்கள் அருள் பெறுவார் அடியார் ஆய்த்து
இவனும் அருள் தருவானாய் அமைகின்றன ஆய்த்து
அமைமின்றான்
பாதி சம்வாதம் குறைவற்றது
அருளின காரியமும் குறைவரத் தருவதாகப் பாரித்து நின்றான்
அவன் பிரசாத அதிசயத்தைப் பண்ணுவதாக பாரியா நின்றானாகில் -அவன் தான் ஸர்வேஸ்வரன் ஆகில்
பின்னைக் கண் அழிவு என் என்னில்
அது நமது விதி வகையே
அயர்வறும் அமரர்கள் அதிபதி -அயர் -அசர்வு -அது இல்லாமல்
பூர்வே ஸாத்யர்களால் ஆராதிதனானவன் யாவன் ஒருவன் அவன் நித்ய சம்சாரியாய்ப் போந்த என்னைத்
தன் நித்ய விபூதியிலே கொண்டு போய் அனுபவிக்க வேணும் என்று பாரித்துக் கொடு வந்து புகுந்து
ஆஸ்ரித பரதந்த்ரன் ஆகையாலே நாம் விதித்த படியே செய்வானாகப் பாரா நின்றான்
அது செய்யும் இடத்து நான் சொன்னபடி செய்வானாக வேண்டி இரா நின்றான்
அது நம்முடைய பாக்ய அனுகுணமாக இறே என்று பூர்வர்கள் நிர்வாஹம்
எம்பெருமானார் கேட்டருளி இத்திருவாய் மொழியிலே மேலோடுகிற ரஸத்தோடே சேராதே
நாம் விதித்தபடியே செய்வானாக இருந்தான் என்கிறார் என்று அருளிச் செய்தார்
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி என்று பாரித்துப் போந்தவர் தாமே க்ரியதாம் இதி மாம் வத எனப்
பார்த்து இருந்தால் போலே இவர் சொன்னபடி செய்வானாய் இரா நின்றான்
நமது சொல்வகை என்னாதே விதிவகை என்பான் என் என்னில்
விதி அதிக்ரமத்தில் ப்ரத்யவாயத்துக்கு அஞ்சுவாரைப் போலே அஞ்சா நின்றான்
தான் நினைத்தபடி செய்கைக்குத் தன் பக்கலில் குறைவற்றாலும் இத்தலையில்
இச்சை ஒழியக் கொடு போகாதே யவன் -புருஷோத்தமன் அபும்ஸ்த்வம் வரும்படி செய்யான் –
நமது விதி வகையே
தத அநு ஜா நந்தம் உதார வீக்ஷணை -என்று கடாஷிக்குமவன் கிடீர்
இவன் விதிக்க வேண்டி இருக்கிறான்
அருளுகிறார் ஸர்வேஸ்வரன் ஆகில் அது தான் நாம் விதித்த படி செய்வானாய் இருந்தானாகில்
இனி கண் அழிவு என் என்ன
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
இனி நீயும் இசையுமத்தனையே வேண்டுவது இதுவே கண்ணழிவும்
அயர்வறும் அமரர்கள் அதிபதி அவர்களும் தானுமாய் இவனை அணையில் வைத்து
ஆதரிக்கைக்காக வந்து நம் அனுமதி பார்த்து இருந்தான்
மருள் ஒழி நீ மட நெஞ்சே
நான் அவன் வழியே போவதாகப் பார்த்தேன் -நீயும் அவன் வழியே போவதாகப் பாராய்
உமக்குத் தான் அவன் வழியே போக வேண்டுகிறது என் என்ன
இருள் தரும் மா ஞாலமாய் இருந்தது -ஸம்ஸாரம் ஆகிறது இருக்க இருக்க அஞ்ஞானத்தைத் தருவது ஒன்றாய் இருந்தது
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆள்வானையும் எதிரிடப் பண்ணிற்றே
மருள் ஒழி
வான் உயர் இன்பம் எய்தில் என் -மற்றை நரகம் எதில் என் என்று இருந்ததோர் பிரமம் உண்டே முன்பு –
இப்போது அத்தைத் தவிர்ந்தேன்
அது தான் தவிர வேண்டுவான் என் என்னில்
ஸ்ரீ வைஷ்ணவ ஸஹ வாஸத்துக்கு உடலாய் இருக்கையாலும்
உகந்து அருளின நிலங்களில் உண்டான ஆதார அதிசயத்தாலும் இறே
இங்கே இருக்கில் என் -அங்கு போய் இருக்கில் என் அவன் எல்லைக்குள்ளே கிடக்கும் அத்தனை இறே
வேண்டுவது இருந்தோம்
அதுவே யாகப்பெறாதே மற்றைப்படிக்கு உடலாய் இருந்தது –
ப்ரக்ருதி வஸ்யனாக்கி சப்தாதி விஷயங்களிலே கொண்டு மூட்டும் ஸம்ஸார ஸ்வ பாவத்தை
அனுசந்தித்த பின்பு விடுவதாகத் துணிந்தேன்
யான் வேண்டேன்
என் புத்தியால் விட்டேன்- அவன் இருத்தில் செய்யலாவது இல்லையே
ஆனால் செய்ய வேண்டுவது என் என்ன
மருள் ஒழி நீ
உனக்கு ஒரு நினைவுண்டு -அத்தைத் தவிர்ப்பார்
தீவினை யுள்ளத்தின் சார்வல்லவாகித் தெளி விசும்பு ஏறலுற்றால் –திருவாறன் விளை யதனை மேவி
வலம் செய்து கை தொழக் கூடும் கொல் என்னும் என் சிந்தனையே என்று
விரோதி கழிந்து போம் வழி எல்லாம் போய்
இது பரமபதத்துக்குப் போம் வழி -இது திருவாறன் விளைக்குப் போம் வழி என்றால்
ப்ராப்ய வஸ்து தான் இங்கேயே வந்து கிட்டிற்றாகில் இங்கேயே அடிமை செய்ய அமையாது
என்று பிரமித்து ஓன்று உண்டு -அத்தைத் தவிர்ப்பார்
மருள் என்று இனி பிரமத்துக்குப் பெயர்
மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–
அயர்வறும் அமரர்கள் அதிபதி யாவன் ஒருவன் -அவன் வாட்டாற்றான்
ஆஸ்ரிதரை அருளப்பாடிட்டு நிற்கிறவன் அடி வணங்கித் தொழுது எழு என் மனனே என்கிறார்
வணங்கு என் தன் மட நெஞ்சே
ஸாது நெஞ்சே -எனக்கு பவ்யமான நெஞ்சே –
உத்தேச்ய வசித்து ஸந்நிஹிதமாய்த்து என்று இத்தனை பார்க்கிற அத்தனை போக்கி
நம்மையும் பார்க்க வேண்டாவோ
வாட்டாற்றான் அடி வணங்கே
நமக்கு ஹித காமனாய் வந்திருக்கிறவன் வழியே போய் அவனை
அனுபவிக்கப் பார்க்க வேண்டாவோ
உகந்து அருளின நிலங்களில் வந்து நிற்கிறது நம்மை
அங்கே கொண்டு போகைக்காகவே இருக்கும்
நீயும் அவன் நினைவிலேயே போகப் பாராய்
சுடர் அடி தொழுது வணங்கே
அடி வணங்குகை யாவது ஈர் அரசு தவிருகையே இறே –
———–———
செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் திருமால் இரும் சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே–9-7-1-
செஞ்சொல் கவியில்
தம்மைத் திரு மேனியுடன் கொண்டு போக வேணும் என்று த்வரிக்க
மங்க ஒட்டு -என்று அவனை சரணம் புக்கு ப்ரக்ருதி சம்பந்தத்தை
அறுத்துக் கொண்ட படியை அருளிச் செய்கிறார் –
————–——–
நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–10-7-5-
உயர்வற என்கிற பாட்டை இப்பாட்டு விவரிக்கிறது -எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரம்ம ஆனந்தத்து அளவும் கர்ம அனுகுணமான சரீரங்களாலே
ஸ்வர்க்க நரகங்களுக்கு ஹேதுவாய் இருக்க
அதிலே ஒருவரான இவரை இத்திருமேனியோடே கொடு போகைக்கு ஆசைப்படுகிறான் ஈஸ்வரன் –
ப்ரம்மாதிகள் தொடங்கி தத் தத் காதைகள்-ஸ்லோகங்கள் – ஆனவை என்ன -நாலு வேதம் என்ன –
ஆறு ஸாஸ்த்ரம் -சிஷா வ்யாகரணம் சந்தஸ் நிருத்தம் ஜ்யோதிஷம் கல்பம் -போல்வன என்ன –
அஷ்டாதச புராணம் என்ன -சதுஷ் ஷஷ்ட்டி கலைகள் என்ன –
மற்றும் ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் திவ்ய ஸூ க்திகள் என்ன – இவைகள் எல்லாம் பகவானை ஸ்துதிக்கக் கேட்டு
உகந்து இருந்தால் போலே அன்று இறே நம்மாழ்வார் திருவாய் மொழி பிரபந்தத்தாலே
த்வய விவரணமான சரணாகதியை அருளிச் செய்த காதையைக் கேட்ட ஸர்வேஸ்வரன்
உயர்வற உயர்நலம் யுடையவனாய் ஞான ஆனந்த ஏக ஸ்வரூபனானவனை இந்த திவ்ய கானத்தைக்
கேட்டு மட்டுக்கட்டி அனுபவிக்க மாட்டாதே அத்தாலே வந்த ஆனந்தத்துக்குப் போக்கு விட்டுத்
தென்னா தெனா வென்று ஆளத்தி வையா நின்றான்
இந்தத் திருவாய் மொழி தான் -பக்த்தாம்ருதம் விஸ்வ ஜன அனு மோதனம் சர்வார்த்ததம் ஸ்ரீ சடகோப வாங் மயம்
ஸஹஸ்ர ஸாக உபநிஷத் ஸமாகமம் நமாம் யஹம் த்ராவிட வேத சாகரம் என்கிறபடியே
நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப-விறே இதனுடைய வைபவம் தான் இருப்பது –
உயர் நலமுடையவன் தான் இருப்பது -தம்மோடே கலந்து தம் வாயால் திருவாய் மொழி கேட்ட
ப்ரீதி உள் அடங்காமல் ஆனந்தித்து ஆளத்தி வையா நின்றான் -என்கிறார் –
நன்கு என்னுடலம் கைவிடான் என்னும் அளவன்றிக்கே
என்னுக்தி மாத்ரத்திலே களியா நின்றான் என்கிறார் –
நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப வாய்த்துத் திருவாய் மொழி தான் அவதரித்தது
ஸ்துத்யனுடைய அவதாரம் போலே யாய்த்து ஸ்துதியினுடைய அவதாரமும்
பரித்ராணாய ஸாதூநாம் -இத்யாதி போலே
அகில ஜகத் பத்ம போதாய அச்யுதா பாநு நா -என்னுமா போலே
நண்ணா -இத்யாதி
பிரதிகூல நிரசனத்துக்கு வேறொரு கருவி எடுக்க வேண்டாதே –
அனுகூல ரக்ஷணத்துக்கும் வேறொன்றும் வேண்டாதே
அநந்ய ப்ரயோஜனராய் இருப்பார்க்கு ஸ்வயம் ப்ரயோஜனமுமாய் இருக்குமாய்த்து
நண்ணா வசுரர் நலிவெய்த
அவ்யபதேசனுக்கு அநந்தரத்தில் அவன்
தன்னப்பன் செய்தவற்றைக் கேட்டு -இவன் என் செய்தானான் -என்று கர்ஹித்தான்
ஒரு மதிலை வாங்கும் காட்டில் அத்தர்சனம் குலைந்ததோ
திருவாய் மொழி என்றும் ஸ்ரீ ராமாயணம் என்றும் வலியான மஹா பிரபந்தங்கள்
இரண்டு உண்டாய் இருக்க -என்றான் ஆய்த்து
இப்படி உகவாதார் நெஞ்சு உளுக்கும் படியான ப்ரபந்தமாய்த்து
விபரீதஸ் ததா ஸூர –என்னக் கடவது இறே
பொருந்தாமை யுடைய அஸூர வர்க்கமானது மண் உண்ணும் படியாக சம்பந்தம் இல்லை
என்ன ஒண்ணாதே
பொருந்தோம் என்கை இறே உள்ளது –
நல்ல அமரர் பொலிவு எய்த
விஷ்ணு பக்தி பரோ தைவ -என்னக் கடவது இறே
அனுகூலமாய் இருக்குமவர்கள் உண்ணாதே தடிக்க -இவர்களுக்கு நன்மையாவது பகவத் பக்தராய் இருக்கை
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன் என்னக் கடவது இறே
இது யுமக்குப் பிறந்தபடி என் என்ன –
ஸ்துத்யன் ஆனவன் தன்னை ஸ்துதிக்கும் படி மயர்வற மதிநலம் அருளினான் –
வேதங்களைப் போலே -அப்ராப்ய மனஸா ஸஹ -என்று மீளுகை அன்றிக்கே
நின் கண் வேட்கை எழுவிப்பேனே -என்று நீ அருளின பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே
ஒண் சுடர்க் கொழுந்தாய் -பரம பக்தியாய்க் கொழுந்து விட்டு வளரா நின்றது
அது பொங்கி வழிந்த சொல் பண்ணார் பாடல் இன்கவி யாயிற்று
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
புறம்பு ஓருவர் எண்ணாதன சிலவற்றை எண்ணுவார் உண்டாயிற்று
ஸர்வேஸ்வரன் ரக்ஷகன் -அவனை ஒழிந்த அடங்கலும் அரஷகம் என்று இருக்கை அன்றிக்கே
உபய விபூதி யுக்தனுக்கும் இன்னும் சில விபூதி வேணும் என்றும்
ஸர்வ குண ஸம்பன்னனுக்கும் இன்னம் சில குணங்கள் வேணும் என்றும்
இப்புடைகளிலே எண்ணுவார் யுண்டாய்த்து
நன் முனிவர்
அவனுடைய ஸம்ருத்தியையே மனனம் பண்ணும் ஸ்வ பாவராய் இருக்கை
ஈஸ்வரன் அடியாகத் தங்கள் ஸம்ருத்தியை எண்ணுமவர்கள் முனிவர்
அத்தலைக்கே ஸம்ருத்தியை எண்ணுமவர்கள் நன் முனிவர்
அவர்கள் இன்பம் தலை சிறப்ப
திருவாய் மொழி அவதரித்த பின்பு அவனுக்குக் குண விபூதி போராது என்று இருந்த
இழவு தீர்ந்து அத்தாலே நிரதிசய ஆனந்த யுக்தரானார்கள் –
அன்றிக்கே
திருவாய் மொழியை ஒழிய வேறொரு ஸம்பத்தும் வேண்டா வென்று இதுவே
மனனம் பண்ணி ஹ்ருஷ்டராம் படியாகவுமாம்
அன்றிக்கே
நல்ல அமரர் -என்றும் நன் முனிவர் என்றும் அயர்வறும் அமரர்கள் ஆகவுமாம்
வைகுந்தத்து அமரரும் முனிவரும் -என்னக் கடவது இறே
அயர்வு அறுகை யாவது
அபர்யாப்த்த அம்ருதத்தில் ரஸம் அல்பமாய் பக்தாம்ருதமான திருவாய் மொழியைப்
பானம் பண்ணுகிறவர்கள் அல்லர்
இன்பம் தலை சிறப்பப் பண்ணார் பாடல் இன் கவிகள்
பண்ணோடே சேர்ந்த பாடல் -புஷ்ப்பமானது பரிமளத்தோடே அலருமா போலே
திரு அஷ்டாக்ஷரமானது தளிரும் முறியும் மணமும் மதுவும் யுண்டாமாப் போலே
இதுவும் பண் மிகுந்து இருக்குமாய்த்து
இன் கவிகள்
இசையும் பண்ணும் ஒழிய தோல் களைந்த சுளை போலே கவி தானே இனிதாய் இருக்குமாய்த்து
யானாய்த் தன்னைத் தான் பாடி
என் பேரை இட்டுத் தன்னைத் தான் பாடி
பிதாவானவன் புத்திரனுக்கு பசுவை நீர் வார்த்துக் கொடுத்து அவன் பக்கலிலே
தான் நீர் ஏற்றுப் பசுவை பெறுமா போலேயும்
ஸூதனை வார்த்தை கற்பித்து அவன் சொல்லக் கேட்டு அவன் இனியனாம் போலேயும்
தானே பாடினான் ஆகில் ஸ்ரீ கீதையோடே ஒத்துப் போமே
பண்டே பரமன் பணித்த பணி வகையே கண்டேன் என்று இவர் அங்கீ காரத்தாலே
அந்த கீதை தானும் வீறு பெற்றது இறே
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
தென்னா என்னும் -செருக்கால் தென்னா தென்னா என்று ஆளத்தி வைக்குமாய்த்து
திருவாய் மொழியாகிய தேனைக் குடித்துத் தெய்வ வந்து ஆளத்தி வைக்கிற படி
சம்சாரி சேதனனுக்கு பகவல் லாபம் உண்டானால்
ஏதத் சாம காயன் நாஸ்தே -என்று ஸாம கானம் பண்ணுமா போலே
அவாக்ய அநாதர என்னும் படி வாய் திறவாமல் இருக்கும் பர ப்ரஹ்மம் –
தைர்ய பங்கம் பிறந்து பாடா நிற்குமாய்த்து
என்னம்மான்
ஸூத வசனம் இனிதாம் போது பிராப்தி யுண்டாக வேணும் இறே
அதுக்கடியான ப்ராப்தியைச் சொல்லுகிறதாய்த்து
திருமாலிருஞ்சோலை யானே
இவரைப் பாடுவித்த முக்கோட்டை
பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய் கண்ணபுரத்துறை அம்மானே –
இவரைப் பாடுவித்த முக்கோட்டை இறே இது
தாம் பாடின கவிகள் இனிதானமையை அனுசந்தித்தார் –
இவை தாம் அடியாகப் பிறந்தது என்று சொல்லலாய் இருந்தார் இல்லை –
இதுக்கடி என் என்று பார்த்தார் -அவன் இவர் நெஞ்சிலே புகுந்து பாடுவித்தான் ஆய்த்து
கணபுரத்துறை யம்மான் திருமாலிருஞ்சோலையான் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
இதுக்குப் பிரத்யுபகாரம் இல்லையே வணங்கிப் பிழை என்கிறார் –
—–———–
திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால்
திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே-10-8-1-
திருமாலிருஞ்சோலையிலே
இப்படி ஆதரிக்கிற தேவர் அநாதி காலம் என்னை யுபேஷிக்க வேண்டுவான் என்
இன்று என்னை விஷயீ கரிக்க வேண்டுவான் என் என்று கேட்க
அவன் நிருத்தரனாய்ப் பேசாதே இருக்க
நிர்ஹேதுகமாகாதே என்று நிருத்தரானார் –
——————
இன்று என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே–10-8-9-
உயர்வற என்கிற பாட்டை இப்பாட்டு விவரிக்கிறது எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி பிரம்மா ஆனந்தத்து அளவும்
தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவர ஜங்கமாத் மகமான சரீரங்களிலே
ஓரொன்றிலே அளவிறந்த ஜென்மங்களில் பிறந்த வஸ்துவாய் அன்றோ போயிற்று
நீயும் அனுமதி தானத்தைப் பண்ணி யுபேஷித்து விஸ்மரித்து இருந்த நீ
இன்று என்னை விஷயீ கரிக்கைக்கும் முன்பு என்னை யுபேஷிக்கைக்கும் காரணம் என்
என்று கேட்க வேண்டி இருந்தேன் என்கிறார்
உயர்வற உயர்நலம் யுடையவன் எவன் அவன் ஞான ஆனந்த ஏக ஸ்வரூபனாய் ஸர்வேஸ்வரனான நீ
என்னைப் பரமபதத்தில் கொண்டு போவதாக விரைகிறபடி கண்டனுக்கு
இன்று என் அளவு அல்லாதபடி த்வரிக்கிற நீர் இதுக்கு முன்பு நெடு நாள் விட்டு ஆறி இருக்கக் கூடாது
இதுக்கடி ஏது என்ன
நத்வாமி ஹஸ்தாம் ஜாநீதே -என்று நடுவே சிலர் சொல்ல வேண்டும்படி யாய்த்து –
எழுந்து அருளி இருந்த இடம் அறியாமையாலே யாறி இருந்தார் அத்தனை போக்கி
அறிந்தால் ஒரு க்ஷணம் ஆறி இருப்பாரோ
இது தான் என் வார்த்தை கொண்டு அறிய வேணுமோ
கமல லோஷண -உன்னுடைய கண் அழகு அன்றோ பிரமாணம்
ராம -அவரை அறியாது ஒழிய வேணுமோ
ந ஜீவேயம் க்ஷணம் அபி விநா தம் அஸி தேஷிணம் என்று க்ஷணம் அபி என்று இறே அவர் இருப்பது
ராம கமல லோஷண -அன்றிக்கே யார் எதிராகக் கண்ணிலே சிவப்பும் சீற்றமும் எல்லாம் என்னுதல்
உயர்வற உயர்நலம் யுடையவனான நீ –
இன்று என்னைப் பொருளாக்கி
அஸத் கல்பனான என்னை ஒரு வஸ்துவாம் படிப் பண்ணி
பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி -என்றார் இறே
தன்னை
சத்துக்களுக்கு ஸ்ப்ருஹ ணீயனான தன்னை
என்னுள் வைத்தான்
தன்னைப் பிறருக்கு அவகாசம் இல்லாதபடி பண்ணி –
பொருள் இல்லாத என்னைப் பொருளாக்கினான் என்றார் இறே
நித்ய ஸூரி ஸேவ்யனான தன்னை முற்றூட்டாக என்னுள்ளே கொடு வந்து வைத்தான்
இது நீர் அறிந்தபடி என் என்ன -மயர்வற மதிநலம் அருள -அத்தாலே அறிந்தேன் –
என்னுடைய அவித்யாதி கர்மங்கள் வாஸனா ருசி பிரகிருதி சம்பந்தத்தால் வரும் புண்ய பாப கர்மங்கள்
ஸவாசனமாகப் போய் உன்னிடத்தில் பக்தி ரூபா பன்ன ஞானமானது அதி பிரகாசமாக உன்னைக் காட்டக் கண்டேன்
அத்யந்தம் ஸூலபனாய் ஞான சாஷாத்காரமானது ப்ரத்யக்ஷம் போலே தோற்றுகையாலே மடி பிடித்துக் கேட்கிறார்
அன்று -என்கிறது
விசேஷ கடாக்ஷம் பெறுவதற்கு முன்புள்ள நாள் எல்லாவற்றையும் சொல்கிறார் –
இன்று -என்கிறது
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவதற்குப் பின்பு யுண்டான காலத்தை –
என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
பரதந்த்ரனான என்னைப் புறம் போகப் பண்ணிற்று என் செய்க்கைக்காக –
பாஹ்யனாகப் பண்ணுகை யாகிறது உபேக்ஷிக்கை
இழந்த நாள் இழந்ததும் அவனாலே என்கிறார் –
பரதந்த்ர வஸ்து செல்ல வற்றதோ வர வற்றதோ
நீயோ அயர்வறும் அமரர்கள் அதிபதி -சற்றும் அசாரம் அமலம் அனுபவிப்பார் த்ரிபாத் விபூதியாய்
அவ்வளவு அன்றிக்கே
லீலா விபூதிக்கு நிர்வாஹகரான தேவர் த்ருதீய விபூதியான குன்று எனத் திகழ் மாடங்கள் சூழ்
திருப்பேரனாக எழுந்து அருளிற்றும் எனக்காகவே அன்றோ –
மலைகளைச் சேர வைத்தால் போலே விளங்கா நின்றுள்ள மாடங்கள் சூழ்ந்த திருப்பேரரான
அயர்வறும் அமரர்கள் அதிபதியானவன்
அத்யந்தம் ஸூ லபனாய்க் கொண்டு திருப்பேரிலே எழுந்து அருளினது
இப்படி மதிப்பனான உனது துயர் அறு சுடர் அடி தொழுது
உணர்த்தலுற்றேன்
உன் திரு உள்ளக் கருத்தைக் கேட்கலுற்றேன்
என் மனஸ் ஸூ தெளியும்படி
ஓன்று எனக்கு அருள் செய்ய
முன்பு கைவிட்டதற்கு ஹேது சொல்லவுமாம்
இன்று என்னை விஷயீ கரிக்கைக்கு ஹேது சொல்லவுமாம்
உணர்த்தலுற்றேன்
இதுக்கு ஒரு மறு மாற்றம் அருளிச் செய்ய வேணும் என்று திரு உள்ளத்திலே படும்படி
விண்ணப்பம் செய்ய வேண்டி இரா நின்றேன் -என்ன
இது நாம் சொல்ல வேணுமோ -நீரே அறியீரோ என்றான்
அடியேன் அறியேன் சர்வஞ்ஞரான தேவரீரே அருளிச் செய்ய வேணும் என்கிறார்
ஆனால் நாம் உம்முடைய நெஞ்சுள் புகுந்த இடத்தில் சம்மதித்து இருந்தீர் -அத்தாலே காணும் என்றான்
அது தான் உண்டோ -யான் ஒட்டி என்னுள் இருத்துவம் என்றிலேன் -என்கிறார்
அது இல்லை யாகிலும் புகுந்த பின்பு என்னை ஆதரித்தீரே என்றான்
மருவித் தொழும் மனமே தந்தாய் -என்று அதுவும் தேவரீரே மயர்வற மதி நலம் அருளிச் செய்தது
அத்தனை அன்றோ என்றார்
ஓம் காணும் அது இல்லை யாகிலும் நம்மோடே ஓக்க விஷயாந்தரங்களிலும் விரும்பாது இருந்தீரே என்றான்
என்னைத் தீ மனம் கெடுத்தாய் என்று அதுவும் தேவரே அன்றோ என்றார்
இவை ஒன்றுமே இல்லையே யாகிலும் நாம் கொடுத்த மதி நலத்தை வளர்த்துக் கொடு போந்தீரே என்றான்
காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி -என்று அதுவும் தேவரே அன்றோ என்றார்
இப்படி இவர் முடியத் தொடர்ந்தவாறே பெரும் கடல் மண்டினாரைப் போலே போக்கற்றான்
இதற்கு ஈஸ்வரன் சொன்ன உத்தரம் ஏது என்று பட்டரை ஜீயர் கேட்க
காலாலே தரையைக் கீறிக் கவிழ்ந்து நிற்கும் அத்தனை போக்கி வேறே உத்தரம் உண்டோ
என்று அருளிச் செய்தார்
அதாவது
முன்பு ருசி இல்லாமையாலே என்ன மாட்டான்
இப்போது சாதன அனுஷ்டானம் பண்ணுகையாலே என்ன மாட்டான்
ஆனால் பின்னை ஈஸ்வரனுக்கு வைஷம்யாதிகள் வரிலோ
ஸர்வ முக்தி ப்ரஸங்கம் வரிலோ -என்ன
வாராது
அத்வேஷமும்
இச்சையும்
பிறக்கைக்குத் தான் கிருஷி பண்ணி அது பக்குவமாம் அளவும் பார்த்து இருந்தவனாகையாலே –
அவன் கேட்டதுக்கு ஒரு மறு மாற்றம் சொல்லக் காணாமையாலே அறிந்தோம் இதற்கு
இங்கனே யாக வேணும் என்று பார்த்தார்
தன்னுடைய ஸ்பர்சம் பிரதிகூலமாகை தவிர்ந்து விலக்காத சமயம் பார்த்து இருந்தானாதல் –
தன்னை ஒழிந்தவற்றில் சாதன புத்தி தவிரும் அளவும் பார்த்து இருந்தான் ஆதலாக அடுக்கும் என்று பார்த்தார் –
ஆனால் இது தன்னை அவனுக்கு உத்தரமாக அருளிச் செய்யாது ஒழிவான் என் என்னில்
சைதன்ய ப்ரயுக்தமாய் வருகிற அத்வேஷத்தை ஸாதனம் என்ன மாட்டானே
சைதன்ய ப்ரயுக்தமான ருசி தானும் ஸ்வரூப அதிரேகி அன்றோ –
உபாய பாவம் தன் தலையிலே யாயிற்றே
நெடுநாள் இவர் தலையிலே பழியிட்டு இழந்த நாம் எத்தைச் சொல்லுவது என்று பேசாதே இருந்தான்
ஹ்ரீரேஷா ஹி மமாதுலா என்று ஆரண்ய காண்டத்தில் ரிஷிகள் முன்பு பெருமாள் வெட்கித் தலை
குனிந்தால் போலே பிற்பாட்டுக்கு லஜ்ஜித்து நிற்குமவன் இறே
இவர் தாமே எடுத்து வைத்து வார்த்தை சொல்லும்படி யாயிற்று இவன் நிலை
உம்முடைய ப்ராப்யம் பெற்றீராகில் உமக்கு இந்த வழி ஆராய வேணுமோ
அதுவே அமையாது என்ன
அதுவே அமையும் என்கிறார்
தேங்காய்க்கு இளநீர் புக்க வழி ஆராய்ந்து அன்று இறே விடாய்த்தவன் இளநீர் குடிப்பது என்ன
உகந்து துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே என்கிறார் –
———-———
சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டு உகந்தே –10-9-1-
இதில்
அர்ச்சிராதி மார்க்கத்தாலே போம்படியையும்
அங்கு உண்டான ஸத் காரங்களையும்
அவ்வழியாலே போய்ப்புக்கு அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு
அடியார் குழாங்களுடனே இருக்கும் இருப்பை அருளிச் செய்கிறார் –
——–——–
வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-
உயர்வற என்கிற பாட்டை இப் பாட்டு விவரிக்கிறது -அது எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரம்ம ஆனந்தத்து அளவும் சாதனாந்தரங்களை அனுஷ்ட்டித்து
ப்ரயோஜனாந்தரங்களிலே சுவர்க்கம் நரகாதிகளுக்குப் போகிற
யாம்ய கதிகளாலே புக்கு அனுபவித்து புக்கு மீண்டும் மீண்டும் இப்படித் திரியா நிற்க
அவர்களிலும் கடை கெட்ட கூவிலும் கை கழிந்த என்னைத் தன் நிர்ஹேதுக கிருபையாலே
அபுனரா வ்ருத்தி லக்ஷண மோக்ஷத்தைத் தந்து
அர்ச்சிராதி மார்க்கத்தாலே போய்ப் புகுகையும் அங்குள்ளார் ஸத்கரிக்கப் போய்
அங்கு அடியாரோடே இருந்தமையும்
உயர்நலம் யுடையவன் எவன் அவன் காட்டிக் கொடுக்கக் கண்டு அனுபவிக்கிறார்
நிகமத்தில் இத்திருவாய் மொழியை அப்யசித்தவர்கள் நித்ய ஸூரிகளுடைய திரளிலே சேர்ந்து
அவர்களுக்குப் பிரியகரராய் இருப்பார்கள் என்கிறார்
உயர்வற உயர்நலம் யுடையவன் எவன் அவன் -மயர்வற மதிநலம் அருளினான் எவன் அவன் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன் -வந்தவர் எதிர் கொள்ள
ஞானானந்த ஸ்வரூபனான ஸர்வேஸ்வரன் பிராட்டிமாரொடும் நித்ய முக்தரோடும் கூட வந்து எதிர் கொள்ள
ப்ராக்ருதனானவன் அப்ராக்ருதனாய் வருகிற படியே என்று அத்யாச்சர்யத்துடன் வந்து
எதிர் கொண்டு அழைத்துச் சென்று
மா மணி மண்டபத்து –
ஆனந்த மயமான திரு மா மணி மண்டபத்திலே
அந்தமில் பேரின்பத்து அடியாரோடு
யாவதாத்மபாவியாய் நிரதிசய ஆனந்த யுக்த்ராய்க் கொண்டு இருப்பார்கள்
அநந்த கிலேச பாஜனமான சம்சாரத்திலே ஸூகம் என்று பிரமிக்கும் அத்தனை -துக்கமே யுள்ளது –
பாண்டு ஒருவன் மேல் அம்பை விட -சம்சாரத்தில் ஆயிரம் கூற்றில் ஒரு க்ஷணம் ஆயிற்று ஸூகம் யுள்ளது –
அத்தைப் புசிக்க ஒட்டிற்று இல்லையே என்றான் இறே
அடியாரோடு இருந்தமை –கொந்தலர் இத்யாதி
நித்ய வசந்தமான சோலையை யுடைத்தான திரு நகரியை யுடைய ஆழ்வார் அருளிச் செய்த
போக்கிலே ஒருப்பட்டவாறே திரு நகரி தொடங்கி நித்ய விபூதி அளவும் சோலை செய்தது
சந்தங்கள் ஆயிரத்தும்
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என்று சரணாகதியானது
ஆயிரம் சாகைகளாய் கொண்டு ரஷிக்க
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார்
சந்தஸ்ஸூக்களை யுடைத்தான ஆயிரம் என்னுதல்
சந்தோ ரூபமான ஆயிரம் என்னுதல்
இவை வல்லார் முனிவரே
இத்தை அப்யஸிக்க வல்லார் அத்தேசத்திலே பகவத் குண ஏக தாரகராய் அனுபவித்துக் கொண்டு
அதிலே வித்தராய் அதுக்கு அவ்வருகு கால் வாங்க மாட்டாதே இருக்குமவர்கள் போலே ஆவார்கள் –
——————
முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1-
கீழில் பிறந்தது ஞான அனுசந்தான மாத்ரமாய்ப் பின்பும் இவ்வுடம்புடனே கூடி இருக்கையாலே
பிரிவாற்றாமை யோடே கூப்பிட்டுத்
திருவாணை இட்டுத் தடுத்துப்
பர பக்தி தலை எடுத்துச்
சரணம் புக்கு
தம்முடைய பிரகிருதி சம்பந்தத்தம் அற்று
எம்பெருமானைப் பெற்று க்ருதார்த்தராய் அருளிச் செய்கிறார் –
———–——–
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-
உயர்வற என்கிற பாதத்தை இதுவும் விவரிக்கிறது எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரம்ம ஆனந்தத்து அளவும் காம்ய பலங்களைப்
புஜித்து ஸம்ஸரிப்பார்கள்-
இவர் அங்கன் அன்றிக்கே நிர்ஹேதுகமாக அருளப்பெற்றவர் ஆகையால் ஞான ஆனந்தங்களாலே
உயர்நலமுடைய எம்பெருமானுக்கு இவ்வபேஷிதம் செய்து அல்லது நிற்க ஒண்ணாத படி
பெரிய பிராட்டியார் ஆணை இட்டுத் தடுத்துப் பெரிய ஆர்த்தியோடே கூப்பிட
இவர் பிரார்த்தித்த படியாகவே பரிபூர்ணனாகக் கொண்டு வந்து சம்ச்லேஷித்து அருளக் கண்டு
அபரிச்சேத்யமான ப்ரக்ருதி ரஹத்வத்திலும் ஆத்ம தத்துவத்திலும் உன்னுடைய ஸங்கல்ப ஞான ரூபத்திலும்
பெரிதான என்னுடைய விடாய் எல்லாம் தீர வந்து என்னோடே கலந்தாய் –
என்னுடைய மநோ ரதமும் ஒருபடி முடியப் பெற்றேன்
இனி இல்லை என்னும்படி என்னை விடாய்ப்பித்து அதுக்கு அவ்வருகான விடாயை யுடையையாய்க் கொண்டு
என்னோடே கலந்து உன்னுடைய விடாயும் ஒருபடி கெட்டதே என்கிறார்
உயர்வற உயர் நலம் சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ-சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
இப்போது ப்ரக்ருதி புருஷர்களைச் சொல்லுகிறது -தம்முடைய அபி நிவேசம் பெரியவற்றிலும் பெரிது என்கைக்காக –
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற வத்தாலே மேல் மேல் என பரபக்தி பரஞான பரமபக்திகளாய்ப் பெருகி வருகிறபடி
அவற்றுக்கு ஈஸ்வரனை ஒழிய ப்ருதக் ஸ்திதி இல்லாமையால் அவ்வளவும் சொல்லுகிறது
ஸ்வ கார்யமான மஹதாதிகளைப் பத்து திக்கிலும் புக்கு எங்கும் ஓக்க வியாபித்து நித்யமாய் அபரிச்சேத் யமாய்
சேதனருக்கு புருஷார்த்தத்தை விளைத்துக் கொள்ளலாம் நீளமான பிரகிருதி தத்துவத்துக்கு ஆத்மா வானவனே
அருளினது பக்தி ரூபா பன்ன ஞானம் ஆகையால்
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
அத்தையும் வியாபித்து அதில் காட்டில் பெரியதாய் -அதுக்கு நியாந்தாவாகையாலே மேலாய்
விகாராதிகள் இல்லாமையாலே அபரிமாணமாய் நிரவதிக தேஜோ ரூபமான ஆத்மவஸ்துவுக்கு ஆத்மா ஆனவனே
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன் –
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ-
அவை இரண்டையும் வியாபித்து -அவற்றுக்கு நிர்வாஹகமாய் -ஸங்கல்ப ரூபமாய் -விசத தமமாய்
விசததமம் ஆகையாவது யுகபத் ஏவ சாஷாத்கார ரூபமாய் இருக்கை
இப்படி ஸூக ரூபமான ஞானத்தை யுடையவனே -என்று ஸங்கல்ப ஞான ரூபத்தைச் சொல்லுதல்
சுடர் ஞான இன்பம் என்று
ஸூக ரூபனாய் பிரகாச ரூபனுமாய் ஆனவனே என்று எம்பெருமானைச் சொன்னதாகவுமாம்
இப்படித் தத்வ த்வயத்துக்கும் அவ்வருகான உன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனஸ்ஸினுடைய அவாவானது
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–
தத்வ த்ரயத்தையும் விளாக்குலைக் கொண்டு அவை குளப்படியாம் படியான
என்னுடைய அபிநிவேசத்தையே –
அதிலும் பெரிய உன்னுடைய அபிநிவேசத்தைக் காட்டி வந்து ஸம்ஸ் லேஷித்தாயே
என்னுடைய கூப்பீடும் ஒருபடி ஓயும்படி பண்ணிற்றே
அங்கே -பரதம் ஆரோப்யே முதித பரிஷஸ்வஜே என்று நீ மீண்டும் புகுந்து ஸ்ரீ பரதாழ்வானை
மடியில் வைத்து உச்சியை மோந்து உகந்து அணைத்தால் போலே யாயிற்று
இவருடைய விடாய் கெடும்படி கலந்து –
——-
அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-
உயர்வற என்கிற பாட்டை இதுவும் விவரித்து நிகமிக்கிறது –
அகில ஹேய ப்ரத்ய நீக -கல்யாணை கதான -ஞான ஆனந்த ஸ்வரூபனாய் –
உயர்வற உயர்நலம் யுடையவனாய் -அயர்வறும் அமரர்கள் அதிபதியாய்
ஸுந்தர்யாதி விசிஷ்டமான நித்ய திவ்ய மங்கள விக்ரஹ யுக்தனாய் –
அபரிமித திவ்ய பூஷண பூஷிதனாய் -ஸர்வ அவயவ உபேதனாய்
சர்வ ஆயுத தரனாய் -லஷ்மீ பூமி நீளா நாயகனாய் –
அஸ்தானே பய சங்கிகளான அநந்த கருட விஷ்வக் சேனாதிகளாலே அனவரத பரிசர்யமாண சரண நளினனாய்
ஸ்ரீ வைகுண்ட ஸர்வேஸ்வரனாய் நித்ய முக்த அநுபாவ்யனாய் இருக்கிறவன்
ஸ்வ விபூதி பூதரான ப்ரஹ்மாதிகளுக்கு அந்தராத்மாவாய் -தன்னைக்காண வேணும் என்று விடாய்த்து
ஆஸ்ரயித்தார் களுடைய விடாய் தீர ஸம்ஸ்லேஷிக்கும் ஸ்வ பாவனான எம்பெருமானைக் காண வேணும்
என்று விடாய்த்துக் கூப்பிட்டு -அவனைப் பெற்று நிர்த்துக்கராய் நிரஸ்த ஸமஸ்த பிரதிபந்தகரான
ஆழ்வாருடைய பக்தி பலாத்கார பூர்வகமாகப் பிறந்த ஆயிரம் திருவாய் மொழியும்
அவற்றிலே வைத்துக் கொண்டு கீழ்ச் சொன்னவை போல் அன்றிக்கே
பெற்று அல்லது தரிக்க ஒண்ணாத படியான பரமபக்தியாலே பிறந்த
அந்தாதியான இத்திருவாய் மொழி வல்லார் ஸம்ஸாரத்திலே பிறந்து வைத்தே
அயர்வறும் அமரர்களோடே ஒப்பர் என்கிறார்
உயர்வற என்கிறது அவாவற என்கிறது
உயர் நலம் யுடையவன் எவன் அவன் அவாவறச் சூழ் அரி
ஞான ஆனந்தாதி கல்யாண குண விசிஷ்டனாய்
தத் வியதிரிக்தங்களுக்கு ஸ்வாமியாய்
ஸர்வ அபேக்ஷித ப்ரதனான ஸர்வேஸ்வரனைத் தம்முடைய அபிநிவேசம் கெட வந்து கலந்த படியால்
வேறொரு விசேஷணம் இடாதே அது தன்னையே சொல்லுகிறார்
உயர்வற உயர் நலம் யுடையவன் எவன் அவன் -அவா வறச் சூழ் அரி என்று திரு நாமம் ஆயிற்று
உயர்வற என்றது -அயனை அரணை
ஸ்வ விபூதி பூதரான ப்ரஹ்மாதிகளுக்கு அந்தர் யாத்மாவாய் மறைந்து நின்றவன்
யாவன் ஒருவன் யவன் அவன்
இப்படி விபூதிமானான உயர் நலம் யுடையவன் ஸ்ருதி ப்ரஸித்தனானவனை அவாவறச் சூழ்
அரி என்றது தானே ரூபகமாய்த்து
இப்படிச் செய்கைக்கு ஹேது என் என்னில்
மயர்வற மதி நலம் அருளினன்
திரிமூர்த்தி சாம்யக் கூழ்ப்பை அறப்பண்ணி தன் நிர்ஹேதுக கிருபையாலே பக்தி ரூபா பன்ன
ஞானம் மிகுந்த அவாவாய் தத்வ த்ரயத்துக்கும் அவ்வருகு யாயிற்று
அவா வறச் சூழ்கை யாவது
தன்னைக்காண வேணும் என்று விடாய்த்த ஆஸ்ரிதருடைய விடாய் தீர ஸம்ஸ் லேஷிக்கை
அயனை அரனை
என்கிற இஸ் ஸாமா நாதி கரண்யத்தாலே ப்ரஹ்மாதிகள் பக்கல் ஈஸ்வரத்வ சங்கையை அறுக்கிறார்
அவர்களுடைய சத்தா ஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள் ஈஸ்வர அதீனமாகையாலே அவர்களுக்கு
பாரதந்தர்யமே ஸ்வரூபம் –
நிர்வாஹகத்வம் கர்மாதீனமாய் வந்தது அத்தனை
இஸ் ஸாமா நாதி கரண்யத்தில் ஞானம் இன்றியே எளியராய் இருப்பார்க்கு நிர்வஹிப்பதும் சில புடைகள் உண்டு
அயனை அரனை யவாவற்று யரியை யலற்றி யவா வற்று வீடு பெற்ற என்னுதல்
அயனை அரனை அவா வறச் சூழ் அரியை அலற்றி அவா வற்று வீடு பெற்ற என்னுதல்
அரியை அலற்றி யவா வற்று வீடு பெற்ற என்னுதல்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
அலற்றுதல் ஆகிற அயர்வற -அவா வற -அமரர்களான நித்ய ஸூரிகளாகிற அடியார்கள் குழாங்களாகிற
நித்ய ஸூரிகள் திரளிலே வைத்து
சூழ்ந்து இருந்து ஏத்துவார் பல்லாண்டு -என்கிற படியே
வீடு பெற்ற
கூப்பிட்டு அவனைப் பெற்று நிரஸ்த ஸமஸ்த பிரதிபந்தகராகையாலே நிர்த் துக்கரான ஆழ்வார் அருளிச் செய்த
அவாவில் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
பக்தி பலாத்காரத்தாலே பிறந்த ஆயிரம் திருவாய் மொழியிலும்
இவருடைய ஸ்ரீ மைத்ரேய பகவான் அவா -உபாத் யாயராக நடத்த நடந்த ஆயிரம்
ஆழ்வாருக்குப் பின்பு நூறு ஆயிரம் கவிகள் போர யுண்டாயித்து
அவர்கள் கவிகளோடு கடலோசையோடு வாசி அற்றது
அவற்றை விட்டு இவற்றைப் பற்றித் துவளுகைக்கு அடி இவருடைய அபி நிவேசம் வழிந்து புறப்பட்ட சொல்லாகை இறே
முடிந்த அவாவில் அந்தாதி இப்பத்து
உயர்வற உயர்நலம் யுடையவன் எவன் அவன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி –
அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழும்படி மயர்வற மதி நலம் அருளின பக்தி ப்ரேம அதிசயத்தாலே
பிறந்த ஆயிரம் திருவாய் மொழியிலே இப்பத்தும்
முடிந்த அவாவில் இப்பத்து அறிந்தார்
இவர் அவாவால் தரிக்க ஒண்ணாமையாலே பொங்கி வழிந்தது
அனுபவம் பொங்கி வழிந்த சொல்லாய்த்து இப்பிரபந்தம்
இவ்வவாவுக்கு உதவிற்றிலன் ஆகில் ஈஸ்வரனும் சேதனன் இன்றிக்கே ஒழியும்
சூழ் விசும்பு அணி முகிலுக்குக் கீழே பரபக்தி யாலே சென்றது
சூழ் விசும்பு அணி முகில் பர ஞானத்தாலே
இத்திருவாய் மொழி பரம பக்தியாலே
பகவத் ப்ரஸாதம் பாதியும் தங்கள் பாதியுமாகச் சொல்லும் அவர்களுக்கு சரீர அவசானத்திலே
இப் பரபக்த்யாதிகள் யுண்டாம் –
இவர் அடியிலே மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் ஆகையாலே எழுந்து அருளி இருக்கச் செய்தே யுண்டாய்த்தன
கர்ம ஞான அநு க்ருஹீதையான பக்தியினுடைய ஸ்தானத்திலே
சர்வேஸ்வரனை அருளின அருள் அடியாகப் பிறந்த பரபக்த்யாதிகள் இறே இவரது
அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே
இத்தை அறிந்தவர்கள் ஸம்ஸாரத்திலே பிறந்து வைத்தே நித்ய ஸூரிகளோடே ஒப்பர்
பிறந்தே உயர்ந்தார்
ஸர்வேஸ்வரனுடைய அவதாரத்தோ பாதி இவர்கள் பிறப்பும்
—-
அஸ்மத் குருப்யோ நம
ஆழ்வார் எம்பெருமானார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சந்திரகிரி ஐயன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மன் நாராயண ஐயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக்கோஷ்டியூர் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்குத் திரு வீதிப்பிள்ளை திருவடிகளே சரணம்
ஆங்கீரஸ வருஷம் மார்கழி மாதம் 26 தேதி
உயர்வற உயர்நலம் யுடையவன் என்கிற முதல் பாட்டின் விவரண சதகம் என்று
திரு நாமமான வாசக மாலையை
அபர் யாப்தன் திருவடிகளிலே ஸந்தர்ப்பமான மாலையைச் செய்து
அடிமை செய்து அருளினான் திருக்கோனேரி தாஸ்யை
என்று இவர் தாமே அருளிச் செய்து நிகமிக்கிறார் –
——-———–————————
பத்தாவது பத்து விவரணம் முற்றிற்று
————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை திருவடிகளே சரணமஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply