ஸ்ரீ திருவாய்மொழி வாசகமாலை — ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை–ஒன்பதாவது பத்து விவரணம்- –

சந்தியும் சந்திப்பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலு கிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை அறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுது ஆட் செய்யும் தேவரையே

நாத முனிக்கு அன்று நாலாயிரமும் உணர்த்தி
போதம் அருள் குருகூர் வித்தகனார் -கோதில்
திருவாய் மொழி வாசக மாலைத் தேனைத்
தரவே எனக்கு அருள் செய்தார் –

———-

கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்
கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை
எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்
தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே–9-1-1-

கொண்ட பெண்டீரிலே
ஸோ பாதிக பந்துக்களை விட்டுத் தன்னைப் பற்றினாரையும் ததீய சேஷத்வத்தில் நிறுத்துமவன்
நிருபாதிக பந்துவான ஸர்வேஸ்வரனைப் பற்றுங்கோள் என்று அருளிச் செய்கிறார் –

—————

கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து
மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்
திண்ண மா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்ம்மினோ
எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லையே–9-1-10-

உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறார் -எங்கனே என்னில் –
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக பார்யா புத்ராதிகளோடே வாழ்வும்
சாதன அனுஷ்டானங்கள் பண்ணி ஸ்வர்க்காதி போக்யங்கள் புஜிப்பாருக்கும்
ஸர்வேஸ்வரனையே ஆஸ்ரயித்துப் பெற வேண்டும்
பெற்றாலும் அல்ப அஸ்திரம் யாகையாலே நிலையற்று இருக்கும் –

உயர்நலம் யுடையவன் எவன் அவன் -ஞான ஆனந்த ஏக ஸ்வரூபனாய் –
ஞான சக்த்யாதி கல்யாண குண கண பூஷிதனான ஸர்வேஸ்வரன் தான்
கிருஷ்ணனாய் வந்து அவதரித்து

கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து
தானே உபாயம் என்னும் அர்த்தத்தை ப்ரதிஷ்டிப்பைக்காக அவதரித்த கிருஷ்ணன் திருவடிகளை ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்

கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண்
கிருஷ்ணனை ஒழிய வேறு சரணமாவார் இல்லை -என்னும் இவ்வர்த்தம் நிலை நிற்கைக்காக
இவ்வர்த்தத்தை ஸ்தாபிக்கைக்காகவும் அதுக்கு உறுப்பாக

மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்
பூ பாரத்தைப் போக்குகைக்காகவும் -திரு அவதாரம் பண்ணினான்

ஆனபின்பு நீங்களும்
திண்ண மா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்ம்மினோ
நும் உடைமை என்று நினைந்து இருந்தன யுண்டாகில்
கடுக அவன் திருவடிகளில் சேஷத்வேந த்ருடமாக சமர்ப்பியுங்கோள் –

உண்டேல் -என்றது ஸ்வ பக்ஷத்தில் இல்லை
அவர்களுடைய அந்யதா பிரதிபத்தியாலே வந்தன யுண்டாகில் -என்கை

நீர் இல்லை என்று சொல்லுகிறவை என் கொண்டு என்ன
ஸ்ருதி ப்ரதிபாத்யனான கிருஷ்ணன் மயர்வற மதிநலம் அருளினன்
அருளின பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே ப்ரத்யக்ஷ ஸமா நாகாரமாய் நின்று –
ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்று அருளிச் செய்து
தன்னைத் தொட்டுக் காட்டக் கண்டு சொல்கிறேன்

அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் -அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தரான நித்ய ஸூரி ஸேவ்யனானவன்
நித்ய ஸம்ஸாரிகளும் உஜ்ஜீவிப்பைக்காக ஸாத்ய உபாயங்களை சவாசநமாக விட்டு
ஸித்த உபாய பூதனான என்னை ஒருவனுமையே பற்றி நிர்ப்பரனாய் இரு என்றால் அதுவே இறே செய்வது –

எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி
இது தான் அவனுடையதோ நம்முடையதோ -என்று விசாரிக்க வேண்டா
உங்களோடு உங்கள் உடைமையோடு வாசியற அவனுக்கு சேஷம்

மற்று இல்லையே–
அவன் அன்றி மற்று இல்லையே
உங்களுடைய பாரத்தில் கர்த்தவ்ய அம்சம் அடைய உங்கள் தலையிலே கிடக்கிறது இல்லை –
எல்லாம் அவன் பக்கலிலே கிடக்கிறது என்னுதல்

மற்றில்லை
பல ஸித்திக்கு உடலான ஸாதனம் -அவனுடைய துயர் அறு சுடர் அடி தொழுது எழுகை தவிர வேறு இல்லை
உங்களுடைய ஆத்மாத்மீயங்களிலே மமதா புத்தி தவிருகையே அவனுக்குத் துயர் தீர்ந்தானாய் விளங்குவது
சமிதை பாதி சாவித்ரி பாதி யாக நீங்களும் ஒரு தலை கூட்டுப்பட வேண்டியது இல்லை
அசேதனக் கிரியைகளோ பர ப்ரஹ்மத்துக்குக் கூட்டுப்படுவது என்று அறிந்து
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே என்று
தம் நெஞ்சுக்கும் நெஞ்சு போல்வாருக்கும் உபதேசித்தார் யாய்த்து –

——–——-

பண்டை நாளாலே நின் திரு வருளும் பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால் குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1-

பண்டை நாளில்
திருப்புளிங்குடியிலே சென்று புக்கு அவனைக் கண்டு எல்லா பந்து க்ருத்யமும்
பண்ண வேணும் என்று அவனை இரந்தார்

————————

கொடு வினைப் படைகள் வல்லையாய் அமரர்க்கிடர் கெட வசுரர்கட்கிடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை யமுதே கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடி விணை யில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள் கூவுதல் வருதல் செய்யாயே–9-2-10-

உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் உயர்வற
தேவர்கள் காலிலே குனிந்து அந்நிய சேஷ பூதராய் உயர்வு அற்றார்கள்

அவர்களில் நானும் ஒருவனாய் இருக்க எனக்கு உயர்நலம் யுடையவன் எவன் அவன்
பரம ஆனந்த ஸ்வரூபனாய் வேதாந்த வேத்யனாய் ஸ்ரீ யபதியானவன் நிரதிசய போக்யமான
திருவடிகளிலே நானும் வந்து அடைந்து அடிமை செய்யும் படி
என்னை அங்கே அழைத்தல் நீ இங்கே வருதல் செய்ய வேணும் என்று
அர்த்திக்கும் படி யானேன் என்கிறார் –

உயர் நலம் யுடையவன் -கொடு வினைப் படைக்கு அளவனான -உனக்கு சேஷமாய் வைத்து
பிரதிகூலித்தவர்கள் பக்கல் நீரிலே நெருப்பு எழுந்தால் போலே சீறி ஆயுதம் எடுக்க வல்லையாய்
அவன் மாட்டாதது சிலரை அழியச் செய்கை யாய்த்து
யதிவா ராவண ஸ்வயம் என்னுமவன் இறே

கடலை அணை செய்து ஊரைச் சூழப் போந்து பின்னை அங்கதப் பெருமாளைப் போகவிட்டு
கையிலே வந்து அகப்பட்டவனை போக விட்டு
கச்ச அநு ஜாநாமி -என்று தப்ப விட்டது இன்னும் ஒருக்கால் அநு கூலிக்குமோ என்று
நாம் முடிந்தே போம் அத்தனை -என்றதிலே முதிர நின்ற பின்பும் –
கண்ணும் கண்ணீருமாய் இறே நின்று கொன்றது
இவர்கள் பண்ணும் ப்ராதிகூல்யத்தாலே அழியச் செய்யும் அத்தனை போக்கித்
தானாக அழியச் செய்ய மாட்டானாய்த்து

அமரர் இத்யாதி
அசூரர்களாலே தேவர்களுக்கு உண்டான துக்கம் தீரும்படி அசூரர்களுக்குத் துக்கத்தை விளைக்கும்
கருவினை நஞ்சே -என்னுடை அமுதே

கர்ம விஷம் கலந்த உமக்கு ரஸித்தபடி என் என்ன ஹேது சொல்கிறார்
மயர்வற மதிநலம் அருளினன்-இதர விஷயங்களில் எப்பேர்ப்பட்ட ருசியில் மயர்வு அற்று
அபர்யாப்த்த அம்ருதமான போக்யத்தையே ரசிக்கும்படி பக்தி ரூபா பன்ன ஞானத்தைப் பிறப்பித்து
இப்படி நிர்ஹேதுகமாக அருளுகையாலே அறிந்தேன்

கடு வினை நஞ்சே
அப்போது சடக்கென முடிக்க வற்றாய் ப்ரத்ய ஒவ்ஷதம் இல்லாத நஞ்சானவனே
அந்நஞ்சு தானே இவருக்கு அம்ருதமாய் இருக்கிறபடி
தேவர்களுடைய உப்புச்சாறு அன்று
அயர்வறும் அமரர்களுக்கும் அபர்யாப்த்த அம்ருதமானவனே இவருக்கும்
அதிசய அம்ருதமாய் இருக்கிற படி

இப்படி அவர்களுக்கு ரசிகனானவனே
கலி வயல் திருப்புளிங்குடியிலே –சந்நிஹிதனாய்த்து
இவ் வம்ருதத்துக்குக் கடல் கடைதல் ஸ்வர்க்கத்துக்குப் போதல் செய்ய வேண்டா
திருப்புளிங்குடியிலே சந்நிஹிதனாய்த்து இவ்வம்ருதம்

கலி வயல் -சம்ருத்தமான வயல் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் அத்தை விஸ்மரிக்கும் படி பரமபதத்தில் சம்ருத்தமான தேசம்

எம்மிடர் கடிவானுடைய துயர் அறு சுடர் அடி
வடிவிணை இல்லா மலர்மகள் மற்றும் நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
ஒப்பு இன்றிக்கே இருக்கும் பகவத் தத்துவமும் ஒப்பன்று
அஸி தேக்ஷிணா -என்று ஏற்றமாகவே இருக்கும்
மற்றை நிலமகள் -ஏவம் பூதை -என்னும் அத்தனை

அவர்கள் பிடிக்கும் மெல்லடியை
அவர்களும் திருவடியைப் பிடிக்கப் புக்கால் பூத்தொடுவாரைப் போலே கன்றுகிறதோ என்று
கூசித் தொட வேண்டும் படி யாய்த்து ஸுகுமார்யம் இருப்பது

அப்படிப்பட்ட திருவடிகளைக் கொடுவினையேனும் பிடிக்க
கண்கள் சிவந்து -க்குப்பின் இவருக்கு நிகர்ஷ அனுசந்தானம் இல்லை இறே
அவர்களும் ஸந்நிஹிதராய் -பிராப்தியும் யுண்டாய் இருக்க நான் இழப்பதே என்று
பாவியேன் என்பாரைப் போலே கொடு வினையேன் -என்கிறார்

நீ ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே
நிரதிசய போக்யனாய் ஸந்நிஹிதனான உன் துயர் அறு சுடர் அடி தொழுது திருவடி வருடி இருக்கும்படி
கூவுதல் வருதல் செய்து என் சத்தையை நோக்குகை
ஒரு நாள் அங்கே அழைத்தல் இங்கே வருதல் செய்து அருள வேணும் –

முற்பட வருதல் என்றலர் ஆயிற்று ஸமுதாயத்தைக் கலைக்க ஒண்ணாதே -என்று
என் மனஸும் நானுமாக அபேக்ஷை யுண்டாய் இருக்க
அவனும் அபேக்ஷை யுண்டார் பக்கல் விட்டு இருக்க மாட்டாதவன் ஆகையால்
அவர்களையும் கூட்டிக்கொண்டு வருவாய் என்னும் அத்தைப் பற்றச் சொல்கிறார் –

————–

ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்
பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்
கார் ஆயின காள நல் மேனியினன்
நாராயணன் நங்கள் பிரான் அவனே–9-3-1-

ஓர் ஆயிரத்தில்
உம்முடைய அபேக்ஷிதங்கள் எல்லாம் செய்கிறோம்
நான் நாராயணன் -ஸர்வ ஸக்தி யுக்தன் -என்று தன்னோடு உண்டான சம்பந்தத்தைக் காட்டக் கண்டு
அவனுடைய சீல வத்யையிலே ஆழங்கால் படுகிறார் –

——-———–

மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று
பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்
கருந்தேவன் எம்மான் கண்ணன் விண்ணுலகம்
தருந்தேவனை சோரேல் கண்டாய் மனமே–9-3-4-

உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது -எங்கனே என்னில்
ப்ரஹ்ம ஆனந்தம் தொடங்கி மனுஷ்ய ஆனந்தத்து அளவாக முன்னை வினை பின்னை பிராப்தம்
என்கிற ஆத்ம க்ஷய ரோகத்துக்கு
எருத்துக் கொடியுடையோனும் பிரமனும் இந்திரனும் மற்றும் ஒருத்தரும் மருந்து அறியாது
இருக்குமவர்கள் ஆகையாலே உயர்வற்று இருப்பார்கள் -உயர்வற என்றது

உயர்நலமுடையவன் எவன் அவன் -மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன் –
ஞான ஆனந்தாதிகளாலேயும் ஞான சக்திகளாலேயும் சீலாதி குணங்களாலேயும்
மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்றும்

பெரும் தேவர் -நித்ய ஸூரிகள் அனுபவிக்கிற அபர்யாப்த்த அம்ருதம் சாத்மிக்கைக்காக
மருந்தும் பொருளும் அமுதமும் தானே யானவன்
விஷ பூரணமான ஸம்ஸார ஸகாரத்துக்கு மாற்று மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன்
பஜஸ்வமாம் என்றும்
மாமேகம் சரணம் வ்ரஜ என்றும் விதித்த பேஷஜங்கள் காட்டின ஸர்வேஸ்வரன்
கிருஷ்ணனாய் வந்து அவதரித்து
நம்மையும் அவர்கள் நடுவே வைக்குமவனான மருத்துவன் ஆனவனை விடாதே கிடாய் என்று
திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்

மருந்தே -உன்னுடைய அனுபவத்தாலே கண்களுக்கு வரும் ஆனந்தத்துக்கு வர்த்தகனானவனே

இப்படிச் சொல்கிறது தான் எத்தாலே என் என்ன –நீ மயர்வற மதிநலம் அருளுகையாலே
உன்னைப் பெறுகைக்கும் ஸம்ஸாரமாகிற மஹா ரோஹம் அறுகைக்குமாக
நீ அருளினை பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே அறிந்தேன்

பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான் -பரன் என்றது
அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தரான நித்ய ஸூரிகள் திரள் திரளாகக் கூடி
கிண்ணகத்தில் இழிவாரைப் போலே யாய்த்து அனுபவிக்க இழிவது

பிதற்றும் ஜ்வர ஸந்நிபதிதரைப் போலே அக்ரமமாக கூப்பிடா நிற்பர்கள் -அதாவது
அவர்களுக்குத் தன்னை அனுபவிக்கக் கொடுத்த உபகாரகன் –

கருந்தேவன் -காள மேக நிபாஸ்யாம மாய் திவ்யமான வடிவை யுடையவன் -எவன் அவன்
கருந்தேவன் எம்மான்
அவ்வடிவைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவன்
நித்ய முக்தருக்குப் படி விடும் வடிவைக்கிடீர் எனக்கு உபகரித்தது
அதற்கும் மேலே ஒரு பதம் அருளினான் -துயர் அறு சுடர் அடி தொழுது எழும்படி
மருந்து -அமுதமும் தானேயாம்படி என்னையும் என் நெஞ்சையும் விஷயீ கரித்தவன்

கண்ணன் விண்ணுலகம் தருந்தேவனை சோரேல் கண்டாய் மனமே–
முன்பு பெற்றதற்கு மேலே பரமமான பதம் தந்து அருளினான் -தொழுது எழும்படி பண்ணினான்

தருந்தேவனை சோரேல் கண்டாய் மனமே–
அடியேன் அடைந்தேன் முதல் முதல் முன்னமே

கண்ணன் -தன் நிலை குலையாமல் நின்று உபகரிக்கை அன்றிக்கே அவதரித்து
மாமேகம் சரணம் வ்ரஜ என்று அபகரித்து அருளினவன் –

அவன் தன்னுடைச் சோதியான விண்ணுலகமான பரம பாதத்தையும்
வானவர் நாட்டையும் கண்டு கொள் என்று வீடும் தரும் நின்று நின்று உககைக்கும்
அனுபவிக்கைக்குமாக பரவசமான வ்யாமோஹத்தாலே சோரேல் கண்டாய் மனமே

துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே -அவனை உடம்பு வெளுக்கப் பண்ணாதே
அவனுக்கு பூசும் சாந்தில் படியே அவன் உகப்பே செய்து இரு என்கிறார் –

———-——-

மையார் கருங்கண்ணி கமல மலர்மேல்
செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே
வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும்
கையா உனைக் காணக் கருதும் என் கண்ணே–9-4-1-

மையார் கருங்கண்ணியில்
இப்படி சீலவானன் ஆனவன் தானே வந்து முகம் காட்டாமையாலே பெரிய பிராட்டியாரும் தானுமாய்
இருக்கிற இருப்பை அனுசந்தித்துப் பெரு மிடறு செய்து கூப்பிட
ஸ்ரீ ப்ரஹ்லாதனுக்கு வந்து உதவினால் போலே நடுவே வந்து தன்னைக் காட்டி
அருளைக் கண்டு க்ருதார்த்தரானார் –

——–

கண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து
பண்டை வினை ஆயின பற்றோடு அறுத்துத்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே –9-4-9-

உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது -எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் ஸ்ரீ யபதியாய்
ஆனந்தாதி கல்யாண குண பூஷிதனானவனைப்
பெண்ணுளான் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான் எண்ணறா ஊழி ஊழி தவம் செய்தார் வெள்கி நிற்ப
உயர்நலம் யுடையவன் யாவன் ஒருவன் ஸ்ருதி ப்ரஸித்தனானவனை நான் அழைத்துக் கூப்பிட்ட
விடாய் எல்லாம் கெடக் காணப் பெற்றேன்

என் கண்ணிணை யார
காணக் கருதும் கண்ணே -என்ற கண்களின் விடாய் கெடக் கண்ணிணை யாரக் கண்டு கொண்டது –
கலியர் வயிறார யுண்டே என்னுமா போலே கண்ணின் பசி தீர்ந்த படி

நீர் கண்ட படி என் என்ன -அவன் மயர்வற மதிநலம் அருளினவன் -அந்த ஞான ப்ரேமாத்மகமான
என் கண்கள் இரண்டும் களித்து
இந்த ஸ்வரூப ஞானம் அடியாக மயர்வற பண்டை வினையாயின பற்றோடே அறுத்து மறுகின நெஞ்சு களித்து
பண்டை வினை -ப்ராரப்தமான கர்மங்களை ஸவாசனமாகப் போக்கி இவ்வுகப்பிற்கு இடைச்சுவரான
அஹங்காராதி ஸமஸ்த விரோதிகளையும் ஸவாசனமாகப் போக்கினவன்

பரமபதத்திலே அயர்வறும் அமரர்கள் அதிபதி யான பிராப்ய பூதனுக்கு –
அண்டத்து அமரர் பெருமான் அடியனாகப் பெற்றேன்
ப்ராப்ய பூதனானவன் துயர் அறு சுடர் அடி தொழுது அடியனாயத் தொண்டருக்கு
அமுது உண்ணச் சொல்மாலைகள் சொன்னேன்
என்னளவின்றிக்கே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் உபகாரகனாகப் பெற்றேன்

பெற்ற பேற்றின் கனம்-நானும் என் பரிகரமும் ஜீவித்து விருந்தும் இட்டேன் என்பாரைப் போலே
சொல்மாலைகள் சொன்னேன்
ஸப்த ஸந்தர்ப ரூபமான வாசிக கைங்கர்யம் பண்ணப் பெற்றேன்
ததீய சேஷத்வ பர்யந்தமான பேற்றைப் பெற்றேன்

பெற்ற பேற்றின் கனம் இருந்தபடியாலே தாமதியாக வந்தது ஓன்று அல்ல
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே
ஸர்வேஸ்வரனாலே விஷயீ க்ருதனானேன் -தொழுது எழு என் மனனே என்கிறார் –

———–———

இன்னுயிர்ச் சேவலும் நீரும் கூவிக் கொண்டு இங்கு எத்தனை
என்னுயிர் நோவ மிழற்றேன்மின் குயில் பேடைகாள்
என்னுயிர்க் கண்ணபிரானை நீர் வரக் கூவகிலீர்
என்னுயிர் கூவிக் கொடுப்பார்க்கும் இத்தனை வேண்டுமோ–9-5-1-

இன்னுயிர்ச் சேவலிலே
கீழ் பிறந்தது ஞான ஸாஷாத் காரமாய் பாஹ்ய ஸம்ஸ்லேஷ அபேக்ஷை பிறந்து
அது கிடையாமையாலே அவசன்னராய்
ஸ்மாரக பதார்த்தங்களாலே நலிவு படுகிறபடியை அருளிச் செய்தார் –

———–———

அந்தரம் நின்று உழல்கின்ற யானுடைப் பூவைகாள்
நும் திறத்து ஏதும் இடை இல்லை குழறேன்மினோ
இந்திர ஞாலங்கள் காட்டி இவ் ஏழ் உலகும் கொண்ட
நம் திரு மார்வன் நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான்–9-5-5-

உயர்வற என்கிற பாட்டை விவரிக்கிறது எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் இதர விஷய ப்ராவண்யங்களாலே
உயர்வு அற்றார்கள்
இப்படி அவர்கள் வ்யாமோஹித்துப் படுகிற அலமாப்பைக் கண்டு தமக்கு அவற்றில் ப்ராவண்யம் அற்றாலும்
பகவத் பிராப்தி பிறவாமையாலே இன்னம் மறுவலிடில் செய்வது என் என்று
உங்கள் வ்யாமோஹத்தைக் காட்டி நலியாதே கிடி கோள் என்று அவற்றை நிஷேதிக்கிறாள்

உயர்நலம் யுடையவன் எவன் அவன் -நித்ய ஆனந்த ஸ்வரூபனானவன் –
என் ஆத்மாத்மீயங்களை அபஹரித்தான் ஆனபின்பு நீங்கள் நலிகிறது என்

இன்னுயிர்ச் சேவலின் தன்னினமாய் இருந்து நலிகிற வற்றைக் குறித்து
அவன் தான் என்னை முடிகைக்கு நல் விரகு பார்த்தான்
அந்தரம் நின்று உழல்கின்ற பூவைகாள் இனி யுங்களுக்கு இங்கு விஷயம் இல்லை கிடி கோள் என்ன

என்ன தான் என்ன
எனக்கு மயர்வற மதிநலம் அருளப்பெற்றதாய் இருக்க நலியப்போமோ
பக்தி ரூபா பன்ன ஞானத்தை உங்களால் குலைக்கப் போமோ
அந்தரம் நின்று உழல்கின்ற உங்களுக்கு இங்கு நலிய விஷயம் இல்லை யாய் இருக்க
நடுவே நின்று என்னை கிலேசப்படுத்து கிறிகோள் அத்தனை

யானுடைப் பூவை காள்
சர்வ சாதாரணமாய் இருப்பார் செய்வதைச் சிலருக்கு ஸ்வம்மாய் இருப்பார் செய்யக் கடவதோ
நான் எனக்கு என்ன அமையுமாகாதே பாதிக்கைக்கு –அவனும் என்னுடையவனாகை இறே நலிந்தது

பக்தி ரூபா பன்ன ஞானம் அருளினவனை அன்றி
நும் திறத்து ஏதுமிடையில்லை குழறேன் மினோ
உங்கள் இடையாட்டத்தில் என்னை நலிகைக்கு ஓர் அவகாசம் இல்லை என்னவுமாம்
உங்கள் பாரிப்புக்கு என் பக்கலிலே ஓர் அவகாசமும் இல்லை –

குழறேன் மினோ
அநஷர ரஸமான பேச்சைக் காட்டி முடியாதே கொள்ளுங்கோள்
அயர்வறும் அமரர்கள் அதிபதியானவன் யாவன் ஒருவன் அவன் தான் அதிகரித்த கார்யத்திலே
நெகிழ நின்றானாகில் அன்றோ நீங்கள் இப்படி முதிர நிற்க வேண்டுவது –
அதுக்கு உங்களுக்கு அவகாசம் வைக்கிறானோ

இந்திர ஞாலங்கள் காட்டி
கண்டாருக்கு விட ஒண்ணாத தன் வடிவைக் காட்டியும் -சீலத்தையும் சேஷ்டிதத்தையும் காட்டி
இவை நிலம் அல்லாமையாலே பொய் என்கிறாள்
இந்த்ர ஞாலம் என்றும் பொய் என்றும் பர்யாயம்

ஏழு உலகும் கொண்ட
பிறருடைய வஸ்துவை அபஹரிக்கப் புக்கால் அவர்களுக்கு ஓன்று சேஷியாதபடி அபஹரிக்குமவன் –

சேஷ்டித ப்ரணயித்வத்தால் வந்த பிரஸித்தியை எனக்கு காட்டினவன் எவன் அவன் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் எவன் அவன் -என் திரு மார்பன்
பிராட்டியோடும் நித்ய ஸூரிகளோடும் பழகிற்று பிரணயியாய் அன்று -இந்த்ர ஞாலத்தைக் காட்டிற்று –
கண்டாரை அகப்படுத்த சில பொய்களைக் காட்டி பூமியைக் கொண்டால் போலே
என் திரு மார்பன் துயர் அறு சுடர் அடி தொழுத அன்று தொடங்கி கலந்து பரிமாறுகிறான் என்று
தோற்றும்படி சில பொய்களைச் செய்து விஸ்லேஷிக்கை -என்னை முடிக்கைக்கு உபாயம் இது என்று
என் மனமும் என் ஆவியும் உண்ண நன்கு எண்ணினான் -நம்மை முடிக்கைக்கு நல் விரகு பார்த்தான்

உங்களுக்கு இங்கு அவகாசம் இல்லை யானுடைப் பூவை காள் -என் மனனே –
ஸர்வ சக்தி உத்யோகித்த கார்யத்தில் குறை கிடைப்பதாய் அதிலே நீங்கள் ஸஹ கரிக்கிறிகோளோ
நம்மை முடிக்கப் பார்த்த பார்வை அழகிதாகப் பார்த்தான் ஏன் நெஞ்சே தொழுது எழு என்று நொந்து
தன்னிலே நொந்து சொல்லுகிறாள் என்றுமாம் –

———-————

உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி
பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
தெருவு எல்லாம் காவி கமழ் திருக் காட்கரை
மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே–9-6-1-

உருகுமாலில்
ஸ்மாரக பதார்த்தங்கள் ஸ்மர்யமாண விஷயங்களிலே முட்டிக் கடக்க நிற்க
எம்பெருமானுடன் பண்டு ஸம்ஸ்லேஷித்த படியை அனுசந்தித்து
அப்ரீதி கர்ப்ப குண அனுசந்தானம் பண்ணி யருளினார்

————–

ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது
பேர் இதழ்த் தாமரைக் கண் கனிவாயது ஓர்
கார் எழில் மேகம் தென் காட் கரை கோயில் கொள்
சீர் எழில் நால் தடம் தோள் தெய்வ வாரிக்கே–9-6-9-

உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி பிரம்மா ஆனந்தம் அளவாக இதர போகங்களைப் புஜித்து
ஸ்வரூப ஹானிகளாய்த்து –
அதிலே நானும் ஒருவனாய் இருக்கச் செய்தே உயர்நலம் யுடையவன் எவன்
அவன் விஷயத்திலே என்னுயிர் பட்டால் போலே ஆர் உயிர் பட்டது -என்ன

நீரேயோ இப்படிப் பட்டீர் -குண அனுபவமே யாத்ரையான நித்ய ஸூரிகளும் படும்பாடு இது அன்றோ -என்ன
அவர்கள் தான் நான் பட்டது பட்டார்களோ என்கிறார் –

உயர்வற உயர்நலம் யுடையவன் பக்கலிலே நான் பட்டது போலே ஆர் உயிர் பட்டது –
நித்ய ஸூரிகளிலே தான் பட்டார் உண்டோ –
பகவத் குணங்களுக்கு அபூமியாய் இருக்கிற ஸம்ஸாரத்திலே நான் பட்ட பாட்டை
நித்ய விபூதியில் அயர்வறும் அமரர்கள் அதிபதியானவனை அயர்வின்றி
அனுபவியா நின்றுள்ளவர்கள் தான் என் பட்டார்கள் என்ன

நீர் இப்படி விண்ணுள்ளாரிலும் சீரியராய்ப் படுகைக்கு ஹேது என் என்ன

மயர்வற மதிநலம் அருளுகையாலே அருளின பக்தி ரூபா பன்ன ஞானம் படுத்தின பாடு
அங்கு யார் உயிர் பட்டது இங்கு எனது உயிர் பட்டது -என்கிறார் என்று
எம்பெருமானார் அருளிச் செய்ய கேழ்க்கும் படி

எல்லாரும் குண அனுபவம் பண்ணுகிறதாகில் இவருக்கு இவ்வாசி கூடினபடி என் என்று கேழ்க்க
நாவோடையான ஸ்த்ரீக்கு பர்த்தாவினுடைய கர ஸ்பர்சம் பட்டவாறே வேர்ப்பது விடுவதாமா போலே
இவர் பகவத் அனுபவத்தில் புதியர் யாகையாலே வருகிறது காணும் என்று அருளிச் செய்தார்

உயிரை அழித்த ஹேதுக்களைச் சொல்லுகிறது மேல்
பேர் இதழ்த் தாமரைக் கண் கனிவாயதோர்
பெரிய இதழை யுடைய தாமரை போல் இருந்துள்ள கண்ணையும் சிவந்த வாயையும் உடையவனாய்
திருக்காட்கரையை யுடையவனாய்

கார் எழில் மேகத்து என் காட்கரைக் கோயில் கொள்
கறுத்த எழிலை யுடைய மேகம் போலே வடிவை யுடையவனாய்
திருக்காட்கரையைக் கோயிலாக யுடையவனாய்

சீர் எழில் நால் தடம் தோள்
வீர ஸ்ரீ யையும் எழிலையும் யுடைத்தாய் கல்பக தரு பணைத்தால் போலே –
நாலாய் சுற்று யுடைத்தான தோள்களை யுடைய

தெய்வ வாரிக்கு
தெய்வங்கள் படும் கடலுக்கு
வாரி -கடல்
தெய்வங்களுக்கு உத்பாதகன் ஆனவனுக்கு

என் மனனே -துயர் அறு சுடர் அடி தொழுது எழு
எனக்கு பவ்யமான நெஞ்சே -ஹேய ப்ரதிபடமான திருவடிகளைத் தொழுது எழு -வர்த்தி

தெய்வ வாரி
துர் அபிமான தெய்வங்களுக்கு உத்பாதகன் ஆனவன்
அபிமான சூன்யமான என்னை அழித்தான்
வடிவு அழகையும் அவ்வூரில் இருப்பையும் காட்டி யாய்த்து இவரை அழித்தது –

—————–

எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும்
கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய்
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே—9-7-1-

எங்கானலில்
இவ்வநுஸந்தானமும் கலங்கி அவனுடைய அழகை அனுசந்தித்துப் பிரிவால்
வந்த ஆற்றாமையோடே -அவ்வழகு பற்றாசாகத் தூது விட்டார்

————–

எனக்கு ஓன்று பணியீர்காள்-இரும் பொழில் வாய் இரை தேர்ந்து
மனக்கு இன்பம் பட மேவும்-வண்டினங்காள் தும்பிகாள்
கனக்கொள் திண் மதிள் புடை சூழ்-திரு மூழிக் களத்து உறையும்
புனக்கொள் காயாமேனிப்-பூந்துழாய் முடியார்க்கே-9-7-8-

உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது -எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் இதர விஷயத்தின்
ரூப லாவண்யங்களைப் பற்றி பகவத் பிராவண்யம் அற்றார்கள் –

தமக்கும் இதர ப்ராவண்யம் விஞ்சி இருக்க உயர்நலமுடையவன் எவன்
ஸுந்தர்ய சீலாதிகளாலே பரிபூர்ணன் ஆனவனுக்கு

எனக்கு ஓன்று பணியீர்காள்-
என்று சில வண்டுகளையும் தும்பிகளையும் குறித்து அங்குத்தைக்குப் பயப்பட வேண்டாதபடி
ஸ்வ ரஷிதமான தேசத்திலே இருக்கப் பெற்றோம் இறே
இனி என் ஆர்த்தியை அறிவியுங்கோள் என்கிறாள்

உயர்நலம் யுடையவன் யாவன் ஒருவன் -ஸ்வரூப ரூபாதிகளால் ஸ்ருதிக்கு அடங்காதவன் ஸந்நிதியில்
எனக்கு ஓன்று பணியீர்கள்
நீங்கள் ஒரு வார்த்தை சொல்லா விடில் முடியும் தசை அன்றோ என் தசை இருக்கிற படி

இரும் பொழில் வாய் இரை தேர்ந்து
பரந்த சோலையிடம் எங்கும் புக்கு இரை தேடி

மனக்கு இன்பம் பட மேவும்-
மனஸ்ஸிலே இனிமை பிறக்கும்படி அன்றோ நீங்கள் கலக்கும் படி –
உங்களை போலே மதுபான மத்தமாய் ரசிக்கும் படியோ நான் மயர்வற மதிநலம் அருளப் பெற்றது –
பக்தி ரூபா பன்ன ஞானத்தால் அபர்யாப்த்த அம்ருத பானம் பண்ணி தேஹாத்ம அபிமானம் அற்று
ஸ்வரூப யாதாத்ம்ய ஞானத்தாலே அம்ருத ஸ்வரூபனானவனை அடைந்து
அனவரத பரிசர்யை பண்ணத் தேடுகிறது
விரஹத்தாலே வரும் கிலேசம் பலியாதபடியாகக் கலவா நின்றீர் கோள்
பிரிவிலும் வற்றாத ஆனந்தம் உண்டாம்படி கலவா நின்றதாய்த்து

நான் அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் அவனை வேத சாகையிலே பூத்த பூவிலே மது பானம் பண்ணும்
ஸ்ரீ யபதியாகிற தெய்வ வண்டோடே சேர்ந்த நான் விஸ்லேஷித்துத் துவளலாமோ –

கனக்கொள் திண் மதிள் புடை சூழ்-திரு மூழிக் களத்து உறையும் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் -அபர்யாப்த்த அம்ருதமாய் அவர்களுக்கு ஓலக்கம் கொடுக்கக் கடவ அவன்
என்னைப் பிரிந்து தரிக்க மாட்டாமே -அவர்களைப் பிரிந்து திண்ணியதான மதிள் சுற்றுச் சூழ்ந்து இருந்து
திருமூழிக் களத்திலே நித்ய வாஸம் பண்ணுகிற அவருக்கு
அத்தலையில் ஸுந்தர்யத்தை அனுசந்தித்தால் ரக்ஷை தேட்டமாய் இறே இருப்பது –
ஆகையால் மங்களா ஸாஸனம் ஆகிற மதிலை இறே இவள் இடுவது

புனக்கொள் காயாமேனிப்-பூந்துழாய் முடியார்க்கே-
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே -என்று
அவனோடே கிட்டிக் கலக்கப் பெறாமையாலே வருவது ஓர் ஆற்றாமையாலே மோஹம் உண்டு
அவனுக்கு எங்கே என்ன தீங்கு வருகிறதோ என்னும் ஓர் ஆற்றாமை உண்டு
அதிலே ஓன்று தீரப் பெற்றது முந்துற முன்னம்

புனக்கொள் காயாமேனிப்-பூந்துழாய் முடியார்க்கே-
தன்னிலத்திலே காயாவின் நிறம் போலே யாய்த்து நிறம் இருப்பது –
அவ்வடிவு அழகுக்கு மேலே ஹேய ப்ரதிபடமாய் அவ்வழகுக்கும் ஸ்வாமித்வ ஸூ சகமான
ஒப்பனை அழகையும் யுடையவன்
அதுக்கும் மேலே ஹேய ப்ரதிபடமாய் நிரவதிக தேஜோ ரூபமான துயர் அறு சுடர் அடிகளிலே தொழுது
பரிசர்யை பண்ணும்படி நிர்ஹேதுகமாக அருளினவன் தனக்கு உரை

வடிவு அழகு அது -ஒப்பனை அழகு அது -துயர் அறு சுடர் அடி அது –
இவற்றை எல்லாம் தாமே தம்மை அனுபவித்து இருக்கையோ -கேவலரைப் போலே
பக்தாநாம் என்றது பொய்யோ -என்று ஒரு வார்த்தையைச் சொல்லுங்கோள் -என்கிறாள் –

——-———

அறுக்கும் வினையாயின ஆகத்து அவனை
நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு
வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
குறுக்கும் வகை உண்டு கொலோ கொடியேற்கே –9-8-1-

அறுக்கும் வினையில்
விட்ட தூதர் அத்தலைப்பட்டு அது அறிவித்து வரப் பற்றாமையாலே அலமந்து துடித்து அவன் இருந்த
திரு நாவாயிலே செல்ல வேணும் என்று த்வரிக்கிற படியை அருளிச் செய்கிறார்

உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது -எங்கனே என்னில்
உயர்வற -அறுக்கும் வினை
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் புண்ய பாப ரூப கர்மங்களாலே
உயர்வும் தாழ்வுமாய் இருப்பார்கள்
அங்கன் அன்றிக்கே உயர்நலம் யுடையவன் எவன் அவன் -அவன் அனுக்ரஹத்தாலே வந்ததாகையாலே
பெற்று அன்று தரியாத படி ப்ராப்ய த்வரை விஞ்சின படியாலே அலமருகுகிறார்

அறுக்கும் வினையாயின
வினை என்று பேர் பெற்றவை எல்லாம் போக்கும்
ருசி விரோதி உபாய விரோதி ப்ராப்யத்தைப் பிராபிக்கும் இடத்தில் வரும் விரோதிகள்
வர்த்தமான தேஹத்து அளவில் பர்யவசிக்கை அன்றிக்கே பிராரப்த சேஷமாய் நின்ற
அவ்வருகேயும் போம்படி விளம்பிக்கக் கடவ அவை நின்ற நின்ற நிலைகள் தோறும்
உண்டாய் இருக்கும் இறே விரோதிகள்

புதுப்புடவை அழுக்குக் கழற்றும் போது க்ரமத்தாலே போக்க வேண்டுவது தான் போக்கும் அன்று இறே
பகவத் ப்ரஸாதத்தால் போமன்று ஒருக்காலே போமிறே
மேரு மந்த்ர மாத் ரோபி
ஸர்வே பாப்மாந ப்ரதூயந்தே
ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்கிறபடியே யாகக் கடவது இறே

ப்ரம்மஹத்யைக்கு பிராயச்சித்தம் பண்ணினால் கோ ஹத்யைக்கு பிராயச்சித்தம் பண்ண வேண்டி வரும் இறே
அங்கன் வேண்டா இறே பகவத் அனுக்ரஹம் தன்னில் -மயர்வற மதிநலம் அருளின
அருள் கொண்டு கார்யம் கொள்ளும் இடத்தில் –

ஆருக்குத் தான் இப்படிச் செய்வது என்னில்
ஆகிஞ்சன்யமும் அநந்ய கதித்வமும் யுடைய இவருக்கு
மயர்வற மதிநலம் அருளினன் எவன் அவனை
ஆகத்து அவனை நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு
பூர்வாகாதிகளைப் போக்கி -பக்தி ரூபா பன்ன ஞானத்தைத் தன் நிர்ஹேதுக கிருபையால் அருளினவனை
தன் ஹ்ருதயத்திலே அவனை நிறுத்த வேணும் என்னும் அத்யவசாயத்திலே ஒருமைப்பட்ட
மநோ ரதத்தை யுடையாருக்கு

அயர்வறும் அமரர்கள் அதிபதி யாவன் ஒருவன் அவனை -அயராமல் அநிமிஷராய்க் கொண்டு
அடிமை செய்ய வீற்று இருக்குமவன் அத்தை விட்டு
வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாயிலே நித்ய வாஸம் பண்ணுகிறவனை

குறுக்கும் வகை உண்டு கொலோ கொடியேற்கே –
கொடிய வினையேற்கு
வினையைப் போக்காதே வர்த்திப்பிக்கையிலும் விட ஒண்ணாதாய்த்து தேசம் இருப்பது
பரிமளத்தை யுடைத்தாய்
ஸ்ரமஹரமாய்
நித்ய வசந்தமான சோலைகளாலே சூழப்பட்ட திரு நாவாய்

நாவாய் யுறைகின்ற நாரணன் நம்பி துயர் அறு சுடர் அடி தொழுது எழு
திரு நாவாய் குறுக்கும் வகை யுண்டு கொலோ
குறுகப் பண்ணும் விரகு ஏதோ என்னுதல்

குறுக்கும் என்று அந்த தேச பாஷை
எம்பெருமானார் திருவடி தொழ எழுந்து அருளா நிற்க –
எதிரே வருவாரை -திரு நாவாய் எத்தனை தூரம் உண்டு என்று கேழ்க்க
குறுக்கும் என்றார்களாய்
அத்தைக்கேட்டு ஆழ்வார் பாஷையால் அருளிச் செய்வதே என்று போர வித்தராய் அருளினார்

கொடியேற்கே
திரு நாவாயில் நாரணன் நம்பி துயர் அறு சுடர் அடி தொழுது எழு
என் மனமும் நானும் பொந்தின் போதே திருநாவாயிலே புகப் பெறுவோமோ
ஹேய ப்ரத்யநீகமாய் பரஞ்சோதியான திருவடிகளைக் கொடியேற்கு குறுக்கும் வகை யுண்டாகுமோ

ஆசா லேசமும் யுடையாருக்கும் ப்ராபிக்கலாம் தேசமாய் இருக்க
ஆசையும் கண்ணழிவு அற்றுப் புகப் பெறாதே நோவு படுக்கைக்கு அடியான பாபத்தைப் பண்ணின எனக்கு
ஆகத்தவனை நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையனாய்-ஹேய ப்ரத்ய நீகமாய் நிரவதிக தேஜோ ரூபமான
திருவடிகளைத் தொழுது எழுகைக்கு என் மனனே
கொடியேற்குக் குறுக்கும் வகை யுண்டு கொலோ என்கிறார் ஆயிற்று –

—————–

மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ
வண் குறிஞ்சி இசை தவரும் ஆலோ
செல்கதிர் மாலையும் மயக்கும் ஆலோ
செக்கர் நன் மேகங்கள் சிதைக்கும் ஆலோ
அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான்
ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு
புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ –9-9-1-

மல்லிகை கமழ் தென்றலில்
நாளேல் அறியேன் என்று நித்ய கைங்கர்யம் பண்ணுகைக்கு அடைத்த நாள்
எப்போதோ என்று கேழ்க்க
அவன் அருளிச் செய்ய பற்றாமையாலே அருளிச் செய்கிறார் –

———-———-

ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்
அது மொழிந்து இடை இடைத் தன் செய் கோலம்
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித்
தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கிப்
பேதுறு முகம் செய்து நொந்து நொந்து
பேதை நெஞ்சு அறவு அறப் பாடும் பாட்டை
யாதும் ஒன்றும் அறிகிலம் அம்ம அம்ம
மாலையும் வந்தது மாயன் வாரான்–9-9-9-

உயர்வற என்கிற பாட்டை இப்பாட்டு விவரிக்கிறது எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
இதர விஷய ப்ரவணராய் இருக்கையாலே
தத் தத் போகங்கள் அல்ப அஸ்த்ரங்களாய் ரஸ்யத்தையும் தனித்தனியே பலவாகையாலே
ரஸ்யதை அல்பமாய் அஸ்திரமாய்த்து

அங்கன் அன்றியே அவர்கள் ஒருவனான இவர் -உயர்நலம் உடையவன் யாவன் ஒருவன் அவன்
ஸர்வ ரஸ ஸர்வ கந்த என்று அவன் ஸ்ருதி ப்ரஸித்தனாய் அவனைத்தான்
ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ அவஸ்தையிலும் ஸர்வ வித போக்யமும் அவனே என்று
அநந்யார்ஹ சேஷ தயா அனுபவிக்கிற பிராட்டிமார் தசையாய் அவர்கள் பாசுரத்தாலே
அருளிச் செய்து அனுபவிக்கிறார் –

மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ -என்று கீழ்ப் பிறந்த பாதகம் லௌகிகம் ஆகையால் அல்பமாய்த்து
ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்
இடைப்பெண்கள் நடுவே இவன் குழலூதுகிற போது நடுவே தன் ஆற்றாமையினாலே சில தன்
யுக்திகள் சேஷ்டிதங் களாலே வ்யாமோஹங்களைச் சொல்லா நின்று கொண்டு ஊதுகிற படும் பாட்டை
நினைத்து ஒன்றும் தரிக்க மாட்டேன் என்கிறார்

ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்
அவன் மயர்வற அருளின பக்தி ரூபா பன்ன ஞானத்தால் -அவன் ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்கள் எல்லாம்
கரதல அமலகமாகக் காட்டக் கண்டு அனுபவிக்கையாலே தரித்து நின்று அனுபவிக்கப் போகிறதில்லை

ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்
கீழில் அவை மிகை என்னும்படியே குழலோசையே பாதகம் ஆகிறபடி
தேவ திர்யக் மனுஷ்ய சங்கம ஸ்தாவரங்களுக்கு தத் தத் வசீகருத்தமான பாஷைகளாலே வசீகருத்தமாம் படி
ஊதும் வகைகள் அல்லவே இறே கோபிகளுக்கு ஊதுவது

இடையிடை அது மொழிந்து
பிரிந்தேன் ஆற்றோம் என்றால் போலே சொல்லுகிற நீச பாஷணங்கள் இடையிடையே சொல்லி யாய்த்துப் பாடுவது
தாழ்ந்த செயலும் பேச்சும் தன் வாயால் சொல்ல மாட்டாமையாலே அது என்கிறாள்

எம்பார் இவ்விடத்தே வந்தவாறே
மோர் உள்ளதனையும் சோறேயோ -தேசிகரும் கூடப் பாசுரம் இட்டுச் சொல்ல மாட்டாதே அது என்னா நிற்க
மத்யஸ்தருமான நாம் இதுக்கு என்ன பாசுரம் இட்டுச் சொல்வது என்று அருளிச் செய்தாராம்

அன்றிக்கே
அது மொழிந்து -அது தவிர்ந்து
நடுவே நடுவே பாடுகிற பாட்டை விட்டு என்றுமாம்

தன் செய் கோலம் தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித்
தனக்குத் தானே ஆபரணமாய்
தன் கருத்தை அவர்களுக்கு அறிவிக்க வல்ல திருக்கண்கள்
அயர்வறு அமரர்கள் அதிபதி யானவனை -ஜிதந்தே புண்டரிகாஷ என்று அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தரான
நித்ய ஸூரிகள் திருக்கண்களுக்குத் தோற்று
துயர் அறு சுடர் அடி தொழுது தரித்து நின்று அனுபவிக்க மாட்டாமல்
ஹேய ப்ரத்ய நீகமாய் நிரவதிக தேஜோ ரூபமான திருவடிகளில் விழுந்து கிடைக்குமா போலே

தன் செய் கோலம் தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசி
பெண்கள் நெஞ்சில் மறத்தாலே கிட்டக் காட்டுவோம் அல்லோம் என்று இருக்கிறவர்களுடைய
கல்லான மனசைக் கலக்கிக் காளை சென்று பிடியா நிற்கும் கண்கள் என்கை
நம்பி மூத்த பிரான் செய்யுமத்தை அடையச் செய்யா நின்றதாய்த்து

குழலூதுகையிலே மூண்டு மீண்டு வார்த்தை சொல்ல ஒண்ணாமையாலே
வாக் வியாபாரத்தை ஏறிட்டுக் கொள்ளுமாய்த்து
பேச்சால் பிறக்கும் ஸ்பஷ்டதை நோக்கால் பிறக்கை

மயர்வற மதிநலம் அருளினான் -அத்தாலே நான் தன்னை உள்ளபடி அறிய வல்லனாம்படி
கடாக்ஷித்து அருளினால் போலே
தன் கடாக்ஷத்தாலே என்னையும் உள்ளபடியே தான் அறிந்தான்

தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கிப்
அழகிய பேச்சோடு கூடின இசை கொண்டு ஓன்று நோக்கி
அழகிய இசைகளாலே கண்ணாக நோக்கி ஈடுபடுத்துமா போலே ஈடுபடுத்துகிற இசையோடு கூடச் செய்தேயும்
இயலும் தெரிந்து இருக்கைக்கு அடி மயர்வற்ற ஞான பக்தியை அருளி இப்படிப்படுத்தினான் –

வாக் வ்யவஹாரமும் நேத்ர விருத்தியும் மாறாடின படியே
பேதுறு முகம் செய்து நொந்து நொந்து
கேழ்க்கிறவர்களிலும் தன் செவி அணித்தாகையாலே நாம் ஈடுபடுகிற படி கண்டால் அபலைகளான
பெண்கள் என் படு கிறார்களோ என்று மிகவும் நோவு பட்டான்

அயர்வறும் அமரர்கள் துயர் அறு சுடர் அடி தொழுது அவர்கள் பாடு -படு கிற பாட்டைப்
பேதை நெஞ்சு அறவு அறப் பாடும் பாட்டை
பெண்களுடைய நெஞ்சு ஊடலை அற மறந்து வந்து பொருந்தும் படி பாடுகிற பாட்டை

யாதும் ஒன்றும் அறிகிலம்
என் மனனே அது பாதகமாம் படி எனக்கு ஒன்றும் தெரிகிறது இல்லை

அம்ம அம்மமாலையும் வந்தது
மிகவும் பயவாஹமாம் படி ராத்திரியும் வந்தது
உயர்வற -மயர்வற -அயர்வற -என்கிறவை அறுகை அன்றிக்கே
எல்லாம் ஓக்க உண்டாகத் துயர்கள் தொடரவாய்த்து மோஹாந்த காரம் வந்தபடி

என் மனனே
இனி இருந்து கிலேஸிக்க வேண்டாத படி இது முடித்தே விடும் போலே இருந்தது

மாயன் வாரான்–
தன்னைப் பிரிந்தார் லஜ்ஜிக்கும் படி தான் இழவாளனாய் வந்து காலைப் பிடிக்கும் படிக்கும்
ஆச்சர்ய பூதன் வருகிறிலன் என்கிறார் –

———-———

மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக்
காலை மாலை கமல மலர் இட்டு நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே–9-10-1-

மாலை நண்ணியில்
சரீர அவசா நத்திலே உம்மை அடிமை கொள்ளக் கடவோம் என்று ஸுரிப்பெருமாள்
அருளிச் செய்ய க்ருதார்த்தராய்
எல்லாரும் திருக்கண்ண புரத்திலே ஸர்வேஸ்வரனாய் ஸர்வ ரக்ஷகனான எம்பெருமானை
ஆஸ்ரயிக்கப் பாருங்கோள் என்று ப்ரீதி ப்ரகர்ஷத்தாலே பரரைக் குறித்து அருளிச் செய்கிறார் –

——————

சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்
தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே–9-10-5-

உயர்வற என்கிற பாட்டை இப்பாட்டு விவரிக்கிறது -எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி பிரம்மா ஆனந்தத்து அளவும் மோக்ஷத்தில் இச்சை
யுடையவர்களுக்கு கர்ம ஞானாதிகளாலே பாப நாசம் பிறந்த பின்பு கர்ம அவசானத்திலே மோக்ஷமாய் இருக்கும் –
சாதனாந்தர பரராகையாலே விளம்பிக்கும்

ஸாத்ய உபாய நிஷ்டருக்கும் ஸித்த உபாய நிஷ்டருக்கும் நெடு வாசி யுண்டு
ஸித்த உபாய நிஷ்டருக்கு சரீர அவசானத்திலே மோக்ஷமாகையாலே தத் க்ஷணமாய் இருக்கும் –
தாம் உயர் நலம் யுடையவனைப் பற்றுகையாலே சரீர அவசானத்தே பெற்றார்
உயர்நலமுடையவன் நிர்ஹேதுக கிருபையினாலே அகிஞ்சனனான அநந்ய கதியான தாம் பெற்ற பேற்றை அருளிச் செய்கிறார் –

பக்தி யோகம் கர்மா யோக ஸஹ க்ருத மாகையாலே இவருக்கு த்ரை வர்ணிக அதிகாரமாகையாலும்
தாம் அதுக்கு ஷமர் அல்லாமையாலே
தன் திருவடிகளையே உபாயமாகப் பற்றினார் திறத்து அவன் செய்து அருளும்படியை அருளிச் செய்கிறார்

உயர்வற உயர் நலம் யுடையவன் எவன் அவன்

சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
ஞான ஆனந்தாதி கல்யாண குண பூர்ணன் ஆனவன் ஜென்ம வ்ருத்த ஜனங்களால் குறைய நின்றார்களே
யாகிலும் தன் திருவடிகளை ஆஸ்ரயித்தவர்களுக்கு ரக்ஷகனாம்

கீழ் மூன்று பட்டாலும் சொன்ன பக்தி யோகம் அதிக்ருதாதிகாரம்
இதில் சொன்ன பிரபத்தி ஸர்வாதிகாரம் என்கிறது
ஸமோஹம் ஸர்வ பூதேஷூ என்னக் கடவது இறே
பகவத் விஷயம் இறே ஸ்பர்ச வேதியாய் இருக்கும் இறே

கைசிகத்தில் பகவத் சம்பந்தம் உடையான் ஒரு சண்டாளனோட்டை ஸம்பாஷணம் ப்ராமணனுடைய
ஆசார வை கல்யத்துக்குப் பரிகரமாய்த்து
அவ்விடத்தில் எல்லாரும் சொல்லுகிற அர்த்தம் இதுவேயாய்த்து –

மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
இவன் பக்கலிலே பர ந்யாஸம் பண்ணினவன்று தொடங்கி இவனை ஒழியத் தனக்கு
செல்லாமை யுண்டாய் இருக்கச் செய்தேயும்
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் த்ரிபாத் விபூதியும் லீலா விபூதியும் யுண்டாய் இருக்கச் செய்தேயும்
இவனுடைய ருசியை அனுவர்த்தித்து சரீர விஸ்லேஷத்து அளவும் அவஸர ப்ரதீஷனாய் நின்று பின்னை
இது உண்டானால் பரமபதத்தைக் கொடுக்கும் உபகாரகன் –

எவன் அவன் -துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே -என்றவன் –
தன் திருவடிகளை பற்றின வன்றே தான் இருக்கிற இடத்திலே அவனைக் கொண்டு போய்ச்
சேர வைத்துக் கொள்ள வேண்டி இருக்கச் செய்தே
நடுவு இவன் இருக்கும் நாலு நாளும் இவனுக்கு ஒட்டு பகல் ஆயிரம் ஊழியாய் இருக்கையாலே
மரணமானால் என்கிறது –
தனக்கு சக்தி இல்லை
இவனுக்கு கர்த்தவ்யம் இல்லை
இவன் ருசியைக் கடாக்ஷித்து நிட்கிற அத்தனை

இப்பாட்டில் மரணமானால் -என்றதைக் கொண்டு இறே கீழ்ச் சொன்ன நிரூபணம் எல்லாம்

அரண் அமைந்த மதில் சூழ்
அயர்வறும் அமரர்களான நித்ய முக்தர் பரிய இருக்கிறவன் இங்கே வந்து நின்றான்
அவனுக்கு என் வருகிறதோ என்று அஞ்ச வேண்டாதபடி இருக்கை

தரணியாளன்
பூமிக்கு நிர்வாஹகன்
ஹேய ப்ரத்ய நீகராய் அப்ராப்ய அம்ருத தாஸிகளான நித்ய ஸூரி நிர்வாஹகனானவன்
நித்ய ஸம்ஸாரிகளுக்கு ரக்ஷகன் என்கை

இப்படி உபய விபூதி நிர்வாஹகன் யாவன் ஒருவன் அவன் துயர் அறு சுடர் அடி
சரணாகதன் துயர் அற
அவன் தன் துயர் அற்றபடி
சுடர் அடியும்
அடியானைப் பெற்ற பின்பே பரமமான சுடர் அடி யாய்த்து –

தொழுது எழு என் மனனே
அவன் தனது அன்பர்க்கு அன்பாகுமே
தனக்கு ஸ்நேஹி களானவர்கள் பக்கலிலே அதி ப்ரவணமானவன்

தனது அன்பருக்கு அன்புடையவன் என்று பிரிக்க ஒண்ணாத படி அன்பு தான் ஒரு வடிவு கொண்டால் போலே
இருக்கிறவன் துயர் அறு சுடர் அடி

தொழுது எழு என் மனனே
தொழுது வர்த்தி என்கிறார் –

——————-

ஒன்பதாவது பத்து விவரணம் முற்றிற்று

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை திருவடிகளே சரணமஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading