ஸ்ரீ திருவாய்மொழி வாசகமாலை — ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை–எட்டாவது பத்து விவரணம்- –

சந்தியும் சந்திப்பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலு கிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை அறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுது ஆட் செய்யும் தேவரையே

நாத முனிக்கு அன்று நாலாயிரமும் உணர்த்தி
போதம் அருள் குருகூர் வித்தகனார் -கோதில்
திருவாய் மொழி வாசக மாலைத் தேனைத்
தரவே எனக்கு அருள் செய்தார் –

———-

தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்
மேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்
பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணது ஓர் பவளவாய் மணியே
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாயே–8-1-1-

தேவி மாரில்
பாரித்த படியே -திருவாறன் விளையிலே போய்ப் புகப் பெறாமையாலே -மிகவும் அவசன்னராய்
ஆஸ்ரித பரதந்த்ரன் என்றும் ஸர்வ நிர்வாஹகன் என்றும் சொல்லுகிற இது பொய்யோ என்று அதி சங்கை பண்ண
அவனும் தன் படிகளைக் காட்டக் கண்டு அதி சங்கை தீர்ந்தார் –

——-

ஆருயிரேயோ ! அகலிடமுழுதும் படைத்திடந்துண்டு மிழ்ந்த ளந்த
பேருயிரேயோ ! பெரிய நீர் படைத்து அங்குறைந்தது கடைந்தடைத்துடைத்த
சீருயிரேயோ !மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ !
ஒருயிரேயோ ! உலகங்கட் கெல்லாம் உன்னை நான் எங்கு வந்துறுகோ ?–8-1-5-

உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது – அது எங்கனே என்னில்
கீழில் பாட்டுக்களில் காணுமாறு அருளாய் என்றீர்-அப்படியே காணக் கடவீர் -அதில் ஒரு குறையில்லை
ஸாஸ்த்ர பலம் ப்ரயோக்தரீ -என்று பேறு உமதானால்
சாதனமும் உம்முடைய தலையிலே ஆக வேண்டாவோ என்ன
நான் எத்னம் பண்ணி வந்து காண என்ற ஒரு பொருள் இல்லை காண் என்கிறா

உயர்வற -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் அவரவர்கள்
சாதன அனுஷ்டானம் பண்ணி ப்ரயோஜனாந்தரத்தைக் கொண்டு போகையாலே உயர்வு அற்றார்கள்

உயர் நலமுடைய உன்னை -அரிய உயிரான உன்னைப் பெற்றார் உண்டோ –
பரமமான ஞான ஆனந்த ஸ்வரூபனுக்கு ஓக்க ஒரு பொருள் இல்லை -அதுக்குத் தக்க சாதனம் உண்டோ –
நான் ஒரு யத்னம் பண்ணி காண என்ற ஒரு பொருள் இல்லை காண் என்கிறார் –

எவன் அவன் -ஸ்ருதி ப்ரஸித்தனானவன் –ஆர் உயிரேயோ
உயிர் நீயாய் இருக்க -சரீரமான நான் என்ன என்ன சாதன அனுஷ்டானம் பண்ணுவேன்
உன்னை வந்து கிட்டும் வகை என்
சரீர ரக்ஷணம் சரீரியது அன்றோ -சரீரம் தான் தன்னை ரஷித்துக் கொள்ளவோ –
ஸம்பந்தமேயோ -அனுஷ்டானம் இல்லையோ –

அனுஷ்டானம் ஏது என்ன
மயர்வற மதிநலம் அருளித்து இல்லையோ -என் அவித்யா கர்மா வாஸனா ருசிகளைப் போக்கி
உன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களை விசதமாகக் காணும்படி
பக்தி ரூபா பன்ன ஞானத்தை உன் நிர்ஹேதுக கிருபையாலே அருளித்து இல்லையோ –

அந்த கிருபை தான் என் அளவேயோ
அகலிடம் முழுதும் படைத்து -பஹுஸ் யாம் என்று பூமிப்பரப்படைய ஸ்ருஷ்டித்து
இடந்து -பிரளயத்தில் நோவு படாதே மஹா வராஹமாய் எடுத்துக் கொண்டு ஏறி
உண்டு -திரிய பிரளயம் வர வயிற்றிலே வைத்து நோக்கியும்
உமிழ்ந்து -உள்ளே கிடந்தது தளராதபடி வெளிநாடு காண உமிழ்ந்து
கடந்து -மஹா பலியாலே அபஹ்ருதமான தசையில் எல்லை எல்லை நடந்து மீட்டுக் கொண்டு
இப்படி வந்த துர்த்தசைகளிலே அபேஷா நிரபேஷமாக உணர்ந்து நோக்கின நீயே
இது கிட்டும் விரகு பார்க்க வேண்டாவோ

இப்படி ஸர்வ வித ரக்ஷகனானவன் எவன் அவன் -அவன் யார் என்ன –
பேர் உயிரான அயர்வறும் அமரர்கள் அதிபதி – அயர்வில்லாத பூர்வே ஸாத்யர்கள் ஆனவர்களுக்கு நிர்வாஹகனான –
பேர் உயிரேயோ -என்று பெரியோன் -என்றபடி –

வேதைக சமதி கம்யனான பெருமையை யுடைய நீ பெரிய நீர் படைத்து –
ஸர்வ விஷயமாகப் பண்ணும் வியாபாரத்தோடே பிராட்டிக்காகப் பண்ணும் வியாபாரத்தோடே
வாசி அற்று இருக்கும் படி சொல்கிறது

பெரிய நீர் படைத்து அங்கு உறைந்து
ஏகார்ணவத்தை ஸ்ருஷ்டித்து ஸ்ருஷ்ட்டி அர்த்தமாக அதிலே கண் வளர்ந்து
அது கடைந்து -கடல் என்கிற ஸமாதியாலே அருளிச் செய்கிறார்
அத்தைக் கடைந்து மற்றக் கடலை அடைத்தும் அது உடைத்தும்
பிராட்டியை லபிக்கைக்காக அவற்றைக் கடைந்து அவளோட்டை ஸம்ஸ்லேஷத்துக்காக
அத்தை அடைத்து அவ்வருகு உண்டான ராக்ஷசர் வந்து ஆஸ்ரிதரை நலியாதபடி அது உடைத்து

இப்படியான செயலைச் செய்தவன் யாவன் ஒருவன் அவன் சீர் ஆர் உயிரானவன் –
நித்ய ஆஸ்ரிதையான பிராட்டியோடு நித்ய முக்தரோடு அல்லாதாரோடு வாசி யற விஷயீ கரிக்கும் சீர்மை யுடையவனே

மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ வென்று ஐஸ்வர்யத்தாலும் கௌரவ்யனாகை இறே
மநுஷ்யர்களில் காட்டில் தேவர்கள் அதிசயித்து இருக்குமா போலே யாய்த்து
நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகானாய் இருக்கும் படி –

இப்படி இருக்குமவன் யாவன் ஒருவன் அவன் ஓர் உயிரேயோ உலகங்கட்க்கு எல்லாம் –
கேவல சரீரமோ ஆத்மாவோ ஹித சிந்தை பண்ணுவார் யார்

இப்படி இருக்கிற உன்னை நான் எங்கு வந்து உறுகோ -உன் துயர் அறு சுடர் அடி தொழுகைக்கு
சாதன அனுஷ்டானம் பண்ணுகிறேனோ
அப்போது எனக்குத் துயர் உண்டாமது ஒழிய துயர் அறாது கிடாய்

ஹேய ப்ரதிபடமான திருவடிகளே உபாயமாகவும் அது தானே உபேயமாகவும் காண் தத்வம் இருப்பது
இப்படி இருபத்தொரு தத்வாந்தரம் உண்டாகில் சொல்லிக் காணாய்

இப்படி உபய விபூதிக்கும் ஓர் உயிராய் இருக்கிற உன்னை சரீர பூதனான என் ஆத்மாவும் ஆத்மீயமும்
உனக்குச் சரீரமான பின் என்ன சாதனாந்தரத்தைப் பண்ணி வந்து கிட்டுவேன்
ஆத்மா சரீரத்துக்கு ஹித சிந்தை பண்ணுவது ஒழிய சரீரம் ஸ்வ ரக்ஷணம் பண்ண என்பது ஓன்று உண்டோ

ஆதார ஆதேய -நியந்தரு நியாம்ய -பாவங்களால் சரீர லக்ஷணம் இதுக்கும் உண்டான பின்பு –
அல்ப சைதன்யமும் உன்னாலேயாய்
சேஷபூதன் சேஷியிடத்தில் தொழுது எழும் அத்தனை ஒழிய
ஸ்வ யத்ன ஸாத்யம் யுண்டோ எனக்கும் நெஞ்சுக்கும் என்கிறார் –

——

நங்கள் வரி வளை யாயங்களோ நம்முடை ஏதலர் முன்பு நாணி
நுங்கட்கு யான் ஓன்று உரைக்கும் மாற்றம் நோக்குகின்றேன் எங்கும் காண மாட்டேன்
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன் தடமுலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன்
வெங்கண் பறவையின் பாகன் எங்கோன் வேங்கட வாணனை வேண்டிச் சென்றே–8-2-1-

நங்கள் வரி வளையில்
பின்னையும் தம் அபேக்ஷிதம் கிடையாமையாலே -இதுக்கு அடி தாம் அறியாததாய் –
எம்பெருமான் அறிந்ததாய்
ஸம்ஸாரத்திலே ஏதேனும் நசை யுண்டாக வேணும் என்று பார்த்தான் அத்தனை என்று
தமக்கு ஆத்மாத்மீயங்களிலே நசையற்ற படியை அந்யாபதேசத்தாலே அருளிச் செய்கிறார் –

——–

தொல்லை யஞ் சோதி நினைக்குங்கால் என் சொல்லளவன்று இமையோர் தமக்கும்
எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யும் அத்திறம் நிற்க எம்மாமை கொண்டான்
அல்லி மலர்த் தண் துழாயும் தாரான் ஆர்க்கிடுகோ இனிப்பூசல் ?சொல்லீர்
வல்லி வள வயல் சூழ் குடந்தை மா மலர்க்கண் வளர்கின்ற மாலே-8-2-6-

உயர்வற என்கிற பாட்டைத் தொல்லை யஞ்சோதி என்கிற பாட்டு விவரிக்கிறது -எங்கனே -என்னில் –
உயர்வற -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்தளவும் ஆத்மாத்மீயங்களிலே
நசை யுண்டானவர்களாகையாலே உயர்வற்று இருப்பார்கள் –

நாமும் அவர்களிலே ஒருவனான பின்பு நமக்கும் அவை உண்டு என்று இராமல்
ஆத்மாத்மீயங்களிலே நசை அற்று உயர்நலம் யுடையவன் எவன் அவன் –
தொல்லை யஞ்சோதி நினைக்கும் கால் என் சொல் அளவன்று
அவன் அருளே எனக்கு ஆத்மாத்மீயங்களிலே நசையறப் பண்ணி
அருளே -ஆத்மாத்மீயம் என்று அறியும்படி மயர்வற மதிநலம் அருளின படி –

உயர் நலமுடையவன் -என்று சொல்லுகிறவன் எளியன் அல்லன் -ஸ்ருதி ப்ரஸித்தனாகையாலே
தொல்லை யஞ்சோதியாலே துர் லபன்
அவன் ஸூ லபனாகிலும் துர் லபனாகிலும் தன்னை ஒழியச் செல்லாத படி நம்மைக் கடாக்ஷித்துத்
தன் திருவடிகளில் புகுர நிறுத்தியவன் வாசலிலே கூப்பிடாதே சம்பந்தம் இல்லாதார் வாசலிலேயே கூப்பிடுவது -என்கிறார்

ஆக உயர்நலம் யுடையவன் எவன் அவன் -தொல்லை யஞ்சோதி நினைக்கும் கால்
ஆனந்தாதி கல்யாண குண பூர்ணனாய் ஆதியஞ்சோதி யானவனை
நினைக்கில் -ஆராயப் புக்கால்
இதர விஸஜாதீயமான விக்ரஹம் -அபர்யாப்த்த அம்ருதமான அவன் மயர்வான ஆத்மாத்மீயங்களிலே
நசையறப் பண்ணி
பக்தி ரூபா பன்ன ஞானத்தைத் தன் நிர்ஹேதுக கிருபையாலே வளர்த்துக் கொண்டு
போருகிறவனைச் சொல்லப் புகில் என் சொல்லி நிற்பன்

என் சொல் அளவன்று
அபர்யாப்த்த அம்ருதத்தின் வை லக்ஷண்யம் என் பேச்சுக்கு அளவாமோ
நான் ஒரு அபலை இருந்து சொல்லும் அளவோ அவன் பெருமை

இமையோர் தமக்கும் எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யும்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன்-இமையோர் தமக்கும் எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யும் அவன்
வேதங்களும் -அப்ராப்யா -மனஸா ஸஹ -என்று மீண்ட விஷயத்தை —
அயராதே -இமையாதே–கண்ணாலே பார்த்து அனுபவிக்க மாட்டாதார்க்கும் -அபர்யாப்த்த அம்ருத தாஸியாக்கி
அனுபவிக்க அனுபவிக்க எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யும்
எத்தனையேனும் அதிசயித ஞானரேனாலும் அளவிறந்த ஸம்சயத்தைப் பண்ணா நிற்கும்

யந் நாயம் பகவான் பிரம்மா ஜாநாதி புருஷோத்தமம்
ந க்ராஹ்யா கேநசித் க்வசித் -என்று நித்ய ஸூரிகள்
சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி நிற்க தானீட்டிய வெண்ணெய் தொடு யுண்ணப் போரும் படியாகவும் –

அத்திறம் நிற்க எம்மாமை கொண்டான்
இப்படி ஸமஸ்த கல்யாண குணங்களை யுடையவன்
என்னோடே இட்டீடு கொண்டு அல்லது தரியாதானாய் -நம்முடைய நிறத்தைக் கொண்டான்
தன்னுடைய வை லஷண்யத்தைப் பாராதே யன்றோ இட்டீடு கொண்டது

தன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே -என்று நம் சங்கா நிவ்ருத்தம் ஆக்கித்
தான் தேஜோ ராஸியாய் விளங்கா நிற்கிற
திருவடிகளைத் தொழுது எழு என்று -பத்தாஞ்சலி புடா ஹ்ருஷ்டா என்றும்
‘நானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் என்றும்
ஆத்மாத்மீயங்களிலே நசையற்ற பின்பும்

அல்லி மலர்த் தண் துழாயும் தாரான்
நம் நிறத்தைக் கொண்டால் தன்னோடு ஸ்பர்சம் உள்ளது ஒன்றைத் தந்து நம்மை உஜ்ஜீவிப்பிக்கலாம் இறே
அதுவும் செய்கிறிலன்
அது செய்தானாகில் பூவுக்கு இட்டோம் போலே என்று இருக்கலாம்
ஆர்க்கிடுகோ இனிப்பூசல் ?சொல்லீர்
நாம் துயர் அறு சுடர் அடி தொழுதால் அத் திறம் நிற்க நம் மாமைக் கொண்டான்
அல்லி மலர்த் தண் துழாயும் தாரான்
தாதும் அல்லியும் மலரும் குளிர்ந்து அழகிய திருத்துழாயும் தாரான்

வல்லி வள வயல் சூழ் குடந்தை மா மலர்க்கண் வளர்கின்ற மால் அல்லி மலர்த் தண் துழாயும் தாரான்
ஆர்க்கு இடுவதோ இனிப் பூசல் சொல்லீர்
நம்மை நலிந்தவன் வாசலிலே கூப்பிடாதே யார் வாசலிலே கூப்பிடுவோம் சொல்லி கோள்

பரத்வாதிகளில் அல்ல -பூங்கொடி படர்ந்த சோலையும் -விளைவதான வயல்களும் சூழ்ந்த
திருக்குடந்தையிலே கண் வளர்ந்து அருளுகிற ஸர்வேஸ்வரன்
மா மலர்க்கண் -ஜிதந்தே -என்று உபய விபூதியையும் தோற்பித்த கண்
ப்ராப்தனானவன் மலர்ந்த தாமரைப்பூ போலே இருக்கிற கண் என் அளவிலே அலரக் காண்கிறிலேன் -என்கை

கூக்குரல் கேழ்க்கைக்கு ஸந்நிஹிதனாய் இருக்க ஆர்த்த நாதம் கேளாமை அன்றே
கேட்டும் கேளாதது போலே இருந்தால் ஆர்க்கு இடுகோ -இனிப் பூசல் சொல்லீர்

தொல்லை யஞ்சோதி யுடையவன் துயர் அறு சுடர் அடி தொழுது ஆர்க்கு இடுகோ -இனிப் பூசல் சொல்லீர் – என்று
தோழியையும் கூட்டிப் பூசலிட்டு ஆர் வாசலில் கூப்பிடுவது என்கிறாள் –

———–

அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும்
எங்குமினையை யென்றுன்னை அறியகிலாதலற்றி
அங்கம் சேரும் பூ மகள் மண் மகளாய் மகள்
சங்கு சக்கரக் கையவனென்பர் சரணமே-8-3-1-

அங்கும் இங்கும் -இதிலே
எம்பெருமானுடைய தனிமையை அனுசந்தித்து அங்குத்தைக்குப் பரிவர் இல்லை என்று அஞ்ச
எம்பெருமான் நமக்குப் பலர் பரிவார் உண்டு என்று காட்டிக் கொடுக்கக் கண்டு பயம் தீர்ந்தார்

உயர்வற என்கிற பாட்டை விவரிக்கிறார் இதில் -எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் உன் ஸுகுமார்யம் பார்த்துப் பரிவார் இல்லை –
தாம் பரியும் பரிவு போராது என்றும் -ஸம்ஸாரிகளையும் மற்றும் எல்லாரையும் பார்த்தார்
ஸம்ஸாரிகள் சப்தாதிகளிலே மண்டி அந்நிய பரர்
பிரம்ம ஈஸா நாதிகள் தங்களுக்காக நீள் நகர் நீள் எரி வைத்து அருளாய் என்பர்கள்
அவனை அம்புக்கு இலக்கு ஆக்குவார்கள் ஆகையால் பரிவற்று இருப்பார்கள்

அங்கும் இங்கும் வானவர் தானவர் -உபரிதன லோகங்களிலும் பூமியிலும்
எங்கும் -அநுக்தமான பாதாளாதிகளிலும்
வானவர் -அனுகூலர்
தானவர் -பிரதிகூலர்
யாவரும் -இரண்டு வகையான மனுஷ்யாதிகள்
இனையை என்று யுன்னை -உயர்நலம் யுடையவனான உன்னை –

ஆனந்தாதி குணம் என்ன ஸுகுமார்யாதி குணம் என்ன இவை அறிந்து பரியமாட்டாமல் உயர்வற்றவர்கள்

உயர்நலம் யுடையவன் எவன் அவன் யாவன் ஒருவன் அவன் ஸ்ருதி ப்ரஸித்தனானவன் –
ஸர்வ சேஷி என்று அறிந்து பரியும்படியான யுன்னை உன் ஸுகுமார்யாதிகளைப் பார்த்தால்
கருமுகை மாலையைப் போல் இருக்கிற யுன்னை
உன் படிகள் ஒன்றும் அறியாதே அவர்கள் இருக்க -எனக்கு மயர்வற மதி நலம் அருளி
பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே உன் ஸுகுமார்யம் ஒழிய வேறு ஒன்றில் போகிற மயர்வை அறுத்து
உன் ஸுகுமார்யமே என் மனசிலூன்றிப் பரிகைக்கு ஒருவனாய் ஆனேன்

எவன் அவன் -இந்த ஸுகுமார்யத்தை யுடையவன் யாவன் ஒருவன் -அறிய கிலாது –
பரிய அறியாமைக்கு அனுகூலரான தேவர்களோடு பிரதிகூலரான அஸூரர்களோடு
இரண்டும் கூட மநுஷ்யர்களோடே வாசியில்லை
உன்னைக் கண்டவர்கள் எல்லாரும் பரிய வேண்டும் என்று இருக்கிறார் யாய்த்து இவர்

ஆழ்வீர் -வாரீர் நமக்குத் பரிகைக்கு த்ரிபாத் விபூதியாக உண்டே என்ன

அயர்வறும் அமரர்கள் -என்னா உன் ஸுகுமார்யம் அளவிடப்போமோ –
கண்ணாஞ்சுழலை இட்டு மங்களா ஸாஸனம் பண்ண அறியார்கள்
சந்த அனுவிருத்தியாய் இருப்பார்கள் நித்யரும் முக்தரும்
முமுஷுக்கள் மோக்ஷத்தில் இச்சை யுடையராய் இருப்பார்கள்
பத்தர் ஸம்ஸார யாத்திரையே பேறாக இருப்பார்கள்
ஆகையால் எனக்கு கூட்டு யாவார் யார் என்கிறார் –

அலற்றி
யஸ் ஸர்வஞ்ஞ ஸர்வ வித் -என்றும்
பராஸ்ய சக்திர் விவிதை ஸ்ரூயதே ஸ்வ பாவிகீ ஞான பல க்ரியாச -என்றும்
போன்ற வசனத்தைப் படியா நிற்பார்கள் –
தங்கள் ரக்ஷணத்துக்கு அடியான வசனங்களை படித்து கதறா நிற்பார்கள்
உன்னை ரஷ்யம் என்று இரார்கள்

அங்கம் சேரும் பூ மகள் மண் மகளாய் மகள்
அயர்வறும் அமரர்கள் அதிபதி -மங்களா சாசனம் ஒழிய வேறு ஒன்றில் அயராத நித்ய ஸூரிகளுக்கு
ஸுகுமார்யம் ஒழிய வேறு ஒரு போக்யதை அறியாமல் அனுபவிப்பக்கப்படுகிற உனக்கு –
போக்ய பூதைகளான பிராட்டிமார் தங்களுக்கும் புருஷகார பூதராகக் கொள்ளுமவர்கள் –
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு என்று
அச்சேர்த்திக்கு மங்களா ஸாஸனம் பண்ணுவார் இல்லை –

சங்கு சக்கரக் கையவனென்பர் சரணமே-
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே -என்று இரார்கள்
சங்கு சக்கரக்கை என்று கையும் திருவாழியுமான அழகை அனுபவிப்பார் இல்லை –
நம் விரோதியைத் துண்டிப்பதற்குக் கையிலே திவ்ய ஆயுதங்கள் யுடைத்து என்பார்கள்
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு என்னார்கள்

சரணம் என்பர்
அபிமத ஸாதனம் என்பார்கள்
ஹேய ப்ரதிபடமாய் தேஜோமயமான திருவடிகளே ப்ராப்யம் என்று இரார்கள்
ஸூ குமாரமான விக்ரஹம் என்று அறியார்கள் -தம் தாம் அபிமதங்களைப் பெற்றுப் போவார்கள் –

அங்கன் அன்றிக்கே -என் மனனே –
அச்சேர்த்திக்கும் அழகுக்கும் ஸுகுமார்யத்துக்கும் மங்களா ஸாசனம் பண்ணி
வர்த்திக்கப் பாராய் என்கிறார் –

——————–

பணியாவமரர் பணிவும் பண்பும் தாமேயாம்
அணியாராழியும் சங்கமுமேந்துமவர் காண்மின்
தணியா வெந்நோய் உலகில் தவிர்ப்பான் திரு நீல
மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே–8-3-6-

உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது -எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
ப்ரயோஜனாந்தர பரராய்க் கொண்டு போனார்கள் ஆகையால்
பிரயோஜனம் ஷயித்தால் தங்கள் க்ஷயிப்பார்கள் ஆகையால் உயர்வற்றார்கள் –
உயர்நலம் உடையவன் எவன் அவன் ஸ்ருதி ப்ரஸித்தனாய் பராத்பரனைப் பரிய அறியார்கள்

நீர் இங்கனே கிடந்தது படுகிறது என் -அவன் ஸர்வ ரக்ஷகன் அன்றோ என்ன –

மயர்வற மதிநலம் அருளி பக்தி ரூபா பன்ன ஞானத்தை தன் நிர்ஹேதுக கிருபையினால்
காட்டி அருளுகையாலே அவன் ஸுகுமார்யாதி குணங்களுக்குப் பரிவர் யாய்த்து

பணியாவமரர் பணிவும் பண்பும் தாமேயாம்
அயர்வறும் அமரர்கள் பணியா அமரர் -வேறே சிலரைப் பணியும் அயர்வு இல்லாத அமரர்
முன்பு அஸேவ்ய ஸேவை பண்ணி ஒரு நாள் வரையிலே அனுகூலித்த முக்தர் பரிய-
இப்படிக் கொத்தவர்கள் பரிய இருக்கக் கடவன் அவன்
ஸம்ஸாரத்தில் திவ்யமாய் இருக்கும் வடிவோடே வந்து உலாவா நின்றால் நான் இப்படிப்படாதே செய்வது என்

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன் -அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன்
பணிவும் பண்பும் தாமேயாம்
பணியா அமரர் பணிவுக்கும் பண்புக்கும் -செக்ஷத்வாதி குணங்களுக்கும் -தாமே விஷயமாய் இருக்குமவர்

அணியாராழியும் சங்கமுமேந்துமவர்
ஸர்வ ஆபரணமும் தானேயாகப் போரும் படியான திவ்விய ஆயுதங்களைத் தரித்து
நித்ய முக்தருக்குக் காட்ஷி கொடுத்தால்
அவர்களும் அஸ்தானே பய சங்கிகளாய்க் கொண்டு -இவ்வடிவுக்கு என்ன தீங்கு வருகிறதோ என்று
மங்களா ஸாஸனம் பண்ணும்படி யாயிற்று இருப்பது
அவர்களுக்கு நான் பட்டது பட வேணுமோ

அவர் காண்மின்
ஸுகுமார் யாதிகளை யுடையவன் கிடீர் பய ஸ்தானத்தில் வர்த்திக்கிறார் –

தனக்கு ஒரு பிரயோஜனத்துக்குத் தான் வருகிறானோ
தணியா வெந்நோய் உலகில் தவிர-வருவார்
ஒரு நாளும் முடியாத தாப த்ரயாதிகள் தீரத் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே

திரு நீல மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே–
நீல மணி போலே ஸ்ரம ஹரமாய் ஸூ குமாரமான வடிவோடே ஸம்ஸாரத்திலே வந்து உலாவுகிறார்

இங்கு வர வேண்டினால் அவ்வடிவோடே வர வேணுமோ –
என் மனம் சூழ
அந்த ஸுகுமார்யம் அறிந்த என் மனம் சூழ வருவான்
சுழன்று வரும்படி வருகிறவர் துயர் அறு சுடர் அடி தொழுது எழு

ஹேய பிரதிபடமான திருவடிகளைத் தொழுது எழ மாட்டாமல் மனஸ் ஸூ சுழலா நின்றது –
ஹேய ப்ரதிபடம் என் அளவில் காணோம்
எனக்குக் கரணம் ஆகையாலே என்னையும் கூட்டிக் கொண்டு சுழலாமல் தரித்து நின்று
தொழுது வர்த்தி என்று அருளிச் செய்கிறார் –

———-———

வார்கடா வருவி யானை மா மலையின் மருப்பிணைக் குவடிறுத்துருட்டி
ஊர் கொள் திண் பாகனுயிர் செகுத்து அரங்கின் மல்லரைக் கொன்று சூழ் பரண் மேல்
போர் கடா வரசர் புறக்கிட மாடமீ மிசைக் கஞ்சனைத் தகர்த்த
சீர்கொள் சிற்றாயன் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு எங்கள் செல் சார்வே–8-4-1-

வார் கடா வருவியில்
பின்னையும் ஸர்வேஸ்வரன் சம்சாரிகளுடைய அபேக்ஷையே ஆலம்பனமாக வந்து அவதரித்து உலாவா நிற்கும்
நித்யரும் முக்தரும் இங்கு இல்லை
அல்லாதார் புறம்பே அந்நிய பரராக என் புகுகிறதோ என்று அஞ்சினார்

அவனும் தான் பெரு மிடுக்கனாய் இருக்கிறபடியும்
தனக்குப் பரிவார் சாப அனுக்ரஹ ஸமர்த்தராய் தன்னோடு ஒத்த ப்ராஹ்மணர் மூவாயிரம் பேர்
திருச் செங்குன்றூரிலே பரிய நின்று அருளின படியைக்
காட்டிக் கொடுக்கப் பயம் தீர்ந்து அவனுடைய ஸுகுமார்யாதிகளை அனுபவித்துப் ப்ரீதரானார் –

—————–

மாயக் கூத்தா வாமனா வினையேன் கண்ணா கண் கை கால்
தூய செய்ய மலர்களா சோதித் செவ்வாய் முகிழதா
சாயல் சாமத் திருமேனி தண் பாசடையா தாமரை நீள்
வாசத் தடம் போல் வருவானே ஒரு நாள் காண வாராயே-8-5-1-

மாயக்கூத்தனில்
திருச் செங்குன்றூரிலே நின்று அருளினவனை இப்போதே போய்ப் புக்கு
அனுபவிக்கப் பெறாத இழவாலே
காண வேணும் என்று திருக் கடித்தானத்திலே புறவீடு செய்து இருந்த படியை
அருளிச் செய்கிறார் –

——-——–

கொண்டல் வண்ணா குடக் கூத்தா வினையேன் கண்ணா கண்ணா -என்
அண்ட வாணா வென்று என்னை ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்
விண் தன் மேல் தான் மண் மேல் தான் விரி நீர்க் கடல் தான் மற்றுத் தான்
தொண்டனேன் உன் கழல் காண ஒரு நாள் வந்து தோன்றாயே-8-5-6-

உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் பகவத் வியதிரிக்தங்களிலே அழகு காண்பாருக்கு
அல்ப அஸ்த்ரத்வாதி தோஷங்களாய் விரூபங்களாலே உயர்த்தி அற்றது –
இவர் கருவிலே திருவுடையாராகையாலே உயர்நலம் உடையவன் எவன் அவன்
கொண்டல் வண்ணன்
ஸுந்தர்யாதி குண கண விபூஷிதனான ஸர்வேஸ்வரன் யாவன் ஒருவன் அவன்
கொண்டல் வண்ணன் –
காணவே விடாய் அறும்படியான வடிவை யுடையவனே

குடக்கூத்தா -மநோ ஹாரியான சேஷடிதத்தை யுடையவனே
வினையேன் -இப்படி அலற்றும் படிக்கு
மயர்வற மதிநலம் அருளும்படிக்கு நிர்ஹேதுக கிருபையை யுடையவனே
நீ அருளின பக்தி ரூபா பன்ன ஞானத்துக்குப் பிரயோஜனம்
என் கண்ணா -என்று அலற்றுகையோ

தத் வியதிரிக்தங்களிலே மனஸ் ஸூ பொருந்தாமையைப் பண்ணிய உன்னை ஒழியச் செல்லாதபடி
மதிநலம் அருளி
திவ்யம் ததாமி தே சஷுஸ் -என்கிறபடி எனக்கு த்ருஷ்டி பூதனான கிருஷ்ணனே
இப்படி சஷுஷி திஷ்டன் ஆனவன் யாவன் ஒருவன் என் கண்ணன் ஆனவன் –

வினையேன்
கண்ணை இழந்து இருக்கும்படியான பாபத்தைப் பண்ணினேன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யாவன் ஒருவனை நித்ய ஸூரிகள் அநிமிஷாராய்க் கொண்டு
ஸதா அனுபவம் பண்ணும் சர்வாதிகன்
கோபாலனாய் வந்து அவதரித்து இருக்க நான்

அண்ட வாணா வென்று என்னை
விஷயீ கரிக்கைக்காக அண்டாதிபதி யானவன்
கல்யாண குண யோகம் ஆஸ்ரித அர்த்தமாய் இருக்குமா போலே விபூதி யோகமும்
தனக்காகவே என்று இருக்கிறார்

என் அண்ட வாணன் -என்கையாலே
உபய விபூதி நிர்வாஹகமும் தமக்காகவே என்று இருக்கிறார்
இங்கே மயர்வற மதிநலம் அருளி அங்கே தம்மைக் கொண்டு போய் வைத்துத்
தன்னை அனுபவிக்கைக்காக உபய விபூதியும் கண்டது என்று இருக்கிறார்

என்னை ஆள –
ஒரு ப்ரயோஜநாந்த்ரத்துக்காக அழைக்கிறேனோ
என்னை நித்ய கைங்கர்யம் கொண்டு அருள வேணும் என்று அன்றோ அழைக்கிறது

கூப்பிட்டு அழைத்தக்கால்
க்ரம பிராப்தி ஸஹிக்க வல்லேனாயத் தாழ்க்கிறாயோ
என் ஆர்த்தி நாதம் கேட்டால் கிரமத்தில் வருகிறோம் என்று ஆறி இருக்கலாய் இருந்ததோ

அயர்வறும் அமரர்கள் அதிபதியான நீ
விண் தன்மேல் தான்
பரமபதத்தில் இருக்கிற இப்போதே வந்து தோற்றவுமாம்

மண் மேல்தான்
அவதரித்தாள் காட்டவுமாம்

விரி நீர்க் கடல் தான்
ஷீராப்தியில் கண் வளர்ந்து அருளுகிறபடியே தோற்றவுமாம்

மற்றுத் தான்
தூணிலே வந்து தோற்றினால் போலே யாதல் தோற்றவுமாம்
ஆணைக்கு வந்து உதவினால் போலே யாதல் வந்து தோற்ற நிற்க வேணும்

உன் தொண்டனேன் உன் கழல் காண
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே -என்று ஆசைப்பட்ட படியே
உன் திருவடிகளில் கைங்கர்யத்திலே சபலனான அடியேன் உன் கழல் காண

துயர் அறு சுடர் அடி
என் ஆசை தீர பரஞ்சோதியான திருவடிகள்
எனக்கு உஜ்ஜீவனமான யூன் கழல் காண

ஒரு நாள் வந்து தோன்றாயே-
ஒரு நாள் வந்து தோன்றி அருள வேணும் என்கிறார் –

———–——-

எல்லியும் காலையும் தன்னை நினைத்து எழ
நல்ல வருள்கள் நமக்கே தந்தருள் செய்வான்
அல்லி யந்தண்ணந்துழாய் முடி அப்பனூர்
செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே–8-6-1-

எல்லியும் காலையிலே
இவர் இப்படிக்கு கூப்பிடும்படி தான் பிற்பாடாரானோமே -என்று லஜ்ஜித்து வந்து தான்
இவருக்குப் பேச்சுக்கு நிலம் நிலம் இன்றிக்கே தான் சாலப் பெரு விடானாய்
நேர் கொடு நேர் செல்லில் ப்ரீதி ப்ரகர்ஷத்தாலே முடிவர் என்று இவரை
அகஞ்சுரிப்படுத்திப் பின்னைக் கிட்டுவோம் என்று பார்த்துத் தான் நிற்கிற நிலையைக்
காட்டிக் கொடுக்கக் கண்டு
திருக் கடித்தானத்தோடே கூட என் நெஞ்சில் புகுந்தான் என்று ப்ரீதர் ஆகிறார்

———-———

கோயில் கொண்டான் தன் திருக் கடித் தானத்தை
கோயில் கொண்டான் அதனோடும் என்நெஞ்சம்
கோயில் கொள் தெய்வமெல்லாம் தொழ
வைகுந்தம் கோயில் கொண்ட குடக் கூத்த வம்மானே–8-6-5-

உயர்வற என்கிற பாட்டை இப்பாடல் விவரிக்கிறது -எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் அவர்களைக் காம்ய பலங்களிலே
பரவசராக்கித் -தன் ஆனந்தாதி குணங்கள் எல்லாம் கிடக்க
ஆஸ்ரிதனான என் பக்கல் ப்ரேம அதிசயத்தாலே உயர்வற உயர்நலம் யுடையவன் எவன் அவன்
திருக்கடித்தானத்தோடே கூட அசாதாரணமான கோயிலாகக் கொண்டான்

உயர்நலமுடையவன் என் மனம் கோயில் கொண்டான்
பரத்வாதிகள் முதலான திவ்யதேசங்கள் கோயில்கள் எல்லாம் கிடக்க ஹேயமான என் ஹ்ருதயத்தை
திவ்யமான கோயிலாகக் கொண்டான் என்ன
அதுகளை விட்டோ என்னோ -விட்டிலன்

செருப்பு வைத்துத் திருவடி தொழுவாரைப்போலே யாக ஒண்ணாது என்று அவைகளுக்கு எல்லாம்
பிரதானமான திருக்கடித்தானத்தோடே கூட வந்து என் நெஞ்சில் புகுந்து அருளி
எனக்கு மயர்வற மதிநலம் அருளி அஞ்ஞான அந்தகாரம் நீங்க மதி நலமான
சந்த்ர ஸூர்யர்கள் உதித்தால் போலே பரஞ்ஞான பர பக்திகளைப் பிறப்பித்து
அதிலே பரஞ்சோதியான நீ என் நெஞ்சை நாடும் நகரமுமாக்கி
விஷ்ணு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலன் -என்கிறபடியே கோயில் கொண்டான்

அதனொடும் என் நெஞ்சகம் கோயில் கொண்டான்
அயர்வறும் அமரர்களான அநந்த வைநதேயாதிகள்-கோயில் கொள் தெய்வம் எல்லாம் தொழ
வீற்று இருக்குமவன் -என் நெஞ்சம் கோயில் கொண்டான் –

திருவடி திருவனந்த ஆழ்வான் முதலானோர் தொழுது பரிசர்யை பண்ண எழுந்து இருக்கக் கடவ தத்வம்
தனக்குத் தகுதியான ஸ்ரீ வைகுண்டத்தைக் கோயிலாகக் கொண்டவன்
வீற்று இருந்து ஏழு உலகும் தனிக்கோல் செலுத்துகிற ஸர்வேஸ்வரன் கிருஷ்ணனாய் வந்து அவதரித்து
குடக்கூத்தாடியவன் வைகுந்தநாதன் திருக்கடித்தானத்தைக் கோயிலாகக் கொண்டான்

என் நெஞ்சகம் கோயில் கோயில் கொண்டவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
திவ்ய தேசம் எல்லாம் ஹேயமாய் என் நெஞ்சே போக்யமாம் படி கோயில் கொண்டான் –

என்னுடைய அவித்யாதிகள் அற்று அவனுக்கு வாசஸ்தானமான நெஞ்சே தொழுது எழு
அரவத்து அமளியின் படியே திருக்கடித்தானத்தின் நிலை என்னைப் பெறுகைக்கு யாகையாலே
ஸாத்யம் கைப்பட்டால் ஸாதனத்தில் இழிவார் இல்லையாய் இருக்க
என்னைப் பெற்றது அத்தேசத்திலே என்று அத்தோடு வந்து புகுந்தான் அதன் இடத்திலே
உபகார ஸ்ம்ருதியாலே -என்கிறார் –

——————

இருத்தும் வியந்து என்னைத் தன் பொன்னடிக் கீழ் என்று
அருத்தித் தெனைத்தோர் பல நாள் அழைத்தேற்கு
பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து என்தன்
கருத்தை யுற வீற்றிருந்தான் கண்டு கொண்டே-8-7-1-

இருத்தும் வியந்தில்
இவருடைய மநோ ரதத்தை எம்பெருமான் தான் கைக்கொண்டு இவருடனே ஸம்ஸலேஷித்துப்
பெறாப் பேறு பெற்றானாய் இருக்கிற படியைக் கண்டு ப்ரீதரானார் –

———–——–

அருள் தான் இனி யான் அறியேன் அவன் என்னுள்
இருள் தானற வீற்றிருந்தான் இதுவல்லால்
பொருள் தான் எனில் மூ வுலகும் பொருள் அல்ல
மருள் தானீதோ மாய மயக்கு மயக்கே–8-7-3-

உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் ஈஸ்வரனுக்கு
போக்ய பூதர் ஆகாமல் ப்ரயோஜனாந்தர பரராய்த்தது
உயர்நலம் உடையவன் எவன் அவன் யாவன் ஒருவன் ஸ்ருதி ப்ரஸித்தனானவன் –
அவாப்த ஸமஸ்த காமனான ஸர்வேஸ்வரன் தம் பக்கல் இப்படி வ்யாமோஹம் பண்ணக் கூடுமோ –
என்று அதிசங்கை பண்ணி
இவ்வனுபவம் இருந்தபடி என் என்று அதி சங்கை பண்ணுகிறார் –

அருள் தான் இனி யான் அறியேன்
என்னுடைய இந்திரிய வஸ்தையைத் தவிர்த்த இது தன்னையும் இப்போது ஒன்றாக நினைத்து இரேன்

எத்தைப் பற்ற என்ன
உயர்நலம் யுடையவன் -ஆனந்தாதி கல்யாண குண பூர்ணன் ஆனவன்
அவன் என்னுள் இருள் தானற வீற்றிருந்தான் இதுவல்லால்
அவன் என்னுடைய ஹ்ருதயத்திலே அஞ்ஞான அந்தகாரம் எல்லாம் போம்படி
பெறாப் பேறு பெற்றானாய் இருக்கிற படி இரா நின்றான்

மயர்வற மதிநலம் அருளினவன் எவன் அவன் -மயர்வாகிற இருள் தீர்த்து
மதிநலமாகிற சந்த்ர ஸூர்யர்களைப் போலே இருக்கிற ஞான பக்திகளைத் தன் நிர்ஹேதுக கிருபையால் செய்தான்
என் உள் இருள் தான் அற வீற்று இருந்தான் இது வல்லால் இனி எனக்கு வேறே ஓன்று தோற்றமோ

இது அல்லால் பொருள் தான் எனில் மூ வுலகும் பொருள் அல்ல
இதுக்குத் திருமலை ஆண்டான் பணிக்கும் படி
நாட்டார் ஐஸ்வர்யங்களிலே தலையாகச் சொல்லுவது த்ரை லோக்ய ஐஸ்வர்யத்தை இறே
அதுவும் எனக்கு ஓர் சரக்கு அல்ல என்கிறார் என்ன

அழகு இது என்று எம்பெருமானார் அருளிச் செய்யும்படி
என் ஹ்ருதயத்தில் புகுந்து எழுந்து அருளி இருக்கிற இருப்பு ஒழிய அயர்வறும் அமரர்கள் அதிபதியாய்
சந்த அனுவர்த்தி பண்ண அவர்களுக்கு அபர்யாப்த்த அம்ருதமான போகத்தைக் கொடுத்து
வீற்று இருந்து ஏழு உலகும் தனிக்கோல் செலுத்தி இருக்கும் இருப்பையும் தனக்கு ஐஸ்வர்யமாக
நினைத்து இருக்குமோ என்று பார்த்தால் -அதுவும் ஒரு சரக்காக நினைத்து இருக்கிறிலன் என்று
இதுவே ப்ரகரணத்துக்குச் சேருமது –

மருள் தானீதோ
ஒரு ஸம்ஸாரி சேதனனைப் பெற்று ஈஸ்வரன் இப்படி இருந்தான் என்றால் அது கூடுமது ஓன்று அன்று
இது என் அறிவுக்கேட்டாலே சொல்லுகிறேனோ

மாய மயக்கு மயக்கே–
அன்றிக்கே அவன் தன்னுடைய ஆச்சர்யமான பிரம சாதனங்களை இட்டு ப்ரமிப்பித்தானோ
நெடுநாள் பிரக்ருதியை இட்டு அறிவு கெடுத்தான்
இப்போது தன் வ்யாமோஹத்தாலே பிரமிப்பித்தான்

ஏதாகில் என் மனனே நீ ஸ்வரூப விருத்திக்காக துயர் அறு சுடர் அடி தொழுது எழு-
அஞ்சலி அன்றோ உனக்கு அடுப்பது
ப்ரம்மம் ஆகிற ஹேயம் போம்
தொழுது எழு என் மனனே என்று கிருபை யாகவுமாம்

——–——–

கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து கனிந்து -உள்ளே
வெண் பலிலகு சுடரிலகு விலகு மகர குண்டலத்தன்
கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சாரங்கன்
ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேன் உள்ளானே–8-8-1-

கண்கள் சிவந்தில்
இஸ் ஸம்ஸ்லேஷம் நிலை நிற்கைக்காக ஆத்ம ஸ்வரூப வை லக்ஷண்யத்தை
ஈஸ்வரன் காட்டிக் கொடுக்கக் கண்டு அத்தை அனுசந்தித்துத்
தனக்குத் தகுதியான பிரகாரம் இருந்தபடி என் என்று இனியராகிறார்

————-

தெருளும் மருளும் மாய்த்துத் தன் திருந்து செம் பொற் கழல் அடிக் கீழ்
அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால்
அருளப் பட்ட சடகோபன் ஓராயிரத்துள் இப்பத்தால்
அருளி யடிக் கீழ் இருத்தும் நம் அண்ணல் கரு மாணிக்கமே–8-8-11-

உயர்வற -என்கிற பாட்டை இப்பாட்டு விவரிக்கிறது -எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ஜங்கமாத்மகமான
சரீர பூதரான அவர்கள் சரீராத்ம பாவம் அறியாமல் தேஹாத்ம அபிமானிகளாய் உயர்வு அற்றார்கள்

உயர்நலம் யுடையவன் எவன் அவன் -ஆனந்தாதி கல்யாண குணங்களை யுடையனானவன்
பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய் -என்கிறபடியே
சரீர சரீரியாய்க் கொண்டு யாவன் ஒருவன் இருக்கிறான் -அவன் மயர்வற மதிநலம் அருளினன்

மயர்வாகிற
தெருளும் மருளும் மாய்த்துத்
ப்ரம்மாவின் ராஜஸம் அடியாக வந்த ஷூத்ர த்ருஷ்டி ஞானமானதும் –
ருத்ரனுடைய தாமஸ ஞானமான ஆகமாதி பாஹ்ய ஞானமான அஞ்ஞானமும் மாய்த்து

ஸ்வ அனுபவ விரோதியான பிராகிருத விஷய அஞ்ஞானங்களை வாசனையோடு போக்கி
மயர்வற மதிநலம் அருளி -தன் நிர்ஹேதுக கிருபையாலே பக்தி ரூபா பன்ன ஞானத்தைத் தந்து
என் ஆத்மாவை தனக்கு சேஷதயா சரீரமாய் இருக்கிறபடியைக் காட்டி அருளினான் –
அவன் யாவனொருவன் -அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி
ப்ருதக் ஸ்திதியாகிற அயர்வு அன்றிக்கே -ப்ரகார -ப்ரகாரியாய் -நியந்தாவாய் -நியாம்யனாய் –ஸ்வாமி யானவன் –

சுடர் அடி
தன் திருந்து செம் பொற் கழல் அடிக் கீழ்
ஆஸ்ரிதரை வேறொரு காலின் கீழே குனிய விடாததாய் ஸ்ப்ருஹ ணீயமான வீரக்கழலை யுடைத்தான
திருவடிகளின் கீழே இட்டுக் கொள்ளும்

வீரக்கழல் –
பிராட்டி முன்னாக ஆஸ்ரிதரைத் தன் கையிலும் பிறர் கையிலும் காட்டிக் கொடாத வீரக்கழல்

அருளி இருத்தும் அம்மானாம்
கேவல கிருபையாலே இருத்தும் -அயர்வறும் அமரர்கள் அதிபதி யான அம்மனானவன் –

அயனாம் சிவனாம் திருமாலால்
ராஜசர் ஆஸ்ரயிக்கும் ப்ரம்மாவாய் -தாமஸர் ஆஸ்ரயிக்கும் ருத்ரனாய் –
இப்படி பிரகார பிரகாரி தயா ஸர்வ ஆத்மாக்களுக்கு நிர்வாஹகனாய்
இப்படி ஸர்வேஸ்வரனான ஸ்ரீ யபதியாலே மயர்வற மதிநலம் அருளப்பட்ட

திருமாலால் அருளப் பட்ட சடகோபன்
அருளுக்கு விஷயமான ஆழ்வார் -அருளுக்கு வாய்த்தலை -காரணம் –பிராட்டி என்கை –

ஓராயிரத்துள் இப்பத்தால் அருளி யடிக் கீழ் இருத்தும் நம் அண்ணல் கரு மாணிக்கமே–
ஸர்வ நிர்வாஹகனானவன் -துயர் அறு சுடர் அடியாய் -ஸ்ப்ருஹணீயமாய் -வடிவு அழகேயாய் –
குணங்களேயாய் -பூர்ணனான ஸர்வேஸ்வரன் தானே தன் திருவடிகளிலே சேர்த்துக் கொள்ளும்

இத்திருவாய் மொழி அப்யசித்தார்க்குத் தாம் தொழுது எழு என் மனனே என்றது –
தம் பிரபந்தம் அப்யஸித்தார்க்குத் தாம் தொழுததே அமையும்
இது கற்றாருக்கும் அதுவே பேறு என்கிறார் –

—————-

கருமாணிக்க மலை மேல் மணித் தடந்தாமரைக் காடுகள் போல்
திரு மார்பு வாய் கண் கை உந்தி காலுடை யாடைகள் செய்ய பிரான்
திருமால் எம்மான் செழு நீர் வயல் குட்ட நாட்டுத் திருப் புலியூர்
அருமாயன் பேரன்றிப் பேச்சிலள் அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ–8-9-1-

கரு மாணிக்க மலையிலே
இவ்வாத்மாவினுடைய அநந்யார்ஹ சேஷத்வத்தை அனுசந்திக்கிறார்

—————–

திருவருள் மூழ்கி வைகலும் செழு நீர் கண்ண பிரான்
திருவருள்களும் சேர்ந்தமைக்கு அடையாளம் திருந்த உள
திருவருள் அருளால் அவன் சென்று சேர் தண் திருப் புலியூர்
திருவருள் கமுகு ஒண் பழத்தது மெல்லியல் செவ்விதழே–8-9-6-

உயர்வற என்கிற பாட்டை -இப்பாட்டு விவரிக்கிறது -எங்கனே என்னில்
அநந்யார்ஹை யான நாயகியுடைய பருவம் அறிந்து மாதா பிதாக்கள் இவள் நினைவு அறியாமல்
ராஜ லோகத்தார் ஸ்வயம் வரத்துக்கு வருவது என்று மண முரசு அறைவிக்க
அத்தைக் கேட்ட தோழியானவள் இவள் திருப்புலியூர் நாயனாருக்கே அநந்யார்ஹை யானாள் –
இனி நீங்கள் இது செய்கிறது தர்ம ஹானி என்று மணம் விலக்குகிறது -ஆய்த்து –

ஆனால் இவளுடைய ஆபி ஜாத்யாதிகள் அவனுக்கு உண்டாக வேண்டாவோ என்ன

நீங்கள் சொன்னவை எல்லாம் உண்டு -என்று அவயவ சோபை -ஆபரண சோபை -ஸுர்யாதிகள்
ப்ரணயித்வம்-ஐஸ்வர்யாதிகளால் குறைவின்றிக்கே இருக்கிற படி

ஐஸ்வர்யம் போருமோ -உதாரராக வேண்டாவோ -என்ன

அவனுடைய ஒவ்தார்ய குணத்திலே அகப்பட்டு ஸம்ஸ்லேஷித்தமைக்கு அடையாளம்
வியக்தமாக உண்டு என்கிறாள்

உயர்வற என்கிற பாட்டில் மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக
அந்நிய சேஷத்வத்தாலே மிஞ்சின உயர்வு அற்றார்கள்

அவர்களில் இவரும் ஒருவராய் இருக்க -இவர் பகவத் அநந்யார்ஹ சேஷபூதராய் –
உயர்நலமுடையவன் -எவன் -அவனுக்கே அற்றுத் தீர்ந்து

திருவருள் மூழ்கி வைகலும்
வைகலும் திருவருள் மூழ்கி -அநேகம் காலம் அவன் பிரஸாதத்திலே அவகாஹித்து நான் கண்ட இத்தை அறியும் அத்தனை இறே

எதிர் சூழல் புக்கு இவளுக்கு மயர்வற மதிநலம் அருளி இப்படிப் பரிமாறித் திரிகிறது எத்தனை காலம் உண்டு என்று அறிந்தோமோ

செழு நீர் கண்ண பிரான்
ஞான ஆனந்தாதி முதலான ஸுந்தர்ய ஸுலப்யங்களைக் காட்டிக் காணும் இவளை இப்படி அகப்படுத்திற்று

இப்படி அகப்படுத்தினவன் எவன் அவன் ஸ்ருதி ப்ரஸித்தனானவன் –
திருவருள்களும் சேர்ந்தமைக்கு அடையாளம் திருந்த உள
அவனுடைய மயர்வற மதிநலம் அருளினவற்றால் -பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே பரமபக்தி முதலானவை பூர்ண கடாக்ஷத்தாலே இவ்வாச்சர்யம் ஒன்றிலும் வந்து சேர்ந்தமைக்கு அடையாளம் திருந்த யுள
அவன் விஷயீ காரம் பெற்றமைக்கு அடையாளம் திருந்த வியக்தமாக உள

நீ இது என் கொண்டு அறிந்தாய் என்ன -அயர்வறும் அமரர்கள் அதிபதி தன்னைப்பிரியில் மூச்சு அடங்கும்படி யானவர்களுக்கு அப்ராப்ய அம்ருதமாய்க் கொண்டு அனுபவிப்பிக்குமவன் திருவருளால்

குணாகுண நிரூபணம் பண்ணாதே விஷயீ கரிக்கை யாகிற ஸ்வ பாவத்தை யுபகரிக்கைக்கத் -திருவருள் அருளுகைக்காக
அவன் சென்று சேர் தண் திருப் புலியூர்
கலங்கா பெரு நகரம் கலவி இருக்கை யாய் இருக்க யன்றோ -அவன் இங்கு வந்து சந்நிஹிதனாய்த்து –

இவளும் அந்நீர்மைக்குத் தோற்று அநன்யார்ஹையாய் – அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே என்று தன்
ஆகிஞ்சன்யமும் அநந்ய கதித்வமும் தோற்ற த்ரிவித காரணங்களாலும் தனக்கு அந்நிய சேஷத்வமாகிற ஹேயத்தைப் போக்கின பின்பு துயர் அற்று தானும் அநந்யார்ஹ சேஷியாய் விளங்கினவன் சேர்ந்தமைக்கு அடையாளம் இவள் வாய் சிவந்து கனிந்த படி பாரி கோளே –

திருவருள் கமுகு ஒண் பழத்தது மெல்லியல் செவ்விதழே–
திருவருள் கமுகு என்று சில உண்டு -அது நீராலே வளருகை அன்றியே
பெரிய பிராட்டியாரும் ஸர்வேஸ்வரனுமாகக் கடாக்ஷிக்க அத்தாலே வளருவன சில

அதனுடைய அழகிய பழம் போலே இரா நின்றது -மிருதுபாவையான இவளுடைய அதரம்
இவ்வாயிலே அறியலாய் அன்றோ இருக்கிறது என்றார் ஆயிற்று –

——-——————————————

நெடுமாற்கு அடிமை செய்வன் போல் அவனைக் கருத வஞ்சித்து
தடுமாற்றற்ற தீக் கதிகள் முற்றும் தவிர்ந்த சதிர் நினைந்தால்
கொடுமா வினையேன் அவன் அடியார் அடியே கூடும் இது வல்லால்
விடுமாறு எனபது என்னந்தோ வியன் மூ வுலகு பெறினுமே-8-10-1-

நெடுமாற்கு அடிமையிலே
ஸர்வேஸ்வரனுடைய வடிவு அழகிலும் குணங்களிலும் ஈடுபட்டு இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்
திருவடிகளிலே சேஷத்வமே நிரதிசய புருஷார்த்தம் என்று அருளிச் செய்தார்
ப்ரணவத்திலே மத்யம பதத்தாலும் நமஸ்ஸாலும் சொன்ன அர்த்தத்தைச் சொன்னது கீழ்
அநந்யார்ஹ சேஷத்வத்துக்கு எல்லை ததீய சேஷத்வ பர்யந்தமாகை இறே
எம் தம்மை விற்கவும் பெறுவார்கள் -என்று இறே இருப்பது –

——–———–

தமர்கள் கூட்ட வல்வினையை நாசம் செய்யும் சதிர் மூர்த்தி
அமர் கொள் ஆழி சங்கு வாள் வில் தண்டாதி பல்படையன்
குமரன் கோல வைங்கணை வேள் தாதை கோதில் அடியார் தம்
தமர்கள் தமர்கள் தமர்களாம் சதிரே வாய்க்க தமியேற்கே–8-10-9-

உயர்வற என்கிற பாட்டை -இது விவரிக்கிறது -எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக தேவதாந்த்ர பரருக்குச்
சேஷமாய் உயர்வு அற்றார்கள்
அதில் இவரும் ஒருவராய் இருக்கத் தமக்குப் பிறப்பித்தது –
உயர்நலம் உடையவன் எவன் அவன் -ஞான ஆனந்த ஏக ஸ்வ ஸ்வரூபனான ஸர்வேஸ்வரன் திருவடிகளிலே
ஆஸ்ரயித்த ஸ்ரீ வைஷ்ணவர்களுடன் ஸஹ வாஸம் தான் வேணுமோ
அவர்களுடைய சேஷத்வத்திலே முடிந்த நிலமாக அமையும் என்கிறாள்

உயர் நலம் யுடையனாவது –
தமர்கள் கூட்ட வல்வினையை நாசம் செய்யும் சதிரை இறே நலமுடையன் என்றது –
சதிர் மூர்த்தி
ஸுர்ய வீர்ய பராக்கிரமமான விக்ரஹத்தையே சதிர் மூர்த்தி என்கிறது
விரோதி நிரசனத்தால் வந்த ஸ்வாமித்வம் சொன்னபடி –

தமர்கள் கூட்ட வல்வினையை
தமர்களுடைய கூட்டமான வலிய வினையை -திரண்ட வலிய பாபங்களை
நசிப்பிக்கும் -நாசம் செய்யும் -என்னவுமாம்
தமர்களுடைய கூட்டமான வினை நசிக்கும் என்னவுமாம்

அன்றிக்கே
தமர்கள் வினையைக் கூட்டக் கூட்ட அவற்றை நசிப்பிக்கும் என்னவுமாம்
இவனுக்கு கூட்டுகையே ஸ்வ பாவம் ஆனால் போலே அவனுக்கும் கழிக்கையே யாத்ரையாய் இருக்கிற படி

சதிர் மூர்த்தி
விரோதி போக்குகைக்கு ஏகாந்தமான பல வடிவுகளையும் கொள்ளா நிற்கும்
இவர்கள் கைங்கர்யத்துக்குப் பல வடிவு கொள்ளுமா போலே யாயிற்று
அவனும் ரக்ஷணார்த்தமாக பல வடிவு கொள்ளும் படி –

இப்படி யுமைக்கு அறிகைக்கு ஹேது என் என்ன -மயர்வற மதிநலம் அருளினன்
அவன் தந்த பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே விசதமாக வந்து கண்டு கொண்டேன்
அவனது ஆஸ்ரித பக்ஷ பாதத்தை

அமர் கொள் ஆழி சங்கு வாள் வில் தண்டாதி பல்படையன்
குமரன்
விரோதி நிரசனத்துக்கு உறுப்பாக யுத்த உன்முகமான திருவாழி தொடக்கமான
திவ்ய ஆயுதத்தை யுடையவன்

இப்படி சங்கு சக்ர கதா தரனானவன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி யாய் –
அஸ்தானே பய சங்கிகளாய் அத்ருப்த அம்ருத போகரானவர்களை
சந்த அனு விருத்தி கொள்ளுகிற குமரன் -யுவாவாய் இருக்கும்

கோல வைங்கணை வேள் தாதை
பஞ்ச பாணனான காமனுக்கு உத்பாதகன் ஆனவன்
அழகுக்கு அவனுக்கு மேல் இல்லாதவன் என்று இருக்கும் காமனுக்கும் அழகுக்கு
உத்பத்தி ஸ்தானமாய் இருக்கை

கோதில் அடியார் தம் தமர்கள் தமர்கள் தமர்களாம்
அப்பருவத்துக்கும் அழகுக்கும் தோற்றுத் -துயர் அறு சுடர் அடி தொழுது –
அதுக்குத் தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய அடிமையில் முடிந்த நிலமாக வேணும் என்கிறார் –

சதிரே வாய்க்க
இந்த நிரதிசய புருஷார்த்தம் என்றும் ஓக்க வாய்க்க வேணும்

தமியேற்கே–
என் மனனே பூத காலத்திலும் ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வானைத் தேடிப்பிடிக்க வேண்டுகையாலே
வர்த்தமான காலத்திலும் தமக்கு உபமானம் இன்றிக்கே இருக்கை

கீழே நங்கட்கு என்றார் –
கேசவன் தமருக்குப் பின்பு தனியர் இல்லாமையாலே

இங்கு தமியேற்கு என்கிறார் –
சம்சாரிகளில் தமக்கு உபமானவர் இல்லாமையாலும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் தமக்கு ஸ்வாமியாகையாலும் தமியேன் என்கிறார் –

——–———-——–——–————————————

எட்டாவது பத்து விவரணம் முற்றிற்று

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை திருவடிகளே சரணமஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading