ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 2 (ஸ்வாமி கூரத்தாழ்வான் அருளியது)
பக்தி ப்ரபாவ பவதத்புத பாவபந்த
ஸந்துக்ஷித ப்ரணயஸார ரஸௌக பூர்ண: |
வேதார்த்த ரத்ன நிதிரச்யுத திவ்ய தாம
ஜீயாத் பராங்குச பயோதிர ஸீம பூமா ||
“பக்தியின் கனத்தால் உண்டாகிய ஆச்சர்யமான அபிப்ராய விசேஷங்களினால் வளர்க்கப் பட்ட
சிறந்த ப்ரணயம் ஆகிற தீர்த்த பிரவாஹத்தாலே நவரச சமூஹத்தாலே நிறைந்ததாயும் –
வேதப் பொருள் ஆகிற நவ ரத்னங்களுக்கு நிதியாயும் ஸ்ரீ எம்பெருமானுக்கு திவ்யமான அளவில்லாத
பெருமையை யுடைதாயும் இருக்கிற ஸ்ரீ நம்மாழ்வார் ஆகிற கடல் நெடுநாள் வாழ வேணும்”
————-
ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய : கவிதார்க்கிக கேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோமே ஸந்நிதத்தாம் ஸதாஹ்ருதி ||
ஸ்ரீ உபகார சங்க்ரஹம்- சில்லரை ரஹஸ்யம்–
இப்படி நம்முடைய அபேஷா நிரபேஷ முகமாகத்
தன்னுடைய புத்தி அதீனமான சஹகாரி விசேஷ ஸஹித சம்பந்த குண விசேஷங்களாலே
(குடல் துவக்கு பிராப்தி உண்டே அனைவருக்கும் -தான் அறிந்த சம்பந்தமே ஹேதுவாக
சம்பந்தம் மட்டும் இருந்தால் போதாதே
ஞான சக்தி போன்ற குணங்களும் வேண்டுமே )
முன்பு (மயர்வற மதி நலம் அருளுவதற்கு முன்பு )
சர்வேஸ்வரன் பண்ணின உபகார பரம்பரைகளை முன்னிட்டுக் கொண்டு
மேல் தேச கால பரிச்சேதம் இல்லாத திவ்ய கைங்கர்யம் பர்யந்தமாக அபேக்ஷிக்கை
முமுஷுவுக்கு பிராப்தம் ஆகையால்
அயர்வறும் அமரர்கள் அதிபதியான திருமாலால் மயர்வற மதிநலம் பெறும்படி அருளப்பட்ட நம்மாழ்வார்
தம்முடைய அனுபவ பரிவாஹங்களான பிரபந்தங்கள் நாலில்
முதல் பிரபந்தமாய்
இவர் தம் வ்ருத்தாந்தங்களை முன்னிடுகையாலே
திருவிருத்தம் என்ற பேர் பெற்ற பிரபந்தத்தில்
முதல் பாட்டில்
பூர்வ உபகார ஸ்ம்ருதியை முன்னிட்டுக் கொண்டு
உத்தர உபகார அபேக்ஷையிலே உபக்ரமிக்கிறார் –
(உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் –
இனி ஒன்னும் மாயம் செய்யேல் )
————-
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந்நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே –1
பாசுரம் -1-பொய் நின்ற ஞானமும் -தாமான நிலையில் அருளியது -ஒழிவில் காலம் -3-3-
பதவுரை
உயிர் அளிப்பவன்–எல்லாப் பிராணிகளையும் ரக்ஷித்தருள்வதற்காக
நின்ற யோனியும் ஆய்–பலவகைப்பட்ட பிறப்புகளையுடையனால்
பிறந்தாய்–திருவவதரித்தவனே!
இமையோர் தலைவா–தேவர்களுக்குத் தலைவனே!
பொய் நின்ற ஞானமும்–பொய்ம்மை நிலைபெற்ற அறிவும்
பொல்லா ஒழுக்கமும்–தீய நடத்தையும்
அழுக்கு உடம்பும்–அசுத்தங்களோடு கூடின சரீரமும்
(ஆகிய இவற்றோடு கூடி)
இ நின்ற நீர்மை–இவ்வண்ணமான இயல்வை (பிறப்புத் துன்பத்தை)
இனி யாம் உறாமை இனிமேல் நாங்கள் அடையாதபடி
அடியேன் செய்யும் மெய் விண்ணப்பம்–(உனது) அடியனாகிய யான் சொல்லும் உண்மையான விஜ்ஞாபகத்தை
நின்று கேட்டருளாய்–நின்று நீ கேட்டருள வேணும்.
எம்பெருமானை சாஷாத்கரித்த ஆழ்வார்-த்வத் பகவத் விரோதியான பிரகிருதி சம்பந்தத்தை அறுத்து அருள வேணும் என்று-
தம்முடைய அபி லஷிதத்தை விஞ்ஞாபிக்கிறார் –
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்புமாவது
சம்சார மூலமான
பிராந்தி ஞானமும் –
அது அடியாக வந்த
பிரதிகூல அனுஷ்டானமும் –
அது அடியாக வந்த
ரஜஸ் தமஸ் பிரசுரமான பிராகிருத தேகமும் –
(பஞ்ச பூதம் ஸ்தூலம் போன்ற தாழ்ச்சிகளும் உண்டே )
இவை
மற்றும் உள்ள ஹேயங்களுக்கு எல்லாம் உப லக்ஷணம் –
இங்கே அநுக்த சமுச்சயமும் (சொல்லாத அனைத்து தோஷங்களும் ) கொள்ளவுமாம் –
பொய் நின்ற ஞானம் என்றது –
நஸ்வரம் ஆகையால் பொய் என்னலாம் படி நிற்கிற
அபோக்யமான விஷயத்தில் கரண யாயத்தத்தால் பிறக்கிற போக்யதா புத்தி ஆகவுமாம்
அநாதி காலம் பரம புருஷார்த்தத்தை இழந்து
சம்சாரத்தில் அகப்பட்டுக் கிடந்த இதில் அநு தாபம் தோற்றும் படி(நீர்மை )
இந்நின்ற நீர்மை –
இப்படி நின்ற பிரகாரத்தை
இனி யாம் உறாமை
சர்வ லோக சரண்யனாய் –
சரணாகத வத்சலனான உன் திறத்தில்
பிரதி புத்தரான நாங்கள்
இதற்கு மேல் இப் பிரதிகூல பரம்பரைகளை அடையாதபடி
(தேவரீர் போக்க வல்லவர் என்று அறிந்த யாம் -என்றபடி )
யாம் -என்கிற இது –
பரித்ராணாயா சாதூனாம் -என்கிற சாது பஹுத்வத்தைக் காட்டுகிறது
பசு மனுஷ்யா பஷி வா யே ச வைஷ்ணவ ஸம்ஸ்ரய -இத்யாதிகள் படியே
சம்பந்திகளையும் கூடக் காட்டுகிறதாகவுமாம்
(பிள்ளை லோகாச்சார்யார் நம்பிள்ளை திருக்கை ஸ்பர்சத்தாலே
மரங்களும் பேறு பெற்றனவே )
உயிர் அளிப்பான் –
உனக்கு அநந்யார்ஹ சேஷமாய் வைத்து –
அசத் கல்பமாய்க் கிடந்த ஆத்ம ஸ்வரூபத்தை –
தாச பூதோஹம் -என்கிறபடியை
நித்தியமாக அனுபவிக்கப பண்ணுவான்
என் நின்ற யோனியுமாய் பிறந்தாய்
தேவ திரியக் மனுஷ்ய ஸ்தாவரங்கள் -என்கிற எல்லா பிரகாரத்தாலும்
பிராமண சித்தங்களாய் நின்ற பூத ஜாதகங்கள் நாலிலும்
பிறப்பிலியாய் பல் பிறவிப பெரு மாயன் –
அவற்றோடு சஜாதீயன் என்னலாம் படி ஸ்ரீ ஜென்ம ரகஸ்யத்தின் படியே
சத்தியமாய் –
(அவதாரஸ்ய ஸத்யம் முதலாக –ஆறு விஷயங்கள் தாத்பர்ய சந்திரிகையில் உண்டே )
ஞான சங்கோசாதி தோஷ பிரசங்க ரஹிதமுமாய்
நித்ய நிர்தோஷ சுத்த சத்வமய திவ்ய மங்கள விக்ரக பரிணாம ஆத்மகமுமாய்
(ஆதி அம் சோதி உருவை அங்கே வைத்து இங்கே பிறந்து
பஞ்ச உபநிஷத் சக்தி மயம் இங்கும் )
ஸ்வ இச்சா மாத்தர ஹேதுகமாய்
கர்ம க்ருத கால நியம ரஹிதமாய்
சாது பரித்ராணாதி மாத்ர ப்ரயோஜனமாய்
வ்யூஹ வ்யூஹாந்தர-(பன்னிரண்டு கேசவாதிகள் -மூவருக்கும் நான்கு )
விபவ -விபவாந்தர (முக்கிய ஆவேச அவதாரங்கள் )-ரூபமாயுள்ள அவதார வர்க்கத்தாலே
எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில பல பிறப்பாய்
ஒளி வரு முழு நலம் முதலில கேடில வீடாம்
தெளிதரு நிலைமையது ஒழிவிலன் முழுவதும் இறையோன்
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே –1-3-2-
நிலை வரம்பில் பல பிறப்பாய் ஒளி வரும் முழு நலம்
(ஜாயமானா ஸ்ரேயான் பவதி –பிறக்க பிறக்க ஒளி விஞ்சிய )-என்னும்படி பிறந்தாய் –
இமையோர் தலைவா –
சம்பந்தம் ஒத்து இருக்கச் செய்தே –
கர்ம வசத்தால் நாங்கள் இழந்து கிடக்க
நித்ய ஸூரிகள் நித்ய அனுபவம் பண்ணும்படி
சர்வ சமனான சர்வ ஸ்வாமி யானவனே –
(கர்மத்தால் இழந்த எங்களுக்கு கிருபையால் அவற்றைப் போக்கி அருள வேண்டும் )
மெய் நின்று கேட்டு அருளாய் –
மெய் –
இப்படி ரஷ்ய யோக்யனான என்னுடைய படிகளும்
ரக்ஷண உன்முகனான உன்னுடைய படிகளும்
பிராமண சித்தங்கள் அன்றோ –
அவற்றில் ஓன்று அப்ரமாணங்கள் ஆகில் அன்றோ
உனக்குக் கண் அழிவு சொல்லலாவது என்று தாத்பர்யம்
உன்னுடைய திவ்ய மங்கள விக்ரஹத்துடன் சேவை சாதித்து அருள வேணும் என்றுமாம் –
திரௌபதிக்கு வராமல் புடவை சுரந்தது போலே ஆகாதே
நின்று கேட்டு அருளாய்
அவா அறச் சூழ்ந்தாய் -என்னும்படி
நான் அவா அற்று வீடு பெறும் அளவும் அந்நிய பரனாகாதே
அபி முகனாய்க் கொண்டு கேட்டு அருளாய்
(உகந்து திருச்செவி சாய்த்து அருள வேணும்
மலைக்கு நா வுடைய ஆழ்வார் அருளிச் செய்ய தென்னா தென்னா என்னப் பண்ணுமே
மயங்கி இல்லாமல் கேட்டு அருள வேணும் )
மெய் நின்று என்னவுமாம்
அப்போது நீ அவதரித்தது எல்லாம் ச பிரயோஜனமாம் படி
உன் அவதார விக்ரஹத்தோடே
(அன்று தேர் கடாவிய பெருமாள் கனை கழல் காண்பது ஆசை கொண்டாரே )
ஒரு நாள் காண வாராய் -என்று இருக்கிற எனக்கு பிரகாசித்து நின்று என்கிறது
(ஒரு நாள் காண வாராய்-என்பார்
வந்ததும் நின்று கேட்டு அருளாய் என்பார் )
அங்கன் இன்றிக்கே
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் (8-8-2 )என்னும்படி
என் அழுக்கு உடம்புக்குள்ளே ஜூகுப்ஸை பண்ணாதே
அண்ணியனாய் நின்று என்னவுமாம் –
கேட்டு அருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே-
நீ மயர்வற மதிநலம் அருளுகையாலே
நிருபாதிக தாஸ்யத்தில் நித்ய ப்ரதிஷ்டித புத்தியான நான்
என்னாலே உன்னை இன் கவி பாட ஒருப்பட்ட –
(என் நாவில் இன் கவி யான் ஒருவருக்கும் கொடுக்கிலேன் —
என்னானை என்னப்பன் எம்பெருமான் உளனாகவே –
அன்று என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை இன் தமிழ் பாடிய ஈசனை
ஆழ்வார் மூலமாக பகவான் தன்னையே பாடிக்கொண்டான் பாடுவித்தான் –
ஆழ்வார் மெய்யில் நின்றானே )
நிரபேஷ ஸ்வ தந்த்ரனான உன்னாலே பிரேரிதனாய்க் கொண்டு பண்ணுகிற
விஞ்ஞாபன கைங்கர்யங்கள் ஆகிற
நாலு பிரபந்தங்களையும் திருச் செவி சாற்றி-கேட்டு –
அருளாய்
ஸ்ருதி விஷயங்களான இத்தை –
தொண்டர்க்கு அமுது உண்ணலாம் படி பண்ணி அருள வேண்டும் என்று திரு உள்ளமாம் —
(தர்சனம் பேத ஏவ ச தேவப் பெருமாள் அருளிச் செய்ததை விளக்குகிறார் மேல்
வேதாந்த தேசிகன் என்பதால் பத்து அபேதங்களைக் காட்டி அருளுகிறார்
சாப்தமாகவும் அர்த்தமாகவும் இவை இங்கே உண்டே )
இப் பாட்டில்
1-சுத்த அசுத்த ரூபங்களான அசித்துக்களுடைய பேதமும்
2-சித் அசித் பேதமும்
3-பத்த முமுஷு முக்த நித்ய விபாகத்தை உடையரான ஜீவர்களுடைய அன்யோன்ய பேதமும்
4-ஜீவ ஈஸ்வர பேதமும்
5-ஈஸ்வர ஐக்யமும்(தலைவா ஒருவனே )
6-ஞான ஞாத்ரு பேதமும்
7-சத் அசத் ஞான பேதமும்
8-சத் அசத் அனுஷ்டான பேதமும்
9-சித்த ஸாத்ய உபாய பேதமும்
10-பர அவர புருஷார்த்த பேதமும்
கிடக்கிறபடி
யதாஸ்தானம் சப்தமாகவும்
அர்த்தமாகவும் அனுசந்திப்பது
இங்கு
இமையோர் தலைவா -என்கிற இதிலே –
சேஷியாய் ப்ராப்யமுமான ப்ரஹ்ம ஸ்வரூபமும்
யாம் -என்கிற இதிலே –
சேஷ பூதனாய் -ப்ராப்தாவான -ப்ரத்யக் ஆத்ம ஸ்வரூபமும்
உயிர் அளிப்பான் -என்கிற இதிலே –
நிருபாதிக சேஷ விருத்தி விசேஷ ரூபமான பல ஸ்வரூபமும்
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் -என்கிற இடத்திலே
சேஷ விருத்தி விரோதி ஸ்வரூபமும்
கேட்டு அருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே -என்கிற இதிலே –
விரோதி நிவர்த்தன வியாஜமாய் சோபாதிகமான சாஸ்திரீய சேஷ வ்ருத்தி விசேஷமும்
(வாசா கைங்கர்யம் )
இமையோர் தலைவா -அடியேன் -என்கிற இதிலே –
ப்ராப்யமான ப்ரஹ்ம ஸ்வரூபம் முதலான அர்த்த பஞ்சகத்தினுடைய அனுசந்தானத்திற்கு
அஞ்சுருவாணியான சம்பந்தமும் சுருங்க அனுசந்தேயம் –
(ஸ்வாமி பரன் ப்ராப்யம் உபாயம் விரோதி போக்க சம்பந்தம் ஒவ்வொன்றுக்கும் வேண்டுமே
அவை எல்லாம் இங்கே உண்டே )
ஆகையாலே மேல் அருளிச் செய்யுமது எல்லாம்
இதன் விஸ்தாரம் ஆகிறது –
ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துஸ் ச ப்ரத்யக் ஆத்மனா –
பிரபாத் யுபாயம் பலம் சைவ ததா பிராப்தி விரோதி
ச வதந்தி சகல வேதா சே இதிஹாசா புராணாக –ஹரிதா சம்ஹிதை –
புருஷோத்தம வித்த்யையில் சொன்ன சர்வாதிக்யத்தை யுடையனான ஸ்ரீ யபதி
ஜகத் உபக்ருதி மர்த்யம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5–30–81—
ஜெகதாம் உபகாராய –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6–7–72-இத்யாதிகளில் சொன்ன
தன்னுடைய திவ்ய அவதார பிரகாரத்தை
பஹுனி மே வியதீதானி என்று – தொடங்கி
தான் அறிவித்தபடியே அறிந்தார்க்கு எல்லாம்
அதிகார அனுகுண உபாய பூர்த்தியைப் பண்ணிக் கொடுத்து –
இத் தேகம் விட்டால் இனி ஒரு பிறவி வேண்டாதபடி
ஸ்வ ப்ராப்தியைக் கொடுக்கும் என்கிற இவ் வுபகாரம்
இப் பாட்டுக்கு பிரதான தாத்பர்ய விஷயம் ஆகிறது –
——————————————–——————————————–
அயம் அபி அபர மஹா உபகார கலி தோஷாவில சேதஸாம்
கருணா ஜலாதித யத் ஏஷ தேவா ப்ரத்யாமாச மயா நிஜ உபகாரான்
கருணைக் கடலான எம்பெருமான் தானே -கலி கோலாகலத்தால் பீடிக்கப் பட்ட ஜீவர்களை உஜ்ஜீவிப்பவே
அடியேன் மூலம் இந்த மஹா உபகாரத்தை அவன் உபகார பரம்பரைகளுக்குள் சேர்வித்து அருளினான்
தான் தனக்குத் தன்னாலே தோன்றி தன்னூர் ஒளி யணைக்கும் குணத்தாலும் தன்னைக் கொண்டு
தான் தனக்கு என்று அறியாத தன் குணத்தைத் தன் குணத்தால் தான் சிறையில் தானே கூட்டி
ஊன் மருத்துப புலன் மனம் மானாங்காரங்கள் ஒரு மூலப பிரகிருதி அன்றி நின்ற
நான் தனக்குத் தான் தனக்கு என்ற இசைவு தந்த நாரணனை நான்மறையால் நான் கண்டேனே –
கழியாத கரு வினையில் படிந்த நம்மைக் காலம் இது என்று ஒரு கால் காவல் செய்து
பழியாத நல் வினையில் படித்தார் தாளில் பணிவித்துப பாசங்கள் அடைய நீக்கி
கழியாத செவ்வழியில் துணைவரோடே தொலையாத பேரின்பம் தர மேல் ஏற்றி
அழியாத அருளாழிப் பெருமாள் செய்யும் அந்தமிலா உதவி எல்லாம் அளப்பார் ஆரே
ஸ்ரீ உபகார சங்க்ரஹம் சம்பூர்ணம்
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply