ஸ்ரீ புருஷ ஸூக்தம் – ஸ்ரீ ரிக்வேதம் 10.8.90
ஓம் தச் சம்யோரா வ்ருணீமஹே காதும் யஜ்ஞாய காதும் யஜ்ஞ பதயே தைவீ ஸ்வஸ்தி ரஸ்து ந:
ஸ்வஸ்திர் மானுஷேப்ய: ஊர்த்வம் ஜிகாது பேஷஜம் சன்னோ அஸ்து த்விபதே | சம் சதுஷ்பதே
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
———-
முன் செல்பவன் புருஷன் (புரதி அக்ரே கச்சதி ய:)
அனைத்தையும் தன் சக்தியால் நிரப்புபவன் புருஷன் (பிப்ரதி பூரயதி பலம் ய:)
அனைத்தையும் நிறைத்தும், மறைந்திருப்பவன் புருஷன் (புரி சே’தே ய:)
ஒளிமயமானவன் புருஷன் (புர்+உஷ: )
அழியாத இன்பத்தால் நிறைந்தவன் புருஷன் (புரு+ஷ:)
————
ஓம் ஸஹஸ்ர சீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்
ஸ பூமிம் விச்வதோ வ்ருத்வா அத்ய திஷ்ட்டத் தசாங்குலம் -1-
முதலில் இறைவனின் மகிமை போற்றப்படுகிறது.
இறைவன் ஆயிரக்கணக்கான தலைகள் உடையவர். ஆயிரக் கணக்கான கண்களை உடையவர்.
ஆயிரக் கணக்கான பாதங்களை உடையவர். அவர் பூமியை எங்கும் வியாபித்து, பத்து அங்குலம் ஓங்கி நிற்கிறார்.
(தியான வேளையில் இதய வெளியில்).
“ஆயிரம் சிரங்கள், விழிகள், பாதங்கள்” என்ற வாசகம் ஆயிரம் என்ற எண்ணிக்கையை அல்ல,
அளவிட முடியாமையை, அனந்தத்தைக் குறிக்கிறது. புருஷன் ஒவ்வொரு உயிரின் விழிகளாலும் பார்க்கிறான்,
ஒவ்வொரு உயிரின் பாதங்களாலும் நடக்கிறான் என்பது கருத்து.
உபநிஷதமும், புருஷனே எல்லா உயிர்களின் முகமும் (விஸ்வதோமுக:) என்று கூறுகிறது.
தோள்களாயிரத்தாய்! முடிகளாயிரத்தாய்!
துணைமலர்க் கண்களாயிரத்தாய்!
தாள்களாயிரத்தாய்! பேர்களாயிரத்தாய்
தமியேன் பெரிய அப்பனே
————
புருஷ ஏவேதக்ம் ஸர்வம். யத் பூதம் யச்ச பவ்யம்
உதாம் ருதத் வஸ்யேசான: யதன்னேனாதி ரோஹதி -2-
முன்பு எது இருந்ததோ, எது இனி வரப் போகிறதோ, இப்பொழுது எது காணப் படுகிறதோ எல்லாம் இறைவனே.
மரணமிலா பெரு நிலைக்குத் தலைவராக இருப்பவரும் அவரே. ஏனெனில் அவர் இந்த ஜட வுலகைக் கடந்தவர்,
———-
ஏதாவானஸ்ய மஹிமா அதோ ஜ்யாயாக்ம்ச்ச பூருஷ:
பாதோ(அ)ஸ்ய விச்வா பூதானி த்ரிபாதஸ்யாம்ருதம் திவி -3-
இங்கு காணப்படுவதெல்லாம் இறைவனின் மகிமையே. ஆனால் அந்த இறைவன் இவற்றை விடச் சிறப்பு மிக்கவர்.
தோன்றியவை எல்ல்லம் அவருடைய கால் பங்கு மட்டுமே. அவரது முக்கால் பங்கு அழிவற்ற தான விண்ணில் இருக்கிறது.
————-
த்ரிபாதூர்த்வ உதைத் புருஷ: பாதோ(அ)ஸ்யேஹா(அ)(அ)பவாத் புன:
ததோ விஷ்வங் வ்யக்ராமத் ஸாசனானசனே அபி –4-
முதலாவது படைப்பு:–பரம்பொருளின் முக்கால் பங்கு மேலே விளங்கிகிறது,
எஞ்சிய கால்பங்கு மீண்டும் இந்தப் பிரபஞ்சமாகத் தோன்றியது.
பிறகு அவர் உயிர்கள் மற்றும் ஜடப்பொருள்களில் எல்லாம் ஊடுருவிப் பரந்தார்.
———-
தஸ்மாத் விராடஜாயத விராஜோ அதி பூருஷ: ஸ ஜாதோ
அத்யரிச்யத பச்சாத் பூமி மதோ புர: –5-
முதலாவது படைப்பு:-அந்த ஆதி புருஷனிடமிருந்து பிரம்மாண்டம் உண்டாயிற்று.
பிரம்மாண்டத்தைத் தொடர்ந்து பிரம்மா உண்டாகி எங்கும் வியாபித்தார். பிறகு அவர் பூமியைப் படைத்தார்.
அதன்பிறகு உயிர்களுக்கு உடலைப் படைத்தார்.
————
பிரபஞ்ச சக்திகளான தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான கூட்டுச் செயல்பாடு யக்ஞம்.
இந்தக் கருத்தையே கீதையிலும் (3.10-11) நாம் காண்கிறோம் –
”முன்பு பிரம்மதேவன் வேள்வியுடனே உயிர்க்குலத்தை ஒருமிக்கப் படைத்துச் சொல்லினான்:
“இதனால் பல்குவீர்கள், நீங்கள் விரும்பும் விருப்பங்களையெல்லாம் உங்களுக்கிது கறந்து தரும்.
இதனால் தேவர்களைக் கருதக் கடவீர்; அந்த தேவர் உங்களைக் கருதக் கடவர்.
(இங்ஙனம்) பரஸ்பரமான பாவனை செய்வதனால் உயர்ந்த நலத்தை எய்துவீர்கள்.”
தொடக்கத்தில் புருஷன் ஒருவரே இருக்கிறார். இந்த ஒன்று பலவாக ஆவதே சிருஷ்டி. அதை நிகழ்த்துவது காலம்.
எனவே, காலத்தின் மூன்று பரிமாணங்களான வசந்தம், கோடை, சரத்ருது ஆகியவை முறையே
நெய், விறகு, அவி என்று ஆகி இந்த வேள்வி நிகழ்வதாக மந்திரம் கூறுகிறது.
வேத அழகியலின் படி இந்த மூன்று பருவகாலங்களும் முறையே
இந்திரன், அக்னி, வாயு ஆகிய மூன்று தேவதைகளைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
—-
யத் புருஷேண ஹவிஷா தேவா யஜ்ஞ மதன்வத வஸந்தோ
அஸ்யா ஸீதாஜ்யம் க்ரீஷ்ம இத்ம: சரத்தவி: –6-
இரண்டாம் படைப்பு:-இறைவனை ஆஹுதிப் பொருளாகக் கொண்டு தேவர்கள் செய்த வேள்விக்கு
வசந்த காலம் நெய்யாகவும், கோடைக்காலம் விறகு ஆகவும், சரத்காலம் நைவேத்தியமாகவும் ஆயிற்று.
————
ஸப்தஸ்யாஸன் பரிதய: த்ரி: ஸப்த ஸமித: க்ருதா:
தேவா யத்யஜ்ஞம் தன்வானா: அபத்னன் புருஷம் பசும் -7-
இரண்டாம் படைப்பு:-இந்த வேள்விக்கு பஞ்ச பூதங்கள், இரவு, பகல், ஆகிய ஏழும் பரிதிகள் ஆயின.
இருபத்தொரு தத்துவங்கள் விறகுகள் ஆயின. தேவர்கள் யாகத்தை ஆரம்பித்து,
பிரம்மாவை ஹோமப் பசுவாகக் கட்டினார்கள்,
இதில் மிருகங்களைக் குறிக்க வரும் “பசூ’ன்” என்ற சொல்லுக்கு ஞானம் என்றும் பொருள் கொள்வர்.
பரிகள் (அச்’வா:), பசுக்கள் (காவ:) ஆடுகள் (அஜாவய:) ஆகிய சொற்களுக்கு
குறியீட்டு ரீதியாக பொருள் கூறும் விளக்கங்களும் உண்டு.
———-
தம் யஜ்ஞம் பர்ஹிஷி ப்ரௌக்ஷன் புருஷம் ஜாதமக்ரத:
தேன தேவா அயஜந்த ஸாத்யா ரிஷயச்ச யே –8-
வேள்வி தொடங்குகிறது:-முதலில் உண்டான அந்த யஜ்ஞ புருஷனான பிரம்மாவின்மீது தண்ணீர் தெளித்தார்கள்.
அதன் பிறகு சாத்தியர்களும் தேவர்களும் ரிஷிகளும் இன்னும் யார் யார் உண்டோ அவர்களும் யாகத்தை நடத்தினார்கள்.
————-
தஸ்மாத் யஜ்ஞாத் ஸர்வஹுத: ஸம்ப்ருதம் ப்ருஷதாஜ்யம்
பசூக்ம்ஸ்தாக்ம்ச் சக்ரே வாயவ்யான் ஆரண்யான் க்ராம்யாச்ச யே -9-
பிரபஞ்ச வேள்வியாகிய அந்த யாகத்திலிருந்து தயிர் கலந்த நெய் உண்டாயிற்று.
பறவைகளையும், மான், புலி போன்ற காட்டு விலங்குகளையும், பசு போன்ற வீட்டு மிருகங்களையும் பிரம்மா படைத்தார்.
———–
தஸ்மாத் யஜ்ஞாத் ஸர்வஹுத: ரிச: ஸாமானி ஜஜ்ஞிரே
சந்தாக்ம்ஸி ஜஜ்ஞிரே தஸ்மாத் யஜுஸ் தஸ்மாத ஜாயத –10-
பிரபஞ்ச வேள்வியாகிய அந்த யாகத்திலிருந்து ரிக் வேத மந்திரங்களும், சாம வேத மந்திரங்களும்,
காயத்ரீ முதலான சந்தஸ்களும் உண்டாயின. அதிலிருந்தே யஜுர் வேதம் உண்டாயிற்று.
—————
தஸ்மாத்ச்வா அஜாயந்த யே கே சோபயாதத: காவோ ஹ
ஜஜ்ஞிரே தஸ்மாத் த்ஸ்மாஜ்ஜாதா அஜாவய: –11-
அதிலிருந்தே குதிரைகளும், இருவரிசைப் பற்கள் உடைய மிருகங்களும், பசுக்களும், வெள்ளாடுகளும், செம்மறியாடுகளும் தோன்றின.
————–
யத் புருஷம் வ்யதது: கதிதா வ்யகல்பயன் முகம் கிமஸ்ய
கௌ பாஹூ காவூரு பாதா வுச்யேதே –12–
ப்ரம்மாவை தேவர்கள் பலியிட்ட போது அவரை எந்தெந்த வடிவாக ஆக்கினார்கள்? அவரது முகம் எதுவாக ஆயிற்று ?
கைகளாக எது சொல்லப்படுகிறது ? தொடைகளாகவும் பாதங்களாகவும் எது கூறப் படுகிறது ?
————-
ப்ராஹ்மணோ(அ)ஸ்ய முகமாஸீத் பாஹூ ராஜன்ய: க்ருத:
ஊரூ ததஸ்ய யத்வைச்ய: பத்ப்யாக்ம் சூத்ரோ அஜாயத –13-
அவரது முகம் ப்ராமணனாக ஆயிற்று. கைகள் க்ஷத்ரியனாக ஆயின. தொடைகள் வைசியனாக ஆயின.
அவரது பாதங்களிலிருந்து சூத்திரன் தோன்றினான்.
———–
சந்த்ரமா மனஸோ ஜாத: சக்ஷோ: ஸூர்யோ அஜாயத
முகாதிந்த்ரச் சாக்னிச்ச ப்ராணாத் வாயுரஜாயத –14-
மனத்திலிருந்து சந்திரன் தோன்றினான். கண்ணிலிருந்து சூரியன் தோன்றினான்.
முகத்திலிருந்து இந்திரனும் அக்கினியும் தோன்றினர். பிராணனிலிருந்து வாயு உண்டாயிற்று.
————-
நாப்யா ஆஸீதந்தரிக்ஷம் சீர்ஷ்ணோ த்யௌ: ஸமவர்த்தத
பத்ப்யாம் பூமி திச: ச்ரோத்ராத் ததா லோகாக்ம் அகல்பயன் –15-
தொப்புளிலிருந்து வானவெளி தோன்றியது. தலையிலிருந்து சொர்க்கம் தோன்றியது.
பாதங்களிலிருந்து பூமியும் காதிலிருந்து திசைகளும் தோன்றின. அவ்வாறே எல்லா உலகங்களும் உருவாக்கப் பட்டன.
————
வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம்
ஆதித்ய வர்ணம் வர்ணம் தமஸஸ்து பாரே
ஸர்வாணி ரூபாணி விசித்ய தீர: நாமானி
க்ருத்வா(அ)பிவதன் யதாஸ்தே –16-
எல்லா உருவங்களையும் தோற்றுவித்து, பெயர்களையும் அமைத்து, எந்த இறைவன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறாரோ,
மகிமை பொருந்தியவரும் சூரியனைப் போல் ஒளிர்பவரும் இருளுக்கு அப்பாற்பட்டவருமான அந்த இறைவனை நாம் அறிவேன்.
—————
தாதா புரஸ்தாத்யமுதா ஜஹார சக்ர: ப்ரவித்வான்
ப்ரதிசச் சதஸ்ர: தமேவம் வித்வானம்ருத இஹ பவதி
நான்ய: பந்தா அயனாய வித்யதே –17-
அப்படி அந்த இறைவனை அறிவதால், அடைவதால் என்ன கிடைக்கும் ?
எந்த இறைவனை பிரம்மா ஆதியில் பரமாத்மா என்று கண்டு கூறினாரோ, இந்திரன் நான்கு திசைகளிலும் எங்கும்
நன்றாகக் கண்டானோ அவரை இவ்வாறு அறிபவன் இங்கேயே அதாவது இந்தப் பிறவியிலேயே முக்தனாக ஆகிறான்.
மோட்சத்திற்கு வேறு வழியே இல்லை.
———-
யஜ்ஞேன யஜ்ஞ மயஜந்த தேவா: தானி தர்மாணி ப்ரதமான்யாஸன்
தே ஹ நாகம் மஹிமா: ஸசந்தே யத்ர பூர்வே ஸாத்யா: ஸந்தி தேவா: 18
தேவர்கள் இந்த வேள்வியால் இறைவனை வழிபட்டார்கள். அவை முதன்மையான தர்மங்கள் ஆயின.
எங்கே ஆரம்பத்தில் வேள்வியால் இறைவனை வழிபட்ட சாத்தியர்களும் தேவர்களும் இருக்கிறார்களோ,
தர்மங்களைக் கடைப்பிடிக்கின்ற மகான்கள் அந்த மேலான உலகை அடிவார்கள்.
————-
இதுவரை கண்ட 18 மந்திரங்களுடன் புருஷஸூக்தம் நிறைவு பெறுகின்றது.
ஆனால் தென்னாட்டில் பொதுவாக இத்துடன் உத்தர நாராயணம், நாராயண ஸூக்தம்,
விஷ்ணு ஸூக்தத்தின் முதல் மந்திரம் இவற்றுடன் சேர்த்தே பாராயணம் செய்கிறார்கள்.
அவை பின்வருமாறு:
—
அத்ப்ய: ஸம்பூத: ப்ருதிவ்யை ரஸாச்ச விச்வ கர்மண: ஸமவர்த்ததாதி
தஸ்ய த்வஷ்ட்டா விததத் ரூபமேதி தத் புருஷஸ்ய விச்வமாஜானமக்ரே — 19
தண்ணீரிலிருந்தும் சாரமான அம்சத்திலிருந்தும் பிரபஞ்சம் உண்டாயிற்று. பிரபஞ்சத்தை உருவாக்கிய இறைவனிடமிருந்து
சிறந்தவரான பிரம்மா தோன்றினார். இறைவன் அந்த பிரம்மாவின் (பதினான்கு உலகங்களும் நிறைந்ததான)
உருவை உருவாக்கி அதில் வியாபித்திருக்கிறார். பிரம்மாவின் இந்தப் பிரபஞ்ச வடிவம் படைப்பின் தொடக்கத்தில் உண்டாயிற்று.
———
வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸ: பரஸ்தாத்
த்மேவம் வித்வானம்ருத இஹ பவதி நான்ய: பந்தா வித்யதே(அ)யனாய — 20
மகிமை பொருந்தியவரும், சூரியனைப் போல் ஒளிர்பவரும், இருளுக்கு அப்பாலும் இருப்பவருமாகிய
இந்த இறைவனை நான் அறிவேன். அவரை இவ்வாறு அறிபவன் இங்கே இந்தப் பிறவியிலேயே முக்தனாக ஆகிறான்,
முக்திக்கு வேறு வழி இல்லை.
———-
ப்ரஜாபதிச்சரதி கர்பே அந்த: அஜாயமானோ பஹுதா விஜாயதே
தஸ்ய தீரா: பரிஜானந்தி யோனிம் மரீசீனாம் பதமிச்சந்தி வேதஸ: –21-
ஒருவன் ஏன் இறையனுபூதியை நாட வேண்டும் ?
இறைவன் பிரபஞ்சத்தில் செயல்படுகிறார். பிறக்காதவராக இருந்தும் அவர் பல்வேறு வடிவங்களில் தோன்றுகிறார்.
அவரது உண்மையான வடிவத்தை மகான்கள் நன்றாக அறிகிறார்கள்.
பிரம்மா போன்றவர்கள் கூட மரீசி முதலிய மகான்களின் பதவியை விரும்புகிறார்கள்.
———-
யோ தேவேப்ய ஆதபதி யோ தேவானாம் புரோஹித: பூர்வோ
யோ தேவேப்யோ ஜாத: நமோ ருசாய ப்ராஹ்மயே –22-
யார் தேவர்களிடம் தேஜஸாக விளங்குகிறாரோ, தேவர்களின் குருவாக இருக்கிறாரோ,
தேவர்களுக்கு முன்பே தோன்றியவரோ அந்த ஒளிமயமான பரம்பொருளுக்கு நமஸ்காரம்.
——–
ருசம் ப்ராஹ்மம் ஜனயந்த: தேவா அக்ரே ததப்ருவன்
யஸ்த்வைவம் ப்ராஹ்மணோ வித்யாத் தஸ்ய தேவா அஸன் வசே –23-
பரம் பொருளைப் பற்றிய உண்மைகளை அளிக்கும் போது தேவர்கள் ஆதியில் அதைப் பற்றி
“ யாராக இருந்தாலும் பரம்பொருளை நாடுபவன் இவ்வாறு அறிவானானால் அவனுக்கு தேவர்கள் வசமாக இருப்பார்கள்“
என்று கூறினார்கள்.
———
ஹ்ரீச்ச தே லக்ஷ்மீச்ச பத்ன்யௌ அஹோராத்ரே பார்ச்வே
நக்ஷத்ராணி ரூபம் அச்வினௌ வ்யாத்தம் –24-
நாணத்தின் தலைவியாகிய ஹ்ரீ தேவியும், செல்வத்தின் தலைவி யாகிய லட்சுமி தேவியும் உமது மனைவியர்.
பகலும் இரவும் உமது பக்கங்கள். நட்சத்திரங்கள் உமது திருவுருவம். அசுவினி தேவர்கள் உமது மலர்ந்த திருவாய்.
———–
இஷ்ட்டம் மனிஷாண அமும் மனிஷாண ஸர்வம் மனிஷாண –25-
எம்பெருமானே நாங்கள் விரும்புவதைக் கொடுத்தருள்வாய். இவ்வுலக இன்பத்தைக் கொடுத்தருள்வாய்.
இகத்திலும் பரத்திலும் அனைத்தையும் தந்தருள்வாய்.
——–
ஓம் தச்சம்யோரா வ்ருணீமஹே காதும் யஜ்ஞாய காதும் யஜ்ஞ பதயே தைவீ ஸ்வஸ்தி ரஸ்து ந:
ஸ்வஸ்திர் மானுஷேப்ய: ஊர்த்வம் ஜிகாது பேஷஜம் சன்னோ அஸ்து த்விபதே | சம் சதுஷ்பதே
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
——–————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply