ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்
அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –
பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–
—————————————————————-
சாதனா அத்யாயம்–55 அதிகரணங்கள்–181 ஸூத்ரங்கள்
————————————————————-
முதல் பாதம் -வைராக்ய பாதம்-ஜீவனுக்கு உள்ள தோஷங்களை விளக்கி –
இவை இல்லாத ப்ரஹ்மத்தை அடைய வைராக்கியம் ஏற்பட இவை முதலில் கூறப்படுகின்றன –
6 அதிகரணங்கள்-27-ஸூத்ரங்கள்-
——————————————————————-
முதல் இரண்டு அத்யாயங்களால்
குத்ருஷ்டிகளின் கோணல் யுக்திகளால் அசைக்க ஒண்ணாத ஸமஸ்த ஜகத் ஏக காரணத்வத்துடன்
அகில ஹேய ப்ரத்ய நீகனாய் -ஸித்த வஸ்துவாய் உள்ள பரம புருஷனான ஸ்ரீயப்பதியை விசாரித்து
பின் இரண்டு அத்யாயங்களாலே
சேதனன் செய்யத்தக்க பரம புருஷன் திருவடிகள் விஷயத்தில் பக்தி பிரபத்தி என்ற ஸாத்ய உபாயங்களையும்
அதன் பலமான பரம புருஷ பரிபூர்ண அனுபவ ஜெனித கைங்கர்யங்களையும் விசாரிக்கிறார்
என்று த்விக சங்கதி
மூன்றாம் அத்யாயம் மூன்றாம் பாதத்தில் விசாரிக்கப் போகும் ஸாத்ய உபாய ரூபமான பக்திக்கு
அதிகாரம் ஸித்திக்க வேண்டி
ஐஸ்வர்யம் கைவல்யம் முதலியவற்றில் வைராக்யம் தோன்றக் காரணமான ஸம்ஸார தோஷத்தை
முதல் பாதத்தில் விவரிக்கிறார் என்று சங்கதி –
இம் மூன்றாம் அத்யாயம் முதல் இரண்டு பாதங்களால்
வைராக்கியமும்
உபய லிங்கமும் -அகில ஹேய ப்ரத்ய நீகத்வமும் -ஸமஸ்த கல்யாண குண கரத்வமும்
பின் இரு பாதங்களாலே
அங்க ஸஹிதமான ப்ரஹ்ம வித்யையையும் பற்றி
ஸூத்ரகாரர் காட்டி அருளுகிறார் –
முதல் வைராக்ய பாதத்தில்
ஐஸ்வர்யாதிகளில் வைராக்யம் உண்டாகும் பிரகாரத்தைக் காட்டுகிறார் என்று த்விக சங்கதி
———–
இங்கு ஒருவர் கேட்க்கிறார் -முக்தி நம்மால் சாதிக்கக் கூடியதா அன்றா –
சாதிக்க முடியாது என்றால் சாதன அத்யாயத்துக்குப் பலனே இல்லையே –
அதை ஆரம்பிப்பதே வீணாகுமே
சாதிக்கத் தக்கதே என்றால் ஸ்வர்க்காதிகள் போல் அதுவும் அழிவுள்ளதாகும் –
ஆகையால் முக்தியை நித்யை என்று கூற முடியாதே
இந்த விஷயத்தில் என்ன வழி என்று கேட்க்கிறார்
அதுக்கு விடை -ப்ரஹ்ம அனுபவம் முன்பு இல்லாததே -உபாஸகனாலே சாதிக்கப்படுவது –
ஆதலின் முக்கியர்த்தம் சாதன அத்யாயம் தொடங்குவதில் தவறு இல்லை –
முக்தி அந்த்யமாகுமோ என்னில்
அபாவம் என்பதும் ஒரு பாவமே என்பது நம் சித்தாந்தம் -பாவாந்தர அபாவ பக்ஷம் –
சம்சாரத்தில் ஞான சங்கோச தசைக்கு த்வம்சமே அழிவே முக்தி -விஸிஷ்ட ப்ரஹ்ம அனுபவமே முக்தி
தார்க்கிகர் மதத்தின் படி த்வம்சத்துக்குத் தொடக்கம் பூர்வ அவதி உண்டாம் -முடிவு உத்தர அவதி இல்லை –
ஆதலின் நித்யத்வம் ஸித்தமாகிறது –
ஆனால் கர்ம வசத்தால் ஞான ஸங்கோசம் விலகவே ஸ்வரூப ஆவிர்பாவம் -மலர்ச்சி -ஏற்பட்டு
நச புநராவர்த்ததே -என்று கூறிய நித்யத்வமும் -ஸ சா நந்த்யாய கல்பதே-என்று
முக்தி தசையில் வரக் கூடும் ஞான வியாப்தியைக் கூறும் ஸ்ருதியால் நேரில் கூறப்பட்டது
எனவே இந்த சாதன அத்யாயம் ஆரம்பத்தில் தவறு இல்லையே என்பர் ஸ்வாமி தேசிகன் –
———-
முதல் அதிகரணம் -ததந்திர பிரதிபத்த்ய அதிகரணம் -7 ஸூத்ரங்கள் –
ஜீவன் இந்த உடலை விட்டு கிளம்பும் பொழுது
பஞ்ச பூதங்களுடன் கூடிய சூஷ்ம ரூபத்துடன் செல்வதை சாந்தோக்யம் -கருத்து நிரூபிக்கப்படுகிறது –
இரண்டாவது அதிகரணம் –க்ருதாத்ய யாதிகரணம்–4 ஸூத்ரங்கள்-
அனுபவிக்க வேண்டிய எஞ்சிய கர்ம பலன்களுடன் ஸ்வர்க்கத்தில் இருந்து ஜீவன் வருகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது-
மூன்றாம் அதிகரணம் –அநிஷ்டாதிகார்யாதிகரணம்-10- ஸூத்ரங்கள்–
பாபம் செய்தவர்கள் சந்திர மண்டலம் செல்வது இல்லை என்பது நிரூபிக்கப் படுகிறது-
நான்காவது அதிகரணம் –தத் ஸ்வா பாவ்யாபத்த்யதிகரணம் – 1 ஸூத்ரம்-
மேலே கிளம்பிய ஜீவன் ஆகாசம் போன்றவற்றுடன் தொடர்பு மட்டுமே அடைகின்றான் என்று நிரூபிக்கப் படுகிறது
ஐந்தாம் அதிகரணம் -நாதிசிராதி கரணம்- 1 ஸூத்ரம்-
ஆகாசம் போன்றவற்றில் ஜீவன் சிறிது காலமே தங்கி விட்டுக் கிளம்புகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –
ஆறாவது அதிகரணம் -அந்யா திஷ்டிதாதி கரணம் -4-ஸூத்ரங்கள்–
மற்ற ஜீவன்களுடன் தொடர்பு மட்டும் கொள்கின்றான் என்கிறதாயிற்று-
—————————————————————————————————————————
முதல் அதிகரணம் -ததந்திர பிரதிபத்த்ய அதிகரணம் –
ஜீவன் இந்த உடலை விட்டு கிளம்பும் பொழுது பஞ்ச பூதங்களுடன் கூடிய
ஸூஷ்ம ரூபத்துடன் செல்வதை சாந்தோக்யம் -கருத்து நிரூபிக்கப்படுகிறது –
இந்த தேஹியானவன் இந்த மனித சரீரத்தை விட்டு வேறு சரீரத்தை அடையும் பொழுது
சரீர கரணங்களான பூத ஸூஷ்மங்களுடன் சேர்ந்து செல்கிறானா –
அல்லது தனியே செல்கிறானா என்ற சம்சயம்
கூடப் போவது இல்லை என்று பூர்வ பக்ஷம்
போகும் இடங்களில் பூத ஸூஷ்மங்கள் ஸூலபமுமாய் இருப்பதாலே உடன் கொண்டு செல்வது இல்லை
என்று பூர்வ பக்ஷம்
இத்தை நிரசிக்கிறார்
284-ததந்திர ப்ரதிபத்தௌ ரம்ஹதி சம்பரிஷ்வக்த ப்ரசன நிரூபணாப்யாம்-3-1-1-
ஜாக்ரத் -விழிப்பு நிலை /ஸ்வப்னம் -கனவு நிலை /ஸூஷுப்தி -தூக்க நிலை /மூர்ச்சை -மயக்க நிலை
பூத ஸூஷ்மங்களுடன் சேர்ந்தே செல்வதை நிரூபிக்கிறார்-
2-4-17-சம்ஜ்ஞா மூர்த்திக் லுப்தி -பெயர் ரூபம் மாறுதல் -பற்றி சொல்லி
மூர்த்தி பதம் உடலைக் குறிக்கும் அதையே இங்கே தத் பதம் சொல்லும்
முன் அதிகரணத்தில் ஸம்ஜ்ஞா மூர்த்தி க்லுப்தி -ஸூத்ரத்தில் உள்ள
மூர்த்தி சப்தத்துக்குப் பொருளான சரீரத்தை இங்கு தத் சப்தத்தால் காட்டுகிறது –
ததந்திர ப்ரதிபத்தௌ -மற்று ஒரு உடலை அடையும் பொழுது
சம்பரிஷ்வக்த -முன் தேகத்தில் கடைந்து எடுத்த பூத ஸூஷ்மங்களுடன் இணைந்து
ரம்ஹதி -செல்கிறான்
ப்ரசன நிரூபணாப்யாம் -கேள்வி பதில்களால் அவ்வாறே தோன்றுகிறது
சாந்தோக்யம் பஞ்சாக்னி வித்யையில் உள்ளவை கொண்டு நிரூபணம்-
ஆருணி என்பவரின் பிள்ளை ஸ்வேதகேது-என்பவன் பாஞ்சால தேசம் சென்று ப்ரவாஹணன் அரசன் இடம்
1-யாகம் முதலானவற்றை இயற்றினவர்கள் உயிர் பிரிந்த பின்பு எங்கு செல்கின்றனர்
2-மீண்டும் எந்த பாதையில் உலகிற்கு வருகின்றார்கள்
3-தேவ யானம் பித்ரு யானம் வழி களின் வேறுபாடு
4-ஸ்வர்க்க லோகத்தை அடையாதவர்கள் யார்
5- கேள்வியாக சாந்தோக்யம் -5-3-3- வேதத யதா பஞ்சம் யா மாஹூதாவாப் புருஷ வசசோ பவந்தி -என்று
ஐந்தாவது ஆஹூதியாக அளிக்கப் படும் நீர் எனபது எவ்விதம் புருஷன் என்று கூறப்படுகிறது என்று அறிவாயா
இதற்கு -ஸ்வர்க்கம் என்பதையே அக்னியாகக் கொண்டு பதில் உள்ளது –
ஸூரியன் சமித்துக் கட்டை -ஸூர்ய கிரணங்கள் புகை -சந்தரன் தணல் நட்ஷத்ரங்கள் பொறிகள்
சாந்தோக்யம் இதனை தொடர்ந்து –5-4-2-தஸ்மின் ஏ தஸ்மின் அக்னௌ தேவா ஸ்ரத்தாம் ஜூஹ்வதி தஸ்யா ஆஹூதே சோமராஜாபவதி-என்று
ஸ்வர்க்கம் என்னும் அக்னியில் தேவர்கள் -இந்த்ரியங்கள் -அனைத்தும் இணைந்து ஸ்ரத்தை என்னும் நீரை
ஆஹூதியாக அளிக்க சோம ராஜா என்ற பெயருடன் அழகிய உடலை அடைகிறான் என்கிறது
கர்ம பலன்கள் முடிவைந்த நிலையில் பர்ஜன்யம் என்ற அக்னியில் பிராணன்கள் சோமராஜாவை இட
உடல் நீராக மாறி ஜீவனுடன் சேர்ந்து மழை ஆகிறது
அந்த மழையை பூமி என்ற அக்னியில் அதே இந்த்ரியங்கள் இட -ஹோமம் செய்கின்றன என்ற கருத்து –
மழை நீர் நெல் போன்ற உணவாக மாற -அந்த உணவை புருஷன் என்ற அக்னிக்கு அதே இந்த்ரியங்கள் ஹோம திருவ்யமாக இட
புருஷன் இடம் சென்ற அன்னம் ரேதசாக மாறி அந்த விந்துவை இந்த்ரியங்கள் பெண் என்ற அக்னியில் ஆஹூதியாக இட கர்ப்பம் ஆகிறது
சாந்தோக்யம் -5-9-1-இதி து பஞ்சம்யாமாஹூதா வாப புருஷவசசோ பவந்தி –
இப்படியாக ஐந்தாவது ஆஹூதியாக விடப்படும் நீர் -விந்து -புருஷனாக பெயர் அடைகின்றது
புதிய உடல் எடுக்க பூதங்களுடன் ஸூஷ்மமாகவே செல்கின்றான் என்று உணரலாம்
ஆப புருஷ வசஸ -சாந்தோக்யம்-5-9-1-நீரான ரேதஸ் புருஷன் ஆகிறது
பஞ்ச பூதங்களுடன் செல்வதாக சொல்ல முடியுமோ –
இதற்கு பதில் அடுத்த ஸூத்ரம்
——————————————————————————————————————————-
ஆப புருஷ வசஸ-என்னும் இடத்தில் அப் ஸப்தத்தால்
ப்ருத்வீ முதலிய வேறு பூதங்களுக்கும் எப்படி வ்யவஹாரம் ஏற்படும் என்றால்
அந்த சங்கையைப் பரிஹரிக்கிறார்
285-த்ர்யாத்மகத்வாத் து பூயஸ்த்வாத்–3-1-2-
து -சங்கையை நிவர்த்திப்பிக்கிறது -நீர் மட்டும் கொண்டு உடல் உண்டாக வாய்ப்பில்லையே
பூயஸ்த்வாத்–அப் -பெரும் பகுதி யாகையாலே இந்த சப்தத்தால் சொல்லிற்று
தாஸாம் த்ரிவ்ருத்தம் த்ரிவ்ருத்தம் ஏகைகாம் -சாந்தோக்யம் -6-3-3-
நீர் நெருப்பு நிலம் -ஒவ் ஒன்றிலும் மற்ற இரண்டின் பகுதியைச் சேர்த்து உருவாக்குவதே த்ரிவ்ருத்தம் ஆகும்
ஸ்தூல நீர் -பாதி ஸூஷ்ம நீரும் கால் பகுதி ஸூஷ்ம நெருப்பும் கால் பகுதி ஸூஷ்ம நிலமும் சேர்ந்தது ஆகும்-
இவ்விதமே பஞ்சீ கரண ப்ரக்ரியையும் காணத் தக்கது
———————————————————————————————————————————-
286-பிராண கதே ச–3-1-3-
பிராணன்களும்-இந்த்ரியங்களும் -செல்வதால் இந்த்ரியங்களுக்கு ஆதாரமாக உள்ள
பூத ஸூ ஷ்மங்களுடன் ஜீவன் செல்கின்றான்
ப்ருஹத் உபநிஷத் -4-4-2-
தம் உத்க்ராமந்தம் பிராண அநூத்க்ராமாதி பிராணம் அநூத்க்ராமந்தம் சர்வே பரானா அநூத்க்ராமந்தி -என்றும்
ஸ்மர்யதே ச –ஸ்ம்ருதியும் இப்படியே சொல்கிறது என்றவாறு –
ஸ்ரீ கீதை 15-7/8-
மன ஷஷ்டானி இந்த்ரியாணி பிரகிருதி ஸ்தானி கர்ஷதி சரீரம் யத் அவாப் நோதி யத் ச அபி
உக்த்க்ரமாதீச்வர க்ரஹீத்வைதானி சம்யாதி வாயுர் கந்தா நிவாசயாத் – என்று
காற்று மலர்களில் உள்ள நறு மணத்தை கவர்ந்து செல்வது போலே
ஜீவன் அனைத்தையும் எடுத்துச் செல்கிறான்
இவற்றுக்கு ஆஸ்ரயமாக பூத ஸூஷ்மங்களும் கூட செல்கின்றன –
ஸ்தூல சரீரத்தை விட்டுப் போகும் ஜீவனை பிராணன் பின் பற்றுகிறது –
பிராண வாயுவை இந்த்ரிய ஸூஷ் மங்களும் பின் செல்கின்றன -என்றே பொருள் இவற்றுக்கு
————————————————————————————————————————————-
287-அக்னி நயாதி கதி ஸ்ருதே இதி சேத ந பாக்தத்வாத் –3-1-4
மரண காலத்தில் இந்த்ரியங்கள் அக்னியுடன் இணைவதாகக் கூறுவதால்
பிராணன் ஜீவனுடன் செல்வது இல்லை எனபது பூர்வ பஷம்
பிருஹத் உபநிஷத் -5-12-13-யத்ர அஸ்ய புருஷஸ்ய ம்ருதச்ய அக்னிம் வாக் அப்யேதி வாதம் பிராண சஷூராதித்யம் -என்று
இறந்த பின்பு வாக்கு அக்னியிலும் பிராணன் வாயுவிலும் கண்கள் சூரியனிலும் இணைகின்றன
எனவே ஜீவனுடன் இந்த்ரியங்கள் செல்வது இல்லை என்பர்
தம் உத்க்ராமந்தம் சர்வே ப்ராணா உத்க்ராமந்தி -என்று
அந்த அந்த அபிமான தேவதைகள் அவற்றின் மீது தங்கள் தொடர்பை கை விடுகின்றன என்றே கொள்ள வேண்டும்
அதே உபநிஷத்தில் -ஓஷதீர் லோமா நி வனச்பதீன் கேசா –
தலை முடிகள் மரங்களிலும் கைமுடிகள் செடிகளிலும் கலக்கின்றன என்கிறது
அக்னி நயாதி கதி ஸ்ருதே –அக்னி வாயு ஸூர்யன் முதலிய அதிஷ்டான தேவதைகள் இடம் லயம் அடைவதாகச் சொல்வதால்
இந்திரியங்கள் ஜீவனுடன் செல்வதாகச் சொல்லும் சுருதிகள் உபசார வழக்காகவே கொள்ள வேண்டும்
என்னில்
இதி சேத ந -அது தவறு
பாக்தத்வாத் –ஓஷதீர் லோமா நி வனச்பதீன் கேசா –
தலை முடிகள் மரங்களிலும் கைமுடிகள் செடிகளிலும் கலக்கின்றன என்பதால்
அக்னியை வாக்கு அடைகிறது போன்ற வாக்கியங்கள் அமுக்கியமாகவே கொள்ள வேண்டும்
இவற்றுக்கு லயம் என்றால் ரோம கேசாதிகளுக்கும் லயம் ஏற்க நேரிடும்
ஆகவே இந்திரியங்கள் ஜீவனுடன் செல்வத்தைச் சொல்லும் ஸ்ருதிகளே முக்யமாகக் கொள்ள வேண்டும் என்று கருத்து –
ஆக
அந்த அந்த தேவதைகளின் கட்டுப்பாட்டை நீக்கி
ஜீவன் இந்த்ரியங்களுடன் அவற்றின் பூதங்களுடன் செல்கின்றான் –
—————————————————————————————————————————————-
288–ப்ரதமே அஸ்ரவணாத் இதி சேத் ந தா ஏவ ஹி உபபத்தே –3-1-5-
ப்ரதமே -பஞ்சாக்னி வித்யையில் முதலான தேவ லோக ரூபமான அக்னி ஹோமத்திலே
அஸ்ரவணாத் -அப்புக்கள் ஹோமம் செய்யத் தக்கனவாகக் கூறப்படாமையாலே
பிற பூதங்களுடன் சேர்ந்து அப்புக்கள் செல்கின்றன என்பது தகாது
இதி சேத் ந -இது தவறு
சாந்தோக்யம் -5-4-2-தஸ்மின் ஏ தஸ்மின் அக்னௌ தேவா ஸ்ரத்தாம் ஜூஹ்வதி –
தேவ லோகம் –ஸ்ரத்தை நீர் அல்லவே
நீர் என்பதே ஸ்ரத்தை -சோமராஜா -வர்ஷம் -அன்னம் -ரேதஸ் -கர்ப்பம் பல விதமாக மாறும் –
இத்தையே ஏவம் ஆப புருஷவசச தைத்ரீய பிரமாணம் –3-2-4- அப பிரணயதி ஸ்ரத்தா வா ஆப -என்று
அவன் நீரை எடுக்கிறான் -ஸ்ரத்தை என்பதே நீர்
ஜீவன் சோம ராஜாவாக மாறுவது நீரால் தான் என்பதை
சாந்தோக்யம் -5-4-2-ஸ்ரத்தாம் ஜூஹ்வதி தஸ்யா ஆஹூதி சோமோராஜா சம்பவதி -என்று கூறியது
உபபத்தே -விடைக்கு வினாவுடன் பொருத்தமாய் இருப்பதால்
கேள்வியிலும் -நீர் ஐந்தாம் ஆஹுதியில் புருஷன் எனப்படுவதை அறிவீரோ
விடையில் தேவலோகம் என்னும் அக்னியில் பிராணங்கள் ஸ்ரத்தையை ஹோமம் செய்கின்றன என்று கூறுவதால்
ஸ்ரத்தை என்பது அப்பையே குறிக்கும் –
எனவே நீர் முதலான பூத ஸூஷ்மங்களுடன் இணைந்து ஜீவன் கிளம்புகின்றான்
———————————————————————————————————————————————-
289-அஸ்ருத்வாத் இதி சேத் ந இஷ்ட அதிகாரிணாம் பிரதீதே –3-1-6-
இஷ்டம் பூர்த்தம் தானம் -பலனை விரும்பி யாகம் செய்பவர்கள் –
சாந்தோக்யம் -5-10-3-அத ய இம க்ராமே இஷ்டாபூர்த்தா தத்தம் இதி உபாசதே தே தூமம் அபி சம்பவந்தி –
குளம் வெட்டுதல் போன்ற -புண்யம் செய்து மார்க்கம் வழியாக ஸ்வர்க்கம் செல்கிறார்கள் –
இதை முடிக்கும் பொழுது -5-10-4/5-
பித்ரு லோகன் ஆகாசம் ஆகாசாத் சந்த்ரமசம் ஏஷ சோமோராஜா தத் தேவா நாமந்தம் தம் தேவா பஷயந்தி
தஸ்மின் யாவத் சம்பாதம் அத ஏவம் எத அத்வானம் புன நிவர்த்தந்தே
யோ யோ ஹி அந்தமத்தி யோ யோ ரேத சிஞ்சதி தத் பூய ஏவ பவதி-என்று
பித்ரு லோகம் -ஆகாயம் -சந்திர மண்டலம் -சோமராஜா வாகிறான் அங்கு உணவாகிறான்
சாந்தோக்யம் -5-4-2-ஸ்ரத்தாம் ஜூஹ்வதி தஸ்யா ஆஹூதி சோமோராஜா சம்பவதி
இத்தால் ஸ்ரத்தை போன்ற மன நிலையை கொண்டு யாகம் செய்த ஜீவனே
தம் தேவா பஷயந்தி -5-10-4-சோமோ ராஜாவை உண்கிறார்கள் –
அசருத்வாத் – ஆபஸ் புருஷ வசஸோ பவந்தி ஸ்ரத்தாம் ஜூஹ்வதி –என்று
த்யு லோக அக்னியாதிகளிலே அப்பே ஹோமம் செய்வதாகக் கூறப்படுகின்றதே அன்றி
ஜீவன் அவ்வாறு சொல்லப்பட வில்லையே
ஆதலின் பூத ஸூஷ் மங்களுடன் கலந்த ஜீவன் செல்கின்றான் என்பது தவறாகும்
இதி சேத் ந -என்று சொல்வது தவறாகும்
இஷ்ட அதிகாரிணாம் பிரதீதே –இதே ஸ்ருதியில் மேலே
அத ய இம க்ராமே இஷ்டாபூர்த்தா தத்தம் இதி உபாசதே தே தூமம் அபி சம்பவந்தி –என்று தொடங்கி
ஆகாசம் ஆகாசாத் சந்த்ரமசம் ஏஷ சோமோராஜா சம்பவதி -இது போன்ற வாக்யங்களால்
இஷ்டா பூர்த்தங்களை அனுஷ்ட்டிக்கும் ஜீவன்கள் சந்திரன் போலே
அம்ருத மயமான சரீரங்களைப் பெறுகிறார்கள் என்று சொல்வதால்
தேவாஸ் ஸ்ரத்தாம் ஜூஹ்வதி தஸ்யா ஆஹூதி சோமோராஜா சம்பவதி என்று
முதல் வாக்யத்தில் கூறிய சோமராஜன் என்ற ஸப்தத்தின் அடையாளத்தால்
அச் சப்தம் பூத ஸூஷ்ம யுக்தனான ஜீவனையே சொல்கிறது என்று தோன்றுகிறது –
ஜீவனை உண்ண முடியுமா கேள்விக்கு பதில் அடுத்த ஸூத்ரம்
———————————————————————————————————————————————
ஏஷ சோமோ ராஜோ தம் தேவா பஷயந்தி -5-10-4—என்று தூமாதி மார்க்கத்தாலே
ஸ்வர்க்கத்தை அடைந்தவனுக்கு தேவர்களின் உணவு நிலை -பஷ்யத்வம் -சோமோ ராஜாவை உண்கிறார்கள்-என்பது
கூடாமையாலே இஷ்டாதி காரி வாக்யத்தில் ஜீவன் சொல்லப்பட வில்லை
என்ற சங்கையைப் பரிஹரிக்கிறார் இதில் –
290-பாக்தம் வா அநாத்ம வித்த்வாத் ததா ஹி தர்சயதி-3-1-7-
பாக்தம் வா அநாத்ம வித்த்வாத் ததா ஹி தர்சயதி-
இங்கு வா ஸப்தம் சங்கையை விலக்குகிறது
பாக்தம் து -தேவ பஷ்யத்வம் கூறப்படுவது -அமுக்யார்த்தம் -உபசார வழக்கு
அநாத்ம வித்த்வாத் -ஸ்வர்க்காதிகளை உத்தேசித்து யஜ்ஞாதிகளைப் பண்ணும் ஜீவர்கள்
பரமாத்ம வித்துக்கள் அல்லாமையாலே
தேவர்கள் ஏவியதைச் செய்வார்கள் என்னும் அபிப்ராயத்தாலே சொன்னதாம் அத்தனை
ததா ஹி தர்சயதி-அநாத்ம வித்துக்களான த்ரை வர்ணிக்கர் இந்த்ராதிகளை அடைந்து
உபகாரிகளாய் இருப்பர் என்றவாறு
ப்ரஹ்மத்தை பற்றி அறிவில்லாத காரணத்தால் அந்த அதிகாரிகள் தேவர்களுக்கு உணவாகிறார்கள்
வா -என்கிற பதம் இத்தைக் காட்டும்
ப்ருஹத் உபநிஷத் -1-4-10-யதா பசு ஏவம் ச தேவா நாம் –
மனிசர்களுக்கு பசு உணவாவது போலே தேவர்களுக்கு இவர்கள் உணவாகிறார்கள்
இத்தையே ஸ்ரீ கீதை -7-23–தேவான் தேவ யஜோ யாந்தி மத்பக்தா யாந்தி மாம்பி –
ஆக தேவர்களுக்கு பணிவிடை செய்வார்கள் என்ற கருத்து
இதனையே சாந்தோக்யம் -3-6-1-ந வை தேவா அச்நந்தி ந பிபந்தி எதத் ஏவ அம்ருதம் த்ருஷ்ட்வா த்ருப்யந்தி -என்றபடி
தேவர்கள் உண்ணாமல் பருகாமல் –அமிர்தத்தை கண்களால் பார்த்த படி மகிழ்ந்து இருப்பார்கள் மன நிறைவும் அடைவார்கள்
ஆக ஜீவர்கள் பூத ஸூஷ்மங்களுடனே கிளம்புகிறான் என்று நிரூபிக்கப் பட்டது-
இந்த பஞ்ச அக்னி வித்யையில் ப்ரக்ருதியை விட வேறுபட்ட பரிசுத்த ஆத்ம ஸ்வரூபத்தை
ப்ரஹ்மாத்மகமாகவே உபாஸிக்க வேண்டும் என்று கருத்து
இவ் வித்யைக்குப் பலம் ஸ்வ ஆத்ம அனுபவத்துடன் கூடிய பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவம்
மதுவித்யா நிஷ்டனுக்கு வஸூவாதி பத பிராப்தி இடைப்பட்ட பலன் போல் இவனுக்கு ஸ்வ ஆத்ம அனுபவம்
இங்கு ஸ்வாமி தேசிகன் –
தேவ லோகம் -மேகம் -ப்ருத்வீ புருஷன் ஸ்த்ரீ என்று ஐந்து அக்னிகளைக் கல்பித்து
அவற்றில் ஸ்ரத்தை என்னும் பூத ஸூஷ்மம் க்ரமமாக பரிணாமம் அடைந்து
சோமன் மழை அன்னம் ரேதஸ் என்ற ஹவிஸ்ஸை ஜீவனுடன் தேகத்தில் உள்ள ப்ராணன்கள்
ஹோமம் செய்கின்றன -என்பது பஞ்ச அக்னி வித்யை என்று
த்யவ் பர்ஜன்யோ அத ப்ருத்வீ ஜூஹ்வதீதி ப்ரவீதி -என்ற ஸ்லோகத்தால் அருளிச் செய்கிறார்
——————————————————————————————————————————————
இரண்டாவது அதிகரணம் –க்ருதாத்ய யதிகரணம்-
கீழே சரீரம் உள்ளவரை சம்பந்தத்தைச் சாதித்தது
இதில் கர்ம சம்பந்த நியமத்தைச் சாதிக்கிறார் என்று சங்கதி –
அனுபவிக்க வேண்டிய எஞ்சிய கர்ம பலன்களுடன் ஸ்வர்க்கத்தில் இருந்து
ஜீவன் வருகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது
3-1-8-க்ருதாத்யயே அநு சயவான் த்ருஷ்ட சம்ருதிப்யாம் யதேதேம் அநேவம் ச –
தூமாதி மார்க்கத்தாலே ஸ்வர்க்கம் சென்ற இஷ்டாதிகாரி ஜீவர்கள் மறுபடி மனித உலகில் திரும்பும் பொழுது
அங்கு அனுபவித்தது போக மிஞ்சிய கர்மாக்களுடன் வருகிறார்களா இல்லையா என்று சங்கை
யாவத் சம்பாதம் உஷித்வா-என்று கர்மா தொலையும் வரை வசித்து –
ப்ராப்யாந்தம் கர்மண தஸ்ய-என்று கர்மா முடியும் நிலையைப் பெற்று
என்று எல்லாம் ஸ்ருதி சொல்வதாலேயே
மிச்சத்துடன் திரும்புவது இல்லை என்று பூர்வ பக்ஷம்
இதை நிரஸனம் செய்கிறார் –
க்ருதாத்யயே அநு சயவான் –ஸ்வ க்ருதமான புண்ய கர்மாக்கள் பல அனுபவத்தால் அழிந்த பிறகு
அனுபவித்த பின் எஞ்சிய கர்மாவுடன் அனுசயத்துடன் -பூமியில் ஜனிக்கிறார்
ஏன் எனில்
த்ருஷ்ட சம்ருதிப்யாம்–சுருதி ஸ்ம்ருதிகளால் என்றபடி
நல்ல நடத்தை உள்ளவர் -புண்ய கர்மாக்களைச் செய்தவர் நல்ல ப்ரஹணாதி ஜென்மங்களை அடைகிறார்கள் என்று ஸ்ருதியும்
கர்ம சேஷத்துடன் நல்ல ரூபத்தையும் ஜாதியையும் அடைகிறார்கள் என்று ஸ்ம்ருதியும் சொல்லுமே
யதேதேம் -ஸ்வர்க்கத்துச் சென்ற வழிப்படியேயும் -சந்திரனில் இருந்து ஆகாசம் செல்வது –
அநேவம் ச -வேறு வழிகளிலும் திரும்புகிறான் என்பதாம் –
வாயு மேக அப் ராதிகளை அடைவதால் அநேகஞ்ச என்கிறது
நீரைத் தங்கி நிற்கும் நிலையை அப்ரம் என்றும்
பொழியும் நிலையை மேகம் என்றும் கூறுவதால் புநர் யுக்தி தோஷம் இல்லை –
புண்யம் செய்தவர்கள் தூ மாதி மார்க்கம் தொடங்கி பித்ரு மார்க்கம் அடைந்து சந்திர மண்டலம் செல்கிறார்கள்
புண்ய பலன்களை அனுபவித்த பின்பு
சாந்தோக்யம் -5-10-5-யாவத் சம்பாதம் உஷித்வா அத ஏதமேவ அத்வானம் புன நிவர்த்தந்தே -என்று
கர்ம பலன் உள்ள வரையில் ஸ்வர்க்கத்தில் வாழ்ந்து எஞ்சிய கர்மங்களுடன் உலகிற்கு திரும்புகின்றார்கள்
யாவத் சமபாதம் உஷித்வா -என்று எந்த கர்மத்தின் மூலமாக ஸ்வர்க்கம் புகுந்தாரோ
அந்த கர்ம பலன் அனுபவித்த பின்பு என்றபடி
இதனை ப்ருஹத் உபநிஷத் -4-4-6-
ப்ராப்யாந்தம் கர்மண தஸ்ய யத் கிஞ்சேஹ கரோத்யாயம் தஸ்மாத் லோகாத் புனரேத்யச்மை லோகாய கர்மணே-என்றது-
த்ருஷ்ட ஸ்ம்ருதி ப்யாம்–ஸ்ருதியும் ஸ்ம்ருதியும் இப்படியே கூறும்
சாந்தோக்யம் -5-10-7-
தத்ய இஹ ரமணீய சரணா அப்யாசோ ஹ யத் தே ராமணீயாம் யோநிம் ஆபத்யேரன் ப்ராஹ்மண யோநிம் வா
ஷத்ரிய யோநிம் வா வைசிய யோநிம்வா அத யே இஹ கபூய சரணா
அப்யாசோ ஹ யத் தே கபூயாம் யோ நிம் ஆபத்யேரன் ஸ்வ யோ நிம் வா ஸூகர யோநிம் வா சண்டாள யோநிம் வா -என்று
பிராமணன் ஷத்ரியன் வைஸ்யன் நாய் பன்றி சண்டாளன் ஆக பிறக்கிறார்கள்
இதே கருத்தை கௌதம ஸ்ம்ருதி -2-11/12/13-
வர்ண ஆச்ரமாச்ச ஸ்வ கர்ம நிஷ்டா ப்ரேத்ய கர்மபலம் அநுபூய தத சேஷேண விசிஷ்ட தேச ஜாதி குல ரூப ஆயு ஸ்ருத வித்த வ்ருத்த
ஸூ க மேதசா ஹி ஜன்ம பிரதிபத்யந்தே விஷ்வஞ்ச விபரீதா நச்யந்தி -என்றும்
ஆபஸ்தம்ப தர்ம ஸூத்ரமும்-2-1/2/3–
தத பரிவ்ருத்தௌ கர்ம பல சேஷேண ஜாதிம் ரூபம் வர்ணம் பலம் மேதாம் பிரஜ்ஞாம் த்ரவ்யாணி தர்ம அனுஷ்டானம் இதி
பிரதிபத்யந்தே தத் சக்ரவத் உபயோர் லோகயோ ஸூ கே ஏவ வர்த்ததே -என்றும் கூறும்
சாந்தோக்யம் -5-10-5-யாவத் சமபாதம் என்றது பலன் அளிக்கத் தொடங்கிய கர்மங்கள் ஆகும் –
ப்ருஹத் உபநிஷத் 4-4-6–யத் கிஞ்சேஹ கரோத்யம் இதே பொருளில் சொல்லும்
எஞ்சிய கர்மங்களுடன் திரும்புகிறான் –
மேலே கிளம்பும் பொழுது
தூமம் -புகை-இரவு கிருஷ்ண பஷம் தஷிணாயணம் -பித்ரு லோகம் ஆகாயம் சந்தரன் பாதையிலும்
கீழே வரும் பொழுது
சந்தரன் ஆகாயம் வாயு தூமம் அப்ரம் மேகம் மழை தான்யங்கள் புருஷன் ரேதஸ் ஸ்திரீயின் கர்ப்பம் –
என்று ஸ்வாமி தேசிகன் அருளிச் செய்கிறார்
—————————————————————————————————————————————
292-சரணாத் இதி சேத ந தத் உப லஷணார்த்தா இதி கார்ஷ்ணாஜிநி –3-1-9-
ஆசாரம் என்பதே கபூய சரணா ரமணீய சரணா பதங்கள் கூறப்பட்டது
அவை கர்மங்களையே குறிக்கும் என்று கார்ஷ்ணாஜி நி முனிவர் கூறுகிறார்
தைத்ரிய சம்ஹிதை -1-11-12-
யானி அனவத்யானி கர்மாணி தானி சேவிதவ்யாநி நோ இதராணி யானி அஸ்மாகம் ஸூ சரிதானி தானி த்வயா உபாச்யாநி–
இதனால் இன்ப துன்பங்கள் புண்ய பாப கர்மாக்களே ஆகும்
சரணாத் -ரமணீய சரணா என்னும் ஸ்ருதியில் ரமணீயம் என ஸ்ம்ருதியால் விதிக்கப் பட்ட
ஸந்த்யா வந்தனாதி ஆசாரங்களால் ப்ரஹணாதி பிறப்பை யுடையவர் என்று சொல்வதால்
அனுபவித்து மிஞ்சிய கர்மத்தால் நல்ல கெட்ட பிறப்புக்கள் என்பது இல்லை
இதி சேத ந –என்பது தவறு
தத் உப லஷணார்த்தா இதி கார்ஷ்ணாஜிநி –இவை உப லக்ஷணமாகக் கர்மாக்களையே குறிக்கும்
என்பதே கார்ஷ்ணாஜிநியின் திரு உள்ளம்
ஸந்த்யா வந்தனாதிகளை அங்கங்களாகக் கொண்ட யஜ்ஞாதி புண்ய கர்மாக்களாலேயே
ஸ்வர்க்க பிராப்தி என்று அவர் திரு உள்ளம்
இதையே மேலும் காட்டி அருளுகிறார் –
—————————————————————————————————————————————–
293-ஆநர்த்தக்யம் இதி சேத் ந தத் அபேஷத்வாத்–3-1-10-
இதி சேத் ந -ஸ்ம்ருதி விஹிதமான ஆசாரம் சுகத்தின் சாதனை இல்லை என்னில்
ஆ நர்த்தக்யம் -பயன் அற்ற தன்மை ஏற்படும் என்பது இல்லை
தத் அபேஷத்வாத்-அவ் வாசாரத்தை அங்கமாக அபேக்ஷித்தித்து தான் புண்ய கர்மம் சுகத்தை சாதிக்கும்
ஸ்ம்ருதி -ஸந்த்யா ஹீனன் ஸர்வ கர்மாக்களுக்கும் அர்ஹதை அற்றவன் என்று அல்லவோ கூறுகிறது
என்பது கார்ஷ்ணாஜிநியின் மதம் –
புண்ய பாப கர்மங்கள் ஆசாரத்தையே சார்ந்து உள்ளன –
தஷ ஸ்ம்ருதி -2-027-சந்த்யா ஹீநோ அசுசி நித்யம் அனர்ஹா சர்வ கர்மஸூ –
சந்த்யா வந்தனம் செய்யாதவன் அசுத்தமானவன் -அவன் எந்தக் கர்மங்களை செய்ய தகுதி அற்றவனாகிறான் –
வசிஷ்ட ஸ்ம்ருதி -6-3-ஆசார ஹீநம் ந புநந்தி வேதா –
ஆசாரம் இல்லாதவனை வேதத்தாலும் புனிதன் ஆக்க முடியாது –
———————————————————————————————————————————————–
294-ஸூஹ்ருத துஷ்ஹ்ருதே ஏவ இது து பாதரி —3-1-11-
புண்யம் கர்ம ஆசரதி பாபம் கர்ம ஆசரதி- யானி அனவத்யானி கர்மாணி தானி சேவிதவ்யாநி
நோ இதராணி யானி அஸ்மாகம் ஸூ சரிதானி என்று
சரண என்ற பதமும் கர்ம என்ற பதமும் தனித் தனியே சொல்லப்பட்டன –
யானி அன்வத் யானி கர்மாணி -என்று ஸ்ருதிகளில் நேராகக் கூறப்பட்ட கர்மங்கள் உணர்த்தப் பட்டன –
யானி அஸ்மாகம் ஸூ சரிதானி -ஆசாரம் மூலமாக செய்யும் கர்மங்கள் –
கோபலீவர்த்த ந்யாயம்-மாடுகளை அழைத்து வா எருதுகளை அழைத்து வா சிறப்பித்து சொல்வது போலே
ஸூஹ்ருத துஷ்ஹ்ருதே ஏவ இது து பாதரி
து ஸப்தம் முன் பக்ஷத்தை நிவ்ருத்தி செய்து
ஸூஹ்ருத துஷ்ஹ்ருதே ஏவ-ரமணீய சரணா கபூ சரணா என்னும் ஸ்ருதியில்
புண்ய கர்மாவை ஆசரிக்கிறான் பாப கர்மாவை ஆசரிக்கிறான் என்ற பிரயோகம் போலே
சரண ஸப்தத்தாலே ஸூஹ்ருத துஷ்ஹ்ருத கர்மங்களே குறிக்கப்படுகின்றன
அது தவிர ஸதாசார துராசாரங்கள் குறிக்கப் படுவது இல்லை
இது பாதரி -என்பது பாதிரி முனிவர் திரு உள்ளம்
இதுவே ஸூத்காரரின் திரு உள்ளமும்
கர்மங்கள் ஆசாரத்தை அபேக்ஷிப்பவையே என்ற கார்ஷ்ணாஜிநி திரு உள்ளமும் ஸூத்ர காரரின் திரு உள்ளமே
ஆக இத்தால்
எஞ்சிய கர்மங்களுடன் ஜீவன் மீண்டும் வருகிறான் என்றதாயிற்று –
———————————————————————————————————————————————-
கீழே வெறும் இஷ்டா பூர்த்தத்த புண்ய அதிகாரிகள் சந்திரனை அடைந்து கர்ம சேஷத்துடன்
திரும்புகிறார்கள் என்று ஸ்தாபித்தார்
இதில் விதித்ததை அனுஷ்டிக்காத அதிகாரிகளும் யமயாதனை அனுபவித்து சந்திரனை அடைந்து
மறுபடியும் திரும்புகின்றார்களா இல்லையா என்று சங்கை
கௌஷீதகீ உபநிஷத் -1-2- யே வை கே ச அஸ்மாத் லோகாத் ப்ரயந்தி சந்த்ரமசம் ஏவ தே சர்வே கச்சந்தி
இந்த உலகில் இருந்து அனைவர்களும்-புண்யவான்களும் -பாபிகளும் – சந்திர மண்டலம் செல்கிறார்கள்
என்று கூறுவதால் பாபிகள் யமலோக யாதனைகளை அனுபவித்தே சந்த்ர லோகம் ஏறுவதும் இறங்குவதும்
தவிர்க்க முடியாதவை என்ற பூர்வ பக்ஷத்தை
ஐந்து ஸூத்ரங்களாலே விளக்குகிறார் –
மூன்றாம் அதிகரணம் –அநிஷ்டாதிகார்யாதிகரணம்-
பாபம் செய்தவர்கள் சந்திர மண்டலம் செல்வது இல்லை என்பது நிரூபிக்கப் படுகிறது
295-அநிஷ்டாதிகாரிணாம் அபி ச ச்ருதம்-3-1-12-
யாகம்-இஷ்டங்கள் -குளங்கள் வெட்டுதல் -பூர்த்தம் -தத்தம் தானம் – போன்றவற்றை செய்யாமல்
பாபம் செய்தவர்களும் சந்திர மண்டலம் செல்வது கூறப்படுகிறது –
பூர்வபஷ ஸூத்ரங்கள்-இதுவும் அடுத்த நான்கும் –
கௌஷீதகீ உபநிஷத் -1-2- யே வை கே ச அஸ்மாத் லோகாத் ப்ரயந்தி சந்த்ரமசம் ஏவ தே சர்வே கச்சந்தி
இந்த உலகில் இருந்து அனைவர்களும் சந்திர மண்டலம் செல்கிறார்கள்
அனைவருக்கும் சந்த்ர மண்டல கமநம் ப்ரஸித்தம்
—————————————————————————————————————————————-
296-சம்யமனே து அனுபூய இதரேஷாம் ஆரோஹ அவரோஹா தத்கதி தர்சநாத்–3-1-13-
து சப்தம் புண்யசாலி பாபிகளுக்கு வேறுபாட்டைக் காட்டுகிறது
இதரேஷாம் சம்யமனே அனுபூய ஆரோஹ அவரோஹா பவத -பாபிகள் யமனின் ஆட்சியில்
பாபங்கள் பலனை அனுபவித்து பின் சந்திரனை அடைந்து அங்கிருந்து இரக்கம் ஏற்படுகிறது
தத்கதி தர்சநாத்–பாபிகளுக்கு யமலோகம் செல்வதாக சொல்லப்படுவதால்
யமனின் ஆணைக்கு ஏற்ப தண்டனை அனுபவித்த பின்பே சந்திர மண்டலம் செல்வதும் இறங்குவதும் நடக்கும்
கட உபநிஷத் -அயம் லோகோ நாஸ்தி பர இதி மாநீ புன புன வசமாபத்யே மே-என்றும்
தைத்ரீய ஆரண்யகம் -2-1-வைவஸ்வதம் சங்கமனம் ஜனா நாம் யமம் ராஜா நாம் –
—————————————————————————————————————————————–
297-ச்மரந்தி ச–3-1-14-
பராசரர் போன்ற மகரிஷிகள் -ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் -3-7-5–
சர்வே சைதே வசம் யாந்தி யமச்ய பகவன்கில -என்று
அனைவரும் யமனின் கட்டுப்பாட்டில் உள்ளனர் என்பர்
——————————————————————————————————————————————
298-அபி சப்த –3-1-15-
ரௌரவம் மஹா ரௌரவம் தாபனம் அவீசி சம்ஹாரம் கால சூத்ரம் கும்பீபாகம் ஆகிய
ஏழு நரகங்கள் ஸ்ம்ருதிகளில் ரிஷிகளால் கூறப்படுகிறது
ஏழு நரகங்களுக்குச் செல்பவராக சொல்லி யமனிடம் செல்வதாக எங்கனம் சொல்ல முடியும் என்றால்
——————————————————————————————————————————————
299-தத்ர அபி தத் வ்யாபாராத் அவிரோத —3-1-16-
யமனுடைய ஆணைக்கு உட்பட்டே நரகங்கள் உள்ளதால் விரோதம் இல்லை
தத்ர அபி -அந்த ஏழு நரகங்களிலும்
தத் வ்யாபாராத் -அந்த யமனின் உத்தரவால் நடப்பதால்
அவிரோத -முன் கூறிய யமவசத்துக்குக் குற்றம் இல்லை
பாபிகள் யமலோக யாதனைகளை அனுபவித்தே சந்த்ர லோகம் ஏறுவதும் இறங்குவதும்
தவிர்க்க முடியாதவை என்ற பூர்வ பக்ஷத்தை நிரஸனம் செய்கிறார்
இனி இந்த பூர்வ பஷங்களுக்கு பதில் கூறப்படுகிறது
——————————————————————————————————————————————-
300-வித்யா கர்மணோ இதி து பிரக்ருதத்வாத்–3-1-17-
து -ஸப்தம் பூர்வ பக்ஷத்தை விலக்குவது
பாபிகளுக்கு எவ்வாறு அர்ச்சிராதி கதி மார்க்கத்தால் ப்ரஹ்ம ப்ராப்தி இல்லையோ
அவ்வாறே தூமாதி மார்க்கத்தால் சந்த்ர பிராப்தியும் இல்லை
வித்யா கர்மணோ -அந்த ப்ரஹ்மத்தையும் சந்த்ரனை அடைதலும் –
ப்ரஹ்ம வித்யைக்கும் புண்ய கர்மத்துக்கும் பலமாய் இருப்பதால் என்றபடி
இதி து பிரக்ருதத்வாத்-இப்படி ப்ரக்ருதமாய் இருக்கையாலே என்றபடி
ப்ரஹ்ம வித்யை உள்ளவர்களுக்கு அர்ச்சிராதி மார்க்கமும்
கர்மங்களை சரிவர இயற்றுபவர்களுக்கு தூமாதி மார்க்கமும் கிட்டும் என்றே படிக்கப் படுகிறது
தேவயானத்தைப் பற்றிக் கூறும் பொழுது சாந்தோக்யம் -5-10-1-
தத்ய இத்தம் விது யே ச இமே அரண்யே ச்ரத்தா தப இதி உபாஸ்யதே–தே அர்ச்சிஷம் அபி சம்பவந்தி அர்ச்சிஷ அஹ -என்றும்
பித்ருயானத்தைப் பற்றிக் கூறும் பொழுது சாந்தோக்யம் -5-10-3-
அத யே இமே க்ராமா இஷ்டாபூர்த்தா தத்தம் இதி உபாசதே –தே தூமம் அபி சம்பவந்தி -என்றது
கௌஷீதகி உபநிஷத் -யே கே ச அஸ்மாத் லோகாத் ப்ரயந்தி சந்த்ரமசம் ஏவ தே சர்வே கச்சந்தி -என்று
அனைவரும் சந்திர மண்டலம் செல்கின்றனர்
பரமபுருஷ உபாஸன ப்ரஹ்ம வித்யா நிஷ்டர்கள் அர்ச்சிராதி மார்க்கம் சென்று திரும்பி வராமல்
பரம புருஷனை அனுபவிக்கிறார்கள் என்றும்
கிராமத்தில் இருந்து தேவாலயம் தடாகாதிகள் நிர்மாணம் யாகம் தானம் செய்பவர்
தூ மார்க்கம் மூலம் ஸ்வர்க்கம் அடைந்து திரும்புவார்கள் என்றும் இந்த ஸ்ருதிகளின் பொருள் –
பாவம் செய்தவர்கள் சந்திர மண்டலம் செல்லா விடில்
ஐந்தாவது ஆஹூதி ஏற்படாமல் உடலும் தோன்றாதே என்ன அடுத்த ஸூத்ரத்தில் சமாதானம்
——————————————————————————————————————————————–
301-ந த்ருதீயே ததா உபலப்தே–3-1-18-
ந த்ருதீயே -வித்யா நிஷ்டர் கர்ம நிஷ்டர் தவிர்த்த மூன்றாவதான பாபிகள் விஷயத்தில்
தேஹம் தொடங்க ஐந்தாவது ஆஹுதி தேவை இல்லை
ததா உபலப்தே-அவ்வாறு சுருதியில் காணப்படுவதால்
மூன்றாவது இடமாகிய நரகம் செல்லும் பாபம் செய்தவர்களுக்கு பொருட்டு ஐந்தாவது ஆஹூதி
அவசியம் இல்லை என்று ஸ்ருதி கூறும்
சாந்தோக்யம் -5-3-3-வேத்த யதா கே நா சௌ லோகோ ந சம்பூர்யதே –என்று கேட்டு
பஞ்ச அக்னி வித்யையில் பாஞ்சால மன்னன் -ஸ்வர்க்க லோகம் பூர்ணபம் ஆகாமைக்குக் காரணம் தெரியுமா என்று கேட்க
விடையாக -5-10-8-அத எதையோ பதோர்ந கதரேண ச தானி இமானி ஷூத்ராணி அசக்ருதா வர்த்தீநி பூதானி பவந்தி
ஜாயாஸ்ய ம்ரியச்வேதி ஏதத் த்ருதீயம் ஸ்தானம் தே நா சௌ லோகோ ந சம்பூர்யதே
அற்பமாய் அடிக்கடி திரும்பி வரும் பூதங்கள் பிறந்தும் இறந்தும் தவிப்பவையான பாபிகள்
இவர்களால் ஸ்வர்க்க லோகம் பூர்த்தி அடைவது இல்லை -அவர்களை மூன்றாம் இடம் -த்ருதீய ஸ்தானம் என்றும்
அவர்கள் தேவ யான பித்ரு யான மார்க்கங்களை விட்டு நரகங்களை அனுபவித்து
அடிக்கடி ஜனன மரணங்களை அடைந்து தவிக்கின்றனர் என்கிறார் –
ஆகையால் அந்த பாபிகளுக்கு பஞ்சம ஆஹுதியின் அபேக்ஷை இல்லை என்று தெரிகிறது –
ஐந்தாவது ஆஹூதி இல்லாமலேயே உடல் எடுத்தவர்கள் உண்டே -என்கிறது-
——————————————————————————————————————————————–
302-ஸ்மர்யதே அபி ச லோகே —3-1-19-
த்ரௌபதி திருஷ்டத்யும்னன் போன்ற புண்ணியம் செய்தவர்களுக்கு
ஐந்தாவது ஆஹூதி இல்லாமலே உடல் உண்டானதே –
அக்னியில் இருந்து தோன்றியதாக மகாபாரதம் சொல்லும்
——————————————————————————————————————————————–
303-தர்சநாத் ச –3-1-20-
ஸ்ருதியிலும் இதே கருத்தைக் காணலாம் –
சாந்தோக்யம் -6-3-1-தேஷாம் கலு ஏஷாம் பூதானாம் த்ரீண்யேவ பீஜானி பவந்தி அண்டஜம் ஜீவஜம் உத்பிஜ்ஜம்-என்று
கொசு போன்றவை ஸ்வே தஜம்
செடி கொடி மரம் போன்றவை உத்பிஜ்ஜம்
மனுஷ்யர் போன்றோர் ஜீவஜர்
இந்த மூன்றில் அண்டஜத்துக்கும் உத்பிஜ்ஜத்துக்கும்-கருவின் தொடர்பு வேண்டாம்
தேஜஸ் உஷ்ணம் மூலம் முட்டை உடைந்து உயிர் பிறப்பதும்
ரேதஸ் விந்து மூலம் கர்ப்பம் மூலம் பிறப்பவை –
பூமியை பிளந்து செடி போன்றவை பிறப்பதும் –
வியர்வை மூலம் போன்றும் கிருமிகள் -போன்றவை ஐந்தாவது ஆஹூதி இல்லாமல் உண்டானவை
———————————————————————————————————————————————
304-த்ருதீய சப்தாவரோத சம்சோகஜச்ய-3-1-21-
இந்த ஸ்ருதியில் பேன் போன்ற ஸ்வேதஜங்களுக்கு எப்படி அடக்கம் என்ற சங்கை வர
அத்தை நிவர்த்திப்பிக்கிறார்
சாந்தோக்யம் -அண்டஜம் ஜீவஜம் உத்பிஜ்ஜம்-என்று
உத்பிஜ்ஜம் பதம் மூலம் வெப்பத்தாலும் வியர்வையாலும் உண்டாகும் கிருமிகள் பற்றிக் கூறப்பட்டது
த்ருதீய சப்தாவரோத சம்சோகஜச்ய–உத்பிஜ்ஜம் என்ற மூன்றாம் சொல்லாலே சம்சோகஜமான ஸ்வேதத்திற்கும்
அவராக கிரஹணம் பொருள் கொள்ளப் படுகிறது
ஆகையால் பாபிகள் சந்த்ர மண்டலம் செல்வதோ திரும்பி வருத்தலோ கிடையாது என்பது ஸித்தம் –
எனவே பாபம் செய்தவர்களும் சந்திர மண்டலம் செல்வது எனபது பொருந்தாது என்றது ஆயிற்று –
———————————————————————————————————————————————-
நான்காவது அதிகரணம் –தத் ஸ்வாபாவ்யாபத்த் யதிகரணம் –
மேலே கிளம்பிய ஜீவன் ஆகாசம் போன்றவற்றுடன் தொடர்பு மட்டுமே அடைகின்றான் என்று நிரூபிக்கப் படுகிறது –
305- தத் ஸ்வா பாவ்யாபத்தி உபபத்தி-3-1-22-
தூமாதி மார்க்கத்தால் சந்திரனை அடைந்த புண்ய கர்மனுக்குத் திரும்பி வரும் வழி கூறப்படுகிறது
யதேத்தம் -சென்ற வழிப்படியே –ஆகாசம் வாயு தூமம் அப்ரம் -பரவிய மேகம் -பின் மழை பொழியும் மேகம் -என்ற
முறையைக் கூறும் ஸ்ருதியில் கூறப்படும் ஆகாசாதித் தன்மை தெய்வத்தன்மை மனுஷ்யத்தன்மை முதலியன போல்
ஆகாசாதிகளைச் சரீரமாகக் கொண்டு ஜனனம் என்னும் தன்மையதா
அன்றி ஆகாசாதிகளுக்கு சமத்துவம் பெறுவதா
என்ற சம்சயம்
ஆகாசாதி சரீரிகத்வ ரூபமே என்பது பூர்வ பக்ஷம்
ஏன் எனில்
ஸ்ரத்தையை -நீரை -ஹோமம் செய்கின்றனர்
அந்த ஆஹுதியால் ஸோம ராஜன் ஆகிறான் என்பது போலே ஆகாச பாவம் சொல்லப் படுகிறது –
ஸோம பாவம் என்பது சந்திரனுக்கு சமமான சரீரம் கொண்டு இருத்தல்
அவ்வாறே ஆகாசாதி சரீரம் என்ற
பக்ஷத்தைக் கண்டிக்கிறார் –
ஆகாயம் போன்றவற்றின் ஸ்வ பாவம் அடைகிறான் என்று கூறுவதே பொருந்தும்
சாந்தோக்யம் ஜீவன் திரும்பும் வரிசையை -5-10-5/6-
அத ஏவம் ஏவ அத்வானம் புன -நிவர்த்தந்தே யத் ஏதம் ஆகாசம் –ஆகாசாத் வாயும் வாயுர்பூத்வா தூமோ பவதி
தூமோ பூத்வா அப்ரம் பவதி -அப்ரம் பூத்வா மேகோ பவதி -மேகோ பூத்வா ப்ரவர்ஷதி–
சோமராஜா சரீரம் போலே ஆகாயம் முதலான சரீரங்களை எடுக்கின்றான்
பூர்வ பஷம்
ஸ்வா பாவ்யா பதி என்பதால் சரீரம் எடுக்க வில்லை –
தன்மைகளை மட்டுமே அடைகின்றான் எனபது சித்தாந்தம்-
வேறு உலகத்தில் இருந்து இறங்கி வரும் ஜீவனுக்கு ஆகாச வாயு தூமாதி பாவம் என்பது
தத் ஸ்வா பாவ்யாபத்தி –ஆகாசாதிகளுக்கு சமத்துவம் அடைதலே
ஆகாசாதி சரீரிகத்வம் இல்லை
ஏன் எனில்
உபபத்தி-ஸூக துக்க அனுபவங்களின் அபாவத்துக்கு -இன்மை -பொருத்தம் இருப்பதால் –
ஸோமாதி பாவத்தால் உண்டாகும் ஸூக துக்காதிகளின் அனுபவம் ஆகாசாதி பாவத்தில் இல்லாமையால்
ஆகாசாதிகளுடன் சாம்யம் வரும் என்று கருத்து –
———————————————————————————————————————————————-
ஐந்தாம் அதிகரணம் -நாதிசிராதி கரணம்
ஆகாசம் போன்றவற்றில் ஜீவன் சிறிது காலமே தங்கி விட்டுக் கிளம்புகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –
306-நாசிசிரேண விசேஷாத்-3-1-23-
ஆகாசாதி இடங்களில் நீண்ட காலம் தங்கி இருக்கிறானா
அல்லது விரைவிலே திரும்பி இறங்கி வருகிறானா
என்று சம்சயம்
நீண்ட காலம் கூட இருக்கிறான் என்று பூர்வ பக்ஷம்
ஏன் எனில்
விசேஷமான வசனம் இல்லாமையாலே
என்ற பக்ஷத்தை நிரஸிக்கிறார்
மேலே வ்ரீஹ் யாதி பாவம் கூறிய இடத்தில்
சாந்தோக்யம் -5-10-6-அதோவை கலு துர் நிஷ் பிரபதரம்
சிரமப்பட்டு அரிசியில் இருந்து வெளியேறுகின்றான்-என்று கூறுவதால்
ஆகவே ஆகாசம் தொடங்கி வர்ஷம் வரை ஜீவன் விரைவிலேயே வெளியேறுவதாகத் தோன்றுகிறது
—————————————————————————————————————————————
ஆறாவது அதிகரணம் -அந்யாதிஷ்டிதாதி கரணம் –
மற்ற ஜீவன்களுடன் தொடர்பு மட்டும் கொள்கின்றான் என்கிறதாயிற்று
307-அந்யா திஷ்டிதே பூர்வவத் அபிலாபாத் —3-1-24-
தொடர்பு மட்டுமே கொள்கின்றான்
சாந்தோக்யம் -5-10-6-
மேகோ பூத்வா ப்ரவர்ஷதி தா இஹ வ்ரீஹியவா ஓஷதி வனச்பதய திலாமாஷா இதி ஜாயந்தே
தேவா ஜாயந்தே-மனுஷா ஜாயந்தோ போலே இங்கும் கூறப்படுவதால்
தாவர உடல்களுடன் பிறக்கிறான்
என்பர் பூர்வ பஷி –
தேவ பாவம் மனுஷ்ய பாவம் போல் தான்யாதிகளைச் சரீரமாகக் கொண்ட தன்மையா
அல்லது சம்பந்தம் மட்டுமா -என்ற சங்கை
நெல் முதலிய சரீரங்களைக் கொண்டு தோன்றுகிறார்களா
அன்றி பிற ஜீவன்களால் அதிஷ்டிதமான வ்ரீஹி முதலியவற்றுடன் சம்பந்திக்கிறார்களா
என்று சம்சயம்
மேகமாகப் பொழிகிறான்
பின் நெல் சாமை பச்சிலை வனஸ்பதிகள் எள் உளுந்து என்பனவாக மாறுகிறான் என்று சொல்வதால்
வ்ரீஹி முதலிய ஜென்மங்களை அடைகிறான்
என்பதே பொருந்தும் என்று பூர்வ பக்ஷம்
இதனைக் கண்டிக்கிறார்
அப்படி அல்ல –
ஆகாயம் மழை மேகம் போலே தொடர்பு மட்டுமே கொள்கிறான்-
அந்யா திஷ்டிதே -சம்பந்தம் மட்டுமே
ஏன் எனில்
பூர்வவத் அபிலாபாத் –ஆகாசாதி பாவம் போலே வ்ரீஹ் யாதி பாவம் சொல்லுகையாலே
அதற்க்கு காரணமான கர்மாவைச் சொல்லாமையாலே
சாந்தோக்யம் –
ரமணீய சரணா கபூய சரணா -சந்திர மண்டலத்தில் பலன்கள் தொடங்கப் பட்ட கர்மங்கள் முடிந்தன
என்று ஜென்மத்தின் காரணமான புண்ய பாப ரூபமான கர்மம் கூறப்படுகிறது
உண்டாகின்றன என்ற சொல் உபசார வழக்கு
பஞ்ச ஆஹூதிக்கு பின்பு எடுக்கும் உடலிலே மீண்டும் கர்ம பலன்கள் அனுபவிக்க வேண்டும்
இடைப் பட்ட காலத்தில் அனுபவிக்க கர்மங்கள் இல்லை என்பதால்
தொடர்பு மட்டுமே என்றதாயிற்று-
—————————————————————————————————————————————-
308-அசுத்தம் இதி சேத ந சப்தாத் –3-1-25-
அக்னி ஷோமம் போன்ற பசு ஆடு வதையுடன் கூடிய யாகங்களால் பெற்ற பாவங்களால்
தான்ய உடல் கொள்வான் என்பர் பூர்வ பஷி
ந ஹிம்ச்யாத் சர்வ பூதானி -சாந்தி பர்வம் -278-5–சாஸ்திர விதி என்பதால்
பாபம் வாராது என்றாலும்
ஏதாவது பலனை குறித்து செய்யும் யாகத்தில் பசு வதை பாபம் ஆகுமே என்றால்
தைத்ரிய சம்ஹிதை -2-5-5-ஸ்வர்க்க காமோ யஜேத-என்றும்
ஆபஸ்தம்ப ஸூத்ரம்-2-1-2-2-சர்வ வர்ணானாம் ஸ்வ தர்ம அனுஷ்டானே பரம் அபரிமிதம் ஸூகம் –
மனு ஸ்ம்ருதி -1-2-9-சரீரஜை கர்ம தோஷை யாதி ஸ்தாவரதாம் நர -என்றும் சொல்லும்
ஆக ஆசை விருப்பத்தின் அடியாகவே யாகம் செய்வதால்
பாபம் கிட்டி தான்ய உடலை பெறுகிறான் என்பர் பூர்வ பஷி
நெல் முதலிய தன்மைகளுடன் தோன்றுகிறார்கள் என்று பிறப்பின் காரணமான
கர்மாக்கள் ஸ்ருதி கூறா விடிலும் அசுத்தம் –
யாகாதி காம்ய கர்மங்கள் ஹிம்சை நிறைந்தமையால் அசுத்தமாகுமே என்னில்
இதி சேத ந -அது அல்ல
சப்தாத் –யாகத்தில் பயன்படுத்துவது ஹிம்ஸை இல்லை என்றும்
அதுக்குப் பொன் மயமான சரீரத்துடன் ஸ்வர்க்க கமனமும் பலமாகச் சொல்லப்பட்டு இருப்பதால்
யாகாதிகளில் ஏதும் அசுத்தமான அம்சம் இல்லை என்பதாகும் –
சித்தாந்தம் –
பசு வதை இல்லை -ஸ்வர்க்கம் செல்லவே -என்பர் –
ஹிரண்ய சரீர ஊர்த்வம் ஸ்வர்க்கம் லோகமேதி -என்று சொல்லுவரே
தைத்ரிய பிராமணமும் -நா வா வு ஏதன் ம்ரியதே ந ரிஷ்யசி தேவான் இதேஷி பதிபி ஸூ கேபி
எத்ர யந்தி ஸூ க்ருதோ நாபி துஷ்க்ருத தத்ர த்வா தேவ சவிதா ததாது என்று
சவிதா என்னும் ஸூர்யன்
அந்த மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன் இடம் அழைத்துச் செல்வான் -என்றதே-
—————————————————————————————————————————————-
309-ரேதஸ் சிக்யோக-அத —3-1-26-
அத —வ்ரீஹ் யாதி தன்மை அடைந்த பின்பு
ரேதஸ் சிக்யோக-ஸ்ரூயதே -தான்யாதிகளை உண்டவன் இந்திரியத்தை யுடைய புருஷனாக மாறுகிறான்
ஆஹுதி செய்யப்பட்டு மழையாய் வந்த நீர் தான்யமாகி
மனிதன் உடலில் உணவான பின்பு இந்த்ரியமாக மாறுகிறது
இதனால் புருஷ சம்பந்தம் கூறுவதால் வ்ரீஹ் யாதி பாவத்திலும் ஸம்பந்தம் மட்டுமே ஸித்திக்கிறது
விந்துவை விடுபவனாக கூறுவது போன்று –
சாந்தோக்யம் -5-10-6-யோ யோ ஹி அந்தமத்தி யோ யோ ரேத சிஞ்சதி தத் பூய ஏவ பவதி -போலே
நெல் போன்றவைகளுடன் சேர்த்தி அடைகின்றான் என்றே கொள்ள வேணும்
—————————————————————————————————————————————–
310- யோ நே சரீரம்–3-1-27-
கர்ப்பத்தை அடைந்த பின்னரே உடல் தோன்றுகிறது
ஆகாயம் போன்றவற்றுடன் சேர்த்தி மட்டுமே கொள்கிறான் என்றதாயிற்று-
யோ நே சரீரம்-பெண் உறுப்பை அடைந்த பிறகே சரீரம் தோன்றுகிறது –
அங்கு தான் ஸூக துக்க அனுபவங்கள் உண்டாகின்றன
இதனால் ஆகாசாதிகளில் அனுபவித்து எஞ்சிய கர்மாக்களை யுடையவனுக்கு
சம்பந்தம் மட்டுமே கூறப்படுகிறது என்பதாம்
இந்தப் பாதத்தில் ஜீவனுக்கு ஸம்ஸார பந்தம் உண்மையானது என்று கூறுவதால்
சாங்க்யர்கள் -மித்யா வாதிகள் மதங்கள் நிரசிக்கப் பட்டவை ஆகின்றன –
—————————————
இப்பாதத்தில் ஆறு அதிகரணங்களின் பொருள்களை
1-ததந்திர பிரதிபத்த்ய அதிகரணத்தில் தேஹத்தை விடும் ஜீவன் பூத ஸூஷ்மங்களுடன் போகிறான் என்றும்
2-க்ருதாத்ய யாதிகரணத்தில் -ஸ்வர்க்கத்தை அனுபவித்த ஜீவன் போன வழியிலும் வேறு வழியிலும் திரும்புகிறான் என்றும்
3-அநிஷ்டாதிகார்யாதிகரணத்தில் நரகம் அடைந்தவர்களுக்கு சந்த்ர பிராப்தி இல்லை என்றும்
4-தத் ஸ்வா பாவ்யாபத்த்யதிகரணத்தில் ஆகாசாதிகளுடன் ஸாம்யமே தவிர ஆகாசாதிகளாக ஜென்மம் இல்லை என்றும்
5-நாதிசிராதி கரணத்தில் -ஆகாசாதிகளில் இருந்து சீக்கிரம் இறங்குகிறான் என்றும்
6-அந்யா திஷ்டிதாதி கரணத்தில் -பர சரீர பூதமான வ்ரீஹ் யாதிகளிலே ஸம்பந்தம் மாத்ரமே
என்றும் விளக்கப்பட்டன என்று ஸ்வாமி தேசிகன் அருளிச் செய்கிறார் –
————————————————————————————————–—————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply