ஸ்ரீ நியாய மீமாம்ச வேதாந்த பாடங்கள்–ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்–பகுதி -3 –வேதாந்த சாஸ்த்ரம்– பாடங்கள் -31-39 —

பாடம் -31–பரமாத்மா யார்

தத்வம் புருஷார்த்தம் ஹிதம் -மூன்றையும்
வஸ்துக்கள் உண்மைப்பொருள்கள் இலக்கு வழி-அறிய வேண்டும்
ஞான த்ரயம் உபாதேயம் -ஸ்வ ஞானம் ப்ராப்ய ஞானம் ப்ராபக ஞானம் -மூன்றையும் அறிய வேண்டுமே –
தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு
கடல் நதிகளுக்கு இலக்கு -பூ கதிரவனையே நோக்கும் -உயிர் எம தர்ம ராஜனையே நோக்கும் –

ஜீவாத்மா தன்னுடைய ஞானத்தைக் கொண்டு அறிய வேண்டிய பொருள்களில் முக்கியமானவர் பரமாத்மா
அவரை அறிவதே அறிவின் பயன் என்று ஸாஸ்திரங்கள் கூறுகின்றன
பரமாத்மா என்று ஒருவரை ஏற்பதையும் ஏற்காததையும் வைத்து
ஆஸ்திக தர்சனங்கள் என்றும் நாஸ்திக தர்சனங்கள் என்றும் பிரிக்கப் படுகின்றன
பரமாத்மாவை ஏற்கும் தர்சனங்களிலும் கூட அவரைப் பற்றி பலவிதமான கருத்துக்கள் உள்ளன –

சாங்க்யர்கள்
பரமாத்மா என்பவர் ஸ்ருஷ்டிக்கு காரணமாய் எட்டு ஸித்திகளையும் பெற்றவர் என்கிறார்கள்
அணிமா –ஈஸித்வம்-வஸித்வம் -அஷ்ட மஹா சித்திகள்

யோக மதத்தைச் சேர்ந்தவர்கள் –
பரமாத்மா -அவித்யா அஸ்மிதா ராகம் த்வேஷம் அபி நிவேசம் என்ற ஐந்து கிலேசங்களும்
கர்மங்கள் பிறப்பு ஆயுஸ் போகம் என்ற மூன்று விபாகங்களும்
பாப புண்யங்கள் என்ற ஆசயங்களும்-
அற்றவர் பரமாத்மா
அவரே வேதத்தை இயற்றி அதை உலகுக்குக் கொடுத்தார் என்று கூறுகிறார்கள் –

பாசுபத மதம் -ருத்ரன்

புராண -நான்முகன்

புத்தர்கள்
உலகம் க்ஷணிகம் என்றும் பொய்யானது என்றும் அறிந்தவரே ஈஸ்வரன் என்கிறார்கள்

ஜைனம் -தர்மங்கள் அதர்மங்கள் உடல் மூன்றும் ஆவரணங்கள் மூடி
மேல் நோக்கி பிரயாணம் ஜீவாத்மா இயற்கையில்

சாருவாகர்கள் -மிகுந்த யுக புருஷர்கள் -ராஜாக்கள் -வடிவில் கடவுள் என்பர்

நியாய மாதத்தில்
ஜடமாய்-அளவற்ற ஞானம் உடையவராய்-ஸூகம் துக்கம் பாபம் புண்ணியம் அற்றவராய்
உலகைப் படைப்பவர் பரமாத்மா என்கிறார்கள்

மீமாம்ஸையில் யாகங்களில் உச்சரிக்கப்படும் மந்திரங்களே கடவுள்
யஜ்ஜை ரூபியே ஈஸ்வரன் என்றும் சிலர் மீமாம்ஸா

அத்வைத மதத்தின் படி
குற்றம் அற்றவராய் ஞானம் ஆனந்த வடிவமாய் இருப்பவர் பரமாத்மா –
சச்சிதானந்த ஸ்வரூபன் நிர்மலன் -ஸத் -சித் -ஆனந்தம் —
அவித்யையால் மறைக்கப்பட்டு ப்ரஹ்மத்துக்கே பிரமம்
ஆச்சாத்தான சக்தி மறைக்கும்

விசிஷ்டாத்வைத ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தத்தின் படியே
இவனே புருஷோத்தமன்
அகில ஹேய ப்ரத்ய நீகன் -கல்யாணை ஏக –
ஸர்வஞ்ஞன் -சர்வ சக்தன் -சர்வ அந்தர்யாமி –
ஞான பல இத்யாதி
அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டன்
ஸூ பாஸ்ரயம்
ஸ்ரீ யபதி
ஞான ஆனந்த வடிவமாய்
உலகைக் காத்து படைத்து அழிப்பவராய்
உலகத்தில் உள்ள அனைத்துப் பொருள்களுக்கும் இருப்பவராய்
குற்றங்களே அற்றவராய்
கணக்கற்ற கல்யாண குணங்களை யுடைய ஸ்ரீ மன் நாராயணன் பரமாத்மா —

ப்ரஹ்மம் என்றால் என்ன
வேதங்களில் பரம் பொருளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சொற்களில் முக்கியமானது ப்ரஹ்மம் என்கிற சொல்
எந்தச் சொல்லும் ஒரு தன்மையை முதலில் உணர்த்தி பின் அந்தத் தன்மையை யுடைய பொருளைக் குறிக்கும்
அதே போல் ப்ரஹ்மம் என்ற சொல் -உயர்வு அல்லது பெரிதாய் இருத்தல் – என்ற தன்மையை யுடைய பொருளையே குறிக்கும்
இந்தச் சொல் பிரகிருதி -முக்த ஆத்மா மற்றும் பரமாத்மா-மூவரையும் குறிக்கவும் வேதத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது
இவை மூன்றுக்குமே ஒவ்வொரு படியால் உயர்வு உள்ள படியாலேயோ அவை பெரியதாய் இருக்கும் படியாலேயோ அது பொருந்தும்
ஆனால் இவற்றுள் முக்கியமான பொருள் எது என்று அறிய வேண்டும்

ஒரு சொல்லால் உணர்த்தப்படும் தன்மை பல பொருள்களில் இருந்தால் அவை அனைத்துமே அந்தச் சொல்லின் பொருள் ஆகும் –
ஆனால் அந்தத்தன்மை எந்தப்பொருளில் முழுமையாக -அதிகமாக -உள்ளதோ -அதுவே அந்தச் சொல்லின் முக்கிய பொருள் ஆகும்
அந்த முறையில் பார்த்தால் ஸ்வரூபத்தாலும் தன்னுடைய குணங்களாலும் பரமாத்மா தான் மற்ற இரண்டையும் காட்டிலும் மிக மிக உயர்ந்தவர்
எனவே ப்ரஹ்மம் என்ற சொல்லுக்கு பரமாத்மாவே முக்கிய பொருள் ஆவார் –
பகவான் -சப்த பிரயோகம் போல் -ஆறு குணங்களும் பூர்ணம் -அவனுக்கு -மற்றவர்களுக்கு கௌணம் போல் ப்ரஹ்மம் சப்தமும் –
எனவே ப்ரக்ருதி அல்லது முக்தாத்மாவைக் குறிக்க ப்ரஹ்மம் என்ற சொல்லை உபயோகித்தால் அது தவறு அல்ல
ஆனால் அது இரண்டாம் பக்ஷ பொருள் தான் -முக்கியம் அல்ல -இதுக்கு அமுக்யம் கௌணம் என்று பெயர் –

ப்ரஹ்மத்தின் லக்ஷணம் என்ன
லக்ஷணம் -தனித்தன்மை -பலவும் பரமாத்மாவுக்குச் சொல்லலாம்
ஸர்வேஸ்வரத்வம் -அனைத்தையும் இயக்குதல்
ஸர்வ சேஷித்வம் -அனைத்துக்கும் ஸ்வாமி
ஸர்வ கர்ம ஸமாராதித்யம் -எல்லா வைதிக செயல்கஜலாலும் பூஜிக்கப்படுத்தல்
ஸர்வ கர்ம பல பிரதத்வம்
ஸர்வ ஆதாரத்வம்
ஸர்வ ஸரீரத்வம் –போன்ற பலவும் சொல்லலாம் –

லக்ஷணங்கள் இரண்டு வகைப்படும்
ஸ்வரூப லக்ஷணம் -தன்மைகளை வைத்தே லக்ஷணம் சொல்லுதல் –
தடஸ்த லக்ஷணம் -வேறே ஒரு பொருளைக் கொண்டு வேறே ஒரு பொருளுக்கு லக்ஷணம் சொல்லுதல்
கரையில் நின்று நதியைக் காட்டுவது போல் –

ப்ரஹ்மத்தின் தடஸ்த லக்ஷணம்
உலகு அனைத்தையும் காத்து படைத்து அழிப்பவர்
இங்கு உலகம் என்ற வேறே ஒரு பொருளைக் கொண்டு ப்ரஹ்ம லக்ஷணம்
தைத்ரியம் -வருணன் தன் பிள்ளைக்கு உபதேசம்
ஜென்மாதிகரணம் –
ஸ்ரீ விஷ்ணு புராணம் -இத்தையே சொல்லும் –

ஸ்வரூப லக்ஷணம்
ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்
என்றுமே மாறாமல் ஒரே மாதிரி உள்ளபடியால் பிரக்ருதியைக் காட்டிலும் வேறுபட்டதாகவும்
என்றுமே குறைவில்லாத ஞானம் யுடையவர் -பக்த முக்த வ்யாவ்ருத்தம்
தேச கால வஸ்து–த்ரிவித அபரிச்சேத்யம்-அளக்க முடியாத படியால் நித்யர்களில் வேறுபாடு –
இந்த மூன்று தன்மைகளின் சேர்க்கையே ப்ரஹ்மத்தின் ஸ்வரூப லக்ஷணம் –

———-

பாடம் -32-பரமாத்ம ஸ்வரூபம்
ஸ்ரீ சரணாகதி கத்யத்தில் ஸ்ரீ ராமானுஜர் -பகவத் ஸ்வரூபம் –
இன்றியமையாத தன்மைகள் என்ன என்று அருளிச் செய்கிறார் –

அகில ஹேய ப்ரத்ய நீக -கல்யாண ஏக ஸ்தான –ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன் –
அநந்த -ஞான ஆனந்த ஏக ஸ்வரூப –

இவையே ஸ்வரூப நிரூபக தர்மங்கள் –

1- அகில ஹேய ப்ரத்ய நீக
எல்லாவித தோஷங்களுக்கும் எதிர்த் தட்டானவர்
அசேதனங்களுக்கு விகாரம் என்கிற தோஷமும்
பத்தர்களுக்கு சம்சார சம்பந்த தோஷமும் -துக்க அஞ்ஞானம் மலம் –தோஷங்கள் பிரகிருதி சம்பந்தத்தால் -விஷ்ணு புராணம்
முக்தர்களுக்கு முன்பு ஒரு நாள் சம்சார சம்பந்தம் இருந்தது என்கிற தோஷமும்
நித்யர்களுக்கு பரிச்சேத -அளவுபட்டு இருத்தல் -வேறே ஒருவருக்கு ஆள்பட்டு இருத்தல் போன்ற தோஷங்கள் உண்டே
இவை எவையும் பரமாத்மாவிடம் இருக்க முடியாதே –
இருட்டுக்கு தேஜஸ்ஸூ விரோதியாய் இருக்குமா போலே இந்த தோஷங்களுக்கு பரமாத்மா எதிரி என்றவாறு –

தத்வ த்ரயம் -சர்ப்பத்துக்கு கருடன் போலவும் -தமஸூக்கு தேஜஸ்ஸூ போலவும் -அகில ஹேய ப்ரத்ய நீக –
ஆஸ்ரயிப்பார் விகாராதி தோஷங்கள் வரவிடாமல் செய்பவர் என்றுமாம் –
சர்வ பூத ப்ரக்ருதிம் -விகாரான் -அபஹத பாப்மா -வி ஜர -வி மிருத்யு -வி சோக -இத்யாதி –
நித்யம் -அஜம்–பிறப்பிலி -அஷயம்- அவ்யயம் ஏக ஸ்வரூபம் -நிர்மலம் -பவித்ரானாம் பவித்ரம்

2–கல்யாண ஏக ஸ்தான
தன்னோடு தொடர்பு பட்டவர்களுக்கு நன்மையைக் கொடுக்கக் கூடிய மங்களமான குணங்கள்
அனைத்துக்கும் ஒரே இருப்பிடம் பரமாத்மா –
ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவ ஸ்லோகம் இவற்றை விளக்கும் –
பரமாத்மாவின் குணங்கள் நித்யங்கள் -என்றுமே அழியாதவை
நிஸ் ஸீமங்கள் -எல்லை அற்றவை -உயர்வற உயர் நலம் உடையவன் –
நிஸ் சங்க்யங்கள் -எண்ணிக்கை அற்றவை -எண்ணில் தொல் புகழ் வானவர் ஈசன்
நிருபாதிகங்கள்–இயற்கையானவை
நிர்தோஷம் -தோஷங்களோடே சேர்ந்து ஓர் இடத்தில் இருக்காமல் -தோஷத்தின் சேர்க்கையே இல்லாமல் -இருப்பவை
ஸமான அதிக ரஹிதங்கள் -தனக்கு நிகராகவோ உயர்ந்தோ இல்லாத குணங்கள்

ஞானம் பலம் ஐஸ்வர்யம் வீர்யம் சக்தி தேஜஸ் மூலமான கல்யாண குணங்கள்
கருணை ஞான வடிவம் போல் -அனைத்தும் இந்த ஆறு குணங்களுக்குள் அடங்கும் –
வஸீ -இத்யாதி ஸ்தோத்ர ரத்னம் -கத்ய த்ரயம் இந்த குணங்கள் பட்டியல் காட்டும் –
நிரலேபம் -தோஷ சம்பந்தம் இல்லாமல்
உபதா -உபாதை மூலம் இல்லாமல்
இயற்கையாக
நிகரற்ற ஸ்ரீ விஷ்ணு புராணம் சொல்லும் –

3–ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன்
இப்படி தோஷங்களுக்கு எல்லாம் எதிர்த்தட்டாய் இருத்தல்
கல்யாண குணங்களுக்கு எல்லாம் ஒரே இருப்பிடமாக இருத்தல்
என்ற இரண்டு அறிகுறிகளால் -உபய லிங்கங்களால் பரமாத்மா
தன்னைத் தவிர்ந்த அனைத்துப் பொருள்களைக் காட்டிலும் உயர்ந்தவராக உள்ளார்
ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் -ஆழ்வார் –

உபய லிங்க அதிகரணம்–3-2-11-
வ்யாப்த கத தோஷம் தட்டாத ப்ரஹ்மம்
ந ஸ்தான தோபி பரஸ்ய -உபய லிங்கம் -சர்வ சுருதி சொல்வதால் –

4-அநந்த
அந்தம் என்றால் முடிவு -எல்லை -அளவு
அநந்தன் -என்றால் -எல்லை அற்றவர் -என்று பொருள்
பரமாத்மாவை எந்த வகையாலும் அளவுபடுத்த இயலாது
அவர் நித்யமான படியால் அவரைக் காலத்தால் அளவுபடுத்த முடியாது
அவர் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறபடியால் அவர் விபு ஆவார்
அவர் இல்லாத இடமே கிடையாது
எனவே தேசத்தாலும் அளவு படுத்த முடியாது
அவருக்கு இணையான எந்தப்பொருளும் உலகில் இல்லாத படியால் –
பரமாத்மா இந்தப் பொருளைப் போன்றவர் என்று சொல்ல ஒரு பொருள் இல்லாத படியால்
அவர் பொருளாலும் அளவு படாதவர்
மேலும் அவரே உலகம் அனைத்துமாக இருக்கிற படியால் -இந்தப்பொருள் பரமாத்மா அல்ல –
என்று சொல்ல முடியாதே
ப்ரஹ்மாத்மகம் இல்லாத பொருளே இல்லையே
இதனால் எந்த வஸ்துவாலும் அளவு படாதவர்
இப்படி காலம் தேசம் வஸ்து -மூன்று அளவுகளும் அற்றவர்
த்ரிவித பரிச்சேத ரஹிதன் என்றவாறு –

ஒரு பொருளை உபமானம் சொல்லி –வஸ்துவால் அளவுபடுத்துதல் இல்லாமல் என்றும்–
கட்டுரைக்குள் தாமரை -கண் ஒவ்வா –சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனிக்கு ஒவ்வா -ஒட்டு உரைத்து
உலகு எல்லாம் உன்னை புகழ்வது எல்லாம் –கட்டுரையாய் –
வஸ்துவில் அளவு படுத்த முடியாதவன் என்றும் -இது குடம் துணி இல்லை என்பது போல் சொல்ல முடியாதே
அந்தர்யாமித்வம் மேலே பார்ப்போம் –

5-ஞான ஆனந்த ஏக ஸ்வரூபம்
ஞானமே வடிவானவர்
ஆனந்தமே வடிவானவர்
ஆனந்தம் என்பது அனுகூலமான ஞானம் -அதாவது நமக்குத் பிடித்ததாக ஏற்பனதாக ஞானம்
பரமாத்மா ஞானமே வடிவானவர் -அந்த ஞானத்துக்குத் தான் மட்டுமே விஷயம் –
தான் தனக்குப் பிடித்தவர் ஆகையாலே தன்னைப் பற்றிய ஞானமும் தனக்குப் பிடித்ததே
ஆகையால் பரமாத்மா என்கிற ஞானம் இயற்கையாகவே பிடித்த விஷயத்தைப் பற்றின
ஞானமே யாகையாலே அதுவே ஆனந்தமும் ஆகிறது –
எனவே பரமாத்மா ஆனந்த வடிவமான ஞானம் ஆகிறார் –
தத்வ த்ரயம் -ஆனந்த ரூப ஞான வடிவாய் இருக்கும் –
கட்டடங்க ஞானம் பிரகாசம்-கட்டடங்க அனுகூலம் –
ஜீவாத்மாவும் ஞான ஸ்வரூபம் -ஞானம் த்ரவ்யம் –

நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் -சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்
ஸூ த்தம் பரம் நிர்மலம் ஏக ரூபம்
ப்ரஹ்மம் அறிவதே ஞானம்

——

பாடம் –33-சரீர ஆத்ம பாவம் –
நம் சம்ப்ரதாயம் -பிரதான பிரதிதந்தரம் -இதுவே

அபேத பேத கடக ஸ்ருதிகள்
வேதங்களில் –ஸர்வம் கலு இதம் ப்ரஹ்ம (சாண்டில்ய வித்யை )-இந்த உலகம் அனைத்தும் ப்ரஹ்மமே -போன்ற இடங்களில்
பரமாத்வாவும் கல் போன்ற அசேதனப் பொருள்களும் ஒன்றே என்று சொல்லப்படுகிறது

அதே போன்று அஹம் ப்ரஹ்மாஸ்மி –தத் த்வம் அஸி -போன்ற இடங்களில்
பரமாத்மாவும் ஜீவாத்மா-சேதனப் பொருள்களும் ஒன்றே கூறப்படுகிறது –
இவற்றுக்கு அபேத ஸ்ருதிகள் என்று பெயர்
பேதம் -வேறுபாடு -வேறுபாடு இல்லை யுரன்கிறபடியால் இவை அபேத ஸ்ருதிகள்

போக்தா போக்யம் ப்ரேரிதாரம் ச மத்த்வா
ஷரம் பிரதானம் அம்ருத அக்ஷரம் பர –ஈசத தேவ ஏக
பிரதான ஷேத்ரஞ்ஞன் பதி குணே ஸஹ -முதலானவற்றில் தெளிவாக
சேதன அசேதன ஈஸ்வர -மூன்றையும் வேதம் சொல்வதால் இவை பேத ஸ்ருதிகள் ஆகும்

இந்த முரண்பாட்டைத் தீர்க்க கடக ஸ்ருதிகள் –
கடகம் -சேர்த்து வைக்கும் -முரண்பட்டவை போன்ற ஸ்ருதி வாக்யங்களை சேர்த்து வைக்கும்
யஸ்ய ப்ருத்வீ சரீரம்
யஸ்ய ஆத்மா சரீரம் -அந்தர்யாமி ப்ராஹ்மணம் -ப்ருஹதாரண்யம்
ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா –இத்யாதி
அந்த ப்ரவிஷ்டா ஸாஸ்தா ஜனா நாம் ஸர்வாத்ம-
இந்த கடக ஸ்ருதிகள் அனைத்தும் சரீர ஆத்ம பாவம் சொல்லும்
உலகம் அனைத்தும் சரீரம் உடல் – உடல் உயிர் தொடர்பு இருக்கிறபடியால் அவை
வெவ் வேறாக இருந்தாலும் ஒன்றே என்றும் சொல்லப் படலாம் –

சரீரம் என்றால் என்ன
ஸ்ரீ பாஷ்யத்தில் ஸ்ரீ ராமானுஜர்
யஸ்ய சேதனஸ்ய யத் த்ரவ்யம் ஸர்வாத்மநா ஸ்வார்த்தும் நியந்தும் தாரயிதும் ச சக்யம்
தத் சேஷதைக ஸ்வரூபஞ்ச ச தத் தஸ்ய சரீரம் -என்று -மூன்று

எந்த ஒரு அறிவாளியாலே எந்த ஒரு த்ரவ்யம் அது இருக்கும் வரை
எப்பொழுதும் தாங்கப்படுவதற்கும்
அதுக்கு இயன்ற செயல்களிலே செலுத்தப்படுவதற்கும்
தகுதி யுடையதோ
மேலும்
அவருடைய மேன்மைக்காகவே உள்ளதோ
அந்த த்ரவ்யம் அந்த அறிவாளியின் சரீரம் -அந்த அறிவாளி தான் ஆத்மா –

இதை நம் உடல் நாம் என்கிற ஜீவாத்மா இடம் பொருத்திப் பார்ப்போம்
நாம் அறிவாளி -இந்த மாம்ச பிண்டம் த்ரவ்யம்
இந்த மாம்ச பிண்டம் நான் என்கிற அறிவாளியால் தங்கப்படுவதற்கும் செலுத்தப் படுவதற்கும் தகுதியானது தான்
நான் என்கிற ஆத்மா வெளியே சென்று விட்டால் இந்த மாம்ச பிண்டம் எழுந்து நிற்காது -எந்தச் செயலும் செய்யாது –
இந்த மாம்ச பிண்டம் என்னுடைய நன்மைக்காகவே உள்ளது
இத்தை சரீரம் என்றும் -நம்மை ஆத்மா என்றும் கூறுகிறோம் –

இதே போலே ஸமஸ்த சேதன அசேதனங்கள் அனைத்துமே ப்ரஹ்மத்துக்கு உடல் ஆகும் -பகவான் அறிவாளி –
இவை அனைத்தும் அவராலேயே தாங்கப்படுகின்றன -இயக்கப்படுகின்றன –
அவருடைய மேன்மைக்காகவே இவை அனைத்தும் உள்ளன
எனவே உலகையே சரீரம் என்றும் ப்ரஹ்மத்தை ஆத்மா என்றும் கூறலாம் –

திட விசும்பு –முழுவதுமாய் அவை அவை தோறும்
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் -சுடர் மிகு சுருதி -ஆழ்வார்

ஒரு ஆத்மா அதன் உடலுக்குச் செய்யும் உதவிகள் இரண்டு
1- சத்தா ஹேதுத்வம்
அந்த உடல் சத்தை -இருப்பு பெறுவதற்கு ஆத்மா தான் காரணம்
அதாவது ஆத்மா உள்ளே இல்லாவிட்டால் அதன் பெயரே மாறி விடும்
சரீரத்தின் சத்தை ஆத்மாவின் சத்தையைப் பொறுத்தது -இதற்கு ஆத்மா விழித்து இருக்க வேண்டும்
தன் அறிவைக் கொண்டு ஒன்றும் செய்யத் தேவை இல்லை உள்ளே ஆத்மா இருந்தால் மட்டுமே போதுமானது

2-உடல் இயங்குவதற்கும் காரணமாக ஆத்மா இருக்கிறார் —
இது அறிவால் செய்யக் கூடிய செயல் —
எனவே ஆத்மா விழித்து இருக்கும் பொழுது தான் இதை ஆத்மா செய்வதை நாம் உலகில் பார்க்கிறோம்

இந்த இரண்டு செயல்களையும் பரமாத்மா
தன்னுடைய சரீரமான உலகு அனைத்தைக்கும் செய்கிறார்

1- பரமாத்மா விபு -எல்லாவற்றையும் விட மிகப் பெரியவராக எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கிறார் –
அப்படி இருந்து கொண்டு அனைத்தையும் தாங்குகிறார்
பூமி அனைத்தையும் தாங்குவது போலே அவர் உலகம் அனைத்தையும் தாங்குகிறார்
ஏஷ சேது விதுரண
ஏதத் ஸர்வம் ப்ரஞ்ஞானே ப்ரதிஷ்டிதம் –
யதா ரத –நாபி -குச்சி -இத்யாதி –போன்ற
ஸ்ருதி வாக்கியங்கள் இத்தைக் காட்டும்
வாஸூதேவ வீர்யேண விதுர் தாணி -சங்கல்ப ஸஹஸ்ர ஏக தேசத்தாலே தாங்குகிறான் –
அவர் ஆசைப்பட்டு -விபுவான ஸ்வரூபத்தால் தாங்குகிறேன் -என்பதால்
சங்கல்பம் ஸ்வரூபம் இரண்டும் தாங்கும் என்பதில் தவறு இல்லை
தார்யமாகைவது -ஸ்வரூப சங்கல்பம் ஒழிந்த போது தன் சத்தை இல்லாத படி இருக்கை –தத்வ த்ரயம் 39-

2-பெரியதாக அனைத்தும் தாங்குவதைத் தவிர மிகச் சிறியவராகவும் இருந்து அனைத்து ஜீவாத்மாக்குள்ளும் இருக்கிறார் –
அங்கு இருந்து கொண்டு அனைத்து செயல்களையும் அனுமதித்து இயக்குகிறார் –
இப்படி உள்ளே புகுந்து இயக்குகிற படியால் அந்தராத்மா -என்றும் பெயர்
அந்த ப்ரவிஷ்டா ஸாஸ்தா ஜனா நாம் ஸர்வாத்ம -ஸ்ருதி இத்தைக் காட்டும் –
நியாம்கை யாவது -புத்தி அதீனமாக எல்லா வியாபாரங்களும் உண்டாம்படி இருக்கை –தத்வ த்ரயம் 38-

தர்ம பூத ஞானம் -அறிவைக் கொண்டே -ஸுபரி -50 சரீரங்களையும் – இயக்கினார் அது போல் இல்லை இல்லாமல்
ப்ரஹ்மம் -உள்ளே இருந்து -அகடி கட நா சாமர்த்தியம் -ஒன்றும் குறையாமல் இங்கும்
சேஷத்வம்–பரகத அதிசய ஆதேய -அவனுக்காகவே -இதுவே இயற்க்கை –
ஆத்மா தாஸ்யம்-ப்ரஹ்மம் ஸ்வாமி – தாஸ்ய பூதா ஸ்வத-இங்கும் அங்கும் –

—–

பாடம் –34-ஜகத் காரணத்வம்

யன் மய ஜகத் ஸர்வம் -கேள்வி ஸ்ரீ விஷ்ணு புராணம்
யதஸ்ய ஏதஸ்ய சராசரம் யார் இடம் இருந்து வந்தது
எங்கே லயித்தது
விஷ்ணு உத்ப்பூதம் -அவன் இடமே ஒன்றி -ஸ்திதி ஸம்யமம் -காத்து -இயக்குகிறார் –
ஜகத் ச ஸஹ -அவரே ஜகத்தாக உள்ளார் -பராசரர்
கீழே அந்தர்யாத்மாவாக இருந்து இயக்குகிறார் பார்த்தோம்
ஸர்வ ஸப்த வாஸ்யன் -பர்யவசானாம்
ஜகத் ஜன்மாதி காரணம் -லக்ஷணம் ப்ரஹ்மதுக்கு

புத்த ஜைன தர்க்க மதம் மூன்றிலும் நுண்ணிய பரம அணுக்கள் சேர்ந்தே உலகில் காணும் பொருள்கள் உண்டாகின்றன
பரம அணுக்களே காரணம் என்பர்
தார்க்கிகர் -வைசேஷிக நியாய மதம் -கொஞ்சம் வாசி இரண்டுக்கும் உண்டு
இவர்களே தார்க்கிகர்
இவர்கள் பரமாத்மாவை ஒத்துக் கொண்டு பரம அணுக்களை உலகமாக உருவாக்குகிறார் -குயவன் ஸ்தானத்தில் –

ஆனால் இது சரி இல்லை
சுருதி விரோதம் –
புலன்களுக்கு அப்பால் பட்ட பரம அணு இருக்க பிரமாணமே இல்லையே
பிரகிருதி மிகப்பெரியது
2-2-தர்க்க பாதம்

சாங்க்ய மதத்தில்
முக்குண -வசத்தில் உள்ள பிரக்ருதியே உலகமாக என்பர்
ஆனால் இது சுதந்திரமாக தானாகவே ஸ்ருஷ்டிக்கும் என்பர்
சேதனன் துணை வேண்டாம் என்பர்
பால் தயிராக தானாகவே மாறுவது போல் என்பர்
காரணத்துக்கும் காரியத்துக்கும் ஒற்றுமை இருக்க வேண்டுமே
உலகில் முக்குண மய பொருள்களைப் பார்ப்பதால் இப்படி சொல்வர்

இதுவும் சரி இல்லை -அறிவற்ற ஒன்றால் இது முடியாதே -அறிவுள்ள சேதனன் வேண்டும்
தானாகவே செய்யும் என்றால் எப்பொழுதும் ஸ்ருஷ்ட்டி அல்லது எப்பொழுதும் பிரளயமாக ஆய்க்கொண்டே இருக்க வேண்டும்
ஸ்ருஷ்ட்டி சம்ஹார வியவஸ்தை கூடாதே
இத்தையே பிள்ளை லோகாசசார்யார் தத்வ த்ரயத்தில் காட்டி அருளுகிறார் –
ஈஸ்வரன் அதிஷ்டானம் இல்லாமல் இது கூடாதே
இது என்னுடையது என்று பயன் படுத்தா விட்டால் பரிமாணம் அடையாதே

ஆகவே பிரகிருதி பிரதானம் தானாகவே மாற முடியாதே
வேதம் ஸ்பஷ்டமாக இத்தைக் காட்டும்

சிலர் நான்முகன் போல் சிறந்த புண்ணியம் செய்த ஆத்மாவே காரணம் என்பர்
இதுவும் கூடாதே
கர்மவசப்பட்டவர் -துக்கப்படுபவர் 0ஆகவே இதுவும் சரியில்லை –

உபநிஷத்துக்கள்
ஸத் -இருக்கும் பொருளே காரணம்
சதேவ சோம்ய-இதம் அக்ரே-சதேவ ஆஸீத் –
சிலர் உண்டாவதும் முன்பு அபாவம் -அஸத் கார்ய வாத நிராசனத்துக்கு சொன்னதே

மேலும் உபநிஷத் ப்ரஹ்மம் காரணம் -ஆத்மா காரணம் -என்றும் சொல்லும்
இவற்றுக்கு முரண்பட்டு இல்லை
சாமான்ய விசேஷ நியாயம்
விலங்கைக் கூட்டி வா மாட்டைக் கூட்டி வா -இரண்டுக்கும் வாசடி இல்லாதது போல்
பொதுவாக சொல்லி பின்பு விசேஷித்து சொல்லலாமே

அதே போல்
இருக்கும் பொருளே காரணம் -ஸத்
பெரிய பொருளே காரணம் -ப்ரஹ்மம்
ப்ரஹ்மம் ஏக அக்ர ஆஸீத்
அதுக்கும் மேலே அறிவுடைய பொருளே காரணம் என்றும் சொல்லும்
ஆத்மா வா இதம் ஏகமே வ அக்ர ஆஸீத்
ஏகோ வை நாராயணா ஆஸீத்
பின்பு நாராயணனே ஒருவராக முன்பு இருந்தார் என்றது –

நிமித்த காரணம் ப்ரஹ்மம் என்னும் இதில் பல கேள்விகள் எழும்
1-உலகில் ஒரு பொருளை படைக்கும் போது –
அவித்யை அறிவின்மை -கர்மம் பாபம் புண்யம் -பர நியோகம் பிறரால் ஏவப்பட்டு படைக்கிறார்கள்
பரமாத்மாவும் அப்படியேயோ

பதில் -ப்ரஹ்மம் நிர் அவத்யம் -நிரஞ்சனம் -அறிவின்மை அற்றவர்
அபஹத பாப்மா -கர்மங்கள் அற்றவர்
ந தஸ்ய ஈசே கச்சன் -யாராலும் ஏவப்படாதவர்
தன்னுடைய இச்சை ஆசையாலேயே ஸ்ருஷ்டிக்கிறார் –

2- இவ்வளவு பெரிய உலகைப் படைக்க சிரமமோ களைப்போ அடைவாரா

சங்கல்ப ஏக தேசத்தாலே படைக்கிறார் -நிஜ இச்சையால் மட்டுமே
நினைத்த எல்லாப் பொருள்களுக்கும் வித்தாய் -முதலில் சிதையாமே -தனக்கு மாறுபாடு விகாரம் இல்லாமல்
மனம் செய் ஞானத்து உன் பெருமை -ஆழ்வார் –

3-அவாப்த ஸமஸ்த காமனாய் இருந்தும் எந்த ப்ரயோஜனத்துக்காகப் படிக்கிறார்
ஜீவர்கள் உலகில் படும் துன்பங்களைக் கண்டால் அவர்கள் நன்மைக்காகப் படைக்கிறார் என்று சொல்ல முடியாதே

லீலை -அச்சமய போகத்துக்காகவே -வேறே பலனை
எதிர்பார்க்காமல்
அரசன் தோட்டத்தில் பந்து விளையாடி வேறே பலனுக்காக இல்லாமல் மகிழ்வது போல்
ந ப்ரயோஜனத்வாத் -ப்ரஹ்ம ஸூத்ரம்
லோகவத் லீலா கைகைவல்யம் –2-1-32-
பாலன க்ரீடநகைரிவ–வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன்
பல பல மாய மயக்குகளால் இன்புறும் இவ்விளையாட்டு உடையான்

4-முக்தி பெற படைக்கிறார் என்றால் எப்படி இது லீலை ஆகும்

உண்மையே தான்
வெகு சிலரே முக்தர் ஆவதால்
லீலையே அதிகமாக கிடைக்கும் பலன்

ஒரு பொருள் எதற்க்காக படைக்கப்பட்டது அதுக்காக இல்லாமல் இருந்தால் சிரிப்பு வருமே
நன்றாக செய்தால் அது போகமாக இருக்கும்
சிரிக்கும் பொழுது கேட்க சொன்ன கதை
எண்ணெய் வாங்க கோணிப்பை எடுக்க சிரிக்க
ஊதியம் உயர்வு கேட்டான்
ஆழ்வாராதிகளைக் கண்டால் போக ரசம் பெறுவான்

லீலா கைவல்யம் -லீலையே பிரயோஜனம்
நின்று நின்று பல நாள் உய்க்கும் இவுடல் நீங்கிப் போய் சென்று சென்று ஆகிலும் கண்டு
உண்டியே உடையே உக்காந்து போகிறவன் எப்பொழுதாவது
ஜென்மம் கழிப்பான் என்று எண்ணி சோம்பாது ஒன்றி ஒன்றி உலகம் படைக்கிறான் -உத்ஸாகத்துடன் –

பிரதானம்-முக்கியம் வேறே –
பிரசுரம் அதிகம் வேறே –
இரண்டு பிரயோஜனங்களும் உண்டு -இரண்டுக்கும் பிரமாணங்கள் உண்டு
முக்தனாக்குவதே பிரதானம் –
ஆசைப்பட்டது எல்லாம் கிடைக்காதே
பிரசுரம் மிகுதி லீலா ரசம் -தான் அடைகிறான் –

5-உலகை அழிப்பது எப்படி லீலை ஆகும்

குழந்தை மண் வீடு கட்டி அழிப்பது போல்

6-ஏற்றத் தாழ்வுகள் காண்கிறோம்
வைஷம்யம் -பாகுபாடு
நைர் க்ருண்யம் -கருணை இன்மை வாராதோ

சா பேஷத்வாத் -தானாகவே செய்ய வில்லையே -கர்மம் அடியாகவே ஏற்றத்தாழ்வுகள்
தவறு செய்யும் குழந்தையை தாய் அடித்துத் திருத்துவது போல்
ஸமோகம் ஸர்வ பூதேஷு அவன் –
கர்மம் அடியாக செய்வதாலும் மண் தின்னும் பிரஜை -நாக்கில் குறி இட்டு அஞ்சப் பண்ணும் மாதாவைப் போல்
ஹித பரன் –
பிரதான காரணம் ஜீவர்களுடைய கர்மங்கள் தான்
நிமித்த காரணம் -பொதுவான காரணம் ப்ரஹ்மம்
குற்றங்கள் வராதே

———–

பாடம் -35-அபின்ன நிமித்த காரணம்
உபாதானமாகவும் ப்ரஹ்மம்
இத்தை மேலே பார்ப்போம்

த்ரிவித–மூன்று வித – காரணங்கள்
1-உபாதான காரணம்
நிலை மாறி கார்யமாவது
உருண்டை வடிவில் இருக்கும் மண் குடம் ஆவது போல் –
மண் உருண்டையை குடத்துக்கு உபாதான காரணம் ஆகும்

சமவாய காரணம் -இத்தை நியாய மதம் சொல்லுவார்
ஸத் கார்ய வாதம் வேதாந்தம்
ப்ராக் பாவம் அபாவம் -நியாய மதஸ்தர்

ஜீவாத்மா நித்யம் -அதுக்கு உபாதானம் என்ன கேட்க வேண்டாமே
அசித் தான் பரிமாணம் அடையும் –

2-நிமித்த காரணம் -யார் ஒருவர் உபாதான காரணத்தை மாற்றுகிறாரோ அவர் –
குயவன் தானே மண்ணை குடம் ஆக்குகிறார்

3-ஸஹ காரி காரணம் -கார்யம் பண்ண உதவும் கருவிகள் -சக்கரம் போல்வன

ப்ரஹ்மமே நிமித்த காரணம் முன்பு பார்த்தோம்

உலகில் நாம் காணும் அனைத்தும் முக்குண வசமாய் இருப்பதால்
உபாதான காரணமும் அப்படியே தானே இருக்க வேண்டும் என்று தோன்றும்
மூலப் பிரக்ருதியே மஹான் இத்யாதிகளாக ஆகிறது என்றும் ஸ்ருதிகள் சொல்லும்
எனவே பிரக்ருதியே தான் உலகுக்கு உபாதான காரணம் என்று சொல்லத் தோன்றும்
ஆனால் வேத வியாசர் இத்தை ஏற்க வில்லை

ப்ரக்ருதிச் ச ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்த அநு பரோ தாத் —1-4-23-

ப்ரக்ருதி ச -உபாதான காரணமும் அவனே
முன்பே நிமித்த காரணம் முடிவானதால்
ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்த-இரண்டு காரணங்களாலும்
இரண்டுடன் முரண்பாடு இல்லாமல் இருக்கும்

கீழே நிமித்த காரணமாக சொன்ன பரமாத்மாவே உபாதான காரணமாக உள்ளார்
அப்பொழுது தான் ப்ரதிஞ்ஜை யோடும் –
எடுத்துக் காட்டும் முரண்பாடு இல்லாமல் இருக்கும்

சாந்தோக்யம் -ஆறாவது அத்யாயம் ஸத் வித்யை –
உத்தாலகர் தனது பிள்ளை ஸ்வேதகேதுவுக்கு உபதேசம்

ஏக விஞ்ஞானம் ஸர்வ விஞ்ஞானம் –ப்ரதிஞ்ஜை-
ஆதேசம் -உலகு அனைத்தையும் இயக்கம் அவனை அறிந்தாயா –
இவனை அறிந்தால் அனைத்தையும் அறிந்தவனாக ஆவாய்
இவனைப் பற்றி கேட்டாயானால் அனைத்தையும் கேட்டதாக ஆகும்

உலகை இயக்கக் கூடிய ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்தது ஆகும் -எடுத்துக் காட்டு-
மண் உருண்டையை அறிந்தால் அதில் இருந்து உண்டாகும் அனைத்தையும் அறிந்தால் போலே
அதே போல் ப்ரஹ்மத்தை அறிந்தால் அனைத்தையும் அறிந்தது ஆகும் என்றால்
ப்ரஹ்மமே உபாதான காரணம் என்றதாகும் –

காலையில் குயவன் வீட்டில் மண் உருண்டையைப் பார்த்து
பின்னால் மதியம் அங்கு இருக்கும் குடம் மடக்கு போன்றவற்றைப் பார்த்து
இவை அனைத்தும் காலையில் பார்த்த மண் உருண்டையை என்று கூறுவதால்
மண் உருண்டையை உபாதான காரணம் என்றதாயிற்று
மேலும் தங்க காசு ஆபரணங்கள் எடுத்துக் காட்டுகளும் சொன்னார்

அதே போல் மரம் கல் துணி நீர் -போன்ற பல பெயர்களோடும் வடிவங்களோடும்
இருக்கும் உலகம் அனைத்தும்
முன்பு ஸத் -ப்ரஹ்மம் -ஆத்மா -நாராயணன் -என்று சொல்லப்படும்
பரமாத்மாவே -வேறே யாரும் முன்பு இல்லை
எனவே அவரே உபாதான காரணமாகவும் நிமித்த காரணமாகவும் உள்ளார் என்று கிடைக்கிறது

ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம்

இதம் அக்ர ஆஸீத்-இவை அனைத்தும் முன் ஸ்ருஷ்டிக்கு முன்னால் –
மண் உருண்டையாகவே இருந்தது போல் இங்கும் -ஸதேவ -ஸத் -பரமாத்மாவேயாக இருந்தன

ஏகமேவ -ஒன்றாகவே இருந்தது -உபாதான காரணம் இதுவே -குடம் தட்டு இவை எல்லாம்
காலையில் மண் உருண்டை பெயர் வடிவத்துடன் இருந்தது போல் -நாம ரூப வேறுபாடுகள் இல்லாமல் –

அத்விதீயம் -இரண்டாவது இல்லாமல் இருந்தது –
மண்ணை அறிந்தால் மண்ணால் உண்டான அனைத்தையும் அறியலாம் -குயவனை அறிய முடியாதே
அது போல் இல்லை
மாற்ற குயவன் போல் தனியாக வேறே ஒருவர் நிமித்த காரணம் இல்லை
இவரைத் தவிர வேறே இல்லை
அபின்ன நிமித்த ப்ரஹ்மம் என்றவாறு

மேலும் குயவன் இந்த மண் உருண்டையை குடம் மடக்கு போன்றவாறாக மாற்றுவேன்
என்று சங்கல்பம் கொள்வான்
பரமாத்மாவோ
நான் பலவாக ஆகப் போகிறேன் -அதற்காக படைக்கப் போகிறேன் -என்று
சங்கல்பம் செய்து கொள்வான் என்று மகன் இடம் கூறினார்

தத் ஐஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேய
நான் இந்த மூலப்பிரக்ருதியைக் கொண்டு பலவற்றையும் ஸ்ருஷ்ட்டிக்கப் போகிறேன் என்று சொல்லாமல்
அந்த பரமாத்மா நானே பலவாக ஆகக் கடவேன் அதுக்காக ஸ்ருஷ்ட்டி செய்யக் கடவேன் -என்றவாறு

தானே -ஸ்வயம் -நிமித்தம்
தன்னை -ஆத்மநாம் -உபாதானம்
தானே தன்னை உலகமாக ஸ்ருஷ்டித்துக் கொள்கிறார்

முதல் தனி வித்தேயோ முழு மூ உலகாதிக்கு எல்லாம் -திருவாய் -10-10-
வித்து
முதல் வித்து
தனி வித்து

உபாதான காரணம் காரியமாக உரு மாற வேண்டுமே
பரமாத்மாவோ அவிகாராயா -விகாரம் மாறுபாடு அற்றவர் அன்றோ
அவிகாராய விகாராய ஸூத்தாயா நித்யாய
நிரஞ்சனம்
அகில ஹேய ப்ரத்யநீகன் -பரிணாமம் அற்றவன்
எவ்வாறு உபாதான காரணம் ஆக முடியும்
இதுக்குப் பதிலாக சிலவற்றைப் பார்ப்போம்

1-மண் உருண்டை குடமாக உரு வாகிறது

2-சிறுவன் முதிர்ந்தவர் ஆகிறான்
சிறியவனாக இருந்த நானே முதிர்ந்தவனாக உள்ளேன் என்பான்
உருவ வேறுபாடு உடலிலே தானே
உள்ளே இருக்கும் ஜீவாத்மாவின் உருவ வேறு பாடு இல்லையே
நிலை வேறுபாடு மட்டுமே உள்ளது
பால்ய அவஸ்தை கொண்ட சரீர விஸிஷ்ட ஜீவாத்மாவே –
யுவா அவஸ்தை கொண்ட சரீர விஸிஷ்ட ஜீவாத்மாக ஆனேன்
ஸ்வரூப மாற்றம் இல்லை -ஸ்வபாவ மாற்றமே

3-ப்ரஹ்மமும் -ஏஷ சர்வ பூத அந்தராத்மா –
இந்த உலகம் அனைத்துமே
பரமாத்மாவால் தாங்கப்பட்டு
இயக்கப்பட்டு
அவருடைய மேன்மைக்காகவே இருக்கிறபடியால்
அவருடைய உடலாகும் என்று பார்த்தோம்

பிரகிருதி மஹானாக ஆகும் பொழுது
ப்ரக்ருதிக்கு அந்தர் ஆத்மாவான ப்ரஹ்மமே மஹானுக்கும் அந்தர் ஆத்மாவான ப்ரஹ்மம் ஆகிறார் -அன்றோ
இதே போல் ஒவ்வொன்றுக்கும் கொள்ள வேண்டும்
காரணமும் காரியமும் ப்ரஹ்மமே
இது தான் சரீர ஆத்ம பாவ ஆச்சார்யம்

எனவே பரமாத்மாவே உலகமாக ஆகிறார் என்றால்
ஸூஷ்ம சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம் —
ஸூஷ்ம சேதன அசேதனங்களை உடலாகக் கொண்ட ப்ரஹ்மமே
ஸ்தூல சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம் –
ஸ்தூல சேதன சேதனங்களை உடலாகக் கொண்ட ப்ரஹ்மம் ஆகிறார் -என்று பொருள்

இங்கு உருவ வேறுபாடு அசேதனப் பொருள்களுக்கே
பரமாத்மாவுக்கு நிலை மட்டுமே வேறுபாடு
உபாதான காரணமாக இருந்தாலும் அவர் அவிகாராயா -விகாரமும் உருவ வேறுபாடும்
இல்லாமலேயே இருக்கிறார் -என்று தெளிவு –

ப்ரஹ்மமே -அபின்ன நிமித்த காரணம் -ஒருவரே உபாதானமாகவும் நிமித்தமாகவும் உள்ளார்
1– யதா ஊர்ண நாபி ஸ்ருஜதே க்ருஹ்ணதே ச (முண்டக உபநிஷத் சொல்லும் )
சிலந்திப் பூச்சி வலை கட்டுகிறது
தானே சங்கல்பித்து முடிவு செய்து பின்னுகிறபடியால் -செய்வதால் நிமித்த காரணம்
அதன் எச்சிலே வலையாக மாறுவதால் அதுவே உபாதான காரணம்

2-பராசர பட்டர் காட்டும் உதாரணம்
ஆண் மயில் பெண் மயிலை மகிழ்விக்க தானே முடிவு செய்து தனது-சரீர ஏக தேசம் -தோகை விரித்து ஆடுகிறது
விளையாட்டு முடிந்த பின் தோகையைச் சுருக்கிக் கொள்கிறது
விரிந்த தோகைக்கு மயிலே நிமித்த உபாதான காரணம்

இதே போல்
ஸ்வம் சரீர ஏவ தேசம் -ஸ்வ இச்சையால் விஸ்திருத –
பரமாத்மாவும் பிராட்டி மகிழ்ச்சிக்காக தானே முடிவு செய்து விளையாட்டாகப் படைத்து –
விளையாட்டு முடிந்ததும் பிரளயம் -தன்னிடமே லயம் அடையச் செய்கிறார் –

ஆக
1-சேதன அசேதன பொருள்களை உடலாகக் கொண்ட –
சேதன அசேதன விஸிஷ்ட பரமாத்மாவே உபாதான காரணம் ஆவார்
2-சங்கல்ப விசிஷ்ட ப்ரஹ்மமே நிமித்த காரணம் ஆவார்
3-ஞான சக்த்யாதி குண விசிஷ்டா ப்ரஹ்மமே ஸஹ காரி காரணம் ஆவார்

————

பாடம் –36- பரமாத்மாவின் பெருமைகள்

யஸ்மாத் பரம் ந பரம் அஸ்தி கிஞ்சித் -அசையாத மரம் போல் ஸ்ரீ வைகுண்டத்தில்
உயர்வு அற -மற்றவர்களின் உயர்வு அறும் படி என்றுமாம்
உலகம் பூர்ணமாக வியாபிக்கப்படுகிறது
விபு ஸ்வரூபம் –
ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்
ஸ்வரூபம் விபு
அனைத்தையும் தாங்கி
அளவுபட்டு ஆத்மாவுக்குள்ளும் அந்தர்யாமி யாகவும் பூர்ணனாக ஒன்றுமே குறையாமல் வியாபிக்கிறார்
இவரே ஜகத் காரணம் -முன்பு பார்த்தோம்

அகில ஹேய ப்ரத்ய நீக -கல்யாணை ஏக தாமம் -ஸமஸ்த இதர வஸ்து விலக்ஷணன்
விசிஷ்டம் என்றால் சேர்ந்தது
அத்வைதம் -இரண்டாவது இன்மை
சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம்
ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறே உயர்ந்த பொருள் உண்டு என்கிற அதிசங்கை -ப்ரஹ்ம ஸூத்ரத்தில் விசாரம்
ப்ரஹ்மத்தை சேது என்பதாலும்
அவருக்கு அளவுண்டு என்பதாலும்
அம்ருதம் எனப்படும் பரமாத்மாவை அடைய ப்ரஹ்மமே வழி என்பதாலும்
உயர்த்தத்தைக் காட்டிலும் உயர்ந்தவர் என்பதாலும்
ப்ரஹ்மம் வேறே பரமாத்மா வேறே என்று அதிசங்கை வருமே

பராதிகரணம் –3-1-விசாரம்
3-1-30- நான்கு காரணங்களையும் காட்டும்
ப்ரஹ்மம் சேது என்பது பாலம் என்ற பொருளில் இல்லை
உலகம் அனைத்தையும் அதன் அதன் இடத்தில் நிலை நிறுத்தி வைப்பவர் என்கிற பொருளில் வந்ததே
அணை -நதிகளை -இரண்டு புறத்திலும் உள்ளவற்றை கலக்காமல் இருப்பது போல்
ஸமஸ்த வஸ்துக்களும் அவை அவை நிற்க காரணமே இவனே -யேஷாம் லோகான் அசம்பாவத
ப்ரஹ்ம் அளவுபட்டு தன்னை அமைத்துக் கொள்வது தியானத்துக்கு உதவுவதற்கே
உன்மானம் -நான்கு கால் -16 கலைகள் -இத்யாதி இதற்காகவே
புத்யர்த்தா பாதவத் –த்ரிபாத் விபூதி -லீலா விபூதி சொல்வது போல் –
ஐஸ்வர்யம் சொல்லவே வந்தது
சம்பந்தம் –அம்ருதம் -இவர் சேது வழி
அம்ருதஸ்ய ஏஷ சேது -தன்னை அடைய தானே வழி என்கிறது
வழி என்பதால் மட்டும் அடையப்படும் வஸ்து வேறே என்பது இல்லை
பேத அபேதம் சொல்ல வந்தது இல்லை
பராத்பரன் -புருஷன் உபைதி
அனைத்தையும் காட்டிலும் உயர்ந்தவர்

சர்வ கர்ம ஸமாராத்யாம்
பரமாத்மாவை மகிழ்விக்கவே அனைத்தும் –
அனைத்து தேவதைகளுக்கும் அந்தராத்மாவாக இருந்து
வாசனைக்கு ஏற்ப –கர்மம் அடியாக -லௌகிக விஷயங்களில் செல்ல -பசு மாடு வீடு வாசல் சுவர்க்கம் ஆசை –காம்ய கர்மங்கள்
அந்த அந்த தேவதையை ஆராதனம் செய்து அல்ப பலன்கள் பெறுகிறார்கள்
அவற்றுக்கு அந்தர்யாமியாக பரமாத்மா இருப்பதை அறிந்து த்யானத்தில் முக்தர் ஆகிறார்கள்
அஹம் ஹி சர்வ யஞ்ஞானாம் போக்தா ச பிரபுரேவ ச
அனைத்து யாகங்களாலும் இவனே பூஜிக்கப்படுகிறான் -இவனே பலன்களையும் அளிக்கிறான்
பலம் அத உப பத்தே –3-2-37-
அனைத்து பலன்களையும் ப்ரஹ்மமான பரமாத்மாவே வழங்குகிறார் -என்கிறார் வேத வியாசர் –
சர்வ தேவ நமஸ்கராம் கேசவன் கச்சதி -நதிகள் கடலில் சேருவது போல்
3-2-40-சேது வியாபதேசாத் –
வாயு தேவதை வேகமாக பலன் கொடுக்கிறார் வேதம் சொல்லும்
அபூர்வம் மட்டும் பலன் என்ன கூடாது
அந்தர்யாமியாக இருக்கும் ப்ரஹ்மமே பலன் அளிப்பார் இந்த்ராதிகள் அல்ப ஆயுஸ் -அன்றோ –
புண்யம் அபுண்யம் அவனது ப்ரீதியும் அப்ரீதியும்

ப்ரஹ்மம் நிர்குணம் என்றும்
ச குணம் -ஸர்வஞ்ஞன்
ஞான பல ஐஸ்வர்யா வீர்ய சக்தி தேஜஸ் கருணை உதாரம் சவ்ஸீல்யாதி குணங்கள் உண்டு என்றும் ஸ்ருதிகள் கூறும்
சமுச்சயமாக கொள்ளக் கூடாது இவை இரண்டையும்
விகல்பம் -என்றும் கொள்ள முடியாது
பொய் சொல்லக்கூடாது
கல்யாணத்துக்கு பொய் சொல்லலாம்
ஓன்று விதி -உத்சர்க்கம்
மற்ற ஓன்று அபவாதம் -விதி விலக்கு
கல்யாணம் போன்ற இடங்களில் தவிர பொய் சொல்லக்கூடாது என்றே கொள்ள வேண்டும்
உத்சர்க்க அபவாத நியாயம்
அதே போல் தீய குணங்கள் கிடையாது -நிர்குணம் -அபஹத பாப்மா -இத்யாதிகள்
ஆனந்தம் வள்ளல் தன்மை இத்யாதி இருந்தால் தானே பலன்களைக் கொடுக்க முடியும்

திவ்ய மங்கள விக்ரஹம் உண்டு
ஹிரண்மயம் -கப்யாஸம் புண்டரீக அக்ஷிணீ
ஸ்வரூப ரூப குணங்களைக் காட்டிலும் அத்யந்த அபிமதமாய் இருக்குமே -பிள்ளை லோகாச்சார்யார்
கருணை- -ஆத்ம குணம்
ஸ்வ அனுரூபமாய்
நித்தியமாய் ஏக ரூபமாய் ஸூத்த ஸத்வமாய்
சேதன தேகம் போலே ஞான மயமான ஸ்வரூபத்தை மறைக்கை அன்றிக்கே
மாணிக்கச் செப்பிலே பொன்னை இட்டு வைத்தால் போலே இருக்க
பொன்னுருவமான திவ்யாத்ம ஸ்வரூபத்துக்கு ப்ரகாசமாய்
நிரவதிக தேஜோ ரூபமாய்
ஸுகுமார்யாதி கல்யாண குண கண நிதியாய்
யோகி த்யேயமாய்
சகல ஜன மோஹனமாய் -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரமாய்
ஸமஸ்த போக வைராக்ய ஜனகமாய் -சிற்றின்பம் நீயும் அவளும் நிற்க கண்ட சதிர் கண்டு ஒழிந்தேன்
ருசி ஜனக விபவ லாவண்யம்
நித்ய முக்த அனுபாவ்யமாய்
வாசத்தடம் போலே சகல தாப ஹரமாய் -ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்த –
அநந்த அவதார கந்தமாய்
ஸர்வ ரக்ஷகமாய்
சர்வ ஆஸ்ரயமாய்
அஸ்திர பூஷண பூஷிதமாய் இருக்கும் –

இதில் ஐந்து நிலைகள் உண்டே
1-பரத்வம் -ஸ்ரீ வைகுண்டத்தில் -தர்மாதி பீடம் -வீற்று இருந்த -திரு மேனி -பாட்டு கேட்க்கும் இடம் – நாராயண ஸ்ரீ மான்

2-வ்யூஹம் -திருப்பாற்கடலில் ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹாரம்
வாசுதேவன் -சங்கர்ஷணன் -ப்ரத்யும்னன் -அநிருத்தனன் -தன்னையே வ்யூஹித்து பிரித்து ஸேவை
உந்தித்தாமரையில் நான்முகனைப்படைத்து -கூப்பீடு கேட்க்கும் இடம் -ஷீராப்தி நிகேதன

3-விபவம் -ராமர் கிருஷ்ணன் -ஆகாதா மதுராம் புரீம் -அவதார ரஹஸ்யம் —
இச்சா க்ருஹீத -அப்ராக்ருதம் -சம்பவாமி யுகே யுகே -பூதானாம் ஈஸ்வரோபிசன் –
பரித்ராணாம் ஸாதூ நாம் –தொழும் காதல் களிறு அளிப்பான்
விநாசாய துஷ்க்ருதாம்
தர்ம சமஸ்தானநார்த்தம் -தானே தர்மம் -என்று காட்டி அருளி -கிருஷ்ணம் தர்மம் சனாதனம் -ராமோ விக்ரஹவான் தர்ம –
ஜென்ம கர்ம மே திவ்யம்

4-அந்தர்யாமி
உதாசீனம் -அனுமதி -சர்வ நியந்தா –
இரண்டு வகை
த்யானிப்பவர் -எளிதில் தியானிக்க சின்னவடிவில் ஹ்ருதய புண்டரீகாக்ஷம்
அங்குஷ்ட மாத்ர புருஷ
அகம்படி வந்து புகுந்து
கருட உத்சவம் நம்மாழ்வார் உள்ளத்தில்
த்யானம் மனிதர்களுக்குள் சிலருக்கு மட்டுமே

5-அந்தர்யாமி -சத்தை நியாந்தாவாக அனைத்திலும் உருவம் இல்லாமல்
இப்படி இரண்டு வகை
அர்ச்சை –
கோயில்களிலும் க்ருஹங்களிலும்
அர்ச்சனை பராதீனன்
ப்ரதிமா அப்ரதிபத்தி -சம தர்சனம் -ஒவ்வொரு ஜீவர்களுக்குள்ளும் பரமாத்மா இருப்பதை உணர்வார்கள் இல்லாதாருக்காக
பரதவ ஸுலப்யம் இரண்டிலும் எல்லை அர்ச்சையிலே

———

பத்து அத்ரவ்யங்கள் -மேல் பார்ப்போம்
உண்மை பொருள்கள் ஆறு வகை த்ரவ்யங்கள் இவை தான்
தத்வம் அறிந்து
புருஷார்த்தம் நிஷ்கர்ஷித்து
ஹிதம் பார்த்து
வேதாந்தம் நிகமிப்போம்

———

பாடம் -37-அத்ரவ்யங்கள்
இது வரை ஆறு த்ரவ்யங்கள்
1-ப்ரக்ருதி
2-ஸூத்த ஸத்வம்
3-காலம்
4-ஜீவாத்மா
5-பரமாத்மா
6-இருவடைய தர்ம பூத ஞானம் -பார்த்தோம்
முக்காலத்திலும் உள்ளவற்றை – யுகபத் -ஸர்வ -ஸூத இயற்கையாக அறியும்
ஸர்வஞ்ஞன்-பரமாத்மாவுக்கு தர்ம பூத ஞானம் உண்டே

இனி அத்ரவ்யங்கள் -த்ரவ்யம் அல்லாதவை
நியாய மாதத்தில் இவற்றையே குணங்கள் என்று -சொல்கிறார்கள்
குணமானது த்ரவ்யத்தை விட வேறு பட்டது என்பர் அவர்கள்
வேதாந்தத்தில் அப்படி அல்ல
குணமானது எப்பொழுதும் வேறே ஒரு பொருளை அண்டியே இருக்கும் –
ஆஸ்ரயத்து பிரிக்க முடியாமல் இருக்கும் –
அது த்ரவ்யமாகவோ அத்ரவ்யமாகவோ இருக்கலாம்
தர்ம பூத ஞானம் த்ரவ்யமாக இருந்தாலும் ஆத்மாவை ஆஸ்ரயித்து இருக்கும்
ஸத்வாதி முக்குணங்கள் -அத்ரவ்யங்கள் -பிரக்ருதியை ஆஸ்ரயித்து இருக்கும்

விசிஷ்டாத்வைத மதத்தில் 10 அத்ரவ்யங்கள்
1-ஸத்வம்
2-ரஜஸ்
3-தமஸ்
4-ஸப்தம் -ஒலி
5-ஸ்பர்சம் -வெப்பம்
6-ரூபம் -நிறம்
7-ரஸம் -சுவை
8-கந்தம் -மணம்
9-ஸம்யோகம் -சேர்க்கை
10-சக்தி -திறன்-potency -ஆகியவை இவை –

பிரகிருதியின் பண்புகள்
1-ஸத்வம்
ஞானம் ஸூகம் பாரமின்மை ஆகிய தன்மைகளுக்குக் காரணமான –
புலன்களுக்கு அப்பால் பட்ட – சக்தியைக் காட்டிலும் வேறுபட்ட ஒரு அத்ரவ்யம் தான் ஸத்வம்
ப்ரகாஸம் -ஸூகம் -லாகவம் -மூன்றுக்கும் காரணம் —அதீந்த்ரியம் -திறமை -சக்தி -அத்தை விட வேறு பட்ட -அத்ரவ்யமாய் இருக்கும்
மனஸூக்கும் இவை ஒத்து வரும் -ஆகவே அத்ரவ்யமாக என்று லக்ஷணம்
இது ஸூத்த ஸத்வம் என்னும் அசேதனப் பொருளில் தனியாக இருக்கும்
மிஸ்ர தத்வம் -ப்ரக்ருதி -என்ற அசேதனப் பொருளில் ரஜோ தமோ குணங்கள் உடன் கூடி இருக்கும் –

2- ரஜஸ் –
ராக த்ருஷ்ணா ப்ரவ்ருத்தி -ஆசை பற்று முயற்சி -மற்றும் பேராசை முதலானவற்றுக்குக் காரணமாயும்
புலன்களுக்கு அப்பால் பட்ட சக்தியைக் காட்டிலும் வேறுபட்ட ஒரு த்ரவ்யம் தான் ரஜஸ்

3- தமஸ்
பிரமாத மோஹாதி நிதானம் -கவனமின்மை சோம்பல் தூக்கம் முதலானவற்றுக்குக் காரணமாயும்
புலன்களுக்கு அப்பால் பட்ட சக்தியைக் காட்டிலும் வேறுபட்ட ஒரு த்ரவ்யம் தான் தமஸ்

இவை மூன்றும் பிரகிருதியின் குணங்கள் -ப்ரக்ருதியுடன் தொடர்பு கொண்ட ஆத்மாவையும் தாக்கக் கூடியவை
இவை -ப்ரவாஹதோ நித்யம் -அழியக் கூடியவையாக இருந்தாலும் தொடர்ச்சியாக எல்லாப் பொருள்களிலும் இவை இருக்கும்
பிரளயத்தில் ஸமமான திசையிலும்
ஸ்ருஷ்டியில் ஏற்றத் தாழ்வுகளுடன் இருக்கும் –

சாங்க்ய மாதத்தில் இவை த்ரவ்யங்கள்
நம் சித்தாந்தத்தில் இவை அத்ரவ்யங்கள் -பிரகிருதியின் பண்புகள் தான்

பஞ்ச பூதங்களின் பண்புகள்
4-ஸப்தம் -நம் காதால் கேட்கப்படும் அத்ரவ்யம்
இது ஆகாசத்தில் குணம்
பஞ்சீ கரணத்தால் மற்றவற்றிலும் உள்ளது
ஆகாசத்தோடு தோன்றி மறையும் பொருள்

நித்யர்களுக்கு அப்படி அல்லவே
ஆகவே அஸ்மதாதி நம் போல்வாருடைய காதால் கேட்கப்படும் என்று லக்ஷணம்
ஸப்தம் நித்ய விபூதியிலும் உண்டு -அப்ராக்ருத பஞ்ச உபநிஷத் –
இங்கு இருப்பவரால் க்ரஹிக்கப்படும் சப்தத்வம்
வேறு பட்டத்தைக் காட்டிலும் வேறுபட்டது -விஜாதீயம் -ரூபாதிகளை காட்டிலும் வேறு பட்டதாய் அங்குள்ள ஸப்தம்
விஜாதீய வ்யாவ்ருத்தம் –என்று லக்ஷணம்

இது இரண்டு வகைப்படும்
வர்ணம் -எழுத்தாக இருக்கும் ஒலி
அவர்ணம் -எழுத்து அல்லாத ஒலி -மிருதங்க ஒலி போல்வன –
தொலைவில் உள்ள ஒலியை காது சென்று க்ரஹிக்கிறது என்றும்
அவ்வொலி வாயு மூலம் பயணித்து நம் காதை அடைகிறது என்றும் இரண்டு கருத்துக்கள் உள்ளன –
தொலைவில் ஒலி கேட்க்கிறது -அருகில் -கிழக்கில் இருந்து ஒலி வருகிறது என்கிறோம் –
ஸ்ரோத்ரிய இந்திரியம் பிரயாணித்து அறிகிறது என்றே கொள்ள வேண்டும் –

5-ஸ்பர்சம் -நமது ஸ்பர்ச இந்த்ரியத்தால் -தோலால் -அறியப்படும் அத்ரவ்யம்
இங்கும் விஜாதீய வ்யாவ்ருத்தம் என்பதை அப்ராக்ருத ஸ்பர்சம் சொல்ல லக்ஷணம் –
வெப்பம் என்ற ஸ்பர்சம் நெருப்பிலும்
குளிர்ச்சி என்ற ஸ்பர்சம் நீரிலும்
நடுவான ஸ்பர்சம் பிருத்வியிலும் வாயுவிலும் இருக்கும்
மென்மை -கடினத் தன்மை -ஆகியவையும் ஸ்பர்சத்தின் வகைகள் தான்
நியாய மதத்தில் -கடினம் மென்மை- ஸம்யோகம் என்பர் -சேர்க்கையும் சேர்க்கை இன்மையுமே என்பர்
பிருத்வியாலான பொருள்களில் வெப்பத்தின் தாக்கத்தால் ஸ்பர்சம் மாறக்கூடும் -இதற்கு பாகம் -என்று பெயர் –
மாங்காய் அரிசிக்குள் வைத்தால் மாம்பழம் ஆவது போல் -பால் தயிர் ஆவது போலவும் –

6-ரூபம் -நம் கண்ணால் மட்டும் அறியப்படும் அத்ரவ்யம்
இங்கும் விஜாதீய வ்யாவ்ருத்தம் என்பதை அப்ராக்ருத ரூபம் சொல்ல லக்ஷணம்
வெளுப்பு கருப்பு சிவப்பு மஞ்சள் -என்று நான்கு நிறங்கள் உண்டு
மஞ்சள் சிவப்பின் ஒரு வகை என்பாரும் உண்டு –
த்ரிவிக்கரணம் -என்பதால் இம் மூன்றும் -வெளுப்பு கருப்பு சிவப்பு –
மேலும் ஒளி விடக்கூடியது -ஒளி விடாதது -என்றும் பாகுபாடு உண்டு
நெருப்பில் ஒளி விடும் –lustrous -சிவப்பு
நீரில் ஒளி விடும் வெள்ளை
பிருத்வியில் ஒளி விடாத நான்கு (மூன்று)நிறங்களும் இருக்கும்
சித்ர ரூபம் -கலந்த நிறம் நியாய மாதத்தில் உண்டு என்பர்

7-ரஸம்-நமது ரசன இந்த்ரியத்தால் -நாக்கால் -அறியப்படும் அத்ரவ்யம்
இங்கும் விஜாதீய வ்யாவ்ருத்தம் என்பதை அப்ராக்ருத ரஸம் சொல்ல லக்ஷணம்
இனிப்பு புளிப்பு உவர்ப்பு கார்ப்பு துவர்ப்பு கசப்பு -என்று ஆறு வகைகள்
இது பிருத்வீ ஜலம் இரண்டிலும் இருக்கும் –

8-கந்தம் -நம் க்ராண இந்த்ரியத்தால் அறியப்படும் அத்ரவ்யம்
இங்கும் விஜாதீய வ்யாவ்ருத்தம் என்பதை அப்ராக்ருத கந்தம் சொல்ல லக்ஷணம்
ஸூரபி-நறு மணம் -துர் நாற்றம் என்று இரண்டு வகைகள்
இது பிருத்வியில் மட்டும் இருக்கும் –

பஞ்சீ கரணத்தால் எல்லாவற்றிலும் எல்லாமும் பார்க்கிறோம்

அனைத்து த்ரவ்யங்களின் பண்புகள்
9-ஸம்யோகம்
இரண்டு த்ரவ்யங்களின் இடையில் இருக்கும் சேர்க்கை
சம்யுக்த ப்ரயுக்த நிமித்தம் -ஸம்யோகம்
இது
1-உண்டாகக் கூடியது
இரண்டு அளவு பட்ட பொருள்கள் அல்லது
ஒரு அளவு பட்ட பொருள் மற்ற ஒரு அளவு படாத பொருள் –
இடையே இருக்கும் தொடர்பு –
காலம் -எங்கும் உள்ளது -இங்கு ஸம்யோகம் -நான் நகர்ந்து -அங்கு ஸம்யோகம்
ஒரு நாள் உண்டாகும் -ஒரு நாள் அழியும்
2-உண்டாகாதது
இரண்டு அளவற்ற பொருள்களுக்கு இடையே தொடர்பு -என்பது எப்பொழுதும் இருக்கும்
பரமாத்மா காலம் ஸம்யோகம் நித்யம்

உண்டாகக் கூடிய ஸம்யோகம் இரண்டு வகைப்படும்
1-இருவரின் செயலால் உண்டானது -உபய க்ரியா ஜன்ய ஸம்யோகம்
இரண்டு மிருகங்கள் மோதிக் கொள்ளும் போது ஏற்படும் சேர்க்கை போல்வன
2-ஒருவர் செயலால் உண்டாவது
பறவை பறந்து வந்து ஒரு தூணில் அமர்ந்தால் ஏற்படும் ஸம்யோகம்

ஸம்யோகம் என்பது அனைத்து விதமான த்ரவ்யங்களிலும் உண்டு –
ஸம்யோகம் இல்லாத ஒரு பொருள் த்ரவ்யமாகவே இருக்க முடியாது
அத்ரவ்ய லக்ஷணமே ஸம்யோகம் இல்லாத பொருள்
நிறம் பொருளில் தொடுவது வேறே– இரண்டு த்ரவ்யங்கள் சேர்க்கை வேறே தானே

10-சக்தி
ஒரு பொருளுக்கு -காரணத்துக்கு -மற்ற ஒரு பொருளை -காரியத்தை -உண்டாக்கும் திறன் தான் சக்தி
ஸர்வ காரணத்வம் -மல்லிகைப் பூ மணம் -போல் ஒவ் ஒன்றிலும் சக்தி உண்டு
இது தர்க்கத்தாலும் வேதத்தாலும் நிரூபிக்கப் படுகிறது

நெருப்பு காகிதத்தை எரிக்கும்
சந்த்ர காந்த மணியை அருகில் எடுத்து வந்தால் நெருப்பால் காகிதத்தை எரிக்க முடியாமல் போகும்
நெருப்பில் இருந்த அந்த எரிக்கும் சக்தி திறன் சந்த்ர காந்த மணியால் அழிக்கப் படுகிறது
இப்படி தர்க்கத்தால் சக்தி என்று ஓன்று உண்டு என்று அறியலாம்
ஸாஸ்த்ரங்களும்
சக்த்ய ஸர்வ பாவாநாம் அசிந்த்ய ஞான கோசரா –
அனைத்துப் பொருள்களுக்கும் சக்தி என்கிற விசித்ர தன்மை -நம்மால் எண்ணிப் பார்க்க முடியாததாய் உள்ளது

நியாய மதம் –மணி பிரதிபந்தகம் தடை தான் சக்தி என்று ஒன்றைக் கொள்ள வேண்டாம் என்பர்
சுருதி சொல்வதால் நாம் ஒத்துக் கொள்கிறோம்
இது அதீந்த்ரியம் -கார்யம் பார்த்து சக்தி இருப்பதை அனுமானிக்க வேணும்

இது த்ரவ்யங்களில் மட்டும் அல்லாமல்
அத்ரவ்யங்களிலும் கூட இருக்கும்
அவையும் ஏதோ ஒரு கார்யத்தைச் செய்கிறபடியால் –

நியாய மாதத்தில் 24 குணங்கள் உண்டு என்று முன்பு பார்த்தோம்
இவை அனைத்தையும் இந்த ஆறு த்ரவ்யங்கள் பத்து அத்ரவ்யங்களில் அடக்கலாம்

புத்தி -ஸூகம் -துக்கம் -இச்சா -த்வேஷம் -ப்ரயத்னம் -தர்மம் -அதர்மம் -ஸம்ஸ்காரங்கள் —
ஆகிய எட்டும் ஞானம் என்ற த்ரவ்யத்தின் வெவ்வேறு நிலைகள்
புத்தி -ஸூகம் -துக்கம் -இச்சா -த்வேஷம் -ப்ரயத்னம்-ஆத்மாவின் தர்மபூத ஞான வகை
தர்மம் -அதர்மம்-ப்ரீதி கோபம் -அவனது ஞானம் வகை
ஸம்ஸ்காரங்கள்-பாவனா -பதிவு -வேகம்-ஸ்திதி ஸ்தாபனம் elasticity -ஸம்யோகம் -சேர்க்கையின் தன்மை தானே

விபாகம் ப்ருதக்த்வம் -இவை ஸம்யோகத்தின் இன்மை தான்

பரத்வம் அபரத்வம் இரண்டுமே ஒரு பொருளுக்கு காலத்தோடும் தேசத்தோடும் உள்ள தொடர்பு -ஸம்யோகம் -தவிர வேறு இல்லை

சம்க்யை -எண்ணிக்கை -பரிமாணம் -அளவு -த்ரவத்வம் -த்ரவத்தன்மை -ஸ்நேஹம் பசைத்தன்மை பிசுபிசுப்பு ஆகியவை
அந்த அந்தப் பொருள்கள் தான் தவிர தனியாக அத்ரவ்யங்கள் அல்ல

குருத்வம் -எடை -என்பது சக்தியின் ஒரு வகை தான்

ரூபம் ரஸம் கந்தம் ஸ்பர்சம் ஸப்தம் ஸம்யோகம் ஆகியவை அப்படியே ஏற்கப் பட்டுள்ளன

———-

பாடம் –38-புருஷார்த்தங்கள்

தத்வம் ஒன்றாகவும் ஏகோ மஹா யோகி –
தத்வ த்ரயம் – விஸிஷ்ட அத்வைதம் –
அவனையே ஆஸ்ரயத்து ப்ரஹ்மாத்மகமாக சேதன அசேதனங்கள்
தத்வம் பற்றி முன்பு பார்த்தோம்

புருஷன் எனப்படும் ஜீவாத்மாவால் -ஆசைப்பட்டு -வேண்டப்பட்டு -பெறப்படுவது
புருஷார்த்தம் என்று சொல்லப் படுகிறது
அர்த்தம் பிரயோஜனம் என்றுமாம் –
இவை தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் என்று நான்கு வகைப்படும்

தர்மமாவது –
தர்மம் -வேதம் சொன்னபடி -செய்வது -யாகம்-செயல் தானே அதுவே பயனாகுமோ -என்னில்
பிராணிகளின் ரக்ஷணத்துக்காகப் பண்ணும் செயல்கள் தர்மமாவது-
குளம் வெட்டுவது அன்னதானம் போல்வன –
தார்மிகர்
தன்னைப் பற்றி நினைக்காமல் பிராணி ரக்ஷணம் -அதுவே பிரயோஜனம்
கியாதி லாபமாக கருதாமல் தர்மமே பயனாக செய்பவர் –
அறம் -என்றாலே தனக்குச் செய்வது இல்லையே

அர்த்தமாவது –
பொருள் -தனம் -அத்தைக் கொண்டு தானே அனுபவிப்பத்தைச் சொல்ல வில்லை –
அவரவர் வர்ணாஸ்ரம தர்மத்துக்கு ஏற்ப செல்வம் தான்யம் முதலான வற்றைக்
நியாயமான முறையிலே ஈட்டி -தேவதைகளுக்கோ பித்ருக்களுக்கோ பிராணிகளுக்கோ
உத்க்ருஷ்டமான தேச கால பாத்ரங்களை அறிந்து -தர்ம புத்யா –
நன்மை செய்யும் வகையில் தர்ம புத்தியுடன் செலவிடுகை

காமமாவது
ஐஹ லௌகிகம் என்றும் பார லௌகிகம்-என்றும் இரண்டு வகைப்படும் –

இஹ லோகத்தில் காமமாவது –
தந்தை தாய் ரத்னம் செல்வம் தான்யம் வஸ்த்ரம் உணவு மக்கள் நண்பர்கள்
மனைவி மாடு வீடு நிலம் சந்தனம் வெற்றிலை மலர்கள் முதலான பொருள்களைக் கொண்டு
ஸப்தம் ஸ்பர்சம் ரூபம் ரஸம் கந்தம் ஆகியவற்றை அனுபவித்து ஸூகப்படுகை –

பர லோகத்தில் காமமாவது –
இதில் விலக்ஷணமாய் -தேஜோ ரூபமான –
ஸ்வர்க்காதி லோகங்களுக்குச் சென்று பசி தாகம் சோகம் மோஹம் மூப்பு மரணம் முதலானவை இல்லாமல்
சேர்த்து வைத்த புண்யத்துக்கு ஈடாக ஸப்தம் முதலான விஷயங்களை அனுப்பவிக்கை

மோக்ஷம் -விடுபடுதல்
உடல் -சம்சாரம் -பிரகிருதி -கர்மங்கள் -பிறவி சுழலில் இருந்து
அடையும் இடத்தைப் பொறுத்து இரண்டாக
கைவல்ய ப்ராப்யம்
பகவத் ப்ராப்யம்
ஆக ஐந்து புருஷார்த்தங்கள் என்றும் சொல்லலாம் –

ஆத்ம அனுபவமாவது –
ஸம்ஸாரத்தைத் தொலைத்து-துக்க நிவ்ருத்த மாத்ரமான –
ஸூக வசிவமான ஆத்மா தன்னைத் தானே அனுபவித்துக் கொண்டு
தனிமையில் உடல் கூட இல்லாமல் என்றும் இருத்தல்

பகவத் அனுபவம் என்று சொல்லப்படும் உயர்ந்த புருஷார்த்தமான மோக்ஷமானது
கர்மங்கள் ஸம்ஸாரம் முதலானவற்றை துறந்து லீலா விபூதியைக் கடந்து நித்ய விபூதிக்குச் சென்று
அங்கு ஸ்ரீ வைகுண்டம் என்ற இடத்தில் ஸ்ரீ மன் நாராயணனை அனுபவித்துக் கைங்கர்யம் செய்வது –

ஜீவனம் salvation -மட்டுமே
உஜ்ஜீவனமே நமக்கு -பரம புருஷார்த்தம்
திரு நாராயணன் தாள் காலம் பெற சிந்தித்து இருமின்

மோக்ஷம் இஷா முமுஷு
ப்ராப்யம் ப்ராபகம் -பயன் -வழி -பேறும் ஆறும் -விருந்தும் மருந்தும்
பயனை அறிந்த பின்பே வழிகளை அறிய வேண்டும் –

மோக்ஷம் அடையும் முறை
ஜீவன் ஏதோ ஒரு உபாயத்தைப் பற்றி மோக்ஷம் அடைய முயற்சிக்கும் பொழுது
அவனுடைய பாபங்கள் பகவானால் நீக்கப் படுகின்றன

4-1-13-தத் அதிகமே -உத்தர அக பூர்வ அக யோகோ அஸ்லேஷ விநாச

தத் அதிகமே-உபாயம் கைகூடி விட்டால்

நாம் செய்த புண்ய பாபங்களில்
பயன் கொடுக்கவே தொடங்காதவற்றுக்கு ஸஞ்சித கர்மம் -என்றும் பெயர்
இந்த மூட்டையில் இருந்து சிலவற்றை -ஆரப்தம் -தொடங்கப்பட்டவை –
பலன் கொடுக்கத் தொடக்கி விட்டதை பிராரப்த கர்மம் என்றும் –

இவற்றில் தீயில் இட்ட பஞ்சு போலே -சஞ்சித கர்மத்தை -பூர்வ அகத்தை -பகவான் அழிக்கிறார்

உபாயம் செய்த பிறகு மேல் உள்ள காலத்தில் இவன் செய்யும் பாபங்களை -உத்தர அகத்தை
அந்த ஜீவனிடம் ஒட்டாதபடி செய்கிறார் –

பிராரப்த கர்மத்தை அவர் அழிப்பது இல்லை –
பல பிறவிகள் ஆனாலும் அதன் பயனை அந்த ஜீவன் அனுபவித்தே முடிக்க வேண்டும் –

அடுத்த ஸூ த்ரம் –இதர பாதே து –புண்யங்களையும் போக்கி அருளுகிறார்
மோக்ஷத்துக்கு விலக்கு -பொன் விலங்கு இவையும் முமுஷுக்கு

அநாரப்த கார்யே -சஞ்சித ஒன்றுமே
போகேந -அனுபவித்தே போக்க வேண்டும் பிராரப்த கர்மாக்களை
ஒரு பிறவியே பலவோ-பக்தி யோக நிஷ்டனுக்கு
பிராரப்த கர்மம் இருந்தால் தான் -மரணம் அடைந்தால் முக்தி -மரணம் அடைவித்து முக்தி இல்லையே

அந்த ஜீவனிடம் இருந்து விலகுகிற சஞ்சித கர்மாவில்
புண்யங்களை இவனுடன் பிரியத்தோடு அனுகூலராய் இருப்பவர்களையும்
பாபத்தை இவனை வெறுப்பவர்கள் -பிரதிகூலராய் இருப்பவர்களையும் அடையும்
3-3-26-இத்தைச் சொல்லும் –

எப்பொழுது போகும் –
குதிரை சிலிர்த்து மயிர்களை தள்ளி
ராகு இடம் பிடிப்பில் இருந்து சந்த்ர ஸூர்ய விடுபடுவது போல்
உடல் நீங்கும் பொழுது பாப புண்யங்கள் போகும் என்றும்
விரஜையில் நீராடிய பின்பே அனைத்தும் நீங்கும்
இரண்டும் சுருதியில் உண்டே

கடைசி உடல் எப்பொழுது விழுகிறதோ அப்பொழுது தான் அனைத்து கர்மங்களும் தொலைக்கப் படுகின்றன
அதற்குப் பிறகு இந்த உலகத்தைக் கடந்து முக்தி அடைய இந்த ஜீவாத்மா உபயோகிக்கும்
ஸூஷ்ம சரீரம் -நுண்ணிய உடல் – இவன் செய்த பக்தி -சரணாகதியின் பெருமையால் ஏற்பட்டதே தவிர கர்மத்தால் அல்ல

ஜீவாத்மா புறப்பட வேண்டிய வேளையிலே இவன் செய்த உபாயத்தால் சந்தோஷம் அடைந்த பரமாத்மா
இருதயத்தில் இருந்து கொண்டு இருட்டான ஹிருதயத்தில் இந்த ஜீவாத்மா செல்ல வேண்டிய பாதையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்
4-2-14-லோக அக்ர ஜ்வலனம் -ஹார்த்தமான பகவத் அனுக்ரஹம் –
உடலில் இருக்கும் 101-நாடியான ஸூஷ்ம்நா நாடி மூலமாக தலையின் உச்சி வழியே ஜீவாத்மா வெளியே புறப்பட்டு
அர்ச்சிராதி கதி -மார்கம் -மூலமாகப் பரம பதத்தை நோக்கிச் செல்கிறார் –

ஒளி உலகம் -பகல் உலகம் -வளர்பிறை உலகம் -உத்தராயண உலகம் -ஆண்டு உலகம் -ஸூர்ய உலகம் -சந்த்ர உலகம் –மின்னல் உலகம் –
முதலானவற்றைக் கடந்து -அங்கு இருக்கும் தேவர்களால் வழி நடத்தப்பட்டு
லீலா விபூதிக்கும் நித்ய விபூதிக்கும் இடையில் உள்ள விராஜா நதியில் நீராடி -அதுவரை இருந்த ஸூஷ்ம உடலையும் தொலைத்து
நித்ய விபூதிக்குள் புகுந்து அங்கே திவ்யமான அழகிய திருமேனியைப் பெறுகிறான் –

இதுவரை சம்சாரத்தாலும் கர்மங்களாலும் ஜீவாத்மாவின் இயற்கையான பல குணங்கள் மூடப்பட்டு இருந்தன
அவை இப்பொழுது விளங்குகின்றன –
ஸ்வேன ரூபேண அவி நிஷ்பத்யதே -சேற்றில் விழுந்த வைரம் போல் கீழே ப்ரக்ருதி விஸிஷ்ட ஆத்மா –
ஸ்வரூப ஆவிர்பாவம் -ஸூ ர்யன் கிழக்கு திக்கில் தோன்றுவது போல் –
எனவே ஜீவாத்மாவும் அக் குணங்களில் பரமாத்வாவுக்கு நிகராகிறார் –

அந்த முக்தன் தான் ஆசைப் பட்டத்தைச் செய்ய முடியும் -அஸ்ய சங்கல்ப ஏவ -ஸத்ய ஸங்கல்பம் -ஸத்ய காமத்வம் -உண்டே –
தன் பித்ருக்களைக் காண வேண்டும் என்று நினைத்தாலே உடனே அவர்கள் அங்கேயே தோன்றுவார்கள் –

முக்தி அடைந்த ஜீவன் எட்டு கல்யாண குணங்களிலும் ஆனந்தத்தில் மட்டுமே பரமாத்மாவுக்கு நிகராவார்
ஜகத் வியாபார வர்ஜம் -ப்ரகரணாத் அசந்நிஹித்வாத்
போக மாத்ர சாம்யா லிங்காத் -நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி
ஜகத்தைப் படைப்பது காப்பது அழிப்பது முதலான தொழில்கள் பரமாத்மாவுக்கே உண்டு

ப்ரஹ்ம அலங்காரம் சதம் மாலா அஞ்சன ஹஸ்தா இத்யாதி -திரு மா மணி மண்டபம்
நடுவாக வீற்று இருக்கும் -அஹம் அன்னம் –அஹம் அந்நாத –அநா வ்ருத்தி சப்தாத்-4-4-22 -நச புந ஆவர்த்ததே

ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து கொண்டு மற்ற முக்தர்களோடும் நித்யர்களோடும் சேர்ந்து பகவானை அனுபவித்து
அந்த ஆனந்தத்தால் அவருக்கு கைங்கர்யம் செய்து கொண்டு இருப்பதே மிகச் சிறந்த புருஷார்த்தமான பகவத் ப்ராப்தி ஆகும்

இப்படி முக்தி அடைந்த ஜீவன் என்றும் திரும்பி வருவதே கிடையாது -நச புந ஆவர்த்ததே -என்று வேதங்கள் கூறுகின்றன –

இந்த வுடல் விட்டு இரவி மண்டலத்தூடு ஏகி
இவ்வண்டம் கழித்து இடையில் ஆவரணம் ஏழ் போய்
அந்தமில் பாழ் கடந்து அழகார் விரசை தனில் குளித்து அங்கு
அமானவனால் ஒளிக் கொண்ட சோதியும் பெற்று அமரர்
வந்து எதிர் கொண்டு அலங்கரித்து வாழ்த்தி வழி நடத்த
வைகுந்தம் புக்கு மணி மண்டபத்துச் சென்று
நம் திருமால் அடியார்கள் குழாங்களுடன் கூடும்
நாள் எனக்குக் குறுகும் வகை நல்கு என் எதிராசா–23-

சரீர பாத சமே து கேவலம் மதீயயைவ தய்யா அதிபர புத்த
மாமேவா வலோகயன் அப்ரச்யுத
பூர்வ சம்ஸ்கார மநோரத
ஜீர்ண மிவ வஸ்த்ரம் ஸூ கேன இமாம் ப்ரக்ருதிம்
ஸ்தூல ஸூ ஷ்ம ரூபாம் விஸ்ருஜ்ய
ததா நீமேவ மத பிரசாத லப்த
மச் சரணார விந்த யுகளை
காந்திகாத் யந்திக பரபக்தி பரஜ்ஞான பரம பக்தி க்ருத
பரி பூர்ண அநவரத நித்ய விசததம
அநந்ய பிரயோஜன அநவதிக அதிசய ப்ரிய
மத் அனுபவ ஸ்தவம்
ததாவித மத் அனுபவ ஜனித
அநவதிக அதிசய ப்ரீதி காரிதா
அசேஷ அவஸ்த உசித
சேஷ சேஷ தைக ரதி ரூபா
நித்ய கிங்கரோ ப விஷ்யசி–ஸ்ரீ சரணாகதி கத்யம்—சூரணை -20-21-22-23

————-

உபாயம் வழி ஹிதம் பார்த்து
நியாய மீமாம்ஸ சுருக்கங்கள் பார்த்து –
அவை வேதாந்த பாடத்துக்கு உதவு மவற்றைப் பார்த்து நிகமிப்போம் –

பாடம் -39—மோக்ஷ உபாயங்கள் –

முமுஷு க்களுக்கு மட்டும் அல்லாமல் அனைவருக்கும்
ஸூவ ஞானம் ப்ராப்ய ஞானம் ப்ராபக ஞானம் -மூன்றும் அறிய வேண்டும்
தன்னைப் பற்றிய அறிவு -பிரகிருதி உடலை விட வேறுபட்ட -அறிவுடைய -சேஷ பூதன் –
ஆத்மாவைப் பற்றி முன்பே பார்த்தோம் –

ப்ராப்யம் -புருஷார்த்தங்கள் முன்பு பார்த்தோம் –
தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் -நான்குக்கும் வழிகள்
உத்புத யாகம் பசு அடைய
செழிப்புக்கு வாயு தேவதை
ப்ரஹ்ம தேஜஸ்ஸூ ஸுர்ய தேவதை பற்றி யாகம் –
ஜ்யோதிஷ்டோம ஹோமம் ஸ்வர்க்கம் –
இவை அனைத்துக்கும் உபாயங்களை ஸ்ருதி சொல்லும் –

பரம புருஷார்த்த லக்ஷணத்துக்கு உபாயம்
பலத்துக்கு அருகில் அழைத்துச் செல்லப்படுவதே உபாயம் –

உபாயங்கள் வேறு -பல பிரதம் -ப்ரஹ்மமே -ரக்ஷகம் –
ஆசைப்படும் பலனை அறிந்து கொடுக்க பரம சேதனன் வேண்டுமே –

பக்த்யா ப்ரபத்யா -மஹா முனே–வேறே வழி இல்லை -கைங்கர்யம் செய்ய -ஸம்ஹிதை சொல்லும்
ப்ரஹ்ம வித் ஆப் நோதி பரம் -தைத்ரியம்
ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி -சாம்யா பத்தி கீழே பார்த்தோம் –

விஞ்ஞாய -அறிந்து பிரஞ்ஞாம் அறிந்து கொண்டு -அறிந்து அறிந்து தேறி தேறி -பல நிலைகள் உண்டே

ஸ்ருதி உபாயம் பற்றித் தெளிவாக
ப்ரஹ்மத்தை அறிந்தால் அவரை அடையலாம் -என்று சொல்லும்
அறிதல் இங்கு ஓர் இரண்டு முறை அறிவது அல்ல
ஸ்ருதியே -ப்ரஹ்மத்தைத் தியானிக்க வேண்டும் -என்றும் சொல்லும்
ஆக அறிதல் -இடைவிடாமல் தியானித்தல் என்றபடி
தைல தாராவத் -அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்தான ரூபம்

ஆத்மா அரே த்ரஷ்டவ்யா -ஸ்ரோதவ்யா-மந்தவய-நிதித்யாஸி தவ்ய –
மேலும் அந்த த்யானம் நீடிக்க நீடிக்க -நேரே காண்பது போல் த்யானிக்கப் பெறுவோம்
இது தான் தர்சன சமானா கார த்யானம்
தர்சனமே புருஷார்த்தம் -அந்த அளவுக்கு தெளிவாக த்யானம் வேண்டுமே –

இது சாதாரணம் அல்ல -தன் இடம் பக்தி உள்ளோருக்கு மட்டும் தானே தன்னைக் காட்டிக் கொடுக்கிறார் என்றும் ஸ்ருதி சொல்லும்
நாயமாத்மா ஸ்ருதி –பேசியோ -கேட்டோ ஆலோசனையாலோ த்யானத்தாலோ அறிய முடியாது
யாரைத் தேர்ந்து எடுக்கிறானோ அவனே காண்பான்
விஸ்வரூபம் காண திவ்ய சஷுஸ் கொடுத்து காணும் படி அனுக்ரஹித்தால் போல்

நான் ஞானிகளுக்கு பிரியமாக இருக்கிறேன் -அப்படிப்பட்ட ஞானிகளை நானும் விருன்புக்கிறேன் -கீதை
ப்ரியதம வரணம் -ஸ்=வயம் வரம் போல் -தேர்ந்து எடுப்பது பக்தர்களையே
தேர்ந்து எடுத்துக் காட்டிக் கொடுத்து -அவர்களே தனக்கு ஆத்மா -மே மதம் –
வேதனம்–உபாசனம் -த்யானம் -நிதித்யா சனம் -இவை அனைத்தும் – ஸ்நேக பூர்வ அநு த்யானம்

கீதார்த்த ஸங்க்ரஹம் முதல் ஸ்லோகம் —ஸூவ தர்மம் –ஞானம் -வைராக்யம் -சாத்ய பக்தி ஏக கோசர
பக்தி யோகம் வேறே -பக்தி வேறே -நியமத்துடன் செய்வது -அங்கங்கள் உடன்
வேதார்த்த ஸங்க்ரஹம் –ஜீவ பர யாதாத்மா ஞான பூர்வக -வர்ணாஸ்ரம கர்மங்களை செய்து -த்யான -அர்ச்சன -ப்ரணாம –
ஸ்மரணம் கீர்த்தனம் பாத சேவகம் அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் -அஷ்ட வித பக்தி

எனவே தியானத்தை பக்தியுடன் செய்ய வேண்டும் -இதுவே பக்தி யோகம் ஆகும் –
பக்தி யோகம் ஏற்பட வேண்டுமானால் அதற்கு முன் கர்ம யோகமும் ஞான யோகமும் கை கூட வேண்டும் –

கர்ம யோகம்
ஜீவாத்மா பரமாத்மா இருவரையும் உண்மையாக அறிந்து
மூன்று வித த்யாகங்களுடன் -வர்ணாஸ்ரம தர்மத்தை பகவத் ஆராதனமாகவே நினைத்து செய்தல்

அந்த மூன்று வித தியாகங்கள்
1- கர்த்ருத்வ புத்தி தியாகம் -நான் தான் இந்தச் செயலைச் செய்கிறேன் -என்ற எண்ணத்தை விடுதல்
2- மமதா தியாகம் -இது என்னுடைய கர்மம் என்ற எண்ணத்தை விடுதல்
3-பல சங்க தியாகம் -அந்த கர்ம பலன்களில் ஆசையை விடுதல்

தபஸ்ஸூக்கள் -தீர்த்த யாத்திரை -தானம் யஜ்ஞம் -முதலியவற்றைச் செய்தல் எல்லாமே கர்ம யோகம் ஆகும்
கீதார்த்த ஸங்க்ரஹ ஸ்லோகம் இவற்றைக் காட்டும்

இப்படி கர்மயோகம் செய்து கொண்டே வந்தால்
அந்தக் கர்மங்கள் அவன் சேர்த்து வைத்து இருக்கும் பழைய பாபங்களை எல்லாம் போக்கும்
அவை குறைந்தால் மனசில் ஸத்வ குணம் வளரும்
அதன் மூலம் மனத்தை ஒருமித்து ஒரு விஷயத்தைத் த்யானிக்கத் தகுதி உடையதாகும்

இந்த கர்ம யோகம் ஞான யோகம் மூலமாகவும் பக்தி யோகத்தை ஏற்படுத்தும்

ஜனக மஹாராஜர் போல்வார் கர்ம யோகத்தாலேயே நேராக பக்தி யோகம் போவதையும் கீதையில் உண்டு

1-யஜமான சம்ஹ்யா -ஆமை போல் விஷயங்களில் இருந்து இந்திரியங்களை திருப்பி
2-வியதிரேக சம்ஹ்யா
3-ஏகேந்த்ரிய சம்ஹ்யா-மனசைக் கட்டுப்படுத்துதல்
4-வசீகர சம்ஹ்யா
இப்படி வைராக்யம் வளர வேண்டும்

ஞான யோகம்
மனதைக் கட்டுப்படுத்தி -புலன்களையும் கட்டுப்பாட்டில் வைத்து -ப்ரக்ருதியில் காட்டில் விலக்ஷணமான
பரமாத்மாவின் உடலான -சேவகனான ஜீவாத்மாவை தியானித்தல் –

பக்தி யோகம்
அன்போடு நேரே காண்பது போல் தெளிவாக அறியும் அளவுக்கு பகவானை இடைவிடாமல் தியானித்தல்
பக்திஸ் ச ஞான விசேஷ -ஞானம் கனிந்த நலமே பக்தி

இதற்கு -சாதன ஸப்தகம் -ஏழு காரணங்கள் உண்டு
1-விவேகம் -குற்றமற்ற உணவால் உடலை ஸூத்தமாக வைத்துக் கொள்ளுதல் -ஆகார ஸூத்தி -ஸத்வ சித்தி
ஜாதி- வெங்காயம் போல்வன – ஆஸ்ரய -யார் பொருள் -நிமித்த-தலை முடி விழுந்த – துஷ்டங்கள் இல்லாமல் –
2-விமோகம் -எந்தப் பொருளிலும் அதிகமாக ஆசை வையாது இருத்தல்
3-அப்யாஸம் -பகவானின் திருமேனியை எப்பொழுதும் -எந்தத் தொழில்களை செய்து கொண்டு இருந்தாலும் நினைக்கை
த்யானம் -யோக காலம் -அவனை தியானிப்பது போல் மற்ற சமயங்களிலும் நினைக்க வேண்டும் ஸூபாஸ்ரயம் -அன்றோ
த்யானம் போல் ஆசன நியமாதிகள் வேண்டாம் -ஆலம்பநம்
4-க்ரியா -வர்ணாஸ்ரம தர்மங்களை இயன்ற அளவும் செய்கை
5-கல்யாணம் -உண்மை பேசுதல் நேர்மை தயை தானம் அஹிம்சை போன்ற குணங்கள்
சத்யம் ஆர்ஜவம் தயா தானம் அஹிம்சை போன்ற குணங்கள்
6-அந வாஸம் -எந்தக் காரணத்துக்காகவும் மிகவும் வருந்தாமை
7-அநுத் தர்சம் -எந்தக் காரணத்துக்காகவும் மிகவும் மகிழ்ச்சி அடையாமை –
ஸூக துக்க சாம்ய புத்தி வேண்டுமே –

இந்த பக்தி யோகத்தில் மூன்று நிலைகள் உண்டு
1-பர பக்தி -பகவானைக் காண வேண்டும் என்ற ஆசை மிகுந்து அவரை தியானித்தல்
2-பர ஞானம் -நேரே காண்பது போல் பகவானை தியானிக்கும் நிலை
3-பரம பக்தி -பகவானைக் காண வேண்டும் என்ற ஆசை மிகுந்து அவரை தியானித்தல் –

பர ஏகாந்த ப்ரீத்யா –
ஞானம் தர்சனம் பிராப்தி நிலைகள் இவை-

பக்தி யோகம் கொண்டு ஐஸ்வர்யமும் கைவல்யமும் -பகவத் ப்ராப்தி-மூன்றும் பெறலாம்
உண்மையான ஸ்வரூபம் அறிந்து முமுஷுவான பின்பு பகவத் பிராப்தி –
அனுபவ ஜனித்த ப்ரீதி கார்ய கைங்கர்யம் ஒன்றையே பிரார்த்திப்பார்கள் அன்றோ –

சாதன பக்தி
ஸாத்ய பக்தி
ஸஹஜ பக்தி -இவையும் உண்டே

சரணாகதி
பக்தி யோகம் செய்ய சக்தி இல்லாதவர்களுக்கு சரணாகதி
சக்தி இருந்தாலும் கூட -பிராப்தி -ஜீவாத்மாவின் உண்மையை தெளிவாக அறிந்து –
பக்தி யோகம் செய்வது கூடாது என்று சரணாகதி செய்வார் நம் பூர்வாச்சார்யர்கள்
ஜீவாத்மா பகவானுக்கு அடிமை -சொத்து -என்று புரியப் புரிய
ஸூய யத்னம் ஒன்றும் இல்லாமல் அவனே நம்மைக் கைக்கொள்ளுவார் என்று மஹா விச்வாஸமும்
அவன் நம்மைக் கைக்கொள்ளும் போது அவனை விலக்காமையும் போதும் என்கிற
புரிதல் வந்தபின்பு பக்தி யோகம் செய்வது தவறு என்று உணர்ந்து சரணாகதியை ஒரே வழி என்று அறிகிறோம் –

நான் ஆசைப்படும் பொருளை அடைய வேறே வழிகள் இல்லாத போது –
ஒருவர் இடம் மஹா விஸ்வாஸம் வைத்து வேண்டுதல் தான் சரணாகதி என்று சாஸ்திரங்கள் கூறும்

எனவே சரணாகதி என்பது
பரமாத்மாவே நமக்கு முக்தி அடைய உபாயம் என்ற உறுதி மட்டுமே –
அதற்குள் நாம் பரமாத்மாவிடம் வைக்கும் பிரார்த்தனையும் அடங்கி இருக்கும்

அநந்ய சாத்யே –மஹா விஸ்வாஸ பூர்வகம்– ததேக உபாய தயா யாஸ்மிதா —
இதி -ப்ரார்த்தனா கர்ப்பமான மதி சரணாகதி –
அவனே உபாயம் -மாம் ஏகம் அர்த்தம் -குஹ்ய தமம்

ஒருவன் சரணாகதி செய்து விட்டால்
அவனுக்குத் தானாகவே ஏற்படும் சில ஸ்வ பாவங்கள் உள்ளன -அவகாத ஸ்வேதம் போல் –
1-அனுகூல்ய சங்கல்பம் -பரமாத்மாவுக்கு பிடித்தத்தை மட்டுமே செய்வேன்
2-பிராதி கூல்ய வர்ஜம் -அவருக்குப் பிடிக்காததை தவிர்த்தல்
3-ரஷிஸ்யதி விஸ்வாச -அவர் கண்டிப்பாக காப்பாற்றுவார் என்ற உறுதி
4-கோப்த்ருத்வ வரணம் ததா -அவரே காக்க வேண்டும் என்று தேர்ந்து எடுத்தல்
5-கார்ப்பண்யம் -கர்வம் இன்மை
6-ஆத்ம நிஷேபம் -ஆத்மாவைக் காக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைப்பது –

ஆச்சார்ய அபிமானம் -நம் சம்பிரதாய -விசிஷ்டாத்வைத அசாதாரணம் இது

(ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த அர்த்த பஞ்சகம் –
ஆச்சார்ய அபிமானம் ஆவது -இவை ஒன்றுக்கும் சக்தன் இன்றிக்கே ஒருவனைக் குறித்து –
இவனுடைய இழவையும் -இவனைப் பெற்றால் ஈஸ்வரனுக்கு யுண்டான ப்ரீதியையும் அனுசந்தித்து
ஸ்த நந்த்ய பிரஜைக்கு வியாதி யுண்டானால் அது தன் குறையாக நினைத்து
ஔஷத சேவை பண்ணும் மாதாவைப் போலே இவனுக்காகத் தான்
உபாய அனுஷ்டானம் பண்ணி ரஷிக்க வல்ல பரம தயாளுவான மஹா பாகவதன் அபிமானத்திலே ஒதுங்கி
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டும் -நாச்சியார் -10-10-என்று சொல்லுகிறபடியே –
சகல ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளையும் அவனிட்ட வழக்காக்குகை –
எம்பெருமான் தனித்து நித்ய சித்த ப்ராப்யனாகா நிற்கச் செய்தே
சகல தேவதாந்த்ர்யாமியாயாய்க் கொண்டு ப்ராப்யன் ஆகிறாப்
இவ்வாச்சார்ய அபிமானமும் தனியே உபாயமாகா நிற்கச் செய்தேயும்
எல்லா உபாயங்களுக்கும் சஹ காரியுமாய் ஸ்வ தந்த்ரமுமாய் இருக்கும் )

சரணாகதி செய்யும் பொழுது பகவான் கண்டிப்பாக ரக்ஷிப்பார் என்கிற மஹா விச்வாஸம் வேண்டுமே
அது ஏற்படுவது மிகவும் துர்லபம்
நாம் சேர்த்து வைத்து இருக்கும் பாபங்கள் கனத்தைப் பார்த்தாலும்
ஈஸ்வரன் நிரங்குச ஸ்வ தந்த்ரர் என்பதைப் பார்த்தாலும்
ஒரு வேளை கைக் கொள்ளாமல் போவாரோ என்கிற சந்தேகம் ஏற்படலாம்
அதனால் சரணாகதி செய்ய சக்தி இல்லாதவர் களுக்காக உள்ள ஒரே உபாயம் தான் ஆச்சார்ய அபிமானம்

நம்முடைய இயலாமையைக் கண்ட ஒரு பக்தர்
நம்மை அடைந்தால் பகவான் பெரும் ஆனந்தமே ஹேதுவாக திரு உள்ளம் பற்றி
நம்மால் செய்ய முடியாத சரணாகதியை நமக்காக அவர் செய்கிறார்
பால் குடிக்கும் குழந்தைக்கு உடல் நிலை சரி இல்லை என்றால் தாய் தானே மருந்தைக் குடிப்பது போலே
நம் இயலாமையால் அவர் நமக்காக பகவான் இடம் சரணாகதி செய்கிறார்

அப்படி தயையுடைய பக்தரின் நிழலில் ஒதுங்கி
அவருடைய அபிமானத்துக்கு இலக்காகி
நாம் இருப்பதே ஆச்சார்ய அபிமானம் ஆகும்
அவர் உபதேசித்தபடி வாழ்க்கையை அமைத்துக் கொண்டு –
அவர் இட்ட வழக்காக நாம் வாழ்ந்து வந்தால்
அதற்காகவே பகவான் உகந்து நமக்கு முக்தி அளிக்கிறார் என்று ஸாஸ்த்ரங்கள் கூறும்

பசுர் மனுஷ்ய பஷீ வா யே ச வைஷ்ணவ சம்ஸ்ரயா
தேநை வ தே ப்ரயாஸ் யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம்
அதாவது
விலங்கோ மனிதனோ பறவையோ ஒரு ஸ்ரீ வைஷ்ணவனை அண்டி வாழ்ந்து வந்தால் –
அதனாலேயே அவர்கள் பரமபதத்தை அடையலாம்
அளியல் நம் பையல் என்று அபிமானம் ஒன்றே வேண்டுவது –

இதுவே நாம் அனைவருக்காகவும் பகவான் ஏற்படுத்தியுள்ள சிறந்த எளிய நெறி ஆகும் –

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாசர் -பாதராயணர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading